Jump to content

மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?


Recommended Posts

மனிதர்கள் முத்தமிடுவது ஏன்?

 

எல்லோருமே தங்கள் முதல் முத்தத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த முத்தம் சங்கடமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி, மிக மகிழ்ச்சிகரமான சூழலில் நிகழ்ந்திருந்தாலும் சரி.

150716101446_kissing_640x360_bbc_nocrediமனிதர்களைப் பொறுத்தவரை புதிய உறவுகளில் முத்தம் முக்கியப் பங்கை வகிக்கிறது.

மேலைச் சமூகங்களில் வசிக்கும் மக்களைப் பொறுத்தவரை, உதட்டோடு உதட்டைச் சேர்த்து காதலுடன் முத்தமிடுதல் என்பது உலகளாவிய ஒரு பழக்கம் என்று கருதுகின்றனர். ஆனால், உலகில் பாதிக்கும் குறைவான சமூகங்களே அம்மாதிரி முத்தமிடுகின்றன. மிருகங்களைப் பொறுத்தவரை முத்தமிடுதல் என்பது மிக மிக அரிது.

அப்படியானால், இந்தப் பழக்கத்திற்கு என்ன பின்னணி? முத்தமிடுதல் என்பது பயனுள்ளதாக இருக்குமென்றால் எல்லா மிருகங்களும் மனிதர்களும் முத்தமிடுபவர்களாக இருந்திருப்பார்கள்.

எல்லா மிருகங்களும் முத்தமிடாதது ஏன் என்பதை ஆராய்ந்தால், ஏன் சிலர் மட்டும் முத்தமிடுகிறார்கள் என்பது விளங்கும்.

150716101552_couple_kissing_640x360_bbc_தன் துணையிடமிருந்து வரும் வாசனையை அறியவும் முத்தம் வழியேற்படுத்துக் கொடுக்கிறது.

முத்தமிடுதல் தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 168 பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

வெறும் 46 பண்பாட்டுக் குழுக்களைச் சேர்ந்தவர்களே காதலைத் தெரிவிக்கும் வகையில் உதட்டோடு உதட்டைச் சேர்ந்து முத்தம் கொடுக்கிறார்கள்.

மனிதர்கள் அனைவருமே முத்தமிடுகிறார்கள் என்ற எண்ணத்தை இந்த ஆய்வு மாற்றியமைத்திருக்கிறது.

முந்தைய ஆய்வுகளில் 90 சதவீதம் பேர் முத்தமிடுவதாகத் தெரியவந்தது. ஆனால், இந்தப் புதிய ஆய்வில், பெற்றோர் குழந்தைகளை முத்தமிடுவது போன்றவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. காதல் சார்ந்து, இரண்டு நபர்கள் உதட்டில் அளித்துக்கொள்ளும் முத்தம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.

பெரும்பாலான வேட்டைச் சமூகங்களில் இம்மாதிரி முத்தம் என்பதே கிடையாது. அம்மாதிரி விருப்பமும்கூட அவர்களுக்குக் கிடையாது. பிரேசிலில் இருக்கும் மஹினகு என்ற இனத்தினர் முத்தமிடுதலை மிக மோசமான செயலாகக் கருதுகிறார்கள்.

150311092607_kiss_624x351_afp.jpgவேட்டையாடி உணவைச் சேகரிக்கும் சமூகங்களில் முத்தமிடுதல் என்பது கிடையாது.

நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு நெருக்கமாக இப்போதும் வாழ்வது இப்படியான வேட்டைச் சமூகங்கள்தான். ஆகவே, நம் மூதாதையர்களும் முத்தமிட்டிருக்காமல் இருந்திருக்கக்கூடும்.

முத்தமிடுவது எல்லா மனிதர்களிடமுமே இருக்கும் வழக்கம் என்ற நம்பிக்கையை இந்த ஆய்வு புரட்டிப்போட்டிருக்கிறது என்கிறார் லாஸ் வேகாஸில் இருக்கும் நேவடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஜான்கோவியாக் தெரிவித்திருக்கிறார்.

நாம் இப்போது முத்தமிடுவதைப் போல முத்தமிடுவது என்பது ரொம்பவுமே சமீபத்திய பழக்கம்போலத் தெரிகிறது என்கிறார் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரஃபேல் வ்லோடார்ஸ்கி. முத்தம் கொடுப்பது எப்படி மாறி வந்திருக்கிறது என்பதை ஆராய்வதற்காக அவர் பல ஆவணங்களை ஆராய்ந்தார்.

3,500 வருடங்களுக்கு முந்தைய, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களில் முத்தம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஒருவரின் ஆன்மாவை உறிஞ்சுவது என முத்தம் இதில் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், எகிப்திய சித்திர எழுத்துகளில் ஆட்கள் மிக நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் இருக்கிறதே தவிர, உதட்டோடு முத்தமிடும் காட்சிகள் இல்லை.

மிருகங்கள் முத்தமிடுகின்றனவா?

மிருகங்களைப் பொருத்தவரை, பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு நெருக்கமாக இருக்கும் சிம்பன்ஸி, பொனபோ போன்ற குரங்குகள் முத்தமிடுகின்றன.

150716163159_kiss_animals_512x288_bbc_noசிம்பன்சிகள் முத்தம் கொடுத்துக்கொண்டாலும் அவை சமாதான நடவடிக்கையாகவே அதனைச் செய்கின்றன.

