Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அப்பா எங்களை எல்லாம் விட்டுப் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. இன்னும் இரண்டு நாளில் அப்பாவின் முப்பத்தோராம் நாட்கடன். எல்லாப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளால் வீடு நிரம்பியிருக்க அம்மா கூட சிறிது கவலையற்று இருந்தது போல் தோன்றியது.
 
ஆளாளுக்கு அப்பாவுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்து தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு இருந்தனர். அப்பா பெரிதாகக் கோவிலுக்குப் போவதே இல்லை. ஆரம்பகாலங்களில் பக்கத்து ஊரில் இருந்த கோவிலுக்குத் தனியாகச் செல்ல விருப்பமின்றி அம்மா என்னை அல்லது அப்பாவை அழைப்பார். ஆரம்பத்தில் இரண்டொருநாள் போனபின் எனக்குச் சலித்துவிட்டது. அதன்பின் மாட்டியவர் தான் அப்பா. அப்பாவும் சில நாட்கள் சென்றதன் பின் போவதற்குத் தயங்க அம்மா வேறு யாரும் கோவிலுக்குப் போபவர்களுடன் போகவேண்டியாதாகி விட, அம்மாவின் கோவிலுக்குச் செல்லும் ஆசையும் குறைந்துவிட்டது.
 
பொதுவாக அப்பாவுக்கு உந்தப் பூசை புனஸ்காரங்களில் நம்பிக்கையே இல்லை. அதற்காக அம்மாவும் அப்பாவும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்றில்லை. வீட்டில் வைத்திருக்கும் சுவாமிப் படத்தின் முன் தினமும் காலையும் மாலையும் விபூதி பூசிக் கும்பிடுவார்கள். அவர்களைப் பார்த்து நாமும் அப்படியே பழகிவிட்டோம்.
என்னைப் நண்பர்கள் பலதடவை கேட்டிருக்கிறார்கள். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா என. எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கோவிலுக்குப் போய் வணங்குவது தான் முடியவில்லை என்பேன். நான் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை. எனக்கு என்மேல் நம்பிக்கை இருக்கிறது என்றெல்லாம் எனக்குள்ளேயே சொல்லிக் கொள்வததோடு சரி. சரி அப்பாவின் விடயத்துக்கு வருகிறேன்.
அப்பா பிற்காலத்தில் தமிழ் பாடசாலைகளில் இருந்த ஈடுபாட்டைக் கூட எங்களில் காட்டவில்லை என்னும் குறை எம் எல்லோருக்குமே உண்டு. காலை எழுந்து தன் கடன்கள் முடித்து தன் மேசையில் அமர்ந்தால் நாள் முழுதும் ஏதாவது எழுதியபடி பள்ளி அலுவல் தான் பார்ப்பார். மாலையில் சிறிதுநேரம் தொலைக்காட்சியும் பார்ப்பதுண்டு.
 
அப்பாவுக்கு பேரப்பிள்ளைகள் என்றால் உயிர். ஆனால் அவர் இறப்பதற்கு ஓரிரு வாரங்கள் இருக்கும் போது அவர் கண்ணை மூடிப் படுத்திருப்பார். பெரிதாக யாருடனும் கதைப்பதும் இல்லை. அவருக்கு ஏலாமல் இருக்கிறதாக்கும் என்று நாமும் அவருடன் கதைக்காமல் பார்த்துகொண்டு இருப்போம். அவர் பேரப்பிள்ளைகளைக் கூடத் தேடாதது மனவருத்தமாக இருந்தாலும் அவரின் தவத்தைக் கலைக்க மனம் வரவில்லை.
 
ஐயர் இரண்டு நாட்கள் பூசை செய்யவேண்டும் என்று கூற எனக்குக் கடுப்பானது. எதற்கு இரண்டு நாட்கள் ??வெளிநாடு என்றதும் எம்மை நான்றாகத்தான் இவர்கள் ஏமாற்றுகிறார்கள். இலங்கையில் ஒருநாள்தானே செய்வது என்று நான் பொரிய, அங்கு கீரிமலைக்குப் போய் துடக்குக் கழித்தவுடன் வீட்டைக் கழுவி எல்லாரும் சமைக்கத் தொடங்க மற்றவர்கள் வந்தபிறகு படைத்து தானம் குடுக்கிறது என்று என் தம்பி எனக்கு விளக்கம் கூற, ஏன் இங்கும் ஐயர் வந்து துடக்குக் கழிக்க நாம் சமைக்கலாம் தானே என்றேன்.

