Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: அணுகுண்டு பூ ஜாடி

 
 
masala_2573694f.jpg
 

பிரிட்டனில் வசிக்கும் 45 வயது கேத்ரின் ராலின்ஸ், தன் வீட்டில் வித்தியாசமான பூ ஜாடியை வைத்திருக்கிறார். அணுகுண்டு வடிவில் இருக்கும் அந்த ஜாடி முதல் உலகப் போரில் ஜெர்மானியர்கள் வீசிய நிஜ அணுகுண்டு. 15 வயதில் கேத்ரின் விளையாடிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக அவர் கண்ணில் பட்டது இந்த அணுகுண்டு. அது ஏதோ ஒரு விளையாட்டுப் பொருள் என்று எண்ணி, வீட்டுக்கு எடுத்து வந்தார். தொலைக்காட்சியில் ஓர் ஆவணப்படம் பார்த்தபோதுதான் அது ஓர் அணுகுண்டு என்பதை அறிந்துகொண்டார். காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் அணுகுண்டை ஆராய்ந்து, உள்ளே இருந்த வெடிப் பொருட் களை எடுத்துவிட்டு, கேத்ரினிடமே கொடுத்துவிட்டனர். வரலாற்றுச் சின்னமான அணுகுண்டை காகிதப் பூக்கள் வைக்கும் பூ ஜாடியாக மாற்றிவிட்டார் கேத்ரின். 30 ஆண்டுகளுக்குப் பிறகும் கேத்ரின் வீட்டில் அணுகுண்டு பூ ஜாடி பத்திரமாக இருந்து வருகிறது.

’’இது மட்டும் வெடித்தால் 20 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகிவிடும் என்று சொன்னார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அரசாங்கம் இந்த அணுகுண்டை எடுத்துச் சென்றது. சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் என்னிடமே ஒப்படைத்து விட்டனர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அணுகுண்டு ஜாடியை எடுத்துச் சென்று காட்டுவது உண்டு’’ என்கிறார் கேத்ரின்.

அணுகுண்டுகள் அனைத்தும் பூ ஜாடியாக மாறினால் உலகம் எவ்வளவு நல்லா இருக்கும்!

ரஷ்யாவில் நிரந்தரமாக உறைந்திருக்கும் சைபீரியப் பனிப் பிரதேசத்தில் விஞ்ஞானிகள் குழு ஒன்று பணியாற்றி வருகிறது. அந்தப் பகுதியில் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வரும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அனடோலி ப்ரோச்கோவ் என்ற விஞ்ஞானி 2009ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அந்த பாக்டீரியாவை வைத்து சில பரிசோதனைகளை மேற்கொண்டார். கினி எலிகளுக்கு அந்த பாக்டீரியாவைச் செலுத்தினார். பிறகு தன் உடலிலும் ஊசி மூலம் பாக்டீரியாவை ஏற்றிக்கொண்டார்.

’’என்னையே நான் பரிசோதனையில் ஈடுபடுத்திக்கொண்டதை எல்லோரும் எதிர்த்தனர். ஆனால் பாக்டீரியா உடலுக்குள் செலுத்தப்பட்டதிலிருந்து நான் மிக ஆரோக்கியமாக உணர்கிறேன். நீண்ட நேரம் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு ஜுரம் வந்ததில்லை. இதை நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது. என்னுடைய பரிசோதனையின் முடிவாக இதைச் சொல்கிறேன். இன்னும் ஏராளமான பரிசோதனைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது’’ என்கிறார் ப்ரோச்கோவ். பாக்டீரியா செலுத்திய எலிகளைப் பரிசோதித்தபோது அவற்றுக்கு முதுமை நெருங்கவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. எதிர்காலத்தில் பாக்டீரியா பரிசோதனைகள் வெற்றி பெற்றால் முதுமை தொடர்பான பாதிப்புகளில் இருந்து மனிதன் தப்பிக்கலாம் என்கிறார் ப்ரோச்கோவ்.

முதுமையைத் தடுப்பதாகச் சொல்லும் க்ரீம்களுக்கு எதிர்காலத்தில் வேலை இருக்காது!

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: அன்பு வேறுபாடு அறியாது!

 
 
masala_2574762f.jpg
 

பஹாமாஸ் நாட்டில் மரத்திலிருந்து கீழே விழுந்த ரக்கூன் குட்டியை, அதன் தாய் கைவிட்டது. சின்னஞ்சிறு குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்தார் ரோஸி கெம்ப். பம்ப்கின் என்று பெயரிடப்பட்டு, தாங்கள் வளர்க்கும் 2 நாய்களுடன் சேர்த்து வளர்த்து வந்தார். நாய்கள் இரண்டும் பம்ப்கினை மிக அன்பாகப் பார்த்துக்கொண்டன. விளையாட்டுக் காட்டின. இன்றுவரை ரக்கூனுக்குத் தான் வேறொரு வகை விலங்கு என்று தெரியாது.

ஆனால் நாய் குடும்பத்தைச் சேராத விலங்கு என்று தெரிந்தாலும் நாய்கள் தங்கள் குட்டியைப் போலப் பார்த்துக்கொள்கின்றன. நாய்கள் மீது கால்களைப் போட்டுப் படுத்து உறங்குவது, முகத்தோடு முகம் வைத்து விளையாடுவது என்று ரக்கூனின் ஒவ்வொரு செயலும் அத்தனை அழகாகப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றன. ‘’காட்டு வாழ்க்கையை பம்ப்கின் அறிந்துகொள்ளவில்லை. ஆனால் குளிர்சாதன அறையில் தங்குவதற்கும், கழிவறையைப் பயன்படுத்துவதற்கும், மேஜையில் அமர்ந்து சாப்பிடுவதற்கும் பழகிக்கொண்டது’’ என்கிறார் ரோஸி.

அன்பு வேறுபாடு அறியாது!

Body Integrity Identity Disorder என்பது உளவியல் தொடர்பான ஒரு குறைபாடு. அதாவது தன் உடலில் ஏதாவது ஒரு குறைபாடு இருக்கும் என்று நம்புவார்கள். குறைபாடே இல்லாவிட்டாலும் குறைபாட்டை வரவழைத்துவிடுவார்கள். அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் வசிக்கிறார் 30 வயது ஜுவெல் ஷுபிங். சிறிய வயதில் இருந்தே தனக்குப் பார்வை தெரியக்கூடாது என்று நினைத்து வந்தார். ’’எனக்குப் பார்வை தெரிவதை விட தெரியாமல் இருப்பதில்தான் மகிழ்ச்சியாக இருந்தது. ஆறு வயதிலேயே பார்வை தெரியக்கூடாது என்பதற்காகச் சூரியனைப் பார்த்தபடி அமர்ந்திருப்பேன். ஆனாலும் பார்வை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் இருந்தது.

நாளாக நாளாகப் பார்வை எப்படியாவது பறிபோய்விட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. கண்களை மூடிக்கொண்டு, கறுப்புக் கண்ணாடி அணிந்து செல்ல ஆரம்பித்தேன். பிரெய்ல் எழுத்துகளை 20 வயதில் படித்து முடித்தேன். கண்களை மரத்துப் போகச் செய்யக்கூடிய சொட்டு மருந்துகளைத் தொடர்ந்து போட்டேன். மருந்து வழிந்து, என் கன்னம் எல்லாம் தீயாக எரிந்தது. ஆனாலும் பார்வை போய்விட வேண்டும் என்பதற்காகப் பொறுத்துக்கொண்டேன்.

ஆறு மாதங்களில் என் பார்வை படிப்படியாகக் குறைந்தது. என் பிரச்சினையை என் வீட்டில் யாரும் புரிந்துகொள்ளவில்லை. என் காதலர் என்னுடன் இருந்து, இயற்கையான வழிகளில் பார்வையைப் போக்க உதவினார். ஒருநாள் காலை எழுந்தபோது இருளாக இருந்தது. என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மருத்துவரிடம் பரிசோதித்து அதை உறுதி செய்துகொண்டேன். பிரெய்ல் மூலம் படித்து பட்டதாரியாகிவிட்டேன். பார்வையற்றவர்கள் போல வாழப் பழகிக்கொண்டேன்.’’ என்கிறார் ஜுவெல். இன்றைய நிலையில் இது குணப்படுத்த முடியாத குறைபாடு என்கிறார் டாக்டர் மைகேல் ஃபர்ஸ்ட்.

ஐயோ… மிக மோசமான குறைபாடாக இருக்குதே…

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் வசிக்கிறார் 15 வயது ஹாவோ டாங்டாங். தினமும் மாட்டின் உருவம் கொண்ட முகமூடியை அணிந்துகொண்டு, தன் மீது அமரச் சொல்கிறார். அதற்காக 50 ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார். ஒரு பெண் இப்படிப் பணம் சம்பாதிப்பதைப் பார்த்து எல்லோருக்கும் வருத்தமாக இருக்கிறது.

‘’என் அப்பாவின் தொழில் நஷ்டமடைந்துவிட்டது. அந்த அதிர்ச்சியில் பக்கவாதம் வந்து படுக்கையில் விழுந்துவிட்டார். அம்மாவும் இறந்து போய்விட்டார். என் சகோர, சகோதரிகள் பள்ளிக்குப் போகவேண்டும். என் அப்பாவுக்கு மட்டும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் மருத்துவத்துக்குச் செலவாகிறது. 15 வயது என்பதால் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை. எனக்கு வேறு வழி தெரியாமல் சாலைகளில் பிச்சை எடுத்து வந்தேன். என் கதையைக் கேட்ட ஒருவர்தான் முகமூடி அணிந்து, முதுகில் சவாரி ஏற்றி, கட்டணமாகப் பணம் பெறும் ஆலோசனையை வழங்கினார். இது பிச்சை எடுப்பதை விடக் கொஞ்சம் நிம்மதியான வேலை. என்னைச் சிலர் ஏமாற்றுக்காரி என்கிறார்கள். அதற்காக நடுநடுவே என் அப்பாவைச் சக்கரநாற்காலியில் அமர வைத்துக்கொண்டு, இந்த வேலையைச் செய்து வருகிறேன். பகல் முழுவதும் உழைத்தால் தினமும் 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

இது அதிகப்படியான வருமானம்தான். ஆனால் என் அப்பாவின் மருத்துவச் செலவுக்கே பத்தாது. 5 பேர் சாப்பிட வேண்டும். 3 பேர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். மழை பெய்தால் அன்று வருமானம் கிடையாது. அருகில் இருக்கும் கடைக்காரர்கள் துரத்துவார்கள். குடிகாரர்கள் என்னிடம் தகராறு செய்வார்கள். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நான் கவலைப்படுவதில்லை. என் அப்பாவுக்கு விரைவில் குணமாக வேண்டும், அவர் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டும். விரைவில் நான் பள்ளி செல்ல வேண்டும்’’ என்கிறார் டாங்டாங்.

விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல வழி பிறக்கட்டும்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அன்பு-வேறுபாடு-அறியாது/article7733744.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: காகித கார்!

 
masala_2576123f.jpg
 

காகித மடிப்புகளின் மூலம் பல்வேறு உருவங்கள் செய்யும் கலை ஒரிகாமி. லண்டனில் உள்ள ஒரு கார் நிறுவனம், காகித அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி கார் ஒன்றை உருவாக்கி சாதனை செய்திருக்கிறது. இரும்பு, அலுமினியம் சட்டங்களின் மீது அட்டைகளால் செய்யப்பட்ட ஒரிகாமி வடிவங்களைப் பொருத்தியிருக்கிறார்கள். காரின் கூரை, கதவு, ஸ்டீரிங் அனைத்தும் அட்டைகளால் ஆனவை. இந்த காரை சாதாரண கார்களைப் போல சாலைகளில் செலுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.

அட்டகாசம்!

அடுத்த ஆண்டு ஜப்பானில் தானாக இயங்கக்கூடிய ரோபோ டாக்ஸிகள் சாலைகளில் வலம் வர இருக்கின்றன. ஃபுஜிசவா, கனகவா குடியிருப்பு பகுதிகளில் 50 பேர் இந்தத் தானியங்கி ரோபோ டாக்ஸியைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். குடியிருப்பு பகுதிகளில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குத் தானியங்கி டாக்ஸியில் பயணித்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக ஓட்டுனர் இருக்கையில் ஒரு மனிதரை அமர வைத்து இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஜிபிஎஸ், ரேடார், ஸ்டீரியோ விஷன் கேமரா போன்றவை ரோபோ டாக்ஸியில் பொருத்தப்பட்டிருக்கின்றன. தானியங்கி டாக்ஸிகள் ஏற்கெனவே பல இடங்களில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் முதல் முறையாக குடியிருப்பு பகுதிகளில் பரிசோதனை நடந்து முடிந்திருக்கிறது. “அடுத்த ஆண்டு ஜப்பான் சாலைகளில் இந்த ரோபோ டாக்ஸிகள் ஓட இருக்கின்றன. 2020ம் ஆண்டுக்குள் ஜப்பானில் ஓடும் பெரும்பாலான டாக்ஸிகள் ரோபோ டாக்ஸிகளாக மாறிவிடும். இயற்கைப் பேரிடர்களின்போது டாக்ஸியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது எங்களின் அடுத்த ஆராய்ச்சி’’ என்கிறார் ரோபோ டாக்ஸி திட்டத்தின் தலைவர் ஹிரோஷி நகஜிமா.

மனிதனுக்கு ரோபோ சவாலாக இருக்கப் போகிறது!

உலகிலேயே மிக அரிதான நாய் வகை வியட்நாமின் பு க்வாக் தீவில் வசிக்கும் ரிட்ஜ்பேக் நாய்தான். பிரிட்டனைச் சேர்ந்த 42 வயது கேத்ரின் லேன் வியட்நாமில் இருந்து 2 நாய்களை வாங்கிவந்தார். ஐரோப்பாவிலேயே முதல் முறையாக ரிட்ஜ்பேக் நாய் 4 குட்டிகளை ஈன்றுள்ளது. கேத்ரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனி அறை, படுக்கை வசதி, உணவு என்று இந்த நாய்களை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்.

24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் நாய்களைக் கவனித்து வருகிறார். ஒவ்வொரு நாய்க் குட்டியும் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாக இருக்கின்றன. ஏற்கெனவே இருவர் முன்பணம் கொடுத்துவிட்டனர். மிகவும் புத்திசாலியான இந்த நாய்களுக்குப் பயிற்சி அளிப்பது எளிது. எந்தச் சூழ்நிலையையும் விரைவில் ஏற்றுக்கொண்டு விடக்கூடியவை. உலகிலேயே 800 நாய்கள் மட்டுமே வசித்து வருகின்றன.

அடேங்கப்பா…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-காகித-கார்/article7738049.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விண்வெளி விடுதி!

 
masala_2577831f.jpg
 

ஸ்விட்சர்லாந்தின் ஜுரிச் நகரில் கமெஹா க்ராண்ட் என்ற தங்கும் விடுதி கட்டப்பட்டிருக்கிறது. ’விண்வெளி’ என்ற பொருளில் இந்த விடுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனைச் சேர்ந்த மைக்கேல் நஜ்ஜார் என்பவர் இந்த விடுதியை வடிவமைத்திருக்கிறார். ஜீரோ புவியீர்ப்பு விசையில் மெத்தை அந்தரத்தில் மிதப்பது போலவும் ராக்கெட் என்ஜின்களில் இருக்கும் விளக்குகள் போலவும் மேற்கூரையிலும் சுற்றுச் சுவர்களிலும் விண்மீன் கூட்டங்கள் இருப்பது போலவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஊழியர்கள் அனைவரும் ரோபோக்கள். கறுப்பு, வெள்ளை, சாம்பல் வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

விண்வெளிக்குச் செல்லாமலே விண்வெளியில் வசிக்கலாம்!

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் கடலுக்கு அடியில் தேவாலயம் அமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். கேப் ஃபியோலண்ட் என்ற இடத்தில் 20 மீட்டர் ஆழத்தில் மிகப் பெரிய சிலுவையை நிறுவியிருக்கிறார்கள். 1850 முதல் 1940 வரை இந்த இடத்தில் ராணுவ கப்பல்களும் ராணுவ நடவடிக்கைகளும் அதிகமாக இருந்தன. செயிண்ட் நிகோலஸ் தேவாலயம் என்று பெயரும் வைத்துவிட்டனர்.

