Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

 

மனிதர்களின் பராமரிப்பில் வாழும் டால்பின்கள் மகிழ்ச்சியாக இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply
‘அறிவு பொதுவானது’
 

image_f22aa8eb00.jpgமுடிவு எதுவெனத்  தெளிந்து, தெரிந்து கொள்ள விழையாது, ஆய்வுகளை இறுதி செய்யக் கூடாது. எதையும் ஆராயாது, கண்டபடி முடிவுகளைச் சொல்வது, குடிகாரன் பிதற்றுவதற்குச் சமமானது. ஆய்வு மேற்கொள்பவர்கள் அதிகம் படிக்க வேண்டும்;அனுபவசாலிகளுடன் பழகிப் பேசவும் வேண்டும். 

ஆய்வுகளில் சிலசமயம் தொய்வு ஏற்பட்டாலும் மனம் சோராது இயங்கி, முன்செல்ல வேண்டும். ஆராய்ச்சி எனும் பெயரில், கண்டபடி பேசுகிறார்கள். கேட்பவர்களுக்கு அது கஷ்டமாக இருக்கிறது; குழப்பியடிப்பது ஆய்வு அல்ல.   

ஒழுங்காகத் தெளிவாக ஆராய்ந்து, மேற்கோளுடன் சொல்வதே முறையானது. ஆன்மிகம் பற்றிப் பேசும்போது, அவதானம் தேவை. ஆன்மீகம் உணர்வு சார்ந்தது. கருத்துச் சொல்லும்போது, அவதானம் அவசியம். பிறமதங்களையும் பின்பற்றும் மக்களையும் எக்காரணம் கொண்டும் கேலி கிண்டல் செய்து, தவறான கருத்துகளைக் கூறுவதை அறவே அகற்றுக. எல்லாமே எமக்குத் தெரியும் என்ற மமதையில் பேசற்க. அறிவு பொதுவானது. எல்லோருக்கும் அது உண்டு.

Link to comment
Share on other sites

சாலை குழியில் கடல் கன்னி... சமூகப் பிரச்னைக்குத் தீர்வு...பெங்களூருவைக் கலக்கும் ஓவியர்

 
 

இன்று பல சமூக பிரச்னைகள் மக்கள் போராட்டமாக மாறி வீதிக்கு வருவதைப் பார்க்கமுடிகிறது. இந்த மனிதர் வீதிகளில் உள்ள சமூகப் பிரச்னைக்கு முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூரு வீதிகளின் பிரச்னையை வண்ணங்கள் கொண்டு அழித்துக்கொண்டிருக்கிறார். ஆம், பெங்களூருவின் சாலைகளை சமூக விழிப்பு உணர்வு ஓவியங்களால் நிரப்பும் பாதல் நஞ்சுண்டசாமிதான் அந்த மாற்றத்துக்கான நபர்.

ஓவியம்

 

picture: https://twitter.com/baadalvirus

``ஓர் ஓவியம்... இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வு'' - இதெல்லாம் நம்பவா முடிகிறது. இது சாத்தியம்தான் பெங்களூரு சாலையில் நீண்ட நாள்களாக மூடப்படாமல் கொசுக்களை பரப்பிக்கொண்டிருந்த பாதாள சாக்கடை ஒன்று திறந்தவாறே இருந்தது. அது நஞ்சுண்டசாமியின் கண்ணில் பட்டது. அடுத்த கனமே அங்கு ஒரு மிகப்பெரிய மெகா சைஸ் கொசு ஓவியம் வரைந்து முடித்தார். கொசுவின் வாயாக பாதள சாக்கடையை வடிவமைத்தார். ஓவியம் அழிவதற்குள் பெங்களூரு மாநகராட்சி சாக்கடையை மூடியது. இந்த கவன ஈர்ப்புதான் இவரின் சாதனை.

இவர் மட்டுமல்ல..`நம்ம பெங்களூரு’ என்று ஒரு குழுவாக ஓவியர்கள் தங்கள் சமூக கோபத்தைத் தீர்வாக மாற்றி வருகிறார்கள். இவர்களின் கவன ஈர்ப்பு உத்தி எல்லாரையும் வியக்க வைக்கிறது. இதில் வியக்க வைத்தவர் ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி. பெங்களூருவில் இவரை தெரியாத சமூக அக்கறை கொண்ட இதயங்கள் குறைவு. காணும் இடத்தில் ஒரு பிரச்னை என்றால் இவரது தூரிகை சரி செய்ய ஆயத்தமாகிவிடும். 

ஓவியம்

2015-ம் வருடம், நம் ஊரில் இருப்பதைப்போலவே, பெங்களூருவின் பிரதான சாலைகளில் ஒன்றான சுல்தான் பாளையாவில்  அப்போது பெய்த கனமழை காரணமாக, 15 அடி அளவில் பெரிய பள்ளம் தோன்றியது. அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. இதுதொடர்பாக அந்த நகரைச் சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையெல்லாம் கண்ட பாதல், அந்தப் பள்ளத்தின் மீது ஃபைபரில் செய்யப்பட்ட முதலையைக் கொண்டு 3D ஓவியத்தைச் செய்திருந்தார். அந்த முதலை நிஜ முதலை போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. சாலையைக் கடந்து சென்ற பெரும்பாலானோர் அதை உண்மையான முதலை என்றே நினைத்தனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட‌து. பலர் அதைப் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு காரசாரமான விமர்சனங்களைத் தெரிவித்தனர். அந்தப் புகைப்படம், காட்டுத் தீயாக பரவ, அடுத்தநாளே சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பள்ளத்தை சரிசெய்தனர். பாதல் வரைந்த முதலை, முதல்வர் வரை பாய்ந்ததுதான் இதன் வெற்றி!

கடந்த அக்டோபர் மாதம்  பெங்களூரு காமராஜ் சாலை – கப்பன் சாலை சந்திப்பில் உள்ள குழியில் ஒரு கடல் கன்னியையே உருவாக்கினார் பாதல் நஞ்சுண்டசாமி. அந்த கடல் கன்னி வேறு யாருமல்ல, கன்னட நடிகை சோனு கௌடாதான்.சாலை குழியை கடல்போல் வடிவமைத்து, அதில் சோனு கௌடாவை பச்சை நிற உடையுடன் கடல் கன்னிபோல் இறக்கினார். இதுவும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பாதல் பெங்களூருவின் ரியல் ஹீரோவானார். தனக்குத் தெரிந்த கலையை மக்களின் பிரச்னைக்கான தீர்வாக மாற்றிய பாதல் நஞ்சுண்டசாமியுடன் பேசினோம். 

ஓவியம்

``பெங்களூருதான் என் சொந்த ஊர். சமரராஜேந்திரா கல்லூரியில் ஓவியக்கலை பயின்றேன். படிப்புக்குப் பிறகு ஒக்லிவி & மாதர் எனும் விளம்பரக் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஓவியங்கள் வரைவது பிடித்தமான விஷயம். இந்தக் கலையை வெறும் பணம் சம்பாதிக்கும் கலையாகப் பார்க்கவிரும்பவில்லை. சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகான, என் ஓவியங்களால் முடியும் என்று நம்பினேன். இன்று ஓரளவுக்கு அதனை நோக்கி ஓடுகிறேன். 

ஓவியம்என் ஓவியங்கள் மக்கள் பிரச்னைகள், உரிமைக்கான குரல், மக்களின் மனநிலை என அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதைத்தான் என் ஓவியங்களும் பிரதிபலிக்கின்றன. என்னுடய ஓவியங்கள் சாக்கடையை மூடாமல் இருப்பது போன்ற ஒரு குறிப்பிட்ட தெருவின் பிரச்னைகளை  மட்டும் பேசாமல், நிகழுலகில் நாட்டில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகளையும் (current affairs) பேச வேண்டும் என்பது என் ஆசை.

இந்த எண்ணம் எனக்கு இன்று தொடங்கியது அல்ல. கல்லூரி காலத்திலிருந்தே என் கனவு இதுதான். நான் சந்திக்கும் மனிதர்கள்தான் இதற்கான இன்ஸ்பிரேஷன். கன்னடத் திரைப்படங்கள் சிலவற்றில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறேன். என்னால் முடிந்த உதவியை இந்த சமூகத்துக்கு என் கலை மூலம் சொல்ல வேண்டும் என்பது தான் என் லட்சியம்.’’ 

பாதல் நஞ்சுண்டசாமி எதார்த்தமாய் பேசுகிறார். அவர் ஓவியங்கள் அரசு இயந்திரத்தைச் செயல்பட வைக்கிறது. எல்லா விஷயங்களையும் எளிதாக எடுத்துக்கொண்டு நகரும் அவர் அடைத்தது சாக்கடை ஓட்டைகளை மட்டுமல்ல சமூக ஓட்டைகளையும் தான். சபாஷ் பாதல்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பக்கத்து வீடு: மேகன் அப்படித்தான்!

27CHLRDMEGHAN

நண்பர்களுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தார் அந்த 11 வயதுச் சிறுமி. இடையில் பாத்திரம் தேய்க்கும் சோப்பு விளம்பரம். ‘அமெரிக்கப் பெண்கள் பிசுபிசுப்பான பாத்திரங்களைத் தேய்த்து சோர்ந்துபோகிறார்கள். எங்கள் சோப்பைப் பயன்படுத்தினால் மகிழ்ச்சியாகப் பாத்திரம் தேய்க்கலாம்’ என்ற விளம்பர வரிகளைக் கேட்டதும் சிறுமி அதிர்ந்தார். நண்பர்களிடம் கேட்டார். “ஆமாம், பெண்கள்தானே சமையலறையில் பாத்திரங்களைத் தேய்க்கிறார்கள்” என்று பதில் வந்தது. அவரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

சிறுமியின் வெற்றி

   
 

பெண்கள் மட்டும் பாத்திரம் தேய்ப்பதாக எப்படி விளம்பரம் செய்யலாம் என்று அப்பாவிடம் கேட்டார். மகளின் கேள்வியில் இருக்கும் நியாயத்தை உணர்ந்த தந்தை மகிழ்ச்சியடைந்தார். அமெரிக்காவின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் பெண்களுக்கு,இது தொடர்பாகக் கடிதம் எழுதச் சொன்னார். அன்று முதல் குடிமகளாக இருந்த ஹிலாரி கிளிண்டனுக்கும் தொலைக்காட்சியைச் சேர்ந்த லிண்டா எல்லர்பீக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருக்கும் தனித்தனியாகக் கடிதம் எழுதினார். மூவரிடமிருந்தும் பாராட்டுக் கடிதம் வந்தது.

சோப்பு தயாரிக்கும் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதச் சொல்லியிருந்தார் ஹிலாரி. சிறுமி எழுதிய கடிதத்தைப் பார்த்து, பிராக்டர் அண்ட் கேம்பிள் என்ற சர்வதேச நிறுவனம் தன் விளம்பரத்தையே மாற்றிவிட்டது! ‘பிசுபிசுப்பான பாத்திரங்களைத் தேய்த்து ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் சோர்ந்துபோகிறார்கள். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தருகிறது எங்கள் சோப்பு’ என்று விளம்பரம் வெளிவந்தது.

