Jump to content

உலக மசாலா


Recommended Posts

உலக மசாலா: பெண்ணின் பெயர் 'ஏபிசி'

 
masala_2321909f.jpg
 
 
 

கொலம்பியாவைச் சேர்ந்த லேடிஸுங்கா சைபோர்க் என்ற பெண் தன் பெயரை 26 ஆங்கில எழுத்துகளைச் சேர்த்து வைத்திருக்கிறார். அவரது முதல் பெயர் Abcdefg Hijkalmn கடைசிப் பெயர் Opqrst Uvwxyz. மிகப் பெரிய பெயரைக் கூப்பிடுவது கஷ்டம் என்பதால், Abc என்று சுருக்கமாக அழைக்கச் சொல்கிறார். 36 வயதான இந்தப் பெண்ணுக்குத் தன்னுடைய பெயரை அடிக்கடி மாற்றிக்கொள்வதுதான் மிகவும் பிடித்த விஷயம். இவர் பெயரைக் கேள்விப்பட்டு, கொலம்பியன் டிவியில் பேட்டி எடுத்தனர்.

`என்னுடைய பெயரில் உலகிலேயே நான் ஒருத்தி மட்டும்தான் இருக்க வேண்டும். அதனால்தான் அடிக்கடி பெயரை மாற்றிக்கொண்டிருந்தேன். இனி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இப்படி ஒரு பெயரை யாருக்கும் வைத்திருக்க மாட்டார்கள்’ என்று பெருமிதம் கொள்கிறார் ஏபிசி. சட்டப்பூர்வமாகத் தன் பெயரைப் பதிவு செய்து, அடையாள அட்டைப் பெறுவதற்காக அரசாங்க அலுவலகத்துக்குச் சென்றார் ஏபிசி. இதுவரை பல முறை பெயர்களை மாற்றியபோதெல்லாம் புருவத்தை உயர்த்தியபடி அடையாள அட்டை வழங்கிய அதிகாரிகள், இந்த முறை குழம்பிப் போய்விட்டனர். 26 எழுத்துகள் கொண்ட பெயருக்காக ஒரு வருடம் போராடி, அடையாள அட்டையைப் பெற்றுவிட்டார் ஏபிசி.

ஒரு அடையாளத்துக்குத்தானேம்மா பேரு… அதுக்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?

பிரிட்டனில் வசிக்கும் 11 வயது சிறுமி ரோவன் ஹன்சென், டிசி காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிப்பார். அப்பொழுதுதான் ரோவனுக்கு ஒரு கேள்வி வந்தது. உடனே டிசி காமிக்ஸ் பதிப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதினாள். `ஆண் குழந்தைகளைப் போலவே பெண்களாகிய நாங்களும் சூப்பர் ஹீரோ காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிக்கிறோம். சூப்பர் ஹீரோவாக ஏன் நீங்கள் பெண்களைக் கொண்டு வருவதில்லை? இந்த விஷயம் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. திரைப்படங்களோ, காமிக்ஸ் புத்தகங்களோ ஆண்களையே சூப்பர் ஹீரோவாகக் காட்டுவது கொஞ்சமும் நியாயமில்லை.

உங்கள் காமிக்ஸ் புத்தகங்கள் என்னை மிகவும் கவர்கின்றன. ஆனால் பெண்களையும் சூப்பர் ஹீரோக்களாகக் கொண்டு வந்தால் இன்னும் அதிகம் விரும்புவோம்’ என்று எழுதி அனுப்பினாள். உடனே டிசி காமிக்ஸ் பதிப்பாளரிடம் இருந்து கடிதம் வந்தது. `காமிக்ஸ் புத்தகங்களில் பெண்களைக் ஹீரோவாகக் கொண்டு வருவது கடினமான விஷயம்தான். ஆனாலும் கண்டிப்பாகக் கொண்டு வருவோம்’ என்று பதில் அனுப்பிவிட்டு, ரோவனைப் போல ஒரு பெண் சூப்பர் ஹீரோவையும் படமாக வரைந்து அனுப்பி வைத்திருக்கிறது. சந்தோஷத்தில் இருக்கிறார் ரோவன்.

ஆஹா! குழந்தைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

உலகிலேயே மிக அதிக வயதான ஜோடி சீனாவில் வசிக்கின்றனர். பிங் முஹு 109 வயது. அவருடைய மனைவி ஸாங் ஸின்னியு 108 வயது. இருவரும் கடந்த 90 ஆண்டுகளாகத் தம்பதியராய் வாழ்ந்து வருகிறார்கள். குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று 70 பேர் இவர்கள் குடும்பத்தில் இருக்கிறார்கள். ஐந்து தலைமுறைகளைக் கண்ட இந்த ஜோடி, `ஆரோக்கியமான உணவும் எளிமையான வாழ்க்கையும்தான் எங்கள் ஆயுளுக்குக் காரணம்’ என்கிறார்கள். பிங் முஹுவின் உடல்நிலை கொஞ்சம் மோசமடைந்து வருகிறது. ஆனால் அவர் மனைவி ஆரோக்கியமாக இருக்கிறார்.

கிரேட் ஜோடி!

உலக மக்கள் தொகை 2040ம் ஆண்டில் 11 பில்லியனாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்றவாறு உணவு உற்பத்தி இருக்காது. அதனால் பூச்சிகளை உணவாக ஏற்றுக்கொள்ளும்படி பரிந்துரைக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. தற்போது 7 பில்லியன் அளவுக்குப் பூச்சிகள் வசிக்கின்றன. மிகவும் விலை குறைந்த, சத்து மிகுந்த உணவாகப் பூச்சிகள் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும்படி வலியுறுத்துகிறது ஐ.நா. லத்தீன் அமெரிக்கா, சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பூச்சிகளை உணவாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இனி பூச்சிகளுக்கும் ஆபத்தா?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பெண்ணின்-பெயர்-ஏபிசி/article6929965.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

உலக மசாலா: புற்றுநோய்க்கு தீர்வு எப்போது?

 

 
ulagam123_3132588f.jpg
 
 
 

இங்கிலாந்தில் வசித்த மைக் பென்னட்டும் அவரது மனைவி ஜூலி பென்னட்டும் ஒருவருக்கொருவர் மிகவும் அனுசரணையான தம்பதியர். 21 வயதில் லூக், 18 வயதில் ஹன்னா, 13 வயதில் ஆலிவர் என்று மூன்று குழந்தைகளையும் அற்புதமாக வளர்த்தனர். 57 வயது பென்னட் கேபினட் செய்யும் பணியிலும் 50 வயது ஜூலி பள்ளி ஆசிரியராகவும் வேலை செய்துவந்தனர். 2013-ம் ஆண்டு பென்னட்டுக்கு மூளைப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடைந்து போனாலும் ஜூலி அந்த வருத்தத்தை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. கணவரையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, வேலைக்குச் சென்றுவந்தார். 2016-ம் ஆண்டு ஜூலிக்கு உடல் நலம் குன்றியது. பரிசோதனை செய்ததில் நுரையீரல், சிறுநீரகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவம் செய்வதற்கு வாய்ப்பளிக்காமல் வெகுவேகமாக உடலின் பிற உறுப்புகளுக்கும் புற்றுநோய் பரவியது. பென்னட்டும் ஜூலியும் தங்கள் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்பட்டனர். அம்மாவும் அப்பாவும் மரணப்படுக்கையில் கைகளைப் பிடித்துக்கொண்டு உறங்கிய புகைப்படங்களை குழந்தைகள் சமூக இணையதளத்தில் வெளியிட்டனர். உடனே ஜூலியின் உறவினர்கள், நண்பர்கள் ஓடோடி வந்தனர். குழந்தைகளைத் தாங்கள் பார்த்துக்கொள்வதாக வாக்களித்தனர். அதற்காக நிதியையும் திரட்ட ஆரம்பித்தனர். தாங்கள் இல்லாத உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை ஜூலி, குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தார். கடந்த வாரம் பென்னட் மறைந்தார். ஐந்தே நாட்களில் ஜூலியும் மறைந்தார். பெற்றோரின் இழப்பிலிருந்து தங்களைத் தேற்றிக்கொண்ட குழந்தைகள் மூவரும், “எங்கள் அம்மா எவ்வளவு சிறந்த மனிதர்களைச் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்பதை எங்களுக்கு உதவும் நல்ல உள்ளங்கள் மூலம் அறிந்துகொண்டோம். பெற்றோர் இல்லாமல் உலகில் வசிப்பது கடினம்தான். ஆனால் அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதையும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தே சென்றிருக்கிறார் அம்மா. பெற்றோரின் ஆன்மா இருக்கும் இந்த வீட்டிலேயே தொடர்ந்து வசிக்க இருக்கிறோம். நானும் என் தங்கையும் அவரவர் துறையிலும் தம்பி படிப்பிலும் கவனம் செலுத்தப் போகிறோம். உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தப் புற்றுநோய்க்கு முழுமையான தீர்வு எப்ப கிடைக்குமோ?

இங்கிலாந்தைச் சேர்ந்த சீகி ரெபேகா, தன் நண்பர் ரூபென் ஃப்யாண்டெரை விளையாட்டாக ஏமாற்ற நினைத்தார். அவரை அலைபேசியில் அழைத்து, கத்தி வெட்டியதில் ஏராளமாக ரத்தம் வெளியேறுகிறது. உடனே வீட்டுக்கு வந்து உதவ முடியுமா என்று கேட்டார். அவரும் உடனே வருவதாகச் சொன்னார். அதற்குள் கேமராவை வைத்துக்கொண்டு, சிவப்புச் சாயத்தைக் கைகள், கத்தியில் தடவிக்கொண்டார். அளவுக்கு அதிகமாகத் தடவியதில் சாயம் சுவர், தரை எல்லாம் சிதறிவிட்டது. ரூபென் வந்தார். ரத்தத்தைப் பார்த்தார். அவரிடம் முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு ஏதோ சொல்ல வந்தார் ரெபேகா. அடுத்த நொடி ரூபென் மயங்கிக் கீழே விழுந்துவிட்டார். உதவி செய்ய அழைத்த ரூபெனுக்கு, ரெபேகா மருத்துவம் பார்க்கும்படியாகிவிட்டது!

விளையாட்டு விபரீதமாகிவிட்டது!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-புற்றுநோய்க்கு-தீர்வு-எப்போது/article9540774.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: குழந்தையும் நாயும் ஒரே மாதிரி!

 

 
masala_2320990f.jpg
 
 
 

க்ரேஸ் சோன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார். அவருக்கு ஜாஸ்பர் என்ற 10 மாதக் குழந்தை இருக்கிறான். ஜோய் என்ற நாயையும் வளர்த்து வருகிறார். ஜாஸ்பருக்கும் ஜோய்க்கும் விதவிதமான தொப்பி, குல்லாய், ஹெல்மெட், கண்ணாடி அணிவித்து புகைப்படங்கள் எடுத்து வருகிறார் க்ரேஸ்.

ஒவ்வொரு புகைப்படத்திலும் குழந்தை ஜாஸ்பரின் முகபாவனை அசத்தலாக இருக்கிறது. ஆனால் ஜோய் மட்டும் ஒரே மாதிரி மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

`குழந்தையையும் நாயையும் அருகருகே வைத்துப் புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை’ என்கிறார் க்ரேஸ். இவரது புகைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு இருக்கிறது.

நாய் போஸ் கொடுப்பதை நினைத்தால் ஆச்சரியமாதான் இருக்கு…

சீனாவின் பெய்ஜிங் நகரில் இருக்கும் சிறைச் சாலை மிகவும் வித்தியாசமான முறையில் இயங்குகிறது. இங்கே நீண்ட காலமாக தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளுக்காக, சிறைச் சாலைக்கு உள்ளேயே ஒரு சிறிய நகரை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நகருக்குள் சூப்பர் மார்க்கெட், இண்டர்நெட் கஃபே, ஏடிஎம் மெஷின், வங்கி போன்றவை போலியாக உருவாக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் நீண்ட காலம் கழித்து வெளியே செல்லும்போது, வெளியே ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நகரை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம் மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை இயக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கைதிகளுக்குக் கிடைக்கிறது. வெளியே செல்லும்போது எளிதாக எல்லாவற்றையும் அவர்களால் சமாளித்துக்கொள்ள இயலும்.

