Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

பாட்டி சொன்ன ஐடியா ஜெர்மனி போன கதை!

 

ஜெர்மனி

து மார்கழி. கோவில்களில் கைநிறையப் பொங்கல் பிரசாதம் கிடைக்கும் சீசன்!. இலையில் சுடச்சுடத் தரப்படும் பிரசாதத்துக்காகவே, ஏ.டி.எம் வரிசைகளில் காத்துக் கிடப்பவர்களுக்குச் சமமாக கோவில்களில்  க்யூவில் நிற்பவர்களின் எண்ணிக்கை இருக்கும். வீட்டிலும் ஹோட்டல்களிலும் பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டாலும் கோவில்களில் மட்டும்  இலையில் சாப்பாடு தரும் மரபு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாகரிகம் மிகவும் ஆக்கிரமிக்காத சிறுநகரப் பகுதிகளிலும் கிராமங்களிலும் இன்றும் இலையில் சாப்பிடும் மரபைக் காணலாம். இலையென்றால் வாழை இலை மட்டுமில்லை. நீண்ட நாள் தேவைகளுக்காக  வாழை இலைகளை வெயிலில் காயவைத்து எடுத்து பதப்படுத்தி வைத்துக்கொள்வது. அல்லது மந்தாரை இலை  போன்றவற்றை பதப்படுத்தி ஈர்குச்சி கொண்டு தைத்து தட்டு போல உருவாக்கி சேமித்து வைப்பது என ப்ளாஸ்டிக்கும் எவர்சில்வரும் உருவாக்கப்படாத காலகட்டத்தில் இந்த இலைகளில் தான் நம்முடைய் தாத்தா பாட்டிகள் சாப்பிட்டு வந்தார்கள்.இதனை ஊர் பக்கம் ’தையல் இலை’ என்பார்கள்.சுடச்சுட சமைக்கப்பட்டிருக்கும் சாப்பட்டை அம்மா இந்த இலைகளில் பரிமார அதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களே நினைத்தாலும் தரமுடியாது.

காலப்போக்கில் ஆரோக்கியம் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவர்களும் அவசர மற்றும் அவசியத் தேவைகளுக்காக ப்ளாஸ்டிக் பக்கம் சாய்ந்துவிட, சருகு இலைகளில் சாப்பிடும் மரபு சருகு போலவே மக்கிவிட்டது. தற்போது இதே டெக்னிக்கை ஜெர்மனி நம்மிடமிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. ஜெர்மனியைச் சேர்ந்த லீஃப் ரிபப்ளிக் என்னும் அமைப்பு இந்தத் திட்டத்தை தொடங்கி தென்னிந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் சிறுதொழில் செய்யும் பெண்களிடம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியை ஒப்படைத்திருக்கிறது.

image_12497.jpg

சருகு இலைகளைச் சேமித்து அதனை ஈர்குச்சிகளால் தைத்து இங்கிருந்து ஏற்றுமதி செய்வது இவர்களுடைய வேலை. அங்கே ஜெர்மனியில் இந்த சருகு இலைத் தட்டுகளை இறக்குமதி செய்துகொள்பவர்கள் அப்படியே அதனை உபயோகிக்காமல் உயர் அழுத்த இயந்திரத்தில் கொடுத்து அதனை வலுவாக்கி பிறகு உபயோகிக்கின்றனர். எவ்வளவு அதிகமாக சாப்பாட்டை இதில் வைத்தாலும் உடையாமல் தாங்கும் என இதற்கு தனியாக விளம்பரம் வேறு செய்கின்றனர். ப்ளாஸ்டிக்கால் பெருகி வரும் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவே இந்த யோசனையாம். நம் பாட்டிகளின்  ஐடியாவை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஜெர்மனியே ஏற்றுக்கொண்டுவிட்டது. நாம் எப்போது ப்ளாஸ்டிக்கை தூர எறியப்போகிறோம்?

vikatan

 

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply

150 ஓநாய்களுக்காக 169 கோடி செலவு செய்த வுல்ப்கிங்

(லோகேஸ்வரன்)

வுல்ப்கிங் என மக்களால் அழைக்கப்படுபவரும் யாங்சங்செங் என்ற இயற்பெயருடைய 71 வயதானவர் கடந்த 9 வருடங்களாக 150 ஓநாய்களை பராமரித்து வளர்த்து வருகிறார். 

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியை சேர்ந்த இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஓநாய்களை வளர்த்து வருகின்றார்.

unnamed__6_.jpg

நண்பர் ஒருவர் மூலம் கிடைக்கபெற்ற ஒரு பெண் ஓநாயையும் அதன் குட்டிகளையும் வளர்க்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து மற்றொரு நண்பர் ஊடாக 9 ஓநாய்கள் கிடைக்கப்பெறவே 2008ஆம் ஆண்டு 20 ஹெக்டயர் நிலத்தை வாங்கி ஒநாய்களை வளர்ப்பதற்கு ஆரம்பித்துள்ளார். 

தற்போது அவரிடம் 9 வகைகளைச் சேர்ந்த 150 ஓநாய்கள் காணப்படுகின்றன.

unnamed__7_.jpg

வுல்ப்கிங் ஓநாய்களை பராமரிப்பதற்காக இதுவரை காலமும் 169 கோடிகளை செலவிட்டுள்ளார். 

தன்னை ஒரே ஓருமுறை மாத்திரமே ஓநாய் கடித்துள்ளதாக கூறும் இவர் தனது பண்ணையில் 1000 ஓநாய்கள் உருவாகியதும் அவற்றை காட்டில் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

unnamed__5_.jpg

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

கட்டடக்கலை 2016 (புகைப்படத் தொகுப்பு)

ஆயிரக்கணக்கான புகைப்படங்களில் இருந்து இந்த ஆண்டு கட்டடக்கலை புகைப்படப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 புகைப்படங்கள் இவை. இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்படக் கலைஞர்களின் குறிப்புக்களோடு அவற்றை உங்களுக்கு வழங்குகிறோம்.

ரோமன் ரோப்ரோக்:

ரோமன் ரோப்ரோக்: "ஒரு வகையான இந்த அழகான கட்டுப்பாட்டு அறை, அலங்கார கலை வடிவத்தை சேர்ந்த ஒன்றாகும்"

பார்வையாளரின் கவனத்தை திசைதிருப்ப, ஒளியை பயன்படுத்தாமல் இருப்பது

ஜோனத்தான் வால்லண்ட்: "புகைப்படக் கலைஞர் எடுத்துகாட்ட விரும்புவதை நோக்கி இருக்கும், பார்வையாளரின் கவனத்தை திசைதிருப்ப, ஒளியை பயன்படுத்தாமல் இருப்பதை விளக்குகின்ற புகைப்படத் தொடரின் ஒரு பகுதி தான் இந்த புகைப்படம்"

செனாடு தாக்மாஸ்:

செனாடு தாக்மாஸ்: "தெளிவான கட்டடக்கலை பார்வையை விவரித்து வழங்கும் அசாதாரணமான சிறிய வடிவம்"

நியூ யார்க் நகரத்தின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ளாடிரான் கட்டடம் பனிப்புயலின்போது காட்சியளிக்கிறது

மிச்சேலி பாலாஸோ: "சீறும் காற்று மற்றும் கடும் பனிக்கு இடையில் புகுந்து வரும் ராட்சத கப்பலைப்போல, நியூ யார்க் நகரத்தின் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ளாடிரான் கட்டடம் பனிப்புயலின்போது காட்சியளிக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வரலாற்று புகழ்மிக்க புயல் "ஜோனாஸ்" தாக்கியபோது எடுத்த இந்த படம். அந்த புயலுக்கு பின்னர் இந்தப்படம் பெருமளவில் பகிரப்பட்டது.

