Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலகமசாலா: கல்லீரலையும் கொடுத்து, கல்யாணமும் செய்துகொண்ட அபூர்வ மனிதர்

ulaka_masala_3062732f.jpg
 

அமெரிக்காவைச் சேர்ந்த ஹீதருக்கு (வயது 27) கல்லீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது. கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யா விட்டால், சில மாதங் களில் ஹீதர் உயிர் இழந்துவிடுவார் என்றனர் மருத்துவர்கள். கல்லீரல் தானம் பெற விண்ணப்பித் தார் ஹீதர். ஆனால் அவருக்கு முன்பு ஏராள மானோர் கல்லீரலுக்காகக் காத்திருந்தனர். வேறு வழியின்றி, தானே கல்லீரல் கேட்டு விளம்பரம் கொடுத்தார்.

அதிலும் பலன் இல்லை. ஒருநாள் ஹீதரின் நிலையைப் பற்றி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தார் அவரது உறவினர் ஜாக். அருகில் வேலை செய்துகொண்டிருந்த கிறிஸ் டெம்சே, சட்டென்று தான் கல்லீரல் தானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். இதுவரை முன்பின் பார்த்திராத, கேள்விப்படாத ஒருவருக்கு, ஒரு மனிதர் தானாகக் கல்லீரல் தானம் அளிக்க விரும்பியதை எண்ணி ஆச்சரியத்தில் உறைந்து போனார் ஜாக். ஹீதருக்குத் தகவல் வந்தது. அவரும் அவரது அம்மாவும் கிறிஸ் டெம்சேயின் செயலை எண்ணி, கண்ணீர் விட்டனர். மருத்துவப் பரிசோதனையில் கிறிஸ் கல்லீரல் நூறு சதவீதம் ஹீதருக்கு ஒத்துப் போனது.

இருவரும் முதல்முறை சந்தித்தனர். ஹீதரும் அவரது அம்மாவும் நன்றி சொல்லி, அழுதார்கள். ‘வாழ்க்கையில் நாம் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை. இது ஒன்றும் பெரிய விஷயமும் இல்லை. என்னால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடிகிறது என்பதே அற்புதமானது’ என்றார் கிறிஸ். இல்லினாய்ஸ் மருத்துவமனையில் இருவருக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் ஹீதருக்குச் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. தொடர்ந்து மருத்துவம் அளித்ததில் ஹீதரின் உடல் புதிய கல்லீரலை ஏற்றுக்கொண்டது. இருவரின் உடலும் நன்றாகத் தேறின. தன் உயிரைக் காப்பாற்றிய கிறிஸ் மீது ஹீதருக்கு அளவற்ற அன்பும் மதிப்பும் பெருகின. நட்பு தொடர்ந்தது. கடந்த டிசம்பர் மாதம் தன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று கேட்டார் கிறிஸ். ‘எப்போது இதைக் கேட்பார் என்று காத்திருந்தேன். சட்டென்று சம்மதத்தைத் தெரிவித்துவிட்டேன். ஏற்கெனவே என் உயிரைக் காப்பாற்றியவர், என் வாழ்க்கையையும் காப்பாற்றி விட்டார். அக்டோபர் முதல் வாரம் திருமணம் நடைபெற்றது. இதுவரை உலகம் கண்டிராத அற்புதமான மனிதருடன் நான் வாழ்கிறேன். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடும் புன்னகையோடும் நகர்கிறது!’ என்கிறார் புது மணப்பெண் ஹீதர். கல்லீரலையும் கொடுத்து, கல்யாணமும் செய்துகொண்ட அபூர்வ மனிதருக்குப் பாராட்டுகள்!

டின்களில் விற்பனையாகும் காற்று

பெய்ஜிங் நகரில் காற்று மாசு அதிகரிக்கிறது என்ற விமர்சனங்கள் வரும்போது, மக்கள் தூய்மையான காற்றைத் தேடி ஓடுகின்றனர். ‘பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கேன்களில் தூய்மையான காற்று விற்பனை வெற்றிகரமாக நடந்து வருகிறது. அந்தத் தொழிலை பெய்ஜிங்கில் ஆரம்பித்தால், மக்களுக்குப் பயன்படும் என்று எண்ணினேன். ’பீஜிங் ஏர்’ என்ற பெயரில் கேன்களில் காற்றை விற்கும் தொழிலை ஆரம்பித்தேன். கேன் காற்று எடை குறைந்தது. எடுத்துச் செல்வது எளிது. பீஜிங்கில் நண்பர்கள், உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது, உணவுகளையோ உடைகளையோ வாங்கிச் செல்வதைவிட, காற்று கேன்களை வாங்கிச் சென்றால், சிறந்த பரிசாக இருக்கும். நைட்ரஜன் 77%, ஆக்ஸிஜன் 20%, இருக்கின்றன. 320 மி.லி. கொண்ட ஒரு கேனின் விலை 268 ரூபாய்’ என்கிறார் பிரிட்டனில் பிறந்து, பெய்ஜிங்கில் வசிக்கும் டொமினிக் ஜான்சன்.

http://tamil.thehindu.com/world/உலகமசாலா-கல்லீரலையும்-கொடுத்து-கல்யாணமும்-செய்துகொண்ட-அபூர்வ-மனிதர்/article9284732.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: திகில் விடுதி

 

 
sea_2364365f.jpg
 

உலக மலைகளில் ஏறுபவர்கள் ஆங்காங்கே தங்குவதற்காகத் தொங்கும் கட்டில்களை அமைத்துக்கொள்வார்கள். இதில் மேற்கூரை இருக்காது. இந்த யோசனையைப் பயன்படுத்தி பிரிட்டனில் 2 தங்கும் விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 300 அடி உயர மலையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன இரண்டு கட்டில்கள். கீழே ஆர்ப்பரிக்கும் கடல். கண்களுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டமே இருக்காது. மலையின் மேல் பகுதியில் விடுதியில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். இரவில் மெதுவாகத் தொங்கிக் கொண்டிருக்கும் கட்டிலில் இறக்கிவிடுவார்கள். முதல் சில நிமிடங்களுக்குத் திகிலாக இருக்கும். பிறகு பரவச நிலை ஏற்பட்டுவிடும். மேலே இருந்து உணவும் காபியும் கட்டிலுக்கு வரும். சாப்பிட்டுவிட்டு, ஸ்லீபிங் பேக் மாட்டிக்கொண்டு தூங்க வேண்டியதுதான். தூக்கம் வரவில்லை என்றால் இருட்டில் இயற்கையின் மிரட்டும் அழகைக் கண்டு ரசிக்க வேண்டியதுதான். இயற்கைக் கடன்களைக் கழிக்க வேண்டும் என்றால் விடுதிக்குத் தகவல் சொல்லவேண்டும். மேலே ஏற்றிச் செல்வார்கள். அதிகாலை உணவருந்திவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட வேண்டும். திகில் நிறைந்த இந்த சுவாரசிய விடுதியில் ஓர் இரவு தங்க ஒரு ஜோடிக்கு 24 ஆயிரம் ரூபாய் கட்டணம்.

என்னதான் சுவாரசியம் என்றாலும் தூக்கத்தில் திரும்பினால் எலும்பு கூட மிஞ்சாது…

பிரிட்டனில் வசிக்கிறார் ஜெனிஃபர் ட்ரூ. இவருக்கு ஆன்லைனிலும் செய்தித்தாள்களிலும் தள்ளுபடி கூப்பன்களைச் சேகரிப்பதுதான் முக்கியமான பொழுதுபோக்கு. ஆசிரியராக இருக்கும் ஜெனிஃபர், 3 ஆண்டுகளில் தள்ளுபடி கூப்பன்கள் மூலம் பொருட்கள் 15 லட்சம் ரூபாயைச் சேமித்திருக்கிறார். ஜெனிஃபர் கர்ப்பமாக இருந்தபோது, அவரது கணவருக்கு வேலை போய்விட்டது. சிக்கனமாகச் செலவு செய்ய முடிவு செய்த ஜெனிஃபர், தள்ளுபடி கூப்பன்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். நாட்கள் செல்லச் செல்ல கூப்பன் சேகரிப்பதில் அதிக ஈடுபாடு வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் தேவையற்ற பொருட்களையும் வாங்கிச் சேர்க்கும் நிலைக்கு வந்துவிட்டார். அப்படி எல்லாம் செலவு செய்தும் இவ்வளவு பணத்தைச் சேமித்திருக்கிறார்! தினமும் 1 மணி நேரம், விடுமுறை நாட்களில் 3 மணி நேரம் செலவிட்டு தள்ளுபடி கூப்பன்களைப் பற்றி அறிந்துகொள்கிறார். இப்பொழுது கூப்பன்களைச் சேகரிப்பது எப்படி என்று வகுப்புகளும் எடுக்கிறார்.

நுகர்வு கலாசாரம் எப்படி எல்லாம் வேலை செய்யுது!

லண்டனில் வசிக்கும் ப்ளூ பூனைக்குக் காது கேட்காது. அதனால் தன் குரலை மிக அதிக அளவுக்கு ஒலிக்கிறது. 12 வயதான இந்தப் பூனை ஒவ்வொரு முறை மியாவ் என்று கத்தும்போதும் 93 டெசிபல் அளவுக்கு ஒலிக்கிறது. அதாவது சாதரணமாக பூனை எழுப்பும் ஒலியின் அளவை விட 4 மடங்கு ஒலி அதிகம். பூனையின் உரிமையாளர் க்ளாரி தாமஸ், தன்னால் இந்தச் சத்ததைச் சகித்துக் கொள்ள இயலவில்லை என்கிறார். அதுவும் நேரம் காலம் பார்க்காமல் சாப்பிடும்போது, விளையாடும்போது, சக பூனைகளைப் பார்க்கும்போது என்று எப்பொழுதும் கத்திக்கொண்டே இருக்கிறது ப்ளூ. இதனால் விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்க இருக்கிறார். பூனையின் சத்தத்தைக் கண்டவர்கள், கின்னஸில் ப்ளூ இடம் பிடிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். ஸ்மோகி என்ற பூனையின் ஒலி 67.7 டெசிபல் கொண்டது. இதுதான் தற்போதைய கின்னஸ் சாதனையாக இருக்கிறது. ஆனால் ப்ளூவின் கத்தலோ 93 டெசிபல். நிச்சயம் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என்கிறார்கள்.

கின்னஸ்னால அதுக்கு என்ன பலன்… காது கேட்க ஏதாவது செய்யலாமே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-திகில்-விடுதி/article7070469.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பசி வந்தால் உலோகமும் உணவாகுமோ?

 

 
ulagam_3064696f.jpg
 

தென் கொரியாவில் ஆடம் க்ராப்சரும் அவரது இரு சகோதரிகளும் ஆதரவற்றவர்கள் இல்லத்தில் வளர்ந்தனர். 3 வயதில் ஓர் அமெரிக்கத் தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தத்தெடுத்த பெற்றோருக்குள் அடிக்கடி சண்டை வரும். குழந்தைகளை அடிப்பார்கள், திட்டுவார்கள், இருட்டறையில் அடைத்துவிடுவார்கள். 6 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரியக் குழந்தைகள் தங்களுக்கு வேண்டாம் என்று முடிவெடுத்தனர். தனக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாக நினைத்தார் ஆடம். “தாமஸ், டோலி க்ராப்சர் வீட்டில் எப்பொழுதும் 10 குழந்தைகளாவது இருந்துகொண்டே இருப்பார்கள். எல்லோரையும் சித்திரவதை செய்வார்கள். குழந்தைகள் மீது வன்முறை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்காகப் பலமுறை சிறை சென்றிருக்கிறார்கள். மீண்டும் என்னைத் தேடி வந்தனர். நான் அவர்கள் வீட்டில் திருடிவிட்டேன் என்று குற்றம் சுமத்தினர். 25 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தேன். வெளியில் வந்து கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு பெண் அறிமுகம் ஆனார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொண்டோம். குழந்தைகளும் பிறந்தனர். எனக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடையாது என்பதாலும் என் கடந்த காலத்தில் நான் சிறைத் தண்டனை அனுபவித்ததாலும் நிலையான வேலை கிடைக்கவே இல்லை. குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தேன். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு தாமஸ் க்ரப்சரிடமிருந்து தத்தெடுத்ததற்கான ஆவணங்களைப் பெற்று, க்ரீன் கார்டுக்காகச் சமர்ப்பித்தேன். என்னுடைய கடந்த காலத்தை ஆராய்ந்த சட்ட வல்லுநர்கள், நான் 30 ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பான வகையில் அமெரிக்காவில் தங்கியிருப்பதாகக் குற்றம் சுமத்தினர். என்னை தென் கொரியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டனர். என்னுடைய நாடு கடத்தலை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ஆடம். சட்டத்துக்குப் புறம்பாக நிறையப் பேர் தங்கியிருக்கிறார்கள் என்பதால் இவருக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை.

என்ன கொடுமை இது?

இங்கிலாந்தில் 4 மாதமே ஆன நாய் ஒன்று, தோட்டத்தில் இருந்த உலோக சங்கிலியை விழுங்கிவிட்டது. நாயின் உரிமையாளர் உடனே கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். எக்ஸ்ரேயில் 1.5 அடி நீளம் கொண்ட சங்கிலியை நாய் விழுங்கியிருப்பது தெரிய வந்தது. அரை மணி நேரம் நாயை மயக்கத்தில் வைத்து, மெதுவாக உலோகச் சங்கிலியை வெளியே எடுத்தார்கள் மருத்துவர்கள். சங்கிலியால் நாயின் உள் உறுப்புகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வளவு நீள உலோகச் சங்கிலியை ஒரு நாயால் எப்படி விழுங்க முடிந்தது என்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

பசி வந்தால் உலோகமும் உணவாகுமோ?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பசி-வந்தால்-உலோகமும்-உணவாகுமோ/article9290672.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: காவல் காக்கும் காளைகள்!

