Jump to content

ஒரு நிமிடம், கூகுள்.காம் உரிமையாளராக இருந்த இந்தியர்!


Recommended Posts

ஒரு நிமிடம், கூகுள்.காம் உரிமையாளராக இருந்த இந்தியர்!

 

இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் போல முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள்.காம் இணைய முகவரியின் ஒரு நிமிட உரிமையாளராக இருந்திருக்கிறார். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இணைய உலகிலேயே அதிக போக்குவரத்தை கொண்ட கூகுள்.காம் இணையதளத்தின் முகவரி அமெரிக்க இந்தியரான அந்த நபருக்கு சொந்தமாகி ஒரு நிமிடத்தில் கைவிட்டு போயிருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த சான்மே அஸ்வின் வேத் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். தற்போது எம்பிஏ படித்து வரும் சான்மே இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் கொண்டவர். பொதுவாக கூகுளின் இணைய முகவரி விற்பனை சேவையான கூகுள் டொமைன்ஸ் மூலம் தான் இணையதள முகவரிகளை வாங்குவது வழக்கம்.

google_vc1.jpg



சமீபத்தில் அவர் கூகுள் டொமைன்ஸ் இணையதளத்தில் விளையாட்டாக கூகுள்.காம் இணையதள google_vc2.jpgமுகவரியை டைப் செய்திருக்கிறார். வழக்கமாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இணையதளம் என்றால் மன்னிக்கவும் இந்த இணைய முகவரி விற்பனைக்கு இல்லை எனும் செய்தி தோன்றும்.
ஆனால்,கூகுள்.காம் இணையதள முகவரியை டைப் செய்த பிறகு இது போன்ற செய்தி தோன்றுவதற்கு மாறாக இந்த முகவரியை வாங்கலாம் என்னும் செய்தி தோன்றியிருக்கிறது. இதை சான்மேவால் நம்பவே முடியவைல்லை.

இணைய உலகிலேயே அதிகமானவர்களால் விஜயம் செய்யப்படும் கூகுள்.காம் முகவரி விற்பனைக்கு உள்ளதா என்னும் மலைப்புடன் அவர் அதை வாங்குவதற்காக கிளிக் செய்து கிரிடிட் கார்டு விவரத்தை சமர்பித்தார். இப்போது கூட அவருக்கு நம்பிக்கை இல்லை, தனது கிரிடிட் கார்டு விவரம் நிராகரிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் அவர் கிரிடிட் கார்டு ஏற்கப்பட்டு அந்த முகவரிக்கான 12 டாலர் பிடித்துக்கொள்ளப்பட்டது. ஆக அவர் கூகுள்.காம் இணைய முகவரியின் புதிய உரிமையாளராகி இருந்தார்.

ஆனால் ஒரு நிமிடம் கழித்து கூகுள் டொமைன்சிடம் இருந்து அவருக்கு வந்த இ-மெயில் அவரது ஆர்டர் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. அந்த முகவரி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு நிமிடத்தில் கைநழுவிப்போனாலும், அந்த ஒரு நிமிடம் அவர் கூகுள்.காம் இணைய முகவரியின் உரிமையாளராக இருந்திருக்கிறார்.’
இந்த விநோதம் பற்றி சான்மே வேத் தன்னுடைய லிங்குடு. இன் பக்கத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். இது எப்படி நிகழ்ந்தது என்று தமக்குத்தெரியவில்லை என்றும், இதற்கு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்திருக்கலாம் அல்லது கூகுள் முகவரியை புதுப்பிக்க தவறியிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

google_vc3.jpg


2003ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்படி தனது ஹாட்மெயில்.யு.கே முகவரியை புதுப்பிக்கத்தவறி அது வேறு ஒருவரால் வாங்கப்பட்டு பின்னர் நிறுவனம் அதை விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்ததையும் அவர் சுட்டுக்காட்டியுள்ளார். ஒரு வேளை கூகுள் தனது முகவரியை புதுப்பிக்க தவறியிருந்தால் இந்த விற்பனை நிகழ்ந்திருந்தாலும், கூகுள் தளம் மூலமே அது நிகழந்த்தால் உடனே சரி செய்யப்பட்டு விட்டது.

இணைய உலகில் நிறுவனங்கள் இணையதள முகவரிகளை புதுப்பிக்க மறந்து சங்கடத்திற்கு இலக்காவது அடிக்கடி நடப்பது தான். ஆனால் இணைய உலகின் முன்னணி தேடியந்திரமாக இருக்கும் கூகுள் இவ்வாறு கோட்டை விட்டிருக்கும் என்பதை நினைத்துப்பார்ப்பதே விநோதமாக இருக்கலாம்.
எது எப்படியோ சான்மே வேத், ஒரு நிமிட கூகுள் உரிமையாளராக இருந்திருக்கிறார். இந்த அதிர்ஷ்டசாலி(!) இந்திய அமெரிக்கர் என அறிய முடிகிறது. லின்க்டு இன் தளத்தில் இந்த அனுபவம் பற்றி எழுதியுள்ள பதிவில் அவர்,” இந்திய பிரதம அமெரிக்கா வருகை தந்த போது அவரது மாநிலமான குஜராத்தின் கட்ச் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு இணையதள முகவரியை கூகுள் விற்பனை செய்ய முன்வந்தது (ஒரு நிமிடத்திற்கு தான்) என்று அவர் முத்தாய்ப்பாக குறிப்பிட்டுள்ளார்.

சான்மே வேத்தின் லிங்க்டு.இன் பதிவு: https://www.linkedin.com/pulse/i-purchased-domain-googlecom-via-google-domains-sanmay-ved

http://www.vikatan.com/news/article.php?aid=53166

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.