Jump to content

இளமை புதுமை பல்சுவை


Recommended Posts

''சொற்பொழிவில் கிடைத்த வருமானத்தால் நிமிர்ந்தது நிழற்குடை!'' - 8 வயது சிறுவனின் அசத்தல் சேவை

 
 

கார்ட்டூன் பார்க்க அடம்பிடிக்கும் வயதில், பொதுமக்களுக்கு நிழற்குடையை அமைத்துக்கொடுத்து அசத்தியிருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த எட்டு வயது திருக்காமீஸ்வரன். 

சிறுவன்

‘சிவனருட்செல்வன்’ என்று சக்தி விகடனால் அடையாளம் காட்டப்பட்ட திருக்காமீஸ்வரன், புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்தவர். அதே பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு தன் பெற்றோர்களுடன் செல்வது வழக்கம். சிவன்மீது ஏற்பட்ட இனம்புரியாத ஈர்ப்பினால், மழலைக் குரலால் சிவபுராணங்களை முணுமுணுக்கத் தொடங்கினார். நாளடைவில், தேவாரம், திருவாசகம், 12 திருமுறைகள் என அனைத்தையும் சொற்பொழிவாக நிகழ்த்தத் தொடங்கினார். புதுச்சேரி, தமிழகம், கேரளா, ஆந்திரா எனப் பல இடங்களில் இவரது மழலைத் தமிழ் ஒலிக்க ஆரம்பித்தது. இந்தச் சொற்பொழிவுகளுக்காக இவராக பணம் எதுவும் கேட்பதில்லை. சிலர் அளிக்கும் தொகையையும் கோயில்களில் மேற்கொள்ளப்படும் உழவாரப் பணிகளுக்கும் பொது விஷயங்களுக்கும் கொடுத்துவிடுவார். இப்படி இறைப்பணியில் கிடைத்த சுமார் இரண்டு லட்சம் ரூபாயை மக்கள் நலப்பணிக்குக் கொடுத்திருக்கிறார். தற்போது, வில்லியனூர் சுல்தான்பேட்டை ரயில் நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் செலவில் பயணிகளுக்கான நிழற்குடையை அமைத்து, வியக்கவைத்துள்ளார் திருக்காமீஸ்வரன். 

சிறுவன்

இதுகுறித்து பேசிய சிறுவனின் தந்தை ஆனந்தன், ”திருக்காமீஸ்வரன் பற்றி சக்தி விகடனில் பேட்டி வந்ததிலிருந்தே பல இடங்களிலிருந்து சொற்பொழிவுக்கு அழைப்பு வர ஆரம்பிச்சது. ஆனால், படிச்சுட்டிருக்கிறதால் ஸ்கூல் லீவு நாளில் மட்டும் அழைச்சுட்டுப்போவோம். அதன்மூலம் கிடைக்கும் தொகையைச் சேர்த்துவெச்சு அடிக்கடி நலப் பணிகளுக்குக் கொடுத்துடுவார். ஒருதடவை அவருக்கு ரொம்பப் புடிச்ச வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலுக்குப் போயிருந்தோம். குளக்கரையில் உட்கார்ந்து பேசிட்டிருந்தப்போ அங்கே வந்த ஒரு குடும்பம், பாத்ரூம் எங்கே இருக்குனு கேட்டாங்க. இங்கே எதுவும் இல்லைனு சொன்னதும் அவங்க முகம் வாடிப்போச்சு. இதைப் பார்த்த திருக்காமீஸ்வரன், ‘கோயில்ல பாத்ரூம் இல்லையாப்பா? நாம் கட்டிக்கொடுக்கலாமா?'னு கேட்டார். உடனடியா கோயில் நிர்வாகத்தை அணுகி, பாத்ரூம் கட்ட அனுமதி கேட்டோம். ஆனால், அனுமதி கிடைக்காமல் தள்ளிப் போயிட்டே இருந்துச்சு.

சிறுவன்

எப்பவாச்சும் மாலை நேரத்தில் வில்லியனூர் ரயில்வே நிலையத்தில் வாக்கிங் போறது வழக்கம். அப்படி ஒருநாள் போகும்போது, ‘கோயில்ல பாத்ரூம் கட்ட அனுமதி தள்ளிப்போறது ஒருவகையில் நல்லதுதான். எல்லா மதத்துக்காரங்களுக்கும் பயன்படற மாதிரி ஏதாவது செய்யலாமே’ என்றார் என் மனைவி. அங்கே இருந்த ஸ்டேஷன் மாஸ்டரும் என் நண்பருமான இளங்கோ, ‘இந்த ஸ்டேஷன்ல ஒருநாளைக்கு பல ஆயிரம் பேர் வந்துபோறாங்க. ரயிலுக்காகக் காத்திருக்கும் மக்கள், மழை மற்றும் வெயிலுக்கு ஒதுங்ககூட நிழல் இல்லாம தவிக்கறாங்க. இங்கே ஒரு ஷெட் போட்டா உபயோகமா இருக்கும்’னு சொன்னார். உடனே திருக்காமீஸ்வரன், ‘அப்பா, அதையே செஞ்சுடலாம்’னு சொன்னார். இதுக்காக மத்திய அரசு அதிகாரிகளிடம் பேசின ஸ்டேஷன் மாஸ்டர், ரொம்ப கஷ்டப்பட்டு அனுமதி வாங்கினார். ஒரு லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடையை அமைச்சுட்டோம்” என்றார். 

நிழற்குடை

 

இதுபற்றி திருக்காமீஸ்வரனிடம் கேட்டால் மெல்லிய புன்னகையுடன், “எனக்குத் தெரிந்ததைப் பாடறேன். அதன்மூலம் ஈசன் எனக்கு இடும் கட்டளையை செய்யறேன். தாத்தா, பாட்டி, அக்கா, அண்ணன்கள் எல்லாம் இந்த நிழற்குடையில் உட்கார்ந்துட்டுப் போறதைப் பார்க்கிறேன். இதைவிட பெரிய சந்தோஷம் வேறென்ன இருக்கு” என்றவர், கண்களை மூடி தேவாரப் பாடல் ஒன்றைப் பாடுகிறார்.. 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 11.3k
  • Created
  • Last Reply
‘இங்கிதம் இன்றி, மேலாதிக்கத்தை வெளிப்படுத்ததல் அறியாமை’
 

image_90802979c2.jpgவித்துவக் கிறுக்கு உள்ளவர்களில் பலர் தனக்கு முன் உள்ளவர்களை, அறிவிலிகள் என எண்ணிவிடுகின்றனர். சில சமயங்கள் இந்த மமதையினால், பாமரனின் அனுபவத்திறனால், வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வதுண்டு. 

இக்காலத்தில், சின்னஞ்சிறு பிள்ளைகள் முன் பெரியவர்கள் பேச அச்சப்படுகின்றனர். அவர்கள் எங்களைத் தங்கள் பேச்சுத் திறனால் மடக்கி விடுகின்றனர். தங்கள் கல்வி அறிவுக்கு நிகராகப் பேச எவருக்கும் அருகதை இல்லை எனப் பேசுபவர்கள், கல்வி அறிவின் பரிணாமத்தை, விஸ்வரூபத்தை உணராதவர்களாக இருக்கின்றார்கள். மிகவும் தெரிந்த, வயது முதிர்ந்தவர்கள் கூட, உலக யதார்த்தம் புரியாமல், இங்கிதம் இன்றி, தங்கள் மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துதல் அறியாமைதான்.  

அறிதல், தெளிதல் ஒருவருக்கு மட்டுமானது இல்லை.

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: ஜூலை 28
 
 

article_1469679513-1976.jpg1941: சேர்பியாவின் மீது ஆஸ்திரிய-ஹங்கெரிய பேரரசு போர்ப் பிரகடனம் செய்தது.

1943: ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் பிரித்தானிய படையினரின் குண்டுவீச்சினால் சுமார் 42,000 பேர் பலி.

1945: அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் (படம்) 79ஆம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14பேர் கொல்லப்பட்டனர்.

1957: ஜப்பானில் கடும் மழையினால் 992 பேர் பலி.

1976: சீனாவில் ஏற்பட்ட இரு பாரிய பூகம்பங்களினால் 242,769 பேர் பலி.

2005: வட அயர்லாந்தில் 35 வருடகால யுத்தத்தை நிறுத்துவதாக ஐ.ஆர்.ஏ. இயக்கம் அறிவித்தது.

2005: பிரிட்டனில் டோர்னடோ சுழற்காற்றினால் 39 பேர்பலி.

2010: பாகிஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் 152 பேர்பலி.

http://www.tamilmirror.lk/

Link to comment
Share on other sites

ராபர்ட் ஹூக்

 

 
si

 இங்கிலாந்து அறிவியலாளர் 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரும், கணித அறிஞரும், கண்டுபிடிப்பாளருமான ராபர்ட் ஹூக் (Robert Hooke) பிறந்த தினம் இன்று (ஜூலை 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்தில் ஃபிரஷ்வாட்டர் என்ற இடத்தில் பிறந்தார் (1635). சிறுவயது முதலே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிச் செல்லவில்லை. வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. ஓவியம் தீட்டுவதில் சிறந்து விளங்கினான் சிறுவன்.

* 1648-ல் தந்தை இறந்துவிடவே, தனக்குக் கிடைத்த கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு லண்டன் சென்று, ஒரு பள்ளியில் தானாக சேர்ந்து கொண்டார். அங்கு கிரேக்கம், லத்தீன், இயந்திரங்கள், அறிவியல், கணிதம் கற்றார். 1655-ல் பிரபல விஞ்ஞானி ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

* இயந்திரங்கள் வடிவமைப்பதில் தலைசிறந்தவராக விளங்கினார். இயந்திரவியலில் அடிப்படையில் கோள்களின் இயக்கங்களை ஆராய்ந்தார். புவியீர்ப்பு விதியுடன் தொடர்புடைய பல விதிகளையும் உருவாக்கினார். நடைமுறையில் பயன்படுத்த முடிகிற வகையில் தந்தி முறையை உருவாக்கினார்.

* முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் இவர்தான் வடிவமைத்தவர். ஸ்பிரிங்கின் நீள் தன்மையை விவரிப்பதற்கான ஒரு சமன்பாட்டைக் கண்டறிந்தார். இது ‘ஹூக் விதி’ எனக் குறிப்பிடப்படுகிறது. உயிர்வாழ் இனங்கள், சிறு, சிறு பூச்சிகள், தாவரங்களை ஆராய விரும்பினார். அப்போது நுண்ணோக்கி ஏற்கெனவே கண்டறியப்பட்டிருந்தாலும் மிகவும் அரிதாகவே அது பயன்படுத்தப்பட்டு வந்தது.

