Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

யாழ்நூல் இயற்றியபோது…

 

  • 19chcss_edit2_vibu_3187633g.jpg
    க.வெள்ளைவாரணன்
  • 19chcss_edit2_Vibu_3187632g.jpg
     
  • Vibu_Letter__1_3187634g.jpg
     
 

இலங்கை தமிழ்ச் சான்றோர்களுள் விபுலாநந்தர் குறிப்பிடத்தக்கவர். அவர் இயற்றிய யாழ்நூல் தமிழிசையின் ஆதார நூல்களில் ஒன்று. அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது க.வெள்ளைவாரணன் அங்கு மாணவராகப் பயின்றவர். பின்னாளில் யாழ்நூலினை விபுலாநந்தர் எழுதத் தொடங்கியபோது, அதன் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்திருக்கிறார். அவருக்குப் பல மடல்களை, பல ஊர்களிலிலிருந்து விபுலாநந்தர் எழுதியுள்ளார்.

பேளூரிலிருந்து விபுலாநந்தர் வெள்ளைவாரணனுக்கு 24.11.42 நாளிட்டு எழுதிய மடலில் யாழ்நூல் உருவாக்கம் குறித்த பல விவரங்கள் உள்ளன. சங்கீத ரத்தினாகரம் என்ற நூலைப் படிக்க நினைத்தும் அப்போது நடைபெற்ற உலகப் போர் காரணமாக நூல்கள் பாதுகாப்புக்காக வேறிடம் சென்றுவிட்டதை அடிகளார் குறிப்பிட்டுள்ளார். உலகப் போரின்போது நூலகங்கள், அச்சுக்கூடங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளமையை இம்மடல் தெரிவிக்கின்றது. யாழ்நூல் படி எடுத்தல், கருவி நூல்களைத் திரட்டல், அச்சிடுதல், போன்ற பணிகளில் அடிகளார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளமையைப் பல மடல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்நூல் உருவாக்கப் பணி

யாழ்நூலை எழுதி முடிக்க விபுலாநந்தர் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்துள்ளார். மாயாவதி ஆசிரமப் பணியிலிருந்து விடுபடல் (1941), கொழும்புப் பல்கலைக்கழகப் பணியேற்றல் (1943 - 47), கடும் காய்ச்சலில் வீழ்ந்தமை, முடக்குவாதம் வந்தமை என்று பணியும், பிணியும் விபுலாநந்த அடிகளாரை அக்காலத்தில் வாட்டியுள்ளன. புதுக்கோட்டையில் வாழ்ந்த சிதம்பரம் செட்டியார் விபுலாநந்தருக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து ஆதரித்தார். தம் ‘இராம நிலைய’ வளமனையின் முன்பகுதியை விபுலாநந்தர் ஆராய்ச்சிக்கு ஒதுக்கித் தந்தும், பல்வேறு பணியாளர்களை அமர்த்தியும், இசைநுட்ப வல்லுநர்களைப் பணிக்கு அமர்த்தியும் யாழ்நூல் உருவாக உதவியுள்ளார்.

விபுலாநந்தர் அமைதியாகத் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்ய இலங்கையில் றொசல்லா ஊரில் இருந்த தம் வளமனையை வழங்கியும் சிதம்பரம் செட்டியார் யாழ்நூல் ஆராய்ச்சிக்கு உதவியுள்ளார். சிதம்பரம் செட்டியாருக்குச் சுவாமிகள் வரைந்த மடலில் யாழ்நூலை அச்சிடுவதற்குரிய திட்டம் தரப்பட்டுள்ளது.

றொசல்லா ஊரின் உட்சோக் எஸ்டேட்டிலிருந்து 9.5.45-ல் எழுதிய மடலில், ‘பிரிய நண்பர் திரு. பெ. ராம. ராம. சித அவர்களுக்கு ஆண்டவன் அருளை முன்னிட்டு எழுதுவது.

பேரன்புள்ள திரு. **அ. க. அவர்கள் கடிதத்தையும் படித்தேன். அக்கடிதத்தில் ஒரு குறிப்பு எழுதி, இதனுள் வைத்திருக்கிறேன். அவர்களுக்கு அனுப்பிவிடலாம். அச்சுச் சட்டத்தின்படியும், நானூறு பக்கம் புத்தகத்தை ஓராண்டில் வெளியிட்டால் அதிகாரிகள் வினாவுவதற்கு இடமுண்டு.

1944-ல் அச்சாகி முடிந்த முதல் ஐந்து இயல்களை(ப்) பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலை திரிபியல், பண்ணியல்களை இப்பொழுது வெளியிடலாம். படங்களை ஈற்றிற் சேர்ப்பது இப்பொழுது வெளிவரும் ஆங்கில ஆராய்ச்சி நூல்களின் மரபு பற்றி யாமும் ஈற்றிற் சேர்த்துக்கொள்ளுவோம். உள்ளுறையும் நூல் முற்றிலும் அச்சான பிறகு அச்சிடுதற்குரியது. இப்பொழுது நாம் அச்சிடவேண்டியது முகப்புத்தாள் மாத்திரமே (Title Page). இது திரு. அ. க. அவர்களுக்கு முன்னமே எழுதியிருக்கிறேன். வெளிக் கவருக்கு கையினால் செய்த தாள் தடிப்பானது. மதுரையிலும், விருதுநகரிலும் கிடைக்கும். வெண்சிவப்பு நிறத்தில் உபயோகிக்கலாம். முகப்பு(த்) தாளிலுள்ள விஷயத்தைச் சுருக்கி அச்சிடலாம்’ என்று யாழ்நூல் அச்சிடுவதற்குரிய அமைப்பை இந்த மடலில் அடிகளார் எழுதியுள்ளார். தட்டச்சிட்டு வந்துள்ள இந்த மடலில் குறிப்பிட்டவாறு யாழ்நூலின் முதல் பதிப்பு வெளிவந்துள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும்.

இன்னும் வெளிவராத விபுலாநந்தரின் பல மடல்களில் அவர்தம் விருப்பங்கள் பல தெரியவருகின்றன. அவரின் நாட்கடமைகள், பயணத் திட்டங்கள், உறவினர்கள், நண்பர்கள், அவர் ஆற்றிய பணிகள் பதிவாகியுள்ளன. அக்காலத்தில் அமைந்திருந்த சமூக அமைப்பு, கல்விமுறை, தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சித்திறம் யாவும் வெளிப்படுகின்றன.

அக்காலத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகள், சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்கள் ஆற்றிய பணிகள் யாவும் உலக்குக்குத் தெரியவருகின்றன. இலங்கையிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் சிதறிக் கிடக்கும் விபுலாநந்தரின் அரிய கையெழுத்துப் படிகளை முழுமையும் தேடிப் பதிப்பிக்க வேண்டியது தமிழ் ஆராய்ச்சியாளர்களின் தலைக்கடனாகும்.

- மு.இளங்கோவன், புதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த் துறை

துணைப் பேராசிரியர் 

ஜூலை 19 விபுலாநந்த அடிகளார்

நினைவுநாள்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

50 வது திருமண நாள் கொண்டாடிய இந்தத் தலைவர் யார் தெரியுமா

'காம்ரேட்' என்ற சொல் இப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், ஒரு சில தலைவர்களே காரணம். படத்தில் உள்ள, இந்தத் தலைவரும் காம்ரேட் கட்சியைச் சேர்ந்தவர்தான். இளமைக் காலத்தில் கட்சி கட்சி என்று ஓடி உழைத்துவிட்டு, 44 வயதில்தான் திருமணத்துக்கு சம்மதித்தார்.

பொன் விழா கண்ட அச்சுதானந்தன் தம்பதி

1967-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வாசுமதியின் கரம் பற்றினார். அப்போதும் இப்போதும் எப்போதும் எளிமைதான் இவரின் ஒரே அடையாளம். ஆழப்புலாவில் நண்பர்கள், உறவினர்கள் புடைசூழ வாசுமதியின் கரம் பற்றினார். 'ஒரே சிந்தனை; ஒன்றே இலக்கு' திருமணத்துக்குப் பிறகே, என் வாழ்க்கை சரியான பாதைக்குத் திரும்பியது எனப் பெருமிதத்துடன் குறிப்பிடுவார் அவர்.

 

தோழருடன் இணைந்த தோழியும் வெற்றிபெறத்தானே செய்வார். நர்ஸாகப் பணியாற்றிய வாசுமதி, நர்ஸ்களுக்கு சங்கம் ஏற்படுத்தி அவர்களின் நலனுக்காகப் போராடினார். கணவர் முதல்வர் பதவியில் இருந்தாலும் உரிமைக்காகப் போராட வாசுமதி தயங்கியதில்லை. மக்களால் நேசிக்கப்பட்ட  இந்தத் தம்பதி, தங்களின் 50 வது திருமண நாளை இந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். விருந்தினர்களுக்கு ஒரு டம்ளர் பாயசம் மட்டுமே வழங்கப்பட்டது. சில மாநிலங்களில், கம்யூனிஸ்ட் கட்சி தன் மூச்சை நிறுத்தாமல் இயங்கிக்கொண்டிருப்பது இவரைப் போன்றவர்களால்தான். அந்தத் தலைவரின் பெயர் வி.எஸ்.அச்சுதானந்தன்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

யூடியூப்பில் கலக்கும் 70 வயது தென் கொரிய பாட்டி!

தென் கொரியாவைச் சேர்ந்த 70 வயது பாட்டி யூடியூப்பில், அழகுக் குறிப்புகளைக் கூறி பிரபலமாகிவருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல், ‘கொரிய கிராண்ட்மா’  என்ற பெயரில்  அழகுக் குறிப்புகளை உற்சாகமாகக் கற்றுக்கொடுக்கும் இவருக்கு, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.   

Korean1_11142.jpg

முதலில், இந்த வீடியோக்களை யாரோ  போலியாக  உருவாக்குகிறார்கள் என்று கருதப்பட்டது. அதன் பிறகு,  ‘பார்க் மக்-ரே’ என்ற 70 வயது பாட்டிதான் இந்த வீடியோக்களைப் பதிவிடுகிறார் எனத் தெரியவந்தது. மார்க்கெட்டுக்குச் செல்லும்போது என்ன மாதிரியான மேக்-அப் போடவேண்டும் எனத் தொடங்கி, பல அழகுக்கலை குறிப்புகளை நகைச்சுவையாக அள்ளித்தெளிப்பதுதான் இந்தப் பாட்டி பிரபலமாவதற்கு காரணமாம். மனச்சோர்வில் பாதிக்கப்பட்ட இந்தப் பாட்டியை அதிலிருந்து மீட்கவே, அவரின் பேத்தி யூடியூப்பில் வீடியோக்களைப்  பதிவிடுமாறு ஊக்குவித்திருக்கிறார்.

 

தற்போது, இவரின் பிரபலத்தைக் கண்டு, சாம்சங் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள், இவரைத் தங்கள் நிறுவனங்களுக்கு மாடலாக்க காத்திருக்கின்றனர். தனது பிரபலத்தைப் பற்றி  பார்க் கூறுகையில், “70 வயதில் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால், என் வாழ்க்கை 71வது வயதில்தான் ஆரம்பித்திருக்கிறது”, என்று குதூகலமாகக் கூறுகிறார். 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

2 சமோசா... 600 ரூபாய்! கோலி ரெஸ்டாரெண்ட்டுக்கு வர்றீங்களா?

கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, கிரிஸ் கெயில், ஜாகிர் கான் வரிசையில் இப்போது விராட் கோலியும் சேர்ந்துவிட்டார். இது கிரிக்கெட்டைத் தாண்டிய ஒரு விஷயம். கோலி, இப்போது ‘நியூவா’ என்கிற ரெஸ்டாரெண்ட்டின் ஓனர். 

டெல்லி டேர் டெவில்ஸுக்கு எதிராக விளையாடி ஜெயித்தபோது, தனது RCB அணி வீரர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்தார் கோலி. ‘‘டெல்லி டேர் டெவில்ஸைத் தோற்கடித்ததுக்காக டெல்லியில் ஓர் அசத்தல் ட்ரீட் தரப்போகிறேன்’’ என்று தனது RCB வீரர்களை அவர் அழைத்துச் சென்ற இடம் - NUEVA என்னும் ஸ்டார் ரெஸ்டாரெண்ட். சாப்பிட்டு முடித்த பிறகுதான் தெரிந்ததாம் - இது கோலியின் சொந்த ரெஸ்டாரெண்ட் என்று! ஷேன் வாட்ஸன், ABD வில்லியர்ஸ் என்று பல ஜாம்பவான்கள் ட்ரீட்டில் செம ஹேப்பி. ‘‘இதற்காகவே அடிக்கடி RCB அணி ஜெயிக்க வேண்டும்’’ என்று கோலியின் ரெஸ்டாரெண்ட்டில் கிடைத்த பல நாட்டு உணவுகளை விழுங்கியபடி கமென்ட் அடித்தாராம், RCB அணியின் கோச் டேனியல் வெட்டோரி.

Kohli

டெல்லி ஆர்.கே.புரத்தில் அமைந்துள்ள ‘நியூவா’ ரெஸ்டாரெண்ட்டில் கூட்டம் அள்ளுகிறது. கோலியின் ரெஸ்டாரெண்ட் இது என்பதைத் தாண்டி பல 'வாவ்'கள் இதில் அடங்கியிருக்கின்றன. முதல் அம்சம் - நியூவா ரெஸ்டாரெண்ட்டின் செஃப் மைக்கேல் ஸ்வாமி. தென் அமெரிக்க உணவு வகைகளைச் சமைப்பதில் படு எக்ஸ்பர்ட். ‘‘கோலியின் உணவகத்தில் நான் தலைமை செஃப் எனும்போது பெருமையாக இருக்கிறது’’ என்று சொல்லும் மைக்கேல் ஸ்வாமி, இரண்டு தடவை ‘காவுர்மண்ட் அவார்டு’ (Gourmand Award) ஜெயித்தவர். இந்தியாவின் டாப்-50 செஃப்களில் ஒருவர் மைக்கேல். உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து, அங்குள்ள உணவுகளைச் சமைப்பதிலும் கைதேர்ந்தவராம். Ceviche de Camarones, Spicy mole, La Caja de Pinturas, Peruvian piscos - இவையெல்லாம் கோலியின் நியூவா ரெஸ்டாரெண்ட்டில் மைக்கேல் செஃப்பின் கண்டுபிடிப்பில் உருவான தென் அமெரிக்க ஐட்டங்கள்.

kohli

தரை தளம், முதல் தளம் என்று இரண்டு தளங்களில் இயங்குகிறது நியூவா. கீழே பார். இதில் இன்னொரு ஸ்பெஷல் - இங்குள்ளவை கிளாஸ் டைனிங். அதாவது, முழுக்க கண்ணாடியால் பதிக்கப்பட்டிருக்கும் இங்கே, கிச்சனில் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே சாப்பிடலாம். மற்றபடி காஸ்ட்லி ஹனிமூன் ஜோடிகளுக்கான மூன்லைட் டின்னர்தான் எனிடைம் ஸ்பெஷலாம். 

