Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: சிக்கனத்துக்கும் ஓர் அளவில்லையா? 

carjpg

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஒருவர் தன்னுடைய காரைச் சுத்தம் செய்வதற்குச் செலவாகும் என்பதால், குறைவான நீர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் காரைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார். திடீரென்று மேல் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நீர்வரத்து அதிகமானவுடன் பயந்து போன அவர், எதிர்ப்புறம் உள்ள சற்று மேடான பகுதியில் ஒதுங்கி நின்றார். அருகில் இருந்தவர்கள் இந்தக் காட்சியைக் கண்டதும் தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்தனர். மீட்புப் படையினர் வந்து, அந்த மனிதரைப் பத்திரமாக மீட்டு, கரையில் சேர்த்தனர். "காரைச் சுத்தம் செய்வதற்கு 200 ரூபாய் செலவாகிறது. அதை மிச்சம் பிடிப்பதற்காக இந்த ஆற்றில் காரை இறக்கினேன். திடீரென்று அணையிலிருந்து தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. எப்படி உயிர் தப்பிக்கப் போகிறோம் என்று பயமாக இருந்தது. நல்லவேளை அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்து, என்னைப் பத்திரமாக மீட்டுவிட்டனர். என் கார் அவ்வளவுதானா என்று வருத்தத்துடன் நின்றுகொண்டிருந்தேன். மீட்புக் குழுவினர் மிகவும் சிரமப்பட்டு, நீரை எதிர்த்துப் போராடி, காரையும் மீட்டுக் கொடுத்துவிட்டனர். அணை திறக்க இருக்கிறார்கள், யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்ற அறிவிப்பை நான் கவனிக்காததால், இவ்வளவு பிரச்சினையாகிவிட்டது. என்னையும் என் காரையும் பத்திரமாக மீட்டவர்களுக்கு நன்றி" என்கிறார் இந்த மனிதர்.

சிக்கனத்துக்கும் ஓர் அளவில்லையா? 

 

சமீபக் காலமாக ஜப்பானியர்கள் பாசிகளை வீட்டில் வளர்க்கிறார்கள். பாசிகளைப் பார்ப்பதற்காகவே இயற்கை சுற்றுலாவுக்குச் செல்கிறார்கள். பொதுவாகவே தாவரங்களை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் ஜப்பானியர்கள். செடி வளர்க்கும் தொட்டிகளில் கற்களுக்குப் பதிலாக, பாசிகளை வளர்க்கிறார்கள். தங்கள் வீடுகளில் பாசி வளர்ப்பதை மகிழ்ச்சிக்குரிய விஷயமாக நினைக்கிறார்கள். வீட்டைப் பாசியால் அலங்காரம் செய்து கொடுப்பதற்கு நிறுவனங்களும் இருக்கின்றன. கள்ளி, போன்சாய் மரங்களை வளர்ப்பதுபோல் பாசி வளர்ப்பிலும் இறங்கியிருக்கிறார்கள். பாசி வளர்ப்புக்கு அதிகக் கவனமும் தண்ணீரும் தேவை இல்லை என்பதால், பராமரிப்பதும் எளிது. 500 வகை பாசிகள் இதுவரை இங்கே கண்டறியப்பட்டிருக்கின்றன. "எனக்கும் பாசிக்குமான தொடர்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. பாசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளையும் செய்திருக்கிறேன். ஒருமுறை என் தோழியோடு காளான் பறிக்கச் சென்றபோதுதான் பாசி எனக்கு அறிமுகமானது. அதன் பிறகு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன். பாசி தொடர்பாகப் பல்வேறு தொழில்களிலும் இறங்கியிருக்கிறேன். பாசி மூலம் ஆண்டுக்குச் சுமார் 1.84 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன். என்னைப் ‘பாசிகளின் ராஜா' என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள்” என்கிறார் 64 வயது ஓச்சி கியோமுரா. 2011-ம் ஆண்டு பாசி பற்றிய ஒரு புத்தகம் ஹிசாகோ ஃபூஜி என்பவரால் எழுதி, வெளியிடப்பட்டது. இது தற்போது அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது.

பாசி வளர்ப்பு எனும் புதுத் தொழில்!

https://tamil.thehindu.com/world/article24589102.ece

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: இப்படிச் செய்யலாமா?

 

 
270947bbP1446002mrjpg

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலாப் பயணியாக வந்திருந்தார் இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயது ஆஜ் இ டகுவாட்டாஸ். அவர் திரும்பிச் செல்லும்போது குடியேற்ற அதிகாரி அபராதம் விதித்தார். ரூ. 2.75 லட்சம் அபராதம் என்றவுடன் கோபமானார். “அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி 150 நாட்கள் பாலியில் தங்கியிருந்ததால், இந்தத் தொகையைச் செலுத்தினால்தான் செல்ல முடியும்” என்றார் அந்த அதிகாரி. சிங்கப்பூர் செல்வதற்கான விமானத்தைத் தவற விட்டுவிடுவோமே என்ற பதற்றத்தில் இருந்த ஆஜ், வாக்குவாதத்தில் இறங்கினார். ஒருகட்டத்தில் மேஜையில் இருந்த பாஸ்போர்ட்டை எடுக்க முயன்றார். அதிகாரி அதைக் கையில் எடுத்துக்கொண்டார். உடனே யோசிக்காமல் அறைந்துவிட்டார் ஆஜ். அதற்குப் பிறகும் அந்த அதிகாரி மிகவும் பொறுமையாகவே நடந்துகொண்டார். “நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்திருக்கிறோம். அவர் விமானத்தைத் தவற விட்டதற்கு நாங்கள் காரணம் இல்லை. கடைசி நேரத்தில் வந்து, பிரச்சினை செய்தால் அபராதம் இன்றி அனுப்ப முடியுமா?” என்று கேட்கிறார் குடியேற்றத் தலைமை அதிகாரி ராய் ஏரிஸ் அம்ரன். 

இப்படிச் செய்யலாமா?

 

சீனாவின் சாங்ஸோவ் பகுதியில் வசிக்கும் 2 வயது குழந்தை, ‘சூப்பர் கேர்ள்’ என்று அழைக்கப்படுகிறாள். குழந்தையின் பெற்றோர் வேலைக்குச் செல்வதால், பாட்டியின் பராமரிப்பில்தான் பகல் முழுவதும் இருப்பாள். பாட்டிக்கு அவசரமாக மளிகைக் கடைக்குப் போக வேண்டியிருந்தது. குழந்தை தூங்கிய நேரத்தில், வீட்டைப் பூட்டிவிட்டு மளிகை கடைக்குச் சென்றார். சில நிமிடங்களில் கண் விழித்த குழந்தை, பாட்டியைத் தேடியிருக்கிறாள். பின்னர், அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு, அதிலிருந்து கம்ப்யூட்டர் மேஜை மீது ஏறியிருக்கிறாள். அருகிலிருந்த கம்பி இல்லாத ஜன்னலைத் தானே திறந்து எட்டிப் பார்த்திருக்கிறாள். திடீரென்று நிலை தடுமாறி, 17-வது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டாள். குழந்தை விழுவதற்கு முன்பே கடையில் இருந்து திரும்பிய பாட்டி வீட்டைத் திறந்து பார்த்தபோது, குழந்தை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜன்னல் திறந்திருந்ததால் பயந்து போய் எட்டிப் பார்த்தார். கீழே மக்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டதும் அலறியடித்துக்கொண்டு ஓடினார். அங்கே குழந்தை லேசான சிராய்ப்புகளுடன் குடியிருப்புவாசிகளோடு அமர்ந்திருந்தாள். 17-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் தப்பிய அதிசயத்தை எல்லோரும் பாட்டியிடம் கூறிக்கொண்டிருந்தனர். உடனே குழந்தையின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார் பாட்டி. மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தையை முழுவதுமாகப் பரிசோதித்த மருத்துவர்கள், மூளையிலோ உடலின் வேறு பகுதியிலோ காயம் ஒன்றும் இல்லை என்றும் வயிற்றுப் பகுதியில் மட்டும் எளிதில் சரிபடுத்தக் கூடிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். குழந்தை விழுந்த பகுதியில் அடர்த்தியான இலைகள் கொண்ட மரம் ஒன்று இருந்ததாலும் முதல் நாள் இரவு பெய்த மழையில் மண் மென்மையாக இருந்ததாலும் பெரிய காயம் ஏற்படவில்லை என்றாலும், இது ஆச்சரியமான நிகழ்வுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மிராக்கிள் பேபி!

https://tamil.thehindu.com/world/article24599574.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: நம்பிக்கை மனிதர்

 

 
hairstylistjpg

வாழ்க்கையில் தங்கள் லட்சியத்தை அடையப் போராடும்போது பலரும் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். ஆனால் கேப்ரியல் ஹெரிடியா, தன்னுடைய குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் லட்சியத்தை அடைவதில் வெற்றி கண்டிருக்கிறார்! அர்ஜென்டினாவைச் சேர்ந்த 20 வயது முடிதிருத்தும் கலைஞர், முழங்கைகளுக்கு மேல் இல்லாமல்தான் பிறந்தார். ஆனாலும் அதை ஒரு குறைபாடாக அவரை நினைக்க விடாமல், அவரது குடும்பம் அன்பாகப் பார்த்துக்கொண்டது. இதனால் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வளர்ந்தார். அக்கம்பக்கத்திலும் பள்ளியிலும் இவருக்கு நல்ல மனிதர்கள் நண்பர்களாக அமைந்தனர்.

ஒருநாள் கூட, குறைபாட்டைச் சுட்டிக் காட்டி, இவர் மனதை நோகடித்ததில்லை. இவரது தன்னம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணம், இவரது அம்மாதான். அவர் முடிதிருத்தும் கலைஞராக வேலை செய்துவந்தார். 14 வயதில் கேப்ரியலுக்கு முடிதிருத்தும் கலையில் ஆர்வம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். பொழுதுபோக்குக்காகக் கற்றுக்கொள்கிறார் என்று எல்லோரும் நினைத்தனர். பிறகு தன்னுடைய வேலையாக இதை மாற்றிக்கொண்டார்.