ஐயருக்கு நாள் முழுதும் எமது வீட்டில் நிக்கச் சரிவராது. அதுதான் இரண்டுநாள் வருவது என்றான். ஒருநாள் வருவதற்குக் காசு வாங்குவதில்லையா என்றேன். முதல் நாள் ஒரு நூறு யூரோவும் அடுத்த நாளுக்கு நூற்றைம்பது யூரோவும் தான் என்றான் தம்பி. நல்ல பிழைப்புத்தான் இவங்களுக்கு என்று முனுமுனுத்தபடி நான் நகர்ந்தேன்.

 
முதல் நாள் அந்தியோட்டிக் கிரியைக்கு பெரிதாக பொருட்கள் இல்லை மரக்கறிகள், வீபூதி, சந்தனம் போன்றவையும் ஒரு இருபது பொருட்களுடன் ஐயர் பூசை செய்து தீபம் காட்டி ஒரு மணித்தியாலத்துள் எல்லாவற்றையும் முடித்துக்கொள்ள எனது தம்பிமார் இருவரும் வேட்டிகட்டி பவ்வியமாக ஐயருக்கு முன் அமர்ந்திருக்க அவர் துடக்கைக் கழித்துவிட்டார்.

அதன்பின் எல்லோருக்கும் விபூதி சந்தனம் குங்குமம் வழங்கப்பட அம்மா வீபூதி வைத்துச் சந்தானம் வைத்து குங்குமம் வைக்கக் கையைக் கொண்டு போகத் தம்பி உடனே பின்னுக்கு இழுத்து வைக்கக் கூடாது என்று அம்மாவை உறுக்குவதுபோல் சொன்னான். எனக்குக் கோவம் வர ஏன் வைக்கக் கூடாது என அவனை உறுக்க, பார்த்துக்கொண்டு நின்ற ஐயர் விடுங்கோ நிவேதா என்றவுடன் நானும் எதற்கு அவரின் முன்னால் என்று பேசாமல் சென்றுவிட்டேன்.

 
என்னுள்ளே கோபம் சுடர்விட்டு மேலெழுந்தது. ஐயர் போனபின் உடனேயே அம்மாவுக்குக் குங்குமத்தை வைத்துவிட்டு, அம்மா நீங்கள் விரும்பினால் பொட்டு வையுங்கள் என்றேன். அம்மாவுக்கு எது விருப்பமோ அதை செய்யட்டும். நீங்கள் யாரும் அம்மாவைக் கொமான்ட் செய்ய வேண்டாம் என மற்றவர்களுக்கும் கூறிவிட்டு அலுவலைப் பார்க்கத் தொடங்கினேன். மற்றச் சகோதரர்கள் என்னை  ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. இருந்தாலும் அவர்கள் ஆதரிக்காதது எனக்கு மனதுக்குச் சங்கடமாகத்தான் இருந்தது.
 
இத்தனைக்கும் என் தம்பி பத்து வயதில் எம்முடன் புலம்பெயர்ந்து வந்து ஐரோப்பியச் சூழலில் வளர்ந்தவன். அவனா இப்படி என என்னால் ஆச்சரியப்படாது இருக்க முடியவில்லை.
 
அடுத்த நாள் என்ன பொருட்கள் வேண்டும் ? எல்லாம் வாங்கிவிட்டாயா என்று கேட்டேன் தம்பியிடம். இந்தாங்கோ லிஸ்ட். எல்லாம் வாங்கிவிட்டேன். ஏதும் தவறிவிட்டதா என்று ஒருக்கா செக் செய்யுங்கள் என்று பொருட்கள் வைத்திருந்த அறைக்குக் கூட்டிப்போனான். லிஸ்டை விரித்துப் பார்த்த எனக்குத் தலை சுற்ற என்னடா ஐயர் ஒரு மாதத்துக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம்  எழுதிவிட்டிருக்கிறாரா என்று கேட்க எதுவும் கூறாமலே தம்பி சென்றுவிட்டான். பாகற்காய் பயிற்றங்காய் தொடக்கம் அத்தனை மரக்கறிகள், தேங்காய்கள், மஞ்சள், எள்ளு இப்படி நீண்டுகொண்டே போனது பொருட்களின் எண்ணிக்கை. போதாததற்கு பாய், தலையணை, குடை, செருப்பு என இதெல்லாமா கொடுப்பார்கள் என்று நான் பொருட்களைச் சரிபார்த்து முடித்தேன்.
 