* அதில் ஒரு பொருளை நூறு மடங்கு அதிகமாக்கி ஃபோகஸ் செய்து காண்பதும் மிகவும் கடினமானதாக இருந்தது. அதை ஆராய்ந்து தன்னால் அதை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி, 1662-ம் ஆண்டு அதை முன்னூறு மடங்கு பெரிதாக்கிக் காட்டும் வகையில் வடிவமைத்தார். அதன் வழியாக தேனீக்களின் கண்கள், வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகள் என அனைத்தையும் ஆராய்ந்தார்.

* ஒரு தக்கையை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து கொண்டிருந்த சமயத்தில் அதில் தேன்கூட்டில் இருப்பது போல சிறு சிறு அறைகள் இருப்பதைக் கண்டார். அவற்றுக்கு ‘செல்கள்’ எனப் பெயரிட்டார். ‘மைக்ரோஸ்கிராவியா’ என்ற நூலை எழுதினார். இதில் தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பு பற்றி எழுதியுள்ளார்.

* நுண்ணோக்கி வழியாகப் புதைபடிவங்களை முதன்முதலில் ஆராய்ந்தவரும் இவர்தான். வானியல் குறித்து ஆராய்வதற்காக ‘ரிஃப்ளெக்டிங் டெலஸ்கோப்பை’ உருவாக்கினார். செவ்வாய், வியாழன் கிரகங்களை ஆராய்ந்து, படங்களை வரைந்து விளக்கங்களையும் எழுதினார். இவை 200 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கிரகங்கள் சுழலும் வேகத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டன.

* இதுவரை வாழ்ந்தவர்களிலேயே அதிக விஷயங்களைக் கண்டுபிடித்த ‘புதுமைப் புலி’ எனப் போற்றப்பட்டார். ‘டாக்டர் ஆஃப் ஃபிசிக்ஸ்’ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. ‘ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன்’ அமைப்பில் அறிவியல் ஆராய்ச்சிகளின் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

* இன்றைய மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும் யுனிவர்சல் ஜாயின்ட், கேமராவின் அமெச்சுர் அளவை மாற்றி அமைக்க உதவும் ஐரிஷ் டயாஃபரம், கடிகாரங்களில் இருக்கும் பேலன்ஸ் வீல் ஸ்பிரிங் கன்ட்ரோல், காற்றடிக்கும் பம்ப் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய சாதனையாளர் ஆவார்.

* இயற்பியலாளர், வேதியியலாளர், உயிரியியலாளர், புவியியலாளர், கட்டிடக்கலை வல்லுநர், வான் ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த ராபர்ட் ஹூக், 1703-ம் ஆண்டு தமது 68-வது வயதில் மறைந்தார்.

tamil.thehindu.

Link to comment
Share on other sites

ஓசை லயத்தை கொண்டு சக யானையை இனம் காணும் ஆண் யானை சீல்கள்

 
சீல்கள்படத்தின் காப்புரிமைARI FRIEDLAENDER Image captionஆண் யானை சீல்களின் எடை இரண்டு டன்னுக்கும் அதிகமாக இருக்கும்

ஆண் 'யானை சீல்கள்' இன்னொரு யானை சீல் எழுப்பும் ஓசை லயத்தை இனம் காண்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண் யானை சீல்கள் எழுப்பும் சத்தத்தை பகுத்து பொருள் தேடிய அமெரிக்க விஞ்ஞானிகள், இவ்விலங்குகளின் சமூக வாழ்வில் குரல்வழித் தகவல்தொடர்பு முக்கிய பங்காற்றுவதைக் கண்டறிந்தனர்.

ஆழ்ந்த லயமான அழைப்பை தங்கள் அடையாளமாக அவை வெளிப்படுத்துவதை இந்த ஆய்வு காட்டியது.

மனிதர்கள் அல்லாத பாலூட்டி இனம் ஒன்று தமது அன்றாட வாழ்வில் குரலைப் பயன்படுத்துவது பற்றிய முதல் எடுத்துக்காட்டு இது என்று 'கரண்ட் பயாலஜி' என்னும் சஞ்சிகையில் அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

பாடும் யானைகள்

குறிப்பிட்ட பாடல் ஒன்றை அதன் தனித்துவமான லயத்தின் மூலம் மனிதர்கள் அடையாளம் காண்பதைப் போலவே, ஒரு சீல் எழுப்பும் ஓசைத் துடிப்பின் அமைப்பை வைத்து அதனை இன்னொரு ஆண் சீல் அடையாளம் காணும்.

லயோன் மற்றும் செயின்ட் எட்டினி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரான கட்டுரையின் முதன்மை ஆசிரியர் பேராசிரியர் நிக்கோலஸ் மாத்தேவோன் இவற்றின் குரலை 'பிரித்தறியக் கூடியவை' என்று குறிப்பிட்டுள்ளார். அந்தக் குரல்கள் மிக லயமானவை என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"சீல்கள் கூட்டத்தில் ஒன்றை மற்றொன்று யாரெனத் தெரிந்துவைத்திருக்கின்றன. அவை பிற ஆண்களின் குரலை இனம் காண்கின்றன," என்றும் அவர் குறிப்பிட்டார்.

விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்த கடற்கரையில் நான்காயிரத்துக்கும் அதிகமான சீல்கள் நெருக்கமாக இருந்தன. இது போன்ற நெருக்கமாக வாழும் பெரிய கூட்டத்தில் ஒன்று மற்றொன்றை அறிந்திருப்பது மிக அவசியமானது.

சீல்களின் சமூக வலையமைப்பு

ஆண் யானை சீல்களின் சமூக வாழ்க்கை கொஞ்சம் சிக்கலானது என்கிறார் சக கட்டுரையாளர் கரோலின் கேசி. கலிஃபோர்னியா சான்டா குரூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் இவர்.

சீல்கள்படத்தின் காப்புரிமைCOLLEEN REICHMUTH Image captionஇந்த அதிகாரம் மிக்க சீல்கள் கடற்கரை நாயகர்கள் என அழைக்கப்படுகின்றன

ஒரு ஆண் யானை சீல் தமது சொந்த சமூக வலையமைப்புக்குள் 20-30 பிற சீல்களுடன் கலந்து பழகும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களையும் அடிபணிந்துபோகும் ஆண்களையும் பிரித்தறிவது முக்கியமானது. இந்த இடத்தில் ஒரு தவறான புரிதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். கடந்த ஆண்டு ஒரு ஆண் யானை சீல் தலையில் கடிபட்டு இறந்துபோனது என்று கேசி தெரிவித்தார்.

எனவே, ஓர் ஆண் யானை சீலின் லயமான ஓசை அதன் தனித்த அடையாளமாக செயல்பட்டு, இடத்தை விட்டு ஓடவேண்டுமா என்பதைத் தீர்மானிக்க மற்ற ஆண்களுக்கு உதவுகிறது.

கடற்கரை நாயகர்கள்

கலிஃபோர்னியாவில் உள்ள அனோ நுய்வோ தேசியப் பூங்காவில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட யானை சீல்களை இந்த ஆய்வுக் குழு ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்தது.

ஆதிக்கம் செலுத்தும் ஆண் யானை சீல்களின் குரலோசைகளைப் பதிவு செய்து அவற்றை அடிபணியும் ஆண்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் போட்டுக்காட்டியது ஆய்வுக் குழு.

எதிர்பார்த்ததைப்போலவே, அதிகாரம் மிக்க சீல்களின் ஓசையைக் கேட்ட அதிகாரம் குறைந்த சீல்கள் ஓட்டம் பிடித்தன. இந்த அதிகாரம் மிக்க சீல்கள் கடற்கரை நாயகர்கள் என அழைக்கப்படுகின்றன.

பதிவு செய்த இந்த ஓசையில் ஆய்வாளர்கள் செயற்கையாக மாறுதல்களை செய்து ஒலிபரப்பியபோது அடிபணியும் ஆண்கள் அந்த ஓசையை இனம்காணவும் இல்லை எதிர்வினையாற்றவும் இல்லை. ஓர் ஓசையை இனம் காணாவிட்டால் அவை பொறுத்திருந்து பார்க்கும். இது அவற்றின் உத்தி என்கிறார் மாத்தேவோன்.

சும்மா இருப்பது சோம்பேறித்தனம் போலத் தெரியக்கூடும். ஆனால், இந்த திறமையான உத்தி அவற்றின் உயிரைக் காக்கக்கூடியது.

சீல்கள்படத்தின் காப்புரிமைCOLLEEN REICHMUTH Image captionஇனப்பெருக்க காலத்தின் போது ஆண் யானை சீல்கள் தனது 40% எடையை இழக்கிறது.

இனப்பெருக்கக் காலத்தில் கடலைவிட்டு வெளியே வந்து உணவோ, தண்ணீரோ இல்லாமல் 100 நாள்கள் கூட்டத்தோடு தங்கக்கூடியவை யானை சீல்கள். ஒரு குரலின் லயத்தை இனம் காணாவிட்டால் அவை நகர்வதே இல்லை. இந்த அணுகுமுறை மூலம் அவை ஆற்றல் விரயத்தைத் தவிர்க்கின்றன.

இயலிடச் சூழலில் இவ்விலங்குகளின் இயற்கையான நடத்தையை இந்த ஆய்வு படம் பிடித்திருப்பதாகவும், இவை உயிர் பிழைத்திருக்க லய ஓசைகளை எழுப்புவதும் அவற்றை இனம்காண்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை ஆய்வு காட்டுவதாகவும் பேராசிரியர் பேட்ரீசியா கிரே என்பவர் தெரிவித்துள்ளார். கிரீன்ஸ்பாரோவில் உள்ள நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர் இந்த ஆய்வில் பங்கேற்கவில்லை.