சமூக சேவகர் ஸு குவாங்குவா இந்தப் புதுமையான திட்டத்தைச் சிறையில் கொண்டுவந்திருக்கிறார். கைதிகள் வெளி உலகமே தெரியாமல் விடுதலையடைந்து செல்லும்போது, சமூகத்தில் மிகப் பெரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.

அதைத் தவிர்க்கவே இந்தத் திட்டம். 15 ஆண்டுகள் சிறைக்குள் இருந்த ஸாங் மின் தற்போது விடுதலையடைந்திருக்கிறார். `என்னால் பேப்பர் படிக்க முடிகிறது. க்ரெடிட் கார்டைப் பயன்படுத்த முடிகிறது. கம்ப்யூட்டரில் வேலை செய்ய முடிகிறது. இந்தத் திட்டத்தை எல்லா சிறைகளிலும் கொண்டு வரவேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்.

அடடா! நல்ல திட்டமாகத்தான் இருக்கு…

பிரிட்டனில் விநோதமான வழக்கு நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது. டான் க்ளார்க் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். நீண்ட காலம் அங்கே ஒரு குடும்பம் வசித்து வந்தது. திடீரென்று வீட்டைக் காலி செய்யும்படிக் கேட்டுக்கொண்டார் க்ளார்க். ஆனால் குடியிருந்தவர்கள் காலி செய்ய மறுத்து, நாட்களைக் கடத்தி வந்தனர். பிறகு ஒருநாள் வீட்டுச் சாவியை க்ளார்க்குக்கு அனுப்பி விட்டு எங்கோ சென்றுவிட்டனர்.

வீட்டைத் திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. வீடு முழுவதும் குப்பைக் கிடங்காகக் காட்சியளித்தது. ஓர் அங்குல இடம் கூட காலியாக இல்லை. ஹால், ரூம், சமையலறை எங்கும் காலியான பாட்டில்கள், சிகரெட்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள் என்று குவிந்திருந்தன.

மோசமான துர்நாற்றம் வேறு. இந்த வீட்டைச் சுத்தம் செய்வதற்கு ஏராளமாக செலவாகும் என்று தெரியவந்தது. நீண்ட காலம் நம்பி ஒருவருக்கு வீடு கொடுத்ததுக்கு தண்டனையா என்று கொதித்துப் போனார் க்ளார்க். குடித்தனம் இருந்தவர்களைச் சுத்தம் செய்து கொடுக்கும்படி உத்தரவிடவேண்டும் என்று நீதிமன்ற உதவியை நாடியிருக்கிறார் க்ளார்க்.

இப்படியும் சிலர் இருக்கிறார்கள்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-குழந்தையும்-நாயும்-ஒரே-மாதிரி/article6928320.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் மிகவும் அன்பான ஜோடி

 

 
 
young1_3133833f.jpg
 
 
 

ஹிட்லரின் கொடூரமான வதை முகாம்களில் ஒன்று ஆஸ்விட்ஸ். அங்கு அடைத்து வைக்கப்பட்ட ஹங்கேரியைச் சேர்ந்த யூதப் பெண் எடித் ஸ்டீனெரும் அவரது அம்மாவும் மெங்கலேவின் கொடூர பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 23 வயது ஜான் மெக்கே என்ற ஸ்காட்லாந்து ராணுவ வீரர், எதிரி நாடான இத்தாலி ராணுவ உடையை அணிந்துகொண்டு எடித்தைக் காப்பாற்றினார். 18 மாதங்கள் அங்கும் இங்கும் பதுங்கியிருந்து, உயிர்ப் பிழைத்த எடித்தும் ஜானும் 1946-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஜான் 96 வயதிலும் எடித் 92 வயதிலும் தங்களது 71-வது காதலர் தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள். ஜானைப் போல மிகச் சிறந்த அன்பான மனிதரைப் பார்க்க முடியாது என்று எடித்தும் எடித்தைப் போல பண்பான ஒரு மனிதரைப் பார்க்க முடியாது என்று ஜானும் சொல்கிறார்கள். “குழந்தைகளுக்காகத்தான் இந்தக் காதலர் தினக் கொண்டாட்டம். எங்களைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதுமே நிறைந்த அன்புடனும் காதலுடனும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்த எங்களுக்குத்தான் உயிரின் மதிப்பும் வாழ்க்கையின் மகத்துவமும் அதிகம் தெரியும்” என்கிறார் எடித்.

பட்டங்களைக் குவிக்கும் லூசியானோவுக்கு ஒரு பூங்கொத்து!

இத்தாலியைச் சேர்ந்த 70 வயது லூசியானோ பெய்ட்டி இதுவரை 15 பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று, கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்! உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற லூசியானோ, இன்னமும் மாணவராகப் படித்துக்கொண்டிருக்கிறார். “நான் பகல் முழுவதும் வீட்டிலும் தோட்டத்திலும்தான் பொழுதைக் கழித்துக்கொண்டிருப்பேன். இரவு நேரத்தில் மாணவனாக மாறிவிடுவேன். தினமும் அதிகாலை 3 மணிக்கு படிப்பேன். அதிகாலையில் படிப்பதால் அப்படியே மனதில் பதிந்துவிடும். 2002-ம் ஆண்டு 8 பட்டங்களைப் பெற்றபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் முதல்முறை இடம்பெற்றேன். என்னுடைய படிப்பு சாதனையாக அங்கீகரிக்கப்படும்போது, நான்கு பேர் என்னைப் பார்த்துப் படிக்க ஆரம்பிக்கலாம். அதற்காக கின்னஸில் தொடர்ந்து பதிவு செய்ய ஆரம்பித்தேன். உடற்கல்வி, சமூகவியல், இலக்கியம், சட்டம், தத்துவவியல், அரசியல், வாகனங்கள் என்று வரிசையாகப் பட்டங்களைப் பெற ஆரம்பித்தேன். பெரும்பாலான பட்டங்களை ரோமில் உள்ள உலகப் புகழ்பெற்ற, மிகவும் பழமையான லா சாபியன்ஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்கிறேன். குற்றவியல் மற்றும் ராணுவ உத்திகள் குறித்த படிப்பை முடித்து, 15-வது பட்டத்தைப் பெற்றிருக்கிறேன். இன்னும் என்மேல் நம்பிக்கை இருக்கிறது. உடலும் மூளையும் சவாலுக்குக் காத்திருக்கின்றன. அதனால் உணவு அறிவியலில் 16-வது பட்டத்தைப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். என் படிப்பு எந்தவிதத்திலும் என் குடும்ப வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறேன்” என்கிறார் லூசியானோ.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-மிகவும்-அன்பான-ஜோடி/article9546443.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: உதாரண மனிதர் வாங் என்லினுக்கு வந்தனம்!

 
 
masala_3134290f.jpg
 
 
 

சீனாவின் யுஷுடன் கிராமத்தில் வசித்துவரும் வாங் என்லின் மூன்றாம் வகுப்பு படித்தவர். 2001-ம் ஆண்டு கிராமத்திலுள்ள விளைநிலங்களில் நச்சுக் கழிவுகளும் நச்சு நீரும் கொட்டப்பட்டன. அருகில் இருந்த கிவா ரசாயன நிறுவனம் தான் இந்த வேலையைச் செய்திருக்கிறது என்பதைக் கண்டுகொண்டார் வாங். உடனே கடிதம் எழுதி, அரசு சூழல் மாசு துறையிடம் புகார் அளித்தார். ஆனால் அந்த அரசாங்க அதிகாரிகள் நிறுவனத்துடன் சமரசம் செய்துகொண்டு, புகாரை கிடப்பில் போட்டுவிட்டனர். தொடர்ந்து நச்சுக் கழிவுகளைக் கொட்டிக்கொண்டேயிருந்தது நிறுவனம். வாங் என்லின் புகார்கள் அளித்தார். சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டார். சாட்சிகளை அளித்தார். எது ஒன்றும் நிறுவனத்தின் செயல்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டு, நிறுவனம் எளிதாகத் தப்பித்துக்கொண்டிருந்தது. சிறந்த வழக்கறிஞரை வைத்து வாதாடலாம் என்றால் அவருக்குச் செலவு செய்வதற்கு வாங்குக்கும் கிராமத்து மக்களுக்கும் வசதி இல்லை. எல்லோரும் விவசாயிகள் என்பதால் விளைநிலங்கள் வீணாவதையும் தண்ணீர் மாசு அடைவதையும் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கவும் முடியவில்லை. தானே சட்டம் பயில முடிவுசெய்தார் வாங். நகரத்தில் இருந்த புத்தகக் கடையில் ஒரு கூடை சோளக் கதிர்களைக் கொடுத்துவிட்டு, சட்டப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். புரியாத விஷயங்களைப் படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். முக்கியமான விஷயங்களைக் குறிப்பு எடுத்துக்கொண்டார். நச்சுக் கழிவால் விளைநிலம் பாழாவதை, அவ்வப்போது பரிசோதனை செய்து, முடிவுகளைச் சேகரித்துக்கொண்டார். தானே படித்துப் படித்து சட்ட நுணுக்கங்கள் அனைத்தும் தெரிந்துகொண்டார். நடுவில் சில தடவை வழக்கு தொடுத்தார். ஆனால் அந்த வழக்கிலிருந்து ரசாயன நிறுவனம் எளிதில் வெளியில் வந்துவிட்டது. தான் படிப்பதை இன்னும் தீவிரமாக்கினார். சட்டத்திலிருந்து தப்பிக்க இயலாத அளவுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் கண்டுகொண்டார். 2015-ம் ஆண்டு மீண்டும் வழக்கு தொடுத்தார். இந்தமுறை ரசாயன நிறுவனத்தின் மீது குற்றம் நிரூபணமானது. ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் டன்கள் ரசாயனக் கழிவுகளை 70 ஏக்கர் நிலப்பரப்பில் கொட்டி வந்ததை ஆதாரத்துடன் நிரூபித்தார் வாங். நீதிமன்றம் ரசாயன நிறுவனத்தைக் கண்டித்ததோடு, 82 லட்சம் ரூபாயை கிராமத்து மக்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கழிவுகளை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. “வழக்கில் வென்றது மகிழ்ச்சிதான். ஆனால் இந்த 16 வருடங்களில் நிலமும் நீரும் விஷமாக மாறிவிட்டதே… அதை என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்கிறார் வாங் என்லின்.

அடக் கொடுமையே…

ஜெர்மனியில் தெருவில் வசிக்கும் மனிதர் ஒருவருக்குப் பல் வலி. மருத்துவரிடம் செல்வதற்குப் பணம் இல்லாததால், அந்த வழியே வந்த துப்புரவு பணியாளர் ஒருவரின் உதவியை நாடினார். அவர் தன்னிடமிருந்த கட்டிங் ப்ளையரில் பல்லை எடுப்பதாகச் சொன்னார். ஒரு கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, பல்லைக் காட்டினார் அந்த மனிதர். சில நிமிடங்களில் கட்டிங் ப்ளையரால் பல்லைப் பிடுங்கிவிட்டார் துப்புரவு பணியாளர். இந்த வீடியோ உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உதாரண-மனிதர்-வாங்-என்லினுக்கு-வந்தனம்/article9548340.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

 

7 hours ago, நவீனன் said:

 

அடக் கொடுமையே…

ஜெர்மனியில் தெருவில் வசிக்கும் மனிதர் ஒருவருக்குப் பல் வலி. மருத்துவரிடம் செல்வதற்குப் பணம் இல்லாததால், அந்த வழியே வந்த துப்புரவு பணியாளர் ஒருவரின் உதவியை நாடினார். அவர் தன்னிடமிருந்த கட்டிங் ப்ளையரில் பல்லை எடுப்பதாகச் சொன்னார். ஒரு கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, பல்லைக் காட்டினார் அந்த மனிதர். சில நிமிடங்களில் கட்டிங் ப்ளையரால் பல்லைப் பிடுங்கிவிட்டார் துப்புரவு பணியாளர். இந்த வீடியோ உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உதாரண-மனிதர்-வாங்-என்லினுக்கு-வந்தனம்/article9548340.ece?homepage=true&relartwiz=true

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நவீனன் said:

 

 

இது இந்தியன் பல்லு டாக்குத்தர்.tw_astonished:

 

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

அடக் கொடுமையே…

ஜெர்மனியில் தெருவில் வசிக்கும் மனிதர் ஒருவருக்குப் பல் வலி. மருத்துவரிடம் செல்வதற்குப் பணம் இல்லாததால், அந்த வழியே வந்த துப்புரவு பணியாளர் ஒருவரின் உதவியை நாடினார். அவர் தன்னிடமிருந்த கட்டிங் ப்ளையரில் பல்லை எடுப்பதாகச் சொன்னார். ஒரு கையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு, பல்லைக் காட்டினார் அந்த மனிதர். சில நிமிடங்களில் கட்டிங் ப்ளையரால் பல்லைப் பிடுங்கிவிட்டார் துப்புரவு பணியாளர். இந்த வீடியோ உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கிறது.