பார் வைக்க வேண்டும் என்றால், அரசு அனுமதி பெற வேண்டும். ‘‘இதற்கான லைசென்ஸை முறையாகப் பெற்றுத்தான் பார் நடத்தப்படுகிறது’’ என்று உறுதியளிக்கும் கோலி, ஏகப்பட்ட மாக்டெய்ல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறாராம். Que Melon மற்றும் Baya Beso - இவை இரண்டும் இளசுகளின் ஃபேவரைட்டாம். 

கோலி

முழுக்க முழுக்க தென் அமெரிக்க உணவகம் என்று விளம்பரப்படுத்தப்படும் நியூவா ரெஸ்டாரெண்ட்டில் - ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஜப்பான் போன்ற நாடுகளின் பாரம்பரிய உணவுகள்தான் பிரதானமாகப் பரிமாறப்படுகின்றனவாம். அப்போ இந்திய ஐட்டங்கள்? 

Kohli Restaurant Menu

உண்டு. சமோசா, சிக்கன், காபி, டீ, லெமன் ஜூஸ் என போனால் போகட்டும் என்று சில ஐட்டங்களை விற்பனை செய்கிறார்கள். அதேபோல், மெனு கார்டிலும் டாலரில்தான் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு சமோசாக்கள் கொண்ட ஒரு பிளேட்டின் விலை 9.50 டாலர். கோலி ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமென்றால்... ஆறு செஞ்சுரி! அதாவது... 600 ரூபாய். இதுதான் இங்கே ஆரம்ப விலை. 

 

இந்தியத் தலைநகரில் உள்ள உணவகத்தில் இந்திய உணவுக்கு பெப்பே! ஆனால், பில்லில் இந்தியாவின் முக‘வரி’ GST உண்டு!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

முட்டைக்குள் இன்னுமொரு முட்டை

 
முட்டைக்குள் இன்னுமொரு முட்டை
 

மாத்தளை பகுதியில் முட்டைக்குள் இருந்து இன்னுமொரு முட்டை கிடைத்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த லொக்குகே சந்திரிக்கா என்ற பெண் கடை ஒன்றில் இம் முட்டையை வாங்கிச் சென்றுள்ளார்.

முட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து உடைத்து பார்க்கும் போது சிறிய அளவிலான இன்னுமொரு முட்டை அந்த முட்டைக்குள் இருப்பதை அவதானித்துள்ளார்.

இந்த பெரிய முட்டையில் ஏனைய முட்டைகளைப் போன்று மஞ்சள் கரு, வெள்ளை கரு என்பன காணப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக சிறிய முழுமையான முட்டை ஒன்றும் காணப்பட்டதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

இப்படிப் பெரியளவிலான முட்டைகளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மஞ்சள் கரு இரண்டு இருப்பதுதான் வழமை ஆனால் இம் முட்டையில் இப்படி அமைந்துள்ளது அனைவருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

11-1.jpg

uthayandaily

Link to comment
Share on other sites

கதவுக்கும் ஆட்டுக்கும் மோதல்
 

ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ பகுதியிலுள்ள அலுவலகமொன்றின் பூட்டப்பட்ட கண்ணாடிக் கதவுகளை, ஆடொன்று உடைக்கும் காட்சி, அவ்வலுவலகத்தின் சி.சி.டி.வி கமெராக்களில் பதிவாகியுள்ளது.

காலையில் அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். ஆனால், எந்தப் பொருளும் திருடப்படாததைக் கண்டு, சி.சி.டி.வி கமெரா ஆராயப்பட்டது. அதிலேயே, ஆட்டின் திருவிளையாடல் சிக்கியது.


http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

சரித்திர விலாஸ் இன்றைய மெனு நூடுல்ஸ்

 

p46c.jpg

லகமயமாக்கலினால் கலாசார எல்லைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு சர்வதேச உணவு வகைகள் எங்கெங்கும் பரவிக் கிடக்கின்றன. இத்தாலியன் பீட்ஸாதான் இரவு உணவு என்பது இங்கே சகஜமாகிவிட்டது. பத்தே பத்து ரூபாய்க்கு பாஸ்தா பாக்கெட் இன்ஸ்டண்ட் உணவாகிவிட்டது. `பர்கர் ஆனாலும் பல் தேய்த்துவிட்டுச் சாப்பிடு’ என்கிறது யூத்மொழி. அமெரிக்க நகரங்களில் நம்ம ஊர் மசால் தோசை மணமணக்கிறது.  

p46a.jpg

இப்படி உலகமெங்கும் பிரபலமாகச் சுவைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உணவு வகைகளின் பூர்விக வரலாற்றை, கலாசாரப் பின்னணியை, சுவாரஸ்ய விஷயங்களை, அவற்றின் அரசியலைப் பேசுவதே சரித்திர விலாஸின் நோக்கம். சீனாவிலிருந்து புகுந்து இந்தியக் குழந்தைகளிடமிருந்து பிரிக்கவே இயலாத உணவாக மாறிவிட்ட நூடுல்ஸிலிருந்து தொடங்கலாம்.


பட்டுப் போன்ற
மென்மையான
வழவழப்பான
உணவுப் பொருளே!


இது சீனக்கவிதை ஒன்றின் சுருக்கம். கி.மு 300-ல் சீனாவில் வாழ்ந்த Shu Xi என்ற சீனக் கண்ணதாசன், நூடுல்ஸ் குறித்து சிலிர்த்துப் பாடியது. பண்டைய சீன இலக்கியங்களில் நூடுல்ஸ் குறித்த ஏகப்பட்ட குறிப்புகள் இருக்கின்றன. ‘நீ உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது என்று தெரிந்துகொள். நன்றாகச் சமைக்கப்படாத உணவை உண்ணாதே. நீ உணவை எந்தவிதத்தில் பிய்த்து உண்கிறாயோ அவ்விதத்தில்தான் நீ வாழும் முறையும் இருக்கும்’ என்றெல்லாம் சாப்பாட்டுத் தத்துவம் உதிர்த்துள்ளார் சீன ஞானி கன்பூசியஸ். போஜனப் பிரியரான அவருக்குப் பிடித்த உணவு நூடுல்ஸ்.

p46d.jpg

சரி, நூடுல்ஸின் வயது என்ன?

கோதுமை... சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே விளைந்ததாகக் கருதப்படும் பூமியின் பழைமையான தானியங்களில் ஒன்று. தென்மேற்கு ஆசியப் பகுதிகளில் அப்போதே கோதுமை பயிரிட்டதற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கி.மு 5000-ல் ஈராக்கில் கோதுமை செழிப்பாக விளைந்திருக்கிறது. மஞ்சள் நதியை மையமாகக் கொண்டு உருவான சீனர்களின் நாகரித்திலும் கோதுமையே முக்கிய விளைபொருள். கி.மு 4000-ம் ஆண்டிலேயே சீனர்கள் கோதுமையை மாவாக அரைத்து, அதைக் கொண்டு விதவிதமான உணவுகள் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்படி கோதுமை மாவைக் கொண்டு சீனர்கள் உருவாக்கிய ஓர் உணவே ‘நூடுல்ஸ்.’ p461.jpg

2005-ல் சீனாவின் மின்ஹி மாகாணத்திலுள்ள லஜியா என்ற பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள், சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூடுல்ஸின் எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர். ஆக, நூடுல்ஸின் வயது 4000+ என்பது உறுதியாகிறது.

p46b.jpgகிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சீனர்களின் அடிப்படை உணவாக நூடுல்ஸ் இருந்துள்ளது. ஆதிகால நூடுல்ஸுக்கும் இன்றைய நூடுல்ஸுக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள் உண்டு. பண்டைய நூடுல்ஸ் நீளநீளமான மண்புழு வடிவத்தில் இருக்கவில்லை. பண்டைய சீனர்கள் அதை ‘கேக்’ என்றுதான் அழைத்துள்ளார்கள். அதாவது மாவில் நீர் சேர்த்து, பிசைந்துத் தயாரிக்கும் எந்த உணவையும் ‘கேக்’ என்று சொல்வதே சீனர்களின் வழக்கம்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் ஹன் சாம்ராஜ்ஜியத்தில் கைகளால் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் மிக முக்கியமான உணவாக இருந்திருக்கிறது. ஹன் சாம்ராஜ்ஜியத்துக்குப் பிறகு அமைந்த டேங் சாம்ராஜ்ஜியத்தில்தான் நீள நூடுல்ஸை வெட்டிச் சமைக்கும் முறை கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. பிறகு யுவான் சாம்ராஜ்ஜியத்தில் நூடுல்ஸை உலர வைத்துப் பாதுகாக்கும் முறை இருந்திருக்கிறது.

Shuiying Bing, Bu tuo, Bo tuo… இவை வெவ்வேறு காலகட்டங்களில் நூடுல்ஸுக்கு வழங்கப்பட்ட சீனப்பெயர்கள்.கி.பி 960-ல் அமைந்த சங் சாம்ராஜ்ஜியத்தில்தான் ‘Mian’ என்னும் நூடுல்ஸின் இன்றைய சீனப் பெயர் புழக்கத்துக்கு வந்தது.    

p46j.jpg

பட்டுப்பாதையின் பல இடங்களில் 24*7 இயங்கும் நூடுல்ஸ் கடைகள் இருந்திருக்கின்றன. வெளிநாட்டுப் பயணிகளும் வியாபாரிகளும் அங்கே இளைப்பாறி, நூடுல்ஸ் உண்டு பசியாறி இருக்கின்றனர் என்கிறது 13-ம் நூற்றாண்டு வெனிஸ் நகரப் பயணி மார்க்கோ போலோவின் பயணக் குறிப்பு. இவர் தனது 24 ஆண்டுகள் பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் இத்தாலிக்குத் திரும்பிச் சென்றபோது நூடுல்ஸையும் எடுத்துச் சென்று ஐரோப்பியக் கண்டத்தில் அறிமுகப்படுத்தினார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். `இல்லவே இல்லை. அதற்கு முன்பே நூடுல்ஸ் ஐரோப்பியக் கண்டத்தில் வேறு வடிவில் இருந்தது’ என்று சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர்.        

p46e.jpg

சீன நூடுல்ஸை பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம். கோதுமையில் தயாரிக்கப்படுவது. அரிசியில் தயாரிக்கப்படுவது. Mong அல்லது Mung பீன் என்ற பாசிப்பயிறில் தயாரிக்கப்படுவது. இந்த அடிப்படையில், சீனர்களது பாரம்பரிய நூடுல்ஸில் பல வகைகள் உள்ளன. அவற்றுக்குப் பின்னணியில் சுவாரசியமான கதைகளும் உள்ளன.        

p46g.jpg

Sau mein...

நல்ல தமிழில் சொன்னால், ‘பல்லாண்டு வாழ்க’ நூடுல்ஸ். நீளமான நூடுல்ஸ். பிறந்த நாள் அன்று இந்த நீளமான நூடுல்ஸைச் சாப்பிட்டால் ஆயுளும் நீளமாக அமையும் என்பது சீனர்களின் நம்பிக்கை. நூடுல்ஸின் இழை அறுபடாமல் சாப்பிட வேண்டும் என்றும் நினைப்பார்கள். ஒரு வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அன்று இந்த நீள நூடுல்ஸை சமைத்து உண்பது சீனர்களின் பாரம்பர்ய வழக்கம். சீனர்களின் புத்தாண்டுக் கொண்டாட்ட விருந்திலும் இந்த நூடுல்ஸ் இடம்பெறுகிறது.

Liang Mian...

சீனாவை ஆட்சி செய்த (கி.பி 690 - 705) ஒரே பெண் பேரரசி Wu Zetian... பேரழகி. டேங் வம்சத்தைச் சேர்ந்தவள். வூவின் காதலன் பெயர் Zhang Changzong. ‘அறியாத வயசு புரியாத மனசு’ என பால்யத்திலேயே பற்றிக் கொண்ட காதல் அது. பிப்ரவரி 17. வூவின் பிறந்தநாள். காதலனுடன் உணவகத்துக்குச் சென்றாள். அன்று வெயில் அதிகம். ஆகவே சுடச்சுட நூடுல்ஸ் உண்ணப் பிடிக்கவில்லை. சற்றே யோசித்த வூ, நூடுல்ஸ் மாஸ்டருடன் சமையலறைக்குள் புகுந்தாள். சமைத்த நூடுல்ஸை எடுத்து, குளிர்ந்த நீரில் போட்டு, அதனுடன் சில விஷயங்களைச் சேர்த்து அழகுப்படுத்தி மேசை மீது வைத்தாள். அன்று காதலனுடன் குளுகுளு நூடுல்ஸ் விருந்து. தன் பிறந்தநாள் அன்று, வூ கண்டுபிடித்த இந்த உணவுக்கு Liang Mian என்று பெயர். ஆம், Cold Noodles. இன்று வரை குளுகுளு நூடுல்ஸும் சீனர்களின் விருப்பத்துக்குரியதாக இருந்து வருகிறது.     

p46f.jpg

ஹார்மோனி நூடுல்ஸ்...