ஓர் உயிரினம் எப்படி லய ஓசைகளைப் பயன்படுத்துகிறது என்று புரிந்துகொள்வது, அவை பிற விலங்குகளையும், அவற்றின் சுற்றுப்புறத்தையும் எப்படிப் பார்க்கின்றன என்பது குறித்தும், இப் பண்புகள் மனிதனின் பார்வையோடு எப்படித் தொடர்புடையவை என்பது குறித்தும் விடை காண உதவும் என்று தெரிவித்துள்ளார் கிரே.

http://www.bbc.com

Link to comment
Share on other sites

அந்த ஒருவருக்கு தனுஷ் எப்போதோ பதில் சொல்லிவிட்டார்! #HBDDhanush

 
 

2002, தமிழ் சினிமா எப்போதும் போல அந்த வருடமும் காலில் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. டாப் ஸ்டார்கள் எல்லோரின் படங்களும் வெளியான ஆண்டு அது.  ரஜினியின் பாபா, கமலின் 'பஞ்சதந்திரம்', விஜயகாந்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான 'ரமணா', மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்', விஜயின் 'பகவதி', அஜித்தின் 'வில்லன்', விக்ரமின் 'ஜெமினி', லிங்குசாமி இயக்கிய 'ரன்' என வெளியான முக்கால்வாசி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. அதே 2002ன் மே மாதம் 'துள்ளுவதோ இளமை' என்ற படமும் வெளியாகிறது. அந்தப் படத்தைப் பற்றி மக்களுக்கு தெரிந்திருந்த இரண்டே விஷயம் கஸ்தூரி ராஜா இயக்கியிருக்கும் படம், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, விஜயகுமார் தவிர பலரும் படத்தில் புதுமுகங்கள். அதில் ஒருவர் தனுஷ். அன்று அந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு, 'நல்லா நடிச்சிருக்காப்ளயே',  'இவனெல்லாம் எதுக்கு நடிக்க வந்தான்' என மன ஓட்டம் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், மிரட்டலான நடிப்பால் அசத்தப் போகும், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லைகள் தாண்டி ஆடப்போகும் ஒருவனின் அறிமுகத்துக்கு நாம்தான் ஐ-விட்னஸ் என அவர்கள் இப்போது பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அன்று தனுஷே போய் ஆடியன்ஸ் கையில் டிக்கெட்டைக் கொடுத்து "நான் பின்னால பெரிய நடிகனா வரப் போறேன் என்னோட முதல் படத்தை வந்து பாருங்க" என சத்தியம் செய்து அழைத்திருந்தாலும் யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதைச் சொல்லாமலே செய்துகாட்டி இன்னும் இன்னும் ஆச்சர்யங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தனுஷின் பிறந்தநாள் இன்று.

தனுஷ்

எல்லா நடிகர்களுக்கும் இப்படியான பயணம் அமையுமா அல்லது அமைத்துக் கொள்வார்களா என்பது தெரியாது. ஆனால், தனுஷ் தனக்கான பாதையை தன் திறமையை வைத்து வடிவமைத்துக் கொண்டவர். நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக என தனுஷுக்கு என சினிமாவுக்குள்ளேயே வேறு வேறு முகங்கள். 

எல்லைகளற்ற நடிகன்

Dhanush

முதல் படமான 'துள்ளுவதோ இளமை' ரிலீஸான சமயத்தில், பி-கிரேடு படம் என்ற தோற்றத்திலேயே உருவகப்படுத்தப்பட்டது. அதனாலேயே படத்தில் தனுஷின் நடிப்பு எப்படி? என படம் பார்த்தவர்கள் கவனித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒருவேளை கவனித்திருந்தாலும் பல இடங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கும். பிறகு எப்போதுதான் தனுஷ் தன்னை ஒரு செம்மையான நடிகராக மாற்றிக் கொண்டார்? சட்டென ஒரு படத்தில் அது நடக்கவில்லை. 'காதல் கொண்டேன்’- படத்தில் சோனியா அகர்வாலிடம் 'நா இதோ இந்த மூலைல ஒரு நாய் மாதிரி இருந்துக்குறேன்' என சொல்லும் போது கொஞ்சம், 'அது ஒரு கனா காலம்' படத்தில் ப்ரியாமணி தனுஷைப் பார்க்க வரும் சிறைக் காட்சியின் போது கொஞ்சம், 'புதுப்பேட்டை' படத்தில் தன் குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு குழந்தையுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் எனப் படத்துக்குப் படம் தன் நடிப்பை மெருகூட்டிக் கொண்டே இருந்தார்.

ஏறக்குறைய 'புதுப்பேட்டை'யில் முழுமையாகவே நடிப்பு என்பது என்ன மாதிரி ப்ராசஸ் என்பதைப் புரிந்துகொண்டிருந்தார். ஆனால் அந்தப் புரிதலை பரிசோதித்துப் பார்க்க 'பொல்லாதவன்' வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பொல்லாதவனில் அந்த ஹாஸ்பிடல் காட்சியின் போது டேனியல் பாலாஜியிடம் 'போட்றா... போடு' என தனுஷ் சொல்லும் காட்சியில் புரிந்துகொள்ளமுடியும் அவர் முழுமையான நடிகனாக மாறிவிட்டதை. அதே போல 'யாரடி நீ மோகினி' படத்தில் நயன்தாராவைக் கட்டிப் பிடித்துவிட்டு, சட்டென விலக்கிவிட்டு காட்டும் உணர்வுகள், ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனிடம் "டேய், நீஞ் செய்யிறது எனக்குப் புடிக்கல, செத்துப் போயிர்றானு சொல்லியிருந்தா நானே செத்திருப்பேனேண்ணே" எனப் பேசும் காட்சி, 'மயக்கம் என்ன', '3' படங்களில் கோபத்தைக் காட்டும் பல காட்சிகள் என நிறைய நிறைய நடிகனாக வளர்ந்து கொண்டேதான் இருந்தார்.

இதுவரை சொன்னதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்குநர் கௌதம் மேனன். அவர் இயக்கத்தில் நடித்திருக்கும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' தனுஷின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கலாம். ஹரி பட சூர்யாவுக்கும் கௌதம் பட சூர்யாவுக்கும் உள்ள வித்தியாசம்தான். தனுஷின் ஹாலிவுட் படத்திற்கும் அந்த மாதிரி ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு, அதற்கு சரிசமமான எதிர்பார்ப்பு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகும் 'வடசென்னை' ட்ரையாலஜிக்கும், செல்வாராகவனின் இயக்கத்தில் எப்போதாவது நடிக்கப் போகும் படத்துக்கும் உண்டு. வெற்றியும், செல்வாவும் மாறி மாறி தனுஷின் நடிப்பு பசிக்கு தீனி போடுபவர்கள். அந்த தீனி  தனுஷ் தனக்கான நடிப்பு எல்லைகளை மீண்டும் மீண்டும் விஸ்தாரமாக்கிக்கொள்ள உதவும் எரிபொருள் போன்றது. ‛இவ்வளவுதான்யா! இனி, இதைத் தாண்டி தனுஷ் நடிச்சிடப் போறதில்ல’ என்பதை எப்போதும் முடிவு செய்துவிட முடியாது. 

எளிமையான பாடகன்

Why This Kolaveri Di

முன்பு ஒரு பேட்டியின் போது "எவன்டி உன்னப் பெத்தான்" பாட்டுக்கு பயங்கர ரீச் இருக்கே எனக் கேட்டபோது, "அதெல்லாம் ட்ரெண்டுக்காகப் போடுறதுங்க, காலத்துக்கும் நிக்காது" என சொல்லியிருப்பார் யுவன். அதே கேட்டகரிதான், "நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு" பாடலும். அதைப் பாடியதால் தனுஷ் எனும் மகத்தான பாடகர் கிடைத்துவிட்டார் என்று புகழ்வதாக அர்த்தம் இல்லை. ஏழு வருடங்களுக்குப் பிறகு செல்வாராகவன் இயக்கிய 'மயக்கம் என்ன' படத்தில் பாடுகிறார் தனுஷ். மறுபடி '3' படத்தில் பாடுகிறார், 'எதிர்நீச்சல்' படத்தில் பாடுகிறார்,  'வேலையில்லா பட்டதாரி', 'அநேகன்', 'மாரி' என தொடர்ந்து பாடிக்கொண்டே இருக்கிறார். எந்தப் பாடலும் கேட்பவர்களுக்கு எரிச்சலூட்டவில்லை. இதெல்லாம் ஒரு பாட்டா என இசை ஞானத்தையும் காட்டவில்லை. அதற்கு பதிலாக அந்தப் பாடலை ஜாலியாக முனுமுனுத்துப் பார்க்கிறார்கள். அந்தப் பாடலை யாராலும் பாட முடிகிறது. தனுஷின் குரல் சம்திங் ஸ்பெஷல், கடவுளின் வரம், புரொஃபஷனல் என்பதை எல்லாம் தாண்டி, அந்தக் குரல் மிகவும் எளிமையானது. தங்களால் தனுஷ் பாடிய ஒரு பாடலை, அதே போல ரசித்து, ஏற்ற இறக்கத்துடன் பாட முடிகிறது என்பது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இது அவர் பாடும் பாடல்களின் ரீச்சுக்கும் பெரிதாக உதவியது. தமிழில் மட்டுமல்ல, கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'வஜ்ரகயா' படத்தில் பாட தனுஷுக்கு அழைப்பு வந்தது.

அந்தப் பாடல் பெரிய ஹிட்டும் ஆனது. காரணம் அந்த எளிமையான குரலாக, எல்லோரிடமிருந்தும் வெளிப்படக் கூடிய குரலாக இருந்தது. தனுஷ் மிகச் சிறந்த பாடகர் என்பதை நிரூபிப்பதற்காக இதை எழுதவில்லை. எந்த மீடியத்தின் மூலம் எல்லாம் என்டர்டெய்ன்மென்ட் செய்யலாம், அதை எவ்வளவு எளிமையாக வழங்கலாம் என தனுஷ் யோசித்ததை மட்டுமே சொல்ல நினைக்கிறேன். இப்போது கொண்டாட்டமோ, காதலோ, சோகமோ, காதல் தோல்வியோ, அம்மாவோ, சச்சினோ எல்லாவற்றுக்கும் தனுஷின் குரலில் ஒரு பாடல் இருக்கிறது. 

வேற மாறி பாடலாசிரியர்

Maari

பாடகராக அறிமுகமானதற்கு ஏழு வருடம் கழித்து தனுஷ் மீண்டும் பாடகராக மட்டும் வரவில்லை. பாடலாசிரியராகவும் வந்தார். 'மயக்கம் என்ன' படத்தில் இவர் எழுதிய ‛பிறை தேடும் இரவிலே’ பாடலில் இடம்பெற்ற வரிகள் சம்திங் ஸ்பெஷல். பாடல்களுக்கு என இருந்த க்ளிஷேவான வார்த்தைகளைக் களைத்துப் போட்டு, தனுஷ் எழுதும் பாடலுக்கான முதல் வரி சுவாரஸ்யமானது. "நிஜமெல்லாம் மறந்துபோச்சே பெண்ணே உன்னாலே", "டெட்டி பியர கட்டி உறங்கிடும்", "ஊதுங்கடா சங்கு". '3' படத்தின் கொலவெறிடி ஹிட். ஸ்பெஷலான ஒன்றா என்றால் கண்டிப்பாக, ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் மூலம் தனுஷ் மீது பாய்ந்த வெளிச்சம் பெரிது. தனுஷ் எனும் கலைஞனை இப்படி ஒரு பாடல் வெவ்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்று நிறுத்தும் என்றால் அது ஸ்பெஷலான பாடல்தானே.

