Jump to content

கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை

ரவி நடராஜன்

2015 –ன் ஆரம்பத்தில் நடந்த நுகர்வோர் கருத்தரங்கில், சாம்சுங்கின் தலைவர், ஒரு பி.எம்.டபிள்யு. காரை நுண்ணறிப்பேசியில் அழைக்க, அவரை நோக்கி விரைந்த, அந்தக் கார், அவர் முன் வந்து நின்றது. காரில் ஏறியவுடன், அவருடைய நுண்ணறிப்பேசி மூலம், சென்றடைய வேண்டிய இடத்தைச் சொல்ல, காரும் அங்கே செல்லத் தொடங்கியது. காரில் ஓட்டுனர் எவரும் இல்லை.

2015, ஜூலை மாதம் க்ரைஸ்லரின் ஜீப் வண்டிகளை இணையம் மூலம் ஓட்டுனரிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன, ஓடும் காரை இன்னொருவர், இணையம் மூலம் கட்டுப்படுத்த முடியுமா?

மேலே சொன்ன இரு விஷயங்களும், எப்படி இணையத்துடன் இணைக்கப்பட்ட கருவிகள் நம்முடைய வாழ்க்கையை மாற்ற போகின்றன என்பதற்கு உதாரணம். கருவிகள், (devices) அல்லது உணர்விகள் (sensors) என்பது நமக்கெல்லாம் ஓரளவு பரிச்சயமான சொற்கள். ஆனால், இதற்கும் இணையத்திற்கும் (internet) என்ன சம்பந்தம்?

இன்றைய நோக்கில் அதிக சம்பந்தம் இல்லாதது போலத் தோன்றினாலும், நாம் இங்கு பார்த்த இரு உதாரணங்கள் இந்த சம்பந்தத்தின் நல் முகம் மற்றும் தீய முகத்தையும் காட்டுகின்றன. இன்று, நம்முடைய நுண்ணறிப்பேசியை (smart phone) ஒரு கருவியாக நாம் பார்க்கிறோம். அதில், இணையம் மூலம் விடியோக்களைப் பார்க்கிறோம், பண்பலை வானொலிகளைக் கேட்கிறோம். கருவி இணையத்தின் ஆரம்ப நிலை, நமது இன்றைய நுண்ணறிப்பேசி.

கணினி, மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் எதிர்காலத்தில் (அதாவது, இன்னும் 5 முதல் 10 வருடத்திற்குள்) இவை ஒருங்கிணைந்து விடும் என்று சொல்லி வருகிறார்கள். வழக்கம் போல, இது ஒரு குத்து மதிப்பான மதிப்பீடு. இதில், பல பிரச்னைகள் தீர்க்கப் பட வேண்டும். மேலும் பல வகை பயன்பாடுகள், மக்களால் அரவணைக்கப்பட வேண்டும். இவற்றையும் தாண்டி, கருவிகளின் இணையச் செயல்பாடுகள், என்றும் இல்லாத அளவு, இன்று ஒரு பெரும் தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கும் சக்தி வாய்ந்தது என்று பல தொழில்நுட்பப் போட்டியாளர்களால் பொதுவாக ஒப்புக் கொள்ளப் படுகிறது. இந்தக் கட்டுரைத் தொடர், இவ்வகையான கருவிகளின் இணையம் (internet of things) பற்றிய அறிமுகம். இவ்வகைக் கருவிகளினால், வரப்போகும் பயன்கள், பிரச்னைகள், சமூக மாற்றங்கள் பற்றிய அலசலே இக்கட்டுரைகள்.

IOT part1-pic1

ஆரம்பத்தில், 1990 -களில் இணையம் என்பது பொது மக்களை, மின்னஞ்சல் எனும் பயன்பாட்டை நோக்கி பயணிக்க வைத்தது. பொதுவாக, இந்த காலகட்டத்தில், மனிதர்களைவிட, கணினிகளின் இணையம் உருவாகியது. இன்று, சில முதியவர்கள் மின்னஞ்சல் அனுப்பத் தயங்குவதைக் கிண்டல் செய்யும் நாமும் தடுமாறிய காலம் 1990 –கள். நாம் இணையத்துடன் தொடர்பு கொண்ட ஆரம்ப காலம் அது. 2000 –களில் செல்பேசிகள் ஒரு புறமும், சமூக வலையமைப்பு பயன்பாடுகள் (முகநூல், டிவிட்டர்) பெரிதாக அங்கீகாரம் பெற்றன. செல்பேசிகள் மனிதர்களின் இணையம் உருவாக உதவியது என்று சொல்லலாம். மனித வரலாற்றில் என்றும் இல்லாத அளவு, தூரத்தை வென்ற மனிதத் தொடர்பு உருவாகியதும் செல்பேசிகளால் என்றால் மிகையாகாது. துவையல் சரியாக வரவில்லை என்றால், நன்றாக சமைக்கத் தெரிந்த 1,000 கி.மீ. தொலைவில் உள்ள அக்காவை இரவு 9 மணிக்கு அழைக்கும் பழக்கம் உருவாகியது இந்த காலத்தில் தான்.சமூக வலையமைப்பு பயன்பாடுகள் அடுத்த கட்டமாய், சமூகங்களின் இணையம் உருவாக உதவியது என்று சொல்லலாம். ஒரு இசை/விளையாட்டு நிகழ்ச்சிக்குச் சென்று, அங்கு நடப்பதை உடனடியே உலகிற்கு (அதாவது, தொடர்புடைய சமூகத்திற்கு) அறிவிக்கும் வழக்கம் வலையமைப்பு பயன்பாடுகள் உருவாக்கிய சமீபத்திய நிகழ்வு.

இவ்வாறு, நாம் கடந்த 25 ஆண்டுகளில், முதலில், கணனிகளுடன் உடன் தொடர்பு, பிறகு, தொலைவில் உள்ள மனிதர்களுடன் உடன் தொடர்பு , பிறகு, உலகின் வெகு தொலைவில் உள்ள மனித சமூகங்களுடன் உடன் தொடர்பு என்று வளர்ந்து வந்துள்ளோம்.

சில நூறு கணினிகள் இணைந்த அமைப்பு இணையம் என்று ஆரம்பித்து, அது பல்லாயிரம் கணினியாகி, அத்துடன் பல லட்சம் செல்பேசிகள்/நுண்ணறிப்பேசிகள் (cell phones/smart phones) இணையத்தில் இணைந்தன. இது, இணையம் நம்மைத் தேடி கையளவில் வந்த காலம் எனலாம். செல்பேசிகளுக்கும் கணினிகளுக்கும் (வில்லை, மடி, கை, காது என்று எல்லா வகையும் இதில் அடங்கும்) அதிக வித்தியாசமில்லாமல் போகவே, இணையம் என்பது பல நூறு கோடி கணினிகளின் அரட்டை அரங்கமாக இன்று மாறியுள்ளது. செல்பேசி மற்றும் கணினி அரட்டைகள் போதாதென்று இன்னும் பல நூறு கோடி கருவிகள் இணையத்தில் அரட்டை நிகழ்த்தப் போகின்றன என்பது இன்றைய தொழில்நுட்பக் கணிப்பு. இன்றைய இணையம் நாம் திரும்பி நகைக்கும் 1990 –களில் உருவான இணையம் போல இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் தோன்றும்! சில மதிப்பீடுகளின்படி, 2020 –களில் 2,600 கோடி கருவிகள் இணையத்தில் விளையாடும் என்கிறார்கள். 850 கோடி மனிதர்களுக்கு எப்படி 2,600 கோடிக் கருவிகள் இருக்கும்? ஏதோ உதைப்பது போல இருக்கிறதா? இந்தத் தொழில்நுட்பம் எதிர்பார்ப்பதைப் போல வளர்ந்தால், இதில் வியக்க ஏதுமில்லை. ஒவ்வொரு தொழிற்சாலையும், ஒவ்வொரு வீடும், மருத்துவ மனையும், பள்ளியும், வாகனமும், இத்தகைய இணைய அரட்டைக் கருவிகளை (ஓவ்வொன்றுக்கும் தலா பல கருவிகள்) கொண்டு வேலை செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள்.

கீழே உள்ள யுடியூப் விடியோவில், இவ்வகை கருவிகளின் இணையத்தின் வீச்சை அழகாக சொல்லியுள்ளார்கள். இவை யாவும் என்னவோ இன்னும் 30 வருடங்கள் கழித்து நிகழும் போலத் தோன்றினாலும், முன்னமே சொன்னது போல, இவற்றின் சாத்தியம் 5 முதல் 10 ஆண்டுகளில் என்று நம்ப பல சாட்சியங்கள் இன்றே இருக்கிறது. பல புதிய பொருட்கள் இந்த எதிர்காலத்தை நோக்கி இன்றே பயணிக்கத் தொடங்கிவிட்டன. இந்தத் தொடரில், இவ்வகை பொருட்கள் பலவற்றின் அறிமுகம் தரவுள்ளேன்.

இன்று, பல புதிய டிவி –க்கள் இணைய வசதியுடன் வருகின்றன. காரின் ரேடியோ நம் செல்பேசியுடன் புளூடூத்தில் (Bluetooth) இணைகிறது. இது கருவிகளின் இணையம் ஆகுமா? இன்றைய சூழலில், இது உண்மை என்றாலும், இவை மிகவும் எளிமையான ஒருங்கிணைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும், ஒருங்கிணைப்பு, இணையத்துடன் அல்லாமல், சூழலில் உள்ள மற்ற அமைப்புகளோடு (கார் ரேடியோ, டிவி மற்றும் ரெளடர்) தொடர்பு நடக்கிறது. கருவிகள் இணையத்துடன் தொடர்பு கொண்டால் மட்டும் போதாது. முடிவுகளை அந்தந்த சூழலுக்கேற்ப தானே எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், நமக்கு இக்கருவிகளால் பயன், பன்மடங்கு அதிகரிக்கும் என்பது வல்லுனர்களின் எண்ணம்.

இந்த விதக் கருவிகள் எப்படி நம் அன்றாட வாழ்வை பாதிக்கலாம் என்று ஓரளவிற்கு புரிந்து கொள்ள, இன்றைய அன்றாட நிகழ்வு ஒன்றை, முதலில் பார்க்கலாம் (சாதாரண நிகழ்வு என்பதால், சரியான அறுவை என்று இதைத் தாண்டிச் சொல்ல தயவு செய்து முயற்சிக்காதீர்கள்). அதே நிகழ்வுகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு (5 முதல் 10 ஆண்டுகளுக்குள்) எப்படி நிகழலாம் என்றும் பார்க்கலாம். கருவிகள் இணையத்துடன் இணைந்து உருவாக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ள, இவ்வகை கற்பனை நிகழ்வுகள் உதவலாம்.

முதலில் ஒரு சின்ன பின்னணி. மனோகர், சென்னையில் பெஸண்ட் நகரில் தன்னுடைய மனைவி அகிலா மற்றும் 11 வயது மகள் செல்வியுடன் வசிக்கிறார். அவருக்கு அம்பத்தூரில் ஒரு கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உற்பத்தி மேலாளர் வேலை. அகிலா கிண்டியில் வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார். செல்விக்கு அடையாரில் பள்ளி.

  1. காலை ஏனோ அலாரம் சரியான நேரத்திற்கு ஒலித்தும் நாங்கள் எழவில்லை. மீண்டும் அலாரம் அலரவே (இதனாலே, தமிழில் அலார்ம் என்பது அலாரம் ஆகியதோ?) அடித்துப் பிடித்து, எழுந்து கொண்டோம். மணி 6:45 –ஐத் தொட்டு விட்டது. செல்வியை எழுப்புவதற்குள், மணி 7:00 ஆகிவிட்டது
  2. வழக்கமான காலை அவசரக் குளியல், செல்வியை தயார் செய்தல் எல்லாம் முடிந்து, டோஸ்டரில் கரிந்த ரொட்டியுடன் போராடி, எப்படியோ அகிலா காலை உணவை காப்பியுடன் 7:45 -க்குள் தயார் செய்து விட்டாள். செல்வியை தயார் செய்து, வெளியே கிளம்பும் பொழுது மணி 8:15 ஆகிவிட்டது
  3. காரில், யார் அந்த உதவாக்கரைப் பண்பலை ரேடியோவை அலரவிட்டது? காலை பயணத்தின் பொழுது, மனோகருக்கு கணேஷ் குமரேஷின் வயலின்தான் பிடிக்கும். சி.டி,-க்கு மாற்ற, இன்னும் சில நிமிடங்கள் விரயம்
  4. ஒரு வழியாக, காரை விரட்டி, செல்வியின் பள்ளிக்கு 9:00 மணிக்குள் சென்றடைய வேண்டும். இரண்டு சிக்னல்களைத் தாண்டியவுடன், வழக்கமான வழியில், பிரச்னை. கார்பரேஷன்காரர்கள் ரோட்டை வெட்டிப் பழி வாங்கினார்கள்.
  5. சில குறுக்குச் சாலைகளில் சென்று, பள்ளியை அடைகையில் மணி 8:55 ஆகிவிட்டது, வகுப்பிற்கு ஓடினாள் செல்வி
  6. காரை ஒரு வழியாக அம்பத்தூருக்கு விரட்டி தொழிற்சாலையை அடைகையில் மணி 9:40 ஆகியிருந்த்து. எத்தனை வேக எல்லைமீறல் டிக்கட் கிடைக்குமோ தெரியவில்லை
  7. அலுவலகம் சென்றடைந்தவுடன் அகிலா அழைத்தாள். அவசரமாக கிளம்பியதால், வீட்டைப் பூட்ட மறந்து, மீண்டும் வீடு திரும்பி, பூட்டிவிட்டு அலுவலகத்திற்கு அரை மணி நேரம் தாமதம் என்றாள். மாலை செல்வியை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்லி வைத்தாள்
  8. வழக்கமான சில மின்னஞ்சல்களைப் பார்த்து முடித்து, 10:00 மணிக்கு, அன்றாட உற்பத்தி மீட்டிங். எங்கள் நிறுவனத்துக்கு, பூனே அருகில் இன்னொரு தொழிற்சாலையும் உண்டு, அன்று, பூனேயின் உற்பத்தி எதிர்பார்த்ததைவிடக் குறைவு. 1:00 மணிக்கு பூனேயில் என்ன பிரச்னை என்று அலசி, மேலிடத்திற்கு விளக்க வேண்டும்.
    சென்னையின் உற்பத்தி விவரங்களை ஆராய்ந்ததில், சரியாக இருந்தது போலதான் தோன்றியது, சென்னையிலும் பிரச்னை இருந்தால் என்னவாகியிருக்கும் என்று சில நொடிகள் ஒரு கவலை வந்து மறைந்தது
  9. மதியம் 1:00 மணி மீட்டிங்கில், ஒரு அழுத்தும் எந்திரம் (pneumatic press) சில நாட்களாகவே சரியாக வேலை செய்யாமல், பழுதாகியிருப்பது தெரியவந்தது. அதை சரி செய்ய 1 வாரம் ஆகும் என்றும், அதற்கான உதிரி பாகம் ஜப்பானிலிருந்து வர வேண்டும் என்றும் சொன்னார்கள். இன்னும் 1 மாதத்திற்கு அனைவரும் தாளிக்கப் படுவது நிச்சயம். விட்டு போன உற்பத்தியை வேறு சரி கட்ட வேண்டும்
  10. மாலை 4:45 –க்கு, காரை என்னுடைய அம்மா தங்கியிருக்கும் மாம்பலத்திற்கு செலுத்தினேன். அம்மாவுக்கு ரத்த அழுத்த நோய். ஓரளவு பார்த்துக் கொண்டாலும், அவ்வப்பொழுது மருந்து சாப்பிடுவதைச் சரியாகச் செய்வதில்லை. அன்று அம்மாவிடம் விசாரித்ததில், மருந்து சரியாக வேலையே செய்வதில்லை என்று குறை பட்டுக் கொண்டிருந்தார். மேலும், மாலை 4:00 மணி முதல், சற்று தலை சுற்றுவதாகவும் சொன்னார்.
  11. மாலை 7:00 மணி வரை அம்மாவுடன் இருந்துவிட்டு, வீட்டிற்கு கிளம்பி அடையாறு அருகில் வருகையில், டி.நகரில் எப்பொழுதும் வாங்கும் காப்பி பொடி, மற்றும் சில திண்பண்டங்கள் வாங்க மறந்தது நினைவுக்கு வந்தது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று வீட்டை அடைந்தார் மனோகர்
  12. செல்வியின் நாள் எப்படி இருந்தது என்று அம்மா வீட்டில் இருந்த பொழுதே அவள் செல்பேசியில் சொன்னாள். இரவு உணவின் பொழுது, அவளது பள்ளி நாளின் விவரங்கள் மேலும் சொன்னாள். அவளுடைய டீச்சர் அவள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை என்றும் சொன்னாள்

அடுத்த பகுதியில், இதே நிகழ்வுகள், எப்படி கருவி இணைய மயமான உலகில் நடக்கும் என்று பார்ப்போம்.

- See more at: http://solvanam.com/?p=41247#sthash.pvUHJUrl.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை – பகுதி 2

ரவி நடராஜன்
  •  

முன்னே சொன்ன 12 விஷயங்களும் நம்முடைய அன்றாட நிகழ்வுகள். இதையே  கருவிகளின் இணையம் எப்படி மாற்றி அமைக்க வல்லது என்று அடுத்து பார்ப்போம் – ஒரு 10 ஆண்டுகள் முன்னோக்கிச் செல்வோம். நிகழ்வுகளை விளக்குவதற்கு முன், சில அறிமுகங்கள் அவசியமாகிறது. மனோகரின் வீட்டு கணினியின் பெயர் ‘நெல்லை’. அவருடைய கார் கணினியின் பெயர், ‘சக்தி’. அவருடைய அலுவலக கணினியின் பெயர், ’மாலன்’. இந்த மூன்று கணினிகளும் மனோகரின் குரல் கேட்டு இயங்கக் கூடியவை.

  1. காலை 6:00 மணியாகியவுடன், ‘நெல்லை’ மனோகர் மற்றும் செல்வியின் படுக்கையறை பக்கத்தில் உள்ள விளக்கை உயிர்பெறச் செல்துவிட்டது! மேலும் மெலிதாக சுப்ரபாதம் இசை படுக்கையறை மற்றும் சமையலறைகளில் பரவ, ஜன்னல்களின் திரைகள் முனைவு மாறி (polarization) வெளிச்சம் உள்ளே வரத் தொடங்கியது. நேற்று (ஞாயிறு) ஒழுங்காக 9:00 மணிக்கு எழுப்பிய அதே ‘நெல்லைக்கு’ இன்று வேலைநாள் என்று தெரியும்
  2. அகிலா நேற்றிரவு வைத்த ரொட்டியை டோஸ்டரை ‘நெல்லை’ பதமாக வாட விட்டது. சமையலறையில் இருக்கும் காபி மெஷினை இயக்கிவிட, காபி தயாராகிக் கொண்டிருந்தது
  3. செல்வி தயாராகி, அனைவரும் காலை உணவை அனைவரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் பொழுது மணி, 7:50
  4. மனோகரின் தானியங்கிக் கார் அருகே வருகையில் அவருடைய செல்பேசியை வைத்து, அவருக்கு சரியான இருக்கை அமைப்பை சரி செய்து வைத்திருந்தது ‘சக்தி’. அவர் உள்ளே அமர்ந்ததும், வழக்கம் போல செல்வியின் பள்ளி மற்றும் அவரது அம்பத்தூர் தொழிற்சாலைக்குப் போக வேண்டுமா என்று கேட்டுக் கொண்டது ’சக்தி’. அவருக்குப் பிடித்த ‘கணேஷ் குமரேஷ்’ வயலின் ஒலிக்க, பயணம் தொடங்கியது. காரோ, பின் சீட்டில் அமர்ந்திருந்த செல்விக்காக அவளுக்கு பிரியமான குழந்தைகள் பாட்டையும் ஒலிக்கச் செய்தது!

IOT part2-pic1

  1. முதல் சிக்னலை அடைந்தவுடன், சிக்னலுடன் தொடர்பு கொண்ட ‘சக்தி’, பாதையில் வேலை நடப்பதால், சற்று வேறு பாதையில் செல்வியின் பள்ளியை 8:30 மணிக்கு அடைய முடியும் என்று மனோகருக்கு அறிவித்தது. காரில் உள்ள ஜி.பி.எஸ் கருவியுடன் தொடர்பு கொண்டு, வேறு பாதையையும் அமைத்துக் கொண்டது. சரியாக, 8:32 மணிக்கு, செல்வியை பள்ளியில் விட்டு விட்டுப், பயணம் தொடர்ந்தது
  2. ஒரு மணி நேர பயணத்தில், மனோகருடைய தானியங்கிக் கார், மற்ற மனிதர்கள் ஓட்டும்/தானியங்கி கார்களுடன் பல சாலைகளை/ சிக்னல்களைக் கடந்ததை, வேடிக்கைப் பார்க்க மனோகரிடம் நேரமில்லை. அன்றைய செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் என்று பயணம் தொடர்ந்தது. காலை, 9:28 மணிக்கு தொழிற்சாலையில் அவரை விட்டு விட்டு, வழக்கமான இடத்தில் தானே நிறுத்திக் கொண்டது. அவருடைய தானியங்கி மின்சாரக் கார், சென்னையின் சுட்டெரிக்கும் வெய்யிலில் முழுகி மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கியது
  3. மனோகர் அலுவலகத்தை அடைய, உடல் வருடல் (biometric scan) மூலம், அவரை அக்கருவி வழிவிட்டது. அவருடைய கையில் ஒட்டப்பட்ட செயலியை அவரது அலுவலக வருடிக்கு, கதவருகே வந்தவுடன், எதையும் தொடாமலே மனோகர் வந்திருக்கிறார் என்று தெரியும். அலுவலகம் சென்றவுடன் அகிலா அழைத்தாள். அவளுடைய செல்பேசியில், ’நெல்லை’ வீடு பூட்டப்பட்டச் செய்தியை அனுப்பியதாகச் சென்னாள். மனோகரும், செல்வியை பள்ளியில் விட்டதை சொல்லி, அடுத்த வேலையைப் பார்க்கப் போனார்
  4. ’மாலன்’ பூனே மற்றும் சென்னை உற்பத்தி விவரங்களைக் காட்டியது. சென்னையில் உள்ள அழுத்த எந்திரம், இன்னும் 5 மாதத்திற்குள் பழுது பார்க்கப்பட வேண்டும் என்று பராமரிப்பு விவரங்கள் சொல்வதாக, ’மாலன்’ சொன்னது. பழுது பார்க்கும் ஜப்பானிய கம்பெனி விவரங்கள் அத்துடன் காட்டி, அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்ற ஒரு வேண்டுகோள் அனுப்பலாமா என்றது. அடுத்த 45 நாட்களின் உற்பத்தி எப்படி பாதிக்கப்படும் என்று ஒரு உதவி ரிப்போர்ட்டும் காட்டியது. நாளை தெரிந்துவிடும் என்று மனோகர் வேண்டுகோளுக்குச் சரி சொன்னார்
  5. பகல் 12:30 -க்கு உணவுக்காக கேன்டீன் சென்றபோது, மூன்று முக்கிய மின்னஞ்சல்கள். வீட்டைச் சுத்தம் செய்யும் ரோபோ எல்லா அறைகளையும் சுத்தம் செய்து விட்டதாக, ‘நெல்லை’ செய்தி அனுப்பியிருந்தது. செல்வியின் பள்ளியிலிருந்து அவள் எவ்வளவு தண்ணீர் குடித்தாள் என்று அவளுடைய தண்ணீர் பாட்டில் செய்தி அனுப்பியிருந்தது. அம்மாவின் ரத்த அழுத்தம் சற்று அதிகமாகியிருப்பதை அவருடைய உடையில் பொருத்தப்பட்ட மானிட்டர் ஒரு செய்தி அனுப்பியிருந்தது. அம்மாவின் நர்ஸுக்கும் இந்தச் செய்தி எட்டியிருக்கும்
  6. ’சக்தி’ 420 கிலோவாட் சூரிய ஒளி மூலம் தேவைக்கு அதிகமாக மின்சாரம் காரில் சேமிக்கப் பட்டிருப்பதாகவும், அதை விற்று விடலாமா என்று சொன்னதோடு, தலா கிலோவாட்டிற்கு 20 ரூபாய் மூலம் 8,400 ரூபாய், 2:00 மணிக்குள் விற்றால் கிடைக்கும் என்று ஆசை காட்டியது!
  7. மாலை, அம்மாவைச் சந்திக்க ‘சக்திக்கு’ தன் செல்பேசி மூலம், செய்தி அனுப்பினார் மனோகர். மாலை 4:45 மணிக்கு அம்மாவின் மாம்பலம் வீட்டிற்கு தானியங்கிக் கார் விரைந்தது. டீ நகரில், காப்பிப் பொடி மற்றும் திண்பண்டங்கள் வாங்க வேண்டியது நினைவுக்கு வர, ‘சக்தியிடம்’, அடுத்த பயணத்தில் இதை சேர்த்துக் கொள்ளும்படி மனோகர் சொன்னார். அங்கு, நர்ஸ் ஏற்கனவே வந்திருந்தார். கடந்த 1 வார ரத்த அழுத்த விவரங்களை ஆராய்ந்து, அம்மாவின் மருந்தை சற்று மாற்றி அமைத்துவிட்டு, மருந்துகடைக்குப் புதிய ஆணையை அனுப்பிவிட்டார். இந்த விதப் பரிசோதனை வருகைக்கு, அடுத்த மாதம் காய்ச்சி விடுவாள்.
  8. பள்ளி திரும்பிய செல்வி, தனது பாட்டியை அழைத்து, அவளுடைய பள்ளி வரைபடங்களை வீடியோ மூலம் காட்டினாள். அத்துடன். செல்வியின் ஆசிரியையின் விமர்சனமும் இருந்தது. தன்னுடைய புதிய தண்ணீர் பட்டிலின் மகிமையைப் பற்றி, பாட்டியிடம் சொல்லி சந்தோஷப்பட்டாள். அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறியதும், ‘சக்தி’, “டீ நகருக்குப் போக வேண்டுமா?’ என்று கேட்டு, அனுமதி பெற்று கடைக்குச் சென்றது. செல்பேசி மூலம் ஆர்டர் கொடுத்துவிட்டு காசையும் கட்டிவிட்டார், மனோகர். கடையை அடைந்த பொழுது, தயாராக இருந்த பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு பயணமானது கார். பயணிக்கும் பொழுது, ‘சக்தி’, ‘உங்களது பின் டயர்களில் இன்னும் 60 நாட்கள் மட்டுமே பத்திரமான பயணம் சாத்தியம். புதிய டயர்கள் மாற்ற முயற்சி எடுங்கள்’ என்றது.

அடடா, என்ன ஒரு பூச்சுற்றல் என்று உங்களுக்குத் தோன்றலாம். இதெல்லாம் இன்னும் 10 வருடங்களில் சென்னையில் சாத்தியமா? இதில், சில நிகழ்வுகள் சற்று ஓவராகத் தோன்றினாலும், மற்றவை, என் பார்வையில் சாத்தியமே. சென்னையில் இல்லாவிட்டாலும், மற்ற மேற்கத்திய நகரங்களில் சாத்தியம். கற்பனை என்பதால், ஏன் சென்னையில் நிகழக் கூடாது? உண்மையான பூச்சுற்றல், 10 வருடத்திற்குப் பின் தமிழர்கள் ஆங்கில மோகத்தைத் துறந்து தங்களுடைய குழந்தைகள், கணினிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவார்கள் என்று நம்புவது :-)

IOT part2-pic2

இந்த நிகழ்வுகளில் தடிமனாகக் காட்டியிருப்பவை, கருவிகள் – மனிதர்களை விட ஏராளமாக அவை பேசுவதைப் போலத் தோன்றினால், அது உண்மையே. நம்முடைய உரையாடல்களில், சமயம், இடம் மற்றும், மனிதரை அறிந்து, அதற்கு தகுந்தவாறு உரையாடுகிறோம். கருவிகள் எதையும் பொருட்படுத்தாமல் பேசித் தள்ளும். அட, எப்பொழுது கருவிகள் பேசின? யாருடன் பேசின? எதன் வழியாகப் பேசின? இந்த உதாரண நிகழ்வுகளைக் கொண்டே என்ன நடந்தது என்று விரிவாகப் பார்ப்போம்.

முதல் புள்ளியில் உள்ள கருவிகள் எப்படி உரையாடின என்று பார்ப்போம். இதில் அடங்கியுள்ள கருவிகள்:

  • பாட்டு இசைக்கும் கருவி (சுப்ரபாதம் இசையைத் தேடி இசைக்கும் வல்லமை படைத்தது)
  • படுக்கையறை விளக்குகள் – கட்டளை கிடைத்தவுடன் இயங்க வல்லவை. சூரிய வெளிச்சம் பட்டால், அணைந்து கொள்ளும் வல்லமை கொண்டது
  • ஜன்னல்களின் திரைகள் – இவற்றை இன்றையத் திரைச்சீலைகளாக நினைக்காதீர்கள். இவை முனைவாக்கத்தினால், வெளியே உள்ள வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கவும், தடுக்கவும் வல்லமை கொண்டது

எங்கே இவை பேசின?

  • ‘நெல்லை’, முதலில் காலை 6:00 மணியானதும், இன்றைய செல்பேசி போல அலாரம் ஒலி மட்டும் எழுப்பவில்லை – மனோகர் மற்றும் செல்வியின் அறைகளில் இருந்த விளக்குகளுக்கு ‘உயிர்பெறு’ என்று செய்தி அனுப்பியது.
  • அடுத்தது, மனோகர் மற்றும் செல்வி அறைகளில் உள்ள ஜன்னல்களுக்கு முனைவாக்க மாற்றம் செய்ய, ஆணை அனுப்பியது.
  • கடைசியாக, ‘நெல்லை’, பாட்டு இசைக்கும் கருவிக்கு, ’இந்தப் பாடலை இசை’ என்று ஆணையும் அனுப்பியது.
  • விளக்குகள் உயிர்பெற்று இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, ‘நெல்லை’ ஜன்னல்களுக்கு ஆணை அனுப்பியது என்று வைத்துக் கொள்வோம்
  • ஜன்னல்கள் ஒளியை உள்ளே அனுமதித்ததும், விளக்குகள் (இரு அறைகளில்) ‘நெல்லை’ –க்குத் ’தேவைக்கு அதிகமான ஒளியுள்ளது. 6:02 –க்கு, நான் அணைந்து விடுகிறேன்’ என்று ‘நெல்லை’ –க்குச் செய்தி அனுப்பியது
  • சுப்ரபாதம் இசை முடிந்ததும், இசைக்கருவி, ‘நெல்லை’ – க்குப், பாடல் முடிந்துவிட்டது என்று 6:20 –க்கு இன்னொரு செய்தி அனுப்பும்

இவ்வளவு சின்ன விஷயத்திற்காக 6 உரையாடல்கள். ஒவ்வொரு புள்ளியிலும் உள்ள கருவிகளின் ‘வளவள’ எவ்வளவு இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அதுவும், இது ஒரு குடும்பத்தின் கருவிகளின் ஒரு நாள் உரையாடல். இதைப் பல கோடி குடும்பங்களாக எண்ணிப் பாருங்கள் – தலை சுற்றும் அளவிற்கு, கருவி உரையாடல்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இளைஞர்களின் இன்றைய ‘வாட்ஸ் ஆப்’ மிகச் சாதரணமாகப் படும்! சில இளைஞர்/ இளைஞிகளாவது கொஞ்சம் உரக்கச் சொன்னால் குறைவாகச் செய்வார்கள். கருவிகள், யார் பேச்சையும் கேட்காது. தேவையோ, இல்லையோ, கருவிகள், இயங்கிக் கொண்டே இருக்கும் (பழுதான சமயம் தவிர) – ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும்.

IOT part2-pic3

சொல்லப்போனால், இந்த உரையாடல் நமக்கு புதிதே அல்ல. இது போன்ற கருவி உரையாடல்கள், ஒவ்வொருவருடைய காரிலும் (2007 –க்கு பிறகு உள்ள பெரும்பாலான கார்கள்) ஒவ்வொரு நாளும் நடக்கிறது. நாம் பெரிதாகக் கண்டு கொள்ளுவதில்லை. உதாரணத்திற்கு, காரைக் கிளப்பி, நீங்கள் அதன் விசையை அழுத்துகையில் என்ன நடக்கிறது?. எந்த சிலிண்டருக்கு எத்தனை காற்றும், பெட்ரோலும் தேவை என்பதை ஒரு கணினி முடிவெடுக்கிறது. பயணத்தின் ஒவ்வொரு கணமும் இந்த முடிவை பல்வேறு அளவுகளை வைத்து முடிவெடுக்கிறது. எஞ்சினுக்குள் எரியும் எரிபொருளின் வெப்பம் குறைக்க எண்ணை எஞ்சினை குளிர்விக்கிறது. எண்ணையின் வெப்பம் மற்றும் பாகுநிலையை (viscosity) அதே கணினி கண்காணித்துப் பெட்ரோல் மற்றும் காற்றின் அளவைக் கட்டுப் படுத்திக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நொடியும், பல நூறு முறைகள் இந்த உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் தான், இன்றய கார்கள் பெட்ரோல் விஷயத்தில் சிக்கனமாக இருக்கின்றன. கார் விஷயத்தில், எல்லா உரையாடல்களும், பின்னணியில், காருக்குள்ளே நடந்து முடிந்து விடுகிறது. எப்பொழுதாவது, முகப்புப் பெட்டியில் (dashboard), ‘கோளாறு’ என்று அலறும் வரை நாம் கண்டு கொள்வதில்லை.

சரி, எங்கே இதில் இணையம் வந்தது? இதுவரை நாம் பார்த்த உரையாடல்கள் யாவையும், காருக்குளேயோ, வீட்டின் கணினிக்குள்ளோ அடங்கிவிட்டது. நாம் பார்த்த உதாரணத்தில், ’மாலன்’ எந்திரங்களின் பல விவரங்களைச் சேகரித்து வைக்கும் என்று கொள்ளலாம். அத்தனை எந்திரக் கருவிகள் ஒவ்வொரு நிமிடம் அனுப்பும் அளவுகளையும் நிறுவனத்தின் ஒரு வழங்கி வயலில் திரட்டி வைக்கப்பட்டிருக்கும் என்றும் கொள்ளலாம். மேல்வாரியாகப் பார்த்தால், உதிரி பாகங்களை மாற்றும் முடிவை, இது போன்ற விவரங்களைக் கொண்டு கணினி முடிவுக்காக முன் வைக்கிறது.

IOT part2-pic4

சற்று ஆழமாக அலசினால், சில விஷயங்கள் தெளிவாகும்:

  • கருவிகள், ஒரு எந்திரத்திலுள்ள சிறு செயலியுடன் (processor) தொடர்பு கொள்கிறது
  • செயலி, தேவைக்கேற்ப, கருவியுடன் தொடர்பு கொண்டு, ஆணை பிறப்பிக்கும் வல்லமை கொண்டது
  • ஒரு தொழிற்சாலையில், இது போல பல எந்திரங்களுக்கும், தலா ஒரு செயலி செயல்படும்
  • எல்லா எந்திரச் செயலிகளையும் இணைக்கும் வேலையை நிறுவனத்தின் வழங்கி வயல் செய்கிறது
  • இதைத்தான் கருவிகளின் இணையம் என்று சொல்லுகிறார்கள். நிறுவனத்தின் வழங்கி வயலுக்குப் பதில், இணையத்தில் ஒரு மேக சேகரிப்பு (cloud storage) மையத்திலும் சேகரிக்கலாம்
  • முக்கியமாக, இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒவ்வொரு படியிலும், முடிவாற்றல் திறன் (இதை கணினி ஆசாமிகள் intelligence என்று குழப்புகிறார்கள்) அதிகரித்துக் கொண்டே இருக்கும். சில முடிவுகளை எந்திரச் செயலிகளே எடுத்து விடலாம். இன்னும் சில சிக்கலான முடிவுகளை, செயலிகளை இணைக்கும் மையத்தில் முடிவெடுக்கலாம். உதாரணத்திற்கு, சென்னைத் தொழிற்சாலை செயலிகள் ஒரு தொழில்பகுதி கணினியால் (plant computer) இணைக்கப்படலாம். அந்தத் தொழில்பகுதியில், 3 ஷிஃப்ட் இருந்தால், ஷிஃப்ட் இடைவேளையில் செய்யப்பட வேண்டிய சில செயல்களை தொழில்பகுதி கணினி முடிவெடுக்கலாம். உதாரணத்திற்கு, தொழிற்சாலைத் தரைகளைச் சுத்தம் செய்யும் ரோபோக்களை இயக்குவது, ஆட்கள் அதிகம் இல்லாத பகுதிகளில் , விளக்குகளை சன்னமாக்குதல் போன்ற முடிவுகளுக்கு நிறுவனத்தின் வழங்கிகள் தேவையில்லை

பல கோடி புதிய கருவிகள், உணர்விகள் இணையத்தையே ஒரு கேள்விக்குறியாக்கும் சக்தி படைத்தது. எனினும், இந்த முன்னேற்றம் தடுக்க முடியாதது. புதிய சிந்தனை, அணுகுமுறைகள் அவசியமாகிறது.

எப்படி, இங்கு திடீரென்று வழங்கி வயல் (server farm) பற்றிய பேச்சு அடிபட்டது? நாம் சொன்ன தொழிற்சாலை உதாரணத்தில், பல நூறு எந்திரங்களின் பல கருவிகள், நாள் முழுவதும், ஓயாமல் வெப்பம், ஒளி, அழுத்தம், எடை, அசைவு, சத்த அளவு, பருமன், நேரம் என்று அளவுகளை அனுப்பிய வண்ணம் இருக்கும், இதற்கான சேமிப்புத் தேவை இதுவரை நாம் காணாத அளவு அதிகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ராட்சச சேமிப்பு மற்றும் செயல்படுத்தும் திறனுக்கு வழங்கி வயல்களை விட்டால் வேறு வழியில்லை. நல்ல வேளையாக, இத்தகைய வசதிகள் நாளுக்கு நாள் விலை குறைந்த வண்ணம் இருப்பதால், இந்தத் தொழில்நுட்பம் விரைவில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

விரைவில், என்றால், எத்தனை விரைவில்? இது மிகவும் கடினமான கேள்வி. ஜோஸ்யம் எல்லாம் இதற்கு ஒத்து வராது. ஒன்று மட்டும் தைரியமாகச் சொல்லலாம். மின்னணுவியல், கணினி மற்றும் மென்பொருள் துறைகள் என்றும் இல்லாத அளவு இந்தத் தொழில்நுட்பத்தை முன்னேற்றத் துடியாக வேலை செய்து வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த ஆப்பிள் நிறுவனத்தின் கடிகாரம் இந்த போக்கிற்கு மிகவும் ஒரு உந்துதலாய் அமைந்துள்ளது. ஏராளமான நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன.

IOT part2-pic5

இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள், இத்துறையின் பல்வேறு உபதுறைகளில், தங்களது கைவசத்தைக் காட்டி வருகிறார்கள். திடீரென்று, பல ஆண்டுகளாக எழுத்தாளர்கள் கனவு கண்டதைப் போல, பல சம்பந்தமில்லா நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டே ஒத்துழைக்கிறார்கள். இதை coopetition  என்று சொல்லுகிறார்கள். உதாரணத்திற்கு, Samsung, Google, Apple, Microsoft, LG, SAP, Intel, GE என்று ஒரு விசித்திரக் குடும்பம் – இன்னும் சில குழந்தைகள், பேரன் பேத்திகளோடு, குடும்பத்தில் உள்ள அனைத்து உணர்ச்சிகளுடன் இந்தத் துறையில் முன்னேறத் துடிக்கிறார்கள். நுகர்வோர் மின்னணுவியல் கருத்தரங்களுக்கு (consumer electronics shows) இவர்கள் அனைவரும் படை எடுக்கிறார்கள. இதுவரை, ஆரகிளோ, எஸ்.ஏ.பி. –யோ, நுகர்வோர் மின்னணுவியல் பக்கம் தலை வைத்துப் படுக்க மறுக்கும் நிறுவனங்கள்.

2015 –ல் நடந்த நுகர்வோர் மின்னணுவியல் கருத்தரங்கில், இந்த விநோத குடும்பத்தின், சில நிச்சயதார்த்த விடியோக்கள் இங்கே:

 

கருவி இணைய பில்ட் அப்

IOT part2-pic6

 

கணினி மற்றும் மென்பொருள் துறைகளில், தமிழ் சினிமா டைரக்டர்கள் போல, பில்டப் கொஞ்சம் அதிகம். வரலாறு படைக்கப் போகும் என்று விவரிக்கும் மொக்கைப் பட டைரக்டருக்கும், மென்பொருள் ஆசாமிகளுக்கும் சின்ன வித்தியாசம்தான். மொக்கைப் பட இயக்குனரின் கதி, படம் வெளி வந்தவுடன் தீர்மானமாகிவிடும் – அது ஒரு மாதமோ, இரண்டு மாதமோ ஆகலாம். கணினி மென்பொருள் துறையில் நுகர்வோரை ஒரு மென்பொருள் சென்று அடைந்து பயனுற ஒரு ஐந்து முதல் பத்தாண்டுகளாவது ஆகிறது. இதை hype cycle  என்கிறார்கள், இன்று ஏராளமாக ஊதி வாசிக்கப்படும் விஷயம் (2014) கருவிகளின் இணையம். அடுத்த ஐந்து ஆண்டுகள், இந்தத் தொழில்நுட்பத்திற்கு மிகவும் முக்கியம். பல ஊதி வாசிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், இந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் மறைந்து விடுகின்றன. இதை ஒரு மரணப் பாதாளமாகப் பார்க்கிறார்கள். இதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் தொழில்நுட்பமே நமக்கு நீண்ட நாள் பயன் அளிக்கிறது.

 

இத்துறையின் ஆரம்பம், 16 ஆண்டுகளுக்கு முன் 1999 –ல் தொடங்கியது என்று சொல்லலாம். கெவின் ஆஷ்டன் (Kevin Ashton) என்னும் ஆங்கிலேயர், சோப்பு மற்றும் நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் Procter and Gamble நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது, RFID தொழில்நுட்பத்தை உபயோகிக்கையில் (இதைப்பற்றி விரிவாக சொல்வனத்தில், சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன்) கருவிகளின் இணைய தொடர்பு நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று முதலில் கருத்து வெளியிட்டார். அவர் அப்பொழுது சொன்ன விஷயம்தான் Internet of things – வழக்கம் போல, மார்கெடிங் வல்லுனர்கள், இணையத்துடன் சம்பந்தமே இல்லாத சில விஷயங்களுக்கு இந்தப் பெயரை சூட்டி குழப்புவது, இந்த தொழிலின் நீண்ட நாள் வழக்கம். ஆனால் இன்று, இது ஒரு மிகவும் சீரியஸான தொழில் முயற்சியாகவும் வளர்ந்துள்ளது.

IOT part2-pic7

உடனே, யாராவது, ”அடுத்த ஞாயிறு எல்லா கருவிகளும் கைகோர்த்துக் கொண்டு உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும். தயவு செய்து உங்களது பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்” என்றால், ஓட்டம் பிடியுங்கள். இன்றையக் கருவிகளின் முடிவாற்றல் திறன், ஆரம்ப மற்றும் இடைப்பட்ட நிலைகளில் உள்ளது. இன்னும் இவை வளர, பலவித தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிறுவன ஒத்துழைப்பு தேவை. பொதுவாக, இன்றைய கருவிகள் பெரும்பாலும், ஒரு நிறுவனத்தின் படைப்புகளோடே வேலை செய்கின்றன. உதாரணத்திற்கு, ஆப்பிள் கடிகாரம், ஐஃபோன், மற்றும், ஐபேடுடன் நன்றாக வேலை செய்யும். அதே போல சாம்சுங்கின் பல கருவிகளும், சாம்சுங் உலகில், நன்றாக வேலை செய்யும். சில கருவிகளை ஒரு நிறுவனத்திடம் வாங்கி, மற்றவற்றை இன்னொரு நிறுவனத்திடம் வாங்கினால், உங்கள் பாடு திண்டாட்டம்தான்.

 

இப்படிப்பட்ட பல சிக்கல்கள், வளர்ந்துவரும் இத்துறையில் ஏராளமாக உள்ளன. நல்ல விஷயம் என்னவென்றால், பல நிறுவனங்களும், ஒரு சாதாரண நுகர்வோர் பார்வையில், தங்களது முயற்சிகளை முன்னேற்றினால்தான் வாடிக்கையாளர்கள் கருவிகளை வாங்குவார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டன. எல்லாவற்றையும் ஒரே நிறுவனத்திடம் நுகர்வோர் வாங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது அறிவற்ற செயல். ஆனால், பிரச்சினை இதுவென்று ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது. அதைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல, இத்தகைய தொழில்நுட்பப் பிரச்சினைகளை, விரிவாகப், பிறகு அலசுவோம்.

 

என்னதான் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், பல கருவிகளும் கம்பியில்லா தொடர்பு (WiFi) அல்லது புளூடூத் (Bluetooth) மூலமாகவே தங்களது அளவுகளை அடுத்த நிலைச் செயலிக்கு அனுப்புகின்றன. இவை,பாதுகாப்பில் அவ்வளவு பலமற்றவை. இந்தப் பிரச்சினை, ஒரு காருக்குள்ளோ அல்லது வீட்டிற்குள்ளோ பெரிதாக நாம் நினைப்பதில்லை. இவற்றை தாண்டி, இணையத்தில் இக்கருவிகள் தங்களது அளவுகளை பதிவு செய்ய வேண்டுமானால், கருவி பாதுகாப்பு, இன்னும் வளர வேண்டும். இதைப் பற்றி, விரிவாக இன்னொரு பகுதியில் பார்ப்போம்.

 

இன்னொரு முக்கியமான விஷயம், நுகர்வோரின் வழக்கங்கள் எப்படி மாறுமென்பது. சரியான தொலை பேசியே இல்லாத இந்தியா, சைனா போன்ற நாடுகளில் வசிக்கும் நுகர்வோர், செல்பேசிகள் மற்றும் நுண்ணறிபேசிகளை, மேலை நாட்டவர்களை விட, வேகமாக ஏற்றுக் கொண்டு, நன்றாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், புதிய கருவிகளை யார் விரைவில் ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. எந்தக் கருவிகளுக்கு வரவேற்பிருக்கும் என்றும் சொல்வது கடினம். இந்தக் கருவி இணைய முயற்சிகள் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக, நுகர்வோரற்ற துறைகளில், இத்துறை வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மற்ற துறைகளில் உள்ள முன்னேற்றங்கள் அடுத்தபடியாக நுகர்வோரைச் சென்றடையும் என்று நம்ப வாய்ப்புள்ளது. நுகர்வோர் துறைகளில் பல கோடி கருவிகள் விற்க வாய்ப்புள்ளதால் இதை முன் நிறுத்தி, பல காட்சியளிப்புகள் இன்று வந்த வண்ணம் உள்ளது. அத்துடன், இவ்வகை காட்சியளிப்புகள் சமூகத்தின் தொழில்நுட்ப மனப்போக்கையும் மாற்றும் முயற்சியில் ஒரு வழி என்று சொல்லலாம்.

- See more at: http://solvanam.com/?p=41505#sthash.Xj8RSAWM.dpuf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – தனியார் போக்குவரத்து உலகம் – பகுதி 3

 

”பதினோரு மணிக்கா ஆபீஸூக்கு வருவது?”

“அது ஒரு பெரிய கதை. எல்லாம் என் மகன் குமாரால் வந்தது.”

“நீங்க லேட்டா வந்துட்டு, பையனை ஏன் குறை சொல்றீங்க?”

”குமாருக்கு இன்னிக்குப் பள்ளிச் சுற்றுலா. காலை 6:00 மணிக்கு வீட்டிற்குப் பஸ் வந்து அழைத்துச் சென்றது.”

“அதுக்கு என்ன?”

“அவன், தெரியாமல் என்னுடைய திறன்பேசியை எடுத்துச் சென்று விட்டான். என்னுடைய கார் அந்த திறன்பேசி இல்லாமல் கிளம்பாது. நம் ஆபீஸ் செக்யூரிட்டிக்குச் செல்லும், கண்ணும் வேணுமே.”

“8:00 மணிக்குத்தான் தெரிய வந்து, அவனுடைய சுற்றுலா தளத்திற்கு டாக்ஸி பிடித்துச் சென்று, திறன்பேசியை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.”

oOo

தனியார் போக்குவரத்திற்கு வாகனங்களை உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இத்துடன், பைக்குகள், சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் என்று பலவித இரு சக்கர ஊர்திகளும் இன்று பயனில் உள்ளன. இன்றைய கார்களில், பல புதியக் கருவிகள் இணையத்துடன் முழுவதும் இணைக்கப்படாவிட்டாலும், சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்தப் புதிய கருவிகள் பெரும்பாலும் காரின் கணினி உதவியுடன் இயங்குகின்றன.

1. புதிய கார்களில், காமிராக்கள் காரை நிறுத்த உதவி புரிகின்றன

2. சில கார்களில், தானே காரை நிறுத்தும் வசதியும் வந்துவிட்டது. காமிரா உதவியுடன், கார் தானே சரியான இடத்தில் நிறுத்திக் கொள்கிறது. அதிக இடம் இல்லாத பெரு நகரங்களில் இது மிகவும் உதவியாக உள்ளது

3. சில விலை உயர்ந்த மாடல்களில், மிக அருகே இன்னொரு கார் இருந்தால், ஓட்டுனரின் காட்சிப் பெட்டியில், எச்சரிக்கை மற்றும் அலாரம் அடித்து உதவுகிறது. நெடுஞ்சாலைகளில், இது மிகவும் உதவுகிறது. இரவு கார் ஓட்டுபவர்கள், சற்று சோர்வால், கவனமிழந்து பக்கத்து சாலைப் பிரிவிற்கு வழுக்கினால், அதற்கும் எச்சரிக்கை உண்டு

4. 2007 –க்கு பிறகு வந்த ஏறக்குறைய எல்லா கார்களிலும், புளூடூத் முறையில் சாலையிலிருந்து கவனத்தை சிதறாமல், திறன்பேசியில் பேச முடிகிறது. பல மாடல்கள், ஓட்டுனரின் குரல் ஆணையை வைத்து அலுவலகத்தையோ, வீட்டையோ அழைக்கும் வசதி வந்து விட்டது

5. இன்று, ஓட்டுனர்கள் ஜி.பி.எஸ். வசதி திறன்பேசியில் வந்துவிட்டதால், எங்கு செல்ல வேண்டுமானாலும், கூகிளின் வரைபட மென்பொருளுடன் பேசியே ஆணை பிறப்பிக்கலாம்

இது இவ்வாறிருக்க, அடுத்தக் கட்டத் தனியார் வாகன முயற்சிகள், சில வெற்றிகளையும் இன்று பார்த்து விட்டது. டெஸ்லாவின் மின் கார், கூகிளின் தானியங்கிக் கார்கள், தனியார் வாகனங்களின் அடுத்தக் கட்ட முன்னோட்டத்தை உணர்த்துகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் செயல்திறனில் மிகவும் முன்னேறிய கார் டெஸ்லாவினுடையது. உலகின் மிகப் பயனுள்ள மின்கார் இது – ஒரு மின்னேற்றத்தில் 600 கி.மீ. வரை பயணம் செய்யலாம். மேலும், இதில் எண்ணெய் சமாச்சாரம் எதுவும் கிடையாது.