ரஷ்ய மோட்டார் சைக்கிள் க்ளப்பும் மாஸ்கோவைச் சேர்ந்த ஒரு தேவாலயமும் இந்தத் திட்டத்துக்குச் செலவு செய்து வருகின்றன. நிலத்தில் இருக்கும் தேவாலயத்தைப் போலவே உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பார்க்கும் விதத்தில் அமைக்க இருக்கிறார்கள். தேவாலயப் பணிகள் முடிவுற்றதும் க்ரிமியன் வரலாற்றை எடுத்துச் சொல்லும் விதத்தில் ஓர் அருங்காட்சியகமும் இங்கே அமைக்கப்பட இருக்கிறது.

இனி கடல்களிலும் கட்டிடங்கள் முளைக்கப் போகின்றன…

இங்கிலாந்தில் வசித்துவரும் கிட்டன் ரிச்சர்ட் வீட்டுக்குச் சென்றால் கால இயந்திரத்தில் 1940ம் ஆண்டுக்குச் சென்றது போலத் தோன்றும். கிட்டன், ரிச்சர்ட் இருவரும் அந்தக் கால ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். தலை அலங்காரம், செருப்பு, ஒப்பனை, வாட்ச், அணிகலன்கள் என்று அனைத்தும் அந்தக் காலத்தில் இருந்தது போலவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. வீட்டில் உள்ள நாற்காலிகள், அலமாரிகள், பாத்திரங்கள், ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள், விளையாட்டுச் சாமான்கள், திரைச்சீலைகள், ஸ்விட்ச் போர்டுகள், டிவி, தொலைபேசி என்று அனைத்தையும் மாற்றியிருக்கிறார்கள்.

“மிஷேல் என்ற என் பெயரைக்கூட கிட்டன் என்று மாற்றிக்கொண்டேன். எனக்கு அந்தக் கால வாழ்க்கையின் மீது தீராத காதல். 15 ஆண்டுகளாக நான் இப்படித்தான் வாழ்ந்து வருகிறேன். நாங்கள் சாப்பிடும் உணவு, கேட்கும் இசை, பார்க்கும் படங்கள் அனைத்தும் அந்தக் காலத்தைச் சேர்ந்தவைதான். அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்குச் சென்றபொழுதுதான் ரிச்சர்ட்டைச் சந்தித்தேன். எங்கள் இருவர் விருப்பங்களும் ஒத்துப் போயின.

எனக்காக முழுமையாகத் தன்னை மாற்றிக்கொண்டார். அந்தக் கால ராணுவ வீரர் உடைகளும் முறுக்கிய மீசையுமாக வலம் வருகிறார். பழைய ரயில் பெட்டியில்தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. 2 மாதப் பெண் குழந்தைக்கும் அந்தக் கால ஆடைகளேயே அணிவித்து வருகிறோம். என் மகள் வளர்ந்தாலும் நவீன உலகத்துக்கு ஏற்ப மாறமாட்டாள் என்று நம்புகிறேன்’’ என்கிறார் 35 வயது கிட்டன்.

அட! வித்தியாசமான வாழ்க்கைதான்!

அலபாமாவில் வசிக்கிறார் 24 வயது ஆஷ்லே நிகோல். அவரது படுக்கை அறை முழுவதும் 200 பொம்மைகளை வைத்திருக்கிறார். அவற்றில் சில பிசாசு பொம்மைகள். மனைவியின் விருப்பத்துக்காக இந்தப் பொம்மைகளைச் சகித்துக்கொண்டார் பிலிப் பாஸ்டன். ஒருநாள் இரவு அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது இரண்டு பொம்மைகள் அவரைத் தாக்கக் தொடங்கிவிட்டனவாம். பயந்து அலறியவர், படுக்கை அறைகளில் இருந்த பொம்மைகளை அப்புறப்படுத்திவிட்டார். ஆனாலும் நிகோலுக்கு பொம்மைகள் மீதுள்ள அன்பு சிறிதும் குறையவில்லை.

“12 ஆண்டுகளாக பொம்மைகளைச் சேகரித்து வருகிறேன். ஆண்களால் ஏமாற்றப்பட்ட 2 பெண்கள் இறந்து போய்விட்டனர். அவர்களின் பொம்மைகள் என்னிடம் இருக்கின்றன. எந்த ஜோடியும் மகிழ்ச்சியாக இருப்பது அந்தப் பொம்மைகளுக்குப் பிடிப்பதில்லை. ஏதாவது ஒருவிதத்தில் பயமுறுத்தி விடுகின்றன. படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நான், திடீரென்று விழித்தபோது வேறொரு அறையில் இருந்தேன். பொம்மைகள் இருக்கும் இடத்தில் நான் சிரிப்பதோ, பேசுவதோ கூட கிடையாது. ஏதோ அமானுஷ சக்திகள் பொம்மைகள் மூலம் உலாவுகின்றன’’ என்கிறார் நிகோல்.

பொம்மைகளை விட்டுவிட்டு, மனநல மருத்துவரைப் பாருங்க நிகோல்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விண்வெளி-விடுதி/article7742154.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மரபணு ஆச்சரியம்!

 
masala_2579284f.jpg
 

இந்தப் படத்தில் இருப்பவர்கள் க்ளோன் செய்யப்பட்டவர்கள் அல்ல. இவற்றில் ஒரு குழந்தை இன்றைய குழந்தை. இன்னொரு குழந்தை சில வருடங்களுக்கு முன்பு அவர்களின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையாக இதே வயதில் இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை! பெண் குழந்தைகள் தங்கள் அப்பாவைப் போல அல்லாமல், தங்கள் அம்மாவை ஒத்திருக்கிறார்கள். அதேபோல ஆண் குழந்தைகள் அம்மாவைப் போல இல்லாமல், அப்பாவை ஒத்திருக்கின்றனர். தாய், தந்தையரில் யாருடைய மரபணுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அவர்களை ஒத்திருப்பார்கள் குழந்தைகள். ஆனால் இங்கே ஆண் குழந்தைகள் தங்கள் தந்தையையும் பெண் குழந்தைகள் தங்கள் தாயையும் அச்சு அசலாக ஒத்திருப்பது அபூர்வமான விஷயம் என்கிறார்கள்.

ரொம்ப ஆச்சரியமாக இருக்கே!

அதிக செலவு மிக்க ஒரு விளையாட்டு இப்பொழுது பரவி வருகிறது. இந்த விளையாட்டை இதய பலவீனமானவர்கள் விளையாடக்கூடாது. ஒரு பொருள் கீழே விழுந்தால் எடுக்க முடியாத இடத்தில் நின்றுகொள்ள வேண்டும். அதாவது கொட்டும் அருவி, ஓடும் ஆறு, மலை உச்சி, சாக்கடை, ரயில் பயணம், உயரமான கட்டிடம் போன்ற இடங்களில் நின்றுகொள்ள வேண்டும். விலை மதிப்பு மிக்க ஸ்மார்ட் போனின் ஒரு முனையை இரண்டு விரல்களால் பிடித்துக்கொள்ள வேண்டும். போனின் எடை, விரல்களின் நடுக்கம், விழுந்தால் திரும்பக் கிடைக்காது என்ற பயம் போன்றவற்றால் அட்ரினலின் சுரப்பி அதிகமாகச் சுரக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித் துடிப்பு வேகமாகும். ஒருவேளை போன் விழுந்தால் மயக்கமே வந்துவிடலாம்.

இந்த விளையாட்டை ட்வெண்ட்டி ஒன் பைலட்ஸ் என்ற அமெரிக்கன் பாப் குழு கண்டறிந்திருக்கிறது. யுடியூப்பில் இதுவரை 3 லட்சம் பேர் விளையாட்டை விரும்பிப் பார்த்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் வேகமாக இந்த விளையாட்டு பரவி வருகிறது. ஒரு பெண் வெப்பக் காற்றுப் பலூனில் பறந்து கொண்டு இந்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார். இன்னொருவர் நயாகரா அருவியில் இதை விளையாடிப் பார்த்திருக்கிறார். விளையாடுபவர்களை விட அந்த விளையாட்டைப் பார்க்கும் பெற்றோருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துவிடுகிறது. இந்த விளையாட்டில் குறைந்த அளவிலேயே போன் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகச் சொல்கிறார்கள்.

போன் விழுந்தால் கூட பரவாயில்லை, நீங்க விழுந்துடாதீங்க…

டெக்ஸாசில் வசிக்கிறார் 12 வயது கேட்லின் தோர்ன்லி. மர்மமான நோயின் காரணமாக நாள் முழுவதும் தும்மிக்கொண்டே இருக்கிறார். 1 நிமிடத்துக்கு 20 தடவை என்று 1 நாளைக்கு 12 ஆயிரம் தடவைகள் தும்மிக்கொண்டிருக்கிறார். இந்த அசுரத்தனமான தும்மல்களால் குழந்தைகளுக்கே உரிய மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்டிருக்கிறார் கேட்லின். ’’4 வாரங்களுக்கு முன்பு பள்ளியில்தான் இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது. வரிசையாகத் தும்மல்கள் வந்துகொண்டே இருந்தன. ஏதாவது அலர்ஜியாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். உடனே வாயையும் கைகளையும் சுத்தம் செய்தேன். ஆனால் தும்மல் நிற்பதாக இல்லை. ஒருநாள் முழுவதும் தும்மிய பிறகு என் வயிற்றில் வலி வந்துவிட்டது. கால்கள் பலமிழந்துவிட்டன.

சாப்பிடக் கூட முடியவில்லை. பற்களும் வலிக்க ஆரம்பித்துவிட்டன. என்னால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இதுவரை பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டோம். யாராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. என் பிரச்சினையைத் தீர்க்கவும் முடியவில்லை. எந்த மருத்துக்கும் இந்த நோய் கட்டுப்பட மாட்டேன் என்கிறது. அலர்ஜி, மன அழுத்தம், நரம்புத் தளர்ச்சி என்று காரணங்கள் சொன்னாலும் உண்மையான காரணம் யாருக்கும் தெரியவில்லை. பெனாண்ட்ரில் மருந்தை உட்கொண்டு என்னை மறந்து தூங்கும்போதுதான் தும்மல்கள் வருவதில்லை. ஆனால் அந்த நேரத்திலும் கனவில் தும்மல் வந்துவிடுகிறது. திடீரென்று தும்மல் வந்ததுபோலவே ஒருநாள் திடீரென்று மறைந்து போகும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்’’ என்கிறார் கேட்லின்.

நாலு தும்மலுக்கே நம்மால் தாங்க முடியாது… பாவம் குழந்தை…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மரபணு-ஆச்சரியம்/article7746260.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: துணி மனிதன்!

 
masala_2502863f.jpg
 

பெஞ்சமின் ஷைன் பிரிட்டனைச் சேர்ந்த கலைஞர். வலை போன்ற துணிகளை வைத்து விதவிதமான மனித உருவங்களை உருவாக்குவதில் நிபுணர். சமீபத்தில் நடனமாடும் மனிதர்களைத் துணிகளில் உருவாக்கிக் காட்சிக்கு வைத்திருந்தார். இதற்காக 2 ஆயிரம் மீட்டர் துணிகளைப் பயன்படுத்தியிருந்தார். மிகப் பெரிய அளவில் பாராட்டுகளையும் பெற்றார். தான் உருவாக்க வேண்டிய மாதிரிகளை புகைப்படங்களாக தயார் செய்துகொள்கிறார். பிறகு அவற்றை வைத்து ஓவியத்துக்காகத் திட்டமிடுகிறார். பல வண்ணங்களில் வலை போன்ற துணிகளை வாங்கிக்கொள்கிறார். சுவற்றில் துணியை வைத்து இஸ்திரி பெட்டியால் தேய்க்கிறார்.

வெப்பத்தில் துணி சுருங்கி, கோடுகளாக மாறுகின்றன. இவை பின்னர் முழு உருவங்களாக உருமாற்றம் அடைந்து, பார்ப்பவர்களை அசத்தி விடுகின்றன. மிகவும் சிரமமான கலை இது. தவறாக இஸ்திரியைத் தேய்த்தால் முழுத் துணியும் வீணாகிவிடும். பிறகு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். பொறுமை அளவுக்கு அதிகமாகத் தேவைப்படும். துணிகளை மடித்து, சுருக்கி, இஸ்திரி போட்டுச் செய்து முடிப்பதற்கு இரண்டரை மாதங்கள் தேவைப்படுகின்றன.

இந்தத் துணி உருவங்களுக்குப் பின்னால் வண்ண விளக்குகளைப் பயன்படுத்தினால் அது வேறொரு விதத்தில் அழகாக இருக்கும். ‘‘என் கலைப் படைப்பை விட, ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்வதுதான் மிகவும் கடினமானது. பாதி வேலைகளை என் ஸ்டூடியோவிலும் மீதி வேலைகளைக் கண்காட்சி நடைபெறும் இடங்களிலும் செய்து முடிக்கிறேன்’’ என்கிறார் பெஞ்சமின் ஷைன். சர்வதேச நிறுவனங்கள் இவருடன் இணைந்து கண்காட்சிகளை நடத்த போட்டி போட்டு வருகின்றன.

உங்க பேரைப் போலவே நீங்களும் ஷைனாயிட்டீங்க பெஞ்சமின்!

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருக்கிறது அர்லண்டா விமான நிலையம். இங்கே உலகில் மற்ற எந்த விமான நிலையங்களிலும் இல்லாத ஒரு புதுமை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கே தற்போது நிலவும் பருவ நிலையை அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்காக மூன்று அறைகள் இருக்கின்றன. குளிர் மிகுந்த நாடுகளுக்குச் செல்பவர்கள், அந்த நாட்டின் தட்பவெப்ப நிலையைத் திரையில் பார்க்கலாம். குளிரை உணரலாம். காற்றின் சத்தத்தைக் கேட்கலாம்.

வெப்ப நாடுகளுக்குச் செல்பவர்கள் வெப்பத்தை உணர்ந்துகொள்ளலாம். இவ்வாறு அறிந்துகொண்டு, குளிருக்குத் தேவையான கம்பளி, ஜெர்கின் உடைகளை வாங்கிக்கொண்டு செல்லலாம். வெப்ப நாடுகள் என்றால் அதற்கேற்ற பருத்தி ஆடைகள், சூரியக் கண்ணாடிகள் வாங்கிக்கொண்டு பயணிக்கலாம். மிக மோசமான பருவநிலை என்றால், அதைத் தாங்கிக்கொள்ள இயலாதவர்கள் பயணத்தைச் சற்றுத் தள்ளி வைக்கலாம். மே 29 அன்று இந்த பருவநிலை அறியும் அறைகள் திறக்கப்பட்டன. இதுவரை 40 ஆயிரம் பேர் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவு வேகமாக வளர்கின்றன!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-துணி-மனிதன்/article7515635.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அடடா! அசத்துகிறாளே ஃபியலா

 
ria_2580355f.jpg
 

தென்னாப்பிரிக்காவில் வசிக்கிறார் ரியானா வான். 53 வயதில் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டிருக்கிறார். ‘‘மார்பகப் புற்றுநோயில் ஆபத்து குறைவு என்று சொன்னாலும் வலியும் வேதனையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு வலி தெரியாமல் பார்த்துக்கொண்டதோடு, என்னை புற்றுநோயின் பிடியில் இருந்தும் காப்பாற்றியிருக்கிறது என் ஃபியலா சிறுத்தை. 2013-ம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நான் மனம் உடைந்து போனேன். எப்படியோ சிறுத்தைக்கு என் வலி புரிந்துவிட்டது. என்னை அன்பாகக் கவனித்துக்கொண்டது. மார்பகம் நீக்கப்பட்டு, கீமோ தெரபி அளிக்கப்பட்டு, மொட்டைத் தலையுடன் வீடு வந்தேன். காரில் இருந்து இறங்கியதுமே சிறுத்தை தாவி அணைத்துக்கொண்டது. என்னை மார்போடு சேர்த்து அணைக்கும் சிறுத்தை, அறுவை சிகிச்சைக்குப் பிறகு பின்புறமாக அணைத்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. பேசும் சக்திதான் இல்லையே தவிர, அன்பு செலுத்துபவர்களின் அத்தனை உணர்வு களையும் ஒரு சிறுத்தையால் புரிந்துகொள்ள முடிகிறது. மருந்து களைவிட என் அன்புக் குழந்தை ஃபியலாவால்தான் நோயிலிருந்தும் வலியிலிருந்தும் மீண்டிருக்கிறேன்’’ என்கிறார் ரியானா.