 

“முதலில் தண்ணீர் தம்ளரை எடுத்துக் குடிக்கப் பழகினேன். பிறகு ஒவ்வொரு வேலையையும் நானே செய்யக் கற்றுக்கொண்டேன். நன்றாகப் படித்தேன். வளர்ந்த பிறகு பைக் ஓட்டக் கற்றுக்கொண்டேன். பிறகு காரை ஓட்டினேன். விதவிதமாக முடிதிருத்த ஆரம்பித்த பிறகு, எனக்காக ஒரு கடையை வைத்துக் கொடுத்தனர். ஒன்றரை ஆண்டுகள் அதில் பணியாற்றினேன். பிறகு அர்ஜென்டினா முடிதிருத்தும் அசோசியேஷனிலிருந்து என்னைத் தொடர்புகொண்டனர். வறுமையில் வாடும் முடிதிருத்தும் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கச் சொன்னார்கள். எல்லா வயது மனிதர்களுக்கும் நான் பயிற்சி அளித்தேன். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தேன். இந்தப் பணி எனக்கு மிகவும் மன நிறைவை அளித்தது. என்னை ‘பர்ஃபக்‌ஷனிஸ்ட்’ என்று சொல்வதை நான் விரும்புகிறேன். என் தோழி யானினாவின் உறவினர், வாடகை இல்லாமல் முடிதிருத்துவதற்கு ஓர் இடத்தைக் கொடுத்திருக்கிறார். ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆகிறது. இங்கே முடிவெட்டுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பலரும் என்னுடைய குறைபாட்டையும் மீறி, நான் எப்படி இவ்வளவு பெரிய ஆளாக மாறினேன் என்றும் எப்படி எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன் என்றும் கேட்கிறார்கள்.  மகிழ்ச்சிக்குக் காரணம், என் 11 மாதக் குழந்தைதான். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் வேலைகளில் சின்ன முன்னேற்றமாவது இருக்குமாறு பார்த்துக்கொண்டால், நம் முன்னேற்றத்தை யாரும் தடுத்துவிட முடியாது” என்கிறார் கேப்ரியல். பிறரிடம் எந்த உதவி

யும் எதிர்பார்க்காமல் முடிதிருத்துவதையும், தலையில் நுட்பமான டிசைன்களை வரைவதையும் காணும் இளைஞர்கள், இவரைத் தங்கள் ரோல்மாடலாக நினைக்கிறார்கள். பல்வேறு போட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார் கேப்ரியல்.       

நம்பிக்கை மனிதர்

https://tamil.thehindu.com/world/article24607145.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: இரட்டையரை மணந்த இரட்டையர்! நல்ல காதலர்!

 

 
indhonasiajpg

இரட்டையரை மணந்த இரட்டையர்!நல்ல காதலர்!

அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் இரட்டையராகப் பிறந்த இரண்டு பெண்களுக்கும் இரட்டையராகப் பிறந்த இரண்டு ஆண்களுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 32 வயதான பிரிட்டானியும் பிரையனாவும் 34 வயது ஜெரமி, ஜோஸை மணந்திருக்கிறார்கள். “இரட்டையராகப் பிறந்த நாங்கள் 32 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்திருக்கிறோம். ஆரம்பத்தில் இரட்டையராகப் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களால் எங்கோபிறந்த இரு வெவ்வேறு ஆண்களிடம் பழகவே முடியவில்லை. அவர்களால் இரட்டையரின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான் எங்களைப்போலவே இரட்டையராகப் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. கடந்த ஆண்டு ‘இரட்டையர் தின விழா’ நடைபெற்றது. அதில் நாங்களும் பங்கேற்றோம். அங்கேதான் இந்த இரட்டையரைச் சந்தித்தோம். பார்த்த உடனே இவர்களைப் பிடித்துவிட்டது. அவர்களுக்கும் எங்களைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டதாகப் பின்னர் சொன்னார்கள். அடுத்தடுத்து இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு, எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது. தேவதைக் கதைகளில் வரும் திருமணத்தைப் போன்று, அழகாக நடைபெற்றது எங்கள் திருமணம். நாங்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசிக்கப் போகிறோம்” என்கிறார் பிரிட்டானி.

 

ஹோண்டுராஸைச் சேர்ந்த ரோசா காஸ்டெல்லனோயாஸும் மெல்வின் மென்டோஸும் காதலர்கள். ரோசா தான் கர்ப்ப மாக இருப்பதாகச் சொல்லி, மெல்வினிடமிருந்து பிரிந்து, வேறு ஒரு நகரில் 9 மாதங்கள் வசித்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்ந்து, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மெல்வினை அலைபேசியில் அழைத்து, இரண்டு குழந்தைகளில் ஒன்று பிரசவத் தின்போது இறந்துவிட்டதாகவும் மற்றொரு குழந்தை, மருத்துவர்களின் சிறப்புக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார். மூடப்பட்ட சிறு கூடையுடன் சனிக்கிழமை வீடு திரும்பினார். மெல்வினும் அவரது நண்பர்களும் குழந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். கூடையைத் திறந்து குழந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டனர். கூடையைத் திறக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதாகச் சொன்னார் ரோசா. சடங்குகள் நடத்தப்பட்டு, கூடை புதைக்கப்பட்டது. மெல்வினின் நண்பர்களுக்கு ரோசா பொய் சொல்கிறார் என்று தோன்றியது. அதனால் இரவில், புதைத்த கூடையை வெளியே எடுத்தனர். திறந்து பார்த்தபோது, ஒரு பொம்மை இருந்தது. எல்லாவற்றையும் வீடியோ எடுத்து, மெல்வினிடம் காட்டினார்கள். ரோசா கர்ப்பமாகவே இருக்கவில்லை. எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார். காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டும் என்றார்கள். “ரோசா மீது புகார் கொடுக்க நான் விரும்பவில்லை. என் நண்பர்கள் கண்டுபிடித்தது நிஜமாகவே இருந்தாலும் அதுவும் நல்லதுதான். இரண்டாவது குழந்தை பிறந்து இறந்ததைவிட, பிறக்காமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்கிறார் மெல்வின்.

https://tamil.thehindu.com/world/article24620606.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வரலாற்றை மாற்றியமைத்த பெண்கள்

 

 

 
334cd780P1447171mrjpg

வரலாற்றை மாற்றியமைத்த செல்வாக்கு மிக்கப் பெண்களைத் தேர்வு செய் வதற்கான வாக்கெடுப்பை, வரலாற்று இதழுக்காக நடத்தியது பிபிசி. இதில் அரசியல், அறிவியல், விளை யாட்டு, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றுள் ளனர். முதல் 5 இடங்களைப் பிடித்த பெண்கள், ஒப் பீட்டளவில் அதிகம் பிரபல மானவர்கள் அல்ல. இதுவரை பிரபலமானவர்களாகக் கருதப்பட்டவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் இடத்தைப் பிடித்திருக் கிறார் விஞ்ஞானி மேரி க்யூரி! போலந்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.

10 வயதில் தாயை இழந்தார். உயர் கல்வி படிக்க வசதி இல்லாததால், 6 ஆண்டுகள் வசதியான குடும்பங்களில் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வேலையைச் செய்து, தன்னுடைய சகோதரியைப் படிக்க வைத்தார். பிறகு சகோதரி வேலைக்குச் சென்று மேரியைப் படிக்க வைத்தார். குளிருக்குப் போர்த்திக்கொள்ள கம்பளிக் கூடக் கிடையாது. சத்தான ஆகாரம் இல்லாததால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டிருந்த மேரி, இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். கணவர் பியரி க்யூரியுடன் சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். யுரேனியம், பொலோனியம் என்ற இரு தனிமங்களைக் கண்டுபிடித்தார். இயற்பியலிலும் வேதியியலிலும் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றார்.

 

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்ணும் இரண்டு நோபல் பரிசுகளை வென்ற முதல் மனிதரும் இவரே. புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டார். முதல் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்குச் சிகிச்சை அளித்தார். போரில் காயம்பட்டவர்களுக்கான நிதிக்காகத் தன்னுடைய நோபல் பரிசுகளை நன்கொடையாக வழங்கினார். ‘மனிதர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, பரிசுகளை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்று கேட்டார். நீண்ட கால கதிரியக்க ஆராய்ச்சியின் விளைவாக ஏற்பட்ட ரத்தப் புற்று நோயால், 66 வயதில் மரணத்தைச் சந்தித்தார். இத்தகையச் சிறப்புகளைப் பெற்ற மேரி க்யூரியை முதல் இடத்தில் தேர்ந்தெடுத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பேருந்தில் அமர்ந்திருந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ரோசா பார்க்ஸை, இருக்கையில் இருந்து எழச் சொன்ன அமெரிக்கரை எதிர்த்து நீண்ட நெடியப் போராட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளைப் பெறக் காரணமாக அமைந்த ரோசா பார்க்ஸ், இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த எம்மலின் பான்க்ருஸ்ட். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கேட்டுப் போராடி, இறுதியில் உரிமையை வென்றெடுத்த முதல் பெண்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களான, கணினி நிரல்களை உருவாக்கிய கணிதவியலாளர் அடா லவ்லேஸும் விஞ்ஞானி ரோசலின்ட் ஃபிரான்க்ளினும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கின்றனர். மார்கரெட் தாட்சர், விக்டோரியா ராணி, ஜேன் ஆஸ்டின், இளவரசி டயானாவும் முதல் இருபது இடங்களில் இருக்கிறார்கள். அல்பேனியாவில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்த அன்னை தெரசா இருபதாவது இடத்தைப் பெற்றிருக்கிறார்.

வரலாற்றை மாற்றியமைத்த பெண்களுக்குப் பூங்கொத்து!

https://tamil.thehindu.com/world/article24651203.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஐயோ… மீன்கள் பாவம்…

 

 
48992619P1448231mrjpg

துருக்கியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி ‘யார் கோடீஸ்வரர் ஆக விரும்புகிறீர்கள்?’. இதில் 26 வயது சூ அயன் என்ற பொருளாதாரப் பட்டதாரி பெண் கலந்துகொண்டார்.

 ‘சீனப் பெருஞ்சுவர் எங்கே அமைந்திருக்கிறது?’ என்ற கேள்வி வந்தது. இதற்கு சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் என்று 4 நாடுகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டு, அதிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். இந்தக் கேள்விக்கு சூ அயனால் பதில் அளிக்க இயலவில்லை. அவர் லைஃப்லைனைப் பயன்படுத்தி, பார்வையாளர்களிடம் சரியான விடை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பார்வையாளர்களில் 51% பேர் சீனா என்று பதில் அளித்தனர். பாதிப் பேர் சீனா என்றும் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா என்றும் பதில் அளித்ததால் குழப்பமடைந்தார் சூ அயன். அவருக்குச் சீனா என்று ஏற்றுக்கொள்ளத் துணிச்சல் இல்லை. அடுத்த லைஃப்லைனைப் பயன்படுத்தி, தோழியிடம் விடை கேட்டார்.

 

சீனா என்று அவர் பதில் சொன்னதும், அதையே தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பரவலான விவாதத்தைக் கிளப்பிவிட்டுவிட்டது. ‘உலகிலேயே நீளமான சுவர் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ‘சீனப் பெருஞ்சுவர் எங்கே அமைந்திருக்கிறது?’ என்ற கேள்வியிலேயே சீனா இருக்கும்போது, இதற்கு இத்தனை லைஃப்லைன்களைப் பயன்படுத்த வேண்டுமா என்று ஒரு சாரர் கேள்வி எழுப்புகிறார்கள். இன்னொரு சாரர், ‘பெயரில் சீனா இருந்ததால்தான், இப்படிக் கேள்வியிலேயே விடை வைத்திருப்பார்களா என்று குழப்பம் அடைந்திருக்கிறார். சூ அயனை மட்டும் குறை சொல்லாதீர்கள். 49% பேர் தவறான விடையைத் தானே தந்திருக்கிறார்கள். அவர்களை என்ன சொல்வீர்கள் என்று கேட்கிறார்கள். துருக்கியின் பிரபல இசையமைப்பாளர் குறித்த அடுத்த கேள்விக்குத் தவறாக விடை அளித்து, போட்டியில் இருந்து வெளியேறினார் சூ அயன். “என்னிடம் இருக்கும் லைஃப்லைன்களை என் விருப்பத்துக்குப் பயன்படுத்திக்கொண்டேன்” என்று தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதில் அளித்திருக்கிறார் இவர்.