முக்கியமாக, எஞ்சின் ப்ளாக் இல்லாததால், எடையும் குறைவு. சாமான்களைக் காரின் முன்னும், பின்னும் வைத்துக் கொள்ளலாம். கார் கண்ணாடியைத் துடைக்க உதவும் சோப்புத் தண்ணிரைத் தவிர எந்த திரவமும் இக்காரில் இல்லை. காரின் மின்சார மோட்டார், காரின் அடியே அமைக்கப்பட்டுள்ளது. இரவு மின்னேற்றம் செய்தால், அடுத்த நாள் காரை ஓட்டலாம். இக்காரை இயக்குவதெல்லாம் மனிதராக இருந்தாலும், அதன் மோட்டரைக் கட்டுப்படுத்துவது, எப்பொழுது மின்னேற்றம் செய்வது, ஓட்டுனருக்குப் பல வகை அளவுகளைக் காட்சியளிப்பாக வழங்குவது, என்பதை எல்லாம், கருவிகள் மூலமாகப் பெற்று, காரின் கணினி முடிவிற்காக ஓட்டுனருக்கு முன்வைக்கும், கருவி இணைய முன்னேற்றம். முக்கியமாக, உலகில் முதன் முறையாக, ஓடும் காருக்கு மென்பொருள் மாற்றங்கள் செய்யும் வசதியுள்ள கார் டெஸ்லா. ஓட்டுனரின் ஒப்புதல் பெற்றே இந்த மாற்றங்கள் செய்யப்படும். இதற்காக, டீலரிடம் ஓடத் தேவையில்லை.

 

கூகிளின் தானியங்கிக் கார், கருவிகளின் வாயிலாகத் தன்னைச் சுற்றியுள்ள பயண உலகைக் கணிக்கிறது. ஜி.பி.எஸ். கருவி, லேசர்கள் மூலம், குறுக்கே வரும் பாதைசாரிகள் மற்றும் சாலைப் பழுது வேலையினால் உருவாகும் மாற்று வழிகளைக் (street diversions) கூடச் சமாளிக்கிறது.

கூகிள் தானியங்கிக் கார், சில வருடங்களாகச் சோதனையில் உள்ளது. கூகிள் நிரலர்கள், இதன் மென்பொருளை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், சாலை விபத்துக்கள் குறைய, நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆப்பிளும் இவ்வகை காரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 2015 –ல் பி.எம்.டபிள்யூ, சாம்சங்குடன் இணைந்து திறன்பேசி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய கார் ஒன்றை செய்முறை விளக்கம் காட்டியது.

இன்னும் இத்தகைய கார்கள், எல்லோரும் ஓட்டுவதற்காகச் சந்தைக்கு வரவில்லை. சில ஆண்டுகளில் இது சாத்தியம். இன்று கார்களில், சாலையைப் பார்த்து ஓட்டிக் கொண்டே புளூடூத் கொண்டு செல்பேசியில் பேச வசதியுண்டு. அனைத்து புதிய பைக்குகள்/கார்களிலும் ஜி.பி.எஸ். வசதியும் வந்துவிட்டது. இயக்கம் என்னவோ தப்பு செய்யும் நம் போன்ற ஓட்டுனர்கள் கையில்தான் உள்ளது. இன்றையக் காருக்குள்ளும், பலவகை உணர்விகள் உள்ளன. கண்ணாடியைச் சுத்தம் செய்யும் சோப்புத் தண்ணீரின் அளவு, எஞ்சினில் மோட்டார் எண்ணையின் அளவு, டயரில் காற்றழுத்த அளவு போன்ற விஷயங்களை அளந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய, பல விலை உயர்ந்த கார்களில், தக்க அளவை விட ஏதும் குறைந்தால் அதை ஓட்டுனருக்கு அறிவிக்கும் காட்சியளிப்பை வாகனத்தின் கணினி செய்கிறது. ஆனால், இவை யாவும் ஓர் ஆரம்ப நிலையே. சமீப காலமாக, கார் நிறுவனங்கள், மின்னணுக் கருவிகளைப் புதிய மாடல்களில் அள்ளி வீசுகின்றன. காரின் எஞ்சினை கட்டுப்படுத்தும் கணினியும் மென்பொருளும் ஏராளமாக முன்னேறியுள்ளன. இதனால், நம்மூர் கபாலி மெக்கானிக்கிடம் காரை எடுத்துச் செல்ல முடிவதில்லை என்று சிலர் அலுத்துக் கொள்வதும் சகஜமான விஷயம்.

IOT part3-pic1

கார் ஓட்டுனர்களிடம், அவர்களுக்குப் பெரும் உதவியாகக் கூடியக் கருவிகள் யாவை என்று ஆய்வு செய்ததில், இவற்றை மிக முக்கியம் என்று 2015 –ல் கூறியுள்ளார்கள்:

• ஓட்டுனர் சோர்வடையும் பொழுது, கவனச் சிதறல் ஏற்படும். இதைக் கருவி ஒன்று கணித்து, ஓட்டுனரை ஓய்வெடுக்கச் சொல்லுமானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

• பெரும்பாலும் விபத்துக்களில், நடக்குமுன் 30 நொடிகள் மிகவும் முக்கியம். ஓட்டுனரின் உயிரைக் காக்க இந்த 30 நொடிகளில் சரியான எச்சரிக்கையை வாகனம் அளித்தால், 60% உயிர்களைக் காக்க முடியும். 30 நொடிக்குள் வாகன வேகத்தைக் குறைப்பதுடன் எச்சரிக்கையும் கருவிகள் மூலம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்

• போக்குவரத்துத் தடங்கள் (traffic lanes) மாற்றுவதைக் கருவிகளே செய்தால் கார் ஓட்டுவது பாதுகாப்பாக இருக்கும்

• கார் பழுதாகியதும் என்ன செய்ய வேண்டும் என்பதை விடியோ அல்லது குரல் மூலம் கருவிகள் வழிகாட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

IOT part3-pic2

இதைத் தவிர, சில செளகரிய விஷயங்களையும் ஓட்டுனர்கள் எத்ரிபார்க்கிறார்கள்:

• காருக்குள் ஒரு குட்டி இணையதள வசதி (internet hot spot) – இது இன்றைய டெஸ்லா காரில் உண்டு

• காருக்குள் வெவ்வேறு பயணிகள் கேட்க, தனிப்பட்ட ஒலிக் கற்றைகள் (நம்முடைய உதாரணத்தில், மனோகருக்கும், செல்விக்கும் தனித்தனி ஒலிபரப்புகளைப் பார்த்தோம் – கணேஷ் குமரேஷின் வயலின் குழந்தைகள் பாடல்களோடு காருக்குள் அவரவர் காதுகளை எட்டியது)

• காரின் கண்ணாடி ஜன்னல்கள் கணினித் திரையாகப் பயன்பட வேண்டும்

• நகரும் காரின் ஜன்னலின் வெளியில் தெரியும் காட்சிகள், கணினி விளையாட்டுடன் தேவைப்பட்டால், இணைந்து கொள்ள வேண்டும்

இன்று, இத்தகையப் புதிய கார்களுக்காக நாம் காத்திருக்கையில், கருவி இணைய முயற்சிகளைப், பல புதிய நிறுவனங்கள் செய்த வண்ணம் இருக்கின்றன. இவற்றில், ஒன்று, நாவ்டி (NavD) என்ற நிறுவனம். திறன்பேசி மூலம், ஓட்டுனரின் கவனத்தைச் சிதறடிக்காமல், பல வேலைகளையும் செய்து முடித்துக் கொள்ளக் கூடிய ஒரு நுண் ஒளிப்படக்காட்டி (micro projector) அடக்கம். இதனால், விடியோ உரையாடல்கள், சைகை மூலம், பல ஆணைகளைப் பிறப்பிக்க வழி செய்துள்ளார்கள்.

பொதுவாக, மூன்று விஷயங்கள் கார் சம்பந்தப்பட்டக் கருவி இணையத்தின் மையமாகச் சொல்லலாம்:

1. காரை ஓட்டுபவர் எவ்வளவு பாதுகாப்பாகக் காரை ஓட்டுகிறார்? ஓட்டுனரின் பாதுகாப்புக்கு (safety) என்ன வழிகள்?

2. காரின் பாகங்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது?

3. கார் பயணிக்கும் சாலைகளில், என்ன நடக்கிறது? சாலையில் நடக்கும் நிகழ்வுகளைக், கார் எப்படிச் சமாளிக்கிறது?

மேலே குறிப்புகள் ஒன்று மற்றும் மூன்று, ஓட்டுனரைச் சார்ந்த விஷயங்கள். பெரும்பாலும், சாலை விபத்துக்கள், ஓட்டுனரின் கவனக் குறைவு மற்றும் வேகத்தினால் நிகழ்கின்றன என்பது பல ஆய்வுகளின் முடிவு. கருவி இணைய நிறுவனங்கள் இதில் பெரும் ஈடுபாடு காட்டுகின்றன. மற்றபடி, வசீகரத்திற்காக, பல சின்னச் செளகரிய மென்பொருள் கொசுறுகளையும் நுகர்வோருக்கு அள்ளி வீசுகிறார்கள்.

IOT part3-pic3

இதை எல்லாம் கருவிகளின் இணையம் மூலம் சாதிக்க முடியும் என்று நம்ப வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, எந்த ஒரு விபத்தும், நடக்கும் முப்பது வினாடிகளுக்கு முன் தடுக்கப்பட்டால், மிகப் பெரிய உயிர் சேதம் இன்றிக் காக்க முடியும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அத்துடன், சாலையில் சட்டப்படி உச்ச வேக அளவிற்கு மேல் பயணம் செய்வது, இன்னொரு காரணம். கருவிகள் தாங்கிய கார்கள், ஓட்டுனர் அதிக வேகம் பயணிக்க நினைத்தாலும், அவரைத் தடுக்கும் சக்தி கொண்டவை. சிலருக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிடிக்காவிட்டாலும், பலரின் பாதுகாப்பான பயணத்திற்கு இது அவசியம்.

கார்களின் கட்டமைப்பு மிகவும் சிக்கலானது. இவற்றில், நேரும் பழுதுகளை, இரு வகையாகப் பிரிக்கலாம்:

1. பழுது பார்க்கும் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பழுதுகள்

2. காரின் கணினியின் மென்பொருள் மாற்றங்கள்

இன்றே நமது கார்களில் ஏராளமான கணினி மென்பொருட்கள் பல உணர்விகளைக் கட்டுப்படுத்துகின்றன. எதிர்காலக் கார்கள், எப்பொழுதும் இணையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதால், மென்பொருள் மாற்றங்களை காருக்கு நேராக கார் நிறுவனம் அனுப்பிவிடலாம். இதற்காக, டீலரிடம் செல்ல வேண்டியதில்லை.

பயணிக்கும் பொழுது காரே, அதனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளைக் காமிராக்கள் மூலம், காரின் கணினிக்கு அனுப்பி, மென்பொருள் மூலம், அடுத்தபடி என்ன செய்ய வேண்டும் என்பதை நொடியில் முடிவெடுக்கிறது. இவ்வகைக் காமிராக்கள் எல்லா கார்களிலும் பொருத்தப்படத் தேவையில்லை. கூகிள் தானியங்கிக் காரின் விடியோவில் பார்த்தது போல், பாதசாரிகளையும், சைக்கிள் ஓட்டுபவர்களையும் சமாளித்துச் செலுத்தும் தொழில்நுட்பம், இன்று உள்ளது.
எந்த ஒரு காரும் சுற்றியுள்ள சிக்னல், நிறுத்துமிடம் போன்ற விஷயங்களைச் சார்ந்தே வேலை செய்யும். இதைப் பற்றி விவரமாக, கட்டமைப்புகளில் கருவிகளின் இணையத்தின் தாக்கம் பற்றி விவரிக்கையில் பார்ப்போம்.

கீழே ஹோண்டா நிறுவனத்தின் கருவி இணைய விடியோவைக் காணலாம்:

இந்தப் பகுதியில் நாம் அலசிய பல எதிர்பார்ப்புகள் வேறு விதமாக எதிர்காலத்தில் பூர்த்தி செய்யப்படலாம். ஆனால், பாதுகாப்பான பயணத்திற்கு, இத்தகைய முன்னேற்றங்கள் மிகவும் அவசியம். எத்தனை கார்கள் தானியங்கிக் கார்களாகும் என்று பல வித கணிப்புகள் இருந்தாலும், இன்னும் 10 வருடங்களில், ஒரு 5% கார்களாவது தானியங்கிக் கார்கள் ஆக வாய்ப்பு உள்ளது. அத்துடன், மின் கார்கள் இத்தகையக் கருவி இணைய உலகிற்குச் சரியான வாகனங்கள். இன்றைய மின்கலம் மற்றும் மின்னேற்றப் பிரச்னைகளைச் சரி செய்ய என்றும் இல்லாத அளவிற்கு இன்று அவசியம் அதிகமாகி வருகிறது. ஏனென்றால், புதிய கணினி மற்றும் மின்னணுக் கருவிகள் அனைத்திற்கும் இத்தகைய சக்தி எப்பொழுதும் தேவைப்படுகிறது.

கார் என்றவுடன் காப்பீடு உங்களது நினைவுக்கு வந்தால், அது சரியானதே. காப்பீடு நிறுவனங்கள், மனித ஓட்டுனரின் இயல்பை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள். இளைஞர்/இளைஞிகள் அதிக விபத்துகளில் சிக்கினால், இவர்களின் காப்பீடு அதற்கேற்றவாறு உயரும். அதே போல, கார் எத்தனை புதிதோ அத்தனை காப்பீடு உயரும். புதிய கார்களின் பாகங்களின் விலை, பழைய கார்களை விட அதிகம். கருவி இணைய முயற்சிகள் காரின் பாதுகாப்பை அதிகரித்து, காப்பீடு என்ற விஷயத்தையே தலை கீழாக்கி விடுகின்றன.  டெஸ்லா போன்ற இன்றைய கார்கள், நெடுஞ்சாலை மற்றும் நகரின் வீதியில் ஓட்டுனரின் பாதுகாப்பிறகாக காரின் இயக்கத்தை மற்ற கார்களின் வேகத்தைப் பொறுத்துக் கட்டுப் படுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டன. காப்பீடு நிறுவனங்களுக்கு இதனால், சற்று ஜுரம் வந்து, அவை பலவித புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஓட்டுனர்களின் கார் ஓட்டும் பழக்கங்களைப் பதிவு செய்யப் புதிய கருவிகள், சில இலவச ஊக்க அளிப்புகள் என்று தங்களைத் தயார் படுத்தத் தொடங்கி விட்டன.

தானியங்கிக் கார்கள் காப்பீடு நிறுவனங்களைப் பெரிதாக பாதிக்கும். இதனால், சில சட்டச் சிக்கல்களை இந்த நிறுவனங்களே ஏற்படுத்தும் என்றும் நம்பலாம். குறிப்பாக, டெஸ்லாவின் முயற்சிகள், கார் தொழிலையே மாற்றிவிடும் சக்தி கொண்டவை என்று பல வல்லுனர்களாலும் இன்று சொல்லப் படுகிறது. முழுக் கருவி இணைய வீச்சை இன்னும் எவராலும் இத்துறையில் கணிக்க முடியவில்லை. இணையத்துடன் தொடர்புடைய ஒரே காரினால், இத்தனை பயம், எதிர்பார்ப்பு, மற்றும் ஆதங்கம் இத்துறையில் இன்றுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இன்னும் பரவப் பரவ, காரகளைச் சார்ந்த பல உப தொழில்கள், குறிப்பாக, காப்பீடு மற்றும், பராமரிப்பு சார்ந்தவை, மிகவும் கவலைப்பட வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகள் நுகர்வோரைச் சார்ந்த விஷயங்கள்; பாதிக்கப்பட்ட உப தொழில்களைச் சார்ந்தன அல்ல. உதாரணத்திற்கு, விடியோ டேப் எந்திரத்தைச் சார்ந்த தொழில்கள் இன்று இல்லை என்று யாரும் கவலைப் படுவதில்லை. மாறாகப், புதிய தலைமுறையினர், விடியோ பார்க்கும் பொழுது இணைய வேகம் சரியில்லாததைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்:

- See more at: http://solvanam.com/?p=41719#sthash.yJOyFhk6.dpuf
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – அணியப்படும் கருவிகள்

 

“எப்படி இருக்கீங்க கண்ணன்?”

“எடைதான் குறையவே மாடேங்குது, டாக்டர்”

“நான் சொன்ன மாதிரி உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்யறீங்களா?”

”அதுல நான் ரொம்பக் குறிக்கோளோட இருக்கேன் டாக்டர். இந்த ஆறு மாசமா, தவறாம, இனிப்பே சாப்பிடறதில்லை. அதோடு, ஒரு நாள் விடாம உடற்பயிற்சி, டாக்டர்”

“ஏன் உங்க எடை அப்படியே இருக்குன்னு நெனைக்கிறீங்க?”

”நீங்கதான் சொல்லணும் டாக்டர்”

“கடந்த 150 நாட்களில், நீங்க, 12 முறைதான் உடற்பயிற்சி செய்தீங்க”

‘உங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்? சும்மா போட்டுத் தாக்காதீங்க”

”6 மாசம் முன்னாடி ஃபிட்பிட் –னு ஒரு கருவி வாங்கினீங்களா?”

“ஆமாம் டாக்டர்”

”ஊங்களது முகநூல் சுவற்றில் ஃபிட்பிட் தகவல் முழுசும் மேலேத்தி அலட்டி இருக்கிறீங்களே. அதுல, வெறும் 12 நாள்தான் உடற்பயிற்சி செஞ்சிருக்கீங்க”

”டாக்டர், வாங்கி 1 மாசத்திலேயே, அது தொலைஞ்சு போச்சு”

“சும்மா, கதை கட்டாதீங்க கண்ணன். கடைசி டேடா, போன வாரம் வெள்ளிக் கிழமை பார்த்ததாக ஞாபகம். இனிமேல், வாரத்துக்கு ரெண்டு முறை எனக்கு உங்க ஃபிட்பிட் நடவடிக்கைகளை அனுப்பிச்சுடுங்க!”

oOo

ioT_Wearable_Watch1

அணியப்படும் கருவிகளே, கருவிகளின் இணையம் என்ற தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய தூதுவனாக இன்று உள்ளது. அத்துடன், நிறையப் பணம் இருப்பவர்கள், அலட்டிக் கொள்ள உதவும் ஒரு நுட்பம் என்ற கருத்தையும் பரவ உதவியதும், இக்கருவிகளே. ஆனால், குழந்தைத்தனத்தைத் தாண்டி, இக்கருவிகள் மிகவும் முக்கியமான விஷயங்களுக்குப் பயன்படும்படி பல புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. வெகு விரைவில், ஆரம்பக் கருத்துக்கள் மறையும் என்று நம்பலாம். கருவிகளின் இணையம் பற்றிப் பலருக்கும் புரிய வைத்த தொழில்நுட்பம் என்பதால், இது மிகவும் முக்கியமான ஒரு முன்னேற்றம். கருவிகளின் இணையத்தை முன்னேற்றத் துடிப்பவர்கள், அதன் விமர்சகர்கள் அனைவரும், ஆரம்பத்தில், ஏதாவது அணியப்படும் கருவியைக் கண்டே, அப்படி மாறியவர்கள். நீங்களும் இந்தப் பகுதியைப் படித்து, அதன் ஆதரவாளர் அல்லது எதிர்ப்பாளராகலாம்! இன்னொரு முக்கிய விஷயம் – அணியப்படும் கருவிகளின் மிகப் பெரிய வாடிக்கையாளர்கள் 1980 –க்கு பிறந்த Millennials என்று அழைக்கப்படும் புதிய தலைமுறையினர்.

இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்களைச் கீழ்கண்டவாராகப் பிரிக்கலாம்:

  1. ஜாலியாக அலட்டிக் கொள்ள உதவும் அணிக் கருவிகள்
  2. உடல்நிலைத் தகுதியை (physical fitness) அளக்கும் அணிக் கருவிகள்
  3. விளையாட்டில் உயர்வுபெற உதவும் அணிக் கருவிகள்
  4. தொழில்களில் வேலைக்குப் பயன்படும் அணிக் கருவிகள்
  5. நோயாளிகளுக்குப் பயன் படும் அணிக் கருவிகள்
  6. உடல் ஊனமுற்றோருக்கு உதவும் அணிக் கருவிகள்

இன்று ஆப்பிள் கடிகாரம் இவ்வகை அணிக் கருவிகளின் ராஜா என்று பலராலும் பரவலாக நம்பப்பட்டாலும், பெபிள் என்ற நிறுவனம் எவ்வாறு இந்தத் துறையில் பல்லாண்டுகளாகத் தொழில்நுட்பத்தை முன்னேற்றி வந்துள்ளது என்பதையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

ஜாலியாக அலட்டிக் கொள்ள உதவும் அணிக் கருவிகள்

IoT_iwatch_Android_Wear_2

ஆப்பிள் கடிகாரம் வெளிவரப்போகிறது என்ற அரசல் புரசலான செய்திகள் வரும்போதே, பெபிள் கடிகாரங்கள் சந்தையில் முன்னோடியாக இருந்தது. இன்று ஏராளமான நிறுவனங்கள் இவ்வகைக் கடிகாரங்களைத் தயாரித்துச் சந்தைக்குக் கொண்டு வரத் தொடங்கிவிட்டன. பல மாடல்கள் கொண்ட, இவ்வகைக் கடிகாரங்கள், சில வேலைகளை எளிதாக்குகிறது:

  • உங்களது திறன்பேசியில் வரும் குறுஞ்செய்திகளை (text messages) கடிகாரத்திலேயே பார்க்கலாம் (தமிழில் அல்ல). சின்னச் செய்திகளை உங்கள் கடிகாரத்திடம் சொல்லிவிடலாம் – ஆம், அதில் ஒரு குட்டி ஒலிவாங்கியும் உண்டு!
  • உங்களது அடுத்தச் சந்திப்பு அல்லது திட்டம் பற்றிய அறிவிப்பை திறன்பேசியிலிருந்து பெற்றுக்கொண்டு, உங்கள் கடிகாரம் அறிவிக்கும்
  • கிரிக்கெட் மாட்சின் தற்போதைய நிலவரங்களை உடனுக்குடன் கைகடிகாரத்தில் நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ளலாம்
  • அடுத்தது மழையா வெய்யிலா என்ற வானிலை அறிக்கைகளையும், இடி மின்னல் எச்சரிக்கைகளையும்  உங்களுடைய கடிகாரத்தை மணிக்கட்டில் பார்த்தாலே தெரிந்துவிடும்
  • உங்களுக்குப் பிடித்த சினிமா தியேட்டரில் அடுத்தக் காட்சிகளில் என்ன படம் என்று கடிகாரம் சொல்லும்
  • அட, மறந்து விட்டேனே – நேரமும், தேதியும் காட்டாவிட்டால் அது என்ன கடிகாரம்?
  • உங்களது பாட்டுப்பெட்டியில், என்ன சங்கீதம் ஒலிக்க வேண்டும் என்பதை உங்களது கடிகாரத்திலிருந்தே நீங்கள் முடிவு செய்யலாம்
  • கடிகாரத்தின் முகப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மென்பொருள் மூலம் மாற்றி அமைக்கலாம். வாரம் ஒரு முகப்பு, அல்லது நாள் ஒரு முகப்பு என்று அலட்டித் தள்ளலாம்

இவை அனைத்தையும் இன்றைய ஆப்பிள் கடிகாரமும் செய்கிறது. கடிகாரங்கள் இவற்றை மட்டும் செய்யாமல், இன்று உடல்நிலைத் தகுதியையும் (physical fitness) அளக்க ஆரம்பித்து விட்டன.

இந்தப் பகுதியில் இன்னும் இரு அலட்டல் சமாச்சாரங்களைப் பார்ப்போம். முதலாவது, எங்குப் பயணித்தாலும், விடியோ என்று அணிந்து கொள்ளும் படப்பதிவுக் கருவி. காலையில் இட்லி சாப்பிட்டதை, டிவிட்டரில் அலட்டிக் கொள்ளும் மனிதர்களுக்குத் தகுந்த ஒரு கருவி. எங்கு வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். இதோ மதுரைக்கு பஸ்ஸில் பயணம் என்று முழுப் பயணத்தையும் விடியோவில் எடுத்து, அதையே முகநூலில் மேலேற்றலாம்!

 

Kids_IoT_watch_Mom_3

சற்று பயனுள்ள அலட்டல் என்ற வகையைச் சேர்ந்தது மைஃப்ளிப் என்ற கருவி. சிறு குழந்தைகள் பள்ளி சென்று தொலைந்து விடக் கூடாதே என்று கவலைப் படும் பணக்கார குடும்பங்களுக்கு ஜி,பி.எஸ், குறுஞ்செய்தி என்று அனைத்தும் தாங்கியது மைஃப்ளிப்.

குழந்தை எங்கிருக்கிறது என்று ஜி,பி.எஸ். காட்டிவிடும். மேலும், ஐந்து குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ளும் குட்டி கடிகாரம் இது. பெற்றோருக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் உண்டு (உதாரணமாக, இவ்வகை கடிகாரம் அணிந்த சிறுவர்களுக்கு, ”மாலை பள்ளி முடிந்தவுடன், 3:50 –க்கு, அம்மா வடக்கு கேட் முன் இருப்பேன்” என்று செய்தி அனுப்பலாம் ).

இதுபோன்ற கருவிகள் பல பின்விளைவுகளை இன்னும் நுகர்வோர்கள் முழுவதும் புரிந்து கொள்ளவில்லை. இவ்வகைக் கருவிகளால், அலட்டிக் கொள்ள முடிந்தாலும், பல அபாயங்களும் கூடவே வருகிறது.

  1. பாதுகாப்பிற்காக அணிவிக்கப்பட்ட இக்கருவிகளை இணைய விஷமிகள் ஊடுருவி, பிள்ளைகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்காலாம்
  2. படம் பதிவு செய்யும் கருவிகள், சுற்றியுள்ளவரின் அனுமதியில்லாமலே படம் பிடிப்பது, சட்டத்துக்குப் புறமானது. மேலும், இவ்வகைக் கருவிகள் பொதுவிடத்தில் படமெடுத்தாலும் அந்தரங்க மீறல் விஷயங்களே
  3. மேலே நாம் பார்த்த கடிகாரங்கள் இரு கட்சிகளாகச் செயல்படுகின்றன. ஆப்பிள் உலகம் மற்றும் ஆண்ட்ராய்டு உலகம். ஒன்றில் வேலை செய்தால், இன்னொன்றில் வேலை செய்யாது. கூகிள் சென்ற வாரம், ஆண்ட்ராய்டு கடிகாரங்கள் ஐஃபோனுடன் வேலை செய்யும் என்று அறிவித்தது ஒரு நல்ல முன்னேற்றம். ஆப்பிள் இன்னும் முரண் பிடித்துக் கொண்டிருக்கிறது

உடல்நிலைத் தகுதியை (physical fitness) அளக்கும் அணிக் கருவிகள்

Healthcare_ioT_Internet_Of_Things_track_fitbit_4

ஒன்றல்ல, இரண்டல்ல, பல வகையான அணிக் கருவிகள் இன்று இளைய வயதினரைக் கவர அணி வகுக்கின்றன! பெரும்பாலும், இவை கையில், காலில் அல்லது கழுத்தில் அணியும் சிறு கருவிகள். இவற்றை அணிந்து கொண்டால், இக்கருவிகள் என்ன செய்யும்?

  • மணிக்கட்டில் அணியும் இக்கருவிகள், பெரும்பாலும், எத்தனைப் படிகள் (step count) நடந்து இருக்கிறீர்கள் என்று சொல்லும் – அதுவும், இன்று, இவ்வாரம், இம்மாதம் என்று கணக்கு வைத்துக் கொண்டு காட்டும். அதையே உங்களது திறன்பேசிக்கு அனுப்பிவிடும்
  • எத்தனை தூரம் ஓடினீர்கள், எத்தனை வெப்ப அளவுகள் (கலோரிகள்) செலவழித்தீர்கள் என்று பல விஷயங்களை நாள், வாரம், மாதம் என்று கணக்கு வைத்து அழகாக புரியும்படி திறன்பேசியில் காட்டிவிடும். சிலருக்கு இது ஒரு நல்ல உடற்பயிற்சி உந்துதலைக் கொடுக்கிறது. சென்ற வார நடை/ஓட்டத்தை விட இவ்வாரம் குறைவாக உள்ளதே என்று சென்ற வார அளவை அடைய இது ஒரு தூண்டுகோலாக அமைய வழி வகுக்கிறது. நம் மனதைப் போல, கருவி பொய் சொல்லாது. வளர்ச்சியோ, வீழ்ச்சியோ சரியான அளவுகள் சம்பந்தப்பட்டது
  • எத்தனை மணி நேரம் உறங்கினீர்கள் என்றும் கணக்கு வைத்துக் கொள்ளும். நாள்தோறும், சரியான அளவு உறக்கம் என்பது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. பொதுவாக, எத்தனை மணி நேரம் உறங்கினோம் என்பது நமக்கு ஒரு குத்து மதிப்பாகத் தான் தெரியும். எழுந்தவுடன் சற்று சோர்வாக இருந்தால், சரியாகத் தூங்கவில்லை என்று அர்த்தமாகாது. உங்களது அசைவுகளை வைத்து, கருவி, உங்களது தூக்க அளவை கணித்து விடுகிறது
  • பொதுவாக, இவ்வகைக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள், இரு விஷயங்களைப் பின்பற்றுகிறார்கள். முதல் வகை, ஒரு குறிக்கோளை மனதில் வைத்து உடற்பயிற்சி செய்பவர்கள். இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மைல் நடக்க வேண்டும், முப்பது மைல் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஒரு இலக்கை வைத்துக் கொண்டு, மெதுவாக, அந்தக் இலக்கை அடைய, இக்கருவிகள் உதவுகின்றன. இரண்டாம் வகை, நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் போட்டி மனப்பான்மையோடு, இத்தனை கலோரிகள் செலவழித்தேன், இத்தனை தூரம் ஓடினேன் என்று அலட்டிக் கொண்டு, சில காலம் தள்ளுபவர்கள். இரு சாராருக்கும் இவ்வகைக் கருவிகள் வழி வகுக்கின்றன

மேலேயுள்ள விடியோ, இவ்வகைக் கருவிகளை விமர்சிக்கிறது. பல கருவிகள் சந்தையில் இருப்பதால், ஏராளமான குழப்பம் இருப்பது உண்மை. 2015 நிலவரப்படி, இரண்டு உடல்நிலைத் தகுதியை அளக்கும் அணிக் கருவிகள், பற்றிய ஒரு ஒப்பிடல், கீழே;

அம்சம் ஃபிட்பிட் ஃளெக்ஸ்  ஜாபோன் அப்24 
விலை $79 $48
பட்டைக் குறியீடு வருடி இல்லை உண்டு
நிறுத்தல் கடிகாரம் இல்லை உண்டு
நடவடிக்கை அறிக்கை உண்டு உண்டு
தூக்க அறிக்கை உண்டு உண்டு
கலோரி  அளவு இல்லை உண்டு
மனநிலை (மூட்) இல்லை உண்டு
மின்கல நாட்கள் (ஒரு மின்னேற்றத்தில்) ஐந்து நாட்கள் ஏழு நாட்கள்
மின்னேற்ற நேரம் இரண்டு மணி நேரம் ஒரு மணி 20 நிமிடங்கள்
எல்.ஈ.டி. காட்சியளிப்பு உண்டு உண்டு
தண்ணிர் எதிர்ப்புத் தன்மை உண்டு உண்டு
திறன்பேசித் தொடர்பு புளூடூத் 4.0 புளூடூத் 4.0
USB மூலமாக கணினியுடன் செய்தி பரிமாற்றம் எளிமையாக உண்டு இல்லை
கணினி மற்றும் திறன்பேசி களுடன் உறவாடும் திறமை விண்டோஸ், விண்டோஸ் திறன்பேசி, ஐ.ஓ.எஸ், ஆண்ட்ராய்டு ஐ.ஓ.எஸ், ஆண்ட்ராய்டு

 

மிகவும் எளிமையாக இவ்வகைக் கருவிகளை சாதாரணர்களும் பயன்படுத்துமாறு, புதிய முயற்சிகள் சந்தைக்கு வந்தபடியே இருக்கின்றன. இந்த வகையில், அதிகம் பெரிதாக எதுவுமே காட்டாமல், தேவையான அனைத்தையும் திறன்பேசிக்கு எளிதாக மாற்றிவிடும் கருவிகளும் உண்டு. இவ்வகைக் கருவிகள், மற்றக் கருவிகளைப் போல எல்லாம் செய்யவல்லது. ஆனால், சிலருக்கு இவ்வகைக் கருவிகளை, கழுத்தில், காலில், கையில் அணிய அதிக பந்தா இல்லாமல் இருப்பதும் பிடிக்கிறது.

இப்படி, பல நிறுவனங்கள் இந்தத் துறையில் போட்டி போட்டுக் கொண்டு இயங்கத் தொடங்கிவிட்டன. முக்கியமான வித்தியாசம், கருவிகளுடன் வரும் திறன்பேசி மென்பொருளைப் பொறுத்தது.

விளையாட்டில் உயர்வுபெற உதவும் அணிக் கருவிகள்

IoT_Internet_of_Sports_5

இந்தப் பகுதியில் நாம் அலசப்போகும் கருவிகளுக்கும், உடல்நிலைத் தகுதி (physical fitness) கருவிகளுக்கும் அதிகம் இல்லாதது போலத் தோன்றினாலும், இவை சற்று மாறுபட்டவை. இவற்றின் குறிக்கோள், ஒரு விளையாட்டு வீரரின் செயல்திறனைக் கூட்டுவது. இவ்வகைக் கருவிகள் பயிற்சியில் மிகவும் பயனளிக்கக் கூடியவை.

  1. முதல் வகை, கண்களில் கண்ணாடி போல அணிந்து கொண்டு ஓட்டப் பயிற்சி, மற்றும் பனிச்சறுக்கல் (alpine skiing), போன்ற விளையாட்டுகளில் தேர்ச்சிபெற உதவும் கருவி. இவை வேகம், நேரம், தூரம், பனிச்சறுக்கலில் உயரம், சரிவின் அளவு போன்றவற்றைக் காட்டுவதுடன், ஒவ்வொரு முயற்சியின் அளவுகளையும், திறன்பேசிக்கு அனுப்பி விடுகிறது. திறன்பேசியில் அழகான படங்களுடன் உங்களுடைய முன்னேற்றத்தையோ/ பின்னேற்றத்தையோ நாள், வாரம், மாதம் என்று படம் வரைந்து காட்டிவிடுகிறது
  2. பலவகை விளையாட்டுகளுக்குத் தகுந்தவாறு, கருவிகள் வந்துவிட்டன. டென்னிஸ்ஸுக்கு, பேஸ்பால், கால்ஃப் போன்ற விளையாட்டுக்களுக்கு மட்டையில், அல்லது பந்தை அடிக்கும் குச்சி அல்லது சுத்தியலுடன் (racquet, bat, strike, hammer) இணைக்கும் கருவிகள் இவை. புளூடூத் மூலம், விளையாட்டு வீரரின் செயல்திறன் அளவுகளை திறன்பேசிக்கு அனுப்பி விடுகிறது. இந்த விஷயங்களை வைத்து, அந்த வீரர் தொடர்ந்து தன் பயிற்சியின் இலக்கை அடைய எளிதாக்க உதவும் கருவிகள் இவை
  3. ஒட்டப் பந்தய வீரர்களுக்குப் பயிற்சியில் மிகவும் உதவக்கூடிய கருவிகள் அவர்களுடையக் காலுறைகளில் அணிபவை. ஒற்றைக் காலிலோ, இரண்டு கால்களிலோ, இவ்வகைக் கருவிகளை அணியலாம். எந்தக் காலில் அழுத்தம் அதிகம், பின்னங்கால்களை எவ்வளவு பயன் படுத்துகிறார்கள், முன்னங்கால்களை இரு புறமும் (இடது, வலது) சரியாக பயன்படுத்துகிறார்களா என்று அத்தனை தரவுகளையும் படிப்படியாக இக்கருவிகள் பதிவு செய்து, திறன்பேசிக்கு அனுப்பி விடுகிறது.
  4. இன்னொரு முக்கியமான விளையாட்டு விஷயம், வீரர்களுக்கு விளையாடும் பொழுது ஏற்படும் காயங்கள். காயம் படும் பொழுதைக் காட்டிலும், சில ஆண்டுகளுக்குப் பின், இத்தகைய காயங்களின் விளைவுகள் மிகவும் மோசமானவை. இதைத் அணுக்க விளையாட்டுக்கள் (contact sports) என்கிறார்கள் – கால் பந்து, பனி ஹாக்கி போன்ற விளையாட்டுக்களில், வீரர்கள் மோதும் பொழுது, தலையில் ஏற்படும் காயங்கள் உடனே சிகிச்சை அளிக்கப்பட்டால், நெடுங்கால விளைவுகளைத் தடுக்கலாம். தலையில் அணியும் தொப்பிக்குள் உள்ள உணர்வி மோதலின் அளவை சரியாகக் கணித்து நடந்த சம்பவத்தைப் பதிவு செய்கிறது. அணியின் மருத்துவருக்கு, இது மிகவும் பயனுள்ள சிகிச்சை நண்பன். ஏனென்னில், மனிதர்களால் இத்தகைய மோதலின் அளவைச் சரியாகச் சொல்ல முடியாது. பல மோதல்கள் கவனிக்கப்படாமலே இன்று விடப்பட்டு, வீரர், வயதாகி ஓய்வு காலத்தில் மருத்துவமனையோடு காலம் தள்ளுவதைத் தடுக்க இவ்வகைக் கருவிகள் பெரிதாக உதவலாம்

மேலே சொன்ன உதாரணங்கள், விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியில் இக்கருவிகள் எப்படி உதவுகின்றன என்று பார்த்தோம். நாளடைவில், இத்தகையக் கருவிகள், எந்த வீரர் வெற்றி பெறுவார் என்பதைத் தீர்மானிக்கும் அளவிற்கு மிகவும் உதவும் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். எதிர்காலத்தில், இவ்வகைக் கருவிகள் வீரர் தேர்ந்தெடுப்பிலும் பயன்படும் என்ற கருத்து நிலவுகிறது.

தொழில்களில் வேலைக்கு பயன்படும் அணிக் கருவிகள்

கூகிள் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் (2012) கூகிள் கிளாஸ் (Google Glass)  என்றத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நுட்பம், கண்களில் அணியும் ஒரு கண்ணாடியின் ஒரு பகுதியில் சிறு தகவல்களைக் காண்பிக்க வல்லது. அத்துடன், அதில் இணைக்கப்பட்டுள்ள காமிரா மூலம், அணிந்தவர் பார்க்கும் காட்சியை, இணையம் மூலம் உடனே இன்னொருவருக்கு அனுப்பும் திறன் படைத்தது.

இந்தத் தொழில்நுட்பத்தினால் உருவாகிய ஏராளமான நுகர்வோர் பிரச்னைகளால், கூகிள், இன்று இந்த நுட்பத்தை மேலும் மெருகேற்றி வெளியிட, வேலை செய்து கொண்டிருக்கிறது.

கூகிள் கண்ணாடி என்ன பிரச்னைகளை சந்தித்தது?

  1. அந்தரங்கம் முதல் பிரச்னை. பார்க்கும் எதையும் பதிவு செய்யலாம் என்ற பட்சத்தில், கண்ணாடி அணிபவர், பதிவு செய்ய யாரிடம் அனுமதி பெற்றார்?
  2. ஒற்றைக் கண்ணில் அணிந்து கொண்டு, நடமாடுவது ஏதோ ஒரு ரோபோ போல கட்சியளிப்பது பலருக்குப் பிடிக்கவில்லை. அத்துடன், வழக்கமாக அணியும் கண்ணாடியை விடப் பெரிதாக இருந்ததும் இன்னொரு குறை
  3. பயன்பாட்டுச் சிக்கல்கள். கூகிள் கண்ணாடி, பெட்டியிலிருந்து வெளியே எடுத்து, உடனே பயன்படுத்த முடிவதில்லை. இதற்காகப் பயிற்சி தேவைப்படுகிறது. வாங்கிய பலரும் எளிமையாக இல்லாததால், கண்ணாடியைத் திருப்பி அனுப்பி விட்டனர்
  4. அச்சம். பார்போருக்கு இவ்வகை கண்ணாடி அணிந்தவர்கள் அச்சுறுத்தலாகப் பட்டது

ஆனால், இதற்கு முழுவதும் காத்திருக்கத் தேவையில்லை என்று சில நிறுவனங்கள், இந்த நுட்பத்தைத் தங்களுடைய தொழில் தேவைகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. உற்பத்தி மற்றும் தயாரிப்புப் பகுதியில், நாம் பார்த்தது போல, சுரங்கத் தொழிலில், பல தொலை தூர இடங்களில் (remote areas) வேலை செய்ய நேரும். அங்கு சென்று, பல எந்திரங்களைப் பழுது மற்றும், பராமரிப்பு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, என்னதான் பயிற்சி அளித்தாலும், அவர்களுக்கு உதவ இந்த வகை அணிக் கருவிகள் மிகவும் பயன்படுகிறது. கீழே உள்ள விடியோ, இத்த்கைய சூழலில் எவ்வாறு ஒரு நிபுணர் தொலை தூர பராமரிப்பு வேலைகளில் இந்தக் கருவி மூலம் உதவுகிறார் என்று பார்க்கலாம்.

கூகிள் கண்ணாடியின் ஒரு அருமையான பயன்பாடு, இவ்வகைத் தொழில் உலகப் பயன்பாடுகள். கூகிளின் கண்ணாடி தொழில்நுட்பத்தை தொழிலுலக தேவைக்கேற்ப மாற்றியமைத்ததில் இந்த நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. அனைத்து தொடர்புகளும் ஒரு நிறுவனத்திற்குள்ளே இடுப்பதால், அந்தரங்கப் பிரச்னை இல்லை. அத்துடன், தொழிலாளர்களுக்குச் சரியாக பயிற்சி அளிப்பதால், பயன்படுத்துவதில் பிரச்னையும் இல்லை. இந்தக் கருவியை தயாரிக்கும் நிறுவனத்தின் இன்னும் சில தகவல்கள் இங்கே.

 

மைக்ரோசாஃப்ட், முப்பரிமாண ஹோலோலென்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளது. முப்பரிமான பிம்பங்கள் அணியப்படும் கண்ணாடி வழியே பலவித புதிய பயன்பாடுகளை உருவாக்கும் என்று மைக்ரோசாஃப்ட் சொல்லி வருகிறது. இன்னும் சில மாதங்களில், நுகர்வோர் இவ்வகைக் கண்ணாடிகளை நாடுகிறார்களா என்று தெரிந்துவிடும்.

wearables_Fold_Chips_Tech_IoT_6

இந்தக் கருவிகளின் அடுத்தக் கட்டமாக, மின்னணு பச்சைகுத்தல் (electronic tattoo) போன்ற முன்னேற்றங்கள் மூலம் பல புதிய பயன்பாடுகளை உருவாக்க முடியும். மின்னணுவியல் பொருட்கள் என்றவுடன் நமக்கு அவை வளையாத பொருட்களாகத் தோன்றும்.  ஆனால், இன்று மின்னணுவியல் சுற்றுக்கள் (bendable electronic circuits) வளையும் தன்மையைப் பெறத் தொடங்கிவிட்டன. தன்னுடைய பரப்பளவிலிருந்து 2 மடங்கு வரை வளைந்து வேலை செய்யும் திறனை இன்று ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். உடலின் உட்பகுதியில் அணிந்து கொள்ளக் கூடிய இவ்வகை கருவிகள், பல புதிய மாற்றங்களை உருவாக்க வல்லது என்கிறார்கள் நிபுணர்கள். கீழே உள்ள விடியோவில் இந்தத் தொழில்நுட்பத்தை, கூகிளின் ஆராய்ச்சி முயற்சிகளுக்குத் தலைமை வகிக்கும் பெண்மணி எளிமையாக விளக்குகிறார்.

நோயாளிகளுக்கு பயன்படும் அணி கருவிகள்

பலவகைக் கருவிகள் நோயாளிகளைக் கண்காணிக்க உதவும் வழிகளை நாம், ‘பொது மருத்துவம்’ என்ற பகுதியில் பார்க்கவுள்ளோம். வளையும் கருவிகள், நோயாளி மற்றும் அவரைக் கவனிக்கும் மருத்துவ உதவியாளர் இரு சாராருக்கும் பயன்படும் நுட்பம். கீழேயுள்ள விடியோவில், இது எப்படி நிகழ்கிறது என்று காட்டுகிறது:

பிஞ்சுக் குழந்தைகளுக்குக் கூட, இக்கருவிகளை அணிவிக்கலாம் என்று சில நிறுவனங்கள் சொல்லி வருகின்றன. ஆனால், இத்துறையில் பல சர்ச்சைகள் உள்ளன. உதாரணத்திற்கு, சில டாக்டர்கள் தங்களது நோயாளிகளை மாதம் ஒரு முறையோ, அல்லது இரண்டு மாதம் ஒரு முறையோதான் பார்க்கிறார்கள். நோயாளியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதைச் சில அளவுகள் கொண்டு முடிவெடுக்கிறார்கள். கடந்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களாக நோயாளியின் நிலை என்ன என்பதைப் பெரும்பாலும் யூகிக்கிறார்கள். கருவிகளை அணிந்த நோயாளிகள் துல்லியமாக நோயாளியின் கடந்த மாதங்களில் என்ன நடந்தது என்பதைக் காட்ட வல்லது. இது சில நோய்களை வருமுன் தடுக்க உதவும். ஆனால், எத்தனை டாக்டர்களுக்கு இதை எல்லாம் படிக்க நேரமிருக்கும் என்பது ஒரு பெரிய கேள்விதான். அத்துடன், தன் அன்றாட உடல்நிலைப் பற்றி மருத்துவருக்குத் தெரிவிப்பது நோயாளியின் விருப்பம். கருவிகள் முடிவெடுக்கக் கூடாது.

ஒன்றை மட்டும் மறுக்க முடியாது. கருவி இணையத் துறையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்னவோ இவ்வகை அணிக் கருவிகள் என்றால் மிகையாகாது. அலட்டவோ, காக்கவோ, சரியாக விளையாட்டுப் பயிற்சி பெறவோ, தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு நிபுணத்துவம் வழங்கவோ, இந்த அணிக் கருவிகள் நிச்சயம் பயன்படத்தான் போகிறது.

அணிக் கருவிகளின் தாக்கம் மற்றும் எதிர்காலம் பற்றிய ஒரு குறும் படம் இங்கே:

உடல் ஊனமுற்றோருக்கு உதவும் அணிக் கருவிகள்

உடல் ஊனமுற்றோருக்காகத் தயாரிக்கப்படும் அணிக் கருவிகள் சாதாரண மனிதர்களுக்கு உள்ளது போல அல்லாமல், மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட வேண்டும். சாதாரண மனிதர்கள், கருவிகள், அப்படி இப்படி இருந்தால், சுதாரித்துக் கொள்வார்கள். அணியும் நுகர்வோரின் குறைபாட்டை அறிந்து, அந்தக் குறையை நீக்க உதவும் கருவியாக தொழில்நுட்பம் மாற வேண்டும். சாதாரண அணிக் கருவிகளை விட அதிகமாகவே, இதனால், பரிசோதித்த பிறகே இப்பொருட்கள் சந்தைக்கு வர வேண்டும். இதனால், இத்தகைய அணிக் கருவிகளின் விலையும் சற்று கூடுதலாகவே இருக்கும். மருத்துவத் துறையில் சோதனை கெடுபிடிகள் அதிகம். வெளி வந்த மென்பொருளை மெதுவாக சரி செய்து கொள்ளலாம் என்ற போக்குகிற்கு இடமில்லை. அத்துடன், அமெரிக்காவில் ஃப்.டி.ஏ. சான்றிதழ் பெறுவதற்குள் கிழிந்துவிடும். ’நோயாளி’ என்ற சொல் வந்தாலே, எழு அடுக்கு சோதனை செய்து, எல்லோரையும் அனுசரித்துப் பொருளை வெளி கொண்டு வருவது, மருந்து கம்பெனிகளுக்கு மட்டும் கைவந்தக் கலை.

சில தொழில்நுட்ப வல்லுனர்கள், அலட்டிக் கொள்ள உதவும் இத்தகைய கருவிகள்/உணர்விகளை உடல் ஊனமுற்றோருக்குப் பயன்படுமாறு மாற்றி அமைக்க முயற்சி எடுப்பது, இன்னும் நம்மில் மனிதாபிமானம் நிறைய இருப்பதைக் காட்டும் விஷயம்.

பயானிக் லேப்ஸ்  என்ற கனேடிய நிறுவனம், சக்கர நாற்காலியில் நடக்க முடியாமல் தவிக்கும் ஊனமுற்றோருக்கு நடக்க உதவும் ஒரு ரோபோ அணிக்கருவியைத் தயாரிக்கிறது. விலை ஏராளமாக இருப்பதால், மருத்துவமனைகளோடு சேர்ந்து இந்தத் தயாரிப்பை சந்தைக்குக் கொண்டு வரும் முயற்சியாக மாறியுள்ளது.

 

சென்ஸிமாட் என்ற இன்னொரு கனேடிய நிறுவனம், சக்கர நாற்காலியில் உடகாரும் ஊனமுற்றோருக்கான, பெரிய பிரச்னையான அழுத்தப் புண்கள் வருவதைத் தடுக்க உதவும் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளது, சக்கர நாற்காலியின் சீட்டின் அடியில் இந்த உணர்விகள், எங்கு அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதை ஒரு திறன்பேசிக்கு தரவாக அனுப்பி விடுகிறது. தேவைக்கேற்ப, அழுத்தத்தைச் சீரமைத்தால், புண் வருவதைத் தடுக்க முடியும். சில புண்கள் ஆறுவதற்குப் பல்லாண்டுகள் ஆவதால், இது ஒரு மிக நல்ல முன்னேற்றம் என்று சொல்ல வேண்டும்.

