Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

னிபொழியும் பாலைவனம்... புவியில் ஒரு செவ்வாய் கிரகம்... அன்டார்டிகா ஆச்சர்யங்கள்! #VikatanPhotoCards

 
 
272066.jpg 272074.jpg 272075.jpg 272076.jpg 272077.jpg 272078.jpg 272079.jpg 272080.jpg 272081.jpg 272067.jpg 272068.jpg 272069.jpg 272070.jpg 272071.jpg 272072.jpg 272073.jpg

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

 

பாலியல் வன்முறைக்கு எதிரான எச்சரிக்கை: தமிழ் திரைப்படத்தின் புதிய முயற்சி

இந்திய திரைப்படம் ஒன்றில் முதல் முறையாக, பாலியல் வன்முறைக்கு எச்சரிக்கை விடும் செய்தி தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. "தா தா 87" (DHA DHA 87) என பெயரிடப்பட்டுள்ள தமிழ் திரைப்படத்தில்தான் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி விளக்கும் காணொளி.

Link to comment
Share on other sites

சீன இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்த மனுஷி சில்லர்! 

 
 

சமீபத்தில் உலக அழகிப் பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர், சீன இளைஞர்களின் இதயங்களையும் கொள்ளையடித்துள்ளார். அவருக்குப் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மனுஷி சில்லர்

 
 


சீனாவின் சான்யா சிட்டியில் நவம்பர் 18-ம் தேதி உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் (20) உலக அழகியாகப் பட்டம் சூட்டப்பட்டார். மருத்துவக் கல்லூரி மாணவியான இவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்ஸிகோ நாடுகளின் அழகிகளைத் தோற்கடித்து பட்டம் வென்றார். இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மனுஷி சில்லர் இந்தியர்களின் இதயங்களைக் கவர்ந்தது மட்டுமல்லாமல், சீன இளைஞர்களின் மனங்களைக் கொள்ளையடித்துள்ளார். சீனாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக வெய்போ என்னும் சமூக வலைதளம் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இந்த சமூக வலைதளத்தில் உறுப்பினர்களாக இருக்கும் சீன இளைஞர்கள் மனுஷி சில்லரின் படத்தை வெளியிட்டு அவரைக் கொண்டாடி வருகின்றனர். 

“கங்கை நதிக்கரையில் பிறப்பவர்களுக்கு இயற்கையிலேயே அழகும் ஆரோக்கியமும் கைகூடி வருகிறது. அதுபோல மனுஷி சில்லரும் அழகாக இருக்கிறார்” என்று ஒருவர் புகழ்ந்து எழுதியுள்ளார்.

2000-ம் ஆண்டில் இந்தியாவுக்குப் பிரபஞ்ச அழகி (லாரா தத்தா), உலக அழகி (பிரியங்கா சோப்ரா), ஆசிய பசிபிக் அழகி (டையா மிர்ஸா) ஆகிய பட்டங்கள் கிடைத்தன. இதைக் குறிப்பிட்டு, “இந்தியப் பெண்கள் இயல்பிலேயே அழகானவர்கள். இந்தியா முழுக்கவே அழகிகள் தான்” என்று உச்சி நுகர்ந்து வருகிறார்கள் சீன நெட்டிசன்ஸ்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

பஃபினிடம் சிக்கிய மீன்கள், கேமராவில் சிக்கிய பஃபின்... வைரல் புகைப்படம்!

 
 

புகைப்படக்கலையில் மிக முக்கியமான விஷயம், டைமிங். சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்போதும் பேசப்படும் விஷயமாக மாறிவிடும். ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் சிரித்தபடியே எல்லைக்கோட்டை தொட்டது, துருக்கியின் தூதுவரை பயங்கரவாதி சுட்டது போன்ற படங்கள் வைரலாகக் காரணம் அது எடுக்கப்பட்ட நேரம்தான். சமீபத்தில் நேஷனல் ஜியாக்ரபியைச் சேர்ந்த சுனில்கோபாலன் என்பவர் எடுத்த போட்டோவும் அப்படித்தான் வைரல் ஆனது. ஏன் வைரலானது என்பதற்கான காரணம், இந்தப் படத்தைப் பார்த்ததுமே உங்களுக்குத் தெரிந்துவிடும்.

புகைப்படக்கலையில் மிக முக்கியமான விஷயம், டைமிங். சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருந்து எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்போதும் பேசப்படும் விஷயமாக மாறிவிடும். ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் சிரித்தபடியே எல்லைக்கோட்டை தொட்டது, துருக்கியின் தூதுவரை பயங்கரவாதி சுட்டது போன்ற படங்கள் வைரலாகக் காரணம் அது எடுக்கப்பட்ட நேரம்தான். சமீபத்தில் நேஷனல் ஜியாக்ரபியைச் சேர்ந்த சுனில்கோபாலன் என்பவர் எடுத்த போட்டோவும் அப்படித்தான் வைரல் ஆனது. ஏன் வைரலானது என்பதற்கான காரணம், இந்தப் படத்தைப் பார்த்ததுமே உங்களுக்குத் தெரிந்துவிடும்.

 

Find out how a #YourShot photographer captured this stunning photo of a puffin gorging on fish. https://t.co/2c4gfDqXV6 pic.twitter.com/cpDlSOlePQ

— Nat Geo Photography (@NatGeoPhotos) November 4, 2017

இந்தப் புகைப்படத்தை எடுத்தவர், அமெரிக்காவின் மடிசன் நகரை சார்ந்தவர் சுனில் கோபாலன். கணினி மென் பொறியாளராக இருக்கும் இவர் பறவைகள் குறித்த புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். உலகின் அநேகப் பறவைகளை புகைப்படம் எடுத்திருக்கும் கோபாலன், அட்லாண்டிக் கடல்பகுதிகளில் வசிக்கும் பஃபின் பறவைகள் குறித்த வாழ்வியலை புகைப்படம் எடுக்க முடிவு செய்கிறார். இதற்காக பஃபின் பறவைகள் குறித்து ஆய்வு செய்கிறார். 

 பஃபின் பறவைகள் அட்லாண்டிக் கடலின் தீவுகளில் இருப்பதை உறுதி செய்தபின்பு, பறவைகளை புகைப்படம் எடுக்க மக்கள் நடமாட்டம் இல்லாத ரிமோட் தீவான ஃபெர் இஸ்லே தீவுக்கு செல்கிறார். இந்த தீவு  வடக்கு ஸ்காட்லாந்தில் ஷெட்லாண்ட் கடற்கரையிலுள்ள சிறிய தீவு. ஃபெர் இஸ்லே தீவை  நான்கு மணிநேர படகு சவாரி அல்லது ஒரு சிறிய விமானம் மூலமாக மட்டுமே சென்றடைய முடியும். தீவை நோக்கிய பயணம் மிகவும் சவாலானது. கோபாலனின் பஃபின் பறவைகள் குறித்த தேடலின்  பயணங்கள் அவரை மத்திய மேற்கு நாடுகளில் இருந்து கிளாஸ்கோவிற்கு அழைத்துச் சென்றது, அங்கிருந்து சிறிய ரக விமானத்தில் ஃபெர் இஸ்லே தீவுக்கு பயணித்தார். தீவில் சுனில் செலவழித்த நாட்களில் வானிலை வசிப்பதற்கு தகுந்ததாகவே இருக்கிறது. ஒரு மழைநாளின் காலை பொழுதில் காற்று அதிகமாக வீச ஆரம்பிக்கிறது. மழை தூற ஆரம்பிக்கிறது. இருந்தாலும் வித்தியாசமான புகைப்படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அங்கேயே காத்திருக்கிறார் சுனில். 

திடீரென அப்போது மழையில் நனைந்தபடிக்கு கடலில் இருந்து கரைக்கு வருகிற பஃபின் பறவையை கவனிக்கிறார். அதன் அலகில் சிறிய  மீன்கள் பலவற்றை வைத்திருப்பதை பார்க்கிறார். உடனடியாக தன்னுடைய கேமிராவில் அதனைப் படம் பிடிக்கிறார். நல்ல புகைப்படம் எடுத்த திருப்தியும், மகிழ்ச்சியும் உற்சாகம் கொடுக்க உடனே அதனை ஆன்லைனில் பதிவு செய்கிறார் சுனில். இணையத்தின் கையில் ஒப்படைத்துவிட்டால் பிறகு நமக்கென்ன வேலை? போட்டோவை வைரலாக்கிவிட்டது இணையம். 

அட்லாண்டிக் பஃபின்

Photo Credit: Sunil Gopalan

அட்லாண்டிக் பகுதியில் இருக்கிற பஃபின் பறவைகள் பெரும்பாலான நேரங்களை கடலில் செலவிடுகின்றன. இனப்பெருக்க காலத்தின் போது நிலப்பரப்பிற்கு திரும்புகின்றன. ஜூன் ஜூலை மாதங்கள் பஃபின் பறவைகள் இனப்பெருக்க காலம். ஏறத்தாழ மூன்று முதல் ஆறு அடி பள்ளங்களிலும் பொந்துகளிலும் பெண் பறவைகள் முட்டை இடுகின்றன. ஒரு ஆண் பஃபின் பறவையும் பெண்பஃபின் பறவையும் முதல்முறை ஒன்று கூடியதிலிருந்து அவை இறக்கும்வரை  சேர்ந்தே வாழ்கின்றன.. பஃபின் பறவைகள் இனப்பெருக்கம் செய்யத்தயாராகும் காலத்தில் அவற்றின் அலகுகளில் பிரகாசமான வரிகள்தோன்றும். இனப்பெருக்க காலத்தில் ஆண் பஃபினின் அலகு பல நிறங்கொண்டதாகக் காணப்படும். அலகில் தோன்றும் சிவப்பு நிறத்திலான பிரகாசமான அடையாளத்தைக் கொண்டு இப்பறவைகள் தூரத்திலுள்ள மற்ற பறவைகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றன. இவை வருடா வருடம் முட்டையிடுகின்றன. முட்டையிட்டு ஆறுவாரங்களில் குட்டி பஃபின் வெளியுலகத்திற்கு வரும். பஃபின் பறவைகளால் நீரினுள் இருபது அடிக்கும் அதிகமாக கடல் ஆழத்திற்கு செல்ல முடியும்.
 