அடுத்தநாள் காலை ஏழுமணிக்கு நாம் எல்லாம் தயாராய் இருக்க ஐயர் முன்னே வர அவரின் பின்னால் ஒரு வயோதிக ஐயரும் அவரின் பின் இன்னும் ஒருவரும் வந்தார்கள். உவர் யார் என்று மூன்றாவதாக வந்தவரைக் காட்டிக் கேட்க, எம்மைக் காரில் கூட்டி வந்தவர் என்று ஐயர் சொல்லிவிட்டு தன் அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினார்.
 
முதலே ஐயர் எழுதியிருந்த அகலமான பிளாஸ்டிக் பாத்திரத்தைக் கொண்டுவர ஐயர் அதற்குள் அரிசிமா, சர்க்கரை, நெய், தேன், வாழைப்பழம்,பால், கருப்பு எள் என்பவற்றைப் போட்டுக் கலந்து குழைத்து அதை உருண்டைகளாகப் பிடிக்கிறார். கட்டாயம் இவ்வளவும் போடவேண்டுமோ ஐயா என ஒன்றும் தெரியாததுபோல் கேட்க்கிறேன். ஓம் இது பிதிர்களுக்குப் பிடித்தமானது என்று அவர் கூற அக்கா பேசாமல் இரேன் என்பதாய் என் மூத்த தம்பி என்னை  ஒரு பரிதாபப் பார்வை பார்க்கிறான். சரி எனக்கு என்ன என்பதுபோல் நான் அதன் பின் ஒன்றும் கதைக்கவில்லை.
 
நீங்கள் அப்பாவுக்காக மூன்று தானங்கள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஆத்மா சாந்திபெறும். முப்பது முக்கோடி தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் மாட்டித்தான் தேவர்களாக நினைப்பார்கள். இங்கு மாடு இல்லையே. எந்தத் தடையுமின்றி அப்பாவின் ஆத்மா சாந்தியடையவேண்டும் என்றபடி ஏகாதிஸ்டம், சமிண்டி, மாசியம் என்று ஏதேதோ எமக்கு விளங்காதது எல்லாம் ஐயர் சொல்லிக்கொண்டு இருந்தார்.
பின்னர் அவர் கூட்டிக்கொண்டு வந்த வயோதிகக் குருக்களையும் ஒரு துண்டை விரித்து இருத்தி இவர்தான் உங்கள் அப்பா என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அப்பாவுக்குச் செய்ய வேண்டியது எல்லாவற்றையும் அவருக்குச் செய்யுங்கள் என்றபடி மந்திரங்களைச் சொல்லி ஆரம்பித்தார்.

உங்கள் அப்பா நிட்சயமாய் சுவர்க்கத்துக்குத்தான் போவார். அவரை வடிவா வழியனுப்பி வையுங்கோ என்றுவிட்டு மரக்கறிகள் , அரிசி தானியங்கள் என்பவற்றைக் கொடுக்கச் சொல்லி, அப்பா சொர்க்கத்துக்குப் போகும் போது பசிக்கும் நேரம் சமைத்துச் சாப்பிட இது என்று அவற்றை அந்த வயோதிபரிடம் கொடுக்கச் சொல்ல தம்பி எடுத்து பவ்வியமாய்க் கொடுத்தான். சமைக்கப் பாத்திரம் வேணுமெல்லோ என்று என் மனதில் எழுந்த கேள்வியை என்னுள்ளேயே அமுக்கிவிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தன்.