முதியோர் இல்லங்களில் உள்ள ஒரு பெரும் பிரச்னையை அழகாக அணிக் கருவி கொண்டு உதவும் இன்னொரு முயற்சி இங்கே:

 See more at: http://solvanam.com/?p=41887#sthash.DmtNVybU.dpuf



 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – அலுவலகங்களில் கருவிகள்

பெரும்பாலும் அலுவலகங்களில்தான், கணினி வல்லுனர்கள் வேலை செய்கிறார்கள் – இதனால், கருவிகளின் இணையம் அலுவலகங்களில் தானே முதலில் தொடங்க வேண்டும்? கேள்வி என்னவோ நியாயமானதுதான். ஆனால், அலுவலகங்கள், கட்டிடங்களில் இவ்வகைக் கருவிகளின் தாக்கம் என்னவோ மிகக் குறைவுதான். இத்தனைக்கும், உலகையே மாற்றி அமைக்கத் துடிக்கும் நிறுவனங்களின் அலுவலகங்கள் என்னவோ மிகவும் பின்தங்கித்தான் இருக்கின்றன.

அலுவலகக் கட்டிடங்களின் சக்தி தேவைகளைக் குறைத்து, அதன் செயல்திறனை உயர்த்த, பல வழிகளை, LEED (Leadership in Energy and Environmental Design) என்ற அமைப்பு, முன் வைத்து, அப்படிக் கட்டப்படும் கட்டிடங்களுக்குச், சில ஆண்டுகளாக, சான்றிதழும் வழங்கி வருகிறார்கள். இதில் முக்கியமான அளவுகளாக, இந்த அமைப்புப் பார்ப்பது:

  1. மின்சார சக்தியை வீணாக்காமல் பயன்படுத்துகிறார்களா?
  2. கட்டிடத்தை குளிர்விக்கவும், சூடாக்கவும் எவ்வளவு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்?
  3. தண்ணீரை எவ்வாறு சேமித்து பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, மழை நீரை மறுபயன்படுத்துகிறார்களா?
  4. அலுவலகப் பாதுகாப்பு அமைப்பு ,எவ்வாறு உள்ளது?
  5. மறுபயன்பாட்டுப் பொருள்களைப் (recycling) பயன்படுத்துகிறார்களா?
  6. எப்படிக் கழிவை (மக்கும், மக்காத) நகர அமைப்புகளோடு சேர்ந்து கையாளுகிறார்கள்?
  7. இதைத் தவிர கட்டிடப் பொருட்கள் சம்பந்தப்பட்ட சில தேவைகளும் உண்டு

IOT part5-pic1

சில, புதிய அலுவலகக் கட்டிடங்கள் இவ்வகைச் சான்றிதழ் பெறுவதில் பெருமை கொள்கிறார்கள். இந்தச் சான்றிதழ் பெறுவதற்காகச், சில கருவிகளை கட்டிடத்தில் நிறுவ வேண்டிய கட்டாயம், உருவாகிறது. சில கட்டிடங்கள், இவ்வகைச் சான்றிதழை, அதிக வாடகை வசூலிக்கும் ஒரு வழியாகப் பார்க்கிறார்கள். சில மேற்கத்திய நகரங்களில், இவ்வகைச் சான்றிதழ் பெற்ற கட்டிடங்களுக்குச் சில வரிச் சலுகைகளும் உண்டு.

நாம் நினைப்பதை விட, பல பெரிய அலுவலகங்களில் ஏராளமான பொருட்கள் விரயமாக்கப் படுகிறது. விரயத்தை குறைப்பதும் ஒரு முக்கியமான வேலை. எத்தகைய விரயம்?

  • காகித விரயம் (பல அச்சு எந்திரங்களை பயன்படுத்தும் பெரிய அலுவலகங்களில் இது ஒரு பெரிய பிரச்னை). இதில் பொட்டலக் காகிதமும் (packaging materials), சம்பந்தப்பட்ட பொருட்களின் விரயம்
  • தொடர்ந்து எரிவதால், பல மின் குமிழ்கள் விரயம் செய்யும் மின்சாரம்
  • தொடர்ந்து வேலை செய்வதால், கணினிகள் விரயம் செய்யும் மின்சாரம்
  • யாரும் இல்லாத அலுவலகங்களில் அநாவசிய குளிர்சாதன விரயம். குளிர் நாடுகளில், வெப்ப சக்தி விரயம்
  • தண்ணிர் விரயம். பல மாடி, பல துறைகள் கொண்ட பெரிய அலுவலகங்களில் இது மிக அதிகம்
  • உணவுப் பொருட்கள் விரயம்

இது போல சொல்லிக் கொண்டே போகலாம்.

IOT part5-pic2

இத்தனை விரயத்தையும் குறைக்க, பல வழிகளை கருவிகள்/உணர்விகள் இன்றே செய்து காட்ட வல்லவை. ஆனால் இந்தத் துறையில், இதை ஒரு தார்மீகப் பொறுப்பாக, பல அலுவலகத் தலைவர்கள் எண்ணுவதில்லை. இன்றும் மேற்குலகில் கட்டப்படும் பல புதிய கட்டடங்கள் இத்தகைய குறிக்கோளுக்காக எதையும் செய்வதில்லை. இந்த அணுகுமுறையில், கட்டிடம் கட்டும் செலவு சற்று கூடுதலாகும். ஆனால், கட்டிடப் பராமரிப்புச் செலவு மிகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெரிய கட்டிடம் கட்ட 2 முதல் 3 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், கட்டப்படும் கட்டிடம், குறைந்தது 60 முதல் 100 வருடம் வரைப் பயன்படும். பராமரிப்புச் செலவு 60 முதல் 100 வருடங்களுக்கு குறைப்பது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு தொலை நோக்கு.

கருவிகள்/உணர்விகள் எந்த வகையில் உதவும்?

  1. ஆள் நடமாட்டமில்லாத அறையில் தானாக விளக்குகள் அணைந்து விட வேண்டும். இதற்கு தேவை ஒரு சிறிய இயக்க உணர்வி (motion sensor). பத்து ஆண்டுகளாக இவ்வகை உணர்விகள் கிடைக்கின்றன
  2. மாலை அலுவலகர்கள் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றவுடன், விளக்குகள் தானே அணைந்து விட வேண்டும், காலையில் அவர்கள் அலுவலகத்திற்குள் வரும் பொழுது தானே எரிய வேண்டும்
  3. வெய்யில் காலத்தில், அதிக மனிதர்கள் கூடியுள்ள அறைகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த அறையின் வெப்பநிலை உடனே குறைக்கப்பட வேண்டும்
  4. குளியலறைகளில், தண்ணீர் கைகளை கழுவியவுடன் தானே நின்று விட வேண்டும் (மேற்குலகில் இந்த வசதி எல்லா பொது இடங்களிலும் உண்டு). இதற்குத் தேவை, ஒளி உணர்வி (photo electric sensor) தாங்கிய குழாய்கள்
  5. இன்று இயக்க உணர்விகளைத் தாண்டி, பல்புகளிலேயே உணர்விகள் வந்துவிட்டன. இவை கட்டிடக் கட்டுப்பாட்டுக் கணினியுடன் தொடர்பில் இருக்கும். எங்கே நடமாட்டம் உண்டு என்பதை கணினிக்கு உடனே தெரியப்படுத்தும்
  6. குளியலறையில் உள்ள ஒளி உணர்விகள், அதற்கு வெளியிலும் பல வேலைகளைச் செய்ய வல்லது. இவை சற்று உயர்த்தர உணர்விகள். மறு பயன்பாடுத் தொட்டிகள், அச்சடிக்கும் எந்திரங்களின் டிரேக்களில் இவற்றை நிறுவிவிட்டால், எப்பொழுது நிரம்பி வழிகிறது தொட்டி, அல்லது காலியாகிறது டிரே என்று கணினிக்கு செய்தி அனுப்ப வல்லவை இந்த வகை உணர்விகள்

மேலே உள்ள விடியோ யான்ஸி என்ற நிறுவனம் தன்னுடைய உணர்விகள் அலுவலகங்களில் எவ்வாறு உதவுகிறது என்று காட்டுகிறது.

இன்னொரு சிறிய நிறுவனம், வியாபாரக் கட்டிடங்களின் செயல்திற்னை உயர்த்துவதற்காக, பல புதிய உணர்விகளை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. கட்டிடங்களின், வெளிச்சம், வெப்பம், குளிர் என்று பல உணர்விகள் எவ்வாறு கட்டிடங்களுக்கு ப்யனளிக்கும் என்ற என்லைடன் (Enlighten) நிறுவன விடியோ:

Enlighted: Lighting Is Only the Beginning from Enlighted, Inc. on Vimeo.

 

கட்டிடங்கள் விஷயத்தில் இன்னும் இரு முக்கிய பிரச்னைகள் – பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்துமிடம். வாகன நிறுத்துமிடத்தை சமாளிப்பது வியாபாரக் கட்டிடங்களில், பெரிய விஷயம். நகரத்தில் மையப் பகுதிகளில் இருக்கும் இக்கட்டிடங்களில், இடத்தின் மதிப்பு ஏராளம். இருக்கும் இடத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது அவசியம். அடுக்கு மாடி வியாபாரக் கட்டிடங்களில், பல கீழ் தளங்கள் வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப் படுகிறது. எத்தனை கார்கள் நிறுத்தப் பட்டிருக்கின்றன, எத்தனை காலி இடங்கள் உள்ளன என்பதை உணர்விகள் கொண்டு எளிதாக கணித்து விடலாம். இன்று, பல கட்டிடங்களில், எத்தனை காலி நிறுத்துமிடங்கள் உள்ளன என்று பெரிதாக வெளியே காட்சியளிப்பில் காட்டுகிறார்கள். இவ்வகை உணர்விகள் இரு வகைப் பட்டவை. முதல் வகை, கட்டிடத்தின் உள்ளே/வெளியே செல்லும் பகுதியில் மட்டும் இருக்கும். மொத்தம் எத்தனை வாகனங்கள் நிறுத்த முடியும் என்பது தெரிந்த விஷயம். உதாரணத்திற்கு, 500 வாகனங்கள் ஒரு கட்டிடத்தில் நிறுத்த முடியும் என்று வைத்துக் கொள்வோம். 15 வாகனங்கள் உள்ளே போனால், 485 காலி இடங்கள் இருக்கும், 4 வாகனங்கள் வெளியே சென்றால், 489 காலி இடங்கள் இருக்கும், எந்த தளத்தில் இந்த காலி இடங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு நிறுத்துமிடத்திலும் ஒரு உணர்வி இருந்தால், எந்த தளம், எந்த நிறுத்துமிடம் காலியாக இருக்கிறது என்று துல்லியமாகச் சொல்லிவிட முடியும்.

IOT part5-pic3

பாதுகாப்புக்கு இன்று விடியோ காமிராக்கள், ஏறக்குறைய அனைத்து வணிகக் கட்டிடங்களிலும் வந்து விட்டன. இத்துடன், சின்ன செயலிகள் தாங்கிய கார்டுகள், விழி வருடிகள் என்று டிஜிட்டல் முறைகள் வந்துவிட்டன. இந்த உணர்விகள், கட்டிடத்தில் யார், எந்த நேரத்தில், எந்தப் பகுதியில் இருக்கிறார்கள் என்று எளிதாகச் செல்லிவிட முடியும்.

இந்தக் கட்டிட விஷயத்தில், பழைய வியாபாரக் கட்டிடங்களும் ஓரளவு பயன்பெற வாய்ப்புண்டு. குறிப்பாக, உணர்வி தாங்கிய மின் குமிழ்கள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும். கணினியோடு தொடர்பு இருந்தால், இந்தக் கருவிகளால் மேலும் பயன் பெற வாய்ப்புண்டு. அப்படித் தொடர்பு இல்லாவிட்டாலும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தானால் அணைந்து கொள்ளும் திறமை கொண்டது. இந்தத் துறை, மற்ற கருவி இணையத் துறைகளை விட மெதுவாகவே முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம். வியாபாரக் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள், பர்மிட்டுகள் தேவை. மேலும், பழைய கட்டிடங்களில் வாடகை பெரிதாக கிடைக்கும் என்பதால், இவற்றின் சொந்தக்காரர்கள் உடனே மாற மாட்டார்கள். ஓரளவிற்கு, இது சட்டத்தால் மாற்ற முடியும். இதை நாம் மேலும், கட்டுமான கருவி இணையம் பகுதியில் பார்ப்போம்.

IOT part5-pic4

கட்டிடங்களில் இன்றைய கருவி இணைய துறையில் அதிகம் பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம், Zigbee என்ற நுட்பம். மிகக் குறைந்த மின்சாரமே தேவையான உணர்விகள் இதில் அடக்கம். மின்விளக்கு, வெப்பம், நகர்வு, மற்றும் சில உணர்விகள் இதில் அடக்கம். LEED இயக்கத்திற்கு மேலும் உதவ, Zigbee Green என்ற மிகக் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் நியமம் ஒன்று உருவாகியுள்ளது. சில உணர்விகள் மின்கலம் இல்லாமலே வேலை செய்யும் திறம் படைத்தவை. உதாரணத்திற்கு, ஒரு குப்பைக் கூடை நிரம்பி விட்டால், எச்சரிக்கும் உணர்வி காகிதங்களின் அசைவையே சக்தியாக பயன்படுத்திக் கொள்ளலாம்!

மேலே உள்ள விடியோ, இவ்வகை உணர்விகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அழகாக விளக்குகிறது.

- See more at: http://solvanam.com/?p=42034#sthash.qD1RFFdX.dpuf

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம்: பொது மருத்துவம்

ரவி நடராஜன் 

 
போன வாரம் எங்க மாமா அப்படி ஒரு பெரிய கலாட்டா பண்ணிட்டார்”

”என்னாச்சு?”

”மருத்துவமனையில் சேர்ந்து, 2 நாள் சிகிச்சை முடிந்து, வீட்டுக்குத் திரும்பினார். கையோட, அவருக்கு மருத்துவமனை ஒரு நுண்ணறிப்பேசியைக் கொடுத்து, அவருடைய கட்டிலில், சில கருவிகளை இணைத்துத், தனிப்பட்ட இணைய கனெக்‌ஷன் வேற. என் பையன் அருணுக்கு அப்படி ஏதும் விளையாட்டு விஷயங்கள் வாங்கித் தரவில்லை என்று கடுப்பு வேறு”

”விஷயத்துக்கு வா”

”மாமா அந்த நுண்ணறிப்பேசியில் என்னவோ செய்ய, வீட்டில் ஆம்புலன்ஸ் வந்து காலனியே கூடிடுச்சு. மாமா, ஜாலியா சிரிக்கறாரு”

”அப்படி என்னதான் செஞ்சாராம்?”

”மயக்கத்துல இருக்கும் போது இப்படி அப்படி தடவுங்கனு ஒரு நுண்ணறிப்பேசிய குடுத்தாங்க. சரி, போரடிக்காம இருக்க என்னவோ விளையாடக் குடுக்கறாங்கன்னு விட்டுட்டேன். உனக்குத்தான் தெரியுமே, எனக்குச் சிவப்பு கலர் பிடிக்கும்னு. அந்த நுண்ணறிப்பேசியில் உள்ள பல ஸ்லைடுகளை சிகப்பு ஆகும் வரை நகர்த்தி விட்டேன். எனக்கு என்ன தெரியும், இது வலி எவ்வளவு, மூச்சு முட்டல் எவ்வளவுனு கேக்கறாங்கனு? கண்ணாடி வேற போட்டுக்கலையா…”

***

 

i

 

பொது மருத்துவத்தில், பல வகை மருத்துவ சேவைகள் இதில் அடங்கும். சில நாடுகளில் (இங்கிலாந்து, கனடா), மருத்துவ சேவைகளை, மக்களது வரிப்பணத்திலிருந்து, அரசாங்கம் வழங்குகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், மருத்துவ சேவைகள் காப்பீடு மூலமாக (medical insurance) வழங்கப் படுகின்றன. அங்குள்ள குடிமக்கள், காப்பீடு பணம் கட்டுவதற்குத் தகுந்தவாறு, சேவைகள் வழங்கப் படுகின்றன. இந்தியா போன்ற நாடுகள், அமெரிக்க முறையை பின்பற்றத் தொடங்கிவிட்டன. இந்த இரு முறைகளிலும் உள்ள மருத்துவ சேவைப் பிரச்னைகள் என்னவோ ஒன்றுதான்.

மிக முக்கியமான மருத்துவ சேவை பிரச்னைகளில் இவை அடக்கம்:

  1. படுக்கைகள் அதிகம் இல்லாததால், நோயாளிகள், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். வீடு திரும்பிய நோயாளிகளை மருத்துவப் பயிற்சியுடைய எவரும் பார்த்துக் கொள்ள வழியில்லை
  2. சரியான உணவு மற்றும் மருந்துகளை நோயாளிகள் உட்கொண்டார்களா என்று கண்காணிக்க வழி இல்லை
  3. சிகிச்சைக்குப் பின், சரியான உடற்பயிற்சி எடுத்துக் கொள்கிறார்களா என்றும் நோயாளிகள் கண்காணிக்கப்படுவதில்லை
  4. நோயாளிகளின் நிலை மிகவும் மோசமடைந்த பிறகே, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்

மருத்துவ சிகிச்சைக்குப் பின்,  சிகிச்சையின் பொழுது உள்ளதைப் போலவே தொடர்ந்து கவனம் இருந்தால்தான், சிகிச்சை வெற்றி பெறும். ஆயினும், இதற்கு வழியில்லாமல், இன்று, இது ஒரு மிகப் பெரிய உடல்நலப் பிரச்னை. அதிலும், வயதானவர்களைச் சரிவர கவனிப்பது, தற்போதைய மருத்துவ முறைகளில் மிகவும் கடினம்.

இன்று, வயதானவர்கள்கூட  நுண்ணறிப்பேசியை பயன்படுத்தும் முறையைப் புரிந்து கொண்டு விட்டார்கள். இதனால், இத்தகைய கருவிகளில் மருத்துவ இணையத்தின் மிக முக்கிய அங்கம், நுண்ணறிபேசி.

 
 

மேலேயுள்ள விடியோ இன்று நடக்கவல்ல ஒரு கருவி இணைய முயற்சி. இதில் உள்ள கருவிகள் மிகவும் எளிதானவை. ரத்தத்தில் உள்ள பிராணவாயுவை (blood oxygen level) அளக்கும் உணர்வி, மருந்துகளை அளந்து தரும் வழங்கி (medicine dispenser) , இணையத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய எடை எந்திரம் (smart weighing scale).

இந்தச் சிறு கருவிகளின் கூட்டம், பயிற்சி பெற்ற நர்ஸ்களுக்கு, இணையம் மூலம் நோயாளிகளின் நிலையைச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன. எந்த நோயாளின் நிலை மோசமடைந்தாலும், உடனே நர்ஸ், நுண்ணறிப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, சரி செய்ய முயற்சிப்பார். இல்லையேல், நோயாளியின் உறவினரைத் தொடர்பு கொண்டு, உடனே மருத்துவமனைக்கு அழைத்து வரும் ஏற்பாட்டையும் செய்ய முடியும். இத்தகைய கருவிகளின் இணையம் மூலம் சிகிச்சை மேம்படுவதால், அதிக படுக்கைகள், ஆஸ்பத்திரியில் தேவையில்லை. அத்துடன், இத்தகைய முயற்சிகளுக்கு ஆகும் செலவு என்பது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை விடக் குறைவானது.

இந்த முயற்சியின் இன்னொரு முகம், டாக்டர்கள் பயன்படுத்தும் கருவிகள். பெரிய மருத்துவமனைகளில் பயன்படுத்தும் காகிதப் பதிவுகளுக்கு (patient records) அளவே இல்லை. முதலில் காகிதம், பிறகு, அதையே கணினியில் டைப் செய்து முக்கிய நோயாளிகளின் மருத்துவ அளவுகள், ஸ்கான், எக்ஸ் கதிர் சுருள் போன்ற விஷயங்களையும் மேலேற்றி விடுகிறார்கள். இதனால், கணினியில் உள்ள விஷயம் முக்கியமானதாக இருந்தாலும், பழைய செய்தி போல எப்போதாவது பயன்படும் விஷயம். இத்தனைக்கும், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மின்னணுவியலுக்குக் குறைச்சலே இல்லை. டாக்டர் நோயாளியை பார்க்கும் பொழுது பயன்படுத்துவது என்னவோ காகிதப் பதிவுதான்!

இன்று கலிஃபோர்னியாவில், ஒரு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு எல்லா மருத்துவக் குறிப்புகளும், பரிசோதனை முடிவுகளும், வில்லைக் கணினி/ நுண்ணறிப்பேசியில் வழங்கப் படுகிறது. நோயாளியின் அன்றைய நிலையும் கணினிகள் மூலம், டாக்டர்களின் வில்லைக் கணினியில் உடனுக்குடன் கிடைத்து விடுகிறது. கருவிகள்/உணர்விகள் மருத்துவமனையின் வழங்கிக் கணினிக்கு, உடனுக்குடன் அளவுகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. இதனால், மருத்துவர்கள், காகிதத்தைத் துரத்துவதை விட்டு, நோயாளிகளைக் கவனிக்கலாம்.

 
 

இந்தப் பகுதியில் நாம் இன்றைய சாத்தியங்களைப் பார்த்தோம். இத்துறை இன்னும் குழந்தைப் பருவத்தில் உள்ளது. பல வகை புதிய உணர்விகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் பொறியாளர்கள். வெப்பம், எடை, பிராணவாயு அளவு, நாடியளவு, ரத்த அழுத்தம், சுற்றுவட்ட அளவு போன்றவற்றிற்கு, இன்று உணர்விகள் உண்டு. ஆனால், மருத்துவத் துறையில், ஒரு நோயாளி எவ்வளவு வலியில் இருக்கிறார், எப்படி அவர் பார்வையில் அவரது நிலமை உள்ளது என்பதும் முக்கியம். இவற்றை, நுண்ணறிபேசிகளில் பயன்பாடுகள் மூலம் நோயாளிகளே தெரிவிக்கும் முறைகளும் வந்துவிட்டன.

கனடாவின், மிகவும் குளிர் (இந்த நாட்டில், எங்கும் குளிர்தான் – சில பகுதிகளில், செல்ல முடியாத அளவிற்குக் குளிர்) வாய்ந்த வடக்கு பகுதிகளுக்கு, இன்று இப்படியும் ஒரு வான்கூவர் நகரத்தில் வசிக்கும் மருத்துவர் சேவை செய்கிறார்;

 
 

கருவிகளின் இணையம், நோயாளிகளுக்கும், அவர்களைக் கவனிக்கும் மருத்துவத் துறையினருக்கும் பயன்படும் ஒரு விஷயம். இத்துடன், பயண வசதிகள் குறைந்த பகுதிகளுக்கு, இவ்வகைத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். தூரம் என்பது இணையத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. மிகப் பெரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பல நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்தபடி சிகிச்சைக்கடுத்த மீட்சியைப் (post procedure recovery) பெறலாம்.

லாபத்திற்காக இயங்கும் அமெரிக்க முறையும், அல்லது அரசாங்கத்தால் குடிமக்களுக்கு வரிப்பணத்திலிருந்து வழங்கப்படும் கனடா/இங்கிலாந்து போன்ற முறையும், இவ்வகைக் கருவி இணைய வசதிகளால் பயனடையும். நம்முடைய உதாரணங்கள் இத்தகைய இரு அமைப்புகளிலும் நோயாளிகளுக்கு உதவுவதைப் பார்த்தோம். எந்த முறையானாலும், நோயாளிகளின் பிரச்னையைத் தீர்க்க வழி செய்தால், இன்றைய அமைப்பை விட முன்னேற்றம் என்று சொல்ல வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், கருவிகள் மனித சேவையை என்றும் விலக்கி விடாது – துணை போனாலே அது சேவையின் தரத்தை உயர்த்தும்.

- See more at: http://solvanam.com/?p=42244#sthash.momcvjhC.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான விளங்கங்கள் பிரமாதம். தொடரட்டும் உங்கள் சேவை.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – பொதுப் போக்குவரத்துத் துறை

  •  

பொதுப் போக்குவரத்து என்றவுடன், நமக்குப் பேருந்து, டாக்ஸி, ரயில் போன்ற விஷயங்கள், ஞாபகத்திற்கு வரும். வட அமெரிக்கர்களுக்கு வாடகைக் காரும், விமானங்களும் உடனே மனதில் தோன்றலாம். இவை யாவும் பொதுப் போக்குவரத்து விஷயங்கள். தனியார் கார்களில் இக்கருவிகளின் இணையம் பற்றிச் சென்ற பகுதியில் அலசினோம். இந்தப் பகுதியில், பெருவாரியான வாகனங்கள் கொண்ட ஒரு அமைப்பில், இத்தகைய கருவிகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இதை ஆங்கிலத்தில், fleet management  என்று அழைக்கிறார்கள்.

இத்தகைய வாகனங்களின் அமைப்புகளில், சில முக்கியமான பிரச்னைகள், தனியார் வாகனங்களிலிருந்து மாறுபட்டவை:

  1. நிறைய வாகனங்கள் இருப்பதால், எத்தனை எரிபொருள் தேவை என்பது மிக முக்கியம். 2% மிச்சம் என்பது, தனியார் வாகனங்களைக் காட்டிலும் பொது வாகன அமைப்புகளில், மிகவும் பெரிய விஷயம்
  2. தனியார் வாகனங்களைப் போல அல்லாமல், பல நாட்கள் இவ்வாகனங்கள் தொடர்ந்து செலுத்தப்படும். நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு சரக்கு எடுத்துச் செல்லும் லாரி, ரயில், நிற்காமல் ஓடும் வாகனங்கள். இவற்றின் பாகங்கள் சரியாக தொடர்ந்து வேலை செய்வது மிக அவசியம்
  3. இத்தகைய வாகன அமைப்பில் எவ்வளவு நேரம் வண்டி ஓடுகிறதோ, அவ்வளவி லாபம். அதாவது, ஓடாத லாரியோ, பறக்காத விமானமோ, இவ்வகை வியாபாரத்தில், ஒரு பாரமாகக் கருதப்படுகிறது

IOT part7-pic1

எப்படிக் கருவிகள்/உணர்விகள் இந்த வியாபாரத்தை முன்னேற்ற உதவும்?

  1. ஒரு ரயிலின் எஞ்சினோ அல்லது ஒரு லாரியோ, ஒவ்வொரு மைலுக்கும் பல வகை சூழ்நிலைகளைக் கடக்கிறது. இன்று, இத்தகைய சூழ்நிலைகளின் தரவு நம்மிடம் இல்லை. ஏதாவது ஒரு பாகம் வேலை செய்யாமல் நின்றாலே, என்னவாயிற்று என்று பார்க்கிறோம். இதனால், வருமுன் காக்காமல், பல நாட்கள் பழுது வேலையில் வாகனங்கள் பயனின்றிப் போகின்றன. டிஜிட்டல் உணர்விகள், ஒவ்வொரு மைலுக்கும் 10 மெகாபைட் வரை தரவுகளை (data) ஒரு மேகக் கணினி வழங்கிக்கு (cloud data server) கொடுத்த வண்ணம் இருக்கும், என்று கணிக்கப் பட்டுள்ளது
  2. உதாரணத்திற்கு, லாரியின் டயர்களில் டிஜிட்டல் வால்வுகள் சாலையின் தரத்திற்கேற்ப, எவ்வளவு தேய்மானம் அடைகிறது என்று அளந்து தொடர்ந்து தரவுகளைக் கொடுத்த வண்ணம் இருக்கும். இதை வைத்து, டயரில், ஒரு 20 சதவீதம் இருக்கும் போது, மாற்றிவிட்டால், சரக்குப் போக்குவரத்து தொடர்ந்து நடக்க வழி செய்யலாம்; மேலும், இது பாதுபாப்புக்கும் (safety) நல்லதொரு விஷயம். இத்தகைய வருமுன் பராமரிப்பு (preventive maintenance) மிக முக்கியப் பயன் தரும் விஷயம்
  3. அத்துடன், இத்தகையத் தரவுகள், ஓட்டுனர் எப்படி வாகனத்தைச் செலுத்துகிறார் என்றும் தெரிய வரும். சில வேகங்களில், சில எடை தாங்கிய லாரிகள், வழக்கத்திற்கும் அதிகமாக எரிபொருளை எரிக்கும். இன்று, ஓட்டுனர்கள் எப்படி வாகனங்களை ஓட்டுகிறர்கள் என்று பக்கத்தில் உடகார்ந்து பயணம் செய்தால்தான் தெரியவரும். ஓட்டுனர்களுக்கு எந்த வேகத்தில், பயணம் செய்தால், எத்தனை எரிபொருள் மிச்சப்படுத்தலாம் என்ற விஷயங்களை வாகனத்தின் வேகம் மற்றும் எரிபொருள் நுகரும் தரவைக் (fuel consumption data) கொண்டு பரிந்துரை செய்யலாம். ஒரு லாரியில் 50 லிட்டர் எரிபொருளைப் பயணம் ஒன்றுக்கு மிச்சப்படுத்த முடிந்தால், 1,000 லாரிகள் கொண்ட அமைப்பில், வருடத்திற்கு, எவ்வளவு எரிபொருள் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கு பண்ணிப் பாருங்கள்

IOT part7-pic2

 

4. மைல் ஒவ்வொன்றுக்கும், மேகக் கணினிவயலுக்கு தரவு அனுப்ப வேண்டியதில்லை. வாகனத்தில், உள்ள கணினி, இவற்றைச் சேகரிக்கலாம். பயணம் முடிந்தவுடன், தரவுகளின் சாராம்சத்தை, மேகக் கணினி வயலுக்கு மேலும் ஆய்வு செய்ய அனுப்பி விடலாம். சில உடன் வாகன முடிவுகளை, வகன கணினியே எடுக்கலாம். உதாரணத்திற்கு, வெளியே உள்ள வெப்பத்திற்கேற்ப, உள்ளே உள்ள பொருட்களைக் குளிர்விக்கும் அளவைக் கட்டுப்படுத்தலாம்

5. குளிர்விக்கப்பட்ட பொருட்கள் (பழம், காய்கறிகள்) வண்டியில் மிக அதிக தூரம் செய்யும் பொழுது, அதனுடைய குளிர்நிலை சரியாக இல்லையேல், எடுத்து செல்லப்படும் சரக்கு பயனில்லாமல் வாடிவிடும். லாரியில் குளிர்நிலையை அளந்து, அதைச் சரிசெய்யும் உணர்விகள்/கருவிகளின் இணையம் மூலம் இந்த இழப்பை பெருவாரியாகக் குறைக்கலாம். பிரேஸில் நாட்டில் இப்படி ஒரு முயற்சியின் விடியோ இங்கே:

எப்பொழுது எந்த ரயில், விமானம், பேருந்து வரும் என்பதைப் பெரும்பாலும், நாம் இணையம் மூலம் தெரிந்து கொள்கிறோம். குறிப்பாக, விமானம் எங்கு பறந்து கொண்டிருக்கிறது, எத்தனை மணிக்கு அதன் இலக்கைச் சென்று அடையும் என்பதை வெறும் கூகிள் வைத்துத் தெரிந்து கொள்ளலாம் – காரணம், பறக்கும் விமானம் ஒவ்வொரு நொடியும் தன்னுடைய இடம், வேகம், உயரம், போன்ற முக்கிய விஷயங்களைத் தரைக்கு அனுப்பிய வண்ணம் உள்ளது. எதிர்காலத்தில், பஸ், ரயில் போன்ற பொது வாகன அமைப்புகளும் இவ்வாறு காத்திருக்கும் பயணிகளுக்கு செய்திகளை அனுப்பி, நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது நிச்சயம்.

IOT part7-pic3

இன்றைய விமானங்களில், ADS-B என்ற சுய கண்காணிப்பு தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனால், விமானத்தில், வேகம், உயரம் போன்ற விஷயங்கள் விண்வெளியில் பறக்கும் செயற்கைகோள் மூலம், உலகில் எந்த விமான நிலயம் மூலம் வேண்டுமானாலும் கண்காணிக்கலாம். அத்துடன், இந்தக் குறிப்பிட்ட அதிர்வெண்ணை யார் வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். இதையே பல்வேறு இணைய தளங்கள் விமானத்தின் சரியான நிலையைச் சுடச்சுட வெளியிடுகின்றன.

இதைக் கருவிகளின் இணையம் என்று சொல்லலாம், சொல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால், கருவிகள், இந்த முக்கிய தரவுகளை நமக்கு அளித்தாலும், அது, ஒரு பாதுகாப்பிற்குப் பயன்படுவதோடு நின்று விடுகிறது.

கருவிகளின்/உணர்விகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பறக்கும் விமானத்திலிருந்து பல லட்சம் பாகங்கள் உணர்விகள் மூலம் தங்களது நிலையை விமானத்தில் உள்ள ஒரு கணினியிடம் விளா வாரியாகச் சொல்லிவிடும். விமானக் கணினி, பயணம் முடிந்த பின், அதை அழகாகத் தொகுத்து, தரையில் உள்ள பராமரிப்பு அமைப்பிற்கு அனுப்பிவிடும். கீழ் இறங்கிய விமானத்திற்கான பழுது வேலைகளை, இதனால், முன்கூட்டியே அறிந்து, தகுந்த பாகங்களை உறபத்தியாளரிடமிருந்து தருவித்து, சரியான பராமரிப்பு செய்தால், விமானம் பழுது பார்த்தலுக்காக பல நாட்கள் பறக்காமல் இருக்க வேண்டியதில்லை. இதனால், விமான நிறுவனத்திற்கு லாபமும் அதிகமாகும் (பயணிகள் எப்பொழுதும் பயன் படுத்தும் விமான நிறுவனங்களில்) – கூடவே விமானப் பாதுகாப்பும் அதிகரிக்கும்

- See more at: http://solvanam.com/?p=42460#.dpuf

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – கட்டமைப்பு உலகில் கருவிகள்

”என்ன சொல்றீங்க, புரியவே இல்லை”

“புதுசா எங்க வீட்ல இணைய ஃப்ரிட்ஜ் வாங்கினோம். அதுல, பொருட்கள் குறைஞ்சா உடனே சூப்பர் மார்கெட்டுக்கு செய்தி அனுப்பிடும். சூப்பர் மார்கெட் வீட்டுக்கு சாமான் எல்லாம் அனுப்பிச்சுடுவாங்க”

“அதுக்கும் எங்க வங்கிக்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் எதுக்கு எங்க கிட்ட சொல்றீங்க?”

“தெரியாத்தனமா புது பிரிட்ஜ் செய்த தவறுல, வேண்டாத பொருட்களை சூப்பர் மார்கெட் காரங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அத்தோட கிரெடிட் கார்டிலிருந்து காசையும் எடுத்துக்கிட்டாங்க”

“அதுக்கு நாங்க என்ன செய்யணும்கிறீங்க?”

“புது பிரிட்ஜ் செஞ்ச தவறை மன்னிச்சு, அந்தக் காசை திருப்பிட முடியுமா?”

”இதென்ன வம்பா போச்சு. உங்களுக்கு எங்க வங்கி கிரெடிட் கார்டு குடுத்துச்சா, இல்ல உங்க ஃப்ரிட்ஜுக்கு குடுத்துச்சா?”

“எனக்குத்தான் கொடுத்தீங்க. ஆனால், ஒரு முறை மன்னிக்க மாட்டீங்களா? புதுக் கருவி சின்னத் தப்பு செஞ்சா, பெரிய மனசு பண்ண வேண்டாமா?”

“அதெல்லாம் முடியாது. நீங்களாச்சு, உங்க ஃப்ரிட்ஜாச்சு, உங்க சூப்பர் மார்கெட்டாச்சு. எங்களை ஆளை விடுங்க”

***  ***

உலகின் ஏறக்குறைய 50% ஜனத்தொகை சிறு/பெரு நகரங்களில் உள்ளது. ஆனால், நகரங்கள் வெறும் உலகின் பரப்பளவில் 2% மட்டுமே.  2015 –ல், நகரங்களில் மட்டும் ஏறக்குறைய 120 கோடி கார்கள் உள்ளன. உலகின் 6 மனிதர்களுக்கு ஒரு கார் என்ற விகிதத்தில், இது ஒரு மிகப் பெரிய காற்று மாசுப் பிரச்னையாக மாறியுள்ளது. அத்துடன், பல வளரும் நாடுகளில், போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்னையாகவும் மாறியுள்ளது. இத்துடன், இது ஒரு ஒலி மாசுப் பிரச்னையாகவும் வளர்ந்து அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.

இதைவிட இன்னும் அச்சுறுத்தும் விஷயம், நகரமயமாதல் குறையவில்லை, இன்னும் அதிக வேகத்துடனே நடந்து வருகிறது.

  • மணிக்கு 7,500 மனிதர்கள், உலகின் ஏதோ ஒரு நகரத்தில் குடிபுகவென இடம்பெயர்ந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்
  • உலகின் 80% கரியமிலவாயு, நகரங்களிலிருந்து வெளியாகிறது
  • உலகின் 75% சக்தியை நகரங்கள் உறிஞ்சுகின்றன

இதனால், நகரங்களின் கட்டமைப்புகள் தாக்கு பிடிக்க முடியாமல் தவிக்கின்றன. எல்லா நகரில் வாழும்  மனிதர்களுக்கும் உள்ள பிரச்னைகள்:

  • போக்குவரத்து நெரிசல்
  • பொதுப் போக்குவரத்துடைய நம்பகத்தன்மை இல்லாமை
  • நகர அரசாங்கச் சேவைகளின் போதாமைகள்
  • சாலைகள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பராமரிப்பு இன்மை
  • சாலை விளக்கொளி பற்றாததும், அதிக ஒளி மாசுபடுதலும்
  • நகரத் துப்புறவு
  • நகர் வாழ் மக்கள் பாதுகாப்பு

IOT part8-pic1

இந்தப் பிரச்னைகள், பல்லாண்டுகளாக இருப்பவை என்று சொன்னாலும், நிலமை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமடைந்து வருகிற ஒன்று. இணையத்தில் இணைக்கப்பட்ட கருவிகள் பல விதங்களிலும் நகரங்களை நுண்ணறி நகரங்களாக்க முடியும். இப்படிப்பட்ட முயற்சிகள் பல மேற்கத்திய நகரங்களில் சோதனை முறையில் இன்றே தொடங்கிவிட்டன. இந்தப் பழம் பிரச்னைகளுக்கு, புதிய தொழில்நுட்பம் வெகுவாக உதவும் என்று பல நகரத் தலைவர்கள் சொல்லுவதோடு நிற்காமல், செயலிலும் இறங்கியுள்ளார்கள். நகரங்களில் நுண்ணறிப்பேசிகளின் வீச்சு அதிகம் இருப்பதால், இதை ஒரு பயனுள்ள கருவியாக நகர வாழ்க்கை மேம்பாட்டிற்காக மாற்றி அமைக்கலாம் என்பது இந்த முயற்சிகளின் அடிப்படை. இந்தப் பகுதியில், இந்தத் துறையில் உள்ள பயன்பாடுகளை ஆராய்வதோடு, சில உலக நகரங்களின் முயற்சிகளையும் ஆராய்வோம்.

நுண்ணறிக் கார்கள் நிறுத்தும் இடங்கள்

நகர மையங்களில் கார்களைச் சில நேரங்களில் பயன் படுத்தக் கூடாது என்ற சிங்கப்பூர் போன்ற நகரங்கள் பல்லாண்டுகளாகச் சட்டம் வைத்துள்ளன. ஆயினும், பல மேற்கத்திய நகர மையங்களில் உள்ள மிகப் பெரிய பிரச்னை,  காரை நிறுத்த இடம் இருக்கிறதா என்று தேடும்

ஓட்டுனர்கள் மேலும்  கீழும் பயணிப்பது அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் எரிச்சலூட்டும் விஷயம். அத்துடன், தெருவோர கட்டணக் கார் நிறுத்துமிடங்கள் பல இருந்தும், இந்தப் பிரச்னை தீர்ந்ததாக இல்லை. நகரங்களுக்கு வருவாய் தரும் இந்த விஷயம் இப்படித் தலைவலியாக இருப்பது சரியாகத்தான் இல்லை.

நகர மையத்தின் ஒரு கி.மீ. சுற்றளவில் நிறுத்துமிடத்தின் வாடகை எல்ல பெரு நகரங்களிலும் அதிகம். ஆனால், 2 கி.மீ. சுற்றளவில் நிறுத்துமிடத்தின் வாடகை அவ்வளவு அதிகமில்லை. பல ஓட்டுனர்களுக்கு இத்தகைய நிறுத்துமிடங்கள் எங்கிருக்கிறது என்று தெரிவதில்லை. அத்துடன், அப்படியே அந்த நிறுத்துமிடத்தைக் கண்டுபிடித்தாலும், அங்கு காலி இடங்கள் இருப்பதில்லை.  காலை ஏழு மணிக்கெல்லாம் இப்படிப்பட்ட மலிவான நிறுத்துமிடங்கள் நிரம்பி விடுகின்றன.

பல மேற்கத்திய நகரங்களின் செல்ல ப்ராஜக்டாக இத்தகைய கார் நிறுத்துமிடங்களை நுண்ணறி நிறுத்துமிடங்களாக மாற்றும் முயற்சி.

  1. ஒவ்வொரு நிறுத்துமிடத்திலும் ஓர் உணர்வியை (எடை உணர்வி ஒன்றே இதற்குப் போதும்) நிறுவிவிட்டால், எந்த நிறுத்துமிடத்தில் கார் உள்ளது, எந்த இடத்தில் கார் இல்லை என்று எளிதாகச் சொல்லி விடலாம்.
  2. உணர்வியின் நிலையை அந்த நிறுத்துமிட கணினி இத்தனை காலி இடங்கள் உள்ளன என்று நகர அரசாங்க கணினிக்கு செய்தி அனுப்பிய வண்ணம் இருக்கும். பெரும்பாலும், இத்தகைய பயன்பாடுகளுக்குக் கம்பித் தொடர்பு தொழில்நுட்பம் போதுமானது.
  3. நகர அரசாங்க கணினி வழங்கி, தன்னுடைய இணைத்தளத்தில் இத்தனை காலி நிறுத்துமிடங்கள் இத்தனை கட்டணத்தில் உள்ளது என்று வெளியிட்டுக் கொண்டே இருக்கும்
  4. குடிமக்கள், தங்களுடைய நுண்ணறிப்பேசியில் நகர நிறுத்துமிடப் பயன்பாடு ஒன்றை நிறுவினால், எங்குக் காரை நிறுத்த காலி இடம் இருக்கிறது என்று உடன் செய்தியுடன், அவர்களுக்கு இஷ்டப்பட்ட நிறுத்துமிடத்திற்குச் சென்று காரை நிறுத்தலாம். இந்த நிலை மாறிக் கொண்டே இருக்கும். ஓட்டுனர்களும் தேவைக்கேற்ப நிறுத்துமிடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மையப் பகுதியில் இந்த முறை இன்று பயன்படுத்தப்படுகிறது.
  5. நகர மையப் போக்குவரத்து நெரிசலை இது குறைப்பதுடன், நகருக்கு வருமானத்தையும் கூட்டுகிறது. மையத்திலிருந்து 2 அல்லது 3 கி.மீ, தொலைவில் உள்ள நிறுத்துமிடங்களும் பயனுக்கு வருவதால், நகருக்கு கூடுதல் வருமானம்

கீழே, லண்டனில் உள்ள இத்தகைய நுண்ணறி நிறுத்துமிட அமைப்பின் விடியோ:

பொதுப் போக்குவரத்து இணையக் கருவிகள்

இதைப் பற்றி, பொதுப் போக்குவரத்துப் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். பல நகரப் போக்குவரத்து அமைப்புகள், இன்று பல வித சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இவர்களின், மிகப் பெரிய குறிக்கோள்கள்:

  1. பயணிகள் எங்கிருந்தாலும், அடுத்தப் பேருந்து அல்லது ரயில் எப்பொழுது வரும் என்பதே இவர்களின் தகவல் தேவை. பெரிய நகரங்களில், போக்குவரத்து நெரிசல்களால், பல நேரங்களில் சரியான நேரத்திற்கு ஓர் இடத்தை வந்து சேர முடிவதில்லை
  2. ஜி,பி.எஸ், உதவியால், பஸ் அல்லது ரயிலின் நிலையை அறிந்து, அதன் பயண அட்டவணையை உடனுக்குடன் மாற்றி, பயணிகளின் நுண்ணறிப்பேசியில் துல்லியமாக நேரத்தை அறிவித்தல் இன்று சாத்தியம். இதற்கு, எந்த வித புதிய கருவியும் தேவையில்லை. ஓடும் பஸ் மற்றும் ரயிலில் ஜி.பி.எஸ், இருந்தால் போதுமானது
  3. யூபர் போன்ற சேவைகள் நகரங்களில் இன்று வாடகைக் கார் என்ற தொழிலையே தலைகீழாக்கி விட்டார்கள் இவர்கள் பயன்படுத்துவதெல்லாம் வெறும் ஜி.பி.எஸ், -டன் இணைந்த ஓர் இணையப் பயன்பாடுதான். பயணிகள் தங்களது நுண்ணறிப்பேசி மூலம் அருகில் உள்ள வாடகைக் காரை தங்கள் பயணத்திற்கு எளிதாக அமர்த்திக் கொள்ளலாம். பல நகர அரசாங்கங்கள் யூபருடன் தகராறு என்றிருந்தாலும், இத்தகைய சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது
  4. சற்று மாறுபட்ட இரு சேவைகளைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். முதலாவது ஜிப்கார் (zipcar) என்ற சேவை. நகருக்குள் பல நிறுத்துமிடங்களில், சில இடங்களை இவர்கள் கட்டணம் கட்டித் தனதாக்கிக் கொள்கிறார்கள், இந்த அமைப்பில் நீங்கள் உறுப்பினர் ஆகிவிட்டால் (இதற்கு, வருடாந்திர சந்தா உண்டு), நகர மையத்திற்கு, பொதுப் போக்குவரத்தில் வந்தடைந்து, அதன் அருகில் இருக்கும் ஜிப்கார் ஒன்றை எடுத்துக் கொண்டு, உங்களது அடுத்தக் கட்ட பயணத்தைத் தொடரலாம். உங்கள் இலக்கு அருகில் இருக்கும் ஜிப்கார் நிறுத்துமிடத்தில் காரை விட்டு விட்டு உங்களது இலக்கிற்கு நீங்கள் நடையைக் கட்டலாம். நீங்கள் பயன்படுத்திய நேரத்திற்கு வாடகை மட்டும் உங்களிடமிருந்து ஜிப்கார் வசூலிக்கும். நகர மைய நிறுத்துமிட கட்டணத்தைவிட இது மிகவும் குறைவு
  5. உங்களது சட்டை, டை கசங்குவதைப் பற்றிக் கவலை இல்லையேல், இன்னொரு முறையை இன்று இணையத்தின் உதவியுடன் பல மேற்குலக நகரங்கள் அமுல்படுத்துகின்றன. இது மாறுபட்ட வாடகை சைக்கிள் முறை. உங்களிடம் ஒரு கருவி ஒன்றைக் கொடுக்கிறார்கள். இதற்கும் வருடாந்திர சந்தா வேண்டும். ஜிப்கார் போல, ஆங்காங்கே இவ்வகை சைக்கிள்கள் நகர மையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். அரை மணி நேரப் பயணம் அல்லது ஒரு மணி நேரப் பயணம் உங்களது சந்தாவுடன் உண்டு, நகர மையத்தில், இத்தகைய சைக்கிள்களை, நகர மையவாசிகளும், பொதுப் போக்குவரத்துப் பயணிகளும் பயன்படுத்துகிறார்கள். சிகாகோ நகரில், இவ்வகை சைக்கிள் நிறுத்துமிடத்தில், குளியலறைகளும் உண்டு. உங்களது நிறுவன தலைவர், சைக்கிளில் வந்து, குளித்துவிட்டு, சூட்டை அணிந்து, காலை மீட்டிங்கிற்கு வந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மாறாக அவரைப் பாராட்ட வேண்டும். இந்த முறையின் ஆணிவேர், சந்தாதாரர்களிடம் உள்ள கருவி. கருவியைப் பயன்படுத்தினால்தான் சைக்கிளை விடுவிக்க முடியும். சைக்கிளை விடுவித்தால், உங்களது கருவி, ‘இதோ முருகன் சைக்கிளை 8:20 –க்கு ஏடுத்துள்ளார்’ என்று உடனே ஒரு மின்பரப்பி/வாங்கி மூலம் சொல்லிவிடும். தன்னுடைய இலக்கை அடைந்த முருகன், சைக்கிளை திருப்பியவுடன் ‘இதோ முருகன் 8:45 –க்கு சைக்கிளைத் திருப்பிவிட்டார்’ என்ற நிகழ்வு பதிப்பிக்கப்படும். 25 நிமிடப் பயணத்திற்கு கட்டணம் தனியாக எதுவுமில்லை என்ற முடிவும் உடன் எடுக்கப்படும்.

சாலைகள் மற்றும் பொது சொத்துக்களில் கருவிகள்

கருவி இணையப் பயன்பாடுகளில் சாலைகளை இரு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும்.

  1. சாலைக் குறிகள் மற்றும் சாலை ஒளியமைப்பு
  2. சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மின் சிக்னல்கள்

நாம் உலகின் எந்த நகரத்தில் வாழ்ந்தாலும், காலை வெளிச்சம் வந்தவுடன் எரியும் மின்விளக்குகளைப் பார்த்திருப்போம். சில மின் விளக்குகள் 11 மணி வரை அணைக்கப் படுவதே இல்லை. இந்த மின்சார விரயம் வரிப் பண விரயம் என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம், விளக்குகள் பகலொளியைப் பொறுத்து தானே மின்சாரத்தைத் துண்டிக்கும் தொழில்நுட்பம் பல்லாண்டுகளாக உள்ளது. இதை ஒவ்வொரு விளக்கிலும் சேர்க்கத் தேவையில்லை. நகர விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கட்டுப்பாடு மையத்தில் சேர்த்தாலே போதும்.  அடுத்தக் கட்ட முயற்சியாக, சில மேற்குலக நகரங்கள் அசைவு உணர்விகளை சோதித்து வருகின்றன. மனித நடமாட்டம்/கார் ஓட்டம் இல்லாத வீதிகளுக்கு ஒளி தேவையில்லை. ஆனால், நடமாட்டம் இருந்தால், உடனே விளக்குகள் உயிர்பெறும். இதனால், இரவில் செலவாகும் மின்சாரத்தின் அளவையும் குறைக்கலாம். ஆனால், நகர் ஒன்றுக்குப் பல்லாயிரம் உணர்விகள் தேவையாவதால், இன்னும் உணர்விகளின் விலை குறைய வேண்டும்.

IOT part8-pic5

நகர வீதிக் குறிகள் மற்றும் முக்கியச் செய்தி அறிவிப்புப் பலகை என்று ஒரு டிஜிட்டல் கம்பம் எதிர்காலத்தில் சாத்தியம்.