27CHSUJMEGHANMARKLE4
 

சிறுவயதிலேயே ஆண் – பெண் சமத்துவத்துக்காகக் குரல் கொடுத்து, மாற்றத்தை உண்டாக்கிய அந்தச் சிறுமிதான் மேகன் மர்கெல்.

அமெரிக்கத் தந்தைக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர். அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். 2011-ல் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றியதால் மக்களால் அறியப்பட்டார். அதே ஆண்டு நீண்ட கால நண்பரான தயாரிப்பாளரைத் திருமணம் செய்துகொண்டார். 2013-ல் விவாகரத்து பெற்றார். பெண்ணுரிமைப் போராட்டக்காரராகவும் சமூகச் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தார்.

இன்றளவும்கூட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பல்வேறு விதங்களில் அமெரிக்கர்களால் மோசமாகவே நடத்தப்படுகிறார்கள். மேகனும் இதற்கு விதிவிலக்கல்ல.

“நான் ஆப்பிரிக்கர் என்பதால் அமெரிக்க கதாபாத்திரங்களைக் கொடுக்க மாட்டார்கள். நான் அமெரிக்கர் என்பதால் ஆப்பிரிக்கர் கதாபாத்திரம் தர மாட்டார்கள். நான் ஒரு கலப்பினப் பெண். நான் யார், எங்கிருந்து வந்தேன் என்று கேட்காதீர்கள். என் குரல் மிகுந்த நம்பிக்கையோடும் வலிமையோடும் ஒலிப்பதற்கு இந்தக் கலப்பினமே காரணம்” என்று அழுத்தமாகச் சொன்னார் மேகன்.

 

காதல் மலர்ந்தது

2016-ல் இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் அறிமுகம் கிடைத்தது. காதல் மலர்ந்தது. இரண்டே ஆண்டுகளில் டைம் பத்திரிகையின் ‘உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்’ பட்டியலில் இடம்பெற்றார்!

ஆப்பிரிக்க அமெரிக்கர், விவாகரத்தானவர், ஹாரியைவிட மூன்று வயது பெரியவர், நடிகை என்றெல்லாம் ஒரு பகுதி இங்கிலாந்து மக்களால் தூற்றப்பட்டார் மேகன். ஆப்பிரிக்க அமெரிக்கர் என்ற மோசமான விமர்சனங்களுக்கு ஹாரி பதில் கொடுத்த பிறகுதான் சர்ச்சை ஓய்ந்தது.

27CHSUJMEGHANMARKLE1
 

அரச குடும்பம் மேகனை ஏற்றுக்கொண்ட பிறகும் தலைமுடியை நேர்த்தியாக வைத்துக்கொள்ளவில்லை, அரச குடும்பத்துக்கு ஏற்ற மாதிரி ஆடை அணியவில்லை, இப்படி நிற்கிறார், அப்படி நடக்கிறார் என்றெல்லாம் சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டேயிருந்தனர். கடைசியாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்குக் கை கொடுக்கலாமே தவிர, கட்டிப்பிடிக்கக் கூடாது என்ற சர்ச்சை வந்தது. “நான் அமெரிக்கர். கட்டிப்பிடிப்பதுதான் எங்கள் கலாச்சாரம்” என்று பதிலடி கொடுத்தார் மேகன்.

 

மாற்றத்தின் அடையாளம்

முதன்முறையாக அரச குடும்பத்தின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஆப்பிரிக்க அமெரிக்க பிஷப் பங்கேற்றார். ‘அன்பின் வல்லமை, அன்பின் ஆற்றலை நாம் கண்டறிய வேண்டும். அன்பின் மூலமே புதிய உலகத்தை உருவாக்க முடியும். அன்பைத் தவிர வேறு மார்க்கம் இல்லை’ என்ற மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழியை நினைவுகூர்ந்து, “அவர் சொன்னது சரிதான் என்பதை இந்தத் திருமணம் உணர்த்துகிறது” என்றார் பிஷப்.

சுற்றுலாப் பயணியாக 15 வயதில் இங்கிலாந்து அரண்மனை வாயிலில் நின்று படம் எடுத்துக்கொண்டபோது, ஒரு நாள் இந்த அரண்மனையில் வசிப்போம் என்று மேகன் நினைத்திருக்க மாட்டார்.

27CHLRDMAGHAN2

அமெரிக்கர்களால் அடிமைகளாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வழிவந்த ஒரு தாய்க்கு மகளாகப் பிறந்த மேகன், இன்று இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக மாறிவிட்டார்! இதன் மூலம் பெரிய மாற்றம் வரும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு சிறு மாற்றத்துக்குக்கூட ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நீண்ட காலமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் எனும்போது, இது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜாதி, மதம், இனம் என்று விடாப்பிடியாகத் தொங்கிக்கொண்டிருப்பவர்கள், இங்கிலாந்து அரச குடும்பத்தின் மாற்றத்தைக் கண்டாவது தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டால் அதுவே இந்தத் திருமணத்தின் வெற்றி!

“பெண்கள் தங்கள் குரலைக் கண்டுபிடிக்கத் தேவைஇல்லை. அவர்கள் அதைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தையும் மக்களைக் கேட்க வைப்பதற்கான முயற்சியும்தான் தேவை.

11 வயதிலேயே என்னால் சிறு மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது என்றால், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். பெண்ணாக இருப்பதையும் பெண்ணியவாதியாக இருப்பதையும் பெருமையாக நினைக்கிறேன்” என்ற மேகன் மர்கெல்லின் வார்த்தைகள், அவர் வழக்கமான இளவரசிகளைப்போல் இருக்க மாட்டார் என்று சொல்கின்றன!

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: சிஎஸ்கே 3 - வது முறை சாம்பியன் - தோனி சொல்றான் வாட்சன் முடிக்கிறான்    

sdpng

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுகுறித்து  நெட்டிசன்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

ஆல்தோட்டபூபதி

     
 

‏2 வருசம் கழிச்சு வந்தும் கப் அடிச்சிருக்கோம்னா, அது ஆசையில்ல அண்ணாச்சி பசி ;-))

CSK போல ஒரு டீமும் இல்ல, CSK போக வேறெதும் டீமே இல்ல #CSK #ipl

ஆங், அது என்ன அது? ம்ம்ம்ம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், சிஎஸ்கே திரும்ப வெல்லும் #CSKடா

hbjpng

நல்லவனுக்கு நல்லவன்

‏பல வருஷமா அவங்களும் சொல்லிட்டே தான் இருக்காங்க, இந்தக் குதிரைக்கு வயசாயிடுச்சி, ரிடையர் ஆகணும்னு..ஆனாலும் இந்தக் குதிரை ஓடிக்கிட்டே இருக்கேனு பொறாமை வர தான் செய்யும்.. #IPL2018 Cup ஜெய்ச்சிட்டாங்களேனு வயிறு எரியத்தான் செய்யும் நாம என்னங்க பண்றது.

Untitledpngkpng
hjpng
 

கா.ராஜேஷ்

‏எல்லாவனும் பேருக்கு பக்கத்துல  MI ,RCB,KKR,CSKனு வச்சிருந்தானுங்க இப்ப CSK மட்டும்தான் இருக்கு ? வழக்கம்போல ஜெயிச்சிருக்கானுங்களா CSK ?   

இராவணன்

‏ 4 தடவ மிதிச்சிருக்கானுக சன்ரைசர்ஸ இந்த வருசம்

nhjkpng
7png
 

SKP KARUNA

‏ராயுடு அடிக்கலைன்னா வாட்சன் அடிக்கிறான்.

வாட்சன் அடிக்கலைன்னா டுப்ளஸ்ஸி அடிக்கிறான்.

டுப்ளஸ்ஸி அடிக்கலைன்னா ரெய்னா அடிக்கிறான்.

ப்ராவோ, பில்லிங்ஸ், ச்சஹார் எல்லோரும் அடிக்கிறாங்க.

எவனுமே அடிக்கலைன்னா படுபாவி தோனி அடிக்கிறான்.

என்னதாண்டா பண்ணுவாங்க எதிர் டீம்?

34png

PicassO

‏முடிஞ்சா திரும்பி ஐபில் வாங்கடானானுங்க..

அப்றம் முடிஞ்சா பிளே ஆப் வாங்கடானுவ..

அப்றம் முடிஞ்சா கப் ஜெயிங்கடானுவ..  

Haters...

இட்லி

‏முதியோர் அணின்னு கிண்டல் பண்ணவனுங்கெல்லாம் கொஞ்ச நாளைக்கு முக்காடு போட்டுக்கிட்டே திரிங்கடா!

The Rockstar AK™      

‏வயசானவங்க டீம் அது இதுனு எத்தன விமர்சனம்... இவன் கைல எந்த டீம குடுத்தாலும் ஜெயிக்க வெச்சிருவான் போல..

ஒரே "தல" தோனி ஃபார் ரமணா 2.0..

jkipng
 

ℳsᴅ பிளேடு

‏தோனி துள்ளி குதிப்பாருனு கேமராவ அங்கேயே காட்டினு இருக்கானுங்க டேய் அது தலைவன் தோனிடா  

3 தடவ கப் ஜெய்ச்சுட்டு பேசுங்கடானு ஒரு க்ரூப்பு சுத்துச்சு

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஸ்ரீலஸ்ரீ CSK உலகானந்தா

‏ரெண்டு வருசம்.. ஆசை இல்ல அண்ணாச்சி.. பசி! #CSK

CSK அஜய்™

‏Before the finals!

We Will Win For MS Dhoni This Time    

- Raina

எனக்கு சொல்றத விட செய்யுறது தான் ஈசி    

சின்ன தல  

சால்ட்&பெப்பர் தளபதி

‏வெறுத்தவர்கள் எல்லாம் தலைவனை நோக்கி வருகிறார்கள், நல்லவர்கள் எப்பொழுதும் தோற்பதில்லை

Rj CastroRahul

தோனி சொல்றான் வாட்சன் முடிக்கிறான்  

ஆழ்ந்த இரங்கல்கள் தோனி ஹேட்டர்ஸ்  

Thanujan92

‏கம் பேக்னா இப்படி இருக்கணும்... ஐ.பி.எல். சீசனை அழகாக்கிய CSK! #IPL2018

இதோ...ஒரே இன்னிங்க்ஸில் இரண்டாண்டு கால இடைவெளிக்கும் சேர்த்து விருந்து வைத்துவிட்டார் ஷேன் வாட்சன்

Durai

‏2 வருச தவம் எதிர்பார்ப்பு ஏக்கம் வலி, #CSK

CSK     பரத்   

‏புடிக்காத ரெண்டு டீமும் ப்ளே ஆப் கூட வரல

புடிச்ச ரெண்டு டீமும் பைனல்

ரொம்ப புடிச்ச டீம் வின்னர் 

Joseph Harish Vijay

‏#வயசு முக்கியம் இல்ல

#திறமை தான் முக்கியம்

அதுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது சென்னை அணி

#சிஎஸ்கே          

சொல்லும் போதே ஒரு கர்வம் இருக்கு.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

நரியை வேட்டையாடும் கழுகு!

ஆசை ஆசையாய் முயலை பிடித்த நரியை வேட்டையாடி கொல்ல முயற்சிக்கும் கழுகின் காணொளி.