அடடா! அசத்துகிறாளே ஃபியலா!

ஜெர்மனைச் சேர்ந்த 22 வயது ஜோயல் மிக்லெர் வித்தியாசமான பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். தன் உடலில் உள்ள சதைகளைக் கிழித்துக்கொண்டு சுரங்கப் பாதைகளை அமைத்து வருகிறார். முகத்தில் மட்டும் மூக்கு, உதடு உட்பட 11 இடங்களில் துளைகளைப் போட்டிருக்கிறார். கன்னங்களில் இருக்கும் 2 துளைகள்தான் மிகப் பெரியவை. ஒவ்வொன்றும் 34 மி.மீ. அகலம் கொண்டவை. இந்தத் துளைகளை 40 மி.மீ. அளவுக்குப் பெரிதாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மிக்லெர். கன்னத்தில் இருக்கும் துளை வழியே அவருடைய பற்கள் தெரிகின்றன. சமீபத்தில் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருக்கும் மிக்லெர்,

‘‘13 வயதில் இருந்தே என் சதைகளைத் துளையிடும் ஆர்வம் வந்துவிட்டது. காதுகளில்தான் முதல் துளை இட்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகரித்து முகம் முழுவதும் துளைகளுடன் காட்சியளிக்கிறேன். 11 பெரிய துளைகள் தவிர, 27 துளைகள் போட்டு அணிகலன்களைக் குத்தியிருக்கிறேன். 6 டாட்டூகளை வரைந்திருக்கிறேன். நாக்கை இரண்டாக வெட்டியிருக்கிறேன். கன்னங்களில் உள்ள துளைகள் வழியே இரண்டு நாக்குகளையும் என்னால் வெளியே நீட்ட முடியும். உடல் உறுப்புகளை இப்படி மாற்றி அமைப்பது மிகவும் வலி மிகுந்த வேலை. ஒவ்வொரு துளைக்கும் ஒருவாரம் வலியுடன் போராடுவேன். என் மன உறுதியால் விரைவில் காயங்கள் ஆறிவிடும். இன்னும் சிறிது மெனக்கெட்டால் உலகிலேயே விநோதமான மனிதன் என்ற சாதனையைப் படைத்துவிடுவேன்’’ என்கிறார் மிக்லெர்.

என்ன விநோதமோ… குழந்தைகள் பார்த்தால் அலறப் போகிறார்கள்…

டெக்ஸாசில் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்களா வாசலில் ஷரஃபத் கான் என்ற 69 முதியவர் வசித்து வருகிறார். மருத்துவராக இருக்கும் அவரது மனைவி, அவரை வெளியேற்றிவிட்டார். 6 மாதங்களாகப் பனியிலும் மழையிலும் குளிர் தாங்க முடியாமல் தவிக்கிறார். நாளுக்கு நாள் அவரது உடல் நிலை மோசமாகி வருகிறது. அழுக்கான ஒரே ஆடையைத்தான் அணிந்துகொண்டிருக்கிறார். கால்களுக்கு ஷுக்கள் இல்லை என்று அக்கம்பக்கத்தினர் வருந்துகிறார்கள். பாதி பங்களாவின் சொந்தக்காரரான ஷரஃபத் கானை விடுதியில் தங்கும்படி அவரது நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

‘‘என்னுடைய உணர்வுகள் இந்த வீட்டில்தான் பிணைக்கப்பட்டிருக்கின்றன. என்னால் எங்கும் வந்து தங்க இயலாது’’ என்று கூறிவிட்டார் ஷரஃபத் கான். புதுத் துணிகள், கம்பளிப் போர்வைகள், ஷுக்களை தெரிந்தவர்கள் கொடுத்தால் கூட, அவரது மனைவி அவற்றை அப்புறப்படுத்தி விடுகிறார். யாராவது உதவ நினைத்தால், அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம், ஆனால் இந்தச் சொத்தில் இருந்து ஒரு டாலர் கூட கொடுக்க முடியாது என்று எழுதி வைத்திருக்கிறார். பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்துவிடும்படி மனைவியிடம் உறவினர்கள் சொல்கிறார்கள். மதத்தைக் காரணம் காட்டி அதற்கும் மறுத்துவிட்டார் மனைவி. சட்டப்படி விவாகரத்து செய்தால் பாதி சொத்து போய்விடும் என்பதால் விவாகரத்தும் செய்யாமல், வீட்டுக்குள்ளும் சேர்க்காமல் வைத்திருக்கிறார் மனைவி.

‘‘என்றாவது ஒருநாள் தான் செய்தது தவறு என்று என் மனைவி உணர்வார்’’ என்று காத்திருக்கிறார் ஷரஃபத் கான்.

மருத்துவர் ஒரு மனிதனை இப்படித் துன்புறுத்தலாமா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அடடா-அசத்துகிறாளே-பியலா/article7749686.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்!

 
 
 
 
 
masala_2501610f.jpg
 

பிரேசிலைச் சேர்ந்தவர் ரிகார்டோ அஸிவேடோ. தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்திருக்கிறார். டி பவர் ஹெச்2ஓ (T Power H2O) என்று அழைக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி சுமார் 500 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கிறார். சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது. கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியை மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருக்கிறார்.

பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் இருந்து ஹைட்ரஜனைத் தனியாகப் பிரித்து விடுகிறது. நீரிலிருந்து கிடைக்கும் ஹைட்ரஜன் எரிசக்தியாக மாறுகிறது. இதனால் மோட்டார் இயங்குகிறது. அஸிவேடோவின் மோட்டார் சைக்கிளை ஓர் உதாரணமாகவே எடுத்துக்கொள்ள முடியும். இன்று இருக்கும் நிலையில் அதிக அளவில் இதுபோன்ற மோட்டார் சைக்கிள்களை உருவாக்க இயலாது. இன்னும் பல பரிசோதனைகளும் முன்னேற்றங்களும் இந்த மோட்டார் சைக்கிளுக்குத் தேவைப்படுகின்றன.

இன்னொரு ராமர் பிள்ளை!

ஃப்ளோரிடாவில் மெர்சிடிஸ் கார் ஒன்று காணாமல் போய்விட்டதாக, காவல் துறைக்குப் புகார் வந்தது. தொலைந்து போன காரைத் தேடும் பணியில் இருந்தபோது, மெர்சிடிஸ் சிக்கியது. காரை ஓட்டி வந்த 20 வயது இளைஞர் கென்ஸோ ரோபர்ட்ஸிடம் இருந்த பையைப் பரிசோதித்தபோது, அவர் பொய்யான பெயரில் அடையாள அட்டை, போலி உரிமம் வைத்திருந்தது தெரிந்தது. அவரை அழைத்துச் சென்று, காவலர்களின் வாகனத்தில் அமர வைத்துவிட்டனர்.

உடனே ரோபர்ட்ஸ், தன்னுடைய கைரேகைகளை அழிக்கும் முயற்சியில் இறங்கி னார். பற்களால் உள்ளங்கை ரேகைகளைக் கடித்து, கடித்து துப்பினார். ஒருபக்கம் கடித்ததால் ஏற்பட்ட வலி, இன்னொரு பக்கம் மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றம். ரோபர்ட்ஸ் செய்த அத்தனைக் காரியங்களும் வண்டியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவிட்டது. ரோபர்ட்ஸ் இத்தனைக் கஷ்டப்பட்டும் கைரேகை பரிசோதனை காட்டிக் கொடுத்துவிட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அடப்பாவி…

பிரிட்டனில் வசிக்கும் 101 வயது ஹில்டா ஜாக்சன் பீரங்கி வாகனத்தை ஓட்டியதன் மூலம் தன் கனவை நிறைவேற்றிக்கொண்டார். ஹில்டாவின் 101வது பிறந்தநாள் அன்று அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. காக்பிட்டில் அமர்ந்து சில மீட்டர்கள் தூரம் வாகனத்தை ஓட்டிச் சென்றார். தன் வாழ்நாளில் மிகச் சிறந்த தருணமாக ஹில்டா இதைக் கூறியிருக்கிறார். ஹில்டாவின் 72 வயது மகள். 1950களில் 5 மாதங்கள் கார் மூலமே ஐரோப்பாவைச் சுற்றி வந்தவர் ஹில்டா. அவருக்கு வாகனங்கள் ஓட்டுவதில் இன்றுவரை ஆர்வம் குறையவில்லை.

வாழ்த்துகள் ஹில்டா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தண்ணீரில்-இயங்கும்-மோட்டார்-சைக்கிள்/article7511505.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: கறுப்பு கோழிக் கறி!

 
masala_2499876f.jpg
 

உலகிலேயே மிக அதிக விலை கொண்ட கோழி அயாம் சிமானி. இந்தோ னேஷியாவில் வளர்க்கப்படும் இந்தக் கோழிகளின் உடல் காகத்தைப் போன்று கறுப்பாக இருக்கின்றன. உடல் மட்டு மல்ல, கோழியின் தோல், இறைச்சி அனைத்தும் கறுப் பாகவே காணப்படுகிறது. மரபணுவிலேயே மெலனின் குறைபாடு இருப்பதால் கோழி யின் நிறம் கறுப்பாக இருக் கிறது. ஆனால் இந்த அரிய வகை கோழிக்கு மருத்துவம், ஆன்மிகக் காரணங்களைக் கூறி வருவதால் விலை அதிகமாகிவிட்டது. வசதி படைத்தவர்கள் மட்டுமே அயம் சிமானி கோழியின் இறைச்சியை உண்ண முடியும். ஒருநாள் வயதான கோழிக் குஞ்சு 13 ஆயிரம் ரூபாய். முதிர்ந்த கோழி 64 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட சூழலில் வளர்க்க வேண்டியிருப்பதால், ஆண்டுக்கே சில நூறு கோழிகள் மட்டுமே ஒரு பண்ணையில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

கறுப்புக்கு மதிப்பு!

பிரிட்டனில் வசித்து வந்தார் 75 வயது கில் பாரோ. செவிலியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருந்தார். குழந்தைகள், வாழ்க்கைத் துணைவர் என்று நிம்மதியான குடும்பம். ஆனாலும் கில் பாரோவுக்கு இயற்கை மரணத்தின் மேல் ஆர்வம் இல்லை. இன்னும் வயதாகி, குழந்தைகளையும் கஷ்டப்படுத்தி வாழ வேண்டுமா என்று நினைத்தார். இதுவரை வாழ்க்கையில் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் வாழ்ந்தவரால், முதுமையில் பிறரின் உதவியை எதிர்பார்த்து இருக்க வேண்டிய சூழலைக் கற்பனையில் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஸ்விட்சர்லாந்தில் தற்கொலைக்கான க்ளினிக் இயங்கி வருகிறது. அந்நாட்டுச் சட்டப்படி இது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை க்ளினிக்கில் விருப்பம் உள்ளவர்கள் வந்து தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்கள் அமைதியான மரணத்தை அடைய இந்த க்ளினிக் உதவுகிறது. பெரும்பாலும் நோயாளிகள், வயதானவர்கள் இங்கே வந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். கில் பாரோவும் அந்த முடிவை எடுத்தார். ஆனால் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித் தனர். ‘‘ சந்தோஷத்தோடு மரணம் அடைவதை விட வேறு என்ன வேண்டும்? வயதாகி, சந்தோஷத்தை இழந்து, பிறரின் உதவியை எதிர்பார்த்து, குற்றவுணர்வுடன் வாழ்வதைக் காட்டிலும் தற்கொலை மரணம் நல்லது’’ என்றார் கில் பாரோ.

டாக்டர் மைக்கேல் இர்வின், கில் பாரோ போன்றவர்களின் முடிவு தவறானது அல்ல. வயதான காலத்தில் ஒருவர் சுயநினைவுடன் எடுக்கும் முடிவை ஆதரிக்கத்தான் வேண்டும் என்கிறார். 2008 முதல் 2012 வரை பிரிட்டனில் இருந்து ஸ்விட்சர்லாந்து சென்று 611 முதியவர்கள் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். கில் பாரோவும் குடும்பத்தினருடன் விருந்து சாப்பிட்டு, செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு, ஸ்விட்சர்லாந்து சென்றார். ஜூலை 12 அன்று அவர் மருத்துவர்களின் உதவியோடு மரணம் அடைந்துவிட்டார்.

பிறப்பைப் போல மரணமும் இயற்கையாக வருவதுதான் நியாயமானது...

சீனாவில் வசிக்கிறார் 30 வயது லியு ஹைபின். வித்தியாசமான அப்பாவாக இருக்கிறார். குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று சீசா. உலகிலேயே மிக நீளமான சீசாவை லியு உருவாக்கியிருக்கிறார். டெங்ஸோவ் நகரில் லியுவின் மனைவி 8 மாத மகனுடன் வசித்து வருகிறார். 730 மைல்களுக்கு அப்பால் ஸியாமென் நகரில் லியு வசித்து வருகிறார். இரண்டு இடங்களிலும் பெரிய சீசாவை உருவாக்கி வைத்திருக்கிறார். சீசா பலகையின் நடுவில் பெரிய திரை பொருத்தப்பட்டிருக்கிறது. அதில் இண்டெர்நெட் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் ரிமோட் மூலம் திரையை இயக்கினால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியும். சீசாவின் ஒருமுனையில் மகனும் மறுமுனையில் லியுவும் உட்கார்ந்து விளையாடுகிறார்கள். இந்தக் காட்சி திரையில் தெரியும்போது குழந்தை, அப்பா தன்னோடு விளையாடுவதாக நினைத்துக்கொள்கிறான். ‘

‘குழந்தைகளுக்கு அப்பாவோடு விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியானது. தொலைவைக் காரணம் காட்டி, அந்த மகிழ்ச்சியை என் மகனுக்கு அளிக்காமல் இருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை. நானே இந்த சீசாவை உருவாக்கியிருக்கிறேன். பிற்காலத்தில் என் மகன், அப்பா எனக்காகச் சீக்கிரம் வீட்டுக்கு வந்து சீசா விளையாடுவார் என்று சொல்லும் நாள் என் வாழ்வின் மகத்தான தருணம்’’ என்கிறார் லியு.

இப்போ உலகமே பாராட்டுது, நாளை மகனும் பாராட்டுவான் லியு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கறுப்பு-கோழிக்-கறி/article7506914.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்!

 
masala_2582864f.jpg
 

அமெரிக்காவில் வசிக்கும் 27 வயது ஜெனிபர் ப்ரிகர் அக்ரோபடிக்ஸ் கலைஞர். ருமேனியாவில் ஒரு தம்பதிக்கு மூன்று மகள்களில் ஒருவராகப் பிறந்தவர். பிறக்கும்போதே அவருக்குக் கால்கள் இல்லை. அதனால் அவரது தந்தை குழந்தையை வளர்க்க விரும்பவில்லை. அமெரிக்க தம்பதிகள் ஜெனிபரைத் தத்தெடுத்துக்கொண்டனர். அக்ரோபடிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இயல்பிலேயே ஜெனிபருக்கு ஆர்வம் வந்தது. அதனால் அந்தக் கலைகளைக் கற்றுக்கொண்டார்.

‘‘என் பெற்றோர், என் குடும்பம், என் பள்ளி, என் பயிற்சியாளர் என்று யாருமே என் குறைபாட்டைச் சுட்டிக் காட்டியதில்லை. என் பெற்றோர் நான் குழந்தையாக இருந்தபோதே தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று எனக்குப் புரிய வைத்துவிட்டனர். 11 வயதில் என் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற டொமினிக் மொசியனு போலவே இருப்பதாகச் சொன்னார்கள். சற்று வளர்ந்த பிறகு எனக்கும் அவருக்குமான தொடர்பு பற்றி ஆராய்ந்தேன்.