நகரத் துப்புரவுக் கருவிகள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள் – குப்பை என்பது நகரங்களின் ஒரு பெரும் பிரச்னை. அதுவும் நம்முடைய மறுபயனற்ற தூக்கி எறியும் கலாச்சாரம், இந்தப் பிரச்னையை பூதாகரமாக வளர்த்து விட்டது. இன்று சில பெரிய மேற்கத்திய நகரங்கள், தங்களுடைய குப்பையை லாரிகள் மூலம், 500 கி.மீ.  வரை அனுப்பி, பூமிக்குள் புதைக்கிறார்கள்.

 

எவ்வளவுதான் இதைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வர நகர அரசாங்கங்கள் முயற்சித்தாலும், இந்தப் பிரச்னை குறைந்ததாகக் தெரியவில்லை. முற்றிலும் இந்தப் பிரச்னையைக் கருவிகள் கொண்டு தீர்க்க முடியாவிட்டாலும், ஓரளவிற்கு, மறைமுகமாகக் கருவிகள் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. மிகவும் புதிய கோண முயற்சிகள் பலவும் இத்துறையில் இருப்பது, பிரச்னையின் தீவிரம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டும் விஷயம்.

முதலில் IOT part8-pic7இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹம் நகரம், குப்பைத் தொட்டிகளுடன் (அதுவும், குளிர்பாண அலுமினிய குவளைகளை ஏற்கும் குப்பைத் தொட்டிகள்)  சூரிய ஒளியில் இயங்கும் ஓர் இறுக்கும் எந்திரத்தைக் (compactor) குப்பைத் தொட்டியிலேயே நிறுவியுள்ளது, 150 குவளைகளையே ஏற்றுக் கொள்ளும் தொட்டிகள், 1,500 குவளைகள் வரை இறுக்கும் எந்திரத்தின் துணையால் ஏற்கிறது. நிரம்பியவுடன், அதிலுள்ள உணர்வி, செய்தி ஒன்றை அனுப்பி விடுகிறது. பத்து முறை காலி செய்ய வேண்டிய குப்பைத் தொட்டியை ஒரு முறையே காலி செய்வதால், மனித உழைப்பு விரமாவதைக் குறைக்க முடிகிறது. மேலும், காலி செய்ய வரும் வண்டியின் பெட்ரோல் செலவும் மிச்சமாகிறது.

அட்டைப் பெட்டிகள், காகிதம், கண்ணாடி போன்ற பொருட்களை உலகின் எல்லா நகரங்களும் மறுபயன்பாட்டிற்காகப் பிரித்து, ஒன்றாகச் சேகரித்து, உற்பத்தியாளர்களுக்கு விற்கின்றன. இத்தகைய மறுபயன்பாட்டுத் தொட்டிகளில் அளவு உணர்வி ஒன்றை நிறுவிவிட்டால், அத்துடன் தொடர்புடைய கணினிக்கு 90% நிரம்பும் தருணத்தில் செய்தி ஒன்றை அனுப்பி விடுகிறது. 90% நிரம்பியத் தொட்டிகளை மட்டும் காலி செய்ய லாரிகள் அனுப்பி மறு பயன்பாட்டுப் பொருட்களை எடுத்து வருவது பல விதங்களிலும் நகரங்களுக்குப் பொருளாதார உதவியாக இருக்கும். இதை ஒரு சிண்டெலூர் என்ற சிறிய நிறுவனம் செய்து காட்டியுள்ளது. இதன் விடியோ கீழே:

நகரப் பாதுகாப்புக் கருவிகள்

விடியோ கண்காணிப்பு பல ஆண்டுகளாக உலகின் பெரு நகரங்களில் நடக்கும் ஒன்று. ஒவ்வொரு கார் நிறுத்துமிடத்திலும், ஊருக்குள் உள்ள நெடுஞ்சாலைகளின் முக்கியப் பிரிவுகள், சில முக்கிய சிக்னல்கள் என்று  விடியோ காமிராக்கள் நகரவாசிகள் யாவருக்கும் பரிச்சயமான விஷயம். பெரிய நகரங்களில் நடக்கும் குற்றங்களைக் குறைக்க இவ்வகைக் காமிராக்கள் மிகவும் உதவுகின்றன. இன்று, இந்தத் தொழில்நுட்பம், அசைவு உணர்வியுடன் இணைத்து, நடமாட்டம் இருந்தால், மனிதர்களைத் தொடரும் அளவு வளர்ந்து விட்டது. இவ்வகைக் காமிராக்கள் பாதுகாப்பிற்கு மிகவும் பயன்படுகிறது. இத்துடன், இன்றைய காமிராக்கள் இரவிலும் தெளிவாகப் படம் பிடிக்கும் நுட்பம் கொண்டவை.

பல யூரோப்பிய நகரங்கள், (குறிப்பாக ஸ்பெயின், ஃப்ரான்ஸ்) காற்றில் உள்ள மாசு, தண்ணீரில் உள்ள பிராணவாயு போன்ற அளவுகளைக் கண்காணிக்க, பல உணர்விகள், கருவிகளை ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் நிறுவி சோதனை முறையில் நகரச் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டிற்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இப்படிச் சிலப் பயன்பாடுகள் உடனே சில நகரங்களில் பயனளிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், பல பயன்பாடுகள் ஒரு சோதனை அளவில் உள்ளது, இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில், உணர்விகள் மற்றும் கருவிகளின் விலை குறையக் குறைய, மேலும் புதிய கருவி இணைய முயற்சிகள் கட்டமைப்பு உலகில் நிச்சயமாகப் பயனில் இருக்கும். ஏனென்றால், கட்டமைப்பு உலகில் உள்ள பிரச்னைகள் மிகப் பெரியவை. சின்ன முன்னேற்றமும் வரிப் பணத்தைச் சரியான வழியில் நகரவாசிகளுக்குப்  பயன் தருமேயானால், நகரங்கள் இதில் முதலீடு செய்யத் தயாராக உள்ளன.

- See more at: http://solvanam.com/?p=42860#sthash.MLyw3Hx0.dpuf

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – கருவி இணையத் தொழில்நுட்பம் – பகுதி 9

முதலில், கருவி/உணர்வி (device/sensor) என்று உங்களை இதுவரை குழப்பியதற்கு, மன்னிக்கவும்.
கருவிக்கும் உணர்விக்கும் என்ன வித்தியாசம்?

உங்களிடம் ஒரு சாதாரணப் பாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பறக்கும் மாயப்பாயெல்லாம் அல்ல. இதை எப்படி நுண்ணறிப் பாயாக மாற்றுவது?

1. முதலாக, அந்த பாயிற்கு ஒரு தனி இணைய முகவரி தேவை. அது இருந்தால்தான், மற்ற பாய்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் இந்த பாயிடம் தொடர்பு கொள்ள முடியும்

2. இணையம் மூலம் தொடர்பு கொள்ள பாயிற்கு ஒரு குட்டி ரேடியோ (ரேடியோ பற்றி விவரமாகப் பிறகு பார்ப்போம்) தேவை

3. பாய் வெறும் தரையில் இருக்கிறதா, அதில் யாராவது படுத்துக் கொண்டிருக்கிறார்களா, அல்லது சுறுட்டப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள சில உணர்விகள் தேவை. சுறுட்டப்பட்டதை, மனிதர் ஒருவரின் எடை அதன் மேலுள்ளதை அறிய உணர்விகள் தேவை

4. நம்முடைய பாயை நமக்குத் தெரியாமல் யாராவது எடுத்துக் கொண்டு போய்விட்டால் (சுறுட்டிக் கொண்டு என்று குழப்ப மாட்டேன்), அதன் ரேடியோ மூலம் பாய் எங்கிருக்கிறது என்று சொல்லிவிடலாம்.
இப்படி, உணர்விகளுடன் சேர்ந்து ஒரு சாதாரணப் பாய், நுண்ணறிப் பாயாகியது. அது ஒரு கருவியாகிவிட்டது!

உணர்வி என்றால் என்ன என்பதை விளக்குவது எளிது. ஆனால், மின்னியலில் வழக்கமாக அனைவருக்கும் தெரிந்த உணர்விகளை விட இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் உணர்விகள், சற்று மாறுபட்டவை. ஒரு உணர்வியோடு இன்னும் கொஞ்சம் மின்னணுவியல் மூலம் அதற்கு, கணிக்கும், மின்பரப்பும் மற்றும், தேக்கும் ஆற்றல்களைச் சேர்த்தால், அது ஒரு கருவியாக மாறிவிடுகிறது.

மேலும் குழப்பி விட்டேனா?

ஆட்டத்தை ஆரம்பத்திலிருந்து பார்ப்போம். அதற்கு முன், இந்தப் பகுதியும், அடுத்த இரு பகுதிகளும், இந்தத் தொழில்நுட்பத்தை சற்று ஆழமாக அலசும் பகுதிகள்.

IOT part9-pic1

நம் எல்லோருக்கும் பரிச்சயமான துவைக்கும் எந்திரத்தைச் (washing machine) சற்று கூர்ந்து கவனிப்போம். முதலில், அதில் தண்ணீர் நிரப்பும் பொழுது, தேவையான தண்ணீர் நிரம்பிய உடன், குழாயை மூடிவிடும் ஒரு மின் உணர்வி அதில் உள்ளது, இதை ’நீர் மட்ட உணர்வி’ (water level sensor) என்கிறோம். இத்தனை நேரம் துவைத்தவுடன், தண்ணீரை வடிக்கும் மின் உணர்வி ஒன்றும் அதில் உள்ளது. இதை ‘நீர் வடிக்கும் உணர்வி’ (water drain sensor) என்கிறோம். நீர் வடிந்தவுடன், இந்த உணர்வி புதிய தண்ணீர் வடியாமல் இருக்க, தடுக்கிதழை (valve) மூடி விடுகிறது. எத்தனை நேரம் துணிகள் தோய்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் கடிகையும் (timer) ஒரு உணர்விதான். இப்படி, பல உணர்விகள், நம்முடைய வீட்டில் உள்ள சாதாரண எந்திரங்களில் உள்ளது.

இதைப் போல அளவுகளைக் கட்டுப் படுத்தும் உணர்விகள், பல எந்திரங்களிலும் பயன்படுத்துவதற்காக, கடந்த 100 ஆண்டுகளாக, மின்னியல், மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

குறிப்பாக, பல பயன்பாடுகளுக்காக, மின்னியல் வல்லுனர்கள் பலவிதமான உணர்விகளை, பல துறைகளின் தேவைகளுக்காகவும் உருவாக்கி வந்துள்ளார்கள்;

1. ஒளி உணர்விகள் (optical sensors) – கட்டிடம், தொழிற்சாலை, சுற்றுச்சூழல், சில்லறை வியாபாரம், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. ஒளியை ஒரு டிஜிட்டல் குறிகையாக (digital signal) மாற்றுவது இதன் வேலை

2. தொடர்பு/அசைவு உணர்விகள் (contact/motion sensors) – கட்டிடம், தொழிற்சாலை, போன்ற துறைகளில், பயன்படும் உணர்வி. தொடர்பையை/அசைவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. சொல்லப் போனால், தொடர்பு உணர்விகள் வெறும் சாதாரண மின் விசை

3. வெப்ப உணர்விகள் (temperature sensors)- கட்டிடம், தொழிற்சாலை, சுற்றுச்சூழல், சில்லறை வியாபாரம், வீடுகள், கார்கள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. வெப்பத்தின் அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. நாம் ஜுரம் வந்தால் பயன்படுத்தும் தெர்மாமீட்ட்ரின் டிஜிட்டல் வடிவம். ஆனால், சில தொழில் பயன்பாடுகளில், பல நூறு டிகிரி வெப்பத்தை இவை அளக்க வேண்டும்

4. அழுத்த உணர்விகள் – (pressure sensors)- தொழிற்சாலை, சுற்றுச்சூழல், பொதுப் பயண ஊர்த்திகள், கார்கள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. அழுத்தத்தின் (காற்று, திரவம், வாயு) அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை

5. ஒலி உணர்விகள் – (sound sensors)- தொழிற்சாலை, சுற்றுச்சூழல், பொதுப் பயண ஊர்த்திகள், கார்கள், வீடுகள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. ஒலியின் அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. உதாரணத்திற்கு, மைக் என்பது நாமெல்லாம் அறிந்த ஒலி உணர்வி

1.png

6. ரசாயன உணர்விகள் – (chemical sensors)- தொழிற்சாலை, சுற்றுச்சூழல், கார்கள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. ரசாயன மாற்றத்தின் (காற்று, திரவம், வாயு) அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. உதாரணத்திற்கு, ஒரு திரவத்தின் ph அளவை அளக்கும் உணர்வி, ரசாயனத் தொழிலில் மிகவும் பயந்தரும் விஷயம்

7. சுழல்காட்டி உணர்விகள் (rotation sensors or gyroscopes) – தொழிற்சாலை, சுற்றுச்சூழல், பொதுப் பயண ஊர்த்திகள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. சுழற்சியின் அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. இன்று நம்மிடம் உள்ள பெரும்பாலான திறன்பேசிகளில் சுழல்காட்டி உணர்விகள் உள்ளன. திறன்பேசியைத் திருப்பியவுடன், அதில் தோன்றும் புகைப்படமும் திரும்புவதற்கு இந்த் உணர்வியே காரணம்

8. காந்த உணர்விகள் – (magnetic sensors)- தொழிற்சாலை, சுற்றுச்சூழல், கார்கள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. காந்த சக்தியின் அளவை, ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. நம்மிடம் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளின் கதவுகளில் இவ்வகை உணர்விகள் பொறுத்தப்பட்டுள்ளது

9. ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, பிராணவாயு அளவு, எடை, (blood pressure, pulse, oxygen level, weight sensors) போன்ற பல உணர்விகள் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது

10. தொழிற்சாலைகளில், வேக அளவு, திரவங்களின் பாகுநிலை அளவு, உராய்வின் அளவு (accelerometer, viscosity, friction sensors) என்று பல்வேறு உணர்விகள் பயன்படுத்தப்பட்டுள்ளது

11. சுற்றுப்புற சூழலியலில், ஈரப்பசை, காற்றளவு, நீரில் உள்ள பிராணவாயுவின் அளவு (moisture, wind speed, dissolved oxygen water sensors) போன்றவற்றை அளக்க பல உணர்விகள் உள்ளன

மேலே பட்டியலிட்ட உணர்விகள் இன்று பயனில் இருக்கும் பல்லாயிர உணர்விகளின் ஒரு சின்ன பகுதி மட்டுமே. எல்லா உணர்விகளும் பொதுவாக ஒன்றைச் செய்கின்றன. இயற்கையின் மற்ற அளவுகளை, மின்னளவாக மாற்றுகின்றன.  (digital measurement) கணினிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னே, பல உணர்விகள் நம்மிடம் இருந்தன, உதாரணம், மைக். இன்றைய உணர்விகள், மின்னளவை டிஜிட்டல் முறையில் மாற்றித் தருவதால், கணினிகளுக்கு இவ்வகை உணர்விகள் அறிவிக்கும் அளவுகளை வைத்து ஒரு முடிவெடுக்க தோதாக உள்ளது.

2-1024x593.png

ஆக, இவ்வகை உணர்விகள், புதிதல்ல. உணர்விகள் மிகச் சிற்றுருவாக்கம் (miniaturization) மற்றும் செயல்திறன் என்பது மிகவும் புதிது. அதிலும், இவற்றை, ஒரு சின்ன நெல் அளவில், மின்சுற்றுக்களோடு இணைத்து உருவாக்கும் MEMS (Micro electro mechanical systems) துறை, இந்த உணர்விகளைத் தலை கீழாக மாற்றிவிட்டன. பெட்டியளவு பந்தளவு என்றிருருந்த உணர்விகளை விடத் துல்லியமாக, விரலளவு மின்சுற்றில் அடங்கி வேலை செய்வது, இந்த உணர்விகள் துறையில் மிகப் பெரிய முன்னேற்றம்.

IOT part9-pic4

மேலே உள்ள படம், உங்களது, இன்றைய திறன்பேசிகளில் இருக்கும் உணர்விகளைக் காட்டுகிறது. திரைத்தடவலோ, புகைப்படம் எடுப்பதோ, அல்லது, ஜி.பி.எஸ் அலைவாங்கியாக செயல்படுவதன் முக்கிய காரணம் உணர்விகள்.

மேலே உள்ள திறன்பேசியை ஒரு உணர்வி என்பதா அல்லது கருவி என்பதா? இத்துறையின் பார்வையில் இது ஒரு பல்லுணர்வி கொண்ட ஒரு கருவி. பல்லுணர்வி சரி – இதில் பல உணர்விகள் உள்ளன. எப்படி இது திடீரென்று கருவியானது?

1. நுண்ணறிப்பேசியால், இந்த உணர்விகளின் அளவுகளை ஒரு சின்ன ரேடியோ மூலம் இணையத்துடன்
தொடர்பு கொள்ள முடியும்

2. உணர்விகளின் அளவுகளை வைத்து, முடிவெடுக்கவும் முடியும். உதாரணத்திற்கு, திறன்பேசியைத் திருப்பினால், காட்டியளிக்கப்படும் படத்தின் திசைப்போக்கும் (orientation) மாறும்
மேலே சொன்ன இரு காரணங்களால், ஒரு உணர்வியோ, பல உணர்விகளோ உடைய ஒரு அமைப்பு கருவியாகிறது. அதாவது, உணர்வியை (களை) கருவியாக்கத் தேவை:

1. முடிவெடுக்க உதவும் செயலி மற்றும் சார்ந்த மென்பொருள்
2. இணையத்துடன் இணைய ரேடியோ
3. விரல்நுணியில் அடங்கும் அளவு

IOT part9-pic5

ரேடியோ என்றவுடன், பண்பலை என்று நினைக்க வேண்டாம். உங்களது பழைய செல்பேசி, GPRS , 2-G, 3G போன்ற முறைகளில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவியது. இன்று, LTE, 5G என்று பல முறைகளின் மூலம், பேச்சு, மற்றும், இணையத் தொடர்பை, திறன்பேசிகள் நமக்கு வழங்குகின்றன. இத்தகைய தொடர்பு முறைகள் இத்துறையில் ’ரேடியோ’ என்று சொல்லப்படுகிறது.

ஒரு வேடிக்கையான விஷயம், ஐ-ஃபோன் வெளி வந்தவுடன், வழக்கம் போல பல்லாயிரம் ஜோசியங்களைப் பலரும் எழுதித் தள்ளினார்கள். ஆனால், எவருமே, ஒரு உணர்விகளின் ஒரு புது யுகம் என்று சொல்லவில்லை. 2007 –க்கு பிறகு, உணர்விகளின் தேவை பலநூறு மடங்குகள் அதிகரித்து, இன்று இணையக் கருவிகளின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியதற்கு முக்கிய காரணம், ஐஃபோன் மற்றும் திறன்பேசிகள்.

உணர்விகளின் இன்னொரு பிரச்னை, இவற்றை இயக்கத் தேவையான மின்சாரம். திறன்பேசியின் மின்கலம், அதிலுள்ள உணர்விகளுக்கு உயிரளிக்கிறது. பல உணர்விகள், திறன்பேசிகளில் உள்ளது போல கூட்டமாக இன்னும் சில உணர்விகளோடு இருக்கப் போவதில்லை. இவை, எங்கோ ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் அல்லது, எவரும் அதிகம் கண்டு கொள்ளாத இடங்களில் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மின்னேற்றம் என்று மின்சாரத்தைத் தேடி ஓட முடியாது. அத்துடன், பல கோடி கருவிகளுக்கு அன்றாட மின்னேற்றம் என்பது இயலாத காரியம். இதனால், மிகவும் குறைவான மினசாரத்தில், இவை இயங்க வேண்டும். திறன்பேசிகள் வைத்திருப்போர் புளூடூத்தை அல்லது வை.ஃபை. (Wifi) –யும் முடுக்கி விட்டால், திறன்பேசியில் சார்ஜ் வெகு வேகமாக குறைவதைப் பார்த்திருப்பீர்கள். திறன்பேசியின் ரேடியோக்கள் இவை.

IOT part9-pic6இதே தொழில்நுட்பம் கருவிகளின் இணையத்திற்கு ஒத்து வராது. அத்துடன், கருவிகள் தேவையில்லாத பொழுது, அதாவது எந்த அளவையும் அளக்காத நேரங்களில், அதற்கு மிகக் குறைவான மின்சாரமே தேவை. இதனால், கருவிகளுக்கு தேவையான புதிய வலையமைப்பு முறைகள் தேவை. புதிய இணையக் கருவிகளுக்காக, புளூடூத் 4.0, IEEE 802.15.4e, 6LoWPAN போன்ற நியமங்கள் (new wireless networking standards) உருவாகியுள்ளன. இந்த நியமங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சி. உதாரணத்திற்கு, புளூடூத் 4.0 மிக அருகாமை மின்பரப்புதலுக்கு இன்றைய புளூடூத்தை விடச் சிறந்தது. அதேபோல, IEEE 802.15.4e என்பது, குறைந்த மின்சாரம் தேவைப்படும் கருவிகளின் சற்று நீண்ட தொலைவு தேவைக்காக உருவாக்கப்பட்டது. 6LoWPAN என்பது, மிகவும் பாதுகாப்பான கருவி இணையத் தொடர்பிற்காக உருவாக்கப்பட்டது. இவற்றைப் பற்றி டெக்னிகலாக தெரிந்து கொள்ள விழைபவர்களுக்கு, இக்கட்டுரைத் தொடரின் இறுதியில் பல சுட்டிகளைத் தரத் திட்டமிட்டுள்ளேன். ஒன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். இக்கருவிகளில் உள்ள மின்கலன்கள், 5 முதல் 10 வருடம் வரை நீடிக்க வேண்டும். பொதுவாக, பல கருவிகள் ஓரிடத்தில் நிறுவப்பட்டால், அவை அனைத்தும் இணையத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய பயன்பாடுகள் மிகக் குறைவு. ஒரு கருவிக் கூட்டத்திற்கு, ஒரு அலைப்பரப்பி/வாங்கி (transceiver) இருந்தால், முக்கால்வாசி பயன்பாடுகளுக்குப் போதுமானது. அந்த அலைபரப்பும் கருவிக்கு, சூரிய மின்கலம் மூலம் சக்தி கொடுத்தால் போதும் என்பது வல்லுனர்களின் கணிப்பு. அத்துடன் இணைந்து செயல்படும் மற்ற உணர்விகள் மின்கலத்தில் இயங்கலாம்.

IOT part9-pic7

மிகக் குட்டியான இவை, கோடிக் கணக்கில் வருங்காலத்தில் பயன்படுத்தப்படும் என்று பார்த்தோம். திடீரென்று, பல இந்தியாக்கள் உலகுடன் இணைந்தால், உலகால் ஜனத்தொகையை சமாளிக்க முடியாது. அதுபோல, பலநூறு கோடி கருவிகள் இணையத்தில் இணைந்தால், அதன் கதி என்ன? நல்ல வேளையாக, இதைப் பற்றிய சிந்தனை, 15 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதால், அதற்கான வழிகளை உருவாக்கியுள்ளனர். இன்றைய இணையம் அதன் எல்லையைத் தொட்டு விடக் கூட அபாயத்தில் உள்ளது. இந்த அபாயத்தில் பெரிய அபாயம், இணையத்துடன் இணையும் ஒவ்வொருவருக்கும் ஒரு இணைய முகவரித் தேவை. இன்று, பெரும்பாலும், அந்த முகவரி 4 வினையாக உள்ள IP v4 என்ற முறை. இன்று, 6 வினை இணைய முகவரிகள் சாத்தியம், அதாவது IP v6 என்ற முறை. முற்றிலும், எல்லா வலையமைப்பு மின்னணுவியல் சாதனங்களும் முழுவதும் IP v6 முறைக்கு மாறாவிட்டாலும், இன்றைய இணையம் இரு முறைகளையும் கையாளக்கூடிய ஒன்று. IP v6 முறையில், பல்லாயிரம் கோடி இணைய முகவரிகள் சாத்தியம். இதனால், பல நூறு கோடி கருவிகள் இணையத்துடன் தொடர்பு கொண்டு செய்தி அனுப்பலாம், பெறலாம். நாட்பட, அனைத்து கருவிகளும் IP v6 முறையைப் பின்பற்றத் தொடங்கிவிடும்.

ஆனால், இது மட்டுமே இத்துறையின் பிரச்னை அல்ல. புதிய கருவிகள், புதிய தேவைகள், மற்றும் புதிய பிரச்னைகளை உருவாக்க வல்லவை. அடுத்த பகுதியில் மேலும் பார்ப்போம்.

- See more at: http://solvanam.com/?p=42951#sthash.AEQKI0my.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – கருவி இணையத் தொழில்நுட்பம்

உணர்விகள், மற்றும் கருவியாக்கல் பற்றிய ஒரு மேல்வாரியான அலசலை முன் பகுதியில் பார்த்தோம். ஆனால், கருவியாக்கல் என்பதில், பல முறைகள், பல அணுகுமுறைகள் இருப்பது, இத்துறையின் முதல் பிரச்னையாக உள்ளது. அப்படி என்ன பிரச்னை?

பொதுவாக, கணினிகள்/கருவிகளின் வலையமைப்பை சில வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. கணினிகளின் வட்டார வலையமைப்பு – பெரும்பாலும், இவை கம்பித் தொடர்புமூலம் ஒரு மையக் கணினிக்கோ அல்லது கணினி வழங்கிக்கோ இணைக்கும் நுட்பம். கம்பியில்லா WiFi –யும் இதில் அடங்கும். இதை LAN (Local Area Networking) என்கிறார்கள்
  2. கணினிகளின் தனிப்பட்ட வலையமைப்பு – பெரும்பாலும், கம்பியில்லா தொடர்புமூலம், ஒரு மையக் கணினிக்கோ அல்லது ஒரு மின்பரப்பிக்கோ இணைக்கும் நுட்பம். புளூடூத், Zigbee (இதைப் பற்றி விவரமாக இப்பகுதியில் பிறகு பார்ப்போம்) போன்ற வழிகள் இதில் அடங்கும். இதை PAN (Personal Area Networking) என்கிறார்கள்
  3. கணினிகளின் அகன்ற வலையமைப்பு – கருவிகளை இணையத்துடன் செல்பேசி தொழில்நுட்பங்கள் கொண்டு இணைக்கும் நுட்பம். GSM, LTE போன்ற நுண்ணறிப்பேசி முறைகள் இதில் அடக்கம். இதை WAN (Wide Area Networking) என்கிறார்கள்

மேலே சொன்ன முறைகள் தூரத்தை ஒரு அளவாகக் கொண்ட வகைப்படுத்தல். PAN என்பது மிகவும் குறைந்த தூரத்திலும், WAN  என்ற வலையமைப்பு இந்த மூன்று முறைகளில் அதிக தூரம் செயல்படும் திறன் கொண்டது.

ஆக, எப்படி உணர்விகள் மற்ற பாகங்களோடு இணைக்கப்பட வேண்டும் என்பதில், இரு அடிப்படை வழிகள் உள்ளன.

  1. கம்பியுடைய தொடர்பு (wired connectivity)
  2. கம்பியில்லாத் தொடர்பு (wireless connectivity)

IOT part10-pic1

தொழிற்சாலைகள், கட்டிடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் வீடுகளில் உள்ள உணர்விகளுக்கு கம்பித் தொடர்பு போதுமானது. உதாரணத்திற்கு, வீட்டில் உள்ள வெப்பநிலைப்படுத்தி உலையுடன் (thermostat to furnace) கம்பித் தொடர்பிருந்தால் போதுமானது. அதே போல, ஒரு தொழிற்சாலையில் உள்ள தயாரிப்பு ரோபோக்கள், தொழிற்பிரிவு கணினியுடன் கம்பித் தொடர்பில் எல்லா தரவுகளை அனுப்புவதுடன், கணினியும் ரோபோவைக் கட்டுப் படுத்தவும், அதே கம்பித் தொடர்பால், முடியும். கணினிகளில் வழக்கமான முறைகளில் (RJ45) இணைக்க முடியும். இவ்வகை இணைப்புகளில் பெரிய பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடுகள் இல்லை.

ஆனால், பல புதிய பயன்பாடுகளில், உணர்விகளுக்கு ஏதாவது ஒரு செயலியுடன் கம்பியில்லாத் தொடர்பு தேவைப்படுகிறது, உதாரணத்திற்கு, நாம் பார்த்த அணிக் கருவிகள் பெரும்பாலும், நகரும் மனிதர்கள் பயன்படுத்துவதால், கம்பித் தொடர்பு ஒரு இம்சையாகக் கருதப்படும். அதே போல, சாலைப் போக்குவரத்தைக் கணிக்கும் ஒரு அமைப்பில், பல உணர்விகள் கம்பித் தொடர்புடன் உருவாக்கப்பட்டால், மிகவும் விரும்பப்படாத ஒன்றாக மாறிவிடக் கூடும் (இதற்காகச் சாலைகளைத் தோண்ட வேண்டும்). காரில் பயன்படுத்தும் உணர்விகளும் பெரும்பாலும் கம்பியில்லாமல் இருந்தாலே, அது ஓட்டுனருக்குத் தோதாக இருக்கும்.

ஆனால், கம்பியில்லாத் தொடர்பில் ஏராளமான முறைகள் மற்றும் பயன்பாட்டுக் கருத்து வேறுபாடுகள் உருவாகிவிட்டது. உணர்விக்கும் செயலிக்கும் உள்ள தூரத்திற்கேற்ப, பல தொழில்நுட்பங்கள் இன்று உள்ளது. இணைப்பின் வேகத் தேவையும், தொடர்பு முறையைத் தேர்வு செய்ய உதவுகிறது

  • சில கம்பியில்லா உணர்விகள் 10 செ.மீ. அளவிற்குள் செயலியுடன் தொடர்பு கொண்டால் போதும். உதாரணம், இன்றைய நுண்ணறிப்பேசிகளில் உள்ள பக்க தள தொடர்பு முறைகள் (Near field communication – NFC)
  • RFID ஒரு கம்பியில்லா உணர்வித் தொழில்நுட்பம். பெரிய கிடங்குகள், மற்றும் சில்லரை வியாபாரங்களில் இந்த முறை 3 மீட்டர், அதாவது ஏறக்குறைய 10 அடி, தொலைவிற்குள் உள்ள செயலியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது
  • முப்பது அடித் தொலைவிற்குள் உள்ள செயலியுடன் தொடர்பு கொள்ள புளூடூத் முறைகள் சரிப்படும். பல வகை அணிக் கருவிகள் மற்றும் காரில் பயன்படும் உணர்விகள் இம்முறையையே தேர்ந்தெடுக்கின்றன
  • சில உணர்விகள் கம்பியில்லாத் தொலைப்பேசிகள் பயன்படுத்தும் (cordless phones) முறையை 10 முதல் 70 மீட்டர் வரை உள்ள செயலியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்துகிறது
  • நமக்கெல்லாம் தெரிந்த வை.ஃபை. (WiFi) முறை, இன்னொரு கம்பியில்லா இணைப்பு முறை. எங்கு முடியுமோ (தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், வீடுகள்), அங்கு இந்த முறைகள் 4 முதல் 20 மீட்டர் வரைப் பயன்படும்

IOT part10-pic2இவ்வளவுதானா விஷயம் என்று தோன்றலாம். ஒவ்வொரு கம்பியில்லா முறைகளிலும் பல நிறை/குறைபாடுகள் உள்ளன. மேலே பட்டியலிட்ட முறைகளின் மிகப் பெரிய குறை, இவற்றை இயக்கத் தேவையான மின்சாரம். அத்துடன், இவற்றின் செயல் வேகமும் வேறுபடும். இன்னொரு முக்கியப் பிரச்னை, இம்முறைகளின் பாதுகாப்பின்மை. புதிய கருவி இணைய உலகிற்கு, மூன்று அடிப்படைத் (கம்பியில்லா இணைப்பு) தேவைகள் முக்கியம்:

  1. குறைந்த அளவில் மின்சாரப் பயன்பாடு.தேவையில்லாத பொழுது, உணர்விகள் தூங்க வேண்டும்
  2. இணையத்துடன் மற்றும் மற்ற உணர்விகளுடன் தொடர்பு, மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
  3. தேவையான பொழுது தொடர்பு கொள்ளும் திறன். அதாவது, எப்பொழுதும் இணையத்துடன் தொடர்பு அவசியமில்லை. மிக முக்கியமான விஷயம், ஒரு உணர்விகளின் கூட்டத்தில், மின்பரப்பி மற்றும் மின்வாங்கியாக ஒரு உணர்வி செயல்பட்டால் போதுமானது. இதை இன்னொரு வழியிலும் சொல்லலாம் – அதாவது, ஏதாவது ஒரு உணர்வி செயலிழந்தால், உணர்விகளின் வலைமைப்பு செயலிழக்காமல், தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்

நாம் இதுவரை பார்த்த தொழில்நுட்பங்களில், இந்த மூன்று விஷயத்தில் எங்கோ அடிபட்டுவிடும். உதாரணத்திற்கு, புளூடூத் முதல் மற்றும் மூன்றாம் புள்ளிகளில் மிகவும் அடிபட்டுப் போகும் தொழில்நுட்பம். ஒரு விஷயம், தவிர்க்க முடியாதது. கம்பியில்லாத் தொடர்பில், தூரத்திற்கேற்ப, நுட்பங்கள் மாறும். அத்துடன், எல்லா நுட்பங்களும் ஒரே வகையான கம்பியில்லா மின்பரப்பி/வாங்கி (wireless transceiver) தொடர்பிருக்காது. இன்றைய கருவி இணைய முயற்சிகள், மேலே சொன்ன மூன்று விஷயங்களைக் கருத்தில் கொண்டு, புதிய உத்திகளை உருவாக்கி வருகிறார்கள்.

  1. Zigbee என்ற நுட்பம், ஒரு சல்லடை வலையமைப்பு (mesh networking) கொண்ட 10 முதல் 300 மீட்டர் வரையுள்ள உணர்விகளின் கம்பியில்லாத் தொடர்பு நுட்பம். கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. மிகவும் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுட்பம் இது. அத்துடன், இதன் சல்லடை வலையமைப்பு, ஒரு உணர்வி செயலிழந்தாலும் வலையமைப்பு தொடர்ந்து செயல்படும் திறமை கொண்டது. உதாரணத்திற்கு, கட்டிடம் ஒன்றில் உள்ள பல்லாயிரக் கணக்கான மின் விளக்குகளில் உள்ள உணர்வி ஒன்று பழுதடைந்தால், மற்ற மின் விளக்குகள் செயலிழக்காமல் இருப்பது அவசியம்
  2. Z-wave என்பது, முப்பது அடிக்குள், குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் இன்னொரு தொழில்நுட்பம். Zigbee  -ஐ விடக் குறைந்த மின்பரப்பு வேகம் மற்றும் செயல்படும் தூரம் என்று இருந்தாலும், கட்டிடங்களின் ஒளிப் பயன்பாடுகளில் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
  3. 6LoWPAN என்பது எல்லா வகையிலும் Zigbee -யுடன் போட்டி போடும் ஒரு நுட்பம். 800 மீட்டர் வரை செயல்படக் கூடிய உணர்விகளின் கம்பியில்லா தொடர்பு நுட்பம். ஆனால், Zigbee என்பது நீண்ட காலமாக சந்தையில் இருப்பதால், இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு, பல பயன்பாடுகள் உள்ளன. நாளடைவில் இதே நிலையை 6LoWPAN –னும் அடைய வாய்ப்பிருக்கிறது.IOT part10-pic3

இதைத் தவிர பல தொழிற்சாலை உணர்வி இணைப்பு முறைகள், ஆங்காங்கு பயனில் உள்ளது. உதாரணத்திற்கு, KNX, Wireless HART, WiMax, Weightless  போன்ற நுட்பங்கள். இவற்றைப் பற்றி இக்கட்டுரைகளில் நாம் அதிகம் அலசப் போவதில்லை.

அடுத்தக் கட்ட முயற்சிகள், இரு தொழில்நுட்பப் போராட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது, அது Zigbee -யா அல்லது 6LowPAN –ஆ என்ற போராட்டம். நுகர்வோர் இன்று கணினிகளில் பயனபடுத்தும் விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் லினிக்ஸ் போன்ற விஷயம் இது. ஒவ்வொன்றிற்கும் சில நிறை/குறைகள் இருக்கின்றன.

  1. விண்டோஸைப் போல, Zigbee சந்தையில் சில வருடங்களாகப் பயனில் இருந்தாலும், Zigbee –யின் பெரும் குறை IPv6 முறையை பின்பற்றாதது எனலாம். இன்று, இது ஒரு பெரும் குறையாக யாருக்கும் தெரிவதில்லை – ஏனென்றால், நம்மிடம் உள்ள பல கணினி பாகங்களும் IPv4 முறையிலேயே தொடர்பு வைத்துக் கொண்டு வந்துள்ளன. எதிர்காலத்தில், அதாவது இன்னும் 5 ஆண்டுகளில், இந்த நிலமை IPv6 –க்குச் சாதகமாக மாறிவிடும் என்று நம்பப்படுகிறது
  2. Zigbee முறையைக் கொண்டு (http://www.zigbee.org/) உருவாக்கப்படும் பயன்பாடுகளுக்கு, இந்த அமைப்பு, நிறைய பயன்பாடுகளை உருவாக்க உதவிகளைச் செய்து வருகிறது. அத்துடன், Zigbee –யிலிருந்து IPv4 இணையத்துடன் தொடர்பு என்பது வெகு எளிமையான முறை
  3. 6LoWPAN என்பது புதிய நுட்பம். ஆனால், IPv6 – ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு நுட்பம். ஆனால், இணையத்துடன் இணைவது Zigbee –ஐப் போல, எளிமையானதல்ல
  4. இன்றும், Zigbee –யின் இணையத் தொடர்பு அத்தனை பாதுகாப்பான விஷயமல்ல. விஷமிகள் எளிதாக Zigbee வலையமைப்பைத் தாக்கிவிடலாம்
  5. இருந்தும், 6LoWPAN என்னும் புதிய நுட்பம், பயன்பாடுகள் அதிகமின்றித் தவிக்கிறது. அத்துடன், இதைக் கற்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன

ஆக, இந்த இரண்டு நுடபங்களும் எதிர்காலத்தில் புளுடூத்4 உடன் பயன்படுத்தப் படும் என்று நம்பலாம். ஆக, அடிப்படை மின்னணுவியல் பாகங்களை வைத்துப், பயனுள்ள கருவியாக இந்த நியமங்களைப் பயன்படுத்தி, ஒரு/பல உணர்வி(களை)யையும், ஒரு குட்டி செயலியுடன் இணைத்து உருவாக்க முடியும். இதற்கு, பல உப மின்னணுவியல் பாகங்களும் தேவை – உதாரணத்திற்கு, செயலிக்குத் தேவையான மெமரி, மற்றும் வெளியுலக இணைப்பிற்காக தேவையான USB, RJ45 போன்ற இணைப்பு வசதிகள்.

கருவிகளின் இணையம் என்பது கோடிக் கணக்கான  உணர்விகள், கணினி செய்லிகள் மற்றும் இவற்றை இணையத்துடன் இணைக்கும் தொடர்பியல் தொழில்நுட்பம் எல்லாம் சேர்ந்த விஷயம். அனைத்தையும் ஒரே நிறுவனம் செய்து வழங்கும் என்பது நடவாத காரியம். உணர்விகளை பல நூறு நிறுவனங்கள் தயாரிக்கிறார்கள். உதாரணத்திற்கு, நுண்ணறிப்பேசியில் உள்ள உணர்விகளை, இன்று, STMicroelectronics, LG, Samsung. Freescale, Fairchild Semiconductor, Bosch Sensortec, Knowles Electronics, InvenSense போன்றவர்கள் தயாரிக்கிறார்கள். அதே போல, மிக முக்கியமான செயலிகளை (Micro controller Units) பல நூறு நிறுவனங்கள் தயாரிக்கிறார்கள். இன்று, ARM, Freescale, Texas Instruments, Atmel, Intel and STMicroelectronics போன்றவர்கள் தயாரிக்கிறார்கள். இவற்றை இணைக்கும் வேலையை பல நூறு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

சரி, இதுவரை நாம் பார்த்தது என்னவோ வன்பொருள் போல அல்லவா காட்சி அளித்தது? இதில் எங்கு நிரலர்களுக்கு வேலை? நாம் விளக்கிய பகுதிகள், இந்தத் தொழில்நுட்பத்தின், கட்டுமானப் பகுதிகள். ஒவ்வொரு கருவி இணைய தொழில்நுட்பத்திலும், இத்தகைய அடிப்படைக் கட்டுமான அமைப்புகளின் அடிப்படையில் நிரலர்களுக்குத் தேவையான அமைப்புகள் உருவாக்கப் படுகிறது.

IOT part10-pic4

மேலேயுள்ள படம் கணினி வலையமைப்பு  (computer networking) அறிந்தோருக்குப் புதிதல்ல, மேலே உள்ள இரு தளங்களைத் தவிர (Application, presentation) மற்ற தளங்களை Zigbee அல்லது 6LowPAN போன்ற நியமங்கள் பூர்த்தி செய்கின்றன. கடைசி இரண்டு தளமும், நிரலர்களுக்கு மிகவும் முக்கியம். பல வீடு மற்றும் கார் சம்பந்தப்பட்ட நுகர்வோர் பயன்பாடுகளில், நுண்ணறிப்பேசியில் இவ்விரண்டு தளங்களும் ஒரு பயன்பாடாக உள்ளது. ஆனால், எல்லா பயன்பாடுகளும், வெறும் நுண்ணறிப்பேசியால் கட்டுப்படுத்தப்படும் என்றாகாது. பல, பெரிய கருவி இணையப் பயன்பாடுகளுக்கு, நுண்ணறிப்பேசியைவிட சக்தி வாய்ந்த கணினி வழங்கி அல்லது மேக கணினி வழங்கித் தேவைப் படும். இத்தகைய சிக்கலான தேவைகளுக்கு மேலே காட்டியுள்ள கட்டமைப்பு சரிப்படாது. இதைப் பற்றி விவரமாக அடுத்த பகுதியில் பார்ப்போம்.

- See more at: http://solvanam.com/?p=43142#sthash.0LOVxYIA.dpuf

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – கருவி இணையத் தொழில்நுட்பம் – பகுதி 11

ரவி நடராஜன்

IOT-part11-pic1.jpg

 

நாம் முன் பகுதியில், எப்படி கருவிகள் உருவாக்கப்படுகின்றன, மற்றும் மிகச் சிறிய உணர்விகளுடன் இணைக்கப்படுகின்றன என்று பார்த்தோம். ஆனால், நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் பயனடைய, இந்த அமைப்பை மேலும் மென்பொருள் மூலம், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, இக்கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேருக்கு, ஒரு உணர்வி, செயலியுடன் சேர்ந்து எடுக்கும் முடிவு, நுண்ணறிப்பேசியில், காட்டப்படும் படத்தின் திசைப்போக்கு (orientation) மாற்றம் என்பது பற்றியக் கவலை? நுகர்வோர் பார்ப்பதெல்லாம், ஒரு படத்தைக் காட்டும் பயன்பாட்டை மட்டும்தான். அத்துடன், நுகர்வோரின் எதிர்பார்ப்பு, எல்லா நிறுவன நுண்ணறிப்பேசிகளிலும், படத்தின் திசைப் போக்கு சுழற்சிக்கேற்ப மாறும் என்பதுதான். சாம்சுங்கில் ஒரு முறையும், ஆப்பிளில் இன்னொன்று என்றிருந்தால், குழப்பம்தான்.

இதையே சற்று மேலும் சிந்தித்தால், எதிர்கால கருவி இணைய பயன்பாட்டாளர் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்?

ஒரு கருவியை (உணர்வி+செயலி+ரேடியோ) பாதுகாப்பாக, எந்த ஒரு செயல்முறை மென்பொருளோடும் (Operating System) தொடர்பு கொள்ள வேண்டும். அதாவது, விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் என்று எதுவாக இருந்தாலும், கருவிக்கு எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது

கருவிகள் எப்படி இணைக்கப்பட்டிருந்தாலும், பயன்பாட்டாளர் எந்தச் சிக்கலுமின்றி, தன்னுடைய பயன்பாட்டை இயக்க முடிய வேண்டும். கருவிகள் BlueTooth4, Zigbee, 6LoWPAN என்று எந்த முறையால் இணைக்கப்பட்டாலும், பயன்பாட்டாளருக்கு எந்த வித்தியாசமும் தெரியக் கூடாது

நுகர்வோர் பயன்படுத்தும் பயன்பாடுகள் எளிதாக தரவுகளை பரிமாற்றிக் கொள்ள இயல வேண்டும். நம்முடைய உதாரணத்தில், எப்படி, ‘சக்தியும்’, ‘நெல்லையும்’, சர்வ சாதரணமாக தரவுகளை பரிமாறிக் கொண்டனவோ, அதுபோல ஒரு அனுபவத்தைப் பயன்பாட்டாளர் பெற வேண்டும்

இப்படி எதிர்கால நிலை பற்றி எடுத்துரைப்பது கணினி தொழில்நுட்பத்தில் வழக்கம். நடைமுறையில், வணிக மோதல்கள் மற்றும் சந்தைப் பொருளாதாரம், இத்தகைய குறிக்கோள்களைத் தவிடு பொடியாக்குவதும் வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில், கருவிகளில் இணையப் பயன்பாடுகளை ஒரே நிறுவனம் செய்து முடிக்க இயலாதது, அனைவருக்கும் புரிகிறது. அத்துடன், இந்த மூன்று குறிக்கோள்களையும் அடைவது எளிதல்ல. பெரிய நிறுவனங்கள், தங்களது கைவரிசையை பயன்பாடுகளில் காட்டுவதே தனக்குச் சரிப்பட்டு வரும் என்பதைச் சரியாக கணிக்கத் தொடங்கிவிட்டன.

மேல்வாரியாகப் பார்த்தால், கருவி இணையக் கட்டமைப்பில் (IOT architecture) சில முக்கிய பெரிய பாகங்கள் உள்ளன:

உணர்வி, செயலி மற்றும் தொடர்பியல் – இவை வன்பொருள் விஷயங்கள் (hardware)

கருவிகள் உருவாக்கும் தரவுகளை பயனுள்ள முடிவாற்றல் விஷயமாக ஏதாவது ஒரு திரை வடிவத்தில் (கணினித் திரை, நுண்ணறிப்பேசித் திரை, வில்லைக் கணினித் திரை) காட்சியளிக்கும் பயன்பாடு – இது மென்பொருள் விஷயம் (software)

IOT-part11-pic2.jpg

இந்த இரு நிலைகளுக்கு இடையில், பல்வேறு இடை நிலைகள் உள்ளன. பல வித்தியாசமான தொழில்நுட்பங்களை இணைப்பது அவ்வளவு எளிதல்ல. இதனால், பல்வேறு அணுகுமுறைகள், இந்தப் பிரச்னையைத் தீர்க்க  முன்வைக்கப்பட்ட வண்ணம் உள்ளது. மிக எளிமையான ஒரு கருவி இணைய கட்டமைப்பு இங்கே காட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் வசீகரம், இதன் எளிமைதான். இந்தக் கட்டமைப்பின், கீழ்தளத்தில், உணர்விகள் உள்ளன. அடுத்த தளத்தில், உணர்விகளை இணைக்கும் வலையமைப்பு முறைகள் உள்ளன. மூன்றாவது தளமாக, உணர்விகள் அனுப்பும் தரவுகளைச் சேகரிக்கப் பெரிய தரவுத் தேக்கிகள் உள்ளன. நான்காவது தளமாக, முடிவாற்றல் பொறிகள் (decision support tools) உள்ளன. ஐந்தாவது தளமாக, பயன்பாடுகள், முடிவாற்றல் பொறிகளின் பரிந்துரையை பயன்பாட்டாளர்களுக்கு கணினி அல்லது நுண்ணறிப்பேசி மூலம் காட்சியளிப்பிற்காக முன்வைக்கப்படுகிறது.

ஆனால், பல விஷயங்களை இந்த அணுகுமுறை, சரியாக விளக்காமல் விட்டு விட்டது எனலாம். உதாரணத்திற்கு, எல்லா கருவி இணைய அமைப்புகளிலும், முடிவுகள் ஒரு மிகப் பெரிய தரவு தேக்கி (big data store) அமைப்பைச் சார்ந்தே இருப்பதாக, இந்த அணுகுமுறை முன் வைக்கிறது. பல முக்கியக் கருவி சம்பந்த முடிவுகள், பெரிய தரவு தேக்கியை அடையும் முன்பே எடுக்க முடியும். உதாரணத்திற்கு, தானியங்கிக் கார், சுற்று வட்டாரத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு அந்தக் காரை இயக்க வேண்டும். முக்கியமான முடிவுகள் அரை நொடிக்குள் எடுக்கப்பட வேண்டியவை. இதற்காக, மிகப் பெரிய தரவு தேக்கியை நம்பியிருந்தால், பயனிகளின் பாதுகாப்பு கேள்விக்குறிதான். அதே போல, முடிவாற்றல் பொறிகள் (decision support tools) ஒரு பயன்பாட்டாளருக்குத் தேவையில்லை. அத்தகைய பொறிகள் பயன்பாட்டில், (application) மறைந்திருக்க வேண்டும். அத்துடன், உணர்விகள் கருவிகளாவதை இந்தக் கட்டமைப்பு சரியாகக் காட்டவில்லை.