ரஹ்மான் இசையில் தனுஷ் எழுதிய 'கொம்பன் சுறா', வேலை இல்லா பட்டதாரியில் 'போ இன்று நீயாக', 'பவர் பாண்டி'யில் 'வெண்பனி மலரே' போன்ற பாடல்கள் ஒரு நடிகரிடமிருந்து வெளிப்படுவது எக்ஸ்ட்ராடினரி வகையைச் சேர்ந்தது. இது தனுஷை சிறந்த பாடலாசிரியராக நிரூபிக்க  வேண்டி சொல்லப்பட்டவை அல்ல. இறுதியில் ஒரு பாடலோ, அதன் வரிகளோ உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை தனுஷ் எழுதும் பாடல்களும் செய்து கொண்டுதான் இருக்கிறது. கொண்டாட்டமோ, சோகமோ ஏதோ ஓர் உணர்வை மற்றவருக்கும் கடத்துவதுதான் கலையின் வேலை. தனுஷ் எழுதும் பாடல்கள் அதைச் செய்கின்றன என்பதற்கான சின்ன நோட்டிஃபிகேஷனே இது.

தரமான தயாரிப்பாளர்

காலா

தயாரிப்பாளர் தனுஷ் குறித்துப் பார்க்கும் முன், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு பின்னால் உள்ள சின்ன ஃப்ளாஷ் பேக்கைப் பற்றிப் பார்ப்போம். "'இன்க்ளோரியர்ஸ் பாஸ்டர்ட்ஸ்'னு ஒரு ஜெர்மன் படம். அதை நானும், அனிருத்தும் பார்த்தோம். அதில் அடிக்கடி வுண்டர்பார், வுண்டர்பார்னு ஒரு வார்த்தையைப் யூஸ் பண்ணாங்க. என்னடா அது வுண்டர்பார்னு பார்த்தா அதுக்கு ஜெர்மன் மொழியில் 'வண்டர்ஃபுல்'னு அர்த்தம்னு புரிஞ்சது. அந்தப் பெயரைத்தான் எங்களோட தயாரிப்பு நிறுவனத்துக்கு வெச்சோம்" இப்படித்தான் ஆரம்பித்தது தனுஷின் வுண்டர்பார். அதற்கு அர்த்தம் ஏன் தேடினார்கள் என்பதை அடுத்த பாராவில் பார்க்கலாம். இப்போது தயாரிப்பாளர் தனுஷுக்கு வரலாம். மனைவி ஐஸ்வர்யா இயக்கிய '3' படத்தை தன்னுடைய ‛வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் வினியோகம் செய்து ஆஃப் ஸ்க்ரீன் வேலைகளுக்குள் இறங்கினார் தனுஷ். தயாரிப்பாளராக அவர் அறிமுகம் செய்து வைத்தவர்கள் ஏராளம். 'மெரீனா' மூலமே அறிமுகமானாலும் தனி ஹீரோவாக சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியது தயாரிப்பாளர் தனுஷ்தான். அனிருத்தை இசையமைப்பாளராக நன்கு பரிட்சயப்படுத்தியதும் தனுஷ் தயாரித்த படங்கள்தான். 'காக்கா முட்டை' போன்ற எளிமையான படமோ, 'காலா' போன்ற பிரமாண்டப் படமோ எதுவாக இருந்தாலும் அதை எந்த உயரத்துக்கும் எடுத்துச் செல்வதில் தனுஷ் காட்டிய, காட்டிக் கொண்டிருக்கும் ஆர்வம் மிகப் பெரியது. தமிழ் போலவே இப்போது இரண்டு மலையாளப் படங்களைத் தயாரிக்க இருக்கிறார். இன்னும் பல தரமான கதைகளையும், இயக்குநர்களையும், நடிகர்களையும் வுண்டர்பார் வெளிக் கொண்டு வரும் என்பது உறுதி.

ஹீரோ இப்போ டைரக்டர் ஆனேன்

பவர் பாண்டி

"எனக்கு அப்போ டைரக்‌ஷன் மேல ரொம்ப ஆசை. அதனால வீடியோ சின்ன கேமரா ஒன்ன எடுத்துகிட்டு அனிருத், எங்க வீட்ல இருக்கவங்கன்னு எல்லாரையும் நடிக்க வெச்சு குறும்படம் எடுப்பேன். சில படங்கள்ல நானே ஹீரோவா நடிப்பேன். அத நானே எடிட்டும் பண்ணுவேன். அனிருத் மியூசிக் பண்ணுவார். அப்படி ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணும் போது, ஆக்ச்சுவலா அதைப் பார்க்கறதுக்கு ஆளே கிடையாது. ஆனா, இதை ஒரு பேனர் பேர் வெச்சு ரிலீஸ் பண்ணா நல்லாயிருக்கும்னு அனிருத் ஃபீல் பண்ணாப்ள. அப்போ எங்களுக்கு அந்த வுண்டர்பார் வார்த்தை நியாபகம் வந்தது. கடைசில அதையே பேரா வெச்சு ரிலீஸ் பண்ணி நாங்களே பாத்துகிட்டோம்" இதுதான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடியதன் காரணம். இப்படி ஆரம்பித்தது தனுஷின் இயக்குநர் பயணம். தனக்குள் இருந்த இயக்குநர் ஆசையைப் பல இடங்களில் பதிவு செய்திருந்த தனுஷ் அதை செய்ய மட்டும் நிறையவே நேரம் எடுத்துக் கொண்டார். ஷூட்டிங் இடைவேளை நேரங்களில் எழுதுவது தனுஷின் பழக்கம். அப்படி எழுதத் துவங்கியதுதான் 'பவர் பாண்டி'யும். தனுஷ் படம் இயக்கப் போகிறார் என்றதும் பலருக்கும் அது ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கலாம், இவர் என்ன செய்துவிடப் போகிறார் என்றும் தோன்றியிருக்கலாம். ஆனால், இயக்குநராகவும் தரமான படத்தையே அளித்திருந்தார் தனுஷ். இப்போது 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் மூலம் கதாசிரியராகவும் களம் இறங்கியிருக்கிறார்.

'காதல் கொண்டேன்' படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து கொண்டிருந்தது. அப்போது தனுஷிடம் வந்து ஒருவர் "ஹீரோ எவரு?" எனக் கேட்கிறார். காதல் கொண்டேனில் தனுஷின் கெட்டப்பை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். எனவே, தனுஷ் தூரத்தில் இருக்கும் ஒருவரைக் கைகாட்டி அவர்தான் ஹீரோ எனச் சொல்கிறார். பிறகு எப்படியோ தனுஷ்தான் ஹீரோ என அவருக்குத் தெரிந்துவிட விழுந்து விழுந்து சிரிக்கிறார். பக்கத்திலிருக்கும் அனைவரிடமும் 'அங்க பாத்தியா அவர்தான் ஹீரோவாம்' எனக் கைகாட்டி சிரிக்கிறார். தூரத்திலிருக்கும் ஆட்டோக்காரரைக் கை காட்டி, "வீடு ஹீரோ ஆய்த்தே நுவ்வு கூட ஹீரோனே (இவன் ஹீரோன்னா, அப்போ நீ கூட ஹீரோதான்)" என ஏளனம் செய்கிறார். இன்றைய தனுஷின் இந்த வெற்றிக்கு அந்த ஆந்திராக்காரரின் சிரிப்பு கூட ஒரு காரணம்தான். ஆனால், அந்த ஒருவருக்கு தனுஷ் ஒரு நடிகனாக பலவருடங்கள் முன்பே பதில் சொல்லிவிட்டார் என்பதே தனுஷின் மிகப் பெரிய வெற்றி. தமிழில், இந்தியில் என இன்னும் அந்த பதிலை சொல்லிக் கொண்டே இருக்கிறார், சீக்கிரமே ஆங்கிலத்திலும் சொல்ல இருக்கிறார்.

 

ஹேப்பி பர்த் டே தனுஷ்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

நோயை கண்டுபிடிக்கும் நாய்கள்

வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதிலிருந்து வேட்டையாடுவது வரை மனிதர்களால் உணரமுடியாத வாசனைகளை நாய்களால் உணரமுடியும் என்பது நீண்ட நாட்களாக தெரிந்த விஷயம்.

தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில் பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இன்று உலக கல்லீரல் தினம்: மதுப்பழக்கம் கைவிடுவோம், திராட்சை ஜூஸ் அருந்துவோம்!

 

இன்று உலக கல்லீரல் தினம், கல்லீரல் அழற்சி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான இன்று அவரது நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

கல்லீரலைத் தாக்கக்கூடிய ஹெபடைட்டிஸ் எனப்படும் மஞ்சள்காமாலை நோயால் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ஆண்டுதோறும் ஹெபடைட்டிஸ் ஏ வைரஸால் 1.5 மில்லியன் பேரும் ஹெபடைட்டிஸ் பி வைரஸால்
2 பில்லியன் பேரும் ஹெபடைட்டிஸ் சி வைரஸால் 150 மில்லியன் பேரும் பாதிப்புக்குள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

ஹெபடைட்டிஸ் சி கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், எந்தவித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்றாலும் காலப்போக்கில் கல்லீரலில் தழும்பை ஏற்படுத்தி கல்லீரல் அரித்துப்போகும் அளவுக்கு இதன் பாதிப்பு தீவிரமாக இருக்கும். இத்தகைய பாதிப்புகளுக்கு மதுப்பழக்கம், போதைப்பழக்கம் மட்டுமல்லாமல் ரசாயனம் மற்றும் கொழுப்பு போன்றவையும் காரணமாக சொல்லப்படுகிறது. இவற்றின் அடிப்படையில் உலக அளவில் 500 மில்லியன் பேர் நாள்பட்ட ஹெபடைட்டிஸ் பி அல்லது ஹெபடைட்டிஸ் சி-யால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக கல்லீரல் அழற்சி ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

கல்லீரல்

ஹெபடைட்டிஸ் சி வைரஸ் தாக்காமலிருக்க தேவையற்ற ஊசிமருந்துகளைத் தவிர்ப்பதுடன் போதைமருந்து உள்ளிட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும் குறிப்பாக ஊசி உள்ளிட்ட உபகரணங்களை ஒருவர் பயன்படுத்திய பிறகு, சுத்திகரிக்காமல் பயன்படுத்தக்கூடாது.

அதேநேரத்தில் கல்லீரலில் அழற்சி உள்ளவர்கள் திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ் போன்றவற்றைத் தினமும் அருந்துவதன்மூலம் சிறுநீர் எளிதாக வெளியேறும். எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீருடன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் செல்கள் பலமடையும். இது மஞ்சள்காமாலைக்கு மிகவும் நல்லது. அன்றாட சமையலில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மோரில் சீரகத்தூள் கலந்து குடித்து வந்தால் ஜீரணம் மேம்படும். சமையல் எண்ணெயை அதிகளவில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுடன் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு நல்லது. தொடர்ந்து பின்பற்றினால் கல்லீரல் நோய் வராமல் தடுக்கும்.