டெரிக் ஸ்னீ: காற்றை அறுவடை செய்ய தாவரங்களை பயன்படுத்துவதுபோல நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். நல்லது, இப்போது அது நம்மால் முடியும். பெற்றோரே, பெரியோரே, சிறுவர்களே, சிறுமியரே....டர்போ டான்டிலையன் காற்றுப்பண்ணை

டெரிக் ஸ்னீ: காற்றை அறுவடை செய்ய தாவரங்களை பயன்படுத்துவதுபோல நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். நல்லது, இப்போது அது நம்மால் முடியும். பெற்றோரே, பெரியோரே, சிறுவர்களே, சிறுமியரே....டர்போ டான்டிலையன் காற்றுப்பண்ணை".

பார்பரா ரோஸ்சி:

பார்பரா ரோஸ்சி: "கட்டடம் இடிக்கப்படும் இந்த புகைப்படத்தை நான்தான் எடுத்தேன். இது மாற்றத்தை, செயல்பாட்டை மற்றும் அழகைக் காட்டுகிறது"

ஒலேக்சென்ட்ர் நிஸ்ரோஸ்கி:

ஒலேக்சென்ட்ர் நிஸ்ரோஸ்கி: "உலோக அலங்கார வளைவும் ஒரு மரமும் இருக்கின்ற இந்த புகைப்படம், இயற்கையையும், கட்டடக்கலை அழகையும் இணைத்துக் காட்டுகிறது".

இந்த புகைப்படத் தொடர் கடந்த கால கட்டடக்கலை புகைப்படக்கலை தொழில்நுட்பங்களின் குறைகள்

ஜேம்ஸ் தாரி: "இந்த புகைப்படத் தொடர் கடந்த கால கட்டடக்கலை புகைப்படக்கலை தொழில்நுட்பங்களின் குறைகளை, சரியற்றவற்றை பார்ப்பது பற்றியதாகும். காலக்கெடு முடிந்த இந்த கோடாக்கின் இக்டாகுரோம், வேற்றுலக வண்ணங்களை உருவாக்கும் இந்த மிக பெரிய பாளங்களை உற்பத்தி செய்ய தவறுதலாக ரசாயன கலவைகளால் வளர்க்கப்பட்டன. சில கட்டடங்களைபோல இவை தவறுதலாகவும் சவாலுடனும் உருவாக்கப்பட்டவை.

வடத்தாலான பாலத்தின் முன்னால் ஒரு சிற்பம்

ஒலெக் டாஷகோவ்: "ரிகாவின் கோபுர சாரளமானது, மழை அல்லது சூரிய ஒளி, ஈரம் அல்லது நல்ல வானிலை என எந்தவொரு பருவகாலத்திலும் தன்னுடைய வரலாற்று பதிவை பராமரிக்கிறது. இந்த வடத்தாலான பாலத்தின் அழகால் அவரது கவனம் சிதறிவிட்டதா என்ன? என்னால் நம்ப முடியவில்லை”.

புலென்ட் சுபெர்க்:

புலென்ட் சுபெர்க்: "பாரம்பரிய மசூதியாக இல்லாமல் நவீன கட்டடக்கலை".

ஆண்ணொருவர் செங்கல் எடுக்கையில், பெண் ஒருவர் அவருக்கு பின்னால் வேலை செய்கிறார்

ஷிபாசிஷ் சஹா: தங்களுடைய தனிப்பட்ட குடும்பங்களுக்கு உணவூட்ட இந்த படத்திலுள்ள ஆண்களும் பெண்களும் கடுமையாக வேலை செய்கிறார்கள். தங்களுடைய வலியை மறந்த பெண்கள், ஆண்களோடு செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர்".

ஒரு புறம் வீடுகளற்ற நிலம். மறுபுறம் நெருங்கி அமைந்திருக்கும் வீடுகள்

மார்க்கொ கிராஸி: 2016 ஜூன் மாதம் தொடங்கி லாருங் கார் என்னுமிடத்தில் அனைத்தும் மாறியிருக்கின்றன. ஆனால், அது யாருக்கும் தெரியாது. முன்பு உலகிலேயே மிகப் பெரிய பௌத்த குடியிருப்பிடமாகவும் நவீன சமூகத்தைவிட தொலைவிலும் இருந்த இவ்விடத்தில், துறவியரும், மடாதிபதிகளும் அமைதியான, செயலற்ற வாழ்க்கை நடத்தினர். தற்போது இவ்விடம் சீன அதிகாரிகளால் இடிக்கப்படுகிறது,

சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அரங்கம்

ஜினா சோடன்: "மூரிஷ் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், இத்தாலியில் உள்ள ஒரு கோட்டை இது. இந்த அறைகள் எல்லாம் அழகானதொரு கோட்டையை கட்டி, அதனை ஹோட்டலாக திறக்கும் இலட்சியத்தை வைத்திருந்த ஒருவரின் கைகளால் வடிவமைக்கப்பட்டவை".

ஒன்று இயந்திர சிற்பத்தில் மிதக்கும் சிறிய குழந்தை

நாஃப் செல்மானி: "ஹீவ்-கியு தோட்டங்கள் - தேனீ வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட ஓர் அழகான சிற்பம், புகைப்படங்கள் எடுக்க பார்வையாளர் ஒருவர் மேல் தளத்தில் கண்ணாடி தரையில் படுத்திருக்கையில், கீழிருந்து நோக்கப்படுகிறது. இந்த பன்முக உணர்வறியும் அனுபவம்தான் கலையை, அறிவியலை மற்றும் நிலவியல் கட்டடக்கலையை ஒருங்கிணைக்கிறது.

கடினமாக கட்டப்பட்ட ஏணிகளில் ஏறும் தொழிலாளி

என்ரிக் கிமெனெஸ்-விலில்லா: "வளர்முக நாடுகளில், கட்டங்களை கட்டி, பராமரிக்கின்ற பெயர் அறியப்படாத, எல்லா புத்திசாலி தொழிலாளர்களுக்கும் மரியாதை செலுத்தவே இந்த புகைப்படம்".

BBC

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

சுடச்சுட சமைக்கப்பட்டிருக்கும் சாப்பட்டை அம்மா இந்த இலைகளில் பரிமார அதனைச் சாப்பிடும்போது கிடைக்கும் சுவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களே நினைத்தாலும் தரமுடியாது.

??

Link to comment
Share on other sites

6 மொழிகளில் விடுமுறை பாடல்கள்: இந்திய - அமெரிக்க சிறுமியின் அசுர சாதனை

 

7 வயதில் கல்லூரியில் சேர்ந்து அசாதாரண சாதனை படைத்த இந்திய - அமெரிக்க சிறுமியான டியாரா ஆபிரகாம் ஆறு மொழிகளில் விடுமுறைக்கால பாடல்களை பதிவு செய்ததன் மூலம் மேலும் ஒரு அசுர சாதனை புரிந்துள்ளார்.

 
6 மொழிகளில் விடுமுறை பாடல்கள்: இந்திய - அமெரிக்க சிறுமியின் அசுர சாதனை
 
நியூயார்க்:

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு சென்று அங்கேயே குடியுரிமையும் பெற்று தங்கி விட்டனர். தற்போது, அவர்களின் இரண்டாம் தலைமுறைய சேர்ந்த ஒரு பிள்ளை கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் ரிவர் காலேஜில் கடந்த ஆண்டு பட்டம் பெற்றார்.