IOT-part11-pic3.jpg

மேலே உள்ள படம், இந்த தொழில்நுட்ப கட்டுமானத்தை ஏழு தளங்களாகப் பிரிக்கிறது. எல்லா பயன்பாடுகளிலும், ஏழு தளங்களும் இருக்கத் தேவையில்லை. முதல் இரண்டு தளங்களில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இதையே நாம் சென்ற இரு பகுதிகளில் பார்த்தோம். மூன்றாவது தளம், பல உடனடி தேவை பயன்பாடுகளுக்கு மிகவும் தோதான விஷயம். அதாவது, இந்த தளத்திலேயே, இருக்கும் தரவுகளை வைத்து பல முடிவுகளை எடுத்து, கருவிகளின் தரவுபடி, அவற்றை இயக்கவும் செய்யலாம். இதை edge computing என்கிறார்கள். இதைத்தான் தானியங்கிக் காரின் கணினி உடனே செய்கிறது. அதற்கு அடுத்தபடியாக, உள்ள மூன்று தளங்களில், கருவிகளிடமிருந்து உருவாகிய பல கோடி தரவுகளை வைத்து முடிவுகளை எடுக்கலாம். இதை, ஒரு நிறுவனத்தின் கணினி வழங்கி வயல் (central computing server farm) செய்யலாம்; அல்லது ஒரு மேகக் கணினி வழங்கி வயல் (cloud processing) செய்யலாம். கார்கள், வீடுகளில் பயன்படும் பெரும்பாலான கருவி இணைய விஷயங்களுக்கு மூன்று தளங்கள் போதுமானது. மிக முக்கியமான விஷயம், இந்த தளங்களின் தரவுப் பரிமாற்றம், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேலே நாம் சொல்லிய கட்டமைப்பைப் பல அணுகுமூறைகள் கொண்டு செய்லபடுத்தலாம். கணினி மென்பொருள் துறையின் பல்லாண்டுப் பழக்கமான கோஷ்டி பூசலுக்கு இதைப் போன்ற விஷயம், அல்வா சமாச்சாரம். பல கோஷ்டிகள் உருவாகி தன்னுடைய அணுகுமுறைதான் சிறந்தது என்று பறை சாற்றி வருகிறார்கள். இவற்றில் முக்கியமான கோஷ்டிகள்:

  1. Google, Samsung Electronics, ARM Holdings, Freescale Semiconductor, Silicon Labs, போன்றோர் இணைந்து முன்வைக்கும் Thread என்ற அணுகுமுறை
  2. Atmel, Broadcom, Dell, Intel, Samsung இணைந்து முன்வைக்கும் OIC என்ற அணுகுமுறை
  3. Qualcomm, Cisco, Microsoft, LG, HTCஇணைந்து முன்வைக்கும் AllJoyn  என்ற அணுகுமுறை
  4. Intel, Cisco, AT&T, GE, IBM இணைந்து முன்வைக்கும் IIC  என்ற தொழில்துறை அணுகுமுறை

நம்மூர் அரசியல் கட்சிகள் தோற்றது என்று தோன்றலாம். குறைந்த பட்சம், அரசியல் கட்சிகள் ஒரு கூட்டணியுடன் உறவு வைத்துக் கொள்ளும். அவ்வப்பொழுது சந்தர்ப்பத்திற்காக மாறலாம். ஆனால், இங்கு பல கூட்டணிகளில் ஒரே கட்சிகள், எது வென்றாலும் ஆதாயம் நமக்கே என்று இயங்குவது, இந்தத் தொழிலின் மிகப் பெரிய குறை. தேர்தலைப் போல, இந்தக் கூட்டணிகளில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது ஒரு புதிய கூட்டணியோ இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பின் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம். இன்றைய நிலையில், இது ஒரு குழப்பமான துறையின் ஒரு அங்கம் என்று சொல்லலாம். உணர்விகளின் ஊரவலத்தில், ஏராளமான வியாபார வாய்ப்புகள் இருப்பதால், உள்ள குழப்பம் இது. நாளடைவில், சில கூட்டணிகள் உடையும், தோல்வியடையும். தேர்தலைப் போல, எல்லாம் பயன்பாட்டாளர் கையில் உள்ளது.

 

- See more at: http://solvanam.com/?p=43285#sthash.ufm2IKI2.dpuf

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இல்லங்களில் கருவிகள்

”திருமால், என்ன அகிலா உன்னைக் கூப்பிட்டு, ரொம்ப அலுத்துக் கொண்டாளா?” என்று வெளியூரிலிருந்து நண்பனை விசாரித்தேன்.

“எப்படிச் சரியாச் செல்லற? ஒழுங்கா இணையத் தொடர்பு கட்டணத்தைக் கட்டிடுவியே. ஏன் இந்த மாசம் கட்டல? பணப் பிரச்னையா?”

”அதெல்லாம் ஒண்ணுமில்ல. இந்த அகிலா, சரியாவே பேசறதில்ல. எப்பவும் குளிர்சாதனப் பெட்டி, அடுப்பு, மைக்ரோவேவுடன் பேச்சு. போதாத குறைக்கு மிக்ஸியும் இதுல சேர்ந்து எங்க வீடு கல்யாண வீடாயிடுச்சு”

“புதுசா பேசும் கருவிகள் இருந்தா ஒரு ஜாலியாக இருக்கும். உன்னோட எத்தனை நாள் ஒரே மாதிரி பேசறதாம்…”

“உன்னோட வீட்டுல இதெல்லாம் வந்தாத்தான் தெரியும் திருமால். ஒண்ணு ஒரு நாளைக்குப் பெண்குரலில் சொஞ்சுது, இன்னொன்னு ஆண் குரலில், வேலையை முடித்து விட்டதாக அறிவிப்பு. அவள் வெற்றிகரமாக ரசம் வைத்து முடித்ததற்குப் பாராட்டு வேற. வெறுப்பாயிடுச்சு”

“புரியுது…”

”இன்றிரவு என்ன சமைப்பது என்ற அவளது கேள்விக்குப் பதிலே சொல்ல மாட்டேன். வேளா வேளைக்குக் கொட்டிக்க மட்டும் தெரியுது என்று அர்ச்சனை எனக்குப் பழக்கம். இப்பெல்லாம், ஃப்ரிஜ்ஜிடம் என்ன சமைக்கலாம் என்று கேட்கிறாள். அதுவும் உள்ளிருக்கும் பொருட்களைப் பொறுத்து என்னவெல்லாமோ சொல்லித் தொலைக்கிறது. வெள்ளைக்காரனுக்குச் சாப்பிடவே தெரியாதுன்னு நினைக்கிறேன். ஃப்ரிஜ்ஜில் இருக்கும் காய்கறியை எப்பொழுதும் சாலட் செய்யச் சொல்லுகிறது. வெறுத்து போய், இணைய பில்லைக் கட்டாமல் விட்டு விட்டேன்”

 

oOo

IOT part12-pic1

நுண்ணறிப்பேசி, அணிக் கருவிகள், கார்களில் கருவிகள் என்று பல தரப்பட்ட விஷயங்களை நாம் பார்த்தாலும், இவற்றின் தாக்கத்தின் ஒரு பாகம்  இல்லம் என்று நிச்சயமாகச் சொல்லலாம். வீட்டில் உள்ள கருவி இணைய உலகில் இரண்டு பகுதிகள் எப்பொழுதும் உண்டு. முதலானது, புதிய உணர்விகள். இரண்டாவது நுண்ணறிப்பேசிகள். இன்று சில பயனுள்ள கருவிகள் சந்தைக்கு வந்தாலும், பெரும்பாலான கருவிகள் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வீடுகளில் எந்த வகைக் கருவிகள் பிரபலமாகிக் கொண்டு வருகின்றன?

  1. வீட்டின் பாதுகாப்பிற்காக நிறுவப்படும் இணையத்துடன் தொடர்புடைய விடியோ காமிராக்கள் (home video surveillance systems)
  2. வீட்டின் வெப்பம் மற்றும் குளிர்நிலையைக் கட்டுப்படுத்தும் வெப்பச் சீர்நிலைக்  கருவிகள் (smart thermostat)
  3. மின்சார உபயோகத்தைக் கட்டுப்படுத்தும் டிஜிட்டல் நுண்ணறியளவிகள் (smart (electrical) meters)
  4. நுண்ணறி மின்சார விளக்குகள் (smart bulbs)
  5. சமயலறை சாதனங்களைக் கட்டுப் படுத்தும் கருவிகள் (smart kitchen appliances)
  6. வீட்டின் வெளியே பயன்படுத்தப்படும் சில சாதனங்களைக் கட்டுப் படுத்தும் கருவிகள் (outdoor smart devices)
  7. வீட்டைச் சுத்தம் செய்யும் சிறிய ரோபோக்கள் (smart cleaning robots)

இவற்றைத் தவிர மற்ற கருவி இணைய விஷயங்கள், குறிப்பாக வீட்டு இணையக் கருவிகள் என்று சொல்ல முடியாது. என்னுடைய ஆராய்ச்சியில், பெரும்பாலான இணையதளங்கள் காரில் பயன்படுத்தும் கருவிகள், உடல்நிலைத் தகுதி கருவிகளை (physical fitness devices) வீட்டு இணையக் கருவிகளோடு சேர்த்துக் குழப்புவதில் வெற்றி கண்டுள்ளன.

வீட்டின் பாதுகாப்பு இணையக் கருவிகள் (digital video surveillance systems)

கடந்த பத்தாண்டுகளாக, வீடுகளின் பாதுகாப்பிற்காக விடியோ காமிராக்கள் நிறுவும் முறைகள் நிறை/குறைகளோடு வலம் வருகின்றன. சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெற்றோர்கள், இதைப் பெரும்பாலும் ஒரு அவசியமானத் தேவை என்று நினைக்கிறார்கள். மகப்பேறு விடுமுறை அதிகம் இல்லாமல் தவிக்கும் தாய்மார்கள், பிஞ்சுக் குழந்தைகளை வீட்டில் செவிலித் தாயிடம் (babysitter) விட்டுச் செல்லும் பொழுது, குழந்தையின் நலம் பற்றி அறிய விடியோ மிகவும் உதவுகிறது. அதுவும், இணையம் மூலம் எங்கிருந்தாலும் (இளம் தாய்மார்கள் வேலை காரணமாக வெளியூர் செல்ல நேர்ந்தால், இது மேலும் பயனுள்ள ஒரு உத்தி) கண்காணிக்கும் திறன் இதன் சிறப்பாம்சம். சிலர், இதை ஒரு சமூக அந்தஸ்திற்காகச் செய்கிறார்கள். டிஜிட்டல் காமிராக்கள் விலை மலிவானதிலிருந்து, இணைய நிறுவனங்கள் இத்தகைய விடியோ கண்காணிப்புச் சேவைகளை வழங்கி வருகிறார்கள். இந்த விடியோ காமிராக்கள் ஒவ்வொரு நிமிட நிகழ்வுகளையும் பதிவு செய்வதால், வீட்டுத் திருட்டு முயற்சிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சமீப காலமாக, சில இணைய விஷமிகள், (internet hackers) தலைகீழாக, இணையம் மூலம், வீட்டில் நடப்பதைக் கண்காணிப்பது, இந்த முறைகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வளரும் இந்தக் கருவி இணைய முயற்சிகளில், பெரிதும் அடிபடுவது, பாதுகாப்பின்மையற்ற வீட்டுக் கருவிகள்.

மேலே உள்ள விடியோ இவ்வகை விடியோ கண்காணிப்பு அமைப்புகளின் அம்சங்களை எளிமையாக விளக்குகிறது. வீட்டின் கண்காணிப்பு அமைப்புகளில் நகருண்ர்வி (motion sensor) எப்பொழுதும் உண்டு. திருடர்கள் பூட்டியிருக்கும் வீட்டில் நடமாடினால், உடனே அதை உணர்ந்து எச்சரிக்கும் உத்தி இது. இணையம் வரும் முன்னே பயனில் உள்ள நுட்பம்.

வீட்டின் வெப்பச் சீர்நிலை இணையக் கருவிகள் (smart thermostats)

மேல் நாடுகளில் வீட்டின் வெப்பச் சீர்நிலைக் கருவிகள் இணையம் வருவதற்கு முன்னே உள்ள ஒரு விஷயம். இக்கருவிகள் குளிர்காலத்தில் வெப்பத்தையும், கோடைகாலத்தில் குளிர்ச்சியையும் கட்டுப்படுத்தும் கருவிகள்.  இன்ன நேரத்திற்கு இன்ன வெப்பநிலை என்று அதில் நிரலி விட்டால், இக்கருவி உலை/காற்றுக் கட்டுப்படுத்தி (furnace/ air conditioner) எந்திரத்தைக் கட்டுப் படுத்தும். ஆனால், சில நாடகள் எதிர்பார்த்ததை விடக் குளிராகவும், அல்லது வெப்பமாகவும் இருந்தால், இக்கருவிகள் வீட்டின் காற்றுக் கட்டிப்படுத்தியைப் படுத்தி விடும். அத்துடன், பருவகாலத்திற்கேற்ப இதை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும், வீட்டில், இந்தக் கருவியருகில் இருந்தால் மட்டுமே எந்த மாற்றமும் சாத்தியம்.

இன்றுள்ள வீட்டு இணையக் கருவிகளில் மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ள ஒரு கருவி நெஸ்ட் (Google Nest) என்ற வெப்பச் சீர்நிலை நுண்ணறிக்கருவி (smart thermostat). கருவியின் சொந்தக்காரரின் குளிர்/வெப்ப விருப்பு வெறுப்புகளைக் கற்றுக் கொள்கிறது. ஒரு வருடம் பருவகால மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்றார்ப் போல வெப்பத்தை/குளிரைச் சீராக்குகிறது. அன்றைய தட்பவெப்ப நிலைக்கேற்றார்ப் போலக் குளிர்/வெப்ப நிலையின் அளவை முடிவு செய்கிறது. எங்கிருந்தாலும், நுண்ணறிப்பேசி மூலம், இந்தக் கருவியைக் கட்டுப்படுத்தலாம்.

கீழே உள்ள விடியோ இந்தக் கருவியின் இயக்கத்தை விமர்சிக்கிறது:

மின்சார டிஜிட்டல் நுண்ணறியளவிகள் (smart electrical meters)

மேற்குலகில், மின்சாரத்தின் விலை, அதைப் பயன்படுத்தும் நேரத்திற்குத் தகுந்தாற்போல மாறும். பகலில் ஒரு விலை, இரவில் ஒரு விலை, காலையில் அலுவலகங்கள், வணிக மையங்கள் திறக்கும் முன், சற்று குறைந்த விலை, வாரக் கடைசியில் சகாய விலை என்று பலவித விலைகள், பயன்படுத்தும் மின்சாரத்திற்கு உண்டு. மாதக் கடைசியில் அனுப்பப்படும் மின்சார பில்லில், உச்ச நேர மின்சாரம் இத்தனை யூனிட்டுகள், காலை நேர யூனிட்டுகள், சகாய யூனிட்டுகள் என்று மின்சார விநியோக நிறுவனங்கள் நுகர்வோரை வருத்தெடுத்து விடுகிறார்கள். மின்சாரத் தொகுதியின் (electrical grid) சுமைக்கேற்றார் போல கட்டணம் வசூலிக்கின்றன இந்த நிறுவனங்கள்.

மின்சார டிஜிட்டல் அளவிகள், எவ்வளவு மின்சாரத்தை ஒரு இணைப்புப் பயன்படுத்துகிறது என்பதை, கம்பியில்லாத் தொடர்பு மூலம் (கம்பி நிறுவனங்களுக்கு, கம்பியில்லாத் தொடர்பு தேவைப்படுவது விநோதமான விஷயம்!) நாளொன்றுக்கு ஓரிரு செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளது. மின்சார விநியோக நிறுவனங்கள், இந்தச் செய்தியின் மூலம் மினசாரத் தேவையை முடிவு செய்கிறது. இது, இத்துறையின் மிகவும் ஆரம்ப நிலை என்றே சொல்ல வேண்டும். இதைப் பற்றிய விடியோ இங்கே:

உண்மையில், பெரிய நுண்ணறிவு என்று எதுவும் இந்த முறையில் இல்லை. முன் பகுதியில் பார்த்த வெப்ப சீர்நிலை நுண்ணறிக் கருவியோ, அல்லது, நுண்ணறி சாதனங்களோ இல்லையேல், இதில் அதிகப் பயனில்லை. இன்றைய நிலையில், இத்தகைய டிஜிட்டல் மின்னளவிகள் அதிகம் பயனில் இல்லாததற்குக் காரணமும் இதுவே.

 

நுண்ணறி மின்சார விளக்குகள் (smart LED bulbs)

எல்.ஈ.டி. விளக்குகள், மின்சாரத்தை அதிகம் உறிஞ்சாமல், அழகாக ஒளி வழங்குகிறது. ஒரு 60 வாட் கம்பியிழை மின் விளக்கின் (filament bulbs) ஒளியை, 6 வாட் மின்சாரத்தில் வழங்குவதோடு, சூடு அதிகம் இல்லாமல் வெளிச்சத்தை வழங்குகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலை, நுண்ணறி மின்சார விளக்குகள்.

  1. நுண்ணறிப்பேசி கொண்டு, இவற்றின் ஒளி நிறத்தை மாற்றலாம். தூங்கச் செல்லும் பொழுது ஒரு நிறம், காலை எழும் பொழுது ஒரு நிறம் என்று மாற்றலாம். மேலும், நுண்ணறிப்பேசியில் வரும் பயன்பாடு, ஒரு காட்சியை, சில மின் விளக்குகள் கொண்டு உருவாக்கும் வரை வந்துவிட்டது
  2. சூரிய ஒளிக்குத் தகுந்தாற்போல, இவற்றின் ஒளியளவு மாறும்படி செய்யலாம்
  3. நுண்ணறிப்பேசி மூலம், வீட்டில் உள்ள பல அறைகளின் விளக்குகளைக் கட்டுப்படுத்தலாம். இத்தனைக்கும், கட்டுப்படுத்த வீட்டில் இருக்கக் கூடத் தேவையில்லை

ஒவ்வொரு மின்விளக்கிலும் ஓர் உணர்வி உண்டு – இதனால், மின்விளக்குகள் கம்பியில்லாத் தொடர்பு மூலம்  (பெரும்பாலும் Wifi அல்லது Zigbee) நுண்ணறிப்பேசியுடன் தொடர்பு கொள்கிறது. நுண்ணறிப்பேசியில் உள்ள பயன்பாடு, நுண்ணறி மின்விளக்குகளைக் கட்டுப் படுத்துகிறது. இன்று, இவ்வகை மின்விளக்குகளின் விலை அதிகம். இன்னும் சில ஆண்டுகளில், இதன் விலை வெகுவாகக் குறைந்து விடும் என நம்பலாம்.

ஃபிலிப்ஸ் நிறுவனத்தின் நுண்ணறி மின்விளக்குகளின் விடியோ இங்கே:

சற்று வித்தியாசமான தொழில்நுட்பத்துடன், சாம்சுங்கின் நுண்ணறி மின்விளக்குகளின் விடியோ இங்கே:

அட, நாம் தூங்கும் நேரத்தில், இணைய விஷமிகள் நம்முடைய வீட்டின் விளக்குகளை,  பல நிறம் மாறும், ப்யாஸ்கோப் போல விளையாடி நம்மை எரிச்சலுடன் எழ வைப்பார்களோ என்ற உங்களது கவலை புரிகிறது! அத்துடன், இவ்வகை மின்விளக்குகள் ஒரு நிறுவனத்துடன் நுகர்வோரை பிணைக்கும் விஷயம் மிகவும் வருந்தத்தக்கது.

சமயலறை நுண்ணறிச் சாதனங்கள் (smart kitchen appliances)

கடந்த இருபது ஆண்டுகளில், சமயலறை சாதனங்களில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது மைக்ரோவேவ் அடுப்பு. மற்ற சாதனங்களில் அவ்வப்பொழுது மின்னணுவியல் தலையைக் காட்டினாலும், மிகப் பெரிய முன்னேற்றம் என்று அவற்றைச் சொல்வது கடினம். இன்று, இந்த நிலை மாறி வருகிறது. ஃப்ரிட்ஜ், காபி எந்திரம், தானியங்கி பாத்திரக்கழுவி எந்திரம் (automatic dishwasher) என்று எல்லாவற்றிலும், இணைய வசதிகள் வரத் தொடங்கி விட்டன.

குறிப்பாக, மின்சார டிஜிட்டல் நுண்ணறியளவிகள் தரும் விலைப் பட்டியலுக்கேற்ப, எப்பொழுது இயங்கத் தொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. உதாரணத்திற்கு, தானியங்கி பாத்திரக்கழுவி எந்திரம் பாத்திரங்களை அடுக்கினாலும், குறைந்த விலை மின்சாரத்திற்காகக் காத்திருந்து இயங்குகிறது. அவசரமாகப் பாத்திரம் கழுவ வேண்டுமானால், உடனேயும் இதை இயக்கலாம்.

ஃப்ரிட்ஜ்கள் இன்று உள்ளே என்ன அடுக்கப்பட்டுள்ளது என்பதை அதன் காட்சியளிப்பில் காட்டிவிடுகிறது. அத்துடன், இந்த விஷயத்தை நுண்ணறிப்பேசி வாயிலாக இணையம் மூலம் கடையிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.  இப்படிப்பட்ட அம்சங்களுடைய சில சாதனங்கள் இங்கே:

எல்.ஜி. –யின் காட்சியளிப்பு:

எவ்வாறு, சமயலறை சாதனங்கள் இவ்வாறு இயங்கவிருக்கின்றன என்பதைப் பற்றிய ஜி,ஈ. –இன் காட்சியளிப்பு:

வீட்டின் வெளியே நுண்ணறி சாதனங்கள் (outdoor smart devices)

வீட்டின் வெளியே மேற்குலகில் வாரந்தோறும், புல் வெட்டுதல் என்பது ஒரு போரடிக்கும் வேலை. என்னதான் இதற்குப் பெட்ரோலில் வேலை செய்யும் புல்வெட்டி எந்திரம் இருந்தாலும், ஒவ்வொரு வாரமும் இதைச் செய்வது  அலுப்பு தட்டும் விஷயம். மின்சார மோட்டார் கொண்டு கம்பியில்லா (மறுமின்னேற்ற மின்கலனின் இயங்குபவை) புல்வெட்டிகளும் வந்துவிட்டன. ஆனாலும், இதை ஒருவர் தள்ளினால் தான் புல்லை வெட்டும். நுண்ணறிப்பேசி மூலம் இயங்கக்கூடிய மின் புல்வெட்டி வந்துவிட்டது. புல்வெளியின் எல்லைகளை சரியாக அதனுள் தரவாகக் கொடுத்து விட்டால், சமர்த்தாக தானே புல்வெட்டிவிடும். இத்தகைய நுண்ணறிப்புல்வெட்டியின் காட்டியளிப்பு இங்கே:

புல் வெட்டுதலை விட இன்னும் சலிப்பான வேலை, தோட்டத்திற்கு, நீர் பாய்ச்சுவது. புல்லாவது வாரம் ஒரு முறை வெட்டினால் போதும். நீரோ தினமும் பாய்ச்ச வேண்டும். இதற்காக நீர்தெளிப்பு அமைப்புகள் (sprinkler systems)  உண்டு. தரைக்கடியில் புதைக்கப்பட்ட நீர்தெளிப்பு அமைப்புகள், ஒரு கடிகை மூலம் காலை, அல்லது மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணியோ, ஒரு மணி நேரமோ நீரை தோட்டத்தில் தெளிக்கும்.  ஆனால்,  இந்த அமைப்பில் மழை பெய்யும் நாளிலும் நீரை குறிப்பிட்ட நேரத்திற்குப் பாய்ச்சும். தட்பவெட்ப நிலை பற்றி இந்த அமைப்பு அறியாது. இன்று, நுண்ணறிப்பேசி மூலம் இயக்கக்கூடிய நீர்தெளிப்பு அமைப்புகள் வந்துவிட்டன. மேலும், இந்த அமைப்புகள், மழை பெய்யும் நாளில் வேலை செய்யாமல், மிகவும் வெய்யிலான நாளில் ஒரு முறைக்கு இரு முறை நீர் தெளித்து வேலை செய்யும் திறன் கொண்டது. சில மேல்மட்ட மாடல்கள், மண்ணில் உள்ள ஈரப்பசையைப் பொறுத்து (விவசாயக் கருவி இணைய அமைப்புகளில் இந்த முறை மிகவும் முக்கியமானது) நீரைத் தெளிக்கும் திறன் கொண்டது – இதற்கென ஈரப்பசையை அளக்கும் உணர்வி ஒன்றும் இத்துடன் உண்டு. அத்தகைய நுண்ணறி நீர்தெளிப்பு அமைப்புகளில் ஒன்றின் காட்சியளிப்பு இங்கே:

வீட்டைச் சுத்தம் செய்யும் சிறிய ரோபோக்கள் (smart cleaning robots)

இன்னொரு அலுப்பு தட்டும் வேலை, வீட்டிற்குள் சுத்தம் செய்யும் வேலை. வெற்றுத் துப்புரவாக்கி (vacuum cleaner) ஒரு பயனுள்ள எந்திரமாக இருந்தாலும், இதை அடிக்கடி இயக்குவது அலுப்பான வேலை. தானியங்கி வெற்றுத் துப்புரவாக்கிகள் சில ஆண்டுகளாக சந்தையில் உள்ளது. இவற்றில் சில உணர்விகள் உள்ளன. எங்கு சுவரிருக்கிறது, படிக்கட்டு இருக்கிறது, அறையின் அளவு எத்தனை என்று அனைத்தையும் அளக்க உணர்விகள் உள்ளது. சுத்தம் செய்து முடித்த பின், சமர்த்தாக, மின்னேற்றிக் கொள்ளச் சென்று விடும். அடுத்தது என்ன? நுண்ணறிப்பேசி மூலம், இதையும் இயக்க வழி வந்துவிட்டது.

சந்தையில் உள்ள பல தானியங்கி வெற்றுத் துப்புரவாக்கிகளில், ஒன்றின் காட்சியளிப்பு இங்கே:

இத்தகைய எந்திரத்தை கம்பியில்லாத் தொடர்பு மூலம் கட்டுப்படுத்தும் முறை இங்கே:

இத்தகைய அலுப்பூட்டும் செயல்களைச் செய்யும் எந்திரங்கள் மிகவும் பிரபலமடையத் தொடங்கிவிட்டன. இன்னும் 5 ஆண்டுகளில் வீட்டில் நுண்ணறிக் கருவிகள் நுண்ணறிப்பேசிகளை விட அதிகமாக இருக்கும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. பாதுகாப்பின்மை மற்றும் எல்லாக் கருவிகளும் இயங்கும் ஒரே நுகர்வோர் முறை இல்லாதது இன்றைய பெருங் குறை.

மேலே நாம் பார்த்தது, இத்தகைய வீட்டுக் கருவிகளின் ஒரு சிறிய சாம்பிள். இதைப் போலப் பல பொருட்களைச் சுட்டிகளில் காணலாம்.

- See more at: http://solvanam.com/?p=43589#sthash.uTmsJ8bm.dpuf

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – பொதுப் பயனுடைமை உலகம் – பகுதி 14

பொதுப் பயனுடைமை (utilities) என்பது, நாம் ஒரு அடிப்படைத் தேவையாக நினைக்கும் விஷயங்கள். ஒவ்வொரு நகரமும், கிராமமும், இந்தச் சேவைகளை குடிமக்களுக்கு வழங்குவது அதன் கடமையாகிறது. நாம் பொதுப் பயனுடைமை என்று அதிகமாகப் பயன்படுத்தும் சேவைகள்:

  1. மின்சாரம்
  2. குடிநீர்
  3. சாக்கடை மற்றும் கழிவு
  4. சுற்றுப்புற சூழல் மேலாண்மை – காற்றுத் தூய்மை
  5. குளிர் நாடுகளில், எரிவாயு

இதில் மின்சாரம் தவிர, மற்ற விஷயங்கள் இயற்கையால் கொடுக்கப்பட்ட செல்வங்களை, நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்த விஷயம். மின்சார உற்பத்தி மற்றும் வினையோகம் என்பது முழுக்க ஒரு மனித முயற்சி. குடிதண்ணீர் மாசுபட்டாலோ, மின்சாரம் தடைபட்டாலோ, காற்றில் மாசு அதிகமானோலோ, உள்ளூர் அரசாங்க அமைப்புகள் பதில் சொல்ல வேண்டும். ஆனால், இவை ஒழுங்காக வேலை செய்யும் பொழுது, நாம் இவற்றைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

கட்டமைப்புத் துறையைப் போல, கருவிகள் பொதுப் பயனுடைமைத் துறையிலும், மறைமுகவாகவே உதவ வல்லது. பொதுப் பயனுடைமைத் துறையில் உள்ள சில முக்கியப் பிரச்னைகள்:

  1. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு
  2. பிரச்னை வருமுன் அதிக அறிவிப்பின்மை – உதாரணத்திற்கு, குடிதண்ணீர் மாசடைவது உடனே நடக்கும் விஷயமல்ல. அதே போல காற்று மாசுபடுவதும் ஒரே நாளில் நிகழும் நிகழ்வல்ல
  3. காற்றின் தூய்மை அளவுகள், ஒரு நகரத்தில் புது வகை சட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு பயன்பெறச் செய்ய முடியும். ஆனால், பல சிறு நகரங்களில் (ஏன், இந்தியாவின் பெரு நகரங்களிலும் இதே கதிதான்) காற்றின் தூய்மையை அளப்பதே இல்லை

இந்தப் பகுதியில் மின்சாரம், குடிநீர் மற்றும் காற்று மாசுக் கட்டுப்பாடு என்ற மூன்று உப துறைகளையே விரிவாக அலசுவோம்.

மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானம்

மின்சார உற்பத்தி பெரும்பாலும் ஆள் நடமாட்டமில்லா தொலைவு பகுதியில் (remote areas) நடக்கிறது. பல நூறு மையில்கள், கம்பிகள் வழியாகப், பகிர்மான நிலையங்களுக்கு (electrical distribution centers) மின்சாரம் வந்தடைகிறது. இதைத் தவிர, உப பகிர்மான நிலையங்கள் (electrical sub stations) , மின்மாற்றிகள் (transformers) வழியாக, வீட்டை, தொழிற்சாலையை வந்தடைந்து, நுகர்வோர் பயனடைகின்றனர். இந்தப் பயணத்தில், சில முக்கிய விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்:

  1. மின்சாரக் கம்பிகள், மற்றும் உப பகிர்மான நிலையங்கள் பெரும்பாலும் மிகவும் கடுமையான பகுதிகள், மலைகள், காடுகளைத் தாண்டி வருகின்றன. இங்குள்ள சுற்றுச் சூழல், நகரங்கள் போல சீராக இருப்பதில்லை
  2. இத்தகைய கடுமையான பகுதிகளில் தொலைத் தொடர்பு வசதிகள் இருப்பதில்லை. மழை, குளிர் என்று இயற்கையின் சீற்றத்திற்கு எளிதில் இரையாகும் வாய்ப்பும் உள்ளது
  3. மின் உப பகிர்மான நிலையங்கள் ஏராளமான உதிரி பாகங்களைக் கொண்ட ஒரு அமைப்பு. சுற்றியுள்ள மின்மாற்றிகள், கம்பிகள், விசைகள், மின் சுற்று உடைப்பான்கள் (electrical circuit breakers) இவற்றைப் பராமரிக்கும் வேலையும், பகிர்மான நிலயங்களில் நடைபெறும்

ஒரு வெகுதூர மின் உப பகிர்மான நிலையத்தில் உள்ள மின்மாற்றி சூடேற்றத்தால், பழுதடைந்தால், மின்சார பகிர்மானம் அடிபட்டுப் போகிறது. அதே போல, ஒரு புயலடித்தால், எங்கு கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளன,

IOT part14-pic1

எங்கு சரியாக வேலை செய்கிறது என்பதை அறியவே சில நாட்கள் ஆகிறது. குளிர் நாடுகளில், குளிர் காலத்தில், பனிப் புயலால் (snow storms) அடிபட்ட மின்சார அமைப்புகளைச் சென்றடையவே சில நாட்களாகி விடும். இந்த மாதிரி விஷயங்களில் கருவிகள் பெரும் உதவியாக இருக்கின்றன.

  1. கருவிகள், தொலை தூர மின் பகிர்மான அமைப்புகளில், வெப்பம், தொடர்ச்சி (continuity) போன்ற விஷயங்களை அளந்து, அவ்வப்பொழுது மைய அமைப்புக்கு செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தால், எந்த மின்மாற்றி, அல்லது மின் சுற்று உடைப்பான்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன என்று உடனே தெரிந்து விடும்
  2. இன்றைய கருவி இணைய தொழில்நுட்ப வளர்ச்சியினால், ஒரு உணர்வி வேலை செய்ய அனைத்து இணைக்கப்பட்ட உணர்விகளும் வேலை செய்யத் தேவையில்லை. அத்துடன், சின்ன மின்கல இணைப்புடன், கடுமையான சுற்றுச் சூழலிலும் இணையத்துடன் வேலை செய்யும் உணர்விகள் இத்துறைக்கு ஒரு நல்ல துணை
  3. இதைத் தவிர, மின் பகிர்மான அமைப்புகளில் உள்ள பல உதிரி பாகங்களை RFID கொண்டு எளிதாக தடமறியலாம். இதனால், உதிரி பாக திருட்டையும் பெரிதாக குறைக்க வழி செய்யலாம்

சைனாவை சேர்ந்த SGCC  என்ற மின் பகிர்மான நிறுவனம், இத்தகைய கருவி இணைய முயற்சிகளில் வெற்றி கண்டுள்ளது. டிஜிட்டல் காமிராக்களையும் பல இடங்களிலும் கண்காணிப்பிற்காக இந்த நிறுவனம் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது.

குடிநீர் பகிர்மானம்

குடிநீர், மனிதர்களுக்கு அடிப்படைத் தேவை. உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் குடிநீர் தேவை என்றாலும், மற்ற உயிரினங்களை விட, மனிதர்கள் அதிகமாகக் குடிநீரைப் பயன்படுத்துகிறார்கள். குடிப்பது, சமைப்பது என்று நிற்காமல், பயிர் வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு, பொருட்கள் தயாரிப்பு, தோட்டப் பராமரிப்பு, என்று பல வேலைகளுக்கும் குடிநீரைப் பயன்படுத்துகிறோம். கடந்த நூற்றாண்டில் மட்டும், மனிதர்களின் குடிநீர் உபயோகம் 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், உலகின் குடிநீர் வளம் ஒன்றும் அதிகரிக்கவில்லை. மேலும், புவி சூடேற்றத்தால் அதிகரித்து வரும் வறட்சி, குடிநீரை மேலும் ஒரு மிக அரிய வளமாக்கி வருகிறது. இதனால், குடிநீர் என்பது மிகவும் ஒரு முக்கிய பாதுகாக்கப்பட வேண்டிய வளமாகிவிட்டது.

அத்துடன், மேலே சொன்ன காரணங்களால், இருக்கும் குடிநீரின் தரமும் ஒரு பிரச்னைக்குள்ளாகி விட்டது. உலகில் எல்லாப் பகுதிகளிலும், அரசாங்கங்களுக்கு இது ஒரு பெரிய சாவாலாகிவிட்டது. சுருக்கமாக, குடிநீரின் பயணத்தைப் பார்போம். முதலில், இயற்கையின் ஆவியாக்கல், மற்றும் குளிர்வித்தல் போன்ற சங்கதிகளால், ஆறு, குளம், ஏரி என்று குடிநீர் நமக்குக் கிடைக்கிறது. இந்த நீரைக் குடிப்பதற்காக சுத்தம் செய்து, தேக்கிப்,  பல பயன்பாடுகளுக்கும் பகிர்மானம் செய்யப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட நீர், சாக்கடைகளில் சென்று, மீண்டும் பதன்படுத்தப்பட்டு, இயற்கையுடன் (அதாவது, கடல், ஆறு, ஏரி) கலக்கிறது.

IOT part14-pic2

 

இந்த முழு அமைப்பும் சரியாக வேலை செய்தால்தான், நகரங்கள், கிராமங்கள் செழிக்க முடியும்.

தண்ணீரின் அளவு எத்தனை என்று பல அரசாங்கங்கள் பலாண்டுகளாக பதிவுகள் வைத்து வந்துள்ளார்கள். ஆனால், கருவிகள், இந்த நீர் சக்கர மேலாண்மையை இன்னும் நன்றாகக் கட்டுப்படுத்த பல விதங்களிலும் உதவும். அவ்வப்பொழுது, அனைத்து உலக நகரங்களிலும், சில நாட்கள் ஏராளமான குளோரின் வாசம் குடிநீரில் நாம் முகர்ந்திருக்கிறோம். இதற்கு என்ன காரணம்? ஒரு புயலோ, அல்லது பெரு மழையோ பெய்தால், நதி நீர் அல்லது ஏரி நீரின் தூய்மை குறைந்ததை மெதுவாக ஒரு வேதியல் நிபுணர் ஒரு சாம்பிள் எடுத்து, அதை ஒரு ஆராய்ச்சிசாலையில் ஆராய்ந்து, தூய்மை அளவு மோசமாகிவிட்டதைப் பற்றி கதறி (J), மேலாண்மை உடனே, குளோரின் அளவை அதிகரித்து, நிலமையைச் சமாளிப்பார்கள். இதற்கு சில நாட்களாகி விடுகிறது. இங்குதான் கருவிகள், ஆராய்ச்சிசாலையாய், நதியின் பல நிலைகளிலும் நமக்கு நீரில் எத்தனைக் கரைந்த பிராணவாயு உள்ளது, எத்தனைக் கரைந்த மற்ற ரசாயனங்கள் உள்ளன என்று சொல்லிய வண்ணம் இருக்கும். ஒரு கணினி பயன்பாடு, நீரில் தேவையான ரசாயனங்கள் குறைந்தவுடன், உடனே அறிவிக்கும். எதற்கும் காத்திருக்காமல், சில நீர் சுத்த சமாச்சாரங்களை சரிப்படுத்தி விடலாம். குடிநீர் தரக் கட்டுப்பாட்டிற்கு இது ஒரு மிகப் பெரிய உதவியான விஷயம்.

IOT part14-pic3

 

லிபெலியம் என்ற ஸ்பெயின் நாட்டுக் கம்பெனி இந்தத் துறையில், ஸ்பெயின் நாட்டில் பல முயற்சிகளில் வெற்றி கண்டுள்ளது.

http://www.libelium.com/smart_water_cycle_monitoring_sensor_network

சுற்றுப்புற சூழல் மேலாண்மை  காற்றுத் தூய்மை

நகரங்களில் காற்றுத் தூய்மை மோசமாகி உள்ளதை அனைவரும் அறிவோம். தில்லி, மும்பய், பெய்ஜிங், லாஸ் ஏஞ்சலஸ், மெக்ஸிகோ நகரம் போன்றவை காற்று மாசுக்குப் பெயர் போனவை. முதலில் நாம் தொழிற்சாலைகளை காரணமாக்கி வந்தோம். இன்று, தொழிற்சாலைகள் காற்று மாசிற்கு ஒரு காரணம், அவ்வளவுதான். முதலில் கரியமில வாயுதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று சொல்லி வந்தோம். இன்று, காற்றுத் தூய்மை என்பது பல காற்றில் கலக்கும் வாயுக்களால் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். உதாரணத்திற்கு, நைட்ரோஜன் ஆக்ஸைடு ஒரு முக்கிய காரணம். இதன் பெரிய பங்களிப்பு, முழுவதும் எரிக்கப்படாமல் வெளியாகும் கார்களின் புகை என்றும் தெளிவாகியுள்ளது. நாம் மேலே சொன்ன பெரு நகரங்களில் காற்று மாசிற்கு, அதிகரித்து வரும் லாரிகள்/கார்களே காரணம்.

முன்பு சொல்வனத்தில் ‘சர்ச்சை மூட்டும் பச்சைநிறமே’ (http://solvanam.com/?p=21220) என்ற கட்டுரைத் தொடரில், நகரங்கள், எப்படி காற்று மாசுடன் ஒரு பயனற்ற அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன என்று எழுதியிருந்தேன். இத்துறையில், கருவிகள் பெரிய துணையாக இருக்கும் வாய்ப்பிருந்தாலும், இதை எந்தப் பெரிய நகரமும் அதிகம் கண்டு கொள்வதில்லை.

ஆனால், மிகவும் வெறுப்புற்ற நகரவாசிகள், தாங்களே இவ்வகை உணர்விகளை நிறுவி, உலகப் நகரங்களின் காற்றுத் தூய்மை லட்சணம் எப்படியுள்ளது என்று இணையத்தில் நிமிடத்திற்கு நிமிடம் வெளியிடுகின்றனர்.

http://airqualityegg.com/

IOT part14-pic4

இந்திய நகரங்கள் எங்கும் இவ்வகை உணர்விகள் நிறுவப்படாதது (2015) இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாருக்கும்  வியப்பூட்டாது. இக்கருவிகள் கொண்டு, காற்றில் எத்தனை CO, CO2, NO2 மாசு துகள்கள் உள்ளன என்று தெளிவாக வெளியிடுகிறார்கள். எந்த நகரமாவது இதைப் பார்த்து, நகர மைய போக்குவரத்து விதிகளைக் கடுமையாக்குவார்கள் என்பது இந்த முயற்சியின் நம்பிக்கை. அத்துடன், குடியிருப்பு பகுதிகளில், குழந்தைகள், வயோதிகர்கள் தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு, சில சட்டங்கள் கொண்டு வருவார்கள் என்றும் ஒரு நம்பிக்கை. உதாரணத்திற்கு, கனடாவின் டொடோண்டோ நகரில், கார், அல்லது லாரியை ஒரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மேல் நிறுத்திவிட்டு, காரை ஓடவிட்டால், அதற்கு அபராதம் உண்டு.

நாம் முன்னே பார்த்த லிபெலியம் நிறுவனம், இத்தகைய முயற்சி ஒன்றில் ஸ்பெயின் நாட்டில் ஈடுபட்டுள்ளது;

http://www.libelium.com/smart_city_air_quality_urban_traffic_waspmote/

ஆக, மின்சாரம், காற்று மற்றும் நீர் என்ற அடிப்படைப் பொதுப் பயனுடைமை விஷயங்களில் கருவிகள் பெரிதாக உதவக் கூடும். இந்த மூன்று தேவைகளுக்கும் நாம் உள்ளூர் அரசாங்கங்களை நம்புகிறோம். ஆனால், இவ்வகை மாற்றங்கள் இந்த அரசாங்கங்களை எட்ட பல வருடங்கள் ஆகும் என்பது உண்மை. வெகு விரைவாக குறைந்து வரும் கருவிகளின் விலை, இந்த நிலைமையைச் சற்று மாற்றலாம்.

- See more at: http://solvanam.com/?p=44035#sthash.nmLQTNTR.dpuf

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – விவசாய உலகம் – பகுதி 15

 

உலகின் மிக முக்கிய, பழையத் தொழிலான விவசாயத்திற்கும், கருவி இணைய முயற்சிகளுக்கும் என்ன தொடர்பு? ஒழுங்காக நடந்து கொண்டிருக்கும் விவசாயத்தையும் இந்த கணினி ஆசாமிகள் கெடுத்து விடுவார்களோ என்று பல கேள்விகள் உங்களுள் எழலாம். அல்லது மேற்குலக விவசாய விஷயங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குப் பயன்படாத விஷயம் என்றும் வாதம் செய்யலாம்.

இந்தத் துறையை ஆராய்ச்சி செய்யத் தொடங்கும் முன், என்னுடைய பார்வையும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. ஆனால், இந்தத் துறை சார்ந்த சில பிரச்னைகள், சற்று அசைபோட வைத்தது. எப்படிப்பட்டப் பிரச்னைகள்?

2050 –க்குள், உலகின் ஜனத்தொகை 980 கோடியைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பயிரிட இருக்கும் நிலம் என்னவோ இன்றைய நிலையை விடக் குறைவாகவே இருக்கும். இந்தியா போன்ற ஏராளமான மக்கட்தொகை கொண்ட சிறு நாடுகளின் பாடு திண்டாட்டம்தான் – புதிய விவசாய முயற்சிகள் ஒன்றே வழி!

உலகின் மிகப் பெரிய நாடுகள் (ரஷ்யா, கனடா, அமெரிக்கா, பிரேஸில், ஆஸ்த்ரேலியா) உணவு உற்பத்தியை, இன்றைய நிலையை விடக் கூட்டினால்தான் மற்ற உலக நாடுகளுக்கு உணவு விஷயத்தில் உதவ முடியும்.

உலகின் தண்ணீர் வளங்கள் குறைந்த வண்ணம் உள்ளன. நம்முடைய அன்றாடத் தேவைகள், உற்பத்தி மற்றும் பயிரிடல் தேவைகளுக்கு இருக்கும் தண்ணீர் வளத்தை திறமையாக பயன்படுத்துவது ஒன்றே வழி.

உலகின் 980 கோடி மக்கட்தொகைக்கு தேவையான உணவு பயிர் மட்டும் அல்ல. கால்நடை பராமரிப்பு, உற்பத்தி ஏராளமாக பெருக்க வேண்டும்.

மேலே சொன்ன ஒவ்வொரு விஷயமும் (2-வது புள்ளியைத் தவிர) மேற்குலகப் பிரச்னைகள் அல்ல. மாறாக, பூதாகாரமான இந்தியப் பிரச்னைகள். ஒரு காலத்தில், உரம் மற்றும் எந்திரங்கள் பிரச்னைகளைத் தீர்த்துவிடும் என்று நினைத்தோம். இன்று, மக்கட்தொகை ஏராளமாக அதிகரித்து, இவற்றின் பயனை மேலும் நுண்ணறிவால்தான் இந்தப் பிரச்னைகளை ஓரளவாவது சமாளிக்க முடியும் என்பது மிகவும் தெளிவாகி விட்டது. படிக்கவில்லை, விவசாயத்தை பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறோம் என்ற பல்லவி எல்லாம் சரிப்படாது. கருவிகள் இந்த முயற்சிகளில் பெரிதும் உதவும் என்பதால், பல இந்திய முயற்சிகள் நம்பிக்கையூட்டுகின்றன.

இந்தப் பகுதியை நாம் சில சிறு உப பகுதிகளாகப் பிரித்து அலசுவோம்;

  • நீர் பாசன உதவிக் கருவிகள்
  • பூக்கள் விவசாயத்தில் ரோபோ கருவிகள்
  • எந்திர உதவிக் கருவிகள்
  • விவசாயத் திறன் உயர்த்தும் கருவிகள்
  • கால்நடை திறன் உயர்த்தும் கருவிகள்
  • இந்திய முயற்சிகள்

 

IOT part15-pic1

 

 

நீர் பாசன உதவிக் கருவிகள்

விவசாயக் கருவி இணைய முயற்சிகளின் மிகவும் பலனளிக்கும் முயற்சி, நீர்பாசன உணர்விகள். உலகின் பெரும்பாலான வயல்களில் உள்ளப் பெரும் பிரச்னை, தண்ணீரைப் பயன்படுத்தும் முறைகள். பொதுவாக, காலையில் இத்தனை மணி நேர நீர்ப் பாய்ச்சல் என்ற குத்து மதிப்பான அளவிலேயே உலகின் பெரும்பாலான வயல்கள் இயங்கி வந்துள்ளன, இன்றும் இயங்கி வருகின்றன.

 

நிலத்தின் தன்மைக்கேற்ப பயிருக்கு நீர் தேவைப்படுகிறது. அவ்வப்பொழுது செய்யப்படும் மண் பரிசோதனை மூலம் செய்யப்படும் பரிந்துரைகள் ஓரளவிற்கே பயனளிக்கின்றன. அத்துடன், புவி சூடேற்றத்தினால், நம்முடைய பருவ மழை மற்றும் பருவங்களின் நீளம் எல்லாம் மாறி வருகிறது. பழைய முறைகள் அத்தனைப் பயனளிப்பதில்லை. அதாவது, பயிரிடும் மண்ணின் தன்மை மாறி வருகிறது.

மண்ணின் ஈரப் பசையை அளக்கும் உணர்வி இந்த நிலமையை மாற்றும் சக்தி கொண்டது. ஈரப் பசை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாக இருந்தால், நீர் பாசன அமைப்பைத் திறந்து விடும் திறமை, வயலின் பல பகுதிகளில் பதிக்கப்பட்ட உணர்விகள் செய்ய வல்லவை. இந்த உணர்விகள் வயலின் கணினியுடன் இணைக்கப்பட்டால், அல்லது ஒரு திறன்பேசியில் உள்ள பயன்பாட்டோடு இணைக்கப்பட்டால், நீர் பாசன மோட்டார்களை நாளின் பல நேரங்களில், தேவையான அளவு திறந்து விட்டு மூடலாம். பூக்கள், மற்றும் பல பழங்கள் விவசாயத்தில், இவ்வகை நீர் தெளிப்பான்கள் நீரை சேமிப்பதுடன், அளவாக, தேவையான பொழுது தெளித்து, செடிகளை வாட விடாமல் பார்த்துக் கொள்கிறது. பொதுவாக, இந்த உணர்விகள் நீர்ப்பசை மற்றும் வெப்பம் இரண்டையும் அளக்கும் திறம் கொண்டது. இன்றுள்ள சில உணர்விகள் மண்ணின் ரசாயன அமைப்பையே அளக்கக் கூடியவை. இவற்றின் அளவுகளால், எப்பொழுது, எந்த உரம் சேர்க்க வேண்டும் என்ற முடிவுகளை எளிதில் விஞ்ஞான பூர்வமாக செய்யலாம்.

விவசாயத்தில் பூச்சிகள் இன்னொரு பெரிய பிரச்னை. பழத்தோட்டங்களில், பூச்சிகளால், பயிரே பயனற்று போகும் வாய்ப்புள்ளது. அங்கங்கே நிறுவப்பட்ட சின்ன பூச்சிகளை படமெடுக்கும் துல்லிய காமிராக்கள், பூச்சி முட்டையிலிருந்து, பூச்சியாகும்வரை மாபெரும் தோட்டம் முழுவதும் அலசி, நிலமை மோசமாவதற்கு முன் சொல்லிவிடுகிறது.

மருந்து தெளிக்க எத்தனை நாட்கள் உள்ளன என்று தோட்டத்தின் நிலமைக்கேற்ப சொல்லி விடுகிறது.

பாதுகாக்கப்பட்ட பயிரிடும் நிலையங்களில் (green houses) வளர்க்கப்படும் செடிகளின் ஊட்டச்சத்து பற்றி அறிந்து அதற்கேற்ப செயல்படுவது அவசியம். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறிய நிறுவனம், இவ்வகை நிலையங்களுக்கு, ஒரு நடமாடும் ஆராய்ச்சிசாலையையே கருவிகளின் உதவியுடன் உருவாக்கியுள்ளது, செடிகளின் நுண்ணூட்ட விவரங்களை உடனே திறன்பேசிக்கு அனுப்பி, அங்குள்ள விவசாயிக்கு, முக்கிய முடிவுகள் எடுக்க உதவுகிறது.

சரியாகப் பயன்படுத்தினால், வருடத்திற்கு, 50,000 கோடி கேலன் தண்ணீர் கருவி இணைய பயன்பாடுகளால், உலகெங்கும் சேமிக்க முடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.

 

பூக்கள் விவசாயத்தில் ரோபோ கருவிகள்

பூக்கள், ஒரு மிகப் பெரிய விவசாயத் தொழில். வட அமெரிக்காவில், தோட்டக் கடைகளுக்கு பல கோடி டாலர்கள் விற்பனை ஒவ்வொரு வருடமும் நடை பெருகிறது. அழகாக, சில குறிப்பிட்ட அளவுகளில், தொட்டிகளில் பூச்செடிகளை பூ வளர்க்கும் பண்ணைகள் இந்த தோட்டக் கடைகளுக்குக் கொண்டு சேர்ப்பார்கள். இந்தத் தொழிலில் பெரும்பாலும், மனித உழைப்பையே நம்பி இருந்தது. பல்லாயிரம் பூந்தொட்டிகளை வகை வகையாகப் பிரித்து, லாரிகளில் ஏற்றி, கடைகளுக்கு அனுப்புவது ஒரு அலுப்பூட்டும் செயல். அமேஸான் நிறுவனத்தில் பயன்படும் கீவா ரோபோக்கள் போல, இன்று பல பூந்தோட்டப் பண்ணைகள், ரோபோக்களைப் பயன் படுத்தத் தொடங்கி விட்டன.

