Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

தாய்ப்பால் தானத்திற்காக தினமும் 10 மணி நேரம் செலவிடும் அதிசயத் தாய்

அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில்  வசித்து வரும்  29 வயதுடைய எலிசபெத் ஆண்டர்சன் இரண்டு குழந்தைகளின் தாயாவார் இவர் ‘ஹைப்பர் லேக்டேஷன்’ என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு தாய்க்குச் சுரக்கும் பாலைவிட 10 மடங்கு அதிகமான பால் இவருக்குச் சுரக்கிறது.

Local_News.jpg

இந்த தாய்க்கு ஒரு நாளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது..! இது ஒரு வகை குறைபாடு என்றாலும், எலிசபெத் அதை பற்றி கவலைப்படவில்லை. தன்னிடம் சுரக்கும் தாய்ப்பாலை பத்திரப்படுத்தி, தேவைப்படுபவர்களுக்குத் தானமாக வழங்கிவருகிறார். இதுவரை 2,271 லிட்டர் பாலை தானம் கொடுத்திருக்கிறார்.

ஒருநாளில் 10 மணிநேரத்தை இதற்காக செலவிடுகிறார். பாலை சுரந்து சேகரிக்க 5 மணிநேரம், அதை குளிர்சாதனப்பெட்டிகளில் பதப்படுத்த 5 மணிநேரம் என பிசியாக இருக்கிறார்.

இது குறித்து  எலிசபெத்  கருத்து தெரிவிக்கையில்,

“என் முதல் மகள் பிறந்தபோது தாய்ப்பாலே சுரக்கவில்லை, குழந்தைக்கு பால் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன், இரண்டாவது குழந்தை பிறந்தபோது எதிர்பாராத விதமாகப் பால் அதிகம் சுரக்கும் நிலை உருவாகிவிட்டது. என் குழந்தையால் குடிக்கவே முடியாது, அவ்வளவு வேகமாகப் பால் வெளியேறும். அப்போதுதான் தாய்ப்பாலைத் தானம் செய்ய முடிவெடுத்தேன்.

இரண்டு குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு வீட்டு வேலை களையும் செய்துகொண்டு பாலுக்காக 10 மணி நேரம் செலவிடுவது எளிதான விஷயம் இல்லை. ஆனால் முதல் குழந்தைக்குப் பால் இல்லாமல் நான் பட்ட கஷ்டத்தை வேறு எந்த தாயும் அனுபவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த வேலையில் மூழ்கியிருக்கிறேன். 

தினமும் 5 வேளை பாலை சுரந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து, குளிர் சாதனப் பெட்டியில் வைத்துவிடுவேன். இந்தப் பகுதியில் இருக்கும் இளம் தாய்மார்கள் மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்தவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள் என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். இந்தப் பகுதியின் தேவைக்கு போக எஞ்சியிருக்கும் பாலை கலிபோர்னியா தாய்ப்பால் வங்கிக்குக் கொடுத்து விடுகிறேன்.

பாலை மணிக்கணக்கில் எடுக்கும்போது மார்பகம் பயங்கரமாக வலிக்கும். ஆனாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் என் பாலைக் குடித்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது வலி மறைந்துவிடும். தாய்ப்பால் என்பது தங்கம் போன்றது. இதை எந்தக் காரணத்துக்காகவும் வீணாக்க முடியாது, வீணாக்கவும் கூடாது” என்கிறார் எலிசபெத்

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

சிறந்த மாணவன் விருதை பெற்ற பூனை

 

 

அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தாளின் பூனை  பாடசாலை சென்று படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பூபா என்ற பூனையைத் தத்தெடுத்துள்ளார். அவரது மகன்கள் மேத்யூ, மார்க் ஆகியோர் அந்த பகுதியிலுள்ள லேலேண்ட் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

குறித்த இருவரும் கால்நடையாகப் பாடசாலை செல்வது வழக்கம். இந்நிலையில் பூபாவும் வீட்டில் இருக்காமல் தினமும் இவர்களுடன் பாடசாலைக்குச் செல்வதைப் பழக்கப்படுத்திக்கொண்டது. அத்துடன் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தையும் கவனிக்கிறதாம்.

625.500.560.350.160.300.053.800.900.160.

ஆரம்பத்தில் உரிமையாளரின் மகன்களுடன் பாடசாலைக்குச் சென்ற பூபா, தற்போது பள்ளி திறக்கும் முன்பு முதல் ஆளாக அங்கு சென்று வாசலில் காத்துக்கொண்டிருக்கிறதாம். இது தொடர்கதையாகி விட்டதால் பள்ளி நிர்வாகத்தினரும் பூபாவை விரட்டுவது இல்லையாம்.

மேத்யூ மற்றும் மார்க்குடன் நட்பு பாராட்டும் பூபா மற்ற மாணவர்களிடமும் விளையாடி மகிழ்கிறது. இதனால் பள்ளி வளாகத்தில் பூபாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம்.சமீபத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருந்த பூபாவுக்கே முதலில் அடையாள அட்டையை வழங்கி உள்ளனர்.

கடந்த வருடத்திற்கான சிறந்த மாணவன் விருதும் பூபாவிற்குத் தான் வழங்கப்பட்டதாம்.

Local_News.jpg

ஆம்பர் வளர்க்கும் பூபா  பாடசாலைக்கு செல்வது மற்றும் மாணவர்களுடன் பழகுவது என்பன  அப் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பூபாவிற்கு  ‘Bubba the Cat”’ எனும் பெயரில் பேஸ்புக் கணக்கொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

22766507_844696012374977_469119887_o.png

 

http://www.virakesari.lk/

Link to comment
Share on other sites

பீலே... கனவு கண்டான்... கால்பந்தின் கடவுள் ஆனான்! #HBDPele

கால்பந்தின் கடவுளுக்கு, இன்று பிறந்த நாள்.
 

கார்கோவடோ மலையில் நின்றுகொண்டு, தன் இரண்டு கைகளையும் விரித்து அருள் புரிந்துகொண்டிருக்கும் இயேசுவின் சிலை (Christ the redeemer). ‘பிரேசில் தேசத்துக்கு அதுதான் அடையாளமாக' இருந்தது. அது நிறுவப்பட்ட 1931-ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம், அந்தச் சாம்பா தேசத்தின் அடையாளமாக விளங்கியது. ஆனால், ஒரு சிறுவனிடம் தன் அடையாளத்தை இழந்தது அந்தச் சிலை. பள்ளிக்குப் போய் வந்தாலும், ஏழ்மையைப் போக்க ஷூ பாலீஷ் போட்டுக்கொண்டு, பணக்காரர்கள் வீட்டு தரையைத் துடைத்துக்கொண்டு, `டீக்கடை'யில்கூட வேலை செய்துகொண்டிருந்த அந்தச் சிறுவன், அந்தச் சிலைக்கு சவாலாக, தேசத்தின் அடையாளமாக மாறினான்.

pele

 

1958-ம் ஆண்டு பிரேசிலின் டிரெஸ் கராகோஸ் கிராமம். ஒரு நண்பரின் கடையில் தோழர்கள் சூழ்ந்திருக்க, தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கிறார் டொண்டின்ஹோ. சுவீடனுடன் தன் நாடு மோதும் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. சில ஆண்டுகளுக்கு முன்னர்... டிவி இல்லை. ரேடியோவில் கமென்டரி கேட்டுக்கொண்டிருக்கிறது அந்தக் கும்பல். அதே உலகக்கோப்பை ஃபைனல். உருகுவே அணியிடம் 2 - 1 எனத் தோற்றிருந்தது பிரேசில். கண்ணீர் வழிந்தோட, மனமுடைந்து அமர்ந்திருந்தார் டொண்டின்ஹோ. மேற்கூரையின் ஓட்டை வழியாக தன் தந்தையின் கண்ணீரைப் பார்த்த 9 வயதுடைய அவரின் மகன், தன் தந்தையிடம் சத்தியம் செய்தான், “பிரேசிலுக்கு நான் உலகக்கோப்பையை வென்று தருவேன்" என்று. எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதே இடம். போட்டி தொடங்குவதற்கு முன்னரே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார் டொண்டின்ஹோ. டிவி-யில் உலகக்கோப்பையை வெல்லும் வெறியோடு மஞ்சள் உடை அணிந்து ஓடிய பிரேசில் வீரர்களில், அன்று சத்தியம் செய்த மகனும் ஒருவன். அனுபவம் வாய்ந்த வீரர்கள் நடுவே புயலாகச் சுழன்றடித்தான் அந்த 17 வயதுச் சிறுவன். இரண்டு கோல்கள் அடித்தான். பிரேசிலின் முதல் உலகக்கோப்பையை... மொத்த தேசமும் ஏந்த நினைக்கும் அந்தக் கோப்பையை, தன் கைகளில் ஏந்தி முத்தமிட்டான். ஆனந்தக்கண்ணீரில் மிதந்தார் டொண்டின்ஹோ. `இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்!' - அந்தச் சிறுவன் - எடிசன் எனப் பிறந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்கள் அடித்து, பிரேசிலின் அடையாளமாக ஓய்வுபெற்ற `கால்பந்துக் கடவுள்' பீலே!

world cup

கறுப்பு முத்து' பீலே, பிரேசிலுக்கு மட்டுமல்ல... கால்பந்து எனும் உலகளாவிய விளையாட்டுக்கும் அடையாளமாகத் திகழ்ந்தார். பிரேசில் நாட்டுக் கால்பந்தின் அடையாளமாக மாற பீலேவுக்குத் தேவைப்பட்டதோ வெறும் 15 நாள்கள்தான். ஜூன் 15, 1958 - அப்போது பீலே பிறந்து 17 வருடம் 239 நாள்கள் ஆகியிருந்தன. உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையோடு களம் கண்டார் `யங்' பீலே. ஜூன் 29, பிரேசில் அணிக்காக அந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் (6) அடித்தவராக அந்தப் பெருமைமிகுந்த கோப்பையை ஏந்தினார். ஆடியது நான்கு போட்டிகள்தான். முதல் உலகக்கோப்பைப் போட்டியிலேயே அசிஸ்ட்; இரண்டாவது போட்டியில் முதல் வேர்ல்டு கப் கோல்; மிரட்டல் அணியான பிரான்ஸுக்கு எதிராக அரை இறுதியில் ஹாட்ரிக்; ஃபைனலில் இரண்டு கோல்கள்; அந்த உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்தவர் வரிசையில் இரண்டாம் இடம்; இளம் வயதில் உலகக்கோப்பை ஹாட்ரிக் அடித்தவர்; இளம் வயதில் உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியவர்; தொடரின் சிறந்த இளம் வீரர்... இப்படி அந்தத் தொடர் முடியும் வரை கால்பந்தை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகனின் சுவாசத்திலும் பீலேவின் பெயர் கலந்திருந்தது. உலகத்துக்கு, பிரேசில் பீலேவின் நாடாகிப்போனது!

இத்தனைக்கும் பிரேசிலிலிருந்து உலகக்கோப்பைக்காக சுவீடன் கிளம்பியபோது, மூட்டுவலியால் அவதிப்பட்டிருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் காயத்தால் ஆடவில்லை. `காயம் சரியானதும் களமிறக்கலாமா!' எனப் பயிற்சியாளருக்குச் சந்தேகம். மூத்தவீரர்கள் எல்லோரும் ஒன்றுகூடி “பீலே, அணியில் இருக்க வேண்டும்" என்று அந்த 17 வயதுச் சிறுவனுக்காகப் பரிந்துரை செய்யத் தொடங்கியது உலகக்கோப்பையின் மாபெரும் சகாப்தம். அந்த வயதிலேயே அவரது திறமை அணியின் ஆட்டத்தில் அப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.  அந்தத் தொடரில் 13 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்தியிருந்தார் பிரான்ஸ் வீரர்  ஜஸ்ட் ஃபான்டெய்ன் (Just Fontaine). அரை இறுதியில் பீலேவின் தாண்டவத்தைப் பார்த்துவிட்டு, “அந்த 17 வயதுச் சிறுவனின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, பேசாமல் ஓய்வுபெற்றுவிடலாமா என எனக்குத் தோன்றியது" எனப் பின்னர் ஆச்சர்யப்பட்டார். இறுதிப்போட்டியில் பீலேவை எதிர்த்து விளையாடிய சுவீடன் கோல்கீப்பர் சிக்கே பார்லிங், “பிரேசிலின் ஐந்தாவது கோலை அவர் அடித்ததைப் பார்த்து, அந்தச் சிறுவனோடு அதைக் கொண்டாட வேண்டும் என எனக்கும் ஆசையாக இருந்தது" என்று அவர் திறமையை சிலாகித்தார். ரசிகர்களை மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களையும் ஆட்கொண்டது 17 வயது பீலேவின் ஆட்டம்.

கடவுள்

இன்று இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் விளையாடுபவர்களிடம் போய் “உங்களின் கனவு என்ன?" எனக் கேட்டால், “ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட், யுவண்டஸ்" போன்ற அணிகளில் விளையாட வேண்டும்'' என்பார்கள். கால்பந்தை உதைக்கத் தொடங்கிய காலம்தொட்டே கால்பந்து வீரர்களுக்கு அதுபோன்ற பெரிய அணிகளில் விளையாடுவதே வாழ்நாள் கனவாக இருக்கும். அந்த அணிகள் எல்லாம், பீலேவின் கையெழுத்துக்காகக் காத்துக்கிடந்தன. நினைத்துப்பார்க்க முடியாத சம்பளம், ஐரோப்பாவில் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் விருதுகள், சொர்க்கம் போன்ற சொகுசான ஆடம்பர வாழ்க்கை... இவை அனைத்தும் கிடைத்துவிடும் அந்த ஒற்றைக் கையெழுத்துக்கு. ஆனால், பிரேசிலைவிட்டுப் போக வேண்டுமே... அனைத்தையும் நிராகரித்தார் பீலே. தான் சிறுவயதிலிருந்து விளையாடிய சாண்டோஸ் அணியிலேயே தொடர்ந்தார். புகழுக்காகவும் பணத்துக்காகவும் பிரேசிலைத் தாண்டுவதில்லை என முடிவுசெய்தார். அன்று பிரேசிலின் அதிபராக இருந்த ஜேனியோ குவாட்ரோஸ், பீலேவை `தேசத்தின் அதிகாரபூர்வமான  சொத்து' என ஒரு வருடம் முன்புதான் அறிவித்திருந்தார். ஒரு தேசத்தின் அடையாளம் இன்னொரு கண்டத்துக்குப் போய்விடுமா என்ன? 

