Jump to content

காளானில் உருவாக்கிய மின்கலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து வரும் வேளையில், ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியும் வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது. வித்தியாசமாக ஆரய்ச்சி செய்வதில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பிரபலம் அப்படி ஒரு முயற்சியின் வெற்றி தான் காளானில் உருவாக்கிய இந்த மின்கலம்.

1443861217-8909.jpg

அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் Portabellas எனும் காளானை அடிப்படையாகக் கொண்டு புதிய வகை லிதியம் அயன் மின்கலத்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கைப்பேசிகளில் நீண்ட நேரம் மின்சக்தியை வழங்குவதற்கு இந்த மின்கலத்தினைப் பயன்படுத்தலாம் எனவும், குறுகிய காலத்தில் இம் மின்கலங்களுக்கான கேள்வி அதிகரிக்கும் எனவும் ஆரய்ச்சியாளார்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டுக்கு பின் 6 மில்லியன் வரையான வாகனங்களில் இம்மின்கலங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்கப்படுகிறாது.

இந்த மின்கலம் செலவு குறைந்ததாகவும், இலகுவானதாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

http://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/mushrooms-made-cell-115100300028_1.html

Link to comment
Share on other sites

'இனி காளான் மூலம் செல்போன்களைச் சார்ஜ் செய்யலாம்!'

 

ருபுறம் சூரிய ஆற்றலிலிருந்து மின்னுற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தாலும், முடிந்த அளவு மின்-கழிவுகளை வெளியிடாத மின்சார மூலங்களைத் தேடித் தேடி ஆய்வு செய்து வருகின்றனர் ஆய்வாளர்கள்.

KALAN_VC1.jpg


அப்படிப்பட்ட ஓர் ஆய்வின் விளைவுதான் இந்தக் காளான் பேட்டரிகள். அமெரிக்காவிலுள்ள, கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழு மாற்று மின்னுற்பத்தி என்ற தளத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், ’போர்டபெல்லோ’ எனப்படும் குறிப்பிட்ட வகைக் காளான்களைக் கொண்டு மின்கலங்களை, அதாவது பேட்டரிகளை, மின்னூட்டம் செய்ய முடியும் என்று கண்டறிந்துள்ளது.

இது குறித்துப் பேட்டியளித்த, அவ்விஞ்ஞானக் குழுவின் தலைமை விஞ்ஞானியான, ப்ரென்னன் கேம்ப்பெல், “ இன்று நாம் பயன்படுத்தும் மின்கலங்கள் பெரும்பாலும் லித்தியம் அயனிகளைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இந்த லித்தியம் மின்கலங்களை மின்னூட்டம் செய்வதற்கு கரியின் உலோகக் கலவையான ‘க்ராஃபைட்’ அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த க்ராஃபட்டைத் தயாரிக்க அதிகச் செலவு ஏற்படுவதோடல்லாமல் இதன் கழிவுகள் சுற்றுப்புறத்தைப் பெரிதும் மாசுபடுத்துகின்றன. அது மட்டுமன்றி இந்த லித்திய-மின்கலங்களைச் சுத்திகரிக்க ‘ஹைட்ரோஃப்ளூரிக் ஆசிட்’ எனப்படும் அடர்திரவம் தேவையாகிறது. இந்த திரவம் புறச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் அமிலக் கழிவாகும். எனவேதான் இந்த மாற்று மின்கல முயற்சியை மேற்கொண்டோம்” என்கிறார்

KALAN_VC2.jpg

தொடர்ந்து, இந்தக் காளான் பேட்டரியின் இயக்கம் குறித்துத் தெளிவுறுத்துகின்றனர் ஆய்வுக்குழுவினர். ’அகாரிக்கஸ் பைஸ்போரஸ்’ எனப்படும் இந்தக் குறிப்பிட்ட வகைக் காளானில் ’ஸ்போர்ஸ்’ எனப்படும் நுண்துளைகள் மிக அதிகம். இத்தகையத் துளைகளின் வழியாக, மின்-திரவங்கள் எளிதில் போக்குவரத்து மேற்கொள்ள முடியும் என்பதால் இதில் மின் கடத்தல் செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்தவகைக் காளானில் பொட்டாசியம்  தன்மை அதிகமாக இருப்பதால் இது மின்னுற்பத்திக்கு மிகவும் ஏற்றதொரு கலமாகும்.

நாள்போக்கில் இதன் மின்னூட்டத்தை ஊக்குவிப்பது சுலபம். அதற்கு எந்தவித வேதியியல் திரவங்களும் தேவையில்லை. மேலும் இயற்கையாகவே மக்கிவிடும் பொருளென்பதால் சுற்றுப்புறத்திற்கு எந்தவிதத் தீமையும் விளைவிக்காத மின் கலமாக இது தொடர்ந்து செயல்படும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

தற்போது முதற்கட்ட உற்பத்தியில் இருக்கும் இந்த மின் கலங்கள், விரைவில் சந்தைக்கான உற்பத்தியை எட்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மழைநாட்களில் முளைக்கும்போதெல்லாம், தேவையற்றது என்று பிடுங்கியெறிப்படும் காளான் நம் அலைபேசியின் மின்னூட்டத்திற்கு உதவுமென்றால், இனி அவற்றைத் தேடித் தேடி வளர்ப்போம்தானே!

http://www.vikatan.com/news/article.php?aid=53218

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.