 

 
masala_3065704f.jpg
 

ஸ்பெயினைச் சேர்ந்த எமிலியோ சர்வெரோ, பழைய வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார். பெரிய பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த உதிரி பாகங்கள் சேமிப்புக் கிடங்கைப் பாதுகாப்பது அவருக்கு மிகவும் சவாலான விஷயமாக இருந்து வந்தது.

கம்பி வேலிகள் போட்டால், அதை அப்புறப்படுத்திவிட்டு திருடர்கள் உள்ளே நுழைந்து திருடிச் சென்று விடுகின்றனர். உயரமான சுற்றுச் சுவர் கட்டினால், சுவரில் ஓட்டைப் போட்டு திருடர்கள் வந்துவிட்டனர். காவலர்களை நியமித்தார். அதுவும் தோல்வியில் முடிந்தது. சுவரில் அலாரம் வைத்தார். அதுவும் ஒத்துவரவில்லை. மோப்ப நாய்களைக் காவலுக்கு வைத்தார். நாய்களாலும் திருடர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

‘ஒரே ஆண்டில் 7 தடவை திருட்டுச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டபோது மிகவும் களைப்படைந்து விட்டேன். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, சண்டைக் காளைகள் நினைவுக்கு வந்தன. நாய்களுக்குப் பதிலாகக் காளைகளை இறக்கினேன். என்ன ஆச்சரியம்! காளைகள் மிகப் பிரமாதமாகக் காவல் காக்கின்றன. காளைகளின் உறுமலைக் கண்டு, திருடர்கள் உள்ளே நுழைய பயப்படுகிறார்கள். இதுவரை எந்தத் திருட்டுச் சம்பவமும் நடைபெறவில்லை. நிம்மதியாக இருக்கிறேன்’ என்கிறார் எமிலியோ சர்வெரோ.

காவல் காக்கும் காளைகள்!

அமெரிக்காவில் இணையம் பயன்பாட்டுக்கு முன்பு, எந்தச் சந்தேகம் என்றாலும் மக்கள் நியூயார்க் பப்ளிக் லைப்ரரியைத்தான் தொடர்பு கொள்வார்கள்.

இன்று ஒரு சில நொடிகளில் கூகுள் போன்ற தேடு பொறிகளின் மூலம் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள இயலும். ஆனாலும் நியூ யார்க் பப்ளிக் லைப்ரரிக்குத் தினமும் 300 சந்தேகங்கள் கேட்கப்படுகின்றன. இணையம் பற்றிய சிந்தனை இல்லாத காலத்திலேயே ‘நூலகரிடம் கேளுங்கள்’ என்ற திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள்.

இன்றும் 9 நூலகர்கள், உதவியாளர்களைக் கொண்டு, மக்களின் சந்தேகங்களை இணைய தேடு பொறிகளுக்குச் சவால் விடும் அளவுக்குத் தீர்த்து வைக்கிறார்கள். இவர்களை ’மனித கூகுள்’ என்று அழைக்கிறார்கள் மக்கள்.

‘முன்பெல்லாம் கேள்விகள் அதிகம் வரும். அவற்றுக்குப் பதில்களை கஷ்டப்பட்டுத் தேடி அளிப்போம். தற்போது எங்களுக்கு கூகுளும் கை கொடுக்கிறது. அதனால் வேலை எளிதாக இருக்கிறது. தொலைபேசி, இமெயில், குறுஞ்செய்தி என்று பலவிதங்களில் எங்களுக்குக் கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. கூகுள் சில நொடிகளில் கொடுக்கும் சேவையை நாங்கள் 5 நிமிடங்களில் கொடுத்துவிடுவோம்.

எங்களுக்கு வரக்கூடிய கேள்விகள் எல்லாம் இணையம் பயன்படுத்தாதவர்களிடமிருந்துதான் வருகின்றன. எங்கள் வேகத்தையும் திருப்தியான பதிலையும் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். நாங்கள் மனிதர்களா, ரோபோக்களா என்று கேட்கிறார்கள்.

யானை கனவில் வந்தால் என்ன அர்த்தம்?, எலியை எப்படிப் பிடிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும் கேள்விகளில் சில. இணையத்தில் கேள்விக்கான பதிலைப் பெற முடியும். எங்களிடம் உரையாடவும் முடியும் என்பதால், இணையத்தைப் பயன்படுத்துகிறவர்களும் வருகிறார்கள்’ என்கிறார் நூலகத்தின் மேலாளர் ரோசா லி.

கலக்கும் ’ஹ்யூமன் கூகுள்’

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-காவல்-காக்கும்-காளைகள்/article9294767.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: காதலர்களுக்கு என்ன சொல்லப் போகிறார் ஸியாலி?

 

 
ifone_3066781f.jpg
 

சீனாவில் வசிக்கும் ஸியாலி, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். வீட்டுக்கு மூத்த மகள். அவரது பெற்றோர் வயதானவர்கள் என்பதால், சொந்தமாக ஒரு வீட்டை வாங்கும்படி ஸியாலியை வற்புறுத்தி வந்தனர். பணம் இல்லாமல் எப்படி வீடு வாங்க முடியும் என்று யோசித்தவர், ஓர் உத்தியைக் கையாண்டார்.

20 ஆண்களைக் காதலித்து, 20 ஐபோன்களைப் பரிசாகப் பெற்றார். அத்தனை போன்களையும் விற்று, வீட்டுக்கான டவுன்-பேமண்ட் செலுத்தி, வீட்டை வாங்கிவிட்டார். அலுவலகத்தில் வேலை செய்யும் சில நண்பர்களைப் புது வீட்டுக்கு அழைத்தார் ஸியாலி. அங்கே தனக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்ற விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். விஷயம் அலுவலகம் முழுவதும் பரவிவிட்டது.

ஸியாலியின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர், இந்த விஷயத்தைத் தன்னுடைய வலைப்பூவில் எழுதிவிட்டார். சீனா முழுவதும் ஊடகங்களில் இந்த விஷயம் வேகமாகப் பரவிவிட்டது. பெண்ணின் நலன் கருதி, பெயர் மாற்றப்பட்டுள்ளதால், ஸியாலியின் பெற்றோருக்கு இதுவரை விஷயம் தெரியவில்லை. சர்வதேச ஊடகங்கள் ஸியாலியைத் தொடர்புகொள்ள முயன்றும் அவர் வேலை செய்யும் அலுவலகம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

சரி, காதலர்களுக்கு என்ன சொல்லப் போகிறார் ஸியாலி?

ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவமனை வெளியிட்ட ஓர் அறிக்கை, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 30 வயதான ஒரு பெண்ணுக்கு, கருப்பையில் லேசர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது திடீரென்று நெருப்புப் பிடித்துக்கொண்டது. நெருப்பை அணைப்பதற்குள் பெண்ணின் இடுப்பு, கால்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

இந்தப் பிரச்சினை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில், அறுவை சிகிச்சை செய்யும் அறையில் எரியக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்றும், குடலில் இருந்து வெளியேறிய வாயுவால் ஏற்பட்ட திடீர் நெருப்பு என்றும் தெரிய வந்திருக்கிறது.

ஐயோ… பாவமே…

அமெரிக்காவின் புளோரிடாவில் வசிக்கும் பிரையன் ஆடம்ஸ், தன்னுடைய 80 வயது அம்மா இறந்து போன விவரத்தை உறவினருக்கோ, அரசாங்கத்துக்கோ தெரிவிக்கவில்லை. தன் வீட்டுத் தோட்டத்திலேயே சடலத்தைப் புதைத்துவிட்டார்.

கடந்த ஓராண்டு காலமாக அம்மாவின் ஓய்வூதியத் தொகையைப் பெற்று வந்திருக்கிறார். அரசாங்கத்தில் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற்றது. பிரையன் ஆடம்ஸ் வீட்டைப் பரிசோதனை செய்தபோது, உண்மை தெரியவந்தது.

இறந்து போன அம்மாவின் பெயரைப் பயன்படுத்தி இதுவரை 23 லட்சம் ரூபாயைப் பெற்றிருக்கிறார் பிரையன் ஆடம்ஸ். உடனே கைது செய்யப்பட்டார். அவருக்கு குறைந்தது 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றத்துக்காகத் தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-காதலர்களுக்கு-என்ன-சொல்லப்-போகிறார்-ஸியாலி/article9299450.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர்!

 

 
masala_3068586f.jpg
 

அர்ஜென்டினாவின் முதல் டவுன் சிண்ட்ரோம் ஆசிரியர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார் நோயலியா காரெல்லா. 3 வயது குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியராக இருக்கிறார். பள்ளியின் முதல்வர், சக ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என்று எல்லோரும் நோயலியாவை உற்சாகப்படுத்துகிறார்கள். குழந்தைகளோடு குழந்தையாக நோயலியா பழகுவதும் பாடம் சொல்லிக் கொடுப்பதும், குழந்தைகளின் விருப்பத்துக்குரிய ஆசிரியராக மாற்றியிருக்கிறது. “டவுன் சிண்ட்ரோம் குழந்தை என்பதால், என்னைப் பள்ளியில் ஒரு அரக்கன் போலப் பார்த்தார்கள். பல பள்ளிகளில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நான் சிறுமியாக இருந்தபோதும் இப்போதும் எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் சின்ன வயதிலேயே ஆசிரியராக விரும்பினேன். 31 வயதில் அந்தக் கனவு நிறைவேறிவிட்டது. அன்றைய காலகட்டம் போல இன்று இல்லை. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை என்னை நேசிக்கிறார்கள். என்னைப் பார்த்து, டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உள்ளவர்களைப் பற்றிய அபிப்ராயம் மாறி வருவதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் நோயலியா.

வாழ்த்துகள் நோயலியா!

ஜப்பானில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று திருமணம் செய்துகொள்வோர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. நீண்ட நேரப் பணிச் சுமையால், குடும்ப வாழ்க்கைக்கு அதிக நேரம் செலவிட முடியாது என்ற காரணத்துக்காகவே, பலரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை. திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்களுக்கும் பார்த்து, பழகி, திருமணம் செய்ய போதுமான அவகாசம் இல்லை. அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் தயக்கத்திலும் வெட்கத்திலும் பேசுவதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறது டோக்கியோவில் இயங்கும் திருமணம் ஏற்பாட்டு மையம். ஆணோ, பெண்ணோ தனக்குத் தேவையான இணையைத் தேர்ந்தெடுத்தவுடன், அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்கிறது. ஜோடிகளுக்கு முகமூடிகளை அணிவிக்கிறது. இதனால் ஆண்களும் பெண்களும் தயக்கம் இன்றி, மனம் விட்டுப் பேச முடிகிறது. ‘முகமூடி இல்லாமல் இணையைத் தேடும்போது, முதலில் அழகுதான் சட்டென்று ஈர்க்கிறது. அதனால் குணத்தைப் பற்றிப் பெரிதாக யாரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால் முகமூடி அணிந்துகொண்டு சந்திக்கும்போது, முகம் தெரிவதில்லை. பேச்சின் மூலம் ஒருவரின் குணங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. மனம் விட்டுப் பேச முடிகிறது. சாலைகளில், பூங்காக்களில், உணவகங்களில் சந்தித்தால் கூட யாரும் நம்மைக் கவனித்துப் பார்க்க மாட்டார்கள். ஒரு சின்ன முகமூடி மிகப் பெரிய அளவில் இணையைத் தேர்ந்தெடுப்பதில் பங்களிக்கிறது. நானும் என் கணவரும் உருவத்தைப் பார்க்காமல், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு திருமணம் செய்துகொண்டோம்’ என்கிறார் யசுமாசு கிஷி. டெஃப் அனிவர்சரி திருமண ஏற்பாட்டு மையத்தை நடத்தும் கேய் மட்சுமுரா, ‘ஒரு சின்ன முகமூடி மிகப் பெரிய மாற்றத்தை ஜப்பானிய இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. திருமணத்தின் மீது நாட்டத்தை அதிகரித்திருக்கிறது’ என்கிறார்.

முகமூடி வரன்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-டவுன்-சிண்ட்ரோம்-ஆசிரியர்/article9304601.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: முதலைக்குப் பல் துலக்கும் முரபயாஷி!

 

 
masala_3069951f.jpg
 

ஜப்பானைச் சேர்ந்த 65 வயது நோபுமிட்சு முரபயாஷி, முதலையைச் செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். 6 அடி 8 அங்குலம் நீளமும் 46 கிலோ எடையும் கொண்ட கைமன் முதலை, ஒரு நாய்க்குட்டியைப் போல அவரிடம் பழகுகிறது. அவர் மடியில் உறங்குகிறது. அவருடன் நடைப் பயிற்சி மேற்கொள்கிறது. அவரது படுக்கையில் உறங்குகிறது. “34 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விலங்குகள் விழாவில் முதலையைப் பார்த்தேன். மிகவும் குட்டி முதலையாக என்னைக் கவர்ந்தது. உடனே முதலையை வீட்டில் வளர்ப்பதற்கு அரசாங்கத்திடம் சிறப்பு அனுமதி பெற்றேன். இவ்வளவு பெரிய முதலையாக வளரும் என்றோ, 34 வருடங்கள் வாழும் என்றோ நான் நினைக்கவில்லை. என்னுடைய சைகைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயல்பட ஆரம்பித்தது முதலை. இறைச்சியைச் சாப்பிட்டால், துகள்கள் பற்களில் ஒட்டியிருக்கும். அவற்றை ப்ளோவர் பறவைகள் சுத்தம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

வீட்டில் உணவு கொடுத்தவுடன், பிரஷை வைத்து நானே முதலைக்குப் பல் துலக்கி விடுவேன். வீட்டில் இருக்கும்போது சுதந்திரமாக விட்டுவிடுவேன். சமையலறை, படுக்கையறை, தோட்டம் என்று சுற்றிச் சுற்றி வரும். வெளியில் செல்லும்போது மட்டும் ஒரு கயிற்றை முதலையின் உடலில் கட்டி, அழைத்துச் செல்வேன். பொதுமக்களுக்குப் பயம் வந்துவிடக்கூடாது என்பதற்காக. துணிக்கடை, உணவகம், காய்கறி மார்க்கெட், நீச்சல் குளம் என்று நான் போகும் இடம் எல்லாம் அழைத்துச் செல்வேன். ஆனால் என் மனைவிக்கு மட்டும் முதலை மேல் ஆர்வம் இல்லை. முதலையுடன் நான் மட்டுமே அதிக நேரம் செலவிடுகிறேன். தொலைக்காட்சிகளில் முதலை பற்றிய செய்திகள் வந்துவிட்டதால் பிரபலமாகிவிட்டது.” என்கிறார் முரபயாஷி.