கேள்வி உருவாக்கியவர்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது!

சீனாவில் காறை எலும்பு (Collarbone) பகுதியில் மீன்களை நீந்தவிடும் ‘ஃபிட்னஸ் சேலஞ்’ 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. இன்று சீனாவைத் தாண்டி, பல ஆசிய நாடுகளுக்கும் பரவியிருக்கிறது. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்களுக்கு தோள்பட்டையில் உள்ள காறை எலும்புப் பகுதியில் குழி விழுகிறது. இந்தக் குழிக்குள் சிறிது தண்ணீரை ஊற்றி, உயிருடன் இருக்கும் சிறிய மீன்களை நீந்தவிடுகிறார்கள். மீன்கள் நன்றாக நீந்தினால் இந்தச் சவாலில் வெற்றி பெற்றதாக அர்த்தம். இந்தச் சவாலை வைத்துப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஃபிட்னஸ் சேலஞ்சில் வெற்றி பெறும் பெண்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி, பலரையும் சவாலுக்கு இழுக்கிறார்கள்.

ஐயோ… மீன்கள் பாவம்…

https://tamil.thehindu.com/world/article24662922.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: சூப்பின் விலை 1,37,277 ரூபாய்!

 

 
soupjpg

சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் உலகிலேயே மிகவும் விலை அதிகமுள்ள நூடுல் சூப் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிண்ணம் சூப்பின் விலை 1,37,277 ரூபாய்! ‘ஹாவோஸோங்ஹாவோ பீஃப் நூடுல் சூப்’ என்ற பெயரில் இயங்கும் உணவகத்தில்தான் விலை மதிப்பு மிக்க சூப் விற்பனை ஆகிறது. இந்த உணவகம் ஏற்கெனவே பிரபலமானதுதான். ஆனால் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த சூப் விற்பனையை ஆரம்பித்திருக்கிறார்கள். இங்கே வரும் வாடிக்கையாளர்கள், மெனுவில் சூப்பின் விலையைக் கண்டதும் அதிர்ச்சியடைகிறார்கள். பிறகு, தவறுதலாக அச்சாகியிருப்பதாக நினைத்து ஆறுதலடைகிறார்கள். அந்த சூப்பை ஆர்டர் செய்யும்போதுதான், மெனுவில் உள்ள விலை உண்மையானது என்பதை அறிகிறார்கள். உடனே மெனுவைப் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி, சூப்புக்கு இலவச விளம்பரம் தேடித் தந்துவிடுகிறார்கள். இந்த உணவகத்தின் சூப்புக்கு அடுத்த இடத்தில் இருப்பது தைவானின் ‘நு பா பா’ உணவகத்தின் சூப்தான். 22,732 ரூபாய்! முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்குமான வித்தியாசமே ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது!

விலை உயர்ந்த சூப்பில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு, “உலகிலேயே விலை அதிகமுள்ள 12 பொருட்களை இதில் சேர்க்கிறோம். இதில் 4 பொருட்கள் வானிலிருந்தும் 4 பொருட்கள் நிலத்திலிருந்தும் 4 பொருட்கள் கடலிலிருந்தும் பயன்படுத்துகிறோம். தலைசிறந்த 12 சமையல் கலைஞர்களால் சூப் தயாரிக்கப்படுகிறது. உணவகத்துக்கு வந்தவுடன் சூப் ஆர்டர் செய்து சாப்பிட இயலாது. ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லி வைத்துவிட வேண்டும். தேவையைப் பொறுத்தே சூப்புக்கு வேண்டிய பொருட்களைத் தயார் செய்வோம். அதனால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது. அதேபோல் செலவும் அதிகம் ஆகிறது. சூப்பின் விலையை 1,37,277 ரூபாய் என்று வைத்தும் கூட எங்களால் இந்த சூப்பிலிருந்து லாபம் ஈட்ட முடியவில்லை. இதற்கு மேலும் விலை வைக்க மனமில்லை. வாடிக்கையாளர்களுக்கு உலகின் உன்னதமான சூப்பைத் தருகிறோம் என்ற மனநிறைவுக்காகவே இதைச் செய்து கொடுக்கிறோம். சூப் விற்பனையை ஆரம்பித்தபோது பலரும் கிண்டல் செய்தனர். விலையைக் கேட்டு மயக்கம் வருவதாகச் சொன்னார்கள். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. எங்களிடம் நூற்றுக்கணக்கான சூப் வகைகள் விற்பனையாகின்றன. அவற்றில் உலகின் விலை அதிகமான சூப்பும் ஒன்று. மாட்டு இறைச்சி சூப் ஒரு முழு மாட்டின் விலையை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள். சிலர் நாங்கள் ஏமாற்றுவதாகப் புகாரும் கொடுத்திருக்கிறார்கள். விலை உயர்ந்த சூப்பை வாங்கச் சொல்லி யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்துவதில்லை. ஏமாற்றுவதில்லை. தேவைப்படுபவர்களுக்குச் செய்து கொடுக்கிறோம். இந்த சூப்பைச் சாப்பிட்டவர்கள் மீண்டும் சாப்பிட வருகிறார்கள் என்றால், அதன் சுவையைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்கிறார் உணவகத்தின் மேலாளர் யான்.

 

பணமும் பொறுமையும் இருந்தால்தான் இந்த சூப்பை சுவைக்க முடியும்!

https://tamil.thehindu.com/world/article24669387.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: புதிய முகம்

d9834ab1P1449231mrjpg

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர் கேட்டி. படிப்பிலும் விளையாட்டிலும் திறமையானவர். 16 வயதில் குடும்பம் கெண்டகிக்குக் குடியேறியது. புதிய பள்ளியில் ஒரு மாணவரைப் பார்த்தவுடன் இவருக்குப் பிடித்துவிட்டது. இருவரும் காதலித்தனர். 2014-ம் ஆண்டு கேட்டிக்கு தொடர்ச்சியாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. சில அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த நேரத்தில் காதலரின் போனில் இன்னொரு பெண்ணின் குறுஞ்செய்தியைப் படிக்க நேர்ந்தது. உடனே மனம் உடைந்து போனார். வீட்டிலுள்ள குளியலறையில் துப்பாக்கியை முகவாயில் வைத்து, தானே சுட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள், கேட்டியின் முகம் சிதைந்துபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். உயிர் பிழைத்தாலும் கேட்டியின் முகம் முற்றிலும் சிதைந்துவிட்டது. மூச்சு விடுவது, சாப்பிடுவது எல்லாம் மிகவும் சிரமமாக இருந்ததால், தொடர்ந்து மருத்துவமனையிலேயே கேட்டி வைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர் அவர் மனதைத் தேற்றி, முகமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தயார் செய்தனர். சில முன்னணி மருத்துவமனைகள் தங்களால் செய்ய இயலாது என்று மறுத்துவிட்டன. இறுதியில் க்ளீவ்லாண்ட் மருத்துவமனையில் முயற்சி செய்யச் சொன்னார்கள். அங்கே முகமாற்று அறுவை சிகிச்சைக்காக பெயரைக் கொடுத்துவிட்டு, காத்திருந்தார் கேட்டி. 2017-ம் ஆண்டு ஆண்ட்ரீயா என்ற 31 வயது பெண் இறந்துபோனார். அவரிடமிருந்து முகத்தை எடுத்து, இவருக்குப் பொருத்தும் முயற்சிகளில் மருத்துவர்கள் இறங்கினர். துப்பாக்கியில் சுட்டு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவிலேயே மிக இளம் வயதில் முகமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்ற சிறப்பு கிடைத்திருக்கின்றது. இதற்குப் பிறகு கேட்டி இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தார். உணவை விழுங்கினார். மெதுவாக நடக்கவும் பேசவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பார்வை பறிபோனதால் பிரெய்லி முறையில் படிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.

“இது எனக்குக் கிடைத்த 2-வது வாழ்க்கை. துப்பாக்கியில் சுட்ட பிறகான வாழக்கையில் என் பெற்றோர் சில நிமிடங்கள் கூட என்னை விட்டுப் பிரிந்திருக்கவில்லை. நான் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டனர். எப்போதும் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டே இருந்தனர். இவ்வளவு நல்ல மனிதர்களை விட்டு, இறந்து போக நினைத்தோமே என்று வருத்தமாக இருக்கிறது. என்னுடைய பழைய முகம் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் விபத்துக்குப் பிறகான என் முகத்தை நினைக்கும்போது, இந்தப் புதிய முகம் மிகவும் அழகாகத் தெரிகிறது. படிப்பை முடித்த பிறகு, என்னைப்போல் தற்கொலையில் இருந்து தப்பியவர்களுக்காக வேலை செய்யப் போகிறேன். தற்கொலை எண்ணம் வருகிறவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப் போகிறேன்” என்கிறார் கேட்டி.

 

இவரது கதையை நேஷனல் ஜியோகிரபிக் பத்திரிகை, ‘தி ஸ்டோரி ஆஃப் ஃபேஸ்’ என்ற தலைப்பில் முகப்புக் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது.

https://tamil.thehindu.com/world/article24701050.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: விரைவில் குணமடையட்டும் நடோல்ஸ்கி!

sdgfsgjpg

போலந்தைச் சேர்ந்த 25 வயது டோமாஸ் நடோல்ஸ்கி, அரிய வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம் இவரது வாழ்க்கையே வலியாக மாறிவிட்டதுடன், இவரது உடலும் 12 வயது சிறுவனைப்போல் வளர்ச்சியடையாமல் இருக்கிறது. 7 வயதில்தான் இந்தக் குறைபாடு ஏற்பட்டது. ஒவ்வொரு வேளை உணவைச் சாப்பிடும்போதும், வயிற்றில் வலி கடுமையாக இருக்கும். கைகளும் கால் பாதங்களும் அதீதமாக வலிக்கும். இதனால் சாப்பிடுவதையே தவிர்க்க ஆரம்பித்தார். உடல் எடை வேகமாகக் குறைந்தது. விரைவிலேயே எலும்பும் தோலுமாக மாறிப் போனார். எத்தனையோ மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்தனர். ஒருவராலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. சிலர் இது மூளை தொடர்பான பிரச்சினையாக இருக்கலாம் என்றார்கள். 16 வயதில்தான் இவரது நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்தனர். மரபணுக் குறைபாட்டால் இந்த நோய் ஏற்பட்டிருக்கிறது என்றும் இதற்கு மருத்துவம் இல்லை என்றும் சொன்னார்கள். நோயைக் கண்டறிந்தும் பலன் இல்லாமல் போய்விட்டது.

