Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: அஜாக்கிரதையின் விலை 17 லட்சம்!

 

 
 
 
 
masala_3180892h.jpg
 

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இயங்கி வருகிறது மிகப் பெரிய ருய்லி ஜிகாவோ நகைக் கடை. விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்குப் புகழ்பெற்ற கடை இது. ’நகைகளை உடைத்தால், அதை நீங்களே வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று ஆங்காங்கே எச்சரிக்கையும் எழுதி வைத்திருக்கிறார்கள். பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் நகைக் கடைக்கு வந்தார். விதவிதமான நகைகளை எடுத்துப் போட்டுப் பார்த்தார். பச்சை மாணிக்கக் கற்களால் செய்யப்பட்ட வளையல் அவரை மிகவும் ஈர்த்தது. வழவழப்பான அந்த வளையலை எடுத்துப் போடும்போது, கைதவறி கீழே விழுந்து, இரண்டாக உடைந்துவிட்டது. பொதுவாக வாடிக்கையாளர் உடைத்த பொருட்களை, அவர்களே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் உரிமையாளர்கள் அதைப் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் இது மிகப் பெரிய இழப்பு. ஒரு வளையலின் விலை 28 லட்சம் ரூபாய். விலையைப் பார்த்தவுடன் சுற்றுலாப் பயணி மயங்கி விழுந்துவிட்டார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. “நல்லவேளை, அவருக்குப் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. பத்து நிமிடங்களில் எழுந்துவிட்டார். அவரிடம் வளையலுக்குரிய 28 லட்சத்தையும் நாங்கள் நஷ்ட ஈடாகக் கேட்கவில்லை. உடைந்த வளையலுக்கு உரிய 17 லட்சத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டோம். இது அவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என்கிறார் கடையின் உரிமையாளர் லின் வெய். விஷயம் சமூக வலைதளங்களில் பரவியது. இவ்வளவு பெரிய தொகையை அந்தப் பெண்ணால் கொடுக்க இயலுமா, கடையின் உரிமையாளர் செய்தது அநியாயம் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர், அந்தப் பெண் கூடுதல் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். இவ்வளவு விலையுயர்ந்த வளையலைப் போட்டுப் பார்க்க நினைத்தார் என்றால், அவரால் இந்த இழப்பீட்டைக் கொடுக்க முடியும் என்கிறார்கள்.

அஜாக்கிரதையின் விலை 17 லட்சம்!

நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தால் சாப்பிட வேண்டியதில்லை என்ற கருத்தை வைத்து உருவாகியிருக்கிறது ஸ்லீபிங் பியூட்டி டயட். உலகம் முழுவதும் எடை குறைப்புக்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கினால் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம் என்பது. விழித்திருக்கும் சிறிது நேரத்துக்கு மட்டும் வெகு குறைவாகச் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதால் உடல் எடை குறையும் என்கிறார்கள். ஆனால் இந்த ஸ்லீபிங் டயட்டை மருத்துவ உலகம் நிராகரிக்கிறது. இதில் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் இருப்பதாகச் சொல்கிறது. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்குவதே ஆரோக்கியமான விஷயம் இல்லை. தூக்க மாத்திரைகள் இல்லாமல் இவ்வளவு நேரம் தூங்கவே முடியாது. இப்படி மாத்திரைகளுடன் தூங்கும்போது நாளடைவில் மாத்திரை போட்டால்தான் தூக்கம் வரும் என்ற நிலைமைக்குச் சென்றுவிடுவார்கள். இயல்பு வாழ்க்கை பாதிப்பதோடு, மனநலத்தையும் கெடுத்துவிடும். குறைந்த உணவு வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இவ்வளவு நேரம் தூங்கி உடல் இளைத்து, எதைச் சாதிக்கப் போகிறார்கள்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அஜாக்கிரதையின்-விலை-17-லட்சம்/article9742619.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: அட்டகாசமான காகித விமானம்!

 

 
plane_3181419f.jpg
 
 
 

காகிதத்தில் விமானம் செய்வதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 25 வயது லூகா லகோனி ஸ்டீவர்ட், 9 ஆண்டுகள் செலவு செய்து ஒரு காகித விமானத்தை உருவாக்கியிருக்கிறார்! ஆனால் இது சாதாரணமான காகித விமானம் இல்லை. ஏர் இந்தியா போயிங் 777 விமானத்தை அச்சு அசலாகக் காகிதத்தில் உருவாக்கியிருக்கிறார். “எனக்குச் சின்ன வயதிலிருந்தே விமானங்கள் மீது ஆர்வம் அதிகம். ஏர் இந்தியா 777 விமானத்தை இணையதளத்தில் பார்த்தேன். அந்த விமானத்தின் அளவுகள் எல்லாம் அத்தனை கச்சிதமாக இருந்தன. ஆனால் தொழில்நுட்ப ரீதியிலான வரைபடங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. விமானம் தொடர்பான நூற்றுக்கணக்கான புகைப்படங்களைச் சேகரித்துக்கொண்டேன். 2008-ம் ஆண்டு இந்த விமானத்தை உருவாக்க ஆரம்பித்தேன். போல்ட் முதல் இன்ஜின் வரை ஒவ்வொரு விஷயத்தையும் காகித விமானத்தில் கொண்டு வந்தேன். 2014-ம் ஆண்டு என்னுடைய காகித விமானம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அந்த ஆண்டுதான் பயணிகள் இருக்கைகளை உருவாக்கினேன். சாதாரண வகுப்புக்கு 20 நிமிடங்களும், நடுத்தர வகுப்புக்கு 4 முதல் 6 மணி நேரங்களும், உயர் வகுப்புக்கு 8 மணி நேரங்களும் இருக்கைகள் தயாரிக்க எடுத்துக்கொண்டேன். 9 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய காகித விமானம் முழுமையடைந்துவிட்டது. மீண்டும் இன்னொரு காகித விமானம் செய்யும் எண்ணம் இல்லை” என்கிறார் லூகா லகோனி.

அட்டகாசமான காகித விமானம்!

இங்கிலாந்தைச் சேர்ந்த யேட்ஸ், கார்ட் தம்பதியருக்குக் கடந்த ஆண்டு கிறிஸ் சார்லி என்ற ஆண் குழந்தை பிறந்தது. 8 வாரங்களில் சார்லிக்கு அரிய மரபணுக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. தசைகள் வலுவிழந்தன. மூளை சேதமடைய ஆரம்பித்தது. மருத்துவம் பார்ப்பதற்காக நன்கொடைகளைத் திரட்டிக்கொண்டு, அமெரிக்கா சென்றார் யேட்ஸ். செயற்கை சுவாசக் கருவிகளுடன் சார்லிக்கு மருத்துவம் செய்துவந்தார்கள் மருத்துவர்கள். தினமும் குழந்தையிடம் விரைவில் வீட்டுக்குச் சென்றுவிடுவோம் என்று பெற்றோர் கூறிவந்தனர். ஒருகட்டத்தில் சார்லியைக் குணப்படுத்த முடியாது என்ற நிலை வந்தபோது, தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக யேட்ஸும் கார்டும் கூறினார்கள். ஆனால் மருத்துவமனை அனுமதிக்கவில்லை. அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடினார்கள். சார்லி இருக்கும் நிலையில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் வீட்டுக்கு அனுப்ப முடியாது என்று நீதிமன்றமும் கூறிவிட்டது. பலமுறை மேல்முறையீடு செய்தனர். இறுதியில் மருத்துவமனையிலேயே சார்லி நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டான். “நாங்கள் ஒரே ஒரு நாள் எங்கள் வீட்டில் குழந்தையை வைத்திருக்க விரும்பினோம். ஒரு பெற்றோருக்கு இந்த ஆசை கூட இருக்கக்கூடாதா? அவனுக்காக வாங்கி வைத்த தொட்டிலில் படுக்க வைத்து, புதுத்துணி போட்டு அழகு பார்த்து, இறுதி விடைகொடுத்திருப்போம். சார்லிக்காகப் பெறப்பட்ட நன்கொடையை, குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கு வழங்க இருக்கிறோம்” என்கிறார் யேட்ஸ். குழந்தையால் பார்க்கவோ, கேட்கவோ முடியாமல் போன பிறகு எப்படி இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்க முடியும் என்கிறது மருத்துவமனை.

பெற்றோரின் ஆசையை நிறைவேற்றியிருக்கலாம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அட்டகாசமான-காகித-விமானம்/article9744165.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: பலகை படிக்கும் காகங்கள்

 
 
masala_3181640f.jpg
 
 
 

‘இந்தப் பகுதிக்குள் நுழைய வேண் டாம்’ என்ற குறியீடுகளை எழுதி வைத்தால், அந்தப் பகுதிக்குள் காகங்கள் நுழைவதில்லை! “3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பரும் காகங்கள் ஆராய்ச்சியாளருமான சுடோமு, காகங்கள் உள்ளே வரவேண்டாம் என்ற குறியீடுகளை எழுதி வைக்கும்படிக் கூறினார். கிண்டல் செய்கிறார் என்று நினைத்தேன். அவரது கட்டாயத்தின் பேரில் எழுதி வைத்தேன். என்ன ஆச்சரியம், அதன் பிறகு காகங்கள் அந்தப் பகுதிக்குள் நுழையவே இல்லை. இந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை பரிசோதித்துப் பார்த்துவிட்டேன்.

குறியீடுகள் வைக்கும் வரை காகங்கள் தொல்லை அதிகமாக இருந்தது. கூடுகளைக் கட்டுவதும் குஞ்சுகளைப் பொரிப்பதுமாக எப்போதும் காகங்களின் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதி இது. இப்போதும் காகங்கள் வருகின்றன, குறியீடு அட்டையைப் பார்த்தவுடன் திரும்பிச் சென்றுவிடுகின்றன. ஜப்பானின் ஓட்சூச்சி நகரில் உள்ள எங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் சுனாமியால் கதவுகள், ஜன்னல்கள், குழாய்கள் எல்லாம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த இடங்களில் காகங்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்புச் செய்திருந்தன. ’உள்ளே நுழையாதே’ பலகையைத் தொங்கவிட்டேன்.

அன்றிலிருந்து அந்தப் பகுதிக்குள் எந்தக் காகமும் நுழைவதில்லை” என்கிறார் பேராசிரியர் கட்சுஃபுமி சாட்டோ. “காகங்களுக்குக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு இருக்கிறதா என்று கேட்கிறார்கள். எங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் எப்பொழுதும் யாராவது காகங்களை, கை நீட்டி விரட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கை நீட்டும் இடங்களில் ஏதாவது பலகை தொங்கிக்கொண்டிருக்கும். நாளடைவில் பலகையைக் கண்டாலே அங்கே நுழையக் கூடாது என்று காகங்கள் புரிந்துகொண்டன.

பலகையில் காகங்கள் நுழையலாம் என்று எழுதி வைத்தாலும் அவை எட்டிப் பார்ப்பதில்லை. அதனால் அவற்றுக்குக் குறியீடு புரிகிறது என்று சொல்ல முடியாது. ஆனால் பலகையைப் பார்த்ததும் தங்களுக்கு அபாயம் என்று நினைத்து, அவை நுழைவதில்லை” என்கிறார் ஆராய்ச்சியாளர் சுடோமு டேகேடா.

நாமெல்லாம் குடையை விரித்தே காகங்களை விரட்டிவிடுகிறோம்!

 

மெக்சிகோவைச் சேர்ந்த அண்டோனியோ கார்சியா தீவிரமான கால்பந்து ரசிகர். உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளைக் காணக் கிளம்பிவிடுவார். அளவுக்கு அதிகமான ஆர்வம் அவரது மனைவிக்குப் பிடிப்பதில்லை. அன்று கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். பல மணி நேரங்களுக்குப் பிறகும் அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.

போனிலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தார். “நான் பலமுறை இப்படிச் சென்றிருக்கிறேன். அதனால் என் மனைவி பதறமாட்டார். ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டியைக் காணச் செல்கிறேன் என்றால் விடமாட்டார். அதனால் சிகரெட் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அப்படியே ஜெர்மனி சென்று, அங்கிருந்து ரஷ்யா போனேன். போட்டியைப் பார்த்துவிட்டு உடனடி யாகக் கிளம்பிவிட்டேன். என் மனைவிக்கு ஒரு பரிசுப் பொருளை மறக்காமல் வாங்கிவிட்டேன்.

என் வாழ்நாள் சேமிப்புகளை எல்லாம் கால்பந்து போட்டிகளைக் காணவே செலவு செய்கிறேன் என்று புரிகிறது. ஆனால் அந்த சந்தோஷத்துக்கு இணை வேறு எதுவும் இல்லை. பணத்தைச் சம்பாதித்துவிடலாம். இப்படிப்பட்ட சந்தோஷங் களை இழந்துவிடக்கூடாது” என்கிறார் அண்டோனியோ கார்சியா.