இந்த ரோபோக்களுக்கு கண்கள், உயரம், அகலம், தூரத்தை அளவிடும் திறன் எல்லாமே உண்டு. அவ்வப்பொழுது மின்னேற்றம் செய்து கொண்டு, அழகாக செயல்படும் மின்தொழிலாளிகளை இங்கே பார்க்கலாம்:

இதே போல, ரோபோக்கள், சில அமெரிக்கப் பண்ணைகளில், பல்வேறு அலுப்பு தட்டும் வேலைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். பேக் செய்வது பயிரை வெட்டுவது போன்ற வேலைகள், அலுக்காமல் செய்யும் ரோபோக்கள்:

 

எந்திர உதவிக் கருவிகள்
சில அமெரிக்க மற்றும் யுரோப்பிய விவசாய எந்திரக் கம்பெனிகள் கருவிகளின் இணையத்தைப் பயன்படுத்தி, தங்களுடைய எந்திரங்களை வாங்கும் விவசாயிகளுக்கு பல்வேறு முறைகளிலும் இணையம் மூலம் ஆலோசனை வழங்குவதோடு, உதவவும் செய்கிறார்கள்.

எந்திரப் பராமரிப்பு ஆலோசனைகள், எந்திரங்களை தானியக்க முறையில் இணையம் மூலம் இயக்கம் விவசாய ஆலோசனைகள், விவசாயிக்கு திறன்பேசி மற்றும் இணையதளத்தில் பயனுறப் பயிற்சியும் அளிக்கிறார்கள்.

இத்தகைய அமெரிக்க அமைப்பு இங்கே:

ஆஸ்திரேலிய முயற்சி இங்கே:

பல பெரிய விவசாய எந்திர தயாரிப்பாளர்கள், தங்களுடைய புதிய தயாரிப்புகளில், இணைய இணைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதனால், விவசாயிகள் எந்திரப் பராமரிப்பு விஷயங்களில் எளிதாக ஆலோசனைப் பெற முடியும்.

விவசாயத் திறன் உயர்த்தும் கருவிகள்

விவசாயத் திறன் என்பதைப் பலவிதமாக அணுகலாம்.

உலகில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் உள்ள பிரச்னை, அவர்களிடம் பயிரிட இருக்கும் நிலத்தின் பரப்பளவு. இந்த நிலத்தில், விவசாயத் திறனை எப்படி உயர்த்த முடியும்?

  • பருவநிலை மாற மாற, அதன்படி பயிரிடல், உரம், நீர்பாசனம் என்ற எல்லா உள்ளீடுகளையும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • அன்றாட விவசாய முடிவுகளைச் சரியாக எடுக்க, பண்ணையில் முழுவதும் என்ன நடக்கிறது என்ற விவரம் தரவுகளை வைத்து முடிவெடுத்தல் வேண்டும்.
  • பூச்சிகள் மற்றும் பருவ மழை பற்றிய விவரம் தோராயமாக அல்லாமல், துல்லியமாக ஜி,பி,எஸ். கொண்டு முடிவெடுக்க வேண்டும்

இது துல்லிய விவசாயம் என்று அழைக்கப்படுகிறது. பெரிய விவசாயப் பண்ணைகளில், கையளவு விமானம் மூலமாக, துல்லியமாக பல அளவுகளையும் அளந்து வரும் விசேட சேவை வந்துவிட்டது.

காமிரா மூலம் முழு பண்ணையையும் சென்டிமீட்டர் விடாமல் படம் பிடிப்பதுடன், மண்ணில் உள்ள பல வகை ரசாயன அளவுகளையும் இந்த விமானத்தில் உள்ள உணர்விகள் அளந்து விடுகின்றன. இந்த தரவுகள் கணினிக்கு அல்லது மேக வழங்கிகளுக்கு மாற்றி, அங்குள்ள நிரல்கள் நம் உடலுக்கு ரத்த பரிசோதனை போல அனைத்தையும் உடனே சொல்லி விடுகிறது. இதன் உதவியுடன், எந்தப் பகுதியில் எந்த பயிர், அல்லது, எந்தப் பகுதிக்கு அதிக உரம் தேவை என்பது போன்ற முக்கிய முடிவுகளை விவசாயி எடுக்கலாம்.

 

பூச்சிகள் வரும் முன்பு, அவை அரிக்கப்போகும் பயிரில் முட்டையிடும். மேலே சொன்ன கையளவு விமானங்கள், இவ்வகை முட்டைகள் எங்கு பண்ணையில் எத்தனை உள்ளன என்று கூட சொல்லிவிடும். கண்ணுக்கு தெரியாத முட்டைகளைக் கூட துல்லியமாக படமெடுத்து செய்தியாக விவசாயிக்கு காட்டும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

கால்நடை திறன் உயர்த்தும் கருவிகள்

உலகெங்கும் பண்ணைகளில் கால்நடைகள் ஒரு மாற்று வருமான வழியாகப் பயன்படுகிறது. ஆனால், இதுவரை இந்தத் துறையில் அதிகம் தொழில்நுட்ப ஊடுருவல் இல்லை என்பது உணமை, அதிக பட்ச ஊடுருவல், பால் பண்ணைகளில் மட்டுமே இருந்தது. அதுவும் பால் கறப்பதற்கு, மற்றும் பதப்படுத்துவதற்கு எந்திரங்கள் பல நாடுகளிலும் பயனில் உள்ளன. சிலெ பெரும் கால்நடைப் பண்ணைகள், மேல்நாடுகளில் RFID முறையில் கால்நடைகளை ஒரு பொருளைப் போல பதிவு செய்து கண்காணித்து வருகிறார்கள். இது ஒரு மிகச் சிறிய பயன்பாடு என்று சொல்ல வேண்டும்.
பண்ணைகளில் உள்ள ஒரு பிரச்னை, கால்நடைகளுக்கு கருவூட்டல். இந்தத் துறையில் செயற்கை கருவூட்டல் முறைகள் இருந்த பொழுதும், இயற்கையோடு சேர்ந்தே இவை செயல்பட வேண்டும். மாடு, கருத்தரிக்க, ஒரு தக்க சமயத்தில்தான் இந்த செயற்கை முறைகள் பயனளிக்கும். விவசாயிக்கு, தன்னுடைய கால்நடைப் பெருக்கம் மிக முக்கியம். ஆனால், செயற்கை கருவூட்டல் முறைகள் ஒரு குறிப்பிட்ட சின்ன கால இடைவெளிக்குள் (3 முதல் 4 மணி நேரம்) நடக்க வேண்டும். பல நூறு கால்நடைகள் இருக்கும் பண்ணையில் ஒவ்வொரு கால்நடையையும் கண்காணிப்பது இயலாத செயல்.

இங்குதான் கருவிகள் உதவுகின்றன. மாட்டில் காலில் பொருத்தப்பட்ட கருவி, மனித அணியப்படும் கருவிகள் போல, மாட்டின் நடை எண்ணிக்கையை அளக்கும். கருவூட்டல் காலத்தில் மாடுகள் வழக்கத்திற்கு அதிகமாக நடக்கும். மேலும் இவற்றில் உடல் வெப்பம் வழக்கத்திற்கு அதிகமாக இருக்கும். காலில் பொருத்தப்பட்ட கருவி, விவசாயியின் திறன்பேசிக்கு சரியான கருவூட்டல் நேரத்தை, அதில் உள்ள பயன்பாடு மூலம் சொல்லிவிடும். இதனால், விவசாயியின் ஒரு பெரும் பிரச்னையான கால்நடைப் பெருக்கம் எளிதாகத் தீர்க்கப்படுகிறது. இந்த கருவி இணைய தொழில்நுட்பம் இன்று சோதனை முறை பயனில் உள்ளது.

 

இந்திய முயற்சிகள்

இந்திய விவசாய ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும், இந்திய முயற்சிகள், மண்ணின் ஈரப்பதம், மற்றும் ரசாயன அமைப்பை கண்காணிக்கும் முயற்சிகளாக இருக்கின்றன. எந்திர முயற்சிகள் அதிகமில்லாததற்கு காரணம், நம் சமூகத்தின் தானியக்க எதிர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவிலும், பல பகுதிகளில், விவசாய உழைப்பாளிகள் தட்டுப்பாடு இருப்பதும் உண்மை. அதே போல, இந்திய முயற்சிகளில், கால்நடைக் கருவி இணைய முயற்சிகள், இதுவரை என்னுடைய ஆராய்ச்சியில் சிக்கவில்லை.

இங்கே உள்ள சுட்டி, இந்திய முயற்சி ஒன்றைக் காட்டுகிறது. படு டெக்னிகலான காட்சியளிப்பு உங்களை பயமுறுத்தினால் நான் பொறுப்பல்ல.

பலவகை விவசாயக் கருவி இணைய முயற்சிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் அலசினோம். இன்னொரு முக்கியமான முயற்சி இந்தியா போன்ற நாடுகள் அவசியம் முயல வேண்டும். பயிர் என்றவுடன், ஏராளமான நிலம் என்பதுதான் நம்முடைய மனதில் தோன்றும் ஒரு விஷயம் – பல பழம், காய்கறிகளை, செங்குத்தான அமைப்பில் வளக்கலாம். அதாவது, பல மாடிக் கட்டிடம் போல, பல அடுக்குப் பண்ணைகள் இந்தியா போன்ற நாடுகளுக்குத் தேவை. எல்லா பயிர்களையும் இப்படி வளர்க்க இயலாது. ஆனால், பல காய்கறிகள், பூக்கள் மற்றும் பழங்களை இப்படி வளர்க்கலாம். கருவிகள் துணையோடு, இதை மேலும் திறனோடு செய்யலாம். பூச்சிகள், உரம், மற்றும் நீர்பாசனம் எல்லாவற்றையும் செங்குத்தான அடுக்குப் பண்ணையில் கண்காணித்து செயல்படுவது சற்று சிக்கலானாலும், செய்ய முடியும்.

இக்கட்டுரையில் சில பகுதிகள் பணக்கார நாடுகளின் விஷயங்களாகத் தோன்றினாலும், சில முக்கிய விவசாய அணுகுமுறைகள் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

  • இருக்கும் நிலத்தை திறமையாகப் பயன்படுத்தல்
  • இருக்கும் நீரைத் திறமையாகப் பயன்படுத்தல்
  • வளர்க்கும் பயிரை வாட விடாமல் காப்பது
  • பூச்சிகளிடமிருந்து பயிரைத் தக்க நேரத்தில் காப்பது
  • விவசாயத் திறனை அதிகரித்தல்

இவை எல்லா நாடுகளும் செய்தே ஆக வேண்டியக் கட்டாயத்தில் உள்ளன. இணையமும் கருவிகளும், இந்த முக்கிய ஐந்து குறிக்கோள்களை ஒவ்வொரு நாட்டிற்கும், வெவ்வேறு விதத்தில் உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு தொடர்பியல் விஷயமாக ஆரம்பித்த இணையத் தொழில்நுட்பம், உணவு உற்பத்தியில் உதவினால், அதை விடப் பெரிய சாதனை கருவி இணையத் துறைக்கு இருக்க முடியாது.

இந்தப் பகுதி கருவி இணைய தொழில்நுட்ப பயன்பாடுகளின் மிக முக்கியப் பகுதி. விவசாய அமைப்புகள் உலகெங்கும் இதனால் பயன்பெற, இவ்வகை தொழில்நுட்பங்களின் விலை மட்டும் அல்லாது, சிக்கலும் குறைய வேண்டும். அதிக படிப்பறிவில்லாத விவசாயிகள் பயன்படுத்தும் அளவிற்கு எளிமையாக்கப்பட வேண்டிய நுட்பம் இது. உலகில் எங்கு விவசாயம் செய்தாலும் இதனால் பயன்பெற முடியும். அரசாங்கங்கள், இவ்வகை தொழில்நுட்ப செலவுகளுக்கு, விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் இது போன்ற ஊக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், இந்திய விவசாயிகள் பயன் பெறுவார்கள். ஏனென்றால், இந்தியாவில் தொழில்நுட்பத் திறனுக்கு குறை ஏதும் இல்லை. விவசாயத்திற்கு இவ்வகை ஊக்க முயற்சிகளை அரசாங்கங்கள் செய்தாலே போதும். இன்னொரு செல்பேசி புரட்சி போல இந்திய விவசாயமும் முன்னேறும்.

- See more at: http://solvanam.com/?p=44131#sthash.V6NWYX3e.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி மற்றும் ஆராய்ச்சி உலகம்: கருவிகளின் இணையம்

கல்வித் துறையில் கருவிகளின் ஆட்சி ஏராளமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது சரியான யூகம் இல்லை. தொழில்நுட்பப் புரட்சிக்கு அடிப்படைக் காரணமான கல்வித்துறையில் அதிகம் தொழில்நுட்பத் தாக்கம் இல்லாதது ஒரு வினோதமான விஷயம். இன்றும் உலகெங்கும் கல்வி வழங்கும் முறை 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே தான் உள்ளது. மேற்குலகு பள்ளிகளில், மற்றும், பலகலைக் கழகங்களில், இன்றுள்ள மிகப் பெரிய போதனை மாறுதல்கள்:

  • மாணவர்கள் மடிக்கணினியை, வீட்டுப்பாடம் முதல் ஆராய்ச்சி வரைப் பயன்படுத்துகிறார்கள்
  • ஆசிரியர்கள் பவர்பாயிண்ட் காட்சியளிப்பு மென்பொருளை போதனைக்குப் பயன்படுத்துகிறார்கள்
  • ஆசிரியர்கள் படங்காட்டிக் கருவிகளை போதனைக்காகப் பயன்படுத்துகிறார்கள்
  • சில முக்கியமான கரும்பலகை கிருக்கல்களை செல்பேசி காமிரா கொண்டு மாணவர்கள் படமெடுக்கிறார்கள்
  • மேற்குலகப் பல்கலைக்கழகங்களில், பாட உதவி ஆவணங்கள், மார்க்குகள், கலந்தாய்வுகள் யாவும் பல்கலைக்கழக  உள் இணையம் மூலம் நடக்கிறது
  • இன்று, பல மேற்குலகப் பல்கலைக்கழகங்கள், இணையம் மூலம் பல துறையிலும் பாடங்களை இலவசமாக வழங்கவும் தொடங்கியுள்ளனர். Udemy, Coursera மற்றும் MIT Open Education போன்ற முயற்சிகள் ஆரம்பித்துள்ளன

ஆக, மாணவர்கள் பாடம் கற்க வேண்டுமானால், அவர்களுக்கு இரு முறைகள்தான் உள்ளன;

  1. பள்ளியோ, அல்லது கல்லூரிக்கோ செல்ல வேண்டும்
  2. இணையத்தில், கணினி முன் உட்கார்ந்து ஆசிரியரின் விரிவுரை மற்றும் காட்சியளிப்பைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்

நீங்கள் கல்வியை நோக்கிப் போக வேண்டும், கல்வி உங்களை நோக்கி வருவதில்லை. இந்த முறையில் உள்ள ஒரு பெரிய குறை என்னவென்றால், மாணவனுக்கு எதில் அதிக நாட்டமுள்ளதோ, அதைப் பற்றி, கல்விமுறை கவலைப் படுவதே இல்லை. வீட்டிற்கு வரும் உறவினர், நண்பர்கள் படிக்கும் மாணவர்களைக் கேட்கும் முதல் கேள்வி, அவர்களுக்கு எதில் நாட்டம் என்பது. கல்வித்துறை, இன்றும் 90 –களில் இணையம் மூலம் வியாபாரம் செய்யலாமா என்று தயங்கிக் கொண்டிருந்த வியாபார உலகம் போலவே காட்சியளிக்கிறது.

IOT part16-pic1

நாட்டத்திற்கேற்ப கல்வி

கதிரேசன் – வயது 14. அவனுக்கு விமானவியல் மிகவும் பிடிக்கும.

கதிரின் வீட்டிற்கு அன்றைய கணித வகுப்பு முடிந்ததும் ஒரு காட்சியளிப்பு அணுப்பப்படுகிறது. அதில் உள்ள வீட்டுப் பாடம் எல்லாம், விமானவியல் சார்ந்தது. அத்துடன், ஆரம்பத்தில், அன்றைய பாடத்தை விமான உதாரணம் கொண்டே சொல்லிக் கொடுக்கும் விடியோ.

ஆங்கிலப் பாடமும் விமானம் சார்ந்த விடியோவுடன் சொல்லிக் கொடுத்து, அத்துடன் வீட்டுப் பாடம் ஒன்றும் கொடுக்கப்படும்.

வேதியல் பகுதியில், விமானம் சார்ந்த உதாரணங்கள்.

இப்படி, நாட்டத்திற்க்கேற்ற கல்வி அளித்தால், மாணவர்கள் வெகு எளிதில் பாடங்களைப் புரிந்து கொள்வார்கள்

வேலாயுதம் – வயது 14 – கதிரேசனுடன் படிக்கிறான். விவசாயப் பிண்ணனியில் வளர்ந்ததால், அவனுக்கு விவசாயத்தில் நாட்டம். வேலுவுக்கு இயற்கணித, ஆங்கில, வேதியல் உதாரணங்கள் யாவும் விவசாயம் சார்ந்தவை. அவனுடைய வீட்டுப் பாடங்களும் விவசாயம் சார்ந்தவை.

இம்முறையான கல்வி எல்லோருக்கும் பயன்படும் என்றாலும், மாற்றம் என்பது கல்வித்துறையில் மிகவும் மெதுவாக நடக்கும் ஒன்று. இக்கட்டுரைத் தொடரில் உள்ள எல்லாத் துறைகளிலும் மிகவும் கடைசியில் கருவிகளைப் பயன்படுத்தும் துறை கல்வித்துறையாகத்தான் இருக்க வேண்டும்.

இடத்தை நோக்கிக் கல்வி

இந்த அணுகுமுறையில், முதலில் மாணவர்கள், எந்த இடங்களில் அதிகம் படிக்கிறார்கள், மற்றும் எத்தனை மணி நேரம், எந்தப் பாடத்தைப் படிக்கிறார்கள் என்று பல்கலைக்கழக கணினிக்கு அறிவிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும். தங்களுடைய திறன்பேசியில் உள்ள பயன்பாடு மூலம் இந்த செய்திகளை மேலேற்றி விடலாம்.

பல்கலைக்கழக கணினியில் உள்ள நிரல் ஒன்று மாணவனின் வீட்டுப் பாட மார்க்குகள், அவன்/அவள் படிக்கும் முறைகள் (வீட்டிலா, காண்டீனிலா, பூங்காவிலா, நண்பர்களுடனா)  என்று ஆராய்ந்து, இரண்டாவது செமஸ்டரிலிருந்து, ஆலோசனை வழங்கும். பல்கலைக்கழகம் இந்த விஷயத்தில் தலையிடாது. இவ்வகைச் சேவை பாரம்பரிய கல்வி முறைகளில் ஒரு சிறிய கருவி இணைய முன்னேற்றம் என்று சொல்லலாம்.

இன்று பெரிய நிறுவனங்கள், பல்கலைக்கழக பட்டதாரிகள் இந்தத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகின்றன. ஆனால், கல்வித் துறையில் இவ்வகை புதிய கருவி இணைய முயற்சிகள் அதிக பயன் தராவிட்டாலும், முயற்சிக்க வேண்டும். இதனால், மாணவர்கள், ஒரு நடைமுறைக் கருவி இணைய முயற்சி எப்படி இயங்கும், அதன் பிரச்னைகள் என்னவென்று அறிய மிகவும் உதவும்.

இந்தக் கட்டுரைத் தொடரில் மிகவும் சின்ன கட்டுரை இதுதான். என்னைப் போல, படிக்கும் உங்களுக்கும் இது சற்று ஏமாற்றம் அளிக்கும் என்று தெரியும். ஆயினும், இக்கட்டுரையை வெளியிடுவதன் காரணம், புதிய முயற்சிகள் இத்துறையில் வேறூன்ற வேண்டும் என்ற ஆசையினால் தான். படிக்கும் பருவத்தில், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் ஓரளவு புரிந்தால்தான், பணி புரியும் பொழுது, இத்துறையை முன்னேற்ற முடியும்.

- See more at: http://solvanam.com/?p=44278#sthash.BbYH5ATx.dpuf

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ மற்றும் பாதுகாப்பு உலகம்

ராணுவம் என்றவுடன், உடனே நம் மனதில் தோன்றுவது வீரர்கள், டாங்குகள், பீரங்கிகள் போர் விமானம் மற்றும் போர் கப்பல்கள். இந்த காட்சி சரியாக இருந்தாலும், கடந்த 25 ஆண்டுகளாக, தொழில்நுட்பம் மேற்குலகப் போர்களில் மிக முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துள்ளது.

  • 1990 –ல் நடந்த முதல் வளைகுடா போரில், அமெரிக்கா மேற்சொன்ன தளவாடங்களை மட்டும் பயன்படுத்தி வெற்றி பெறவில்லை. இதில் பெரும் பங்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் பல புதிய மின்னணுவியல் கருவிகள் துணை போனது. லேசர்களால், வழிநடத்தப்பட்ட ஏவுகணைகள், அகச்சிவப்பு பைனாகுலர்கள் மற்றும் உணர்விகள் என்று தொழில்நுட்பத்தை அள்ளி வீசி எதிரிகளை திக்கு முக்காட வைத்தனர்
  • 2003 –ல் நடந்த இரண்டாம் வளைகுடா போர், அமெரிக்காவுக்கு வெற்றியைத் தராவிட்டாலும், ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் பல புதிய தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. 2003 இரண்டாம் வளைகுடாப் போரில், முதன் முதலாக, ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரருக்கும் ஒரு இணைய முகவரி அளிக்கப்பட்டது. உலகின் முதல் பெரிய கருவி இணைய முயற்சி இதுவாகத்தான் இருக்க வேண்டும். கத்தாரில் உள்ள கட்டுப்பாடு மையத்திலிருந்து, ஒவ்வொரு ராணுவ வீரரும் கண்காணிக்கப்பட்டார்
  • ஆப்கானிஸ்தானில் சிறுவர்களுக்கு கூட அமெரிக்க போர் முறையின் கருவி இணையச் செயல்பாடுகள் தெரியும் – இவர்கள் அடிக்கடி பார்த்தது, தானியங்கி குண்டு வீசும் குட்டிப் போர் விமானங்கள் (aerial automatic drone bombers). வளைகுடா போரில் செங்கடலிலிருந்து லேசர் வழிநடத்தப்பட்ட டோமோஹாக் ஏவுகணைகள் தாக்கியது போல, ஆஃப்கானிஸ்தான் போரில், எங்கோ அமெரிக்க நிவேடா பாலைவனத்திலிருந்து இணையம் மூலம் ஒரு உயரே பறக்கும் விமானத்திலிருந்து, தானியங்கிக் குட்டிப் போர் விமானங்கள் (unmanned aerial vehicles or UAVs) அதிரடித் தாக்குதல்கள் நடத்தின. இவ்வகை தாக்குதல்கள் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது

ஒன்று மட்டும் நிச்சயம் – போரில் ஈடுபடும் அரசாங்கங்கள், மிகவும் அச்சப்படும் விஷயம், வீரர்களின் சடல எண்ணிக்கை. மக்களவையில் சடல எண்ணிக்கை அதிகமானால், எதிர்கட்சிகள் கிழித்து விடுவார்கள். உயிர்சேதமற்ற போர் முறைகள் இதனால் மிகவும் ஊக்குவிக்கப்படுகின்றன. இனிமேல், சினிமாவில்தான் துப்பாக்கி, கத்திச் சண்டை எல்லாம். மற்றபடி போர் என்பதும் ஒரு இணைய, அதுவும் கருவி இணைய விஷயமாகிவிடும்.

Part17-Pic2

சாதாரணர்கள் இன்று பயன்படுத்தும் விடியோ காமிராக்கள், ராணுவ பயன்பாடுகளின் பாக்கியாகும். ராணுவப் பயன்பாடுகள் பெரும்பாலும் மிகவும் சக்தி வாய்ந்த விடியோ காமிராக்கள் (பின் லாடெனைக் கண்காணித்த வகை) மற்றும் அகச்சிவப்பு காமிராக்கள் (infrared cameras). மேலும், பலவகை உணர்விகளை ராணுவப்  போர் விமானங்கள், மற்றும் ஊர்த்திகள் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளன. தானியங்கி பறக்கும் ஊர்த்திகளில் பெரும்பாலானவை கண்காணிப்பு வகையைச் சேரும். இவற்றில் சக்தி வாய்ந்த காமிராக்கள், படம் பிடித்து ஒரு கட்டுப்பாட்டு மையத்திற்கு டிஜிட்டல் தரவுகளாக அனுப்பிய வண்ணம் பறக்கும். இவற்றைத் தவிர, பூமிக்கு மேலே பறக்கும் ராணுவ செயற்கைக் கோள்கள், பகை நாட்டின் நிலப்பறப்பை துல்லிய காமிரா மூலம் கண்காணித்த வண்ணம் உள்ளன. கருவி இணைய விஷயங்கள் அனைத்தும் ராணுவத்தில் ஆரம்பமானவைதான்.

’சொல்வனத்தில்’, ‘நேரம் சரியாக’ என்ற தொடரில், ரகசிய ஜி.பி.எஸ். பற்றி எழுதியிருந்தேன். ராணுவ கருவி இணைய அமைப்பில் ரகசிய ஜி,பி.எஸ் –ம் ஒரு முக்கிய கருவி. ஒரு ராணுவ வீரரின் சரியான இருப்பிடம் (நாம் பயன்படுத்தும் ஜி.பி.எஸ். நம் இருப்பிடத்தை யார் வேண்டுமானாலும் எளிதில் அறிந்து கொள்ளலாம்) எதிரி நாட்டிற்குத் தெரியக்கூடாது.

ஆக, ராணுவக் கண்கள் பல வடிவங்களில் வரும்:

  1. வானில் பறக்கும் தானியங்கி பறக்கும் ஊர்த்திகள்
  2. ராணுவ செயற்கை கோள்கள்
  3. போர் விமானங்கள்
  4. ரகசிய ஜி.பி.எஸ்

இவை அனைத்தும் டிஜிட்டல் குறிகைகளால் (digital signals) , பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டு மையத்துடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் சக்தி வாய்ந்தவை.

இன்று அமெரிக்க ராணுவ முயற்சிகள், கட்டுப்பாட்டு மையத்துடன் நிற்காமல், எதிரி நாட்டில் உள்ள ராணுவ வீரருக்கு எப்படி இவ்வகைச் சிக்கலான, மற்றும் ஏராளமான கண்காணிப்பு தரவுகளை (விடியோக்கள், வெப்பப் படங்கள், ஜி.பி.எஸ். தரவுகள்) உடனே கொண்டு சேர்ப்பது என்பது. நம்முடைய 5-ஜி திறன்பேசி முறைகள் பாதுகாப்பற்றவை. இவற்றின் வேகமும் தேவை, மற்றும் பாதுகாப்பும் தேவை. வெற்றிக்கும் தோல்விக்கும் உடனுக்குடன் கிடைக்கும் எதிரி முயற்சிகளின் விடியோக்கள், மற்றும் எதிரி இருப்பிட மற்றும் ராணுவ அமைப்பு பற்றிய தரவுகள் மிகவும் முக்கியம். யுத்த பூமியில் இவ்வகைத் துல்லிய கருவி இணைய தொழில்நுட்பம் மிகவும் முக்கியமான தேவை.

Part17-Pic3

ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், நான் இதுவரை இந்தத் தொடரில் பார்த்த தொழில்நுட்பங்கள் ராணுவத் துறையால் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒன்று. ஆனால், இன்று ராணுவ மையங்கள் இந்தத் தொழில்நுட்பங்களை முற்றிலும் தவிற்கின்றன! உடைகளில் உணர்விகள், மற்றும் திறன்பேசியில் எதையாவது திருடும் மென்பொருள் என்ற எதையும் ராணுவ மையங்களில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இன்றைய பாதுகாப்பு உலகின் மிகப் பெரிய கவலை, எப்படி ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை, வேறு ஒரு பாதுகாப்பு பிரச்னையை உருவாக்க பயன்படுத்துவார்களோ என்ற அச்சம். உதாரணத்திற்கு, ஒரு  ரகசிய ராணுவ மையத்தில் இருக்கும் எல்.ஈ.டி. மின் விளக்கு பழுதானதை இணையத்தில் அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதை எளிய முறையில், இணைய விஷமிகள், இந்த ரகசிய ராணுவ மையம் இருக்கும் இடத்தை அறியப் பயன்படுத்தலாம். ஒரு மிக உயரக் கட்டிடத்தில் உள்ள காற்று மாசு அளக்கும் கருவி, எத்தனை உயரத்தில் தடைகள் இல்லாமல் அந்த நகரின் மேல் தானியங்கி பறக்கும் ஊர்த்தி பறக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடப் பயன்படுத்தலாம்.

மிகவும் போரடிக்கும் போர் பயன்பாடு

சொன்னால் நம்ப மாட்டீர்கள். ராணுவ கருவி இணையப் பயன்பாடுகளின் மிகப் பெரிய பயன்பாடு – பொருட்களின் இருப்புப் பட்டியல். பொதுவாக, ராணுவமாகட்டும், விமான படையாகட்டும், கப்பற்படையாகட்டும், யாவுமே மிகவும் விலையுயர்ந்த எந்திரங்களைப் பயன்படுத்தும் அமைப்புகள். ஒரு போர் விமானம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தூக்கிப் போட்டுவிட்டு இன்னொன்று வாங்க ஒன்றும் திறன்பேசியல்ல. பல வருடங்கள், இவ்வகை எந்திரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். பராமரிப்பு என்பது பாதுகாப்பு படையினரின் மிகப் பெரிய பிரச்னை.

RFID தொழில்நுட்பம் மிகவும் முக்கியமான ஒன்று. ராணுவ தளவாடங்களின் பல கோடி உதிரி பாகங்களின் இருப்பை கண்காணிக்க வேண்டியது ராணுவ, விமான, கப்பல்துறையின் முக்கிய வேலை. கோடிக் கணக்கில் விலை உயர்ந்த உதிரி பாகங்களை கண்காணிக்க RFID  மிகவும்  உதவும் – ஒரு உதிரி பாகம் எந்த டிப்போவில் உள்ளது என்பதோடு நிற்காமல், டிப்போவின் எந்த தளத்தில், எந்த அலமாரியில் உள்ளது என்று எங்கிருந்து வேண்டுமானாலும் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். ஒரு ராணுவ எந்திரம் அல்லது ஊர்த்தி பயன்படும் வகையில் இருக்க இவ்வகைச் செயல்திறன் மிகவும் அவசியம்.

உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கும், இது மிகவும் தோதான விஷயம். பல தரமான ராணுவ காண்ட்ராக்டர்கள், உதிரி பாக்ங்களை, உடனுக்குடன் தயாரித்து ராணுவத் தேவையை பூர்த்தி செய்யவும் உதவுகிறது. இவ்வகை RFID தாங்கிய பாகங்களை ரோபோக்கள் கொண்டு கையாளவும் பயன்படும்.

இவ்வகை பராமரிப்பு வேலைகளில் உதிரி பாகங்களை வைப்பில் வைத்திருப்பது, மாற்றுவது என்பது பழைய முறை. இன்று, மேற்குலகில், பழுது அடையுமுன், எப்படி இவற்றை மாற்றி எந்திரத்தை தயார் நிலையில் வைத்திருப்பது என்று கருவி இணைய முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். உதிரி பாகங்களின் இயக்க நேரத்தை அளவிடுவது, அவற்றின் சூழல் அளவுகளை அளப்பது (வெப்பம், அழுத்தம், உராய்வு) போன்ற கருவி இணைய முயற்சிகள், தகுந்த நேரத்தில், பாகங்களை மாற்றப் பயன்படுகிறது.

 

 

ராணுவத் திறன் ரோபோக்கள்

கன்னிவெடிகளைத் தகர்ப்பது என்பது ராணுவத்தில் நிகழும் அன்றாட செயல். மிகவும் அபாயமான இச்செயலை ரோபோக்கள் மிகவும் எளிதில், அதிக சேதமின்றி செய்ய கருவி இணைய முயற்சிகள் உதவுகின்றன. இவ்வகை ரோபோக்களில், சில முக்கிய உணர்விகள் உதவுகின்றன;

  1. தூரத்தை அளக்கும் துல்லிய காமிரா
  2. கரடு முரடான பாதையைக் கடக்க உதவும் நிலை உணர்விகள்
  3. துல்லியமாக நகர உதவும் ஜி,பி.எஸ். உணர்விகள்
  4. சரியாக கன்னிவெடியைக் குறி பார்க்க உதவும் உணர்விகள்

பாதுகாப்பான தூரத்திலிருந்து கம்பியில்லா தொடர்புமூலம் இவ்வகை ரோபோக்களை இயக்கலாம். கார்பன் நாறுகளால் செய்யப்பட்டிருப்பதால், குண்டு வெடித்து உருவாகும் வெப்பத்தை தாங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் இவை.

 Part16-Pic4

 

இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்

கருவி இணைய பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி எழுதும் பொழுது, இணையப் பாதுகாப்பு முயற்சிகளைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். 21 –ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பின்னேற்றம் நிழல் போர்கள். எதிரி யாரென்று தெரியாமலே போர் நிகழ்த்துவது இந்த மின்னணுவியல் யுகத்தின் ஒரு அலாதியான விஷயம். இன்று, இந்த நிழல் போர், இணையத்தில் நிகழ்த்தப்படுகிறது.

  1. நிழல் போர்களை உணர்வது என்பது முதற்படி. பெரும்பாலும், இவை, ஒரு நாட்டிற்கு எதிரான தீவிர இணைய டிஜிட்டல் பிரச்சாரம்
  2. இந்த பிரச்சாரத்திற்குப் பின்னால், பல பயங்கரவாத அமைப்புகள், சாதாரணர்களை பிரச்சாரத்தால் மயக்கி ஆயுதம் ஏந்தச் செய்யும் முயற்சிகள்
  3. இவ்வகை நிழல் போர்களைத் தகர்ப்பது மிகவும் கடினமான ஒன்று. எங்கிருந்து இவ்வகைப் பிரச்சாரங்கள் உருவாகின்றன, இந்த அமைப்புகளின் கட்டமைப்பு எப்படிப்பட்டது என்பதெல்லாம் கண்டறிய ஏராளமான மனிதத் திறன் தேவை
  4. இவ்வகை முயற்சிகளை தகர்த்து எறிய கருவி இணைய தொழில்நுட்பம் எப்படி உதவும்? நாம் இதுவரை பார்த்த நம்மால் தொடக்கூடிய கருவிகள் இங்கு பயன்படாது. உலகில் உள்ள அத்தனை நிழல் போராளிகளையும் கண்காணிக்க போதுமான அளவு மனிதவளமும், பயிற்சியும் எந்த அரசாங்கத்திடமும் இல்லை
  5. இதனால், இவ்வகை முயற்சிகளை, சில தேர்ந்த திறமையாளர்களின் முறைகளை, கணினி செயற்கை புத்திசாலி நிரல்கள் கொண்டு (அதாவது, நிழல் கருவிகள்) இணையம் முழுவதும் ஒவ்வொரு நாளும் முளைக்கும் நிழல் அமைப்புகளை தகர்க்க அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் முயன்று வருகின்றன

ராணுவக் கருவி இணைய முயற்சிகள் ரகசியமானவை. இவற்றை உருவாக்கும் பல ஒப்பந்த நிறுவனங்களும் இந்த முயற்சிகள் பற்றி அதிகம் பொதுவெளியில் எதுவும் சொல்வதில்லை. பல மேற்குலக ராணுவங்களின் அடுத்த 25 ஆண்டு திட்டங்கள் பொதுவெளியில் இருந்தாலும், இதில் அதிக விவரங்கள் இருப்பதில்லை. ரகசிய ஜி.பி.எஸ்.,புதிய உணர்விகள்,  தானியங்கி பறக்கும் ஊர்த்திகள் மற்றும் வீரரின் பாதுகாப்பிற்கான புது முயற்சிகள் என்று மேலெழுந்தவாரியாக இந்தத் திட்டங்கள் விளக்கும். ஆனால், உருவாக்கப்படும் கருவிகளின் உண்மையான செயல்பாடுகள், மற்றும் சக்தி பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகம் விளக்கப்படுவதில்லை.

- See more at: http://solvanam.com/?p=44461#sthash.uvHL5sFN.dpuf

 

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்புப் பிரச்னைகள்

 

கருவிகளின் இணையம் பற்றி இத்தனை பகுதிகளிலும் அதன் நல்முகத்தைப் பற்றி எழுதி வந்தவர், எப்படி பல்டி அடித்து இப்படித் தாக்குகிறார் என்று உங்களுக்கு தோன்று முன், முதலிலேயே சொல்லி விடுகிறேன். எல்லா புதுத் தொழில்நுட்பங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். பல ஊடகங்கள் அதன் குறைகளை ஆரம்ப நாட்களில் பெரிது படுத்துவதில்லை. பரவலாக அந்தத் தொழில்நுட்பம் பயனில் வந்த பின்புதான் அதன் குறைகள் மக்களுக்குப் புரிய வரும். ஊடகங்களும் புரிந்து கொள்ள முயற்சி செய்யும். இதுவே நடைமுறை. 2007 –ல் ஐஃபோன் வெளி வந்தவுடன், ‘திருஷ்யம்’ போன்ற மலையாளப் படங்கள் அதன் தீய முகத்தை ஒன்றும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. 2014 –ல், பரவலாக திறன்பேசி பயனில் வந்தவுடன் இப்படிப்பட்ட ஒரு தீய பயன்பாடு, சமூகத்தைச் சீர்கெடுக்கும் சக்தியை, சினிமா ஒரு மையமாக எடுத்துக் கொண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக திறன்பேசிகள் வெகு வேகமாக வளர்ந்து வந்துள்ளன. ஆனால், நாம் திறன்பேசிகளை எதற்குப் பயன்படுத்துகிறோம்? தொலைப்பேசியாக அவசியம் பயன்படுத்துகிறோம். ஆனால், அதைவிட முக்கியமாக காமிராவாகப் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு, கனடாவின் சி.பி.சி. ஜூலை-2015 –ல் ஒரு திடுக்கிடும் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது.

2010 முதல் 2015 வரை திறன்பேசிகளில் ஏறக்குறைய 250,000 கோடி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 80% எந்த மனிதனாலும் பார்க்கப்படாதவை.

இந்தக் கணக்கில் விடியோக்கள் அடங்காது. இந்த 250,000 கோடி புகைப்படங்களில், குறைந்தபட்சம் 180,000 கோடி புகைப்படங்கள் எங்கோ ஒரு மேக சேமிப்பில் உறங்குகிறது. ஒவ்வொரு ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் கருவிகளிலும் மேக சேமிப்பில் திறன்பேசியில் நுகர்வோர் பதிவு செய்யும் ஒவ்வொரு தரவும் பின் பயனுக்காக மேக சேமிப்பிற்கு அனுப்பப்படுகிறது. வாட்ஸ் ஆப் போன்ற பயன்பாடுகளில் பரிமாற்றிக் கொள்ளப்படும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களும் இதில் அடங்கும்.

Part18-Pic2

சரி, இதிலென்ன பெரிய விஷயம்? நம் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றிய பொறுப்பற்ற செயலின் ஒரு சின்ன வெளிப்பாடு இது. அப்படி என்ன பொறுப்பற்ற செயல்? நீங்கள் திறன்பேசியில் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்திலும், எந்த நேரம் நீங்கள் அந்தப் படத்தை எடுத்தீர்கள், எங்கு எடுத்தீர்கள் போன்ற விஷயங்கள் அடக்கம். புகைப்படம் காட்டும் விஷயங்கள், இன்னொரு விஷயம். மேக சேமிப்பில், உங்களது புகைப்படங்கள் இணைய விஷமிகள் கையில் சிக்கினால், உங்களின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு அத்துபடி. உதாரணத்திற்கு;

  1. ஜனவரி 6, 2015 மாலை 4 மணி – குமரன், சென்னை கடற்கறைக்குச் சென்றார்
  2. ஜனவரி 7, 2015 மாலை 7 மணி – குமரன், சென்னை தேவி தியேட்டரில் சினிமாவுக்கு 4 நண்பர்களுடன் சென்றார்
  3. ஜனவரி 9, 2015 இரவு 9 மணி – குமரன், ராயபேட்டையில் உள்ள ஹோட்டலில் ஒரு பிறந்த நாள் விழாவிற்குச் சென்றார்
  4. ஜனவரி 14, 2015 காலை 6 மணி – குமரன், பொங்கலுக்காகச் சென்னை அருகே உள்ள திருவள்ளூர் சென்றார்
  5. ஜனவரி 15, 2015 மாலை 7 மணி – குமரன், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில நண்பர்களைச் சந்தித்தார்
  6. ஜனவரி 18, 2015 இரவு 9 மணி – குமரன் சென்னையில் புகழ்பெற்ற ஒரு உணவகத்தில் சிக்கன் 65 உண்டார்
  7. ஜனவரி 20, 2015 காலை 11 மணி – குமரன் சென்னை பார்க் ஷெரடன் விடுதியில் முக்கியமான ஒரு வியாபாரச் சந்திப்புக்குச் சென்றார்

Sv_Solvanam_150_Mag_Tamil_Sol_Vanam_Issueஇப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பொறுமையாகத் தேடினால், நம் ஒவ்வொருவரின் ஜாதகமும் இணையத்தில் உள்ளது. சந்தித்தால் புகைப்படம், சாப்பிட்டால் புகைப்படம், சாலையில், அலுவலகத்தில், கலை நிகழ்ச்சிகளில், விளையாட்டுக்களில், என்று, எதையும் விட்டு வைக்கவில்லை. இதற்குக் காரணம்,  நம் (பாதுகாப்பு பற்றிய) பொறுப்பற்ற திறன்பேசிப் பயன்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் விடியோ விளையாட்டுக்கள் மற்றும் பயன்பாடுகளை தேவையோ இல்லையோ நம் திறன்பேசிகளில் தரவிறக்கம் செய்கிறோம். ஆனால் ஒவ்வொரு பயன்பாட்டை நாம் தரவிறக்கம் செய்து நிறுவும் போதும், சில முக்கிய விஷயங்களை சற்றும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ளுகிறோம். பயன்பாட்டைப் பயன்படுத்த அத்தனை அவசரம்!

  • உங்களுடைய மின்னஞ்சல்
  • உங்களுடைய இருப்பிடம் (location)
  • உங்களுடைய திறன்பேசியின் பல உணர்விகளின் இயக்கம்
  • உங்களது திறன்பேசியில் உள்ள காமிரா
  • உங்களது குரல்

இப்படிப் பல சொந்த விஷயங்களைக் கோட்டை விட நாம் தயாராகி விட்டோம். இதில் நாம் மட்டும் பொறுப்பற்றவர்களா? இவ்வகை பயன்பாடுகளைத் தயாரிப்பவர்கள் ரொம்பப் பொறுப்பானவர்களா? அதுவும் இல்லை. இரு சாராரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு இமாலயப் பாதுகாப்புப் பிரச்னை இன்று ‘திருஷ்யம்’ வரை வந்துள்ளது. கருவி இணைய உலகம் இந்தப் பிரச்னையை மேலும் சூரியன் அளவிற்குப் பெரிது படுத்தும் சக்தி வாய்ந்தது. கருவி இணையப் பாதுகாப்புப் பிரச்னையைப் பற்றிப் பெரிதாக அலசுமுன், இன்று நாம் இந்தப் பிரச்னையை எப்படி உருவாக்கினோம் என்பதை அறிவது முக்கியம். சுருக்கமாகச் சொல்லப் போனால்,

“பயன்பாட்டின் வசீகரமா, அல்லது பாதுகாப்பா என்று வந்தால், எப்பொழுதும் பாதுகாப்பு தோற்றுப் போகிறது”

  1. வீட்டில் பயன்படுத்துவதற்காக விற்கப்படும் கம்பியில்லா ரெளடர்களில் (wireless routers) 80% பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டவை
  2. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு ஆய்வில், ஐ.டி. துறையில் பணிபுரியும் 30% ஆசாமிகள் கூட, தங்களுடைய நிர்வாக கடவுச்சொல்லை (administrator password) மாற்றுவதில்லை! ஊருக்கு உபதேசம் செய்பவர்கள்!
  3. சாதாரண பயன்பாட்டாளர்களில் ஒரு 46%  தங்களுடைய நிர்வாக கடவுச்சொல்லை (administrator password) மாற்றுவதில்லை என்று அதே ஆய்வு சொல்லுகிறது

சற்று பின்நோக்கி, நாம் இணையத்தை எப்படி வீட்டிலும், அலுவலகத்திலும் பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போம். பாதுகாப்பு பிரச்னை என்பது இணையத்திலிருந்து ஆரம்பமாகிறது.

Part18-Pic3

பாதுகாப்பற்ற ரெளடர்கள்

இணையத்துடன் தொடர்பு கொள்ள நாம் அனைவரும் பயன்படுத்துவது ரெளடர் என்னும் கருவி. மிகவும் அலட்சியமாக நாம் செயல்படுவதும் இந்த ரெளடர் விஷயத்தில்தான். யாராவது தொழில்நுடப ஆசாமியிடம் இதன் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு எல்லாம் சரியாகவே இருக்கிறது என்று நம்புகிறோம். இதில் மேற்குலக முறைகள் சரியா அல்லது இந்திய முறைகள் சரியா என்றால், என் பார்வையில்,  இரண்டிலும் பிரச்னைதான். இந்திய முறைகளில், தொழில்நுட்ப ஆசாமியிடம், முழு நம்பிக்கை வைக்கிறோம்.  இந்த நம்பிக்கையில், தொழில்நுட்ப ஆசாமியின் பாதுகாப்பு அறிவும் அடங்கும். அங்குதான் பிரச்னை. இந்தியாவில் தொழில்நுட்பம் அறிந்த அளவிற்கு பாதுகாப்பு பற்றிய அறிவு இல்லை என்பது கசப்பான உண்மை. மேற்குலகில், எல்லாவற்றையும் நுகர்வோரே செய்து முடிக்க வேண்டும். இது இந்திய முறைகளை விட மோசமானது. நுகர்வோருக்கோ, இணையத்தின் பயன்பாட்டின் மீது மோகம் – இணையப் பாதுகாப்பின் மீது அல்ல.

கடைசில் என்ன நடக்கிறது? இரு உலகிலும், ரெளடரின் பாதுகாப்பு மிகவும் அடிப்படை அளவிலேயே விடப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து ரெளடர்களிலும் நிர்வாகக் கடவுச் சொல் admin  என்றே விடப்படுகிறது. மிக எளிதில் ஊடுருவக் கூடிய ஒரு பாதுகாப்பற்ற அமைப்பு இது.

  • இக்கட்டுரையைப் படித்து விட்டு உங்கள் ரெளடரின் நிர்வாகக் கடவுச் சொல்லை மிகச் சிக்கலான, நீங்கள் மட்டுமே அறிந்த ஒன்றாக தயவு செய்து மாற்றுங்கள். இல்லையேல், உங்களது இணைப்பில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க முடியும்.
  • தயவு செய்து, உங்கலது WiFi முறையை WPA –வுக்கு மாற்றவும். இன்று நம்மிடம் உள்ள WiFi  முறைகளிலேயே மிகவும் பாதுகாப்பான முறை இதுதான்
  • உங்களது ரெளடரில் விருந்தினருக்கான (guest account/password) கடவுச்சொல்லையும் கடினமாக்குங்கள். சிலர், மேலே சொன்ன இரு விஷயங்களையும் செய்து விட்டு, விருந்தினருக்கான கடவுச்சொல்லை எளிதாக விட்டு விடுகிறார்கள். என்றும் ஒன்றை மறக்க வேண்டாம் – உங்களது வேண்டாத விருந்தாளி இணைய விஷமிகள்!

 

இந்த கட்டுரையின் இறுதியில் ஒரு பாதுகாப்பு நிபுணரின் விடியோ ஒன்றை இணைத்துள்ளேன். எந்த முப்பது வீதிகள் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியை எடுத்துக் கொண்டாலும், இன்றும், பல பாதுகாப்பற்ற ரெளடர்கள் இருக்கத்தான் செய்கின்றன என்கிறார் இவர். இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், பல அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலைகள், இந்த அளவிலே இயங்குவதுதான்!

இந்தப் பிரச்னையின் இன்னொரு முக்கிய அங்கம், ரெளடர் தயாரிப்பாளர்கள். தங்களது தயாரிப்புகள் மிகவும் பாதுகாப்பானவை என்று பறை சாற்றும் இவர்கள், கூடவே, தங்களுடைய தயாரிப்புகள் மிகவும் எளிமையானவை என்றும் சொல்லுபவர்கள். இதில் ‘எளிமை’ என்று எதைச் சொல்லுகிறார்கள்?  அவர்களுடைய தயாரிப்பை நிறுவுவது என்பதைத்தான். எப்படி நிறுவுவதை எளிமையாக்குவது? நிர்வாகக் கடவுச் சொல்லை admin  என்று வைத்தால், நிறுவுவது எளிமையாகி விடுகிறது. பயன்பாடு வசீகரமாகி பாதுகாப்பு அடிபடுகிறது!

Part18-Pic4

பாதுகாப்பற்ற காமிராக்கள்

கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் விடியோ காமிராக்கள் மிகவும் மலிவாகி விட்டன. துல்லியமாக படம் மற்றும் ஒலியைப் பதிவு செய்வது மற்றும் ஒலி/ஒளிபரப்புவது எளிதாகி விட்டது. பல மேற்குலக வீடுகளில், இவ்வகை கலர் விடியோ காமிராக்கள் வீட்டின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிறுவனங்களால் இவை நிறுவப்படுவதால், நுகர்வோர் இவற்றை மிகவும் பாதுகாப்பான கருவிகள் என்று நம்பி விடுகிறார்கள். கூடவே, இந்த பாதுகாப்பு நிறுவனங்கள், இவ்வகை கருவிகளை நுகர்வோரின் திறன்பேசியுடன் இணைக்கும் வசதியும் செய்து தருகிறார்கள். இணையம் மூலம் விடியோ மற்றும் ஒலி குறிகைகளைப் பெற்று வீட்டில் என்ன நடக்கிறது என்று கண்காணிக்க முடியும். அட, இதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது, என்று தோன்றலாம். பெரும்பாலும், இந்த விடியோ மற்றும் ஒலி குறிகைகள் எந்த மறைகுறியாக்க (encryption) முறைகளும் பின்பற்றாமல் ஒளி/ஒலிபரப்பப்படுகின்றன. இவற்றை எளிதில் ஒரு பொது இடத்தில் விஷமிகள் எளிதாக (Wifi hotspot) பார்க்க முடியும். இதனால், பல வீடுகளின் பாதுகாப்பு சமரசமாகியுள்ளது. விஷமிகள் சில படிகள் மேலே போய், உங்களது காமிராக்களை சுற்றவிட்டு உங்களது வீட்டில் என்ன பொருடகள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்று இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொண்டு, அவர்களது திருட்டை முழுவதும் திட்டமிடலாம்!