அப்பா போட்டுக்கொண்டு போக வேட்டி சேட். அப்பாவுக்குக் குளிர்ந்தால் போர்க்க ஒரு  துணி. பாயும் தலையணையும் இரவில படுக்க. அடடா பெட்சீற்றை மறந்துவிட்டமே வாங்க என்றேன் நான். பரவாயில்லை என்றுவிட்டு ஐயர் தொடர்ந்தார். குடை ஒன்று வெயில் மழைக்குப் பிடிக்க. செருப்பு ஒருசோடி அப்பா சொர்க்கத்துக்குப் போற வழியில முள்ளுக் குத்தாமல் இருக்க என்றவுடன் என் வாய் என்னையறியாமல் சொர்க்கம் எண்டுறியள். பிறகு எப்பிடி கல்லு முள்ளு எல்லாம் அங்கே இருக்கும் என்று கேட்டுவிட்டது. அது அப்பிடித்தான் அம்மா நிவேதா என்றார் ஐயர். அம்மா திரும்பி பேசாமல் இரு என்றவுடன் வேறுவழியின்றி நான் பார்வையாளராக ஆனேன். 

Link to comment
Share on other sites

ம்ம்ம்... விளங்குது!  உங்கள் புண்ணியத்தால் ஐயர்மாரின் குடும்பம் ஒரு மாதம் சீவித்திருப்பினம். :) 

எழுதிய விதம் அருமை! ஏன் இப்ப கதைகள் எழுதுவதில்லை?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த பிதேசத்தில் அரசுக்கு வரிகட்டாத பிழைப்பு ஐயர் பிழைப்பு.......இவ்வளவும் கொடுத்து ஐயரின்ட காலில் விழந்து கும்பிட வேணும் என்றும் சில சனம் அடம்பிடிக்கும்.....

ஏன் இப்ப கதைகள் எழுதுவதில்லை?? 

கதை வாசிப்பதற்கு  யாழில் ஆட் கள் குறைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் சிக்கலான விடயம்தான்...!

ஆத்திக சம்பிதாயங்களை நீங்கள் விரும்பவில்லை...,  சரி நாத்திகமாய் இருக்கவும் உங்களால் முடியவில்லை...!!

Link to comment
Share on other sites

 

கதை வாசிப்பதற்கு  யாழில் ஆட் கள் குறைவு 

புத்தனுக்கு ஏன் இந்தக் கொலை வெறி???:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்து கருத்தைப் பகிர்ந்த உறவுகள் மீனா, புத்தன், சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி.

இந்தக் கதையை வாசித்துப் பலர் எதிர்மறைக் கருத்துக் கூறுவார்கள் என எண்ணினேன். இதுதான் இன்றைய யாழ் இணையத்தில் உள்ளோர்  நிலை.

புத்தன் கூறுவதில் உண்மை இருந்தாலும் நான் மனம் இல்லாமல் எழுதுவதில்லை. இனிமேல் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் என நினைக்கிறேன் மீனா .

இது கொஞ்சம் சிக்கலான விடயம்தான்...!

ஆத்திக சம்பிதாயங்களை நீங்கள் விரும்பவில்லை...,  சரி நாத்திகமாய் இருக்கவும் உங்களால் முடியவில்லை...!!

நாத்திகராய் இருக்கவேண்டியதில்லை அண்ணா. சில மூடத்தனமான எமாற்று வேலைகளையும் செய்கைகளையும் தான் மனம் ஏற்றுக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலையும் உந்த ஐயர்மார்ரை போக்கு ஓவராய்த்தான் போய்க்கொண்டிருக்கு.......கொஞ்சம் பொறுங்கோ......அவையள் அடக்கி வாசிக்கவேண்டிய காலம் கிட்டடியிலை வரும். :innocent:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு,.. சுமே!

நீண்ட காலங்களின் முன்னர் சிட்னியில் ஒரு சம்பவம் நடந்தது!

ஊரில் ஐயர் மாருக்குப் பசுவைத் தானமாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு!

இங்கும் ஒருவர் தனது தந்தையாரின் திவசத்தைப் பெரிதாகச் செய்தார்! அவர் ஐயருக்குப் பசுவையும் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார்!

எங்கட சனங்களுக்கு.. எதிலும் குறை வரக்கூடாது பாருங்கோ!

அதை விட அவுசில் பசுக் கன்றை மிகவும் மலிவாக வாங்கலாம்!