இப்படியும் ஒரு ரசிகர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பலகை-படிக்கும்-காகங்கள்/article9745141.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: விளையாட்டு, விபரீதமான பரிதாபம்!

nup_3182298h.jpg
 

அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியில் யூடியூப் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தார் 22 வயது பெட்ரோ ரூயிஸ். மனைவி மோனாலிசா பெரெஸ், 3 வயது மகளுடன் சேர்ந்து தினமும் ஏதாவது குறும்புகளை வீடியோ எடுத்து, யூடியூபில் வெளியிட்டு வந்தார். இவர் களது மோனாலிசா யூடியூப் சேனலுக்குப் பல்லாயிரக் கணக்கானவர்கள் சந்தா தாரர்களாக இருக்கிறார்கள். டோனட் மீது சர்க்கரைக்குப் பதிலாக குழந்தையின் பால் பவுடர் தூவிச் சாப்பிடுவது, முட்டையில் அதிகமான மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடுவது என்று சாதாரணக் குறும்புகளாக ஆரம்பித்து நாளடைவில் அது பெரிய அளவுக்குச் சென்றுவிட்டது. 3 லட்சம் சந்தாதாரர்களைப் பெறுவதற்காக மிகப் பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டினார் பெட்ரோ. உலகிலேயே சக்தி வாய்ந்த துப்பாக்கியால் மோனாலிசா சுட வேண்டும், அந்தக் குண்டை ஒரு புத்தகத்தால் பெட்ரோ தடுத்து நிறுத்த வேண்டும். பல முறை இவற்றை இருவரும் பரிசோதித்துப் பார்த்தனர். குடும்பத்தினர் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகள் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். மோனாலிசாவும் வேண்டாம் என்றார். ஆனால் பெட்ரோ விடவில்லை. அன்று இரண்டு கேமராக்களை வைத்து, இந்த நிகழ்ச்சியைப் படம் பிடிக்க ஆரம்பித்தனர். மோனாலிசாவின் துப்பாக்கிக் குண்டு இந்த முறை பெட்ரோ பிடித்த புத்தகத்தையும் தாண்டி, அவர் மார்பில் பாய்ந்துவிட்டது. உடனே மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறிவிட்டனர். 19 வயது மோனாலிசா, 3 மாதக் கர்ப்பத்துடன் கைது செய்யப்பட்டிருக்கிறார். “எல்லாவற்றையும் பெட்ரோதான் திட்டமிடுவார். அவருக்கு உதவுவதுதான் என் வேலை. இந்த முறை, இவ்வளவு பெரிய ஆபத்தைச் சந்திக்க வேண்டுமா என்று கேட்டுக்கொண்டேதான் இருந்தேன். இறுதியில் என் அருமை பெட்ரோவை, என் கையாலேயே சுட்டுக் கொன்றுவிட்டேன். வாழ்நாள் முழுவதும் இந்தத் துயரம் தீராது” என்று கதறுகிறார் மோனாலிசா. பெட்ரோவின் பெற்றோர் இது முழுக்க முழுக்கத் தங்கள் மகனின் திட்டம் என்றும் இது தற்செயலாக நடந்த விபத்து என்றும் மோனாலிசாவுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

விளையாட்டு, விபரீதமான பரிதாபம்!

ஸ்பெயினைச் சேர்ந்த 53 வயது அலாடினோ மோன்டெஸ் சிறிய வயதிலிருந்து மான் வேட்டையாடி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக வேட்டையை விட்டுவிட்டார். “நான் ஒருமுறை காரில் சென்றுகொண்டிருந்தபோது இரண்டு மாடுகளுடன் மான் குட்டி ஒன்று இருப்பதைக் கண்டேன். பொதுவாக மான்கள் மாடுகளுடன் சேர்ந்து இருப்பதில்லை. அருகில் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் காயங்களைக் கண்டேன். குட்டிக்குச் சிகிச்சை அளித்தேன். நன்றாகக் குணமடைந்த பிறகு காட்டில் விட்டேன். ஆனால் மறுநாளே மான் என் வீட்டுக்குத் திரும்பிவிட்டது. அன்று முதல் மானை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறேன். மானைப் பற்றி முழுவதுமாகப் புரிந்துகொண்ட பிறகு. நான் வேட்டையாடியதை நினைத்து வருத்தப்படாத நாளே இல்லை. என்னை முற்றிலுமாக மாற்றிவிட்டது இந்த பாம்பி மான். வீட்டிலும் வெளியிலும் நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். விலங்குகளை வேட்டையாட வேண்டாம் என்று விழிப்புணர்வும் ஊட்டி வருகிறேன்” என்கிறார் அலாடினோ.

மனதை மாற்றிய மான்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-விளையாட்டு-விபரீதமான-பரிதாபம்/article9747886.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மக்களுக்கு அதிர்ஷ்டம். ஆனால், முதலைக்கு?

 

 
 
mahesh_3182683f.jpg
 
 
 

மெக்சிகோவின் சான் பெட்ரோ ஹுவாமெலுலா விக்டர் பகுதியைச் சேர்ந்த மேயர் ஒருவர், முதலையைத் திருமணம் செய்திருக்கிறார். ஒரு பெண் முதலைக்குத் திருமண ஆடையை அணிவித்து, தலையில் மலர்களால் கிரீடம் சூட்டி, வாயைக் ஒரு கயிற்றால் கட்டி அலங்கரித்து வைத்தனர். பிறகு இந்த இளவரசி முதலையை வாத்தியங்கள் முழங்க, பாட்டுப் பாடி வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டு, மேயரும் முதலையும் கணவன், மனைவியாக அறிவிக்கப்பட்டனர். மேயர் தன் மனைவியை முத்தமிட்டார். பிறகு நடனம், விருந்து என்று கோலாகலமாக நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தன. “முதலையைத் திருமணம் செய்யும் வழக்கம் 250 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து வருகிறது. நிலத்தில் விளைச்சலோ, கடலில் மீன்களோ அதிகம் கிடைக்காத காலங்களில் இதுபோன்ற திருமணத்தை நடத்துவோம். திருமணத்துக்குப் பிறகு நல்ல மழை பெய்யும். விளைச்சல் அமோகமாக இருக்கும். மீனவர்கள் திருப்தி கொள்ளும் அளவுக்கு மீன்களும் கிடைக்கும். அதனால்தான் மக்களின் நலன் மேல் அக்கறையுள்ள தலைவர்கள், மேயர்கள் முதலையைத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மக்களுக்காகச் செய்யும் திருமணம் என்பதால், மக்களும் உற்சாகத்துடன் இதில் கலந்து கொள்கிறார்கள்” என்கிறார் உள்ளூர்வாசி அகுலர்.

மக்களுக்கு அதிர்ஷ்டம். ஆனால், முதலைக்கு?

குரேசியாவில் வசிக்கும் 23 வயது டோமிஸ்லாவ் ஜர்செக், 13 வயது சிறுவனாகக் காட்சியளிக்கிறார். பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக, இவரது வளர்ச்சி தடை செய்யப்பட்டிருக்கிறது. பலரும் 10 வயது குறைந்தவராகத் தோற்றம் அளித்தால் சந்தோஷமடைவார்கள். ஆனால் டோமிஸ்லாவ் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். “என்னை யாரும் 23 வயது மனிதராக நினைப்பதே இல்லை. பெரியவர்கள் செல்லக்கூடிய விளையாட்டுகளுக்கு, சினிமாக்களுக்கு எல்லாம் என்னை அனுமதிப்பதில்லை. அடையாள அட்டை காண்பித்து, மது கேட்டால் கூட சிறுவனுக்கு என்று அரை தம்ளர் மதுதான் அளிக்கிறார்கள். சில சமயம் காவலர்கள் என்னைப் பிடித்து, சிறுவன் இப்படிச் செய்யலாமா என்று விசாரணை நடத்துவார்கள். உண்மையைச் சொல்லிவிட்டு வருவதற்குள் களைப்படைந்துவிடுவேன். இதற்காக என் வயதுக்குரிய ஆசைகளை அடக்கி வைத்திருக்கிறேன். இதை விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால், என்னை எந்தப் பெண்ணும் காதலிப்பதில்லை. அவர்களைப் பொருத்தவரை நான் ஒரு சிறுவன். என் பெற்றோர் தங்கள் மகனுக்கு ஒரு கல்யாண மாகி, பேரக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு கிடைக்காதோ என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டோமிஸ்லாவ். “நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தபோது, எப்படி இருந்தானோ அப்படியே இருக்கிறான் இவன். உருவம் மட்டுமில்லை, குரல்கூட சிறுவனின் குரலாகவே இருக்கிறது. மனத்தால் மட்டுமே முதிர்ச்சியடைந்திருக்கிறான். எல்லோருக்கும் இயல்பாகக் கிடைக்கும் விஷயங்கள்கூட இவனுக்குப் பெரும் போராட்டத்துக்குப் பிறகே கிடைத்திருக்கின்றன. இவனது குறைபாட்டைச் சரி செய்யும் அளவுக்கு மருத்துவம் இன்னும் வளரவில்லை” என்கிறார் நண்பர் ஜுவானிமிர்.

என்றும் 13!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மக்களுக்கு-அதிர்ஷ்டம்-ஆனால்-முதலைக்கு/article9749297.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: 48 ஆண்டுகளில் 17,500 மரங்கள் நட்ட மாமனிதர்!

 
vanga_3183096f.jpg
 
 
 

மரக்கன்று நடா விட்டாலும் எனக்குத் தூக்கம் வருவதில்லை. மறுநாள் இரண்டாக வைத்துவிடுவேன். சின்ன வயதிலிருந்தே ஏனோ மரக்கன்று நடுவதில் எனக்கு ஆர்வம். அரசாங்க நிலங்களில்தான் மரக்கன்று நடுகிறேன் என்பதால் பெரும்பாலும் அவற்றை யாரும் வெட்டுவதில்லை. அப்படியே வெட்ட வந்தாலும் பொதுமக்களே தடுத்து நிறுத்தி விடுவார்கள். விலங்குகள், பறவைகள் போன்று எல்லா உயிரினங்கள் மீதும் எனக்கு அன்பு இருக்கிறது. மரங்கள் மீது சற்றுக் கூடுதல் அன்பு. நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை எனது சொற்ப வருமானத்தை வைத்து நடத்துவது சிரமம். அதிலும் மரங்களுக்குச் செலவு செய்கிறேன் என்பதால் மனைவிக்குக் கொஞ்சம் வருத்தம். என்றாலும் அவர் என்னைத் தடுத்ததில்லை. என்னைப் பற்றி அறிந்த அரசாங்கம், கமிஷனர் அலுவலகத்தில் ஒரு இடத்தைக் கொடுத்து, தங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறது.

அதனால் வாடகை பிரச்சினை இல்லை. இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். அவர்களும் சம்பாதிக்கிறார்கள். நான் இப்போதும் என் தேவைகளுக்காக ரிக்‌ஷா ஓட்டிவருகிறேன்” என்கிறார் அப்துல் சமத்.“எங்கள் அப்பா மரக்கன்று நடுவது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு நட்ட மரங்கள் எல்லாம் இன்று வளர்ந்து, நிழலையும் கனிகளையும் கொடுக்கின்றன” என்கிறார் இவரது மகன். ‘தி டெய்லி ஸ்டார்’ என்ற அமைப்பு அப்துல் பற்றிய ஆவணப்படம் வெளியிட்டு, விருதும் 82 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

“ஒருநாள் வங்கதேசத்தை சேர்ந்த 60 வயது அப்துல் சமத் ஷேக், ரிக்‌ஷா ஓட்டும் தொழிலைச் செய்துவருகிறார். நீண்ட காலமாக இவர் செய்துவரும் சிறிய விஷயம், இன்று பெரிய மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. 12 வயதிலிருந்து தினமும் ஒரு மரம் நடுவதை இவர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். இதுவரை 17,500 மரங்களை நட்டு, சிறிய காட்டையே உருவாக்கியுள்ளார். ஃபரித்பூரில் வசிக்கும் இவர், நாளொன்றுக்கு நூறு ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார். இதில் தினமும் ஒரு மரக்கன்றை விலைக்கு வாங்கி, நட்டு வைக்கிறார்.

48 ஆண்டுகளில் 17,500 மரங்கள் நட்ட மாமனிதர்!

