Jump to content

பழைய புண்களை சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடக்கூடாது- தமிழர்களுக்கு அறிவுரை சொல்கின்றார் ஹக்கீம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளுக்கு தீனி போடவும் வேண்டாம் அமைச்சர் ஹக்கீம்-

பழைய புண்களை சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடக்கூடாது:-


சர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் சில கழுகுக் கூட்டங்களின் திட்டங்களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது. புழைய புண்களை சொறிந்து சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட வேண்டாமென நகர திட்டமிடல், நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் ஹக்கீம் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், புதிய அரசாங்கம் தமது மக்களுக்கு துரோகம் இழைப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிறீதரன் எம்.பி இங்கு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார். தமிழ் மக்கள் மாத்திரமன்றி அனைத்து சிறுபான்மை மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். சிறுபான்மை மக்கள் ஒருபுறம் இருக்க முன்னைய அரசாங்கத்தின் மீதும் முன்iனைய ஆட்சியாளர்கள்மீதும் வெறுப்புக்களை கொண்டிருந்தோரும் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்திருந்தனர்.

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லையென்றும் சர்வதேச விசாரணை ஒன்று தேவையென்றும் இங்கு கூப்பாடு போடப்படுகிறது. உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும். புதிய அரசாங்கம் இந்நாட்டின் பிரதம நீதியரசராக தமிழ் மகன் ஒருவரையே நியமித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுனராகவும் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு புதிய அரசாங்கம் நல்ல பல காரியங்களைச் செய்து வருகிறது. தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்று வருகின்றது. இப்படி இருக்கையில் கடந்த கால பிரச்சினைகளை கிளறிக்கொண்டிருப்பதன் மூலம் தீர்வு எதனையும் பெற்றுவிட முடியாது. இன்றைய இரட்டைத் தலைமை சிறுபான்மை மக்களின் நம்பிக்கையால் உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த தலைவரான சகோதரர் சம்பந்தனை அரசாங்கம் நியமித்திருக்கின்றது. தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவராகவே இரா சம்பந்தன் இருக்கின்றார். அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததன்மூலம் அரசாங்கத்தின் நம்பிக்கைத் தன்மையை வெளிப்படுத்தி இருக்கின்றோம். ஜனாதிபதி நினைத்திருந்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மாற்றி அமைத்திருக்க முடியும். ஆனாலும் ஜனாதிபதி அவ்வாறு செயற்படவில்லை. இதன்மூலம் அவரது நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கியமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சகலரும் இணைந்து தமிழ் மக்களின் வாக்குகளை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருந்தனர். அதேபோன்று அதற்கு முன்னைய தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதற்கு தடை விதித்ததன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்தது மட்டுமல்லாமல் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கும் வழிவகுத்தீர்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் அதே அரசாங்கத்தின் நான் இருந்ததுடன், புலிகளுடனான பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றி இருந்தேன். ஏழு சந்தர்ப்பங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அதிலிருந்த உச்சக்கட்ட வாய்ப்புகள் அனைத்தும் படுமோசமாக மீறப்பட்டு சந்தர்ப்பங்களும் கைவிடப்பட்டன. மோதல் இல்லாது அனைத்தையும் வெற்றிகொள்வோம் என்ற செயற்பாட்டினை தட்டிக்கழித்தீர்கள். இவ்வாறு செய்துவிட்டு கடந்தகால விடயங்களை இங்கு முன்வைத்து பழைய புண்களை சொறிந்து சொறிந்து அரசியல் செய்ய முற்படுகின்றீர்கள். அவ்வாறு செயற்பட முடியாது.

புனர்வாழ்வு அமைச்சராக தமிழர் ஒருவரை நியமித்துள்ளோம். இராணுவத்திடம் இருக்கின்ற தமிழ் மக்களின் காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு எமது அரசாங்கம் உளப்பூர்வமாக செயற்பட்டிருக்கிறது. அதேபோன்று முஸ்லீம்களுக்கும் பிரச்சினை இருக்கின்றன. பூநகரி முதல் புத்தளம் வரையில் முஸ்லீம்களின் காணிகள் பறிகொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலைமைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் இணக்கப்பாட்டுப் பொறிமுறை ஊடாகவே அதனை அடைய முடியும்.