அவரும் ருமேனியாவைச் சேர்ந்தவர். இருவருக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் மீது ஆர்வம். என் பெற்றோரிடம் விசாரித்தபோது மொசியனு என்பதுதான் என்னைப் பெற்றவரின் பெயர் என்றனர். நான் சிறுவயதில் என் ரோல்மாடலாகக் கருதியவர் என் சகோதரி என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். நானும் டொமினிக்கும் சகோதரிகள் என்பதை உறுதி செய்துகொண்டேன்.

பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். பேச முடியவில்லை. ஒரு கடிதமாக எழுதி, பத்திரிகையில் பிரசுரம் செய்தேன். என்னைப் பெற்ற அப்பா இப்பொழுது உயிருடன் இல்லை. அம்மாவையும் சகோதரிகளையும் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். டிஎன்ஏ பரிசோதனைக்கும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தேன். ஆனால் செய்தி அறிந்த டொமினிக் ஆத்திரம் அடைந்துவிட்டார். பிறகு, எனக்கென்று மிக அருமையான பெற்றோரும் சகோதரர்களும் இருக்கிறார்கள். நான் என்னை முன்னேற்றிக்கொள்வதில் கவனத்தைத் திருப்பினேன். இன்று எல்லோரும் பாராட்டும் பெண்ணாக உயர்ந்திருக்கிறேன். பலருக்கு ரோல்மாடலாக இருக்கிறேன்’’ என்கிறார் ஜெனிபர்.

அந்தக் குடும்பத்துக்குக் கொடுத்து வைக்கலை ஜெனிபர்!

அலாஸ்காவில் வசிக்கிறார் சாண்டா க்ளாஸ். இவர் பெயர் சாண்டா க்ளாஸாக இருந்தாலும் இவர் நிஜ சாண்டா க்ளாஸ் இல்லை. சாண்டா க்ளாஸ் என்ற பெயரில் வசித்து வருபவர். அலாஸ்காவின் நகர சபை தேர்தலில் போட்டியிடுகிறார். வெண் தாடியும் சிவப்பு ஆடையுமாக வலம் வரும் சாண்டா க்ளாஸ், தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில்,

‘‘யாரும் பரிசுப் பொருள் கேட்டு எனக்குக் கோரிக்கை வைக்காதீர்கள். தொலைபேசி அழைப்புகள், இமெயில்கள், குழந்தைகளிடம் இருந்து வரும் கடிதங்கள் என்று எதற்கும் நான் பதில் அளிக்க மாட்டேன். நான் குழந்தைகள் நலனுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து வருகிறேன். அமைப்புகளுக்கு நன்கொடை, உதவி போன்றவற்றைச் செய்ய விரும்புபவர்கள் மட்டும் என்னைத் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்குப் பதில் அளிப்பேன்’’ என்று கூறியிருக்கிறார். 2012-ம் ஆண்டு அமெரிக்க அதிபருக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார் சாண்டா க்ளாஸ். சிறிதும் ஆதரவு இல்லாததால் வெளியேற்றப்பட்டார்.’’ குழந்தைகளுக்கு மட்டும் ஓட்டுரிமை அளிக்கப்பட்டிருந்தால் நான் அதிபராகி இருப்பேன்’’ என்கிறார் சாண்டா க்ளாஸ்.

சாண்டா க்ளாஸ் பேரையாவது மாத்திருக்கலாம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அந்தக்-குடும்பத்துக்குக்-கொடுத்து-வைக்கலை-ஜெனிபர்/article7756547.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மிகப் புதுமையான ஆசிரியர்!

 
masala_2584031f.jpg
 

நெதர்லாந்தில் வசிக்கிறார் டெபி ஹீர்கென்ஸ். பள்ளி ஆசிரியராக இருக்கும் டெபி, அறிவியலை மிகப் புதுமையாகவும் எளிதாகவும் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார். மனித உடல் பற்றிய பாடத்தில் உள்ளுறுப்புகள், எலும்புகள், தசைகள் போன்ற வற்றை கரும்பலகையில் வரைந்து காண்பிப்பதற்குப் பதில், அவற்றை ஆடையில் வரைந்து, அணிந்துகொண்டு பாடம் நடத்து கிறார். ‘

‘எனக்கு கற்பிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். அறிவியல் அதைவிட பிடிக்கும். மாணவர்களுக்கு இன்னும் சுவாரசியமாக, எளிமையாக எப்படி மனித உடலைப் புரிய வைக்க லாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மனித உடலுக்குள் இருக்கும் விஷயங்களை ஆடையாக அணிந்து நின்றால் குழந்தைகளுக்கு எளிதில் புரியும். இணையத்தில் தேடி ஆடைகளை வாங்கினேன்.

பள்ளி இயக்குநரிடம் அனுமதியும் பெற்றேன். ஆடைகளை அணிந்து மேஜை மீது நின்றபடி பெருங்குடல் இங்கே, இரைப்பை இங்கே என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் காட்டியபோது அவ்வளவு ஆர்வமாகப் பாடங்களைக் கவனித்தார்கள். ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டார்கள். நான் நினைத்ததை விட வகுப்பு அத்தனை உற்சாகமாகவும் உபயோகமாகவும் அமைந்ததில் எனக்கு நிறைவாக இருக்கிறது’’ என்கிறார் டெபி ஹீர்கென்ஸ். ‘‘எங்கள் பள்ளி ஆசிரியர்களிலேயே டெபி மிகவும் வித்தியாசமானவர். குழந்தைகளையும் கற்பித்தலையும் மிகவும் நேசிக்கக்கூடியவர். கற்பித்தலில் புதிய உத்திகளைக் கையாளக்கூடியவர்’’ என்று புகழ்கிறார்கள் பள்ளியின் நிர்வாகிகள்.

மிகப் புதுமையான ஆசிரியர்!

ஜெர்மனியைச் சேர்ந்த மிர்கோ ஹான்பென் ‘ஹேண்ட் ஸ்கேட்டிங்’ என்ற புதிய விளையாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார். உலகிலேயே மிகச் சிறந்த, கைகளால் ஸ்கேட்டிங் செய்யக்கூடிய ஒரே ஒருவர் மிர்கோதான்! ‘‘எனக்கு ஸ்கேட்டிங்கும் தலைகீழாக கைகளால் நிற்பதும் மிகவும் பிடிக்கும். ஒருநாள் இரவு உணவின் போதுதான் இரண்டையும் சேர்த்து புதிய விளையாட்டை உருவாக்கினால் என்ன என்று தோன்றியது.

உடனே படுக்கை அறையில் செய்தும் பார்த்தேன். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. வீட்டுக்குள்ளேயே பலநாட்கள் பயிற்சி செய்தேன். ஒருநாள் வெற்றி கிடைத்தது. பிறகு வெளியே பயிற்சியை மேற்கொண்டேன். ஹேண்ட் ஸ்கேட்டிங் செய்வதற்கு உடல் கட்டுக்கோப்பாக இருப்பது அவசியம். தினமும் 4 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னுடைய விளையாட்டைச் செய்து காட்டும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்’’ என்கிறார் 20 வயது மிர்கோ.

திகிலா இருக்கே இந்த விளையாட்டு…

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் வசிக்கிறார் 59 வயது கு மெய்யிங். சீனாவிலேயே மிக நீளமான ஜடை கொண்ட கு மெய்யிங், புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 24 வயதில் இருந்து முடி வெட்டாமல் வளர்த்து வரும் கு மெய்யிங் ஜடையின் நீளம் இன்று 8 அடி 3 அங்குலம் (2.5 மீட்டர்). உலகிலேயே மிக நீளமான ஜடை என்று ஏற்கெனவே கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவரும் சீனப் பெண்தான். அவரது ஜடையின் நீளம் 18 அடி 5 அங்குலம் (5.6 மீட்டர்). ‘‘நீளமான முடி வளர்ப்பது ஒன்றும் எளிதான விஷயமில்லை. ஜடையை அவிழ்த்து, சுத்தம் செய்து, மீண்டும் பின்னுவதற்கு எனக்கு ஒருவாரம் தேவைப்படுகிறது. அன்றாட வேலைகளுக்கு இடையூறாக இருக்கிறது. ஆனாலும் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வளர்த்து வருகிறேன்’’ என்கிறார் கு மெய்யிங்.

ம்... சுகமான சுமை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மிகப்-புதுமையான-ஆசிரியர்/article7760681.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அட்டகாசமான க்ரியேட்டிவிட்டி!

 
 
 
masala_2585185f.jpg
 

அமெரிக்காவில் வசிக்கிறார் புகைப்படக்காரர் ஆலன் லாரன்ஸ். அவருக்கு 6 குழந்தைகள். அதில் 2 வயது கடைசி மகன் டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறான்.

‘‘என் குழந்தைக்குத் தன் குறைபாடு தெரியாமல் இருக்கவும் நாங்கள் மனம் தளர்ந்துவிடாமல் அவனை உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளவும் பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறேன். அதில் ஒன்று என் குழந்தையை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுப்பது. குறைபாடுள்ள குழந்தையை எல்லோரும் நிமிர்ந்து பார்க்கும்படிச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் க்ராண்ட் கேன்யன், கோல்டன் கேட் ப்ரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற இடங்களில் பறந்து செல்வது போல போட்டோஷாப் உதவியுடன் புகைப்படங்களை உருவாக்கியிருக்கிறேன்.

படங்களைப் பார்த்த காலண்டர் நிறுவனம் ஒன்று, அத்தனைப் புகைப்படங்களையும் 2016ம் ஆண்டு காலண்டரில் வெளியிட விரும்பியது. இந்த காலண்டர் விற்பனை மூலம் வரும் வருமானம் அனைத்தும் டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காக இயங்கி வரும் 2 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்க இருக்கிறோம்’’ என்கிறார் ஆலன்.

அடடா! அட்டகாசமான க்ரியேட்டிவிட்டி!

ஃப்ளோரிடாவைச்சேர்ந்தவர் 28 வயது கேத்ரின். தன் தோழியுடன் தோட்டத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். காய்ந்த இலையின் சிறு பகுதி கேத்ரின் கண்ணுக்குள் விழுந்துவிட்டது. தன் பையில் இருக்கும் கண் மருந்தை எடுத்து, கண்ணில் விடுமாறு தோழியிடம் கேட்டுக்கொண்டார் கேத்ரின். தோழியும் மருந்தை விட்டார். ஆனால் முதலில் இருந்ததை விட நிலைமை மோசமாகிவிட்டது. கண்கள் புண்ணாகிவிட்டன. இமைகளைத் திறக்கவும் முடியவில்லை. பிறகுதான் கண் மருந்துக்குப் பதிலாக, தவறுதலாக பசையைக் கண்ணில் விட்டிருக்கிறார் என்று தெரிந்தது.

‘‘உடனே மருத்துவரிடம் சென்றேன். அறுவை சிகிச்சை செய்தனர். நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் எனக்கு நிரந்தரமாகப் பார்வை பறிபோய்விட்ட செய்தி இடியாகக் தாக்கியது. சிறு கவனப் பிசகு என் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது’’ என்கிறார் கேத்ரின்.

‘‘கண்களில் ஏதாவது விழுந்துவிட்டால் பதற்றப்படக்கூடாது. சுத்தமான தண்ணீரை விட்டு, கண்களை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் மருந்துகளை மருத்துவர் அனுமதியின்றி கண்களில் விடக்கூடாது. கேத்ரினுக்கு நிகழ்ந்தது ஒரு விபத்து. பசையை கண்ணில் விட்டவுடன் சுத்தம் செய்திருந்தால் பார்வை பறிபோய் இருக்காது’’ என்கிறார் கண் மருத்துவர் பங்கஜ் குப்தா.

உதவி உபத்திரவமாகிவிட்டதே…

இந்தோனேஷியாவின் டானா டோரஜா பகுதி மலையும் காடுமாக இருக்கிறது. இங்கு வசிக்கும் கிராம மக்கள், இறந்த குழந்தைகளை பெரிய மரங்களில் அடக்கம் செய்கிறார்கள். ஓங்கி வளர்ந்திருக்கும் பருத்த மரங்களில் துளைகளை இட்டு, உடலை வைத்து, பனை மரக்குச்சிகளால் அடைத்து விடுகிறார்கள். இப்படி ஒரு மரத்தில் 8 உடல்கள் வரை அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. மரம் உயிருடன் பசுமையாக வளர்ந்து நிற்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இறந்தவர்களுக்காகத் திருவிழாவை நடத்துகிறார்கள். உடல் இல்லாவிட்டாலும் இறந்தவர்கள் தங்களுடனே வசிப்பதாக நம்புகிறார்கள். மரம் இறந்த உடல்களை கிரகித்துக்கொள்ளும் என்று நம்புகிறார்கள்.

விநோத பழக்கங்கள்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அட்டகாசமான-க்ரியேட்டிவிட்டி/article7764704.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: கொக்கு அறுவை சிகிச்சை!

 
masala_2498731f.jpg
 

ஜப்பானின் குராஷிகி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளுக்கான பயிற்சிகள் மருத்துவ மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இங்கே பயிற்சி பெற நினைப்பவர்களுக்கு எழுத்துத் தேர்வு தவிர்த்து, 3 பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. முதல் சோதனை ஒரிகாமி. தாளில் கொக்கு ஒன்றைச் செய்ய வேண்டும். ஜப்பானியர்களுக்கு ஒரிகாமி செய்வது ஒன்றும் கடினம் அல்ல. ஆனால் 1.5 சதுர செ.மீ. அளவுள்ள தாளில் கொக்கு செய்ய வேண்டும். இவ்வளவு சிறிய தாளில் கொக்கு செய்வது என்பது உண்மையிலேயே கடினமான சோதனைதான்.

அடுத்தது, 35 மி.மீ அளவுள்ள ஓர் இறந்த வண்டின் 13 பாகங்கள் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டிருக்கும். எந்த உறுப்புக்கும் சேதம் விளைவிக்காமல், எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, முழு வண்டாக மாற்றிவிட வேண்டும். மூன்றாவதாக 5 மி.மீ. அளவுகளில் ஜப்பானின் புகழ்பெற்ற உணவான சுஷியைச் செய்து வைக்க வேண்டும். 15 நிமிடங்களில் ஒவ்வொரு சவாலையும் மாணவர்கள் செய்து முடிக்க வேண்டும். யார் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார்களோ அவர்களுக்கு இங்கே அறுவை சிகிச்சை பயிற்சியளிக்கப்படுகிறது.

கவனம், ஒருங்கிணைப்பு, நடுக்கமில்லாத கைகள் போன்றவை ஓர் அறுவை சிகிச்சைக்கு இன்றியமையாதவை. அவற்றை எல்லாம் மருத்துவர்களுக்குக் கொண்டு வருவதற்காகவே இந்தப் பரிசோதனைகளை அளிக்கிறோம். 40 மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு. இதில் வண்டின் பாகங்களைச் சரியாக இணைக்க முடியாத மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்வதில்லை என்கிறார்கள் குராஷிகி மருத்துவமனையின் நிர்வாகிகள்.

சவாலான சோதனைகள்தான்!

இல்லாத ஒன்றை இருப்பது போலக் காட்டும் கண்ணாடிகளை உருவாக்கியிருக்கிறார் ஹங்கேரியைச் சேர்ந்த பென்ஸ் அகோஸ்டன். முப்பரிமாணத்தில் சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களில் அச்சடிக்கப்பட்ட 6 லென்ஸ்களை, கண்ணாடி ஃப்ரேம் மீது வைத்துப் பார்த்தால் விதவிதமான காட்சிகளைப் பார்க்க முடியும். நம் மனநிலைக்கு ஏற்றார் போல இந்த லென்ஸுகளைப் பயன்படுத்தி, சந்தோஷமாக இருக்கலாம்.