 

அந்த மனிதரின் காலுக்கு முன் ஒரு சின்ன குப்பி போத்தல் இருக்கே... அதுதான் விறைப்பு ஊசி...:grin:

Link to comment
Share on other sites

உலக மசாலா: அடடா! பக்கத்து வீட்டு முதியவரை எவ்வளவு அருமையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் கிறிஸ்!

 

 
tuy_3134774f.jpg
 
 
 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார் 31 வயது ஹாலிவுட் நடிகர் கிறிஸ் சால்வடோரே. இவரது குடியிருப்பில் 89 வயது நோர்மா குக் தனியாக வசித்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் ஜன்னல் வழியாக நோர்மாவைப் பார்த்தார் கிறிஸ். உடனே அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அடிக்கடி சந்தித்ததில் இருவரும் நண்பர்களாக மாறிவிட்டனர். “இண்டீரியர் டிசைனராக இருந்து ஓய்வுபெற்றவர் நோர்மா. 45 வயதில் விவாகரத்துப் பெற்றுக்கொண்டார். குழந்தைகள் இல்லை. மீதிக் காலங்களைத் தனிமையிலேயே கழித்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் தன் வேலைகளைத் தானே செய்துகொண்டு, மிகவும் தன்னம்பிக்கையோடும் மகிழ்ச்சியாகவும் அவர் இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு காதல் தோல்வியில் இருந்து நான் மீள்வதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். தன் அன்பால் என் துயரத்தைத் துடைத்தார் நோர்மா. சில மாதங்களுக்கு முன்பு நோர்மாவின் உடல்நிலை மோசமானது. மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். இனி மருந்துகளால் காப்பாற்ற முடியாது என்றார்கள். என் வீட்டுக்கே அவரை அழைத்து வந்து விட்டேன். நோர்மாவின் இறுதிக் காலங்களைச் சந்தோஷமாக்கினேன். காதலர் தினத்தன்று, மறுநாளே அமைதியான முறையில் உலகைவிட்டுச் சென்றார் நோர்மா. நான்கு ஆண்டுகளாக இணையத்தில் நோர்மாவைப் பற்றி எழுதிவருகிறேன். ஏராளமான மக்களின் மனத்தில் சிறந்த பெண்மணியாக நோர்மா இருக்கிறார்” என்கிறார் கிறிஸ் சால்வடோரே.

அடடா! பக்கத்து வீட்டு முதியவரை எவ்வளவு அருமையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் கிறிஸ்!

அமெரிக்காவின் நியூபரியில் உள்ள கிராமத்தின் சாலையோரத்தில் Chicken farmer I still love you என்று பாறையில் எழுதப்பட்டிருக்கிறது. வழிகாட்டும் பலகை போலிருக்கும் இந்தப் பாறையில் ஏன் இப்படி எழுதப்பட்டிருக்கிறது என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் வீட்டுக்குப் பின்னால் கோழிப் பண்ணை வைத்திருந்தனர். அந்த வீட்டில் க்ரெட்சன் என்ற இளம் பெண் இருந்தார். திடீரென்று ஒருநாள் அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்வதற்காக யாரோ ஒருவர், ‘சிக்கன் பார்மர் ஐ லவ் யூ’ என்று பெயிண்ட்டால் எழுதி வைத்துவிட்டார். அந்தப் பெண்ணுக்கோ, அவர்கள் குடும்பத்துக்கோ யார் எழுதியது என்றே தெரியவில்லை. ஆண்டுகள் சென்றன. மீண்டும் ஒருநாள், ‘சிக்கன் பார்மர் ஐ ஸ்டில் லவ் யூ’ என்று புதிதாக எழுதப்பட்டிருந்தது. யார் எழுதியது என்று தெரியாவிட்டாலும் அது ஓர் அடையாளமாக மாறியிருந்தது. 1997-ம் ஆண்டு சாலைப் பணியாளர்கள் இந்தப் பாறையை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அந்தப் பகுதி மக்கள் அதைத் தடுத்து நிறுத்திவிட்டனர். அன்று முதல் பெயிண்ட் அழியும்போதெல்லாம் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் யார் யாரோ புதிதாகப் பாறையில் எழுதி வைத்துவிடுகிறார்கள்.

இந்த அரும் பணியைச் செய்பவர்கள் யாராக இருக்கும்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அடடா-பக்கத்து-வீட்டு-முதியவரை-எவ்வளவு-அருமையாகப்-பார்த்துக்கொண்டிருக்கிறார்-கிறிஸ்/article9549735.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நகரும் வீடு!

 
house_3135094f.jpg
 
 
 

பிரையன் சலிவனும் ஸ்டார்லாவும் 3 குழந்தைகளுடன் வாஷிங்டனில் வசித்து வருகின்றனர். மாதம் ஒரு லட்சம் ரூபாய் வீட்டு வாடகைக் கொடுத்துக் கொண் டிருந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் பணம் விரயமாகிறது என்ற எண்ணம் வந்து விட்டது. சொந்தமாக வீடு வாங்கும் நிலையில் இல்லாததால், குறைந்த செலவில் ஒரு வீட்டை உருவாக்குவது எப்படி என்று யூடியூப் வீடியோக்களைப் பார்த்தனர். இறுதியில் ஒரு பழைய பேருந்தை 2 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார்கள். 20 லட்சம் ரூபாய் செலவு செய்து, அனைத்து வசதிகளும் கொண்ட நவீன வீடாக மாற்றிவிட்டார்கள். “நாங்கள் முதலில் குடியிருந்த வீட்டுக்கும் பிரையன் அலுவலகத்துக்கும் ஒரு மணி நேரம் பயணம் செய்யணும். வாடகை கொடுப்பதற்காகவே ஓவர் டைம் வேலை செய்வார். சில நேரம் காரிலேயே 3 மணி நேரம் தூங்கிவிட்டு, மீண்டும் வேலையைத் தொடர்வார். அவரைப் பார்ப்பதற்கே நாங்கள் பல நாள் காத்திருக்கணும். இந்த வாழ்க்கையை எப்படியாவது மாற்ற முடிவு செய்தோம். பேருந்து வீட்டுக்கு வந்துவிட்டோம். வீட்டிலிருந்ததைவிட மிகவும் சந்தோஷமாகவும் வசதியாகவும் வாழ்க்கை நடத்துகிறோம். வெளியிலிருந்து பார்த்தால்தான் இது பேருந்து. உள்ளே வந்தால் அழகான வீடு. சமையலறை, படுக்கையறை, வரவேற்பு அறை, குளியலறை அனைத்தும் இருக்கின்றன. இடத்தை வீணாக்காமல் பயன்படுத்தியிருக்கிறோம். பிரையனின் அலுவலகத்துக்கு பக்கத்திலேயே பேருந்தைக் கொண்டுவந்துவிட்டோம். அதனால் எங்களோடு அதிக நேரம் செலவிட முடிகிறது. போகுமிடமெல்லாம் வீட்டையும் நாங்கள் எடுத்துச் செல்லலாம். வாடகை கொடுத்த பணத்தில் மூன்றில் இரண்டு பங்கு மிச்சமானதால் கடன்களை அடைத்துவிட்டோம். சூரிய ஒளி மூலம் மின்சாரம் என்பதால், இரவில் மின்சாரம் கிடையாது. அதனால் குளிர்க் காலங்களில் தண்ணீர் உறைந்துவிடும், அறைக்குள் வெப்பமும் கிடைக்காது போன்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. அதற்காக மீண்டும் வீட்டை நோக்கிச் செல்ல மாட்டோம். இதில் மின்வசதியைக் கொண்டு வர முயற்சி செய்வோம்” என்கிறார் ஸ்டார்லா.

நகரும் வீடு!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் பால் க்ராஸ்ஸன் மோட்டார் சைக்கிள் பயணி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் கிளம்பிவிடுவார். சாலையில் ஒரு நாயைப் பார்த்தார். உடனே அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, பலரும் நாயை வளர்க்க விருப்பமில்லாமல் தெருவில் விட்டுவிட்ட தகவல் கிடைத்தது. வளர்க்க ஆரம்பித்தார். “மில்லி மிகவும் சமர்த்தானவள். சொல்வதை எளிதில் புரிந்துகொள்வாள். அவளுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய முடிவெடுத்தேன். மில்லிக்குத் தோலாடை, தலைக் கவசம் அணிந்து அழைத்துச் சென்றேன். பயணத்தை அவ்வளவு விரும்பினாள் மில்லி. சாலையில் செல்பவர்கள் அவளிடம் ஹலோ சொல்லும்போது மட்டும் அப்படி, இப்படித் திரும்பிப் பார்ப்பாள். மற்றபடி சாலையை நேராகப் பார்த்துக்கொண்டே வருவாள். வண்டி நிற்கும் இடங்களில் சாப்பிடுவாள். கழிவறைக்குச் செல்வாள். என்னைப் போலவே மில்லிக்கும் பயணம் பிடித்ததிலும் துணையுடன் செல்வதிலும் எனக்கு மகிழ்ச்சி. நான் சும்மா இருந்தாலும்கூட இப்போதெல்லாம் மில்லி விடுவதில்லை, மோட்டார் சைக்கிளைக் காட்டி, பயணம் கிளம்ப வேண்டுமென்கிறாள். நாங்கள் இருவர் மட்டும் அடிக்கடி பயணம் செல்வதில் என் மனைவிக்குதான் பொறாமை” என்கிறார் பால் க்ராஸ்ஸன்.

வீட்டுக்கு வெளியேதான் உலகம் இருக்கு என்று மில்லிக்கும் தெரிந்திருக்கு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நகரும்-வீடு/article9550413.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: நத்தைக்கு மாற்று ஓடு அளித்த மருத்துவருக்கு நன்றி!

 

 
title_3135939f.jpg
 
 
 

இஸ்ரேலின் ஹாக்ளினிகா கால்நடை மருத்துவமனையில் ஒரு பெண், நத்தையைக் காப்பாற்றும்படி கேட்டார். “எங்கள் மருத்துவமனையில் நத்தைக்கு மருத்துவம் செய்தது இதுதான் முதல் முறை. ஒரு பெண் தன் வீட்டுத் தோட்டத்தில் தெரியாமல் நத்தையை மிதித்துவிட்டார். பதறிப் போய் நத்தையை எடுத்துப் பார்த்திருக்கிறார். நத்தையின் உடலுக்கு எந்தவிதச் சேதாரமும் இல்லை. ஆனால் ஓடு உடைந்துவிட்டது. எங்களிடம் கொண்டுவந்தார். நாங்கள் அறுவை சிகிச்சை மூலம் நத்தையின் ஓட்டை நீக்கி, புதிய ஓட்டைப் பொருத்தி விட்டோம். ஆனாலும் முழுமையாகக் குணமடைய ஒரு மாதம் ஆகலாம். சுவையான இலைகள், காய்களை உணவாகத் தருகிறோம். வசதியான படுக்கை அமைத்திருக்கிறோம். சாப்பிடுவதும் ஓய்வெடுப் பதுமாக இருக்கிறது நத்தை. சவாலாக இருந்தாலும் இந்தப் பணி எங்களுக்கு நிறைவைத் தந்திருக்கிறது” என்கிறார் மருத்துவர்.