மெக்சிகோவின் கோஸுமெல் பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பணம் கொடுத்த மாணவர்களுக்குத் தனி இடம் அரங்கில் ஒதுக்கப்பட்டது. அதில் மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் அமரும் விதத்தில் மேஜைகளும் நாற்காலிகளும் அளிக்கப்பட்டிருந்தன. விழா முடிந்தவுடன் சுவையான உணவுகளும் பானங்களும் பரிமாறப்பட்டன. பணம் கொடுக்க முடியாத மாணவர்களை அரங்கின் ஒரு பகுதியில், பெரிய தடுப்புகளை வைத்து மறைத்து உட்கார வைத்தனர். அவர்கள் நின்றால் கூட விழா மேடையையோ, சக மாணவர்களையோ பார்க்க முடியவில்லை. அனைத்து விஷயங்களையும் ஒலிபெருக்கி மூலம் காதில் வாங்கிக்கொண்டனர். இந்தப் பாகுபாடு மாணவர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. சிலர் புகைப்படங்கள் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர்.

எல்லையில் சுவர் எழுப்பச் சொன்ன ட்ரம்ப்பின் கொள்கையைப் பின்பற்றுகிறார்களோ?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-48-ஆண்டுகளில்-17500-மரங்கள்-நட்ட-மாமனிதர்/article9751269.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: 86 வயது பெண்மணி கட்டிய செராமிக் அரண்மனை!

 

op_3183541f.jpg
 
 
 

சீனாவின் ஜிங்டெஸென் பகுதியில் வசிக்கும் 86 வயது யு எர்மெய், 5 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவு செய்து ஓர் அரண்மனையைக் கட்டியிருக்கிறார்! இந்தக் கட்டிடத்தின் உட்பக்கமும் வெளிப்பக்கமும் செராமிக் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. “இது என்னுடைய லட்சியக் கட்டிடம். இதைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆகின. இப்போதுதான் என் வாழ்க்கை முழுமையடைந்ததுபோல உணர்கிறேன். என் வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் செராமிக் தொழிற்சாலைகளில்தான் வேலை செய்திருக்கிறேன். எனக்குத் தொழில் பற்றிய அனுபவம் கிடைத்தவுடன், ஒரு செராமிக் தொழிற்சாலையை ஆரம்பித்தேன். சாதாரணமாக இருந்த எங்கள் குடும்பம், பணக்காரக் குடும்பமாக மாறியது. அதனால் செராமிக் மீது ஆர்வமும் மரியாதையும் அதிகரித்தது. கடந்த 30 ஆண்டுகளாக செராமிக் பொருட்களைச் சேகரித்து வந்தேன். தட்டுகள், ஜாடிகள், கோப்பைகள், ஓவியங்கள், பாத்திரங்கள், ஜன்னல்கள் என்று 60 ஆயிரம் பொருட்கள் சேர்ந்தவுடன் இந்த அரண்மனையைக் கட்ட ஆரம்பித்தேன். 1,200 சதுர மீட்டர்கள் கொண்ட வட்ட வடிவிலான இந்தக் கட்டிடத்துக்கு, 80 டன் உடைந்த செராமிக் துண்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறோம். என் வாழ்க்கைக்குப் பிறகும் செராமிக் புகழைச் சொல்லிக்கொண்டு இந்தக் கட்டிடம் நின்றுகொண்டிருக்கும். சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்ப்பதற்கு வரும்போது, அருகில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையும் மேம்படும்” என்கிறார் யு எர்மெய்.

86 வயது பெண்மணி கட்டிய செராமிக் அரண்மனை!

கலிபோர்னியாவைச் சேர்ந்த 33 வயது டெய்லர் முல், பாடகராகவும் மாடலாகவும் இருக்கிறார். மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இவரது உடல், இரண்டு நபர்களின் பண்புகளைப் பெற்றிருக்கிறது. இரண்டு நோய் எதிர்க்கும் அமைப்புகள், இரண்டு ரத்த ஓட்டங்கள் இவருக்குள் இருக்கின்றன. இவரது தோலின் நிறம் கூட இரண்டு வகையாக அமைந்திருக்கிறது. “2009-ம் ஆண்டு ஓர் ஆவணப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கிமேரிசம் என்ற குறைபாட்டை அறிந்தேன். அதில் பார்த்த அத்தனை விஷயங்களும் என்னிடம் இருந்தன. உடனே மருத்துவப் பரிசோதனை செய்தேன். குறைபாடு உறுதியானது. உலகிலேயே நூறு பேருக்குதான் இந்தக் குறைபாடு இருக்கிறது. அவர்களுக்கும் உள் உறுப்புகளில்தான் ஏதாவது வித்தியாசம் இருக்கும். ஆனால் இரண்டு நபர்களின் பண்புகள் ஒரே உடலில் இருப்பதும் அது வெளிப்படையாகத் தெரிவதும் எனக்கு மட்டும்தான். என் வயிற்றின் ஒரு பாதி சிவந்த நிறமாகவும் இன்னொரு பாதி வெள்ளையாகவும் சின்ன வயதிலிருந்தே இருக்கிறது. மிகப் பெரிய மச்சம் என்று நினைத்துக்கொண்டோம். ஆனால் எனக்குச் சின்ன வயதிலிருந்தே இரட்டைப் பிறவி என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. 6 வயதில் என் அம்மாவிடம் நான் இரட்டைக் குழந்தையா என்று கேட்டபோது அவர் குழப்பமடைந்தார். இப்போதுதான் தெரிகிறது, பிறக்காத என் சகோதரியின் பண்புகள் கருவிலேயே என்னுடன் கலந்துவிட்டன. இந்தக் குறைபாட்டால்தான் எனக்கு அளவுக்கு அதிகமான ஜலதோஷம், ஒற்றைத் தலைவலி, உதிரப் போக்கு போன்றவை எல்லாம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறினார்கள்” என்கிறார் டெய்லர் முல்.

ஓர் உடலில் இரு மனிதர்களின் பண்புகள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-86-வயது-பெண்மணி-கட்டிய-செராமிக்-அரண்மனை/article9753275.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நாயின் வேதனையான காலங்கள் மறந்து போகட்டும்!

 

 
dog_3183959f.jpg
 
 
 

உக்ரைனின் நிகோபோல் பகுதி யில் இயங்கிவரும் நாய்கள் காப்பகத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஒரு நாய் தவறி குழிக்குள் விழுந்து விட்டதாக வும் 3 ஆண்டுகளாகியும் வெளியே வர இயலாமல் தவிப்பதாகவும் சொன்னவுடன் எலினா அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக புகார் அளித்த லேனா வீட்டுக்குச் சென்றார். “குழிக்குள் இருந்த நாயின் வேதனையான குரலைக் கேட்டதும் கண்ணீர் வந்துவிட்டது. வெளியே கொண்டு வருவதற்கு முயற்சி செய்து பார்த்திருக்கி றார்கள். ஆனால் முடியவில்லை. லேனாவும் அருகில் இருப்பவர் களும் உணவுகளைக் கொண்டு வந்து குழிக்குள் போட்டுவிட்டுச் செல்வார்கள். அந்த உணவுகளைச் சாப்பிட்டுவிட்டு, இருட்டுக்குள் பயந்தபடியே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தது நாய். நடுவில் அரசாங்கத்தின் அவசரப் பிரிவு அமைச்சகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்களால் வெளியே கொண்டுவர முடியவில்லை. பல்வேறு நிபுணர்களும் விலங்குகள் ஆர்வலர்களும் பார்த்தார்கள். அவர்களாலும் நாய்க்கு உதவ முடியவில்லை. ஒருகட்டத்தில் நாயைக் காப்பாற்றும் முயற்சியைக் கைவிட்டனர். சமீபத்தில் தனிமையில் இருக்கும் நாயின் வேதனையான குரலைக் கேட்டவுடன் லேனாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து, காப்பாற்றும்படிக் கோரிக்கை வைத்தார். யாரோ ஒருவர் எங்கள் காப்பகத்தைத் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கிறார். எங்கள் அமைப்பிலுள்ள சாஷா டுனாவ், உலகின் மிகச் சிறந்த நாய் மீட்பர்களில் ஒருவர். பல மணி நேரம் போராடி, இறுதியில் நாயைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்” என்கிறார் எலினா. “நாய் மிகவும் பயந்திருந்தது. அதன் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. அலெக்சாண்ட்ரா என்று பெயர் வைத்தேன். அது யாரைப் பார்த்தாலும் பயப்படுகிறது. குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்” என்கிறார் லேனா.

நாயின் வேதனையான காலங்கள் மறந்து போகட்டும்!

அமெரிக்காவின் அலபாமாவில் வசிக்கும் 70 வயது மர்பி வில்சனும் 67 வயது லூசிண்டா மையர்ஸும் ஜூலை 25 அன்று திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. வில்சனும் அவரது மனைவியும் 41 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர். 2013-ம் ஆண்டு மனைவி இறந்து போனார். பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் அவரது வாழ்க்கையில் வெறுமை சூழ்ந்துவிட்டது. அந்தத் துன்பத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அடிக்கடி தேவாலயம் செல்ல ஆரம்பித்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துகொண்டு, தனியாக வாழ்ந்துவந்த லிண்டாவும் தேவாலயத்துக்கு வர ஆரம்பித்தார். இருவரும் பால்கனியில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். அடிக்கடி பார்த்துக்கொண்டாலும் பேசிக்கொண்டதில்லை. “ஒரு வாரம் என்னால் தேவாலயம் செல்ல முடியவில்லை. என்னைக் காணாமல் லிண்டா தவித்திருக்கிறார். மறுவாரம் என்னைப் பார்த்ததும் நீண்ட காலம் பழகியவரைப்போல விசாரித்தார். நட்பு சிதைந்துவிடக் கூடாது என்ற பயத்தில் திருமணம் குறித்த பேச்சைத் தள்ளிப் போட்டேன். ஆண்டுகள் கடந்தன. சமீபத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் எண்ணத்தைச் சொல்லிவிட்டேன். உடனே சம்மதம் சொல்லிவிட்டார் லிண்டா. எங்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது” என்கிறார் மர்பி வில்சன்.

காதலுக்கு வயது தடையில்லை!

http://tamil.thehindu.com/

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தைகள் விரும்பும் பள்ளி!

 

 
mosco_school_3184209f.jpg
 
 
 

மாஸ்கோவில் இயங்கும் மழலையர் பள்ளிக்கு, குழந்தைகள் தினமும் மகிழ்ச்சியாகச் செல்கிறார்கள். கோட்டை வடிவில் பள்ளியின் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் விரும்பக்கூடிய வண்ணங்களில் சுவர்களில் ஓவியங்கள், விளையாட்டுக் கருவிகள், கால்பந்து மைதானம், பூந்தோட்டம், ஊஞ்சல்கள், சறுக்கு மரங்கள் என்று ஏராளமான அம்சங்கள் இந்தப் பள்ளியில் இருக்கின்றன. “குழந்தைகளுக்கு ராஜா, ராணி கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தாங்களும் ஒர் இளவரசனாகவோ, இளவரசியாகவோ இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் உண்டா? அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்தப் பள்ளியை வடிவமைத்திருக்கிறோம். இங்கே படிக்கும் 150 குழந்தைகளும் தினமும் தங்களை இளவரசனாகவும் இளவரசியாகவும் நினைத்துக்கொண்டு, கோட்டைக்குள் நுழைகின்றனர். இங்கே எந்தக் குழந்தையும் சும்மா இருந்து பார்த்ததில்லை. அவரவருக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஜெர்மனிக்கு ஒருமுறை சென்றபோது, இதுபோன்ற ஒரு பள்ளியைப் பார்த்தேன். அதை வைத்துதான் இந்தப் பள்ளியை உருவாக்கியிருக்கிறேன். மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டணம். அரசாங்கத்தின் மானியம் கிடைப்பதால், பெற்றோர் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணமாகச் செலுத்தினால் போதும்” என்கிறார் பள்ளியின் இயக்குனர் பாவெல் க்ருடினின்.

புதிய முகம் மெக்ராத்துக்கு வெல்கம்!

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் இருக்கிறார் 38 வயது மெக்ராத். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கட்டி ஒன்று முகத்தில் உருவானது. அந்தக் கட்டி அடுத்த ஆண்டு பல மடங்கு பெரிதானது. மருத்துவப் பரிசோதனையில் ’சினோவியல் சர்கோமா’ என்ற அரிய புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. கீமோதெரபி கொடுத்த பிறகு முகத்தின் ஒரு பகுதி முழுவதையும் கட்டி ஆக்கிரமித்துவிட்டது. மெக்ராத்தால் சாப்பிடக் கூட முடியாமல் போனது. 30 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு கட்டி அகற்றப்பட்டது. “கட்டியை எடுத்த அன்று என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால் அது சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. என் காது, கண், பாதி மூக்கு, பாதி வாய் என்று அனைத்தையும் அழித்துவிட்டுச் சென்றிருந்தது கட்டி. உடைந்து போனேன். ஒரு பாதி முகம் இல்லாமல் எப்படி வாழ்வேன்? மருத்துவர்கள் எனக்கு நம்பிக்கையளித்தனர். புற்றுநோய் சிகிச்சை முழுமையடைந்த பிறகு, முகத்தை மறு உருவாக்கம் செய்து கொடுப்பதாக வாக்களித்தனர். சொன்னது போலவே இப்போது முகத்தைச் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். கால் தொடைப் பகுதியிலிருந்து சதையை எடுத்து, முகத்தில் வைத்திருக்கிறார்கள். மொத்தம் 20 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கிறது. 2018-ம் ஆண்டில் எனக்கு முழு முகம் கிடைத்துவிடும். என்னைக் குணமாக்குவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, மருத்துவர் சையாசேட் சிகிச்சையளித்து வருகிறார். அன்பாக என்னை நடத்துவார். நகைச்சுவையாகப் பேசுவார். அவருடன் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். அடுத்த ஆண்டு எல்லோரையும் போல வெளியே வருவேன்” என்கிறார் மெக்ராத்

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குழந்தைகள்-விரும்பும்-பள்ளி/article9756259.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சாதாரண பொம்மை, அசாதாரணமாக மாறும் அற்புதம்!