Link to comment
Share on other sites

டோனியா? பிராவோவா? - வைரலாகும் வீடியோ

 
அ-அ+

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய பின் மைதானத்தில் டோனி, பிராவோ இடையே நடைபெற்ற போட்டி வைரலாக பரவி வருகிறது. #IPL2018 #CSK #MSDhoni #Bravo

 
டோனியா? பிராவோவா? - வைரலாகும் வீடியோ
 
புதுடெல்லி:

ஐபிஎல் 2018 தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஷேன் வாட்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று வெற்றியை பெற்று தந்தார்.

கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 
201805291148324526_1_ipldhonibravo._L_styvpf.jpg

இறுதி போட்டி முடிவடைந்த பின் வீரர்கள் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது டோனி மற்றும் பிராவோ இடையே சிறிய போட்டி நடைபெற்றது. இருவரும் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு மூன்று ரன்கள் ஓட முடிவு எடுத்தனர். யார் முதலில் வருவார்கள் என இருவருக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இதனை மற்றவர்கள் கண்டு ரசித்தனர்.

இருவரும் வெற்றி பெற வேகமாக ஓடினர். இறுதியில் கேப்டன் கூல் டோனி முதலில் கோட்டை தொட்டு வெற்றி பெற்றார். எவ்வளவு வேகமாக ஓடினாலும் டோனியின் வேகத்தை பிராவோவால் ஈடுசெய்ய முடியவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ரசிகர்கள் இதனை கண்டு ரசித்து வருகின்றனர். #IPL2018 #CSK #MSDhoni #Bravo

 

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

டிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் சென்ற நாள்: மே 30- 1845

டிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் சென்ற நாள்: மே 30- 1845
 
மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ தீவுக்கு இந்தியர்கள் 1845-ம் ஆண்டு மே மாதம் 30ந்தேதி வந்திறங்கினர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1431 - நூறாண்டுகள் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள். * 1539 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான். * 1588 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா என்ற 130 ஸ்பானியப் போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து புறப்பட்டட்து. * 1635 - முப்பதாண்டுப் போர்: பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. * 1815 - இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.

* 1845 - டிரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர். * 1883 - நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர். * 1913 - முதலாம் பால்க்கன் போர்: லண்டன் உடன்பாடு, 1913 எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது. * 1942 - இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானிய போர் விமானங்கள் ஜெர்மனியின் கொலோன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன. * 1966 - முன்னாள் காங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.

* 1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது. * 1972 - இஸ்ரேலின் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படையினர் தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர். * 1981 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியின் போது அதிபர் சியாவுர் ரகுமான் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். * 1987 - கோவா தனி மாநிலமாகியது. * 1998 - வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர். * 2003 - எயார் பிரான்சின் கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

பிறருக்கு ஏன் உதவ வேண்டும்? - உண்மை உணர்த்தும் மகாபாரதக் கதை #MotivationStory

 
 

கதை

`வாழ்க்கையின் மிக முக்கியமான, அவசரமான கேள்வி என்ன தெரியுமா... `நீங்கள் மற்றவர்களுக்காக என்ன செய்தீர்கள்?’ என்பதுதான்.’ - அஹிம்சைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King Jr.) அழுத்தமாகச் சொல்லியிருக்கும் வாசகம் இது. `மத்தவங்களுக்கு உதவுறதா! மத்தவங்களைப் பத்தி நினைக்கக்கூட நேரம் எங்கே இருக்கு?’ என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஓர் ஓட்டப்பந்தயத்தில் நாம் எல்லோருமே ஓடிக்கொண்டேயிருக்கிறோம், அவரவருக்கான தேடல், தேவையின் பொருட்டு. அதிலேயே சுருண்டும் போகிறோம். இதில் பிறரைப் பற்றி அக்கறைகொள்ள நமக்கு நேரமே இல்லை என்பதே உண்மை. ஆனால், சக மனிதர்களின் தேவையை உணர்ந்து உதவி செய்யும்போதுதான் மனித வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறது; வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது. நம் சுயநலத்தை, சுய லாபத்தை நினைக்காமல், பிறருக்காக ஒரு காரியத்தைச் செய்தால் என்ன நடக்கும்... அதனால் யாருக்கு ஆதாயம்? விளக்குகிறது மகாபாரதத்தில் சொல்லப்படும் இந்தக் கதை.

 

அது ஒரு காலை நேரம். அஸ்தினாபுரம். தன் மாளிகை உப்பரிகையில் கிருஷ்ணரோடு நின்று பேசிக்கொண்டிருந்தான் அர்ஜுனன். வீதியில் நடந்து வருபவர்களைப் பார்ப்பதும் பேசுவதுமாக இருந்தார்கள் இருவரும். திடீரென்று அர்ஜுனன், ``கிருஷ்ணா அங்கே பார்!’’ என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான். கிருஷ்ணர் பார்வையைத் திருப்பினார். அங்கே அந்தணர் ஒருவர், தன் மேல் துண்டை ஏந்தி யாரிடமோ யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார்.

``பார்த்தால் வேதம் கற்றவர்போல் தெரிகிறது. இவருக்கு ஏன் இந்த நிலை கிருஷ்ணா?’’

``அதுதான் விதி.’’

``நம்மால் முடிந்த உதவியைச் செய்து அவர் நிலையை மாற்றப் பார்க்கலாமா?’’

``முயற்சி செய்து பாரேன்...’’

அர்ஜுனன் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. ஒரு சேவகனைக் கூப்பிட்டான். அந்த அந்தணரை அழைத்துவரச் சொன்னான். அந்தணர் வந்தார். சோர்ந்து போயிருந்தார். வயிறு ஒட்டிப்போயிருந்தது; கண்களிலேயே பசி தெரிந்தது. அர்ஜுனன், ஒரு பை நிறைய பொற்காசுகளை நிரப்பி அவரிடம் கொடுத்தான். அந்தணர் மகிழ்ந்து போனார். கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நன்றி சொல்லிவிட்டு வெளியே போனார். அர்ஜுனன் நிறைந்த மனத்தோடு கிருஷ்ணரைப் பார்த்து சிரித்தான்.

கிருஷ்ணன்

அன்று கிருஷ்ண பரமாத்மா சொன்ன விதி அந்தணரை விரட்டியது. வீடு செல்லும் வழியில், ஒரு வனம் இருந்தது. தனியாகச் சென்ற அந்தணர் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்டார். பொற்காசுப் பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் அந்தத் திருடன்.

அடுத்த நாள் காலை. முதல் நாளைப்போலவே கிருஷ்ணரும் அர்ஜுனனும் மாளிகை உப்பரிகையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஓரிடத்தைப் பார்த்த அர்ஜுனன் அதிர்ந்துபோனான். அங்கே முதல் நாள் பார்த்த அதே அந்தணர், யாரிடமோ அன்றைக்கும் யாசகம் கேட்டுக்கொண்டிருந்தார். சேவகனை அழைத்து அவரை அழைத்துவரச் சொன்னான் அர்ஜுனன். விசாரித்தான். ``என் தலையெழுத்து அப்படியிருக்கிறது. நான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை. அதுதான் உங்களிடம் வாங்கிய பொற்காசுகூட கொள்ளை போய்விட்டது...’’ கண்களில் நீர் துளிர்க்கச் சொன்னார் அந்தணர்.

அர்ஜுனனுக்கு அவர் பேசியதைக் கேட்டு இரக்கம் சுரந்தது. விலையுயர்ந்த வைரம் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான். ``அந்தணரே... கவனம்! இந்த முறையாவது இந்த வைரத்தை வைத்து, புத்திசாலித்தனமாகப் பிழைத்துக்கொள்ளும் வழியைப் பாரும்...’’ அவர் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார்.

இந்த முறை இருட்டுவதற்கு முன்னரே வீடு திரும்ப முடிவு செய்தார். `இந்த வைரத்தை எப்படி விற்கலாம், யாரிடம் விற்கலாம், இதை வாங்கும் அளவுக்கு நம்மூரில் வியாபாரிகள் இருக்கிறார்களா, ஏனென்றால் அர்ஜுனன் கொடுத்த வைரமாயிற்றே..!’ என்றெல்லாம் யோசனை செய்தபடி நடந்து போனார்.

திருடன்

அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் யாருமில்லை. அந்தணருக்கு இப்போது அந்த வைரத்தை எங்கே ஒளித்துவைப்பது என்கிற சங்கடம். அவர் வீட்டில் பாதுகாப்பான பெட்டிகளோ, அலமாரிகளோ இல்லை. அப்போதுதான் ரொம்ப நாள்களாகப் பயன்படுத்தாத ஒரு மண் பானை இருப்பது நினைவுக்கு வந்தது. அதில் வைரத்தை ஒளித்துவைப்பதுதான் பாதுகாப்பு என்று நினைத்தார் அந்தணர். அந்தப் பானைக்குள் வைரத்தைப் போட்டுவைத்தார். அன்று இரவு நன்றாக உறங்கியும் போனார்.

அடுத்த நாள் காலை, அந்தணருக்கு முன்னதாகவே எழுந்துகொண்டாள் அவரின் மனைவி. ஒரு பானையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு நீரெடுக்கச் சென்றாள். திரும்ப வரும் வழியில், ஓரிடத்தில் கால் தடுக்கி, பானையைக் கீழே போட்டுவிட்டாள். பானை உடைந்து போனது. அப்போது அவளுக்கு வீட்டிலிருக்கும் பழைய பானை நினைவுக்கு வந்தது. வீடு திரும்பியவள், கணவர் வைரத்தைப் போட்டு வைத்திருந்த பானையை எடுத்துக்கொண்டு திரும்பவும் ஆற்றை நோக்கிச் சென்றாள். பானையைக் கழுவுவதற்காக தண்ணீருக்குள் அவள் பானையை அழுத்த, அதற்குள்ளிருந்த வைரம் ஆற்றுத் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது.

***

மூன்றாம் நாள். அதே அஸ்தினாபுரம். அன்றைக்கும் அந்தணர் யாசகம் கேட்பதைப் பார்த்து துடித்துப்போனான் அர்ஜுனன். அவரை அழைத்து விசாரித்தான். அவர் நடந்ததைச் சொன்னார். இந்த முறை அர்ஜுனனை முந்திக்கொண்டார் கிருஷ்ணர். இரண்டு செப்புக் காசுகளை எடுத்து அந்தணரிடம் கொடுத்தார். ``போய் வாருங்கள் ஐயா..!’’ என்று அனுப்பிவைத்தார்.

``கிருஷ்ணா, பொற்காசுகளாலும் வைரத்தாலும் மாற்றியமைக்க முடியாத இவரின் வாழ்க்கையை, இந்தச் செப்பு காசுகளா மாற்றிவிடப் போகிறது? எனக்கு நம்பிக்கையில்லை’’ என்றான் அர்ஜுனன்.

``பொறுத்திரு!’’

அந்தணர் மாளிகையிலிருந்து வெளியே வந்தார். அவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவருக்கு மனம் ஒருபக்கம் உறுத்தியது. `ஒருவேளை கிருஷ்ணரும் அர்ஜுனனும் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்திருப்பார்களோ..!’ என்றெல்லாம் எண்ணம் ஓடியது. கால்போன போக்கில் நடந்தார் அந்தணர். அது ஆற்றங்கரையோரம். ஆற்று நீரில் ஒருவன் தூண்டில் போட்டுக் காத்திருப்பதையும், அப்போதுதான் ஒரு அழகான மீன் அதில் மாட்டிக்கொண்டதையும் பார்த்தார். உடனே அவனிடம் ஓடினார். `ஏம்ப்பா... அந்த மீனை விட்டுடேன். பாவம் அழகா இருக்கு’’ என்றார்.