நத்தைக்கு மாற்று ஓடு அளித்த மருத்துவருக்கு நன்றி!

உலகம் முழுவதும் ஊஞ்சல் விளையாட்டுகள் இருந்தாலும் எஸ்டோனியா நாட்டைப் போல யாருமே ஊஞ்சல்களைப் பயன்படுத்துவதில்லை. இங்கே 360 டிகிரிகளுக்கு ஊஞ்சலில் சுற்றிவருகிறார்கள். எஸ்டோனிய மக்கள் ஊஞ்சல் விளையாட்டின் மீது அபரிமிதமான ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை சிறியதும் பெரியதுமாக ஊஞ்சல் விளையாட்டுகள் சர்வ சாதாரணமாக நடத்தப்பட்டு வருகின்றன. 1993-ம் ஆண்டு அடோ கோஸ்க் என்பவர் ஒரு ஜோடி ஊஞ்சல்களை உருவாக்கினார். அதுவரை இருந்த ஊஞ்சல்களில் இவை இரண்டும் மிகவும் உயரமானவை. இவற்றில் 360 டிகிரிகளுக்குச் சென்று வரமுடியும். இதை கைகிங் என்று அழைத்தனர். பார்ப்பதற்கு மிக எளிதான விளையாட்டாகத் தெரிந்தாலும் எளிதானதல்ல. கால்களை ஊஞ்சல் பலகையில் கட்டிக்கொண்டுதான் ஆடுகிறார்கள். மேலே செல்லச் செல்ல கம்பிகளைப் பற்றியிருக்கும் கைகளும் தோள்களும் வலியெடுக்க ஆரம்பித்துவிடும். ஊஞ்சல் செல்லும் போக்கை அறிந்து, உடலை வளைத்து, பிடியை விடாமல் நின்றால்தான் உச்சியில் தலைகீழாக நின்று, மீண்டும் கீழே வர முடியும். இந்த விளையாட்டுக்கு உடல் உறுதி, தைரியம் அதிகம் வேண்டும். மிக ஆபத்தான விளையாட்டும்கூட. அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தால், உயிர் பிழைப்பதே கடினம். சிறுவயதிலிருந்தே பயிற்சி செய்யும் சாகசக்காரர்களால் மட்டுமே கைகிங்கை விளையாட முடியும். 1997-ம் ஆண்டு அடோ கோஸ்க் தான் உருவாக்கிய கைக்கிங்கில் டெலஸ்கோப்பை அறிமுகம் செய்து, ஆபத்தையும் சற்றுக் குறைத்தார். இன்று அதைவிட உயரமான கைகிங் ஊஞ்சல்கள் வந்துவிட்டன. பல்வேறு வகையான போட்டிகளும் நடத்தப்பட்டுவருகின்றன. 360 டிகிரிகளுக்குச் சென்று திரும்புபவர்களே போட்டியில் வெற்றி பெற முடியும். பயிற்சி பெற்ற வீரர்களால்தான் எப்படி ஆடினால் உச்சத்தைத் தொட முடியும் என்பதைக் கணிக்க முடியும். தொழில்முறை விளையாட்டு வீரரான ரைலி லான்சலு, “நான் முதலில் 4 மீட்டர் உயரத்துக்குப் பயிற்சி செய்தேன். பிறகு 4.20 மீட்டர், 4.50 மீட்டர் என்று அதிகரித்தேன். ஆனாலும் போட்டியில் 4.20 மீட்டர் வரையே என்னால் செல்ல முடிகிறது” என்கிறார். எஸ்டோனியாவில் தேசிய அளவில் கைகிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மிக ஆபத்தான சாகச விளையாட்டு!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-நத்தைக்கு-மாற்று-ஓடு-அளித்த-மருத்துவருக்கு-நன்றி/article9553284.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: உலகின் உன்னத மனிதர்களில் ஒருவர் ஜாவோ!

 

 
china_3136310f.jpg
 
 
 

சீனாவின் ஷென்யாங் பகுதியில் துப்புரவுத் தொழிலாளராக வேலை செய்துவருகிறார் 56 வயது ஜாவோ யாங்ஜியு. கடந்த 30 ஆண்டுகளாகத் தன்னுடைய வருமானத்தில் பெரும் பகுதியை ஏழைக் குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்து வருகிறார். அதிகாலை 4.30 மணிக்கு வேலைக்குச் செல்பவர், இரவு 9 மணிக்குத்தான் வீடு திரும்புகிறார். மாதம் 24 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். இந்த வருமானத்தில் சீனாவில் வசதியாக வாழ முடியும். ஆனால் தன்னுடைய தேவைகளைக் குறைத்துக்கொண்டு, 37 ஏழைக் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாகக் கல்வியளித்து வந்திருக்கிறார். இதற்காக ரூ.16.5 லட்சம் செலவு செய்திருக்கிறார். சமீபத்தில் தனக்கு இருந்த ஒரே ஒரு வீட்டையும் குழந்தைகளின் கல்விக்காக விற்றுவிட்டு, சிறிய வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். “1976-ம் ஆண்டு அப்பா இறந்து போனார். ஒவ்வொரு வேளையும் எங்களுக்கு உணவளிக்க அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் பல நேரங்களில் என் அம்மாவுக்கு உதவி செய்து வந்தனர். அதனால்தான் நாங்கள் ஓரளவு பசியாறி, வாழ்க்கையை ஓட்டமுடிந்தது. நான் சம்பாதிக்கும்போது கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யவேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன். சமூகத்திலிருந்து நாங்கள் பெற்ற உதவியை இரண்டு மடங்காகத் திருப்பித் தருவதுதானே நியாயம்? அன்று எங்களுக்கு யாரும் உதவவில்லை என்றால் இந்நேரம் எப்படி இருந்திருப்போமோ தெரியாது. வீட்டைத் தவிர வேறு எந்த விலைமதிப்புமிக்கப் பொருளும் என்னிடம் இல்லை. இப்போது என் வாழ்நாள் வரை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என்பதுதான் லட்சியம். என்னுடைய உழைப்பால் இத்தனைக் குழந்தைகளின் வாழ்க்கை மேன்மையடைந்திருக்கிறது என்ற திருப்தியைத் தவிர உலகில் வேறு என்ன சந்தோஷம் இருந்துவிடமுடியும்?” என்று கேட்கிறார் ஜாவோ.

உலகின் உன்னத மனிதர்களில் ஒருவர் ஜாவோ!

இங்கிலாந்தைச் சேர்ந்த லேன் கோலோக்லி 40 வயதில் தன்னையே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்! நாற்பது வயது வரை தான் நினைத்தபடி மிகச் சிறந்த மனிதர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதற்காகத் தேடிக்கொண்டேயிருந்தார். அப்படிப்பட்ட ஒருவர் கிடைக்காமல் போகவே, தன்னையே திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டார். “இந்தக் காலகட்டத்தில் ஒரு குடும்ப அமைப்புக்குள் என்னால் பொருந்திப் போக முடியாது. அதனால் இனிமேல் இணை தேடுவதை விட்டுவிட்டேன். ஆனால் திருமண ஆடை, திருமண விழா போன்றவற்றில் எனக்கு ஆர்வம் அதிகம். அதற்காக என்னை நானே திருமணம் செய்யும் முடிவை எடுத்தேன். என்னைப் பற்றித் தெரியும் என்பதால் வீட்டிலுள்ளவர்களும் சந்தோஷமாகச் சம்மதித்தனர். பிறந்த நாளையும் திருமண விழாவையும் ஒன்றாக நடத்த இருக்கிறோம். அன்பும் ஆசிர்வாதமும் போதும் என்பதால் பரிசுப் பொருட்களைத் தவிர்க்கும்படி சொல்லியிருக்கிறேன். ஏப்ரலில் திருமணம் முடிந்தவுடன் ரோமுக்குத் தனியாக தேனிலவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளேன்” என்கிறார் லேன் கோலாக்லி.

இருவர் இணைவதுதானே திருமணம்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-உலகின்-உன்னத-மனிதர்களில்-ஒருவர்-ஜாவோ/article9554641.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: அம்மம்மா... எல்லாம் ஆன்மா படுத்தும் பாடு!

 

 
gut_3136763f.jpg
 
 
 

சீனாவின் சோங்க்விங் நகரில் கல்லறை தியானம் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், மெரீனா கல்லறை தியானத்தைவிட இது ஒரு படி கூடுதல் திக் திக்... கல்லறைக்கு உள்ளேயே போய் இந்த தியானத்தை நடத்த வேண்டும்! பிரச்சினையின்றி விவாகரத்து கிடைக்கவும் விவாகரத்துக்குப் பிறகு வாழ்க்கை வெற்றிகரமாக அமையவும் இது உதவுகிறது. “எனக்கு 19 வயதில் திருமணம். 21 வயதில் குழந்தை. 30 வயதில் விவாகரத்து கிடைத்துவிட்டது. அதற்குப் பிறகு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்போது தான் கல்லறை தியானம் பற்றி அறிந்தேன். தியானம் செய்து திரும்பினேன். என் கவலைகள் மாயமாகின. நம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்தி வருகிறேன். என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள் பிரச்சினையிலிருந்து மீண்டு வருவதற்காகவே இந்த தியானத்தை ஆரம்பித்திருக்கிறேன். இதில் கலந்துகொள்ளும் பெண்கள், குழிக்குள் படுத்தபடி, கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். அவர்களுக்கு மரண அனுபவம் கிடைக்கும். கடந்த காலம் மறந்து போகும். புதிய வாழ்க்கை மீது நம்பிக்கை துளிர்க்கும். எனவே தோல்வியைக் கண்டு பயம் வேண்டாம். விவாகரத்துக்குப் பிறகும் அழகான வாழ்க்கை இருக்கிறது” என்கிறார் லியு டைஜி.

பிலிப்பைன்ஸ் கடற்கரையில் 3 துடுப்பு மீன்கள் ஒதுங்கின. கடலின் தூதராகக் கருதப்படும் இந்த மீன்கள் கரைக்கு வந்தால், நிலநடுக்கம் வரும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். ஆழ்கடலில் வசிக்கும் துடுப்பு மீன்கள் பொதுவாக 17 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால் பிலிப்பைன்ஸில் ஒதுங்கிய மீன்கள் 15 அடி நீளம் மட்டுமே இருந்தன. டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் தான் ஆழ்கடல் மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதை நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்கிறார்கள் சில ஆய்வாளர் கள். இன்னும் சில ஆய்வாளர்கள், ஆழ்கடலில் வசிக்கும் துடுப்பு மீன்கள் உடல்நிலை சரியில்லாதபோது, கரைக்கு வருவது இயல்புதான் என்கிறார்கள். ஜப்பானைச் சேர்ந்த கியோஷி வாடட்சுமி என்ற நிலநடுக்க ஆராய்ச்சியாளர், “கடல் விடுக்கும் செய்தியாகவே இந்த மீன்களைக் கருத வேண்டும். 2011-ம் ஆண்டு சுனாமி வருவதற்கு முன்பு துடுப்பு மீன்கள் இப்படி கரை ஒதுங்கின” என்கிறார்.

மீன்கள் இயல்பாகக் கரை ஒதுங்கியதாகவே இருக்கட்டும்!

பிரிட்டனில் வசித்த டாக்மாரா பிரிஸிபைஸ் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் குடியேறியது. பள்ளியில் சக மாணவிகளால் டாக்மாரா, அடிக்கடி இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளானார். கடந்த மே மாதம் பள்ளிக் கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. சக தோழிகளால் டாக்மாரா இனவெறித் தாக்குதலைச் சந்தித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளியின் இணையதளத்துக்கு ஒரு புகார் அளித்துவிட்டே, டாக்மாரா இந்த மோசமான முடிவை எடுத்திருக்கிறார். “எங்கள் குழந்தையின் இறப்புக்குக் காரணமான வர்களைக் குற்றவாளிகளாக மாற்றுவதில் விருப்பம் இல்லை. இன்றும் இனம் குறித்த பாகுபாடு நிலவுவது மோசமானது. அதை அவர்கள் உணர்ந்தால் போதும்” என்கின்றனர் டாக்மாராவின் குடும்பத்தினர்.