 

கல்லீரல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் துளசி, மாதுளம்பழத்துடன் 4 ஏலக்காய், அரை துண்டு சுக்கு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் பால், தேன் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு கிடைக்கும். இவை தவிர கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வரட்சியினால் வற்றும் பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் வெளித்தோன்றியுள்ள பராக்கிரமபாகு மன்னனின் அரச மாளிகை!

நாட்டில் நிலவும் வரட்­சி­யான கால­நி­லையின் கார­ண­மாக பொலன்­ன­றுவை பராக்­கி­ரம சமுத்­தி­ரத்தின் நீர்­மட்டம் நாளுக்கு நாள் வேக­மாக குறைந்து வரு­கி­றது. இதன் கார­ண­மாக ஆழ­மான பகு­தியில் நீரினால் மூடப்­பட்­டி­ருந்த புரா­தன காலத்து அரச மாளிகை ஒன்றை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

parakrama-(1)

இது பராக்­கி­ர­ம­பாகு மன்­னனின் ஆட்­சிக் கா­லத்தில் கட்­டப்­பட்ட மாளிகை என வர­லாற்று குறிப்­பு­களில் காணப்­ப­டு­கின்­றது. நாள­டைவில் நீர்­மட்டம் அதி­க­மா­னதால் மூடப்­பட்­டி­ருந்த இந்த மாளிகை,  தற்­போது வரட்­சி­யினால் ஏற்­பட்ட நீர்மட்டக்குறைவினால் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளது.

http://metronews.lk

Link to comment
Share on other sites

'செல்'லைக் கண்டறிந்த ராபர்ட் ஹூக் பிறந்த தினம் இன்று

 
 

'ராபர்ட் ஹூக்' - இவரை எத்தனை பேருக்குத் தெரிந்து இருக்குமோ தெரியவில்லை. காலம் மறந்துபோன மாமேதைகளில் இவரும் ஒருவர் எனலாம். ஆனால், வரலாறு இவரை புதுமைப்புலி என்றே பதிந்து வைத்துள்ளது. உலகின் 100 சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவர் பத்தாவது இடத்தில் இருந்தபோதும் என்னவோ அறிவியல் உலகில் மட்டுமே அறியப்பட்டவராக இருக்கிறார். சரி இவரைப்பற்றி என்ன என்கிறீர்களா. 1635-ம் ஆண்டின் ஜூலை 28-ம் நாள்தான் இங்கிலாந்தில் ஃபிரஷ்வாட்டர் எனும் பகுதியில் ஹூக் பிறந்தார். அவருடைய பிறந்த நாள் இன்று. சரி என்ன சாதித்தார் என்கிறீர்களா. இதோ சுருக்கமாகவே தருகிறோம். ஆனால், அதுவே நீள்கிறது பாருங்கள்.

ராபர்ட் ஹூக்

இவர் கண்டறிந்த நுண்ணோக்கியின் மூலம் 'செல்' என்ற அமைப்பைக் கண்டறிந்து சொன்னவரே இவர்தான். ஒவ்வொரு பொருளும் செல்லால் ஆனது என்பதை அதன்பிறகே உலகம் அறிந்துகொண்டது. இவரின் இந்த ஆய்வுக்குப் பின்னர்தான் உடலியல் வல்லுநர்களின் செல்கள் குறித்த ஆய்வுகள், மருத்துவ வளர்ச்சி போன்றவை வேகமெடுக்க ஆரம்பித்தன. முதல் கணிதக் கருவி, கிரிகோரிய தொலைநோக்கி, ரிஃப்ளெக்டிங் டெலஸ்கோப் போன்றவை இவரால் கண்டுபிடிக்கப்பட்டு கணிதம், வானியல், மருத்துவம் போன்றவை பின்னாளில் வளர்ச்சி பெற்றன.

செல்

 

இவருடைய 'மைக்ரோஸ்கிராவியா' நூல் செல்களைப் பற்றிக் கூறும் மருத்துவ வேதம் என்றே சொல்லப்படுகிறது. செவ்வாய், வியாழன் உள்ளிட்ட பல கோள்களின் செயல்பாடுகளைக் குறித்து, இவர் செய்த ஆய்வுகள்தான் வானியலில் பெரும் திருப்புமுனையை உருவாக்கியது. மோட்டார் வாகனப் பாகங்கள், கடிகாரத்தின் பேலன்ஸ் வீல் ஸ்பிரிங் கன்ட்ரோல், கேமரா பாகங்கள், காற்றடிக்கும் பம்ப் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்த அதிசய அறிவியலாளர் இவர். இதனாலே அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்த புலி எனப் போற்றப்பட்டார். இயற்பியலில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றாலும் உயிரியியலாளர், வேதியியல் அறிஞர், புவியியலாளர், கட்டடக்கலை நிபுணர், வானவியல் அறிஞர், கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் என இவரின் பன்முக சாதனைகள் நீளமானவை. மனித குல வரலாற்றில் பல முன்னேற்றங்களை உண்டாக்க பாடுபட்ட ராபர்ட் ஹூக் அவர்களின் பிறந்த தினம் இன்று. 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

கதிர் நடித்திருக்கும் சிகை படத்தின் ட்ரெய்லர்..!

 
 

5770e0c2-7edf-46dc-b871-f9720834e1a8_202


மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பிறகு கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா எனப் படத்திற்கு படம் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார். தற்போது அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிகை படத்தின் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை ஜெகதீசன் சுபு இயக்கியுள்ளார். பல திரைப்பட விழாக்களுக்கு சென்று விருதுகளை வென்றிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதில் ரித்விகா, மயில்சாமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பல கெட்டப்களில் நடித்துள்ள கதிர், பெண் வேடமிட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிகை திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

 

 

Link to comment
Share on other sites

அல்பீனிஸத்தை எதிர்க்கும் கால்பந்து அணி

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து அணியான எவர்ட்டனின் சிறிய உதவியுடன் ஒரு புத்தம் புதிய கால்பந்து அணி ஓரவஞ்சனை மற்றும் பழமைக் கருத்துக்கள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறது.

தன்சானியா உட்பட சில ஆப்பிரிக்க நாடுகளில் அல்பினிஸம் என்னும் வெளிறிய நிற உடலைக் கொண்டவர்கள் தொடர்ச்சியான தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். சிலரோ மந்திரித்த மருந்துகளுக்காக அவர்களின் உடல்பாகங்களை தேடுகிறார்கள்.

ஆனால், அப்படியான அல்பீனிஸ வீரர்களோ தாமும் ஏனையவர்களைப் போன்றவர்களே என்று நிரூபிக்க முனைகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

Link to comment
Share on other sites

‘உரிமையில்லாத உறவு ஸ்திரமற்றது’
 

image_f561207173.jpgஉரிமையில்லாத உறவு ஸ்திரமற்றது. உறவு என்பது இரத்தம் சம்பந்தமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. முன்பின் தெரியாதவர்களிடம்கூட, பாசபந்தம் ஏற்படலாம்.இது எங்ஙனம் சாத்தியமாகும் என ஆராயவும் கூடாது. 

மனம் சம்பந்தப்பட்ட ஈர்ப்புக்கு விளக்கம் கேட்பதைவிட, இத்தகைய உறவை, பேரன்பை நாம் புரிந்து கொண்டால் போதும். 

குழந்தைகள் பேதம் பார்ப்பதுமில்லை; அவை தங்களிடம் எத்தகையவர்கள் பாசத்தைக் காட்டினாலும் புரிந்து கொண்டுவிடுகின்றன.  

ஆனால் நம்மவர்களில் பலர், பாசம், அன்பு என்பவற்றைப் பணம், பதவி, செல்வாக்கை மையப்படுத்தியே உறவினர்களைக் கூட, தங்களுடன் சேர்த்துக் கொள்வதா, அல்லது தள்ளி வைப்பதா என்பது பற்றித் தீர்மானிக்கின்றார்கள்.  

எத்தகைய ஆழமான பற்றுப் பாசத்தை வைத்திருக்கும் அன்பை உணராமல், அவர்களை உதாசீனப்படுத்துபவர்களிடம் கோபிக்காமல் விலகி நடந்தால், மனம் காயப்படாமல் இருக்கும். 

Link to comment
Share on other sites

வரலாற்றில் இன்று: ஜூலை 29
 
 

1%282791%29.jpg1948: இரண்டாம் உலக யுத்தம் காரணமாக, 1936 ஆம் ஆண்டுக்குப் பின் நடைபெறாதிருந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டி லண்டனில் மீண்டும் ஆரம்பமாகியது.

1957: சர்வதேச அணுசக்தி முகவரகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1958: நாசா நிறுவனத்தை அமைப்பதற்கான சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டி.ஐசனோவர் கையெழுத்திட்டார்.

1967: வெனிசூலாவில் பூகம்பத்தினால் 400 பேர் பலி.

1981: பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது.

1987: ஆங்கிலக்கால்வாய்க்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தல் பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தட்சர், பிரெஞ்சு ஜனாதிபதி மிட்டரான்ட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

1987: இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் கையெழுத்திட்டனர்.

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

'ஓவியாலஜி' ஐ.ஐ.எம்-மில் பாடமாகுமா ..? - 'பிக் பாஸ்' ஓவியாவின் கொக்கிபீடியா பக்கம்!

 
 

தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக் பிக் பாஸும் ஓவியாவும் தான். ஓவியா ஆர்மிக்கு இப்போது ஆள் சேர்ப்பு முகாம் நடத்தினால் 100 % அட்டென்டன்ஸ் நிச்சயம். ஓவியாவின் நடவடிக்கைகளால் நெகிழும் ரசிகர்களே... ஓவியாவின் பிக் பாஸ் அத்தியாயத்தைப் பற்றிப் பார்ப்போம் வாங்க. 

ஓவியா

இயற்பெயர் : ஹெலன் நெல்சன்
சொந்த ஊர் : கேரளா
பிறந்தது : ஏப்ரல் 29, 1991
படிச்சது : பி.ஏ 
பிடிச்சது : பிரியாணி

இவரைப் பற்றி :

ஹெலன், சற்குணம் இயக்கிய 'களவாணி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதற்குப் பின்பும் பல படங்களில் நடித்தவருக்கு 'பிக் பாஸ்- தமிழ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. பங்கேற்ற முதல் நாளிலேயே குருவிகளைப் பார்த்துத் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தது, பசிக்கிறதென பிக் பாஸிடம் வாழைப்பழம் கேட்டது என மக்கள் மனதில் இடம்பிடித்தார். மீம் மெட்டீரியலாக பிக் பாஸ் வீட்டில் குடியேறியவர் தனது சட்டத்தில் ஒருபோதும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவராக, அடுத்தவர்களைப் பற்றிப் புறம் பேசாதவராக, தனது முடிவில் உறுதியானவராக, மற்றவர்களுக்கும் நம்பிக்கை தருபவராகத் தனது பிரத்யேகமான ஆட்டிட்யூடால் அமோக ஆதரவைப் பெற்றுத் தற்போது ஐ.நா.சபைத் தலைவ... (தொடர்ந்து வாசிக்க...) 