முன்னொரு காலத்தில் சீனாவின் ஒரு பகுதியை ஆண்ட மன்னன் Zhou. ஒரு போரில் தோற்றுப்போனான். அரசியல் கைதியாகச் சிறைபட்டான். ஒருநாள் யாரோ ஒருவர் ஒடிசலாக, மிகவும் சோர்வாக, வாடி வதங்கி ஊருக்குள் வருவதை மக்கள் பார்த்தனர். அது மன்னர் Zhou என்றறிந்ததும் பதறினர். அவரது உடலைத் தேற்றுவதற்காக, சூப் உடன் கலந்த நூடுல்ஸ் தினமும் செய்து கொடுத்தனர். மன்னர் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்குத் திரும்பினார். தன்னை அன்புடன் கவனித்துக் கொண்டவர்களுக்கு நன்றி சொல்லும்விதமாக மன்னர் Zhou, மக்களுக்கு சூப் நூடுல்ஸ் தயாரிக்கத் தனி ஆளாகக் களம் இறங்கினார். வேறு யாரையும் வேலை செய்யவிடவில்லை.

எத்தனை பேருக்கு வேண்டுமா னாலும் நூடுல்ஸ் தயாரித்துவிடலாம். ஆனால், சூப் தயாரிப்பது சிக்கல் பிடித்த வேலை. மன்னருக்கு அதிகம் கஷ்டம் கொடுக்கக்கூடாது என்று நினைத்த மக்கள், அவர் தயாரித்துப் பரிமாறிய சூப் நூடுல்ஸில் இருந்து, நூடுல்ஸை மட்டும் எடுத்துச் சாப்பிட்டார்கள். அந்த சூப்பை கிண்ணத்துடன் திருப்பிக் கொடுக்க, மன்னரும் மற்றவர்களுக்கு அதே சூப்புடன் நூடுல்ஸ் மட்டும் சேர்த்துப் பரிமாறினார். அதனால் குறைந்த சூப்பில் அதிக நூடுல்ஸ் பரிமாற முடிந்தது. இதுவே ஹார்மோனி நூடுல்ஸின் கதை.     

p46h.jpg

இன்றும்கூட சீனர்கள், ஹார்மோனி நூடுல்ஸ் ஆர்டர் செய்தால், சூப்பில் ஊறிய நூடுல்ஸை மட்டுமே உண்கிறார்கள். சூப்பை அப்படியே மிச்சம் வைப்பதே இந்த வகை உணவுக்கான கலாசாரம்.

Dan Dan... 

இது சீனாவின் இன்னொரு வகை பாரம்பரிய நூடுல்ஸ். 1841-ல் Sichuan என்ற சீன நகரத்தில் மக்கள் தொழில் ஏதுமின்றிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது Chen Baobao என்ற வியாபாரி, பிழைப்புக்காக தன் வீட்டிலேயே நூடுல்ஸ் தயாரித்து, அதை மூங்கில் கம்புகளில் தொங்கவிட்டு, ‘நூடுல்ஸ் வாங்கலையோ நூடுல்ஸ்’ எனத் தெருத் தெருவாகச் சென்று வியாபாரம் செய்தார். Dan என்றால் சீன மொழியில் மூங்கில் என்று பொருள். அதுவே Dan Dan நூடுல்ஸாக எளிய மக்களிடையே புகழ்பெற்றது.

இப்போது சீனாவில் பெரிய ரெஸ்டாரண்ட்களின் மெனுவிலும் Dan Dan நூடுல்ஸ் இடம்பெற்றிருக்கிறது. சில்லி பெப்பெர் சாஸ், சோயா சாஸ், கொஞ்சம் ஊறுகாய் சேர்த்து Dan Dan நூடுல்ஸைச் சீன மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

ன்றைக்கு அதிகமாகப் புழக்கத்தில் இருப்பவை இன்ஸ்டண்ட் நூடுல்ஸ். அவற்றைத் தயாரித்து அதிக அளவில் சந்தைக்குக் கொண்டு வந்தது, Nissin Foods என்ற ஜப்பானிய நிறுவனம். தைவானில் பிறந்த ஜப்பானியர் Momofuku Ando. நவீன நூடுல்ஸின் தந்தை இவரே. சட்டென சில நிமிடங்களில் தயார் செய்யும் Ramen என்ற இன்ஸ்டண்ட் நூடுல்ஸை, 1958-ல் சந்தைக்குக் கொண்டு வந்தார் (இதன் இன்றைய சந்தைப் பெயர் Top Ramen).        

p46i.jpg

ஒரு கப்... அதனுள் மசாலா சேர்க்கப்பட்ட நூடுல்ஸ்... சுடுதண்ணீர் சேர்த்தால் போதும்... சாப்பாடு ரெடி. உதடுகளுக்கிடையில் நூடுல்ஸை உறியலாம். இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் Cup Noodles. இதையும் Momofuku Andoதான் 1971-ல் அறிமுகப்படுத்தினார்.

புதிது புதிதாக கிரியேட்டிவாக எதையாவது கண்டுபிடித்த்துக் கொண்டே இருக்கும் ஐப்பானியர், இருபதாம் நூற்றாண்டில் தங்களுடைய ஈடு இணையற்ற கண்டுபிடிப்பாகப் பெருமையுடன் சொல்லிக் கொள்வது, இன்ஸ்டண்ட் நூடுல்ஸைத்தான்.

1983-ல்தான் இந்தியாவுக்குள் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் அடியெடுத்து வைத்தது. `நெஸ்ட்லே’வின் மேகியாக. `இரண்டு நிமிடத்தில் சமைக்கலாம்’ என்று இந்தியர்களை புருவம் உயரச் செய்து சந்தையை வெகு வேகமாகப் பிடித்தது.

ஜூலியஸ் மேகி - இவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர். 1872-ல் தன்னுடைய தந்தையின் மில்லை நடத்த ஆரம்பித்தார். அப்போது அங்கே நடந்த தொழில் புரட்சியால் நிறைய பெண்கள் மில் வேலைக்கு வர ஆரம்பித்தார்கள். அதனால், அந்தப் பெண்களுக்கு வீட்டில் சமைப்பதற்கான நேரம் குறைந்துபோனது. அந்தப் பெண்களின் நிலையை மனதில் வைத்து, புரதச் சத்து அதிகம் கொண்ட, சமைப்பதற்கும் ஜீரணமாவதற்கும் எளிதான ரெடிமேட் உணவுப் பொருள்களை தயாரித்தார் ஜூலியஸ் மேகி. அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. அப்படி ஜூலியஸ் மேகியின் தயாரிப்பில் ஒன்றாகத்தான் மேகி நூடுல்ஸும் உருவானது.

இன்றைக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் சந்தை வெகுவேகமாக விரிவடைந்து வரும் நாடு இந்தியாதான்!

Link to comment
Share on other sites

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஒரு பெட்டி வளர முடியுமா?

 

 
 
 
 
 
 
  • ஓவியங்கள்: லலிதா
    ஓவியங்கள்: லலிதா
  • 19chsuj_idam_porul_3187446g.jpg
     
 

ஒரு கல்லுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? நாம் தினமும் வளர்கிறோம். ஆனால், கல் அப்படியே இருக்கும். கல் மட்டுமல்ல, உயிரில்லாத எந்தப் பொருளுக்கும் வளர்ச்சி இல்லை. கல், மண், சிலை, படம், புத்தகம், மேஜை, வீடு, பேனா, பெட்டி என்று அனைத்துப் பொருட்களுக்கும் இது பொருந்தும். இப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், இந்த நிமிடமே உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

1835-ம் ஆண்டு என்ன நடந்தது தெரியுமா? பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு ஒரு பொருள் வந்துசேர்ந்தது. ஒரு பெரிய கறுப்புப் பெட்டி. கவனமாக உள்ளே எடுத்துச் சென்றார்கள். பெட்டியின் மேல்புறத்தில் அழகிய, வண்ணச் சித்திரங்கள் இருந்தன. அதே சமயம் அது மிகவும் பழைய பெட்டி என்பதால் உடைந்துவிடக் கூடாதே என்று பொறுமையாகப் பிரித்தார்கள். பெட்டிக்கு உள்ளே கரிய நிறத்தில் ஒரு மம்மி. அதாவது, பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு மனித உடல்.

பெட்டிக்கு உள்ளே இருந்த எகிப்திய எழுத்துகளை ஆராய்ந்தபோது பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தெரியவந்தன. பழங்கால எகிப்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் மம்மிதான் அது. அவர் பெயர், Hornedjitef. ஒரு கோயிலில் பூசாரியாக இருந்திருக்கிறார். மூன்றாம் தாலமி என்னும் மன்னரின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். அப்படியானால் இந்த மம்மியின் வயது கிட்டத்தட்ட 2,230 ஆண்டுகள்.

அடடா, ஒரு பழைய பெட்டிக்குள் இத்தனை வரலாறா என்று திகைத்து மேலும் ஆராய்ந்தார்கள். பல்வேறு வண்ணங்களில் பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் நிறைய எழுத்துகளும் ஓவியங்களும் காணப்பட்டன. பெட்டிக்கு உள்ளே மேல்புறத்தில் குட்டிக் குட்டி நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தன. மம்மிக்கு அருகில் இருந்த சிறிய கலை வேலைப்பாடு கொண்ட பொருட்கள் காணப்பட்டன. அவை என்ன? பழைய வரலாற்று நூல்களை எடுத்து வைத்துத் தேடியபோது, அவை மந்திர சக்தி வாய்ந்த தாயத்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டன.

இப்போது ஓரளவுக்கு அந்த மம்மியைப் பற்றி அவர்களுக்குப் புரிந்துபோனது.

அந்தப் பூசாரி மீண்டும் உயிருடன் திரும்ப ஆசைப்பட்டிருக்கிறார். எனவே, தன் உடலைக் கவனமாகப் பாதுகாக்கச் சொல்லி, தன்னுடைய உதவியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் பயபக்தியுடன் அவரைப் பதப்படுத்தியிருக்கிறார்கள். அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக கூடவே தாயத்துகளையும் வைத்திருக்கிறார்கள். திரும்பவும் உயிர் வருவதற்காகச் சில மந்திரங்களையும் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

ரொம்ப நன்றி மம்மி, உன்னிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம் என்று சொல்லி, பெட்டியைப் பூட்டி வைத்தார்கள் ஆய்வாளர்கள். பல ஆண்டுகள் கழிந்த பிறகு புதிய ஆய்வாளர்கள் வந்து திரும்பவும் பெட்டியைத் திறந்தார்கள். மீண்டும் முதலில் இருந்தே ஆராயத் தொடங்கினார்கள். மேலும் பல விஷயங்கள் கிடைத்தன. மம்மி இருந்தது ஒரு பெட்டியில் அல்ல. அது உண்மையில் ஒரு சிறிய உலகம். பெட்டியைத் திறந்தால் உள்ளே மேல்புறத்தில் வானம். அதனால்தான் அங்கே நட்சத்திரங்கள் வரைந்திருக்கிறார்கள். அங்கும் இங்குமாக உள்ள கோடுகள், சாதாரணக் கோடுகள் அல்ல, அது திசை காட்டும் ஓவியம். அதாவது, வரைபடம்.

மம்மி சொர்க்கத்துக்குப் போயாக வேண்டும். ஒருவேளை அதற்கு வழி தெரியாவிட்டால் அங்கும் இங்கும் அலையக் கூடாது அல்லவா? அதனால்தான் சொர்க்கத்துக்கு எப்படிச் செல்வது என்பதற்காக அந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இப்படியெல்லாமா யோசித்திருக்கிறார்கள்!

சரி, மம்மி நிறைய சொல்லிக் கொடுத்துவிட்டது, இனி மேற்கொண்டு திறக்கவேண்டியிருக்காது என்று நினைத்து பெட்டியை இறுக்கமாக மூடினார்கள். பல ஆண்டுகள் கழிந்தன. சில புதிய ஆய்வாளர்கள் மீண்டும் ஆர்வத்துடன் வந்து பெட்டியைத் திறந்தார்கள். இந்தமுறை மம்மியை வெளியில் எடுத்து நவீன அறிவியலைப் பயன்படுத்தி ஸ்கான் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு முக்கியமான தடயம் கிடைத்தது. மம்மியின் முதுகில் சில எலும்புகள் முறிந்திருந்தன. உயிருடன் இருந்தபோது அந்த மனிதனுக்கு முதுகு வலி இருந்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்.

உற்சாகத்துடன் மேலும் ஆராயத் தொடங்கினார்கள். இந்த முறை அவர்களுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. இவர் உயிருடன் இருந்தபோது என்ன சாப்பிட்டிருப்பார்? எந்த மாதிரியான ஆடையை அணிந்திருப்பார்? அவருக்கு எழுதப் படிக்கத் தெரியுமா? இசை பற்றியும் ஓவியம் பற்றியும் தெரிந்திருக்குமா? அவர் எவ்வளவு மணி நேரம் தூங்குவார்? அவருடைய வீடு எப்படி இருந்தது? அவர் என்ன மாதிரியான கடவுளை வணங்கியிருப்பார்? அவருக்குப் பல் வலி, தலை வலி எல்லாம் வருமா?

தெரியவில்லை. ஆனால் விடை தெரியும்வரை அவர்கள் தேடிக்கொண்டேதான் இருப்பார்கள். பாருங்கள், கிடைத்தது என்னவோ ஒரே ஒரு பெட்டிதான். ஆனால், அதை ஒவ்வொரு முறை திறக்கும்போதும் புதிது புதிதாக நிறைய கற்க முடிகிறது. முதல்முதலில் 1835-ம் ஆண்டு திறந்தபோது அந்த மம்மியைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. இப்போதோ நிறைய தெரிந்துகொண்டிருக்கிறோம். காரணம் நம்முடன் சேர்ந்து அந்தப் பெட்டியும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து பற்றிய நம் அறிவும் வளர்ந்திருக்கிறது, இல்லையா?