அதாவது பயணம் செய்யும்போது பாட்டுக் கேட்கிறீர்கள். ஜன்னலுக்கு வெளியே பாடலுக்குத் தொடர்பில்லாத காட்சிகள் புலப்படுகின்றன. ஆனால் இந்தக் கண்ணாடியை மாட்டிக்கொண்டால் பாடலுக்கு ஏற்ற மகிழ்ச்சியான காட்சிகள் கண் முன் தெரியும். நம் சந்தோஷமான மனநிலைக்கு ஏற்ற காட்சிகளைப் பார்த்துக்கொண்டே பயணிக்கலாம். இந்தக் காட்சி வேண்டாம் என்றால் வேறொரு லென்ஸை மாட்டிக்கொள்ளலாம். லென்ஸை மேலும் கீழுமாகச் சுற்றிவிடுவதன் மூலம் வெவ்வேறு காட்சிகள் கிடைக்கும். புற ஊதாக்கதிர்களை இந்த லென்ஸ் வடிகட்டி விடுவதால், சூரியனில் இருந்து வரும் கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

கண்ணாடிக்குள் வண்ணப் படம்!

ஹாங் காங் மிகச் சிறிய நகரம். இங்கே 20 லட்சம் மக்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு குடியிருப்பும் மிக உயரமான கோபுரங்களைப் போல காட்சியளிக்கிறது. 40 மாடிகளைக் கொண்ட மிகப் பெரிய குடியிருப்பு ஒன்றில் 36 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். குடியிருப்புகள் பெரும்பாலும் ஒரே அமைப்புடனும் வண்ணங்களுடனும் காட்சியளிக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக்காரர் ஜாசன் லாங்லே ஹாங் காங் அடுக்கு மாடிகளைப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

’’வீதிகளில் நின்று குடியிருப்புகளைப் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம்! இவ்வளவு வண்ணமயமான அழகான கட்டிடங்களைப் பார்த்ததில்லை. உயரமாகவும் அகலமாகவும் இருப்பதால் கேமராவுக்குள் முழுமையாக இந்தக் கட்டிடங்களைக் கொண்டு வரமுடியவில்லை. தூரத்தில் இருந்து புகைப்படங்கள் எடுத்ததால் கொடியில் தொங்கிக்கொண்டிருந்த துணிகளோ, பால்கனியில் வளர்த்த செடிகளோ துல்லியமாகத் தெரியவில்லை’’ என்கிறார் ஜாசன்.

அடடா!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் எவர்க்ளேட்ஸ் தேசியப் பூங்காவில் மிகப் பெரிய பர்மிய மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 18 அடி நீளம் கொண்ட இதனை 5 பேர் தூக்கினார்கள். 59 கிலோ எடையுடன் இருந்தது. இரவு நேரங்களில் உணவு தேடி வெளியே வரும் இந்த மலைப்பாம்பு, ஒரு தடவைக்கு 36 முட்டைகளை இடக்கூடியது. ஏராளமான மலைப் பாம்பு குட்டிகள் அந்தப் பகுதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அம்மாடி…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கொக்கு-அறுவை-சிகிச்சை/article7502293.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: விலங்கு கேக்!

 
 
masala___2586780f.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கிறார் கேக் நிபுணர் விக்கி ஸ்மித். சமீபத்தில் 100 மணி நேரங்களைச் செலவிட்டு, ஸ்லோத் என்ற விலங்கின் வடிவத்தில் ஒரு கேக்கை உருவாக்கியிருக்கிறார். கேக் என்பதே தெரியாமல் நிஜ ஸ்லோத் போலவே அற்புதமாக இருக்கிறது. ‘‘சாதாரணமாக 40 - 50 மணி நேரங்களில் ஒரு கேக்கை உருவாக்கி விடுவேன். ஸ்லோத் கேக் அதிக வேலை வாங்கிவிட்டது. ஸ்லோத் உடலில் இருக்கும் ரோமங்களைக் கூட நீங்கள் சாப்பிட முடியும். ஒவ்வொன்றையும் துல்லியமாக இதில் கொண்டு வந்திருக்கிறேன். அழிந்து வரக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கிறது ஸ்லோத் இனம். அவற்றைக் காப்பாற்றுவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக இந்த கேக் செய்திருக்கிறேன்.

நவம்பர் மாதம் வனவிலங்கு பாதுகாப்பு கண்காட்சியில் ஸ்லோத் கேக் இடம்பெறுகிறது. கண்காட்சிக்குப் பிறகும் இந்த கேக்கைச் சுவைக்க முடியாது. கேக் செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியிருக்கும். கண்காட்சியில் தூசி, அழுக்கு எல்லாம் படிந்திருக்கும். சுவையாக, கஷ்டப்பட்டுச் செய்திருந்தாலும் கூட ஸ்லோத் கேக் பார்ப்பதற்கு மட்டுமே’’ என்கிறார் விக்கி ஸ்மித்.

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்… அத்தனை அழகு!

கலிஃபோர்னியாவில் ‘17வது கதவு’ என்ற ஒரு திகில் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகப் பயங்கரமான அனுபவத்தை இங்கே பெற முடியும் என்கிறார்கள். இந்த அறைகளுக்குள் ஒரு கற்பனை கதை நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொள்கிறார். அந்தக் கல்லூரியில் நடைபெறும் திகில் சம்பவங்களைப் பார்வையாளர்களுக்கு வழங்குகிறார்கள். ஒவ்வோர் அறையிலும் 90 நொடிகள்தான். ஆனால் பயத்தில் 90 நிமிடங்களாகத் தெரியும் என்கிறார்கள்.

கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் இறந்து போன நாய்கள், பன்றிகள், பேய் வேடம் இட்ட மனிதர்கள், அதிக வெப்பம், அதிகக் குளிர், நறுமணம், காணொளிக் காட்சிகள், அலற வைக்கும் இசை என்று கலங்க வைக்கிறார்கள். செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திகில் அரங்கை இதுவரை 350 பேர் பார்வையிட்டு, பத்திரமாகத் திரும்பியிருக்கிறார்கள். ‘‘30 நிமிடங்களில் பயங்கரத்தின் உச்சத்தைக் கண்டுவிட்டோம். ஒரு அறையில் என்னை யாரோ பிடித்து இழுத்தனர். திடீரென்று சிறிது வெளிச்சம் வந்தபோது ஒரு ரத்தக் காட்டேரி முகம் முழுவதும் ரத்தத்துடன் என்னை இழுப்பது தெரிந்தது. உயிரே போய்விட்டது போல உணர்ந்தேன்.

அங்கிருந்தபோது உயிர் பிழைத்து வெளியே வந்தால் போதும் என்று தோன்றியது. ஆனால் வெளியே வந்த பிறகு, எவ்வளவு அற்புதமான அனுபவம் கிடைத்திருக்கிறது என்று சந்தோஷமாக இருந்தது. இனி வாழ்க்கையில் எதைக் கண்டும் பயமில்லை’’ என்கிறார் ரெபேகா. ‘‘எங்களின் திட்டப்படி எல்லாம் அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் சுவாரசிய மான பயங்கரத்தை அனுபவித்திருக்க முடியும். சில பயங்கரங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். 65 லட்சம் ரூபாயில் திகில் அரங்கை உருவாக்கியிருக்கிறோம்’’ என்கிறார் நிறுவனர் ஹெதர். 1,600 ரூபாயி லிருந்து 2,300 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதுவரை 20 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?

அர்ஜெண்டினாவில் வசிக்கும் இளைய தலைமுறையினர் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதற்குப் பதிலாக ’போலி திருமண விருந்து’ கொடுத்துவிடுகின்றனர். இந்த விருந்தில் மணமக்கள் மட்டுமே போலிகள். விருந்து, நிகழ்ச்சிகள் அனைத்தும் நிஜமானவை. 26 வயது மார்டின் அசெர்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு போலி திருமண விருந்தை நடத்தினார். அது வேகமாக அர்ஜெண்டினா முழுவதும் பரவிவிட்டது. ‘‘போலி திருமண விருந்து மிகவும் வெற்றிகரமான தொழிலாக வளர்ந்துவிட்டது. புதுப் புது இடங்கள், விதவிதமான உணவுகள், பூ அலங்காரம், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்று நிஜ திருமணத்துக்குச் செய்யும் அத்தனை வேலைகளும் இதற்கும் உண்டு. நிஜ திருமணத்துக்கு ஆகும் செலவுகளும் உண்டு.

600 முதல் 700 விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள். ஒருவருக்கு 3,300 ரூபாய் கட்டணமும் வசூலிக்கிறார்கள். திருமண விருந்துகளுக்கு பெண்களே அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்’’ என்கிறார் மார்டின். ‘‘போலி திருமண விருந்தில் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள போட்டி நடக்கும். நண்பர்களுடன் கிண்டல், விளையாட்டு என்று உற்சாகமாக இருக்கும். திருமண வாழ்க்கை என்பது வாழ்நாள் கடமை. அதனால் இளைய தலைமுறையினர் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. போலி திருமண விருந்து எல்லோருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த மகிழ்ச்சியை விட நாங்கள் விரும்பவில்லை’’ என்கிறார் பாப்லோ போனிஃபேஸ்.

1990ம் ஆண்டு அர்ஜெண்டினாவில் 22 ஆயிரம் ஜோடிகள் திருமணம் செய்துகொண்டனர். அவர்களில் 11,642 ஜோடிகள் 2013ம் ஆண்டுக்குள் பிரிந்துவிட்டனர். அதனால் நிஜத் திருமணங்களை விட போலி திருமணத்தில் மகிழ்ச்சி அதிகமாக இருப்பதாக மக்கள் நினைப்பதால், இந்தத் தொழில் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது!

எங்கிருந்துதான் இப்படிப்பட்ட யோசனை உருவாகும்னு தெரியலையே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விலங்கு-கேக்/article7769264.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நடக்கும் மீன்!

 
 
masala_2497647f.jpg
 

ஆழ்கடலில் வசிக்கக்கூடியது ஃப்ராக்ஃபிஷ். ஆங்கிலர் மீன்களுக்கு உறவினர். பவளப்பாறைகள் அருகில் வசிப்பதால், அதற்கேற்றவாறு நிறங்களைப் பெற்றுள்ளன. இதனால் கண்களுக்குச் சட்டென்று தெரிவதில்லை. மெதுவாகவே இயங்கக்கூடியவை. உடல் முழுவதும் முடிகள் போன்ற உணர்கொம்புகளைப் பெற்ற ஃப்ராக்ஃபிஷ், தற்போது கடல் ஆராய்ச்சியாளர்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. தரையில் மெதுவாக நடந்து வருவதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

மீன்கள் பறக்கின்றன, நீந்துகின்றன, நடக்கின்றன!

சாதாரணமாக மக்கள் ‘நான் உன் வலியை உணர்கிறேன்’ என்று ஆறுதல் அளிக்கும் விதத்தில் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே பிறரின் வலிகளை உணர்கிறார் ஜோயல் சலினாஸ். அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் நரம்பியல் நிபுணராக இருக்கிறார் ஜோயல். சிறிய வயதில் இருந்தே பிறரின் வலிகளை உணரக்கூடிய ஆற்றல் இவருக்கு வந்துவிட்டது. ’மிரர் டச் சினெஸ்தீசியா’ (mirror touch synesthesia) என்பது மிக மிக அரிய வகை நோய் என்கிறார்கள் மருத்துவர்கள். கண்ணாடியில் உருவத்தைப் பார்ப்பது போல, ஒருவரைத் தொடுவதன் மூலம் அவரின் வலியை உணர்ந்துகொள்ளும் நோய் இது.

சந்தோஷமாக இருப்பவர்கள் யாராவது ஜோயலைக் கட்டிப் பிடித்தால் அவரும் சந்தோஷமாக இருப்பார். அதுவே வலியுடையவர்கள் கட்டிப் பிடித்தால் ஜோயலும் அந்த வலியை உணர்ந்துவிடுவார். கஷ்டத்தை அனுபவிப்பார். அதாவது நோயாளியின் வலி அளவுக்கு உணர மாட்டார், ஆனால் ஓரளவு வலியை அவரால் உணர்ந்துவிட முடியும். உலகிலேயே 1-2 சதவிகித மனிதர்களுக்கே இந்த நோய் இருக்கிறது. ’’நான் மருத்துவர் என்பதால் இந்த நோய் எனக்கு உதவவே செய்கிறது. என்னிடம் வரும் நோயாளிகளின் பிரச்சினைகளை அவர்கள் சொல்லாமலே உணர்ந்துகொள்ள முடிகிறது’’ என்கிறார் ஜோயல்.

ஐயோ… இப்படியெல்லாம் கூட ஒரு நோயா…

செவ்வாய் கிரகத்துக்குப் பயணம் செய்ய இருக்கிறார் 36 வயது சோனியா வான் மீட்டர். அமெரிக்காவின் விர்ஜினியாவில் வசிக்கிறார் ஜாசன் ஸ்டான்ஃபோர்ட். இவருடைய மனைவி சோனியா. கணவரையும் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு, செவ்வாய் கிரகம் புறப்பட இருக்கிறார் சோனியா. இது ஒரு வழிப் பயணம். திரும்பி பூமிக்கு வரும் வாய்ப்பு இல்லை. செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலைமைகளை ஆராய்வதற்காக மனிதர்கள் அனுப்பப்பட இருக்கிறார்கள். ’’எப்படி மனைவியை அனுப்புகிறீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். மனைவியாக இருந்தாலும் அவரது எண்ணங்களையும் லட்சியங்களையும் மதிப்பதுதான் நல்லது.

செவ்வாய் கிரகத்துக்கு மரணத்தை எதிர்நோக்கி அவர் செல்லவில்லை. புதிய கிரகத்தில் வாழ்வதற்காகத்தான் செல்கிறார். நானும் குழந்தைகளும் அவரைப் பிரிந்து இருப்பது கஷ்டம்தான்… இருந்தாலும் இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை அங்கீகரிக்கத்தான் வேண்டும்’’ என்கிறார் ஜாசன். 2 லட்சம் விண்ணப்பங்களில் இருந்து 100 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்தனர். இதிலிருந்து 24 பேர் பகுதி பகுதியாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டிலிருந்து சோனியாவுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன. ’’ராக்கெட்டில் செல்வது என் கனவாக இருந்தது. தற்போது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் திரும்பி வரமுடியாதுதான். ஆனால் ஒரு சாதனை பயணத்தில், ஆராய்ச்சியில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அங்கீகாரம்! எல்லோரும் பிறக்கிறோம், மடிகிறோம். அதில் நான் சற்று வித்தியாசமாக இருக்க விரும்புகிறேன். நாங்கள் சாதாரணமாக இருந்தபோது திருமணம் செய்துகொண்டோம். ஆனால் இன்று அற்புதமான தருணத்தில் இருக்கிறோம்’’ என்கிறார் சோனியா.

செவ்வாய் கிரகத்தில் சாதிக்க வாழ்த்துகள் சோனியா!

நியுயார்க்கில் உள்ள பஃபலோ நகரில் 12 அடி உயரத்துக்குப் பனிக் குவியல் 8 மாதங்களாக உருகாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்வோவெம்பர் புயல் வீசியபோது, நகர் எங்கும் பனி யால் மூடப்பட்டது. சாலைகளில் உறைந்திருந்த பனிகளை எல்லாம் அப்புறப்படுத்தி, காலியான இடங்களில் கொட்டிவிட்டனர். அந்தப் பனிக்குவியல் மீது மண், புற்கள், குப்பைகள் எல்லாம் உருவாகி விட்டன. ஆனாலும் இன்னும் பனி உருகாமல் அப்படியே இருக்கிறது. சூரியக் கதிர்கள் மண்ணையும் குப்பைகளையும் தாண்டி உள்ளே செல்ல முடியாததால் பனி அப்படியே உருகாமல் 8 மாதங்களாக இருக்கிறது என்கிறார் வானிலை ஆய்வாளர் மார் வைசோகி.

ஆச்சரியம்தான்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நடக்கும்-மீன்/article7499003.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அதிசய ஆந்தை

masala_2495404f.jpg
 

ஆந்தைகள் பொதுவாக இரவு நேரங்களில்தான் உணவு தேடிக் கிளம்பக்கூடியவை. லித்துவேனியா காட்டில் புகைப் படங்கள் எடுக்கச் சென்றார் யுஜெனிஜுஸ் கவாலியாஸ் காஸ். அவருக்கு 15 அடி தூரத்தில் ஒரு பெரிய ஆந்தை உணவை வேட்டையாடுவதற்காகக் காத்திருந்தது. மஞ்சள் நிறக் கண்களை அசைக்காமல் காரியத்தில் குறியாக இருந்தது. உடனே புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தார் யுஜெனிஜுஸ். ஒரே ஒரு முறை மட்டும் திரும்பி அவரைப் பார்த்துவிட்டு, மீண்டும் இரையைப் பார்த்தபடி இருந்தது.