பிரேசில் அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டது, 1961-ம் ஆண்டில். 30 ஆண்டுகள் பிரேசிலின் அடையாளமாக இருந்த இயேசு சிலை, தன் பெருமையை 21 வயது இளைஞனிடம் இழக்கிறது. அவனுக்கு 17 வயது இருக்கும்போதே அதன் பெருமையைப் பிடுங்கிவிட்டான். உண்மையில் அந்த அடையாளத்தை பீலே பறித்ததில் ஆச்சர்யமில்லை. காரணம், `பீலே' என்ற வார்த்தை பைபிளிலேயே இருக்கிறது. ஹீப்ரு மொழியில் அதற்கு அர்த்தம் - மிராக்கிள்! கபோய்ரா தற்காப்புக்கலையும் பிரேசிலின் பாரம்பர்ய நடனமும் இணைந்த `ஜிங்கா' (Ginga) எனப்படும் பிரேசிலின் வாழ்வியலை கால்பந்துக்குள் புகுத்தி, அற்புதங்கள் நிகழ்த்தியவராயிற்றே. அவரை அடையாளமாகக்கொண்டிருப்பது பிரேசிலுக்கு மிகப்பெரிய பெருமை. அந்த இயேசு சிலை உள்பட!

இப்படிப் புகழ்ந்துதள்ளும் அளவுக்கு அவரிடம் அப்படி என்னதான் இருக்கு? அவர் அப்படி என்ன மிராக்கிள் செய்தார்? இந்த வீடியோவைப் பாருங்க, அப்புறம் continue பண்ணலாம்...

‘என்னடா... கேமிங் வீடியோவா இருக்கே' என நினைத்துவிட வேண்டாம். இது உண்மையில் நடந்த ஒரு போட்டி. பிரேசிலின் யுவண்டஸ் (பிரேசிலிலும் ஒரு யுவண்டஸ் அணி இருக்கிறது) அணியும் சாண்டோஸ் அணியும் மோதிய போட்டி அது. ரைட் விங்கிலிருந்து பெற்ற பாஸை, மூன்று டிஃபண்டர்களை `சிப்'களால் ஏமாற்றி, கோல்கீப்பரையும்கூட அதைப்போலவே ஏமாற்றி அற்புதமான `ஹெட்டர்' மூலம் கோல் அடித்திருப்பார் பீலே. இந்தப் போட்டியின் வீடியோ பதிவு ஏதும் இல்லாததால், பீலேவுக்காக computer simulation தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது அந்த கோலின் மாதிரி. எவரும் நினைத்துகூடப்பார்க்க முடியாத இந்த அசாத்திய கோலை அடித்தபோது பீலேவுக்கு வயது 18.

பிரேசில் கவிஞர் கார்லோஸ் ட்ரம்மோண்ட் ஒருமுறை கூறினார், “பீலேவைப்போல் 1,000 கோல்கள் அடிப்பது அற்புதமல்ல; அவரைப்போலவே ஒரேயொரு கோல் அடித்தாலும் அதுவே அற்புதம். அது அசாத்தியம்" என்று அவர் திறமையைப் புகழ்ந்தார். அந்தத் திறமைதான் 20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கால்பந்து வீரர் விருதையும், ஒலிம்பிக் கமிட்டி வழங்கிய நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதையும் அவருக்குப் பரிசளித்தது.

கால்பந்து

வேகம், பலம், திறமை, க்ரியேடிவிட்டி, ஸ்டேமினா, உடல்வலிமை அனைத்தும்கொண்டிருந்த ஓர் அற்புத வீரர், பீலே. அவை அனைத்துமே `டாப் க்ளாஸி'ல் அமையப்பெற்ற ஒரு வீரனை, கால்பந்து உலகம் அப்போதுதான் கண்டிருந்தது. பாஸ் செய்யும்போது வெளிப்படும் அவரது anticipation, எதிரணி வீரர்களை ஒரு நொடி உறையவைத்துவிடும். இரண்டு கால்களாலும் புயல் வேகத்தில் பந்தை உதைப்பதில் வல்லவர். கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரமே இருந்தபோதிலும் `ஏரியல் பால்'களைக் கையாள்வதிலும் தலைசிறந்தவராகத் திகழ்ந்தார். `ஃப்ரீ கிக்', பெனால்டி ஷாட்களில் இவரது துள்ளியம் பிரமிக்கவைக்கக்கூடியது. ஆனால், பெனால்டி ஷாட்கள் எடுப்பதை பெரும்பாலும் தவிர்த்துவந்தார் பீலே. ``பெனால்டி மூலம் கோல் அடிப்பது கோழைத்தனம்" என்பார். அவரைப் பொறுத்தவரை மூன்று, நான்கு டிஃபண்டர்களைச் சின்னாபின்னமாக்கி, கோல்கீப்பரை அலறவைத்து கோலடிக்க வேண்டும். இன்று ரொனால்டின்ஹோ, மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்றோர் களத்தில் செய்யும் சாகச மூவ்களை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே செய்துகாட்டிய வித்தைக்காரன். முன்களத்தில் எந்த இடத்திலும் விளையாடக்கூடியவர். எந்த இடத்தில் ஆடினாலும், ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். நடுக்களத்தில் பிளேமேக்கராக ஆடிய காலங்களில் பல்வேறு மாயவித்தைகளை கால்பந்துக்கு அறிமுகம் செய்துவைத்தவர். அதனால்தான் அவரை `கால்பந்துப் பிதாமகன்' என அழைக்காமல், `கால்பந்துக் கடவுள்' என அழைக்கிறார்கள்.

அதேசமயம் எதற்காகவும் ஏன் கால்பந்துக்காகவும்கூட தன்மானத்தை இழக்காதவர் பீலே. சிறுவனாக இருந்த சமயம், வாஸ்கோடகாமா அணியின் புகழ்பெற்ற கோல்கீப்பர் `பைலே'வின் (Bile) பெயரை `பீலே' என இவர் தவறாக உச்சரிக்க, கலாய்ப்பதற்காக இவரை `பீலே' என்றே அழைக்கத் தொடங்கினார்கள் நண்பர்கள். கடைசியில் அதுவே அவரின் பெயராகவும் ஆனது.  சிறுவயதில் பீலே அதை வெறுத்திருக்கிறார். தன்னை அப்படிக் கூப்பிட்ட சகமாணவனை அடித்து இரண்டு நாள்கள் சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். இது சிறுவர்களின் சண்டை என நினைக்கலாம். ஆனால், அதுவே அவருக்குள் கடைசிவரை இருந்த ஆட்டிட்யூட்.

1966-ம் ஆண்டு உலகக்கோப்பையில், பீலேவைத் தடுக்க, பல அணிகளும் அவரை டார்கெட் செய்தன. பல்கேரியாவுடனான முதல் போட்டியில் காயம் ஏற்பட்டு வெளியேறியவர் அடுத்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. கடைசி லீக் போட்டி. வென்றால்தான் அடுத்த சுற்று. காயத்தோடு களம் கண்டவரை, ஆட்டத்தின்போது போர்ச்சுகல் வீரர்கள் கண்மூடித்தனமாகத் தாக்க, கோபத்தில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதே இல்லை என முடிவெடுத்தார் பீலே. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு `1970-ம் ஆண்டு மெக்ஸிகோ உலக்கோப்பை'யைக் கருத்தில்கொண்டு, நிர்வாகம் அழைத்ததால் அணிக்குத் திரும்பினார். தன் கோபத்தைக் களத்தில் காட்டினார். சிறந்த வீரருக்கான `கோல்டன் பால்' விருதோடு தன் தேசத்துக்கு மூன்றாவது உலகக்கோப்பையை வென்று தந்தார். அந்த ஃபைனலில் டிஃபண்டர் கார்லோஸ் அல்பார்டோ கோல் அடிக்க, பீலே கொடுத்த பாஸ் ஏலியன் லெவல்.

மெர்சலானது மெக்ஸிகோ!

15 வயதிலேயே சாண்டோஸ் க்ளப்பின் சீனியர் அணியில் இடம்பிடித்து, கால்பந்து உலகில் ஓர் அற்புத என்ட்ரி கொடுத்து, 19 வருடங்கள் பிரேசிலில் தன் கால்பந்து வித்தைகளைக் காட்டிவிட்டு ஓய்வுபெற்றார் பீலே. பிரேசில் அணிக்காக மொத்தம் 95 கோல்களும், சாண்டோஸ் அணிக்காக 1,091 கோல்களும் அடித்து, யாராலும் நினைத்துகூடப்பார்க்க முடியாத சாதனைகளை அநாயசமாகச் செய்து முடித்து ஓய்வுபெற்றிருந்தது அந்த கோல் மெஷின்! ஆனால், கால்பந்து உலகத்தால் பீலேவின் ஓய்வை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் காஸ்மோஸ் அணியிடமிருந்து வந்தது அழைப்பு. ரியல் மாட்ரிட் அணியையே உதாசீனப்படுத்தியவர். கால்பந்து பிரபலமே அடையாத அமெரிக்காவில், பெரிய அளவில் ரசிகர்கள் இல்லாத இடத்தில் விளையாடிவிடுவாரா? மீண்டும் ஆச்சர்யம். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பீலே. ஏன்? கால்பந்து வெறுமனே ஐரோப்பாவும் தென் அமெரிக்காவும் மட்டும் சுவாசிக்கும் விளையாட்டாக இருந்திடக் கூடாது என்பதில் அவர் தீர்க்கமாக இருந்தார். உலகெங்கும் கால்பந்து பிரபலமடைய வேண்டும். ஆப்பிரிக்க, ஆசியக் கண்டங்களிலும்கூட தெருக்களில் கால்பந்து உதைபட வேண்டும் என விரும்பினார். `கால்பந்துக் கடவுளே தங்கள் நாட்டில் விளையாடுகிறார்' என்றால் யார்தான் மைதானத்துக்கு வர மாட்டார்கள். அமெரிக்காவின் கால்பந்து அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தார் பீலே.

டொமினிக் குடியரசில் கால்பந்தை மேம்படுத்த, அங்கு சில நட்புறவிலான போட்டிகளில் பங்கேற்றார். அதுமட்டுமின்றி, தான் நேசித்த விளையாட்டைப் பிரபலப்படுத்த பல்வேறு இடங்களில் காட்சிப் போட்டிகளில் விளையாடினார். ஆனால், எந்த மண்ணிலும் காசுக்காக இவர் கால்பந்து விளையாடியதில்லை. அமெரிக்காவில் நிகழ்ந்த கால்பந்து மாற்றத்தை உலகம் கண்கூடாகப் பார்த்தது. ஒருகட்டத்தில் அந்த விளையாட்டைப் பார்க்க ரசிகர்களே இல்லை என்ற நிலையில் இருந்த நாட்டில், உலகக்கோப்பை எனும் மாபெரும் தொடர் நடைபெற்றது. அதுவும் வெற்றிகரமாக. சராசரியாக ஒரு போட்டியைக் காணச்சென்ற ரசிகர்களின் எண்ணிக்கையில், அமெரிக்காவில் நடந்த 1994-ம் ஆண்டு உலகக்கோப்பையை இன்னும் எந்தத் தொடரும் மிஞ்சவில்லை. இந்த மாபெரும் மாற்றம் ஏற்பட, `கால்பந்துக் கடவுள்' அந்த மண்ணில் கால் வைத்ததுவே காரணமாக அமைந்தது. கால்பந்துக்கு `The Beautiful Game' என்ற அழகான அங்கீகாரம் கிடைக்க மிகப்பெரிய காரணம், பீலேதான்.

பீலே

1982-ம் ஆண்டில் அமெரிக்கா உலகக்கோப்பை நடத்த எடுக்கும் முயற்சிகளை முன்வைப்பது பற்றிய ஒரு கூட்டம் வெள்ளை மாளிகையில் நடந்தது. பேசத் தொடங்குகிறார் அமெரிக்க அதிபர் ரீகன். “நான் ரொனால்டு ரீகன். அமெரிக்காவின் அதிபர். என்னுடன் வந்திருக்கும் இந்த ஜென்டில்மேனுக்கு அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். உலகமே கொண்டாடும் கால்பந்து வீரர் ஆயிற்றே இவர்" என்று பீலேவைக் கைகாட்டினார் அமெரிக்க அதிபர். அந்த மாமனிதனை அந்த இடத்தில் கொண்டிருந்தது அவருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கே பெருமையாக இருந்தது. ரீகன் மட்டுமல்ல, ஜெரால்டு ஃபோர்டு, ரிச்சர்ட் நிக்ஸன் எனப் பல்வேறு அமெரிக்க அதிபர்களும் கால்பந்துக் கடவுளுடன் உரையாட விரும்பி, உலகையே வசியப்படுத்திய அந்தக் கால்களை வெள்ளை மாளிகையின் சிவப்புக் கம்பளத்தில் நடக்கவைத்தனர்.