வைரம்

``சரிங்கய்யா... இந்த மீனை விட்டுடுறேன். எனக்கு நீங்க என்ன தருவீங்க?’’

அந்தணர் தன்னிடமிருந்த இரண்டு செப்பு காசுகளைக் கொடுத்தார். அவன், மீனை அவரிடம் கொடுக்க வாங்கி ஆற்றுக்குள் எறிந்தார். அந்த வேகத்தில் அதுவரை மீனின் தொண்டையில் மாட்டிக்கொண்டிருந்த ஏதோ ஒன்று எகிறி கரையில் வந்து விழுந்தது. அந்தணர் அதை எடுத்துப் பார்த்தார். அவர் முதல் நாள் பானைக்குள் பத்திரப்படுத்திய அதே வைரம். அவர் மகிழ்ச்சியில் ``பிடிச்சிட்டேன்...பிடிச்சிட்டேன்... கண்டுபிடிச்சுட்டேன்!’’ என்று சத்தம் போட்டார். யதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த திருடன் (அவரிடம் கொள்ளையடித்தவன்) அவர் போட்ட சத்தத்தில் பதறிப் போனான். என்ன நினைத்தானோ... அவரிடம் திருடிய பொற்காசுப் பையை அவரிடமே கொடுத்துவிட்டு, தன் வழியே போனான்.

மறுநாள் காலை அந்தணர், அர்ஜுனனைத் தேடிப் போய் நடந்ததைச் சொன்னார். மறுபடியும் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனார். அவர் போனதும் அர்ஜுனன் ஆச்சர்யத்தோடு கேட்டான்... ``கிருஷ்ணா... இதெல்லாம் என்ன?’’

``அது ஒன்றுமில்லை. அந்தணருக்கு பொற்காசுகளும் வைரமும் கிடைத்தபோது, அவர் அவரைப் பற்றியும், அவருடைய தேவைகளைப் பற்றியுமே யோசித்துக்கொண்டிருந்தார். அவரிடம் இரண்டே இரண்டு செப்பு காசுகள் மட்டும் இருந்தபோது இன்னோர் உயிரைப் பற்றி நினைத்தார். அந்த எண்ணம்தான் அவருக்கு உதவியது. மற்றவர்களின் வேதனையை உணர்ந்து அவர்களின் தேவைகளுக்கு உதவ நினைத்து செயல்படும்போது, ஒருவர் கடவுளின் வேலையைச் செய்கிறார்; கடவுளே அந்த மனிதருக்கு உதவ முன்வருகிறார்.’’

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ஒரு நாள் ஒரு இரவு...

 

 
madurai%205

விளக்கொளிகளின் பின்னணியில் மீனாட்சியம்மன் கோயில்.

 

madurai%201

மதுரைக்குப் புகழ் சேர்க்கும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்.

     
 
madurai%202

ஒரு தீபாவளி திருநாள் இரவில்.

 

 

madurai%204

திருமலை நாயக்கர் மஹால்.

 

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

``மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை..! - இந்த ஆசை சரிதானா?

 

கோடைக்காலம் தொடங்கியவுடன் கையில்  நைலான் நரம்புகளால் செய்த தூண்டில்களை எடுத்துக்கொண்டு குளம் குளமாகத் தேடிச்சென்று மீன்பிடித்த நினைவுகள் பலரது மனதில் குளத்தோரச் சிற்றலைகளைப் போல் அலைமோதிக் கொண்டிருக்கும். அன்றெல்லாம் தேடித் தேடிச் சென்று கலங்கிய குளங்கள் தெளியும் வரை பொறுமை காத்திருந்தத் தருணங்களும், பொறி, அரிசிச் சோறு போன்றவற்றைத் தூவிவிட்டு அதைச் சாப்பிட மீன்கள் மேலே வரும்வரை நீரில் சிறு அலைகூடத் தளும்பவிடாமலும், தேவையான அளவு மீன்கள் மேலே வரும்வரை சிறு ஓசைகூடச் செய்யாமல் அமைதிகாத்த நிமிடங்களும் நெஞ்சிலிருந்து என்றும் நீங்காத நினைவுக் குமிழிகள்.

மீன்கள்

 

அந்த நினைவுக் குமிழிகளுக்குள் நாம் தேடிப் பிடித்த அனைத்து மீன் வகைகளும் இன்றும் உயிர்வாழ்ந்துகொண்டுதானிருக்கின்றன.  நமது ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் நினைவகக் குளங்களில். தூண்டிலில் கட்டுவதற்காக மண்ணைத் தோண்டித் தோண்டிச் சேகரிக்கும் மண்புழு இரைகளில் தொடங்குகிறது அன்றைய சிறுவர்களின் மீன் பற்றிய அறிவு. மண்புழுவைத் தூண்டிலில் கட்டிவிடுவதன் மூலம் அனைத்து மீன்களையும் பிடித்துவிட முடியாது. சூரை, கெண்டை, வவ்வால் போன்ற மீன்களை மட்டுமே அப்படிப் பிடிக்க முடியும். கொரத்தி, ஜிலேபி போன்ற சில மீன்களை நீரில் உணவைத் தூவி வலை போட்டுத்தான் பிடிக்க முடியும்.

கல் இடுக்குகளில் ஒளிந்துகொள்ளும் கல்லுளிமங்கன் முதல் சாப்பிடுவதற்கு ஆகாததால் கண்ணில் பட்டாலும் அவசியமின்றிக் கொல்லக்கூடாது என்று அப்படியே விட்டுவிட்ட ஓலை மீன் வரை எதையும் எப்போதும் தேவையின்றிப் பிடித்ததில்லை. பொழுதுபோக்காகவே இருந்தாலும் குழுவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு முன்னமே திட்டமிட்ட மீன்களைத் தவிர வேறு எதையும் பிடித்ததில்லை.

Fishing

அன்று சிறுவர்களாய் நாம் குளங்கள் தேடி ஓடினோம். அதையே ஸ்போர்ட் ஃபிஷிங் (Sport Fishing) என்ற பெயரில் வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிறு வித்தியாசம், நாம் சில மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டோம். இவர்கள் வேறொரு வழியைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாம் போகலாம், மீன் பிடிக்கலாம். எவ்வளவு மீன்களை வேண்டுமானாலும் பிடிக்கலாம். ஆனால், ஒரு விதியுண்டு. நாம் பிடிக்கும் மீன்களை மீண்டும் கடலிலேயே விட்டுவிட வேண்டும்.
இந்த வகைப் பொழுதுபோக்கு மீன்பிடித்தலில் எழுதப்படாத ஒரு விதியுண்டு. ஒருமுறை பிடிக்கப்பட்ட மீன் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பிடிக்கப்படலாம். ஆனால், பிடித்தவுடன் கடலில் விட்டுவிட வேண்டும். அதற்கு ஏற்படும் காயங்களைப் பற்றியோ, அவற்றின் உடலில் சேரும் செயற்கை இரைகளைப் பற்றியோ எந்தவிதக் கவலையும் இல்லை. அது வெறும் மீன் தானே.

Fishing

செயற்கை இரைகளைப் பயன்படுத்தி பிடிக்கும் இவர்கள் பிடிக்கப்படும் மீன்கள் கடலிலேயே மீண்டும் விடப்படுவதால் வளம் குறையாது என்று வாதிடுகிறார்கள். ஆனால், அந்தச் செயற்கை இரைகள் பிடித்த பிறகு விடப்படும் மீனின் வயிற்றுக்குள் தான் இருக்கும் என்பதையும் அந்த பிளாஸ்டிக் இரை அதை எப்படியும் கொன்றுவிடும் என்பதையும் ஏன் மறந்து விடுகிறார்கள்? 

உணவுக்காக வேட்டையாடலாம் என்பது இயற்கை விதி. ஆனால், அதற்காகக் கூட எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது. 95% மீன்கள் இந்தக் கடும் சோதனைகளைக் கடந்தும் உயிர் வாழ்கின்றனதான். ஆனால், இங்கே கொல்லப்படுவதல்ல பிரச்னை. மீன்களை ஒவ்வொருவராகப் பிடித்து அதற்கு 1%, 3%, 5% என்ற அளவுகளில் காயங்களைத் தந்துவிட்டு இரக்க குணத்தோடு அதை மீண்டும் வாழவிடுவது எவ்வளவு பெரிய கபட நாடகம்?

உணவுக்காக மீன் பிடிப்பவர்கள் மீண்டும் அவற்றின் வம்சம் வளர்வதற்காகக் கொஞ்சம் விட்டுவைப்பார்கள். ஆனால், இத்தகைய பொழுதுபோக்கு மீனவர்கள் தங்கள் சுய திருப்திக்காக மற்ற உயிர்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைத் தான் கொல்லவில்லையே! மீண்டும் உயிருடன் விட்டு விடுகிறார்களே! என்றும் சிலர் வாதிடுகிறார்கள். மீன்களுக்கு இயற்கையாகவே தப்பித்து வாழக்கூடிய திறன் உண்டு. ஆனால், நமது மனநிம்மதிக்காக அவற்றைப் பிடித்துத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம்?

இந்தப் புகார் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம். இது கவனிக்கப்பட வேண்டிய விபரீத பிரச்னை. லாப நோக்கோடு உளவியல் ரீதியாக இந்த வகை ஆசைகளை வளர்த்தெடுக்கும் ஊக்குவிக்கும் நிறுவனங்கள், ஆசைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் இயற்கையின் அடிப்படை அறங்களை மக்கள் மத்தியில் மறக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Sport fishing

``ஓர் உயிரினத்துக்குக் காயம் உண்டாக்கும் வகையில் செய்யும் செயல்கள், கொடுக்கும் தண்டனைகள், வற்புறுத்திச் செய்யவைக்கும் செயல்கள் அது தண்டனையாகவோ அல்லது கொடுப்பவரின் மன நிம்மதிக்காகவோ எதுவாக இருப்பினும் அது சித்ரவதை தான்."

இது நமது சட்டத்தில் சித்ரவதை குறித்து எழுதப்பட்டிருக்கும் விளக்கம். இதில் எந்த உயிருக்கும் என்ற வரையறையில் மீன்களும் உள்ளடங்கும். இதற்கும் பலர் அறிவியல் ரீதியாக விளக்கம் தர முயற்சிக்கிறார்கள். மீன்களுக்கு வலிகளை உணரும் நரம்பு மண்டலங்கள் இல்லாததால் இந்தச் செயல்களால் அவை எதையும் உணராது என்கிறார்கள். நம்மை சில நிமிடங்கள் சுவாசிக்க வழியற்ற வகையில் விட்டுவிடுவோம். மீண்டும் சுவாசிக்க அனுமதிக்கலாம். மீண்டும் அவ்வாறே சுவாசிக்க வழியின்றிச் செய்யலாம். மீண்டும் அனுமதிப்போம். இவ்வாறாகத் தொடர்ச்சியாக இம்சித்துக்கொண்டே இருந்தால், அப்போது புரியும் மீன்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் விடும்வரை மூச்சுத்திணறி அவை படும்பாடு.