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

‘ஆற்றலை வளர்க்க சந்தோசம் அவசியம்’
 

image_104fa662ff.jpgஎப்பொழுதும் தங்கள் மனதைப் பாலைவனமாக வைத்திருக்கும் நபர்கள் அமைதியைக் கண்டுகொள்வது சிரமம்தான். 

பசும்சோலைக்குள் இருந்தவண்ணம், கடும் முட்கள் நிறைந்த வனத்தில் பயணம் மேற்கொள்ளும் இத்தகையவர்கள் நெஞ்சில் ஈரத்தை உள்வாங்காமல் நிம்மதி காணமுடியாது.  

மக்களுடன் மக்களாக இணைந்து வாழ்வதன் சுகானுபவத்தை உணராது, வெறும் ஜடமாக இருந்தால் எல்லாமே வெறுத்துப் போய்விடும்.  

உயிர்களை நேசிக்காதவன் நிலை, தன் உயிரையும் வரட்சியுடன் இயங்காமல் வைத்திருப்பது போலாகும். 

புன்னகையும் சிரிப்பும் இல்லாமல் பலர் இன்று வாழ்ந்துவருவது ஒருவித உயிரற்ற நிலையைப்போல இருக்கும். மனிதன் இயல்பாக மகிழ்வது சிரமமானது அல்ல; ஆற்றலை வளர்க்க சந்தோசம் அவசியம். 

Link to comment
Share on other sites

நீலம் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார் (ஜூலை 20, 1969)

அமெரிக்காவின் அப்பேல்லோ-11 என்ற விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்ராங் 1969 ஆம் ஆண்டு இதேநாளில் முதன் முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார்.

 
நீலம் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார் (ஜூலை 20, 1969)
 
அமெரிக்காவின் அப்பேல்லோ-11 என்ற விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்ராங் 1969 ஆம் ஆண்டு இதேநாளில் முதன் முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார்.

மேலும் இதே நாளில் நடந்த பிற சம்பவங்கள்

• 1937 - வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி காலமானார்.

• 1962 - கொலம்பியா நிலநடுக்கத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

• 1973 - தற்காப்புக் கலை வல்லுநரும், ஹாலிவுட் நடிகருமான புரூஸ் லீ மரணமடைந்தார்.

• 1979 - இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

•  1996 - ஸ்பெயின் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா இலங்கையில் பதவியேற்றார் (ஜூலை 20, 1960)

இலங்கையின் பிரதமராக ஸ்ரீமாவோ ரத்வதே தியாஸ் பண்டாரநாயக்கா 1960-ஆம் ஆண்டு இதே நாளில் பதவியேற்றார். இவர்தான் உலகிலேயே முதல் பெண் பிரதமர் ஆவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக பணியாற்றியவர். தன்னுடைய கணவர் சாலமன் பண்டாரநாயக்கா கொல்லப்பட்ட பின் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். 1980-ல் ஜெயவர்த்தனாவின் ஆட்சியின்போது ஊழல் குற்றச்சாட்டுக்களால் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, குடியுரிமையும்

 
உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா இலங்கையில் பதவியேற்றார் (ஜூலை 20, 1960)
 
இலங்கையின் பிரதமராக ஸ்ரீமாவோ ரத்வதே தியாஸ் பண்டாரநாயக்கா 1960-ஆம் ஆண்டு இதே நாளில் பதவியேற்றார். இவர்தான் உலகிலேயே முதல் பெண் பிரதமர் ஆவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக பணியாற்றியவர். தன்னுடைய கணவர் சாலமன் பண்டாரநாயக்கா கொல்லப்பட்ட பின் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

1980-ல் ஜெயவர்த்தனாவின் ஆட்சியின்போது ஊழல் குற்றச்சாட்டுக்களால் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, குடியுரிமையும் பறிக்கப்பட்டது. அதன்பின் ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கவும் தடை விதிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி மரணம் அடைந்தார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

‘பெரிய’ மனிதர்களின் கதை!

height_1_3187671f.jpg
 
 
 

கூடைப்பந்து விளையாட்டில் தரையிலிருந்து எவ்வளவு உயரத்தில் கூடை பொருத்தப்பட்டிருக்கும் தெரியுமா? 10 அடி. அத்தனை உயரத்தில் இருக்கும் கூடைக்குள் பந்தைப் போட வேண்டுமென்றால் எம்பிக் குதிக்காமல் வேலைக்கு ஆகாது. ஆனால், சன் மிங் மிங்குக்கு அந்தக் கவலை இல்லை. எம்பவே வேண்டாம். கையை உயர்த்திப் பந்தைக் கூடைக்குள் தள்ளினால் போதும். அவரது உயரம் அப்படி. 7 அடி 9 அங்குலம்.

1983-ல் சீனாவில் பிறந்தவர். பதினைந்து வயது வரை கூடைப் பந்தைத் தொட்டதில்லை. அப்போதே அவரது உயரம் 6 அடி 7 அங்குலம். அந்த உயரம்தான் சன் மிங் மிங்கை, கூடைப்பந்து விளையாட்டை நோக்கி ஈர்த்தது. 2005-ல் அமெரிக்காவுக்கு வந்தார். முதன்மையான கூடைப்பந்து சங்கமான ‘நேஷனல் பாஸ்கட்பால் அசோஸியேஷன்’ (NBA), வருடந்தோறும் புதிய, திறமையான கூடைப் பந்து வீரர்களைத் தேர்ந்தெடுக்க தேர்வு நடத்தும். அதில் கலந்துகொண்ட சன் மிங் மிங்கை, சங்கத்தில் உள்ள முப்பது அணிகளில் ஒன்றுகூடத் தேர்ந்தெடுக்கவில்லை.

கூடவே இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது. சன் மிங் மிங்கின் மூளையில் பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகில் ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அதை அகற்ற ஒரு லட்சம் டாலர் தேவை என்றார்கள். சன் மிங் மிங் திகைத்து நின்றபோது, அவரது ஏஜெண்ட் சார்லஸ், மருத்துவச் செலவுக்காக நிதி திரட்டி உதவினார். கட்டி அகற்றப்பட்டது.

சன் மிங் மிங்குக்குச் சிறிய அணிகளில் கூடைப் பந்து விளையாடும் வாய்ப்புகள் கிட்டின. அந்த உயரமான மனிதரின் உற்சாக ஆட்டத்தைப் பார்க்கவே ரசிகர்கள் கூடினார்கள். ஜாக்கி சான் தனது ‘ரஷ் ஹவர் 3’ படத்தில் ‘ஜெயண்ட்’ என்ற கதாபாத்திரத்தில் சன் மிங் மிங்கை ஒரு முக்கியமான சண்டைக் காட்சியில் நடிக்கவைத்தார். உலகமெங்கும் அவர் புகழ் பரவியது. மேலும் சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. இன்னொரு புறம் கூடைப் பந்தாட்டக் களத்தின் அதிசய ஹீரோவாகவும் சன் மிங் மிங்கின் அறியப்பட்டார்.

உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரர் என்ற கின்னஸ் சாதனை தற்போது சன் மிங் மிங் வசமே உள்ளது. இவருடைய மனைவி ஷு யானும் உயரமானவரே. இருவரது உயரமும் சேர்த்து 13 அடி 10.72 அங்குலம். இன்றைக்கு உலகில் வாழும் உயரமான தம்பதி இவர்களே என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார்கள்.

சரி, இதுவரை வாழ்ந்ததிலேயே மிக உயரமான மனிதன் என்ற சாதனையை வைத்திருப்பவர் யார்?

ராபர்ட் வால்டோ. 1918-ல் அமெரிக்காவின் அல்டான் நகரத்தில் பிறந்தவர். 10 அடி 9 அங்குலம் வரை வளர்ந்தவர். 22 வயதில் ஒரு விபத்தில் இறந்து போனார். உலகத்திலேயே உயரமான மனிதருக்கு உலகத்திலேயே நீளமான சவப்பெட்டி செய்யப்பட்டது.

height_2_3187670a.jpg

ராபர்ட்டுக்கு முன்பே அவரைவிட உயரமானவர்கள் இருந்திருக்கலாம், வாழ்ந்து மறைந்திருக்கலாம். ஆனால், ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டவர்களில் ராபர்ட்டே உயரமானவர். அதேபோல பெண்களில் உயரமானவர் என்ற பெருமையை அதிகாரபூர்வமாகத் தக்க வைத்திருப்பவர், சீனாவில் வாழ்ந்த ஸெங் ஜின்லியான். 8 அடி 1.75 அங்குலம் வரை வளர்ந்த ஸெங், பதினேழு வயதிலேயே இறந்துபோனார்.

சரி, இப்போது வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் உயரமான ஆணும் பெண்ணும் எங்கே இருக்கிறார்கள்?

உலகில் வாழும் உயரமான ஆண் துருக்கியில் இருக்கிறார். அவரது பெயர் சுல்தான் கோஸன். உயரம் 8 அடி 3 அங்குலம். கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான சுல்தான், தற்போது சர்க்கஸ் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ‘பல்பு மாட்ட, உயரத்தில் இருந்து எதையாவது எடுத்துக் கொடுக்க எங்கள் வீட்டில் ஏணியையே பயன்படுத்தியதில்லை. என்னைத்தான் பயன்படுத்துவார்கள். உயரத்தால் எப்போதும் எனக்குள்ள பிரச்சினை உடைகள் வாங்குவதும், காருக்குள் உட்கார முடியாமல் தவிப்பதும்தான்’ என்கிறார் சுல்தான்.

சன் ஃபாங். சீனாவில் வாழும் 7 அடி 3 அங்குலம் வளர்ந்த இந்த 30 வயதுப் பெண்ணே தற்போது உலகின் வாழும் உயரமான பெண். இப்படி உயரமாக இருப்பவர்கள் ஒவ்வொருவருமே மற்றவர்களால் அதிசயமாகப் பார்க்கப்படுவதும் கவனிக்கப்படுவதும் இயல்பானது. ஆனால், வாழ்க்கைக்கான தேவைகளுக்காக உயரமான மனிதர்கள் தங்களையே காட்சிப் பொருளாக வைத்துப் பணம் சம்பாதித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதும் தொடர்கிறது.

உயரம்தான் அவர்களுக்கு தனித்துவ அடையாளத்தை வழங்கியிருக்கிறது என்றாலும், அந்த உயரத்தால் அவர்கள் தனிப்பட்ட சங்கடங்களையும் வலிகளையும் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் மறக்கக் கூடாது.

வாழும் இந்தியர்களில் உயரமான மனிதர் உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறார். தர்மேந்திர பிரதாப் சிங் என்ற 8 அடி 1 அங்குல உயரம் கொண்ட இந்த மனிதரும் பல்வேறு உடல் உபாதைகளால், மருத்துவச் செலவுக்கு வழியின்றி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். சிலருக்கு உயரம்கூடத் துயரம்தான்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

 

செஸ் விளையாடுங்க... ஹேப்பியா இருங்க.

சதுரங்கம் என்னும் செஸ் விளையாட்டு, உலகம் முழுக்க ஒரே முறையில் விளையாடப்படும் அறிவு சார்ந்த விளையாட்டு. இது, ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில்தான் உருவானது என்றும், பின்னர் மங்கோலியா வழியாக உலகமெங்கும் பரவியது என்றும் வரலாறு கூறுகிறது. இதன் சரியான விதிமுறைகள், இத்தாலியில் 16-ம் நூற்றாண்டில் உருவானது. 64 கட்டங்களை ராஜா, ராணி, சிப்பாய் உள்ளிட்ட காய்களைக்கொண்டு ஆடப்படும் இந்த விளையாட்டு, புத்திக்கூர்மைக்கு உதவும் ஓர் அரசமுறை விளையாடல். சதுரங்கம், மனித இனத்தின் ஆரம்பகட்ட விளையாட்டுகளில் ஒன்று எனப்படுகிறது. செ‌ஸ் ‌விளையா‌ட்டைத் ‌தொடர்ந்து ஆடும் சிறுவர், சிறுமிகளின் மூளை, நு‌ட்பமாகவு‌ம் அவர்க‌ளி‌ன் வேலைத்திறன் மே‌ம்ப‌டு‌வதாகவு‌ம் ஆ‌ய்வாள‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர். இது, உண்மையானது என்றும் அவர்களின் படிப்புத்திறன் மற்றும் ஞாபகசக்தியும் கூடுகின்றன என்றும் சமீப கால ஆய்வுகள் கூறுகின்றன.

செஸ்

மேலும், ஒரு கலையாகவும் அறிவியலாகவும்கூட வர்ணிக்கப்படுகிறது. மனிதர்கள் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த செஸ் விளையாட்டை, இப்போது ரோபோக்களும் ஆடத் தொடங்கிவிட்டன. ரோபோக்களை மிஞ்சும் சதுரங்க விளையாட்டு வீரர்களும் இருப்பது நமக்கான ஆறுதல்தான். ஓய்ந்து கிடைக்கும் நம்முடைய மூளைக்கு வேலைகொடுப்பதற்கு மட்டுமல்ல செஸ் விளையாட்டு, வறண்டுபோன நம்முடைய சிந்தனையைத் தூண்டும் ஓர் அரிய  விளையாட்டாகவும் பயன்படுகிறது. செஸ் விளையாடிவிட்டு, ஒரு கவிதையோ, நாவலோ எழுத முடியும் என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. சரி, எதற்கு இந்த செஸ் புராணம் என்கிறீர்களா?