இனம், சாதி பேதங்கள் எப்போது மறையும்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-அம்மம்மா-எல்லாம்-ஆன்மா-படுத்தும்-பாடு/article9556840.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பழமையான பர்கர்!

 
burger_2318024f.jpg
 
 
 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எட்வர்ட் நீட்ஸ், கேஸி டீன் இருவரும் உலகிலேயே மிகப் பழைமையான பர்கர் தங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு பார்டிக்காக பர்கர் வாங்கியிருக்கிறார்கள். அதில் ஒரு பர்கர் மீதமாகிவிட்டது.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தவர்களுக்கு ஆறு மாதம் வரை நினைவே வரவில்லை. அதற்குப் பிறகும் ஏனோ அதை எடுக்கவே இல்லை. இருபதாண்டுகளுக்குப் பிறகு பர்கரைப் பிரித்துப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.

ஏனென்றால் இப்பொழுதும் சாப்பிடக்கூடிய நிலையிலேயே நன்றாக இருந்தது பர்கர். உலகின் பழமையான பர்கரைப் படம் பிடிப்பதற்காக தொலைக் காட்சிகளில் இருந்து வந்தனர். செங்கல் போல் உறைந்து இருந்த பர்கரை, சுவைத்துப் பார்க்க யாருக்கும் தைரியம் வரவில்லை. ‘சீனியர் பர்கர்’ என்ற பட்டம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது!

ம்ம்… ஒரு மறதி சாதனையாகிவிட்டது!

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டென் ஆலிஸ் ஃபேஷன் டிசைனர். ஃப்ளோரிடாவிலும் நியூ யார்க்கிலும் தன்னுடைய நிறுவனத்தை நடத்தி வருகிறார். சுழலியலில் சின்ன வயதிலிருந்தே அக்கறை கொண்டவர் ஆலிஸ். அதனால் குப்பையில் எறியும் பிளாஸ்டிக் காகிதங்கள், கூல்ட்ரிங் பாட்டில்கள் போன்றவற்றை வைத்து ஆடைகளை உருவாக்கி வருகிறார்.

சுற்றுச் சூழலைப் பற்றிக் கவலைப்படாமல் ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு எவ்வளவு பொருட்களைக் குப்பையில் எறிகிறோம். அவற்றை எல்லாம் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் நல்லதுதானே என்ற எண்ணத்தில்தான் இந்த ஆடைகளை உருவாக்குவதாகச் சொல்கிறார் ஆலிஸ்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆடைகள் பிரபலமடைந்து வருகின்றன. ஃபேஷன் ஷோக்களில் கூட அணிந்து செல்கிறார்கள் என்பதில் ஆலிஸுக்கு மகிழ்ச்சி.

நல்ல முயற்சிதான்… ஆனால் இதை அணிந்தால் இயல்பாக இருக்க முடியுமா?

உக்ரைனைச் சேர்ந்த சாஷாவும் சீனாவைச் சேர்ந்த நெட்டி ஸென்ஸும் கடந்த ஓராண்டு காலமாக நல்ல நண்பர்களாகப் பழகி வந்தனர். உக்ரைன் சென்று சாஷா குடும்பத்துடன் பழகியிருக்கிறார் நெட்டிஸென்ஸ். அதேபோல சீனாவில் நெட்டிஸென்ஸ் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார் சாஷா.

ஆனாலும் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி சாஷாவிடம் கேட்க ஏனோ நெட்டிஸென்ஸுக்குத் தயக்கம் இருந்தது. நன்றாக யோசித்தவர், பாண்டா போல் உடை அணிந்துகொண்டார். சாஷாவிடம் சென்று, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படிக் கேட்டார்.

பாண்டா முகமூடியை விலக்கிப் பார்த்த சாஷா மகிழ்ச்சியோடு சம்மதம் சொன்னார். ‘சாஷாவுக்குப் பாண்டா என்றால் மிகவும் விருப்பம். அவருடைய செல்லப் பெயரே பாண்டாதான்! பாண்டா உருவத்தில் வந்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்று நம்பினேன். அதேபோல நடந்துவிட்டது’ என்று சந்தோஷப்படுகிறார் நெட்டிஸென்ஸ்.

வாழ்க மணமக்கள்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பழமையான-பர்கர்/article6919431.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: இதெல்லாம் ரொம்பவே அநியாயம்

 
 
ulaga_masala_3137586f.jpg
 
 
 

உலகிலேயே முதல்முறையாகப் பூனைகளுக்கான 5 நட்சத்திர விடுதி ஒன்று மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த கேட்ஜோனியாவில் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்கும் அறைகள், பெரிய படுக்கைகள், விளையாடும் இடம், மிகச் சிறந்த பராமரிப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. “வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேவிதமான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதை ஆரம்பித்திருக்கிறோம். 35 அறைகள் இருக்கின்றன. சில அறைகளில் உரிமையாளர்களும் தங்கிக் கொள்ளலாம். சில நாட்கள் பூனைகளை விட்டுவிட்டுச் செல்லலாம். பூனைகளுக்கு மசாஜ், குளியல், ஆரோக்கியமான உணவு, விளையாட்டு, சரியான ஓய்வு என்று கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்கிறோம். எங்களிடம் பல கட்டணங்களில் அறைகள் இருக்கின்றன. 3 மணி நேரங்களிலிருந்து 1 வருடம் வரை இங்கே பூனைகளை விடலாம். ஒரு இரவுக்கு 400 ரூபாயிலிருந்து அறைகள் கிடைக்கின்றன. அதிகக் கட்டணம் கொண்ட அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா இருக்கும். பூனையின் உரிமை யாளர்கள் ஸ்மார்ட்போன் மூலம் தங்கள் செல்லப் பூனைகளைக் கவனித்துக்கொள்ளலாம்” என்கிறார் கேட்ஜோனியா மேனேஜர்.

இதெல்லாம் ரொம்பவே அநியாயம்...

இந்தோனேஷியாவில் வசிக்கும் 28 வயது சோஃபியன் லோஹோ டேன்டெல், விற்பனைக் கிடங்கில் வேலை செய்துவந்தார். ஒருநாள் அவர் அலைபேசிக்குத் தெரியாத எண்ணிலிருந்து அழைப்புவந்தது. எதிர்முனையில் பேசிய பெண், தவறுதலாக எண்களைப் போட்டுவிட்டதால் மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. அடிக்கடி பேசிக்கொண்டனர். “ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் நட்பைத் தாண்டி காதல் என்ற நிலையை அடைந்தோம். அதுவரை காதலித்த அனுபவம் இல்லை என்பதால் மிகவும் பரவசமாக இருந்தது. மார்தாவை நேரில் சந்திக்க முடிவுசெய்தேன். 120 கி.மீ. பயணம் செய்து, மார்தாவின் வீட்டை அடைந்தேன். அங்கே 82 வயதில் மார்தா என்னை வரவேற்றார். அதிர்ந்துபோனேன். இதில் மார்தாவின் தவறு ஒன்றுமில்லை. நாங்கள் அதுவரை வயது, வருமானம், குடும்பம் குறித்தெல்லாம் பேசிக்கொண்டதே இல்லை. அவரைப் பார்த்துவிட்டு வந்த பிறகும் அந்தக் காதல் அப்படியே இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். மார்தா வீட்டில் எதிர்ப்பு இல்லை. ஆனால் என் அம்மாவுக்கே 60 வயதுதான் என்பதால், எல்லோரும் அதிர்ந்து போனார்கள். என் மனநிலையை மாற்ற முயற்சிசெய்தார்கள். நான் உறுதியாக நின்றுவிட்டேன். மார்தாவை என் அம்மா நேரில் பார்த்தவுடன் அவரது அன்பில் கரைந்துபோனார். எங்கள் திருமணத்துக்கும் சம்மதித்தார். கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இப்போது நாங்கள் பிரபலமான தம்பதி!” என்கிறார் சோஃபியான். “என் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். என் பிள்ளைகள் ஜெர்மனியிலும் சவுதியிலும் இருக்கிறார்கள். முதுமையில் தனிமை கொடுமையாக இருந்தது. என்னைப் பார்த்துக்கொள்வதற்கு ஒரு நல்ல ஆத்மாவைக் கொடுக்குமாறு கடவுளிடம் வேண்டினேன். ஆனால் சோஃபியன் போன்ற ஒருவரை எனக்குக் கணவராகவே கடவுள் கொடுப்பார் என்று நினைக்கவில்லை” என்கிறார் மார்தா.

காதலுக்கு வயது தடையில்லை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இதெல்லாம்-ரொம்பவே-அநியாயம்/article9559474.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: மனிதர்களின் அதிர்ஷ்டம்; ஆமையின் துரதிர்ஷ்டம்!

 

 
ulagam_3137900f.jpg
 
 
 

பிரான்ஸை சேர்ந்த 45 வயது ஆப்ரஹாம் பாய்ன்ச்வெல், அடிக்கடி ஏதாவது பரிசோதனைகளில் ஈடுபடுவார். தற்போது ஒரு பெரிய பாறையை இரண்டாகப் பிளந்து, மனிதன் உட்காரும் அளவுக்குச் செதுக்கினார். பிப்ரவரி 22 அன்று, ஆப்ரஹாம் பாறைக்குள் சென்று அமர்ந்தவுடன், பாறையின் பிளந்த இரு பகுதிகளும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டன. சிறிய விளக்கு வெளிச்சம் மூலம் பாறைக்குள் உட்கார்ந்திருக்கும் ஆப்ரஹாமை, தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து 8 நாட்கள் உட்கார்ந்த நிலையிலேயே ஆப்ரஹாம் பாறைக்குள் இருக்கத் திட்டமிட்டிருக்கிறார். தேவையான உணவும் தண்ணீரும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. காற்று செல்வதற்கான வழியைத் தவிர அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டிருக்கின்றன. “ஒரு பாறைக்குள் ஒரே நிலையில் இருக்கும்போது மனித உடல் எவ்வாறு வேலை செய்கிறது, மூளை எப்படி இயங்குகிறது என்பதைக் கவனிப்பதற்காகவே இந்தப் பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறேன். உலர் மாமிசமும் சூப்பும் சாப்பிடுவேன். காலியான பாட்டில்களில் சிறுநீரைப் பிடித்து மூடிவிடுவேன். வெளியில் என்னை மருத்துவர்கள் குழு கண்காணித்துக்கொண்டேயிருக்கும். ஏதாவது அசம்பாவிதம் என்றால் உடனே என்னை வெளியே எடுத்துவிடுவார்கள். என்னைப் பொறுத்தவரை பேசாமல் இருப்பது மட்டுமே சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். பார்வையாளர்கள் பாறைக்கு அருகில் வந்து பேசினால் என்னால் கொஞ்சம் இயல்பாக இருக்கமுடியும்” என்றார் ஆப்ரஹாம். மார்ச் முதல் தேதிதான் அவர் பாறையிலிருந்து வெளிவருவார்.

கடினமான பரிசோதனையா இருக்கே… பத்திரமாகத் திரும்பி வந்தால் போதும்.