என்றோ ஒரு பாட்டி சொன்ன வரிகள், ``தினமொரு பொழுதுபோக்கு இருந்தால், சூரியனைக் கண்ட பனிபோல் கவலைகள் கரையும்".

உண்மைதான். அது அடுத்த உயிர்களின் கவலைகளை அடித்தளமாகக் கொண்ட பொழுதுபோக்குகளாக இல்லாத வரையிலும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கண்டுபிடிப்புகளின் கதை: குடை குடையாம் காரணமாம்

 

 
shutterstock397740385
 

மழையில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கே இன்று பெரும்பாலும் குடையைப் பயன்படுத்துகிறோம். ஆரம்பக் காலத்தில் வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கே குடை பயன்படுத்தப்பட்டது. அப்போது இந்தச் சிறு குடையின் பெயர் Parasol. மழைக்குப் பயன்படுத்தப்படும் இன்றைய குடை Umbrella.

   
 

நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் குடை போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். பனை ஓலையில் குச்சியைச் செருகி உருவாக்கப்பட்ட இந்தக் குடை வெயிலில் இருந்து காப்பாற்றியது. 3,500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், செல்வந்தர்கள், மதகுருமார்கள் மட்டும் வெயிலுக்குக் குடைப் பிடிக்க ஆரம்பித்தனர்.

எகிப்து நாட்டின் பழங்கால ஓவியங்களில் குடை பிடித்ததற்கான ஆதாரங்கள் அதிகம் இருக்கின்றன. சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு எகிப்துக்கு அருகில் இருந்த நாடுகளில் மன்னர்கள் குடை பிடித்துவந்தனர். பாலைவன நாடுகள் என்பதால் அவர்களுக்கு மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்குக் குடை வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை.

shutterstock1054272095
 

கி.மு. 11-ம் நூற்றாண்டில் சீனாவில் மழையிலும் பயன்படுத்தக் கூடிய, தண்ணீர்ப் புகாத குடைகள் உருவாக்கப்பட்டன. பட்டுத்துணியால் செய்யப்பட்ட இந்தக் குடைகளையும் மன்னர்களும் செல்வந்தர்களும்தான் பயன்படுத்தினர். செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் பல அடுக்குத் துணிகளால் ஆன ஆடம்பரக் குடைகளைப் பயன்படுத்தினர். இது ஆசிய நாடுகளுக்குப் பரவியது. பர்மாவில் 24 அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டக் குடை உருவாக்கப்பட்டது.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் குடையை ஆடம்பரப் பொருளாக நினைத்தனர். வசதியான பெண்கள் மட்டுமே குடைகளைப் பயன்படுத்தினர். மடக்கி, விரிக்கக்கூடிய இந்தக் குடைகளைப் பெண்கள் பிடிக்க மாட்டார்கள். பணியாளர்கள்தான் பிடித்துக்கொண்டு வருவார்கள். குதிரை வண்டிகளில் பெரிய குடைகளை விரித்து, வெயில் படாமல் பயணத்தை மேற்கொண்டார்கள்.

5-ம் நூற்றாண்டில் ரோமானியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஐரோப்பாவில் குடை காணாமல் போனது. 16, 17-ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் காரணமாகக் காணாமல் போன குடைகள் மீண்டும் வந்தன. பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்தில் மன்னர்களும் செல்வந்தர்களும் குடைகளைப் பயன்படுத்தினார்கள். விலை உயர்ந்த பட்டுத்துணியால் செய்யப்பட்டாலும் இந்தக் குடைகள் நீண்ட காலம் உழைக்கவில்லை. அதனால் குடையில் மேலும் சில முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

18-ம் நூற்றாண்டில் ஐரோப்பா, வட அமெரிக்கா முழுவதும் குடைகள் பரவின. அப்போதும் பெண்களே குடைகளைப் பயன்படுத்தினர். இங்கிலாந்து மாக்தலின் மருத்துவமனையின் நிறுவனர் ஜோனாஸ் ஹான்வே, வெயிலிலும் மழையிலும் குடையைப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஓர் ஆண் குடை பிடிப்பதை எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். பிறகு இங்கிலாந்தில் ஆண்களும் குடைகளை ஏற்றுக்கொண்டனர். குடைகளிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, முன்னேற்றங்களைக் கொண்டு வந்தனர். சாதாரணமானவர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் குடைகள் விற்பனைக்கு வந்தன.

Umberllacol
 

பெரிய குடைகளைக் கொண்டு செல்வது சிரமமாக இருந்ததால், 1928-ம் ஆண்டு பாக்கெட் குடைகள் அறிமுகமாயின. 1969-ம் ஆண்டு பிராட்ஃபோர்ட் இ பிலிப்ஸ் நவீன மடக்குக் குடைகளை அறிமுகம் செய்தார்.

இன்றும்கூட கோயில்கள், தேவாலயங்களில் குடைகள் பயன்படுத்தப்படுகின்றன. கடற்கரைகளில் குடையின் கீழ் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். பழச்சாறுகளில் சிறிய காகிதக் குடைகளை அழகுக்காக வைக்கிறார்கள். பெரிய குடைகளுக்கு அடியில் சாலையோரக் கடைகளைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான வீடுகளில் குடைகள் இருக்கின்றன. அதிக அளவில் குடைகளை உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா? குடையைக் கண்டுபிடித்த சீனாதான். ஆயிரக்கணக்கான குடை நிறுவனங்கள் இங்கே இருக்கின்றன.

(கண்டுப்பிடிப்போம்)

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

‘அடுத்தவன் சொத்தில் ஆசை வைக்காதே’
 

image_17b72e7357.jpgவிலங்குகளின் வீடு ‘காடு’. அங்கு அவை மட்டும் வாழுவதில்லை. பறவைகள், பூச்சி, ஊர்வன, நுண்ணுயிர்கள் எல்லாவற்றுக்கும் இதுதான் வசிப்பிடம். இவைகள்தான், பல்லாண்டுகளாக அங்கே உத்தியோகப்பற்றற்ற நிரந்தர குடியிருப்பாளர்கள். 

ஆனால், மனிதர்களுக்குதான் மனச்சாட்சியே இல்லையே. விலங்குகளின் நிலத்தை, மனிதன் ஆக்கிரமித்தமையால், மனிதன்மீது வழக்குப்போட முடியாது. 

எமது மக்கள், பக்கத்து வீட்டுக்காரனுடன் மாத்திரம் சண்டைபோடுவதில்லை. காட்டு உயிரினங்களை வேட்டையாடுவதும், அழித்து நிலஆக்கிரமிப்பு நடாத்துவதால் யாருக்கு நஷ்டம்? 

விலங்குள் மட்டும் அழிக்கப்படுவது மட்டுமல்ல; இன்று மரங்களும் கோரமாகக் கொலை செய்யப்படுகின்றன.இதனால் முழு உலகமுமே உஷ்ணமாகி, நல்ல காற்றின்றி, விழிபிதுங்கி ஒடுங்கப் போகின்றன. இந்த உண்மையை உணர எவருமில்லை. 

எதிர்காலம் என்பதும் எமக்கானதும் எமது தலைமுறைக்கானதுமான காலமாகும். எங்களோடு எமது வம்சங்களும் அழியலாகாது. அடுத்தவன் சொத்தில் ஆசை வைக்காதே; மிருகங்களும் மரங்களும் உலகப் பிரஜைகள்தான்.

Link to comment
Share on other sites

டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் நடைபெற்ற நாள்: மே31- 1911

 
அ-அ+

டைட்டானிக் என்ற சொகுசுக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் பலியானார்கள். இந்த உண்மை சம்பவத்தை வைத்து வெளிவந்த டைட்டானிக் என்ற ஆங்கிலப்படம் வெற்றிகரமாக ஓடி ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கிக்குவித்தது. இந்த டைட்டானிக் கப்பல் 1911-ம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.

 
 
 
 
டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் நடைபெற்ற நாள்: மே31- 1911
 
டைட்டானிக் என்ற சொகுசுக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் பலியானார்கள். இந்த உண்மை சம்பவத்தை வைத்து வெளிவந்த டைட்டானிக் என்ற ஆங்கிலப்படம் வெற்றிகரமாக ஓடி ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கிக்குவித்தது.

இந்த டைட்டானிக் கப்பல் 1911-ம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.

இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1889 - பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1900 - பிரித்தானியப் படைகள் ரொபேர்ட் பிரபு தலைமையில் ஜோகன்னஸ்பர்க் நகரைக் கைப்பற்றின.
 
* 1902 - தென்னாபிரிக்காவில் இரண்டாவது போவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது.
 
* 1910 - தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. * 1911 - டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
 

* 1921 - ஐக்கிய அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1931 - பாகிஸ்தானின் குவெட்டா என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் சிட்னி நகரைத் தாக்கின.
 
* 1961 - தென்னாப்பிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது.
 
* 1962 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

* 1970 - பெருவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 47,000 பேர் கொல்லப்பட்டனர்.
 
* 1997 - கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் (Confederation Bridge) திறக்கப்பட்டது.
 
* 1981 - யாழ்ப்பாணம் பொது நூலகம் நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
 
* 2004 - வீரகேசரி பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
* 2005 - இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஜர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
* 2007 - டொராண்டோ தமிழியல் மாநாடு ஆரம்பமானது.
 
 
 

உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31-1987

அ-அ+

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

 
 
உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31-1987
 
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

மகாராஷ்டிராவின் புனே நகரை கலக்கும் ‘தந்தூரி டீ’

 

 
31chkantandooritea

தந்தூரி சிக்கன் தெரியும், தந்தூரி டீ எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு கடை தந்தூரி டீயை வழங்கி வருகிறது. இது டீ பிரியர்களின் நாக்கை கொள்ளையடித்துள்ளது. இது தொடர்பான தகவல் சமூக வலை தலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த பானங்களில் முக்கியமானது டீ என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும் மசாலா டீ இன்னும் சிறப்பு. இதுபோல புதுப்புது வகையான டீயை கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில், புனே நகரின் கராடி பகுதியைச் சேர்ந்த ‘சாய் லா’ என்ற கடை, தந்தூரி டீயை வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த டீ புது விதமான சுவையுடன் இருப்பதால், ஏராளமான டீ பிரியர்கள் அந்தக் கடையை மொய்த்து வருகின்றனர்.

 

இந்த டீயை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம். தந்தூரி அடுப்பில் சிறிய களிமண் பானையை வைத்து நன்கு சூடான பின்பு, அதில் பாதியளவு சூடாக்கப்பட்ட டீயை ஊற்றுகின்றனர். நன்கு கொதித்து நுரை தள்ளி வரும்போது, அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, பன் அல்லது பிஸ்கட்டுடனும் வழங்குகின்றனர். ஒரு கப் டீ வெறும் ரூ.20-க்கு கிடைக்கிறது. இது தந்தூரி உணவைப் போல மிகவும் சுவையாக மண் வாசனையுடன் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு மட்டும்தான் இதுபோன்ற டீ வழங்கப்படுகிறது. எனவே, உலகின் முதல் தந்தூரி டீ என அவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

அறிவியல் பட்டதாரிகளான பிரமோத் பங்கர் மற்றும் அமோல் ராஜ்தியோ ஆகிய இருவர்தான் இந்த கடையின் உரிமையாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “கிராமத்தில் உள்ள எங்கள் பாட்டி புதுவிதமாக பால் காய்ச்சியதைப் பார்த்தோம். இதை அடிப்படையாகக் கொண்டு தந்தூரி டீயை தயாரிக்கத் தொடங்கினோம். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட வெளி மாநிலத்தவர்களும் இங்கு வரத் தொடங்கி உள்ளனர்” என்றனர். இந்த டீயை குடித்தவர்கள், தந்தூரி டீயின் அருமை பெருமைகளை சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது.