அமெரிக்க ஜனாதிபதிகளே வியந்த இந்த மாமனிதன், ஒருகாலத்தில் ஷூ பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார். இவரின் தந்தைகூட சுமாரான கால்பந்தாட்ட வீரர்தான். ஆனால், அவரது கால்பந்து மூன்று குழந்தைகளுக்குச் சோறிடத் தவறவே, தன் மகனை நன்கு படிக்கவைக்க விரும்பினார் அவரது தாய். பீலேவுக்கு வைக்கப்பட்டிருந்த பெயர் `எடிசன்'. கல்வியில் சிறந்து ஏழ்மையை வெல்ல வேண்டும் என்றுதான் அவனது தாய் விரும்பினார். ஆனால், எடிசனுக்குக் கால்பந்து தந்த மகிழ்ச்சியில், பசி தந்த வலி தெரியவில்லை. அவனும் பைலட் ஆகவேண்டும் என்ற கனவோடுதான் இருந்தான். தன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு விமானம் விழுந்து நொறுங்கி அதன் பைலட் இறக்கவே, விமானத்தின் இறக்கைகளோடு, அவனது கனவையும் அங்கேயே எரித்துவிட்டான். அவனது மூளையில் மிச்சமிருந்த ஒரே வார்த்தை `கால்பந்து'. விளையாட பந்து வேண்டும். ஆனால், காசு இல்லை. சாக்கு, ஆடைகள், பஞ்சு போன்றவற்றைக்கொண்டு கயிற்றாலும் கம்பியாலும் கட்டி பந்து செய்து விளையாடினான். மரங்களில் காய்த்துத் தொங்கிய மாம்பழங்களைப் பந்தாக நினைத்து, உதைத்து, தன்னைத்தானே மெறுகேற்றிக்கொண்டிருந்தான். அவன் அம்மா கண்டித்தபோதும், குடும்பநிலை கண்டு கலங்கியபோதும், அவன் தந்தை கண்ணீர் சிந்தியபோதும்கூட அவனுள் இருந்த நம்பிக்கை அப்படியே இருந்தது. மொசைக் தரைகளை சோப்புப் போட்டுக் கழுவியபோதும், புல்தரையில் கால்பந்தை உதைப்பதுபோல் கனவுகண்டான். அந்தக் கனவுகள்தான், இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில், `பீலே போல ஆக வேண்டும்' என்ற கனவுகளின் அஸ்திவாரம்.

அமெரிக்க ஆர்டிஸ்ட் ஆண்டி வரோல் ஒருமுறை கூறினார், “புகழ் என்பது, 15 நிமிடம் நிலைத்திருக்கக்கூடியது என்ற என் கணிப்பைப் பொய்யாக்கியவர்களுள் பீலே முதன்மையானவர். அவரது புகழ் 15 நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும்" என்றார். உண்மைதானே, கால்பந்து எனும் விளையாட்டு இருக்கும்வரை, அதன் கடவுளை அனைவரும் வழிபட்டுதானே ஆகவேண்டும்.

1970-ம் ஆண்டு மெக்ஸிகோவில் உலகக்கோப்பை நடந்துகொண்டிருந்தபோது, வர்ணனையாளர்கள் மால்கம் ஆலிசன், பேட் க்ரெராண்ட் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பிரசித்திபெற்ற உரையாடல் இது...

மால்கம் ஆலிசன்  : “How do you spell Pele?”
பேட் க்ரெராண்ட் : “Easy: G-O-D.”

கால்பந்தின் கடவுளுக்கு, இன்று பிறந்த நாள்.

வாழ்த்துகள்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் (அக்.23- 1911)

1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்க ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1956 - ஹங்கேரியப் புரட்சி, 1956: ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர் 4-ல் நசுக்கப்பட்டது.

 
முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்ட நாள் (அக்.23- 1911)
 
1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்க ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1956 - ஹங்கேரியப் புரட்சி, 1956: ஹங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். ஹங்கேரியப் புரட்சி நவம்பர் 4-ல் நசுக்கப்பட்டது. * 1958 - நோவா ஸ்கோசியாவில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 174 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 100 பேர் மட்டும் நவம்பர் 1 வரையில் மீட்கப்பட்டனர். * 1973 - சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெற்ற யோம் கிப்பூர் போர் ஐநாவின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்தது.

* 1983 - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 241 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் பிரெஞ்சு இராணுவத்தினர் 58 பேர் கொல்லப்பட்டனர். * 1989- கம்யூனிச ஹங்கேரியன் மக்கள் குடியரசு, ஹங்கேரியன் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது. * 1991 - ஈழப்போர்: தமிழீழப் போரில் அனாதைகளான பெண் பிள்ளைகளின் மறுவாழ்வுக்காக செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. * 1998 - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனியாகு மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்துக்கும் இடையில் அமைதிக்காக நிலம் என்ற உடன்பாடு எட்டப்பட்டது. 2001 - வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரிஷ் குடியரசு ராணுவம் ஆயுதக் களைவில் ஈடுபட்டது. * 2001 - அப்பிள் நிறுவனத்தின் ஐப்பேர்டு வெளியிடப்பட்டது.

* 2001 - காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைமுயற்சி முறியடிக்கப்பட்டது. 4 தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். * 2002 - மொஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் செச்னிய தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். * 2004 - பிரேசில் VSB-30 என்ற தனது முதலாவது விண்கப்பலை விண்ணுக்கு ஏவியது.

* 2004 - வடக்கு ஜப்பானில் நிலநடுக்கம் தாக்கியதில் 35 பேர் கொல்லப்பட்டு 2,200 பேர் படுகாயமடைந்தனர். * 2006 - இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

உயிர்பெறும் டைனோசர்கள் உருவாக்குபவர்கள் யார்?

அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் பெருமளவில் அழிந்து போயின. ஆனால், பெலாரஸ் நகரங்களின் வீதிகளுக்கு அவை மீண்டும் திரும்பியுள்ளன, ஆனால் நிஜமாக அல்ல.

Link to comment
Share on other sites

நெதர்லாந்தில் உலகின் முதல் 3D பாலம் திறந்து வைக்கப்பட்டது (Photos)

 


நெதர்லாந்தில் உலகின் முதல் 3D பாலம் திறந்து வைக்கப்பட்டது (Photos)
 

நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு, ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

3D பிரிண்டிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திரக்கைகள், மருத்துவப் பயன்பாடுகளுக்கான உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லொறிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.

கொன்கிரீட் பாலத்தைப் போலவே இதன் வாழ்நாள் அதிகம்.

இந்த பாலத்தை உருவாக்க 3 மாதங்கள் பிடித்துள்ளது.

சாதாரண பாலத்தை உருவாக்கும் செலவில் பாதிதான் இதற்கு செலவானதாகக் கூறப்பட்டுள்ளது.

 

23

4

http://newsfirst.lk

Link to comment
Share on other sites

கேரளாவில் ஒருவர் மீன் வாங்க தன் வாகனத்தில் வந்திருக்கிறார்.... அப்படி என்ன வாகனம் அது ??நீங்களே பாருங்கள்

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 24

 

1260 : எகிப்­திய சுல்தான் சாயிஃப் ஆட்-டின் குத்தூஸ், பாய்பேர்ஸ் என்­ப­வரால் கொலை செய்­யப்­பட்டார். பாய்பேர்ஸ் நாட்டின் சுல்தான் ஆனார்.

varalaru-gamini-240x400.jpg1795 : போலந்து, லித்­து­வே­னியன் கூட்­ட­மைப்பு முற்­றாகக் கலைக்­கப்­பட்டு ஆஸ்­தி­ரியா, பிரஷ்யா, மற்றும் ரஷ்யா ஆகி­யன தமக்குள் பங்­கிட்டுக் கொண்­டன.

1801 : தமி­ழ­கத்தில் மருது பாண்­டிய சகோ­த­ரர்­களும், அவர்கள் குடும்­பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்­பட்ட மன்னர் குடும்­பத்­தாரும் வெள்­ளை­யர்­களால் தூக்­கி­லி­டப்­பட்­டனர்.

1806 : பிரெஞ்சுப் படைகள் பேர்லின் நகரை அடைந்­தன.

1851 : யுரேனஸ் கோளின் சந்­தி­ரன்­க­ளான ஏரியல், உம்­பி­ரியல் ஆகி­யன வில்­லியம் லாசெல் என்­ப­வரால் கண்­ட­றி­யப்­பட்­டது.

1857 : தற்­போதும் இயங்கும் உலகின் மிகப் பழை­மை­யான கால்­பந்­தாட்ட அணி­யான ஷெஃபீல்ட் கால்­பந்­தாட்ட அணி இங்­கி­லாந்தில் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1917 : ரஷ்­யாவில் போல்ஷ்விக் செங்­கா­வ­லர்கள் அரச கட்­ட­டங்­களை கைப்­பற்ற ஆரம்­பித்­தனர்.

1930 : பிரேஸிலில் இரா­ணுவப் புரட்சி இடம்­பெற்­றது. ஜனா­தி­பதி லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா பத­வியில் இருந்து அகற்­றப்­பட்டார்.

1935 : எதி­யோப்­பி­யாவை இத்­தாலி கைப்­பற்­றி­யது.

1945 : ஐக்­கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்­டது.

varalaru-1.jpg1960 : சோவியத் ஒன்­றி­யத்தின் பாய்க்­கனூர் விண்­த­ளத்தில் ஆர்-16 ஏவு­கணை வெடித்­ததில் 100 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1964 : வடக்கு ரொடீ­சியா ஐக்­கிய இராச்­சி­யத்­திடம் இருந்து சுதந்­திரம் பெற்று ஸாம்­பியா என்னும் பெயரைப் பெற்­றது.

1973 : இஸ்­ரே­லுக்கும் அரபு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான யோம் கிப்பூர் போர் முடி­வுக்கு வந்­தது.

1994 : கொழும்பில் தேர்தல் கூட்­டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் காமினி திசா­நா­யக்கா, ஒஸ்வின் அபே குண­சே­கர உட்­பட 52 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2003 : கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பய­ணத்தை மேற்­கொண்­டது.

2007 : சந்­தி­ரனின் சுற்­றுப்பா­தையில் நிலவைச் சுற்­றி­வரும் முதல் சீன ஆளற்ற விண்கலமான ‘சாங்-1’ தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

2008 : உலகில் பல நாடுகளின் பங்குச் சந்தைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

http://metronews.lk

Link to comment
Share on other sites

கலம்கரி - ஒரு வண்ணப் பயணம்!

யாழ் ஸ்ரீதேவி

 

கலம்கரி... ஆந்திராவின் பழைமையான கலை வடிவம். முகலாயர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களின் ஆதரவில் வளர்ந்த அழகு ஆர்ட்!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டணம் நகரின் அருகில் உள்ள பெத்தென்னா... கலம்கரியின் பிறப்பிடம். குர்தா தொடங்கி, பிளவுஸ், அனார்கலி, லெஹங்கா, துப்பட்டா, கைப்பை என அனைத்திலும் ஃபேஷன் மெட்டீரியலாகியிருக்கிறது கலம்கரி.

118p1.jpg

கடந்த ஐந்தாண்டுகளாக கலம்கரிக்குப் புத்துயிரூட்ட உழைத்து வருபவர், ஹைதராபாத் தில் வசிக்கும் சங்கீதா. இந்திய அளவில் ஆண்டுக்குப் பத்து இடங்களில் கலம்கரி திருவிழா நடத்திவரும் சங்கீதா, இதன் பழைமை சிதையாமல் புதுமைப் படுத்திவரும் டிசைனர். ஆன் லைனில் இவருக்கு (facebook.com/SangeethaKalamkari) மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்! 118p2.jpg

``நான் மதுரைப் பொண்ணு. திருமணத்துக்குப் பிறகு, இருபது வருஷங்களா ஹைதராபாத்வாசி'' என்று சிநேகமாகப் பேசுகிறார் சங்கீதா. ``டிஸ்லெக்சியா, ஆட்டிசம் எனக் கற்றலில் குறைபாடுடைய  குழந்தைகளுக்கு ‘ஸ்மைல்ஸ்’ என்ற பெயரில் பத்து வருஷங்களா ஸ்பெஷல் ஸ்கூல் நடத்திட்டு வர்றேன். அஞ்சு வருஷங்களுக்கு முன்னால, ஒரு பிசினஸ் செய்ய லாமேனு யோசிச்சு, ‘லூம்ஸ்’ என்ற பெயர்ல ஒரு சின்ன ஜவுளிக்கடை ஆரம்பிச்சேன். அதுல தனித்த அடையாளம் பெற என்ன செய்ய லாம்னு யோசிச்சப்போ, கலம்கரி வேலைப்பாடு நினைவுக்கு வந்துச்சு’’ என்பவர், அதற்கான கிரவுண்ட் வொர்க்கில் இறங்கியிருக்கிறார்.

118p3.jpg

``காளஹஸ்திக்குப் போய் கலம்கரி ஓவியங்கள் துணிகளில் உருவாகும் விதத்தைப் படிப்படியா தெரிஞ்சுக் கிட்டேன். இயற்கை முறை, கடினமான மனித உழைப்பு, நுணுக்கமான வேலைப்பாடுகள்னு தயாரானாலும், காட்டன் துணியில வரையப்படுறதால அது அதிக பிரபலம் ஆகலைனு புரிஞ்சுக்கிட்டேன். ஒரு ப்யூர் கலம்கரி வொர்க் புடவை 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும். ஆனா, காட்டன்ல அந்த விலைக்குரிய ரிச்னஸ் தெரியாது. அதுவே, கலம்கரி ஓவியங்களை சில்க், சந்தேரி என வேற ஃபேப்ரிக்ல போடும்போது கிராண்ட் லுக் கிடைக்கும்னு முயற்சி செய்தேன்.

118p4.jpg

கலம்கரி கலைஞர்கள்கிட்ட என் ஐடியாவைச் சொல்லி, ஆர்ட்டிஸ்ட் குழுவை உருவாக்கினேன். வழக்கமான கலம்கரியில சிவப்பு, பச்சை, மெஜந்தானு  இயற்கையில் கிடைக்கிற வண்ணங்கள் மட்டுமே இருக்கும். அவற்றை இன்னும் பளிச்னு காட்ட, பிக்மென்ட் கலர்ஸை அவற்றுடன் சேர்த்தேன். ஒரு வைப்ரன்ட் லுக் கிடைச்சது. இருந்தாலும், புடவை அல்லது சல்வார் முழுக்க கலம்கரியா இருந்தா அவ்வளவா ஈர்க்காதுனு, கலம்கரி பார்டர், கலம்கரி அப்ளிக்னு அங்கங்க பேட்ச் வொர்க் செய்யலாம்னு டிசைன் செய்தேன்’’ என்பவருக்கு, முதல் சில படிகள் வழுக்கவே செய்திருக்கின்றன.