அவரது தங்கையான டியாரா ஆபிரகாம் பள்ளிப்படிப்புகளில் இரட்டை தேர்ச்சி பெற்று தனது ஏழாவது வயதில் அதே கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதனால், அறிவுவளர்ச்சியில் வியப்புக்குரிய சிறுமியாக பார்க்கப்பட்ட டியாரா, தனது ஒன்பதாவது வயதில் இசை ஆல்பம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
7126CDB8-E46F-4265-80A7-227A75C6C3E9_L_s
கிறிஸ்துமஸ் ‘கேரல்’ பாடல்களுடன், விடுமுறைக்காலங்களில் உல்லாசமாக பாடும் சில பாடல் தொகுப்புகள் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. உலகில் உள்ள 9 நாடுகளில் மிகவும் பிரபலமான விடுமுறைக்கால பாடல்களை ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இத்தாலி, ஜெர்மனி, லத்தின், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளிலும் டியாரா பாடியுள்ளார்.

’வின்ட்டர் நைட்டிங்கேல்’ என்று தலைப்பில் வெளியாகியுள்ள இந்த இசை ஆல்பம் மேற்கண்ட நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

p104d.jpg

facebook.com/bsankara narayanan: எல்லா ரெய்டுலயும் 2,000 ரூபாய் நோட்டுத்தான் கிடைச்சிருக்கு. 500 இல்லவே இல்லை. எனக்கு மட்டும்தான் கிடைக்கலையோனு வருத்தப் பட்டேன் # நிம்மதி!

facebook.com/writermugil: என்னதான் சூழ்நிலை அசாதாரணமாக இருந்தாலும், பூ, புஷ்பம், புய்ப்பம், புறா, புன்னகைக்கும் பாப்பா படங்களுடன், தவறாமல் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் நல்ல உள்ளங்களுக்குத் தலை வணங்கு கிறேன்!

p104a.jpg

 facebook.com/Nagarjuna:  அன்பின் குடும்பம்... (நாகார்ஜுனா குடும்பத்தினருடன்)

facebook.com/nelsonxavier08: மழையில் நனைவதை நேசிப்பதற்கும் வெறுப்பதற்குமான குட்டியூண்டு இடைவெளியில் கரைந்துவிடுகிறது வாழ்க்கை!

facebook.com/DavidEXIM: வேட்டிகூட `பாரம்பர்யம், அது, இதுனு தம் கட்டிப் பொழச்சுக்கும்போல. லுங்கி வழக்கொழிஞ்சே போச்சே. இப்ப உள்ள பயலுக எவனுமே லுங்கி கட்டிப் பார்த்தது இல்லை!

facebook.com/mrnags: வாழ்க்கை என்பது பன்ச் டயலாக் அல்ல... அது, பஞ்சரான டயருக்குக் கடையைத் தேடும் ஒரு பயணம்!

facebook.com/balaganesh.kandasamy: நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை, காலையில் பள்ளிக்குக் கிளம்பும் செல்வங்களே தீர்மானிக்கிறார்கள்!

twitter.com/vinodhkrs: யூ ட்யூப்ல இத்தனையாவது நிமிஷத்துலதான் `நீங்க எதிர்பாக்கிற சீன் இருக்கு’னு கமென்ட் எழுதிட்டுப் போறான் பாருங்க... அந்த மனசுதான் சார் கடவுள்!

twitter.com/Kozhiyaar:  எப்ப படுத்தாலும் வரும் தூக்கம் முதல், எப்ப படுத்தாலும் வராத தூக்கம் வரை பயணிக்கிறது வாழ்க்கை!

p104b.jpg

facebook.com/PIB: வாழ்த்துகள்... வாழ்த்துங்கள்.
(குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பிரதமர் மோடி.)

twitter.com/vinothanaseeli : காசு இல்லாத பரிமாற்ற இந்தியாவை உருவாக்குவோம். # பசி இல்லாத இந்தியாவை முதல்ல உருவாக்குங்க சார்!

twitter.com/manipmp : எங்கேயாவது வெளியே சுத்திட்டு, `ஏ.டி.எம் போனேன்’னு சொன்னா நம்பிடுறாங்க # எஸ்கேபிசம்!

twitter.com/Kozhiyaar:  குஸ்கா வந்தவுடன் அதில் `பீஸ் இருக்கா?’ எனத் தேடும் அளவுக்கு, இலவசங்கள் நம்மைக் கெடுத்துவைத்திருக் கின்றன!

twitter.com/manipmp: உனக்கு முன்னால் உள்ள சமூகம் மெதுவாகவே செல்லும் # வங்கி!

twitter.com/vigneshvicky341:  இவனுங்க ஒரு மரணத்தின் மர்மங்களை எல்லாம் ஈஸியா கண்டு பிடிக்கிறானுங்க. நான் 20 நாளா சுத்துறேன்... `ஏ.டி.எம்-ல எப்ப பணம் போடுறாய்ங்க?’னு கண்டுபிடிக்கவே முடியலை!

p104c.jpg

twitter.com/vinodhkrs: அடுத்த மாசம் சம்பளம் எடுக்க ஏ.டி.எம் வெளியே நிற்க அவசியம் இருக்காது. தினமும் இப்படி  ஏ.டி.எம் வாசல்லயே நின்னா, எப்படி சம்பளம் வரும்?

twitter.com/Im_sme: சின்னம்மா... நாட்டை ஆள்றது எல்லாம் அப்புறமா பார்க்கலாம். முதல்ல ஒரு பேட்டி கொடுக்கச் சொல்லுங்க. குரலைக் கேட்போம் ;-)

twitter.com/ipragamenon : அடேய்... ஞாயிற்றுக்கிழமைனா முன்னாடிலாம் ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்தான் லீவ் விடுவீங்க. இப்ப ஏ.டி.எம்-க்கும் லீவ் விட்டுடுறீங்க. கறி எடுக்கக்கூட காசு இல்லை!

twitter.com/thirumarant : `அம்மா’ இறந்த அதிர்ச்சியைவிட இவிங்க டக்குனு இன்னோர் அம்மாவைத் தத்தெடுத்தாய்ங்க பாருங்க... அதுதான் அதிக அதிர்ச்சியா இருக்கு!

p104e1.jpg

whatsapp: குளிர்காலத்திலே குளிக்கும் முன்னர் silent_Mode-லயும் குளிக்கும்போது Loud_Mode-லயும் குளிச்சு முடிச்சா Vibrating_ Mode-லயும், உடம்பு இருக்கு!

vikatan

Link to comment
Share on other sites

பபுள் கம் வந்த கதை!

 
 
 
 
கோப்புப் படம்
கோப்புப் படம்
 
 

பொதுவாக என் போன்ற சிறுவர்களுக்குப் பபுள் கம் என்றால் ரொம்ப பிடிக்கும். அந்தப் பபுள் கம் எப்படி வந்தது?

முதலில் சூயிங்கம்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்துத்தான் பபுள் கம்மை தயாரித்தார்கள். ஃப்ராங்க் ஃப்ளீர் என்பவர் ‘ப்ளிப்பர்-ப்ளப்பர்’ என்ற பெயரில் 1906-ம் ஆண்டு முதன் முதலாகப் பபுள் கம்மை தயாரித்தார். அதை மென்ற பிறகு அதை ஊதினார். அப்போது அது முகத்தில் ஒட்டி கொண்டது. ஒட்டிய பபுள் கம்மை எடுக்க எண்ணெய் தேவைப்பட்டது. அதனால், அது விற்பனைக்கே வரவில்லை.