இந்த டீயை குடித்த ராஜஸ்தான் மாநிலம் டவ்சா மக்களவை தொகுதி உறுப்பினர் ஹரிஷ் மீனா ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “இந்த டீ மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. புனே நகருக்கு செல்லும்போதெல்லாம் தந்தூரி டீயை குடிப்பேன்” என பதிவிட்டுள்ளார். .

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

டி-சர்ட்டா அல்லது சட்டையா?- இணையத்தில் விவாதத்தை கிளப்பிய ஆடை

ஆடைபடத்தின் காப்புரிமைBALENCIAGA

பெலேன்சியாகா என்னும் ஃபேஷன் நிறுவனம், 2018-ம் ஆண்டுக்கான இலையுதிர் கால கலெக்‌ஷனாக, 1290 டாலருக்கு ஆண்களுக்கான டி-ஷர்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் விலை பலரை ஆச்சரியப்படுத்தவில்லை என்றாலும், இதன் வடிவமைப்பு பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு டி சர்ட்டின் முன்பு, கட்டம் போட்ட சட்டை குத்தி வைத்திருப்பது போல இதன் வடிவமைப்பு உள்ளது.

இது பலருக்கு குழப்பத்தை விளைவித்துள்ளது.

 
 

Is it a t-shirt? Is it a shirt? #Balenciaga have you covered for smart/casual. Only £935 https://www.balenciaga.com/gb/shirts_cod38757019tm.html 

 
 
 

இந்த ஆடையினை, இரண்டு முறைகளில் அணியலாம் என பெலேன்சியாகா வலைதளம் கூறியுள்ளது.

ஆனால், பலர் தாங்களாகவே இதுபோன்ற ஆடையை தயாரித்து, நிறைய பணத்தை சேமிக்க முடிவு செய்தனர்.

 
View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter
 

Hey @BALENCIAGA,

I just made my own Double Shirt and it didn't cost thousands of dollars!

 

View image on TwitterView image on Twitter
 

Hey @BALENCIAGA I took it from casual to chic with one hanger. This look is free

 

இந்த மர்மத்தைத் தீர்க்க, அந்நிறுவனத்திற்கு நாங்கள் தொடர்புகொண்டோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

https://www.bbc.com

Link to comment
Share on other sites

பிட்ஸ் பிரேக்

 

35p1_1527509374.jpg

`பாலிவுட் ராணி' கங்கனா ரணாவத்துக்கு அசைவம் என்றால் அவ்வளவு இஷ்டம். மூன்றுவேளையும் கூட பிரியாணி சாப்பிடக்கூடியவர். சமீபத்தில் சைவமாக மாறி இருக்கிறார்.  ‘மணிகர்னிகா: தி குயீன் ஆஃப் ஜான்சி’ படத்தில் ஜான்சி ராணியாக நடித்துக்கொண்டிருக்கிறார். படத்துக்காக உடலை பக்காவாக மெயின்டெயின் பண்ணத்தான் இந்த சைவ மாற்றமாம்!


82_1527509472.jpg

கிரிக்கெட்டின் மிஸ்டர் 360 ஏ.பி.டி வில்லியர்ஸ் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். "நான் களைத்துவிட்டேன்" என்று சொல்லி யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஓய்வு முடிவை அறிவித்துவிட,

`டி வில்லியர்ஸே இல்ல, இனி எப்படி 2019 உலகக் கோப்பையை ஜெயிக்கிறது?' என்று கண்ணீர் விடுகிறார்கள் தென்னாப்பிரிக்க ரசிகர்கள். அவர்களின் கவலை ஒருபுறமிருக்க, ‘இனி ஐ.பி.எல்-ல ஆடுவாரா மாட்டாரா?' என்று அடுத்த ஐ.பி.எல் பற்றி ஃபீல் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள். இந்தக் கவலைகளுக்கு நடுவே அவரின் ஸ்பைடர்மேன் கேட்சுகளையும், 360 டிகிரி சிக்ஸர்களையும் நினைத்து நாஸ்டால்ஜியா மோடில் ஆழ்ந்திருக்கிறார்கள் ஏ.பி.  டிவிலியர்கள்!


66p1_1527509512.jpg

ப்போதுமே மிஸ்.படபட வரலக்ஷ்மி சரத்குமார். இப்போது மிஸ்டர். சந்திரமௌலி படத்தில் அமைதிப்பெண்ணாக நடித்திருக்கிறாராம். 'தனக்குக் கதைதான் முக்கியம். கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்ற ஆசையில்லை' என்று கூறும் வரலக்ஷ்மி, சினிமா மற்றும் சமூக சேவை இரண்டையும் ஒருசேர பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார். ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பது `வரு’வின் லட்சியம்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, Text

#வரலாற்றில்_இன்று: மே 31, 2008 - 100 மீட்டர் தூரத்தை 9.72 நொடிகளில் ஓடி புதிய உலக சாதனை படைத்தார் ஜமைக்காவின் உசைன் போல்ட்.
#OnThisDay

Link to comment
Share on other sites

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிராவோ எழுதி பாடிய பாடல் – வைரலாகும் வீடியோ

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்-ரவுண்டர் பிராவோ எழுதி பாடிய ‘வி ஆர் த கிங்ஸ்’ பாடல் சமூக ஊடகசென்னை  சுப்பர்கிங்ஸ் அணிக்காக  சகலதுறை ஆட்டக்காரர்பிராவோ எழுதி பாடிய ‘வி ஆர் த கிங்ஸ்’ பாடல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறதுங்களில் வைரலாக பரவி வருகிறது.

csk2-500x285.jpg

ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் பெற்ற வெற்றியை ரசிகர்கள் விமர்சையாக கொண்டி வருகின்றனர். இந்த அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சிறப்பாக விளையாடினார்.

அவர் போட்டியின் போது நடனமாடி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஓய்வறையில் சக வீரர்களுடன் விளையாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், பிராவோ நேற்று டுவிட் செய்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் உற்றாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வி ஆர் த கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்’ என்ற இந்த பாடலை பிராவோ தானே எழுதி பாடியுள்ளார். டோனி, ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்றவர்களை பெருமைப்படுத்தி பாடப்பட்டுள்ள இந்த பாடலை ரசிகர்களுக்காக வெளியிட்டதாக பிராவோ தெரிவித்தார்

http://metronews.lk/

Link to comment
Share on other sites

‘சுந்தர மானிடர்களாக இன்பத்துடன் இயங்குக’
 

image_de361a066a.jpgதுன்பத்தில்தான் அன்பைப் புரியமுடியும். ஒருவர் நன்றாக வாழும்போது, எல்லோரும் கூடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள். இந்தச் சலசலப்புகளைப் புத்தியுள்ளவன் நம்பமாட்டான். அவன் யதார்த்த வாழ்வை உணர்ந்தவன். எல்லாமே மாறும்; நல்லோர் அன்பு மட்டும் மாறவே மாறாது. 

கெட்ட மனதை மனிதர் ஏன் மாற்றாமல் இருக்கின்றார்கள்? திருப்தி எனும் மனோ நிலைக்குள் தம்மை ஆட்படுத்தாது விட்டால் துன்பம்தான். 

இமயத்தைத் தங்கமாக மாற்றி, ஒருவருக்குத் தானம் வழங்கினாலும் பக்கத்து வீட்டு ஏழையின் காணியில், கண் வைப்பான். ஏன், அக்காணியில் உள்ள முருங்கை மரத்துக் காய்களையும் எடுப்பதற்கு எண்ணுவான். ஆசையை அடக்கினால் ஏது துன்பம்? 

ஆசையின் உச்சம் மனிதனை வேஷக்காரன் ஆக்கிவிடுகின்றது.எதைப் பெறுவதற்கும் தனது உருவத்தை மாற்றி நடித்து, கொடிய பாவம் செய்யும் பிரகிருதியாகி, எதைக் காணப்போகின்றான். 

ஒருவன் சிறப்புடன் வாழ நிர்மலமான மனது வேண்டும். அது உங்கள் நெஞ்சத்துக்குள் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. அதற்குள் சங்கமித்து, சுந்தர மானிடர்களாக இன்பத்துடன் இயங்குக.      

Link to comment
Share on other sites

நேபாள மன்னர் பிரேந்திரா படுகொலை செய்யப்பட்ட நாள்: ஜுன் 1- 2001

 
நேபாள மன்னர் பிரேந்திரா படுகொலை செய்யப்பட்ட நாள்: ஜுன் 1- 2001
 
பிரேந்திரா பீர் விக்ரம் சா தேவ் (டிசம்பர் 28, 1945 – ஜூன் 1, 2001) என்பவர் 1972 முதல் 2001-ல் இறக்கும் வரை நேபாளத்தின் மன்னராக இருந்தவர். இவருக்கு முதல் இவரது தந்தையார் மகேந்திரா மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 1, 2001-ல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் தீபேந்திரா சுட்டுக் கொன்றார்.

இளவரசர் (1955-ல் இருந்து மன்னர்) மகேந்திரா, இளவரசி இந்திரா ராஜ்யலக்ஷ்மி ஆகியோரின் புதல்வர். இந்தியாவில் டார்ஜீலிங், புனித ஜோசப் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் ஈட்டன் கல்லூரி (1959-64), டோக்கியோ பல்கலைக்கழகம் (1967), மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1967-68) ஆகியவற்றில் உயர்கல்வியையும் கற்றார். *பிரேந்திரா ராணா குடும்பத்தைச் சேர்ந்த ஐஷ்வர்யா என்பவரை பெப்ரவரி 27 1970-ல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.

இளவரசர் தீபேந்திரா (ஜூன் 27, 1971 – ஜூன் 4, 2001) இளவரசி சுருதி (அக்டோபர் 15, 1976 - ஜூன் 1, 2001) இளவரசர் நிரஞ்சன் (நவம்பர் 6 1977–ஜூன் 1 2001)

தந்தை மகேந்திரா 1960-ல் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்து நாடாளுமன்றத்தையும் கலைத்திருந்தார். பிரேந்திராவும் தனது தந்தையின் அடிச்சுவட்டிலேயே நாட்டை அரசாண்டார். சோவியத் ஒன்றியம், சீனா ஆகியவற்றின் தலையீடுகளை முறியடித்து நேபாளத்தின் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டார்.

பின்னர், பிரேந்திரா நாடாளுமன்ற மக்காளாட்சி முறைக்கு ஆதாராவாளரானார். 1990-ல் நாட்டில் கிளர்ந்த மக்கள் எழுச்சியை அடுத்து ஏப்ரல் 8-ல் அரசியல் கட்சிகளின் மீதான தடைகளை நீக்கினார். நவம்பர் 9-ல் அரசியல் அமைப்புக்கு திருத்தங்களை அறிவித்தார்.