 

 
ommai1_3184798f.jpg
 
 
 

நோயல் க்ரூஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பொம்மை கலைஞர். இவர் புதிதாகப் பொம்மைகளை உருவாக்குவதில்லை. ஏற்கெனவே இருக்கும் பொம்மைகளில், தன் கைவண்ணத்தால் புகழ்பெற்றவர்களின் உருவத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்! “நான் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவன். என் வாழ்க்கையில் மனிதர்களின் முகங்களைத்தான் அதிகம் வரைந்திருக்கிறேன். 12 வயதில் பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். உலக அழகிப் போட்டிகளில் விதவிதமான அழகான பெண்களைப் பார்த்தேன். உடனே முகங்களை வரைய வேண்டும் என்ற ஆசை வந்தது. 16 வயதில் விற்பனை செய்யும் அளவுக்கு ஓவியங்களை வரைய ஆரம்பித்துவிட்டேன். பிறகு குடும்பத்துடன் அமெரிக்கா வந்து சேர்ந்தேன். வெகு சமீபத்தில்தான் பொம்மைகளை மறு உருவாக்கம் செய்துவருகிறேன். ஒரு பொம்மையை வாங்கி, அது எந்தப் பிரபலத்துக்குச் சரியாக வரும் என்று நினைத்துப் பார்ப்பேன். பிறகு பிரபலத்தின் புகைப்படத்தைப் பார்த்து, பொம்மையை அச்சு அசலாக உருவாக்கிவிடுவேன். ஏஞ்சலினா ஜோலி, எம்மா வாட்சன், ஒண்டர் வுமன், மெரில் ஸ்ட்ரீப், டேனியல் ராட்க்ளிஃப் போன்ற பிரபலங்களின் திரைப்படக் கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறேன். மைக்கேல் ஜாக்சன், டயானா போன்றவர்களின் பொம்மைகளையும் செய்திருக்கிறேன். நான் குழந்தைகளுக்காக பொம்மைகளைச் செய்வதில்லை. என்னுடைய பொம்மைகளை வசதியானவர்கள் மட்டுமே வாங்க முடியும். 32 ஆயிரத்திலிருந்து 2.25 லட்சம் ரூபாய் வரை என்னிடம் பொம்மைகள் இருக்கின்றன” என்கிறார் நோயல் க்ரூஸ்.

சாதாரண பொம்மை, அசாதாரணமாக மாறும் அற்புதம்!

பூச்சியினங்களில் ஒன்று Praying Mantis. முன்னங்கால்களை நீட்டிக்கொண்டு நிற்பதால் இதைக் ’கும்பிடு பூச்சி’ என்று அழைக்கிறார்கள். பிற பூச்சிகள், சிறு விலங்குகளை இவை உணவாக உட்கொள்கின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில் கும்பிடு பூச்சிகள், சிறிய பறவைகளைக் கொன்று சாப்பிடுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அண்டார்டிகாவைத் தவிர, அனைத்துக் கண்டங்களிலும் நடத்தப்பட்ட ஆய்வில் இது நிரூபணமாகியிருக்கிறது. 1867-ம் ஆண்டிலேயே இது குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டாலும், 2000 2015 ஆண்டுகளில்தான் 67% ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 13 நாடுகளில் நடைபெற்ற 147 நிகழ்வுகள் மூலம் இந்த ஆய்வு வெளியிடப்பட்டிருக்கிறது. கும்பிடுபூச்சிகளுக்கு அதிகம் பலியாவது ஹம்மிங் பறவைகள்தான். ஹம்மிங் பறவையின் தலையைத் தாக்கி, மூளையைச் சாப்பிடுகின்றன. அமெரிக்காவில் கும்பிடுபூச்சிகளின் வேட்டையில் 70% ஹம்மிங் பறவைகள்தான் சிக்கியிருக்கின்றன. ஹம்மிங் பறவைகளை இங்கு அதிகமாக வளர்ப்பதால், கும்பிடுபூச்சியின் வேட்டைகளை வீட்டிலுள்ளவர்கள்கூட எளிதாகப் படம் பிடித்துள்ளனர். பறவைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் கும்பிடு பூச்சிகள் முக்கியப் பங்காற்றுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பறவையை வேட்டையாடும் பூச்சி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சாதாரண-பொம்மை-அசாதாரணமாக-மாறும்-அற்புதம்/article9758972.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வெறுப்புகளை அழிக்கும் தேவதை!

 

 
 
suvar_3185115f.jpg
 
 
 

ஜெர்மனியில் வசிக்கும் 72 வயது இர்மெலா மென்சா, வித்தியாசமான சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். கடந்த 31 ஆண்டுகளாக ஜெர்மனி முழுவதும் பயணம் செய்து தெருக்களில் எழுதப்பட்டிருக்கும் விரும்பத்தகாத வாசகங்கள், வெறுப்பை உமிழும் போஸ்டர்கள் போன்றவற்றை அழித்து, சுத்தம் செய்கிறார். இதற்காக நவ நாஜிகளிடமிருந்து கொலை மிரட்டல்களைச் சந்தித்து வருகிறார். தினமும் இரண்டு பைகளில் போஸ்டர் சுரண்டும் கருவி, ஸ்ப்ரே பெயிண்ட், கேமரா போன்றவற்றை எடுத்துக்கொண்டு, பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணம் செய்து, குறிப்பிட்ட இடத்தை அடைகிறார். தான் அழிக்க வேண்டிய விஷயங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ஸ்டிக்கர்களைப் பிய்த்து தனியாக வைத்துக்கொள்கிறார். நாஜி சின்னத்தின் மீது சிவப்பு பெயிண்ட்டால் இதயம், வண்ணத்துப்பூச்சி போன்றவற்றை வரைகிறார். பிரிவினையை விதைக்கும் வாசகங்கள் மீது கறுப்பு பெயிண்ட் அடித்து, அழிக்கிறார். வெறுப்பை உமிழும் போஸ்டர்களைக் கிழித்து, குப்பைத் தொட்டியில் வீசுகிறார். மாலையில் வீடு திரும்பி, ஸ்டிக்கர்களை ஒரு ஃபைலில் ஆவணப்படுத்துகிறார். புகைப்படங்களை பிரிண்ட் எடுத்து, ஆல்பத்தில் வைக்கிறார். மறுநாள் மீண்டும் வேறோர் இடத்துக்குப் பயணிக்கிறார். இந்த நற்செயலுக்காகப் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார் இர்மெலா. இவர் தனி மனிதர்களின் உரிமையில் தலையிடுகிறார், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கிறார் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

“மனிதர்கள் சக மனிதர்களை வெறுப்பது குறித்து எனக்குத் திருமணம் ஆகும் வரை தெரியாது. நான் ஆப்பிரிக்கரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, வெறுப்பை நேரில் கண்டேன். தெருக்களில் நாங்கள் நடக்கும்போது, முன்பின் தெரியாதவர்கள்கூட என் கணவரைப் பார்த்ததும் வெறுப்பை உமிழ்வார்கள். பேருந்துகளிலும் விமான நிலையங்களிலும் என் கணவர் வெறுப்பின் காரணமாக மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். நாங்கள் இருவரும் மனத்தால் மிகவும் பாதிக்கப்பட்டோம். இந்த வெறுப்புதானே இரண்டாம் உலகப் போராக உலகையே நாசமாக்கியது. அதைக் கண்டும் மனிதர்கள் இன்னும் வெறுப்பைக் கைவிடவில்லையே என்று வருந்தினேன். இதற்காக என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். 1986-ம் ஆண்டு, வெறுப்பு ஸ்டிக்கர் ஒன்றை முதல்முறை கிழித்தேன். அப்போது நாஜி ஜெர்மனியில் முக்கிய நபராகத் திகழ்ந்த ருடால்ஃப் ஹெஸ் சிறையில் இருந்தார். அவரை ஆதரித்தும் அவருக்கு விடுதலை வேண்டியும் நவ நாஜிகள் எங்கும் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். நாஜிகளின் வெறுப்புக் கருத்துகள் மட்டுமின்றி, மனித குலத்துக்கு விரோதமான வலதுசாரிகளின் கருத்துகளையும் சேர்த்தே அழிக்க ஆரம்பித்தேன். கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனையோ முறை கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கிறேன். ஒருமுறை பெரிய கல்லை யாரோ வீசியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நேரங்களில் காவல்துறை யினரே என்னை மிரட்டியிருக்கிறார்கள். நான் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. ஜெர்மனியை இன்னொரு முறை ஹிட்லர் தேசமாக மாற்றுவதற்கு நாம் சிறிதும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்தக் காரியத்தை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?” என்று கேட்கிறார் இர்மெலா.

வெறுப்புகளை அழிக்கும் தேவதை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வெறுப்புகளை-அழிக்கும்-தேவதை/article9761453.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: வங்கதேச ஓரினச்சேர்க்கையாளரின் திருமணம்

masala_3185476f.jpg
 
 
 

பிரிட்டனில் முஸ்லிம் ஆண், ஓர் ஆணைத் திருமணம் செய்திருக்கிறார்! 24 வயது ஜாஹெத் சவுத்ரி வங்கதேசத்தைச் சேர்ந்தவர். பிரிட்டனில் வசித்து வருகிறார். ஓரினச்சேர்க்கையாளராக இருந்ததால், முஸ்லிம் சமூகத்தால் வெறுக்கப்பட்டார். குடும்பத்தினர் அவர் மனதை மாற்றுவதற்காக, புனித யாத்திரைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சவுத்ரியால் தன் மனநிலையை மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். அப்போதுதான் அழுதுகொண்டிருந்த சியான் ரோகனைச் சந்தித்தார்.

சியானுக்குச் சின்ன வயதிலிருந்தே பெண்கள் அணியும் உடைகள், நகைகள் மீது அளவுக்கு அதிகமான ஆர்வம். அவர் வயது குழந்தைகள் தொலைக்காட்சியில் விளையாட்டுகளைப் பார்த்தால், இவர் ஃபேஷன் ஷோக்களைத்தான் பார்ப்பார். தன்னையும் ஒரு பெண்ணாக மாற்றிக்கொள்ள முயன்றபோது, எல்லோராலும் கிண்டலுக்கு உள்ளானார். அதனால் அவரும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் அழுதுகொண்டிருந்ததை, சவுத்ரி அறிந்துகொண்டார். ரோகனுக்கு ஆறுதல் கூறினார்.

விரைவில் இருவரும் நல்ல நண்பர்களானார்கள். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தனர். ரோகனின் பிறந்தநாள் அன்று சவுத்ரி, தன் திருமணக் கோரிக்கையை வைத்தார். அவரும் ஏற்றுக்கொண்டார். இருவரது வீட்டிலும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் முஸ்லிம் சமூகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. எதையும் கண்டுகொள்ளாமல் இருவரின் திருமணமும் இருவீட்டார், நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. “எங்கள் வாழ்க்கையில் அற்புதமான நாள் இது. என் அம்மாவின் ஆதரவு மட்டுமில்லாமல் இருந்திருந்தால் இந்தத் திருமணம் நடந்திருக்குமா என்று தெரியாது.

இறுதியில் இரு குடும்பங்களும் எங்களைப் புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. ரோகன் வங்கதேச உடையை அணிந்துகொள்ள மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். எனக்காக மதம் மாறவும் இருக்கிறான். ஆனால் எங்களை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எங்கள் திருமண விஷயம் வெளியில் தெரிய ஆரம்பித்ததிலிருந்து கொலை மிரட்டல்களை நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் சந்தித்து வருகிறோம். எங்கள் இருவரின் தனிப்பட்ட விருப்பங்களை மதித்து, நிம்மதியாக வாழ விடுங்கள்” என்கிறார் சவுத்ரி.

இனியாவது மகிழ்ச்சியுடன் வாழட்டும் இந்தத் தம்பதி!