அட, முதலைக்குப் பல் துலக்கும் முரபயாஷி!

சீனாவில் வாகன ஓட்டிகள் முழு பீம் ஹெட்லைட்களைப் போட்டுக்கொண்டு, வாகனம் ஓட்டக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது. இப்படி அதிக அளவு வெளிச்சம் பீய்ச்சும்போது எதிரில் வருபவர்களின் பார்வை பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படுகிறது. 3 ஆயிரம் ரூபாய் அபராதம், தொடர்ந்து இந்தக் குற்றத்தை நிகழ்த்துபவர்களுக்கு உரிமம் ரத்து போன்ற தண்டனைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனாலும் முழு பீம் ஹெட்லைட்களைப் போட்டுக்கொண்டு வாகனங்களை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவர்களுக்காகவே புதிய தண்டனையைத் தற்போது அமல்படுத்தி வருகிறார்கள். குற்றம் செய்யும் வாகன ஓட்டிகளை ஒரு நாற்காலியில் அமர வைக்கிறார்கள். வாகனத்தில் இருந்து முழு பீம் ஹெட்லைட் வெளிச்சத்தை அவர்கள் மீது ஒரு நிமிடம் வரை பாய்ச்சுகிறார்கள். ஆரம்பத்தில் இந்தத் தண்டனையைப் பலரும் எதிர்த்தனர். தற்போது பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர். ஷென்ஜென் நகரில் மட்டுமின்றி, சீனா முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்கிறார்கள். ஒருமுறை இந்தத் தண்டனை பெற்றவர்கள், மீண்டும் இதே குற்றத்தைச் செய்வதில்லை. சட்டத்தில் இந்தத் தண்டனை குறிப்பிடப்படவில்லை என்றும் இது மனித உரிமை மீறல் என்றும் சிலர் எதிர்க்கிறார்கள்.

முள்ளை முள்ளால் எடுக்கும் தண்டனை…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-முதலைக்குப்-பல்-துலக்கும்-முரபயாஷி/article9309189.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: தங்க சைக்கிள்!

 

 
 
masala_2363383f.jpg
 

தங்க நகை வடிவமைப்பாளராக இருக்கிறார் ஹக் பவர் . ஆபரணங்கள் மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களையும் தங்கத்தால் செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார். ஹவுஸ் ஆஃப் சாலிட் கோல்ட் என்ற பெயரில் கம்பெனியை நடத்தி வருகிறார். பல்குத்தும் குச்சி, பற்கள், ஷு லேஸ், காது குடையும் குச்சி, சாப்ஸ்டிக், கண்ணாடி, தட்டு போன்றவற்றைத் தங்கத்தால் வடிவமைத்திருக்கிறார்.

அவர் உருவாக்கிய பொருட்களிலேயே தங்கத்தால் உருவாக்கிய சைக்கிள்தான் மிகவும் திருப்தியளிப்பதாகச் சொல்கிறார். வைரக் கற்கள் பதிக்கப்பட்ட கால்பந்தும் வாடிக்கையாளர்களைக் கவர்கிறது என்கிறார். இந்தப் பொருட்களைப் பரிசாக அளித்தால், வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என்கிறார் பவர். தங்கத்தால் செய்யப்பட்ட சைக்கிளின் விலை ரூ.3 கோடி.

உங்க பொருட்களை வாங்கற அளவுக்கு எங்க கிட்ட பவர் இல்லையே…

மெக்ஸிகோவில் குடிக்கும் மின்சார விளையாட்டு மிகவும் பிரபலமானது. நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு, எலக்ட்ரோகட்டிங் மீது கைகளை வைக்க வேண்டும். பேட்டரி மூலம் கிடைக்கும் மின்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் ஏறும். அவரவர் தாங்கும் சக்திக்கு ஏற்ப மின்சாரத்தின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்லலாம். 20 வோல்ட் முதல் 120 வோல்ட் வரை மின்சாரத்தைப் பாய்ச்ச முடியும்.

ஆனால் 80 வோல்ட் மின்சாரத்துக்கு மேல் யாரும் தாக்குப் பிடிப்பதில்லை என்கிறார் இந்த விளையாட்டை நடத்தி வரும் ஜாவியர். இது பாரம்பரிய விளையாட்டு என்றும் பிறந்தநாள், திருமணம், பொருட்காட்சி, பார்ட்டி என்று சகல நிகழ்ச்சிகளிலும் இந்த விளையாட்டு கண்டிப்பாக இடம்பெறும் என்றும் சொல்கிறார்.

மின்சாரம் அதிகரிக்க, அதிகரிக்க கைகள் விறைத்து, வளையும் அளவுக்கு எல்லாம் சென்றுவிடும். 180 ரூபாயில் ஆரம்பிக்கும் இந்த விளையாட்டு ஒவ்வொரு சுற்றுக்கும் அதிகரித்து, 24 ஆயிரம் ரூபாய் வரை செல்லும். வாடிக்கையாளர்கள் எந்தக் கட்டத்தில் வேண்டுமானாலும் நிறுத்தச் சொல்லலாம்.

ஆபத்தான விளையாட்டா இருக்கே…

பிரிட்டனில் டாட்டூ பார்லர் நடத்தி வருகிறார் ஜோனே பாம். அவரிடம் ஒருவர் வந்து டாட்டூ பற்றி விசாரித்தார். பிறகு வலது கையில் இயேசு படத்தை டாட்டூவாக வரையும்படிக் கேட்டுக்கொண்டார். மிகப் பெரிய படம் என்பதால் 6 மணி நேரம் வரைய வேண்டியிருந்தது. தொடர்ந்து வரைய முடியாது. நடுநடுவே சில நிமிடங்கள் வெளியே சென்று வந்தார் ஜோனே. டாட்டூ வரைந்து முடித்த பிறகு 4,500 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு, அந்த மனிதர் வெளியேறிவிட்டார்.

பணத்தை வைக்கப் போன ஜோனே பதறிவிட்டார். அவரிடமிருந்த 92 ஆயிரம் ரூபாய்களைக் காணவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட படத்தைப் போட்டுப் பார்த்தபோது, டாட்டூ போட்ட மனிதர் பணத்தை எடுத்தது தெரியவந்திருக்கிறது. இயேசுவைப் பற்றிப் பேசிக்கொண்டும், அவரது படத்தை டாட்டூவாகப் போட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் இந்தக் காரியத்தைச் செய்வார் என்று நினைக்கவில்லை என்கிறார் ஜோனே.

ம்… யாரைத்தான் நம்புவதோ…

உஸ்பெகிஸ்தானில் கடந்த வாரம் இறந்து போனார் டுடி யுசுபோவா. இவர்தான் உலகிலேயே அதிகக் காலம் வாழ்ந்தவர் என்கிறார் கள் டுடியின் நண்பர்கள். 1880ம் ஆண்டு பிறந்தார் டுடி. 135 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்திருக்கிறார். அதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றைக் காட்டுகிறார்கள் நண்பர்கள்.

ஜியான் கால்மெண்ட் என்ற 122 வயது பெண்தான் இது வரை உலகிலேயே அதிகக் காலம் வாழ்ந்த பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார். தற்போது அந்தச் சாதனையை மாற்றி, டுடியின் பெயரை கின்னஸில் சேர்க்கச் சொல்கிறார்கள்.

நியாயமான கோரிக்கைதான்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தங்க-சைக்கிள்/article7067769.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: மர்ம பனி உருண்டைகள்!

 

masala_3072955h.jpg
 

கிழக்கு சைபீரியாவின் நைடா கிராமத்தில் அழ கான பனி உருண்டைகள் இயற்கையாகத் தோன்றி யுள்ளன. டென்னிஸ் பந்து அளவில் இருந்து கூடைப் பந்து அளவு வரை இந்தப் பனி உருண்டைகள் காணப் படுகின்றன. மனிதர்களால் செய்யப்பட்ட உருண்டை களைப் போல அத்தனை நேர்த்தியாக இருக்கின்றன. ‘என் வாழ்க்கையில் முதல் முறையாக இதுபோன்ற காட்சியைக் காண்கிறேன். வயதானவர்கள் கூட இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்றே கூறுகிறார்கள். எங்கள் கிராமமே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. சற்றுத் தள்ளித் தள்ளி இருந்த பனி உருண்டைகளை ஒரே இடத்தில் சேர்த்து வைத்திருக்கிறோம். நீண்ட கடற்கரை முழுவதும் பனி உருண்டைகள் இருக்கின்றன. காரணம் ஒன்றும் புரியவில்லை’ என்கிறார் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர். ‘பருவநிலை, காற்று, அலைகளின் தன்மை போன்றவை இதுபோன்ற பனி உருண்டைகளை உருவாக்கியிருக்கின்றன’ என்கிறார் ஆர்டிக், அண்டார்டிக் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த செர்கே லிசென்கோவ்.

மர்ம பனி உருண்டைகள்!

சீனாவின் ஷாங்காய் நகர் மால் ஒன்றில், ஆண்களுக்கான பிரத்யேக நர்சரி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் நீண்ட நேரம் ஷாப்பிங் செய்யும்போது, ஆண்களுக்குப் பொழுது போகாது என்பதால், மாலின் மூன்றாவது தளத்தில் கணவர்களுக்கான நர்சரி அமைக்கப்பட்டிருக்கிறது. பொழுது போக்குவதற்காகப் பத்திரிகைகள், தொலைக்காட்சிப் பெட்டி, ஓய்வெடுப்பதற்கு வசதியான இருக்கைகள் என்று வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பொதுவாகப் பெண்கள் துணிகளையும் அலங்காரப் பொருட்களையும் அதிக அளவில் வாங்குவதாகக் குற்றச்சாட்டு எங்கும் நிலவி வருகிறது. ஆனால் சீனாவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு, பெண்கள் தினசரி வாழ்க்கைக்குரிய அவசியமான வீட்டு உபயோகப் பொருட்களை அதிக அளவில் வாங்குகிறார்கள் என்றும், ஆண்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக அதிக அளவில் பொருட்களை வாங்குகிறார்கள் என்றும் தெரிவிக்கிறது.

இனியாவது பெண்கள் மீது குற்றம் சாட்டாமல் இருந்தால் சரி.

அமெரிக்காவின்

மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஏன் ஆர்பர் நகரில் ஜொனாதன் ரைட், தேவதைகளுக்கான சின்னஞ்சிறு வீடுகளை அமைத்து இருக்கிறார். தான் வசித்து வரும் நூற்றாண்டுப் பழமையான வீட்டை, 1993-ம் ஆண்டு புனரமைப்பு செய்தார். அப்போது வீட்டின் சுவர்களில் பல இடங்களிலும் தேவதைகளுக்கான சின்னஞ்சிறு வீடுகளை உருவாக்கினார். கதவைத் திறந்தால் நிஜ வீடு போல, அனைத்து விஷயங்களும் இருக்கின்றன. இந்த வீடுகளைக் குழந்தைகள் மிகவும் விரும்பினர். பின்னர் நகரின் பல பகுதிகளிலும் தேவதை வீடுகளை உருவாக்கினார். மக்கள் அதிகம் வரக்கூடிய காபி ஷாப், மளிகைக் கடை, பொம்மை கடை போன்றவற்றில் இருந்த தேவதை வீடுகளைப் பார்த்து, எல்லோரும் மகிழ்ந்து போனார்கள். காலப்போக்கில் தேவதைகளுக்காகக் குழந்தைகள் பரிசுப் பொருட்கள், இனிப்புகள், தொப்பிகள், நாணயங்கள், கடிதங்கள் போன்றவற்றை இந்த வீடுகளின் முன்பு வைத்துச் செல்ல ஆரம்பித்தனர். சில இடங்களில், ‘தேவதைகள் ஏற்கெனவே நன்றாகச் சாப்பிட்டு விட்டனர். நீங்கள் வைக்கும் உணவுப் பொருட்களை எறும்புகள்தான் சாப்பிடுகின்றன. அதனால் உணவுகளை வைக்க வேண்டாம்’ என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. தேவதை வீடுகள் சான் பிரான்சிஸ்கோ, நியுயார்கிலும் பரவ ஆரம்பித்துவிட்டன.

தேவதை வீடுகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மர்ம-பனி-உருண்டைகள்/article9318172.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் அமெரிக்க அதிபர்!