“நான் 25 வயது இளைஞன். ஆனால் ஒரு சிறுவனைப்போல் இருக்கிறேன். தினமும் கண்ணாடியைப் பார்க்கும்போது வெறுப்பாக இருக்கிறது. ஏனென்றால் கண்ணாடியில் தெரியும் பிம்பம் நான் இல்லை. என் உருவத்தால் பல இடங்களில் பிரச்சினை. நான் இளைஞன் என்று சொன்னால் யாரும் நம்புவதில்லை. ஒவ்வொரு நாளும் என்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. உணவாகச் சாப்பிட முடியாததால், உடலுக்குத் தேவையான சத்தை வேறு விதங்களில் எடுத்துக்கொள்கிறேன். வலி தெரியாமல் இருக்க, வலி நிவாரணிகளைப் பயன்படுத்துகிறேன். மாத்திரைகளைப் போடாவிட்டால், என் உடல் முழுவதுமே பயங்கரமாக வலிக்க ஆரம்பித்துவிடும். போலந்து முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மருத்துவர்களைச் சந்தித்துவிட்டேன். இதுவரை மிகக் குறைந்த அளவிலேயே முன்னேற்றம் வந்திருக்கிறது. ஆனாலும் என்றாவது ஒருநாள், இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவந்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்கிறார் டோமாஸ் நடோல்ஸ்கி.

 

தற்போது இவரது நோய்க்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை ஒன்று இருப்பதாகவும் அதற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் சொல்கிறர்கள். அந்த அளவு பணத்தைச் செலவு செய்ய நடோல்ஸ்கியின் குடும்பத்துக்கு வசதி இல்லை. இவரது நிலையைப் பார்த்து ஒருவர் இலவசமாகவே இந்தப் பரிசோதனைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். விரைவில் சரியான மருத்துவம் கொடுக்காவிட்டால், இவர் மெதுவாக மரணத்தை நோக்கிச் சென்றுவிடுவார் என்பதால், பலரும் உதவி செய்வதில் அக்கறை காட்டி வருகிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். நடோல்ஸ்கியின் தம்பியும் 12 வயதில் இதே மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இவர் அளவுக்கு அவருக்கு நோயின் தீவிரம் இல்லை.

 விரைவில் குணமடையட்டும் நடோல்ஸ்கி!

https://tamil.thehindu.com/world/article24742220.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அய்யோ… மிகவும் பரிதாபமான கிளப்!

 

 
goat%20003jpg

துருக்கியைச் சேர்ந்த மிகச் சிறிய கால்பந்து கிளப் கல்ஸ்போர். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் இருக்கிறது. சமீபத்தில் க்ளப்பின் வருமானத்தைப் பெருக்குவதற்காக, தன்னிடம் இருந்த 18 விளையாட்டு வீரர்களை விற்று, 10 ஆடுகளை வாங்கியிருக்கிறது! இந்த ஆடுகளின் மூலம் கிடைக்கும் பால், இறைச்சியை விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் கிளப்புக்கான செலவுகளைச் சமாளித்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 ‘‘வீரர்களை விற்று, ஆடுகளை வாங்கிய நடவடிக்கையால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டோம். நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். எங்களுக்கு நிதி உதவி செய்வதற்கு விளம்பரதாரர்கள் கிடைப்பதில்லை. அரசாங்கமும் எங்களை ஆதரிப்பதில்லை. அதனால்தான் எங்கள் வீரர்களை விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஒரு தொழில் ஆரம்பித்து, பிற்காலத்தில் இந்த கிளப்பில் உள்ள வீர்ர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க முடிவு செய்தோம்.

 

18 வீரர்களை 1,80,000 ரூபாய்க்கு விற்றோம். இதில் 10 ஆடுகளை வாங்கினோம். பால், இறைச்சி விற்று வருமானம் பார்க்கலாம். ஆடுகள் குட்டி போடும். அதன்மூலம் மந்தையும் பெருகும். வருமானமும் கிடைக்கும். இது வருமானம் கொட்டக் கூடிய தொழில் அல்ல. ஆனாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த 10 ஆடுகளை வைத்து, அடுத்த சில ஆண்டுகளில் 140 ஆடுகளை உருவாக்குவதுதான் எங்கள் குறிக்கோள். இப்போது எங்களுக்குத் தேவை நிலையான வருமானம்தான்” என்கிறார் கிளப்பின் தலைவர் கெனான் பையுக்லெப்லெபி.

அய்யோ… மிகவும் பரிதாபமான கிளப்!

 

அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் ஐலாண்ட் பகுதியில் நீர்நிலையை ஒட்டியிருக்கும் பைன் மரக் காடுகளுக்கு அருகில் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த திங்கள் கிழமை காலை 45 வயது காஸ்ஸண்ட்ரா க்ளைன், தன்னுடைய நாயுடன் நடைப்பயிற்சியை மேற்கொண்டார்.

நீர்நிலையில் வசிக்கும் 8 அடி முதலை ஒன்று, நடைபாதைக்கு அருகில் ஒதுங்கியிருந்தது. நாயைக் கண்டதும் பிடித்து இழுத்தது. தன் செல்ல நாயைக் காப்பாற்றுவதற்காக முதலையுடன் போராடினார் க்ளைன். நாயை விட்டுவிட்டு, க்ளைனைப் பிடித்துவிட்ட முதலை, தண்ணீருக்குள் அவரை இழுத்துச் சென்றுவிட்டது.

இந்தக் காட்சியைக் கண்டவர்கள், காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் வந்து, க்ளைனின் உடலைக் கண்டெடுத்தனர்.

“நான் 5 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசிக்கிறேன். இதுவரை முதலைகளைத் தண்ணீரிலும் தண்ணீருக்கு அருகில் உள்ள நிலத்திலும்தான் பார்த்திருக்கிறேன். ஒரு முதலை, மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து, ஒருவரை கொன்றதை இப்போதுதான் பார்க்கிறேன். ஆட்கொல்லி முதலையை இங்கிருந்து உடனடியாக அகற்றிவிட்டனர். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது” என்கிறார் ஸ்மித்.

பாவம், செல்லப் பிராணிக்காக உயிரை விட்டுட்டாரே!

https://tamil.thehindu.com/world/article24750496.ece

Link to comment
Share on other sites

On 8/12/2018 at 5:13 PM, நவீனன் said:

 

 

 
48992619P1448231mrjpg

துருக்கியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி ‘யார் கோடீஸ்வரர் ஆக விரும்புகிறீர்கள்?’. இதில் 26 வயது சூ அயன் என்ற பொருளாதாரப் பட்டதாரி பெண் கலந்துகொண்டார்.

 ‘சீனப் பெருஞ்சுவர் எங்கே அமைந்திருக்கிறது?’ என்ற கேள்வி வந்தது. இதற்கு சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் என்று 4 நாடுகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டு, அதிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். இந்தக் கேள்விக்கு சூ அயனால் பதில் அளிக்க இயலவில்லை. அவர் லைஃப்லைனைப் பயன்படுத்தி, பார்வையாளர்களிடம் சரியான விடை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பார்வையாளர்களில் 51% பேர் சீனா என்று பதில் அளித்தனர். பாதிப் பேர் சீனா என்றும் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியா என்றும் பதில் அளித்ததால் குழப்பமடைந்தார் சூ அயன். அவருக்குச் சீனா என்று ஏற்றுக்கொள்ளத் துணிச்சல் இல்லை. அடுத்த லைஃப்லைனைப் பயன்படுத்தி, தோழியிடம் விடை கேட்டார்.

 

சீனா என்று அவர் பதில் சொன்னதும், அதையே தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பரவலான விவாதத்தைக் கிளப்பிவிட்டுவிட்டது. ‘உலகிலேயே நீளமான சுவர் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால் பரவாயில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ‘சீனப் பெருஞ்சுவர் எங்கே அமைந்திருக்கிறது?’ என்ற கேள்வியிலேயே சீனா இருக்கும்போது, இதற்கு இத்தனை லைஃப்லைன்களைப் பயன்படுத்த வேண்டுமா என்று ஒரு சாரர் கேள்வி எழுப்புகிறார்கள். இன்னொரு சாரர், ‘பெயரில் சீனா இருந்ததால்தான், இப்படிக் கேள்வியிலேயே விடை வைத்திருப்பார்களா என்று குழப்பம் அடைந்திருக்கிறார். சூ அயனை மட்டும் குறை சொல்லாதீர்கள். 49% பேர் தவறான விடையைத் தானே தந்திருக்கிறார்கள். அவர்களை என்ன சொல்வீர்கள் என்று கேட்கிறார்கள். துருக்கியின் பிரபல இசையமைப்பாளர் குறித்த அடுத்த கேள்விக்குத் தவறாக விடை அளித்து, போட்டியில் இருந்து வெளியேறினார் சூ அயன். “என்னிடம் இருக்கும் லைஃப்லைன்களை என் விருப்பத்துக்குப் பயன்படுத்திக்கொண்டேன்” என்று தன்னை விமர்சிப்பவர்களுக்குப் பதில் அளித்திருக்கிறார் இவர்.

கேள்வி உருவாக்கியவர்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது!

https://tamil.thehindu.com/world/article24662922.ece

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: ’மிஸ்டர் பிளாஸ்டிக்’

 

 
plastic%20manjpg

அமெரிக்காவின் மிச்சிகனில் வசிக்கும் 57 வயது மோசஸ் லான்ஹமை எல்லோரும் ‘மிஸ்டர் பிளாஸ்டிக்’ என்று அழைக்கிறார்கள். இவரது கால்களை 180 டிகிரிக்குப் பின்னால் திருப்பி, நடக்க முடிகிறது! அதாவது முன்பக்க முட்டியிலிருந்து பாதம் வரை அப்படியே பின்பக்கம் திரும்பிவிடுகிறது. இவருக்கு இப்படி ஓர் அசாதாரணமான ஆற்றல் இருப்பதை, 14 வயதில்தான் கண்டுகொண்டார். ஜிம் வகுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு மேலே சென்றபோது, எதிர்பாராமல் பிடி நழுவி மிக மோசமாகக் கீழே விழுந்தார். மருத்துவப் பரிசோதனையில், விழுந்ததில் கால்கள் திரும்பிவிட்டதாகத் தெரிந்தது. குணமாகி வீட்டுக்கு வந்தார். ஒருநாள் திடீரென்று தன் கால்களைத் திருப்பிப் பார்த்தார். முட்டியிலிருந்து பாதம் வரை 180 டிகிரிக்குப் பின்னால் திரும்பிவிட்டது. மோசஸின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கால்களைத் திருப்ப முடிந்ததில் ஓர் ஆச்சரியம் என்றால், அப்படித் திருப்பும்போது சிறிதும் வலி இல்லாதது இன்னோர் ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தார். இவருக்கு விபத்தினால் இந்த ஆற்றல் வரவில்லை என்றும் ஏற்கெனவே இவருக்கு இப்படிக் கால்களைத் திருப்பக் கூடிய ஆற்றல் இருந்திருக்கிறது என்பதும் தெரிந்தது. “என்னுடைய ஆற்றலை நான் கண்டுகொண்ட பிறகு யாரும் செய்ய முடியாததை நம்மால் செய்ய முடிகிறது என்ற சந்தோஷம் ஏற்பட்டது. கூட்டமாக இருக்கும் இடங்களில் நான் கால்களைத் திருப்பிக்கொண்டு நடக்கும்போது, மக்களின் முகங்களில் ஏற்படும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதை ரசிப்பதற்காகவே இப்படி நடந்து செல்வேன். இந்தத் திறமையை வைத்து இதுவரை 2 உலக சாதனைகளைப் படைத்திருக்கிறேன். அதில் ஒன்றை என்னை விட பின்பக்கமாகத் திருப்பிய கால்களுடன் வேகமாக நடப்பவரிடம் இழந்துவிட்டேன். சாதாரணமாக நடப்பதை விட, பின்பக்கம் திருப்பி நடக்கும்போது இன்னும் எளிதாக இருக்கிறது என்று சொல்வேன்” என்கிறார் மோசஸ்.