‘‘என்னுடைய 40 ஆண்டு கால வாழ்க்கையில் இப்படி ஒரு ஆந்தையை நான் பார்த்ததே இல்லை. சாதாரணமாக மனிதர்களைக் கண்டதும் வேறு இடத்துக்குப் பறந்து சென்றுவிடும். 10 நிமிடங்கள் வரை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். தூரத்தில் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் அசையாமல் வேட்டைக்குக் காத்திருந்தது. என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை’’ என்று வியக்கிறார் யுஜெனியுஸ்.

அட! ஆச்சரியமா இருக்கே!

பெல்ஜியத்தில் வசிக்கும் 31 வயது ஆங்கிலோ வல்கென்போர்க், ஸ்லோவேனியாவில் உள்ள காடுகளில் வசித்து வருகிறார். நல்ல வேலை, மனைவி, குடும்பம் என்று வாழ்க்கை நடத்தி வந்தாலும் மனம் திருப்தியடையவில்லை. 3 வாரப் பயணமாகக் காட்டுக்குச் சென்றார். திரும்பி வந்தபோது, அவரது மனைவி விவாகரத்துக் கேட்டு விண்ணப்பித்திருந்தார். வல்கென்போர்க்குக்கு அதிர்ச்சியாக இருந்தது. மன அழுத்தத்துக்கு ஆளானார். நகர வாழ்க்கைப் பிடிக்காமல் போய்விட்டது.

ஓராண்டுக்குப் பிறகு, காடுகளிலேயே நிரந்தரமாக வசித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். வீட்டை விற்றார். தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டார். காட்டில் குடியேறினார். சவால் நிறைந்த காட்டு வாழ்க்கை கடினமாக இருந்தாலும் நிம்மதியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார். கடந்த 4 ஆண்டுகளாக காட்டில் வசித்து வருவதால், காட்டில் வாழ்வதற்குரிய அத்தனை நுணுக்கங்களையும் அறிந்திருக்கிறார். பழங்கள், பருப்புகள், தவளை போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கிறார். சூரிய ஒளியில் இயங்கும் செல்போனைப் பயன்படுத்துகிறார். காட்டின் எல்லையில் ஒரு காரை வாங்கி வைத்திருக்கிறார். அவசரம் என்றால் காரை எடுத்துக்கொண்டு நகருக்குள் சென்று திரும்புகிறார்.

‘‘இங்கே ஏமாற்றம், வஞ்சகம் எதுவும் இல்லை. இருக்கும் இடத்தையும் உணவையும் எல்லா உயிர்களும் சமமாகப் பகிர்ந்துகொள்கிறோம்’’ என்கிறார் வல்கென்போர்க்.

ம்… மனித மனம் விநோதமானது…

சீனாவின் ஸிஜியாங் பகுதியில் வசித்து வருகிறார் ஸாங். சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக 11 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, குடும்பத்தோடு காரில் கிளம்பினார். பணத்தைப் பத்திரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு சாதாரண கறுப்பு பிளாஸ்டிக் பையில் போட்டு, பின் இருக்கைக்குப் பின்புறம் வைத்துவிட்டார். குப்பையுள்ள பை போலத் தோற்றத்தை உருவாக்கிவிட்டார்.

சில மணி நேரங்களுக்குப் பிறகு சர்வீஸ் ஸ்டேஷனில் வண்டி நின்றது. பேரனுக்காக ஏராளமான தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தார். அடுத்த சர்வீஸ் ஸ்டேஷன் வருவதற்குள் பேரன் அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, குப்பைகளை ஒரு கறுப்பு கவரில் போட்டு பின்பக்கம் வைத்திருந்தான். வண்டி நின்றதும் குப்பையைத் தொட்டியில் போட்டுவிட்டான். கார் கிளம்பிவிட்டது. திடீரென்று ஸாங் வண்டியை நிறுத்தி, பணம் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்தார். ஆனால் பணத்துக்குப் பதில் குப்பைதான் இருந்தது. உடனே சர்வீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து, ஒவ்வோர் இடமாகத் தேடச் சொன்னார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு, ஒரு சர்வீஸ் ஸ்டேஷனில் பணம் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே சென்று பணத்தைப் பெற்றுக்கொண்டு, திரும்பினார்.

பத்திரமா திருப்பிக் கொடுத்த நல்ல மனிதர்கள் வாழ்க…

பிரான்ஸில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் மனிதனின் வெட்டுப் பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பல் சுமார் 5,50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனுடையது என்று கண்டறிந்திருக்கிறார்கள். இதுவரை ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மனிதப் பல் இதுதான். 1907ம் ஆண்டு 6 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் தாடை எலும்பு கிடைத்தது. தற்போது கிடைத்திருக்கும் பல் ஆணுடையதா, பெண்ணுடையதா என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தப் பல் மூலம் மனிதனைப் பற்றிய இன்னும் பல விஷயங்கள் உலகத்துக்குத் தெரியவரலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அடேங்கப்பா! எவ்வளவு பழைய பல்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அதிசய-ஆந்தை/article7491842.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பைன் மரம் தந்த சோகம்

 
masala_2589509f.jpg
 

சியான் மேஸ் ராணுவ வீரர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா தேசியப் பூங்கா மீது 32 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்திருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் பூங்காவில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் சியான். அப்பொழுது ராட்சச பைன் மரக் காய் ஒன்று அவர் தலையில் விழுந்தது. 7 கிலோ எடை கொண்ட காய் விழுந்ததில் சியானின் மண்டை உடைந்துவிட்டது. சட்டென்று சுயநினைவை இழந்துவிட்டார். மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன. உடைந்த மண்டை ஓட்டின் ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. மருத்துவர்கள் சியானின் உயிரைக் காப்பாற்றிவிட்டனர். ஆனாலும் மூளை பாதிக்கப்பட்டதால் ஞாபக சக்தியை நிரந்தரமாக இழந்துவிட்டார், மன அழுத்தத்துக்கு ஆளாகிவிட்டார். மீண்டும் ராணுவ வேலைக்குச் செல்ல இயலவில்லை. மருத்துவச் செலவுகள் அதிகமாகிவிட்டன. இன்னும் சில அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கின்றன. அதனால் சியான் 32 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, பூங்கா மீது வழக்கு தொடுத்துவிட்டார். ‘‘ஒரு பைன் மரக் காயால் சியானின் மூளை பெருமளவில் பாதிக்கப்பட்டுவிட்டது. பூங்காவில் பைன் மரக் காய்கள் விழக்கூடும் என்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படவில்லை.

பைன் மரங்களுக்கு அடியில் யாரும் உட்காரக்கூடாது என்ற கட்டுப்பாடு கூட விதிக்கப்படவில்லை. அதனால் சியான் தொடுத்துள்ள வழக்கு மிகவும் நியாயமானது. இந்தப் பூங்காவுக்குச் சுற்றுலாப் பயணிகளும் பள்ளி மாணவர்களும் வந்து செல்கின்றனர். இனிமேலாவது பூங்கா நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் சியானின் வழக்கறிஞர்.

அடக் கொடுமையே… அங்குமா இவ்வளவு அஜாக்கிரதை…

ஜிலின் மாகாணத்தில் வசிக்கிறார் 38 வயது லியு ஸுடோங். தான் பார்த்து வந்த வேலையில் அவருக்குச் சந்தோஷமில்லை. ஒருநாள் பல் குத்தும் குச்சியைக் கையில் வைத்து யோசித்துக்கொண்டிருந்தபோது, குச்சிகளை வைத்து சிற்பங்களை உருவாக்கும் யோசனை உதித்தது. பல்வேறு விதமான ஓவியக் கலைகளையும் ஆன்லைனில் பார்த்து, நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

தன் வேலையை ராஜினாமா செய்தார். 20 ஆயிரம் ரூபாய்க்கு பல் குத்தும் குச்சிகளை வாங்கினார். 5 லட்சம் குச்சிகளை வைத்து மூன்றே மாதங்களில் அட்டகாசமான குதிரையை உருவாக்கி விட்டார். ’’ஆரம்பத்தில் எனக்குச் சரியாக வரவில்லை. தவறுகளில் இருந்து சரியான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைத்திருக்கிறது. 3 மீட்டர் நீளத்தில் 1 மீட்டர் அகலத்தில் 170 கிலோ எடையில் 3டி குதிரை சிற்பம் எல்லோரையும் கவர்ந்துவிட்டது. இது பிறவியில் இருந்தே எனக்குள் இருக்கும் திறமை என்று சொல்ல மாட்டேன்.

ஒரு ஆர்வத்தில் கற்றுக்கொண்டதை, ஓரளவு நன்றாகச் செய்திருக்கிறேன் என்று மட்டுமே சொல்லிக்கொள்வேன்’’ என்கிறார் லியு.

சீனாவின் கலக்கிட்டீங்க லியு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பைன்-மரம்-தந்த-சோகம்/article7777099.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒபாமா விளையாட்டு!

 
 
masala_2591612f.jpg
 

“இதுவரை நாங்கள் சென்ற திருமணங்களில் மிக அற்புதமான திருமணம் இதுதான்!’’ என்றார்கள் விருந்தினர்கள்.

கலிஃபோர்னியாவில் கோல்ஃப் மைதானம் அருகில் ஒரு திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியைப் படம் பிடித்த வீடியோகிராபர், பக்கத்து மைதானம் பக்கம் கேமராவை திருப்பினார். அங்கே அமெரிக்க அதிபர் ஒபாமா விளையாடிக்கொண்டிருந்தார். தன் பக்கம் கேமரா திரும்பியதை ஒபாமா கவனித்தார். விளையாட்டை முடித்துவிட்டு, திருமணம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். மணமக்களும் திருமணத்துக்கு வந்திருந்தவர்களும் அழையாமல் வந்த அதிபரைக் கண்டு உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். மணமக்களை வாழ்த்தி, புகைப்படங்கள் எடுத்த பிறகு கிளம்பினார் ஒபாமா.

அரசியல் விளையாட்டுகளுக்கு மத்தியில் விளையாடவும் நேரம் இருக்கா உங்களுக்கு!

கனடாவில் வசிக்கும் நிகோல், வித்தியாசமான நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் பாதி நரி, பாதி நாய் என்று கலந்த புதுவகை இனம். நரியும் நாயும் இணைந்து மிக அழகான நாயாக உருவாகியிருக்கிறது. போம் போம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாய்க்கு விதவிதமாக ஆடைகளை அணிவித்து, புகைப்படங்கள் எடுத்து வருகிறார் நிகோல். கேமராவை பார்த்தவுடன் போம் போம் அட்டகாசமாக சிரிப்பதுதான் மிக ஆச்சரியமானது. நாய்கள் தொடர்பான பல்வேறு பொருட்களுக்கு விளம்பரம் செய்கிறது போம் போம். விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படுகின்றன. ‘நான் ஒரு பொமரேனியன். நான் ஒரு நரி. நான் ஒரு ஃபாக்ஸ்ரேனியன்’ என்று ஃபேஸ்புக்கில் போம் போம் தன்னைப் பற்றி குறிப்புகளைக் கொடுத்திருக்கிறது! கரடி பொம்மைகளுடன் போஸ் கொடுப்பதென்றால் போம் போமுக்கு ஆர்வம் அதிகம்.

அடடா! அற்புதம்!

இன்றைய அவசர உலகில் பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபட ரஷ்யாவில் ‘டேபோஷ்’ என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது ஓர் அறையில் தொலைக்காட்சிப் பெட்டி, அலமாரி, அலங்காரப் பொருட்கள், மேஜை எல்லாம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். கவச ஆடையை அணிந்துகொண்டு, ஒரு பெரிய சுத்தியலுடன் அறைக்குள் செல்ல வேண்டும். விரும்பும் வரை பொருட்களை சுத்தியலால் அடித்து நொறுக்க வேண்டும். இப்படிப் பொருட்களை நொறுக்கும்போது மன அழுத்தம் குறைந்து, சாதாரணமாகி விடுவார்கள். உடைத்திருக்கும் பொருட்களின் அளவுக்கு ஏற்ப 10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். மாஸ்கோவில் ஆரம்பித்த இந்தத் திட்டம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த இந்தப் பொருட்களை நொறுக்க விரும்புகிறேன் என்று சொன்னால், அவற்றை மட்டும் அறையில் வைத்தும் கொடுக்கிறார்கள். வசதிக்கு ஏற்றவாறு உடைத்து நொறுக்க வேண்டியதுதான். நொறுக்கும்போது கூடுதல் சுவாரசியத்துக்கு பொருட்கள் உடைவது போன்ற ஒலிகளையும் ஒலிபரப்புகிறார்கள். மனநல மருத்துவர் யுரி அடமோவ்ஸ்கி, ‘’மன அழுத்தத்தை இப்படி வெளியேற்றி விடுவது உடலுக்கு நல்லதுதான். மன அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டால் பிற்காலத்தில் பெரிய உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம்’’ என்கிறார்.

நோயை வைத்து எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள்…

நியூயார்க்கைச் சேர்ந்த உணவு விடுதியின் உரிமையாளர் விக் ரோபே, 13.5 கிலோ எடை கொண்ட மெக்சிகன் உணவை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தால், தன்னுடைய விடுதியின் லாபத்தில் இருந்து 10 சதவிகிதத்தை உங்களுக்கு அளிப்பார், அத்துடன் வாழ்நாள் முழுவதும் இலவசமாக அந்த விடுதியில் சாப்பிட்டுக்கொள்ளலாம். அரிசி, இறைச்சி, பீன்ஸ், சீஸ் எல்லாம் கலந்து செய்யப்பட்டு இருக்கும் இந்த உணவை மிளகுச் சாற்றுடன் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இந்தச் சவால் அத்தனை எளிதானதல்ல. இதுவரை யாரும் சாப்பிட்டு ஜெயித்ததில்லை. சாப்பிடுவதற்கு முன்பே, உணவால் ஏதாவது உடல் நலத்துக்குத் தீங்கு ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பல்ல என்பதையும் சொல்லிவிடுகிறார்கள்.

முடியாத விஷயத்தைச் செய்யச் சொல்வதில் என்ன சவால்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒபாமா-விளையாட்டு/article7783514.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மிளகாய் உண்பவர்!

 

 
 
 
masala_2592523f.jpg
 

சீனாவின் ஸெங்ஸோவ் பகுதியில் வசிக்கிறார் லி யங்ஸி. அவர் தோட்டத்தில் 8 விதமான பழங்களை விளைவிக்கிறார். அத்தனையும் மிளகாய் பழங்கள்.

‘சில்லி கிங்’ என்று அழைக்கப்படும் லி யங்ஸி, தினமும் 2.5 கிலோ மிளகாய்களைச் சாப்பிடுகிறார்.

‘‘இந்தப் பகுதியில் சில்லி கிங் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. காலையில் எழுந்து மிளகாய்ச் செடியை வைத்துதான் பல் துலக்குவேன். காலை முதல் இரவு வரை 2.5 கிலோ மிளகாய்களைச் சாப்பிட்டு விடுவேன். சிறிய வயதில் இருந்தே எனக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. உணவிலும் அதிக மிளகாய்களைச் சேர்த்துக்கொள்வேன்.

மிளகாய் இல்லாவிட்டால் சுவையே கிடையாது. உணவில் சேர்த்தது போக மீதி மிளகாய்களை, நொறுக்குத் தீனி போல போகும்போது, வரும்போது கொறித்துவிடுவேன். எனக்கு மட்டுமே இந்தச் சக்தி இருக்கிறது. என்னைப் போல முயற்சி செய்த என் மகனை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது. அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வேன். மற்ற மனிதர்களைப் போல சாதாரணமாகத்தான் இருக்கிறேன்’’ என்கிறார் லி யங்ஸி.