 

 
masala_3074081f.jpg
 

நியூயார்க்கில் உள்ள பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ஆரம்பப் பள்ளியில் தேர்தல் நடத்தி முன்கூட்டியே அமெரிக்க அதிபர் யார் என்பதை மிகச் சரியாகக் கணித்து விடுகிறார்கள். 1968-ம் ஆண்டு முதல் கடந்த 48 ஆண்டுகளாக ஒவ்வோர் அதிபர் தேர்தலின்போதும் பள்ளியிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, தேர்தல் என்றால் என்ன, அதை எப்படி நடத்துகிறார்கள், யார் வேட்பாளர்கள், எப்படித் தேர்ந் தெடுக்கப்படுகிறார்கள் என்பதை எல்லாம் விளக்குகிறார்கள். வேட்பாளர்கள் பற்றிய குறிப்புகளும் நிறை, குறைகளும் குழந்தை களுக்கு எடுத்துச் சொல்லப்படுகின்றன. குழந்தைகள் அவரவர் விருப்பத்துக்குரிய வேட்பாளரை ஆதரித்து விவாதங்கள் நடத்து கிறார்கள்.

ஒரு மாதத்துக்குப் பிறகு பள்ளியில் தேர்தல் நடத்தப் படுகிறது. குழந்தைகள் ரகசியமாகச் சென்று, தங்களுடைய வாக்கைச் செலுத்துகிறார்கள். ‘4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாங்களும் தேர்தல் நடத்துகிறோம். குழந்தைகளுக்கும் எங்களுக்கும் மிக சுவாரசியமான விஷயமாக இருக்கிறது. அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தங்களுக்கும் இருக்கிறது என்ற பெருமிதத்துடன் குழந்தைகள் வாக்குகளைச் செலுத்துகிறார்கள். இதுவரை எங்கள் பள்ளி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கின்றனவோ, அப்படித்தான் நாட்டின் தேர்தல் முடிவுகளும் அமைந்திருக்கின்றன.

இது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது’ என்கிறார் பள்ளியின் முதல்வர் பாட்ரிசியா மூர். இந்த முறையும் பள்ளியில் தேர்தலை நடத்தி முடித்துவிட்டனர். ஹிலாரி கிளின்டன் 52% வாக்குகளைப் பெற்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 43% வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்திருக்கிறார். இந்தத் தேர்தலிலும் ஃப்ராங்க்ளின் பள்ளியின் கணிப்பு வெற்றி பெறுமா என்று ஆசிரியர்களும் குழந்தைகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த முறையும் குழந்தைகள் சரியாகக் கணித்திருப்பார்களா?

இங்கிலாந்தில் வசிக்கும் 24 வயது ஜாமி லே ட்விடேலுக்கு 4 வயதில் ஹார்லே, 3 வயதில் ஸ்கைலியர் என இரு குழந்தைகள். இரவு குழந்தைகளைக் குளிக்க வைத்துவிட்டு, தானும் குளித்தார் ஜாமி. திடீரென்று வலிப்பு வந்து, குளியல் தொட்டியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. அம்மா தூங்குகிறார் என்று நினைத்த குழந்தைகள், அருகில் படுத்து உறங்கிவிட்டனர். மறுநாள் காலை பள்ளியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஒருவரும் எடுக்கவில்லை. உடனே ஜாமியின் அம்மாவைத் தொடர்புகொண்டது பள்ளி. “என் மகளுக்கு வலிப்பு வரும் விஷயம் பள்ளிக்குத் தெரியும் என்பதால், உடனே என்னைத் தொடர்புகொண்டார்கள். நான் வீட்டுக்குச் சென்றேன். படுக்கை அறையில் குழந்தைகள் இருந்தனர். ஜாமி குளியலறையில் இறந்து கிடந்தாள். குழந்தைகளுக்குத் தங்கள் அன்பு அம்மா இறந்த விஷயம் தெரியவில்லை. 9 வயதில் வலிப்பு வந்தது. சமீப காலமாக வாரம் ஒருமுறை வலிப்பு வர ஆரம்பித்துவிட்டது. மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். ஜாமி போல சிறந்த அம்மாவைப் பார்க்க முடியாது. குழந்தைகளுக்காகவே அவள் வாழ்ந்தாள். குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்தாள். தினமும் ஒருமுறை என் மகளையும் குழந்தைகளையும் பார்த்துவிடுவேன். இனி குழந்தைகளை நான்தான் வளர்க்க வேண்டும். ஆனால் குழந்தையின் அம்மா தேவலோகம் சென்றுவிட்டாள் என்பதை இந்தக் குழந்தைகளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்றுதான் தெரியவில்லை” என்கிறார் எலிசபெத்.

கொடுந்துயரம்...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குழந்தைகள்-தேர்ந்தெடுக்கும்-அமெரிக்க-அதிபர்/article9323065.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அகதிகள் நுழைவதைத் தடுக்கும் சுவர்

 

 
world_3075201f.jpg
 

ஜெர்மனியின் மியூனிக் நகரில் மிகப்பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜெர்மன் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் 160 அகதி குழந்தைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இந்தச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மக்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் அகதிகள் குடியிருப்புகள் இருக்கின்றன. அகதிகள் வந்த பிறகு இந்தப் பகுதியில் வீட்டின் மதிப்பு மிகவும் சரிந்துவிட்டது. அகதிகளின் கூச்சலால் இங்கு குடியிருக்க பலரும் மறுக்கிறார்கள். அகதிகளை அப்புறப்படுத்தச் சொல்லவில்லை. எங்கள் வசதிக்காக ஒரு சுவரை எழுப்பிக்கொள்கிறோம் என்று நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றமும் அனுமதி வழங்கிவிட்டது. உடனே 4 மீட்டர் உயரத்தில் மிக நீளமான சுவர் ஒன்றைக் கட்டிவிட்டனர். பெர்லின் சுவரின் உயரமே 3.6 மீட்டர்தான். மற்ற பகுதிகளைச் சேர்ந்த ஜெர்மன் மக்கள் இதை ஆதரிக்கவில்லை. இது பயமளிக்கக்கூடியதாகவும் முட்டாள்தனமாகவும் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பவேரியா பகுதியில் உள்ளவர்களில் ஐந்தில் நான்கு பேர் முஸ்லிம், அகதிகள் குறித்து எதிர்மறையான கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அதிபர் ஏஞ்சலா மெர்கலின் அகதிகள் குறித்த நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

சுவரின் வலி தெரிந்தவர்களே இப்படி ஒரு சுவரைக் கட்டலாமா?

சீனாவின் வென்ஜோவ் பகுதியில் உள்ள மிஸ்டர் ஹாட் பாட் உணவகத்துக்கு மகளையும் அம்மாவையும் அழைத்துக்கொண்டு சாப்பிட வந்தார் லின். தண்ணீர் ஊற்றிய பிரச்சினையில் லின்னுக்கும் உணவக ஊழியர் ஜுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தார் லின். உணவக மேலாளர்களில் ஒருவர் பார்த்துவிட்டார். சீனாவில் சமூக வலைதளங்களில் எழுதப்படும் விமர்சனங்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் ஜுவை அழைத்து விஷயத்தைச் சொன்னார் மேலாளர். லின்னிடம் விமர்சனத்தை எடுத்துவிடும்படி கேட்டார் ஜு. லின் மறுத்தார். கோபத்துடன் சென்ற ஜு, கொதிக்கும் சூப்பை லின் மீது கொட்டினார். தலை, முகம், கழுத்து, கால் என்று லின்னின் உடல் முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் லின். ஜு கைது செய்யப்பட்டார். வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் ஜு. விசாரணையின் முடிவில் 22 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. வேலை நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் உணவகத்துக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. லின்னின் பிளாஸ்டிக் சர்ஜரி செலவுகளுக்காக 23 லட்சம் ரூபாயை உணவகம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சே, ஒரு நொடி கோபம் எவ்வளவு மோசமான பின்விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனைத் தோற்கடித்து, குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். நியூயார்க் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பள்ளி மாணவர்களின் தேர்தல் கணிப்பு, கடந்த 48 ஆண்டுகளில் முதல்முறையாகத் தவறிவிட்டது.

ம்... அடித்த காற்றில் அம்மியே பறந்து போய்விட்டதாம்...

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அகதிகள்-நுழைவதைத்-தடுக்கும்-சுவர்/article9327240.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வருமான வரி கட்டும் பூனை!

 

 

  • masala1_2362206g.jpg
     
  • masala_2362207g.jpg
     

இந்தோனேஷியாவில் மனிதனால் கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 9000 முதல் 20000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடமாக இருக்கலாம் என்கிறார் ஆராய்ச்சியாளர் டானி ஹில்மன். ஒரு பிரமிடு கட்டிடமாக இருக்கலாம் என்றும் வழிபாட்டுக்குரிய விஷயங்களை இங்கே காண முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

இதுவரை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரமிடுகள் பிரேஸிலிலும் எகிப்திலும் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் முன்பே இந்தோனேஷியாவில் பிரமிடு கட்டப்பட்டிருக்கிறது. சுவர்கள், அறைகள், படிகள் எல்லாம் கொண்ட கட்டிடமாக இந்தப் பிரமிடு அமைந்திருக்கிறது. 311 அடி உயரமும் 400 படிகளும் கொண்ட மிகப் பெரிய கட்டிடம் இது.

அம்மாடி! மனிதன் மகத்தானவன் தான்!

உலகிலேயே மிகப் பணக்காரப் பூனை ஃபேஷன் டிசைனர் கார்ல் லாகெர்ஃபெல்ட் வளர்க்கும் பூனைதான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கார், அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்களில் பங்கேற்கும் இந்தப் பூனையின் ஆண்டு வருமானம் சுமார் 18 கோடிகள். 3 வயதான இந்த வெள்ளை சியாமிஸ் பூனையின் பெயர் செளபேட். 82 வயது கார்லை விட செளபேட் அதிகம் சம்பாதிக்கிறது.

கார்லும் செளபேட்டும் நியூயார்க்கில் ஓர் இரவு தங்குவதற்கு 38 ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்கிறார்கள். இந்தப் பூனையைக் கவனித்துக்கொள்வதற்கு மட்டும் இரண்டு உதவியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற விலங்குகளையோ, குழந்தைகளையோ இந்தப் பூனைக்குப் பிடிப்பதில்லை. கார்ல் மற்றும் இரண்டு உதவியாளர்களிடம் மட்டுமே அன்பாகப் பழகுகிறது பூனை. வெளியே செல்லும்போது புகைப்படம் எடுப்பதோ, செல்ஃபி எடுப்பதோ செளபேட்டுக்குப் பிடிக்காத விஷயங்கள்.

வருமான வரி எல்லாம் சரியா கட்டுதா!

ஜாவாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மலையில் சுண்டெலிகள் பாட்டுப் பாடுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். ஆண் சுண்டெலிகள் பெண் சுண்டெலிகளைக் கவர்வதற்காக இந்தப் பாடல்களைப் பாடுகின்றன. ஆனால் சுண்டெலி பாடுவதை சாதாரணமாக மனிதர்களால் கேட்க இயலாது என்கிறார்கள் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

பாடும் பறவைகளைப் போல, ஆண் சுண்டெலி பெண் சுண்டெலிக்காகப் பாடுகிறது. பெண் சுண்டெலி வருவதை உணர்ந்தவுடனோ, பார்த்தவுடனோ வேறு ஒரு பாட்டுக்கு மாறிவிடுகிறது என்கிறார்கள். அதாவது அலைந்து திரிந்து தேடி சக்தியை வீணாக்காமல், பாடி அழைக்கிறது ஆண் சுண்டெலி.

அடடா! அங்கேயும் பாட்டுப் போட்டி எல்லாம் நடக்குமா!

நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனில் கப்பாடப்பா என்ற விநோதமான போட்டி ஒன்று நடைபெற்றிருக்கிறது. விதவிதமான தேநீர் தயாரிக்கும் கெட்டில்களை லேசர் மூலம் இயக்கி, எந்த கெட்டில் முதலில் வருகிறது என்ற போட்டியை நடத்தியிருக்கிறார்கள். பெரிய அறைக்குள்ளே சிறிய சுரங்கம், குன்று போன்றவை அமைத்து, போட்டியை நடத்தியிருக்கிறார்கள்.

இந்த கெட்டில் போட்டியைக் காண டிக்கெட்கள் வாங்கிக்கொண்டு ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு கெட்டிலும் வித்தியாசமான வடிவமைப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

புதுமையான போட்டியா இருக்கே…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வருமான-வரி-கட்டும்-பூனை/article7064423.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அழகான குறைபாடு!

 

 
masala_3078128f.jpg
 

தென் கரோலினாவில் வசிக் கும் 18 மாதக் குழந்தை மில்லி அன்னாவின் முன்னந் தலை முடி, பிறக்கும்போதே வெள்ளையாக இருந்தது. அரிய வகை நிறமிக் குறைபாட்டால், முடிகளும் அவற்றைச் சுற்றியுள்ள தோல் பகுதியும் நிறத்தை இழந்து விடுகின்றன. இந்தக் குறைபாடு மில்லி அன்னாவின் குடும்பத்தில் 4 தலைமுறைகளாக இருந்து வருகிறது. மில்லியின் அம்மா பிரியான்னா, பிரியான்னாவின் அம்மா ஜெனிபர், ஜெனிபரின் அம்மா ஜோனுக்கும் பிறக்கும்போதே முன்னந்தலை முடி வெள்ளையாக இருந்தது. ‘எனக்குச் சில ஆண்டுகளுக்குப் பின் பிறந்த தங்கைக்கு முடி சாதாரணமாகத்தான் இருந்தது. நான் வளர ஆரம்பித்த பிறகு, நண்பர்களால் அதிக அளவுக்குக் கிண்டல் செய்யப்பட்டேன்.