 

உலகின் முதல் பல் துலக்கும் கருவி அமாபிரஷ். இது 10 நொடிகளில் பற்களைத் துலக்கி, வெண்மையாக மாற்றிவிடுகிறது. “இந்தக் கருவிக்குள் சிறிய மோட்டார் வைக்கப்பட்டிருக்கிறது. அது ஏற்படுத்தும் அதிர்வுகளால், மென்மையான சீப்பு போன்ற பகுதியிலிருந்து பற்பசை வெளியேறி பற்களைச் சுத்தமாக்குகிறது. பாக்டீரியாக்களை எதிர்க்கும் சிலிக்கானால் இந்தக் கருவி செய்யப்பட்டிருப்பதால், 99.99% பாக்டீரியாக்கள் அழிந்துவிடுகின்றன.

கருவியை இயக்குவது எளிது, 2 ஆயிரம் தாடைகளை ஆராய்ந்து இதை உருவாக்கியிருக்கிறோம். அதனால் அளவு சரியில்லை என்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு நாளைக்கு இரு வேளை பல் துலக்க வேண்டும். கருவியின் விலை 5,800 ரூபாய். 3 முதல் 6 மாதங்களுக்கு ஒரு முறை சிலிக்கானை மாற்ற வேண்டும். அதற்கு 450 ரூபாய் செலவாகும். பற்களும் வாயும் சுத்தமாக இருந்தாலே பாதி நோய் வராது என்கிறார்கள் அமாபிரஷ் நிறுவனத்தினர்.

10 நொடிகளில் பல் துலக்கும் கருவி!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வங்கதேச-ஓரினச்சேர்க்கையாளரின்-திருமணம்/article9764007.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: குடை வாடகைக்கு !

 

masala_3185931f.jpg
 
 
 

சீனாவில் தற்போது கூட்டு நுகர்வு (sharing economy) கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஒரு பொருளைச் சொந்தமாக வாங்கிப் பயன்படுத்தாமல், தேவையானபோது வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஏப்ரல் மாதம் ஷென்ஜென் பகுதியில் ஒரு குடை நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. சைக்கிளை வாடகைக்கு விடுவதுபோல, இவர்கள் குடைகளை வாடகைக்கு விட்டனர். இரண்டே மாதங்களில் 3 லட்சம் குடைகளை இழந்துவிட்டனர். ஒரு குடையை இங்கே வாடகைக்கு எடுக்கும்போது, முன்பணம் சிறிது செலுத்தவேண்டும். பிறகு எவ்வளவு மணி நேரம் உபயோகிக்கிறோமோ அதற்குரிய வாடகையைச் செலுத்திவிட வேண்டும்.

இந்தக் கூட்டு நுகர்வு மூலம் ஒருவரால் வாங்க முடியாத பொருட்களைக்கூட வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்த முடியும். என்றோ ஒருநாள் தேவைப்படக்கூடிய பொருளை வாங்கி வீட்டில் வைத்து, குப்பைகளைச் சேகரிக்கவும் வேண்டியதில்லை. “சைக்கிள் வாடகைக்கு விடுவது உலகம் முழுவதும் வெற்றிகரமான தொழிலாக இருக்கிறது. அதைப் பார்த்துதான் குடைகளை வாடகைக்கு விடும் தொழிலில் இறங்கினோம். சீனாவின் 11 நகரங்களில் ஒரே நேரத்தில் இந்தத் தொழிலை ஆரம்பித்தோம். குடைகளை எங்களிடம் வாங்குவது வெகுசுலபம். பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் என்று எல்லா இடங்களிலும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால் திருப்பிக் கொடுப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சைக்கிள்களைப் பூட்டி, எங்கே வைத்துவிட்டுச் சென்றாலும் கொண்டு வந்துவிடலாம். ஆனால் குடைகளுக்கு அப்படிச் செய்ய முடியவில்லை. மக்கள் வேலிகளில் குடைகளை வைத்துவிட்டுச் சென்றால், வேறு யாராவது வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். இதுவரை 3 லட்சம் குடைகளை இழந்துவிட்டோம். ஒரு குடைக்கு முன்பணமாக 180 ரூபாய் வசூலிக்கிறோம். அரை மணி நேரப் பயன்பாட்டுக்கு 4.75 ரூபாய் வாடகை. ஒரு குடையை இழந்தால், எங்களுக்கு 570 ரூபாய் நஷ்டம். இப்படி எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்தாலும் பின்வாங்கப் போவதில்லை. விரைவில் சரியான தீர்வைக் கண்டுபிடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 கோடி குடைகளைச் சீனா முழுவதும் வாடகைக்கு விட இருக்கிறோம்” என்கிறார் குடை நிறுவனர்களில் ஒருவரான ஜாவோ.

அஞ்சா நெஞ்சன்!

 

அண்டார்டிகாவின் மேற்கு பகுதியிலுள்ள லார்சன் சி என்று அழைக்கப்படும் மிகப் பெரிய பனிப்பாறை, ஜூலை 10 அன்று உடைந்துவிட்டது. பல ட்ரில்லியன் டன்கள் எடைகொண்ட இந்தப் பாறை, 5,800 சதுர கி.மீ. தொலைவுக்கு பரந்துவிரிந்துள்ளது. அதாவது லண்டன் நகரைப் போல 4 மடங்கு பெரிய பனிப்பாறை இது. சமீபத்தில் செயற்கைக்கோள் மூலம் இந்தத் தகவலை பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தற்போது பனிப்பாறையின் அளவு 10% குறைந்துவிட்டது. இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய பனிப்பாறைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இது உருகினால் 10 செ.மீ. அளவுக்குக் கடல் நீர் மட்டம் உயரலாம் என்று கணிக்கப்படுகிறது.

உடைந்து மிதக்கும் மிகப் பெரிய பனிப்பாறை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குடை-வாடகைக்கு/article9766747.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அலுவலகத்துக்குள் ஹெல்மெட்டா!

 

 
yui_3186336f.jpg
 
 
 

ஹெல்ம்ஃபோன் என்பது சத்தத்தைத் தடை செய்யக்கூடிய தலைக்கவசம். அலுவலகங்களில் தற்போது அருகருகே அமர்ந்து வேலை செய்யக்கூடிய சூழல் இருக்கிறது. உரையாடல்கள் அதிகம் நிகழ்வதைத் தவிர்க்க இயலாது. அதே போல ஒரு தொலைபேசியில் கூடத் தனியாகப் பேச முடியாமல், வெளியில் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தச் சங்கடங்களை எல்லாம் தவிர்ப்பதற்காகவே ஹெல்ம்ஃபோனை உருவாக்கியிருக்கிறது உக்ரைனைச் சேர்ந்த ஹோச்சு ராயு நிறுவனம். வழக்கமான தலைக்க வசத்தைவிட இது சற்றுப் பெரியது. இதை அணிந்துகொண்டால் வெளியிலிருந்து வரும் எந்தச் சத்தமும் சிறிதும் கேட்காது. இதன் மூலம் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும். இதை அணிந்த படியே உங்களது அலைபேசியில் பேசினால் அருகில் இருப்பவருக்குக் கேட்காது. “இந்தத் தலைக்கவசத்தை அலுவலக நேரம் முழுவதும் அணிந்துகொள்ளலாம். வெளியுலகம் எப்படி இருந்தாலும் நீங்கள் உங்களுக்கே உங்களுக்கான தனி உலகத்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். தலைக்கவசத்துக்குள் மைக்ரோபோன், போன் வைக்கும் இடம், ஸ்பீக்கர்கள் என்று பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. விரைவில் விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் ஹோச்சு ராயு நிறுவன அதிகாரி.

அலுவலகத்துக்குள் ஹெல்மெட்டா!

அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியிலுள்ள ஹார்வெல் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தான் 11 வயது ப்ரூடி ப்ரூக்ஸ். திடீரென்று தூண்டில் கனமானது. பெரிய மீன் சிக்கிவிட்ட மகிழ்ச்சியில், கஷ்டப்பட்டு இழுத்துக் கரை சேர்த்தான். ஆனால் தூண்டிலில் சிக்கியது மீன் அல்ல. ப்ரூக்ஸ் பயந்து போனான். தன் வீட்டிலுள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்தான். மெதுவாக அந்தப் பொருளை ஆராய்ந்தார்கள். ஒரு கைப்பை என்று கண்டுபிடித்தனர். சுத்தம் செய்து, பையிலிருந்த பொருட்களை வெளியில் எடுத்தனர். சில கரன்சிகள், கடன் அட்டைகள், குழந்தையின் புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவை இருந்தன. முகவரி அட்டையைப் பார்த்ததும் ப்ரூக்ஸ் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் கத்தினார்கள். இந்தக் கைப்பைக்குச் சொந்தக்காரர் இவர்களது தூரத்து உறவினர் போல்ட். “25 ஆண்டுகளுக்கு முன்பு போல்ட் இந்தப் பகுதியில்தான் இருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை. போல்ட்டின் தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டுபிடித்து தகவல் சொன்னோம்” என்கிறார் ப்ரூக்ஸின் தந்தை. “25 ஆண்டுகளாகியும் என்னால் அந்தக் கைப்பை தொலைந்ததை மறக்க முடியவில்லை. அதில் இருந்த கரன்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என் 15 மாதக் குழந்தையின் அரிய புகைப்படங்கள் அதிலிருந்தன. அதுதான் வருத்தம். குழந்தையுடன் படகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கைப்பை காணாமல்போனது. யாராவது பணத்துக்காகப் பையை எடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன். எப்படி ஏரிக்குள் விழுந்தது என்றே தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாகியும் பை பெரிதாகப் பாதிப்பில்லாமல் இருந்ததை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தையின் படங்கள்கூட ஓரளவு நன்றாக இருக்கின்றன. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 26 வயது மகனிடம் அவனது படங்களைக் காட்டப் போகிறேன்” என்கிறார் போல்ட்.

தொலைந்த பை 25 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த அதிசயம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அலுவலகத்துக்குள்-ஹெல்மெட்டா/article9769409.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைக்கவசம் விற்பனைக்கு வந்ததும் சொல்லுங்கோ நவீனன்.... வீட்டில சத்தம் தாங்க முடியல்ல.....!  tw_blush:

Link to comment
Share on other sites

உலக மசாலா: வேலைக்காகத் தினமும் விமானப் பயணம்!

 

daily_travel_on_fl_3186591f.jpg
 
 
 

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார் கர்ட் வோன் படின்ஸ்கி. இவரது அலுவலகம் சான் பிரான்சிஸ்கோவில் இருக்கிறது. தினமும் 6 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து அலுவலகம் சென்று வருகிறார்! அதிகாலை 5 மணிக்குக் கிளம்புகிறார்.

15 நிமிடம் காரில் பயணம் செய்யும்போது காலை உணவைச் சாப்பிடுகிறார். சிங்கிள் இன்ஜின் விமானத்தில் 568 கி.மீ. தூரத்தை 90 நிமிடங்களில் கடந்து ஆக்லாந்தை அடைகிறார். அங்கிருந்து மற்றொரு காரில் பயணம் செய்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது அலுவலகத்தை அடைகிறார்.

8.30 மணிக்கு வேலையை ஆரம்பிக்கிறார். மீண்டும் மாலை 5 மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்புகிறார். இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்கிறார். “நான் தினமும் சான் பிரான்ஸ்சிஸ்கோவுக்கு வேலைக்குச் செல்கிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னுடைய நிறுவனம் முதலில் லாஸ் ஏஞ்சல்ஸில்தான் இருந்தது. திடீரென்று நிறுவனத்தின் வளர்ச்சி கருதி சான் பிரான்சிஸ்கோவுக்கு மாற்றினார்கள். எங்கள் குடும்பம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருப்பதுதான் வசதியாக இருக்கிறது.

அதேநேரம் என் நிறுவனத்தையும் என்னால் கைவிட முடியவில்லை. நான் உயர் பொறுப்பில் இருக்கிறேன். அதனால் தினமும் இவ்வளவு தொலைவைக் கடந்து வேலை செய்து வருகிறேன். காலை 3 மணி நேரப் பயணம். மாலை 3 மணி நேரப் பயணம். இதற்காக மாதம் 1 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு பாஸ் வாங்கி வைத்திருக்கிறேன். இந்த விமானத்தில் 8 பேர் என்னுடன் பயணிப்பார்கள். வழக்கமான விமானப் பயணத்துக்கான எந்தவிதக் கட்டுப்பாடுகளும் கிடையாது. பாதுகாப்பு பரிசோதனையும் இல்லை.

காரிலிருந்து இறங்கிய சில நிமிடங்களில் விமானத்தில் ஏறிவிடலாம். தினமும் காலை உற்சாகமாக என் நாளை ஆரம்பிப்பேன். மாலை களைப்படைந்து விடுவேன். ஆனாலும் வீட்டுக்காக அலுவலகத்தையோ, அலுவலகத்துக்காக வீட்டையோ விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது” என்கிறார் கர்ட் வோன் படின்ஸ்கி.

