Jump to content

ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ- ரவுண்ட் அப்!


Recommended Posts

ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ- ரவுண்ட் அப்!

 

அரசன், ஆண்டி, அம்மிக்கல், ஆத்திச்சூடி இது போன்ற வார்த்தைகளை கடந்து வந்த நாம்தான் 'ஆண்ட்ராய்ட்' என்ற வார்த்தையையும் கடந்து கொண்டு இருக்கிறோம்.

ஆண்ட்ராய்ட் - இது ஒரு வகையான மென்பொருள். கணினிகளிலும், ஸ்மார்ட் போன்களிலும் உள்ள மென்பொருள்களை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளம் (operating system). இந்த தளத்தை பிரத்யேகமாக ஸ்மார்ட் போன்களிலும், டேப்லெட்டுகளிலும் இயக்க பயன்படுத்துவர். இதை 2003ல், ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் நிறுவனம் (open handset alliance) தொடங்கியது. பின்பு அதை 2005 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் வாங்கிக் கொண்டது.

and_vc1.jpg


இந்த ஆண்ட்ராய்டில் பல பகுதிகள் (version) வந்துள்ளன. இதன் பிரத்யேக அடையாளமான (logo) அந்த பச்சை நிற பொம்மையினை வடிவமைத்தவர் ஐரினா ப்லாக். இதன் நிர்வாக மேலதிகாரி ரியான் ஜிப்சன். அவர்தான் ஆண்ட்ராய்டுக்கே உரித்தான அந்த குறிப்பு புனைப் பெயரை (code name) சூட்டியவர். அதன் சிறப்பு என்னவென்றால், அதன் பெயராக இனிப்பு சுவையுடைய தின்பண்டங்களின் பெயரையிடுவது. மேலும் அது ஆங்கில எழுத்தின் சீர்வரிசையில் (alphabetical) அமைந்திருக்கும். இதன் மூன்றாவது  பகுதி (1.5) கப்கேக் (cup cake) தான் உலகம் முழுவதும் பயன்படுத்தும் வகையில் 2009 ஏப்ரல் 27ஆம் தேதி வெளியானது. இந்த கப்கேக் பகுதி, கணினியில் பயன்படுத்தும் 'லினக்ஸ் கர்னல்' மென்பொருளை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு நவம்பர் 5 ல் இதன் முதல் பகுதி வெளியானதால் 'ஆண்ட்ராய்ட் பிறந்த நாளாக  நவம்பர் 5 ஐ கொண்டாடுகிறார்கள். இதன் முதல் இரண்டு பகுதிகளான ஆண்ட்ராய்ட் 1.0, 1.1 இரண்டுமே அந்த சிறப்பு பெயருடன் வராமல் 'ஆஸ்ட்ரோ பாய்' (astro boy), பெண்டர் (bender) என்ற பெயரில் வெளியானது. பின் அடுத்து வந்த அனைத்து பகுதிகளும், சிறப்பு இனிப்பு சுவை தின்பண்டத்தின் பெயரில் வெளியானது, அவை,

ஏப்ரல் 27,2009- ஆண்ட்ராய்ட் 1.5 கப்கேக் (cup cake)

செப்டம்பர் 15, 2009- ஆண்ட்ராய்ட் 1.6 டொனட் (donut)

அக்டோபர் 26, 2009- ஆண்ட்ராய்ட் 2.0-2.1 இக்லர் (eclair)

மே 20, 2010- ஆண்ட்ராய்ட் 2.2-2.2.3 ப்ரோயோ(froyo)

டிசம்பர் 6, 2010- ஆண்ட்ராய்ட் 2.3-2.3.2 ஜிஞ்சர் ப்ரெட்(ginger bread)

பிப்ரவரி 22, 2011- ஆண்ட்ராய்ட் 3.0 -3.2.6 ஹனிக்கோம்ப் (honey comb)

அக்டோபர் 19, 2011- ஆண்ட்ராய்ட் 4.0-4.0.2 ஐஸ் க்ரீம் சான்வெஜ் (ice cream sandwich)