‘மிஸ்டர் பிளாஸ்டிக்’ அதிசய மனிதர்!

 

போர்ச்சுகல் நாட்டின் போர்ட்டோ நகரில் செர்ரால்வ்ஸ் ஃபவுண்டேஷன் அருங்காட்சியகம் இருக்கிறது. இங்கே பிரிட்டனைச் சேர்ந்த கலைஞர் அனிஷ் கபூர், ‘மாயத் தோற்றம்’ உருவங்களை வரைந்து வைத்திருக்கிறார். குழி போன்று தோற்றம் அளிக்கும். ஆனால், அது குழியாக இருக்காது. சாதாரண வட்டம் போன்று தோற்றம் தரும். ஆனால், அது குழியாக இருக்கும். ஒவ்வோர் இடத்திலும் அந்த மாயத் தோற்றத்தைப் பற்றியும் பாதுகாப்பாக இருக்கும்படியும் எழுதி வைத்திருக்கிறார்கள். அருங்காட்சியகத்தின் வழிகாட்டியும் எச்சரிக்கை செய்துகொண்டே இருப்பார். ஆனால் இத்தாலியைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு இதில் நம்பிக்கை இல்லை. எப்படியாவது அதைப் பரிசோதித்து, உண்மையைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று நினைத்தார். அதனால் கறுப்பு வட்டம் என்று நினைத்து அதில் குதித்தார். 8 அடி ஆழத்தில் விழுந்தார். காயம்பட்டவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். உடனே அருங்காட்சியகத்தை மூடிவிட்டனர். இன்னும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்த பிறகு, மீண்டும் திறப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  

எச்சரிக்கையை அலட்சியப்படுத்தலாமா? 

https://tamil.thehindu.com/world/article24777485.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: குற்றங்களை குறைத்த புத்தர் சிலை

 

 
55664a41P1473481mrjpg

அமெரிக்காவில் உள்ள ஓக்லாந்து நகரில் மதச்சார்பற்ற ஒருவர், அந்தப் பகுதியைச் சுற்றிலும் நடைபெற்று வந்த குற்றங்களை வெகுவாகக் குறைத்திருக்கிறார்! இதற்காக அவர் செய்தது, கடையிலிருந்து ஒரு புத்தர் சிலையை வாங்கி வைத்ததுதான். ஓக்லாந்தின் பதினோராவது அவென்யூ மற்ற இடங்களை விட வன்முறைகள் அதிகம் நடைபெறும் இடமாகக் கருதப்பட்டது. இங்கே சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருள் கடத்தல், கொள்ளை, திருட்டு போன்ற செயல்கள் நடைபெற்று வந்தன. இதே பகுதியில் வசிக்கும் டான் ஸ்டீவன்சன் ஒரு நாள், 60 செ.மீ. உயரம் உள்ள புத்தர் சிலையை வாங்கி வந்தார். தன் வீட்டின் எதிரே உள்ள மரத்தடியில் வைத்துவிட்டார். அதுவரை அங்கே தேவையற்ற பொருட்கள், குப்பைகளைத் தூக்கி வீசிக்கொண்டிருந்தவர்கள், சட்டென்று தங்கள் செயல்களை நிறுத்திக்கொண்டனர். ஒரு சிலர் புத்தர் இருந்த இடத்தை தினமும் தாங்களாகவே சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அதைப் பார்த்து சிலர், இன்னும் சில புத்தர் சிலைகளை வாங்கி அங்கே வைத்தனர். இந்தப் பகுதியில் வசிக்கும் வியட்நாமைச் சேர்ந்த மக்கள், புத்தருக்கு பழங்கள், இனிப்புகளை வைக்க ஆரம்பித்தனர். சிலர் மலர்களால் அலங்காரம் செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் வசித்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கொள்ளையர்கள், திருடர்கள், குடிகாரர்கள் எல்லாம் வேறு இடங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

“குப்பைகளைக் கொட்டுவதைத் தடுப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சிலை வைக்கும் யோசனை வந்தது. இயேசுவுக்கு எதிர்ப்பாளர்கள் இருப்பார்கள். அதனால் நடுநிலையாளரான, யாராலும் எதிர்க்க முடியாத புத்தர் சிலையை வைக்க எண்ணினேன். அதற்குப் பிறகு நானே எதிர்பார்க்காத அளவுக்கு நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன. வினா வோவும் அவரது மகன் குக் வோவும் இந்தச் சிலையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்கள். நானும் சம்மதித்தேன். விரைவில் இங்கே ஒரு சிறிய ஆலயத்தைக் கட்டி முடித்துவிட்டனர். தினமும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். வழிபடுகிறார்கள். பாடுகிறார்கள். தியானம் செய்கிறார்கள். 2012 முதல் 2014வரை இந்தப் பகுதியில் 82% குற்றங்கள் குறைந்துவிட்டதாகக் காவல் துறை அறிவித்திருக்கிறது. 14 கொள்ளைச் சம்பவங்களிலிருந்து 3 ஆகக் குறைந்துவிட்டது. 5 கொடூரமான தாக்குதல் சம்பவங்கள், இப்போது பூஜ்ஜியமாக மாறிவிட்டது. போதைப் பொருள் கடத்தல் 3-லிருந்து பூஜ்ஜியமாகவும் திருடு 8-லிருந்து 4 ஆகவும் குறைந்துவிட்டதாகக் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் புத்தர் ஆலயமாக மட்டுமின்றி, இந்த பகுதி மக்கள் சந்திக்கும் இடமாகவும் மாறிவிட்டது. இன்று இந்தப் புத்தர் ஆலயம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இவருக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கெல்லாம் கூட இருக்கிறது!” என்கிறார் டான் ஸ்டீவன்சன்.

 

அடடா! எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்!

https://tamil.thehindu.com/world/article24783569.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: பறவைகளை விரட்டும் பச்சை வண்ணம்

 

 
3afbeec5P1485411mrjpg

புதிய தொழில்நுட்பங்கள் பல துறைகளிலும் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளதைப்போல, விவசாயத்திலும் முன்னேற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அமெரிக்காவின் ஓரிகனில் உள்ள ப்ளூபெர்ரி தோட்டத்தில் பறவைகளால், 25% நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அவர்களும் பல்வேறு வழிகளில் பறவைகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றனர். இறுதியில் தொழில்நுட்பத்தின் உதவியால் அது சாத்தியமாகியிருக்கிறது. ப்ளூபெர்ரி காய்க்க ஆரம்பித்த உடன் இந்தத் தோட்டத்தில் 6 இடங்களில் அக்ரிலேசர் அட்டானமிக்ஸ் என்ற தானியங்கி லேசர் துப்பாக்கிகள் வைக்கப்பட்டன. பறவைகள் கூட்டமாக ப்ளூபெர்ரிகளை நோக்கி வரும்போது தானியங்கி லேசர் துப்பாக்கிகளில் இருந்து பச்சை வண்ண ஒளிகள் பீய்ச்சப்படும். ஒளி வந்தவுடன் பறவைகள் சட்டென்று பறந்துவிடுகின்றன.

இப்படி இந்த ப்ளூபெர்ரி சீசன் முழுவதும் தானியங்கி லேசர்கள் பறவைகளை விரட்டியதன் விளைவு, அறுவடையில் தெரிந்திருக்கிறது. தானியங்கி லேசர் கருவிகள் மூலம் இரை தேடிவந்த 99% பறவைகள் விரட்டப்பட்டிருக்கின்றன. இந்த சீசனில் 2,62,500 கிலோ ப்ளூபெர்ரிகள் பறவைகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.

 

இதன்மூலம் 70.77 லட்சம் ரூபாய் சேமிக்கப்பட்டிருக்கிறது. பறவைகளை விரட்டும் தானியங்கி லேசர் கருவி 4 ஆண்டுகள் உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு வண்ண ஒளிகளை வெவ்வேறு அலை நீளங்களில் செலுத்திப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் பச்சை வண்ண ஒளிக்கே பறவைகளை விரட்டும் சக்தி அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சிவப்பு வண்ணத்தை விட பச்சை வண்ணத்தில் அகச்சிவப்புக் கதிர்வீச்சின் ஆபத்து குறைவாக இருந்திருக்கிறது.

‘‘பறவைகளின் கண்களும் மூளையும் சிவப்பு வண்ணத்தை விட, பச்சை வண்ணத்துக்கு அதிகமாக ஒத்துழைத்தன. சிவப்பை விட பச்சை 8 மடங்கு பலனை அதிகமாகத் தந்தது. ஆபத்தும் குறைவாக இருந்தது. வண்ணங்களை முடிவு செய்த பிறகு, ஒளியின் நீளத்தைப் பரிசோதித்தோம். எதில் பறவைகளை அதிகமாக விரட்ட முடிகிறது என்பதைத் தெரிந்துகொண்டோம். பிறகுதான் தானியங்கி லேசர் கருவிகளை உருவாக்க ஆரம்பித்தோம். இப்போது லேசர் கருவிகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விமான நிலையம், எண்ணெய் நிறுவனங்கள் உட்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் லேசர் கருவிகள் இயங்கி வருகின்றன” என்கிறார் தானியங்கி லேசர் கருவிகளை உருவாக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரி ஸ்டெய்னர் ஹென்ஸ்கெஸ்.