பின்னர் 22 ஆண்டுகள் கழிந்தது. 1928-ல் அவருடைய சிக்லெட் நிறுவனத்தில் வால்டர் டயாமெர் என்பவர் வேலை பார்த்துவந்தார். அவர்தான் சரியான பபுள் கம்மை உருவாக்கினார். வாயில் போட்டு மென்ற சில நிமிடங்களில் பெரிதாக ஊத முடிந்தது. விற்பனைக்கு வந்த பிறகு குழந்தைகள் அதிக ஆர்வத்தோடு பபுள் கம்மை வாங்கினார்கள். பபுள் கம் 1950-களுக்கு முன்பாகவே உலகெங்கும் விற்பனையாகத் தொடங்கியது. விண்வெளியிலும்கூடப் பபுள் கம் சுவைக்கப்பட்டிருக்கிறது. 1965-ம் ஆண்டில் அமெரிக்காவின் ‘ஜெமினி-5’ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள், பபுள் கம்மை சுவைத்தார்கள். இது அதிகாரபூர்வமாகப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

பபுள் கம் ஒட்டும்தன்மை உள்ளதால், அதை மெல்லும்போதும், ஊதும்போதும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் அதை அப்படியே விழுங்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது தொண்டைப் பகுதியில் பபுள் கம் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் பபுள் கம்மை சிறுகுழந்தைகள் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

tamil.thehindu

Link to comment
Share on other sites

10 செகண்ட் கதைகள்

ஓவியம்: ஸ்யாம்

 

68p1.jpg

சந்தேகம்

``சாமிக்கும் பேய்க்கும் சண்டை வந்தா, யாருப்பா ஃபர்ஸ்ட் ஜெயிப்பா?'' எனக் கேட்டது குழந்தை.

- க.வி

68p2.jpg

ஆசுவாசம்

பந்தய தூரத்தைக் கடந்ததும் ஆசுவாசப்பட்டது, சவுக்கடி வாங்கிய மாடு.

 - பெ.பாண்டியன்

68p3.jpg

இயல்பு

தமிழகம், மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது. மக்கள், வங்கி வாசலில்.

- இரா.பார்த்திபன்

68p4.jpg

நடிப்பு

பிச்சைக்காரன் சாப்பிடும் காட்சியில், உண்மையான பிச்சைக்காரனை நடிக்க வைத்தார்கள். நான்கு டேக் எடுத்தான் அவன்.

- நந்த குமார்

68p5.jpg

பேங்க்

``ஏன் எல்லாரும் வரிசையா நிக்குறீங்க?'' என்றேன், ``இது பேங்க் விளையாட்டு'' என்றான் பொடியன்.

- ரியாஸ்

68p7.jpg

சினிமா

தேசிய கீதம் முடிந்து  தொடங்கியது படம்,  அயிட்டம் சாங்குடன்.

- ரியாஸ்

68p6.jpg

நண்பன்

``சார், என்னைத் தெரியலையா?

நான்தான் உங்க ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்!''

என்றான் டிராஃபிக் போலீஸிடம் மாட்டிக்கொண்டவன்.

- க.வி

68p8.jpg

வாழ்வு

கடவுள் கைவிட்டபோதும், பேய் ஓட்டி வாழ்ந்துகொண்டிருந்தார் கோயில் பூசாரி.

- பெ.பாண்டியன்

68p9.jpg

தேடல்

புதிதாக வெளியூருக்குச் செல்லவிருந்த அப்பாவுக்கு, கூகுள் மேப்பில் வழி காண்பித்தான் சிறுவன் ராகுல்.

- க.விக்னேஷ்

68p10.jpg

நெருக்கம்

நெருங்கவேவிடாதவர்கள், எல்லோரும் நெருங்கி நின்றார்கள் இறுதி ஊர்வலத்தில்.

- கே.சதீஷ்

Link to comment
Share on other sites

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரியங்கா சோப்ராவின் ஆடை!

 

priyanka_00560.PNG

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தகவல்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் அதிகமான நபர்களால் தேடப்பட்ட ஆடை வடிவமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரபல ஃபேஷன் டிசைனர் ஸுஹாய்ர் முராத் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

vikatan

Link to comment
Share on other sites

டெக்மோரா

 

 

62p2.jpg

வீட்டுலயோ, பேச்சுலர் ரூம்லயோ உள்ளவங்களுக்கு கட்டாயம் வை-ஃபை ஷேரிங்கோட அருமை டீச்சர் சொல்லித்தராமலேயே தெரியும். ஆனா, ஒரே ஒரு வை-ஃபை அதுக்கு 10 பேர் ஷேரிங் போட்டா கூகுள் கூட கொஞ்சம் ஸ்லோவாதான் ஓப்பன் ஆகும். ஆனா அந்த கூகுளே ஒரு வை-ஃபை தந்தா? கேட்க ரைமிங்கா இருக்கு... ஆனா அது தான் உண்மை. கூகுள் ஒரு வை-ஃபை கருவியை அறிமுகம் செஞ்சிருக்கு. கூகுள் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட கூகுள் வை-ஃபை தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

62p1.jpg

இந்த கூகுள் வை-ஃபை ஒரு யூனிட்டாகவும், மூன்று யூனிட்களாகவும் இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு யூனிட் 129 டாலர்க்கும், மூன்று யூனிட் கொண்ட செட் 299 டாலர்க்கும் விற்கப்படுகிறது.  இதன் மூலம் 1500 சதுர‌ அடி முதல் 5000 சதுர அடி வரைக்கும் இணைய சேவையை வழங்கும்.

மேலும் இதனை ஆப் மூலம் கட்டுப்படுத்த முடியும். அந்தக் கருவியை `வேண்டாம்' என நிறுத்தி வைக்கவும் இந்த ஆப் மூலம் முடியும்.

62p3.jpg

இதனைக் கொண்டு மொத்த அலுவலகம் அல்லது வீட்டை வை-ஃபை மூலம் இணைத்து அனைத்து வை-ஃபை கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். 10 - 25 Mbps வேகத்தில் ட‌வுன்லோட் செய்ய முடியும். ஒற்றை யூனிட் மூலம் செயல்படுவதில் இணையப் பயன்பாட்டு வேகம் 175 Mbps என்ற அளவில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இவை அமேஸானில் விற்பனைக்கு வந்துள்ளது.  வை-ஃபை ரூட்டர், இன்டெர்நெட் இணைப்புகள் ஆகியவற்றுக்கு மாற்றாக இந்த வை-ஃபை இருக்குமாம். இனிமே பாக்கெட்ல போட்டுட்டு போய் ஏரியா முழுக்க வை-ஃபை சப்ளை பண்ண வேண்டியதுதான். அப்பறம் என்ன `ஃப்ரீ வை-ஃபை இங்கு கிடைக்கும்!'னு டி-ஷர்ட் போட்டு சுத்துங்க பாஸ்..!

vikatan

Link to comment
Share on other sites

முகங்கள்: உணர்வுகளைப் பிரதிபலிக்கும் உருவங்கள்!

 

 
artist_3105193f.jpg
 
 
 

கர்ப்பிணிப் பெண்களின் நிறைமாத வயிறு, பிறந்த குழந்தையின் பிஞ்சு பாதங்கள், திருமணத்தின்போது இணையும் கரங்கள் என வாழ்வின் மறக்கமுடியாத சில தருணங்களைப் பதிவு செய்யும் காஸ்டிங் தொழில்நுட்பம் வெளிநாடுகளில் ஏகப் பிரபலம். வட இந்தியாவில் நிலைநாட்டிய இந்தத் தொழில்நுட்பம், தமிழகத்திலும் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது.

artist_2_3105194a.jpg

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த கீர்த்தியும் காஸ்டிங் அச்சுகளை உருவாக்கி, பரிசுப் பொருட்களாக விற்பனை செய்து வருகிறார். “எனக்கு ரெண்டாவது குழந்தை பிறந்தப்போ, பாதங்களை அச்செடுக்கணும்னு நிறைய இணையதளங்களைத் தேடினேன். எதுவும் கிடைக்கலை. எப்படி செய்யறதுன்னு யூ-டியூபில் பார்த்து அச்செடுத்து வைத்தேன். அப்போ, என் பெரிய மகனும் என் கைகளை ஏன் அச்செடுக்கலைன்னு கேட்டான். இரண்டு பேரின் கைகளையும் அச்செடுத்தோம். வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் இதை எப்படிச் செய்தேன்னு கேட்கத் தொடங்கினாங்க. அதைத் தொடர்ந்துதான், இதையே தொழிலா செய்யலாம்னு முடிவெடுத்தேன். போன வருஷம் ஆரம்பித்து, நல்லபடியா போயிட்டிருக்கு” என்று சொன்னவர், ஆன்லைன் மூலமே தன் விற்பனையை மேற்கொண்டுவருகிறார்.