இவை நீரினுள் ஆழ்ந்து செல்லும்போது மூக்கின் பகுதியிலுள்ள சிறிய  அடைப்பான் (Flaps) நீர் உட்புகாதவாறு தடுத்துவிடுகின்றது. தாய்ப்பறவை ஏறத்தாழ பத்து சிறிய மீன்களை ஒரே தடவையில் வாயால் பிடித்து அலகில் அடுக்கி வைத்துக் கொண்டு குஞ்சு இருக்கும் இடத்தை நோக்கிப் பறந்து வரும். மீன் ஊட்டப்பட்டு, உடல் நன்கு வளர்ந்த ஆறு வாரங்களில் தாய் குஞ்சுகளை விட்டுச் சென்றுவிடும். குஞ்சுகள் உடல் மெலிந்து பறப்பதற்கான இறகுகள் வளரும் வரை காத்திருந்து பின்பு கடலை நோக்கிப் பறக்கத் தொடங்கும். பஃபின் பறவைகளுக்கு  "கடல் கிளி" என்ற இன்னொரு பெயரம் உள்ளது. இதன் வாழ் நாள் இருபது ஆண்டுகளில் இருந்து இருபத்தைந்து ஆண்டுகள் வர ஆகும்.
 
 (பஃபின் பறவைகளும் பெங்குயின்களும் தோற்றத்தில் ஒரேவகையாகத் தோன்றினாலும் பல்வேறு குணாதிசயங்களில் வேறுபடுகின்றன. பஃபின் பறவைகளுக்கும் பெங்குயின்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் பஃபின் பறவைகள் பறக்கக்கூயன. ஆனால் பெங்குயின்களுக்கு சிறகு இருந்தாலும் அவற்றால் அவ்வாறு பறக்க இயலாது. பஃபின் பறவைகள் வடதுருவத்திலும் பெங்குயின்கள் தென்துருவத்திலும் வாழ்வது  மற்றுமொரு வித்தியாசம்.  இவ்விரண்டுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை இவை குளிர்ப்பிரதேசங்களில் வாழ்வதுடன் அப்பிரதேசங்களுக்கு ஏற்றவகையில் தம்மை மாற்றிக் கொள்கின்றன.)

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ரஜினி, கமல் இல்லாத 80 -களின் சந்திப்பு!

டந்த 1980ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகர் நடிகைகளின் சந்திப்பு தொடர்ந்து 6வது ஆண்டாக நடைபெற்றது. ஆனால் இந்த முறை  ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்கவில்லை.

act.jpg

 

இந்த சந்திப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் சில நடிகர் -நடிகைகள் பொறுப்பேற்று  நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு நடிகைகள் லிசி, குஷ்பூ, சுகாஷினி ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பேற்றிருந்தனர்.

சென்னையை அடுத்த ஓலீவ் கடற்கரை சாலையில் நீனா ரெட்டி விடுதியில் நேற்று சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு கூடிய ஹீரோ- ஹீரோயின்கள் பழங்கதைகள் பேசி மகிழ்ந்தனர். இந்த முறை  முழுக்க சிவப்பு நிறத்திலான ஆடைகள் அணிந்து கொண்டு நடிகர், நடிகைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தென்னக நடிகர்கள் மோகன்லால், சீரஞ்சிவி, வெங்கடேஷ் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களான ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், பூனம் தில்லான் ஆகியோரும், நடிகர்கள் சத்யராஜ், ரகுமான், பாக்யராஜ், நடிகைகள் பார்வதி, ஜெயசுதா ஆகியோர் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

மாற்றுத் திறனாளிகள் நடத்தும் சைகை மொழி உணவகம்

வாடிக்கையாளர்களின் முக பாவனைகளில் அதிக கவனம் செலுத்தும் உணவகப் பணியாளர்கள். முற்றிலும் செவித்திறனற்றவர்களால் நடத்தப்படும் உணவகம் பற்றிய காணொளி.

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, lächelnd

கர்நாடக இசை மேதை,
"இசைப் பேரறிஞர்" டாக்டர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா அவர்களது முதலாமாண்டு நினைவுதினம்.

இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.

தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.

தமிழில் பல அற்புதமான திரைப்பாடல்களையும் பாடியிருக்கிறார்...

சின்னக்கண்ணன் அழைக்கிறான், மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மறந்துபோகுமா?
நினைந்துகொள்கிறோம் ஐயா..

 

Bild könnte enthalten: 1 Person, Text und im Freien

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் கரி பலன்ஸின் பிறந்தநாள்
Happy Birthday Gary Ballance

 

Bild könnte enthalten: 4 Personen, Text

பிரபல ஹொலிவூட் நடிகையும் முன்னணி கவர்ச்சி மொடல்களில் ஒருவருமான ஸ்கார்லெட் ஜோஹான்சனின் பிறந்தநாள்.
Happy Birthday Scarlett Johansson

 

Bild könnte enthalten: 1 Person, lächelnd, machen Sport, Hut und Text

இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவரும், உலகின் மிக நுட்பமான நுணுக்கங்கள் தெரிந்த சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான மார்வன் அத்தப்பத்துவின் பிறந்தநாள் இன்றாகும்.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகவும் இருந்தவர் மார்வன்.
Happy Birthday Marvan Atapattu

Link to comment
Share on other sites

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ThanksGiving விழாவிற்காக டிராபிக்கில் நகர முடியாமல் திணறும் வாகனங்கள்

Link to comment
Share on other sites

‘வாழ்க்கை கண்ணாடியாக ஆகக் கூடாது’
 

image_06c21ff903.jpg“எனக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்” எனக் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேள்வி கேட்பது, மிகக் கொடுமையான உரையாடல்தான். 

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு மற்றவர் ஏதெனும் குறைகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்காக இவ்வளவு காலம்வரை, செய்த நல்ல காரியங்களை மறந்து பேசலாமா? வெறுப்பான வார்த்தைகள் நெஞ்சத்தைக் குதறிவிடும். இதனால் ஏற்படும் மனச்சிதைவு, எவ்வளவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா? பெற்ற பிள்ளைகள்கூட, இத்தகைய தவறான கேள்விகளைப் பெற்றோர்களிடம் கேட்பதுண்டு.  

வசதிக்குறைவு காரணமாக, சிலவிடயங்களைச் செய்யாமல் விட்டுவிடலாம். இது பெரும் குற்றமும் இல்லை. நல்ல குடும்பத்தில் நற்பண்புகள் கொண்டவர்கள் பேசும் வார்த்தையில் கண்ணியத்தைக் கைக்கொள்ள வேண்டும். வாழ்க்கை கண்ணாடியாக ஆகக் கூடாது.  

Link to comment
Share on other sites

கழுகுக்கு அசாத்தியத் திறனைக் கொடுத்தது யார்? #MotivationStory

 
 

கழுகு

ன்று ஓர் அபூர்வமான உயிரினத்தைப் பற்றிப் பேசப் போகிறோம்..."

 

கனிவும் கருணையும் பொங்கும் பார்வையால் சீடர்களைப் பார்த்தார் குரு. சீடர்களின் ஆர்வம் முகத்தில் தெரிந்தது. குரு சொல்லப்போகும் அபூர்வ உயிரினத்தின் கதையைக் கேட்க ஆயத்தமானார்கள்.

``நாம் இப்போது எந்த உயிரினத்தைப் பற்றிப் பேசப் போகிறோம் என்று யாராவது கணிக்க முடியுமா?" - குரு கேட்டார்.

``அண்டரண்டப் பறவை...’’

``சரபம்.’’

``அன்னம்.’’

``பீனிக்ஸ்.’’

``இரண்டு தலைப் பறவை.’’

ஆளுக்கொன்றாகச் சொன்னார்கள்.

குரு புன்முறுவலோடு எல்லாவற்றையும் கேட்டார். தன் வெண்தாடியைத் தடவியபடி சொன்னார்... ``நீங்கள் சொன்ன எல்லாப் பறவைகளைவிடவும் சக்திமிக்க, சுய உணர்வுள்ள கழுகைப் பற்றித்தான் நாம் பேசப்போகிறோம்.’’

சீடர்களின் முகங்கள் சற்றுக் கலைந்து, இணைந்தன.

கழுகு

`கழுகு மாமிச பட்சினி... பிணம் தின்னும்... அதைப் பற்றிப் பேச, அதனிடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது..?’ - எல்லோர் மனதிலும் தொக்கி நின்றது இந்தக் கேள்வி.

``கழுகைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கள்...’’ - குரு கேட்டார்.

``வெகு உயரத்தில் பறக்கும்.’’

``மிகச் சரியாக இரையைக் கவ்வும்.’’

``பெரிதாக இருக்கும்.’’

``கரடுமுரடான பறவை...’’

``உண்மைதான்... இதையெல்லாம் தாண்டி, கழுகு பல தனித்திறன்களைப் பெற்றிருக்கிறது. வெகு உயரத்தில் பறக்கிற கழுகு, மிகச் சரியாக பூமியில் இருக்கும் தன் இரையை அடையாளம் கண்டுகொண்டு அதிவேகத்தில் இறங்கி வந்து கொத்திக்கொண்டு பறக்கிறதல்லவா..? அதைப் பார்த்து வியந்திருக்கிறீர்களா? சிறிதும் களைப்பில்லாமல் ஆகாயத்தை அளக்கிற மாதிரி பறந்து திரிகிறதே... அந்தத் திறன் கழுகுக்கு எப்படி வந்தது?’’

வழக்கம்போல, அந்தத் துடுக்குச் சீடன்தான் பதில் சொன்னான்.

“இறைவன் கொடுத்த வரம்தான் அது. உயிர்களைப் படைத்து, அவை தனக்கான உணவைத் தேடிக்கொள்ளும் திறனையும் படைத்தது அந்த இறைவன்தானே குருவே!’’

குரு அதே தெய்விகப் புன்னகையோடு தொடர்ந்தார்.