 

ஜூலை 20-ம் நாளான இன்றுதான் அனைத்துலக சதுரங்க நாள். 1924-ம் ஆண்டு ஜூலை 20 அன்று, உலக செஸ் கூட்டமைப்பு, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளின் நினைவாகவே, இன்று அனைத்துலக செஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இனி சிகரெட், குட்கா, மது போன்றவை எடுத்துக்கொண்டால்தான் படைப்புத்திறன் பெருகும் என்றெல்லாம் சொல்பவர்கள், செஸ் ஆடத்தொடங்குங்கள். ஆபத்தில்லாத நல்ல பழக்கம் இது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

யக்குநர் பிரியதர்ஷன் - லிசி தம்பதியின் மகள் கல்யாணி தன் பெற்றோர் வழியில் சினிமாவுக்கு வருகிறார். நாகார்ஜுனா-அமலா தம்பதியின் மகன் அகில் நடிக்கும் தெலுங்குப் படத்தில், கல்யாணிதான் ஹீரோயின். இந்தப் படத்தை ‘24’ பட இயக்குநர் விக்ரம் குமார் இயக்குகிறார். வாரிசுகள் வர்ராங்க!

p38a.jpg

ஜோயிதா மோண்டல்... இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் சில வருடங்களுக்கு முன்புவரை திருநங்கைகளுக்கே உரிய பிரச்னைகள் அனைத்தையும் சந்தித்துக்கொண்டிருந்தவர்தான். ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு எதிர்நீச்சல் போட்டார். தன்னைப்போன்ற திருநங்கைகளின் உரிமைகளுக்காக வாழ ஆரம்பித்தார். அவருடைய சேவைக்காக உத்தர் தினஜ்பூரில் உள்ள தேசிய லோக் அதாலத் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். உலகில் வெகு சில திருநங்கைகளே நீதிபதியாகியிருக்கிறார்கள். அமெரிக்காவின் முதல் திருநங்கை நீதிபதியான விக்டோரியா கோலகோவ்ஸ்கியும் இந்த வருடம்தான் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நல்ல மாற்றங்கள் தொடரட்டும்

p38b.jpg

p38c.jpg

ன்னட சூப்பர்ஸ்டார் ரவிச்சந்திரனின் மகன் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். அவர்  நடிக்கும் முதல் படத்தில் அக்‌ஷராஹாசன்தான் ஹீரோயின் என கிசுகிசுக்கிறது சான்டல்வுட். தமிழ்,கன்னடம் என இருமொழிகளில் பிரமாண்டமாக தயாராக இருக்கும் இந்தப்படத்திற்கான வேலைகள் விரைவில் தொடங்க இருக்கிறதாம். அக்‌ஷரா தற்போது அஜித்குமாரோடு விவேகம் படத்தில் பிஸியாக இருக்கிறார். அக்‌ஷரா முடிவுக்காகத் தான் காத்திருக்கிறது கன்னடநாடு. மோஸ்ட் வான்டட்

p38d.jpg

சூர்யாவின் அடுத்த இயக்குநர் சுதா கோங்கரா. ‘இறுதிச்சுற்று’ மற்றும் அதன் தெலுங்கு ரீமேக்கான ‘குரு’ படங்களை இயக்கிய சுதா, சூர்யாவிடம் சொன்ன ஸ்கிரிப்ட், அவருக்குப் பிடித்துப்போக, உடனே வேலைகளை ஆரம்பிக்கச் சொல்லிவிட்டாராம். தன் 2டி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை சூர்யாவே தயாரிக்கிறார். முதல்சுற்று!

p38e.jpg

ர்விந்த் சுவாமி இயக்குநர் ஆகிறார். ஐந்து ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தவரை ‘கடல்’ மூலம் மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவைத்தார் மணிரத்னம். இப்போது அவரே அர்விந்த் சுவாமியை இயக்குநராகவும் ஆக்க இருக்கிறார்! மணிரத்னம் தயாரிக்கும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது! ராசியான கை

p38f.jpg

புதுச்சேரியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் இறங்கியிருக்கிறது டெல்லி. கிரண் பேடியிடம் பணிந்துபோகாத முதலமைச்சர் நாராயணசாமிக்கு செக் வைக்க ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் மீது எழுந்திருக்கும் ஊழல் புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறது. சாமிக்கே இவ்ளோ சோதனையா!

Link to comment
Share on other sites

வேற்றுக்கிரக உயிர்களைத்தேடும் தென் ஆப்ரிக்க தொலைநோக்கி

வேற்றுக்கிரக உயிர்களைப்பற்றி ஆர்வமுடையவர்கள் இனி தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து கவனிப்பது அவசியம்.


புதிய பிரம்மாண்டமான ரேடியோ தொலைநோக்கி திட்டத்தின் முதற்கட்டம் அங்கே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.


இந்த அதிநுட்ப தொலைநோக்கிகள் அண்டவெளியின் எழுபத்தி ஐந்து சதவீத பகுதியில் வெளிப்படும் ரேடியோ அலைகளை கண்டறியும் வல்லமை கொண்டது.


அதன் மூலம் பெருவெடிப்பின் இரகசியங்களை கண்டறிய இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

மீண்டும் சுறாவிடமிருந்து தப்பிய அலைச்சறுக்கு வீரர்

2015ஆம் ஆண்டு தொலைக்காட்சி நேரலையில் ஆஸ்திரேலியாவின் மிக் ஃபேனிங்கை ஒரு சுறா தாக்க முயற்சித்தது. ஆனால் அவர் தப்பிவிட்டார். தற்போது 2017இலும் அவர் அலைச்சறுக்கு செய்யும்போது ஒரு சுறா அங்கே வந்ததாம். மீண்டும் தப்பிவிட்டார். இது குறித்த காணொளி.

Link to comment
Share on other sites

ஃபேஸ்புக்கில் வைரலாகும் வீடியோஸ்..!

இந்த நாய் செய்யும் சேட்டையப் பாருங்க....

 

 

என்னமா ஆடுறான் இந்த குட்டிப்பையன்: மனதைக் கவரும் சிறுவனின் கிடார் டான்ஸ்...

Link to comment
Share on other sites

சிங்கப்பூரின் அரசியலை சித்திரப்படக் கதை மூலம் சொல்லும் ஓவியரின் படைப்பு, 'காமிக்ஸுக்கான ஆஸ்கார் விருது' என்று கருதப்படும் எய்ஸ்னர் விருதுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

‘அழுக்குக்கு அழகு பிடிப்பதில்லை’
 

image_d4682dbab8.jpgமனோரம்மியமான மாலை வேளை! சில்லென்ற இளம்காற்று வரவேற்க, கலகலப்புடன் மழலைகளும் அவர்களுடன் புதுப்பொலிவுடன் பூவையரும் வாலிபரும் பூ வனத்துக்குள் மெய்மறந்து உலாவருகின்றனர். முதியோரும் இளையவராகின்றனர்.  

வாசம் மிகுந்த மலர் பிரதேசம்; வட்டமிடும் புள் இனம்; குழந்தைகள் தளிர் நடைபயின்று அம்மாக்களுடன் ஓட்டப்பந்தயம். வானரங்கள் இதைக்கண்டு மரத்தின் கிளை விட்டிறங்கி இளித்து மகிழ்ந்தன.

மக்களோடு மக்களாய், இரு நண்பர்கள் வந்தனர். ஒருவன் மட்டும் அழுக்கான உடையில், பரட்டைத்தலையன். சற்றுக்கோபத்துடன் சொன்னான். “சே..ச்சே... இது என்ன இடம்.  சும்மா மாமிசக் கடையோரம் குடித்துச் சூது விளையாடியவனை இங்கே ஏன் கூட்டிவந்தாய்? என்ன கூச்சல் இங்கு? நேரம்போவதுதான் மிச்சம். இங்கிருக்கப் பிடிக்கவில்லை; போகிறேன்” என்று, போயே விட்டான்.

அழுக்குக்கு அழகு பிடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

ட்ரெண்டி லுக்கிற்கு இதையெல்லாம் பின்பற்றுங்கள் பெண்களே

 
 

பெண்

 

யிரம் பேருக்கு மத்தியில் செல்வதாக இருந்தாலும் தான் தனித்துத் தெரிய வேண்டும் என்பதே பெண்ணின் விருப்பம். பதின் பருவத்தினர் மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் பெண்களும் வயது வித்தியாசம் இன்றி ட்ரெண்டியாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கின்றனர். டிசைனிங் பற்றி எதுவும் தெரியாமல் தனக்குத் தானே டிசைனராகி தேவையற்ற செலவுகளால் பெருமளவு பணத்தை இழந்து விடுகின்றனர். இதற்கெல்லாம் இனி கவலைப்படத் தேவையில்லை பெண்களே

பெண்

ஸ்டைலிஷாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் முதலில் தங்களது உடல்வாகுக்கு ஏற்ற ஸ்டைல் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஹேர்ஸ்டைல், மேக்கப், சிம்பிள் அக்சசரீஸ் மற்றும் உடைகள் என தன் உடலோடு பொருந்தி அழகை கூட்டிக் காட்ட வேண்டும் என்பதே முக்கியம். ட்ரெண்டில் இருக்கிறது என்பதற்காக எல்லாப் பொருள்களும் அனைத்துப் பெண்களுக்கு ஒரே மாதிரியாகப் பொருந்தாது. 

ட்ரெண்டியாகவும் தெரிய வேண்டும் அதே சமயம் அழகிலும் மாற்றுக் குறையக் கூடாது என்று நினைக்கும் பெண்கள் கீழே கூறப்பட்டிருக்கும் 8 விதிகளை மறக்கமால் பின்பற்ற வேண்டும். 

1) உங்களை ஸ்டைலாகக் காட்டுவதில் முதல் இடம் வகிப்பது உங்களது ஹேர் ஸ்டைல். உங்கள் மனதுக்கு நெருக்கமான அழகுக் கலைஞரை சந்தித்து உரையாடுங்கள். ட்ரெண்டி ஹேர் ஸ்டைலுக்கு மாறுங்கள். 

2) நீங்கள் உடுத்தும் உடை உங்களைப் பற்றிச் சொல்வதில் முதலிடத்தில் உள்ளது. நீங்கள் எதை உடுத்தும்போதும் நம்பிக்கையோடு உடுத்துங்கள். உங்கள் உடை கம்பீரமாகவும், தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும் பட்சத்தில் அதுவே உங்கள் மீதான மதிப்பீட்டை உயர்த்தும். உங்கள் உடை உங்களின் உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கட்டும். 

3) இடத்துக்கு தகுந்த உடையை தேர்வு செய்வது ஒரு கலை. அலுவலகம் செல்வதற்கு, பார்ட்டிக்கு செல்ல, திருமண விழாக்களில் கலந்துகொள்ள என்று சூழலுக்குப் பொருந்தும் உடைகளை அணிந்து செல்லுங்கள். எனது வாழ்க்கைப் பயணத்தில் எது வந்தாலும் அதனை என்னால் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வதும் எளிதாகும். 

4) நீங்கள் எவ்வளவு அதிகம் பணம் கொடுத்து வாங்கியிருந்தாலும் உங்களது உடல்வாகுக்கு பொருந்தாத உடைகள் உங்களை ட்ரெண்டியாகக் காட்டாது. நீங்கள் செலவளித்த பணம் வீணாகி விடும். எந்த உடையாக இருந்தாலும் சிக்கென பொருந்தும்படி அணிந்து செல்லுங்கள். பாராட்டுகளை அள்ளுங்கள். அழகிய ஆடையோடு உங்களது தன்னம்பிக்கையும், செல்லத் திமிருமே அழகிய அணிகலன்கள். அவற்றை மறந்திட வேண்டாம். 

5) ஜீன்ஸ் எப்போதுமே ட்ரெண்டில் இருப்பதால் இரண்டு ஜோடியாவது உங்கள் வாட்ரோப்பில் இருக்கட்டும். திடீரென வெளியில் கிளம்பும் போதும், ட்ராவல் போன்ற சூழலிலும் சாதாரண டீ சர்ட்டையும் கொஞ்சம் பந்தாவாகக் காட்ட ஜீன்ஸ் அவசியம். 

6) நீங்கள் அணியும் உடை 50 சதவிகிதம் மற்றவர்களுக்குப் பிடித்திருந்தால்போதும். மீதம் 50 சதவிகிதம் அது உங்களுக்கு ஆத்மார்த்தமாகப் பிடித்திருக்க வேண்டும். நீங்கள் செல்லும் இடத்தில் இருக்கும் நபர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்க வேண்டும் என்பதையும் உடைகளால் தீர்மானியுங்கள். எனவே, உடையில் எப்போதும் சிறப்புக் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதுக்குப் பிடிக்காத உடை எப்போதும் வேண்டாம். 

7)  ட்ரெண்டியாகத் தெரியவேண்டும் என்பதற்காக உங்களது தோற்றத்தை தலைகீழாக மாற்ற வேண்டியதில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் மாற்றம் செய்தாலே ட்ரெண்டியாகத் தோன்றலாம். பெல்ட் அணிவது, துப்பட்டாவை வித்தியாசமாகப் போடுவதும் ஸ்டைலை மாற்றும். அணிகலன்களிலும் வித்தியாசம் காட்டுங்கள்.

8) நீங்கள் இப்படி மட்டும்தான் இருப்பீர்கள் என்ற ஒற்றை அடையாளத்தை உருவாக்கி விடாதீர்கள். ஜீன்ஸ் டீஷர்ட் என்று ட்ரெண்டியாக டிரஸ் செய்தாலும் தங்கச் செயின் வளையல், கொலுசு போன்றவற்றை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்ற கொள்கை முடிவுகளை விட்டு விடுங்கள். என்ன உடுத்துகிறீர்களோ அதற்கு ஏற்ப அணிகலன்களையும் மாற்றி உங்களை பர்பெக்டாக உணருங்கள். எப்பவும் நான் புதிதாகவும் இளமையாகவும் இருக்கிறேன் என்பதை உலகுக்குச் சொல்ல நினைக்கும் பெண்கள் ட்ரெண்டில் தான் இருப்பார்கள் இல்லையா?!

 

இவற்றைப் பின்பற்றினால் நீங்கள் எப்போதும் ட்ரெண்டியாகத் தான் தெரிவீர்கள்?! இளமை ததும்பும் புன்னகையோடு வலம் வாருங்கள். அனைத்திலும் வெற்றியை எட்டுங்கள் பெண்களே! 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

மனிதன் நிலவில் கால் பதித்த நாள் இன்று!

சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமான நாளாக 1969-ம் ஆண்டின்  ஜூலை 21-ம் தேதியை வரலாற்று அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள். ஆம், அன்றுதான் முதன்முதலாக மனிதன் நிலவில் கால்வைத்தான். நிலவைக் காட்டி சோறு ஊட்டிக்கொண்டிருந்த மனிதன், நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்ததாகச் சொன்ன மனிதன், நிலவை எண்ணி காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த மனிதன் இந்த நாளில் அதே நிலவில் கால் வைத்த அதிசயம் நடைபெற்றது. அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் விண்வெளி ஆய்விலும் கடுமையான போட்டியை இரு நாடுகளும் உருவாக்கி வந்தன.

நிலவில்

முதல் விண்வெளி பயணத்தை ரஷ்யா நிறைவேற்றியதும், அமெரிக்கா வெகுண்டது. எப்படியேனும் ரஷ்யாவை மிஞ்ச வேண்டும் என்ற அடிப்படையில் நிலவுக்கு மனிதனை அனுப்பி வைக்கும் முயற்சியைக் கையில் எடுத்தது. தீவிரமான முயற்சியில் பல கட்ட சோதனைகளுக்குப் பின்னர், 1969-ம் ஆண்டு, ஜூலை மாதம் 16 - ம்  தேதி, அப்பல்லோ 11 என்ற விண்வௌி ஓடத்தை அமெரிக்கா ஏவியது. நான்கு நாள்கள் பயணம் செய்த அந்த விண்வௌி ஓடம், அதே ஆண்டு ஜூலை 20ம் தேதி சந்திரனில் இறங்கியது. நிலவில் இறங்கும் இந்தத் திட்டத்தில் கட்டளை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், கட்டளை விமானியாக மைக்கேல் காலின்சும், மற்றுமோர்  அதிகாரியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர்.

 

மைக்கேல் காலின்ஸ் விண்வெளி ஓடத்திலேயே தாங்கிக்கொள்ள, ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் 'ஈகிள்' எனும் சிறிய ரக ஓடத்தில் சந்திரனில் ஜூலை 20 அன்று இறங்கினர். பின்னர் 6 மணி நேர தாமதத்துக்குப் பிறகு ஜூலை 21-ம் நாள் நிலவில் இறங்கி உலகையே வியக்க வைத்தனர். ஆல்ட்ரின் சற்றே தயங்க, முந்திக்கொண்ட ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். மனிதன் நிலவில் கால் வைத்த வரலாற்று மகத்துவம் நிறைந்த நாள் இன்று.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

நடிகர் திலகம் சிவாஜியின் முதற்படம் பராசக்திக்கு எழுதப்பட்ட ‘பொளெர்’ விமர்சனம்

 
 

சிவாஜிகணேசன்

தமிழத்திரையுலகின் நடிப்புக்கு இலக்கணமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவரது நினைவுநாள் இன்று!

1928 ம் ஆண்டு அக்டோபர் 1 ந்தேதி தஞ்சை சூரக்கோட்டையில் சுதந்திரப்போராட்ட வீரர் சின்னய்யா - ராஜாமணி தம்பதிக்குப் பிறந்தவர் வி.சி. கணேசன் என்கிற விழுப்புரம் சின்னய்யா கணேசன். இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருந்ததால் படிப்பைத் துறந்து அரிதாரம் பூசிக்கொண்டார். சக்தி நாடக சபா, கே.ஆர் ராமசாமியின் நாடகக்குழு, அவ்வை தி.க ஷண்முகத்தின் நாடகக்குழு எனப் பல நாடகக் குழுக்களைக் கடந்து 40 களின் இறுதியில் அறிஞர் அண்ணாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். திமுகவில் எம்.ஜி.ஆருக்கு முன்னதாக முக்கியத்துவம் பெற்ற நடிகராக இருந்தவர் சிவாஜிகணேசன். 

மங்கள கான சபா குழு சென்னையில் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் நாடகங்கள் நடத்திவந்தபோது அந்த நாடகத்திற்கு அன்றைக்கு சினிமாவில் சிறுசிறுவேடங்களில் நடித்துவந்த ஒரு நடிகர் தினமும் நாடகம் பார்க்க வருவார்.  ஒருமுறை கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து அந்த நடிகர்,  நேரில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். பொன்னிற மேனி, கருகுரு முடி, கருணை குணம் இவற்றால் கவரப்பட்ட கணேசன், அவருடன் நட்பானார். அந்த பழக்கம் நாளடைவில் அவர்களை அண்ணன் தம்பிகளாக்கியது. உணவு வேளைகளில் கணேசன் வராமல் தன் சொந்த மகனுக்கு ஒருநாளும் உணவு பரிமாறியதில்லை சத்தியபாமா என்ற அந்த தாய். ஒரே இலையில் உணவோடு உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட அவர்கள்தான் பின்னாளில் திரையுலகைக் கட்டி ஆண்டார்கள். அந்த அண்ணன் எம்.ஜி.ஆர். 

காஞ்சியில் அண்ணாவின் வீட்டில் தங்கி திராவிட நாடு இதழ்ப் பணியில் உதவியாக இருந்தபடியே நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் கணேசன். அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். சிவாஜியாக நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசி நடிக்க ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்க கணேசனுக்கு உள்ளுர ஆசையிருந்தாலும் வசனத்தைத் தவிர அண்ணா எதிர்பார்த்த விஷயங்கள் அவரிடம் இல்லை. அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை பரிந்துரைத்தார்.

சிவாஜி கணேசன்ஒரு மதிய வேளையில் எம்.ஜி.ஆரை கையோடு காஞ்சிக்கு அழைத்துவந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திரையுலகில் புதிய வீச்சுக்கு அந்த நாள் அடித்தளம் இட்டது. சிவாஜியாக நடிக்க எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டார். நாடகத்தில் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் சில காரணங்களால் நாடகத்தில் நடிக்க மறுத்து ஒதுங்கிக்கொண்டார். அதேசமயம் நாடக ஆசிரியர் அண்ணாத்துரையின் எழுத்து மீது பெரும் காதல் புத்தது அவருக்கு. வாய்ப்பு இப்போது கணேசனுக்கு வந்தது. சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியம் நாடகத்திற்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்தார் பெரியார். கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனை காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சிமுகர்ந்தார். கணேசன் , 'சிவாஜி' கணேசன் ஆனார்.

நேஷனல் பிக்சர்ஸ் நடத்திவந்த பெருமாள் முதலியார் ஒருமுறை சிவாஜியின் நாடகத்தைப் பார்க்கநேர்ந்தது. கணேசனின் நடிப்பு பிடித்துப்போய்விட்டது அவருக்கு. சில நாள்களில் தான்எடுக்கவிருந்த படத்திற்கு கதாநாயகனாக கணேசனை ஒப்பந்தம் செய்தார். பராசக்தி என்ற  அந்தப்படம் வளர்ந்துவந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. 

படத்திற்கு பைனான்ஸ் செய்துவந்த ஏ.வி.எம் செட்டியார் ஒருநாள் படப்பிடிப்பை காணவந்தார். சிறிதுநேரத்திற்கு பின் ஏ.வி.எம், பெருமாள் முதலியாரிடம் அதிருப்தியான குரலில் சொன்னார். பையன் நல்லாத்தான் இருக்கான். கொஞ்சம் குதிரைமூஞ்சியா இருக்கே. உடம்பும் ஒல்லியா இருக்கு... இத்தனை ஆயிரம் பணம் போட்டு எடுக்கிறோம். எதுக்கு விஷப்பரீட்ஷை. கே.ஆர்.ராமசாமி இல்லேன்னா டி.ஆர் மகாலிங்கத்தை வெச்சி எடுத்துக்கலாம். பையனை செட்டில் பண்ணி அனுப்பிடு”- இடிவிழுந்ததுபோலானது சிவாஜிக்கு. சினிமாக்கனவு கண்ணெதிரில் கலைந்துகொண்டிருந்தது. ஆனால் பெருமாள் முதவியார், எதுக்கும் அண்ணாகிட்ட ஒருவார்த்தை கேட்டிடலாம் என அப்போதைககு முடிவை தள்ளிப்போட்டார். தகவல் அண்ணாவுக்கு சென்றபோது, ராமசாமி நிறைய படங்கள்ல நடிச்சிட்டு வர்றார். புதுப்பையனைப் போட்டே முடிங்க... நல்லா நடிப்பான்... என சிவாஜிக்கு வாழ்வு கொடுத்தார். சில மாதங்களுக்கு சிவாஜிக்கு நல்ல ஓய்வும், சத்தான உணவும் தந்து அவரை குண்டாக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர். 

படத்தில் குணசேகரன் வேடத்தில் சிவாஜி அறிமுகமானார். தமிழ்சினிமாவில் ஒரு புதிய சகாப்தம் உருவானது. எஸ்.எஸ் ராஜேந்திரனுக்கும் இதுவே முதல்படம். பராசக்தி படம் முழுக்க முழுக்க சமூக சீர்திருத்தக்கருத்துகளைப் பொட்டில் அடித்தாற்போல் பேசியது. அன்றைய சமூகத்தில் அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். நாத்திகக் கருத்துக்களை பேசிய பராசக்தியை ஆஸ்திகர்கள் வசைபாடித்தீர்த்தனர். நாத்திகர்கள் கொண்டாடினர். திராவிட இயக்க வரலாற்றில் பராசக்திக்குத் தனியிடம் உண்டு. 
பராசக்தி படம் அன்றைக்கு சமுதாயத்தில் ஏற்படுத்திய எதிர்வினைக்கு உதாரணமாக அன்றைக்கு பிரபல சினிமா இதழான குண்டூசி அதற்கு எழுதிய விமர்சனத்தை இங்கு தருகிறோம். விமர்சனத்தை படியுங்கள்...

ஆஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! தெய்வ நிந்தனைத் திருப்பணி நிறைந்த ''பராசக்தி"

ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பிரசாரம் செய்ய விரும்பி செய்யப்படும் ஒரு காரியமானது, அதற்கு நேர்மாறான பலனை அளிக்குமானால், அந்த முயற்சியில் முனைந்தவர்களைக் குறித்து நாம் அனுதாபப்படத்தான் வேண்டும்! அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் நேஷனல் பிக்சர்ஸின் ''பராசக்தி". ஆஸ்திகத்தை அழித்து, நாஸ்திகத்தை வளர்த்துவிடநினைத்து செய்யப்பட்ட முயற்சியான "பராசக்தி", நாஸ்திகம் நசித்து, ஆஸ்திகம் பலப்படவேதான் வழி செய்திருக்கிறது. ஆகவேதான், 'ஆஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்' என்று குறிப்பிட்டேன்.

 

சிவாஜிகணேசன்

ஏதோஒரு பராசக்தி கோயில் பூசாரி. கோயிலின் உள்ளேயே ஓர் அபலையைக் பலாத்காரம் முயற்சிக்கிறான் என்று கதை ஒன்றைக் கையாண்டு, அதை மனதில் கொண்டு வசனங்களை எதுகை மோனை பிராஸங்களுடன் 'தீட்டி', கடவுளை மனம் கொண்ட மட்டும் தூஷணை செய்யப்படுகிறது இப்படத்தில். இதைப் பார்த்து, வெறுப்புற்று ஆஸ்திகர்கள் நாஸ்திகர்களாக மாறி விடுவார்கள் என்பது சம்பந்தப் பட்டவர்களின் எண்ணமாயிருக்கலாம். ஆனால், அது வீண் கனவாக முடிந்ததோடு மட்டுமின்றி ஆஸ்திகத்தை பலப்படுத்தி விட்டது. 'எத்தகைய பதிதனாயினும், இவ்வளவு அக்கிரமமான காரியத்தை தெய்வ சன்னிதியில் செய்யத் துணிவு கொள்ள மாட்டான்' என்பது அவர்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல; ''அடடா, நாம் இனி பிரதி தினமும் கோவிலுக்குப் போயாக வேண்டும். அப்படிப் போனால் தான் எங்காவது பதினாயிரம் இடத்தில்  ஓரிடத்திலாவது இப்படி நடப்பதாயிருந்தாலும் அதைத் தடுக்க முடியும்" என்ற எண்ணம் தான் நிலைத்து அவர்களது ஆஸ்திகமனப்பான்மை ஸ்திரப்படுகிறது. இந்த ஒரு ''பராசக்தி"யில்லை; இதை விட விஷமப் பிரசாரம் நிறைந்த படங்கள் அநேகம் வந்தாலும் நம் மக்களின் ஆஸ்திக மனத்தைக் கலைத்துவிட முடியாது!

'பராசக்தி வெறுங் கற்சிலை' என்று அழுத்தம் திருத்தமாக' பிரசாரம் செய்கிறார் கதாசிரியர். ஆனால், படக் கதையிலேயே பல இடங்களில் பல்டி அடித்திருக்கிறார். பராசக்தியின் சன்னிதியிலே கல்யாணியைக் கற்பழிக்க முயன்றானே பூசாரி, அவனால் அது முடிந்ததா? பூசாரியின் தயவிலே ஜீவனம் நடத்தும் அவன் கையாள், சரியான தருணத்தில் தூக்கத்திலிருந்து எழுந்து, அலட்சிய மணியை அடிக்க - அதனால் பூசாரியின் காரியம் கைகூடாமல் போக வழி செய்தது பராசக்தியின் அருள்தானே. அது மட்டுமா? பூசாரி உடலெல்லாம் ரண காயம் ஏற்பட்டு ஊர் சிரிக்க உயிர் தப்பினான். 'தெய்வம் நின்றுதான் கொல்லும்' என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? 