சாதனைகள் : 

குடியரசுத் தலைவர் தேர்தல், கதிராமங்கலம் விவகாரம், சசிகலாவுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட பிரச்னை, நீட் தேர்வு விளைவுகள், கமல்ஹாசனின் அரசியல் பதிவுகள் என எல்லாவற்றையும் சற்றே ஓரங்கட்டிவிட்டு #SaveOviya ஹேஸ்டேக் போட்டுக் கொண்டிருந்தது மொத்தத் தமிழினமும். அந்த அளவுக்கு அம்மணி இப்போது ரசிகர்களின் மனதில் ஈஸி சேர் போட்டு அமர்ந்திருக்கிறார்.

Oviya 

கோபத்தில் கஞ்சா கருப்புவைப் பார்த்து ஓவியா சொன்ன 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க..!' எனும் வாக்கியம் காதல் மொழியாக மாறிப் பலரை உருக வைத்துக் கொண்டிருக்கிறது. ஓவியாவின் பெயரில் தொடங்கப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களுக்கு ஃபாலோயர்ஸ் குவிகிறார்களாம். பிக் பாஸ் ஓவியாவைக் காப்பாற்ற ஓட்டுப்போடச் சொன்னால் கோடிக்கணக்கில் வாக்களித்து அமோக ஆதரவு தரும் ரசிகர்களைப் பெற்றதும் அசகாய சாதனை.  'பிக் பாஸ்' ப்ரொமோவில் ஓவியா சிரித்தால் ஹார்ட்டின் எமோஜிகள் பறக்கின்றன. கண் கலங்கினால் கோப ரியாக்‌ஷன்ஸ் தெறிக்கின்றன. கமென்ட்களில் ஓவியாவுக்குக் குவியும் ப்ரொபோசல்களை வாசித்தால் வாழ்நாளே முடிந்துவிடும் போல. அந்தளவுக்கு அவருக்குக் குவிகின்றன காதல் விண்ணப்பங்கள். ஓவியாவின் வசனங்கள் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. 

கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை கிடைக்காத வரவேற்பு இந்த நிகழ்ச்சியில் இவரது குணாதிசியத்திற்காகக் கிடைத்திருக்கிறது. ஓவியாவின் ஆட்டிட்யூட் தியரி வெகுவிரைவில் ஐ.ஐ.எம்-மின் மேலாண்மைப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், குளிர்ந்துபோய்ச் சில்லறைகளைத் சிதற விடுகிறார்கள் ரசிகர்கள். 'அவரது ட்ரேட்மார்க் புன்னகையில் சிறிதளவு குறைந்தாலும் தீக்குளிப்போம்' எனப் போராட்டங்கள் நடந்தாலும் வியப்பதற்கொன்றுமில்லை. 

சோதனைகள் : 

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் மொத்த ஹவுஸ்மேட்ஸும் ஒன்றுகூடி ஓவியாவை கார்னர் செய்தது. 

'பிக் பாஸ் தமிழ்' தொடங்கிய இரண்டாவது வாரத்திலிருந்து ஹவுஸ்மேட்களால் தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டு வருவது. 

எப்போதும் கூலாக இருப்பவரைச் சீண்டி, கோபத்தில் கத்த வைப்பது, கண்கலங்க வைப்பது. 

Oviya Helen

பலம் : 

தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. ஓவியா அழுவதுபோல வெளியான ப்ரொமோ வீடியோவைப் பார்த்தே பலர் வெகுண்டெழுந்து #SaveOviya ஹேஸ்டேக்கை ட்ரெண்டடிக்க வைத்தது. ஓவியாவைப் பாராட்டி மீம்ஸ்களும் ஷேர் ஆகின்றன. 'நீங்க ஷட்-அப் பண்ணுங்க...' வாக்கியம் 'பலூன்' படத்தின் ப்ரொமோவுக்காகப் பாடலாகிறதாம். திரையுலகைச் சேர்ந்த பலரும் ஓவியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இன்றைய தேதியில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முதல் வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலர் வரை ஓவியாவின் ஆதரவு பெற்றவரே வெற்றிபெற முடியும் என்கிற நிலை நிலவுகிறதாம். கெத்து பேபி!


ஓவியா உதிர்த்த தத்துவ முத்துகள் (ஓவியாலஜி) :

* ஒரு தடவை, ஒரு விஷயத்துக்கு அழுதா, அப்புறம் அதுக்காக அழக் கூடாது.

* எல்லோருக்குள்ளேயும் சோகம் இருக்கத்தான் செய்யுது... அதை எல்லாம் வெளிக்காட்டியே  ஆகணுமா என்ன?

* சொல்றத சொல்றது மாதிரி சொன்னா எல்லோரும் கேட்பாங்க..!

* அவ நடிக்கிறவளாவே இருக்கட்டும், அதை இந்த நேரத்துல சொல்லிக் காயப்படுத்தணுமா?

* அவ உடம்புல உள்ள வலியை விட அவ மனசுல தான் நிறைய வலி இருக்கும். 

* திரும்பத் திரும்ப அழுதா சீன் போடுறேன்னு சொல்லுவாங்க..!

* உங்க பெயர் என்னால கெடக்கூடாதுன்னு நினைச்சேன்.

* எனக்கு யார் சப்போர்ட்டும் வேணாம் எனக்கு நானே சப்போர்ட் பண்ணிக்குவேன்..!

Oviya Army - Bigg boss

மேலும் பார்க்க : 

பிக் பாஸ் தமிழ் 
கோணக் கொண்டைக்காரி - பாடல் 
களவாணி - திரைப்படம் 

மேலும் படிக்க : 

ஓவியாலஜி - ஓவியாவின் வாழ்வியல் வழிமுறைகள் 
நூறு நாள் - நூறு வேதம்!
உங்களது டைம்லைன் 

இணைய : 

Oviya Army

 

அகில உலக ஓவியா ரசிகர் மன்றம். 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் பிரதமர் பதவியைக் காலிசெய்த Calibri ஃபான்ட்... பரபர சஸ்பென்ஸ் கதை! #Fontgate

 
 

ணினியில் பயன்படுத்தும் ஃபான்ட் (Font) எனப்படும் ஓர் எழுத்துரு, பிரதமர் பதவியிலிருந்து ஒருவரை நீக்கும் அளவுக்கு வலிமையுடையது எனச்சொன்னால் நம்பமுடிகிறதா? ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலையையே புரட்டிப்போடக்கூடிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? கொஞ்ச காலம் முன்புவரை யாரும் இதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப் விஷயத்தில் இதுதான் தற்போது நடந்திருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்

தொடரும் சாபம் :

இந்தியாவைப் போல், பாகிஸ்தான் நாட்டிலும் பிரதமரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை, இதுவரை ஒருவர் கூட ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் நீடித்ததில்லை. பனாமா பேப்பர் ஊழல் விவகாரத்தில், சொத்துக்குவிப்பு செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நவாஸ் ஷெரிஃப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை செய்யவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியேற்ற நவாஸ் ஷெரிஃப், 4 ஆண்டுகள் 54 நாள்கள் பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார்.

பனாமா பேப்பர் ஊழல் :

 

பனாமா பேப்பர்ஸ் ஊழல்

மத்திய அமெரிக்க நாடான பனாமா என்றதும் பலருக்கும், அட்லாண்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் செயற்கையாக உருவாக்கப்பட்ட, 48 மைல் நீள 'பனாமா கால்வாய்' தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது 'பனாமா பேப்பர்ஸ்' என்றழைக்கப்படும் ஊழல் விவகாரம், அந்நாட்டைப்பற்றி சர்வதேச அரங்கில் பேச வைத்திருக்கிறது. பனாமாவைச் சேர்ந்த மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், உலகின் பல பிரபலங்களும், நிறுவனங்களும் வெளிநாடுகளில் முறைகேடாக சொத்துக்குவித்திருப்பதாகக் கடந்த ஆண்டு தகவல்கள் வெளியானது. இதில், 3,60,000 தனி நபர் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. மொசாக் பொன்சேகா நிறுவனத்தின் டேட்டாபேஸில் இருந்து, சுமார் 1.15 கோடி பக்கங்கள் ஆவணங்கள் வெளியே கசிந்தது. இதை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டபின், இந்தச் செய்தி உலகையே உலுக்கியது.

உலகின் மிகப்பெரிய டேட்டா லீக் என்று இது அழைக்கப்படுகிறது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வினோத் அதானி உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இதில் அடிபட்டன. 90-களில் பிரதமராக இருந்தபோது, சட்டவிரோதமாக லண்டனில் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சொத்துகளை அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் நிர்வகிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து ஷெரிஃப்பை பதவிநீக்கம் செய்து, அவருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான் கான் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்பின் வாஜித் ஜியா தலைமையிலான கூட்டு விசாரணைக்குழுவை இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அம்பலமான ஊழல் :

கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணையில், ஷெரீஃப் குடும்பத்தினரின் வருவாய் மற்றும் சொத்து குறித்த ஆவணங்களில் நிறைய குளறுபடிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்நிலையில், லண்டன் சொத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும்வகையில், நவாஸ் ஷெரீஃப்பின் மகள் மரியம் நவாஸ் இக்குழுவிடம் சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.

மரியம் நவாஸ்

இந்த ஆவணங்கள்தான் இந்த வழக்கின் முக்கிய சாட்சியமாக மாறியது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேதியிட்ட இந்த ஆவணங்கள் அனைத்தும் 'கலிப்ரி' (Calibri) என்ற எழுத்துருவில் தயாரிக்கப்பட்டிருந்தன. விண்டோஸ் 2007 ஆபரேட்டிங் சிஸ்டத்தின் டீஃபால்ட் ஃபான்ட் ஆக இதுதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எழுத்துரு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2007-ம் ஆண்டில் இருந்துதான் வர்த்தகரீதியாக வெளியிடப்பட்டது. லூகாஸ் டி க்ரூட் (Lucas De Groot) என்பவர்தான் இந்த எழுத்துருவை வடிவமைத்தவர். இந்த எழுத்துருவை வடிவமைக்கும் பணி 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2004-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின், 2006-ம் ஆண்டு மே மாதம்தான் முதல்முதலாக டெவலப்பர்களுக்கான பீட்டா வடிவமாக இது வெளியிடப்பட்டது. ஆனால், மரியம் நவாஸ் சமர்ப்பித்த ஆவணங்கள் பிப்ரவரி மாதம், 2006-ம் ஆண்டு தேதியிடப்பட்டிருந்தன. எனவே, இந்த ஆவணங்கள் போலியானவை என்ற முடிவுக்கு விசாரணைக்குழு வந்தது.