ஒரு தானியங்கி லேசர் கருவியின் விலை சுமார் 7 லட்சம் ரூபாய். ஒரு பெரிய தோட்டத்துக்கு 2 கருவிகளாவது தேவைப்படும். இந்த லேசர் கருவிகள் எல்லாப் பறவைகளையும் விரட்டுவதில்லை. பயிருக்குத் தீங்கு விளைவிக்கும் பறவைகளையே விரட்டுகின்றன. அமெரிக்க விவசாயிகளிடம் இந்த லேசர் கருவிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 100 விவசாயிகள் இந்தக் கருவிகளைத் தங்கள் விளைநிலங்களில் வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பறவைகளுக்குத் தீங்கு வராமல் இருந்தால் சரி!

https://tamil.thehindu.com/world/article24838729.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: 8 ஆண்டுகளாக கோழிக் கூண்டில் வாழ்ந்த பெண்

 

 
henjpg

1980-ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டில் 9 வயது ‘மரியா இசபெல்’ குறித்த செய்திகள் நாட்டையே உலுக்கின. 8 ஆண்டுகளாக அந்தப் பெண் கோழிக் கூண்டுக்குள்ளேயே வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் மனிதர்களிடம் பழகாததால் மனிதருக்குரிய எந்தச் செயலையும் அவரால் செய்ய இயலவில்லை. கோழிகளைப்போலவே அவரது நடவடிக்கைகள் இருந்தன. இதனால் இவரை ‘சிக்கன் கேர்ள்’ என்று அழைத்தனர். கோயிம்ப்ரா மாவட்டத்தில் 1970-ம் ஆண்டு பிறந்த மரியாவுக்கு ஒரு வயதில் மனநலம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அதனால் அவரது அம்மா, மரியாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதவில்லை. மருத்துவம் செய்வதற்கும் வசதி இல்லை. அருகில் இருந்த கோழிக்கூண்டுக்குள் விட்டுவிட்டார். கோழிகளுக்கான உணவைச் சாப்பிட்டு, கோழிகளுடனேயே வாழ்ந்து வந்தார். மரியாவின் அண்ணன் பள்ளிக்குச் சென்றார். தன்னுடைய தோழர்களிடம் கோழிக்கூண்டுக்குள் ஒரு பெண் இருப்பதாகச் சொன்னார். விஷயம் பரவியது. ஆனால் யாரும் உதவுவதற்குத் தயாராக இல்லை. ஒருமுறை உறவினர் வீட்டுக்கு வந்தபோது, மரியா கோழிக் கூண்டிலிருந்து தப்பித்து ஓடினார். அப்போதுதான் இப்படி ஒரு பெண் குழந்தை இருப்பது உறவினர்களுக்குத் தெரியவந்தது. உடனே பெற்றோர் மீது காவல் துறையில் புகார் கொடுத்துவிட்டார். மரியாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பல்வேறு குறைபாடுகளால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. ஆனால் எந்த மருத்துவமனையும் அவரை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. வேறு வழியின்றி குடும்பத்தினரிடமே மரியாவை விட்டுவிட்டார் அவரது உறவினர். மீண்டும் கோழிக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டார்.

டாரஸ் வேட்ராஸ் மருத்துவமனையில் ரேடியாலஜி டெக்னீஷியனாக இருந்த பிசாவோ, மரியாவுக்கு உதவி செய்ய முன்வந்தார். முதலில் மரியாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து 15 நாட்கள் மருத்துவம் செய்தார். அப்போதைய போர்ச்சுகல் அதிபரின் மனைவி, மரியாவுக்குபெரிய அளவில் உதவி செய்ய முன்வந்தார். அதனால் லிஸ்பனில் இருந்த மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். இவரது நிலையைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர்.

 

“ஒரு விலங்குக்கு உரிய மூளை வளர்ச்சிதான் அவரிடம் இருந்தது. எவ்வளவு வலித்தாலும் அழ மாட்டார். கோழிகளைப்போல நடப்பார், கத்துவார், சாப்பிடுவார். 27-வது வயதில்தான் அவரது மூர்க்கம் குறைந்தது. கடந்த 16 வருடங்களாக பாத்திமா மருத்துவமனையில் இருக்கிறார். சமீபத்தில் 48-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். கடந்த 40 ஆண்டுகளாக இவரைப் பற்றிச் செய்தி வரும்போதெல்லாம், பத்திரிகைகள் அதிக அளவில் விற்பனையாகியிருக்கின்றன.  படங்கள் எடுப்பதற்கு அனுமதிப்பதில்லை. விஞ்ஞானிகள் மரியாவைப் பார்க்க விரும்புகிறார்கள். அவர் அனுமதியில்லாமல் பார்க்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது” என்கிறார் லிஸ்பனைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா கட்டாரினா.

மரியாவைப் பாதுகாக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

https://tamil.thehindu.com/world/article24845252.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தைகளுக்கு வந்த சோதனை!

 

 
18ccfe22P1499851mrjpg

ஜெர்மனியின் பின்ஸ் நகரில் இருக்கும் ‘கிராண்ட்மா கிச்சன்’ உணவகத்தில் மாலை 5 மணிக்கு மேல் 14 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளை அனுமதிப்பதில்லை. இந்தப் பாகுபாட்டைப் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். "சமீப ஆண்டுகளில் குழந்தைகளின் மனநிலையும் பெற்றோரின் மனநிலையும் அதிகமாக மாறிவிட்டது. குழந்தைகள் மேஜை மீது விரிக்கப்பட்ட துணிகளை இழுக்கிறார்கள். கண்ணாடி டம்ளர்களையும் தட்டுகளையும் உடைக்கிறார்கள். விலையுயர்ந்த கலைப்பொருட்களைத் தள்ளி விடுகிறார்கள். எந்தப் பெற்றோரும் குழந்தைகளின் செயல் களைக் கண்டிப்பதும் இல்லை, தடுப்பதும் இல்லை. இது பிற வாடிக்கையாளர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது. அதனால்தான் மாலை 5 மணிக்கு மேல் 14 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளை அனுமதிப்பதில்லை" என்கிறார் உணவகத்தின் நிறுவனர் ருடால்ஃப் மெர்கெல். மற்ற நேரங்களில் குழந்தைகள் உடைப்பதில்லையா? ‘‘மாலை நேரத்தில் மது அருந்துபவர்கள் அதிகம் என்பதால், அவர்களுக்கு இடையூறு வராமல் இருப்பதற்கு இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்" என்கிறார் பெர்னார்ட் ஃப்ராங்க். உணவகத்துக்கு வரும் வழக்கமான வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டுப்பாட்டை வரவேற்கவே செய்கிறார்கள்.

இது என்ன குழந்தைகளுக்கு வந்த சோதனை!

 

கனடாவைச் சேர்ந்த சூசன், திருமணத்துக்கு 4 நாட்களுக்கு முன் தன்னுடைய கனவு திருமணத்தை நிறுத்திவிட்டார். திருமணத்துக்கு வருபவர்கள் சுமார் 1 லட்சம் ரூபாயைப் பரிசாக அளித்து, தன்னுடைய கனவு திருமணத்தை நடத்துவதற்கு உதவும்படி கேட்டிருந்தார். ஆனால் 10 பேர் மட்டுமே அவர் கேட்ட தொகையைக் கொடுத்திருந்ததால், மனம் உடைந்து போய் கல்யாணத்தையே நிறுத்திவிட்டார். "ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வேண்டும் என்பது என் லட்சியம், கனவு. ஆனால் அதற்கான பணம் என்னிடம் இல்லை. நானும் என் வருங்காலக் கணவரும் சேர்ந்து உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கேட்டுத் திருமணத்தை நடத்த முடிவு செய்தோம். இணையதளத்தில் திருமணம் குறித்து தகவல் வெளியிட்டேன். பலரும் நல்ல யோசனை என்று என்னைப் பாராட்டி, உதவுவதாகவும் சொன்னார்கள். அதனால் திருமணத்துக்கான இடம், உணவு, உடை என்று அத்தனையும் முடிவு செய்தோம். திருமண அழைப்பிதழை அனுப்பி, முன்கூட்டியே 1 லட்சம் ரூபாய் திருமணப் பரிசைக் கொடுத்துவிடுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் முதலில் வாக்குறுதி கொடுத்தவர்களில் 10 பேரே பணத்தை அனுப்பி வைத்தனர். இதனால் மிகவும் மனம் உடைந்து போய்விட்டேன். நான்கில் ஒரு பங்கு பணத்தை வைத்துக்கொண்டு, திருமணத்தை நடத்த முடியாது என்பதால், வேறுவழியின்றி 4 நாட்களுக்கு முன் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்தேன். இதைப் பார்த்து நிதி திரட்ட சிலர் முயன்றனர். அவர்களாலும் நிதி சேகரிக்க இயலவில்லை. நாங்கள் இருவரும் எங்கள் உறவை முறித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டோம்" என்கிறார் சூசன்.

அவசியத்துக்கு உதவலாம்; ஆடம்பரத்துக்கு?

https://tamil.thehindu.com/world/article24899581.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஜீவனுள்ள பொம்மைகள்!

 

 
4a0d81edP1502471mrjpg

கம்பளியையும் ஊசியையும் வைத்துக்கொண்டு, அச்சு அசலான பூனைகளை உருவாக்கி வருகிறார் ஜப்பானைச் சேர்ந்த வாகுனெகோ. இவரது பூனை பொம்மைகளைப் பார்ப்பவர்கள், அவற்றை பொம்மை என்றே நம்புவதில்லை. அவ்வளவு தத்ரூபமாக இருக்கின்றன. பூனை முடிகளைப் போன்றே இருக்கும் தரமான கம்பளியை வாங்கி, பூனையின் தலையை உருவாக்குகிறார். பிறகு, கண்ணாடியால் ஆன கண்களைப் பொருத்தி, ஃப்ரேமில் வைத்து தைத்துவிடுகிறார். நிஜமான பூனை ஃபிரேமில் இருந்து எட்டிப் பார்ப்பது போல் தோன்றுகிறது. செல்லப் பூனைகளை வளர்ப்பவர்கள், அவை இறந்து போன பிறகு மறக்க முடியாமல் துன்பப்படுகிறார்கள். பூனையின் படத்தைக் கொடுத்து, அதேபோல் பொம்மை செய்து தரும்படிக் கேட்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த முப்பரிமாண பூனைப் பொம்மைகளை உருவாக்குவதாகச் சொல்கிறார் வாகு னெகோ. இவரது பொம்மைகள் பற்றி இணையதளங்களில் செய்தி வந்த பிறகு, உலகம் முழுவதிலுமிருந்து ஆர்டர்கள் குவிகின்றன. ஆனால், தற்போது ஜப்பானில் மட்டுமே பொம்மைகளை விற்கும் முடிவில் இருக்கிறார். ஏனென்றால் ஜப்பானியர்கள் பூனைகள் மீது அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்துவதால், ஜப்பானில் வரும் ஆர்டர்களையே அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்கிறார்.

ஜீவனுள்ள பொம்மைகள்!