இக்கட்டுரையைப் படிக்கும் உங்களது வீட்டில் இவ்வகை விடியோ அமைப்புகள் நிறுவப்பட்டிருந்தால். பாதுகாப்பான உங்களது அலுவலகத்திலிருந்து கண்காணியுங்கள் – பொது இடங்களிலிருந்து அல்ல.

பாதுகாப்பற்ற புளூடூத்

திறன்பேசிகள் வந்த பிறகு, நுகர்வோருக்கு புளூடூத் மீது ஒரு தீரா மோகம் என்றுதான் சொல்ல வேண்டும். நம்முடைய காரில் திறன்பேசியில் பேச புளூடூத் மிகவும் பயன்படுகிறது. நாம் அணியும் கடிகாரம், மற்றும் இதரக் கருவிகள் நம் திறன்பேசியுடன் தொடர்பு கொண்டு தரவுகளை அனுப்ப சரியான விஷயம் புளூடூத் (இதிலும், பல பாதுகாப்பு அபாயங்கள் இருப்பது மறுக்க முடியாதது). அதே போல, நம் இசைக் கருவியை இயக்க, நம் காமிராக்களுடன் தொடர்பு கொள்ள புளூடூத் மிகவும் வசதியான தொழில்நுட்பம். இதையும் தாண்டி, இந்த பாதுகாப்பற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கினால் பிரச்னைதான்.

இன்றைய புளூடூத் கருவிகளில் பெரிதாக எந்த பாதுகாப்பும் இல்லை. பல தொழில்கள், தனியார், இக்கருவிகளின் பின்னை (device pin)  மாற்றுவதே இல்லை. இதனால், இணைய விஷமிகள் எளிதாக உங்களது கருவியை கடத்தி பல விஷமங்கள் செய்ய முடியும். அட, எப்படி இணைய விஷமிகளுக்கு இவ்வகைக் கருவிகளின் பின் பற்றித் தெரியும்? சொன்னால் நம்ப மாட்டீர்கள் – இதற்காகவே சில இணைய தளங்கள் இருக்கின்றன. எந்த கருவிகளில் தயாரிப்பாளர்கள் எந்த பின்னை பயன்படுத்தி பொருளை சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள் என்று பட்டியலையே வெளியிடுகிறார்கள்!

இதுவரை நாம் பார்த்தது, வெறும் இன்றைய பயன்பாடுகளைப் பற்றி மட்டும்தான். இன்று வெறும் 100 கோடி கருவிகளின் நிலை இது. 25,000 கோடி கருவிகள் இன்னும் 5 ஆண்டுகளில் உலகில் நிறுவப்பட உள்ளன. இந்த பாதுகாப்புப் பிரச்னை மிகவும் பெரிய ஒன்றாக மாற வாய்ப்புள்ளது. இன்றைய நிலையைப் பற்றி விரிவாக எழுதக் காரணம், நாளைய கருவிகளைப் பயன்படுத்தும் நுகர்வோர் அதே மனிதர்கள் தான். சற்றும் சிந்திக்காமல் தங்களுடைய அந்தரங்கங்களை இணையத்தில் மிதக்க விடும் நாம், மாற வேண்டும். ஆரம்பத்தில், தொழில்நுட்பம் புரியாமல் செய்த தவறுகள் என்று வைத்துக் கொண்டாலும், நாளைய வசதிகளுக்கு நாம் கொடுக்கப் போகும் விலை மிகவும் பெரிதாக இருக்கும். ஆரம்பத் தவறுகளைப் புரிந்து கொண்டு, நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளர்கள், மற்றும் சேவை நிறுவனங்கள் இந்த விஷயத்தில் தீவிரம் கட்டினால்தான் சமூகத்திற்கு நல்லது.

அடுத்த பகுதியில், கருவி இணைய உலகிற்கே தனியான பல பாதுகாப்புப் பிரச்னைகளைப் பற்றி ஆராய்வோம். இன்றைய இணையப் பாதுகாப்பு பற்றிய அருமையான விடியோ இங்கே:

 

 

http://solvanam.com/?p=44676

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – பாதுகாப்புப் பிரச்னைகள் – பகுதி 19

 

OWASP (Open Web Application Security Project) என்றஅமைப்புக் கருவி இணைய முயற்சிகளின் முக்கிய 10 பாதுகாப்பு பிரச்னைகளைப் பட்டியலிட்டுள்ளது:

  1. இணையத்துடன் பாதுகாப்பற்ற தொடர்பு (insecure web interface)
  2. இணையத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது தேவைக்கு குறைவான உறுதிப்பாடு/சான்றளிப்பு (authentication)
  3. பாதுகாப்பற்ற வலையமைப்பு சேவைகள் (insecure web services)
  4. தரவுகள் அனுப்பப்படும்பொழுது சரியான மறைக்குறியாக்க முறைகள் பின்பற்றப்படுவதில்லை (insecure data transport)
  5. அந்தரங்க சமரசங்கள் (privacy compromises)
  6. மேக சேமிப்புகளில் சரியான பாதுகாப்பு அமைப்புகள் இல்லாதது (insecure cloud interface)
  7. திறன்பேசி இணையத் தொடர்பில் பாதுகாப்பற்ற முறைகள் (insecure mobile interfaces)
  8. பெரும்பாலும், பாதுகாப்பு அமைப்புகள் தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் வசதிகள் இல்லாமை – அதாவது, எல்லா விதப் பயன்பாட்டிற்கும் ஒரே முறைகளை திணிப்பது (limited security configurability)
  9. பயன்பாடுகள் மற்றும் நிலைப்பொருள்களின் பாதுகாப்பு போதுமானதாக இல்லை (insecure apps, firmware)
  10. அதிக கவனம் செலுத்தப்படாத பொருள் சார்ந்த பாதுகாப்பு (poor physical security)

விரிவாக, இந்தப் பிரச்னைகளை அலசுவோம்.

கருவிகளின் இணையப் பாதுகாப்புப் பிரச்னைகள் நம்முடைய இன்றைய அனுபவங்களிலிருந்து மாறுபட்டது. கருவி இணைய உலகின் தனிப்பட்ட விஷயங்கள் சில:

  1. உணர்விகள், மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் பொருத்தப் பட்டிருக்கும்
  2. உணர்விகள், சில முக்கிய பொது இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும்
  3. உணர்விகள், மற்ற சில கருவிகளைச் சார்ந்து இயங்கும்
  4. உணர்விகள், சில மனித/விலங்குகளின் உடலில் பொருத்தப் பட்டிருக்கலாம்
  5. நகரும் ஊர்த்திகளில், உணர்விகள் பொருத்தப்பட்டிருக்கலாம்
  6. உணர்விகள், கருவிகளின் முக்கிய தரவுகள் எங்கோ இன்னொரு நாட்டில், ஒரு மேக சேமிப்பில் சேமிக்கப்படலாம்

அலுவலகங்களின் வலையமைப்பில் தொடர்பு கொள்ளும் கணினிகளை வைத்துத்தான் நாம் மின்னணுவியல் பாதுகாப்புப் பற்றி முதலில் சிந்திக்கத் தொடங்கினோம்.  ஆரம்ப காலத்தில், அவை எங்கும் ஓடிப் போய்விடப் போவதில்லை என்பதால் ஓரளவிற்கு கடவுச்சொல் மையமான பாதுகாப்பு (password centric security) போதுமானதாக இருந்தது. மடிக்கணினிகள் வரத் தொடங்கியவுடன், இந்தப் பிரச்னை சற்று தீவிரமாகியது. கணினிகள் ஓரிடத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், எங்கோ அதன் சொந்தக்காரரின் பாதுகாப்பில் இருக்கும் என்று நம்பலாம். மடிக்கணினிகள் திருட்டுப் போனால் மட்டுமே கவலை. ஆரம்ப நாட்களில், மடிக்கணினிகள் அலுவலக மற்றும் இணையத்துடன் தொடர்பில்லாமல் இருந்தன. இவை இணையத்துடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியவுடன், மடிக்கணினியோ, மேஜைக் கணினியோ, எதுவாக இருந்தாலும், இணைய விஷமிகளால், கடத்தப்படும்/தாக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதைக் கடினமாக்க, நமக்கு கடுமையான பாதுகாப்பு வசதிகள் தேவைப்பட்டன. வெறும் கடவுச் சொல் சமாச்சாரங்கள் உதவாமல் போகவே, எல்லாத் தொடர்புகளையும் மறைகுறியாக்க முறைகள் மூலம் (encrypted communications) பாதுகாக்க வேண்டி வந்தது. பல வணிக மையங்களும், வங்கிகளும் இணையத்தை பயன்படுத்தத் தொடங்கியவுடன், இந்த முறைகளை மேலும் கடுமையாக்க வேண்டி வந்தது.

அடுத்தபடியாக, செல்பேசி, திறன்பேசி போன்ற கருவிகள், இந்தப் பிரச்னையை மேலும் கடினமாக்கின. இக்கருவிகள் எளிதில் திருடக் கூடியவை . விஷமிகள் கையில் சிக்கினால்,  மிகவும் அந்தரங்க விஷயங்கள் பல விஷமியின் கையில் எளிதில் சிக்க வாய்ப்புகள் உள்ளன. இப்படியிருந்தும், திறன்பேசி நுகர்வோரில் அதிக கவனமின்றி  இன்றும் ஒரு 75% பேர் இயங்கி வருகிறார்கள். குறைந்த பட்சம், இவற்றை இன்னாருடைய செல்பேசி/திறன்பேசி என்றாவது   எளிதில் சொல்ல முடியும். ஆனால், கருவிகளை இப்படிக் கூடச் சொல்ல முடியாது.

  1. ஆக, மிக முக்கியமான கருவி இணைய விஷயம் பொருள் சார்ந்த பாதுகாப்பு. இது physical security என்று அழைக்கப்படுகிறது.
  2. அடுத்தபடி மிகவும் முக்கியமான கருவி இணையப் பாதுகாப்பு விஷயம் மனிதப் பயன்பாடு சார்ந்த பாதுகாப்பு. இது human layer of security. மனிதர்கள், விலங்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளின் பாதுகாப்பு இன்னொரு தனிப்பட்ட கருவி இணையப் பாதுகாப்பு சவால்
  3. மூன்றாவது கருவி இணையப் பாதுகாப்பு விஷயம், வலையமைப்புப் பாதுகாப்பு (network security). கருவி இணைய உலகில், கணினி, மற்றும் திறன்பேசி உலகைக் கட்டிலும் அதிக வலையமைப்புச் சிக்கல் இருப்பதால், இந்த பாதுகாப்பு விஷயம் மேலும் சிக்கலடைகிறது
  4. நான்காவது கருவி இணையப் பாதுகாப்பு விஷயம், பயன்பாட்டுப் பாதுகாப்பு (application security). கருவிகளின் பயன்பாட்டைக் கருவி இணைய உலகில் எந்த ஒரு மனிதரும் பயன்படுத்துவதில்லை. இதனால் உருவாகும் சிக்கல்கள் தனிப்பட்டவை
  5. ஐந்தாவது கருவி இணையப் பாதுகாப்பு விஷயம், கருவிப் பாதுகாப்பு. பொருள் சார்ந்த பாதுகாப்பைத் தாண்டி, கருவியின் பாதுகாப்பும் ஒரு மிக முக்கிய விஷயம்

Part19-Pic4

பொருள் சார்ந்த பாதுகாப்பு

எங்கு, எந்தக் கருவி மற்றும் உணர்வி நிறுவப்பட்டுள்ளது என்று ஜி.பி.எஸ். துல்லியத்துடன் செய்யப்பட வேண்டும். ஒரு ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நிறுவப்பட்டுள்ள கருவியை எளிதில், செயலிழக்கச் செய்ய முடியும். மேலும் அதை விஷமிகளால் மாற்றவும் முடியும். திருடவும் முடியும். பொது இடங்களில் திருடுவது சற்று கடினமாக இருந்தாலும், மற்ற விஷமச் செயல்கள் எளிதில் செய்ய முடியும்.

  1. உதாரணத்திற்கு, எத்தனை வண்டிகள் ஒரு சந்திப்பிற்கு வருகின்றன என்பதை அளக்க ஒரு உணர்வி நிறுவப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இதை விஷமிகள் உடைத்து விடலாம், ஏன் திருடக் கூடச் செய்யலாம். அல்லது இன்னொரு அதிக வாகன போக்குவரத்து இல்லாத இடத்தில் நிறுவலாம். இந்த மூன்றில் எது நடந்தாலும் பல கணக்குகள் தப்பாகி விடும்
  2. நதியின் பிராணவாயு, காற்றளவு எத்தனை என்று அளக்கும் உணர்வி எங்கோ மலையில் யாருமில்லா இடத்தில் நிறுவப்படலாம். காட்டாற்று வெள்ளம், மிருகங்கள், திருட்டு என்று பல விஷயங்களால் காணாமல் போகலாம். மேலும் எளிதில் இதன் உணர்வியை மாற்றி, நீரில் விஷத்தன்மை கூடி விட்டதாக பீதி ஏற்படுத்துவது எளிது

எப்படி இத்தகையப் பிரச்னைகளைத் தீர்ப்பது?

  1. கருவிகளைக் கண்காணிக்க பாதுகாப்பு காமிராக்கள் அவசியம்
  2. கருவிகளின் கூடு, (sensor cage) எளிதில் விஷமிகளால் கேடு விளைவிக்க முடியாதபடி தயாரிக்கப்பட வேண்டும்
  3. கருவிகள், இடம் பெயர்ந்தால் வேலை செய்யாமல் செயலிழக்க வேண்டும்
  4. எளிதில் மின்னணு பாகங்களை மாற்றி அமைத்துச் செயல்பட விடாமல், அதன் வன்பொருளிலேயே மறைக்குறியாக்க முறைகள் செயல்படுத்தப்பட வேண்டும்

மனிதப் பயன்பாடு சார்ந்த பாதுகாப்பு

ஒரு பெரிய நிறுவனம், கருவி இணைய முயற்சிகளில் இறங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.  பல தரப்பட்டவர்கள் இந்த முயற்சியில் பங்கு கொள்வார்கள்.

  1. நிறுவனத்தில் பணி புரியும் பலதரப்பட்ட ஊழியர்கள் (employees)
  2. நிறுவனத்துடன் வியாபாரம் செய்யும் வாடிக்கையாளர்கள் (customers)
  3. நிறுவனத்திற்கு பொருட்களை/சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் (suppliers)
  4. சில சிறிய/பெரிய வேலைகளைச் செய்யும் ஒப்பந்தக்காரர்கள் (contractors)

இந்த முயற்சியில் ஒன்று அல்லது பல தரப்பட்டவர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொருவரின் பாதுகாப்புப் புரிதல் வேறு, பயன்பாட்டுக் குறிக்கோள் வேறு. இந்த மனிதச் சங்கிலியில் எங்கு வேண்டுமானாலும் பாதுகாப்புக் குறைபாடு ஏற்படலாம். இதில் எவரோ ஒருவர் பாதுகாப்பற்ற புளூடூத் மூலம் தொடர்பு கொண்டாலோ, அல்லது தரவுகளை மேலேற்றினாலோ இந்தக் கருவி இணைய முயற்சிக்கு பிரச்னைதான். தொழில்நுட்பப் பிரச்னைகளை விட மிகவும் சிக்கலானது இந்தப் பிரச்னை. இந்தப் பாதுகாப்புக் குறைபாடு அந்த நிறுவனத்தின் மிகப் பெரிய வாடிக்கையாளர் அல்லது ஒப்பந்தக்காரரிடமிருந்து வந்தால், அதைச் சமாளிப்பது மிகவும் கடினம்.

பெரிய கருவி இணைய முயற்சியில் ஈடுபடும் எந்த நிறுவனமும், சில விஷயங்களில் கறாராக இருப்பது மிகவும் அவசியம்:

  1. தொடர்புடைய (கருவி இணைய முயற்சியுடன்) மற்ற நிறுவனங்கள் தக்க பாதுகாப்பு நியமங்களைப் பின்பற்றினாலே பயன்பாடுகளைப் பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையை முன் வைக்க வேண்டும்
  2. நிறுவனத்தின் ஒவ்வோர் அலுவலகத்திலும், தொழிற்சாலையிலும், ஆராய்ச்சி மையத்திலும்  தக்க பாதுகாப்பிற்காக சிலர் நியமிக்கப்பட வேண்டும். எங்கு சமரசம் நடந்தாலும் உடனே அறிய இது ஒன்றுதான் வழி
  3. பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு சமரசங்களைப் பற்றிய அடிப்படை அறிவு புகட்டப் பட வேண்டும்

இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளாததால், கருவி இணைய வசீகரத்தால் கவரப்பட்டு களத்தில் குதித்த பல நிறுவனங்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன.

வலையமைப்புப் பாதுகாப்பு

ஒரு வலையமைப்பிற்குள் ஊடுருவ பல வழிகள் இருந்தாலும் அதில் மிகவும் எளிதான வழி, மனிதர்களின்  முன் இல்லாத, கருவி அல்லது உணர்வி என்பது தெளிவு. ஒரு கருவியைக் கைப்பற்றினால், மேலும் புதிய வழிகள் மூலம் ஒரு வலையமைப்பிற்குள் புகுந்து விஷமம் செய்வது எளிது. வழக்கமான ஒரு வலையமைப்பில் உள்ள ஒரு கணினியைக் கைப்பற்றி மேலும் பல கணினிகளுக்கு, சேமிப்புக்கு தீங்கு விளைவிப்பது என்பது இன்றைய உலகில் சாத்தியம். கருவிகள் மூலம் புதிய முறைகளில் எதிர்பாராத தரவுகள், அல்லது மற்ற கருவிகள் பற்றிய தவறான தகவல்கள் என்று பல விதத்திலும் தொந்திரவு கொடுக்க இயலும்.

பொதுவாக எந்த ஒரு வலையமைப்பிற்கும் ஃபயர்வால் (firewall)  என்ற ஒரு மென்பொருள் அமைப்பு உண்டு. இன்னும் பிரத்யேகமான மென்பொருள்கள், வலையமைப்பிற்குள் வரும் ஒவ்வொரு தரவுப் பொட்டலத்தையும் ஆராய்ந்து, அதில் விஷமக் குறிக்கோள் இருக்கிறதா என்று முடிவு செய்ய இயலும். ஆனால், கருவிகளிலிருந்து வரும் தரவுப் பொட்டலங்களில் இந்த அணுகுமுறை செல்லாது. ஏனென்றால், விஷமத் தரவுப் பொட்டலங்களிலிருந்து (mischievous data packets) எந்த விஷமக் குறிக்கோளையும் கண்டுபிடிக்க முடியாது. ஒரு சந்திப்பில் இருக்கும் வாகனங்களை எண்ணும் கருவி கடத்தப்பட்டால், அதிலிருந்து தவறான எண்ணிக்கை வந்தால், அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. உதாரணத்திற்கு, எப்பொழுதுமே இரண்டு வாகனங்கள் வருவதாக அது சொல்லி வந்தால், அதில் உள்ள விஷமத்தை கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், அதிகாலை 3 மணிக்கு,  இரண்டு வாகனங்கள் அந்தச் சந்திப்பில் கடந்தால், அது சரியான எண்ணிக்கைதானே.

இதையும் தாண்டி, துறைகள் திறந்திருக்கிறதா (open ports) என்றும் கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு கருவியின் அடையாளமும் கண்காணிக்கப்பட வேண்டும். கருவி இணைய விஷயத்தில், கருவி அடையாளம் என்பது ஒரு சிக்கலான விஷயம். ஏனெனில், எல்லா கருவிகளும் ஒரு கணினி தரவு மையத்திற்குத் தரவுகள் அனுப்புவதில்லை. பல அருகாமையில் இருக்கும் கருவிகளுக்கு, ஒரு இணையத் தொடர்பு மின்பரப்பி/வாங்கி (electronic transceiver) செய்கிறது என்று முன் பகுதிகளில் பார்த்தோம். முறைகேடாக ஊடுருவி மாற்றப்பட்ட ஒரு கருவியிடமிருந்து மின்பரப்பி/வாங்கி எந்தத் தரவையும் அனுப்ப/வாங்கக் கூடாது. இது மிக முக்கிய பாதுகாப்புத் தடுப்பு முறை.

கருவிகள் அனுப்பும் தரவுகள் ரகசியமானதாக இல்லாவிட்டாலும், அவை மறைக்குறியாக்க முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். எங்கு கம்பியில்லாத் தொடர்பு இருந்தாலும் WPA முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இவை யாவும் தெரிந்தும் பல தயாரிப்பாளர்கள் தங்களது விலையை வசீகரமாக்குவதற்காக பாதுகாப்பைக் கோட்டை விடத் தயங்குவதில்லை.

Part19-Pic6

பயன்பாட்டுப் பாதுகாப்பு

இதுவரை நாம் பார்த்த பலவகை கருவி இணையப் பயன்பாடுகளிலிருந்து இது எவ்வளவு விரிவான  விஷயம் என்று தெளிவாகியிருக்கும். உதாரணத்திற்கு,

  • ஒரு அணிக்கருவியிலிருந்து மிகவும் சீரியஸான நோயாளியின் உடல்நிலை பற்றிய தரவுகள் அவருக்கு உதவ வந்த முதலுதவி உதவியாளருக்கு (paramedics) எந்த விதப் பாதுகாப்புடன் மாற்றப்படுகிறது? அதே போல, முதலுதவி வண்டியிலிருந்து மருத்துவமனையில் உள்ள மருத்துவருக்கு எந்த விதப் பாதுகாப்புடன் மாற்றப்படுகிறது? இரண்டும் உயிர்காக்க உதவும் முக்கிய வழிகள். ஆனால், பயன்பாட்டுப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயம். தவறான கைகளில் இந்த விஷயம் சிக்கினால், இதன் விளைவுகள் விபரீதமாகிவிடும்.
  • ஒரு முக்கிய சாலைச் சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள காமிராவின் தரவு போக்குவரத்துத் துறைக்கு மட்டுமே பயன்பட வேண்டும்.  குற்றவாளிகளின் கையில் இந்த காமிராவின் வீடியோ தரவு சிக்கினால், அதன் பயனே வேறாகிவிடும்
  • இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நாம் பார்த்த காரின் சகல விஷயங்களையும் இணையம் மூலம் விஷமிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தால், ஓட்டுனர்கள் கதி என்னாவது?
  • ஒருவருடைய உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள கருவிக்கு கட்டளைகள் எங்கிருந்து வர வேண்டும்? உதாரணத்திற்கு, இதய முடுக்கி (pacemaker) என்ன இணையத்துடன் இணைக்க வேண்டிய விஷயமா?
  • ஒரு மருந்து நிறுவனம், மருந்து செலுத்தும் பம்புகள் பற்றிய முக்கிய அறிக்கையை தகுந்த நோயாளிகளுக்குப் பாதுகாப்பாக, மருந்தாளுனர் (pharmacist) மூலம் கொண்டு சேர்ப்பது முக்கியம்.  தவறான கைகளில் இந்த விஷயம் சிக்கினால், நோயாளியின் உடல்நலம் மட்டுமல்ல, உயிருக்கே ஆபத்து வரலாம்
  • குழந்தைகளைக் கண்காணிக்க உதவும் பல அணிக் கருவிகளில் சரியான பாதுகாப்பு இல்லையேல், அது கண்காணிக்கப்படும் குழந்தைக்கே ஆபத்தாகிவிடும்
  • எல்லாவற்றையும் படம் எடுக்கும் திறன்பேசி கலாச்சாரம் நம்மில் மிகவும் பரவியுள்ளது. பல புதிய கருவிகள் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி தேவையோ இல்லையோ, ஒரு காமிராவையும் அள்ளி வீசுகிறார்கள். இதனால், பலரின் அந்தரங்கம் சமரசப்படுத்தப்படுகிறது. அத்துடன், இத்தகைய படங்கள் தவறான நபர் கையில் சிக்கினால், விளைவுகள் மோசமாகவே இருக்கும்

இப்படி, பயன்பாடுகள் மாறுபட்டாலும், பாதுகாப்பு என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம். சற்று தவறினால் கூட விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். பயன்பாடுகள் இந்த தொழில்நுட்பத்தின் நல்முகத்தை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. பயன்பாட்டாளர்கள் முக்கியமாக, எந்த ஒரு கருவி இணையப் பயன்பாட்டையும் ஒரு சந்தேகத்துடனே அணுக வேண்டும். எங்கு, எந்த வகையான சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் ஆராய்ந்துதான் இவ்வகை தொழில்நுட்பங்களை ஆதரிக்க வேண்டும். பயன்பாட்டாளர்கள் மாறாதவரை, பயன்பாடுகளை உருவாக்குபவர்கள், பாதுகாப்பு சமரசங்களை மறைக்கத்தான் செய்வார்கள். பயன்பாட்டாளர்கள், வாங்கும் முன் கேட்க வேண்டிய சில கேள்விகள்:

  1. எப்படித் திறன்பேசி, கருவியுடன் தொடர்பு கொள்ளும்? அதன் பாதுகாப்பு பலவீனங்கள் என்ன?
  2. எப்படிக் கருவி, இணையத்துடன் தொடர்பு கொள்ளும்?
  3. பொது இணைய மையங்களிலிருந்து (WiFi Hotspot) எப்படி இந்தக் கருவியுடன் தொடர்பு நடக்கிறது?
  4. திறன்பேசியின் புளூடூத் இணைப்பின் மூலம், எங்கெல்லாம் கருவியோடு தொடர்பு கொள்ளக் கூடாது?
  5. கருவியை இன்னொருவர் (நண்பர், உறவினர்) எப்படிப் பாதுகாப்பாக சில நாட்கள் பயன்படுத்தலாம்?
  6. கருவியுடன் தொடர்பு மறைக்குறியாக்க முறையில் நடக்கிறதா? அப்படியென்றால், மறைக்குறியாக்க முறையின் பலம் (encryption strength) என்ன?
  7. இணையத்தில் சேமித்து வைக்கப்படும் தரவுகள் மறைக்குறியாக்க முறையில் நடக்கிறதா? அப்படியென்றால், மறைக்குறியாக்க முறையின் பலம் (encryption strength) என்ன?
  8. கருவி பழுதானல், அதை எப்படி அப்புறப்படுத்துவது? நாம் பல ஆண்டுகளாக, வன்தட்டு தேக்கிகளை (hard drives) சரியான முறையில் அப்புறப்படுத்துவதை அலட்சியம் செய்து வருகிறோம். இன்று, நம் அந்தரங்கத்தின் மீதான பல அத்து மீறல்களுக்கு வழி வகுப்பது இந்த மனப்போக்குதானே தவிர, கருவிகள் அல்ல

கருவிப் பாதுகாப்பு

கருவிகளின் பொருள் சார்ந்த பாதுகாப்பு தவிர மிக முக்கியப் பாதுகாப்பு பிரச்னை, கருவியின் நிலைப்பொருளை (firmware) எப்படி மாற்றத்திற்கேற்பப் புதுப்பிப்பது என்பது. பல நூறு கருவிகள் ஒரு அமைப்பின் கீழ் இருந்தால், அவை இருக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று புதுப்பிப்பது என்பது இயலாத ஒன்று. உதாரணத்திற்கு, ஒரு சுரங்க நிறுவனத்தின் சுரங்கங்கள் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் பனி மூடப்பட்ட நிலையில் இருக்கலாம். அங்குள்ள ஒரு கருவியின் நிலைப்பொருளைப் புதுப்பிக்க ஒருவரை அனுப்பினால், கருவியின் விலையை விட அதிகம் செலவாகும். புதுப்பிப்பதற்காக, சில துறைகளைத் திறந்து வைத்தாலும், விஷமிகள் கையில் எளிதில் கருவி அகப்பட்டு விடும். இவ்வகை நிலைப்பொருளைப் புதுப்பிப்பது, என்பது பல அடுக்கு பாதுகாப்பு உடைய விஷயமாக இருக்க வேண்டும். திறந்த துறைக்குள் நுழைய மின்பரப்பி/வாங்கி வழியாகத்தான் செல்ல வேண்டியபடி வடிவமைக்க வேண்டும். மேலும், இந்த நிலைப்பொருளை நிறுவ கடவுச்சொல் மற்றும் சில விசேடத் தகுதிகள் இருந்தால் மட்டுமே முடிய வேண்டும்.

புளூடூத் இணைப்பு எங்கிருந்தாலும், அதன் அடிப்படை பின்னை மாற்ற வேண்டும். இந்த ஒரு செயல், பல வகை அடிப்படைத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க வழி செய்யும்.

பொதுவாக, கடவுச்சொல் அமைப்பு கடுமையாக்கப்பட வேண்டும். சும்மா, 1234 போன்ற கடவுச்சொல்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

கருவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் உள்ள ஒரு மிகப் பெரிய சவால், கருவியிலேயே உள்ளது.மறைக்குறியாக்க முறைகளை பின்பற்ற, மிக அதிக சக்தி வாய்ந்த செயலிகள் தேவை. அத்துடன் சக்தி வாய்ந்த செயலிகள் ஏராளமான மின்கலன் சக்தியையும் உறிஞ்சி விடும்.சக்தி வாய்ந்த செயலிகளைப் பயன்படுத்தினால், விலையும் கூடிவிடும். இதனால், விலையை வசீகரமாக்குவதற்காக பல தயாரிப்பாளர்களும் பாதுகாப்பு சமரசங்களை செய்த வண்ணம் இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில், கருவிகளில் பயன்படும் செய்லிகளின் சக்தியும் கூடி, விலையும் குறையும் என்று நம்புவோம்.

அடுத்த பகுதியில், கருவிகளின் இணையப் பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம். உடனே இது செயலாக்கப்படாவிட்டாலும், இதற்கான முயற்சிகள் இன்று தொடங்கியுள்ளது, நல்ல விஷயம்.

 

http://solvanam.com/?p=45018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – பாதுகாப்புப் பிரச்னைகள்: பகுதி- 20

 

பாதுகாப்புப் பிரச்னைகள் மற்றும் குறைகளைப் பற்றி நிறைய சொல்லிவிட்டோம். எப்படி வடிவமைத்தால், இவ்வகை தெரிந்த பாதுகாப்புப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம் என்று பார்ப்போம். கருவிகளின் வடிவமைப்பு அணுகுமுறை மாறுவது அவசியம். நல்ல வேளையாக இவ்வகை முயற்சிகள் உலகெங்கும் பல அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில ஆண்டுகளில், பெரும்பாண்மைத் தயாரிப்பாளர்கள் இந்த பரிந்துரைகளைப் பின்பற்றத் தொடங்குவார்கள் என்று நம்பலாம். இல்லையேல், இந்தத் துறையே வாங்குவோரின்றி முடங்க வாய்ப்புண்டு.

பாதுகாப்பு வடிவமைப்புக் குறிக்கோள்கள்

1

சில முக்கிய வடிவமைப்பு அணுகுமுறைகளைப் பார்ப்போம்.

  1. வரும்வரை காத்திராமல் வடிவமைப்பில் பாதுகாப்பை முன்வைக்க வேண்டும். கருவிகளை வடிவமைக்கும் பொழுது, தரவுகளை விஷமிகள் திருடுவார்கள், கருவிகளையே திருடக்கூடும், தரவுகளை மாற்றி, முடிவுகளைத் திசை திருப்ப முயல என்ன வழிகளைக் கையாள்வார்கள் என்று பல சாத்தியங்களை ஆராய்ந்து கருவிகளை உருவாக்க வேண்டும். இப்படிச் செய்தாலே, விஷமிகள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். இவ்வாறு செய்தால், குறைந்த பட்சம், சாதாரண இணையத் தாக்குதல்களைத் தவிர்க்கலாம். தீவிரத் தாக்குதல்களைக் கடினமாக்கலாம்
  2. அந்தரங்கம் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் பொருட்களை வடிவமைப்பது கணினி தொழிலில் ஒரு பழக்கமாகி விட்டது. பிரச்னை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற பழைய பல்லவி கருவி இணைய உலகில் உதவாது. பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம் ஆரம்பத்திலிருந்தே ஒரு வடிவமைப்புக் குறிக்கோளாக அமைய வேண்டும்
  3. இன்னொரு முக்கிய கொள்கை, ’என்னுடைய பங்கைச் சரியாக செய்து விடுவேனாக்கும்!’ போன்ற பழைய அலட்டல்கள் கருவி இணைய உலகில் வேகாது. இணைக்கப்பட்டுள்ள அத்தனை பாகங்களில் ஒன்று பாதுகாப்பற்று இருந்தால், மொத்த முயற்சியும் வீண்தான்.
  4. முக்கியமாக, கருவி இணைய உலகில் தரவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. சாதாரண கணினி உலகை விட இது மிகவும் மாறுபட்டது. அதாவது, சேகரிக்கப்படும் ஒவ்வொரு தரவும், அதன் சேகரிப்பு நேரத்திலிருந்து, அழிக்கப்படும் நேரம் வரை எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சிந்தித்து வடிவமைக்கப்பட வேண்டும். இங்குதான் பல மறைமுக கோளாறுகள் நேர்கின்றன. ‘நாங்கள் உயர்தர பாதுகாப்பு முறைகளை மேக சேமிப்பில் பயன்படுத்துகிறோம்’ என்று அலட்டிக் கொள்ளும் ஒவ்வொரு நிறுவனமும்,தரவின் பயன் முடிந்தவுடன் என்ன செய்கின்றன என்று ஆராய்ந்தால், எந்த நிறுவனமும் தேறாது.

2

 

பாதுகாப்பு வடிவமைப்பு முறைகள்

குறிக்கோள்கள் எல்லாம் சரி – இனி, பாதுகாப்பான கருவி இணைய முயற்சி ஒன்று  எப்படி இருக்கும் என்று பார்ப்போம். அவரசரமாக காசாக்க வேண்டும் என்ற துடிப்பு அதிகம் தேவையில்லாத ஒரு நேர்மையான நிறுவனம் ஒன்று இதை உருவாக்குகிறது என்று மனதில் நினைத்துக் கொள்வோம்.

3

  1. முதல் படி – எப்படி எல்லாம் பாதுகாப்புக்கு சமரசம் ஏற்படலாம் (threat assessment) என்பதை முழுவதுமாக அலச வேண்டும்.
    1. பொருள் சார்ந்த பாதுகாப்பு சமரசங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை முதலில் ஆராய வேண்டும்.
    2. கருவி இணைய கட்டமைப்பின் ஆரம்ப அமைப்பு – யார், எதனை, எதற்காக, எப்படி, எங்கு பயன்படுத்துவார்கள் என்பதை முழுவதும் புரிந்த கொள்ள உதவும் படி இது.
    3. கருவி இணைய அமைப்பைத் தனித்தனியாகப் பிரித்து, எப்படி தரவுகள் அங்கு பயணிக்கின்றன, தேக்கப்படுகின்றன என்று பாதுகாப்பு கோணத்தில் ஆராய வேண்டும்
    4. எந்த ஒரு வடிவமைப்பிலும் குறைகள் இருக்கவே செய்யும். உருவாக்கப்பட்டக் கட்டமைப்பில் உள்ள பாதுகாப்பு குறைகள் என்னென்ன என்று பட்டியலிடப்பட வேண்டும்
    5. பட்டியலிடப்பட்ட பாதுகாப்புக் குறைகளில் அதிகமான தாக்கம் உள்ள குறை எது, அடுத்தபடி உள்ள குறை என்ன என்று ஒரு மதிப்பீடு தரப்பட வேண்டும். இப்படிச் செய்வதால், குறைந்தபட்சம் பாதுகாப்புக் குறைகளில் முதல் மூன்று அல்லது ஐந்து விஷயங்களையாவது தயாரிப்பாளர்கள் அல்லது நிரலர்கள் தங்களுடைய வடிவமைப்பில் நிவர்த்தி செய்ய முயற்சிப்பாளர்கள்4
  2. இரண்டாம் படி – பாதுகாப்பு எங்கும் நிறைந்திருக்கும் தயாரிப்பு அல்லது நிரலாக்கம். (secure development)
    1. பயன்பாட்டு சான்றளிப்பு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக இருக்க வேண்டும்
    2. மறைகுறியாக்க முறைகள், தரவுகளை தேக்கவும், அனுப்பவும் பயன்படுத்தப்பட வேண்டும்
    3. மற்ற பங்காளிகளின் தயாரிப்புடன் ஒரு கருவி இணைய முயற்சியை வெளிக் கொண்டு வரும் பொழுது, ஆரம்பத்திலிருந்து, கடைசிவரை பாதுகாப்பான தரவுப் போக்குவரத்திற்கு வழி வகுக்க வேண்டும். இன்று நடப்பது போல, சாக்கு போக்கு சொல்லித் தப்ப முயற்சிக்கக் கூடாது
  3. முன் பகுதியில் பார்த்தது போல, உருவாக்கப்படும் கருவி இணைய சேவையில் பல அடுக்களிலும் பாதுகாப்பு சரியாக அமைவதோடு, சோதனையும் செய்து பார்க்க வேண்டும்.
    1. வலையமைப்புப் பாதுகாப்பு மிகவும் முக்கிய விஷயம். விளிம்பில் இருக்கும் கருவிகளைத் தவிர்த்து, உள்ளே நிறுவனத்தை பாதுகாப்பது பயன் தராது
    2. பயன்பாட்டுப் பாதுகாப்பு என்பது சிக்கலான பிரச்னை. இதில் தரவுப் பாதுகாப்பும் அடங்கும்
    3. மனிதப் பயன்பாடு சார்ந்த பாதுகாப்பும் மிகவும் முக்கியம். கருவி இணையம் என்றவுடன், மனிதர்களுக்கு என்ன வேலை என்று விட்டு விட முடியாது. முக்கிய பாதுகாப்பு சமரசத்திற்கு மனிதர்களே காரணமாக உள்ளார்கள்
    4. விளிம்பில் உள்ள உணர்விப் பாதுகாப்பு இன்னொரு முக்கிய விஷயம். உணர்வி உருவாக்கும் தரவுகள் பாதுகாப்பாக மையத் தேக்கத்திற்குச் சென்றடைய வேண்டும். இதற்கான கட்டுப்பாடுகள்/வசதிகள் தயாரிப்புப் படியிலே மேற்கொள்ளப்பட வேண்டும்
    5. 5
  4. நான்காம் படி – தரவுப் பாதுகாப்பு. மிகவும் நம்பகமான குறிமுறையாக்க முறைகள் (Elliptic Curve Diffie Hellman – ECDH) மற்றும் டிஜிட்டல் கையொப்ப முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். தரவு என்றவுடன் இதை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்
    1. அசையா தரவின் பாதுகாப்பு (Data at rest security) – கருவிகளால் உருவாக்கப்படும் தரவுகள் குறிமுறையாக்க முறைகளால், பாதுகாக்கப்பட வேண்டும். மேலும், சரியான சான்றளிப்பில்லாமல், இந்த தரவுகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாதபடி செய்தல் வேண்டும்
    2. அசையும் தரவின் பாதுகாப்பு (data in transit security) – சரியான டிஜிட்டல் கையொப்பமின்றி தரவுகள் அனுப்பப்படக் கூடாது. இதைச் சரியாகச் செய்யவில்லையானால், அசையா தரவின் பாதுகாப்பு அர்த்தமில்லாமல் போய்விடும்
    3. பயனில் உள்ள தரவின் பாதுகாப்பு (data in use security) – பாதுகாப்பான சூழ்நிலையை கருவிகளுக்குள் அமைப்பது அவசியம். மைய தேக்கியிலிருந்து அனுப்பப்படும் தரவுகளைப் பயன்படுத்தும்பொழுது, கருவியின் நினைவகத்திலிருந்து எளிதாக தரவுகளை தவறாகப் பயன்படுத்தும் முயற்சிகளைத் தடுக்கவே இந்த வடிவமைப்பு. பல உயர்தர பயன்பாடுகள் இது போன்ற அமைப்புகளை உருவாக்கினாலும் (உதாரணம், ராணுவப் பயன்பாடுகள்), சாதாரணப் பயன்பாடுகள் செலவைக் குறைக்க இந்த வடிவமைப்பை சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது
    4. தரவு நஷ்டப் பாதுகாப்பு (data loss prevention) – எந்த ஒரு கருவி இணைய அமைப்பும், புதிய உணர்விகள் சேர்த்த வண்ணம் இருக்கும் என்று நம்பலாம். புதிய உணர்விகளைச் சேர்த்தவுடன், பழைய கருவிகள் அனுப்பும் தரவுகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கருவி அனுப்பும் தரவும், இன்ன கருவி அனுப்பியது என்று சரியாகச் சொல்லும் வழி இருப்பது அவசியம்
    5. தரவுத் திரள்வுப் பாதுகாப்பு (data aggregation security) – கருவி இணைய உலகில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு விஷயம் இது. தொழில்நுட்பப் பகுதியில் பார்த்தது போல, உணர்விகள் சேகரிக்கும் அத்தனை தரவுகளையும் மைய தேக்கத்திற்கு சிலப் பயன்பாடுகள் அனுப்புவதில்லை. மையத் தேக்கத்துடன் தொடர்பில் இருக்கும் மின்பரப்பி/வாங்கி, தரவுகளை திரட்டி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், தரவுத் திரள்வை அனுப்பும். இத்தகைய திரள்வுப் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும். குறிமுறையாக்க முறைகள் இதிலும் பின்பற்றப்பட வேண்டும், அதிகம் கவனமில்லாமல் செய்யப்படும் பாதுகாப்பு விஷயம், கருவி இணைய உலகில், தரவுத் திரள்களைக் கையாளும் முறைகள்.

 

இவ்வாறு பல வடிவமைப்பு முறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சற்றும் இதைப் பற்றி கவலையில்லாமல், பயன்பாட்டை மட்டுமே முன்வைக்கும் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நுகர்வோரை வெறும் விற்பனைத் தந்திரங்கள் கொண்டு வசியம் செய்யும் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்யும். இப்பொருட்களை வாங்கும் நுகர்வோர், தகுந்த பாதுகாப்பு கேள்விகளை கேட்டால்தான் நிலமை சரியாகும். சந்தேகத்துடன் இந்தத் துறையில் வாங்குவது ஒரு நல்ல விஷயம் என்றே சொல்ல வேண்டும்.

 

நாம் தொழிநுட்பப் பகுதியில் பார்த்த சில கம்பியில்லா முறைகள் எந்த வகை பாதுகாப்பை அளிக்கிறது என்று பார்ப்போம்.

 

கம்பியில்லாத் தொழில்நுட்பம் பாதுகாப்பு முறைகள் கருத்துரை
CoAP –    முன் பங்கு சாவிகள் (preshared key)

 

–    அடிப்படைப் பொது சாவிகள் (raw public key)

–    சான்றிதழ்கள் (certificate)

பலவித பாதுகாப்பு அமைப்புகள் கொண்ட நுட்பம். கருவிகளின் உரையாடல்களை பாதுகாப்பாக அனுப்பும் நுட்பம்
Zigbee –    முன் பங்கு சாவிகள் (preshared key) ஜிக்பீ நுட்பம், வலையமைப்பு மற்றும் பயன்பாட்டு அளவில் சான்றிதழ்கள் மற்றும் குறிமறையாக்க முறைகளை அளிக்கிறது
Bluetooth –    பங்கு சாவிகள் (shared key) மிகவும் பாதுகாப்பற்ற நுட்பம் இது. வெறும் பின்களை மட்டுமே நம்பும் முறை இது. இதை பேரிங் என்று அழைக்கிறார்கள். பல புளூடூத் கருவிகள் எந்த பின்னும் இல்லாமல் இன்றும் பேரிங் செய்கின்றன
Bluetooth LE –    தொடர்பு கையொப்பச் சாவி (Connection signature resolving key)

 

–    கருவி அடையாளச் சாவி (identity resolving key)

சாதாரண புளூடூத் முறையை விடப் பாதுகாப்பானது. ஆனால், தொடர்பு கையொப்பச் சாவிகள் எந்த குறிமுறையாக்க முறைகளையும் பின்பற்றுவதில்லை. சில கருவிகள் ECDH முறைகளைப் பின்பற்றி, சாவிகளை மாற்றிக் கொள்ளும் திறமையுடன் வருகின்றன

பல சாக்கு போக்குகளைத் தயாரிப்பாளர்கள் சொல்லி வருகிறார்கள். இதில் மிக முக்கியமான சாக்கு இதுதான் – கருவிகள் பல வருடங்கள் வேலை செய்ய மிக குறைந்த மின்கல சக்தியைக் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்பட, அதிக மின் சக்தியை உறிஞ்சாத செயலிகள் தேவை. அதிக மின் சக்தியை உறிஞ்சாத செயலிகள் அதிக சக்தி வாய்ந்தவையும் அல்ல. குறிமுறையாக்க முறைகளுக்கு ஏராளமான செயலித் திறன் தேவைப்படுகிறது. மின்கல கருவி வாழ்வா அல்லது பாதுகாப்பா என்ற கேள்விக்கு பதில், இந்தத் தொடரைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் புரிந்திருக்கும். நல்ல வேளை, குறைந்த சக்தியுள்ள செயலிகளில் சிக்கனமாக வேலை செய்யும் குறிமுறையாக்க வழிகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகிறார்கள். இதைப் பற்றி பின் வரும் பகுதிகளில் பார்ப்போம்.

***

http://solvanam.com/?p=45317

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – வாய்ப்புகள் – பகுதி 21

 

முதலில் ஒரு எச்சரிக்கை. பொதுவாக இந்திய மென்பொருள் வல்லுனர்கள், பெயர் போன கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆரகிள் போன்ற நிறுவனங்களில் பணி புரியவே விரும்புபவர்கள். மேலும், சிலர், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ் போன்ற பெரிய மென்பொருள் சேவை நிறுவனங்களில் தங்களுடைய கல்வியை வீணடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இந்தக் கட்டுரையைப் படிக்கத் தேவையில்லை. ஏனென்றால், கருவி இணையத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும், மேல் சொன்ன நிறுவனங்களில் வாய்ப்புகள் மிகக் குறைவு. மிகைபடுத்தப்பட்ட தம்பட்டம் தான் இங்கு நீங்கள் காண முடியும்.

  1. தீவிரமாக இந்தத் துறையை முன்னோக்கி எடுத்துச் செல்லும் நிறுவனங்கள் மிகவும் பெயர் எடுத்தவை அல்ல. சின்ன நிறுவனங்கள்
  2. ராட்சச இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களை இந்தத் தொழில்நுட்பம் எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகும். இவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் மிகப் பெரிய நிறுவனங்கள்
  3. புதிய கருவிகள், புதிய பயன்பாடுகளை உருவாக்கத் துடிக்கும் இளைஞ(ஞி)ர்கள் இந்தத் துறையில் தாராளமாக இறங்கலாம். புதிய துறையாக இருப்பதால், எதிர்காலம், சற்று சந்தேகமாகத் தோன்றலாம். ஆனால், சொந்த முயற்சிக்கு மிகவும் ஏற்ற துறை. மிக அதிக முதலீடும் தேவை இல்லை. ஸ்பெயின் இத்துறை தோன்றும் வரை மிகப் பெரிய தொழில்நுட்ப முன்னோடி ஒன்றும் இல்லை. இன்று கலக்குகிறார்கள். இந்திய இளைஞர்கள், இந்திய சேவை நிறுவனங்கள் செய்யத் தவறியதைப் பூர்த்தி செய்யலாம் – உலகில் எல்லோருக்கும் தெரிந்த இந்தியக் கணினி வியாபாரக் குறி. உங்களுக்குள் இந்த உந்துதல் இருந்தால், களத்தில் இறங்குங்கள்!

இக்கட்டுரைத் தொடரைப் படித்துவிட்டு, எப்படி இந்தத் துறையில் இறங்குவது என்று கேள்வி எழும் வாசகர்களுக்கு முதலில் சில விஷயங்களைத் தெளிவுபடுத்துவது அவசியம்.

  1. தெரு மூலையில் இருக்கும் கணினி நிரல் மொழிகளைச் சொல்லிக் கொடுக்கும் நிறுவனத்திடம் தயவு செய்து இந்தத் துறையில் ஏதாவது வகுப்பு இருக்கிறதா என்று கேட்காதீர்கள். அவர்களது பார்வையில், விஷுவல் பேசிக், ஆரகிள் சொல்லிக் கொடுத்துப் பணம் பண்ணுவதுதான் வியாபாரம்
  2. சரி, உள்ளூர் பல்கலைக் கழகத்தில் தொடர்கல்வி அமைப்பில் ஏதாவது வகுப்பு இருக்குமா என்றும் தேடாதீர்கள். இந்தத் துறையில் கல்வித்துறை பின்தங்கியுள்ளது. அதுவும் அதிகம் நியமங்கள் சரியாக அமையாத இந்தத் துறையைப் பல்கலைக்கழகங்கள் தொட,இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும்
  3. ஏதாவது பெரிய நிறுவனம் தனிப்பட்ட வகுப்பு நடத்துகிறார்களா என்று தேடினால், அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. இவர்கள் தங்களுடைய அணுகுமுறை மற்றும் கருவிகள்தான் உலகில் சிறந்தவை என்று விற்பனை கலந்த கல்வியால், உங்களுக்குச் சரியான கல்வி வழங்க மாட்டார்கள்

internetofthings2

சரி, என்னதான் செய்யலாம்? ஒரு ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பம் தெரு ஓரப் பயிற்சி மையத்திற்கு வந்து விடும், அப்புறம் பார்க்கலாம் என்று மட்டும் சும்மா இருந்து விடாதீர்கள். ஏனென்றால், இத்துறையின் வாய்ப்புகள் ஐந்து ஆண்டு காலம் காத்திருக்காது.

ஆனால், 2020 –க்குள் பல லட்சம் வல்லுனர்கள் இத்துறைக்குத் தேவை. சரியான பயிற்சியும் அணுகுமுறையும் இருந்தால், வேலை மற்றும் வெற்றிகரமான வியாபாரம் – இரண்டும் சாத்தியம்.

களத்தில் இறங்குமுன் இத்துறை உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது, உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும், சொந்த முயற்சியில் என்னவெல்லாம் கற்க வசதிகள் உள்ளன என்று விரிவாக இந்தக் கட்டுரையில் அலசுவோம். அதன் பின், பயிற்சிக்கு என்ன வசதிகள் இருக்கின்றன என்றும் பார்ப்போம்.