அவர் பசுவை ஐயருக்குக் கொடுக்க... ஐயர் .. வேண்டாம் தம்பி.. இதை இஞ்சை வச்சுப் பராமரிக்கிறது எனக்குக் கஷ்டம்.. கவுன்சில் அது.. இது எண்டு இழுபட வேண்டி வரும்.. பக்கத்து வீட்டுக்காரனோட பிரச்சனை வரும்.. என்று இழுக்க...பெரியவர்கள் ..தம்பி நீ பசுவைக் கட்டாயம் குடுக்க வேணுமெண்டில்லை.. ஒரு பேப்பரில.. பசுவின்ர படமொண்டைக் கீறிக் கொடுத்தால்.. அது ஒரு பசுவைத் தானம் செய்ததற்குச் சமனாகும் என்று கூற...

வீட்டுக்காரருக்கு வந்ததே கோபம்..!

அப்படியென்றால் நானும் பேப்பரில ஒரு இருநூறு டொலர் எண்டு எழுதித் தட்டில வைச்சு ஐயருக்குக் கொடுக்கட்டா எண்டு கேட்க.....

ஐயரும் பறுவாயில்லைத் தம்பி.. நீ துண்டில எழுதித் தந்தாலும் பரவாயில்லை.. இப்ப அந்த மாட்டுக்கன்றை  அங்கால கொண்டு போனால் போதுமப்பு...!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டியள். ஐயருக்குப் பதிலா நீங்கள் வாங்கிக் கொண்டுபோய் வளர்த்திருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமாரசாமி, புங்கை.

வெளிநாடுகளிலையும் உந்த ஐயர்மார்ரை போக்கு ஓவராய்த்தான் போய்க்கொண்டிருக்கு.......கொஞ்சம் பொறுங்கோ......அவையள் அடக்கி வாசிக்கவேண்டிய காலம் கிட்டடியிலை வரும். :innocent:

 

 

 

எழிய தமிழன் உலகத்தில இருக்கும் வரைக்கும் உது மாறப்போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து எழிய தமிழன் என்று பொத்தாம் பொதுவாய் எழுதுவது அழகல்ல. மல்லாந்து கிடந்து கொண்டு அண்ணாந்து உமிழ்வது போல் இருக்கு. அதுவும் நீங்கள் எழுத்தாளர் வட்டத்துக்குள் நிக்கும் ஒருவர். பேச்சிலும் எழுத்திலும் அவதூறு இல்லாமல் நாகரீகம் காக்க வேண்டும்.

 பி. கு:  உங்கள் தாயார் குங்குமம் எடுக்க ,தம்பி தடுத்ததும் தப்பில்லை.

பொதுவாக திவசத்துக்கு இரண்டு ஐயர்தான் வந்து செய்வினம். அதுதான் நடைமுறை. ( தட்சனையை ஐயர் உங்களிடமிருந்து வில்லங்கமாய்க் கேட்டுப் புடுங்கினார் என்டால் அவர் பிராமணரே இல்லை).

 

 

Link to comment
Share on other sites

தயவு செய்து எழிய தமிழன் என்று பொத்தாம் பொதுவாய் எழுதுவது அழகல்ல. மல்லாந்து கிடந்து கொண்டு அண்ணாந்து உமிழ்வது போல் இருக்கு. அதுவும் நீங்கள் எழுத்தாளர் வட்டத்துக்குள் நிக்கும் ஒருவர். பேச்சிலும் எழுத்திலும் அவதூறு இல்லாமல் நாகரீகம் காக்க வேண்டும்.

 பி. கு:  உங்கள் தாயார் குங்குமம் எடுக்க ,தம்பி தடுத்ததும் தப்பில்லை.

பொதுவாக திவசத்துக்கு இரண்டு ஐயர்தான் வந்து செய்வினம். அதுதான் நடைமுறை. ( தட்சனையை ஐயர் உங்களிடமிருந்து வில்லங்கமாய்க் கேட்டுப் புடுங்கினார் என்டால் அவர் பிராமணரே இல்லை).