படிக்கும்போதே கண்கலங்குகிறதே…

விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் மிகப் பெரிய அடியை எடுத்து வைத்திருக்கிறார்கள். உறைய வைக்கும் குளிரில் மூன்று வயது குழந்தையின் உடலைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் இறந்தவருக்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பு உருவானால், இந்த உடலை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்காக மாத்ரின் நாவோரட்போங் என்ற குழந்தையின் உடல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தாய்லாந்து தம்பதியரின் மகளான மாத்ரின் மூளை புற்றுநோயால் இறந்து போனாள். இன்றைய காலகட்டத்தில் மரணம் அடைந்தவர்களை உயிர்ப்பிக்கும் வசதி இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு வாய்ப்பு உருவாகும்போது மாத்ரினையும் உயிர்ப்பிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மாத்ரினின் அம்மாவும் அப்பாவும் மருத்துவத் துறையச் சேர்ந்தவர்கள் என்பதால் இதற்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.

‘‘என் முதல் குழந்தை பிறந்த உடன் கர்ப்ப பையை எடுக்க வேண்டியதாகிவிட்டது. சோதனைக் குழாய் மூலம் மாத்ரின் பிறந்தாள். ஒருகாலத்தில் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பிறப்பது சாத்தியமில்லாத விஷயமாக இருந்தது. இன்று அது சர்வசாதாரணமாகிவிட்டது. அதேபோல எதிர்காலத்தில் இறந்த உடல்களை உயிர்பிக்கலாம் என்று நம்புகிறேன்’’ என்கிறார் மாத்ரினின் அம்மா. அமெரிக்காவில் இருந்து வந்த நிபுணர்கள் குழு மார்த்ரின் இறந்த உடன், உடலில் உள்ள நீர்ச் சத்துகளை வெளியேற்றி, மருந்துகளைச் செலுத்தியது.

இதன் மூலம் திசுக்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சவப்பெட்டியில் உடலை வைத்து எடுத்துச் சென்றுவிட்டது. மாத்ரின் 134-வது உடலாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறாள். மாத்ரினின் அம்மாவும் அப்பாவும் தங்கள் உடல்களையும் பாதுகாக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் மாத்ரின் உயிருடன் வர நேர்ந்தால், அவளைப் பார்த்துக்கொள்வதற்கு அம்மாவும் அப்பாவும் அவசியம் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மாத்ரின் குடும்பம் மீண்டும் ஒன்று சேரட்டும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மிளகாய்-உண்பவர்/article7787477.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: புன்னகை பூக்க வைக்கும் பெய்ஜு

 
 
birthday_2593441f.jpg
 

டெக்ஸாஸில் வசிக்கும் பெய்ஜ் சேனலுக்கு பிறந்தநாள் கொண்டாட் டங்கள் என்றால் மிகவும் விருப்பம். ஏழைக் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் விழாக்களை ஏற்பாடு செய்து, குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தருகிறார். ஓராண்டுக்கு 180 பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். “ஒருமுறை பத்திரிகையில் குழந்தைகள் பிறந்தநாள் விழாக்கள் பற்றி படித்தேன். வயிற்றில் இருக்கும் என் குழந்தையின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று கற்பனை செய்தேன். இன்னொரு பத்திரிகையில் ஹைதியில் குழந்தைகள் உணவு, உடை, இருப்பிடம் இன்றி தவிப்பதைப் படித்தேன். என் மனநிலை மாறிவிட்டது. உலகத்தில் எத்தனையோ கோடி குழந்தைகள் உணவும் வீடும் இன்றி தவிக்கிறார்கள். அவர்களின் கஷ்டத்தைப் போக்குவதற்கு என்னிடம் எந்த மந்திர சக்தியும் இல்லை. ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து, அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மாற்ற எண்ணினேன். உடனே காரியத்தில் இறங்கினேன். என் கணவரும் நானும் குழந்தைகளைக் கண்டுபிடித்து, நிதி திரட்டி, பிறந்தநாள் விழாக்களை நடத்த ஆரம்பித்தோம். மூன்றே ஆண்டுகளில் நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, மினியாபொலிஸ், சிகாகோ உட்பட 8 நகரங்களுக்கு எங்களின் பிறந்தநாள் விழாக்கள் பரவிவிட்டன” என்கிறார் பெய்ஜ்.

குழந்தைகளின் முகத்தில் புன்னகை பூக்க வைக்கும் பெய்ஜுக்கு வாழ்த்துகள்!

சீனாவில் வசிக்கிறார் 62 வயது கோங் ஸுன்ஹுய். ஏஎல்எஸ் என்ற நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தலையைத் தவிர, உடலின் மற்ற பாகங்கள் எதுவும் இயங்காது. சக்கர நாற்காலியில்தான் வாழ்க்கை. 1,50,000 வார்த்தைகள் கொண்ட சுயசரிதையைத் தன் கண்கள் மூலம் எழுதியிருக்கிறார் கோங்! 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்களால் இயங்க வைக்கக்கூடிய கருவி ஒன்றை கம்ப்யூட்டருடன் இணைத்துக் கொடுத்திருக்கிறார்கள் கோங் குடும்பத்தினர். கண்களை சிமிட்டினால் ஓர் எழுத்து திரையில் தெரியும். இப்படிக் கண்களால் டைப் செய்வது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வேகம் அதிகரித்தது. காலை 8 மணி முதல் 11 மணி வரை கண்களால் டைப் செய்வார். ஒரு நாளைக்கு 3 ஆயிரம் வார்த்தைகள். கடந்த நவம்பர் மாதம் நூறு கோடிக்கும் அதிகமான முறை கண்களை சிமிட்டி, 1,50,000 வார்த்தைகள் கொண்ட புத்தகத்தை எழுதி முடித்துவிட்டார்! இதுவரை நரம்பு நோய் தாக்கப்பட்டவர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரையே உயிருடன் இருந்திருக்கிறார்கள். ஆனால் கோங் 12 ஆண்டுகள் வரை இருப்பதோடு, ஒரு புத்தகத்தையும் எழுதி முடித்துவிட்டார்! “என் வாழ்க்கை என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை தருவதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே புத்தகம் எழுதினேன்.” என்கிறார் கோங். ஆன்லைனில் கண்களால் எழுதிய புத்தகம் என்று விளம்பரம் செய்த உடனேயே, ஆயிரம் புத்தகங்களுக்கு ஆர்டர் வந்துவிட்டது.

ஆரோக்கியமானவர்களால் கூட எளிதில் செய்ய முடியாத காரியம்… கிரேட்

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-புன்னகை-பூக்க-வைக்கும்-பெய்ஜு/article7792086.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: கிளி மனிதன்!

masala_2594308f.jpg
 
 

பிரிட்டனைச் சேர்ந்த 56 வயது டெட் ரிச்சர்ட்ஸ், தான் வளர்க்கும் செல்லக் கிளிகள் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருக்கிறார். அதனால் தன்னையும் கிளி யைப் போலவே மாற்றிக் கொண்டிருக்கிறார். மூக்கை அலகு போலவும் முகத்தில் கிளியைப் போன்று வண்ணங் களையும் டிசைன்களையும் டாட்டூவாகக் குத்தியிருக் கிறார். வெளியே நீட்டிக் கொண்டிருந்த காதுகளை 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நீக்கியிருக்கிறார். தற்போது தானும் தன்னுடைய கிளிகளும் ஒரே சாயலில் இருப்பதாகச் சொல்கிறார். இவை தவிர 110 டாட்டூகள், 50 இரும்புக் கம்பிகளையும் வளையங்களையும் பொருத்தியிருக்கிறார்.

‘‘எங்கள் வீட்டில் எல்லி, டீகா, டிம்னா, ஜேக், புபி போன்ற கிளிகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. அவற்றில் நான் மட்டுமே வித்தியாச மாகத் தெரிந்தேன். அதனால்தான் அவற்றைப் போலவே என்னை மாற்றிக்கொண்டேன். முன்பை விட இப்பொழுது என்னை நான் அதிகம் நேசிக்கிறேன். கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். மிக மிக மகிழ்ச்சியாக வாழ்கிறேன். உலகத்தில் என்னைப் போல் நான் ஒருவனே இருக்கிறேன். குழந்தைகள் எல்லாம் என்னைப் பார்த்து பயந்து ஓடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆர்வத்துடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்’’ என்கிறார் ரிச்சர்ட்ஸ். பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறவர்கள் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

என்ன செய்தாலும் நீங்க கிளியாக மாற முடியாது ரிச்சர்ட்ஸ்…

அமெரிக்காவில் வாழும் 27 வயது க்வின் டுவானேவுக்குக் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. 4 நட்சத்திர விடுதியில் மாலை திருமண விருந்து. இந்த விருந்துக்கு வந்திருந்தவர்கள் மணமக்களின் உறவினர்களோ, நண்பர்களோ இல்லை. வீடற்ற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

‘‘என் திருமண விருந்து மிகப் பிரமாதமாக நடைபெற வேண்டும் என்று குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். நான்தான் ஏழைகளுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். 120 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர். மிகச் சுவையான, வித்தியாசமான உணவுகளைத் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாகச் சுவைத்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரின் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சியைக் கண்டேன். ஆழ் மனத்தில் இருந்து எங்களை உண்மையான மகிழ்ச்சியோடு வாழ்த்தினார்கள். உலகிலேயே மிக உயர்வான செயல் ஏழைகளுக்கு உதவுவதுதான் என்று நான் உணர்ந்துகொண்டேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத திருமண விருந்து!’’ என்கிறார் க்வின். இந்த விருந்துக்காக 23 லட்சம் ரூபாயைச் செலவு செய்திருக்கிறார்.

‘‘எவ்வளவு நல்ல மனம் படைத்த பெண்ணை நான் மனைவியாகப் பெற்றிருக்கிறேன்’’ என்று பெருமிதம் கொள்கிறார் லேண்டன். முதலில் வீட்டில் உள்ளவர்களும் நண்பர்களும் இந்த விருந்தை ரசிக்கவில்லை என்றாலும் பிறகு மன நிறைவோடு ஏற்றுக்கொண்டனர். க்வினின் சகோதரியும் தன் திருமண விருந்தை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்திருக்கிறார்.

கொடுப்பதே இன்பம்!

டான்ஜா ஜான்கோவிக் செர்பியாவில் வசித்து வருகிறார். லியோ என்ற செல்ல நாய் மீது அளவற்ற அன்பு செலுத்தி வருகிறார். லியோவுக்குத் திடீரென்று கடுமையான நோய் தாக்கிவிட்டது. நாயின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஏராளமாகச் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். சேமிப்பு முழுவதையும் லியோவுக்காகச் செலவு செய்துவிட்டார். வீட்டில் இருந்த விலை மதிப்பு மிக்கப் பொருட்களையும் விற்றுவிட்டார். அடுத்த கட்ட சிகிச்சைக்காகத் தன்னுடைய வீட்டை விற்பனை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.

‘‘என் லியோவுக்காக இந்த வீட்டை விற்பனை செய்கிறேன். யாராவது உடனடியாக வீட்டை வாங்கி, எனக்கு உதவுங்கள். அறுவை சிகிச்சை, பிறகு குறிப்பிட்ட காலம் வரைக்குமான மருத்துவச் செலவுகளுக்கு வீட்டை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை நம்பி இருக்கிறேன். என் லியோ முழுமையாகக் குணமாகி, வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம். பணத்தை என்னால் எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும். லியோவின் உயிரைக் காப்பாற்றுவதுதான் முக்கியம்’’ என்கிறார் டான்ஜா. இணையத்தில் இவரின் கோரிக்கையைப் பார்த்து ஏராளமானவர்கள் நன்கொடைகளை அளித்து விட்டனர். தற்போது அறுவை சிகிச்சைக்கு இந்தப் பணம் போதுமானது.

அதிசய மனிதர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-கிளி-மனிதன்/article7794513.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பொம்மைகளாக மாறிய தம்பதி!

 
 
masala_2595612f.jpg
 

பிரான்ஸை சேர்ந்த ஒரு தம்பதி தங்களை கென், பார்பி பொம்மைகளைப் போல மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 15 அறுவை சிகிச்சைகள் செய்து, உயிருடன் நடமாடும் கென், பார்பியாக வலம் வருகிறார்கள். தங்களுடைய பெயர்களையும் சட்டப்படி கென், பார்பி என்று மாற்றிவிட்டார்கள். 20 வயது அனஸ்டாசியா ரென்ஸோஸும் 23 வயது க்வெண்டின் டெஹாரும் 2013-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தனர். இருவருக்குமே பொம்மைகளைப் போன்று தங்கள் உருவத்தை மாற்றிக்கொள்வதில் ஆர்வம் இருந்தது. ‘‘நான் பிறந்தது ரஷ்யாவில், வளர்ந்தது பிரான்ஸில். என்னிடம் 100 பார்பி பொம்மைகள் இருக்கின்றன. நான் ஒரு கென் பொம்மையைப் போலிருப்பவரைத்தான் திருமணம் செய்ய நினைத்திருந்தேன்.

க்வெண்டின் டெஹார் அப்படியே இருந்தார். அவரும் ஒரு நிஜ பார்பியைத்தான் திருமணம் செய்ய நினைத்திருந்தார். இருவரின் விருப்பங்களும் ஒத்துப் போனதால் திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவருமே குழந்தையில் இருந்தே பொம்மைகளை விரும்பியிருக்கிறோம். பொம்மைகள் பயன்படுத்தும் ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்திருக்கிறோம். 17 வயதில் முதல் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு உறுப்பாகச் சரி செய்து, மூன்று ஆண்டுகளில் நிஜ பார்பியாக மாறிவிட்டேன். இதுவரை 65 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம். அவரவர் உருவத்தை அழகாக மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் மிக சந்தோஷமாக இருக்கிறோம்’’ என்கிறார் அனஸ்டாசியா.

இவ்வளவு மெனக்கெட்டு பொம்மைகளாக வலம் வர வேண்டுமா?

ஸ்பெயினில் இருக்கும் லா எஸ்ட்ரெல்லா கிராமத்தில் கடந்த 45 வருடங்களாக மார்ட்டினும் சின்ஃபோரோசா கொலோமெரும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்களுடன் 3 நாய்கள், 4 கோழிகள், 1 சேவல், 25 பூனைகள் மற்றும் தேனீக்கள் வசித்து வருகின்றன. ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நகரத்துக்குத்தான் செல்ல வேண்டும். ஒருகாலத்தில் இந்தக் கிராமத்தில் நிறைய மனிதர்கள் வசித்தனர். தேவாலயம், பள்ளிகள், மருத்துவமனை போன்றவையும் இருந்தன. 1883-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான புயலில் 17 வீடுகள் இடிந்து போய்விட்டன. ஏராளமானவர்கள் இறந்து போனார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கிராமத்தில் உயிர் பிழைத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களை நோக்கிச் சென்றுவிட்டனர். ‘‘எங்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். 12 வயதில் இறந்து போனாள்.

இங்கே ஒரு மருத்துவமனை இருந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். என் மகள் வாழ்ந்த இந்த இடத்தை விட்டு, இனி எக்காரணத்தைக் கொண்டும் வேறு இடங்களுக்குச் செல்வதில்லை என்று முடிவு செய்தோம். 45 ஆண்டுகளாக இருவர் மட்டுமே கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் என எந்த வசதிகளும் இங்கே இல்லை. ஏதாவது அவசரம் என்றால் அருகில் இருக்கும் நகரத்துக்குச் சென்று வருவோம். யாருமற்ற கிராமம் என்று செய்தி வெளியே பரவுவதால், விடுமுறை நாட்களில் யாராவது இந்தக் கிராமத்துக்கு வந்து செல்கிறார்கள். எங்களுக்குப் பிறகு மனிதர்கள் அற்ற பிரதேசமாக மாறிவிடும் இந்தக் கிராமம்’’ என்கிறார் மார்ட்டின்.

வாழ்ந்து கெட்ட கிராமம்…

மாட்டு இறைச்சியால் செய்யப்பட்ட பர்கருக்காக ஓர் இசைக்குழு ஜப்பானில் இயங்கி வருகிறது. இந்த இசைக்குழுவில் பெண்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றனர். இளம் பெண்கள் புன்னகை செய்தபடி வண்ண ஆடைகள் அணிந்து, ஆடிப் பாடுகிறார்கள். பாடலும் ஆடலும் பர்கர் தொடர்புடையதாகவே இருக்கின்றன. பர்கரில் பயன்படுத்தப்படும் மாட்டு இறைச்சி, முட்டை, தக்காளி, மீன், கோழி, வெங்காயம், காளான், பன்றி இறைச்சி, அன்னாசி போன்ற பொருள்களை ஒவ்வொரு பெண்ணும் தலையில் ஒரு பொம்மையாக அணிந்திருக்கிறார்.