அதன்படி, மன்னராட்சியின் கீழ் பலகட்சி அரசியலுக்கு இடமளித்தார். மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனாலும், பல கட்சிகளுக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாடுகள், மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நாட்டில் உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. 1996 முதல் 2006 வரையில் மாவோயிஸ்டுகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் இப்போர் இடம்பெற்றது.

ஜூன் 1, 2001-ல் அரச விருந்து ஒன்றின் போது பிரேந்திராவும் அவரது முழுக்குடும்ப உறுப்பினர்களும் பிரேந்திராவின் மகன் இளவரசர் தீபேந்திராவினால் சுட்டுக் கொல்லப்பட்டபோது நேபாளத்தின் உறுதிநிலை கேள்விக்குள்ளானது. இளவரசர் தீபேந்திரா தன்னைத் தானே சுட்டுப் படுகாயமுற்றார்.
 
 
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1792 - கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15-வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
 
* 1796 - டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16-வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
 
* 1812 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
 
* 1831 - ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.
 
* 1855 - அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிகராகுவாவைக் கைப்பற்றினார்.
 
* 1869 - மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்.
 
* 1879 - பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ-சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான்.
 
* 1910 - ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென்முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.

* 1941 - ஈராக், பாக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
 
* 1946 - ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
 
* 1947 - சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.
 
* 1959 - நிகராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.
 
* 1962 - நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ப் ஐக்குமன் இஸ்ரேலில் தூக்கிலிடப்பட்டார்.
 
* 1964 - சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.
 
* 1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

* 1978 - டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
 
* 1979 - 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
 
* 1980 - சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
 
* 1981 - யாழ் பொது நூலகம் மே 31 நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
 
 
Link to comment
Share on other sites

காரின் முன் பக்கத்தில் சவுதி இளவரசி – அட்டை படத்தினால் சர்ச்சை

சவுதி அரேபிய இளவரசி காரின் முன்பக்கத்தில் அமர்ந்திருக்கும் அட்டைப்படத்தை வோக் சஞ்சிகை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து சர்ச்சை உருவாகியுள்ளது.

வோக்கின் சவுதி அரேபிய இதழின் அட்டை படத்தில் இளவரசி ஹைபா பின்ட் அப்துல்லா அல் சவுட் வாகனத்தின் முன் ஆசனத்தில் காணப்படுகின்றார்.

சவுதிஅரேபியா பெண்கள் வாகனம் செலுத்துவது மீதான தடையை அகற்ற உள்ள நிலையில் இந்த அட்டைப்படத்தை வோக் வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்யும் நபர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3 லட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்பதல் அளித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் வோக் சவுதி அரேபிய இதழ் தனது ஜூன் பதிவை சவுதிஅரேபியாவுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளது. இந்த இதழின் அட்டை படத்தில் நட்சத்திரமாக HRH ஹேபா பின் அப்துல்லா அல் சவுத் இடம் பெற்றுள்ளார். இவர் மறைந்த மன்னர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லா 2005-ல் இருந்து சவுதி அரசராக இருந்தார் 2015இல் மரணம் அடைந்தார்.

இந்த அட்டை படத்தில்  சவுதி இளவரசி 1980-களின் மெர்சிடஸ் 450 எஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

saudhi-1-500x300.jpg

அவர் கூறி இருப்பதாவது:-

நமது நாட்டில், மாற்றத்தை கண்டு பயப்படுகிற சில பழமைவாதிகள் இருக்கிறார்கள். அரசு புதிய திசையை நோக்கி பயணிக்கிறது. இந்த மாற்றங்களை நான் மிகவும் உற்சாகத்துடன் ஆதரிக்கிறேன். மற்ற மக்களின் சமுதாயங்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது மற்றும் உங்கள் சொந்த சமுதாயம் உயர்ந்ததாகக் கருதுவது எளிது, ஆனால் மேற்கத்திய உலகம் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட மற்றும் தனித்துவமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் பலம் மற்றும் பலவீனங்களைக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், தவிர்க்க முடியாதது, அது நமது கலாச்சாரம், அதை தீர்ப்பதை விட அதை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. “என கூறி உள்ளார்.

http://metronews.lk/

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

68p1_1527510278.jpg

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் முக்கால்வாசி முடிந்துவிட்டது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாக இருக்கிறது. தீபாவளிக்குப் படம் ரிலீஸ். இந்தப்படத்திற்குப் பிறகு   அமீர் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக போய்க்கொண்டி ருக்கிறது. சீக்கிரமே அறிவிப்பு வரும் என்கிறார்கள். அரசியல்படம்தானே?


68p2_1527510362.jpg

கிரிக்கெட் வீராங்கனையாக ‘கனா’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்காக சென்னையில் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மைதானத்தில் ஐஸ்வர்யாவின் பயிற்சியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் டேவ் வாட்மோர் ஐஸ்வர்யாவை ரொம்பவே பாராட்டியதோடு சில டிப்ஸ்களும் கொடுத்தாராம்! இந்தப்படத்தை இயக்குவது பாடகர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பவர் சிவகார்த்திகேயன்! கெத்துடீம்


68p3_1527510379.jpg

மல்ஹாசனைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகிறார் விஷால். தெலுங்கில் லக்‌ஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கிய ‘மேமு செய்த்தாம்’ நிகழ்ச்சியின் தமிழ்ப் பதிப்பைத் தொகுத்து வழங்கவுள்ளார் விஷால். சாமானியர்களின் கனவுகளை நிறைவேற்றித் தருகிற நிகழ்ச்சியாம் இது. பிக்பாஸ் போன பாதையிலே...


68p4_1527510401.jpg

‘வொண்டர் வுமன்’ படத்தில் நடித்து உலக அளவில் புதிய சென்சேஷனாக உருவெடுத்திருப்பவர் நடிகை கேல் கேடட். கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றிய படத்தில் நடிக்க விருக்கிறார். அமெரிக்கப் பத்திரிக்கையாளர் லிசா ஹோவர்டுக்கும், காஸ்ட்ரோவிற்குமிடையே யான உறவைச் சொல்ல விருக்கும் இப்படத்திற்கு ‘My Dearest Fidel’  எனப் பேர்வைத்திருக்கிறார்கள். புரட்சிக்காரன் காதல்!


68p5_1527510417.jpg

#HumFitTohIndiaFit #FitnessChallenge ஹாஷ்டேக்குகளில் தனது உடற்பயிற்சி வீடியோவைப் பதிவு செய்த விராட் கோலி, இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியையும் உடற்பயிற்சி வீடியோவைப் பதிவு செய்யும்படி அழைத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமரும், விரைவில் வீடியோவைப் பதிவிடுவதாக ட்விட்டரில் அறிவித்தார். `தூத்துக்குடியில் இத்தனை மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, அதைப்பற்றி வாயையே திறக்காமல், கோலியோடு இப்படிக் கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்களே, இது நியாயமா?’ என சமூகவலைதளங்களில் பிரதமர் மோடியை வறுத்தெடுத்துவிட்டார்கள் நெட்டிசன்ஸ். மக்கள் பார்த்துகிட்டிருக்காங்க...


68p6_1527510433.jpg

வரெஸ்ட் சிகரத்தை எந்த வயதிலும் எட்டலாம் என நிரூபித்திருக்கிறார் 53 வயதாகும் சங்கீதா சிந்தி பாகல். ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த சங்கீதா விளம்பர மாடல் மற்றும் தொழிலதிபர். மிஸ் இந்தியா போட்டியில் ஃபைனல் வரை முன்னேறியவர். சென்ற ஆண்டே எவரெஸ்டில் ஏற முயற்சி செய்து முடியாமல் பாதி வழியில் திரும்பிவிட்டவர். மனதைத் தளரவிடாமல் இந்த ஆண்டு முயற்சி செய்து வெற்றிபெற்றிருக்கிறார். இதன் மூலம் அதிக வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியப் பெண் என்கிற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். எதிர்நீச்சலடி... வென்று ஏற்று, கொடி!


68p7_1527510450.jpg

‘ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலை வைத்துப் பார்க்காதீர்கள். பத்துப் பேர் அந்த படத்தை நல்ல படம், நேர்மையான படம் என்று பேசுகிறார்களா என்பதைப்பாருங்கள், அதுதான் உண்மையான வெற்றி. இனி என் பட விளம்பரங்களில் வசூல் விபரங்களெல்லாம் போடமாட்டேன்.’ என அதிரடியாக அறிவித்திருக்கிறார் தெலுங்கு நடிகர் ராம்சரண். அவர் சமீபத்தில் நடித்து வெளியான `ரங்கஸ்தலம்’ ஆந்திரா பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் அடித்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. நல்ல முடிவு


68p8_1527510465.jpg

ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கவிருக்கிறார் `ஸ்லம்டாக் மில்லியனர்’ இயக்குநர் டேனி பாய்ல். ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் இது 25வது படம். 2006 தொடங்கி ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் டேனியல் கிரெய்க்கின் ஐந்தாவது படம். அனேகமாக இதுதான் டேனியலின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கும் என்கிறார்கள். பாண்ட்...  லாஸ்ட் பாண்ட்!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

தண்ணீருக்குப் பயந்த குட்டி யானை இன்று நீச்சலடிக்கிறது...15 மாதங்களில் நடந்தது என்ன?

 

"கொஞ்சம், கொஞ்சமாக...அந்தக் கொஞ்சம் ஒருநாள் அதிகமாகும். அந்தக் கொஞ்சம் ஒரு நாள் மிக அதிகமாகும்." 

- ஆப்பிரிக்க பழமொழி. 

 

 ஜிம்பாப்வே நாட்டின் ஒரு காட்டுப் பகுதி. பட்டையான, பெரிய காதுகளைக் கொண்ட ஆப்பிரிக்க யானைகள் வாழும் காடு அது. வெப்பம் அதிகம். அது யானைகள் வலசைப் போகும் காலம். 

பல யானைக் கூட்டங்கள் அந்தப் பரந்த நிலப்பரப்பைக் கடந்துகொண்டிருந்தன. அந்தக் காட்சிகளும் அந்த வாழ்க்கையும் கற்பனைக்கே அத்தனை அழகாக இருந்தது. இரவும், பகலும் நடக்கும். சக கூட்டங்களை ஏதோ ஓர் இடத்தில் பார்க்கும்போது, நண்பர்களோடு அலவளாவும். தங்களுக்குத் தேவையான உணவைத் தேடும். இப்படியாக கொஞ்சம், கொஞ்சமாக தூரம் கடக்கும். அது ரொம்பவே அழகாக இருக்கும். அழகு மட்டுமல்ல. ஆபத்தும் நிறைந்திருக்கும். 

ஜிம்பாப்வே காட்டில் யானைக் கூட்டம்

கிளம்பும் கூட்டம் அதே எண்ணிக்கையில் மீண்டும் திரும்புமா என்பது சந்தேகம்தான். ஆனால், அனைவரும் நலமாக திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான் அந்த ஜீவராசிகள் கிளம்புகின்றன. அப்படித்தான் அந்தக் கூட்டமும் கிளம்பியது. 