“அதுதான் நியதி. ஆனால், கழுகு விஷயத்தில் அப்படியல்ல. கழுகின் திறன் என்பது சுயம்பு. எல்லா உயிரினங்களும் அதனதன் திறனோடு இயங்குகின்றன. அதனால்தான் அவை அவற்றின் எல்லையோடு வாழ்ந்து முடிந்துவிடுகின்றன. ஆனால், கழுகு, கடும் பயிற்சியால் தன் எல்லையை விரிவுபடுத்திக்கொள்கிறது. அதனால்தான் அது அனைத்துக்கும் உயரமாகப் பறந்து வானை ஆள்கிறது...’’

குரு

குரு, கண்களை மூடி சில நொடிகள் நிதானித்தார்.

“பெண் கழுகு இருக்கிறதே, அது முட்டையிடும் பருவத்துக்கு வரும் காலத்தில் ஆண் கழுகு, ஒரு பாதுகாப்பான பாறையிடுக்கில், புல், இலை, தழைகளை எல்லாம்வைத்து பஞ்சு மெத்தைபோல ஒரு கூடு கட்டித்தரும். பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகளைப் பொறிக்கும். ஆண் கழுகு, உணவு தேடி எடுத்து வந்து பெண் கழுகுக்கும் குஞ்சுகளுக்கும் ஊட்டி, அவ்வளவு பாதுகாப்பாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ளும். இந்த உபசரிப்பெல்லாம் குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும் வரைக்கும்தான். லேசாக சிறகு வந்துவிட்டால், நிலை தலைகீழாக மாறிவிடும்...’’

குருவை பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் சீடர்கள். அவர்கள் மனதில் கழுகு விருப்பமான பறவையாக ஏறி அமர்ந்துவிட்டிருந்தது.

“குஞ்சுகள், தங்கள் சிறகுகளை அசைக்கப் பழகியதும், பஞ்சு மாதிரி இருக்கிற கூட்டை ஆண் கழுகும், பெண் கழுகும் சேர்ந்து கலைத்துவிடும். குச்சிகளை அடுக்கி, தங்கள் இயல்புக்கேயான கரடுமுரடான கூட்டை அமைக்கும். அதில் தட்டுத் தடுமாறி குஞ்சுகள் தங்களுக்கான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளும்.’’

குரு, கொஞ்சம் சுடுநீர் அருந்தினார். பிறகு தொடர்ந்தார்.

"ஒரு நல்ல நாளில் குஞ்சுகளுக்கான பயிற்சி தொடங்கும். குஞ்சை கூட்டில் இருந்து வலுக்கட்டாயமாக பெண் கழுகு தள்ளிவிடும். குஞ்சு மரணத்துக்கு நெருக்கமாகச் செல்லும். அந்தரத்தில் தன் சின்னச் சிறகுகளை அடித்து அடித்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளத் துடிக்கும். ஆனால், அந்த சிறகசைவுகள் போதுமானதாக இருக்காது. கதறிக்கொண்டே அது கீழே விழ நேரும்போது ஆண் கழுகோ, பெண் கழுகோ பறந்து சென்று கால்பிடித்து கூட்டில் கொண்டு வந்து போடும். ஒரு நாள், இரு நாளில்லை... இந்தப் பயிற்சி அவ்வப்போது தொடர்ந்துகொண்டே இருக்கும். ஒருநாள், குஞ்சு தனக்கான சிறகை முழுமையாக அசைக்கத் தொடங்கிவிடும். வானம் வசப்பட்டுவிடும். உயரப்பறத்தல் பழகிவிடும். தன் குஞ்சு, அதன் சிறகால் பறப்பதைத் தாயும் தந்தையும் பெருமிதமாகப் பார்த்து ரசிக்கும்.’’

சிலிர்த்துப்போனார்கள் சீடர்கள்.

“சீடர்களே... இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எந்த உயிரினமும் திறனற்றுப் படைக்கப்படுவதில்லை. ஒவ்வோர் உயிரினத்துக்கும் அதற்கான திறன் அளந்துவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பல உயிரினங்கள் அந்தத் திறனைக்கூடப் பயன்படுத்துவதில்லை. தான் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, பிறந்தோம் இறந்தோம் எனத் தங்கள் ஆயுளை முடித்துக்கொள்கின்றன. ஆனால் கழுகைப்போல சில உயிரினங்கள், மனிதர்களும்தான், தங்கள் திறனைக் கடும் பயிற்சியால் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

உயரப் பறக்கலாம்

அச்சம்தான் எல்லாத் தோல்விகளுக்கும் அடிப்படை. எது வந்தாலும் தாங்கிக்கொள்ளும் திறன் நமக்கு உண்டு. அந்த மனப்பக்குவத்தை நாம் பயிற்சியால் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இது நம்மால் முடியுமா என்று பார்க்காமல், இது நம்மால்தான் முடியும் என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கைதான் கழுகை ஆகாயத்தில் வைத்திருக்கிறது...’’

 

குரு எல்லோரையும் ஊடுருவிப் பார்த்தார். சீடர்களுக்கு சிறகுகள் முளைத்திருந்தன.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

கிளியூருக்குப் படையெடுக்கும் வெளிநாட்டுப் பறவைகள்... திருச்சியில் ஒரு 'வேடந்தாங்கல்'!

 
 

றவைகள் என்றதுமே வேடந்தாங்கல்தான் நமக்கு நினைவுக்கு வரும். பறவைகள் சரணாலயமான இங்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்துசெல்லும். இதேபோல, தற்போது திருச்சியில் இருக்கும் கிளியூருக்குப் படையெடுத்துள்ளன வெளிநாட்டுப் பறவைகள். 

கிளியூர் பறவைகள்

 

ஐரோப்பாவில் இருந்து வருகைதரும் காட்டு வாத்து இனத்தைச் சேர்ந்த நீலச்சிறகு வாத்து, ஆண்டி வாத்து எனப் பல்வேறு இனப் பறவைகள் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள கிளியூர் கிராமத்தின் குளத்தில் வந்து அமர்ந்துள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்தப் பறவைகளின் சிறப்பம்சங்கள்குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பறவைகள் ஆர்வலர் பாலபாரதி.

"பறவைகளிடமுள்ள வினோதங்களில் ஒன்று, இடம்பெயர்தல் என்ற வலசை போதல் (Bird Migration). ஒவ்வொரு வருடமும் ஒரு பருவ காலத்தில் இது நடக்கும். இடம் பெயர்வது என்றால் ஒன்றோ இரண்டோ அல்ல. விதவிதமான பறவைகள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் இடம்பெயரும். 

பாலபாரதிபல்லாயிரம் மைல் தூரத்தைக் கடந்து பறவைகள் வலசை போவதற்கான முதன்மையானக் காரணங்களில் ஒன்று உணவுத்தேடல்; மற்றொன்று, கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய ஏதுவான சூழல். ஒவ்வொரு பருவத்திலும், பறவைகள் உணவு குறைவாகக் கிடைக்கும் இடத்தில் இருந்து உணவு அதிகம் கிடைக்கும் இடத்தை நோக்கி இடம் பெயர்கின்றன. பருவகாலம் மாறியதும், மீண்டும் இடம்பெயர்ந்துவிடும். இவ்வாறு இவை வெகுதொலைவுக்குப் பறக்கும்போது பல சவால்களைச் சந்திக்க வேண்டும். இதுபோன்ற சவால்களை சமாளிக்குமாறு அவை தகவமைப்பைப் பெற்றுள்ளன.

இடம்பெயர்ந்து செல்வதற்கு முன்பாக சில வாரங்களுக்கு நிறைய உணவை உட்கொண்டு அதைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்து வைத்துக்கொள்ளும். இக்கொழுப்பையே நீண்ட தொலைவுக்குப் பறக்கும்போது தேவைப்படும் ஆற்றலாக மாற்றிக்கொள்கின்றன. இப்போது கூட, இங்கே கிளியூரில் அவை ஓய்வெடுப்பதுபோலத் தெரிவது, அவற்றின் கொழுப்புச் சேர்தலுக்காகவே (Fat Accumulation). ஆர்டிக் ஆலா போன்றப் பறவைகள் ஒரே முயற்சியில் தாங்கள் செல்ல வேண்டிய பன்னிரண்டாயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவையும் கடக்கும் திறன்பெற்றவை. சில பறவையினங்கள் இடையிடையே தங்கி, தங்கள் உடலில் கொழுப்பைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்பவை. இப்படித்தான் ஐரோப்பாவில் இருந்து இங்கே பறவைகள் வந்துசெல்கின்றன. இடம்பெயரும்போது நிறைய பாதைகள் உள்ளன. இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஓசியானா மற்றும் ஆப்பிரிக்க யூரேசிய வான்வழித்தடம், தென்கிழக்கு ஆசியாவை உள்ளடக்கிய கிழக்காசிய ஆஸ்திரேலிய வான்வழித்தடம் போன்ற வழித்தடங்கள் முதன்மையானவை. 

வெளிநாட்டு பறவைகள்

கிளியூர் குளத்தில் தற்போது நீலச்சிறகி, ஆண்டி வாத்து, சீழ்க்கை சிறகி, ஊசிவால் வாத்து உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இருக்கின்றன. இவ்வாறாக நீண்ட தொலைவு இடம்பெயர்ந்து வரும் பறவைகள் யாவும் நீர்ப்பறவைகளே, மேலும், இவற்றின் வாழ்வாதாரம் நீரைச் சார்ந்தே உள்ளது. பலர் வாத்துகளுக்குப் பறக்கத் தெரியாது என நினைக்கிறார்கள். ஆனால், பறவைகளில் காட்டு வாத்துகள் அதிகத் தொலைவு பறக்கும் இயல்புள்ளவை. வெறும் 10 சதவிகிதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ள இமயமலையையே, பட்டைத்தலை வாத்துகள் (Bar-Headed Goose) கடந்துவிடும்.