அச்செடுக்க வேண்டிய பகுதியின் மேல், மாவை உற்றி, பிரதி எடுத்து, அதனை அப்படியே மோல்டிங்காக மாற்றுவதுதான் காஸ்டிங். பிறகு வெள்ளி, செம்பு, தங்கம் என்று வாடிக்கையாளர் விரும்பும் நிறங்களை ஏற்றுகிறார். பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், ஓர் அச்சு செய்து முடிக்க ஒருவாரம் எடுத்துக்கொள்கிறார் கீர்த்தி.

keerthi_3105186a.jpg

“எனக்கு ஆர்டர் கிடைத்ததும் நேரடியாகச் சென்றுதான் அச்செடுத்து வருவேன். சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் கர்ப்பிணி வயிறு, குழந்தையின் பாதம், கைகள் போன்றவற்றை அச்சு எடுக்கச் சொல்வார்கள். தென் மாவட்டங்களில் பெற்றோரின் கைகளைப் பிரதி எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். உலகிலேயே உன்னதமான பரிசு அம்மாவின் ஆசிர்வாதம்னு சொல்லி ஒருத்தர் தன் அம்மாவோட கைகளை அச்செடுக்கணும்னு சொன்னார். நானும் அச்செடுத்து, செய்து கொடுத்தேன். அந்தப் பாட்டி தன் கை சுருக்கம், ரேகை, மோதிர அச்சு, அடிபட்ட காயத்தின் தழும்புவரை எல்லாத்தையும் நான் செய்து கொடுத்த காஸ்டிங் உருவத்தில் சரிபார்த்து என்னைப் பாராட்டினாங்க” என்று பெருமிதத்தோடு சொல்கிறார் கீர்த்தி. போட்டோ பிரேம்களுக்குள் வைத்து, சுவரில் மாட்டும் விதத்திலும் காஸ்டிங்குகளை இவர் செய்து தருகிறார்.

tamil.thehindu.

Link to comment
Share on other sites

99p1.jpg

மல்லுவுட் மரியா ராய்

கோட்டயத்தில் பிறந்த கேட்பரீஸ். ஸ்கூல் படிப்பை முடித்துவிட்டு தமிழகம் வந்தவரை அன்போடு வரவேற்றது சென்னை. லயோலாவில் டிகிரி முடித்துவிட்டு சினிமாவிற்குள் நுழைந் தார். ‘நோட்புக்’ படத்தில் சின்ன வேடத்தில் தலைகாட்டியவர் பின், ‘ஹோட்டல் கலிபோர்னியா’ படத்தில் நடித்தார். அதன்பின் கிடைத்தது பிருத்விராஜ் பட வாய்ப்பு. ‘மும்பை போலீஸ்’ படத்தில் நடித்தவர் இப்போது தீவிர டான்ஸ் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் மருமகள்தான் மரியா ராய். இலக்கியத்தில் இன்ட்ரெஸ்ட் உண்டா?

99p2.jpg

டோலிவுட் ஹம்சா நந்தினி

புனேயில் பிறந்த அழகுப்புயல். சிறு வயதிலிருந்தே மாடலிங்கில் ஆர்வம் என்பதால் முதலில் கால் வைத்தது அந்த ஏரியாவில்தான். எக்கச்சக்க டி.வி விளம்பரங்கள், செலிபிரட்டி கிரிக்கெட் லீக் போன்றவற்றில் வந்து போனார். விடுவார்களா டோலிவுட்வாசிகள். `வாங்க' என அழைத்துப் போய்விட்டார்கள். ஹம்சா டான்ஸில் பின்னுவார் என்பதால் முக்கால்வாசி ஐட்டம் நம்பர் டான்ஸ்கள்தான் ஆடியிருக்கிறார். அதுவும் 2013-ல் மட்டும் நான்கு படங்களில் ஆடியிருக்கிறார். இவரின் ராசிக்காகவே அடுத்தடுத்து வாய்ப்பு கள் குவிகின்றன. அப்படியே ஹீரோயின் என்ட்ரி!

99p3.jpg

சாண்டல்வுட் நபா நடேஷ்

ர்நாடகாவின் சிருங்கேரியில் பிறந்த ஜில்ஜில் குல்ஃபி. மங்களூரில் இன்ஜினீயரிங் முடித்த கையோடு மாடலிங் உலகில் நுழைந்தார். `ஃபெமினா மிஸ் இந்தியா' போட்டியில் டாப் மாடல்களுள் ஒருவராக வந்தார். அதன்பின் சில மேடை நாடகங்களில் நடித்தார். அதன் வழியாக ‘ப்ரீத்தி கீத்தி இத்யாதி’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவது படத்தில் அடித்தது ஜாக்பாட். சிவராஜ்குமார் ஜோடியாக ‘வஜ்ராக்யா’ படத்தில் நடித்தார். லேட்டஸ்டாய் ‘லீ’ என்ற படத்திலும் திறமை காட்டியிருக்கிறார். தொடர் ஹிட்டுக்கு வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

உழைக்கத்தெரியாமல் கடன்படேல்!
 

article_1482118878-gfgfgj.jpgமக்களிடம் சிறுகச் சிறுக சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கவே வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றுக்கு இதர பணிகள் பல இருந்தாலும், சேமிக்கும் விடயங்களை மக்களிடையே உருவாக்கச் செய்யும் பணிகளை இன்றளவும் செய்து வருகின்றன. 

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்களில் பலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அரசாங்க வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும் பழக்கம் வைரஸாகப் பரவிவிட்டது. 

சொகுசு வாகனங்களைக் கடனுக்கு வாங்குதல், வருமானத்துக்கு மீறிய வகையில் வீடுகளைக் கடன்பட்டுக் கட்டுவதற்காக புற்றீசல்கள்போல் வங்கிகளை மொய்த்துப் பணம்பெற்று, ஈற்றில் பெற்ற பணத்துக்கு வட்டிகூடக் கட்ட வழியின்றி, வீடு, வாசல், வாகனங்களை இழந்து, நடுத்தெருவில் நிற்கும் மக்கள் கூட்டம் ஏராளம், ஏராளம். 

தகுதிக்கு மீறி ஆசைப்படேல்; உழைக்கத்தெரியாமல் கடன்படேல்! 