 

இந்த ஆசைதான் செயற்கைக் கருத்தரிப்பு தொழிலைச் செழிக்க வைக்கிறது!

செர்பியாவைச் சேர்ந்த அட்டிஃபா, 60 வயதில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். அவரது கணவர் செரிஃப் நோகிக், குழந்தையைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை.

“எனக்கு 68 வயதாகிவிட்டது. எங்கள் இருவருக்கும் ஏராளமான நோய்கள். இந்தக் காலகட்டத்தில் ஒரு குழந்தையைப் பெற்று, வளர்க்க இயலுமா? என் மனைவி சிறிதும் புரிந்துகொள்ளவில்லை. பல ஆண்டுகளாகக் குழந்தை வேண்டும் என்ற ஏக்கமும் ஆசையும் அவரைத் துணிச்சலாக இறங்க வைத்திருக்கிறது. செயற்கை முறையில், விந்து நன்கொடை பெற்று, பல ஆண்டுகள் முயற்சி செய்ததில் இப்போது குழந்தை பிறந்துவிட்டது.

என்னால் அந்தக் குழந்தைக்கு எந்த விதத்திலும் உதவ முடியாது என்பதை முன்பே சொல்லிவிட்டேன்” என்கிறார் செரிஃப். “கணவர் சொல்வதில் தவறில்லை. ஆனால் ஒரு குழந்தையின் குரலைக் கேட்கத்தானே இத்தனை காலம் காத்திருந்தேன். இரவெல்லாம் கண் விழிக்கிறேன். வேலை அதிகம் செய்கிறேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. யார் உதவியும் இல்லாமலே என் மகளை வளர்த்துவிடுவேன்” என்கிறார் அட்டிஃபா.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வேலைக்காகத்-தினமும்-விமானப்-பயணம்/article9770738.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சைக்கிளை மீட்ட சாமர்த்திய பெண்

masala_3187251f.jpg
 
 
 

இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பகுதியில் வசிக்கும் 30 வயது ஜென்னி மார்ட்டனின் சைக்கிள் காணாமல் போனது. அது விலையுயர்ந்த ஜெர்மன் சைக்கிள். சங்கிலியால் பிணைத்து வைத்திருந்த சைக்கிளை வெட்டி, எடுத்துச் சென்றிருந்தனர். காணாமல் போன வருத்தத்தில் மிகவும் மனம் உடைந்து போனார் ஜென்னி. 24 மணி நேரம் கழித்து ஃபேஸ்புக்கில் இவரது சைக்கிள் விற்பனைக்கு வந்திருந்தது.

யாரோ தன்னுடைய சைக்கிளைத் திருடிச் சென்றதோடு, எவ்வளவு தைரியமாக விற்பனையும் செய்கிறார் என்று கொதித்துப் போனார். சைக்கிள் திருடர்களிடமிருந்து எப்படியாவது சைக்கிளை மீட்க வேண்டும் என்று முடிவு செய்தார். காவல் நிலையத்தில் தொலைந்த சைக்கிள் குறித்து புகார் அளித்தார். அவர்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தானே ஒரு திட்டம் போட்டு சைக்கிளை மீட்டு விடுவதாகவும் அதற்கு மட்டும் ஒத்துழைப்பு கொடுத்தால் போதும் என்றும் கேட்டுப் பார்த்தார். அதற்கும் காவல் துறையினரிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. தானே தனியாகக் களத்தில் இறங்கினார்.

சைக்கிள் விற்பனை என்று அறிவிப்பு வெளியிட்ட அலைபேசி எண்ணுக்கு, ஒரு நண்பர் மூலம் தொடர்புகொண்டார். ‘என் தங்கைக்கு இந்த சைக்கிள் மிகவும் பிடித்துவிட்டது. அதனால் இதை யாருக்கும் கொடுத்துவிட வேண்டாம். எவ்வளவு விலை வேண்டுமானாலும் தந்துவிடுகிறோம்’ என்று சொல்ல வைத்தார். சைக்கிள் திருடரும் இதை ஏற்றுக்கொண்டு, மறுநாள் எங்கே வரவேண்டும் என்பதைச் சொன்னார். மறுநாள் ஜென்னி மட்டும் அந்த இடத்துக்குச் சென்றார். சைக்கிள் குறித்த விவரங்களை எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார். தனக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றும் ஒருமுறை ஓட்டிப் பார்க்கலாமா என்றும் கேட்டார். திருடரும் சம்மதித்தார். ஜென்னி சுற்றும் முற்றும் பார்த்தார்.

ஒருவேளை தான் சிக்கிக்கொண்டால் மிகப் பெரிய ஆபத்தில் மாட்டிவிடுவோம் என்பதைப் புரிந்துகொண்டார். சைக்கிளில் ஏறி அமர்ந்தார். வேகமாக பெடலை அழுத்தினார். சற்றுத் தொலைவு சென்றதும் திரும்பிப் பார்த்து, சைக்கிள் ஓகே என்றார். திருடர் திரும்பி வரச் சொன்னார். சைக்கிளை இன்னும் வேகமாக மிதித்து, வழிகளை மாற்றி, அந்த இடத்தைக் கடந்து, பத்திரமாக காவல் நிலையம் வந்து சேர்ந்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று காவல் துறையினர் எச்சரித்து ஜென்னியை அனுப்பி வைத்தனர்.

திருடருக்குப் பாடம் புகட்டிய ஜென்னி!

ஜப்பானில் உள்ள மிகச் சிறிய தீவு ஓகினோஷிமா. இது புனிதத் தீவாகக் கருதப்படுகிறது. இங்கே பெண்களுக்கு இதுவரை அனுமதி கிடையாது. தீவிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல ஆண்டுக்கு 200 பக்தர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அவர்கள் கடலில் குளித்து, ஆடையின்றி தீவுக்குள் செல்ல வேண்டும். தற்போது இந்தத் தீவை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது. மனிதர்களின் வருகையால் தீவின் சூழல் பாதிக்கப்படுவதால், அடுத்த ஆண்டு முதல் தீவுக்குச் செல்வதைத் தடை செய்திருக்கிறது. ஒன்றிரண்டு துறவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே முன் அனுமதி பெற்று இந்தத் தீவுக்குள் செல்ல முடியும்.

இனி ஆண்களுக்கும் அனுமதி இல்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சைக்கிளை-மீட்ட-சாமர்த்திய-பெண்/article9774202.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: ஒரே கண்ணில் 27 லென்ஸுகள்!

 

 
lens_3187660f.jpg
 
 
 

கான்டாக்ட் லென்ஸுகள் காணவில்லை என்றால் வெளியில் தேடுவதற்கு முன், கண்களிலேயே இருக்கிறதா என்று பரிசோதனை செய்யுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த 67 வயது பெண்மணி ஒருவர், கண்களில் உறுத்தலாக இருக்கிறது என்று மருத்துவரிடம் வந்தார். அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் இவரது ஒரு கண்ணில் ஏதோ பொருள் அடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதை நீக்கியபோது 17 கான்டாக்ட் லென்ஸுகள் வெளிவந்தன. மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உறுத்தல் இருப்பதாக அந்தப் பெண்மணி சொன்னவுடன் மேலும் 10 லென்ஸுகளை வெளியில் எடுத்தனர். இவர் பயன்படுத்திய கான்டாக்ட் லென்ஸுகள் ஒருமுறை பயன்படுத்தி, தூக்கி எறியக்கூடியவை. தன்னையறியாமல் இந்தத் தவறுகளைச் செய்திருப்பதாகக் கூறிய இவர், லென்ஸுகளால் தனக்குப் பெரிதாகப் பிரச்சினைகள் ஏற்படவில்லை என்கிறார். இருந்தாலும் லென்ஸுகளை நீக்கிய பிறகு நிம்மதியாக இருப்பதை உணர முடிகிறது என்று கூறுகிறார். “இவரது பிரச்சினை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. 27 லென்ஸுகளை எப்படி இவ்வளவு நாளும் சுமந்திருந்தார் என்பதும் கண்ணுக்குப் பிரச்சினை ஏற்படவில்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி ஒரு சம்பவத்தை நாங்கள் சந்தித்ததில்லை. லென்ஸை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் பார்வையை இழக்கவும் நேரிடலாம்” என்கிறார் மருத்துவர் ரூபல் மோர்ஜாரியா. ஒவ்வொரு முறையும் கண்களிலிருந்து லென்ஸை எடுத்துவிட்டோம் என்று நினைத்து, புதிய லென்ஸுகளை அணிந்திருக்கிறார். 35 ஆண்டுகளாக லென்ஸுகளைப் பயன்படுத்தி வருகிறார். குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்களைப் பரிசோதனையும் செய்திருக்கிறார்.

ஒரே கண்ணில் 27 லென்ஸுகள்!

கின்ஸா லேடீஸ் 1 என்பது ஜப்பானில் இயங்கக்கூடிய ஒரு துப்பறியும் நிறுவனம். புது காதலனோ, காதலியோ கிடைத்தவுடன் கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ ஏமாற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்வதற்காகவே இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. தங்களுக்கு உரிய சிறப்பான வழிமுறைகளில் புதிதாக ஏற்பட்டிருக்கும் உறவை வெட்டி, மீண்டும் தம்பதியரை இணைத்து வைத்துவிடுகிறார்கள். “கணவனுக்கோ, மனைவிக்கோ ஏற்படும் புது உறவுகளால் குடும்பங்கள் சிதைந்து போகின்றன. அந்தக் குடும்பத்தைச் சேர்த்து வைக்கும் வேலைதான் எங்களுடையது. புதிய உறவை நாங்கள் தொடர்ந்து கவனிப்போம். அவருடைய குணாம்சங்களை அறிந்து கொள்வோம். பிறகு எங்கள் நிறுவனம் மூலம் நடிகர்களை அந்த உறவிடம் பழக விடுவோம். இந்தப் புகைப்படங்களைச் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பிவைப்போம். ஒருகட்டத்தில் புதிய உறவை விட்டுவிட்டு, அவர்கள் தங்கள் இணையைத் தேடிச் சென்றுவிடுவார்கள். 30 நாட்களில் இருந்து 240 நாட்களுக்குள் எங்களால் ஓர் உறவைத் துண்டித்து, பழைய உறவை மீட்டுக் கொடுத்துவிட முடியும். இதற்காக 2 லட்சம் முதல் 50 லட்சம் வரை வசூலிக்கிறோம். குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் ஒருவரிடம் பழகி, அவர்கள் குடும்பத்தையே சிதைப்பவர்களைத்தான் நாங்கள் பிரிக்கிறோம். அதனால் நாங்கள் இதுகுறித்து எந்தக் குற்றவுணர்வும் கொள்வதில்லை” என்கிறார் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர்.

சே, எப்படியெல்லாம் தொழில் வாய்ப்பு உருவாகுது பாருங்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-ஒரே-கண்ணில்-27-லென்ஸுகள்/article9776563.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அண்டார்டிகாவில் ஒரு திருமணம்!

 

 
 
antartica_3187992f.jpg
 
 
 

ண்டார்டிகாவில் உறைய வைக்கும் குளிர் காலத்தில் ஜூலி பாமும் டாம் சில்வெஸ்டரும் திருமணம் செய்து கொண்டனர். அண்டார்டிகாவில் பிரிட்டிஷ் ஆய்வுக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் அதிகாரப்பூர்வமான முதல் திருமணம் இது. ஜூலியும் டாமும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக பல திட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள். சக ஆராய்ச்சியாளர்கள் 18 பேர் முன்னிலையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இரண்டு நாட்கள் திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கூடாரம் அமைக்கும் பழைய ஆரஞ்சு வண்ணத்துணியில் தன்னுடைய திருமண ஆடையைத் தைத்திருந்தார் ஜூலி. “நாங்கள் இருவரும் இந்தியா, நேபாளம், பெரு, ஈக்வடார், மங்கோலியா, உஸ்பெகிஸ்தான், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளில் ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். அண்டார்டிகாவில் திருமணம் செய்துகொண்டது அற்புதமானது! பனி சூழ்ந்துள்ள மலைகள், நல்ல மனம் படைத்த மனிதர்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்துள்ளது. இதைவிடச் சிறந்த இடம் இந்தப் பூமியில் இருக்க முடியாது” என்கிறார் ஜூலி. “நீண்ட கால நட்பு காதலாக மாறி, திருமணத்தில் முடிந்திருக்கிறது. நாங்கள் எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ளவே விரும்பினோம். ஆனால் அண்டார்டிகாவில் திருமணம் செய்வோம் என்று நினைத்ததில்லை. அண்டார்டிகாவில் திருமணம் செய்துகொண்டதால் உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறிவிட்டோம்” என்கிறார் டாம்.

அண்டார்டிகாவில் ஒரு திருமணம்!