 

 

வர வர சுமேக்கு எழுத்தில் நாகரீகம் தெரியாமல் வருகுது என்பது உண்மை :shocked: வந்து நொண்டிச் சாட்டுச் சொல்லாமல் திருந்துங்கள் சகோதரி:grin:

கணவர் இறந்த பின் கறுப்புப் பொட்டுப் போடுபவர்களைத் தான் கண்டிருக்கிறேன். 

பொதுவாகப் பிராமணர் புடுங்கச் சந்தர்ப்பம் கிடைத்தால் புடுங்குவது தானே :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டியள். ஐயருக்குப் பதிலா நீங்கள் வாங்கிக் கொண்டுபோய் வளர்த்திருக்கலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமாரசாமி, புங்கை.

எழிய தமிழன் உலகத்தில இருக்கும் வரைக்கும் உது மாறப்போவதில்லை

எழிய தமிழனெண்டு ஆரை சொல்ல வாறியள்? கூட நிண்டு தானம் குடுத்திட்டு வெளியிலை வந்து எரிஞ்சு காறித்துப்புறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ...:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழிய தமிழனெண்டு ஆரை சொல்ல வாறியள்? கூட நிண்டு தானம் குடுத்திட்டு வெளியிலை வந்து எரிஞ்சு காறித்துப்புறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ...:mellow:

பிள்ளை 'எளிய'  (சாதரணமான..ஆடம்பரமில்லாத) தமிழன் எண்டு எழுதப்போக... மவ்வழவு (ழி) குறுக்கால வந்து கருத்தை மாத்திப்போட்டுது போல கிடக்குது!

அனேகமாய்க் கூகிள் தான் மாத்தி எழுதியிருக்கும்!:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இது  போன்ற சந்தர்ப்பங்களில் 

கடமைக்கும்

பகுத்தறிவுக்கும் போட்டி வருவதுண்டு

அண்மையில் கூட அத்தாரின் துவசத்தில்

மருமகள் எல்லாவற்றையும் கொடுக்க

ஐயர் திருப்தியா என்று கேளுங்கோ என்று சொல்ல

அது பற்றி ஒன்றுமே தெரியாத எனது மருமக்கள் திருப்தியா ஐயா எனக்கேட்க

அவரும் திருப்தி என்று ஏதோ புரியாத மொழியில் ஏதோ எல்லாம் சொல்லிவிட்டு வாங்க

எனக்கு எதைப்பார்த்து திருப்தி என்றார்

பொருளையா பணத்தையா?

என வழமைப்படி சந்தேகம் எழ....

இப்படியே போகுது...

ஆனாலும் எனது இறப்புக்கு பின்னாலும்

எனது பிள்ளைகளும் என்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக

இதைத்தொடரத்தான் போகிறார்கள் என்பது மட்டும் என்னையும் எனது மருமக்களையும் பார்த்ததில் புரிந்தது...

 

நல்லதொரு விடயத்தைத்தொட்ட சுமேக்கு நன்றிகள்

மீண்டும் மீண்டும் தம்பி அக்கா சிக்கலையும் அம்மாவையும் இழுக்காமல் இருத்தல் நன்று.

பிள்ளை 'எளிய'  (சாதரணமான..ஆடம்பரமில்லாத) தமிழன் எண்டு எழுதப்போக... மவ்வழவு (ழி) குறுக்கால வந்து கருத்தை மாத்திப்போட்டுது போல கிடக்குது!

அனேகமாய்க் கூகிள் தான் மாத்தி எழுதியிருக்கும்!:grin:

உங்கள் பாதுகாப்பு வேலி பொருந்தவில்லையே..

எப்பொழுதும் எளிய (வறுமை) மக்கள் இது போன்று செய்வதில்லையே:shocked:

(ஏதோ நம்மால முடிந்தது):grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழிய தமிழனெண்டு ஆரை சொல்ல வாறியள்? கூட நிண்டு தானம் குடுத்திட்டு வெளியிலை வந்து எரிஞ்சு காறித்துப்புறது அவ்வளவு நல்லாயில்லை கண்டியளோ...:mellow:

என்னையும் சேர்த்துத் தான் சொன்னது.