கிளியூர்

சூழலியல் அச்சுறுத்தல்கள்

பருவமழை பொய்த்தலும், நீர்மாசுபடுதலும் இவற்றின் வாழ்வாதாரத்தை அதிகம் பாதிக்கும் காரணிகள். இயற்கைப் பேரிடர்களையும் பிற இன்னல்களையும் கடந்து இங்கு வலசைவரும் இவ்வலசைப் பறவைகள் இங்கே நீரில்லாக் குளங்களையும், பிளாஸ்டிக் பைகளால் நிரம்பி இருக்கும் மாசுப்பட்ட நீர்நிலைகளையும் எதிர்கொள்கின்றன. இதுபோன்ற சூழலியல் சீர்கேடுகள் இவற்றுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. இந்தக் கிளியூர் குளம் இன்னும் மாசடையாமல் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இதேபோலப் பாதுகாக்க வேண்டியது அவசியம். 

கிளியூர்

 

பறவைகள் இடம்பெயர்வதின் மூலம்தான் மகரந்தச்சேர்க்கை, மண்வளம் பெருகுதல், விதைகள் பரப்பப்படுதல் போன்ற வழிகளில் பல்லுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. பறவைகள் இடம்பெயர்ந்து அமரும் இடங்களில் விவசாயம் செழிப்பாகும்; இதன் முக்கியத்துத்தை உணர்ந்து இந்தப் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என்பதே இங்கிருப்பவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" என்கிறார் பாலபாரதி.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

1978 : இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தை பாரிய சூறாவளி தாக்கியது

வரலாற்றில் இன்று…

நவம்பர் – 23

 

1499 : இங்­கி­லாந்தின் அர­சாட்­சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபு­ரத்தில் இருந்து தப்­பி­யோட முயல்­கையில் கைதாகி தூக்­கி­லி­டப்­பட்டார். இவர், 1497 இல் நான்காம் எட்­வேர்ட்டின் மகன் என உரிமை கோரி இங்­கி­லாந்தை முற்­று­கை­யிட்டார்.

1890 : நெதர்­லாந்து மன்னன் மூன்றாம் வில்­லியம் ஆண் வாரிசு இல்­லாமல் இறந்தார். அவரின் மகள் இள­வ­ரசி வில்­ஹெல்­மினா அர­சி­யா­வ­தற்கு ஏது­வாக சிறப்புச் சட்டம் இயற்­றப்­பட்­டது.

varalaru-23-11-2015.jpg1940 : இரண்டாம் உலகப் போரில் அச்சு அணி நாடு­க­ளுடன் ருமெ­னியா இணைந்­தது.

1955 : கொக்கோஸ் தீவுகள், ஐக்­கிய இராச்­சி­யத்தின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து அஸ்­தி­ரே­லி­யா­வுக்கு மாற்­றப்­பட்­டது.

1971 : மக்கள் சீனக் குடி­ய­ரசின் பிர­தி­நி­திகள் முதற்­த­ட­வை­யாக ஐக்­கிய நாடுகள் அவையில் சீனாவைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தினர்.

1978 : இலங்­கையின் கிழக்கு மாகா­ணத்தை தாக்­கிய சூறா­வ­ளி­யினால் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தனர். சுமார் 250,000 வீடுகள் சேத­ம­டைந்­தன.

1979 : இந்­தி­யாவின் கடைசி ஆளுநர் மவுண்ட்­பேட்டன் பிர­புவைக் கொலை செய்த குற்­றத்­துக்­காக ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்தைச் சேர்ந்த தோமஸ் மக்­மோகன் என்­ப­வ­ருக்கு டப்­ளினில் ஆயுள் தண்­டனை வழங்­கப்­பட்­டது.

1980 : தெற்கு இத்­தா­லியில் இடம்­பெற்ற பூகம்­பத்­தினால் 4,800 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1985 : எகிப்­திய பய­ணிகள் விமானம் கிரேக்­கத்தில் இருந்து புறப்­ப­டும்­போது கடத்­தப்­பட்டு மால்ட்­டாவில் தரை­யி­றக்­கப்­பட்ட பின் எகிப்­தியப் படைகள் நடத்­திய முற்­று­கையில் 60 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1996 : எத்­தி­யோப்­பிய விமானம் கடத்­தப்­பட்டு இந்து சமுத்­தி­ரத்தில் கொமொரோஸ் தீவுக்கு அருகில் வீழ்ந்­ததில் 123 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2003 : பல வாரங்­க­ளாக நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டங்­களை அடுத்து, ஜோர்­ஜிய ஜனா­தி­பதி எட்வேர்ட் ஷெவர்நாட்ஸே பதவி வில­கினார்.

2005 : லைபீ­ரி­யாவின் தலை­வ­ராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவு செய்­யப்­பட்டார். ஆபி­ரிக்க நாடொன்றின் முத­லா­வது பெண் தலைவர் இவ­ராவார்.

2007 : ஆர்­ஜென்­டீ­னா­வுக்குத் தெற்கே பய­ணிகள் கப்பல் ஒன்று மூழ்­கி­யதில் 154 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2011 : யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ், 11 மாத கால மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின், அதிகாரங்களை துணை ஜனாதிபதிக்கு ஒப்படைக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

நினைத்தது என்னவோ, நடந்தது என்னவோ...!

அவுஸ்திரேலியாவின் கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றுக்கு வித்தியாசமான பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.

10_Statue.jpg

அடிலெய்டில் உள்ள ‘ப்ளெக்ஃப்ரியார்ஸ் பிரையறி’ என்ற பாடசாலையில், புனித மார்ட்டின் டி பொர்ரெஸின் சிலை ஒன்றை நிறுவ முடிவு செய்தனர். இதற்காக ஒரு சபையும் அமைக்கப்பட்டது.

சிறுவன் ஒருவனுக்கு புனிதர் அப்பம் ஒன்றை வழங்கும் வடிவில் இந்த உருவத்தை வடிவமைக்கத் திட்டமிட்டனர்.

முதலில் இதை இரு பரிமாண முறையிலேயே அமைப்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டிருந்தது. எனினும், பிறகு முப்பரிமாணச் சிலையாக உருவாக்க முடிவுசெய்தனர்.

இதன்படி உருவான சிலையை பாடசாலையில் நிறுவியபோதுதான் அச்சிலை ‘வேறுவிதமாக’ - சற்று ஆபாசமாக - அர்த்தப்படுத்திக்கொள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர்.

இதையடுத்து, நிறுவிய சிலையை அகற்ற விரும்பாத அதிகாரிகள், சிலையை ஒரு துணியால் மூடி தற்காலிக தீர்வு அளித்துள்ளனர்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

பிச்சை புகினும் தானம் நன்றே!

 

தான் பிச்சையெடுக்கும் கோயிலுக்கே சுமார் ஐந்து இலட்ச ரூபாவை நன்கொடையாக அளித்து பலரின் புருவங்களையும் உயர்த்தவைத்திருக்கிறார் மைசூர் யாசகி ஒருவர்!

8_Beggar.jpg

சீதாலட்சுமி என்ற இந்த 85 வயது மூதாட்டி, மைசூர் வண்டிக்கப்பல் என்ற பகுதியில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில் வாசலில் கடந்த பத்து வருடங்களாக யாசகம் கேட்பவர்.

வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த இவர், வயதானதால் வேலை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் பிறகே கோயில் வாசலில் கையேந்த ஆரம்பித்தார்.

ஆஞ்சநேய ஜெயந்தி நெருங்கி வருவதால், பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கவும் அவர்களுக்கான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காகவும் பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில் சார்பில் நிதி வசூலிக்கப்பட்டது. அப்போது, இந்திய மதிப்பில் இரண்டரை இலட்ச ரூபாயை இந்த மூதாட்டி நன்கொடையாக அளித்துள்ளார்.

இதற்கு முன் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக இவர் முப்பதாயிரம் இந்திய ரூபாயை நன்கொடையாக அளித்திருந்தார்.

இவர் பற்றிக் கூறிய கோயில் அதிகாரியொருவர், சீதாலட்சுமி யாரிடமும் எதுவும் கேட்டுத் தொந்தரவு செய்வதில்லை என்றும் பக்தர்கள் எது கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது பணத்தை வங்கியில் வைப்புச் செய்வதைவிட, தனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் கோவிலுக்குக் கொடுப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாக சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

சகாரிகா காட்கே உடன் கைகோத்தார் ஜாகீர் கான்!

 

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுக்கு, பாலிவுட் நடிகை சகாரிகா காட்கே உடன் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

ஜாகிர்- சகாரியா

 

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சக்தே இந்தியா’ திரைப்படத்தில், புகழ்பெற்ற ‘ப்ரீத்தி சபர்வால்’ ஆக நடித்துப் பெயர்பெற்றவர், சகாரிகா காட்கே. சகாரிகாவும் ஜாகீர் கானும் நீண்ட நாள்களாகக் காதலித்துவந்தனர். இவர்களின் காதலும், பாலிவுட்டுக்கும் கிரிக்கெட் உலகுக்கும் புதிதல்ல. இதற்கு முன்னர், யுவராஜ் சிங் திருமணத்தில் இருவரும் ஜோடியாகக் கலந்துகொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.  அதன் பின்னர், பாலிவுட்- கிரிக்கெட் சமூகத்தில் பிரபலமான காதல் ஜோடிகளாக வலம் வந்த ஜாகீர்- சகாரியா ஜோடி, கடந்த ஏப்ரல் மாதம் நிச்சியதார்த்தம் நடந்த பின்னர், தங்கள் காதலை உலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

 

இந்நிலையில், இன்று காலை ஜாகீர் கான்- சகாரியா காட்கே திருமணம், எளிமையான பதிவுத்திருமணமாக நடைபெற்றது. இவர்களது திருமண வரவேற்பு, வரும் நவம்பர் 27-ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் பேலஸில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

மரமேறி மாட்டிக்கொள்ளும் பூனைகள் மீட்டெடுக்கும் இரட்டையர்

மரம் ஏறத் தெரியும் இந்தப் பூனைகளுக்கு இறங்கத் தெரியவில்லை. அமெரிக்காவின் சியாட்டிலில் பெரிய மரங்களில் ஏறி சிக்கி கொள்ளும் பூனைகளை மீட்டு கொடுப்பதில் மனநிறைவு காணும் இரட்டையர் பற்றிய காணொளி.

Link to comment
Share on other sites

‘‘மலரினும் மெல்லியது காதல்!’’ - கவிஞர் சுரதா பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு!