சிலியின் மத்தியப் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மிகப் பெரிய தீ விபத்து நிகழ்ந்தது. இதில் 4,57,000 ஹெக்டேர் காடுகள் கருகின. தற்போது காட்டை மீண்டும் உருவாக்குவதற்காக டாஸ், ஒலிவியா, சம்மர் என்ற 3 நாய்கள் கடுமையாக உழைத்து வருகின்றன. “மார்ச் மாதம் முதல் காட்டுக்குள் புதிய விதைகளை விதைக்கும் பணியை ஆரம்பித்தேன். தினமும் விதைகளையும் நாய்களையும் ஏற்றிக்கொண்டு காட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்வேன். நாய்களின் முதுகில் 8 கிலோ விதைகளைக் கட்டி வைத்துவிடுவேன். நாய்கள் ஓடும்போது முதுகுப் பையிலுள்ள விதைகள் கீழே விழும். ஒரு நாளைக்கு 30 கி.மீ. தூரம் சென்று விதைத்துவிட்டு, நாய்கள் திரும்பி வருகின்றன. ஒரு மனிதரால் ஒரு நாளைக்கு 3 கி.மீ. தூரமே சென்று விதைக்க முடியும். வேலைகளை முடித்துவிட்டு, களைப்புடன் திரும்பும் நாய்களுக்கு நான் உற்சாகமான வரவேற்பு கொடுப்பேன். அவற்றுக்குப் பிடித்த உணவுகளை அளிப்பேன். பார்டர் கோலி என்ற இந்த நாய் வகைகள் விதைக்கும் வேலைகளைக் கச்சிதமாக செய்யக்கூடியவை. இவற்றின் ஆற்றலும் புத்திசாலித்தனமும் வேகமும் அபாரமானவை. இவை மற்ற காட்டு விலங்குகளைத் தாக்குவதில்லை. இன்னும் விதைக்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே விதைத்த 15 காடுகளில் தாவரங்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. கருகிய காடு, தற்போது பசுமைக் காடாக மாறிக்கொண்டிருக்கிறது. விரைவில் தாவரங்கள் வளர்ந்தால், காட்டை விட்டுச் சென்ற உயிரினங்கள் மீண்டும் திரும்பி வரலாம்” என்கிறார் 32 வயது பிரான்சிஸ்கா டார்ரஸ்.

புதிய காடுகளை உருவாக்கும் பணியில் பலே நாய்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அண்டார்டிகாவில்-ஒரு-திருமணம்/article9779621.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: 720 மணி நேரம் ஓடும் உலகின் மிக நீளமான திரைப்படம்

masalajpg

ஸ்வீடனைச் சேர்ந்த 47 வயது திரைப்பட இயக்குநர் ஆண்டர்ஸ் வெபெர்க், உலகின் மிக நீளமான திரைப்படத்தை எடுத்து வருகிறார். இது ஒரு பரிசோதனை முயற்சிக்கான திரைப்படம். Ambience என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் 720 மணி நேரம் ஓடக்கூடியது! தொடர்ந்து 30 நாட்கள் ஒளிபரப்பினால்தான் முழுமையாகத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்க முடியும்! இருபதாண்டுகளாகத் திரைப்படத் துறையில் இயங்கி வரும் ஆண்டர்ஸ், 2020-ம் ஆண்டில் இந்தத் திரைப்படத்தை வெளியிட்டு, தன்னுடைய திரை வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருக்கிறார்.

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் திரைப்படத்தை வெளியிட்டு, ஒரே ஒரு காட்சி மட்டுமே காட்டப் போகிறார். பிறகு இந்தத் திரைப்படத்தின் நகல்களை அழித்துவிடுவார். ஏனென்றால் இந்தத் திரைப்படத்தை இன்னொரு முறை யாரும் பார்க்கக்கூடாது என்கிறார். 30 நாட்களும் இருக்கையில் உட்கார வைப்பதற்கு, இது தன்னுடைய ஆகச் சிறந்த படைப்பு என்று ஆண்டர்ஸ் பொய் கூறவில்லை. “நான் உலகின் மிக நீளமான திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று மட்டுமே திட்டமிட்டேன். இது வணிக ரீதியில் வெற்றி பெற்று சம்பாதித்துக் கொடுக்குமா என்றெல்லாம் நினைக்கவில்லை.

இவ்வளவு நீளமான திரைப்படத்தில் சில காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் நிலைத்திருந்தால்கூட அதை என் வெற்றியாகக் கருதுகிறேன்” என்று சொல்லும் ஆண்டர்ஸ், வாரம் ஒருமுறை 8 மணி நேரம் படம் பிடித்த காட்சிகளை 1 மணி நேரத்தில் எடிட் செய்து முடித்துவிடுகிறார்.

2011-ம் ஆண்டு வெளியான Modern Times Forever என்ற திரைப்படம் 240 மணி நேரம் ஓடக்கூடியது. இதுவே உலகின் மிக நீளமான திரைப்படமாக இருந்து வருகிறது. இதுவரை 400 மணி நேரப் படத்தை எடுத்து முடித்துவிட்டார் ஆண்டர்ஸ். திட்டமிட்டபடியே 2020-ம் ஆண்டு திரைப்படத்தை வெளியிட்டு விடுவார். 2014-ம் ஆண்டு 7 நிமிடங்களுக்கு முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டார். 2016-ம் ஆண்டு 7 மணி நேரத்துக்கு முன்னோட்டத்தை வெளியிட்டார். 2018-ம் ஆண்டு 72 மணி நேரத்துக்கு இறுதி முன்னோட்டக் காட்சிகளை வெளியிட இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் 100 நடிகர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு வசனங்கள் பேச வேண்டிய சிரமம் இல்லை. ஏனென்றால் இதுவரை எடுக்கப்பட்ட 400 மணி நேரத் திரைப்படத்தில் வசனங்களே இடம் பெறவில்லை. இனியும் அப்படியே எடுத்து முடித்துவிடும் யோசனையில் இருக்கிறார். “பார்வையாளர்களுக்கு விஷயத்தைக் கடத்த வசனம் அவசியமில்லை. காட்சிகள் மூலமும் இசை மூலமும் கடத்திவிட முடியும். இந்தத் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்து வருகிறேன்.

அடுத்தவர்களின் பணத்தில் திரைப்படம் எடுத்தால் நம்மால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கும் உலகின் மிக நீளமான திரைப்படத்தை, ஒருவராலும் முழுமையாகப் பார்க்க முடியாது என்பது உண்மைதான், ஆனால் இந்தத் திரைப்படத்தைப் பலரால் பார்த்து முடித்துவிட முடியும்” என்கிறார் ஆண்டர்ஸ்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் பார்த்தாலே இந்தத் திரைப்படத்தைப் பார்த்து முடிக்க 2 வருடங்கள் ஆகும் போலிருக்கே!

http://tamil.thehindu.com/world/article19322768.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: லியான் தனித்துவமானவர்தான்!

masalajpg

இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயது லியாம் டெர்பிஷிர் தூங்க ஆரம்பித்தால் மூச்சு விடுவதை நிறுத்திவிடுகிறார். பிறவிக் குறைபாட்டுடன்தான் பிறந்தார் லியாம். குழந்தை தூங்க ஆரம்பித்தால் மூச்சு நின்றுவிடும். அதனால் செயற்கை சுவாசம் கொடுத்து வைத்திருந்தார்கள் மருத்துவர்கள். இந்தக் குழந்தை கருவிலேயே இறந்துவிடும் என்று கணித்திருந்த மருத்துவர்களுக்கு உயிருடன் பிறந்ததில் ஆச்சரியம். ஆனாலும் 6 வாரங்களுக்கு மேல் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டனர். குழந்தை இருக்கும் வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்வது என்று முடிவு செய்தனர் லியானின் பெற்றோர். “கதைகளில் சாபம் விட்டால் இப்படிப் பிரச்சினை வரும் என்று படித்திருக்கிறோம். ஆனால் நிஜ வாழ்வில் இப்படி ஒரு நோய் மருத்துவ உலகத்துக்கே சவாலாக இருக்கிறது. உலகம் முழுவதும் 1500 பேர் இந்த நோயால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் லியானின் நிலைமைதான் மிகவும் தீவிரமாக இருக்கிறது. விழித்துக்கொண்டிருக்கும்போது சுவாசக் கருவிகள் இன்றி அவனால் இருக்க முடியும். லேசாகத் தூங்க ஆரம்பித்தால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அதனால் வீட்டிலேயே மருத்துவமனை போன்று மருத்துவக் கருவிகளைப் பொருத்தியிருக்கிறோம். இதுவரை சுவாசக் கருவிகள் இன்றி அவன் தூங்கியதில்லை. 24 மணி நேரமும் ஒரு செவிலியரை அமர்த்தியிருக்கிறோம். லியான் தூங்கும்போது அடிக்கடி கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். 6 வாரங்களுக்கு மேல் இருக்க மாட்டான் என்று சொன்ன எங்கள் மகன், 18 ஆண்டுகள் வரை வந்துவிட்டான் என்பதில் எங்களுக்கு அளவற்ற சந்தோஷம். ஒவ்வொரு நாளையும் அவனுக்குக் கிடைத்த போனஸாகவே நினைத்துக்கொள்கிறோம். மற்ற குழந்தைகள்போல இயல்பான வாழ்க்கை அமையாவிட்டாலும் லியான் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பான், நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இடையில் புற்றுநோயும் வந்தது. அதையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட்டான் லியான்” என்கிறார் அம்மா கிம். லியானைத் தொடர்ந்து கவனித்து வரும் மருத்துவர் கேரி கோனெட், “இந்தக் குறைபாடு உடையவர்கள் யாரும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததில்லை. லியான் விஷயத்தில் எல்லாமே ஆச்சரியமாக இருக்கிறது. உலகத்திலேயே லியான் தனித்துவமானவர்” என்கிறார்.

லியான் தனித்துவமானவர்தான்!

கொலம்பியாவைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் சியாரா என்ற பெல்ஜிய மாலினோய்ஸ் வகை நாய்க்குச் சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதற்காகவே இந்த நாய்க்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 14 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாராசூட்டில் தலைமைத் தொழில்நுட்ப வல்லுநர் கார்லோஸ் ஆண்ட்ரெஸுடன் சேர்ந்து குதித்தது சியாரா! ஏற்கெனவே 4 முறை இதுபோன்று வானிலிருந்து குதித்திருந்தாலும், அன்று பயிற்சியின் கடைசி நாள் என்பதால், பிரபல புகைப்படக் கலைஞரை வைத்துப் படம் பிடித்திருக்கிறார்கள்!

மனிதனுக்கு இணையாக பாராசூட்டில் குதித்த நாய்!

http://tamil.thehindu.com/world/article19329998.ece

Link to comment
Share on other sites

உலக மசாலா: அம்மாவின் முன்னாள் காதலர்

snookball

விளையாட்டையும் புட்பால் விளையாட்டையும் சேர்த்து ஸ்நூக்பால் என்ற புதிய விளையாட்டு பிறந்திருக்கிறது. மிகப் பெரிய பில்லியர்ட்ஸ் டேபிள் தரையில் வைக்கப்பட்டிருக்கும். இதில் ஸ்நூக்கர் பந்துகளுக்குப் பதில் கால்பந்துகள். கால்கள் மூலம் பந்துகளை பாக்கெட்களில் போட வேண்டும். மற்றபடி ஸ்நூக்கருக்கு உண்டான அத்தனை விதிமுறைகளும் இதற்கும் உண்டு. ஆரிலியன் மற்றும் சாமுவேல் என்ற பிரெஞ்சுக்காரர்களின் கண்டுபிடிப்பில் உருவாகியுள்ள இந்த விளையாட்டில் 4 பேர் வரை கலந்துகொள்ள முடியும். ஸ்நூக்கரை விட சுவாரசியம் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.

இதைத்தான் மாத்தி யோசி என்கிறார்களோ…

***

சோபியா பெட்ரோவா 18 வயது இளம் பெண். வீட்டில் திருடுகிறார், பொய் சொல்கிறார், பள்ளி வகுப்பைப் புறக்கணிக்கிறார் என்ற காரணங்களுக்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு அவரது அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையால் அனுப்பி வைக்கப்பட்டார். ரஷ்யாவில் சோபியாவின் அப்பா வசிக்கிறார். விடுமுறைக்கு வந்ததாக நினைத்துக்கொண்டிருந்த சோபியாவுக்கு, திரும்பிச் செல்வதற்கான டிக்கெட் இல்லை என்பது பிறகுதான் புரிந்தது.