இசைக்குழுவில் 15 பெண்கள் இருக்கிறார்கள். பாடல், ஆடலுடன் பர்கர் விற்பனையும் ஜோராக நடைபெறுகிறது. இசைக்குழுவின் தயாரிப்பாளர் ஷிண்டாரோ யாபு, ‘‘உலகிலேயே பர்கருக்காகச் செயல்படும் இசைக்குழு இதுதான். 2013-ம் ஆண்டு இந்த இசைக்குழுவை ஆரம்பித்தோம். 3 பேர் மட்டுமே அப்பொழுது இசைக்குழுவில் இருந்தனர். இரண்டே வருடங்களில் மிகப் பெரிய அளவுக்கு இசைக்குழு வளர்ந்துவிட்டது’’ என்கிறார்.

வியாபாரத்தில் புதிய யுத்தி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பொம்மைகளாக-மாறிய-தம்பதி/article7799763.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: உணவின்றி, தூக்கமின்றி 9 நாட்கள்

 
 
masala_2596560h.jpg
 

உணவின்றி, நீரின்றி, தூக்கம் இன்றி 9 நாட்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த புத்த துறவி ஒருவர். ஜப்பானில் உள்ள ஹியி மலை புனிதமாகக் கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இதுவரை 13 துறவிகளே சாப்பிடாமல், தூங்காமல், நீர் அருந்தாமல் கடுந்தவம் புரிந்து ஹியிமலையில் ஏறியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் 41 வயது கோகென் காமாஹோரி.

தன்னுடைய தவக் காலத்தில் 1 லட்சம் முறை மந்திரங்களை உச்சரித்திருக்கிறார் கோகென் துறவி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரத்தான் துறவிக்கான சடங்குகளை ஆரம்பித்திருக்கிறார். இது உலகிலேயே மிகக் கடுமையான சவால். மாரத்தான் துறவிகள் 1000 நாட்களில் 40 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஹியி மலையில் 250 புனித இடங்களுக்குச் சென்று வழிபட்டு, இந்தத் தூரத்தைக் கடந்திருக்க வேண்டும். கோகென் துறவி 700 நாட்கள் இதுவரை நடந்து முடித்திருக்கிறார். இடையில் 9 நாட்கள் விரதம் இருந்திருக்கிறார். 2017ம் ஆண்டுக்குள் 300 நாட்கள் நடந்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

சாப்பிடாமல், தூங்காமல் எப்படி ஒருவரால் இருக்க முடிகிறது!

அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் மனிதன் எப்படி மாறப் போகிறான் என்று விஞ்ஞானிகள் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். வரும் காலங்களில் பருவநிலை மாறுபாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மரபணு மாறுபாடு போன்ற காரணங்களால் மனிதர்களின் உடலில் மிகப் பெரிய மாறுதல்கள் நடக்க இருக்கின்றன என்கிறார்கள். பூமி வெப்பம் அடைவதால் மனிதர்களின் தோல் மிகக் கறுப்பாக மாறிவிடும். பருவநிலை மாறுபாட்டால் உயரமாகவும் ஒல்லியாகவும் மாறிவிடுவார்கள்.

மரபணு மாறுபாட்டால் கண்கள் சிவப்பாகவும் சூப்பர் மனிதனுக்குரிய திறமைகளும் கிடைக்கப் போகின்றன. மொத்தத்தில் மனிதன் இன்னும் புத்திசாலியாகவும், உறுதியாகவும், தோற்றப் பொலிவுடனும் காணப்படுவான் என்கிறார்கள். மனிதனின் ஆயுள் 120 ஆண்டுகள். மனிதர்களால் செய்ய இயலாத வேலைகளை எல்லாம் ரோபோக்கள் செய்துவிடும். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆலன் க்வான், ‘‘மனித முகம் மெதுவாக மாற்றம் அடையும். தோல் சுருங்குவது குறையும். மூளை பெரிதாகும். நேரான முக்கும் முன்னோக்கி நீண்டிருக்கும் பெரிய கண்களுமாக மனித முகம் மாறிவிடும்’’ என்கிறார்.

அட! எதிர்கால மனிதர்களின் தோற்றம் மட்டுமில்லாமல், சிந்தனைகளும் மாறினால் உலகம் அற்புதமாக இருக்கும்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வீட்டு வாடகை மிக அதிகமாக இருக்கிறது. அதனால் இளம் தலைமுறையினர் பெரிய கண்டெய்னர்களைத் தங்கள் வசிப்பிடமாக மாற்றிக்கொள்கிறார்கள். அங்கு உள்ள ஒரு கிராமம் முழுவதும் கண்டெய்னர் வீடுகளாகவே இருக்கின்றன. 160 சதுர அடி கொண்ட உலோக கண்டெய்னர்களில் கண்ணாடி ஜன்னல்கள், மின்வசதி, குளியலறை போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன. இந்த கண்டெய்னர் குடியிருப்புகளுக்கு 39 ஆயிரம் ரூபாய் வாடகை.

சான் பிரான்சிஸ்கோவில் ஒரு படுக்கை அறை வீட்டு வாடகை 2.25 லட்சம் ரூபாய். நியு யார்க், லாஸ் ஏஞ்சல்ஸை விட அதிகம். வீட்டு வாடகையை விட மிகக் குறைவான வாடகை என்பதால் பலரும் கண்டெய்னர் வீடுகளை விரும்புகின்றனர். லூக் ஐஸ்மேனும் ஹெதர் ஸ்டீவர்ட்டும் இணைந்து கண்டெய்னர் வீடுகளை உருவாக்கினார்கள். ‘‘ராக்கெட் வேகத்தில் வாடகை அதிகரித்துச் செல்வதைக் கண்டு எரிச்சலில் உருவானதுதான் இந்த கண்டெய்னர் வீடு யோசனை. எங்கள் நண்பர்கள் கண்டெய்னர் வீடுகளைச் சொந்த மாக வாங்கிக்கொண்டு, நிரந்தரமாகவே குடியிருக்கஆரம்பித்து விட்டனர்.’’ என்கிறார் லூக்.

‘‘இந்த வீடு மட்டும் இல்லாவிட்டால் சான் பிரான்சிஸ்கோவில் வாடகை கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை’’ என்கிறார் 23 வயது சாரா கார்டர்.

இங்கேயும் மாற்று வழிகளை யோசிக்கணும்…

Link to comment
Share on other sites

உலக மசாலா: இரு சக்கர மாட்டு வண்டி?

 
 
masala_2494381f.jpg
 

வியட்நாம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து பார்க்கும் ஒரு விஷயம் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களைத்தான். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் இதைத்தான், இவ்வளவுதான் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற விதியை எல்லாம் பின்பற்றாமல் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்குள் நீந்திச் செல்லும் வளர்ப்பு மீன்கள், பலூன்கள், ராட்சத டியூப்கள், பறவைக் கூண்டுகள், விநியோ கிக்க வேண்டிய பொருட்கள், மரங்கள், பூச்செடிகள், காய்கறிகள், குளிர்பான பாட்டில்கள் என்று அளவுக்கு அதிகமான சுமைகளுடன் வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள்.

ஓட்டுபவருக்கு வசதியாக இந்தப் பயணம் இருப்பதில்லை. வண்டியின் பெரும் பகுதியைச் சரக்குகளே இடம்பிடித்து விடுகின்றன. ஆனாலும் சர்வசாதாரணமாக வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். வியட்நாமில் கார் விலை அதிகம் என்பதால் எல்லோரும் இரண்டு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். அதனால் சாலைகளில் வாகன நெரிசல் அதிகம். எப்பொழுதும் வாகனங்கள் அலறிக்கொண்டு ஓடுவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும்போதே அதிக விபத்துகளைச் சந்திக்கிறார்கள்.

ம்... ரிஸ்க்கான வாழ்க்கை…

சீனாவின் நான்ஜிங் பகுதியில் வித்தியாசமான புத்தகக் கடை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடையில் விற்பனை செய்வதற்கு ஆட்களே கிடையாது. பில் போட்டு, பணம் பெறுவதற்கும் கூட ஆட்கள் இல்லை. தேவையான புத்தகங்களை எடுத்துக்கொண்டு, அதற்குரிய பணத்தை ஒரு பெட்டியில் போட்டுவிட வேண்டும். இந்த ‘ஹானஸ்டி புக்ஸ்டோர்’ சமூகப் பரிசோதனைக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மக்களிடம் நேர்மை, ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

1500 புத்தகங்களுடன் இந்தக் கடையை ஆரம்பித்தார்கள். முதல் நாள் 300 புத்தகங்கள் விற்பனையாகின. அந்த வார இறுதிக்குள் 800 புத்தகங்கள் விற்பனையாகிவிட்டன. இதுவரை ஒரு புத்தகம் கூடத் திருடப்படவில்லை என்பது முக்கியமானது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு பரிசோதனை முயற்சியாக ஃபுஜியன் மாகாணத்தில் உணவு விடுதி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 20 சதவிகித வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்காமல் சாப்பிட்டுச் சென்றார்கள். இதில் 26 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளில் மக்களின் மனநிலையில் நல்ல முன்னேற்றம் என்று ஹானஸ்டி புக்ஸ்டோர் குறித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

இந்த மாதிரி முயற்சிகளை நாமும் செய்து பார்க்கலாமே...

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிவப்புத் தலைமுடியுடன் இருப்பவர்களைப் பற்றிக் கிண்டல் செய்துகொண்டிருந்தது உலகம். பாலூட்டிகளின் தோலுக்கும் முடிக்கும் நிறத்தைக் கொடுப்பது எம்சி1ஆர் என்ற புரதம்தான். இந்தப் புரதம் சரியாகச் சுரக்காதபோது சிவப்பு முடிகள் உருவாகுவதாகச் சொல்கிறார்கள். சிவப்பு முடி உடையவர்களுக்கான பிரத்யேகப் பத்திரிகை எம்சி1ஆர் என்ற பெயரில் வெளிவருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ஃபேஷன், தலையங்கம், பேட்டி, நாட்டு நடப்புகள் என அத்தனை விஷயங்களும் சிவப்புத் தலைமுடியை வைத்தே எழுதப்படுகின்றன.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ட்ரிஸ்டன் ரோட்ஜெர்ஸ், ‘‘முதலில் புகைப்படப் புத்தகமாக மட்டுமே கொண்டு வர நினைத்தோம். பின்னர் அது ஒரு முழுமையான பத்திரிகையாக மாறிவிட்டது. மிகக் குறைவான பிரதிகள்தான் அச்சடிக்கப்படுகின்றன’’ என்கிறார். 2014ம் ஆண்டு 1600 பிரதிகளுடன் ஜெர்மன் மொழியில் வெளிவந்தது எம்சி1ஆர் பத்திரிகை. சிவப்பு முடி இல்லாதவர்களும் இந்தப் பத்திரிகையை விரும்பினார்கள். அதனால் 2015ம் ஆண்டு ஆங்கிலத்தில் பத்திரிகை வெளிவந்தது. அதைப் பார்த்த பிறகு, ஏராளமானவர்கள் தங்கள் தலை முடியைச் சிவப்பாக மாற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ‘‘எல்லோரும் ஏளனம் செய்துகொண்டிருந்த ஒரு விஷயம், இன்று ஃபேஷனாக மாறிவிட்டது. அதற்கு எங்கள் பத்திரிகை முக்கியக் காரணம்’’ என்கிறார் ட்ரிஸ்டன்.

தவறான கருத்தை மாற்றிய ட்ரிஸ்டனுக்கு வாழ்த்துகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இரு-சக்கர-மாட்டு-வண்டி/article7488724.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: செடிகளிடம் பேச 3 ஊழியர்கள்

 
 
masala_2491323h.jpg
 

பிரிட்டனைச் சேர்ந்த ஹார்ட்வேர் நிறுவனம், தங்களுடைய தோட்டத்தில் உள்ள செடிகளுடன் பேசுவதற்காக 3 ஊழியர்களை நியமித்திருக்கிறது. தோட்டக்கலை நிபுணர் டிம் க்ளாப் வழிகாட்டலில் மூவரும் செடிகளுடன் உரையாடி வருகிறார்கள். “மனிதர்களைப் போன்றுதான் செடிகளும். செடிகளைக் கவனிக்காமல் விட்டால் அவை சோர்ந்து போய்விடுகின்றன. செடிகளுக்குப் போதிய தண்ணீரும் வெளிச்சமும் கிடைப்பதோடு, மனிதர்கள் உரையாடவும் செய்தால் அதிக அளவில் பலன் தருகின்றன’’ என்கிறார் க்ளாப். “காய்க்காத தக்காளிச் செடியிடம் என் அம்மா பேச ஆரம்பித்த பிறகு, செடி ஏராளமான தக்காளிகளைக் காய்த்துத் தள்ளிவிட்டது’’ என்கிறார் ஒருவர்.

இதைத் தானே நம் ஜே.சி. போஸும் சொல்லிருக்கார்!

அரிஸோனாவைச் சேர்ந்தவர் 32 வயது ஜெசிகா காக்ஸ். இவருக்குக் கைகள் இல்லை. கால்கள் மூலமே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். கால்களால் விமானத்தை இயக்குகிறார், பியானோ வாசிக்கிறார். தன்னைப் போன்றவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுத்து வருகிறார். ஜெசிகாவைச் சந்திப்பதற்காக ரூத் ஈவ்லின் பிரான்க், 6 மணி நேரம் பயணம் செய்து வந்தார். 3 வயது ரூத்துக்கும் பிறவியில் இருந்து கைகள் இல்லை. தன்னுடைய மகளுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதற்காக ஜெசிகாவைச் சந்திக்க அழைத்து வந்திருந்தார் ரூத்தின் அம்மா.

ரூத்தைக் கண்டவுடன் ஜெசிகாவுக்கு மகிழ்ச்சி. கைகள் இல்லாத இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டனர். “அன்பும் அணைக்கவேண்டும் என்ற மனநிலையும் இருந்தால் போதும், அணைத்துவிடலாம். கைகள் தேவை இல்லை’’ என்கிறார் ஜெசிகா. குழந்தைக்குக் கால்கள் மூலம் எப்படி எழுதலாம், வேலைகளை எப்படிச் செய்யலாம் என்று செய்து காட்டினார் ஜெசிகா. “இனி என் மகளைப் பற்றிக் கவலை இல்லை. ஜெசிகா போல தன்னம்பிக்கை மனுசியாக வலம் வருவார்’’ என்கிறார் ரூத்தின் அம்மா.

அழகான சந்திப்பு!

நெதர்லாந்தின் ஃபெர்மனாக் கவுண்டியில் ஆண்டுதோறும் மிக விநோதமான போட்டி ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டின் புழுக்கைகளை வாயில் அடக்கிக்கொண்டு, வேகமாகத் துப்ப வேண்டும் என்பதுதான் போட்டி. இந்தப் போட்டியை உருவாக்கி, நடத்துகிறவர் ஜோய் மஹோன். “ஆப்பிரிக்காவில் ஈமு சாணத்தைத் துப்பும் போட்டி நடத்தப்படுகிறது. அதை ஆட்டுப் புழுக்கையாக மாற்றிவிட்டேன்’’ என்கிறார் ஜோய். போட்டிக்காக ஆட்டுப் புழுக்கைகளை ஒரு பண்ணையில் இருந்து காரில் எடுத்து வந்தார்.

முகம் சுளித்த ஜோய் மனைவி, இப்படிப்பட்ட போட்டிகளை நடத்தினால் விவாகரத்துதான் என்று எச்சரித்துவிட்டார். ஆனாலும் ஜோய் போட்டியை நடத்தினார். 44 போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர். அதிக தூரம் ஆட்டுப் புழுக்கையைத் துப்பியவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

கஷ்டமான போட்டிதான்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-செடிகளிடம்-பேச-3-ஊழியர்கள்/article7478252.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.