 

கடந்த ஒரு நூற்றாண்டில் மருத்துவ அறிவியல் எவ்வளவோ முன்னேறிவிட்டது. ஆனாலும் இன்னும் பல உடல்நிலை பாதிப்பு களுக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவற்றில் ஒன்று காணாமல் போகும் எலும்பு சிண்ட்ரோம். இதை Gorham_Stout disease என்று அழைக்கிறார்கள். இந்த நோய் 1838-ம் ஆண்டுதான் கண்டறியப்பட்டது. இதுவரை 64 பேர் பாதிக்கப்பட்டிப்பதாக அறியப்பட்டிருக்கிறது. பொதுவாக எலும்புகள் தாமாகவே புதுப்பித்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்கக்கூடியவை. உடைந்தால்கூட வேகமாக சேர்ந்துவிடுபவை. ஸ்காட்லாந்தில் 44 வயது பெண் ஒருவர் எலும்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். 18 மாதங்களுக்கு முன்பு கடுமையான கால், கை எலும்பு வலியால் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். மருந்துகள் எடுத்துக்கொண்டும் பிரச்சினை சரியாகவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, எலும்புப் புற்றுநோயாக இருக்கும் என்று நினைத்து, அதற்கான பரிசோதனைகளும் செய்யப்பட்டன. ஆனால் பயாப்ஸியில் புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. மருத்துவர்கள் இதுவரை எடுத்த பரிசோதனைகளை வைத்துப் பார்த்தபோதுதான், எலும்புகள் வேகமாக மறைந்து வருவதைக் கண்டறிந்தனர். இந்த நோயைக் கண்டுபிடிப்பதே கஷ்டம். அப்படியே கண்டுபிடித்தாலும் குணப்படுத்தக் கூடிய மருத்துவம் இல்லை. இந்த நோய் ஆண், பெண் இருபாலரையும் எந்த வயதினரையும் தாக்கக்கூடியது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள எலும்புகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டு, புது எலும்பு வைக்கலாம். ஆனால் இந்த அறுவை சிகிச்சை அவ்வளவு எளிதானது அல்ல. இந்த நோய் முதுகெலும்புக்குப் பரவாதவரை, உயிருக்கு ஆபத்து இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

அரிய நோயாக இருப்பதில் சற்று ஆறுதல்…

https://tamil.thehindu.com/world/article24907059.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உலக மசாலா: பின்தொடரும் வாத்துகள்!

 

 
133793daP1529771mrjpg

தென் கொரியாவின் சியோல் நகரில் வசிக்கும் ஒருவரை, 21 வாத்துக் குஞ்சுகள் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், தாயைத்தான் பின்தொடரும். ஆனால், மனிதரைப் பின்தொடர் வதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியமடைகிறார்கள். சமீபத்தில் இந்த மனிதர் தன்னைப் பின்தொடரும் வாத்துக் குஞ்சுகளைப் படம்பிடித்து வெளியிட்டிருக்கிறார். “நான் 21 வாத்து முட்டைகளைப் பொரிக்க வைத்தேன். ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வர சிரமப்பட்ட குஞ்சுகளுக்கு ஓடுகளை உடைத்து, உடலைத் தடவி கொடுத்து, பத்திரமாகப் பார்த்துக்கொண்டேன். முட்டைக்குள்ளிருந்து வெளிவந்த வுடன் என்னைப் பார்த்ததாலோ என்னவோ அத்தனை வாத்துக் குஞ்சுகளும் நான் சொல்வதைக் கேட்கின்றன. நான் எங்கே சென்றாலும் பின்னாலேயே வருகின்றன. வீட்டில்தான் இப்படி என்று காட்டுக்குள் சென்றேன். அங்கும் இவை என்னுடனே வந்துகொண்டிருந்தன. நான் நின்றால் அவையும் நின்றன. ஓரிடத்தில் அமர்ந்து, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினேன். அனைத்தும் ஆனந்தமாகக் குடித்தன. நான் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தேன். உடனே தண்ணீர் கூடக் குடிக்காமல் என் பின்னால் வர ஆரம்பித்துவிட்டன. அந்த வழியே வந்தவர்கள் எல்லாம் இந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பறவைகளை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. அவை எல்லை இல்லாமல் சுதந்திரமாக வாழக் கூடியவை. அவற்றை ஓரிடத்தில் அடைத்து வைப்பது சரியில்லை. அதனால் இன்னும் சற்று வளர்ந்தவுடன், போதுமான பயிற்சி கொடுத்து காட்டில் விட்டுவிடப் போகிறேன். அப்போது இவற்றால் காட்டில் தாக்குப் பிடிக்க முடியும். இங்கே வாருங்கள், கிளம்பலாம் போன்ற கட்டளைகளை இவை புரிந்துகொண்டு செய்வதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார் இவர்.

நாய்க்குட்டியைப்போல, பின்தொடர்கின்றனவே இந்த வாத்துகள்!

 

சீனாவின் ஷாங்காய் நகரில் வசிக்கும் 50 வயது கு, 73 கல்யாண உடைகளைத் திருடிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெண்களின் திருமண உடைகளை ஏன் திருடியிருக்கிறார் என்று கேட்டதற்கு, விவாகரத்துப் பெற்ற தனக்கு மீண்டும் திருமணம் செய்யும் ஆர்வம் வர வேண்டும் என்பதற்காக உடைகளை எடுத்தேன் என்கிறார். ஷாங்காய் நகரில் உள்ள மொத்த வியாபாரிகள், தங்கள் கடைகளில் துணிகளைத் தொங்கவிட்டிருப்பார்கள். அவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்திருக்கிறார். கடந்த வாரம் 8 விலை மதிப்பு மிக்க உடைகளைக் காணவில்லை என்று ஒரு பெண் புகார் கொடுத்தார். கண்காணிப்பு கேமராவில் கு எடுப்பது தெரிய வந்தது. உடனே பிடித்துவிட்டனர். தான் திருடன் இல்லை என்றும் இந்த உடைகளை விற்றுப் பணம் பெறுவது தன்னுடைய நோக்கம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதுவரை இவர் எடுத்த 73 உடைகளின் மதிப்பு 6.8 லட்சம் ரூபாய். இவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். எந்தப் பாதிப்பும் இல்லை என்று சொல்லிவிட்டதால், கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒரு காரணமா!

https://tamil.thehindu.com/world/article25013651.ece

Link to comment
Share on other sites

 

3 hours ago, நவீனன் said:

உலக மசாலா: பின்தொடரும் வாத்துகள்!

 

 
133793daP1529771mrjpg

தென் கொரியாவின் சியோல் நகரில் வசிக்கும் ஒருவரை, 21 வாத்துக் குஞ்சுகள் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக முட்டைகளில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், தாயைத்தான் பின்தொடரும். ஆனால், மனிதரைப் பின்தொடர் வதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியமடைகிறார்கள். சமீபத்தில் இந்த மனிதர் தன்னைப் பின்தொடரும் வாத்துக் குஞ்சுகளைப் படம்பிடித்து வெளியிட்டிருக்கிறார். “நான் 21 வாத்து முட்டைகளைப் பொரிக்க வைத்தேன். ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வர சிரமப்பட்ட குஞ்சுகளுக்கு ஓடுகளை உடைத்து, உடலைத் தடவி கொடுத்து, பத்திரமாகப் பார்த்துக்கொண்டேன். முட்டைக்குள்ளிருந்து வெளிவந்த வுடன் என்னைப் பார்த்ததாலோ என்னவோ அத்தனை வாத்துக் குஞ்சுகளும் நான் சொல்வதைக் கேட்கின்றன. நான் எங்கே சென்றாலும் பின்னாலேயே வருகின்றன. வீட்டில்தான் இப்படி என்று காட்டுக்குள் சென்றேன். அங்கும் இவை என்னுடனே வந்துகொண்டிருந்தன. நான் நின்றால் அவையும் நின்றன. ஓரிடத்தில் அமர்ந்து, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றினேன். அனைத்தும் ஆனந்தமாகக் குடித்தன. நான் மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தேன். உடனே தண்ணீர் கூடக் குடிக்காமல் என் பின்னால் வர ஆரம்பித்துவிட்டன. அந்த வழியே வந்தவர்கள் எல்லாம் இந்தக் காட்சியைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பறவைகளை வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. அவை எல்லை இல்லாமல் சுதந்திரமாக வாழக் கூடியவை. அவற்றை ஓரிடத்தில் அடைத்து வைப்பது சரியில்லை. அதனால் இன்னும் சற்று வளர்ந்தவுடன், போதுமான பயிற்சி கொடுத்து காட்டில் விட்டுவிடப் போகிறேன். அப்போது இவற்றால் காட்டில் தாக்குப் பிடிக்க முடியும். இங்கே வாருங்கள், கிளம்பலாம் போன்ற கட்டளைகளை இவை புரிந்துகொண்டு செய்வதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார் இவர்.

நாய்க்குட்டியைப்போல, பின்தொடர்கின்றனவே இந்த வாத்துகள்!

 

https://tamil.thehindu.com/world/article25013651.ece

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: கொடூரமான சிந்தனை

 

 
40ed9beeP1532193mrjpg

ஆஸ்திரேலியாவின் 6 மாநிலங்களிலிருந்து ஸ்ட்ராபெர்ரி விளைவிக்கப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன. சமீபத்தில் கடைகளில் வாங்கிய ஸ்ட்ராபெர்ரிகளில் உலோக ஊசி இருப்பதாக ஏராளமானவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். உடனே பழங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். பெரும்பாலான பழங்களில் ஊசிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. முதலில் இந்தப் பிரச்சினை க்வின்ஸ்லாந்தில்தான் ஆரம்பித்திருக்கிறது. விரைவில் நாடு முழுவதும் பரவிவிட்டது. இப்படி ’விவசாயத்தில் தீவிரவாதம்’ யார் செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஸ்ட்ராபெர்ரிகளை வாங்குபவர்கள் அப்படியே சாப்பிடாமல், வெட்டிய பிறகு சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். க்வின்ஸ்லாந்தில் 24 வயது இளைஞர் ஒருவர் ஸ்ட்ராபெர்ரியில் இருந்த ஊசியைக் கவனிக்காமல் விழுங்கிவிட்டார். வயிற்றில் வலி வந்த பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மூலமே ஸ்ட்ராபெர்ரி புகார் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏராளமான புகார்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வர ஆரம்பித்தன. எவ்வளவோ முயற்சி செய்தும் அரசாங்கத்தால் யார் செய்கிறார்கள், எதற்காகச் செய்கிறார்கள் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இப்படிப்பட்ட மோசமான செயலைச் செய்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து அதிக அளவில் ஸ்ட்ராபெர்ரியை இறக்குமதி செய்யும் நியூசிலாந்து வாங்குவதை நிறுத்திவிட்டது. இந்தச் செயலால் விவசாயிகள், வியாபாரிகள், மக்கள் என்று பல தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உணவுப் பொருளில் இப்படி ஒரு கொடிய காரியத்தைச் செய்பவர்களை மன்னிக்க முடியாது என்கிறார்கள் பெரும்பாலானவர்கள்.