அம்மாவிடம் தொடர்புகொண்டபோது, தண்டனையாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அப்பாவும் குடித்துவிட்டு சோபியாவை அடித்து, துன்புறுத்தி வந்தார். எத்தனையோ தடவை போனிலும் கடிதங்களிலும் மன்னிப்புக் கேட்டு அம்மாவிடம் கெஞ்சிப் பார்த்துவிட்டார் சோபியா. பலன் ஒன்றும் இல்லை. அப்பொழுது தான் பரித் சொலிமனியின் நினைவு வந்தது. அவர் சோபியா அம்மாவின் முன்னாள் காதலர். 13 வயது வரை அவர்தான் தன் தந்தை என்று நினைத்திருந்தார் சோபியா. ஒருநாள் உறவு முறிய, அவர் பிரிந்து சென்றுவிட்டார். மொராக்கோவிலிருக்கும் பரித்தைத் தொடர்புகொண்டார்.

உடனே சோபியாவை அழைத்துச் சென்றார் பரித். 'அப்பாவின் அன்பை பரித்திடம்தான் பெற்றிருக்கிறேன். அதனால் என் பெயருக்குப் பின்னால் அவர் பெயரைச் சேர்த்துவிட்டேன். அப்பா, பாட்டி என்று சந்தோஷமாக இருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகள் கொடுமையான காலகட்டம். அந்தச் சம்பவங்களைப் புத்தகமாக எழுத இருக்கிறேன்' என்கிறார் சோபியா.

பரித் மாதிரி நல்ல மனிதர் அப்பாவாக இருக்கும்போது, இனி உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது சோபியா.

***

பிளைமவுத்தில் வசிக்கும் மவுண்டர், 13 ஆண்டுகளுக்கு முன்பு அன்னெட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது. 55 வயது அன்னெட் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். போராடிப் பார்த்தார். உயிர் பிழைக்கும் வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டார். 'என் உடலை எரித்த பிறகு, கிடைக்கும் சாம்பலைக்கொண்டு புஸ்வானம், பட்டாசுகள் செய்யவேண்டும்.

வானில் நட்சத்திரங்களாக நான் வெடித்துச் சிதற வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். அன்னெட் இறந்த உடன், சாம்பலைக்கொண்டு பட்டாசுகளைத் தயாரித்து, 2 நிமிடங்கள் வானில் வெடிக்கச் செய்து, தன் அன்பு மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் மவுண்டர். 'என் இத்தனை வருட வாழ்க்கையில் அன்னெட்டுடன் வாழ்ந்த 13 ஆண்டுகள்தான் மிக மகிழ்ச்சியான காலகட்டம். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி, வழியனுப்பி வைப்பதில்தானே என்னுடைய அன்பு அடங்கியிருக்கிறது' என்று நெகிழ்கிறார் மவுண்டர்.

அன்புக்கு எல்லை ஏது!

***

டிபோரா ஹார்ன்பெர்கெர், ஸ்டீபனே லாங்லியர் ஜோடிக்கு சவப் பெட்டிகளைச் சுமந்து செல்லும் கார்களை வாங்குவதில் ஆர்வம் அதிகம். சவப்பெட்டி கார்களை வாங்கி, உள்பக்கமும் வெளிப்பக்கமும் மாற்றங்கள் செய்து, வசதிகளை மேம்படுத்தி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வித்தியாசமான கார்களை எடுத்துச் சென்று, கார் ஷோக்களில் கலந்துகொள்கிறார்கள். மீதி நேரங்களில் இந்த கார்களை ஆம்புலன்ஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு, ஆம்புலன்ஸ் போலப் பயன்படுத்துகிறார்கள். அதில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், ஆம்புலன்ஸ் சவப்பெட்டிகாராக மாற்றமடைந்துவிடும்.

விநோத மனிதர்கள்… விநோத விருப்பங்கள்…

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உலக மசாலா: தமிழ்த் திரைப்படங்களை விஞ்சிவிடும் போலிருக்கே!

 
 
ulagam

ம்போடியாவில் வசிக்கிறார் கிம் ஹாங் என்ற 74 வயது பெண்மணி. இவரது கணவர் டோல் குட் ஒரு வருடத்துக்கு முன்பு திடீரென்று இறந்துவிட்டார். அந்த இழப்பை கிம் ஹாங்கால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்னென்னவோ செய்து பார்த்தார். இறுதியில் ஒரு சாமியாரிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார். ‘உங்கள் வீட்டில் மாடு கன்று போடும்போது, உன் கணவரே கன்றாகப் பிறப்பார். கவலை வேண்டாம்’ என்று கூறினார் அந்தச் சாமியார். கிம் நம்பிக்கையுடன் இருந்தார். கடந்த மார்ச் மாதம் மாடு கன்று ஈன்றது. அதை நன்றாகக் கவனித்துக்கொண்டார். “நான் இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கணவர் கன்று ரூபத்தில் மீண்டும் என்னிடம் வந்துவிட்டார். கன்று என் கைகளையும் கழுத்தையும் நாக்கால் தடவும். என் தலை மீது தலை வைத்துக்கொள்ளும். சில நேரங்களில் முத்தமிடவும் செய்யும். இப்படிப் பல விஷயங்கள் என் கணவர் செய்வதைப் போலவே செய்கிறது. அதற்குப் பிறகுதான் எனக்கு முழுமையான நம்பிக்கை வந்தது. கன்று வடிவத்தில் இருக்கும் என் கணவரை வீட்டுக்குள்தான் வைத்திருக்கிறோம். இதற்காக வீட்டைச் சற்றுப் பெரிதாகக் கட்டிவிட்டோம். கணவரின் புகைப்படங்களுக்கு அருகே ஒரு பெரிய படுக்கையை விரித்து, அதில் அவருக்குப் பிடித்த தலையணையை வைத்திருக்கிறோம். இதில்தான் கன்றும் நானும் படுத்துக்கொள்வோம். என் குழந்தைகள், பேரன் பேத்திகள், உறவினர்களுடன் அன்பாகப் பழகும். எல்லோருமே கணவருக்குக் கொடுத்த அதே மரியாதையையும் அன்பையும் கன்றுக்கும் கொடுக்கிறார்கள்” என்று நெகிழ்கிறார் கிம் ஹாங். 5 மாதக் கன்று இன்று கம்போடியாவின் பிரபலமாக மாறிவிட்டது. கன்றுக்குட்டியைப் பார்ப்பதற்காக கிம் வீட்டுக்கு மக்கள் செல்வது அதிகரித்திருக்கிறது.

தமிழ்த் திரைப்படங்களை விஞ்சிவிடும் போலிருக்கே!

சீனாவின் குவாஞ்சி மருத்துவமனையில் 45 வயது சென்னுக்கு 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, 200 கற்களை நீக்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள். கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்தார் சென். ஒருமுறை மருத்துவரிடம் சென்றபோது, பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. பித்தப்பை, கல்லீரலில் உள்ள கற்களை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என்றார்கள் மருத்துவர்கள். பயந்து போன சென், உடனடியாக வீட்டுக்குத் திரும்பிவிட்டார். தற்போது வலி தாங்க முடியாமல் போகவே, அறுவை சிகிச்சைக்கு வந்தார். “இவ்வளவு கற்கள் சாதாரணமாக உருவாவதற்கு வாய்ப்பில்லை. சென் சாப்பிடும் உணவு பழக்கத்தால் இந்தக் கற்கள் உருவாகியிருக்கலாம். இவர் பைன் மரங்களின் விதைகளைச் சேகரிப்பவர். காலை உணவை முற்றிலும் தவிர்த்து வந்திருக்கிறார். நேரம் தவறி சாப்பிட்டதால் பித்தப்பையில் கற்கள் உருவாகிவிட்டன. அளவுக்கு அதிகமான கொழுப்பும் கால்சியமும் படிகங்களாக மாறிவிட்டன. உணவைத் தவிர்க்கவும் கூடாது, அவசரமாகவும் சாப்பிடக் கூடாது. பித்தப்பை கல் பிரச்சினை சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அதிகம் ஏற்படுகிறது” என்கிறார் மருத்துவர் க்வான் ஸுவெய்.

காலை உணவைத் தவிர்க்கக்கூடாது!

http://tamil.thehindu.com/world/article19336239.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிம்காம் தனது மணாளனை நன்றாக கவனித்து கொள்கிறார் சரி...., மாமியாரை எப்படி கவனித்து கொல்லுறார் என்று சொல்லவே இல்லை... ஐ மீன் அந்தத் தாய்ப்பசுவை.....!  tw_blush:

Link to comment
Share on other sites

உலக மசாலா: கழுதைப்புலிகளுக்கு உணவு கொடுக்கும் அதிசய மனிதர்.

kaluthai

கழுதைப்புலிகளுக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு பெரிதாக இருந்ததில்லை. எத்தியோப்பியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹரார் என்ற பழமையான நகரில் பல நூற்றாண்டுகளாக கழுதைப்புலிகளும் மனிதர்களும் நெருங்கிப் பழகி வருகிறார்கள்.

இங்கே மனிதரின் கையிலிருந்து உணவை வாங்கிச் சுவைக்கின்றன கழுதைப்புலிகள். 16-ம் நூற்றாண்டில் உருவானது இந்த நகரம். பாதுகாப்புக்காக நகரைச் சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டன.

ஆனால் கழுதைப்புலிகள் நகருக்கு வருவதற்காக சில இடங்களில் தாழ்வாக சுவர் கட்டப்பட்டன. நகருக்குள் கழுதைப்புலிகள் வந்தால், தேவையற்ற கழிவுகளை அவை சாப்பிட்டு, நகரை சுத்தம் செய்துவிடுகின்றன. அதனால்தான் இங்கே வசிக்கும் மக்கள் கழுதைப்புலிகளை அனுமதிக்கிறார்கள்.

“நகரை சுத்தம் செய்வதற்காக ஆண்டாண்டு காலமாக கழுதைப்புலிகள் இங்கே வந்து செல்கின்றன. சில நேரங்களில் கூட்டமாக வரும் கழுதைப்புலிகள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகள், பறவைகளைத் தூக்கிக் கொண்டு சென்றுவிடுவது துண்டு. உணவு கிடைக்காதபோது மனிதர்களையும் தாக்க ஆரம்பித்தன. அப்போதுதான் என் அப்பா, கழுதைப்புலிகளுக்கு உணவு கொடுத்துவிட்டால் அவை மனிதர்களைத் தாக்கும் வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தார். அவரே தினமும் இரவு இறைச்சியைக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு இந்த 60 ஆண்டுகளில் கழுதைப்புலிகளால் மனிதர்களுக்கு சிறு அசம்பாவிதம்கூட நிகழ்ந்ததில்லை. 13 ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பாவிடமிருந்து இந்தப் பணியை நான் ஏற்றுக்கொண்டேன். எதிர்காலத்தில் என் மகனும் இந்த வேலையைச் செய்வான். இரவில் தனியாக இறைச்சியுடன் செல்வேன். சில நேரங்களில் 30 கழுதைப்புலிகள் கூட வந்துவிடுவதும் உண்டு. பொறுமையாக என் கைகளில் இருந்தே உணவை வாங்கிச் சாப்பிடுகின்றன. என் முகத்தோடு முகம் வைத்து உரசுகின்றன. தோளில் சாய்ந்துகொள்கின்றன. எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற பயம் எனக்கு சிறிதும் இல்லை. ஏனென்றால் அவை ஒருபோதும் என்னைப் பயமுறுத்தியதில்லை. நான் மட்டுமின்றி, நகரில் இருக்கும் மக்கள்கூட கழுதைப்புலிகளுக்குப் பயப்படமாட்டார்கள். நகருக்குள் இரவில் உலா வரும் கழுதைப்புலிகள் அசுத்தங்களைத் தின்றுவிட்டு, காட்டுக்குள் ஓடி விடுகின்றன. இப்படி கழுதைப்புலிகள் சுத்தம் செய்யாவிட்டால், இந்த நகரம் இன்னும் மோசமாக இருக்கும். இயற்கை சுத்தம் செய்வதற்காக அளிக்கப்பட்ட கொடை இவை. நகரைச் சுத்தம் செய்து, மனிதர்களுக்கு நோய் வராமல் காக்கும் கழுதைப்புலிகள் எங்களுக்கு சிறந்த நண்பர்கள். சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்ப்பதற்காகவே எங்கள் நகருக்கு வருகிறார்கள். அவர்களும் தைரியம் பெற்று உணவு கொடுக்கிறார்கள். கழுதைப்புலிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்காக ஒருவருக்கு 280 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறேன். பொதுவாக சுற்றுலாப் பயணிகளைக் கழுதைப்புலிகளிடம் நெருங்க விடமாட்டேன். விலங்குகள் எந்த நேரம் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஹரார் பகுதியில் நான் மட்டுமே இப்போது உணவு கொடுக்கும் பணியைச் செய்து வருகிறேன்” என்கிறார் யூசுஃப் மியூம் சலே.

கழுதைப்புலிகளுக்கு உணவு கொடுக்கும் அதிசய மனிதர்.

http://tamil.thehindu.com/world/article19357225.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.