Link to comment
Share on other sites

பென்சில்வேனியா நிலக்கரிச் சுரங்க விபத்தில் 239 பேர் பலி: 19-12-1907

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், யுகியோகெனி ஆற்றின் அருகில் உள்ள மலையடிவாரத்தில் பிட்டிஸ்பர்க் நிலக்கரி நிறுவனத்தின் தார் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 2 மைல் ஆழம் கொண்ட இந்த சுரங்கத்தில், வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை வெளியில் கொண்டு வரும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கடந்த 1907ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி

 
பென்சில்வேனியா நிலக்கரிச் சுரங்க விபத்தில் 239 பேர் பலி: 19-12-1907
 
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், யுகியோகெனி ஆற்றின் அருகில் உள்ள மலையடிவாரத்தில் பிட்டிஸ்பர்க் நிலக்கரி நிறுவனத்தின் தார் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 2 மைல் ஆழம் கொண்ட இந்த சுரங்கத்தில், வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை வெளியில் கொண்டு வரும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த 1907ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி காலையில் 240 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எரிவாயு திடீரென தீப்பிடித்து வெடித்ததில் சுரங்கம் இடிந்து விழுந்தது. யாரும் வெளியில் வர முடியாதபடி நுழைவு வாயிலும் அடைபட்டது. இதில் சுரங்கத்தில் புதைந்தும், தீயில் கருகியும் 239 பேர் உயிரிழந்தனர்.

நுழைவு வாயிலின் அருகில் நின்றிருந்த ஜோசப் மேப்பிள்டன் என்ற ஒரே ஒரு தொழிலாளி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். பென்சில்வேனியாவில் நடந்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

இதேநாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுரு பதவிகள் வழங்கப்பட்டன.

1877 - யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.

1916 - முதலாம் உலகப் போரின்போது பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜெர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.

1941 - அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனிய ராணுவத் தலைவர் ஆனார்.

1972 - சந்திரனுக்கு கடைசி தடவையாக மனிதனை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.

1934 - இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பிறந்தநாள்.
 
 

ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படம் டைட்டானிக் ரிலீஸ் ஆன நாள்: 19-12-1997

மிகப்பெரிய ஆடம்பரக் கப்பலான டைட்டானிக், தனது முதல் பயணத்தின்போதே மூழ்கி பல உயிர்களை பலிவாங்கியதை தத்ரூபமாக காட்டியிருக்கும் பாலிவுட் சூப்பர் ஹிட் படம்தான் ‘டைட்டானிக்’ படம் முழுக்க கப்பலை மட்டுமே காட்டியிருந்தால் அதில் விறுவிறுப்பாக இருக்காது என்பதால், அதில் பயணிக்கும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகள் இருந்தன. குறிப்பாக அழகான காதல் ஜோடியின் ஆழ்ந்த காதலை யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

 
 
 
 
ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படம் டைட்டானிக் ரிலீஸ் ஆன நாள்: 19-12-1997
 
மிகப்பெரிய ஆடம்பரக் கப்பலான டைட்டானிக், தனது முதல் பயணத்தின்போதே மூழ்கி பல உயிர்களை பலிவாங்கியதை தத்ரூபமாக காட்டியிருக்கும் பாலிவுட் சூப்பர் ஹிட் படம்தான் ‘டைட்டானிக்’

படம் முழுக்க கப்பலை மட்டுமே காட்டியிருந்தால் அதில் விறுவிறுப்பாக இருக்காது என்பதால், அதில் பயணிக்கும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகள் இருந்தன. குறிப்பாக அழகான காதல் ஜோடியின் ஆழ்ந்த காதலை யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக மிகவும் சிரத்தை எடுத்து காட்சிகளை அமைத்த இயக்குனர் கேமரூன், படத்தை 1997-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி திரையிட திட்டமிட்டிருந்தார். ஆனால் தயாரிப்புக்கு பின்னர் தொழில்நுட்ப பணி காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால் டைட்டானிக் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்றே எதிர்பார்த்தனர்.

இதுபோன்ற சர்ச்சைகளையெல்லாம் கடந்து, 1997ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி டைட்டானிக் வெளியிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட வசூலை அள்ளிக் குவித்ததுடன் 11 விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.

லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள டைட்டானிக் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.
 

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

உலகின் மிகப் பழமையான நீர் கண்டுபிடிப்பு!

mining_02321.jpg

லகின் மிக பழமையான நீர் கனடாவில் உள்ள ஒர் சுரங்கத்தில் இருப்பதை கனடா டொராண்டோ பல்கலைக்கழக  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நீர் மாதிரிகளில் இது தான் மிகப் பழமையான நீர் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பழமையான  நீர் மாதிரிகள் 2.4 கிலோமீட்டர் ஆழத்திலும், 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருந்தது. ஆனால் இப்போது சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நீர் மாதிரியானது கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கிறது. இந்த நீர் மாதிரியில் அதிக அளவில் சிறு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ரசாயன சுவடுகள் கிடைத்துள்ளது. இந்த ரசாயன சுவடுகளை வைத்து ஆராய்ச்சிகள்  மேற்கொண்டுவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

vikatan

Link to comment
Share on other sites

2016 உலக அழகி மகுடம் இவருக்குதான் :)

miss_worlkd_12302.png

போர்ட்டோரிகா (Puerto Rico) நாட்டின் மாடல் அழகி 'ஸ்டெஃபானி டால் வாலஸ் டியாஸ்',   2016ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.  2016 ம் ஆண்டின் உலக அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி, வாஷிங்டனில் நடைபெற்றது. இந்தியா உட்பட  பல்வேறு நாடுகளில் இருந்து 116 அழகிகள், இந்த போட்டியில் கலந்து கொண்டனர். கென்யா, இந்தோனேசியா, டொமினிக்கன் குடியரசு, பிலிப்பைன்ஸ், போர்ட்டோரிகா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள், முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.

போர்ட்டோரிகாவைச் சேர்ந்த 19 வயது ஸ்டெஃபானி டால், ’இந்த வெற்றியை என் தாய்நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.  

Cz_8uxmW8AAWQOs.jpg

The newly crowned Miss World 2016, Stephanie Del Valle from Puerto Rico!

The newly crowned Miss World 2016, Stephanie Del Valle from Puerto Rico!

Link to comment
Share on other sites

1983 : உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சம்பியன் கிண்ணம் திருடப்பட்டது
 

வரலாற்றில் இன்று...

டிசம்பர் - 19

 

1154 : இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் ஹென்றி முடிசூடினார்.

 

1606 : ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.

 

868varalaru.jpg1871 : யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுரு பதவிகள் வழங்கப்பட்டன.

 

1907 : பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.

 

1916 : முதலாம் உலகப் போரில் பிரான்ஸில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.

 

1941 : அடோல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத்தின் தளபதியானார்.

 

1961 : போர்த்துக்கேய குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

 

1963 : ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சான்சிபார் சுதந்திரம் பெற்று, சுல்தான் ஹமூட் பின் முஹமட் தலைமையில் முடியாட்சியை ஏற்படுத்தியது.

 

1967 : இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன அவுஸ்திரேலிய பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

1972 : சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பலோ17 பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியது.

 

1983 : உலக கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் சம்பியன் அணிக்கு வழங்கப்படும் அசல் ஜுலேஸ் ரிமேட் கிண்ணம் பிரேஸிலில் அந்நாட்டு கால்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது. இக்கிண்ணம் மீண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

1984 : ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.

 

1986 : சோவியத் எதிர்ப்பாளியான அந்திரேய் சாகரொவ் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

1997 : இந்தோனேஷியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.

 

1997 : ஜேம்ஸ் கெமரூன் இயக்கிய டைட்டானிக் திரைப்படம் வெளியானது.

 

2001 : ஆர்ஜென்டீனாவில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.

 

2010 : இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 50 ஆவது சதத்தை குவித்து புதிய மைல்கல்லை எட்டினார்.