 
 

சுரதா

‘‘வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை...
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை’’ என்று வாழ்க்கையின் தத்துவத்தை இரண்டே வரிகளில் உணர்வுபூர்வமாக உணர்த்தியவர் உவமைக் கவிஞர் சுரதா. அவருடைய பிறந்த தினம் இன்று.

 

பேராசிரியரின் புகழுரை!

எழுதாமல் இருப்பவர்களையும், எழுதிக்கொண்டிருப்பவர்களையும் எப்போது பார்த்தாலும், ‘‘எழுதுக... எழுதுக... இன்னும் எழுதுக... விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக...’’ என்று ஊக்கப்படுத்தியவர் சுரதா. அதனால்தான், ஒரு நிகழ்வின்போது சுரதா பற்றிப் பேராசிரியர் க.அன்பழகன் இப்படிக் குறிப்பிட்டார்.

‘‘நான் உணர்ந்தவகையில், சுரதா ஒரு சுயசிந்தனையாளர். பாரதிதாசனிடம் பழகி அவர் கற்றுக்கொண்டவை ஏராளம் என்றாலும், அவர் யாரையும் முன்னுதாரணமாகக் கொள்ளவில்லை. அதன்படியே அவருக்கென ஒரு தனிநடையை உருவாக்கி அதன்வழியில் தன் படைப்புகளைப் பரவவிட்டவர். நாத்திகத்தையும், ஆன்மிகத்தையும் கடந்த நிலையில் மனித மாண்புகளைப் போற்றியவர். அவருடைய எழுத்துகளைப் படிக்கும்போது அன்பு, அறிவு ஆகியவற்றைவிட அவர் ஒழுக்கத்தின்மீதுதான் அதிகம் நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதைத் தன்னுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தியவர். தமிழில் புதுக்கவிதையை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர். ஆனாலும், புதுக்கவிதை எனப்படுவது எண்ணங்களின் வெளிப்பாடுதான் என்றவர் சுரதா’’ என்று குறிப்பிட்டார்.

‘‘நீங்கள் ஏன் கவிதை எழுதுகிறீர்கள்?’’  

ஒருமுறை கவிஞர் சுரதாவிடம், ‘‘நீங்கள் ஏன் கவிதை எழுதுகிறீர்கள்’’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சுரதா, ‘‘இது, நீ ஏன் உயிர் வாழ்கிறாய் என்று கேட்பதுபோல் இருக்கிறது’’ என்றாராம். அதேபோல், உரைநடையைப் பற்றிக் கூறும்போது, ‘‘உரைநடை - பசிக்குச் சோறு’’ என்று பதிலளித்தாராம். அவர், சுயமரியாதை மிக்கவர் என்பதைக் கீழ்க்காணும் கேள்விகள் மூலம் உணர்ந்துகொள்ளலாம். ‘‘உங்களுக்குப் பிடித்த கட்சி’’ என்று அவரிடம் கேட்டதற்கு, ‘‘திராவிடம்’’ என்று பதிலளித்திருக்கிறார். ‘‘பிடித்த கடவுள் எது’’ என்று கேட்டதற்கு, ‘‘அப்படி ஒருவர் இருந்தால்தானே’’ என்று பதிலளித்தாராம். ‘‘தாங்கள் யாரையும் பின்பற்றாததன் காரணம்’’ என்ற கேள்விக்கு, ‘‘நான் நாத்திகன்; பெரியார் வழியில் நடப்பவன். கவிதை என்பது வரப்பிரசாதம் என்று கூறுவதைக்கூட நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். படிக்கும்தோறும், பழகும்தோறும் ஒருவன் கவிதையில் தேர்ச்சிப் பெற்றவனாகிறான்’’ என்று சுயமரியாதை சிந்தனையுடன் தெளிவாகப் பதிலளித்திருந்தாராம். 

‘‘மலரினும் மெல்லியது காதலே!’’ 

பாண்டிய மன்னர்களின் மீசையைக்கூட, 

‘‘படுத்திருக்கும் வினாக்குறிபோல மீசைவைத்த 
பாண்டியர்கள் வளர்த்த மொழி’’
 

என்று வர்ணித்தவர் கவிஞர் சுரதா. 

காதலைக்கூட, ‘‘மலரினும் மெல்லியது காதலே’’ என்றவர் சுரதா. தலைவி, தன் தலைவனைப் பார்க்கும்போது மகிழ்ச்சி மேலிடுகிறது. அதை, தலைவி... தலைவனிடம், ‘‘சுடர் மின்னல்கண்டு தாழை மலர்வதுபோல உனைக்கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே’’ என்கிறார். அதாவது, மேகம் கறுத்துப்போய் மழை பெய்யும் காலத்தில் மின்னல் வெட்டுகிறது. அந்த மின்னலும் ஓரிரு மணித்துளிகளில் மறைந்துவிடுகிறது. அந்த மின்னலின் சுடரைக் கண்டு தாழை மலர்வதாகத் தன் உவமையை உணர்த்தியிருப்பார் கவிஞர் சுரதா. 

சுரதா

சுரதாவின் உவமை சாலச்சிறந்தது!

நம் தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்குச் செம்மொழியாம் தமிழ் மொழியில் பெயரிடுதல் வேண்டும் என்பதை, 

‘‘தாய்மொழியை ஒதுக்கிவைத்துப் பிறநாட்டாரின் 
தழுவல்மொழிப் பெயரிட்டுக் கொளநினைத்தல்
தாய்ப்பாலை வேண்டாது நாய்ப்பால் உண்ணச் 
சம்மதிக்கும் தன்மையது போன்றதாகும்’’
என்று உணர்த்தியிருப்பார்.

ஆதிமந்தி - ஆட்டனத்தி இருவரது வருகையையும் அழகாய்க் கட்டுவதற்கு, தொடை வகைகளான எதுகையையும், மோனையையும் எடுத்துக் கையாண்டிருப்பார் சுரதா.

‘‘வரலாற்றுப் பேரழகி ஆதி மந்தி
எதுகைவரல் போல் அடுத்துவந்தாள்; அந்தி
என்பானோ, மோனையைப்போல் முன்வந்தான்!’’

அதேபோல் மயிலின் உருவம் பற்றிய ஒரு கவிதையில்,

‘‘உன்விழி நீலம்; உன் தோகை நீளம்;
உன்னுடல் மரகதம்; உச்சிக்கொண்டையோ
கண்ணைக் கவர்ந்திடும் காயா மலர்கள்...
ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்
ஈர நொச்சியின் இலைகளே யாகும்’’ 

என்று அதன் உருவத்தை வர்ணிக்கும் கவிஞர் சுரதா, அது முகிலினைக் கண்டு ஆடுவதை... 

‘‘ஈர முகிலினை ஏன் விசிறு கின்றனை?
சுரந்திடும் ஊற்று நீர் சுடுமென்றெண்ணி
விசிறுவார் உண்டோ ஓலை விசிறியால்?’’
என்று வர்ணிக்கிறார். 

மேலும், அவருடைய இடுகாடு பற்றிய கவிதையில்,

‘‘இங்கு வருவதற்கு யாரும் விரும்புவதில்லை - ஆனால்
இங்கு வந்தவர் யாரும் திரும்புவதில்லை’’ 

என்று நிஜத்தைப் பிரதிபலித்திருப்பார்.

இப்படித் தன்னுடைய எல்லாக் கவிதைகளிலும் பளிங்குக்கற்களைப் போன்று, மனதில் எளிதில் பதியும்படியான வரிகளைப் பதித்திருப்பார். அதனால்தான் சுரதாவுடைய உவமை ஆளுமை, சாலச்சிறந்தது என்று உலகத்தினரால் பறைசாற்றப்படுகிறது. 

வாலி

சுரதாவைப் புகழ்ந்த வாலி!

‘‘கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தைத் தாம் ஏற்பதே இல்லை’’  என்று சொல்லும் சுரதா, யாரையும் பின்பற்றி எழுதுவதில் உடன்பாடு இல்லாதவர்; செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர்; மரபுக் கவிஞரான அவர், தம்முடைய பாடல்களில் புதுப்புது உவமைகளைப் புகுத்திப் புகழ்பெற்றார். உவமைகள் மூலம் தன்னுடைய கவிதைகளையும், பாடல்களையும் எழுதிய சுரதாவை... வாலிபக் கவிஞர் வாலி, ‘‘அவன் உரைக்காத உவமையில்லை... அவனுக்குத்தான் உவமையில்லை’’ என்று புகழ்ந்தார்.

 

‘‘ஈரஉடை போல் நான் அவருடலில் ஒட்டிக்கொள்வேன்’’ என்று காமத்தைப் பற்றிச் சொல்லும் கவிஞர் சுரதா, அதுபோலவே... அவருடைய கவிதைகள் மூலம் இன்னும் நம்முடைய மனங்களில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ட்ரம்ஸ்டிக் மற்றும் விஷ்போனை ஏன் மன்னித்தார் ட்ரம்ப்?

 

ட்ரம்ப்

ஒபாமா செய்த ஒரு விஷயத்தை ட்ரம்ப் தடை செய்யாமல் இருக்கிறார் என்பதே ஆச்சர்யம்தான். அதிலும் ''ஒபாமா செய்ததையே நானும் செய்கிறேன். ஏனென்றால், நான் ஒரு நல்ல அதிபர்'' என்று ட்ரம்ப்பே கூறியிருக்கிறார் என்றால், 'இது கனவா இல்லை நிஜமா' என்ற சந்தேகம் நமக்கு வருகிறது. 'அறுவடை திருநாள்' முடிந்ததும் கொண்டாடப்படும் 'தேங்க்ஸ் கிவ்விங்' நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபருக்கு வான்கோழி பரிசாக வழங்கப்படும். அந்த வான்கோழி பரிசை அமெரிக்க அதிபர், தனது குடும்பத்தோடு சமைத்து உண்ணும் பழக்கம் என்பது 70 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அதிபர் ட்ரூமேனால் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்றைய ட்ரம்ப் வரை தொடர்கிறது. இதற்கிடையில், ஆப்ரஹாம் லிங்கன் காலத்திலிருந்தே 'தேங்க்ஸ் கிவ்விங்' வழக்கம் இருந்து வருவதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

அமெரிக்காவில், 'தேங்க்ஸ் கிவ்விங்'கிற்காக சிறப்பு உணவு வரிசையில், வான்கோழி சமைக்கப்படும். 'குறிப்பிட்ட இந்த தினத்தில் மட்டும் அமெரிக்கா முழுவதும் சுமார் 4.6 கோடி வான் கோழிகள் சமைக்கப்படும்' என்கிறது புள்ளிவிவரம். 1947 ஆம் ஆண்டு முதல், அதிபருக்கு வான்கோழிகள் பரிசளிக்கப்படுவது அதிகாரபூர்வமாக இருந்துவருகிறது.