எமது அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயற்பட்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் சமூகமும் யதார்த்தத்தைப் புரிந்து செயற்படுவது அவசியமாகும். அவசியமற்ற கருத்துக்களை வாதங்களைக் கைவிடுமாறு சிநேகபூர்வமாக வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கின்றேன்.


இன்று (நேற்று) காலை இந்த பாராளுமன்றத்தில் நடந்த விடயங்கள் பற்றி தாங்கள் அறிவீர்கள். கடந்த அரசாங்கத்தினதும் முன்னைய ஆட்சியாளர்களினதும் கூலிப்படையாக செயற்பட்டு வருகின்ற சிலர் சர்வதேச விசாரணையை மையமாக வைத்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர். தென்பகுதியில் நாட்டுப்புற அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றி அவர்களை சூடேற்றி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சில கழுகுக் கூட்டங்கள் இங்கு செயற்பட்டு வருகின்றன. இவ்வாறான கழுகுக் கூட்டங்களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது. வடுக்களைத் தடவித் தடவி பழைய புண்களை சொறிந்து சொறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட வேண்டாம்.

என்னைப் பொறுத்தவரையில் நான் இதற்கு முன்னர் இவ்வாறு காரமாக பேசியது கிடையாது. நேர்மையாகவும் நியாயமாகவும் கருத்துக்களை முன்வைப்பவன். நான் யாரையும் புண்படுத்துவதற்காக இந்தக் கருத்துக்களை முன்வைக்கவில்லை என்றார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124256/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பழைய விசயங்களை கிண்டுறது பயம் கண்டியலே.

தஜுடீன் கொலை போல, இவற்ற பேரிலும் ஒரு கேஸ் இருக்குது. 

இதால தான் தன்ற இனம் தாக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று மகிந்தவின் வாலைப்பிடித்துக் கொண்டு நின்றவர்.

இப்பவும் கும்பகர்ணம் அடித்து ரணில் பக்கம் போய் 'பாதுகாப்பாய்' இருந்து கொண்டு 'லெக்சர்' பண்ணுறார். கருமம். :oO:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் அரசியல் செய்வதற்கு பழைய அரசியல் தேவைப்படும்போது மற்றவர்களைப் பார்த்து எப்படி அறிவுரை சொல்ல முடியும் ?

Link to comment
Share on other sites

புலி இளைச்சால் பன்றிகள் கூட அட்வைஸ் பண்ணுமாம்

ஆமா, இந்த அட்வைஸ் பண்ணும்போது, தாத்தா என்ன கச்சான் போட்டுக் கொண்டு, ஜிங்சக் போட்டுக்கொண்டிருந்தவரா??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----அர்ஜுன் மற்றும் அவரின்  சகாக்களும் அதைத்தானே சொல்லுகினம். நிழலி, அப்போதெல்லாம் அர்ஜுனைக்கண்டிகாமல் காக்காவற்கு மட்டும் கண்டிப்பதேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை  எல்லாம் அரசியல் வாதி என்று சிங்களவரும் சரி தமிழரும் சரி நம்புவதில்லை. ஒட்டுண்ணி.
 பனை மரம் விழுந்து கிடந்தால்  பன்றியும் எகிறி எகிறி உதைஞ்சு கடக்குமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வௌவால். ஆல் பழுத்தால் அங்க, அரசு பழுத்தால் இங்க. இதின்ர கதையும் ஒரு கதையெண்டு ? அதுக்குள்ளே தமிழருக்கு உபதேசம் செய்ய வந்திட்டுது.

Link to comment
Share on other sites

பிணம்திண்ணி காக்கா களுத்துறையில் முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடக்கும்போதும் அமைச்சர்பதவியை கட்டிப்பாதுகாத்தவர்.

பழசை கிளறவேண்டாமாம்.......யாழ்பாணத்தால 1990ல் கலைச்சதை வைத்துதானே இன்னும் பிழைப்பு நடத்தினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.