முதலில் உங்களுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

  • சம்பந்தமே இல்லாத துறைகளில், எப்படிக் கருவிகளில் புதிய பயன்பாடுகளை உருவாக்கி, அவற்றைப் பயனுள்ள தோழராக மாற்ற முடியும் என்று சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு சக்கர நாற்காலியில் உள்ள நோயாளிக்கு என்ன செய்தால், நோயாளி பயனுறுவார் என்று இதுவரை எந்த நிரலரும்/பொறியாளரும் சிந்தித்ததில்லை. இன்றைய கருவி இணைய வல்லுனர்கள் சிந்திக்கிறார்கள். எந்த ஒரு பயன்பாட்டு உலகையும் துச்சமாக நினைக்காதீர்கள். உதாரணத்திற்கு, சேற்றில் இறங்கி உங்களது உணர்விகளை நிறுவ வேண்டும் என்றால், முகம் சுளிக்கக் கூடாது – ஏனென்றால், உங்களது களம், விவசாயக் கருவி இணையத் துறையாக இருக்கலாம்
  • உங்களுடைய பயிற்சித் துறையைத் தாண்டி பல வேறுதுறை வல்லுனர்களுடன் ஆலோசித்து ஒரு பயனுள்ள கருவி இணையப் பயன்பாட்டை உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, சக்தி உருவாக்கத் துறைக்கு ஒரு பயனுள்ள கருவியை உருவாக்க நீங்கள் அத்துறையின் வல்லுனராக இருக்கத் தேவையில்லை. ஆனால், அத்துறை வல்லுனர் ஒருவர் மூலம், எங்கு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்று அறிந்து, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் வல்லமை உங்களிடம் இருக்க வேண்டும்
  • உங்களுடைய துறையில் – அது நிரலுவது, அல்லது கருவி வடிவமைப்பு, அல்லது, இணையத் தொடர்பு, அல்லது கருவி இணையப் பாதுகாப்பு, உங்களிடம் ஏராளமான வல்லமை இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் வல்லமை இருந்தால் மட்டும் போதாது என்பதே இத்துறையின் சிறப்பு. தொழில்நுட்பக் கல்வித்துறை அதிகமாக மென்பொருள் பயன்பாட்டு இடைத்தளத்தைப் (user interface) பற்றி சொல்லித் தரவில்லை. அதையும் தாண்டி, இந்தத் துறையில் மிகவும் தேவையான பயிற்சி, பயன்பாட்டு அனுபவத்தைச் சார்ந்தது (user experience). பல நுகர்வோர் கருவி இணையப் பயன்பாடுகளில், திறன்பேசி போன்ற திரை வசதிகள் இருக்காது. வித்தியாசமாகச் சிந்தித்தல் அவசியம்
  • விடாமுயற்சி மிகவும் தேவை. இத்துறையில் தோல்விகள், வெற்றிகளை விட ஏராளம். உங்களுடைய ஐடியாவைத் துறக்க நீங்கள் சின்னச் சின்ன காரணங்களுக்காகத் தயாராக இருந்தால், களத்தில் இறங்காதீர்கள். பல தோல்வி முயற்சிகளுக்குத் தயாராகுங்கள். இந்தத் துறையில் தொழில் தொடங்க விழைபவர்கள் ஆரம்பத் தோல்விகள் ஏராளம் என்பதை அறிய வேண்டும். முதலில் அருமையான ஐடியா என்று தோன்றுவதை பயன்பாட்டிற்கேற்ப மாற்றியமைக்கத் தயாராகவும் இருக்க வேண்டும்
  • முழு வீச்சுப் புரிதல் – பாதுகாப்பு பற்றிய கட்டுரைகளில் இதைப் பற்றி அலசினோம். பயன்பாடு என்பது ஒன்று; ஆனால், தகாத பயன்பாடு என்பது முற்றிலும் வேறுபட்டது. கருவி இணைய வடிவமைப்பாளர்கள் தகாத பயன்பாடு பற்றியும் சிந்திக்கும் திறனாளியாக இருக்க வேண்டும். இல்லயேல் உங்களது அருமையான ஐடியா எப்படியோ சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சக்தியைப் படைத்துவிடும். தகாத பயன்பாட்டைத் தவிர்த்தீர்களானால், உங்களது கருவி இணைய முயற்சிக்கு நெடுங்கால வாழ்விருக்கும். இல்லையேல், வந்த வேகத்தில் மறைந்துவிடும்

சரி, பிற துறைகளில் வல்லுனர்களுடன் வேலை செய்யத் தெரிந்த விடாமுயற்சியுள்ள ஒருவருக்கு, டெக்னிகலாக இத்துறையில் எப்படிப்பட்ட வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

  1. இணையப் பொறியாளர்கள் – இவர்கள் பலவித கருவிகளை இணையத்துடன் இணைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், மாறி வரும் கருவி இணைய நியமங்கள், இணைய வேகம், மற்றும் பின்னணி வன்பொருள் விஷயங்களில் வல்லுனர்களாக இருக்க வேண்டியது அவசியம்
  2. MEMS பொறியாளர்கள் – எல்லா நிறுவனங்களிலும் இவர்களுக்கு வேலை இல்லையென்றாலும், (பெரும்பாலான நிறுவனங்கள் உணர்விகளைப் பயன்படுத்தவே செய்கிறார்கள், உருவாக்குவதில்லை) இது ஒரு விசேடமான திறன். Instrumentation, microelectronics, mechatronics போன்ற படிப்புகள் படிப்போர்களுக்கு மிகச் சிறந்த ஒரு துறை
  3. வணிகத் திறனாளர்கள் மற்றும் செயற்கைத் திறனாளர்கள் (business and artificial intelligence specialists) – கருவிகள், மனிதர்களைப் போல இயங்குவதில்லை. இத்துறைகளில் உள்ள நெடுங்காலக் கனவு, சீராக உருவாக்கப்பட்ட தரவுகள். மனிதர்கள், குறைகள் நிறைந்த தரவுகளை உற்பத்தி செய்பவர்கள். அத்தோடு, மனிதர்கள் அரசியல் கைதிகள் – தரவுகள் சொல்வதையும் மீறிச் செயல்படுபவர்கள். இத்தனைக் காலம், மனிதர்களை ஒட்டியே உருவாகிய இத்துறைகள், எந்திரங்கள் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை முன்வைக்க வேண்டும். அரசல் புரசலான முன்வைப்புகள் ஒத்து வராது. வழக்கமான கல்வி முறைகள், இங்கு உதவாது. மிகச் சிறிய முடிவுகளைக் கருவிகளிடம் விட வேண்டும். படம் வரைந்து 60 வயது மக்கு வைஸ் பிரஸிடெண்ட்டிற்கு விளக்கத் தேவையில்லை. கருவிகளுக்குச், சின்ன விதிகள், சின்னத் தரவுகள் போதும். முன்வைக்கப்பட்ட முடிவுகள் எப்பொழுதும் நிறைவேற்றப்படும். முடிவுகளை நிறைவேற்ற துல்லியமான விதிகள் மட்டுமே தேவை. கருவிகளிலிருந்து வரும் தரவுகள் எப்பொழுதும் ஒரே பாணியில் இருக்கும்
  4. தகவல் பாதுகாப்பு வல்லுனர்கள் – பாதுகாப்புப் பற்றிய கட்டுரைகளில் பார்த்தது போல, இவர்கள் மாறி வரும் மறைகுறியாக்க முறைகள் எப்படி கருவி இணைய உலகில் பல்வேறு தளங்களில் பயன்படுத்தி இணைய விஷமிகளின் தாக்கல்களைச் சமாளிப்பது என்பதில் குறியாக இருக்க வேண்டியவர்கள். ஊடுருவல் என்பது ஒரு பூனை, எலி சமாச்சாரம். இன்றைய பிரமாதமான பாதுகாப்பு, நாளைய பாதுகாப்பு ஓட்டை. கணித அறிவும், கணினி மென்பொருள் அறிவும் கைகோர்த்து எதையும் சந்தேகத்துடன் அணுகும் இவர்கள் கருவி இணைய உலகில் மிகவும் முக்கியமானவர்கள்
  5. பயன்பாட்டு இடைத்தள மற்றும் அனுபவ வல்லுனர்கள் – புதிய கருவிகளுடன் தொடர்பு என்பது திரைத் தடவல் வடிவில் இருக்க வேண்டியதில்லை. சிறிய கருவிகளுக்கு புதிய அணுகுமுறைகள் தேவை. இதுவரை திறன்பேசி, மற்றும் கணினி பயன்பாட்டு இடைத்தள வீரர்கள், தங்களை மாற்றிக் கொண்டால்தான் இத்துறையில் வெற்றி பெற முடியும். உதாரணத்திற்கு, எங்கோ ஒரு காட்டுப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள மின்கலத்தில் இயங்கும் ஒரு சுற்றுச்சூழல் கருவியுடன் எப்படித் தொடர்பு கொள்வது?
  6. திறன் கருவி மென்பொருள் நிபுணர்கள் (smart devices software engineers) – இவர்கள் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் என்று நின்று விடாமல், பல புதிய தொழில்நுட்பங்களோடு சமாளிக்க வேண்டும். மாறி வரும் புதிய நியமக் கருவிகளுடன் தொடர்பு, மற்றும் பாதுகாப்பு என்று இவர்களது பங்கு விரிவானது. சில நிறுவனங்களில் இவர்களே பாதுகாப்பு வல்லுனர்கள். இவர்களது பங்கு பயன்பாட்டோடு நின்றுவிடாமல், கருவிகளை தொலைதூரத்திலிருந்து பராமரிப்பது எப்படி என்பது வரை விரியும். ஜாவா, பைத்தான் மற்றும் பேர்ல் போன்ற புதிய கணினி நிரல்மொழிகள் இந்தப் பயணத்தில் உதவும்
  7. வலையமைப்பு நிபுணர்கள் (networking specialists) – குறிப்பாக, Zigbee, 6LowPAN, Bluetooth LE, WiFi, போன்ற விஷயங்களில் இவர்கள் தேர்ந்திருத்தல் அவசியம். எந்த ஒரு வலையமைப்பும், ஒரே தொழில்நுட்பத்தோடு இன்னும் சில ஆண்டுகளுக்கு வரப் போவதில்லை. இந்த விதவிதமான நியமங்களுடன் ஒரு கருவி இணைய அமைப்பு வேலை செய்வது அவசியம். அத்துடன் பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்

இவ்வாறு, பல புதிய வாய்ப்புகளும், இன்றைய வாய்ப்புகளின் சற்று மாறுபட்ட வாய்ப்புகளும் இத்துறையில் உள்ளன. ஆனால், இதுவரை கணினித் துறையில் இல்லாத அளவு, மாறுபட்ட சிந்தனையுடன் அணுக வேண்டிய வாய்ப்புகள் இவை – நீங்கள் புதுத் தொழில் தொடங்க விழைபவரோ அல்லது, புதிய வேலை தேடுபவரோ எப்படி இருந்தாலும் சரி.

கல்லூரிகள் இன்னும் இந்தத் துறைக்குத் தேவையான கல்வி முறையை இன்னும் அமைக்கவில்லை. ஓரளவிற்கு நிரலுவதில் தேர்ந்தவர்கள், இத்துறையில் முன்னேற பல கருவிகள் உள்ளன. சிலவற்றை இங்கு பார்ப்போம்: Top 49 Tools For The Internet of Things | ProfitBricks Blog

அடிப்படையான விஷயங்களைச் செய்து புரிந்து கொள்ள விழைபவர்களுக்கு, இங்கு ஆர்டினோ என்ற ஒரு நிரல் மொழி தாங்கிய ஒரு கருவிகள் கூட்டு. சில சின்ன பிராஜட்டுகளைச் செய்து நீங்கள் நன்றாக தேறியவுடன் உங்களது கற்கும் முறைகளில் நீங்கள் முன்னேறலாம். இது போன்ற பல கருவிகளின் கூட்டு கிடைக்கிறது: Gikfun Starter Learning Kit with Power Supply 9V 1A for Arduino EK8412: Amazon.ca: Electronics

ஆர்டினோ பிராஜக்ட்டுகள் செய்ய பல புத்தகங்களும் கிடைக்கின்றன: Amazon.ca: arduino project book

இந்த கருவிகள் கூட்டு பயன்படுத்த உங்களுக்கு இந்தத் துறை எப்படி வேலை செய்கிறது என்று ஓரளவு புரியவரும். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆரம்ப தொழில்நுட்பம் கற்பவர்கள் அவசியம் இது போன்ற கருவிகளின் கூட்டு கொண்டு கற்றால், எதிர்காலத்தில் மேலும் பயின்று இந்தத் துறையில் முன்னேறலாம்.

***

 

http://solvanam.com/?p=45589

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – சமுதாய நோக்கும், போக்குகளும்

 

 

 

Internet_of_things

இந்தத் தொழில்நுட்பத்தை ஆராய்கையில், பல புதிய விஷயங்கள் கிட்டியதோடு, சிறு ஏமாற்றங்களும் எனக்கு இருந்தன. அதே நிலை, இக்கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். உதாரணத்திற்கு, ஆராய்ச்சிக்கு முன் என் பார்வையில்,

  1. கூகிள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தத் துறையில் பல பொருட்களை அடுக்கி நம்மை திக்கு முக்காடச் செய்து விடுவார்கள். – முதல் ஏமாற்றம் இது.
    பல அதிரடி யோசனைகளை உருவாக்கும் நிறுவனங்கள் புதிய, பெயரெடுக்காத நிறுவனங்களே. கூகிளோ – ஒரு நெஸ்ட், ஆப்பிளோ – ஒரு வாட்ச் என்று ஜல்லியடிக்கும் நிறுவனங்கள். புதிய நிறுவனங்கள் வெற்றி அடைந்தவுடன் அவற்றை விழுங்கத் மட்டுமே கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தயாராக உள்ளன.
  2. புதிய தொழில்நுட்பத்தில் குறைகள் இருந்தாலும், பெரிதும் சோதனை செய்யப்பட்டு, நுகர்வோருக்குத் தக்கவாறு அறிமுகப்படுத்தப்படும் மிகவும் சரியான கருவிகள் இவை– இரண்டாம் ஏமாற்றம் இது.அதிகம் சோதிக்கப்படாமல் நுகர்வோரைச் சென்று அடையும் கருவிகள் இன்று பெருகி விட்டன. பாதுகாப்பு காமிராக்களின், கார்களின் குறைகள் பற்றியச் செய்திகள் ஊடகங்களில் ஏராளமாக வரத் தொடங்கிவிட்டன.
  3. கம்பியில்லாத் தொழில்நுட்பம் ஏராளமாக வளர்ந்துள்ளதால், இக்கருவிகள் சமுதாயத்திற்கு உடனே பெரும் பயன் அளிக்க உள்ளன – மூன்றாம் ஏமாற்றம் இது.இந்த நம்பிக்கையை உடைத்தது சற்று ஆழமான ஆராய்ச்சி.அவசரமாக வளர்ந்த செல் தொழில்நுட்பங்கள் ஒன்றோடு ஒன்று இணையத்துடன் இணைவதில் பல சமரசங்கள் செய்து, கடைசியில் புதிய கருவிகளை இணையத்தோடு உறவாடுவதை மிகவும் சிக்கலாக்கி விட்டன.அவசரத்திற்கு உதவிய தொழில்நுட்பம், எதிர்காலத்தில் உதவுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
  4. அடித்துப் பிடித்து எப்படியோ தொழில்நுட்ப நியமங்கள், கருவிகள் இணைய உலகிற்கு உதவிவிடும். – நான்காம் ஏமாற்றம்.இந்த நம்பிக்கை முழுவதும் போய்விடவில்லை. ஆனால், இன்றைய தொழில்நுட்ப நியமங்கள் மற்றும் அதன் பின் உள்ள தொழில் அரசியல் அவ்வளவு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை.
  5. பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து சமுதாயத்திற்கு பெரிதும் உதவும் கருவிகள் இதோ இன்னும் 2 ஆண்டுகளில். – ஐந்தாம் ஏமாற்றம் இது.புதிய சோப்பு விளம்பரம் தரும் நம்பிக்கை போல இந்த நம்பிக்கையும் இருந்தாலும்,  மிகக் குறைவான, செயல்திறன் (processing speed) மற்றும் மின்கலன் (battery) சக்தி வாய்ந்த கருவிகளுக்குள் எப்படி சரியான பாதுகாப்பையும் அளிப்பது என்பது மிகப் பெரிய பிரச்னை.
  6. அலுவலகங்கள் மற்றும் கல்வித்துறையில் நாளைய கருவி இணைய (Internet Of Things – IoT) துறையை இன்றே பார்க்கலாம் – ஆறாம் ஏமாற்றம்.இந்தத் துறைகளின் இன்றைய நிலை மிகவும் ஏமாற்றம் அளிக்கத்தான் செய்தது. குறிப்பாகக் கல்வித்துறையின் பின்தங்கிய நிலை நான் சற்றும் எதிர்பார்க்காதது.

சமூகப் போக்குகள், புதிய தொழில்நுட்பங்களின் பயனை வழிப்படுத்தும் சக்தி படைத்தவை. பாதுகாப்பு குறித்து சமூகம் கொண்டிருக்கும் சற்றும் பொறுப்பற்ற நோக்கு இன்றைய கருவி இணைய முயற்சிகளை அதிகம் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது என்பது என் கருத்து.

இன்றைய புதிய திறன்பேசி (smartphone) மாடல்கள் நுகர்வோர் பயன்பாட்டை மட்டுமே அதிகம் மையமாக்குகின்றன.

இதன் தொடர்சியாக, இன்றைய கருவி இணைய முயற்சிகளும், பாதுகாப்பு விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டன. குறிப்பாக, வீடுகளில், கார்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், மற்றும் அணியப்படும் கருவிகளில் இந்தப் போக்கு அதிகமாக உள்ளது. இவற்றை வாங்கும் நுகர்வோர்கள் தங்களுடைய திறன்பேசியில் உள்ள பயன்பாடுகளைப் போலவே இவையும் வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பாதுகாப்பின்றி எதிர்காலத்தில் இவர்கள் படப் போகும் கடும் இன்னல்கள் பற்றிச் சற்றும் கவலைப்படுவதில்லை.

இன்னொரு முக்கிய தொழில்நுட்ப விஷயம் அதிகம் பேசப்படுவதே இல்லை. IPv6 தொழில்நுட்பம் பல கோடி கோடிக் கருவிகளை இணையத்துடன் இணைக்கும் திறன் படைத்தது என்று தொழில்நுட்பப் பகுதியில் பார்த்தோம். அப்படி இணைத்த இணையத்தின் கதி பற்றி ஏதாவது எங்காவது சொல்லப் பட்டதா? மூச்!

வழக்கமான, வந்தபின் பார்த்துக் கொள்வோம் என்ற அணுகுமுறைதான். ஏராளமான கணினிகளின் பல லட்சம் கோடித் தரவுகளைச் சமாளிக்க வேண்டும் என்று 90–களின் கடைசியில் இணையத்திற்கான பல இழை ஒளியியல் (Fibre Optics) முன்னேற்றங்கள் இன்று வரை தாக்கு பிடித்துள்ளன. ஆரம்பத்தில் வெறும் வார்த்தைகள் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்பட்டன; பிறகு படங்கள், வீடியோக்கள் என்று தேவைகள் மிக அதிகமாகிவிட்டன. பல கோடிக் கோடி கருவிகள் இந்த இணையத்தில் இடைவிடாமல் சேர்ந்து கொண்டால், அதன் வேகம் வெகுவாக பாதிக்கப்படும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் இவை ஏராளமாக இணையத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உடனடியாக, இணைய வேகத்தைக் கூட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இத்துறை முன்னேறாமல் இல்லை. பல முயற்சிகள் போர் வேகத்தில் நடந்து வருவது உண்மை. ஆயினும், எப்படியோ முழுவதும் சோதிக்கப்படாத பொருட்களை சந்தைக்குக் கொண்டு வந்து, பிறகு சமாளிக்கலாம் என்ற செல்பேசி மற்றும் கணினி மென்துறை அணுகுமுறைகள் இந்தத் துறைக்கு அதிகம் உதவுவதில்லை.

புதிய செல்பேசி  வரவுகளில் பாதுகாப்பைப் பற்றி அதிகம் கவலைப்படாது, அபாயங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதை நுகர்வோர்கள் சிந்திப்பதில்லை. ஆனால், ஒரு புதிய இணையத் தொழில்நுட்பம் அறிமுகமாகும் போது, அந்த செல்பேசிக் கருவியின் பாதுகாப்புக் குறைகள் சில நாட்களிலேயே தெரிந்து அதன் தொழில்நுட்பத்தையே கேள்விக் குறியாக்கிவிடலாம்.

உதாரணத்திற்கு, க்ரைஸ்லர் செரோக்கி (Chrysler Cherokee) ஜீப்பின் கணினிகள் எளிதில் தாக்கப்படலாம் என்ற செய்தி வெளியானவுடன், இந்த ஊர்தியின் விற்பனை சரியத் தொடங்கியது. (பார்க்க: https://www.wired.com/2015/07/hackers-remotely-kill-jeep-highway/)

கருவி இணையப் போக்குகள்

IoT-Expectations

புதிய கருவிகளைப் பற்றியோ அல்லது புதிய நிறுவனங்களைப் பற்றியோ இங்கு நாம் அலசப் போவதில்லை. இத்துறையின் பிரச்னைகள், முன்னேற்றங்கள் போன்றவற்றை ஏற்கனவே முன் வைத்து விட்டோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் (2016-2020) பற்றி சற்று அலசுவோம்.

  1. முதலில், அடிப்படை கருவியளவு பாதுகாப்பிற்கு புதிய முறைகள் – வழக்கமான Deffie Hellman போன்ற குறிமறையாக்க (Cryptography) முறைகள் கருவி இணைய உலகிற்கு ஒத்து வராதவை. குறைந்த செயலித் திறன் (processing power) மற்றும் மின்கலன் (battery) சக்தியில் வேலை செய்யும் புதிய முறைகள் தேவை.சற்று சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், Algebraic Eraser (AE) போன்ற புதிய முறைகள் மேலும் மெருகூட்டப்பட்டு இந்தத் துறையில் பெரிதாக உதவலாம்.
  2. அடுத்தபடியாக, கருவி இணைய கட்டமைப்பு நியமங்கள் (IoT Architecture Standards) மிகவும் முக்கியம் – பல முயற்சிகள் காரசாரமாக விவாதத்தில் இருந்தாலும், முடிவாக இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஒன்று அல்லது இரு நியமங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் உள்பூசலிலேயே இந்த முக்கிய தொழில்நுட்பம் தோற்றுப் போகும் வாய்ப்புண்டு.
  3. சும்மா கையில் அணியப்படும் கருவியை வைத்து அழகான வரைபடம் ஒன்றை உருவாக்கி இதோ கருவி இணையம் என்று அலட்டிக் கொள்வது இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் தாங்காது.நிறுவனங்கள் மேகக் கணிமைத் (Cloud Computing) துறையில் பல்வேறு கருவிகளிலிருந்து உருவாகும் தரவுகளைக் (Stored Data)க்களைக் கையாளும் முறைகளை உருவாக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான், பயன்பாட்டாளருக்கு உண்மையான பயனை உருவாக்க முடியும். இந்தத் தரவுக் கையாள்மை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
  4. விளிம்புக் கணிமை (edge computing) என்பது, கருவிகள் இருக்கும் இடத்தின் அருகே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அருகே கணிமை நிகழ வேண்டும். பொதுவாக, இது எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டாலும், இன்னும் இரண்டு ஆண்டுகளில், சிறப்பாக, பல விதக் கருவிகளுடன், புதிய பல பயன்பாடுகளில் நிகழ வேண்டும். இதைப் பற்றித் தொழில்நுட்பப் பகுதியில் நாம் விரிவாகப் பார்த்தாலும், இன்று வெகு சில பயன்பாடுகளில் மட்டுமே இது நடக்கின்றது.
  5. இத்தகைய கருவி இணைய அமைப்புகளை வழங்கும்/ பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனமும் தங்களுடைய வலையமைப்பு சக்தியைக் (Network power)ஐக் கூட்டுதல், அடுத்த இரண்டு வருடங்களில் அவசியம்.
  6. மேகக் கணிமை போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், இந்தத் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள புதிய வியாபார முயற்சிகளில் இறங்குவதை இன்னும் ஒரு வருடத்தில் நாம் பார்க்கலாம். பயன்பாட்டாளர்களுக்கு பல புதிய மேகக் கணிமை முறைகள், குறைந்த விலைகள் சாத்தியமாகும்.
  7. கட்டமைப்பு உலகில், இன்னும் இரண்டு வருடங்களில், மேற்குலகில், இந்தத் தொழில்நுட்பத்தால் உந்தப்பட்டு, புதிய பல சேவைகள் உருவாகும். இதனால், புதிய பல வியாபாரங்கள் உருவாகும்.
  8. இன்னும் இரண்டு ஆண்டுகளில், திறன்பேசியா அல்லது அணிக்கருவியா (Connected Devices) என்ற சர்ச்சை அவசியம் உருவாகும். நுகர்வோரே இந்தச் சர்ச்சையின் முடிவை முடிவு செய்வார்கள். இதில் எந்தத் தொழில்நுட்பம் நிலைக்கும் என்று சொல்வது கடினம்.
  9. மிக முக்கியமாக ‘திறன் நகரங்கள்’ (smart cities) இந்தத் தொழில்நுட்பத்தின் மிக முக்கிய தூதுவர்களாகும் நிலை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் உருவாகும்.நாம் இதுவரை நினைத்துப் பார்க்காத புதிய கருவி இணையப் பயன்பாடுகள், கருவிகள், உணர்விகள் (sensors) இரண்டு வருடங்களில் சாத்தியம்.

சில தடைகள் இருந்தாலும் இந்தத் துறை இன்னும் அடுத்த சில ஆண்டுகளில் பயங்கர வேகத்தில் முன்னேறும் என்பது உறுதி. இதை உறுதியாகக் கூறுவதற்கு முக்கிய காரணங்கள் இவை:

    • இந்தத் துறையில் புரளப் போகும் பல்லாயிரம் கோடி டாலர்கள் மிகப் பெரிய பிரச்சினைகளையும் தீர்க்க வழி செய்யும்.
    • இந்தத் துறையில் உருவாகப் போகும் பல்லாயிரம் புதிய வியாபார சாத்தியங்கள் புதிய சிந்தனைகளை உருவாக்கும்.
    • இந்தத் துறையில் இயங்கவிருக்கும் பல லட்சம் புதிய இளைய தலைமுறைகளின் புதிய அணுகுமுறைகள் பல பிரச்சினைகளைத் தீர்க்க வழி செய்யும்.

***

http://solvanam.com/?p=45790

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவிகளின் இணையம் – முடிவுரை

 

Internet-Of-Things2

கடந்த ஒரு வருடமாக இக்கட்டுரைத் தொடர் சொல்வனம் இதழில் வெளிவந்ததற்குப், பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் ஆராய்ச்சிக்குப் பின்னணியாக இருந்தது. பல விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதியிருந்தாலும், மிகவும் புதிய தொழில்நுட்பமாக இருப்பதால், ஏராளமான குழப்பம் இத்துறைப் பற்றி எங்கும் வியாபித்திருந்தது, மிகவும் சவாலான ஒரு விஷயம். வியாபார செய்தி கலந்த விஷயத்திலிருந்து, உண்மையான  தொழில்நுட்பத்தைப் பிரித்து எடுப்பது.

இத்துறையில் வாய்ப்புகள் ஏராளம். ஓரளவிற்காவது இக்கட்டுரைத் தொடர், சில இளைஞர்களை விஷுவல் பேசிக், ஆரகிள் போன்ற அன்றாட தொழில்நுட்ப விஷயகளிலிருந்து, இத்துறையில் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியிருந்தால் அதுவே இக்கட்டுரைத் தொடரின் மிகப் பெரிய வெற்றி.

இக்கட்டுரைத் தொடரில் பல புதிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தத் தேவையிருந்தது. சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை புதிதாக உருவாக்கவும் நேரிட்டது. புதிய தொழில்நுட்பம் பற்றி தமிழில் எழுதுவதன் அலாதி அனுபவம் இது. இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

எண் தமிழ்ச் சொல் ஆங்கிலச் சொல்
1 அகன்ற வலையமைப்பு WAN (Wide Area Networking)
2 அசையா தரவின் பாதுகாப்பு Data at rest security
3 அசையும் தரவின் பாதுகாப்பு Data in transit security
4 அடிப்படைப் பொது சாவிகள் Raw public key
5 அணியப்படும் கருவிகள் Wearables
6 அலைப்பரப்பி/வாங்கி Transceiver
7 அழுத்த உணர்விகள் Pressure sensors
8 இணைய விஷமிகள் Internet hackers
9 இணையத்துடன் பாதுகாப்பற்ற தொடர்பு Insecure web interface
10 இதய முடுக்கி Pacemaker
11 இறுக்கும் எந்திரம் Compactor
12 உடல் வருடல் Biometric scan
13 உடல்நிலைத் தகுதி Physical fitness
14 உணர்விகள் Sensors
15 உலை/காற்றுக் கட்டுப்படுத்தி Furnace/ air conditioner
16 உறுதிப்பாடு/சான்றளிப்பு Authentication
17 உற்பத்தி மற்றும், தயாரித்தல் Production and manufacturing
18 எரிபொருள் நுகரும் தரவு Fuel consumption data
19 ஒப்பந்தக்காரர்கள் Contractors
20 ஒலி உணர்விகள் Sound sensors
21 ஒளி உணர்விகள் Optical sensors
22 ஒளி மின் உணர்வி Photo electric sensor
23 கடிகை Timer
24 கட்டமைப்பு Infrastructure
25 கம்பியில்லாத் தொடர்பு Wireless connectivity
26 கம்பியில்லாத் தொலைப்பேசிகள் Cordless phones
27 கம்பியிழை மின் குமிழ் Filament bulbs
28 கம்பியுடைய தொடர்பு Wired connectivity
29 கருவி அடையாளச் சாவி Identity resolving key
30 கருவி இணையக் கட்டமைப்பு IOT architecture
31 கருவிகளின் இணையம் Internet of things
32 கருவிகள் Devices
33 காந்த உணர்விகள் Magnetic  sensors
34 குறுஞ் செய்திகள் Text messages
35 சல்லடை வலையமைப்பு Mesh networking
36 சிகிட்சை மீட்சி Post procedure recovery
37 சிற்றுருவாக்கம் Miniaturization
38 சுழல்காட்டி உணர்விகள் Rotation sensors or gyroscopes
39 செயலி Processor
40 தடுக்கிதழ் Valve
41 தரவு நஷ்டப் பாதுகாப்பு Data loss prevention
42 தரவுத் திரள்வுப் பாதுகாப்பு Data aggregation security
43 தனிப்பட்ட வலையமைப்பு PAN (Personal Area Networking
44 திசைப்போக்கு Orientation
45 திறன் நகரங்கள் Smart cities
46 திறன்பேசிகள்/நுண்ணறிப்பேசிகள் Smart phones
47 தொகுப்புத் தொழில்கள் Assembly based manufacturing
48 தொடர் செய்லாக்கத் தொழில்கள் Continuous process manufacturing
49 தொடர்பு கையொப்பச் சாவி Connection signature resolving key
50 தொடர்பு/அசைவு உணர்விகள் Contact/motion sensors
51 தொடும் விளையாட்டுக்கள் Contact sports
52 தொழில்பகுதி கணினி Plant computer
53 நிர்வாகக் கடவுச்சொல் Administrator password
54 நிலைப்பொருள் Firmware
55 நீர் வடிக்கும் உணர்வி Water drain sensor
56 நீர் மட்ட உணர்வி Water level sensor
57 நீர்தெளிப்பு அமைப்புகள் Sprinkler systems
58 நுண்ணறி/திறன் மின்சார விளக்குகள் Smart bulbs
59 பகிர்மானம் Distribution
60 பங்குச் சாவிகள் Shared key
61 பயனில் உள்ள தரவின் பாதுகாப்பு Data in use security
62 பயன்பாட்டாளர் அனுபவம் User experience
63 பயன்பாட்டுப் பாதுகாப்பு Application security
64 பாகுநிலை Viscosity
65 பொட்டலக் காகிதம் Packaging materials
66 பொதுப் பயனுடைமை Public utilities
67 பொருள் சார்ந்த பாதுகாப்பு Physical security
68 பொறியியல் பிரத்யேகத் தயாரிப்புத் தொழில்கள் Engineering job order
69 போக்குவரத்துச் சிறுபாதை Traffic lanes
70 மருத்துவ சேவைகள் காப்பீடு Medical insurance
71 மருந்தாளுனர் Pharmacist
72 மருந்துகளை அளந்து தரும் வழங்கி Medicine dispenser
73 வடஞ்சுழியான மரை Clockwise threads
74 மறுபயன்பாட்டுப் பொருள்கள் Recycling materials
75 குறிமறையாக்க முறைகள் Encryption methods
76 குறிமறையாக்க முறையின் பலம் Encryption strength
77 மானிகள் Instruments
78 மின் உப பகிர்மான நிலையங்கள் Electrical sub stations
79 மின் பகிர்மான நிலையங்களுக்கு Electrical distribution centers
80 மின்சார டிஜிட்டல் நுண்ணறியளவிகள் Smart (electrical) meters
81 மின்மாற்றிகள் Transformers
82 வளையும் மின்னணுவியல் சுற்றுக்கள் Bendable electronic circuits
83 முகப்புப் பெட்டி Dashboard
84 முடிவாற்றல் பொறிகள் Decision support tools
85 முன் பங்குச் சாவிகள் Pre-shared key
86 மேகக் கணிமை வழங்கி Cloud data server
87 ரசாயன உணர்விகள் Chemical sensors
88 ரத்த பிராணவாயு அளவு Blood oxygen level
89 வடிவமைப்பு Design
90 வட்டார வலையமைப்பு LAN (Local Area Networking
91 வருமுன் பராமரிப்பு Preventive maintenance
92 வலையமைப்புப் பாதுகாப்பு Network security
93 வழங்கி வயல் Server farm
94 விளிம்பு கணிமை Edge computing
95 வெப்ப உணர்விகள் Temperature sensors
96 வெப்பச் சீர்நிலைக்  நுண்ணறிக்கருவி Smart thermostat
97 வெற்றுத் துப்புரவாக்கி Vacuum cleaner

IoT-Internet-of-Things-Web_Devices_BigData_Health

கட்டுரையில், கடைசியில் சுட்டிகளைத் தருவதாக எழுதியிருந்தேன். சில சுட்டிகள் எளிமையான ஆரம்ப நிலைக் கட்டுரைகள் மற்றும் காணொலிகள். மற்றவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் – மிகவும் டெக்னிகலானவை. முடிந்தவரை, இவற்றைப் பிரித்து ஒரு நட்சத்திர மதிப்பீட்டுடன் இங்கே அளித்துள்ளேன். அதென்ன நட்சத்திர மதிப்பீடு?

நட்சத்திர மதிப்பீடு விளக்கம்
* ஆரம்ப நிலை புரிதலுக்கான சுட்டி
** சற்று விவரமானது. அவ்வளவு டெக்னிகல் அறிவு தேவையில்லை
*** மிக விவரமானது. கொஞ்சமாவது டெக்னிகல் அறிவு தேவை
**** மிகவும் டெக்னிகலான ஆராய்ச்சிக் கட்டுரை

 

சுட்டிகள்/மேற்கோள்கள்

துறை சுட்டி நட்சத்திர மதிப்பீடு
கருவிகளின் இணையம் – பருந்துப்பார்வை https://www.youtube.com/watch?v=6AQMMx4OkjM *
  https://www.youtube.com/watch?v=LVlT4sX6uVs *
  https://www.youtube.com/watch?v=fuRLFGrdYpo *
  https://www.youtube.com/watch?v=wf-ogoeHZ7c *
  https://www.youtube.com/watch?v=1kpyuOZApYA *
  https://www.youtube.com/watch?v=eU66gkdDaFc *
  http://www.pocket-lint.com/news/126559-internet-of-things-explained-what-is-it-and-can-it-really-change-the-world **
  http://postscapes.com/internet-of-things-examples/ **
  http://www.informationisbeautiful.net/visualizations/the-internet-of-things-a-primer/ *
  http://www.wired.com/2014/11/the-internet-of-things-bigger/ **
  http://www.intel.com/content/www/us/en/internet-of-things/infographics/guide-to-iot.html *
  http://www.forbes.com/sites/jacobmorgan/2014/05/13/simple-explanation-internet-things-that-anyone-can-understand/ *
  http://www.internet-of-things.eu/ *
  http://www.gartner.com/it-glossary/internet-of-things/ *
  http://www.techopedia.com/definition/28247/internet-of-things-iot **
  https://www.youtube.com/watch?v=nEVatZruJ7k&feature=youtu.be *
  http://techcrunch.com/topic/subject/internet-of-things/ **
  http://www.freescale.com/files/32bit/doc/white_paper/INTOTHNGSWP.pdf ***
  http://www.slideshare.net/wso2.org/io-t-referencearchitecturewebinar **
  http://www.sciencedirect.com/science/article/pii/S0167739X13000241 ****
கருவி இணைய நியமங்கள் http://electronicdesign.com/communications/internet-things-standards-thing **
  http://openinterconnect.org/ ***
   http://www.link-labs.com/zigbee-vs-wifi-802-11ah/ ****
  http://www.lsr.com/white-papers/zigbee-vs-6lowpan-for-sensor-networks ****
  https://www.linkedin.com/pulse/20140802224850-81482458-difference-between-zigbee-and-6lowpan-explained-with-a-simple-arduino-xbee-setup **
  http://www.leva.fi/wp-content/uploads/DSS-WoT_CoAP-TCO_accepted_manuscript.pdf ****
  http://www.slideshare.net/paolopat/mqtt-iot-protocols-comparison **
  http://coap.technology/ **
  http://www.iotprimer.com/2013/11/iot-protocol-wars-mqtt-vs-coap-vs-xmpp.html ***
  http://www.slideshare.net/zdshelby/coap-tutorialhttp://www.slideshare.net/zdshelby/coap-tutorial ***
தொழிற்சாலைகளில் கருவி இணையம் https://www.youtube.com/watch?v=HPRURtORnis *
  http://www.industrial-ip.org/en/industrial-ip/internet-of-things/how-the-internet-of-everything-will-transform-industries *
  http://www.econais.com/applications/industrial-applications/ *
  http://www.forbes.com/sites/oreillymedia/2014/02/05/the-industrial-internet-of-things/ *
  https://www.youtube.com/watch?v=QBDShp6U7tU *
  https://www.youtube.com/watch?v=KzXfFDJWgmQ *
  http://intellisense.io/ **
  https://www.youtube.com/watch?v=Fb5FrcAcYzM **
கருவி இணையத் தொழில்நுட்பம் http://iotco.org/2014/10/02/simplified-iot-architecture/ **
  https://www.youtube.com/watch?v=uWTBnmRzQs4 *
  http://www.embedded.com/design/real-world-applications/4426952/Building-an-IoT-for-industrial-control–Part-1–What-is-Industrial-IoT- ***
  http://www.silabs.com/iot/Pages/iot-resources.aspx#whitepaper ****
  http://kth.diva-portal.org/smash/get/diva2:621384/FULLTEXT01.pdf ****
   http://beboulderanywhere.colorado.edu/itp/sites/default/files/attachments/itp/team_8_-_shraddha_subhash_tekawade_-_apr_25_2014_453_pm_-_group8_final_paper.pdf ****
தனியார் போக்குவரத்தில் கருவி இணையம் https://www.youtube.com/watch?v=_5hsfStv928 *
  https://www.youtube.com/watch?v=f_q16NEvfp0 *
  https://www.youtube.com/watch?v=cejQ46IQpUI *
  https://www.youtube.com/watch?v=cRC3ecljTSQ *
  https://www.youtube.com/watch?v=-qGTYEILL4k&list=PL6VkBmmohISUfDSlCr9rEkgb6jeFoIQfl *
பொதுப் போக்குவரத்தில் கருவி இணையம் http://www.intel.com/content/www/us/en/internet-of-things/videos/driving-iot-revolution-fleet-management.html **
  https://www.youtube.com/watch?v=CBkH_wJAy8Y **
பொது மருத்துவத்தில் கருவி இணையம் https://www.youtube.com/watch?v=AhOgx0bIoq0 *
  https://www.youtube.com/watch?v=ST2bs8HGrI8  – *
  https://www.youtube.com/watch?v=B_ERF56h4Fc – *
  https://www.youtube.com/watch?v=p69K-biHXrs *
  https://www.youtube.com/watch?v=qO9unY31820 *
அணியப்படும் கருவிகள் உலகம் https://www.youtube.com/watch?v=CWkwlFyyx1Q&index=6&list=PLUS2TIzPcf6ExYHOg5H03JT6-nhRH36yY *
  https://www.youtube.com/watch?v=Tb6Fr50CBJI *
  https://www.fitbit.com/ca/charge#specs *
  https://www.youtube.com/watch?v=lkH88TTgt6A  – Remote Field work *
  http://wearableintelligence.com/index.html – Google Glass applied *
  https://www.youtube.com/watch?v=Rfc52nGC_AM  – Recon google glass sports app *
  http://www.reconinstruments.com/products/snow2/ – Recon alphine snow assistant *
  https://jawbone.com/- Fitness trackers *
  http://www2.withings.com/us/en/ – Fitness, sleep and weight trackers *
  https://www.youtube.com/watch?t=103&v=DERIj74bPVk  – MC10 wearable on skin devices *
  https://vimeo.com/106684794  – Sensoria socks based sensors for runners *
  https://getpebble.com/#/.fw3rur:Fuqt   – First smart watch *
  https://www.youtube.com/watch?v=1RL8PjiOoGI  – Misfit Shine *
  http://www.myfilip.com/ – child wearable for locating and communicating with pre-schoolers *
  http://www.zepp.com/  – Wearables for professional sports *
  http://getnarrative.com/ – wearable camera *
  https://www.youtube.com/watch?v=pto5pI6tLxs – Skin level wearables *
கருவி இணைய உணர்விகள் http://www.tsensorssummit.org/ **
  http://www.slideshare.net/Yole_Developpement/technologies-sensors-for-the-internet-of-things-businesses-market-trends-20142024 **
  http://www.iec.ch/whitepaper/pdf/iecWP-internetofthings-LR-en.pdf  – Great white paper ****
  http://eecs.oregonstate.edu/iot-showcase/sensors **
  https://software.intel.com/en-us/iot/hardware/sensors ***
  http://www.engineersgarage.com/articles/sensors# ***
  http://www.slideshare.net/Funk98/sensors-mems-internet-of-things http://bb-smartsensing.com/ ***
கருவி இணைய ப்ளாட்ஃபார்ம்கள் http://blog.benjamin-cabe.com/2014/12/17/top-10-iot-hardware-platforms-in-2014 ***
  http://cocoa.ethz.ch/downloads/2013/12/1682_20130918%20-%20MKWI_17.pdf ****
  http://arxiv.org/pdf/1502.01181.pdf ****
  http://www.buildinginternetofthings.com/internet-of-things-list-of-platforms/ ***
  http://postscapes.com/internet-of-things-platforms **
  http://www.zettajs.org/ ***
  http://www.thingworx.com/platform/ ***
  http://www.ptc.com/thingworx/iot-platform ***
  http://www.jasper.com/iot-service-platform/control-center ***
கல்வித் துறையில் கருவி இணையம் http://bryanalexander.org/2014/09/17/what-does-the-internet-of-things-mean-for-education/ **
  http://www.cisco.com/web/strategy/docs/education/education_internet.pdf **
  http://www.research.ibm.com/cognitive-computing/machine-learning-applications/decision-support-education.shtml#fbid=N0rTUDp7ian **
வீடுகளில் கருவி இணையம் http://postscapes.com/internet-of-things-award/connected-home-products/ *
  http://www.greenpeak.com/Application/SmartHome.html *
  http://www.connectedplusshow.com/assets/she14_wp.pdf *
  http://www.businessinsider.com/connected-home-forecasts-and-growth-2014-9 *
  http://www.symantec.com/connect/blogs/iot-smart-home-giving-away-keys-your-kingdom *
  https://www.techinasia.com/home-automation-indian-startup-inoho/ *
  http://www.computerworld.com/article/2490341/consumerization/the-internet-of-things-at-home–14-smart-products-compared.html *
  https://www.youtube.com/watch?v=Z0FbIq8kaMY *
  https://www.youtube.com/watch?v=QaTIt1C5R-M *
  https://www.youtube.com/watch?v=PS-ERQ07BIg  – Nest *
  http://www.cbc.ca/doczone/episodes//deluged-by-data – Digital detox **
  https://www.youtube.com/watch?v=PYpYyuGzncA  – Video  surveillance *
  https://www.youtube.com/watch?v=6p5Q8VPWEk0 – Smart meters *
  https://www.youtube.com/watch?v=rjB09r8Y3rQ  – Philips smart light bulb *
  https://www.youtube.com/watch?v=g1zTxiaXtu0 – Samsung smart light bulb *
  https://www.youtube.com/watch?v=RwaYbjC4x2s – LG Appliances *
  https://www.youtube.com/watch?v=5zRDgc0gGTo – GE on appliances *
  https://www.youtube.com/watch?v=6yUM9GAM360 – smart sprinkler *
  https://www.youtube.com/watch?v=AV9dmaTxKsY – smart lawn mower *
  https://www.youtube.com/watch?v=dhIP_1CvrSk – LG Home robot *
  https://www.youtube.com/watch?v=fpzHrFLevyw – WiFi Home robot *
கட்டுமானத்தில் கருவி இணையம் http://www.cisco.com/web/strategy/docs/gov/everything-for-cities.pdf *
  http://www.forbes.com/sites/bernardmarr/2015/05/19/how-big-data-and-the-internet-of-things-create-smarter-cities/ *
  https://www.infobright.com/index.php/exactly-smart-city/#.VcP41_lViko *
  http://embedded-computing.com/articles/developing-cities-a-smarter-world/ *
  http://www.seabourneinc.com/what-is-the-real-opportunity-for-smart-cities-and-the-internet-of-things/ *
  http://www.techradar.com/us/news/world-of-tech/future-tech/how-the-internet-of-things-makes-cities-smart-1239908 *
  http://blog.smartcitylabs.io/examples-of-internet-of-things/ *
  http://www.razvoj-karijere.com/media/files/IoT-Seminar16-9.pdf **
  https://www.youtube.com/watch?v=ryQF0iTXI28  -London smart parking *
விவசாயத்தில் கருவி இணையம் http://www.link-labs.com/iot-agriculture/ **
  http://www.computerweekly.com/news/2240239484/IoT-could-be-key-to-farming-says-Beecham-Research **
  https://www.apan.net/meetings/Daejeon2013/Session/Agri/apan36-ernet.pdf ***
  http://venturebeat.com/2014/12/07/surprise-agriculture-is-doing-more-with-iot-innovation-than-most-other-industries/ **
  http://jocpr.com/vol6-iss7-2014/JCPR-2014-6-7-2304-2310.pdf ***
  http://www.libelium.com/libeliumworld/agriculture/ **
  http://www.informationweek.com/big-data/software-platforms/ge-powers-internet-of-agriculture/d/d-id/1306646 **
  http://iotworm.com/agriculture-internet-of-things-iot-technology-applications/ **
  http://link.springer.com/chapter/10.1007%2F978-3-642-36124-1_36#page-1 ***
  http://www.techworld.com/news/big-data/farming-industry-must-embrace-internet-of-things-3596905/ **
  http://www.globalcis.org/jcit/ppl/JCIT2598PPL.pdf ***
  https://www.youtube.com/watch?v=oY0mxwySaSo – Connected Cow *
பாதுகாப்பு உலகில் கருவி இணையம் http://www.windriver.com/whitepapers/iot-for-defense/wind-river_%20IoT-in-Defense_white-paper.pdf ***
  http://dupress.com/articles/internet-of-things-iot-in-military-defense-industry/ **
  http://defensesystems.com/Articles/2013/10/01/Internet-of-Everything_0.aspx?Page=1 **
  http://www.defenseone.com/technology/2014/07/cia-fears-internet-things/89660/ **
  http://eecatalog.com/military/2014/05/09/the-military-internet-of-things/ **
  http://www.iotjournal.com/defense/videos *
  https://www.youtube.com/watch?v=9LiuXgcqkS0 *
கருவி இணைய பாதுகாப்பு சவால்கள் http://www.toptal.com/it/are-we-creating-an-insecure-internet-of-things **
  http://www.enterprisenetworkingplanet.com/netsecur/security-challenges-of-the-internet-of-things.html ***
  https://www.veracode.com/blog/2015/06/smart-devices-pose-many-challenges-iot-security-your-company-challenge-sw ***
  http://www.link-labs.com/iot-security-challenges/ **
  http://www.pubnub.com/blog/internet-of-things-security-risks-and-challenges/ **
  http://www.afilias.info/blogs/ram-mohan/internet-things-solving-security-challenges-fringe-core **
  http://blog.willis.com/2015/07/iot-with-great-potential-come-great-security-challenges/ **
  http://www.lnttechservices.com/media/30090/whitepaper_security-considerations-for-internet-of-things.pdf ***
  https://downloads.cloudsecurityalliance.org/whitepapers/Security_Guidance_for_Early_Adopters_of_the_Internet_of_Things.pdf ****
கருவி இணைய வாய்ப்புக்கள் http://readwrite.com/2014/06/27/internet-of-things-developers-jobs-opportunity *
  http://www.forbes.com/sites/sarahcaldicott/2014/11/30/ready-for-the-internet-of-things-5-skills-youll-need/ *
  https://agenda.weforum.org/2014/10/internet-of-things-will-affect-our-jobs/ *
  http://money.howstuffworks.com/10-jobs-internet-of-things.htm#page=0 *
  http://www.itcareerfinder.com/brain-food/blog/entry/hot-it-skills-in-the-internet-of-things.html *
  http://tech.co/it-skills-internet-things-2015-06 **
  http://www.computerworlduk.com/galleries/careers/make-most-of-iot-skills-shortage-top-jobs-for-future-slideshow-3600321/ **
  https://www.linkedin.com/pulse/20141201154112-3386291-ready-for-the-internet-of-things-5-skills-you-ll-need *
கருவி இணைய போக்குகள் https://medium.com/@dconrad/how-new-long-range-radios-will-change-the-internet-of-things-ed8e6b5e367f#.6jl8egq9k **

 

தொடர்ந்து இக்கட்டுரைத் தொடர் வெளிவர ஊக்கமளித்த ’சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு நன்றி. இங்குள்ள சுட்டிகள் இத்துறையில் புதிதாக ஆர்வமுள்ளவர்கள் மேல்வாரியாக அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், ஆழமாகப் புரிந்து கொள்ளவும் வழி செய்யும் என்று வெளியிட்டுள்ளேன். ஒவ்வொரு விஞ்ஞான/தொழில்நுட்பக் கட்டுரையின் பின்னணியிலும் இத்தகைய ஆராய்ச்சி இருந்தாலும், விரிவாக இங்கு வெளியிடுவதற்குக் காரணம், புதிய இத்துறையில், தமிழ் படிக்கத் தெரிந்த இளைஞர்(ஞி)கள் பிரகாசிக்க வழி வகுக்கலாம் என்ற நம்பிக்கையே.

 

http://solvanam.com/?p=46114

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.