தாய்லாந்து பூங்காவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட குளத்தில் வசித்துவந்த ஓர் ஆமையின் உடலில் வீக்கமும் ஓட்டில் வெடிப்பும் காணப்பட்டன. மூச்சு விடுவதற்கும் சாப்பிடுவதற்கும் சிரமப்பட்ட ஆமையை, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஸ்கேன் செய்யப்பட்டதில் ஆமையின் வயிற்றில் ஏராளமான நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. தாய்லாந்தில் குளத்தைக் கண்டதும் நாணயங்களைப் போடுவது வழக்கம். பல ஆண்டுகளாகக் குளத்தில் விழுந்த நாணயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கியிருக்கிறது இந்த ஆமை. இரைப்பையின் பெரும்பகுதியை நாணயங்கள் அடைத்தவுடன் ஆமையால் சாப்பிட முடியவில்லை. மூச்சு விட முடியவில்லை. தண்ணீரில் நீந்த முடியவில்லை. அளவுக்கு அதிகமான நாணயங்களின் எடையால் வயிறு பகுதி வீங்க ஆரம்பித்துவிட்டது. கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்களும் மாணவர்களும் சேர்ந்து, ஆமைக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். 3,800 ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் வெளியே எடுக்கப்பட்டிருக்கின்றன. “ஆமைக்கு பேங்க் என்று பெயரிட்டிருக்கிறோம். நாணயங்களை எடுத்ததிலிருந்து ஆமை வேகமாகத் தேறிவருகிறது. முற்றிலும் குணமடைய சில வாரங்கள் ஆகும். அதிர்ஷ்டம் என்பதற்காக மக்கள் குளங்களில் நாணயங்கள் வீசுவதை நிறுத்தவேண்டும். அவர்களின் செயல்களால் அப்பாவி உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நூறு வருடங்களுக்கு மேல் வாழக்கூடிய ஆமையை 25 வருடங்களிலேயே உயிரிழக்க வைப்பது எவ்விதத்தில் நியாயம்?” என்கிறார் கால்நடை மருத்துவம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர் நன்டாரிகா.

மனிதர்களின் அதிர்ஷ்டம்; ஆமையின் துரதிர்ஷ்டம்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-மனிதர்களின்-அதிர்ஷ்டம்-ஆமையின்-துரதிர்ஷ்டம்/article9560152.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பறவைகளுக்கான மருத்துவமனை

 
masala_2313348f.jpg
 
 
 

அபு தாபி அமீரகத்தில் இயங்கி வருகிறது அபு தாபி ஃபால்கன் மருத்துவமனை. கழுகுகள், வல்லூறுகள் போன்றவற்றுக்கான பிரத்யேக மருத்துவமனை இது. இனப்பெருக்கம் மையம், எக்ஸ்-ரே போன்றவற்றோடு பறவைகள் தொடர்பான அத்தனை விஷயங்களும் கிடைக்கும் இடமாக இது இருக்கிறது. ஆண்டுக்கு 9 ஆயிரம் பறவைகளுக்கு இந்த மருத்துவமனையில் மருத்துவம் அளிக்கப்படுகிறது. ஓர் அறையில் பெஞ்ச் மீது இரண்டு இரண்டு பறவைகள் வரிசையாக அமர்ந்தபடி மருத்துவருக்காகக் காத்திருக்கின்றன. பறவைகளின் எடை பார்க்கப்பட்டு, பரிசோதனை செய்யப்படுகின்றன.

அனஸ்தீசியா கொடுத்து, வைத்தியமும் பார்க்கப்படுகின்றன. 1999-ம் ஆண்டில் இருந்து இயங்கும் இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. இதுவரை 67 ஆயிரம் பறவைகளுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. ஓய்வின்றி சுற்றித் திரியும் பறவைகளுக்கு இங்கே குளிர்சாதன வசதியோடு ஓய்வளிக்கப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய பறவைகள் மருத்துவமனை இதுதான். மிகப் பெரிய செல்வந்தர்கள் வல்லூறுகளையும் கழுகுகளையும் அபு தாபியில் வளர்த்து வருகிறார்கள். அவர்கள் காலம் தவறாமல் பறவைகளை அழைத்து வந்து பரிசோதித்துச் செல்கிறார்கள். இவை பல லட்சம் ரூபாய்க்கு விலை போகக்கூடியவை.

பணக்காரர்களிடம் வளர்கிற பறவைகளுக்கு மட்டும்தான் இந்த ஸ்பெஷல் கவனிப்பு...

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து போர்ட்லாண்டுக்குக் கிளம்ப இருந்தது அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம். பெண் பயணி ஒருவர் விமானத்துக்குள் நுழையும்போது கதவில் கை வைத்தார். கடுமையான வலியால் துடித்தார். விமான ஊழியர்கள் வந்து பார்த்தபோது அங்கே ஒரு தேள் இருந்தது. தேளைக் கொன்றுவிட்டு, கடிபட்ட பெண்மணியை மருத்துவரிடம் அனுப்பி வைத்தனர். சக பயணிகள் அதிர்ந்து போனார்கள். இன்னும் என்னவெல்லாம் இங்கே இருக்குமோ என்று விமான ஊழியர்களிடம் சண்டையிட்டனர். ஆய்வுக்குழுவினர் வந்து, விமானம் முழுவதும் சோதனையிட்டனர். வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொன்ன பிறகு, ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் கிளம்பியது. தேள் கொட்டிய பெண் திரும்பவே இல்லை.

ஐயோ… திகிலான பயணம்தான்…

ஹாங்காங்கில் 26-வது மாடியில் வசித்து வந்தது ஜொம்மி என்ற 18 வயதுடைய பூனை. வெளிக்காற்று உள்ளே வருவதற்காகச் சிறிய ஜன்னல் ஒன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஜொம்மி அந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, தவறி கீழே விழுந்தது. தரையில் வைக்கப்பட்டிருந்த கூடாரத் துணியைக் கிழித்துக்கொண்டு, கீழே குதித்தது. அடுத்த நொடி, ஒன்றுமே நடக்காதது போல கம்பீரமாக எழுந்து நடந்து சென்றுவிட்டது ஜொம்மி! இந்தக் காட்சியைப் பார்த்த மனிதர்கள்தான் வாயடைத்து நின்றுவிட்டனர்.

பாராசூட் போல பத்திரமா தரையிறங்கியிருக்கு ஜொம்மி!

சீனாவில் இளம் ஆண்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி அவர்களது குடும்பத்தினரால் வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் இளைஞர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். 32 வயது லியு, 24 வயது டான் என்ற பெண்ணை அவரது தொழிற்சாலையில் இருந்து வெளிவந்தபோது கடத்தினார். டான் மிகவும் போராடினார்.

வாயைக் கைகளால் பொத்தி அருகில் இருந்த மறைவிடத்துக்கு அழைத்துச் சென்ற லியு, குடும்பத்தினர் முன்பாகத் தன் மனைவியாக நடிக்கும்படிக் கேட்டுக்கொண்டார். டான் எவ்வளவோ மறுத்தார். தனக்கு வேறு வழி தெரியவில்லை என்ற லியு, டானின் போனையும் பறித்துக்கொண்டார். இதற்குள் இரண்டரை மணி நேரங்கள் கடந்துவிட்டன. டானின் போன் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது காதலர், போலீஸுக்குப் புகார் அளித்தார். லியுவைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீட்ல ஆயிரம் சொல்வாங்க… அதுக்காக இப்படியா பண்றது லியு?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பறவைகளுக்கான-மருத்துவமனை/article6902611.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிரிக்கும் நாய்

 
masala_3138508h.jpg
 

இங்கிலாந்தில் வசிக்கும் 13 வயது பஃபி, உலகிலேயே சிரிக்கக்கூடிய நாயாக இருக்கிறது. பஃபியின் உரிமையாளர் ஜில் காக்ஸ், “நான்கு ஆண்டு களுக்கு முன்புதான் பஃபி சிரிப் பதைக் கவனிக்க ஆரம்பித்தோம். ஒரு நாளைக்குக் குறைந்தது 12 தடவையாவது சிரித்துவிடுவாள். தூங்கும்போது, தூங்கி எழும்போது, தோட்டத்தில் இருக்கும்போது, உணவுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கும்போது கண்டிப்பாகச் சிரிப்பாள். பஃபி சிரிப்பதை இதுவரை ஆயிரக்கணக்கில் புகைப்படங்களாக எடுத்து வைத்திருக்கிறேன். இணையதளத்தில் பஃபியின் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சிலர் நாங்கள் போட்டோஷாப் செய்திருக்கிறோம் என்றும் பஃபியின் வாயில் ஏதோ ஒரு பொருளைத் திணித்து வைத்திருக்கிறோம் என்றும் நினைக்கிறார்கள். பஃபி உண்மையிலேயே சிரிக்கிறாள். அது எப்படி என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அவள் சிரிப்பதை நாங்களே சந்தேகத்துடன்தான் பார்த்தோம். ஆனால் தினமும் இயல்பாகச் சிரிக்க ஆரம்பித்த பிறகு, உலகிலேயே சிரிக்கக்கூடிய ஒரு நாய் எங்களிடம் இருக்கிறது என்று பெருமையாக இருக்கிறது. நிறையப் பேர் சிரிக்கும் பஃபியின் புகைப்படங்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்தப் படத்தைப் பார்க்கும்போது தங்களின் கவலைகள் மறைந்து, புத்துணர்வு கிடைக்கிறது என்கிறார்கள். என் மகன் ஆடம் இதய நோயால் வீட்டில் முடங்கிக் கிடக்கிறான். அவன் ஓரளவு சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம் பஃபிதான். அவன் சற்று சோர்வாக இருந்தாலும் ஏதோ ஆபத்து என்று கண்டுபிடித்து எங்களிடம் சொல்லிவிடுவாள் பஃபி. சமீபத்தில் பஃபி மூட்டு வாதத்தால் பாதிக்கப்பட்டாள். அதனால் சோஃபா, மெத்தை படுக்கைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். எவ்வளவு குறும்பு செய்தாலும் ஒரு புன்னகையால் நம்மை வசீகரித்துவிடுகிறாள் பஃபி!” என்கிறார்.

சிரிக்கும் நாய்!

ஜப்பானின் காசுகாய் நகரில் வசிக்கும் 54 வயது மாசாரு மியுராவுக்கு வேலைக்குச் செல்வதே பிடிக்காது. அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி விடுமுறை எடுத்து, வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பார். அதிக நாட்கள் விடுமுறை எடுத்ததாலும் ஓரளவுக்கு மேல் காரணங்களைச் சொல்ல முடியாததாலும் ஒருநாள் வேலைக்குச் செல்லும் வழியில், ரயில் நிலையத்தில் தன்னைத் தானே சிறு கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார். யாரோ ஒருவர் தன்னைக் குத்திவிட்டதாகக் காவல்துறையிடம் புகார் அளித்தார். சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்தார். சில நாட்களுக்குப் பிறகு பிரச்சினை உருவானது. காவல்துறையிலிருந்து விசாரணைக்கு வந்தனர். கத்தியால் குத்திய நபர் குறித்து கேள்விகள் கேட்டனர். மாசாரு மியுராவுக்குச் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவர் ஜோடித்த சம்பவம் காவல்துறைக்குச் சந்தேகத்தை உருவாக்கியது. விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது, ரயில் நிலையம் அருகே ஒரு கத்தியைக் கண்டுபிடித்தனர். ரயில் நிலையத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் மாசாரு மியுரா ஒரு கத்தியுடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி, மறைவான இடத்துக்குச் சென்றது பதிவாகியிருந்தது. காவலர்கள் மாசாரு மியுரா தன்னைத்தானே குத்திக்கொண்ட குற்றத்துக்காக அவரைக் கைது செய்தனர். “நான் வேலைக்குப் போகாமல் சில நாட்கள் வீட்டில் இருப்பதற்காகத்தான் கத்தியால் குத்திக்கொண்டேன். அது இவ்வளவு பெரிய பிரச்சினையில் மாட்டிவிட்டுவிட்டதே?” என்கிறார் மாசாரு மியுரா.