அந்த வயதில் இது ஒரு குறைபாடு என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு மட்டுமே ஏன் இப்படி இருக்கிறது என்று கவலைப்படாத நாளே இல்லை. வளர்ந்த பிறகு எனக்குத் தெளிவு வந்துவிட்டது. நான் தனித்துவம் கொண்டவளாக என்னைக் கருதினேன். இப்போது நான் இன்னும் அழகாக இருப்பது போலத் தோன்றியது. என் குழந்தை இந்தக் குறைபாட்டோடு பிறக்கக் கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால் அவள் பிறந்த பிறகு, என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவளது முடி குறித்து தெளிவாகப் புரிய வைத்துவிடுவேன். தனித்துவம் என்பதைச் சொல்லி, தன்னம்பிக்கை ஏற்படுத்திவிடுவேன். அதனால் அவளால் யார் கிண்டல் செய்தாலும் சமாளித்துக்கொள்ள முடியும்’ என்கிறார் பிரியான்னா.

அழகான குறைபாடு!

சிம்பன்சிகள் கருவிகளைக் கையாள்வதில் சிறந்தவை. திடீரென்று ஒரு நீர்நிலையைக் கடக்க வேண்டும் என்றால், சட்டென்று தண்ணீருக்குள் இறங்கிவிடுவதில்லை. ஒரு குச்சியை எடுத்து, ஆழம் பார்த்த பிறகே தண்ணீருக்குள் இறங்கக்கூடியவை. கரையான் புற்றுக்குள் ஒரு குச்சியை விட்டு, கரையான்களை எடுத்துச் சாப்பிடக்கூடியவை. தம் குட்டிகளுக்குக் கருவிகளை எப்படிக் கையாள்வது என்று, விளக்கமாகச் சொல்லித் தரக்கூடியவை. தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியில், ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சிம்பன்சிகள் புதிய விஷயத்தை அறிந்து வைத்திருக்கின்றன. ஆறு, குளம் போன்றவற்றின் கரைகளில் நின்றுகொண்டு, மனிதர்கள் மீன் பிடிப்பதைப் போலவே 4 மீட்டர் நீளமுள்ள குச்சிகளைத் தண்ணீருக்குள் விடுகின்றன. குச்சி மூலம் அடியில் இருக்கும் பாசிகளை எடுத்து, உண்கின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் சிம்பன்சிகள் அனைத்தும், மீன் பிடிப்பதைப் போல பாசிகளைக் குச்சியில் எடுத்து உண்பது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. மிகவும் நீளமான குச்சியாக இருந்தால், அவற்றைச் சிறிதாக உடைத்துப் பயன்படுத்தவும் செய்கின்றன. வறண்ட காலங்களில் சிம்பன்சிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதனால் பாசிகளைச் சாப்பிட்டு, சத்துகளைப் பெற்றுக்கொள்கின்றன. இந்தப் பகுதிக்கு அருகில் வசிக்கக்கூடிய மற்ற சிம்பன்சிகள் இவை போன்று செய்வதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் மீன் பிடிப்பதைப் பார்த்து, கற்றுக்கொண்டிருக்குமோ?

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரு மீனவர்கள், மிகப் பெரிய கொம்பன் சுறா ஒன்றைப் பிடித்திருக்கிறார்கள். 3.8 மீட்டர் நீளம் கொண்ட இந்தச் சுறாவை 90 நிமிடங்கள் போராடி பிடித்திருக்கிறார்கள். சுறாவை அளந்து பார்த்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துவிட்டு, மீண்டும் கடலுக்குள் விட்டுவிட்டனர்.

ராட்சத சுறா!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அழகான-குறைபாடு/article9337711.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐயோ... பாம்புடன் குடித்தனமா?

 

 
 
snake_3079043f.jpg
 

தாய்லாந்தின் காஞ்சனாபுரியில் வசிக்கிறார் வார்ரனன் சரசலின். 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காதலி, நோயால் இறந்து விட்டார். அவரது இழப்பை வார்ரனனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. காதலியின் நினைவாகவே வாழ்ந்தவருக்கு, ஒருநாள் வெள்ளை நாகப்பாம்பைப் பார்த்ததும் காதலி மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார் என்று தோன்றியது. நாகப்பாம்புடன் பழக ஆரம்பித்தார். விளையாட ஆரம்பித்தார். விரைவிலேயே இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறி விட்டனர். வார்ரனன் சொல்வதை எல்லாம் நாகப்பாம்பு கேட்டுக் கொண்டது. வார்ரனன் மிகவும் அன்பாகக் கவனித்துக்கொண்டார். நாகப்பாம்மைத் திருமணமும் செய்து கொண்டார். 10 அடி நீளத்துக்கு வளர்ந்துள்ள நாகப்பாம்புடன் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிடுகிறார். இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒன்றாகப் பார்க்கிறார்கள். கேரம் விளையாடுகிறார்கள். ஒரே படுக்கையில் தூங்குகிறார்கள். தினமும் காரில் பல மைல் தூரம் பயணம் செய்கிறார்கள். பூங்கா, பொருட்காட்சி போன்ற மக்கள் கூடும் இடங்களில் வார்ரனனையும் நாகப்பாம்பையும் மக்கள் அடிக்கடி பார்க்கிறார்கள். திருமணம் ஆனதும் நாகப்பாம்புடன் தேனிலவுக்கு சிங்கப்பூர் சென்று வந்ததாக, வார்ரனன் ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். என்னதான் செல்லப் பிராணியாக இருந்தாலும் பாம்பு, பாம்புதான். ஏதாவது புரிதலில் தவறு நிகழ்ந்தால் ஆபத்து என்று பலரும் எச்சரிக்கிறார்கள். “புத்த மதத்தில் மனிதர்கள் இறந்த பிறகு விலங்குகளாக மறுபிறவி எடுப்ப தாக நம்புகிறோம். என் காதலியும் நாகப்பாம்பாகப் பிறந்திருக்கிறாள். ஒரு சாதாரண நாகப்பாம்பால் இவ்வளவு தூரம் அன்பாகவும் அமைதி யாகவும் நடந்துகொள்ள இயலுமா? என் காதலி என்பதால்தான் நான் பேசுவதைப் புரிந்துகொள்கிறாள். மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் வார்ரனன் சரசலின்.

ஐயோ... பாம்புடன் குடித்தனமா?

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி அமெரிக்காவில் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட தங்கள் எதிர்ப்பைக் காட்டி, போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். டெக்சாஸைச் சேர்ந்த ஒரு சிறுவன், பள்ளியில் விளையாட்டுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், ட்ரம்புக்கு வாக்களித்து இருக்கிறான். வீட்டில் மகிழ்ச்சியுடன் இந்தத் தகவலைச் சொன்னதும் அவனது அம்மா கடுங்கோபம் அடைந்தார். ஒரு பெட்டியில் சிறுவனின் துணிகளை வைத்து, ஓர் அட்டையில் ’ட்ரம்புக்கு வாக்கு செலுத்தியதற்காக என் அம்மா வெளியில் அனுப்பிவிட்டார்’ என்ற தகவலை எழுதி கையில் கொடுத்து, வெளியில் தள்ளிவிட்டார். அதிர்ந்து போன சிறுவன், கதறி அழுகிறான். அண்ணனை வெளியே அனுப்பியதைப் பார்த்து அவனின் தம்பியும் அழுகிறான். ‘ட்ரம்ப்பை ஆதரிப்பவன் இந்த வீட்டுக்கு வேண்டாம்’ என்கிறார் அம்மா. நீண்ட நேர அழுகைக்குப் பின், எதற்காக ட்ரம்புக்கு வாக்கு செலுத்தினாய் என்று அம்மா கேட்க, அவரைத்தான் அடிக்கடி தொலைக்காட்சியில் பார்த்தேன் என்று கூறியிருக்கிறான் சிறுவன். இந்த வீடியோ காட்சி வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

யார்தான் ட்ரம்புக்கு வாக்கு போட்டிருப்பார்கள்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஐயோ-பாம்புடன்-குடித்தனமா/article9340629.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: மூன்று பேர் திருமணம்!

 
masala_2360831f.jpg
 

ரஃபேலா, ரோச்செலா, டகியானே பினி மூவரும் ஒன்றாகப் பிறந்த சகோதரிகள். பிரேஸிலில் வசிக்கும் இந்த மூன்று சகோதரிகளும் உருவத்தில், எண்ணத்தில், விருப்பங்களில் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். பிறந்தநாளை ஒன்றாகக் கொண்டாடி வந்த இவர்கள், திருமண நாளையும் ஒன்றாக வாழ்நாள் முழுவதும் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

ரஃபேலாவுக்கு 19 வயதிலேயே காதலர் கிடைத்துவிட்டார். ஆனாலும் ஒரே நாளில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதால் 10 வருடங்கள் காத்திருந்தார். 29 வயதில்தான் மூவருக்கும் மாப்பிள்ளைகள் அமைந்தனர்.

மூன்று சகோதரிகளும் ஒரே மாதிரியான ஆடை, தலை அலங்காரம், ஆபரணங்களை அணிந்திருந்தனர். மணமகன்களிடையே பயங்கரக் குழப்பம். யார் தன்னுடைய இணை என்று தெரியாமல் திண்டாடினார்கள்.

மாப்பிள்ளைகளுக்கு உதவும் எண்ணத்தில் மூவருக்கும் வெவ்வேறு பூச்செண்டுகளை அளித்து, அவர்களின் பெயர்களையும் சொல்லிவிட்டார் மாமியார். குழப்பம் தீர்ந்த மகிழ்ச்சியில் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

கலாட்டா கல்யாணம்!

இத்தாலியின் பைசா நகரில் இருக்கிறது உலகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரம். கோபுரம் அதிகமாகச் சாயும்போது விழுந்து விடாமல் இருப்பதற்காக புனரமைப்புப் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்தப் பணிக்காக ஏராளமாக செலவு ஆகிறது. அதைச் சரிகட்டுவதற்காக, கோபுரத்தின் சில தளங்களைத் தங்கும் விடுதியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.

பணக்கார்கள் மட்டும் தங்கும் விதத்தில் ஓர் இரவு வாடகையாக சுமார் 13 லட்சம் ரூபாய் வசூலிக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள். இந்தத் திட்டம் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறது. இங்கே சமைக்கும் வசதி கிடையாது. அறைகளை வாடகைக்கு விட்டால் தண்ணீர் வசதி, கழிவறை வசதி எல்லாம் செய்து தர வேண்டும். இந்தப் பழைய கட்டிடத்தைத் துளையிட்டு, தண்ணீர்க் குழாய்களைப் பொருத்த முடியுமா என்றும் யோசிக்கிறார்கள்.

வரலாற்றுப் புகழ் பெற்ற சின்னத்தை விடுதியாக மாற்றும் திட்டத்தையும், கட்டிடத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் திட்டத்தையும் ஏராளமானவர்கள் எதிர்க்கிறார்கள். இன்று யார் வேண்டுமானாலும் பைசா கோபுரத்தில் ஏறிச் சென்று கண்டுகளிக்கலாம். விடுதியானால் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் சொல்கிறார்கள்.

கட்டிடம் ஆரம்பித்ததிலிருந்து பிரச்சினைகள் ஓயவே இல்லை

தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரகா கம்மா வனப் பகுதியைச் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் ஓர் அரியக் காட்சியைக் கண்டிருக்கிறார்கள். ஓர் ஒட்டகச்சிவிங்கியின் பிரசவத்தை நேரில் கண்டு வியந்துள்ளனர். 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தது குட்டி.

நிலத்தில் விழுந்த குட்டியை அன்புடன் முத்தமிட்டது தாய். 15 நிமிடங்களில் குட்டியைச் சுத்தம் செய்துவிட்டது. பிறகு மெதுவாக எழுந்து நின்ற குட்டி, தாயிடம் பாலைக் குடித்தது. பிரசவம் நிகழும் வரை பெண் ஒட்டகச்சிவிங்கிக்கு அருகிலேயே ஆறுதலாக நின்றுகொண்டிருந்தது ஆண் ஒட்டகச்சிவிங்கி. இந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

அதெல்லாம் சரி… ஒட்டகச்சிவிங்கியிடம் அனுமதி வாங்கினீங்களா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மூன்று-பேர்-திருமணம்/article7060999.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிலைகளின் சரணாலயம்!

 

 
silaigal_3080918f.jpg
 

ஹாங்காங் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தெய்வச் சிலைகள் உடைந்து போனால், அவற்றைக் குப்பையில் வீசாமல் சாலை ஓரங்களில் வைத்து விடுகின்றனர். தேவையானவர்கள் அவற்றைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள்.

85 வயது வோங் விங் பாங், சாலை ஓரங்களில் இருக்கும் உடைந்த புத்தர், டாவோ, ஏசு மற்றும் உள்ளூர் தெய்வங்களின் சிலைகளை எல்லாம் எடுத்து வந்து, ஓரிடத்தில் சேகரித்து வந்தார். இன்று உடைந்த சிலைகள் எல்லாம் சேர்ந்து அழகிய சிலைகள் சரணாலயமாக மாறிவிட்டது.

“நான் ஓய்வு பெற்ற பிறகு, பொழுதுபோக்குக்காக உடைந்த சிலைகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சிறிது காலத்தில் சிலைகளைச் சேகரிப்பதே என் முக்கியமான வேலையாக மாறிவிட்டது. இப்போதெல்லாம் வீடுகள், கடைகள், உணவகங்கள் புதுப்பிக்கப்படும்போது, சிலைகளைச் சரணாலயத்தில் வைத்துவிடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஏராளமான சிலைகள் வந்துகொண்டே இருக்கின்றன. சிலையைச் சுத்தம் செய்து, உடைந்ததைச் சரி செய்து, காட்சிக்கு வைத்து விடுவேன். 17 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான சிலைகள் சேர்ந்துவிட்டன. இந்த வயதிலும் நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு இங்குள்ள தெய்வச் சிலைகள்தான் காரணம் என்று நம்புகிறேன்” என்கிறார் வோங் விங் பாங்.