118p5.jpg

``இவ்வளவு மெனக்கெட்டும், ஆரம்ப காலத்துல பெரிய வரவேற்பு கிடைக்கலை. மனம் தளராம குர்தா, அனார்கலினு அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்கினேன். ஆடைக் கண்காட்சிகளில் கலந்துக்கிட்டப்போ, ஜிகுஜிகு உடைகளுக்கு மத்தியில் கலம்கரியை மக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தாங்க... வாங்கலை. அப்போதான், கலம்கரி தனித்துவமானது, அதுக்குத் தனியா கண்காட்சி நடத்தணும்னு கத்துக்கிட்டு களத்தில் இறங்கினேன்.

118p6.jpg

நான் டிசைன் செய்த புடவை, சல்வாருக்கு நானே மாடலா மாறினேன். என் முகநூல் பக்கத்தில் என் கலம்கரி முயற்சிகளை அப்டேட் செய்துட்டே இருந்தேன். ஆன்லைன்ல கலம்கரியைத் தேடுறவங்க என்னோட புராடக்டை வாங்க ஆரம்பிச்சாங்க’’ என்பவருக்கு, அன்று முதல் வெற்றிதான்!

118p7.jpg

``காளகஸ்தியிலுள்ள 50 கலைஞர்களை ஒருங்கிணைத்து எனது டிசைன்களை உருவாக்குறேன். அதுல பெரும்பாலானவங்க பெண்கள். என்னோட புதிய முயற்சிகள் அவங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கு. பழைமைக்கு உயிர்கொடுக்கிறதுதான்  ஃபேஷன். அதை நம்பினதுனாலதான் கலம்கரி எனக்குப் புகழ் கொடுத்திருக்கு’’ என்கிறார் சங்கீதா நன்றியுடன்!


கதை சொல்ல உருவான கலை!

நாயக்க மன்னர்களின் காலத்தில் இந்து சமயப் புராணக் கதைகளைப் பாடகர்களும் இசைக் கலைஞர்களும் ஊர் ஊராகச் சென்று சொல்லி வந்தனர். அப்போது அந்தக் கதைகளை பெரிய சீலைகளில் ஓவியக் காட்சிகளாக வரைந்து எடுத்துச்செல்லத் தொடங்கினர். முதல் கலம்கரி ஓவியம் அதுதான். நாயக்கர் காலத்தில் இக்கலை தஞ்சை வரை பரவியது. கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சிக்கல் நாயக்கன் பேட்டையில் இன்றும் கலம்கரி ஓவியங்கள் வரையப்படுகின்றன. இங்கு நம் மண்ணின் மரபுகளுடன் ‘தஞ்சாவூர் கலம்கரி’ என்ற புதிய பாணி பின்பற்றப்படுகிறது.


தாவரச் சாயங்களே அசல் கலம்கரி!

அடிப்படையில் கலம்கரி என்பது, தாவரச் சாயங்கள்கொண்டு பருத்தித் துணிகளில் கைகளால் அழகிய ஓவியங்களாகத் தீட்டப்படுவது. இன்று கலம்கரியை பல ரகத் துணிகளிலும், செயற்கைச் சாயங்களைக் கொண்டும், மெஷின் பிரின்ட்களாகவும் உருவாக்குகின்றனர். என்றாலும், இயற்கைச் சாயம் கொண்டு பாரம்பர்ய முறையில் தயாரிக்கப்படும் கலம்கரிக்கு ஒரு ஸ்பெஷல் மார்க்கெட் இருக்கிறது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

2665.pngஒரு பெண் ஒரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பது உங்களின் அன்பு மட்டுமே. உங்களின் அன்பின் வெளிப்பாடு ஒன்றே அவர்களுக்கு போதும். அன்பின் வெளிப்பாடு எதுவாக இருந்தாலும் சரி. ஒரு சிலரைப் போல் நீங்கள் காதல் வசனங்கள் பேசத் தேவையில்லை, கண்ணும் கண்ணும் பல மணி நேரங்கள் கவி பாடத் தேவையில்லை. உங்களின் அன்பின் வெளிப்பாடான அக்கறையை மட்டும் காட்டுங்கள் போதும்.

2665.pngஅவள் என்ன செய்கிறாள் என்பதை நீங்கள் கேட்டு தெரியாவிட்டாலும் அவள் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும்போது கேளுங்கள். நீங்கள் தூரமாக இருந்தாலும் அவளின் அருகில் இருக்கும் உணர்வை அவளுக்குக் கொடுங்கள். அதுதான் அன்பு.

2665.pngநீங்கள் உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தும் நபராக இலாவிட்டாலும் உங்களின் பார்வை மட்டுமே அவள் மீது திருப்புங்கள். அதன் அர்த்தம் புரிந்தவளாகத்தான் உங்களை விரும்பும் பெண் இருப்பாள்.

2665.pngதான் விரும்பும் ஒருத்தரைப் பற்றி ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் நினைக்கின்றனர். இதனால் தான் உங்களிடம் பேசுவதையும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர். இந்த ஆர்வம் சில ஆண்களுக்கு அநாவசியமாகவும் எரிச்சலூட்டும் ஒன்றாகவும் இருக்கும். முக்கியமான விசயமாக இருந்தால் நானே சொல்ல மாட்டேனா என்பது ஆண்களின் எண்ணம்.

2665.pngஆனால் உங்களைப் பற்றி அக்கறை படும் பெண்ணுக்கு உங்கள் தொடர்பான அனைத்து விசயங்களும் முக்கியமானதாகத்தான் இருக்கும். சில சமயங்களை உங்களைப் பற்றி அவளிடம் பகிர்ந்துக் கொள்வது உங்களை பலவீனமானவராக உங்களை காட்டும் என எண்ணாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யாமல் இருப்பதுதான் அவளை பலவீனப்படுத்தும். என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் அவள் தவிக்கும் போதுதான் அவள் அதிகம் கஷடப்படுகிறாள்.

2665.pngஉங்களின் சுக துக்கங்கங்களில் அவளால் எந்தவொரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியாவிட்டாலும் உங்களின் எண்ணங்களை அவளுடம் பரிமாறிக்கொண்டாலே போதும். எந்த நிலையிலும் தன்னுடைய நிழல் தான் விரும்பும் ஆணிற்கு நிழல் தரும் ஒன்றாக இருக்கிறது என்ற திருப்தியே பெண்களுக்கு போதும்.

2665.pngஇதை செய்ய உங்களுக்கு தேவைப்படுவது ஆகக்குறைவு 5 நிமிடங்கள் மட்டுமே. இதை நீங்கள் செய்யாவிட்டால் அவர்கள் உங்களை நினைத்து ஏங்கும் காலம் என்பது அவர்களுக்கு தேவைப்படும் அந்த 5 நிமிடத்தை நீங்கள் அவர்களுக்காக ஒதுக்கும் வரை.

2665.pngநீங்கள் விரும்பும் பெண்ணிடம் நீங்கள் அவரைப் பற்றி அதிகம் கேட்கத் தேவையில்லை. ஏனென்றால் ஒரு பெண் ஏதாவது இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால் தான் அதிகம் நேசிக்கும் ஒருத்தரிடம் மட்டுமே தன் நிலையைப் பற்றி கூறுவாள். அது போன்ற சமயத்தில் அவள் அழைத்து பேசும் முதல் நபராக நீங்கள்தான் இருப்பீர்கள் என்று அவளுக்கும் தெரியும், உங்களுக்குத் தெரியும். இதனால்தான் சில ஆண்கள் மணிக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைத்து பேசுவதில்லை. என்ன செய்கிறாய் என குறுஞ்செய்தி அனுப்புவதில்லை.

2665.pngஆனால் பெண்களின் மனநிலை இது அல்ல. அவள் உங்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் மேல் அக்கறை கொண்டு அவளை உங்களில் ஒருத்தியாக நடத்துங்கள். நீங்கள் நினைப்பதை அவளுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அவளை நலம் விசாரிக்க யாரும் இல்லாவிட்டாலும் அவள் நலம் விசாரிக்க நீங்கள் ஒருத்தர் மட்டுமே இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏதும் பேசாமல் அவளை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டாலே தன்னுடைய கஷ்டங்களை மறந்தவளாக இருப்பாள் அவள். காதல் மிக சுலபமான ஒன்று. அவள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது உங்களின் அன்பு மட்டுமே

உலகத்தமிழ் மங்கையர் மலர்2665.png

Bild könnte enthalten: eine oder mehrere Personen
Link to comment
Share on other sites

மேரியோ மீசைக்கும் பெயருக்கும் பின்னால் இருக்கும் வரலாறு தெரியுமா? #Mario

 

"காப்பாற்ற முடியுமா?"

"காப்பாற்ற முடியுமா?"

 

அமைதி. சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவரிடமிருந்து பதில் வருகிறது.

"நிச்சயமாக முடியும் சார்."

"மியமோட்டோ... இந்த நிறுவனம் தன்னுடைய நூற்றாண்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அதைக் கொண்டாடும் நிலையில் நாம் இல்லை. மிக மோசமான நஷ்டத்தையும், தொடர் தோல்விகளையும் சந்தித்து வருகிறோம். இதுதான் நமக்கான கடைசி வாய்ப்பு. அந்த வாய்ப்பு உங்கள் கையில் கொடுக்கப்படுகிறது. இதில் நாம் எப்படியாவது வென்றே ஆக வேண்டும்."

"நிச்சயமாக சார்..."

தன் அறைக்குத் திரும்புகிறார் ஷிகெரு மியமோட்டோ (Shigeru Miyamoto). அன்று அவர் வீட்டிற்குப் போகவில்லை. நிறைய யோசிக்கிறார். பேப்பரை எடுத்து எதை, எதையோ வரைந்துகொண்டேயிருக்கிறார். மறுநாள் மீட்டிங்கில் இப்படிச் சொல்கிறார்...

"கேமுக்கான கான்செப்ட் நம்மிடம் உள்ளது. அந்தக் கேரக்டரைத்தான் இப்போது நாம் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் 'பாப்பாய்' கார்ட்டூனின் பாப்பாயைக் கொண்டு கேம் உருவாக்கலாம். அது நிச்சயம் வெற்றி பெறும்.”

எல்லோருக்கும் பெரிய மகிழ்ச்சி. உடனடியாக வேலைகள் பரபரக்கத் தொடங்குகின்றன. பெரும் வெற்றிக்கான கனவில் மிதக்கிறார்கள். ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

மேரியோ வீடியோகேம் - பின்கதை

“மியமோட்டோ... பாப்பாயைக் கொண்டு கேம் உருவாக்குவதற்கான உரிமை நமக்குக் கிடைக்கவில்லை. வேறு ஏதாவது வழியை யோசியுங்கள்.”

மீண்டும் அதே அறைக்குத் திரும்புகிறார். இந்த முறை இரண்டு நாள்களைக் கடந்தும் வீட்டிற்குப் போகவில்லை. கடந்த முறையைக் காட்டிலும், இந்த முறை அதிகளவிலான பேப்பர்கள் கிழிக்கப்பட்டன. நிறைய வரைந்தார். இறுதியாக அந்த உருவத்தை வரைந்து முடித்தார். அந்த உருவம் நிறுவனத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், அவர் நம்பினார். இது ஜெயிக்கும் என்று அவர் நம்பினார். கட்டுமஸ்தான உடல் இல்லை, உயரம் இல்லை, கவர்ச்சியான உடல்வாகு இல்லை... இது எதுவும் இல்லாத இந்தக் கதாபாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

சரி... இதற்கு என்ன பெயர் வைக்கலாம்?

வீடியோ கேம் ஹீரோ என்பதால் இவன் பெயர்  “மிஸ்டர். வீடியோ”. ஜூலை 9, 1981... மிஸ்டர். வீடியோ நாயகனாக இருக்கும் அந்த "டாங்கி காங்" (Donkey Kong) எனும் வீடியோ கேம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம்ம ஹீரோ மிஸ்டர். வீடியோ ஒரு கொரில்லா குரங்கை வளர்ப்பார். அதை ஏகத்துக்கும் இவர் டார்ச்சர் செய்ய, ஒரு கட்டத்தில் அது கடுப்பாகி ஹீரோவின் காதலியைக் கடத்திக்கொண்டுப் போய்விடும். பலகட்ட பிரச்னைகளைக் கடந்து, தன் காதலியை அதனிடமிருந்து மீட்பது இந்த வீடியோ கேமின் கதை. அதிரி புதிரி ஹிட் இல்லையென்றாலும், ஜப்பானில் அளவான ஹிட்டடித்தது இந்த கேம். இந்த கேமில் ஹீரோவால் ஓரிடத்தில் நிற்க முடியாது. குதிக்க முடியும் அல்லது நடக்க முடியும்.

மேரியோ - டாங்கி காங்

அடுத்து அந்த ஹீரோவை வைத்து இன்னொரு கேம் உருவாக்கப்பட்டது. இதில் அவர் ஒரு மர வேலைகளைச் செய்யும் ஒரு தச்சர். ஏணிகளில் குதித்து, குதித்து ஏற வேண்டும். இந்த கேமும் பிரபலமாக மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த மிஸ்டர் வீடியோவிற்கு மக்களே "ஜம்ப் மேன்" (Jump Man) என்று பெயர் சூட்டினார்கள். இப்படியாக, கதாநாயாகன் கொஞ்சம், கொஞ்சமாக வளரத் தொடங்கினார். நஷ்டத்தில் இருந்த நின்டெண்டோ (Nintendo) நிறுவனமும் மேல் எழத் தொடங்கியது. 