அடப்பாவி, விளையாட்டு வினையாகிவிட்டதே!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிரிக்கும்-நாய்/article9563273.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

தாய்லாந்தின் பரிரம் நகரில் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு நாய் மீது கார் மோதியதில், அருகில் இருந்த குழிக்குள் விழுந்தது. சற்றுத் தொலைவில் இருந்த இந்த நாயின் சகோதரன் வேகமாக ஓடிவந்தது. அடிபட்ட நாயைப் பரிசோதித்தது. உயிர் இல்லை என்பதை அறிந்தவுடன் சற்றுநேரம் துக்கத்தில் பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு மண்ணைத் தன் வாயால் தள்ளி, உடலைப் புதைத்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

காண்பவர்களைக் கலங்கடிக்கும் வீடியோ…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-100-மொழிகளை-அறிந்த-அசாதாரண-மனிதர்/article9564582.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

 

8 hours ago, நவீனன் said:

தாய்லாந்தின் பரிரம் நகரில் சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு நாய் மீது கார் மோதியதில், அருகில் இருந்த குழிக்குள் விழுந்தது. சற்றுத் தொலைவில் இருந்த இந்த நாயின் சகோதரன் வேகமாக ஓடிவந்தது. அடிபட்ட நாயைப் பரிசோதித்தது. உயிர் இல்லை என்பதை அறிந்தவுடன் சற்றுநேரம் துக்கத்தில் பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு மண்ணைத் தன் வாயால் தள்ளி, உடலைப் புதைத்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

காண்பவர்களைக் கலங்கடிக்கும் வீடியோ…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-100-மொழிகளை-அறிந்த-அசாதாரண-மனிதர்/article9564582.ece?homepage=true&relartwiz=true

 

Link to comment
Share on other sites

உலக மசாலா: துயரத்திலிருந்து விடுதலை

 

 
food_3139269f.jpg
 
 

இத்தாலியைச் சேர்ந்த பிரபல டிஜே ஃபேபியானோ அண்டோனியானி, கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்த ஸ்மார்ட்போனை எடுப்பதற்காகக் கீழே குனிந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டார். அவரது வாழ்க்கை முடங்கியது. வேறு வழியின்றி, தன்னைக் கருணைக் கொலை செய்துவிடுமாறு அரசிடம் விண்ணப்பித்தார். இதற்கு தேவாலயம் கடுமையாக எதிர்த்தது. தனக்காக சட்டத்தை மாற்றியமைக்குமாறு கடந்த மாதம் பிரதமருக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்தார் அண்டோனியானி. பலன் இல்லை. மார்கோ காப்படோ என்ற செயற்பாட்டாளர், அண்டோனியானிக்கு உதவ முன்வந்தார். ஸ்விட்சர்லாந்திலுள்ள தற்கொலை கிளினிக்கில் எளிதாக மரணத்தைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அங்கே அண்டோனியானிக்கு மருத்துவம், உளவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உடல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால் தற்கொலைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குடும்பத்தினரும் காதலியும் மிகுந்த துயரத்துடன் விடைகொடுக்க, நிரந்தரமாக ஓய்வெடுத்துக்கொண்டார் அண்டோனியானி. “2015-ம் ஆண்டில் மட்டும் 225 இத்தாலியர்கள் இங்கே விண்ணப்பித்தார்கள். அதில் 117 பேர் ஸ்விட்சர்லாந்து வந்தனர். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு இத்தாலிக்குச் சென்றவர்கள் அதிகம். வெகுசிலரே வேறு வழியின்றி உறுதியாக மரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்கிறார் தற்கொலை கிளினிக்கின் செயலாளர் ஃப்லோமேனா காலோ.

துயரத்திலிருந்து விடுதலை…

சிலி நாட்டின் புர்டோ மன்ட் நகரில் உள்ள மரியா உர்ரா வீட்டில் அமானுட விஷயங்கள் இருப்பதாக காவல் துறையே உறுதி செய்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் வந்ததையடுத்து, போலீஸ் படை கிளம்பியது. வீட்டிலுள்ள ஜன்னல் கதவுகள் உடைந்திருந்தன. மெத்தை பாதி எரிந்த நிலையில் இருந்தது. பொருட்கள் கீழே விழுந்திருந்தன. வீட்டில் வசித்தவர்கள் வெளியே பயத்துடன் நின்று கொண்டிருந்தனர். காவல் துறை அதிகாரி முதலில் இதை நம்பவில்லை. அவர் வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் எங்கிருந்தோ பொருட்கள் பறந்து வந்தன. தைரியமாக ஒவ்வோர் அறைக்கும் சென்று சோதனையிட்டார். அங்கே யாரும் இல்லை. வீட்டிலிருந்து வெளியே வர முயன்றபோது, வாசல் கதவு சாத்திக்கொண்டது. ஜன்னல் வழியாக வெளியே வந்த கோன்ஜாலேஜ் என்ற அதிகாரி கூறும்போது, “ஏதோ அமானுடம் இங்கே இருக்கிறது. பேய் திரைப்படங்களில்தான் இதுபோன்ற காட்சிகளைக் கண்டிருக்கிறேன். குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்ததால் தப்பிவிட்டேன். நம்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார். மரியா உர்ரா கூறும்போது, “20 நாட்களுக்கு முன்பே எங்கள் வீட்டில் அமானுட விஷயங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன. சின்னச் சின்ன விஷயங்கள் என்பதால் அதை நம்பவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் மிக மோசமான விஷயங்களை நேரடியாக பார்த்தோம். கொடூரமான இரவு” என்றார். வீட்டின் உரிமையாளர்கள் அருகிலுள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது யாருடைய வேலையாக இருக்கும்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-துயரத்திலிருந்து-விடுதலை/article9566754.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: சிறுநீரகத்தைத் திருட ஆரம்பிச்சிட்டீங்களா?

 
siruneeragam_3139615f.jpg
 
 

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 25 வயது ஸ்ரீ ராபிதா, 2014-ம் ஆண்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் கத்தார் நாட்டுக்கு அனுப்பப்பட்டார். “என்னை அபுதாபியில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகச் சொன்னார்கள். ஆனால் நான் கத்தாரில் உள்ள பாலஸ்தீனர் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். முதல் வேலையாக என்னை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர். நான் ஆரோக்கியமாக இருக்கிறேனா என்று பார்ப்பதற்கு அழைத்துச் சென்றதாகக் கூறினார்கள். மூன்றாவது நாள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். காரணம் கேட்டபோது, உடல்நிலை பலவீனமாக இருப்பதால் ஒரு ஊசி போடுகிறேன் என்றார் மருத்துவர். நான் மறுப்பதற்குள் ஊசியைப் போட்டுவிட்டார். அது அனஸ்தீசியா என்று பிறகுதான் தெரிந்தது. அரை மயக்கத்தில் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துவரப்பட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்தபோது பின்பகுதியில் வலியும் தையலும் இருந்தன. சிறுநீர் கழித்தபோது ரத்தமும் கலந்துவந்தது. மருத்துவரிடம் காரணம் கேட்டேன். பதில் சொல்லவில்லை. சில நாட்களில் நான் ஆரோக்கியமாக இல்லை என்று புகார் கொடுத்து, மீண்டும் ஏஜென்சிக்கே அனுப்பி வைத்துவிட்டனர். அடிக்கடி உடல் நிலை மோசமானதால், என்னை ஏஜென்சி ஊருக்கே அனுப்பி வைத்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக வலியால் துடித்துவருகிறேன். சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்தபோதுதான், என்னுடைய சிறுநீரகம் திருடப்பட்ட விஷயமே தெரிந்தது. வலது சிறுநீரகத்தை எடுத்துவிட்டு, ஏதோ ஒரு பொருளை வைத்துவிட்டார்கள். அதனால்தான் எனக்கு வலி இருந்துகொண்டே இருக்கிறது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். என் சிறுநீரகத்தைத் திருடியவர்கள் மீது இந்தோனேஷிய அரசாங்கம் வழக்கு தொடுக்க வேண்டும்” என்கிறார்  ராபிதா.

அடப்பாவிகளா, பிழைப்புத் தேடி வருகிறவர்களிடம் சிறுநீரகத்தைத் திருட ஆரம்பிச்சிட்டீங்களா?

ஜப்பானில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறது. கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துவிட்டது. இந்த ரோபோ தன்னை எதிர்த்து விளையாடுபவருக்கு உத்திகளைச் சொல்லிக் கொடுத்து, அவரை மிகச் சிறந்த விளையாட்டு வீரராக மாற்றுகிறது. மனிதர்களைப்போல ரோபோ பயிற்சியாளர் களைப்படைவதில்லை, கோபப்படுவதில்லை. இதனால் பயிற்சி பெறுபவர்களுக்கு உற்சாகமாக இருக்கிறது. மூன்றாண்டு உழைப்பின் பலனாக, 90% துல்லியத்துடன் ஒரு ரோபோ பயிற்சியாளரை உருவாக்கியிருக்கிறார்கள். புதியவர்களுடன் மெதுவாகவும் அனுபவம் பெற்ற வீரர்களுடன் வேகமாகவும் விளையாடுகிறது இந்த ரோபோ. பயிற்சி பெறுபவர் சிறப்பாக விளையாடினால், அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ரோபோ திரையில் ’அபாரம்’, ‘அற்புதமான பந்து வீச்சு’ என்றெல்லாம் வாசகங்கள் தோன்றுகின்றன. தவறாக விளையாடும்போது, தவறு என்ன என்பதையும் அதை எப்படிச் சரி செய்திருக்க வேண்டும் என்பதையும் ரோபோ சொல்லிக் கொடுக்கும்.

அட, கின்னஸில் இடம்பெற்ற ரோபோ பயிற்சியாளர்!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-சிறுநீரகத்தைத்-திருட-ஆரம்பிச்சிட்டீங்களா/article9568805.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: பாவப்பட்ட ஜோர்டனுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கட்டும்!

 

 
 
 
 
doc_3139961f.jpg
 
 
 

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கிறார் 19 வயது ஜோர்டன் கோசோவிச். 7 வயதில் ரத்தப் புற்றுநோய் வந்தது. அடுத்த 4 ஆண்டுகள் நோயை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார். இதனால் ஜோர்டனின் குழந்தைப் பருவம் தொலைந்ததுடன் சமூக வாழ்க்கையிலிருந்தும் துண்டிக்கப்பட்டார். நோயி லிருந்து மீண்டு பள்ளிக்குச் சென்றார். அவருடன் படித்தவர்கள் 4 வகுப்புகள் முன்னேறியிருந்தனர். அதனால் அவர்களிடம் நட்பு பாராட்ட முடியவில்லை. தொடர்ந்து எடுத்த கீமோதெரபியால் ஜோர்டனின் தலைமுடி கொட்டின. அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால், உடல் பருமனானது. சக மாணவர்கள் பேச மாட்டார்கள். பலர் முடி உதிர்வதையும் உடல் பருமனையும் மிக மோசமாகக் கிண்டல் செய்தனர். தனிமை, கிண்டல் போன்றவற்றால் ஜோர்டன் மிகவும் உடைந்து போனார். படிப்பில் கவனத்தைச் செலுத்தி, உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கே ஏற்கெனவே இருந்த சூழலை விட 100 மடங்கு மோசமான சூழல் உருவானது. நண்பர்கள் இன்றி, தனியாக இருக்கும் ஜோர்டனை உடலாலும் வார்த்தைகளாலும் துன்புறுத்த ஆரம்பித்தனர். “புற்றுநோயை விட, மீண்டு வந்த வாழ்க்கை மிக மோசமாக இருந்தது. எனக்கென்று சில நண்பர்கள் கிடைத்தால், என்னை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். நான் எவ்வளவோ முயன்றும் நண்பர்களைப் பெற முடியவில்லை. அதனால்தான் என்னுடைய கதையைச் சொல்லி ஒரு விளம்பரம் கொடுத்தேன். குறைந்தபட்சம் சமூக வலைதளங்களின் மூலமாவது என்னுடன் தொடர்பில் இருக்கும்படிக் கேட்டுக்கொண்டேன். 5 ஆயிரம் பேருக்கு மேல் விளம்பரத்தைப் பார்த்திருக்கிறார்கள். இதுவரை நேரில் யாரும் என்னைத் தொடர்புகொள்ளாவிட்டாலும் ஃபேஸ்புக் மூலம் ஏராளமானவர்கள் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். இனி என் துயரம் விலகும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது” என்கிறார் ஜோர்டன் கோசோவிச்.

பாவப்பட்ட ஜோர்டனுக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கட்டும்!