சிலைகளின் சரணாலயம்!

இங்கிலாந்தில் வசித்த ஜுலியாவுக்கும் காரெத் ஷோனுக்கும் வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருந்தது. வித்தியாசமாக வாழ வேண்டும் என்று முடிவு செய்தனர்.

ஹங்கேரியில் ஒரு பழைய வீட்டை வாங்கி, மாரமத்துப் பணிகளைச் செய்தனர். அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டனர். தங்களுக்கான காய்கறிகள், கீரைகள், பழங்களை வீட்டுத் தோட்டத்தில் இருந்து பெற்றுக்கொள்கின்றனர். வீட்டிலேயே கோழிகள், வாத்துகள், முயல்களை வளர்ப்பதால் முட்டை, இறைச்சியையும் வெளியில் வாங்குவதில்லை. சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்கின்றனர்.

தோட்டத்தில் இருக்கும் மரங்களை வைத்து, விறகு அடுப்பில் சமையல் செய்துகொள்கிறார்கள். மிகக் குறைவான செலவில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

“நான் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவள். மிக வசதியான குடும்பம். ஆனால் அந்த வாழ்க்கை பிடிக்காமல், இங்கிலாந்து வந்தேன். முடி அலங்காரம் செய்யும் வேலையைப் பார்த்தேன். அப்போதுதான் காரெத் ஷோனைச் சந்தித்தேன். இருவரும் திருமணம் செய்துகொண்டோம். ஆனாலும் வாழ்வில் சுவாரசியம் குறைவதாகத் தோன்றியது. இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்தபோது, பலரும் எங்களைப் பைத்தியம் என்றார்கள். எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை நாங்கள் அமைத்துக்கொண்டோம். உணவுப் பொருட்களை நாங்களே விளைவித்துக்கொள்கிறோம். இணைந்து உழைக்கிறோம். மிகக் குறைவான பணமே எங்கள் வாழ்க்கைக்குத் தேவையாக இருக்கிறது. இந்த எளிய வாழ்க்கையில் அளவிட முடியாத சந்தோஷம் கிடைத்திருக்கிறது” என்கிறார் ஜுலியா.

எளிமையே நிறைவு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிலைகளின்-சரணாலயம்/article9347934.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அற்புதமான தேனிலவு!

 
masala_3081969f.jpg
 

புகைப்படக் கலைஞர் காரோல் நியனார்டோவிஸ் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 45 நாட்கள் தேனிலவு பயணமாக நார்வே, ஸ்வீடனுக்கு இருவரும் சென்றனர். கடுமையான குளிர் காலத்தில் 6,200 மைல்கள் காரில் பயணம் செய்து, 96 மைல்கள் நடந்து, அற்புதமான இயற்கைக் காட்சிகளுடன் மனைவியைப் புகைப்படம் எடுத்திருக்கிறார். அழகான இடங்களைத் தேடி 25 கிலோ எடையைச் சுமந்துகொண்டு, ஆங்காங்கு கூடாரம் அமைத்து தங்கி, குளிரைச் சமாளித்து, 580 புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வோரு இடத்திலும் மணமகள் திருமண ஆடையுடன் காட்சியளிக்கிறார். “யாருக்கும் அதிகம் தெரியாத இடங்களுக்குச் செல்வது என்று முடிவு செய்தோம். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் அதிக உழைப்பைச் செலவிட்டிருக்கிறோம். அற்புதமான தருணத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறோம். குளம், குட்டை, மலை, பாறை, சகதி, காடு என்று கடினமான பயணங்களை மேற்கொண்டோம். ஆனால் இன்று உலகின் மிக அற்புதமான தேனிலவு ஆல்பங்களில் ஒன்று என்று பாராட்டும்போது, அந்தக் கஷ்டம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. எங்கள் வாழ்வில் இது மிக அற்புதமான பயணம்” என்கிறார் காரோல்.

உழைப்புக்கு ஏற்ற பலன்!

கழுதையின் தோல் ஜெலட்டின், சீன மருந்துகளில் சேர்க்கப்படும் முக்கியமான மூன்று பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது சாதாரண சளியில் இருந்து தூக்கமின்மை, ஆண்மை குறைபாடு போன்ற பல நோய்களுக்கு அளிக்கப்படும் மருத்துகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இளமையைத் தக்கவைத்துக் கொள்ளவும் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளவும் கழுதையின் ஜெலட்டினுக்கு சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், இதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான கழுதைகள் கொல்லப்பட்டு, சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வடபகுதியில் 100 தொழிற்சாலைகள் ஜெலட்டின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. தேவை போக, மீதியை உலகச் சந்தைக்கு அனுப்பி வைக்கிறார்கள். 1990-ம் ஆண்டு சீனாவில் 1 கோடியே 10 லட்சம் கழுதைகள் இருந்தன. இது இப்போது 60 லட்சமாகக் குறைந்துவிட்டது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான கழுதையின் தோல்கள் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு 4,500 ரூபாயாக ஆக இருந்த கழுதையின் விலை, இன்று 22 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டது. கழுதைகளைக் கொல்ல சீன அரசு ஏற்கெனவே தடை விதித்திருக்கிறது. தற்போது நைஜீரிய அரசும் கழுதைகள் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. சீன மருத்துவத்தில் ஆரோக்கியத்துக்காகச் சேர்க்கப்பட்ட ஜெலட்டினை, ஆரம்பத்தில் ராஜ பரம்பரையினர்தான் பயன்படுத்தி வந்தனர். இன்றோ சாதாரண மக்களும் பயன்படுத்துவதால், தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் மூடநம்பிக்கை என்றும் அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனாலும் மக்கள் ஏதோ மாயாஜாலம் நிகழும் என்று நம்புகிறார்கள்.

ம்… மக்களின் நம்பிக்கைகளைத் தகர்ப்பது எளிதல்ல…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அற்புதமான-தேனிலவு/article9352792.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மனித பாறைகள் அருங்காட்சியகம்!

 

masala_3083192f.jpg
 
 

ஜப்பானின் சைதமா நகரில் அமைந்திருக்கிறது பாறைகள் அருங்காட்சியகம். இங்கே உள்ள 900 பாறைகள் மனிதர்களின் முகங்களை ஒத்திருப்பதுதான், இதன் சிறப்பு. மற்றவை ஈடி, மிக்கி மவுஸ், நீமோ மீன் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களின் உருவத்தைக் கொண்டுள்ளன. ஷோஜோ ஹயாமா என்பவர் கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பாறைகளைச் சேகரித்திருக்கிறார். இயற்கையை விஞ்சிய ஓவியர்கள் இந்த உலகில் இல்லை என்று சொல்லும் ஷோஜோ, ஓர் அருங்காட்சியகத்தை உருவாக்கவும் எண்ணினார். சாதாரண மனிதர்களின் முகங்களில் இருந்து இசைக் கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி, முன்னாள் ரஷ்ய அதிபர் மிகைல் கார்பச்சேவ் ஆகிய பிரபலங்களின் முகங்கள் வரை இந்தப் பாறை அருங்காட்சியகத்தில் பார்க்க முடியும். 2010-ம் ஆண்டு ஷோஜோ ஹயாமா மறைந்த பிறகு, 1,700 வித்தியாசமான பாறைகளை வைத்து அருங்காட்சியகத்தை உருவாக்கினார் அவரது மகள் யோஷிகோ ஹயாமா.

அட, வித்தியாசமான அருங்காட்சியகம்!

லாத்வியா நாட்டைச் சேர்ந்த 73 வயது முதியவர், 15 நிமிட வீடியோ மூலம் உலகப் புகழ் பெற்றுவிட்டார். கோக் பானம் துரு கறைகளை அகற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாயின. அவற்றைப் பார்த்து, தானும் ஒரு பரிசோதனை முயற்சியில் இறங்கினார். தனது தோட்டத்தில் மிகப் பெரிய குழியை வெட்டி, பிளாஸ்டிக் தாளால் அதை மூடினார். 6 ஆயிரம் 2 லிட்டர் கோக் பாட்டில்களை வாங்கி வந்து, தொட்டிக்குள் ஊற்றினார். அதில் 40 கிலோ சமையல் சோடாவைக் கொட்டினார். கோக்கும் சோடாவும் வேதிவினை புரிந்து, தன்னுடைய துருப் பிடித்த ஆடி காரை சுத்தம் செய்யும் என்ற நம்பிக்கையில், காருடன் தொட்டிக்குள் இறங்கினார். நண்பர்கள் மூலம் இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்தார். ஆனால் 6 லட்சம் ரூபாய் செலவு செய்தும் ஆடி காரின் துருவைச் சுத்தம் செய்யவில்லை கோக். ஆனால் ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த ஆடி கார் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. கோக் பானத்தில் துருவை நீக்கும் எந்த விஷயமும் சேர்க்கப்படவில்லை என்பதை இதற்குப் பிறகும் முதியவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சமையல் சோடா சேர்த்ததினால்தான் கோக் வேலை செய்யவில்லை என்கிறார்.

அடுத்த பரிசோதனையை சிறிய அளவில் திட்டமிட்டால் சரி…

விலங்குகள் நல ஆர்வலர்களான லூசியாவும் சார்லியும் சேர்ந்து குதிரைகளுக்கான பிளாஸ்டிக் ஷூக்களை உருவாக்கி இருக்கிறார்கள். ‘மெகாசஸ் ஹார்ஸ்ரன்னர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஷுக்கள், இரும்பு லாடங்களை விட வசதியாகவும் மென்மையாகவும் இருக்கின்றன. குதிரைகளுக்கும் குதிரை ஓட்டிகளுக்கும் சுகமான பயணத்தை அளிக்கும். பிளாஸ்டிக் ஷூக்களை அணிவிப்பதும் அகற்றுவதும் எளிது. கரடுமுரடான சாலைகளில் கூட குதிரைகள் சிரமமின்றிச் செல்ல முடியும் என்கிறார்கள். 4 ஷூக்களின் விலை 15 ஆயிரம் ரூபாய்.

விலையைக் கேட்டால்தான் மயக்கம் வருது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனித-பாறைகள்-அருங்காட்சியகம்/article9356642.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அதிக லாபம் தரும் பலூன் மீன் பிடிப்பு!

 

 
masala_3084891f.jpg
 
 

கியூபாவில் மீன்களைப் பிடிப்பதற்கு ஆணுறைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுமக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருந்து வருவதையோ, கியூபாவில் இருந்து செல்வதையோ தடுப்பதற்காக ஹவானா கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட கடல் பகுதியில்தான் விலை மதிப்புமிக்க, மிகப் பெரிய மீன்கள் காணப்படுகின்றன. 900 அடி தூரத்தில் இருக்கும் மீன்களைப் பிடிக்க கடலுக்குள் இறங்க முடியாது. அவற்றைப் பிடிப்பதற்காக மக்களே ‘பலூன் மீன் பிடிப்பு’ என்ற புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆணுறைகளை வாங்கி, பலூன் போல பெரிதாக ஊதுகிறார்கள்.

5 பலூன்களை ஒரு மெல்லிய கம்பியில் கட்டுகிறார்கள். கொக்கியில் மீனுக்கான உணவையும் வைக்கிறார்கள். மிகப் பெரிய தூண்டில் கம்பியில் பலூன்கள் கட்டிய மெல்லிய கம்பியை இணைக்கிறார்கள். கரையில் அமர்ந்து தூண்டில் போடுகிறார்கள். மெல்லிய கம்பியை, பலூன்கள்தான் 900 அடி தூரத்துக்கு காற்று மூலம் இழுத்துச் செல்கின்றன. உணவைப் பார்த்து வரும் மீன்கள் தூண்டிலில் மாட்டிக்கொள்கின்றன. மெதுவாகத் தூண்டிலைக் கரைக்கு இழுத்து, மீன்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

“தொடக்கத்தில் தக்கைகளை வைத்துதான் மீன் பிடித்துக்கொண்டிருந்தோம். அது தண்ணீரில் ஊறி விடுவதால், மீன்கள் அகப்படுவதில் சிக்கல் இருந்தது. அதனால் ஆணுறைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். இதை யார் கண்டுபிடித்தது என்று தெரியாது. மிகக் குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடிய மீன் பிடிப்பாக இருக்கிறது. கரைகளில் அமர்ந்து பலூன் மூலம் மீன் பிடிப்பது சட்டப்படி குற்றமும் இல்லை” என்கிறார் மீனவர் மைக்கேல் பெரெஸ். கியூபாவில் பலூன் மீன் பிடிப்பு மிகப் பிரபலமாக மாறிவிட்டது. மீன்கள் பெருகும் காலங்களில் அதிக அளவில் ஆணுறைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பலூன் மீன் பிடிப்பு!

அமெரிக்காவின் ஜான்சன் பகுதியில் இருக்கிறது புகழ்பெற்ற ஸ்டெல்லா உணவகம். இதன் மீது சமீபகாலமாக எதிர்மறையான விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, உணவகத்தின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இங்கே சாப்பிட வருகிறவர்களிடம் யாருக்கு வாக்கு அளித்தீர்கள் என்று கேட்கிறார்கள். ட்ரம்புக்கு வாக்களித்திருந்தால், 650 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஹிலாரிக்கு வாக்களித்திருந்தால் 325 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும்.

உணவகத்தின் இந்தப் பாரபட்சம் இணையதளங்களில் மிக மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. “என் மனைவியுடன் உணவகத்துக்குச் சென்றேன். வாயிலில் ‘நீங்கள் வாக்கு செலுத்தியதற்காக இங்கே பாரபட்சம் காட்டப்படுகிறது’ என்ற அறிவிப்பைப் பார்த்ததும் விளையாட்டுக்கு வைத்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் நுழைவுக் கட்டணம் செலுத்தும் இடத்தில், நீங்கள் யாருக்கு வாக்கு செலுத்தினீர்கள் என்று கேட்டு, கட்டணத்தையும் சொன்னபோது நான் அதிர்ந்து போனேன். நாங்கள் சாப்பிடாமல் திரும்பி விட்டோம்” என்கிறார் எரிக் ஸ்டெல்டர்.