இந்த நாயகனின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், இவன் பெயர் இவனுக்கு எப்படி வந்தது என்பதை அறிவதற்கு முன்னர்... அவன் உருவம் எப்படி உருவானது என்பதை இந்த நாயகனின் தந்தை ஷிகெரு மியமோட்டோவின் வார்த்தைகளிலேயே கேட்கலாம்...

மேரியோ - ஷிகெரு மியமோட்டோ

“அந்தக் காலங்களில் படங்கள் எல்லாம் மோனோக்ரோம் (Monochrome) 8 பிட் (8 Bit Image) தான். அதில் ஒரு நகரும் உருவத்தை உருவாக்குவது பெரிய சவாலான, கடினமான வேலையாக இருந்தது. முதலில் நிறைய உருவங்களை பேப்பரில்தான் வரைந்தேன். பின்னர் அதை எப்படி டிஜிட்டலாக மாற்றலாம் என்று யோசிப்பேன். இந்தக் குறிப்பிட்ட ஓவியத்தை வரையும் போது... அதன் மூக்கிலிருந்துதான் தொடங்கினேன். மூக்கையும், வாயையும் பிரித்துக் காட்டுவது பெரிய சவாலாக இருந்தது. சரி... இடையே ஒரு மீசை வைத்தால் அது வித்தியாசப்படுமென்று நினைத்து அந்த மீசையை வரைந்தேன். முடி வரைவது மிகவும் கஷ்டமாக இருந்தது. சரி என்று... தொப்பியை மாட்டிவிட்டேன். இப்படித்தான் இவன் உருவானான்" என்று சொல்லிச் சிரிக்கிறார் மீசையில்லாத ஷிகெரு. 

சரி... நாயகனுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்ற கதைக்கு வருவோம்.

1. மேரியோவின் முழுப் பெயர்  "மேரியோ மேரியோ"

2. மேரியோ பல குழாய்களைக் கடந்து குதித்துப் போவான். மேரியோ அடிப்படையில் ஒரு ப்ளம்பர் (Plumber).

3. மேரியோ சீகல் இன்னும் அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில்தான் வசித்து வருகிறார். இது குறித்த விஷயங்களைக் கேட்க யார் தொடர்பு கொண்டாலும் அவர் பேச மறுத்துவிடுகிறார்.

4. 1800களில் சீட்டாட்டத்திற்கான கார்டுகளைத் தயாரித்துக்கொண்டிருந்த நின்டெண்டோ நிறுவனம், பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இன்று உலகின் முன்னணி வீடியோ கேம் நிறுவனமாக இருக்கிறது. 

ஜப்பானில் ஹிட்டடித்த "டாங்கி காங்கோ" கேமை சில மாற்றங்களோடு அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றது நின்டெண்டோ நிறுவனம். அங்கு தன் பொருள்களை இறக்குமதி செய்து பாதுகாப்பாக வைக்க ஒரு கிடங்கை வாடகைக்கு எடுத்தது. சில காரணங்களால் அந்தக் கிடங்கிற்கான வாடகையை, நிறுவனம் சில மாதங்களாகக் கட்டவில்லை. இதனால், அந்தக் கிடங்கின் உரிமையாளர் நேராக வந்து, நிறுவனத்தின் உரிமையாளரிடம் சண்டை பிடித்தார். இந்தச் சம்பவம் அந்த நிறுவனத்தில் அப்போது அதிகமாகப் பேசப்பட்டது. ஷிகெருவுக்கும் அந்தச் செய்தி சென்றடைந்தது. "மேரியோ சீகல் (Mario Segale) எனும் அவர் நம் நிறுவன முதலாளியைக் கடுமையாகத் திட்டிவிட்டார் ". இந்தச் செய்தி அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அந்தப் பெயர் அவரை ஏதோ செய்தது.

மேரியோ...மேரியோ...மேரியோ.

மேரியோ சீகல்

ஹா... இதுதான் நம் கதாநாயகனின் பெயர். முடிவு செய்துவிட்டார். இந்தப் பெயர் கண்டிப்பாகப் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பினார். கொரில்லா, ஏணி என இருந்த கேமை விட்டு முற்றிலும் புதிதாக ஒன்றை யோசித்தார். மேரியோவுக்கென ஒரு புது உலகத்தை உருவாக்கத் தீர்மானித்தார். இதோ... உருவாகிறது புது மேரியோ உலகம். கொஞ்சம், கொஞ்சமாக அந்த உலகத்தைச் செதுக்கினார். உலகையே இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆட்டிப்படைக்கும் அந்த உலகை உருவாக்கினார். 

மேரியோவாக தொடங்கிய அந்தப் பயணம், இன்று 200 க்கும் அதிகமான கேம்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. தலைமுறைகள் தாண்டி இன்றும் உலகம் முழுக்க மேரியோவுக்கென பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். வீடியோ கேமில் மேரியோவின் தம்பியாக "லுய்ஜி" (Luigi) என்ற கதாபாத்திரத்திற்கு எப்படிப் பெயர் வைத்தீர்கள் என்ற கேள்வி கேட்டபோது,

மேரியோ

"இத்தாலி மொழியில் இரண்டாவது பிரபலமான பெயர் எது என்று தேடினேன். அது லுய்ஜி என்று வந்தது. அதற்கு ஜப்பானிய மொழியில் 'ஒற்றுமை' என்று அர்த்தப்பட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வந்தது. சரியென்று அந்தப் பெயரை வைத்துவிட்டேன்..." என்று லுய்ஜியின் வரலாற்றைச் சொல்கிறார்.

மேரியோ

 

பொதுவாக, இதுபோன்ற வீடியோ கேம்களிலோ, திரைப்படங்களிலோ கட்டுமஸ்தான உடல் கொண்ட கதாபாத்திரம்தான் ஹீரோவாக இருக்கும். ஆனால், குள்ளமாக, சின்ன தொப்பையோடு இருக்கும் மேரியோவை ஏன் இப்படி உருவாக்கினீர்கள் என்று கேட்டதற்கு,
"நான் வரைய நினைத்தது மக்களிலிருந்து தனித்துத் தெரியக்கூடிய ஒரு சூப்பர் ஹீரோவைக் கிடையாது. மக்களோடு மக்களாக இருக்கும் ஒரு ஹீரோவைத்தான். ஹீரோ என்பவன் மக்களில் ஒருவன்தான். எளியவர்களின் ஹீரோவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவனை உருவாக்கினேன்... மேரியோ மக்களின் நாயகன்... மக்களுக்கான நாயகன்"  என்று சொல்கிறார்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

செல்ஃபீ தைரியலட்சுமி

- ரோனி

தெருவில் அம்சமான லேடி சென்றால், சிரிப்புகளும் கிண்டல்களும் சீண்டல்களும் ஏகமாய் குவிவது பிராக்டிக்கல். இதில் வெளிநாடுகளும் விதிவிலக்கல்ல. ஆனால் அதை நோவா ஜான்ஸ்மா எதிர்கொண்ட விதம்தான் ஆசம். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த இருபது வயசு ப்யூட்டி நோவா ஜான்ஸ்மாவின் உறுத்தாத அழகுக்கு  அப்ளிகேஷன்களும், சீண்டல்களும் அதிகம். பொதுவாக பெண்கள் இதை அலட்சியப்படுத்துவார்கள்.
19.jpg
ஆனால், நோவா மாற்றி யோசித்தார். தன்னை கிண்டல் செய்பவர்களுடன் ஜாலி செல்ஃபீ எடுத்துக் கொண்டார். சீண்டல் ஆட்களும் பின்விளைவு தெரியாமல் போஸ் கொடுத்தனர். பின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றைத் திறந்து போட்டோக்களுடன் சீண்டல் கமெண்டுகளையும் பதிய, செம வைரல். ஜனவரி முதல் நெதர்லாந்தில் பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு ஃபைன் எவ்வளவு தெரியுமா? ரூ.14,370. இப்போது நோவை சீண்டிய அத்தனை ஆண்களும் ஃபைன் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்!

 

 

தேங்காய் வீடு


தனக்கென ஸ்பெஷலாக வீடு கட்டி வாழ்வது பலரின் லட்சியக்கனவு. அதையே சூழலுக்கு உகந்த பொருளில் பட்ஜெட்டில் கட்டினால் சூப்பர்தானே? மும்பையைச் சேர்ந்த மார்க்கெட்டிங் வல்லுநரான மனிஷ் அத்வானி, மனைவி குப்பையில் போடச்சொல்லிக் கொடுத்த தேங்காய் ஓடுகளில் செடிகளை வளர்த்தார்.
15.jpg
அது திருப்தி தராமல் போக, தேங்காய் ஓடுகளின் மூலம் வீடு கட்டினால் என்ன பளீர் ஐடியா தோன்றியது. உடனே தன் நண்பர் ஜெய்நீல் திரிவேதியிடம் அதனைச் சொல்லி, 20 கல்லூரி மாணவர்களின் உதவியுடன் கிடுகிடு வேகத்தில் வீட்டைக் கட்டவே தொடங்கிவிட்டார். நன்கு காயவைத்த தேங்காய் ஓடுகளுடன் களிமண், மூங்கில் சேர்த்து கட்டிய சூழலுக்கு பாந்தமான வீடு கட்ட ஆன செலவு வெறும் 10 ஆயிரம்
ரூபாய்தான்.

 

ஒரு ரூபாய் கிளினிக்!

மும்பை லோக்கல் ட்ரெயினின் (கல்யாண் - சிஎஸ்டி) பெண்கள் கம்பார்ட்மெண்ட். இரவு 10.17. நிறைமாத கர்ப்பிணி வலியில் துடித்துக் கொண்டிருக்க உடனே தாதர் ஸ்டேஷனில் வண்டி நிறுத்தப்பட்டது. ஒரு ரூபாய் கிளினிக்கின் டாக்டர் பிராஜ்வாலித் அவருக்கு சிகிச்சை அளித்தார். பிறந்த குழந்தையும் தாயும் நலம்.

14.jpg
கடந்த மார்ச் 2017ல் மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக செயல்பாட்டாளர் சமீர் ஜாவேரி, ரயில் நிலையங்களில் நிகழும் விபத்து களுக்கு அவசர உதவி அளிக்க மருத்துவமனைகள் அவசியம் என வாதிட, அதை ஏற்ற நீதிமன்ற உத்தரவின்படி முதல்கட்டமாக தாதர், கர்லா, வடாலா, கட்கோபார், முலுந்த் ஆகிய இடங்களில் 24 மணிநேரமும் செயல்படும் வண்ணம் Magicdill என்ற தனியார் நிறுவனத்தின் உதவியுடன் கிளினிக் அமைக்கப்பட்டன. ஒரு கிளினிக்கில் நான்கு மருத்துவர்கள் சேவை புரிகிறார்கள். இங்கு மினிமம் சிகிச்சை கட்டணம் ரூ.1தான். இப்போது 14 ஸ்டேஷன்களில் ஒரு ரூபாய் கிளினிக் செயல்பட்டு வருகிறது.

 

 

டாய்லெட்டில் தங்கம்!


இங்கிலாந்து ட்ரைனேஜில் எண்ணெய் கட்டிகள் குழாயை அடைக்கின்றன என்றால் ஸ்விட்சர்லாந்தில் டன்கணக்கில் தங்கம், வெள்ளி டாய்லெட்டில் கிடக்கின்றன! ஸ்விஸ்ஸிலுள்ள ஜூரா பகுதி ட்ரைனேஜ் குழாய்களில் கடந்த ஆண்டு 43 கி.கி., தங்கம், 3 டன் வெள்ளி பெறப்பட்டது உண்மை. மதிப்பு 3.1 மில்லியன் டாலர்கள்! உடனே ட்ரைனேஜ் குழாய்களில் இறங்கிவிடாதீர்கள். வாட்ச், கெமிக்கல் மற்றும் மருந்து கம்பெனிகளின் கழிவுகளிலிருந்து கிடைத்த மைக்ரோ கிராம் உலோகங்களின் அளவு இது.
13.jpg
தொழில்நிறுவனங்கள் உலோகங்களை உருக்கி பயன்படுத்த முடியாத அளவு என்பதால் இதனை கழிவாக அனுப்பி விடுகின்றனர். செய்தியில் தங்கம் பற்றிய செய்தியைக் கேட்ட ஆசை விடாத மக்கள் தங்கவேட்டையை தங்கள் குடிநீர் குழாயிலும் தொடர்ந்து வருகின்றனர்!

kungumam

Link to comment
Share on other sites

அமிலமாகும் ஆழ்கடல்கள் அழியும் கடல்வாழ் உயிரனம்

கரியமில வாயு வெளியேற்றத்தால் உலகம் முழுவதும் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வந்த ஆய்வின் முடிவில் அளித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

வண்ணமயமான ராம்ப்வாக்!

 

 
shwo15

கோவை ட்ரீம் ஸோன் டிசைனிங் பள்ளி சார்பில் மாணவிகள் பங்கேற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு கோவையில் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். விதவிதமான உடைகளை அணிந்து வந்த அவர்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். ராம்ப்வாக்கில் வலம் வந்தவர்களின் ஆல்பம்.

shwo11
shwo13
shwo18
shwo19
shwo20
shwo3
 

படங்கள்: ஜெ. மனோகரன்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

முன்னாடி பின்னாடி தமிழ் வார்த்தைகள் எனக்குத் தெரியாதா?: சச்சின் பகிர்ந்துகொண்ட சுவையான சம்பவம்

 

 
sachin

 

பஞ்சதந்திரம் படத்தில் வந்த முன்னாடி, பின்னாடி நகைச்சுவைக் காட்சியைத் தெரியாத தமிழ்த் திரைப்பட ரசிகர்களே இருக்கமுடியாது. சச்சினின் இந்த காணொளியைப் பார்க்கும்போது அந்த நகைச்சுவைக் காட்சிதான் ஞாபகத்துக்கு வருகிறது. 