கலிப்ரி ஃபான்ட்

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, நவாஸ் ஷெரிஃப்பை பிரதமர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்தும், அவர் அரசியல் தொடர்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியாகத் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃப் பதவி விலகியுள்ளார்.

'எவ்வளவு சாமர்த்தியமான குற்றவாளியும் ஒரு தடயத்தையாவது விட்டுச்செல்வான்' என்பதை கிரைம் திரில்லர் படங்களில் புலனாய்வுக் கதாபாத்திரங்கள் பேசிக்கேட்டிருப்போம். ஆனால், எழுத்துருவால் ஊழல் அம்பலமாகி, பிரதமர் பதவியிழந்த கதையை இப்போதுதான் கண்முன்னே பார்க்கிறோம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உலகுடனான 3000 புலிகளின் இறுதி யுத்தம்! #InternationalTigerDay

 
 

புலிகளின்

புலிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

இன்று சர்வதேச புலிகள் தினம்.

புலி. வீரத்தின் விளைநிலமாக பார்க்கப்படும் கானுயிர். உயிர்ச்சங்கிலியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் உன்னதமான கண்ணி. ஆறறிவு மனிதனின் மனதில் கிலியை ஏற்படுத்தும் ஐந்தறிவு ஜீவன். பெரும்படையையும் சிதறி ஓடவைக்கும் வல்லமை படைத்த சிற்றுயிர். மழைவளம் பெற மலைவளம் அவசியம். அந்த மலைவளத்தை காப்பதிலும், சூழலியல் சமன்பாட்டை பேணுவதிலும் முக்கிய பங்காற்றுபவை புலிகள். பசியில்லாமல் புசிப்பதில்லை புலிகள். அவை, புசித்த பிறகு, எஞ்சுபவை, பறவைகள், புழு, பூச்சிகள், கண்ணுக்குத்தெரியாத பாக்டீரியாக்கள் என பல நூறு உயிர்களுக்கான உணவாகிறது. மனிதனைப் போல், பேராசை குளத்தில் எப்போதும் நீந்திக்கொண்டே இருப்பதில்லை புலிகள். உணவு உண்ட பிறகு, அடுத்து பசியெடுக்கும் வரை, அது வேட்டையாடுவதில்லை. மிகினும், குறையினும் நோய் என்பதுப்போலவே, கானகத்தில் ஒவ்வொரு உயிருக்குமான கணக்கு இருக்கிறது. எந்த இனமும் அதிகமாகி விடக்கூடாது. அதே நேரத்தில் குறைந்தும் விடக்கூடாது. அதிகமாகாமல் புலிகள் பார்த்துக்கொள்கின்றன. ஆனால், தற்போது மனிதனின் பேராசைக்கு புலிகளே பலியாகிக் கொண்டிருப்பதுதான் வேதனை. உலகளவில் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில், புலிகள் பற்றிய விழிப்பு உணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜுலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக சில செய்திகளை பகிர்ந்துக்கொண்டார் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன்.

''மனிதன் புலியைக் கொன்றால், அதை ஒரு விளையாட்டு என்கிறோம். அதுவே, ஒரு புலி மனிதனைக் கொன்றால், அதனைக் காட்டுமிராண்டித்தனம் என்கிறோம்.” இது அறிஞர் பெர்னார்ட்ஷா சொன்னது. காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றாலும், இந்த வார்த்தைகளுக்கான தேவை மட்டும் குறையவேயில்லை. உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் 97 சதவிகிதம் புலிகள் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் மூவாயிரம் புலிகள் மட்டுமே வாழ்கின்றன. புலிகளின் இயற்கை வாழ்விடங்களில், 93 சதவிகிதம் அழிக்கப்பட்டு, அது விவசாய நிலங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாறி விட்டதுதான் புலிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம்.

புலிகளின்

புலிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

புலிகள் இருந்தால்தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும். புலிகள் வசிக்கும் வனங்களில், புள்ளி மான், யானைகள் அதிகளவில் இருக்கும். தனக்கான வாழ்விடம் பறிபோன நிலையில், உணவுக்கும், தண்ணீருக்கும் சிக்கல் எழும்போது மட்டுமே, வாழ்தலை முன்னிட்டு, புலிகள் நாட்டிற்குள் ஊடுருவுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. நம்மைத் தவிர, பங்ளாதேஷ், மலேசியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தேசிய விலங்காகவும் புலி இருக்கிறது. உலகில் முன்பு 8 வகையான புலிகள் இருந்துள்ளன. அவற்றில் தற்போது எஞ்சியவை 5 இனங்கள் மட்டுமே. இந்த இனங்களில் தற்போது 4 ஆயிரத்து 600 முதல் 7 ஆயிரத்து 200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.

காடுகளில் உள்ள புலிகளைஆரம்பத்தில் காலடித் தடங்களை வைத்துக் கணக்கிட்டனர். ஒவ்வொரு புலிக்கும் காலடித் தடம் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனாலும், இது சரியான முறை என்று கூற முடியாது. ஆகவே சமீபத்திய கணக்கெடுப்பின் போது Trap Camera முறை பின்பற்றப்பட்டது. அதாவது புலிகள் மீதான வரிகள் ஒவ்வொரு புலிக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். காடுகளில் ஆங்காங்கு தானியங்கி காமிராக்களை நிரந்தரமாகப் பொருத்தி, பின்னர் காமிராவில் பதிவான படங்களை வைத்து புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.

மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன்இந்தியா விடுதலை அடைந்து நீண்ட காலத்துக்குப் பிறகு 1970-ம் ஆண்டில் தான் புலி வேட்டையை மத்திய அரசு தடை செய்தது. 1972-ம் ஆண்டு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1973-ம் ஆண்டு, புலிகள் காப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்திய காடுகளில் வாழும் புலிகளின் வாழ்விடங்களை காப்பகங்களாக அறிவித்து புலிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வகையில், தற்போது இந்தியாவில் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்கள் முக்கியமானவை.  உயிரியல் பூங்காக்களில் உள்ள புலிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

புலிகள் மற்றும் யானைகளுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலைகிடைப்பதால், இவை, சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக புலிகள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ விபத்து, காட்டாற்று வெள்ளம் காரணமாகவும் புலிகள் அழிகின்றன. உலகிலேயே இந்திய - வங்கதேச எல்லையில் உள்ள சுந்தரவனக்காடுளில்தான், புலிகள் அதிகளவில் வாழ்கின்றன. இவ்வகை புலிகள் "ராயல் பெங்காலி புலிகள்" என அழைக்கப்படுகின்றன. அத்துடன் இப்பகுதியில் வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளதால், இங்கு வாழும் புலிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 

அருகிவரும் புலிகளைக் காப்பதால், கான் வளம் பேண முடியும். இதன் மூலமாக, உலகின் இயல்பான இயக்கத்தில் பெரிதாகப் பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும்! சுயநலமே வாழ்க்கையாகக் கொண்ட மனித இனம், இந்த உண்மையை முழுதாகப் புரிந்துகொண்டால் மட்டுமே இது நிகழும்.'' என்றார்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

இன்பாக்ஸ்

 

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநராக அறிமுகமாகும் `லீ மஸ்க்’ படம் ரிலீஸுக்கு ரெடி. விர்ச்சுவல் ரியாலிட்டி சினிமாவாக உருவாகியிருக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க ரோமில் எடுக்கப்பட்டிருக்கிறது. நோரா ஆர்னிஸெடர், பெர்னட், மரியன் உள்ளிட்ட பிரெஞ்சு நடிகர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை வி.ஆர் கண்ணாடி அணிந்து பார்த்தால், நேரடியாக அந்த இடத்தில் இருந்து பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருமாம். ஆட்டைக்கு ரெடியா?

p38a.jpg

ங்கனா ரனாவத் உடல் முழுக்கக் காயங்கள்! ‘மனிகர்னிகா’ என்னும் படத்தில் ஜான்சி ராணியாக நடித்துவரும் கங்கனா, வாள் சண்டைக் காட்சியில் வாழ் சுழற்ற எதிர்பாராதவிதமாக, வாள் கங்கனாவின் நெற்றிப்பொட்டில் அடித்து பலத்த ரத்தக்காயம். 15 தையல்கள் போடப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் பவர் லேடி. கெட் வெல் கங்கனா!

p38b.jpg

லக இசை ரெக்கார்டுகளை உடைத்து முன்னேறிக்கொண்டிருக்கிறது ‘டெஸ்பாசிட்டோ.’ லூயி போன்ஸி மற்றும் டாடி யான்கீ இசையமைத்துப் பாடியிருக்கும் இந்தப் பாடல் வீடியோ, உலக அளவில் இதுவரை 460 கோடி முறை ஸ்டீரிமிங் செய்யப்பட்டுக் கேட்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இதற்குமுன் ஜஸ்டீன் பைபரின் ‘ஸாரி’ பாடல்தான் 430 கோடி முறை கேட்கப்பட்டு சாதனை படைத்திருந்தது. உலகமே கேட்டு ரசிக்கும் இந்தப் பாடலுக்கு மலேசியா சமீபத்தில் தடை விதித்திருக்கிறது. பாடல் வரிகளில் ஆபாசச் சொற்கள் இருக்கின்றன என்பதே காரணம். ஸ்பானிஷ் மொழியில் பாடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் நம்ம ஊர் `வொய் திஸ் கொலவெறி’ போல உலகெங்கும் மொழிகள் கடந்து பாடப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இது கங்ணம் ஸ்டைல் செய்த சாதனைகளை முறியடித்துவிடும். வைரல் உலகம்!

p38c.jpg

‘`நான் ட்விட்டருக்கு அடிமையாகிவிட்டேன். காலையில் எழுந்ததுமே கை செல்போனைத்தான் தேடுகிறது. இன்று நாட்டில் என்ன பிரச்னை, அதற்கு நாம் என்ன கருத்து சொல்லலாம் என்ற சிந்தனைதான் ஓடிக்கொண்டே இருக்கிறது. போதைக்கு அடிமையானதுபோல ஓர் உணர்வு. ட்விட்டரிலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருப்பதுபோல், உணர்வு ஏற்பட்டு வந்தது. அதனால்தான், ட்விட்டரில் இருந்து விலகியிருக்கிறேன்’’ என்று அறிவித்திருக்கிறார் குஷ்பு. அவரின் ஒன்பது லட்சம் ட்விட்டர் ஃபாலோயர்களும் அப்செட். குஷ்பு ஹேப்பி அண்ணாச்சி!