ட்ரம்ப் எஃபக்ட்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அதிக-லாபம்-தரும்-பலூன்-மீன்-பிடிப்பு/article9361030.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தை நோயாளிகளை மகிழ்ச்சிப்படுத்தும் சிறுவன்!

 

 
masala_3086068f.jpg
 
 

தாஸ்மேனியாவில் வசிக்கும் 12 வயது கேம்பல் ரிமெஸ், இதுவரை 800 பொம்மைகளை குழந்தை நோயாளிகளுக்கு வழங்கியிருக்கிறான்.

3 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனைகளில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு அளிக்க விரும்புவதாகவும், பொம்மைகளை வாங்கித் தரும்படியும் தன் பெற்றோரிடம் கேட்டான் கேம்பல். ஆனால் பெற்றோரால் கேம்பல் கேட்ட பரிசுகளை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. ஆனாலும் கேம்பலின் இரக்க குணத்தை ஊக்குவிக்கும் வகையில், வீட்டிலேயே ஓவியங்கள் வரைந்து, பரிசாக அளிப்போம் என்றார் அம்மா சோனியா. ஆனால் கேம்பலுக்கு அதில் விருப்பம் இல்லை.

இணையதளங்களில் வீட்டிலேயே பொம்மை செய்வது எப்படி என்பதைத் தேடிப் படித்தான். வீடியோக்களைப் பார்த்தான். ஒரு துணியை வெட்டி அம்மாவிடம் கொடுத்து, தைத்து தரச் சொன்னான். முதல் பொம்மை செய்வதற்கு 5 மணி நேரங்கள் ஆனது. சோனியா பொறுமை இழந்தார். ஆனாலும் கேம்பல் விடவில்லை. அம்மாவுக்கு எளிமையாகப் பொம்மை செய்யும் வித்தையைக் கற்றுக் கொடுத்தான். வெகுவிரைவில் அவனே பொம்மைகளைத் தைக்க ஆரம்பித்தான்.

ஒருநாளைக்கு ஒரு பொம்மை செய்ய ஆரம்பித்தபோது, ‘365 பொம்மைகள்' திட்டத்தை உருவாக்கினான். கடந்த 3 ஆண்டுகளில் 800 பொம்மைகளைச் செய்து, மருத்துவமனையில் இருக்கும் குழந்தை நோயாளிகளுக்கு அளித்திருக்கிறான்.

‘‘கேம்பல் சாதாரண குழந்தைகள் போல் இல்லை. 24 மணி நேரமும் பொம்மைகள் செய்வதிலேயே ஆர்வமாக இருப்பான். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதோ, விளையாடுவதோ கிடையாது. படிப்பை விட்டால் பொம்மை செய்யக் கிளம்பிவிடுவான். இன்று ஒரு மணி நேரத்தில் ஒரு பொம்மை செய்யும் அளவுக்குத் தேர்ந்துவிட்டான். தாஸ்மேனியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்குப் பொம்மைகளை அனுப்பி வருகிறான்” என்கிறார் சோனியா.

‘‘மருத்துவமனையில் உள்ள குழந்தைகளிடம் பொம்மைகளைக் கொடுத்தவுடன், அவர்கள் முகத்தில் ஏற்படும் புன்னகைக்கும் அவர்கள் கொடுக்கும் அரவணைப்புக்கும் எதுவும் ஈடு இல்லை. ஒரு பொம்மையால் எனக்கும் அவர்களுக்கும் நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும்” என்கிறான் கேம்பல். ஆரம்பத்தில் பெற்றோரிடம் இருந்து பொம்மைகளுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொண்டான் கேம்பல். இன்றோ, பலரும் பணமாகவும் பொம்மைகளுக்குத் தேவையான பொருட்களாகவும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.

குழந்தை நோயாளிகளை மகிழ்ச்சிப்படுத்தும் கேம்பலுக்குப் பாராட்டுகள்!

கனடாவில் துருவக் கரடியும் பனிப் பிரதேசத்தில் வசிக்கும் ஸ்லெட் நாயும் மிகவும் அன்பாகப் பழகிய காட்சியைப் படமாக்கியிருக்கிறார் சுற்றுலாப் பயணி டி மியுலெஸ்.

”மிகப் பெரிய உருவம் கொண்ட துருவக் கரடி, வெகு எளிதாக நாயைக் கொன்றுவிடக் கூடியது. என்ன நடக்குமோ என்ற பதற்றத்துடன் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். மனிதர்கள் ஒரு குழந்தையைக் கையாள்வது போல, அத்தனை அன்பாக நாய்க் குட்டியைத் தடவிக் கொடுத்தது. தன்னோடு சேர்த்து அனைத்துக்கொண்டது துருவக் கரடி. நாயும் துருவக் கரடியைக் கண்டு பயமில்லாமல், மிகவும் அன்போடு ஒட்டிக்கொண்டது. இதுபோன்ற அபூர்வமான ஒரு காட்சியைப் படம் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் டி மியுலெஸ்.

அபூர்வ நட்பு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குழந்தை-நோயாளிகளை-மகிழ்ச்சிப்படுத்தும்-சிறுவன்/article9364945.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அவதார் ஹெட்போன்கள்!

 

 
ulagam_3087001f.jpg
 
 

ஹெட்போனை மாட்டிக்கொண்டு நீண்ட நேரம் பேசும்போதும் பாட்டு கேட்கும் போதும் காது வலிக்க ஆரம்பித்துவிடும். இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டிருக்கின்றன Spirit E666 ஹெட்போன்கள். இவற்றை அணியும்போது மற்றவர்களைவிட வித்தியாசமாகவும் வேற்றுக் கிரக வாசிகளைப் போலவும் காணப்படுவீர்கள். ஹெட்போன் நீண்ட காது போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரவர் தோலின் நிறத்துக்கு ஏற்ப இந்தக் காது ஹெட்போன்கள் கிடைக்கின்றன. அதனால் விகாரமாகத் தெரியாது. சீன இணையதளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ள காது ஹெட்போன்கள், 1,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விளம்பரத்தைப் பார்த்து, ஹெட்போன்களுக்கு ஆர்டர்கள் குவிகின்றன. இதுவரை சீனாவைத் தவிர வேறு எங்கும் விற்பனைக்கு வரவில்லை.

அவதார் ஹெட்போன்கள்!

மெரிக்காவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘எக்ஸ்ட்ரீம் மேக்ஓவர்: ஹோம் எடிசன்’. இது 9 பாகங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த நிகழ்ச்சி. இதில் பங்கேற்கும் குடும்பங்களின் வீடுகளை சீரமைத்துக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவார்கள். 2011-ம் ஆண்டு டிவோண்டாவும் ஜேம்ஸ் ஃப்ரைடேவும் விண்ணப்பித்தார்கள். தங்களுக்கு 7 குழந்தைகள் என்றும் இவற்றில் 5 குழந்தைகள் தத்து குழந்தைகள் என்றும் குறிப்பிட்டிருந்தனர். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஜேம்ஸ் குடும்பத்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவரது சிறிய வீட்டில் ஓர் அறையில் 7 குழந்தைகளும் படுத்திருந்த காட்சி படமாக்கப்பட்டது. பிறகு இந்த வீட்டைச் சீரமைப்பதற்காக, குடும்பத்தினரை ஒரு பேருந்தில் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டில் தங்க வைத்தனர். 7 குழந்தைகளுடன் ஜேம்ஸும் டிவோண்டாவும் மகிழ்ச்சியாகக் கழித்தனர். ஓர் அன்பான குடும்பத்துக்குத் தங்களால் உதவ முடிந்ததை எண்ணி தொலைக்காட்சி நிறுவனமும் மகிழ்ச்சியடைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் பழைய சிறிய வீடு, 8 படுக்கையறைகள் கொண்ட பிரம்மாண்டமான வீடாக மாறியிருந்தது. ஜேம்ஸ் தம்பதிக்கு ஒன்றும் 7 குழந்தைகளுக்கும் தனித் தனி படுக்கையறைகள். குழந்தைகளும் பெற்றோரும் மகிழ்ச்சியுடன் புது வீட்டில் குடியேறினர். நிகழ்ச்சியும் படம் பிடிக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது. மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஊடகங்களின் பார்வையில் இருந்து மறைந்ததும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பிரச்சினைகள் ஆரம்பமாயின. ஒவ்வொரு குழந்தையாகக் காப்பகத்தில் விட ஆரம்பித்தனர். அப்படி விடும்போது தற்காலிகமாக விடுவதாகவும் விரைவில் அழைத்துக்கொள்வதாகவும் சொல்லியிருக்கின்றனர். ஓராண்டு முடிவில் தத்தெடுக்கப்பட்ட 5 குழந்தைகளையும் காப்பகத்தில் விட்டுவிட்டனர். தங்களின் இரண்டு குழந்தைகளுடன் பெரிய வீட்டில் வசித்து வருகின்றனர். தத்தெடுக்கப்பட்ட 2 குழந்தைகள் இந்த விஷயத்தைத் தற்போது வெளியே சொல்லிவிட்டனர். பெரிய வீட்டைப் பெறுவதற்காக, குழந்தைகளைத் தத்தெடுத்து நாடகமாடியிருக்கிறார்கள். விஷயம் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஆனால் ஜேம்ஸ தம்பதி தாங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் விரைவில் குழந்தைகளை அழைத்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்கள். பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை எண்ணி தொலைக்காட்சி நிறுவனமும் அதிர்ந்து போயிருக்கிறது.

இப்படியெல்லாம் கூட ஏமாற்றுவார்களா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அவதார்-ஹெட்போன்கள்/article9367228.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இதழ் ஓவியங்கள்!

 

 
masala_2359673f.jpg
 
 

சியாட்டிலைச் சேர்ந்த பிரிட்ஜெட் பெத் காலின்ஸ் இயற்கை ஆர்வலர். கண்கவர் பூக்கள், இலைகள், குச்சிகளைக் கொண்டு விதவிதமான உருவங்களை உருவாக்கிவிடுகிறார். தன் வீட்டைச் சுற்றியிருக்கும் இடங்களில் உள்ள மலர்களையும் இலைகளையும் குச்சிகளையும் சேகரித்துக்கொள்கிறார். பிறகு பூக்களின் இதழ்களைத் தனித்தனியாக பிரித்துக்கொள்கிறார்.

தன் கற்பனைக்கு ஏற்றவாறு பறவைகள், பழங்கள், கடல் பிராணிகள், மனித உருவங்கள் என்று உருவாக்கி, அசத்திவிடுகிறார். குழந்தையாக இருந்த பொழுதே காலின்ஸுக்கு இந்தக் கலை மீது ஆர்வம் வந்துவிட்டது. கண்கவர் பூக்களைப் பார்த்துவிட்டால் அதைப் பறித்து, புத்தகங்களில் வைத்து விடுவார்.

சிறிது நாட்களில் நீர்ச் சத்தை இழந்த பூக்கள் காகிதங்கள் போல மாறியிருக்கும். அவற்றை எடுத்து அழகான உருவங்களைக் கொண்டுவந்துவிடுவார்.

வல்லவனுக்குப் பூவும் ஓவியம்!

பிரிட்டனில் வசிக்கிறார் 4 வயது எமிலி லியா ஹாவார்ட். இதுவரை திட ஆகாரங்களைச் சாப்பிட்டதே இல்லை. ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி சுவைகளையுடைய தயிர் தான் இவருடைய உணவு. ஒருநாளைக்கு 30 டப்பா தயிரைச் சாப்பிடுகிறார். சாக்லெட், ஸ்வீட், ஐஸ்க்ரீம் உட்பட வேறு எந்த உணவுகளையும் சாப்பிடுவதே இல்லை. 50 கிராம் எடை கொண்ட ஒரு தயிர் டப்பாவில் 1 ஸ்பூன் சர்க்கரை இருக்கிறது.

தினமும் 30 ஸ்பூன் சர்க்கரை சேர்வதால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்று எமிலியின் பெற்றோர் கவலைப்படுகின்றனர். எத்தனையோ விதங்களில் சொல்லிப் பார்த்தாலும் எமிலி தன் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதாக இல்லை. மருத்துவர்கள் இந்த உணவுப் பழக்கத்தால் இதுவரை எமிலிக்கு எந்த ஆரோக்கியக் கேடும் ஏற்படவில்லை என்றும் அவள் வயது குழந்தைகளுக்கு உரிய எடை இருப்பதாகவும் கூறிவிட்டனர்.

ஆனால் இதே உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் உடலுக்கு அவசியம் தேவையான மற்ற சத்துகள் கிடைக்காமல் பிரச்சினை வரலாம் என்றும் எச்சரித்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 30 டப்பா வீதம் ஓர் ஆண்டுக்கு 11 ஆயிரம் டப்பாக்களைக் காலி செய்கிறார் எமிலி.

சுமார் 2 லட்சம் ரூபாய் தயிருக்கு மட்டும் செலவாகிறதாகச் சொல்கிறார் அவரது அம்மா. துறுதுறுப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும் எமிலியைப் பற்றிய ஒரே கவலை உணவுப் பழக்கம்தான். 9 மாதக் குழந்தையாக இருக்கும் எமிலியின் தங்கை டெய்ஸி திட உணவுகளைச் சாப்பிடுகிறார்.

இன்னுமா திகட்டலை எமிலி?