முன்னாடி, பின்னாடி போன்ற தமிழ் வார்த்தைகள் தனக்குத் தெரியும் என்று அது தொடர்பான ஒரு சுவையான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். ஒரு விழாவில் அவர் இதுகுறித்து கூறியதாவது: 

தமிழ்நாடு - மும்பை இடையேயான போட்டி மும்பையில் நடைபெற்றது. அப்போது பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் நன்கு வந்தது. இதனால் கிரிஸை விட்டு 2 அடி முன்னே நின்றேன். பந்துவீச்சாளர்களின் திட்டங்களை முறியடிப்பதற்காக. பாயிண்டில் நின்றிருந்த ஹேமங் பதானி, பந்துவீச்சாளரிடம் முன்னாடி முன்னாடி என்று தமிழில் யோசனை கூறினார். நான் 15 வருடம் இந்திய அணியில் இருந்து சென்னை வீரர்கள் பலருடன் பழகியிருக்கிறேன். எனவே என்னால் ஓரளவு தமிழைப் புரிந்துகொள்ளமுடியும். முன்னாடி, பின்னாடி போன்ற தமிழ் வார்த்தைகளை அறிவேன். எனவே ஹேமங் பதானி என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் என் பேட்டிங் உத்தியை மாற்றினேன் என்றார். 

இதன் வீடியோவை முன்னாள் வீரர் ஹேமங் பதானி சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். நீங்கள் சச்சின் போன்ற ஒருவரிடம் தமிழில் பேசி குழப்பமடையச் செய்யமுடியுமா? கடவுளே, வாய்ப்பே இல்லை. இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

முதன்முறையாக இங்கிலாந்தில் கால்பந்து அணி தொடங்கப்பட்ட நாள் (அக்.24- 1875)

 

உலகில் உள்ள போட்டிகளில் கால்பந்து போட்டிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிக ரசிகர்கள் கொண்ட இந்த போட்டிக்கான அணி முதல் முதலில் இங்கிலாந்தில் ஷெபீல்ட் அணி உருவாகியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1806 - பிரெஞ்சுப் படைகள் பெர்லின் நகரை அடைந்தன. * 1851 - யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது. * 1912 - முதலாம் பால்க்கன் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் செர்பியா வெற்றி பெற்றது. * 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது

 
முதன்முறையாக இங்கிலாந்தில் கால்பந்து அணி தொடங்கப்பட்ட நாள் (அக்.24- 1875)
 
உலகில் உள்ள போட்டிகளில் கால்பந்து போட்டிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதிக ரசிகர்கள் கொண்ட இந்த போட்டிக்கான அணி முதல் முதலில் இங்கிலாந்தில் ஷெபீல்ட் அணி உருவாகியது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1806 - பிரெஞ்சுப் படைகள் பெர்லின் நகரை அடைந்தன. * 1851 - யுரேனஸ் கோளின் சந்திரன்கள் ஏரியல், உம்பிரியல் ஆகியன வில்லியம் லாசெல் என்பவாரால் கண்டறியப்பட்டது. * 1912 - முதலாம் பால்க்கன் போர்: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் செர்பியா வெற்றி பெற்றது. * 1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது. * 1930 - பிரேசிலில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது. அதிபர் லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார். * 1931 - ஜார்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது. * 1935 - இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது. * 1945 - ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

* 1960 - சோவியத் ஒன்றியத்தின் பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 ஏவுகணை வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர். * 1964 - வடக்கு றொடீசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சாம்பியா என்னும் பெயரைப் பெற்றது. * 1973 - யோம் கிப்பூர் போர் முடிவுக்கு வந்தது. * 1994 - கொழும்பில் தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.

* 2003 - கொன்கோர்ட் விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது. * 2007 - சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு சீனாவின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites

 

கழிவிலிருந்து காசு பாகிஸ்தானின் 10 வயது சூழல் போராளி

பழைய செய்தித்தாள்களை வண்ணங்களை சேர்த்து, அழகான பரிசுப்பைகளாக அலங்கரிக்கும் இந்த பள்ளி மாணவி, அவற்றை குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் விற்பனை செய்கிறார்.

Link to comment
Share on other sites

விராட் கோலியின் கேட்ச்சைப் பிடித்து ஓவர் நைட்டில் ஸ்டாரான `பால் பாய்'!

நேற்று, இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில், நியூஸிலாந்து வெற்றிபெற்றது ஒருபுறம் இருக்க, இந்திய கேப்டன் விராட் கோலி, நேற்று சிக்ஸர் ஒன்றை அடித்தார். அதை பவுண்டரிக்கு வெளியிலிருந்து ஒரு சிறுவன் அபாரமாக கேட்ச் பிடித்தான்.   அது, இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டது. தற்போது, சமூக வலைதளங்களில் படு வைரலாகிவருகிறது.

 

Link to comment
Share on other sites

கால் விரலால் சகோதரனுக்குப் பொட்டு வைக்கும் மாற்றுத் திறனாளி பெண்..! வைரலாகும் போட்டோ

 

க்ஷா பந்தன் போலவே மேற்கு வங்கத்தில் 'பாய்தோஜ்' என்கிற சகோதர- சகோதரி உறவை முன்வைத்து கொண்டாடப்படும் பண்டிகை வெகு பிரபலம். இந்தப் பண்டிகையின்போது, மூத்த சகோதரிகளிடம் இளைய சகோதரர்கள் நெற்றியில் திலகமிட்டு, ஆசி பெறுவார்கள். அக்டோபர் 21-ம் தேதி சகோதரிகளைக் கொண்டாடும் இந்தப் பண்டிகை மேற்கு வங்கத்தில் கொண்டாடப்பட்டது. கொல்கத்தா அருகே ஹூப்ளியைச் சேர்ந்த சாம்ராட் பாசுவுக்கு ஒரே ஒரு சகோதரிதான். அவர் கரங்கள் செயல் இழந்த மாற்றுத்திறனாளியும்கூட. 

மாற்றுத்திறனாளி சகோதரியின் ஆசி

 

எனினும், பண்டிகை தினத்தில் சகோதரியின் ஆசியைப் பெற சாம்ராட் பாசு முடிவெடுத்தார். அதனால், பாய் தோஜ் தினத்தில் குளித்து புத்தாடை அணிந்து சகோதரியிடம் ஆசி கோரினார். வீல்சேரில் அமர்ந்திருந்த அவரின் சகோதரி காலில் உள்ள குட்டை விரலால் சகோதரரின் நெற்றியில் திலகமிட்டு ஆசி வழங்கினார். சகோதரியின் ஆசியைப் பெற்ற சாம்ராட், அந்தப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட அது வைரலாகியது. இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. லட்சக்கணக்ககான லைக்குகளையும் அள்ளி வருகிறது. 

 

பலர், இந்த ஆண்டின் மிகச்சிறந்த புகைப்படம் இது என்றும் சகோதர- சகோதரின் பாசத்தை உயிர்ப்புடன் காட்டும் புகைப்படம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 1 Person, Text
 

அண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் !

உணர்ச்சிகரமான நடிப்பாலும், கணீர் குரலாலும் தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய எஸ்.எஸ். ராஜேந்திரனின் நினைவு தினம் இன்று.

60 களில் எம். ஜி. ஆர், சிவாஜி என்ற மாபெரும் ஆளுமைகள் கொடிகட்டிப்பறந்தபோது, அவர்களிடமிருந்து தனித்து, தன் திறமையை வெளிப்படுத்தி, தன் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த சாதனையாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

மதுரையை அடுத்த சேடப்பட்டியில் 1928-ம் வருடம் பிறந்த ராஜேந்திரனுக்கு, சிறுவயதிலேயே நாடகங்களின் மீது காதல். கல்வித்துறையில் பணியாற்றி வந்த அவரது தந்தை சூரியநாராயணனுக்கு, மகனை அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்பது ஆசை. வெற்றி என்னவோ ராஜேந்திரனுக்குதான் கிடைத்தது. தனது 6 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார்.

தென்னிந்தியாவின் சிறந்த நாடக கலைக்கூடமாக திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து பயிற்சி பெற்றார். பின் அவரது தனிப்பட்ட குரல்வளத்தால் வெகுசீக்கிரத்தில் 'பால அபிமன்யு' என்ற நாடகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் தரப்பட்டது. தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சில வருடங்களில் அங்கிருந்து விலகி, நாடக உலகில் அப்போது புதுமைகளை புகுத்திவந்த பிரபல டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக மன்றத்தில் இணைந்தார். பின்னர் நாடக உலகிலிருந்து திரையுலகிற்கு நுழைந்தார்.

சிவாஜிகணேசனின் முதல்படமான 'பராசக்தி'தான் இவருக்கும் முதல் படம். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்தில் ராஜேந்திரனுக்கு, நாயகன் சிவாஜியின் அண்ணன் வேடம் தரப்பட்டது. தெள்ளிய தமிழில் கணீர் குரலோடு ஞானசேகரன் என்ற பாத்திரத்தில் வெளிப்பட்ட இவரின் நடிப்பு, சிவாஜிக்கு அடுத்தபடியாக யார் இந்த நடிகன் என்று ரசிகர்களால் பேசப்பட்டது. அடுத்தடுத்து பல படங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார். எஸ்.எஸ். ஆர்.

'முதலாளி', 'தலைகொடுத்தான் தம்பி', 'எதையும் தாங்கும் இதயம்', 'குமுதம்', 'ரத்தக்கண்ணீர்', 'கை கொடுத்த தெய்வம்', 'பச்சை விளக்கு', 'குலதெய்வம்', 'தை பிறந்தால் வழிபிறக்கும்', 'தெய்வப்பிறவி', ராஜாராணி', 'காஞ்சித்தலைவன்', 'ராஜா தேசிங்கு', 'ரங்கூன் ராதா' என பல படங்கள் அவருக்கு புகழைத் தந்தன. கருணாநிதி கதை வசனத்தில் உருவான 'பூம்புகார்' அவரது சிறந்த திரைப்பட வரிசையில் ஒன்று. 'சிவகங்கை சீமை' திரைப்படத்தில் இவரது கணீர் குரல் வசனங்கள் அப்போது பிரபலம்.

பொதுவாக திரையுலகில் பிரபலமடைந்த பின் தனித்துவமான கதாநாயகனாக நடிப்பதையே பலரும் விரும்புவர். ஆனால் பிரபலமான கதாநாயகனான பின்பும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது கதாநாயகனாக தன் சக நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். அந்த படங்களில் தமிழ் உச்சரிப்பாலும், கணீர் குரலாலும் தனித்து தெரிந்தார் எஸ். எஸ். ஆர். வீரம், சோகம், அழுகை, நகைச்சுவை என எந்த பாத்திரமானாலும் தன் தனித்த நடிப்பால் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு வரவேற்பை பெற்றவர் ராஜேந்திரன்.

அவரைப்போன்று தமிழை தெளிவாக உச்சரித்தவர்கள் அன்றைய திரையுலகில் சொற்பமே. இயல்பில் திராவிட கொள்கையில் ஈர்ப்பு கொண்டவரான அவர், ஈரோட்டில் 'சந்திரோதயம்' நாடகம் நடத்த வந்த அண்ணாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்க, அது இன்னமும் தீவிரமானது. பின்னாளில் திமுகவில் இணைந்தார்.

அண்ணாவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன், அவரையே தன் அரசியல் குருவாக ஏற்று இறுதிவரை அவரை கொண்டாடி மகிழ்ந்தவர். திமுக முதன்முறை போட்டியிட்ட 1957 தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. வெறுமனே உறுப்பினராக இல்லாமல், கட்சி மேடைகளில் அண்ணா புகழ்பாடி கட்சியை வளர்த்த அவர், திமுவிற்காக நாடகங்கள் நடத்தி நிதி திரட்டிக்கொடுத்திருக்கிறார்.

தன் இல்லத்தில் எந்த நிகழ்வானாலும் அண்ணா இன்றி நடத்தமாட்டார். தான் கட்டிய இல்லத்திற்கு அண்ணாவின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.

உச்சகட்டமாக தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு ஆதரவாக பகுத்தறிவு கொள்கையில் கொண்ட தீவிர பற்றின் காரணமாக புராண, இதிகாச படங்களில் இனி நடிப்பதில்லையென ஒருநாள் அறிவித்தார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்திய அறிவிப்பு. காரணம், அப்போது புகழின் உச்சத்தில் அவர் இருந்தார். இதனாலேயே தமிழ்த்திரையுலகின் லட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றார்.

திரையுலகில் 50 களில் துவங்கி 60 களின் இறுதிவரை இருபெரும் ஆளுமைகளின் மத்தியில் தன்னிகரில்லாத நடிகனாக திகழ்ந்த ராஜேந்திரன், இந்தியாவில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த முதல் நடிகர் என்ற புகழுக்குரியவர். 1962- ம் ஆண்டு தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திரையுலகில் தன்னோடு இணைந்து பல படங்களில் நடித்த பிரபல நடிகை விஜயகுமாரியுடன் காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணம் நிலைக்கவில்லை. சில வருடங்களில் குழந்தை பிறந்த கையோடு, இருவரும் மனமொத்து பிரிந்தனர்.

திரையுலகில் பிரபலமாகியிருந்தபோதே தனது பெயரில் நாடக மன்றம் ஒன்றை துவக்கி, அதில் திறமையான நடிகர்கள் பலருக்கும் வாய்ப்பளித்தவர் எஸ்.எஸ்.ஆர். அவரது நாடக மன்றம் பல பிரபலமான கதைகளை நாடகமாக அரங்கேற்றியது. அண்ணாவின் 'ஓர் இரவு', 'சந்திரமோகன்', மு.கருணாநிதி எழுதிய 'அம்மையப்பன்' ஆகிய நாடகங்களை நடத்தினார். திரையுலகில் அவரால் பலர் ஏற்றம் பெற்றனர். அவர்களில் சமீபத்தில் மறைந்த மனோரமா மற்றும் நடிகர் முத்துராமன் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழகத்தில் அறிமுகமாகி, பின்னாளில் கேரளாவில் பிரமலமடைந்த ஷீலா இவரது அறிமுகமே. அண்ணாவின் மறைவிற்கு பின் தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால், ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி, எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். 1980 -ம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவருக்கான அரசியல் களம் தெளிவற்ற நிலையில் போனது. தி.மு.க., அ.தி.மு.க என இரு கழகங்களிலும் தனக்கான இடத்தை தக்க வைக்க முடியாமல், வேறு வழியின்றி அரசியலிலிருந்து ஒதுங்கினார் எஸ். எஸ். ஆர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

முதன்முறை சட்டமன்ற உறுப்பினரான எஸ்.எஸ்.ஆரை சந்தித்து வாழ்த்து சொன்ன சிவாஜி, “சம்பிரதாயமாத்தான் உங்களை வாழ்த்தறேன். பதவி, அதிகாரம்னு சினிமாவிலிருந்து ஒதுங்கிடாதீங்க. அதெல்லாம் வயசான பின்னாடி பார்த்துக்கலாம். திரும்பவும் நடிக்க வந்திடணும்” என்றார் வாஞ்சையாக. தொழில்முறை போட்டியாளரிடமும் அவர் பேணிய ஆரோக்கியமான நட்புக்கு இது சான்று.