அயர்லாந்தின் டப்ளின் நகரில் 60 வயது ஜான் எட்வர்ட், ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 3 நாட்கள் சவப்பெட்டிக்குள் வசிக்கிறார். மன அழுத்தம், போதைப் பொருட்கள், ஆல்கஹாலுக்கு அடிமையாதல், தற்கொலை எண்ணம் போன்றவை தற்போது அதிகரித்து வருகின்றன. அவற்றின் தீமைகளை எடுத்துச் சொல்லவே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதாகச் சொல்கிறார் ஜான் எட்வர்ட். “நான் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, என்னுடைய 20 வருட வாழ்க்கையைத் தொலைத்தேன். இரண்டு வகை புற்றுநோய்கள் வந்து மீண்டேன். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இறுதியில் கெட்ட விஷயங்கள் அனைத்தையும் கைவிட்டு, என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அறக்கட்டளையை ஆரம்பித்தேன். கடந்த 23 ஆண்டுகளாகச் சிறந்த மனிதனாக வாழ்கிறேன். எங்கள் அறக்கட்டளை மூலம் ஏராளமானவர்களை மீட்டு, நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். சவப்பெட்டிக்குள் நான் இருக்கும் செய்தி பரவினால் விழிப்புணர்வு ஏற்படும். அறக்கட்டளைக்கு உதவிகள் கிடைக்கும். மின்சாரம், வைஃபை வசதி இருப்பதால் 3 நாட்களை எளிதில் கடத்திவிடமுடியும். ஸ்கைப் மூலம் வெளியாட்களுடன் தொடர்பில் இருக்கிறேன்” என்கிறார் ஜான் எட்வர்ட்.

விழிப்புணர்வுக்காகச் சவப்பெட்டியில் வாழ்க்கை!

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-பாவப்பட்ட-ஜோர்டனுக்கு-நல்ல-நண்பர்கள்-கிடைக்கட்டும்/article9570741.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் ஒரு பாட்டில் காற்று மூலம் என்ன பலன்?

 
muthalai_3140175f.jpg
 
 
 

மெரிக்காவின் பென்சில்வேனியாவில் வசிக்கும் ஏஞ்சலா லான்ஸ், லில்லிகேடர் என்ற முதலையைச் செல்லப் பிராணியாக வளர்த்துவருகிறார். நான்கரை அடி நீளமுள்ள முதலைக்கு தினமும் பல் துலக்கி, மசாஜ் செய்துவிடுகிறார். விதவிதமான உடைகளை அணிவிக்கிறார். உடைகளுக்கு ஏற்ற நிறத்தில் நகங்களுக்கு நகப்பூச்சு போடுகிறார். குளிர் கண்ணாடி, கிரீடம், தொப்பி அணிவித்து விதவிதமாகப் புகைப்படங்கள் எடுக்கிறார். “பிறந்து இரண்டரை நாட்களில் இந்த லில்லியைத் தத்தெடுத்துக்கொண்டேன். என்ன செய்தாலும் கொஞ்சம் கூட எதிர்ப்புக் காட்டாமல் ஆர்வத்துடன் ஒத்துழைப்பு கொடுப்பாள். ஒரு குழந்தையைப் போல தோளில் சாய்த்து, தட்டிக் கொடுத்தால் சுகமாகத் தூங்குவாள். ஒரு முதலைக்கு இவ்வளவு புரிதல் இருக்குமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. இவளது புகைப்படங்களைப் பார்த்து, மாடலிங் வாய்ப்பும் வந்தது. போஸ்ட்கார்ட், நோட்புக்ஸ், கீ செயின் போன்றவற்றுக்கு லில்லி மாடலிங் செய்திருக்கிறாள். மாடலிங் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் முதலைகளின் பராமரிப்புக்கு வழங்கி விடுகிறேன். நானும் லில்லியும் நடைப் பயிற்சி செய்யும்போது சுவாரசியமாக இருக்கும். பலரும் எங்களைக் கண்டதும் விலகி ஓடுவார்கள். நான் லில்லிக்கு முத்தம் கொடுப்பதைப் பார்த்த பிறகு தைரியமாக அருகில் வருவார்கள். மனிதர்களிடம் பழகுவதென்றால் லில்லிக்கு ஆர்வம் அதிகம். ஆனால் லில்லியால் மற்றவர்களுக்கோ, மற்றவர்களால் லில்லிக்கோ எதுவும் ஆபத்து நிகழ்ந்துவிடாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்வேன். முதலைகளைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். லில்லி 12 முதல் 15 அடி நீளம் வரை வளரக்கூடியவள். காட்டில் வசிப்பதைவிட என்னிடம் மிகவும் வசதியாக வாழ்கிறாள். இங்கே அவளுக்கு எதிரிகள் இல்லை. உணவு தேடி அலைய வேண்டியதில்லை. என் குடும்பத்தினர் அத்தனை பேரின் அன்பும் கிடைக்கிறது” என்கிறார் ஏஞ்சலா.

உலகிலேயே செல்ல முதலையாக வளர்த்தாலும் அது இயல்புபடி வாழ விடுவதுதானே நியாயம்!

லகிலேயே மிகவும் விலை மதிப்பு மிக்க காற்று சுவிட்சர்லாந்திலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆல்ப்ஸ் மலைக்கு வந்து தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாதவர்களுக்காக, பாட்டிலில் காற்றை அடைத்து விற்பனை செய்து வருவதாகச் சொல்கிறார் ஜான் க்ரீன். “ஆல்ப்ஸ் மலையில் ரகசியமான இடத்திலிருந்து சுத்தமான காற்றைப் பிடிக்கிறோம். தரமான பாட்டிலில் அடைத்து, உலகம் முழுவதும் விற்பனை செய்கிறோம். ஒரு லிட்டர் காற்றின் விலை 11 ஆயிரம் ரூபாய். எல்லோராலும் அந்த விலைக்கு வாங்க முடியாது என்பதால் அரை லிட்டர் காற்றை 6,475 ரூபாய்க்கு கொடுக்கிறோம். 3 லிட்டர் காற்றை வாங்குபவர்களுக்கு விலையைக் குறைத்து, 16,500 ரூபாய்க்கு அளிக்கிறோம். பாட்டில் கைக்கு வந்தவுடன் சுவாசிப்பதைவிட, சில மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து சுவாசித்தால் ஆல்ப்ஸ் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைக்கும். இதில் 25% வருமானம் ஆப்பிரிக்காவின் சுத்தமான குடிநீர் திட்டத்துக்குச் செல்கிறது. விற்பனை மெதுவாக ஆரம்பித்தாலும் விரைவில் வேகம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது?” என்கிறார் ஜான் க்ரீன்.

இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் ஒரு பாட்டில் காற்று மூலம் என்ன பலன்?

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-இவ்வளவு-விலை-கொடுத்து-வாங்கும்-ஒரு-பாட்டில்-காற்று-மூலம்-என்ன-பலன்/article9571287.ece?homepage=true&relartwiz=true

Link to comment
Share on other sites

உலக மசாலா: வலியை விரும்புற அதிசயப் பிறவிகள்...

 

 
ulagam_2311475f.jpg
 
 
 

பிரான்ஸை சேர்ந்த தாவரவியலாளர் பாட்ரிக் ப்ளாங்க். இவரது பங்களாவின் உட்சுவர்களிலும் வெளிச்சுவர்களிலும் செடிகள், கொடிகள், மரங்கள் என்று தாவரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன. ஜன்னல்கள், கதவுகளை தவிர சுவரே தெரியாத வண்ணம் தாவரங்கள் மூடியிருக்கின்றன. வீட்டுக்குள் நுழைந்தால் காட்டுக்குள் சென்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பூச்சிகள், ஓணான், பச்சோந்தி, அழகான பறவைகள் இந்தத் தாவரங்களோடு சேர்ந்து வசிக்கின்றன. 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர்த் தொட்டியில் மீன், ஆமை, சிப்பி போன்ற உயிரினங்கள் நீந்தி விளையாடுகின்றன. சமையலறை, படிக்கும் அறை என்று எங்கும் தாவரங்களின் ஆட்சிதான். இரவில் மெல்லிய வெளிச்சத்தில் இந்தத் தாவரங்கள் வேறோர் அனுபவத்தைத் தருகின்றன. 61 வயது பாட்ரிக்கு 6 வயதிலேயே இயற்கை மீது ஆர்வம் வந்துவிட்டது. மீன்கள் வளர்க்க ஆரம்பித்தார். 12 வயதில் சுவர்களில் செடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார். இயற்கைக்குத் தீங்கு இழைக்காத பொருட்களையே வீடு கட்டுவதிலிருந்து சகல விஷங்களுக்கும் பார்த்துப் பார்த்துப் பயன்படுத்துகிறார்.

வீட்டுக்குள் வனம்! அழகான கான்செப்ட்!

ரஷ்ய சூதாட்ட விடுதிகளில் ஒரு புதிய விளையாட்டு மிகவும் பிரபலமாகி வருகிறது. வலிகளுக்கு அடிமையானவர்கள் இங்கே கூடுகிறார்கள். மின்சாரத் துப்பாக்கிகள் மூலம் ஒருவரை ஒருவர் மின்சாரத்தைச் செலுத்திக்கொள்கிறார்கள். சிலர் தாங்களே தலையிலோ, கழுத்திலோ விருப்பமான இடங்களில் மின்சார அதிர்வுகளை அளித்துக் கொள்கிறார்கள். சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக வட்டமாக நின்றுகொண்டு விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். வலி பொறுக்க முடியாதவர்கள் வரிசையாக வெளியேறிவிடுகிறார்கள். இறுதி வரைக்கும் யார் வலிகளைத் தாங்கிக்கொண்டு நிற்கிறாரோ அவரே அன்றைய வெற்றியாளர். அவருக்குப் பட்டமும் பரிசுத் தொகையும் கிடைக்கும். ஏழு தடவைக்கு ஒரு முறை 10 ஆயிரம் வோல்ட் மின்சார அதிர்ச்சியை ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும். உயிர் இழக்கும் அளவுக்கு இந்த விளையாட்டில் ஆபத்து இல்லை என்பதால் இது அனுமதிக்கப்படுகிறது. வலிப்பு நோய் உள்ளவர்கள் மட்டும் கலந்துகொள்ள இயலாது என்கிறார்கள்.

வலியை விரும்புற அதிசயப் பிறவிகள்…

அமெரிக்காவில் பிறந்த அலிசியா பென்னிங்டனுக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லை. அவரால் ஓட்டுப் போட இயலாது. கார் ஓட்ட முடியாது. ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க முடியாது. அலிசியா தான் ஓர் அமெரிக்க பிரஜை என்பதற்கான எந்த அத்தாட்சியும் அவரிடம் இல்லை. அலிசியா பிறந்த உடன் பிறப்புச் சான்றிதழ் பெறவில்லை. பிறகு ஹோம் ஸ்கூல் என்ற கிறிஸ்தவ மெஷினரியில் படித்தார். அவர்களும் பிறப்புச் சான்றிதழையோ, சோஷியல் செக்யூரிட்டி நம்பரையோ வாங்கவில்லை. ஹோம் ஸ்கூலில் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களைப் பெரிதாக மதிக்க மாட்டார்கள். பெற்றோரின் எண்ணத்துக்குத்தான் மதிப்பு அளிப்பார்கள். இங்கே பிறந்து, இங்கே படிக்கும் குழந்தைகள் அலிசியாவைப் போல அடையாளம் இன்றியே இருக்கிறார்கள். கல்லூரியில் சான்றிதழ் அவசியம் என்பதால் மேற்படிப்பையும் அலிசியாவால் தொடர முடியவில்லை. பிறப்புச் சான்றிதழ் பெறவும் சோஷியல் செக்யூரிட்டி நம்பர் பெறவும் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. கடைசியில் ஃபேஸ்புக், ட்விட்டரில் தன்னுடைய நிலைமையைப் பகிர்ந்துகொண்டு, உதவி செய்யும்படிக் கேட்டிருக்கிறார். உலகில் பிறப்பைப் பதிவு செய்து, பிறப்புச் சான்றிதழ் பெறாத குழந்தைகள் 20 கோடி பேர் இருக்கிறார்கள்.

ஐயோ… பாவம்…

http://tamil.thehindu.com/world/உலக-மசாலா-வலியை-விரும்புற-அதிசயப்-பிறவிகள்/article6898406.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.