ஐயோ… எவ்வளவு கொடூரமான சிந்தனை…

 

இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர் அன்னா ப்ரெளன்ஸ்டட். மனிதர்களின் குணத்தை அறிந்துகொள்வதற்காக, 1 லட்சம் பென்னிகளை நீரூற்றுத் தொட்டிக்குள் போட்டார். ஒரு வாரம் கழித்து என்ன ஆகியிருக்கிறது என்று பார்ப்பதற்காகக் காத்திருந்தார். ஆனால் நாணயங்களைப் போட்டு 24 மணி நேரத்துக்குள் பெரும்பாலான நாணயங்கள் திருடு போய்விட்டன. இந்த நாணயங்களின் மதிப்பு சுமார் 94.5 ஆயிரம் ரூபாய். தற்போது 154 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களே எஞ்சியிருக்கின்றன. ”இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் மனம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காகவே இந்தச் சமூகப் பரிசோதனையை மேற்கொண்டேன். 354 கிலோ செப்பு நாணயங்களைப் பலரும் வந்து செல்லும் கேம்ப்ரிட்ஜ் நீரூற்றுத் தொட்டிக்குள்  போட்டிருப்பதையும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்திருந்தோம். அப்படியும் 99% நாணயங்கள் திருடு போய்விட்டன என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அதுவும் ஒரே நாளில் மாயமாகியிருப்பதை நினைத்தால் கவலையாகவும் இருக்கிறது. இப்படி எடுக்கப்பட்ட நாணயங்களை ஏழைகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் கொடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களிடம் விசாரித்தபோது, அனைவரும் தம் சொந்தத் தேவைகளுக்கே பயன்படுத்திக்கொண்டது இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனாலும் ஆத்திரமூட்டும் செயலாக இதைப் பார்க்கவில்லை. தமக்குச் சொந்தமில்லாததை எடுக்கக் கூடாது என்ற மனநிலையை இன்னும் மக்கள் பெறவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்” என்கிறார் அன்னா.

பக்குவப்படாத மனிதர்கள்!

https://tamil.thehindu.com/world/article25019380.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடலடித் தரையையே தூக்கிப் போடும் இந்தோனேசிய பூகம்பங்களும் சுனாமிகளும் ஏன் படுபயங்கரம்?

இந்தோனேசியாவின் சுலாவேசியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் பூகம்பம் மற்றும் சுனாமியினால் பலு நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சுமார் 1200 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகாரிகள் இன்னமும் கூட சேதத்தின் அளவை முழுமையாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது இந்தோனேசியாவில் முதல் முறையல்ல என்றாலும் இது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

   
 

இது குறித்து அஞ்சா ஸ்கெபர்ஸ் என்ற சதர்ன் கிராஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ‘தி கான்வர்சேஷன்’ என்ற இதழில் எழுதியுள்ள கட்டுரையில் விளக்கியுள்ள காரணங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துபவை.

கண்டத்தட்டுக்களின் நகர்வில் பலவகைகள் உள்ளன. இந்தோனேசியாவில் கண்டத்தட்டுக்கள் (டெக்டானிக் பிளேட்டுகள்) நகர்வதில் பல்வேறு விதமான சேர்க்கைகள் உள்ளன. கடற்கரையின் வடிவம், கடற்கரை அருகே எந்தவிதப் பாதுகாப்பும் முன்னெச்சரிக்கையும் இல்லாத மக்கள் திரள், முன் கூட்டியே அறிவிக்கும் திறனின்மை ஆகியவை இந்தோனேசியாவில் பாதிப்படி ஏற்படுத்துகின்றன.

கண்டத்தட்டுக்கள் (டெக்டானிக் பிளேட்ஸ்)

இந்தோனேசியா எந்தக் கண்டத்தட்டின் மேல் உட்கார்ந்துள்ளதோ அதன் அடியில் பயங்கரமான புவியியல் பாறை நிகழ்வுகள் ஏற்படுகின்றன, இது சுலபத்தில் கண்டறிய முடியாதது. உலகில் மிகப்பெரிய பூகம்பங்கள் ‘சப்டக்‌ஷன் மண்டலம்’ என்று அழைக்கப்படும், கண்டங்களைத் தாங்கும், ஏன் கடலையே தாங்கும் கண்டத்தட்டுக்கள் ஒன்றின் அடியில் ஒன்று செல்லும் பூகம்பங்கள் பயங்கரமானவை.

javabalilombok-blockdiagram0png
 

டிசம்பர் 2004, மார்ச் 2005-ல் சுன்டா ட்ரெஞ்ச் அல்லது சுன்டாவில் இருக்கும் நீண்ட நெடும் பாறைப்பள்ளம் பகுதி சப்டக்‌ஷன் மண்டலமாகும் இங்கு ஒரு பிளேட் இன்னொரு பிளேட்டின் அடியில் சென்று விடும். இப்படித்தான் 2004ல் 9.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டு தெற்காசிய சுனாமியை ஏற்படுத்தி லட்சக்கணக்கானோர் பலியாகினர். இது மட்டுமல்ல கிழக்கு இந்தோனேசியாவில் சிறுசிறு நுண் தட்டுக்கள் உள்ளன. இவை ஆஸ்திரேலியா, சுன்டா மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் தட்டுக்கள் அல்லது பெரும்பாறைகள் நகரும்போது ஆட்டம் காண்கின்றன, உலுக்கப்படுகின்றன.

இந்த சுலாவேசி பூகம்பம் இத்தகைய சிறிய நுண் கண்டத்தட்டுக்களின் உள்பகுதியில் உள்ள ஸ்ட்ரைக் ஸ்லிப் ஃபால்ட் அதாவது கிடைக்கோட்டு பாறைநகர்வின் மூலம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பொதுவாக கிடைக்கோட்டு கண்டத்தட்டு நகர்வின் மூலம் பெரிய சுனாமிகள் உருவாவது அரிதே. அத்தகைய அரிதான சுனாமிதான் பலுநகரைச் சூறையாடியுள்ளது.

பெரும்பாறை பிளவு அமைப்புகள் மிகப்பெரியது, இவை அரிப்பு நடவடிக்கைகளினால் அகலமான நதிப்பள்ளத்தாக்குகளையும் முகத்துவாரங்களையும் உருவாக்குகின்றன. பலு நதியின் பள்ளத்தாக்கு அதன் முகத்துவாரம், இதில்தான் பலுநகரம் உள்ளது. பலு உட்கார்ந்துள்ள புவிப்பகுதியே இப்படிப்பட்ட சிக்கல் நிறைந்த பெரும்பாறைப்பிளவு அமைப்பினால் உருவானதே. இப்பகுதியில் வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் ஏற்பட்ட பூகம்பம் பற்றிய ஆய்வுகளில் இந்தபெரும்பாறைப் பிளவுகளே ரிக்டர் அளவுகோலில் 7-8 என்று பதிவாகும் பூகம்பங்களை உருவாக்குகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கடலடித் தரை சுனாமி அலைகளைத் தீர்மானிக்கிறது:

கடலடித் தரையின் வடிவம் மற்றும் ஆழம் சுனாமிப் பேரலைகளைத் தீர்மானிக்கிறது. தொடக்க சுனாமி அலைகளின் வேகத்தையும் இவை தீர்மானிக்கின்றன. கடலடித் தரையின் மேல் வலுவான சப்டக்‌ஷன் மண்டல, கண்டத்தட்டுக்கள் ஒன்றின் அடியில் ஒன்று செல்லும் பூகம்பங்கள் ஏற்படும்போது கடல் தரையையே அவை தூக்கிப் போடுகின்றன, இதனையடுத்து கடல்நீர் பெரிய அளவில் நினைத்துப் பார்க்க முடியாத வால்யூமில் மேலேறி பிறகு மீண்டும் கீழிறங்குகின்றன.

CapturePNG
 

எனவே பூகம்பம் ஏற்பட்ட மையத்திலிருந்து வெளியே பாய்ந்து வரும் கடல்நீர் வரம்புக்குட்பட்ட உயரம் கொண்டதே. ஒரு மீட்டருக்கு மேல் அரிதாகவே இருக்கும். ஆனால் இடம்பெயரும் கடல்நீரின் அளவு மிகப்பெரியது, நினைத்துப் பார்க்க முடியாதது, அளவிட முடியாதது. கடலடித் தரையை எந்த அளவுக்கு பூகம்பம் நகர்த்தியுள்ளது என்பதைப் பொறுத்து இடம்பெயரும் கடல்நீரின் அளவு இருக்கும். சுனாமி அலைகள் ஜெட் வேகத்தில் நகரும். தண்னீருக்குள் 2 கிமீ ஆழத்தில் ராட்சத அலைகள் பயணிக்கும். இந்த 2 கிமீ ஆழத்தில் அவை மணிக்கு 700கிமீ வேகத்தில் பாயும். இன்னும் ஆழத்தில் பயணிக்கும் பேரலைகள் மணிக்கு 1000 கிமீ வேகத்தில் பாயும்.

ஆனால் கடற்கரையை அது அடையும் போது ஆழம் குறைவான பகுதி என்பதால் அதன் வேகம் குறையும் அதன் உயரம் அதிகரிக்கும். திறந்தகடல் வெளியில் பார்க்கும்போது 1 மீ உயரமாக இருப்பது கரையை மோதும்போது 5-10 மீ உயரம் வரை ராட்சத அலைகள் எழும்பும். கடற்கரைக்கு வரும் பாதை இன்னும் மேடாக இருக்குமானால் இன்னும் சிலபல மீட்டர்கள் உயரம் எழும்பும். கடற்கரை அருகே சுனாமி வேகம் குறைந்தாலும் அதன் தொடக்க வேகத்தினால் கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் பல கிமீகள் வரை கடல்நீரில் மூழ்கும்.

இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களில் கடற்கரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை, குறிப்பாக சுலாவேஸி முக்கியமானது. பலுவில் குறுகலான, ஆழமான நீளமான விரிகுடா கொண்டது. அதாவது சுனாமி அலைகளைத் தீவிரப்படுத்துவதற்கான அத்தனை அம்சங்களையும் அது கொண்டுள்ளது. அதனால்தான் கடல் அலை உயரம் போன்றவற்றை எளிதில் கணிக்க முடியாது.

கடற்கரைப் பகுதி மக்கள் உயரமான இடங்களுக்குச் சென்று அங்கு 2 மணி நேரம் வரையிலும் இருப்பது அவசியம். ஆனால் எதார்த்தத்தில் இது மிகவும் சிக்கலான ஒரு நடைமுறையாகும். ஹவாயிலும் ஜப்பானிலும் மிகவும் திறம்பட்ட, மேம்பட்ட சுனாமி எச்சரிக்கை அமைப்புகள் செயல்படுகின்றன. இந்தோனேசியாவில் இவற்றை அமைப்பது மிகவும் சவாலானது.

ஆனால் 2004 கொலைகார சுனாமிக்குப் பிறகே சர்வதேச நாடுகளின் முயற்சியினால் இந்தோனேசியாவில் 134 ஆழிப்பேரலை கணிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடலடித் தரை செயல்களை கண்டுணரும் சென்சார்களும் உள்ளன. இதை இன்னும் மேம்படுத்த வேண்டுமெனில் 250000 அமெரிக்க டாலர்களைச் செலவு செய்வதோடு, ஆண்டுக்கு 50,000 டாலர்கள் செலவிட்டு இவற்றை பராமரிக்கவும் வேண்டும். இத்தகைய பூகம்பங்களே நீருக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கும் ராட்சத சுனாமி அலைகளுக்கும் காரணம். பலுவில் ஏற்பட்ட சுனாமி இதுவரையிலான சுனாமி ஆய்வு மாதிரிகளுக்கு சவால் விடுப்பதாகும்.

இவ்வாறு பேராசிரியர் அஞ்சா ஸ்கெஃபர்ஸ் தி கான்வர்சேஷன் என்ற இதழில் எழுதியுள்ள கட்டுரையில் விளக்கியுள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.