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளியான 'முதலாளி' எஸ்.எஸ்.ஆருக்கு திருப்புமுனை கொடுத்த திரைப்படம். மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'மறக்க முடியுமா' திரைப்படத்தில் தன் சொந்த சகோதரியையே யார் எனத் தெரியாமல் பெண்டாள முயற்சிக்க, அப்போது அவள் தன் கழுத்தை அறுத்துக்கொள்வாள். அப்போது எஸ்.எஸ்.ஆர் வெளிப்படுத்தும் உணர்ச்சிவயப்பட்ட நடிப்பை வேறு எந்த நடிகரிடத்தும் எதிர்பார்க்க முடியாதது. வெளிப்படங்களில் வாய்ப்பு குறைந்தபோது, தன் சொந்தப்பெயரில் படம் தயாரித்து நடித்தார் எஸ்.எஸ்.ஆர்.

திரையுலகில் அடுத்த தலைமுறை நடிகர்களாலும் நேசிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆர், அவர்கள் விரும்பி அழைத்தபோது அவர்களின் படங்களில் நடித்தார்.

தம் இறுதிநாளில் ஞாபக மறதி நோயால் சிரமப்பட்ட அவர், எம். ஜி. ஆர் ரசிகர்கள் ஏற்பாடு செய்த ஒரு மேடையில் கருணாநிதியை புகழ்ந்து பேசி சங்கடப்பட்டுப்போனார். காரணம் எல்லா காலங்களிலும் தனக்கு எதிரிகளாக யாரையும் வரித்துக்கொண்டு அரசியல் செய்யாமல், தனித்துவமாக விளங்கிய அவரது குணம். திரையுலகில் பந்தா இல்லாமல், சக நடிகர்களுடன் போட்டி மனப்பான்மையின்றி இணைந்து பணியாற்றியது அவரது சிறந்த குணத்திற்கு சான்று. ஒரு வகையில் அரசியலில் அவர் முழு வெற்றி பெறாததற்கும் அதுவே காரணம் எனலாம்.

திரையுலகில் எத்தனை புகழோடு விளங்கினாலும் அண்ணாவை நேசித்த தன் சக திரைக்கலைஞர்களைபோல எஸ்.எஸ்.ஆர் அரசியலில் பெரும் உயரத்தை எட்டி பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம் ஒன்று உண்டு. அது, அண்ணாவை அவர் நிஜமாய் நேசித்ததுதான்!

 

 

 

 

Bild könnte enthalten: 1 Person, Text und im Freien

இங்கிலாந்து அணிக்காகவும், மென்செஸ்டர் யுனைடட் கால்பந்து கழகத்திற்காகவும் அதிக கோல்களைப் பெற்ற வீரர்களில் ஒருவரான வேய்ன் ரூனி இன்று தனது 32 ஆவது பிறந்த நாளினை கொண்டாடுகின்றார்.

 

 

 

Bild könnte enthalten: 2 Personen
 

#மருதுசகோதரர்கள் துாக்கிலிடப்பட்ட நாள்

1801-ம் ஆண்டு இதே அக்டோபர் 24-ம் நாள் சிவகங்கை திருப்பத்தூரின் மையப்பகுதியில் துாக்குக் கயிற்றின் முன் நிறுத்தப்பட்டிருந்தனர் அந்த சகோதரர்கள். துாக்குக் கயிற்றை மாட்ட வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களிடம் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்டார்.

தாங்கள் கட்டியாண்ட சிவங்கைச் சீமை மண்ணிலே கைதியாக நின்ற மருது சகோதரர்கள் “ எங்களுக்கு நீங்கள் எந்த தயவும் காட்டவேண்டாம். நான் என் நாட்டைக் காப்பாற்ற போரிட்டு உங்களிடம் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். என் உயிரை பறிக்கும் உரிமையை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆனால் என் உயிரோடு எதற்காக, இந்த சின்னஞ்சிறு உயிர்களையும் சேர்த்து பறிக்கின்றீர்கள்?... இந்த சிறுவர்களா உங்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தார்கள் என்று நினைக்கீன்றீர்கள்? எங்கள் உயிரை பறித்ததும், எங்கள் உடலை காளையார் கோவிலில் நாங்கள் கட்டிய கோபுரத்துக்கு எதிரில் புதைத்துவிடுங்கள். இது எங்கள் மரண சாசனமாக கூட நீங்கள் எடுத்துகொள்ளலாம்” என்று சிறிதும் தயக்கமின்றி தங்கள் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் போகப்போகின்றது என்பதை அறிந்தும் எந்த பதட்டமும் இல்லாம் ஆங்கிலேயர்களிடம் கூறினார்கள். வீரத்தின் விளைநிலமாக விளங்கிய மருது சகோதரர்கள்தான் அவர்கள். அவருக்கு உதவியாக இருந்தார்கள் என்று ஐநுாறு பேரையும் துாக்கில் ஏற்றினார்கள் ஆங்கிலேயர்கள்.

மருது சகோதரர்கள் துாக்கிலிடப்பட்டு பிணமாக கயிற்றில் தொங்கிய நிலையில்கூட ஆங்கிலேயர்கள் அவர்கள் அருகில் செல்ல அச்சமடைந்தனர் என்றால், ஆங்கிலேயர்களுக்கு எந்த அளவுக்கு மருது சகோதரர்கள் மீது பயம் இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். மருது சகோதரர்கள், சிவகங்கையை ஆண்டது குறைந்த காலம் தான். அவர்கள் மன்னர்களாக சிவகங்கையை ஆளவில்லை. இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதியின் மகளான வேலுநாச்சியார், சிவகங்கை மன்னரான முத்து வடுகநாதருக்கு மனைவியானதும், தனது மகளின் சாம்ராஜ்யத்துக்கு, பாதுகாவலர்களாக கிழவன் சேதுபதியால் அனுப்பட்டவர்கள் தான் பெரிய மருதுவும், சின்னமருதுவும். இவர்கள் பிறந்த ஊர் இன்றைக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி. தந்தை மொக்க பழனியப்பன், சேதுபதி மன்னரிடம் தளபதியாக இருந்தார். அந்த வீரத்தின் விளைநிலங்களாக இவர்கள் இருந்ததை பார்த்த சேதுபதிதான் வேலுநாச்சியாருடன் மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்.

மிகச்சிறந்த போர்வீரர்களாகவும், வாள்வீச்சிலும் சகோதரர்கள் இருவரும் வல்லவர்களாக விளங்கியதைப் பார்த்த வேலுநாச்சியார், சின்ன மருதுவிடம் போர்க்கலையை கற்றறிந்தார் என்கிறது வரலாறு. 1772-ம் ஆண்டு காளையார் கோவிலில் நள்ளிரவில் சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை ஆங்கிலேயப் படையும், நவாப்பின் படையும் சதித்தீட்டம் தீட்டி கொலை செய்கிறது. சிவகங்கை அரண்மனையை ஆங்கிலேயப் படைகள் முற்றுகையிட்டன. கொல்லங்குடியில் இருந்த அரசி வேலுநாச்சியாரை பெரிய மருதுவும், சின்ன மருதுவும் காப்பாற்றி திண்டுக்கல் அருகே விருப்பாட்சி என்ற இடத்தில் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் கொண்டு சேர்க்கின்றனர். பின்னர் சிவகங்கை சீமைக்கு திரும்பிய மருது சகோதரர்கள் மக்களோடு, மக்களாக வாழ்ந்து கொண்டே ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். அக்காலகட்டத்தில்தான் தென் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இருந்த பாளையக்காரர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டனர்.

அந்த தொடர்புதான் ஊமைத்துறைக்கும், சின்னமருதுவையும் நெருங்கிய நண்பர்களாக்கியது. காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779-ல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780-ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. வேலுநாச்சியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது.

திண்டுக்கல்லிலிருந்து வந்த ஹைதர்அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவுக்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார். அதன் பிறகு தான் வேலுநாச்சியார் தன் மண்ணை மீட்ட மருது சகோதர்களை தனக்கு பின் இந்த நாட்டின் அரசப் பிரதநிதிகளாக இருப்பார்கள் என்றார். சிறிது காலத்தில் வேலுநாச்சியாரின் மறைவைத் தொடர்ந்து சிவகங்கைச் சீமை மருது சகோதரர்கள் ஆளுகையின்கீழ் வந்தது. அவர் ஆட்சியில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்துக்கு இணையாக கோபுரம் கட்ட ஆசைப்பட்டு காளையார்கோவில் கோபுரத்தை கட்டி எழுப்பினார்கள்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடர்ந்து மருது சகோதரர்கள் போராடி வந்தார்கள். சிவகங்கைச் சீமையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போர்க்களங்களில் சில மணலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கைப் போர், மங்கலம் போர் மானாமதுரைப் போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனார் போர், காரான்மைலைப் போர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருந்த பாளையக்காரர்களை கடுமையாக எச்சரிக்கை செய்தனர் மருது சகோதரர்கள். திருவரங்கம் கோவிலிலும், திருச்சி மலைக்கோட்டையிலும் ஜம்புத் தீவு பிரகடனம் என்னும் துண்டறிக்கையை துணிவோடு ஆங்கிலேயர்களுக்கு எதிராக சின்ன மருது ஒட்டினார். அதில் “ஆங்கிலேயர்களுக்கு ஒரு போதும் துணை போக வேண்டாம், அப்படி துணை போகிறவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர்” என்று கடுமையாக விமர்சித்தார். இது ஆங்கிலேயர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

சிறிய பாளையக்காரர்கள் நமக்கு எதிராக இவ்வளவு துணிச்சலோடு செயல்பட்டால், நமக்கு ஆதரவாக இருக்கும் பிற பாளையக்காரர்களுக்கும் இந்த எண்ணம் ஏற்பட்டுவிடும்,அதனால் சிவகங்கைச் சீமையை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என ஆங்கிலேய அதிகாரிகள் முடிவு செய்து, சிவகங்கைச் சீமையை நோக்கி படைகளை அனுப்பினார்கள். உடையத்தேவன் என்ற உளவாளி கொடுத்த உளவுப்படி ஆங்கில படை, மங்கலம் என்னும் ஊரின் அருகே மருது சகோதரர்களை சுற்றிவளைத்தனர். மருது சகோரதர்களைப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் ஒரு உபாயம் செய்தார்கள்.

அதன்படி மருதுசகோதரர்கள் சரணடையவில்லையென்றால் காளையார்கோவில் கோபுரம் இடித்து தள்ளப்படும் என அறிவிப்பு செய்தார்கள். தாங்கள் ஆசை ஆசையாக கட்டி எழுப்பிய கோவில் கோபுரம் இடிபடுவதை விரும்பாத மருதுசகோதரர்கள் சரணடைய முன்வந்தனர்.

மருது பாண்டியர்கள் குடும்பத்தார்களும் கைது செய்யப்பட்டு திருப்பத்துார் அழைத்துவரப்பட்டு அங்கு அனைவரும் துாக்கிலிடப்பட்டனர். சின்ன மருதுவின் மூன்றாவது மகன் துரைசாமியை மட்டும், 1802-ல் மலேசிய நாட்டுக்கு நாடு கடத்தினார்கள். 1818-ல் மலேசியா சென்ற அன்றைய ஆங்கில ராணுவ அதிகாரி வேல்ஷ் மருதுவின் மகன் துரைசாமியை நேரில் பார்த்துள்ளார். அவர் எழுதிய 'எனது நினைவுகள்' நுாலில் “ இளைஞனாக இருக்கவேண்டிய துரைசாமியை மெலிந்த மேனியோடு, முதிர்ந்த தோற்றத்தில் நான் பார்த்தேன்.

அதை பார்த்தபோது என் இதயத்தில் கத்தி சொருகியதுபோல இருந்தது. அப்போது துரைசாமி என்னிடம், 'எங்கள் நாட்டில் உள்ள நினைவுச்சின்னங்களை அழித்துவிடாதீர்கள், பெண்கள் குழந்தைகளை துன்புறுத்தாதீர்கள், எங்கள் நாட்டைவிட்டு சீக்கிரம் வெளியேறுங்கள் என 3 கோரிக்கைகளை முன்வைத்தார். அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றும் அதிகாரம் என்னிடம் இல்லாமல் இருந்துவிட்டது” என்று வருத்தப்பட்டு அந்த நுாலில் குறிப்பிட்டுள்ளார்.

வட இந்தியாவில் நடைபெற்ற போர்களை வீரம் செறிந்த வரலாறாக காட்டி வரலாற்று ஆய்வாளர்கள், அதற்கு முன்பே வீரம் செறிந்த மறவர்கள் வாழ்க்கை வரலாற்றை வசதியாக மறைத்துவிட்டனர். இன்றும் திருப்பத்துார் பேருந்து நிலையத்துக்கு எதிரே மருது சகோதரர்கள் வீழ்ந்த இடத்தை நாம் காணலாம்.