கல்யாணி ஆற்றுப் பாலத்திலிருந்து குழந்தையைக் கீழே வீசுகிறாள். அதே தினம், அதே நேரம் விமலா உல்லாசப் படகில் வருகிறாள்; வீசி எறியப்பட்ட குழந்தை தவறாமல் அந்தப் படகில் வந்து விழுகிறது; அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்ததும், ஒரு சிறு காயம் கூடப் படாமல் குழந்தை உயிர் பிழைக்கிறது. - இதெல்லாம் பராசக்தியின் அருளில்லாமல் சாதாரணமாக முடியக்கூடிய காரியங்களா?
அருமைத் தங்கை கல்யாணி. அவள் கல்யாணத்திற்கு வர முடியாத அருமை அண்ணன்மார் மூவர், சிங்கப்பூரில் தவிக்கின்றனர். ஒருவன் மட்டும் பணத்துடன் கிளம்புகிறான். அதற்குள் தங்கை கல்யாணி ஒரு குழந்தைக்குத் தாயாகி, அதே தினம் கணவன், தந்தை இருவரையும் இழந்து கதியற்றவளாகி இட்லி சுட்டு விற்றுப் பிழைக்கிறாள். பணத்துடன் வந்த அண்ணன் குணசேகரன், சென்னை நகர் அடைந்து, ஒரு விலைமகளால் ஏமாற்றப்பட்டு பணத்தைப் பறி கொடுக்கிறான். பிறகு, காரியப் பைத்தியமாக மாறி தங்கையைத் தேடிவந்து, தான் இன்னாரென்று காட்டிக்கொள்ளாமலே அவளுக்கு உதவி வருகிறான்.

சிவாஜிகணேசன்

காமுகன் ஒருவனது செயலினால் கல்யாணி அங்கு விட்டுக் கிளம்பி, ஒரு பிளாக்மார்க்கெட் பேர்வழியிடம் சிக்கித் தப்புகிறாள். இதற்கிடையில் சிங்கப்பூரிலிருந்து நடையிலேயே கிளம்பிய சந்திர சேகரன், ஞானசேகரன் ஆகிய மற்ற இரு சகோதரர்களும் வழியில் குண்டு வீச்சு சமயம் பிரிந்து விடுகின்றனர். தமிழ்நாட்டை அடைந்த சந்திரசேகரன் நீதிபதியாகி விடுகிறான். ஞானசேகரன், மூடவனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு புரட்சிப் பண்ண ஆரம்பிக்கிறான். பூசாரியினால் கற்பழிக்கப் படவிருந்த கல்யாணி தப்பி பசியால் துடித்த குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்று கைதாக்கப்படுகிறாள். 

நீதிபதி சந்திரசேகரன் முன், அந்தக் குற்றவிசாரணை ஆரம்பமாகிறது. குற்றவாளி தன் தங்கை என் அறிந்த நீதிபதி மூளைக் கலக்கம் அடைகிறார். தங்கையைத் தேடிவந்த குணசேகரன் பூசாரி செய்ய நினைத்த அட்டூழியத்தை அறிந்து அவனை வாள் கொண்டு தாக்கி கைதாகிறான். வழக்கு நடைபெறுகிறது. குழந்தை உயிர் தப்பிவிடவே கல்யாணிக்கு விடுதலை கிடைக்கிறது; பூசாரியைத் தன் தற்காப்புக்காகவே தாக்கியதாக குணசேகரனுக்கு மன்னிப்புக் கிடைக்கிறது. குடும்பம் ஒன்று சேர கதை சுபமாக முடிகிறது. இதுதான் படக்கதை. கதையில் ஒரு புதுமையுமில்லை. படக் கதைக்கும் பெயருக்கும் 'குலாம் காதருக்கும் கோகுலாஷ்டமிக்கும்' உள்ள சம்பந்தம்தான் இருக்கிறது. பராசக்தியின் மீது வசை புராணம் பாடப்படுகிறதே, அதற்காக இந்தப் பெயர் கொடுத்தார்களோ என்னவோ?

நாடகமாகப் பிரபலமானது இந்த "பராசக்தி" நாடகம் நடிக்கப்பட்ட போதே இந்த நாடகத்தைத் தடை செய்ய வேண்டுமென கிளர்ச்சிகள் நடந்தது உண்டு. நாடகக் கதையை திரைக்கு ஏற்றபடி, முக்கியமாக கடவுளையும் சர்க்காரையும் சமூகத்தையும் தாக்கு தாக்கென்று தாக்க இடம் வைத்து - மாற்றி அமைத்திருக்கிறார் மு.கருணாநிதி. தமது உத்வேகத்தில் அதற்காக வரம்பைக் கூட கடந்து கீழ்த்தரமான அளவுக்குச் சென்றிருக்கிறார். பல நூறு ரூபாய் நோட்டுகளைப் பறிகொடுத்த - சூட்டும் கோட்டும் அணிந்த - படித்த நாகரிக வாலிபனுக்கு உடனே போலீஸில் புகார் செய்யத் தோன்றாதது ஆச்சர்யமே. இதற்காக அந்தப் பாத்திரம் கதையின் பின்பகுதியில் கூறும் சமாதானம் சிரிக்கத்தான் செய்கிறது. இறுதியில், நீதிமன்றக் காட்சியில் கல்யாணி மீதும், குணசேகரன் மீதும் வழக்கு நடக்கும்போது, மைனர் வேணு, பிளாக்மார்க்கெட் நாராயண பிள்ளை, ஏமாற்றிப் பணம் பறித்த விலைமகள் இவர்களெல்லாம் அங்கு எப்படி, ஏன் வந்தார்கள் என்பதைப் படம் பார்ப்பவர்களின் கற்பனா சக்திக்கே விட்டிருக்கிறார்கள்!

கருணாநிதிமக்கள் பக்தியுடன் காவடி எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கிண்டல் செய்யவே 'பாடைக் காவடி' எடுப்பதாக உள்ள கட்டம் புகுத்தப்பட்டிருக்கிறது. கதையின் தொடர்ச்சிக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. இது விஷமத்தனமான - விஷமான அறிவிலிகளின் செயலாகும். இதைவிட மக்களின் மனதைப் புண்படுத்தும், கீழ்த்தரமான குரூரமான கற்பனை இருக்கவே முடியாது.
இப்படத்தின் வசூல் வெற்றிக்கு ஒரு காரணம் படத்தின் வசனங்கள், உணர்ச்சி ததும்பும் நடையிலே படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார் மு.கருணாநிதி என்பது மறுக்க முடியாத உண்மை கடவுளை இழிவு படுத்தும் இடங்களிலும் சர்க்காரையும் சமூகத்தையும் விளாசும் கட்டங்களிலும் மட்டுமின்றி, படம் முழுவதிலுமே வசனங்கள் உள்ளத்தைத் தொடும் முறையில் இருக்கின்றன.
"இட்லி விற்றுப் பிழைப்பது தமிழ் நாட்டில் தாலி அறுத்தவர்களின் தாசில் உத்தியோகம்" என்கிறார் வசனகர்த்தா. அவருக்குப் பழக்கமான, அவருக்குத் தெரிந்த ஒரு சில விதவைகள்தான் உலகம் என்று நினைத்திருக்கும் அவரது குறுகிய நோக்கத்தையே இது காட்டுகிறது.
'பரஸ்திரீயை நாடிப்போவேன்' என்று ஒரு கணவன் சொல்லும்போது, 'நானும் வேறு புருஷனைத் தேடிக் கொண்டு போகிறேன்' என்று ஒரு ஸ்திரீ சொல்லுவது தமிழ்நாட்டுப் பெண்மணிகளையே அவமதிப்பதாகும் என்பதை தமது ஆவேசத்தில் வசன கர்த்தா மறந்து விட்டார் போலும்!

பைத்தியத்தின் வாயிலாக பஜனைகள் வருண ஜபம், காவடி எடுத்தல் இவற்றைப்பற்றியெல்லாம் பிதற்றவைத்திருக்கிறார். ஆம்; எல்லாம் ஒரே பிதற்றல்தான், அர்த்தமற்ற முறையிலே காந்திஜி செய்த காரியம் ஒன்றும் இழுக்கப்படுகிறது. “பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டர், ஏழு குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய நல்லதங்காள், இந்தக் கதைகளைத் தடை செய்யாத அரசாங்கம் குழந்தையைக் கொல்ல முயன்ற கல்யாணியைக் குற்றம் கூறுவது தவறு” என்று வசனகர்த்தா கூறுவது அர்த்தமற்ற வாதம். அக்கதைகள், நடந்த காலத்தையும் அப்போதய சூழ்நிலையையும் பற்றி நிதானமாக ஆழ்ந்து யோசித்தால் அவருக்கே அது தெரியவரும்.

புதிய முகம் கணேசனைத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்ப்பட ரசிகர்களின் பாராட்டுதலுக்கு உரியவர்கள் நேஷனல் பிக்சர்ஸார். இப்படத்தில் நடிப்பில் முதல் ஸ்தானத்தை குணசேகரனாக வரும் கணேசனுக்குத்தான் அளிக்க வேண்டும். நல்லதொரு கதாபாத்திரத்தில் தோன்றி பிரமாதமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுவிட்டார் அவர். காரியப் பைத்தியமாக மாறும் கட்டத்திலிருந்து இவரது நடிப்பில் காணப்படும் விறுவிறுப்பு படிப்படியாக முன்னேறி, படத்தின் இறுதிக் கட்டத்தில் உச்சநிலையை அடைகிறது. வசனங்களை அழுத்தம் திருத்தமாக உணர்ச்சியுடன் பேசுகிறார். இவரது எதிர்கால வெற்றிக்கு இப்படம் நல்ல சூசனையாகும். சிற்சில இடங்களில் மட்டும் நாடக மேடை வாசனை வீசுகிறது.

நீதிபதியாக வரும் சஹஸ்ரநாமத்திற்கு படத்தில் அதிக சந்தர்ப்பங்கள் இல்லை யெனினும், உள்ளவரை வெகு நன்றாக நடித்துள்ளார். நீதிமன்றத்திலே, குற்றவாளி தன் தங்கை என அறிந்ததும் அவரது நடிப்புப் பிரமாதம். பிச்சைக்காரர்களை மகாநாடு கூட்ட அழைக்கும் சகோதரன் ஞானசேகரனாக வரும் எஸ்.எஸ்.ராஜேந்திரனது நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. தன் தங்கையைப் பற்றி அறிந்து துடிக்கும்போதும், இறுதியில் தன் குடும்பத்தினரைக் காணும் கட்டத்திலும் அவரது நடிப்பு மயிர்க்கூச்செறியச் செய்கிறது. நடிகர்களில் இம்மூவரைத் தவிர, மற்றவர்களுக்கு அதிகமாக வேலையில்லை. பிளாக் மார்க்கெட் நாராயண பிள்ளையாக வரும் வி.கே.ராமசாமி இப்படத்தில் தம் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். புஸ்தகங்களின் பெயரைக் கொண்டே இவர் கல்யாணியிடம் பேசுவதாக உள்ள இடம் தமாஷாக இருக்கிறது. ஆனால் அது உபயோகிக்கப்படும் கட்டம், புத்தக ஆசிரியர்களை இழிவு படுத்துவதாகவே படுகிறது.
நடிகைகளில் கல்யாணியாக வரும் ஶ்ரீரஞ்சனி நன்கு நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நடிகையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தன் தமையன்மார் கல்யாணத்துக்கு வராமை குறித்து வருந்தும் போதும், நீதிமன்றக் காட்சியில் வாதாடும் கட்டத்திலும் இவரது நடிப்பு நன்கு சோபித்துள்ளது . விதவையாக சித்தரிக்கப்பட்டுள்ள இவர் பாடாமலிருந்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது மேலும் இரக்கம் ஏற்பட்டிருக்க இடமுண்டு. தவிர படத்தின் விறுவிறுப்பும் பாதிக்கப்பட்டிருக்காது. குணசேகரனைக் காதலிக்கும் விமலாவாக பண்டரி பாய் கச்சிதமாய் நடித்திருக்கிறார். குணசேகரனுடன் வாதாடும் கட்டங்களில் உணர்ச்சியுடன் பேசி, நடித்திருக்கிறார், மற்ற பெண் கதா பாத்திரங்களுக்கு படத்தில் அதிகமாக வேலை இல்லை.

பாட்டுகள் அனைத்துமே கருத்து நிறைந்தவையா யிருக்கின்றன. முக்கியமாக "கா...கா...கா...", "தேசம் ஞானம்" ஆகிய இரு பாராட்டுகளையும் குறிப்பிட வேண்டும். பாரதியாரின் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாட்டையும் சரியான கட்டதில் பாட வைத்திருக்கிறார்கல். பாட்டுகள் யாவும் இனிமையாகப் பாடப்பட்டுள்ளன.

சிவாஜிகணேசன்

ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட வேலைகள் திருப்திகரமாக உள்ளன. ஒலி - ஒளிப் பதிவுகள் தரமாயிருக்கின்றன. முக்கியமாக ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டிய முறையில் இருக்கிறது. ஆடம்பரமான ஸெட்டுகள் எதுவுமில்லை.

 

டைரக்‌ஷனைக் குறித்து பிரமாதமாகக் குறிப்பிட எதுவும் இல்லை. பல இடங்களில் நாடகம் போலவே நகருகிறது. நாடகங்களிலே, அடுத்து வரும் பெரிய காட்சி ஒன்றுக்கு முன், அது தயாராகும் வரை காலம் கடத்த, வேறு ஒரு காட்சி இருக்கும். அதுபோல படக் கதையின் காட்சிகள் அமைந்துள்ளன. விமலா தன் காதலன் குணசேகரனுடன் காதல் விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாகக் கனவு காண்கிறாள். கனவுக் காட்சியிலே "புதுப் பெண்ணின் மனதை" என்று ஒரு பாட்டையும் பாடி விளையாடுகின்றனர். இதை விமலா மட்டுமே கனவு காண்கிறாள். ஆனால், படத்தின் இறுதியிலோ குணசேகரன் இதே பாட்டை முணு முணுத்துப் பாடுவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம்?
"பராசக்தி" ஒரு படமல்ல. பிரசங்க மேடை; அங்கே மதம் இழிவு படுத்தப்படுகிறது; பிராத்தனைகள் கிண்டல் செய்யப்படுகின்றன; ஹிந்து மதக் கோட்பாடுகள் நையாண்டி செய்யப்படுகின்றன. படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்தால், ஒரு குறிப்பிட்ட காட்சியின் மகாநாட்டுக்குப் போய், அவர்களது தீப்பொறி பறக்கும் பேச்சுகளைக் கேட்டு விட்டு வந்த உணர்ச்சியே ஏற்படுகிறது. மொத்தத்தில், இப்படத்தை 'நஞ்சு கலந்த பால் அன்னம்' என்றுதான் நான் குறிப்பிட விரும்புகிறேன். நடிப்பு அம்சம் சிறந்து விளங்கும் படத்திலே, கட்சிப் பிரசார விஷ(ம)ம் புகுத்தப்பட்டிருக்கிறது.

http://www.vikatan.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்: ஜூலை 21- 2001

சிவாஜி கணேசன் (அக்டோபர் 1-1927; ஜூலை 21- 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி. 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை

 
 
 
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்த நாள்: ஜூலை 21- 2001
 
சிவாஜி கணேசன் (அக்டோபர் 1-1927; ஜூலை 21- 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

சிவாஜி கணேசன், சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி. 'சிவாஜி' கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு இந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.

நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால்தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.

இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.

1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987-ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார்.

எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962-ம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.

சிவாஜி பெற்ற விருதுகள்- ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது. பத்ம ஸ்ரீ விருது (1966) பத்ம பூஷன் விருது (1984) செவாலியே விருது (1995) தாதா சாகேப் பால்கே விருது (1996) 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார். சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.

தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001-ம் ஆண்டு தனது 74-வது வயதில் மரணமடைந்தார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

வைரலாகும் சன்னி லியோன் புகைப்படம் - காரணம் இதுதான்!

 
 

சன்னி லியோன்


ஹாலிவுட், பாலிவுட் எனப் பல நடிகர், நடிகைகள் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது சன்னி லியோன் இடம்பெற்றிருக்கிறார். 


ஸ்பிலிட்ஸ்வில்லா (Splitsvilla ) ரியாலிட்டி ஷோவுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சன்னி லியோன்தான் தற்போதைய  டாக். ரியாலிட்டி ஷோவில் எடுக்கும் ஒவ்வொரு படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவு செய்து வருகிறார். அவரது கணவர் டேனியலும் அவருடைய வேலைகளில் பிஸியாக இருக்கும் இந்த தருணத்தில், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்கள் சன்னி லியோன் தம்பதி. 

 


நேற்றைய வைரல் சன்னிலியோன்தான். காரணம், அவர் தத்தெடுத்திருக்கும் குழந்தைதான். மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த 21 மாதங்களே ஆன நிஷா கவுர் வெபர் (Nisha Kaur Weber) என்கிற ஏழைப் பெண்குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்கள். அந்தப் படத்தை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்திருக்கிறார்.  ''அவள் ரொம்ப அழகு. அவள் சிரிக்கும் அந்த நிமிடம் உங்கள் இதயம் உருகுவதை உங்களால் பார்க்க முடியும். நாங்கள் அவளைத் தனித்துவமாக வளர அனுமதிப்பேன். அவளைச் சுதந்திரமான பெண்ணாக வளர்ப்பேன்' என நிஷாவைப் பற்றி கூறியிருக்கிறார் சன்னி லியோன். 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p114f.jpg

facebook.com/Nandhini R. Moorthy

பிக்பாஸ் வந்ததுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, ஆபீஸ்லகூட பொறணிப் பேசுறதை விட்டுட்டு பிக்பாஸ் பற்றிப் பேசுறதுதான்...

facebook.com/Sowmya Ragavan

என்ன... இந்த பிக்பாஸூக்கு இவ்ளோ பார்வையாளர்கள்னு தோணலாம். எனக்கு நானேகூட கேட்டுக்கிட்டேன். இதை ஏன் இவ்ளோ தீவிரமாப் பார்க்கணும், பேசணும்னு.      

p114a.jpg

அதைவிட இன்னொன்னு. நாம இது போல பல்வேறு கேரக்டர்களைக் கடந்தோ, சேர்ந்து வாழ்ந்தோ, மறந்து வாழ்ந்துட்டோ இருப்போம். இவங்களை விமர்சிக்கிறப்ப அவங்களைத் திட்டின திருப்தியோ, எலிமினேட் பண்றப்ப அவங்க முகத்துல ஒரு குத்துவிட்ட குரூர இன்பமோ கிடைக்குது. யாருக்காவது நாமளும் இப்படி இருந்திருப்போம்னு ஒரு சுயப் பரிசீலனையும் பண்ணிக்கிறது உண்டு. கிட்டத்தட்ட நம்மள்ல 50 சதவிகிதம் ஜூலி உண்டு. அங்க நடக்கிற மாதிரி குழு மனப்பான்மையில கார்னர் பண்ற சைக்கோத்தனம் உண்டு. நமக்கு வாகா அடிமை கிடைச்சா, காயத்ரியா மாறிடுற ஆதிக்க குணம் 10 சதவிகிதமாவது உண்டு.  இங்க நாம வைக்கிற விமர்சனங்கள் நமக்கும்தான். ஓவியாவைப் பிடிக்கப் பொதுவான காரணங்களில் நாம அப்படி இல்லைங்கிற உண்மையும் ஒன்று.

twitter.com/thoatta 

சனிக்கிழமையானா மாற்றி மாற்றிப் போட்டுக் கொடுத்துக்குவாங்க, மிச்ச நாள்ல கொஞ்சிக்குவாங்க. இவங்களுக்கு அ.தி.மு.க-வோட மூணு கோஷ்டிங்களே பரவாயில்லை.

twitter.com/saravananucfc

வெற்றிக்கான ரகசியத்தில் “எப்ப பார்த்தாலும் போனை நோண்டுறதை என்னைக்கு நீ விடுறியோ, அன்னைக்குதான் நீ உருப்புடுவ” என்பதையும் சேர்த்துடலாம்.   

p114b.jpg

twitter.com/iKaruppiah 

குடை பிடிக்கிறாள் தாய். குடைக்கு வெளியே கை நீட்டி மழை பிடிக்கிறது குழந்தை.

twitter.com/Kannan_Twitz

கெட்டவன் என்ற வார்த்தையைவிட, வாழ்ந்து கெட்டவன் என்ற வார்த்தைக்கு வலி அதிகம்.

twitter.com/amuduarattai

எட்டப்பன்கள் பிறப்பதில்லை. பள்ளிகளில் கிளாஸ் லீடர் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறார்கள்.

twitter.com/Nimeshiga

பொது இடங்களில் போனுக்கு சார்ஜ் போட வரும் சண்டைகளில்தான் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்கும்போல!

twitter.com/Railganesan

திருவிழாக்களுக்கு ஸ்கூல் யூனிஃபார்மையே புதுச்சட்டையாக தைத்துப் போட்டுக்கொண்ட கடைசித் தலைமுறை நாமதான்!

twitter.com/yugarajesh2

மனைவியிடம் மனம்விட்டுப் பேசினால், சண்டையே வராதாம்# அடேய்..! சண்டை வந்ததே மனம்விட்டுப் பேசுனதால தான்டா.

twitter.com/WritterRamesh 

ஓவியாவுக்கு இருக்கிற ஆதரவைப் பார்த்தா, சின்னம்மா ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வரும்போது, ஒட்டுமொத்த அ.தி.மு.க. கன்ட்ரோல் ஓவியாகிட்டதான் இருக்கும்போல.    

p114c.jpg

twitter.com/Kozhiyaar 

சொல்லிக் காட்டுவதைவிட நடந்து காட்டுவதைக் குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள்!

twitter.com/mekalapugazh 

தேசபக்தன் என்பது காங்கிரஸ் காலத்தில் பெருமையாகவும்... பா.ஜ.க. காலத்தில் பகடியாகவும்...

twitter.com/manipmp 

`இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’ எனும் செய்தி கேட்டு சிரித்துக்கொண்டான் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்.

twitter.com/Jeytwits

நேரத்தோடு வீட்டிற்குச் செல்ல வேண்டுமென எண்ண வைப்பது சார்ஜர் என்றால், குடும்பத்தோடு வெளியில் செல்ல வேண்டுமென எண்ண வைப்பது செல்ஃபிக்கள்.

twitter.com/manipmp

இப்போவெல்லாம் ரியாலிட்டி ஷோவுக்கு அவங்க பெற்றோர்களைக் கூப்பிடக் காரணம், அவர்களை விட்டா வேற யாரும் சிரிச்சுக் கைத்தட்ட மாட்டாங்க என்பதால்...

twitter.com/Kozhiyaar
 
கல்லூரி விடுதியில் வாழ்ந்தவருக்கு பிக் பாஸ் வீடெல்லாம் துச்சம்!

எத்தனை பாசம், சண்டை, அரசியல், துரோகம், நட்பு கண்டிருக்கும் விடுதிகள்!    

twitter.com/saravananucfc

இப்போவெல்லாம் பலருக்குத் தனிமை என்பது ஆன்லைனில் பலருடன் பேசிக்கொண்டிருப்பது!

twitter.com/thoatta 

மீண்டும் ஓவியாவுக்கு ஓட்டு, அன்புமணி லுங்கியைக் கட்டிக்கிட்டுத் தூங்கப் போனார்.   

p114d.jpg

twitter.com/mekalapugazh
 
ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் வெற்றிலைப் போட்ட பழக்கம் வழக்கொழிந்தது.இப்போதெல்லாம் மருந்து மாத்திரைதான்.

twitter.com/HAJAMYDEENNKS 

இன்னும் ஃபேஸ்புக்,ட்விட்டர், வாட்ஸ்அப்களில் மட்டும்தான் ஆதார் கார்டை இணைக்க வேண்டியிருக்கிறது.

twitter.com/Kozhiyaar

ஞாயிற்றுக்கிழமையில் மனது மெதுவாகவும், கடிகாரம் வேகமாகவும் நகர்கின்றன!

twitter.com/nithratweets

பலரையும் கை நீட்ட வைத்துவிடுகிறது முதல் மழைத் தூறல்.


p114e.jpg

ட்ரெண்டிங்

8-வது விம்பிள்டன், 19-வது க்ராண்ட் ஸ்லாம் என்று பறந்தடித்து வென்ற ரோஜர் ஃபெடரர்தான் இந்த வார வைரல், ட்ரெண்டிங், பரபரப்பு எல்லாமே. டென்னிஸ் தர வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் மரின் சிலிச்சை வென்று, ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி கெத்து காட்டினார் ஃபெடரர். ஐந்து வருடங்களுக்குப் பிறகு பெற்றுள்ள விம்பிள்டன் வெற்றி என்பதால், அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் இது ரொம்பவே ஸ்பெஷல். ஒரு செட்டும் தோற்காமல், ஃபெடரர் கோப்பையைக் கைப்பற்ற, பாராட்டித் தள்ளியது சோஷியல் மீடியா!   

Link to comment
Share on other sites

இவைதான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கட்டடங்களாம்!

 
 

ஹாங்காங்கில் உள்ள வானளாவிய கட்டடங்கள்தான் உலகின் மிக விலையுயர்ந்த வர்த்தக ரியல் எஸ்டேட் கட்டடங்கள் என்று நைட் ஃபிராங்க் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தனது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. 

விலை, கட்டடங்கள், ரியல் எஸ்டேட்

 


2016-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில், அலுவலக கட்டடங்களின் வாடகை மற்றும் பல முக்கியமான விஷயங்கள் குறித்து ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான நைட் ஃபிராங்க் நிறுவனம் ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவினை நைட் ஃபிராங்கின் ஆசிய பசிபிக் ஆராய்ச்சியின் தலைவர், நிக்கோலஸ் ஹோல்ட் வெளியிட்டு பேசுகையில், `ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரங்களில் மிகவும் மதிப்பு வாய்ந்த, விலை உயர்ந்த கட்டடமாக ஹாங்காங்கில் உள்ள கட்டடங்கள் இருக்கின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள உயரமான கோபுரங்களைக் காட்டிலும், ஹாங்காங்கில் உள்ள வானளாவிய கட்டடங்கள் மிகவும் மதிப்புடையதாக இருக்கின்றன. ஜப்பானைவிட சுமார் 60 சதவிகிதம் சதுர அடிக்கு 8,000 டாலர் மதிப்புள்ளதாக ஹாங்காங்கின் உயரமான கட்டடங்கள் இருக்கின்றன. ஹாங்காங்கில் உள்ள கட்டடங்களின் தேவை அதிகரிப்பு மற்றும் அங்கு புதிய அலுவல் கட்டடங்கள் அதிகளவில் இல்லாத காரணத்தினால் அலுவல் கட்டடங்கள் மிகவும் விலை உயர்ந்து காணப்படுகின்றன" என்றார்.

http://www.vikatan.com

 

Link to comment
Share on other sites

நாற்பதாயிரம் வீடுகளை இருளில் மூழ்கடித்த பபூன் குரங்கு


நாற்பதாயிரம் வீடுகளை இருளில் மூழ்கடித்த பபூன் குரங்கு
 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் விக்டோரியா நீர்வீழ்ச்சி பகுதியில் மின்சார சாதனத்தை பபூன் குரங்கு சேதப்படுத்தியதால் சுமார் 40,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் விக்டோரியா நீர்வீழ்ச்சி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள தேசிய பூங்காவில் பலவிதமான உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக இந்த பகுதி அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறத, இப்பகுதிக்கு லிவிங்ஸ்டோன் பகுதியில் உள்ள 180 மெகாவொட் திறன் கொண்ட நீர்மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பூங்காவில் இருந்து நீர்மின் நிலையத்திற்குள் நுழைந்த பபூன் வகை குரங்கு ஒன்று நீர்மின் நிலையத்தில் உள்ள மின்சார சாதனத்தை தவறுதலாக தொட்டுள்ளது.

இதன் காரணமாக குரங்கின் உடலில் மின்சாரம் பாய்ந்ததோடு மின்சார சாதனமும் சேதமடைந்தது, இந்த சம்பவத்தில் காயமடைந்த குரங்கிற்கு உடனடியாக பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தின் காரணமாக மின் சாதனம் சேதமடைந்ததை தொடர்ந்து லிவிங்ஸ்டோன் பகுதியில் சுமார் 5 மணி நேரமாக மின்வெட்டு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுமார் 40,000 வாடிக்கையாளர்களின் வீடுகள் இருளில் முழ்கியது, இதனால் அப்பகுதிக்கு சுற்றுலா சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

http://newsfirst.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.