தயவு செய்து எழிய தமிழன் என்று பொத்தாம் பொதுவாய் எழுதுவது அழகல்ல. மல்லாந்து கிடந்து கொண்டு அண்ணாந்து உமிழ்வது போல் இருக்கு. அதுவும் நீங்கள் எழுத்தாளர் வட்டத்துக்குள் நிக்கும் ஒருவர். பேச்சிலும் எழுத்திலும் அவதூறு இல்லாமல் நாகரீகம் காக்க வேண்டும்.

 பி. கு:  உங்கள் தாயார் குங்குமம் எடுக்க ,தம்பி தடுத்ததும் தப்பில்லை.

பொதுவாக திவசத்துக்கு இரண்டு ஐயர்தான் வந்து செய்வினம். அதுதான் நடைமுறை. ( தட்சனையை ஐயர் உங்களிடமிருந்து வில்லங்கமாய்க் கேட்டுப் புடுங்கினார் என்டால் அவர் பிராமணரே இல்லை).

 

 

சரி மன்னிச்சுக் கொள்ளுங்கோ அண்ணா.ஆனால் அன்றே எல்லாருக்கும் முன்னால வைத்து நான் சொல்லிவிட்டேன் நான் இறந்ததும் என் உடல் உறுப்புக்களை தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்குமாறும் எனக்கு எக்காரணம் கொண்டும் ஐயரைக் கூப்பிட்டு ஒன்றும் செய்யக் கூடாது என்றும்

நன்றி விசுகுஅண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை 'எளிய'  (சாதரணமான..ஆடம்பரமில்லாத) தமிழன் எண்டு எழுதப்போக... மவ்வழவு (ழி) குறுக்கால வந்து கருத்தை மாத்திப்போட்டுது போல கிடக்குது!

அனேகமாய்க் கூகிள் தான் மாத்தி எழுதியிருக்கும்!:grin:

அதுதான் எல்லாம் கூகிளால வந்த வினை  :oO:

Link to comment
Share on other sites

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு,.. சுமே!

நீண்ட காலங்களின் முன்னர் சிட்னியில் ஒரு சம்பவம் நடந்தது!

ஊரில் ஐயர் மாருக்குப் பசுவைத் தானமாகக் கொடுக்கும் வழக்கம் உண்டு!

இங்கும் ஒருவர் தனது தந்தையாரின் திவசத்தைப் பெரிதாகச் செய்தார்! அவர் ஐயருக்குப் பசுவையும் தானமாகக் கொடுக்க முடிவு செய்தார்!

எங்கட சனங்களுக்கு.. எதிலும் குறை வரக்கூடாது பாருங்கோ!

அதை விட அவுசில் பசுக் கன்றை மிகவும் மலிவாக வாங்கலாம்!

அவர் பசுவை ஐயருக்குக் கொடுக்க... ஐயர் .. வேண்டாம் தம்பி.. இதை இஞ்சை வச்சுப் பராமரிக்கிறது எனக்குக் கஷ்டம்.. கவுன்சில் அது.. இது எண்டு இழுபட வேண்டி வரும்.. பக்கத்து வீட்டுக்காரனோட பிரச்சனை வரும்.. என்று இழுக்க...பெரியவர்கள் ..தம்பி நீ பசுவைக் கட்டாயம் குடுக்க வேணுமெண்டில்லை.. ஒரு பேப்பரில.. பசுவின்ர படமொண்டைக் கீறிக் கொடுத்தால்.. அது ஒரு பசுவைத் தானம் செய்ததற்குச் சமனாகும் என்று கூற...

வீட்டுக்காரருக்கு வந்ததே கோபம்..!

அப்படியென்றால் நானும் பேப்பரில ஒரு இருநூறு டொலர் எண்டு எழுதித் தட்டில வைச்சு ஐயருக்குக் கொடுக்கட்டா எண்டு கேட்க.....

ஐயரும் பறுவாயில்லைத் தம்பி.. நீ துண்டில எழுதித் தந்தாலும் பரவாயில்லை.. இப்ப அந்த மாட்டுக்கன்றை  அங்கால கொண்டு போனால் போதுமப்பு...!:grin:

நேரம் கிடைக்கும் போது

இவை பற்றி கொஞ்சம் விளக்கம் தரலாமே அண்ணா

எம் போன்றோர்களுக்கும்

எதிர்கால சந்ததிக்கும் பயன் தரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.