சிவகங்கைச் சீமையின் வேங்கைகளாக வாழ்ந்து வீர மரணம் அடைந்தவர்கள்தான் இந்த சகோதரர்கள். தமிழ் மண்ணில் அவர்கள் புகழ் என்றும் நிலைக்கும்!

 

 

Bild könnte enthalten: 1 Person, sitzt

ஹிந்தியுலகின் கவர்ச்சிப் புயல்..
தசாவதாரம் மூலமாகத் தமிழிலும் கலக்கிய மல்லிகா ஷெராவத்தின் பிறந்தநாள்.
Happy Birthday Mallika Sherawat

Link to comment
Share on other sites

எல்லையில்லா இணைய வரலாறு!

 

 
shutterstock587670839

இணையத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இணையம் நாளுக்குநாள் புதிதாகிக்கொண்டிருக்கும் நிலையில் பழைய கதை எல்லாம் எதற்கு என்று நினைத்தால், உங்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. இணையம் கதைகளால் நிரம்பியிருக்கிறது, அந்தக் கதைகள் சுவாரசியமானவை என்பதுதான் அது.

அது மட்டுல்ல, இணைய வரலாற்றில் அறியாத விஷயங்கள் இத்தனை இருக்கின்றனவா என்கிற வியப்பும் உண்டாகும். இணையத்தின் ஆதிக் கதைகளில் சுவாரசியமான கதை ஒன்றைப் பார்ப்பதற்கு முன் அமெரிக்க புரோகிரமரான ஜே ஹாப்மனை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அவர்தான் இணையத்தின் மறக்கப்பட்ட கதைகளை எல்லாம் அகழ்வராய்ச்சி செய்து மீட்டெடுத்து வருபவர்.

ஹாப்மன், ‘தி ஹிஸ்டரி ஆஃப் தி வெப்’ எனும் பெயரில் வலையின் வரலாற்றைப் பதிவு செய்வதற்கான இணையதளத்தை அமைத்திருக்கிறார். அதாவது, வேர்ல்டு வைட் வெப் எனப்படும் வலை உருவான கதைகளை அவர் இந்தத் தளத்தில் வெளியிட்டுவருகிறார்.

 

வலை கதை

வலையின் வரலாற்றைப் படிக்க நினைப்பவர்கள் ஹாப்மன் தளத்துக்கு விஜயம் செய்ய வேண்டும். பரவலாக அறியப்பட்ட வலையின் தோற்றம், வளர்ச்சி, வெற்றி சார்ந்த தகவல்கள், காலவரிசை விவரங்களை எல்லாம் இதில் பார்க்கலாம். அவர் ஒரு வரலாற்று மாணவராம். படிக்கும் காலத்திலேயே இணையதள உருவாக்கத்தில் பகுதி நேரமாக ஈடுபட்டிருக்கிறார். பின்னர், அதுவே முழு நேரப் பணியாக மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக வலை தொடர்பான கதைகளைப் படித்தவரை அதன் ஆரம்பமும் அடுத்தடுத்து நிகழ்ந்த பாய்ச்சல்களும் வசீகரித்தன. அந்த ஆர்வத்தில் தான் கண்டெடுத்த கதைகளையும் அவற்றுக்கான இணைப்புகளையும் சேகரிக்கத் தொடங்கினார்.

இப்படிப்பட்ட தகவல்களைத் திரட்டித் தொகுத்து வலையின் முழுமையான கால வரிசையை உருவாக்கும் நோக்கத்துடன் இதற்கான இணையதளத்தை அமைத்தார். இணையக் கடலில் தான் தேடிக் கண்டுபிடிக்கும் கதைகளைப் பகிர்ந்துவருகிறார். இணையத்தின் வலை கருக்கொண்ட 1988-ம் ஆண்டு முதல் இந்தக் கதைகளைக் காலவரிசையாகப் படித்துப் பார்க்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் வலையின் முக்கிய நிகழ்வுகளின் பின்னணி சுவாரசியமாக இருப்பதோடு, அதைவிடச் சுவையான வரலாற்றுப் பாடங்களையும் கொண்டிருக்கின்றன.

 

வந்த கதை

உதாரணமாக ஒரு கதையைப் பார்க்கலாம். வேர்ல்டு வைடு வெப் எனக் குறிப்பிடப்படும் வலையை உருவாக்கியது பிரிட்டனைச் சேர்ந்த டிம் பெர்னர்ஸ் லீ என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஞ்ஞானியான அவர், சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். 1989-ம் ஆண்டில் வலையை உருவாக்குவதற்கான யோசனையை முன்வைத்து, 1991-ல் வலை பிரவுசர் மற்றும் எச்டிஎம்.எல் இணைப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களோடு உதயமான வரலாற்றையும் அறிந்திருக்கலாம்.

ஆனால், இதற்கான யோசனையை லீ, உலக அளவிலான போன் புத்தகமாக முன்வைத்துதான் வெற்றிபெற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? லீ அப்போது பணியாற்றிய செர்ன் ஆய்வுக்கூடத்தில் இயற்பியல் சார்ந்த ஆய்வு தவிர வேறு விஷயங்களுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால், லீ உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்வதற்கான வழியை எச்.டிம்.எம்.எல். உள்ளிட்ட அம்சங்களோடு உருவாக்க நினைத்தார். ஆனால், செர்ன் ஆய்வுக்கூடத்தில் இதற்கு அனுமதி கிடைப்பது கடினம்.

நல்லவேளையாக டிம் பெர்னர்ஸ் லீ முன் வைத்த யோசனையை அவரது தலைமை அதிகாரியான மைக் செண்டல் ஆதரித்தார். எனினும், அதிகார மட்டத்தில் அது செல்லுபடியாகாது என அறிந்திருந்த அவர், அதற்கான மாற்று வழியை முன்வைத்தார். இந்த யோசனையை அப்படியே முன்வைக்காமல், செர்ன் ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான போன் புத்தகத்தை இணையத்தில் உருவாக்கித்தரும் திட்டமாக முன்வைக்குமாறு கூறினார்.

செர்ன் ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் இருந்ததால், அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கக்கூடிய போன் புத்தகம் தேவைப்பட்டது. அந்தப் போர்வையில் ஐடியாவை வைக்கச் சொன்னார். அதன்படியே இணைய போன் புத்தகத்தை உருவாக்கும் முயற்சியாக வலை தொடங்கி, பின்னர் மெல்ல நிலைப்பெற்றது. இன்று வலையில்லாமல் வாழ்க்கை இல்லை எனச் சொல்லும் நிலையை உருவாக்கும் அளவுக்கு அது வளர்ச்சி பெற்றிருக்கிறது.

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 25

 

1147 : முதலாம் அஃபொன்சோ தலை­மையில் போர்த்­து­கே­யர்கள் லிஸ்பன் நகரைக் கைப்­பற்­றினர்.

1415 : அஜின்கோர்ட் நகரில் இடம்­பெற்ற போரில் இங்­கி­லாந்தின் ஐந்தாம் ஹென்­றியின் படைகள் பிரான்ஸைத் தோற்­க­டித்­தன.

bindunuwewa5-352x400.jpg1616 : டச்சு கடற்­படைக் கப்டன் டேர்க் ஹார்ட்டொக், அவுஸ்­தி­ரே­லி­யாவில் கால்­ப­தித்த இரண்­டா­வது ஐரோப்­பி­ய­ரானார். மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் டேர்க் ஹார்ட் டொக் தீவு அவ­ரது பெயரால் அழைக்­கப்­ப­டு­கி­றது.

1760 : மூன்றாம் ஜோர்ஜ் பிரித்­தா­னி­யாவின் மன்­ன­ரானார்.

1900 : தென் ஆபி­ரிக்­காவின் டிரான்ஸ் வால் மாநி­லத்தை ஐக்­கிய இராச்­சியம் இணைத்­துக்­கொண்­டது.

1918 : அமெ­ரிக்­காவின் அலாஸ்­காவில் பிரின்சஸ் சோஃ பியா என்ற கப்பல் மூழ்­கி­யதால் 353 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1924 : இந்­தி­யாவில் பிரித்­தா­னிய ஆட்­சி­யா­ளர்­களால் சுபாஷ் சந்­திர போஸ் கைது செய்­யப்­பட்டார்.

1935 : ஹெயிட்­டியில் சூறா­வளி மற்றும் வெள்ளம் கார­ண­மாக 2,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1936 : ஹிட்லர் மற்றும் முசோ­லினி இணைந்து ரோம்- பேர்லின் என்ற கூட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­தினர்.

1944 : இரண்டாம் உலகப் போர்: பிலிப்­பைன்ஸில் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் வர­லாற்றின் மிகப் பெரிய கடற்­சமர் இடம்­பெற்­றது.

1945 : இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கூட்டு நாடு­க­ளிடம் சர­ண­டைந்­ததைத் தொடர்ந்து சீனக் குடி­ய­ரசு தாய்­வானை இணைத்துக் கொண்­டது.

1962 : ஐ.நா.வில் உகண்டா இணைந்­தது.

1962 : தென் ஆபி­ரிக்­காவில் நெல்சன் மண்­டேலா, 5 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு சிறைக்கு அனுப்­பப்­பட்டார்.

1971 : ஐ.நாவி­லி­ருந்து சீனக் குடி­ய­ரசு வெளி­யேற்­றப்­பட்டு, மக்கள் சீன குடி­ய­ரசு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

1983 : ஐக்­கிய அமெ­ரிக்­காவும் அதன் கரீ­பியன் கூட்டு நாடு­களும் கிர­னா­டாவை முற்­று­கை­யிட்டு அதனைக் கைப்­பற்­றின.

1991 : யூகோஸ்­லா­விய இரா­ணுவம் ஸ்லோவே­னி­யாவில் இருந்து முற்­றாக வெளி­யே­றி­யது.

2000 : பண்­டா­ர­வளை, பிந்­து­னுவெவ தடுப்பு முகாமில் இடம்­பெற்ற தாக்­கு­தலில் தமிழ் கைதிகள் 26 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2007 : சிங்­கப்பூர் ஏர்லைன்ஸ் நிறு­வனம் எயர்பஸ் ஏ380 விமான சேவையை சிட்­னிக்கு ஆரம்­பித்­தது. உலகின் மிகப் பெரிய பய­ணிகள் விமானம் ஏ380 விமான வர்த்­தக சேவைக்கு விடப்­பட்­டமை இதுவே முதல் தட­வை­யாகும்.

2009 : ஈராக் தலை­நகர் பக்­தாத்தில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பு­களில் 155 பேர் பலி­யா­ன­துடன் 721 பேர் பேர் காயமடைந்தனர்.

http://metronews.lk

Link to comment
Share on other sites

‘நடிப்பு மக்களை மயக்க வல்லது’
 

image_f76eb62b2d.jpgநடிப்பு மக்களை மயக்க வல்லது. இது தெரிந்துதானே, இந்தப் பொல்லாத அரசியல்வாதிகள், மக்களிடம் இந்த வித்தைகளைக் காட்டி வருகின்றார்கள்.

தாங்கள் சொன்னவைகளையே பின்னர் மறுதலிப்பதும், வெளிநாடுகளில் ஒன்றைச் சொல்வதும், தாய்நாட்டில் அதனை மறுப்பதும், தவறான செயல் என அரசியல்வாதிகள் கருதுவதேயில்லை. மக்களும் அதை மறந்துபோவதும் வியப்பு அல்ல!

நீதியான ஒருவரைத் தேர்ந்து எடுப்பதில், மக்கள் தொடர்ந்தும் இயலாமையை வெளிப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை. தமக்கான உரிமைகளைப் பிரயோகிக்க, மக்கள் ஏதோ ஒரு பயப்பிரமை காரணமாக மறந்து விடுகின்றார்கள்.

மக்களிடம் பொய்மை எனும் மாயை ஆழமாக விதைக்கப்பட்டு விட்டது. இதை விதைத்தது யார் என்பதை உணர மறுத்து வருவது நாட்டின் போதாத காலம்.

நேர்மையீனத்தில் கைப்பாவையாக அரசியல் திராணியற்றுத் தவிக்கிறது. அரசியல் நல் உருப்பெற வல்லமை தா இறைவா!

Link to comment
Share on other sites

முதலைக்கு வைக்கப்பட்ட பொறிக்குள் சென்று 4 பேர் செல்ஃபீ!!

ஆஸ்திரேலியாவின் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. அவை அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடி வருகின்றன. சமீபத்தில் 79 வயது
மூதாட்டி ஒருவர் ஆற்றில் உள்ள முதலைக்கு இரையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த ஏரியில் முதலைக்காக பொறி வைக்கப்பட்டிருந்தது. அந்த பொறியில் 4 பேர் தைரியமாக நின்று
புகைப்படம் எடுத்துள்ளனர். பொறிக்குள் சென்றும் அதனை சுற்றியும் நீந்தி விளையாடி உள்ளனர்.

முதலைக்கு வைக்கப்பட்ட பொறிக்குள் சென்று 4 பேர் செல்ஃபீ!!

அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மிகவும் பயங்கரமானதாகும். மேலும், சட்ட விரோதமாக செயல்பட்டதற்காக
நான்கு பேருக்கு 11 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. அவர்களின் நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் மந்திரி எதிர்ப்பு தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை
நடைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

https://news.ibctamil.com

Link to comment
Share on other sites

இணையத்தில் வைரலாகும் தோனி மகளின் மலையாள பாடல்! 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் பாடல் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Ziva
 

 

தோனியின் இரண்டு வயது மகள் ஜிவாவுக்கு இணையத்தில் ஃபேன்ஸ் அதிகம். ஜிவா உடனான புகைப்படங்களை தோனி பகிரும் போதெல்லாம் லைக்ஸ் அள்ளும். தற்போது ஷிவா அழகிய மழைலை குரலில் பாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி நெட்டிசன்களை உருக வைத்துள்ளது. அந்த வீடியோவில் மலையாள கிருஷ்ணா பக்தி பாடலைப் பாடுகிறார் ஜிவா. அவரின் மலையாள உச்சரிப்பு அற்புதம்! Dont Miss it..

 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.