Jump to content

ஃபேஸ்புக் 'லைக்'கில் 6 வகை உணர்வுகளைப் பகிர புதிய வசதி


Recommended Posts

likes_2578075f.jpg
 

ஃபேஸ்புக்கில் 'டிஸ்லைக்' பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் டீம் ஈடுபட்டு வருகிறது.

அதன் முதல் படியாகவே, 'லைக்' பட்டன் மூலம் பயனாளர்கள் தங்களது 6 வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

ஃபேஸ்புக்கில் மாற்றுக் கருத்துக்கோ அல்லது விரும்பவில்லை என்பதன் நோக்கத்தை தெரிவிக்கவோ இதுவரை எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. பயனாளிகள் பலரும் சோக நிகழ்வுகள், துக்கமான செய்தி போன்றவைக்கு 'லைக்' இடுவதில் ஏற்படும் இக்கட்டான நிலையை நிறுவனத்திடம் தெரிவித்து இதற்கு வழியை ஏற்படுத்த கோரி வந்தனர்.

அந்த வகையில், 'லைக்' பட்டனை போலவே 'டிஸ்லைக்'க்கு ஈடான வசதி அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த மாதம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்தார்.

இந்த நிலையில், முற்றிலும் டிஸ்லைக் என்பதாக அல்லாமல், மனிதர்களின் 6 விதமான உணர்வுகளைப் வெளிப்படுத்தும் விதத்தில் பயனாளிகளுக்காக, லைக் பட்டனையொட்டிய 6 வகையான குறியீட்டு பொம்மைகளுடன் பாப்-அப் பட்டன்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி அன்பு, ஹாஹா, யாஹ், வாவ், சோகம் மற்றும் கோபம் ஆகிய 6 வகையான பாப்-அப் பட்டன்களில் ஒன்றை பயனாளிகள் தங்களது லைக்குடன் க்ளிக் செய்து உணர்வுகளைப் பகிரலாம்.

எத்தனை 'லைக்'-குகள் என்பதை எண்ணிக்கையிட்டு காட்டும் அதேமுறையில், குறிப்பிட்ட கருத்துக்கான விதவிதமான மனநிலையை வகைப்படுத்திய எண்ணிக்கையும் வெளிப்படும்.

முதற்கட்டமாக இன்று முதல் அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் ஃபேஸ்புக் பயனாளிகள் இதனை பயன்படுத்துகின்றனர்.

'லைக்' பட்டனை க்ளிக் செய்ததும் அதனை வகைப்படுத்து 6 ஸ்மைலிகளை பயனாளிகளிகள் தேர்வு செய்து தங்களது மனநிலையை பகிரும் வகையில் இந்த புதிய முறை உள்ளது.

அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டு ஃபேஸ்புக் பயனாளிகளிடம் அவர்களது அனுபவத்தை கேட்டறிந்து, பின்னர் உலகம் முழுவதும் 'லைக்'- உடன் சேர்ந்த இந்த 6 பாப்-அப் பட்டன்களையும் முறைப்படி அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

http://tamil.thehindu.com/world/பேஸ்புக்-லைக்கில்-6-வகை-உணர்வுகளைப்-பகிர-புதிய-வசதி/article7742752.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.