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் இயங்கி வருகிறது ஓர் உணவு விடுதி. ஆண் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக, கழிவறையில் பெண் பொம்மைகளை நிறுத்தி வைத்திருக்கிறது. அங்கே வரும் ஆண் வாடிக்கையாளர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பொம்மையாக இருந்தாலும் கழிவறையை இயல்பாகப் பயன்படுத்த முடியவில்லை என்று குவியும் புகார்களைப் பார்த்த உணவு விடுதியின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வாடிக்கையாளர்களை அதிகரிக்க நினைத்துச் செய்த ஏற்பாடு, இப்படி எதிர்மறையாகிவிட்டதை எண்ணி வருந்துகிறார்கள்.

தப்புத் தப்பா யோசிச்சா தப்பாகத்தான் முடியும்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இதழ்-ஓவியங்கள்/article7056664.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: அட! சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் கட்டில்!

 

 
masala_3089044f.jpg
 
 

சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஜு கிங்வா, சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்குப் புதிய கட்டில் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

1993-ம் ஆண்டு, ஜு கிங்வாவின் மனைவிக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, இடது சிறுநீரகம் அகற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வலது சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். ஏற்கெனவே ஒரு சிறுநீரகத்துடன் இருப்பவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுவது ஆபத்து என்பதால், இயற்கையான முறையில் கற்களை அகற்ற வேண்டும் என்றும் தினமும் சில நிமிடங்கள் தலைகீழாக நின்றால் கற்கள் இடம் மாறும் என்றும் ஆலோசனை வழங்கினார்கள் மருத்துவர்கள்.

தானே ஒரு புதுவிதமான கட்டிலை உருவாக்கினார் ஜு கிங்வா. மனைவியைப் படுக்க வைத்து, கட்டிலோடு சேர்த்துக் கட்டினார். டிராக்டர் இன்ஜின் மூலம் கட்டிலுக்கு அதிர்வுகளை உண்டாக்கினார். கட்டில் மேலும் கீழும் செல்லும்போது சிறுநீரகக் கற்கள் இடம்பெயர்ந்தன.

‘நான் விவசாயி. என் மனைவியால் தலைகீழாக நிற்க முடியாது. அவரைக் காப்பாற்றுவதற்கு எனக்கு வேறு வழி இல்லை. அதனால் நானே ஒரு கட்டிலை உருவாக்கினேன். இந்தக் கண்டுபிடிப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது. கட்டில் மேலும் கீழுமாகச் சுற்றி வரும். கட்டிலும் அதிரும். தினமும் 10 நிமிடங்கள் என்று 5 நாட்கள் என் மனைவி கட்டிலில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். வலியின்றி சிறுநீரகக் கற்கள் வெளியேறிவிட்டன. விஷயம் பரவியது. பலரும் என்னிடம் இந்தக் கட்டிலைச் செய்து தரும்படிக் கேட்டனர். நான் மருத்துவ உபகரணங்களுக்கான உரிமையைப் பெறவில்லை என்பதால் செய்து தரவில்லை. ஆனால் என் மனைவிக்காகச் செய்த கட்டிலை, இலவசமாக உபயோகித்துக்கொள்ள அனுமதித்தேன். எங்கள் கிராமத்தில் மட்டும் மூன்று பேர், சிறுநீரகக் கற்கள் பிரச்சினையில் இருந்து வெளிவந்து விட்டனர். காப்புரிமை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்’ என்கிறார் ஜு கிங்வா.

அட! சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் கட்டில்!

ஸ்வீடனில் வீட்டில் செய்யக்கூடிய ரொட்டிகள் மிகவும் பிரபலமானவை. சுவையான இந்த ரொட்டிகளைப் பாதுகாப்பதற்காக, காப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தங்கள் ரொட்டிகளை இங்கே கொடுத்துவிட்டுச் செல்லலாம். ரொட்டிகளைப் பத்திரமாகப் பராமரித்து, வாடிக்கையாளர்கள் திரும்பி வந்தவுடன் ஒப்படைத்து விடுவார்கள். இதற்கு ஒரு வாரக் கட்டணமாக, 1,500 ரூபாய் வசூலிக்கிறார்கள்.

‘5 ஆண்டுகளுக்கு முன்பு ரொட்டிகளுக்கான காப்பகத்தை ஆரம்பிக்கும்போது, வாடிக்கையாளர்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் ஆராய்ச்சிக்காக 130 ஆண்டுகால ரொட்டியிலிருந்து இன்றைய ரொட்டி வரை எங்களிடமிருந்து வாங்கிச் சென்றனர். அதற்குப் பிறகுதான் எங்கள் நிறுவனம் புகழ்பெற ஆரம்பித்தது. குறிப்பிட்ட வெப்பநிலையில் கண்ணாடி பாட்டில்களுக்குள் ரொட்டிகளைப் பராமரிப்பதால், எத்தனை ஆண்டுகளானாலும் ரொட்டிகள் கெட்டுப் போவதில்லை’ என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான சார்லட்டோ.

ரொட்டி காப்பக வாடகைக்கு, புதிய ரொட்டிகளையே செய்து விடலாம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அட-சிறுநீரகக்-கற்களை-வெளியேற்றும்-கட்டில்/article9373680.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: தொழில்நுட்பத்துக்குச் சவால் விட்டவர்!

 
masala_3090104f.jpg
 
 

ஜெர்மனியின் கொலோன் நகரில் குளிர்பானங்களை விற்பனை செய்து வந்தார் 37 வயது வியாபாரி ஒருவர்.

தானியங்கி இயந்திரத்தில் பணத்தைச் செலுத்தினால், குளிர்பான பாட்டில் வெளியே வரும். குடித்த பிறகு பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்காக அதே இயந்திரத்தில் போட்டுவிட வேண்டும். ஒரு ரசீதும் அந்த பாட்டிலுக்கான பணமும் வெளியே வரும். இந்த இயந்திரத்தில் சில விஷயங்களை மாற்றி அமைத்தார் வியாபாரி. காலியான பாட்டிலை உள்ளே நுழைத்தால், அது இன்னொரு வழியில் வெளியே வந்து விழுந்தது. ஆனால் காலி பாட்டிலுக்கான ரசீதும் பணமும் கிடைத்தன.

இப்படிச் செய்த பிறகு, தினமும் காலி பாட்டிலைப் போட்டுப் பணத்தை எடுக்க ஆரம்பித்தார். 1,77,451 தடவைகள் ஒரே பாட்டிலை இயந்திரத்துக்குள் செலுத்தி, 32,12,000 ரூபாய் பெற்றிருக்கிறார். மறுசுழற்சி செய்யும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம், மிகவும் தாமதமாகத்தான் இந்த மோசடியைக் கண்டுபிடித்தது.

குளிர்பான பாட்டில்களின் விற்பனையை விட மிக மிக அதிக அளவில் காலி பாட்டில்கள் போடப்பட்டுள்ளதைக் கண்டு, விசாரணையை மேற்கொண்டது. வியாபாரி மீது வழக்கும் தொடுத்தது. வியாபாரிக்காக வாதாடிய வழக்கறிஞர், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறுவது எப்படி என்று பரிசோதிப்பதற்கே தன் கட்சிக்காரர் இந்தக் காரியத்தைச் செய்திருப்பதாகச் சொன்னார். இறுதியில் மோசடி குற்றத்துக்காக வியாபாரிக்கு, 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்பத்துக்குச் சவால் விட்டிருக்கிறாரே இந்த மனிதர்!

மேற்கத்திய நாடுகளில் தண்ணீர்ப் புகாத ஸ்மார்ட்போன்கள் இன்று சர்வசாதாரணமாகி விட்டன. ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளாகவே தண்ணீர்ப் புகாத போன்களைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜப்பானில் புழங்கும் 90 முதல் 95 சதவீத போன்கள் தண்ணீர்ப் புகாதவை. ஏனென்றால் மக்கள் குளிக்கும்போதும் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பே ஜப்பானியர்கள் போன்களுக்கு அடிமையாகிவிட்டனர். அவர்களால் குளிக்கும் நேரம்கூட போன்களை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. அதை உணர்ந்த நிறுவனங்கள், தண்ணீர்ப் புகாத போன்களை ஜப்பானில் அறிமுகம் செய்தனர்.

உலகின் முதல் தண்ணீர்ப் புகாத போன் Casio Canu 502S, 2005-ம் ஆண்டு வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ஜப்பானிய சந்தையைக் குறிவைத்து, பல நிறுவனங்களும் தண்ணீர்ப் புகாத போன்களைக் கொண்டு வந்தனர்.

‘இன்று சாதாரண ஸ்மார்ட்போன்களை ஜப்பானில் விற்பனை செய்வது சாத்தியமே இல்லை. ஜப்பானிய இளம் பெண்கள் குளித்துக்கொண்டே போனில் பேசுகிறார்கள். மெயில்களைப் பார்க்கிறார்கள். குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். 24 மணி நேரமும் ஸ்மார்ட் போன்களுடன் வாழ்க்கை நடத்துபவர்கள், தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து, காய வைத்தும் பயன்படுத்துகிறார்கள். தண்ணீர்ப் புகாத போன்களைப் பயன்படுத்துவதால் மழையில் நனையும்போது பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்கிறார் ஃபுஜிட்சு நிறுவனத்தின் துணைத் தலைவர்.

தொழில்நுட்ப அடிமைகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-தொழில்நுட்பத்துக்குச்-சவால்-விட்டவர்/article9377656.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: காக்கும் கடவுள் சென் சி

china_3091039f.jpg
 
 

சீனாவின் நான்ஜிங் பகுதியில் யாங்சீட்சீ ஆற்றின் பாலம், உலகில் தற்கொலை செய்துகொள்ளும் பிரபலமான இடங்களில் ஒன்று. சென் சி வார இறுதி நாட்களில் இந்தப் பாலத்துக்கு வருகிறார். தற்கொலை செய்யப் போகிறவர்களைக் காப்பாற்றுகிறார். கடந்த 13 ஆண்டுகளில் 300 உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார். “நான்ஜிங் மக்கள் மட்டுமின்றி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நானும் ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளிதான்.

என் குடும்பத்தின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றேன். அப்போது ஒரு முதியவர் என்னைக் காப்பாற்றினார். சில மாதங்களுக்குப் பிறகு அந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டதாக அறிந்து, அதிர்ந்து போனேன். இந்த மரணம் என்னை வெகுவாகப் பாதித்தது. இனிமேல் தற்கொலைகளைத் தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 25 கி.மீ. தூரத்தில் இருந்து வார இறுதி நாட்களில் இங்கே வந்துவிடுவேன். பைனாகுலருடன் பாலத்தில் நிற்பவர்களைக் கவனிப்பேன். விரக்தியோடு ஆற்றைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களை அழைத்துப் பேசுவேன். அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வேன். என்னுடைய ஆறுதலும் நம்பிக்கையான வார்த்தைகளும் அவர்களின் மனத்தை மாற்றும். பணம் இல்லாதவர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைப்பேன். இதுவரை 300 உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறேன்.

என் காலம் இருக்கும்வரை இந்தப் பணியைச் செய்வேன்” என்கிறார் சென் சி. தற்கொலை செய்துகொள்ள வருபவர்களில் சிலர் மனத்தால் காயம்பட்டிருப்பார்கள், சிலர் உடலால் காயம்பட்டிருப்பார்கள். ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்ப, அவர்களைக் கையாள்வதில் சென் சி கெட்டிக்காரர். தேர்ந்த மன நல ஆலோசகர் போல, அத்தனை அற்புதமாகப் பேசுவார். அவரிடம் பேசிய சில நிமிடங்களிலேயே, தற்கொலை எண்ணம் மறைந்துவிடும். அதனால் மக்கள், சென் சியை ‘நான்ஜிங்கின் காக்கும் கடவுள்’ என்று அழைக்கின்றனர். தான் இல்லாதபோது தற்கொலை செய்துகொள்ள வருபவர்களுக்கு உதவும் விதத்தில், தன்னுடைய தொலைபேசி எண்களைப் பாலத்தில் எழுதி வைத்திருக்கிறார். சமீபத்தில் சென் சி யைப் பற்றி ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

காக்கும் கடவுள் சென் சிக்கு வந்தனம்!

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசிக்கும் ஜோ சாண்ட்லருக்கு மட்டும் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியாது. “நான் தேர்தல் நடந்த இரவு ஒரு பார்ட்டிக்குச் சென்றேன். எல்லோரும் அடுத்த ஜனாதிபதி யார் என்ற பதற்றத்தில் நகங்களைக் கடித்துக்கொண்டிருந்தனர். அந்த 24 மணி நேரமும் யார் வருவார் என்ற சுவாரசியத்தில் கழிந்தது. அந்த சுவாரசியத்தை நான் இழக்க விரும்பவில்லை.

அதனால் யார் வெற்றி பெற்றார்கள் என்பதைக் கேட்காமல் நாட்களைக் கடத்த முடிவு செய்தேன். தொலைக்காட்சி பார்க்கவில்லை. செய்தித்தாள்களைப் படிக்கவில்லை. பெரும்பாலும் வீட்டை விட்டுச் செல்லவில்லை. யாரைச் சந்தித்தாலும் காதில் ஹெட்போன் மாட்டிக்கொள்வேன். ‘எனக்கு யார் வெற்றி பெற்றார் என்று தெரியாது. தயவு செய்து நீங்களும் சொல்ல வேண்டாம்’ என்று எழுதிக் காண்பித்துவிடுவேன். இப்படி இருப்பது மிகவும் கடினம். ஆனாலும் எனக்குப் பிடித்திருக்கிறது. 2 வாரங்களைக் கடத்திவிட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும் என்று பார்க்கலாம்” என்கிறார் ஜோ சாண்ட்லர்.

இப்படியும் ஒரு மனிதர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-காக்கும்-கடவுள்-சென்-சி/article9381686.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.