 

2012 : தென் கொரியாவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக பார்க் குவென் ஹை தெரிவானார்.

metronews.lk
Link to comment
Share on other sites

கைதிகளின் கைவண்ணம்
 

article_1482133643-1.2.jpg

திருகோணமலை சிறைச்சாலை மதிலில் கைதிகளினால் வரையப்பட்ட ஓவியங்களைக் காட்சிக்கு விடும் நிகழ்வும் கைதிகளினால் நிர்மாணிக்கப்பட்ட புனர்வாழ்வுக் காரியாலயத் திறப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்றது. (படப்பிடிப்பு: எப்.முபாரக்)

article_1482133725-1.3.jpg

article_1482133701-1.33.jpg

 

.tamilmirror.lk
Link to comment
Share on other sites

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இந்தியச் சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்!

 

Letter1_02341.jpg

சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்  நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடை பெற்றுவரும் தாக்குதல்களால் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்படுகின்றனர். தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிரியாவில் நடக்கும் தாக்குதல்கள் பெரியவர்களை மட்டுமல்லாமல் சிறுவர்களின் மனதையும் காயப்படுத்தி இருப்பதற்கு இந்தச் சிறுவன் சிறந்த உதாரணம். இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆருஷ் ஆனந்த் என்ற ஏழு வயது சிறுவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். நாட்டிங்காம் உயர்நிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவருகிறான். சமீபத்தில் ஆருஷ் ஆனந்த் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஆருஷ் ஆனந்த் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் வகுப்பில் மாணவர்களிடம் 'கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் என்ன பரிசு வேண்டும்?' என எழுதும்படி கூறியுள்ளார். உடனே  பேப்பர் எடுத்த மாணவர்கள், தங்களுக்குப் பிடித்தப் பரிசு பொருட்களை பட்டியலிட்டு எழுதியுள்ளனர். ஆனால் ஆருஷ் ஆனந்த், ' சிரியாவில் அமைதி நிலவவேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சிரியாவில் சமாதானம் திகழவேண்டும் அதுவே எனக்கான கிறிஸ்துமஸ் பரிசு' என  உருக்கமான கடிதத்தை எழுதியிருக்கிறான். சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் அப்பாவி சிறுவர்கள் கொல்லப்பட்டுவருவது இவனது மனதை பெருமளவு பாதித்துள்ளது. இச்சிறுவனின் கடிதத்தை ஆசிரியர் ரிச்சர்டு மில்லர் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

Link to comment
Share on other sites

Miss France 2017
 

மிஸ் பிரான்ஸ் 2017 (Miss France 2017) அழகுராணியாக அலீசியா அய்லீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

212982.jpg

 

21298663419-01-02.jpg

 

212981.jpg

 

21298662980-01-02.jpg

 

மிஸ் பிரான்ஸ் 2017 அழகுராணி போட்டியின் இறுதிச் சுற்று பிரான்ஸின் மொன்ட்பேலியர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

21298663234-01-02.jpg

 

இதில் மிஸ் கயானா அழகுராணியான அலீசியா அய்லீஸ் முதலிடம் பெற்றார்.  18 வயதான அலீசியா அய்லீஸ் சட்டத்துறை மாணவியாவார்.

 

2129815391174_1143974428985520_828166704

metronews.lk
Link to comment
Share on other sites

ஒரு நிமிடத்தில் உலக சாதனை படைத்த பெண்!

 

 

 

 

பிரிட்டனைச் சேர்ந்த லிசா டென்னிஸ், ஒரு நிமிடத்தில் 923 டைல்ஸ் பலகைகளை உடைத்து சாதனை புரிந்துள்ளார். இவர் இதற்கு முன்பு, '1000 டைல்ஸ் பலகைகளை வேகமாக உடைத்த பெண்' என்ற சாதனையையும் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1000 டைல்ஸ் பலகைகளை உடைப்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் 83.98 நொடிகள் மட்டுமே. இவரின் கணவர் க்ரிஸ் பிட்மேன், 1000 டைல்ஸ் பலகைகளை வேகமாக உடைத்த ஆண் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். வெறும் 51.08 நொடிகளில் இந்த சாதனையை அவர் பதிவு செய்தார். 

.vikatan

Link to comment
Share on other sites

தேவதைகளில் நிறம் என்ன?
--------------------------------------------------------------
இதற்கு பதிலளிக்க முயன்றுள்ளார் ஆப்ரிக்க கலைஞர் ஒருவர்.

Link to comment
Share on other sites

Bild könnte enthalten: 3 Personen, Personen, die lachen, Baseball und Text

 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ரிக்கி பொன்டிங்கின் பிறந்தநாள் இன்று.

மூன்று தடவை உலகக் கிண்ணம் வென்ற ஆஸ்திரேலிய அணியின் பெருமைக்குரியவர்.
இதில் இரு தடவை இவரது தலைமையிலேயே ஆஸ்திரேலியா முடிசூடியது.

பொன்டிங்கின் துடுப்பாட்டமும் வழிநடத்தலும் ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் பல டெஸ்ட் வெற்றிகளையும், கிண்ணங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடம் பெற சிறப்பான தலைமையை வழங்கியவர்.
டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்கள் குவித்தவர்.

Happy Birthday Ricky Ponting
Link to comment
Share on other sites

டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - உலக சினிமா

 

 

ந்த ஆண்டின் மிஸ் செய்யக் கூடாத படங்கள் லிஸ்ட்டில் ஏற்கெனவே மலையாளம், ஹாலிவுட் கோட்டா முடித்து பூசணிப் உடைத்தாயிற்று. இப்போது உலக சினிமா வரிசையின் முறை. உலகம் முழுக்க நூற்றுக்கணக்கான சூப்பர் சினிமாக்கள் ஆண்டுதோறும் ரிலீஸாகின்றன. அதில் ஒரு சின்னப் பகுதிதான் இது. இந்தப் படங்களை எல்லாம் பார்த்தே ஆகணும்னு சொல்லல. பார்த்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றோம்.

78p1.jpg

Love & Friendship :

‘லேடி சூசன்’ என்ற இங்கிலாந்து நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். முதல் கணவரை இழந்து பொருளாதார ரீதியாகத் தடுமாறும் லேடி சூசன் இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். கூடவே தன் மகளுக்கும் திருமணம் செய்ய நினைத்து இருவருக்கும் மாப்பிள்ளை தேடுகிறாள். அப்படித் தன் மகளுக்குப் பார்த்த ஜேம்ஸ் என்ற மாப்பிள்ளையை சூசனே திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்க, அதன் விளைவுகள்தான் கதை. எக்குத்தப்பான இந்தக் கதையை காமெடி பாணியில் சொன்னதற்காகப் பாராட்டப்பட்டார் இயக்குநர் விட் ஸ்டில்மென். மொத்த பட்ஜெட்டைவிட ஆறு மடங்கு வசூலைக் குவித்தது இந்தப் படம்.

78p2.jpg

Things to Come :

ஈரான், கொரியா போலவே ஃபிரான்ஸ் நாட்டுப் படங்களுக்கும் உலக சினிமா ரசிகர்களின் அமோக ஆதரவு இருக்கிறது. இந்த ஆண்டு அப்படிக் கொண்டாடப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. நடாலி என்னும் தத்துவ ஆசிரியையின் தாய் திடீரென மரணம் அடைகிறார். இதிலிருந்து மீள்வதற்குள் அவள் வேலை பறிபோகும் சூழல் உருவாகிறது. இதற்கு நடுவே தன் கணவன் தனக்குச் செய்யும் துரோகமும் அவளுக்குத் தெரிய வருகிறது. இப்படிப் பிரச்னைகளிடையே வாழும் அவளின் வாழ்க்கைதான் கதை. உலகம் முழுக்கப் பல சினிமா விழாக்களில் விருதுகளைக் குவித்தது இந்தப் படம்.