இந்நிலையில், 'மிருகங்களைக் கொல்லக் கூடாது' என்ற கொள்கையை வலியுறுத்தி விலங்கு ஆர்வலர்கள் இந்த 'வான்கோழி பரிசு' நடைமுறைக்கு எதிராகப் போராட்டமும் நடத்தி வந்துள்ளனர். 1963-ல் ஜான் கென்னடி, தனக்கு பரிசளிக்கப்பட்ட வான் கோழியை சமைக்காமல் மன்னித்து விட்டுள்ளார். அவருக்குப் பின் வந்த நிக்சன், கார்டர், ரீகன் ஆகியோரும் தொடர்ச்சியாக இந்த மன்னிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தனர். ஆனால், ஜார்ஜ் புஷ் சீனியர்தான் இந்த நடைமுறையை அதிகாரபூர்வமாக்கினார். இதையடுத்து, 'தேங்க்ஸ் கிவ்விங்'கிற்காக வழங்கப்படும் வான்கோழிகளை மன்னித்து பண்ணைக்குத் திரும்ப அனுப்புவதைப் பெரும் நிகழ்ச்சியாக்கினர். இப்படிக் கடந்த 25 ஆண்டுகளில், 'தேங்க்ஸ் கிவ்விங்' நடைமுறையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மன்னிப்பு நிகழ்ச்சிக்கு முன்பாக இந்த வான்கோழிகளுக்கு ராஜ மரியாதை வழங்கப்படும் என்கிறார்கள். அதாவது, நட்சத்திர ஹோட்டலில் உள்ள சொகுசு அறையில் இவை தங்கவைக்கப்பட்ட பிறகே, அதிபரின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாம். இப்படி ஹோட்டலில், வான்கோழிகள் சொகுசு அறையில் தங்கவைக்கப்படுவற்கான ஒருநாள் செலவு மட்டும் 3500 டாலர்களைத் தாண்டுமாம்!

 

ஒபாமா ஆட்சிக்காலத்தில், 8 ஆண்டுகள் நடைபெற்ற 'தேங்க்ஸ் கிவ்விங்' நிகழ்வுகளில் அனைத்து வான்கோழிகளும் மன்னிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், தனது மகள்களுடன் ஒபாமா கலந்துகொள்வார். அப்போது ஒரு சுமாரான ஜோக்கை சொல்லி வான்கோழிகளை மன்னித்தார். எட்டாவது முறை அவரே தனது ஜோக்கை, “பேட் டேட் ஜோக்” என சுயவிமர்சனமும் செய்தார்.

இந்நிலையில், 'ட்ரம்ப் எல்லா விஷயங்களிலும் வழக்கத்துக்கு மாறாகவே இருக்கிறாரே... இப்போது தேங்க்ஸ் கிவ்விங் நிகழ்வில், இவர் என்ன செய்யப்போகிறாரோ...' என அனைவரும் ஆர்வமாகக் காத்திருந்தனர். ஆனால், ட்ரம்ப்போ, ''போன முறை டாட்டர் மற்றும் டாட் வான்கோழிகள் எப்படி திரும்ப அனுப்பப்பட்டதோ அதேபோல், இந்த வருடமும் ட்ரம்ஸ்டிக் மற்றும் விஷ்போன் பெயர்கொண்ட வான்கோழிகள் திரும்ப அனுப்பப்படும். ஏனென்றால், நான் ஒரு நல்ல அதிபர்'' என்றார் அதிரடியாக. 

 

Which turkey should be pardoned during the National Thanksgiving Turkey Pardoning Ceremony?

After the pardoning, Drumstick and Wishbone will join last year’s turkeys, Tater and Tot, at Virginia Tech’s “Gobblers Rest” exhibit.

60%Drumstick
40%Wishbone
Vote 40,910 votes Final results
 

ட்ரம்ப்பின் இந்த மாற்றம் குறித்துப் பேசுவோர், ''வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், தேங்க்ஸ் கிவ்விங் குறித்த ஒரு வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது. இதில், 'எந்த வான்கோழியை மன்னிக்கவேண்டும்' என்ற கேள்விக்குக் கிட்டத்தட்ட சம அளவு பதில் வந்ததும்கூட, ட்ரம்ப்பின் மன்னிப்பு நடவடிக்கைக்குக் பின்னணியாக இருக்கலாம்'' என்கிறார்கள். 

''இந்த ஒரு விஷயத்திலாவது ட்ரம்ப், ஒபாமாவின் பின் தொடர்வை வெளிக்காட்டிக் கொண்டாரே...'' என்று ஆறுதலடைகின்றனர் அமெரிக்கர்கள். இதேபோல், 'புலம் பெயர்ந்தவர்கள், ஹெச் 1 பி விசா, சிரியா உள்ளிட்ட விவகாரங்களிலும் பழைய நடைமுறைகளையே ட்ரம்ப் பின்பற்றினால் மகிழ்ச்சி! 

 

''வான்கோழிகளிடத்தில் அமைதி நிலவ வேண்டும் என நினைக்கும் ட்ரம்ப் அவர்களே... அமெரிக்காவிலும் அதே அமைதியைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்'' என்கிறது துப்பாக்கிச் சத்தங்களுக்கு நடுவே ஒலிக்கும் ஓர் அமெரிக்க குரல்!

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

ஜோர்டானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் தலைமை எலி பிடிப்பாளராக லாரன்ஸ் பூனை

 

ஜோர்டானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் லாரன்ஸ் என்ற பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. இப்பூனைக்கு ட்விட்டரில் நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

online_New_Slide.jpg

பிரிட்டிஷ் தூதரகத்தால் லாரன்ஸ் ஆஃப் அம்டன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பூனை கடந்த மாதம் விலங்குகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.

தற்போது லாரன்ஸ் ஜோர்டானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்தப் பூனையின் நடவடிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும்வண்ணம் சமூக வலைதளத்தில் 'லாரன்ஸ் ஆஃப் அம்டன்' என்ற பெயரில் கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது.

தற்போது லாரன்ஸை 5000க்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள்.

ioppng.png

இதுகூறித்து பிரிட்டிஷ் துணை தூதர அதிகாரி லாரா டவுபன் கூறும்போது,

"லாரன்ஸ் மூலம் ஜோர்டானின் வித்தியாசமான பக்கத்தை பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. மேலும் இதனால் ஜோர்டானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்துக்கு தனித்துவம் கிடைத்துள்ளது.

கருப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும் லாரன்ஸ் எலி பிடிப்பதை தவிர்த்து செய்யும் அதன் பிற செயல்கள் ட்விட்டரில் பதிவிடப்படுகிறது. ட்விட்டரில் சில பின் தொடர்பாளர்கள் அதன் புகைப்படத்தின் கீழ் அது சற்று பருமனாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளதால் லாரன்ஸ் தற்போது சோகமாக இருக்கிறது. அதனால் அதனை சரிசெய்ய லாரன்ஸ் உடற்பயிற்சி செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

மறைந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி டி.இ. லாரன்ஸ் நினைவாக இப்பூனைக்கு இப்பெயர் சூட்டப்பட்டதாக பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

459 உறிஞ்சல்குழாய்களை வாயில் வைத்திருந்து சாதனை படைத்த இளைஞர்

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே தடவையில் 459 உறிஞ்சல் குழாய்களை (ஸ்ட்ரோ) தனது வாயில் வைத்திருந்து உலக சாதனை படைத்துள்ளார்.

Manoj-Kumar-Maharan.jpg

ஓடிஷா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் மஹாராணா எனும் 23 வயதான இளைஞரே இச் சாதனையை படைத்துள்ளார். இந்தியாவின் மும்பை நகரில் இந் நிகழ்வு நடைபெற்றது.

8 வருடங்களுக்கு முன் பிரித்தானியரான சிமோன் எல்மோர் என்பவர், ஜேர்மனியில் நடைபெற்ற கண்காட்சி யொன்றின்போது 400 உறிஞ்சல் குழாய்களை வாயில் வைத்திருந்தமையே இதுவரை சாதனையாக இருந்தது.

manoj-kumar-maharana.jpg

கின்னஸ் சாதனை விதிகளின்படி அதிக எண்ணிக்கையான உறிஞ்சல் குழாய்களை வாயில் வைத்திருந்து சாதனை படைக்க முற்படுபவர்கள் குறைந்தபட்சம் 10 விநாடிகள் (செக்கன்கள்) அக்குழாய்களை விழாமல் வாயில் வைத்திருக்க வேண்டும்.

அத்துடன், ஒவ்வொரு குழாயும் குறைந்தபட்சம் 0.64 சென்ரிமீற்றர் விட்டமுடையவையாக இருக்க வேண்டும்.

இதன்போது குழாய்கள் விழுவதைத் தடுப்பதற்காக கைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், அவற்றை ஒன்றிணைப்பதற்காக ரப்பர்பேண்ட்களை பயன்படுத்தலாம்.