அந்தக் கூட்டத்தில் அவளின் பெரிய வயிறு, மிகப் பெரிதாக வீங்கியிருந்தது. எந்த நேரமும் குழந்தையைப் பிரசவிக்கலாம் என்ற நிலை. அவளுக்காக அந்தக் கூட்டம் மெதுவாக...சில சமயம் மிக மெதுவாக நகர்ந்தது. அவளால் கிளைகளை உடைக்க முடியாத சூழலில் சக தோழர்கள் கிளை உடைத்து உணவளித்தனர். அவளுக்கு ஒரு பக்கம் பெரு மகிழ்ச்சி. ஒரு பக்கம் கொஞ்சம் பயமும் இருந்தது. 
வெயில் உக்கிரமாக இருந்தது. இந்த நேரத்தில் வலி வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. வலியில் பிளிறினாள். மொத்தக் கூட்டமும் நின்றது. சில நிமிடங்களில் அழகான அந்தக் குட்டியை அவள் பெற்றெடுத்தாள். கூட்டம் அதைக் கொண்டாடியது. பெற்றெடுத்த வலியோடு, தன் குழந்தையைக் கண்டு அவள் சிரித்தாள். அது ஓர் அழகான பெண் குழந்தை. 

ஓரிரு நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் கிளம்பியது அந்தக் கூட்டம். அங்கு ஒரு காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கடக்க வேண்டும். எல்லோருமே அதற்கு பழக்கப்பட்டவர்கள்தான். ஆனால், கூட்டத்துக்குப் புதிதாக வந்துள்ள அந்தக் குட்டி எப்படி இதைக் கடப்பாள் என்ற சந்தேகம் இருந்தது பலருக்கும். ஆனால், அவள் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. ``இளங்கன்று பயமறியாது" என்று சொல்வார்களே...அதுபோல். 

காட்டாற்றின் வேகம் வழக்கத்தைவிடவும் அதிகமாக இருந்தது. பெரியர்களின் ஒரு கூட்டம் முன்னால் கடந்தது. இடையே இந்தப் புதியவளை அனுப்பினார்கள். முதன்முறையாக தண்ணீரில் கால் வைக்கிறாள் அவள். அது அவளுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. அதில் ஆபத்து இருப்பது குறித்து அவளுக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், ஆபத்து என்றால் என்னவென்பதே அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. 

அந்த ஆற்றை அவள் கடக்க, கடக்க...நீர் வேகமெடுத்தது. அவளால், அதைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஓடும் ஆற்றில் கலந்தாள். அவள் தாயும், அந்தக் கூட்டமும் பெரும் குரலெடுத்து பிளிறின. ஆனால், அந்தப் பிளிறலால் ஆற்றின் வேகத்தை குறைத்திட முடியவில்லை. அவள் காணாமல் போனாள். கூட்டம் ஒரு வழியாக ஆற்றைக் கடந்தது. கூட்டம் தொடர்ந்து முன்னேறுவதா இல்லை, என்ன செய்வதென தெரியாமல் நின்றது, அந்தத் தாய் விடாமல் அழுதுகொண்டேயிருந்தாள். 

இந்தப் பக்கத்தின் கதை இவ்வளவுதான் நமக்கு தெரியும். இனி அந்தப் பக்க கதையைப் பார்க்கலாம். 

அந்தக் குட்டிக்கு மூச்சுத்  திணறியது. தண்ணீர் குளிர்ந்தது. அது அதற்கு நன்றாக இருந்தது. அது கொடுத்த மகிழ்ச்சியில்தான் தைரியமாக தண்ணீரில் இறங்கியது. ஆனால், இப்போது ஆற்றில் அடித்துச் செல்லப்படும் இந்த நொடி, அதற்குப் பெரும் பயம் எடுத்தது. என்ன செய்வதென தெரியவில்லை. நீண்ட நேரம் அப்படியே பயணித்தது. ஒரு கட்டத்தில் ஆற்றின் வேகம் குறைந்தது. ஒரு வழியாக கரையை அடைந்தது அந்தக் குட்டி. அது அதிர்ச்சியில் இருந்தது. அதன் உடலில் இருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. அந்தச் சத்தம் அதன் காலில் விழுந்தது. ஆனால், அதற்கு என்ன செய்வதென தெரியவில்லை. அங்கு இரண்டு ஜீப் வந்து நின்றன. அதிலிருந்து வனக்காவலர்கள் இறங்கினர். இந்தக் குட்டியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். பிறந்து சில நாள்களைக் கூட தாண்டியிராத அத்தனை சிறிய குட்டி. 

மோயோ - ராக்ஸி

உடனடியாக சாட்டிலைட் போனில் தகவல் தெரிவித்தார்கள். அதைக் கொண்டு செல்ல வண்டி வந்தது. அதை "வைல்ட் இஸ் லைஃப்" (wild is life) சரணாலய பூங்காவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதன் நிறுவனர் ராக்ஸி டான்குவெர்ட்ஸ் (Roxy Danckwerts) வெளியில் வந்து அந்த யானைக் குட்டியைப் பார்க்கிறார். அள்ளியணைத்துக் கொஞ்சுகிறார். அதன் முழுக் கதையைக் கேட்கிறார். அதற்கு "மோயோ" (Moyo) என்று பெயரிடுகிறார். (மோயோ என்பது ஆண் பெயர். ராக்ஸி முதலில் அது ஆண் குட்டி என்று நினைத்து மோயோ என்று பெயரிட்டார். பின்னர், அதுவே இருக்கட்டும் என்று மாற்றவில்லை) 

மோயோ ராக்ஸியின் செல்லப் பிள்ளையாக வளர்கிறாள். எந்நேரமும் ராக்ஸியின் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பாள்.

மோயோ

சமையலறைக்குப் போய் ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து சாப்பிடுவாள். ஸ்டீல் ஸ்பூன்களின் சத்தம் அவளுக்குப் பிடிக்கும். அதை எடுத்துப் போட்டு விளையாடுவாள். 

"அவளுக்கு என் குரல், என் வாசம் என அத்தனையும் தெரியும். நான் எங்கு இருந்தாலும், என்னைத் தேடி வந்துவிடுவாள்." என்று சொல்கிறார் ராக்ஸி. 

வீட்டுக்கு வந்த சில நாள்களில் ராக்ஸிக்கு ஒரு விஷயம் தெரிந்தது. மோயோவுக்கு தண்ணீர் என்றால் பெரும் பயம் இருந்தது. தன் வாழ்வில் நடந்த அந்த சம்பவம் அவள் ஆழ் மனதில் பதிந்துவிட்டிருந்தது. ராக்ஸி அதிலிருந்து மோயோவை மீட்டெடுக்க விரும்பினார். 15 மாதங்கள் தொடர் முயற்சிகளை எடுத்தார் ராக்ஸி. நிறைய தெரபிகளின் மூலம் கொஞ்சம், கொஞ்மாக முயன்றார். இறுதியாக 15 மாதங்கள் கழித்து, முதன்முறையாக பெரிய நீர்நிலைக்கு மோயோவை அழைத்துச் சென்றார் ராக்ஸி. 

மோயோ - ராக்ஸி

மோயோ நீரைப் பார்த்ததுமே கொஞ்சம் பின்வாங்கினாள். ராக்ஸியை இறுக்கிப் பற்றிக் கொண்டாள். ராக்ஸீ அவளை விட்டுத் தள்ளி நீரில் இறங்கினார். மோயோவை கூப்பிட்டார். ராக்ஸி தன்னுடைய செல்ல நாயையும் நீரில் இறக்கினார். நீண்ட நேரம் மோயோ பயத்தில் இறங்காமலேயே இருந்தாள். பின்னர் மெதுவாக நீரில் கால்களை வைத்தாள். ராக்ஸி நீரில் இருப்பது ஒருவித தைரியத்தை மோயோவுக்கு அளித்தது. 

ராக்ஸி மீதான் அன்பும், நம்பிக்கையும் மோயோவை நீரில் இறங்கி முன்னேற வைத்தது. ராக்ஸியின் அருகில் சென்றது. ராக்ஸி அவளின் தும்பிக்கையைப் பிடித்து இழுத்து விளையாடினார். மோயோ கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் மீதான பயத்தை மறந்து விளையாட ஆரம்பித்தாள். இப்பொழுதெல்லாம் தனியாகவே தண்ணீரில் இறங்குகிறாள் மோயோ. 

மோயோ - ராக்ஸி

மோயோ இப்பொழுது நன்றாக வளரத் தொடங்கிவிட்டாள். இப்போது அவளால் ராக்ஸி போகும் எல்லா இடங்களுக்கும் போக முடிவதில்லை. வீட்டுக்குள் அவ்வளவு எளிதாக சுற்ற முடிவதில்லை. அவளுக்குப் பிடித்த அந்த சோபாவில் அவளால் படுக்க முடிவதில்லை. ஆனாலும், ராக்ஸியை விட்டு மட்டும் போவதில்லை. ஆனால், மோயோ பிரியத்தான் வேண்டும். பல மிருகங்களைத்  தன் பூங்காவில் வளர்த்து வந்தாலும், ராக்ஸிக்கு மோயோ மீது தனிப் பெரும் காதல் உண்டு. ஆனால், இருவரும் இப்போது பிரியும் தருவாயில் இருக்கிறார்கள். 

"இங்கு எத்தனையோ உயிர்கள் இருந்தாலும், எனக்கு ஏனோ மோயோ மீது ஒரு பெரிய நட்பு, நம்பிக்கை, அன்பு உண்டு. அவளை விட்டுப் பிரிவது எனக்குப் பெரிய சோகமாகத் தான் இருக்கும். ஆனால், இந்தப் பாதையை நான் தேர்ந்தெடுக்கத் தான் வேண்டும். அவள் வாழ்க்கைக்கு எது சிறந்ததோ அதை நான் வழங்கிட விரும்புகிறேன். அவள் என்னோடு இருப்பது அல்ல அவள் வாழ்க்கை. அவள் சுதந்திரமாக இந்தக் காடுகளில் சுற்றித் திரிய வேண்டும். அவள் வாழ்க்கையை அவள் வாழ வேண்டும். அவள் மீது கொண்ட அன்பினால், அவள் இயல்பை அழித்து என்னோடே அவளை வைத்துக் கொள்வது பெரிய வன்முறை... ஆமாம்... வேறு வழியில்லை நான் மோயோவை பிரியப் போகிறேன்." 

-ராக்ஸி

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

பேசும் படம்: புதுக் கூடு

 
19CHLRDEGRET

புதுக் கூடு: குவஹாத்தி பகுதி பிரம்மபுத்திரா ஆற்றங்கரையையொட்டி கூடு கட்டுவதற்காக சின்னகொக்கு ஒன்று குச்சிகளைத் தேடிப் பறக்கிறது. ஆண்டின் இந்தப் பருவத்தில் நூற்றுக்கணக்கான சின்னக்கொக்குகள் குவாத்தியில் கூடு கட்டுவது வழக்கமாக உள்ளது.   -  THE HINDU

19CHLRDPEACOCK

இணக்கமான இரை தேடல்: மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள வன் விஹார் தேசியப் பூங்காவில் புள்ளிமான் கூட்டத்துடன் சேர்ந்து இரை தேடும் மயில்கள்.   -  THE HINDU

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.