78p3.jpg

The Wailing :

த்ரில்லர், ஹாரர் படங்களுக்குப் பெயர் போன தென் கொரியாவில் இருந்து இறக்குமதியான ‘திக்திக்’ சினிமா. மலையடிவார கிராமம் ஒன்றில் திடீரென வித்தியாச நோய் ஒன்று பரவுகிறது. அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து மரணமடைய, இதற்குக் காரணம் புதிதாக அந்த ஊருக்கு வந்துள்ள ஒரு கிழவன்தான் என நம்புகிறார்கள் போலீஸ்காரர்கள். அவனைத்தேடி அவர்கள் அலைய அதன்பின் நடக்கும் விறுவிறு திருப்பங்கள்தான் கதை. கொரிய சினிமாக்களின் ஸ்பெஷலே திரைக்கதைதான் என்பதை இந்தப் படமும் நிரூபித்தது. படம் ரசிகர்களால், விமர்சகர்களால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

78p4.jpg

Moonlight :

ஹாலிவுட்டில் நூற்றுக்கணக்கில் வெளியாகும் கமர்ஷியல் சினிமாக்களுக்கு நடுவே சில குறிஞ்சிப்பூ சினிமாக்களும் ரிலீஸாகின்றன. அப்படி இந்த ஆண்டு பூத்த குறிஞ்சிப்பூதான் இந்தப் படம். மியாமியின் ஒதுக்குப்புறத்தில் வாழும் கறுப்பின இளைஞனைப் பற்றிய கதை. சிறுவன், டீன் ஏஜ் பையன், இளைஞன் என அவனின் மூன்று பருவங்களை டீட்டெய்லாகச் சொல்லும் கதை. ‘இது மிகவும் அரிதான சினிமா, மிஸ் பண்ணக் கூடாத சினிமா’ என நாடுகள் பாகுபாடில்லாமல் அத்தனை சினிமா ரசிகர்களும் கொண்டாடினார்கள். ஸோ, இந்தப் படத்தை நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

78p5.jpg

Sing Street :

அயர்லாந்து நாட்டில் வெளியான மியூஸிகல் காமெடிப் படம். அயர்லாந்தின் டப்ளின் நகரில் வளரும் சிறுவனுக்கு இசையில் எக்கச்சக்க ஆர்வம். சதா சண்டை, சச்சரவு என இருக்கும் வீட்டில் இருந்து ஓடி வந்துவிடுகிறான். வெளியே சுற்றும்போது ஒரு பெண்ணைச் சந்திக்க, அவளை இம்ப்ரஸ் செய்ய ஒரு இசைக்குழுவை உருவாக்க முயல்கிறான். அந்த முயற்சி என்னவாகிறது என்பது மீதிக்கதை. மியூஸிகல் மூவி என்பதால் படத்தில் ஏராளமான பாடல்கள். ‘ஒரு ஃபீல் குட் படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்தப் படம் ட்ரீட்’ எனப் பாராட்டினார்கள் விமர்சகர்கள். நீங்க என்ன சொல்றீங்க?

78p6.jpg

The Handmaiden :

‘Fingersmith’ என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சைக்கலாஜிகல் த்ரில்லர். விறுவிறு திரைக்கதைக்கும் பெயர் போன கொரியன் சினிமா. ஜப்பான் ஆக்ரமிப்பு கொரியாவில், ஜப்பான் இளவரசியைத் திருமணம் செய்யத் திட்டமிடும் ஒருவன் அதற்காக ஒரு பெண்ணை இளவரசியின் வேலைக்காரியாக அனுப்புகிறான். அதன்பின் நடக்கும் கிறுகிறு மர்ம சம்பவங்கள்தான் கதை. அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள் எக்கச்சக்கமாக இருந்ததால், பல நாடுகள் இந்தப் படத்தை தயக்கத்துடனே அனுமதித்தன. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

78p7.jpg

Hunt for the Wilderpeople :

நியூசிலாந்து நாட்டுத் திரைப்படம். ‘Wild Pork and Watercress’ என்ற நாவலை மையமாக வைத்து வந்த சினிமா. வயதான பெல்லா - ஹெக் தம்பதிக்கு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தத்துக் கொடுக்கப்படுகிறான் ரிக்கி என்ற சிறுவன். பாசமாய்ப் பார்த்துகொண்ட வளர்ப்புத் தாய் பெல்லா இறந்துவிட, ஸ்ட்ரிக்ட்டான ஹெக்கிற்கு பயந்து காட்டுக்குள் ஓடுகிறான் ரிக்கி. அவனைத் தேடி காட்டுக்குள் அலையும் ஹெக் இறுதியாகக் கண்டுபிடித்துவிடுகிறார். இதற்குள் ஹெக் ரிக்கியைக் கடத்திக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் பரவ, போலீஸ் இருவரையும் தேடத் தொடங்குகிறது. கேட்கும்போது சீரியஸாக இருக்கும் இந்தக் கதையை காமெடியாக சொல்லியிருந்தார் இயக்குநர். படம் விமர்சகர்களிடையே கொண்டாடப்பட்டது.

78p8.jpg

The Innocents :

நாஜிக்களை எதிர்த்த பிரெஞ்சுப் போராளிக் குழு ஒன்றில் பணியாற்றிய ரெட் க்ராஸ் டாக்டரான மேடலின் பாலியாக் என்பவரின் அனுபவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் போலந்து வருகிறார் ஒரு மருத்துவர். அங்கு அவர் சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அது என்ன? பின் என்னவாயிற்று என்பதைப் படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். மாறுபட்ட கதைக்களத்துக்காவே இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார்கள் விமர்சகர்கள்.

78p9.jpg

Under the Shadow :

பெர்ஷிய மொழித் திரைப்படம். கணவன் ராணுவப் பணிக்குச் சென்றுவிட தன் மகளோடு வீட்டில் தனியாக வசிக்கிறாள் ஷிடா. ஒருநாள் அவர்கள் வீட்டின் மீது ஒரு விமானம் மோதுகிறது. அதன் பின் அவர்களை ஏதோ ஒரு தீய சக்தி துரத்துவதை உணர்கிறாள் ஷிடா. அது என்ன? ஏன் இவர்களைத் துரத்துகிறது என்பதுதான் மிச்சக்கதை. ஹாலிவுட் பேய்ப்படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத சினிமா இது என முத்திரை குத்துகிறார்கள் ரசிகர்களும் விமர்சகர்களும். ஹாரர் பட விரும்பிகளுக்கு இந்தப் படம் பக்கெட் பிரியாணிதான்.

78p10.jpg

Train to Busan :

ஸோம்பி படங்கள் எடுப்பதில் நாங்கள்தான் கில்லி என மார்தட்டிய ஹாலிவுட்டின் நினைப்பைத் தவிடு பொடியாக்கியது இந்தப் படம். சியோலில் இருந்து பூஸனுக்கு ட்ரெயினில் பயணிக்கிறார்கள் ஒரு அப்பா - மகள் ஜோடி. ஒரு கட்டத்தில் அந்த ரயிலில் இருப்பவர்கள் ஒவ்வொருவராய் ஸோம்பியாக மாற, உயிர் பிழைக்க கம்பார்ட்மென்ட் கம்பார்ட்மென்ட்டாக ஓடுகிறார்கள் அவர்கள். இறுதியில் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பதைபதைக்கச் சொல்லியிருப்பார்கள். கொரியன் சினிமாவில் அதிக வசூல் செய்தது இந்தப் படம்தான். உலக அளவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட்களுள் ஒன்று. மிஸ் பண்ணாதீக, அப்புறம் வருத்தப்படுவீக!

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.