ஜூலை 13, 2012- ஆண்ட்ராய்ட் 4.1-4.1.2 ஜெல்லி பீன் (jelly bean)

செப்டம்பர் 3, 2013- ஆண்ட்ராய்ட் 4.4-4.4.4 கிட் கேட்(kit kat)

ஜூன் 25, 2014- ஆண்ட்ராய்ட் 5.0-5.0.2 லாலிப்பாப் (lolli pop)


இதுவரை வந்த ஆண்ட்ராய்ட் பகுதிகளில் கிட்கேட் பகுதிதான் அதிக ஆண்ட்ராய்ட்  பயன்படுத்துவோரின் பகுதி. அதாவது, 39.2% கிட்கேட்டை பயன்படுத்துகின்றனர். அதற்கு அடுத்தபடியாக 31.8% பயன்படுத்தி 'ஜெல்லி பீன்' இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக அளவில் பார்க்கும் போது 59.1% இந்த ஆண்ட்ராய்ட் பயனாளிகளாக இருக்கின்றனர். சைனாவில் 68.3% ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அமெரிக்காவில் 40.78%, இந்தியாவில் 44.75% ஆண்ட்ராய்ட் பயன்படுத்துகிறோம். தற்போதைய லாலிப்பாப் பகுதி ஆண்ட்ராய்டை உலக அளவில் 12.4% பயன்படுத்துகின்றனர்.

and_vc2.jpg

இந்நிலையில் கூகுள் (நெக்ஸஸ்) மற்றும் ஓப்பன் ஹேண்ட்செட் அலையன்ஸ் இணைந்து அடுத்து வெளிவர இருக்கும் ஆண்ட்ராய்டின் புதிய பகுதி மார்ஷ்மெல்லோ. இதுவரையில் உள்ள பயன்பாட்டை புதுமை படுத்தி இந்த மார்ஷ்மெல்லோ பகுதி 6.0 இல் தொகுத்துள்ளனர்.முதலில் மார்ஷ்மெல்லோ என்றால் என்ன என்று பார்ப்போம்.

நீங்கள் நினைப்பது போல் இதுவும் ஒரு இனிப்பான தின்பண்டம்தான். இது வெள்ளை நிறத்தில் மிருதுவாக இருக்கும். முட்டை , சர்க்கரை மற்றும் சோளத்தால் செய்யப்படும் உணவுப் பொருள். இது 12ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருந்தே ஐரோப்பிய கண்டத்தின் உணவு பழக்கவழக்கத்தில் இருக்கிறது, மேலும் ஆண்ட்ராய்டின் சிறப்பு பெயர் வரிசையில் ஆங்கில எழுத்தின் சீர் முறைகளிலும் லாலிப்பாப்பின் 'L'க்கு அடுத்த படியாக 'M'ல் தொடங்கும் பெயர்.

அடுத்தபடியாக இதன் சிறப்பு அம்சங்கள் என பார்த்தால் ஆண்ட்ராய்ட் ரேகை பதிவு முறை (finger prints) இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளம் பயன்படுத்தும் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது.  ஸ்மார்ட் போன்களின் இன்றைய முக்கிய பிரச்னையான பேட்டரி சேமிப்பை அதிகப்படுத்தும் விதமாக, பின்னால் இயங்கும் மென்பொருள் சேவையை தானாக குறைத்து இயங்கும் விதத்தில் இதில் புதிதாக தொழில் நுட்பம் கொண்டுவரப்பட்டுள்ளது.  மேலும் புதிதாக இதில் விஷுவல் வாய்ஸ் ரெக்கார்டர் (visual voice recorder), லிங்க்குகளைக் கொண்டு எளிமையாக செய்யப்படும் வலைதளம் சேவை என பல சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது வரும் அக்டோபர் 5 திங்கள் அன்று உலக அறிவியல் சந்தையில் வெளியாக உள்ளது. அப்டேட்டுக்குத் தயாராகுங்கள் நண்பர்களே..!

http://www.vikatan.com/news/article.php?aid=53259

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.