Manoj-Kumar-Maharan-2.jpg

புதிய கின்னஸ் சாதனை படைத்த பின்னர் மனோஜ் குமார் மஹாராணா கருத்துத் தெரிவிக்கையில், முந்தைய சாதனையாளரான சிமோன் எல்மோர் குறித்து இளம் வயதில் அறிந்ததலிருந்து இச் சாதனையை முறியடிக்க வேண்டும் என எண்ணியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

 பிளாஸ்டிக் வந்த கதை

 
24CHVCMEDIT2-BIOPLASTIC

“இங்கே இருந்த என் கல்யாண வேட்டி எங்கே... காணுமே? “

 “எது..  கிழிஞ்சுபோச்சே, அதுவா.. “

“ஒரு பக்கம் அயர்ன் பண்ணும்போது நெருப்புப்பொறி பட்டு ஒரு சின்ன பொட்டு.. அது கிழிசலா? “

“அந்த வேட்டி இருக்காது.. “

”புரியலை ”

”போன மாதம் குளியலறையில் குளிக்க நிறைய வசதியா நல்லா பெரிசா இருக்குன்னு சொன்னீங்கபாருங்க ,அந்தச் சிகப்புபக்கெட்.... வாசலில் பாத்திரக்காரனிடம் அதைப்போட்டுதான் வாங்கினேன். ”

இந்த டைலாக் இல்லாத வீடுகளே இருக்கமுடியாது. காரணம் நம் பிளாஸ்டிக் மோகம். இந்த பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை. சாமான் வாங்கச்சென்றால் பிளாஸ்டிக் பை உட்கார பிளாஸ்டிக் சேர், சாமான்கள் போட்டு வைக்க பிளாஸ்டிக் டப்பாக்கள், பாத் ரூமின் கதவு பிளாஸ்டிக், மூக்குக்கண்ணாடி ப்ரேம் பிளாஸ்டிக், வாஷிங் மெஷின் பிளாஸ்டிக், குளிர்சாதனப்பெட்டியில் பிளாஸ்டிக்.. பிளாஸ்டிக், பை பிளாஸ்டிக்... ஆக... இது இல்லாத இடமே இல்லை.

இப்படிப்பட்ட சர்வவியாபியான் பிளாஸ்டிக், பல யுகங்களாக இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் யூகித்தால்.. எப்போதும்போல் அது தவறு. தற்போது நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் சிந்தடிக் வகை. அதாவது இயற்கைப்பொருளாக இல்லாமல், சில பொருட்களைக்கொண்டு, வேதியல் மாற்றம் செய்யப்பட்டு மனிதனால் செய்யப்படுகிறது.

இயற்கையாகவே கிடைக்கும் பிளாஸிடிக் என்பது விலங்குகளின் கொம்பு, விலங்குகளின் பால், சில பூச்சிகள், மரம் செடிகளில் இயற்கையாகக் கிடைக்கிறது.

இந்த வஸ்து முதல் முதலில் 1899ஆம் ஆண்டு ஹான்ஸ் வான் பென்சமென் என்பவரால் கண்டறியப்பட்டது. இந்தஜெர்மானியர் தன்னை அறியாமல் செய்த கண்டுபிடிப்பு. வேறு ஏதோ காரணங்களுக்காக சோதனைக்குழாயில் அமிலங்களை உற்றி குலுக்க, அசந்தர்ப்பமாக இந்த பாலிதீன் எனும் வகை பிளாஸ்டிக் வகை ஒரு பச்சைக்கலர் குழகுழப்பாக சோதனைக்குழாயின் அடியில் கண்டுபிடித்தார்.

இது பாலிதீன் என்பதை அறிந்துகொள்ளாமல் இதற்கு பாலிமெதிலீன் என்றபெயர் சூட்டப்பட்டது. மேலே சொன்னபடி இந்த வஸ்து குழகுழப்பாக இருந்ததால் எதற்கும் உபயோகப்படாமல் நாளடைவில் மறக்கப்பட்டது.

இதற்குப்பின் 34 வருடங்களுக்குப்பின், 1907 ம் வருடம் லியோ ஹென்றிக் பேக்லெண்ட் எனும் பெல்ஜியத்தில் பிறந்த அமெரிக்கரால் கண்டுபிடிக்கப்பட்டு பேக்லைட் எனும் நாமகரணத்துடன் வெளியே சுற்ற ஆரம்பித்தது. இந்தக்கண்டுபிடிப்பும் ஒரு தற்செயலே.

ஓடுகளிலிருந்து செய்யப்படும் ஷெல்லாக் எனும் வகை இயற்கை பிளாஸ்டிக்கிற்கு மாற்று கண்டுபிடிக்க பெனாயிலுடன் போர்மல்டீஹைட் எனும் வேதிப்பொருளை குடுவையில் சூடேற்றும்போது அகஸ்மாத்தாகப் பிறந்தது இந்த வகை பிளாஸ்டிக்.

ஆனால் இந்த பிளாஸ்டிக்கின் உபயோகம் ஒவ்வொரு சமயத்திலும் எதிர்பாராமல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவை பாலிமர் என்று சொல்லப்படும் தொடர்ச்சியான அலகுகளால் உருவாகின்றன.

நாம் இப்போது வெகு சாதாரணமாக வாங்கித் தூக்கிப்போடும் பிளாஸ்டிக் பைகள் ஐம்பது வருடம் முன் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கேள்வி எழலாம். எதனால் வேறு வேறு வருடங்களில் வேறு வேறு நபர்களால் இந்த பிளாஸ்டிக்கின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்டது? பதில் சுலபம். இது ஏழு விதமான தனித்தன்மை கொண்ட வஸ்துவாக உள்ளது.

PET, HDPE, PVC, LDPE, PP, PS , Others  என ஒவ்வொன்றின் உபயோகம் வெவ்வேறு மாதிரி. ஆனால் இந்த வெவ்வேறு தன்மையால் பிளாஸ்டிக் எங்கும் நீக்கமற நிறைகிறது. துணிகளில் இது நைலான் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

1934 ம் வருடம் கரோத்தர் என்பவரால் அவர்ஆராய்ச்சிக்கூடத்தில் பிறந்தது இந்த வகை. நம் நடை, உடை,பாவனை என்று அனைத்தையும் புரட்டிப்போட்ட கண்டுபிடிப்பு. ஆனால் இதைக் கண்டுபிடித்த கரோத்தர் ஒரே ஒரு நைலான் சட்டைகூட போட்டுப்பார்க்காமல் - அதாவது இந்தக் கண்டுபிடிப்பு மார்கெட்டிற்கு வருவதற்கு ஒன்றரை வருடம் முன்பே, பிலடெல்பியா ஹோட்டல் ரூமில் சையனைட் மாத்திரையைச் சிரமமின்றி விழுங்கி சிறப்பின்றி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நைலான உடை சாத்தியப்பட்டதன் முக்கிய காரணம் 1970களில் மக்னீஷியம் க்ளோரட் கண்டுபிடிக்கப்பட்டு பிளாஸ்டிக் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்பட்டதுதான். இதனால் இயற்கையாக பிளாஸ்டிக்கிற்கு இருக்கும் விறைப்புத்தன்மை குறைந்து நெகிழ்வடைந்தது. இதே காலகட்டத்தில் தான் நம்மையும் தன்னுடன் கட்டிப்போடக் கயிறு கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படிப் பல விதத்தில் உபயோகப்படுவதற்கு பிளாஸ்டிக்கின் சில வேதியியல் பண்புகளே காரணம். கெமிகல் ரியாக்ஷன், துருப்பிடித்தல், மிகக்குறைவான மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன், எடை விகிதத்தைவிட அதிக வலிமை, ஒளிபுகுத்தன்மை, ஷாக் ப்ரூப், அதிக வருடம் நீடிப்பு, குறைவான் விலை, தண்ணீர் எதிர்ப்பு, குறைந்த நச்சுத்தன்மை.. இவை எல்லாவற்றிற்கும் மேலாகக் குறைந்த விலையில் உற்பத்தி.

பிளாஸ்டிக் பொருள்களில் விழும் விரிசலைச் சரி செய்ய இப்போதுதான் பெவிகால் பெவிக்யுக் என்று விதம்விதமாக அடைக்கப்பட்ட ட்யூப்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.. ஆனால் முப்பது வருடங்களுக்குமுன், உடைந்த ஒரு பிளாஸ்டிக் பாகத்தை மெழுகுவர்த்தியில் உருகவைத்து இந்த விரிசல் மேல் ஒரு கோட்டிங்க் இட்டுஅதைத் தண்ணீரில் சொய்ங் எனும் சத்தம் எழுப்பக் காட்டிய பக்கெட்டுகள் எல்லோர் வீட்டிலும் அவர்கள் குழந்தையின் ஒருவீர விளையாட்டு. இதை இங்கே சொல்லப்படுவதற்கு ஒரு காரணம் உண்டு.

இயற்கை பிளாஸ்டிக்கை வீட்டிலேயே செய்யலாம். இதற்குத்தேவை ஒரு கப் ஆடைப்பால், வினீகர் அல்லது எலுமிச்சைச்சாரு இவைமட்டுமே. ஒரு சாஸ்பேனில் பாலை நிதானத்தில் சூடேற்றவேண்டும். பொங்கும் சூட்டிற்கு கொண்டுசெல்லக்கூடாது. பாலில் சிறிதுசிறிதாக வினீகரை விட்டுக் கலக்கவும். பால் விடுபட ஆரம்பமாகும். இது தான் நாம் உண்ணும் பன்னீர் செய்யும்முறை. பாலில் உள்ள இயற்கை பாலிமர்கள் விடுபட்டு பிளாஸ்டிக்காக மாறுகின்றது. இதைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுத்தால் குழந்தைகளின் கைகளில் பொம்மையாக, பாலாக, பூந்தொட்டியாக உருவெடுக்கும். இது இயற்கை ப்ளாஸ்டிக்.

இதே போல் சிந்தெடிக் பிளாஸ்டிக்கும் வீட்டில் செய்யலாம். அஸிடோன் எனப்படும் அமிலத்தில் நாம் உபயோகப்படுத்தும் யூஸ் அண்ட் த்ரோ வகை பிளாஸ்டிக் பொருட்களை உடைத்துப்போட்டு ஐந்து நிமிடம் காத்திருந்தால் மோல்டபிள் ப்ளாஸ்டிக் கைகளில்.

இப்படி உலகையே மாற்றிப்போட்ட ஒரு பொருள் இனி காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று நம்பினால், இதுவும் தவறு. காரணம்,  நம் மண்ணில் மறித்துப்போக பிளாஸ்டிக் கழிவுகள் ஆயிரம் வருடம் எடுக்குமாம். இது நாம் தெருவோர பஜ்ஜிக்கடையில் வாங்கித்தின்ன பிளாஸ்டிக் கவரை கீழே விட்டெறிகிறோமே அதற்கு.