p38d.jpg

கேரள சினிமாவில் வாரிசு நடிகர்களில் லேட்டஸ்ட் என்ட்ரி நடிகை சரிதா-முகேஷ் தம்பதியின் மகன் ஷரவன். படத்தின் பெயர் ‘கல்யாணம்.’ கேரள முதல்வர் பினராயி விஜயன் படப்பிடிப்பைத் துவக்கிவைக்க, முகேஷிடம் இருந்து விவகாரத்து பெற்ற நடிகை சரிதாவும்  கணவருடன் முண்டு கட்டி விழாவில் உற்சாகமாகக் கலந்து கொண்டார். டப்ஸ்மாஷ் புகழ் வர்ஷா பொல்லமாதான் படத்தின் ஹீரோயின். கலக்குங்க!

p38e.jpg

ந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக வெற்றி பெற்றிருக்கிறார் ராம்நாத் கோவிந்த். மொத்தம் பதிவான 10,69,000  வாக்குகளில் 7,02,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் கோவிந்த். இதற்கிடையே தோல்வியடைந்த மீரா குமாரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் 50 ஆண்டுகளாக நீடித்துவந்த சாதனையை முறியடித்திருக்கிறார். 3.67 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் மீரா குமார். ஆனால், 1967-ல் குடியரசுத்தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் தலைமை நீதிபதி கோகா சுப்பா ராவ் 3.63 லட்சம் வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்ததே இதுவரையிலான சாதனையாக இருந்தது. கோகா ராவின் சாதனையை முறியடித்திருக்கும் மீரா குமாருக்கும் வாழ்த்துகள் சொல்லுங்க என ட்வீட்டுகிறது காங்கிரஸ். வரலாறு முக்கியம் மீரா குமார்!

p38f.jpg

21 ஆண்டுகளாக சென்னையில் நடைபெற்றுவந்த சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டி இடம் மாறிவிட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ‘மராட்டிய ஓப்பன்’ போட்டியாக மாற இருக்கிறது. ரஃபேல் நடால், வாவ்ரிங்கா, கார்லோஸ் மோயா, மரின் சிலிச் எனப் பல ஜாம்பவான் வீரர்களைச் சென்னைக்கு அழைத்துவந்த இந்த டென்னிஸ் போட்டி திசை மாறக் காரணம், சரியான ஸ்பான்சர்கள் இல்லாததுதான். கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட சென்னை ஓப்பன் போட்டியில் இன்னும் அதிகப்படியான பரிசுத்தொகை வேண்டும் எனக் கேட்டு கடந்த ஆண்டே சென்னைக்கு வர மறுத்தார் வாவ்ரிங்கா. ஆனால், இந்த ஆண்டும் போதுமான ஸ்பான்சர்கள் வராததால் புனேவைத் தேர்ந்தெடுத்திருக்கிறது சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டியை நடத்திவந்த
ஐ.எம்.ஜி-ரிலையன்ஸ் நிறுவனம். மிஸ் யூ கய்ஸ்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

தரமணி படத்தின் மூன்றாவது டீசர் வெளியானது..!

 
 

ஜே.எஸ்.கே தயாரிப்பு நிறுவனம் சார்பாக இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் திரைப்படம் 'தரமணி'. ஆகஸ்ட் 11 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சென்சார் போர்டு படத்துக்கு 'A' சான்றிதழ் அளித்துள்ளது. ஆண்-பெண் உறவுகளை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள 'தரமணி' படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இந்தப் படத்துக்கு பாடல்களை எழுதியுள்ளார்.  

taramani


ஆண்ட்ரியா, வசந்த் ரவி நடித்திருக்கும் இந்தப்  படத்தின் இரண்டு டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல லைக்ஸ் வாங்கியது. இதற்கிடையில் இன்று இந்தப் படத்தின் மூன்றாவது டீசரும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 
Link to comment
Share on other sites

சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு (22 ஜுலை - 28 ஜுலை 2017)

 

கடந்த வாரத்தில் உலக நாடுகளில் எடுக்கப்பட்ட நிகழ்வுகளின் சிறந்த புகைப்படங்களை உங்களுக்கு வழங்குகின்றோம்.

புனித டுரேபஸூக்கு அருகிலுள்ள விடுமுறை சுற்றுலா பகுதியை அச்சுறுத்திய காட்டுத்தீயை பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மத்தியதரைக் கடலோரமாக இருக்கும் உள்ளூர் மலைபாங்கான பகுதி மற்றும் கோர்சிகா தீவின் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயால் சேதமடைந்துள்ளது. குறைந்தது 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

கராகஸில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது, தேசிய காவல் படையினருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சர்ச்சைக்குரிய புதிய அரசியல் சாசனப் பேரவை தேர்தலை சீர்குலைக்கும் அல்லது பாதிக்கின்ற போராட்டங்களை வெனிசுலோ தடை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டங்கள் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹங்கேரி புதபெஸ்டில் நடைபெற்ற ஃபினா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பிரேசில் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆடவர் நீர் போலோ விளையாட்டு போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய ஆடவர் அணியினர்.

 

ஹங்கேரியில் நடைபெற்ற ஃபினா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பிரேசில் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆடவர் நீர் போலோ விளையாட்டு போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய ஆடவர் அணியினர்.

வத்திக்கானின் பொருளாளர் 76 வயதான கர்தினால் ஜார்ஜ் பெல் காவல்துறையினர் மற்றும் மக்களால் சூழப்பட்ட நிலையில் மெல்ஃபோர்ன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார். நீதிமன்றத்தில் அவர் குற்றமற்றவர் என்று வாதிடப்போவதாக கர்தினாலின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வத்திக்கானின் பொருளாளர் 76 வயதான கர்தினால் ஜார்ஜ் பெல் காவல்துறையினர் மற்றும் மக்களால் சூழப்பட்ட நிலையில் மெல்ஃபோர்ன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார். நீதிமன்றத்தில் அவர் குற்றமற்றவர் என்று வாதிடப்போவதாக கர்தினாலின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

. சீனாவின் ஜீவின் மாகாணத்தில் பெய்துள்ள கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, யோங்யி வட்டாரத்தில் பள்ளி விளையாட்டு தளத்தில் சேற்றை சுத்தப்படுத்தும் ஆசிரியர்கள்.

சீனாவின் ஜீவின் மாகாணத்தில் பெய்துள்ள கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, யோங்யி வட்டாரத்தில் பள்ளி விளையாட்டு தளத்தில் சேற்றை சுத்தப்படுத்தும் ஆசிரியர்கள்.

 

பிரான்சிஸில் செயின்ட் பார்டனிலுள்ள டோர்டோக்னே ஆற்றில் நீர் சறுக்கி விளையாடும் மக்கள். பெருங்கடல் அலையோடு ஆற்று நீரோட்டத்தில் இணைந்து ஓராண்டில் பல முறை பேரலை உருவாகின்றது.

பிரான்சிஸில் செயின்ட் பார்டனிலுள்ள டோர்டோக்னே ஆற்றில் நீர் சறுக்கி விளையாடும் மக்கள். பெருங்கடல் அலையோடு ஆற்று நீரோட்டத்தில் இணைந்து ஓராண்டில் பல முறை பேரலை உருவாகின்றது.

சிட்னியில் நடைபெற்ற இருதரப்புக் கூட்டத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப்போடு சுய புகைப்படம் எடுத்து கொள்ளும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன்

சிட்னியில் நடைபெற்ற இருதரப்புக் கூட்டத்தை முன்னிட்டு ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப்போடு செல்பி எடுத்துக் கொள்ளும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன்

 

சிறுவடிவ மாதிகளின் கலைஞர் ஜேன் பிட்டிக், யார்க்ஷீரிலுள்ள நியுபை அரங்கத்தில் உருவாக்கிய பொம்மைகளின் இல்லத்தை பார்வையிடும் 7 வயது ஃபெரியா கிப்சன். செய்வதற்கு 22 ஆண்டுகளான இந்த மாதிரி, உலக அளவில் தனியார் பொம்மைகளின் இல்ல சேகரிப்புகளில் சமீபத்திய ஒன்றாகும்.

சிறுவடிவ மாதிகளின் கலைஞர் ஜேன் பிட்டிக், யார்க்ஷீரிலுள்ள நியுபை அரங்கத்தில் உருவாக்கிய பொம்மைகளின் இல்லத்தை பார்வையிடும் 7 வயது ஃபெரியா கிப்சன்

நேபாளில் காட்மண்ட் பசுபதிநாத் கோயிலில் நடைபெற்ற புனித நூல் பண்டிகையின்போது, ஆசீருக்காக வண்ண பொடி மற்றும் அரிசியை கலந்து நெற்றியில் வைத்திருக்கும் ஓர் இந்து மத குரு.

நேபாளில் காட்மண்ட் பசுபதிநாத் கோயிலில் நடைபெற்ற புனித நூல் பண்டிகையின்போது, வண்ண பொடி மற்றும் அரிசியை கலந்து நெற்றியில் வைத்திருக்கும் ஓர் இந்து மத குரு

 

http://www.bbc.com/

Link to comment
Share on other sites

 

இவர்தான் அபாஸ் யூசஃப் . ஹராரின் கழுதைப்புலி (ஹைனா) மனிதன் என்று அறியப்படுகிறார்.

Link to comment
Share on other sites

‘மனத்தை ஒடுக்கி, ஓர் இடத்தில் குவிக்க வேண்டும்’
 

image_30bc473573.jpgவழிபாட்டுத்தலம் மிகவும் பெரிதாக, நீள, அகலமாக, மக்களை ஈர்க்கும் அழகில், விசாலமாக அமைந்திருக்கும். 

ஆனால், இறைவனை நோக்கிப் பக்தர்கள் வழிபாடு, பிரார்த்தனை செய்யும் பிரதான கர்ப்பக் கிரகம், சிறியதாகவே அமைந்திருக்கும்.  

நாங்கள் மனத்தை ஒடுக்கி, ஓர் இடத்தில் குவித்து வைக்க வேண்டும் என்பதன் பொருட்டே, இந்த அமைப்பு உருவானது எனலாம். 

புறக்காட்சிகளை மறந்து, கொஞ்சம் இறைவனை மட்டும் நோக்கி, புலன்களின் வழி செல்லாது, ஒரே திசையில் நிறுத்துதலே தியானம் ஆகும். தீர்க்கமான, திடசிந்தையுடன் மனம் ஒடுங்கும்போது, புறச்சூழல் சலசலப்புகள் எம்மை ஆட்கொள்ளவே மாட்டாது.  

இறைவனுக்கும் ஆன்மாவுக்குமான ஈர்ப்பும் எண்ணங்களும், விவரிக்க முடியாத பேரின்பமாகும். பக்தியின் உச்ச நிலையை அடைந்தோர், அதிலிருந்து மீளவே மாட்டார்கள். 

இறை பிரேமை நிரந்தரமானது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.