வீட்டில் உபயோகப்படுத்தும் பெட் பாட்டில்களுக்கு இன்னும் கூடுதல் ஐநூறு வருடம்.  புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் ப்ளாஸ்டிக் பைகள் விட்டெறியப்படுகின்றது. இவை ரீசைக்கிள் செய்யப்படாமல் நிலத்தில் புதைக்கப்பட்டால்.. நம் பூமி பொன் விளையாது ப்ளாஸ்டிக்காக விளையத்தொடங்கிவிடும்.

அதனால் தான் தற்போது நம் நாட்டில் குறைவான டென்ஸிடி கொண்ட பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே... இந்த பிளாஸ்டிக் தேவைக்கேற்றபடி (தேவைக்கு மட்டும்) சரியாக உயயோகித்து, இன்னும் பல காலம் நீடித்து நமக்கு இன்னும் பல பல பயன்கள் ஈட்டித்தருவது.... நம் கைகளில்தான் இருக்கிறது.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

‘காதல் எங்கும் முளை விடும்’
 

image_2eadc31ea2.jpgஇது ஒரு வித்தியாசமான கதை. தனது மேற்படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்துப் பல்கலைகழகம் ஒன்றில் இணைந்து கொண்டவன், அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அந்த நாட்டின் பெண்ணைச் சந்தித்தான். அவளுக்கு எமது நாட்டின் பண்பாடு, கலை, கலாசாரம் பிடித்துப்போனதால் இவனது நடத்தைகளும் அவளைக் கவர்ந்து கொண்டது; இருவரும் அன்பினால் ஒன்றுபட்டார்கள்.  

கல்வி கற்று முடிந்ததுமே, அங்கே நல்ல வேலையும் பின்னர் அந்நாட்டுப் பிரஜாவுரிமையும் கிடைத்துவிட்டது. இந்நிலையில், தந்தையிடமிருந்து செய்தி ‘உடனே வா; உனது அம்மாவுக்குச் சுகவீனம்’. தாய்வீடு வந்தவனுக்கு அதிர்ச்சி. 

அவனைக் கண்டிப்பாக மிரட்டி, “தாங்கள் பார்த்த பெண்ணைக் கல்யாணம் செய்யாதுவிடின் செத்துவிடுவோம்” என்றனர். வேறுவழியில்லை. பிரம்பராட்சசி போல் அவளது நடத்தை. இலண்டனில் உள்ள காதலி, செய்தியறிந்து சோகமயமானாள். இதனிடையே பல இலட்சங்கள் கொடுத்து, விவாகரத்துப் பெற்றுக்கொண்டான்.  

எதிர்பாராத விதமாக அங்குவந்த, அவனது காதலி, கரிசனையுடன் அவனை அணைத்து, இனிநான் இவரைப் பொறுப்பேற்கின்றேன் என்றவள் புதுவாழ்வைக் காட்டக் கூட்டிச் சென்றாள். பண்பான காதல் எங்கும் முளை விடும்.  

Link to comment
Share on other sites

பிறருக்கு உதவினால், நாம் உயர்வோமா? உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

 
 

உண்மை கதை

மென் சிரிப்பு, கனிவான அணுகுமுறை, உபசரிக்கும் குணம், பிறருக்கு உதவும் எண்ணம்... இந்தக் குணங்கள் இருப்பவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் இவை அனைத்தும் ஒருவரிடம் நிறைந்திருந்தால், நிச்சயம் அவர் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று சொல்லிவிடலாம். முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரின் இதயத்தில்கூட இவர்கள் இடம்பிடித்துவிடுவார்கள். பிறரிடம் நல்ல பெயர் எடுப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. நல்ல பெயரை வாங்கிவிட்டால், அது ஏதோ ஒருவிதத்தில், யாரோ ஒருவர் மூலமாக நாம் நினைத்தே பார்க்காத ஏதோ ஒரு நல்ல பலனைத் தந்துவிடும்.

 

அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரம். நள்ளிரவு நேரம். மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நகரத்தையே மூழ்கடித்துவிடும் மூர்க்கத்தோடு அடைமழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. அந்த சின்ன ஹோட்டலுக்கு வெளியே ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முதியவரும் அவர் மனைவியும் இறங்கினார்கள். மெள்ள அடியெடுத்துவைத்து ஹோட்டலுக்குள் நுழைந்தார்கள்.

வரவேற்பறையில் ஓர் இளைஞன் அமர்ந்திருந்தான். அவனருகே இருவரும் போனார்கள். அந்த முதியவர் தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றிக் கைகளில் வைத்துக்கொண்டார். இளைஞனைப் பார்த்து முகமன் கூறினார்.

``இன்று இரவு தங்குவதற்கு இந்த ஹோட்டலில் எங்களுக்கு ஓர் அறை கிடைக்குமா?’’ என்று கேட்டார் வந்தவர்.

கதை

இளைஞன் புன்னகை மாறாமல் அவரையும் அவர் மனைவியையும் பார்த்தான். மென்மையான குரலில் அவரிடம் சொன்னான்... ``ஐயா மன்னிக்கவும். இன்றைக்கு இந்த நகரத்தில் மூன்று முக்கியமான பெரிய விழாக்கள், கூட்டங்கள் நடந்திருக்கின்றன. அதனால் நகரிலிருக்கும் எல்லா ஹோட்டல்களுமே நிரம்பி வழிகின்றன. எங்கள் ஹோட்டலிலும் ஒரு அறைகூட காலியில்லை... மன்னிக்கவும்...’’

அந்தப் பெரியவர் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தார். `இருவரும் அந்த ஹோட்டலைவிட்டு வெளியே போகவேண்டியதுதான்’ என்கிற முடிவுக்கே வந்துவிட்டார் அந்தப் பெரியவர். அந்த கணத்தில் மறுபடியும் அந்த இளைஞன் பேசினான்.

``ஆனால்...’’

``ஆனால்... என்ன?’’

``ஒரு வழியிருக்கிறது. அது என்னவோ தெரியவில்லை உங்களை வெளியே அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. வெளியே மழை பெய்துகொண்டிருக்கிறது. நீங்கள் விரும்பினால், இன்று இரவு என் அறையில் தங்கிக்கொள்ளலாம். என்ன... அது ஆடம்பரமான அறை அல்ல. அதிக வசதிகள் இருக்காது. ஆனால், உங்கள் இருவருக்கும் போதுமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது.’’

கதை

``சரி... நீ எங்கே தங்குவாய்?’’

``என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எனக்கு என் நண்பர்கள் உதவுவார்கள்.’’

முதியவரும் அவர் மனைவியும் இளைஞனின் உதவியை ஏற்றுக்கொண்டார்கள். அன்றிரவு அந்த இளைஞனின் அறையிலேயே தங்கினார்கள்.

அடுத்த நாள் காலை. இருவரும் இளைஞனிடம் வந்தார்கள். நன்றி சொல்லி விடைபெறும் நேரம் அது. அவர் சொன்னார்... ``உன்னைப் போன்ற ஒரு அன்பான மேனேஜர் ஒரு மிகச் சிறந்த ஹோட்டலுக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஒருவேளை உனக்காகவே நான் ஒரு ஹோட்டலைக் கட்டினாலும் கட்டுவேன்.’’

அவர் சொன்னது ஏதோ பெரிய நகைச்சுவை என்பதுபோல மூவருமே வாய்விட்டுச் சிரித்தார்கள். பிறகு கிளம்பிப் போனார்கள்.

காரில் போகும்போது அவர் தன் மனைவியிடம், ``இப்படி நட்பாகவும் உதவி செய்யும் மனப்பான்மையுடனும் ஒருவர் இருப்பது அரிதானது.’’ என்று சொன்னார்.

கதை

``நிச்சயமாக.’’

சில வருடங்கள் கழிந்தன. அந்த இளைஞன் அந்த முதிய தம்பதியைக் கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தான். ஒருநாள் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த முதியவர் எழுதியிருந்தார். அந்த மழை இரவை ஞாபகப்படுத்துவது மாதிரி சில வரிகள்... பிறகுதான் இளைஞனுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. `இத்துடன் ஒரு ஃபிளைட் டிக்கெட்டை இணைத்திருக்கிறேன். உங்களால் எங்களைப் பார்க்க நியூயார்க்குக்கு வர முடியுமா?’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இளைஞன் நியூயார்க்குக்குக் கிளம்பிப் போனான். அவனை வரவேற்கத் தயாராக விமான நிலையத்திலேயே காத்திருந்தார் பெரியவர். அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு, நியூயார்க்கின் ஐந்தாவது அவென்யூவில், 34-வது தெருவுக்கு அழைத்துப் போனார். காரை நிறுத்தினார். அந்த இளைஞனுக்கு முன்பாக மிகப் பிரமாண்டமான ஒரு கட்டடம் தெரிந்தது.

``இதுதான். நீ நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக நான் கட்டிய ஹோட்டல்’’ என்றார் பெரியவர்.

``ஐயா நீங்கள் ஜோக் எதுவும் அடிக்கவில்லையே!’’

``நிச்சயமாக இல்லை.’’  அவர் உதட்டோரத்தில் ஒரு மர்மப் புன்னகை தெரிந்தது. அவர் சொன்னது உண்மை.

 

அந்தப் பெரியவரின் பெயர் வில்லியம் வால்டார்ஃப் அஸ்டர் (William Waldorf Astor). பெரும் பணக்காரர். அது அவருடைய ஹோட்டலேதான். அது, வால்டார்ஃப் அஸ்டாரியா ஹோட்டல். அந்த இளைஞன் அந்த ஹோட்டலின் முதல் மேனேஜர் என்கிற பொறுப்பை எடுத்துக்கொண்டான். அவர் பெயர், ஜார்ஜ் சி.போல்ட் (George C.Boldt) உலகின் மிக முக்கியமான, ஆடம்பரமான ஒரு ஹோட்டலுக்குதான் மேனேஜராவோம் என்று அவன் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், அவனை அந்த உயரத்தில் கொண்டுபோய் வைத்தது அவனின் கனிவான நடவடிக்கையும் உதவி செய்யும் மனப்பான்மையும்தான்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.