ஆனால், சிம்பன்ஸிகளைப் பொறுத்தவரை முத்தமிடுவது என்பது, ஒரு சமாதான நடவடிக்கை. பெண்களைவிட ஆண் சிம்பன்ஸிகளிடம்தான் இது அதிகம் இருக்கிறது. ஆக, இந்த முத்தம் என்பது காதல், பாலுறவு சார்ந்த முத்தமில்லை.

பொனபோ மனிதக் குரங்குகள் இன்னும் அதிகமாக முத்தமிடுகின்றன. தவிர, அவை நாக்குகளையும் அதற்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றன. காரணம் அந்தக் குரங்குகள், பாலுறவில் அதிக நாட்டமுடையவை.

இரண்டு மனிதர்கள் சந்தித்துக்கொண்டால் கைகொடுத்துக் கொள்வதைப் போல இரண்டு பொனபோக்கள் சந்தித்தால், உடனே பாலுறவு வைத்துக்கொள்ளும். ஆகவே, பாலுறவுக்கு முந்தைய நடவடிக்கையாக முத்தம் இருப்பதாகச் சொல்ல முடியாது.

சிம்பன்ஸி, பொனபோ ஆகிய இந்த இரண்டு மிருகங்களைத் தவிர, வேறு எந்த மிருகமும் முத்தமிடுவதில்லை. இவையும்கூட, முகத்தை அருகில் கொண்டு வருகின்றன, உதட்டால் தொட்டுக்கொள்கின்றன என்பதைத் தவிர, வேறு ஏதும் செய்வதில்லை.

மனிதர்களைப் பொறுத்தவரை வாசனையின் மூலம் துணையைப் பற்றி அறிவதில்லை. இருந்தபோதும், உடலிலிருந்து வரும் வாசனை இதில் முக்கியப் பங்கு வகிக்கவேசெய்கிறது.

2013ல் முத்தமிடுதல் குறித்து வ்லோடர்ஸ்கி விரிவாக ஆராய்ந்தார். ஒருவரை முத்தமிடும்போது, எது முக்கியம் எனப் பலரிடம் அவர் கேட்டார். அவர்களிடமிருந்துவரும் வாசனைதான் மிக முக்கியமான விஷயமாக இருந்தது.

150714143619_kissing_couple_624x351_gettதற்போது மனிதர்கள் முத்தமிடும் முறை மிக சமீபத்தில் உருவான முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கரடிகள் துணையை ஈர்க்க பெரோமோன் என்ற வாசனையை வெளியிடுவதைப் போல, ஆண்களின் வியர்வையிலும் அம்மாதிரியான வாசனை இருக்கிறது. பெண்கள் இந்த வாசனையை நுகரும்போது, அவர்களுடைய பாலியல் விருப்பம் அதிகரிக்கிறது.

ஆக மற்றொருவரின், வாசனையை உணர முத்தம் என்பது பண்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளும் வழிமுறையாக இருக்கிறது.

ஆக, சரியான துணையை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், முத்தமிடுதலை விட்டுவிட்டு, வாசனையை நுகர்ந்து பார்த்து சேரலாம். சரியான துணையும்கூட கிடைக்கலாம். ஆனால், சுற்றியிருப்பவர்கள்தான் சற்று வித்தியாசமாகப் பார்ப்பார்கள்.

http://www.bbc.com/tamil/science/2015/07/150717_kiss

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் உன்னதமான விடயங்களைத் தேடிப்பிடிக்கும் நீலப்பறவைக்குப் பின்வரும் பாடல் பரிசாக வழங்கப்படுகின்றது!:grin:

https://youtu.be/1rC0ny8Q7bA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் உன்னதமான விடயங்களைத் தேடிப்பிடிக்கும் நீலப்பறவைக்குப் பின்வரும் பாடல் பரிசாக வழங்கப்படுகின்றது!:grin:

https://youtu.be/1rC0ny8Q7bA

முதலில் ஒன்றும் புரியல அண்ணா

உங்க பாட்டை கேட்டபின்பு தான் ஞானம் பெற்றேன்..:)

Link to comment
Share on other sites

முத்தத்தின் சுவை தெரியாதவர்கள் சொர்க்கத்தின் வழி புரியாதவர்கள்

இப்படிக்கு,
சுவாமி நிழலியானந்தா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தத்தின் சுவை தெரியாதவர்கள் சொர்க்கத்தின் வழி புரியாதவர்கள்

இப்படிக்கு,
சுவாமி நிழலியானந்தா 

நிழலியானந்தா  சொல்வது சரிதான்:love:

ஆனால் அதை அவர் நித்தியானந்தாவுக்கு சொல்வது தான் கொடுமை...:grin:

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 23/07/2015 at 10:16 PM, நிழலி said:

முத்தத்தின் சுவை தெரியாதவர்கள் சொர்க்கத்தின் வழி புரியாதவர்கள்

இப்படிக்கு,
சுவாமி நிழலியானந்தா 

அடச்ச இது தெரியாமல் இத்தனை காலம் சும்மா ஓடிட்டுதே 

என்ன வாழ்க்கையடா முனிவர் 

நிழலி சாமி அடியேனுக்கு ஆலோசனைகள் நீங்கள் தான் வழங்க வேண்டும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்துக்கே முத்தம் மொத்தமாய் சப்ளை செய்பவர்களிடம் என்ன கேள்வி இது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

சொர்க்கத்துக்கே முத்தம் மொத்தமாய் சப்ளை செய்பவர்களிடம் என்ன கேள்வி இது....!

யாருப்பா அது:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருமிகளுக்கு வாழ்வு கொடுக்கத்தான். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nedukkalapoovan said:

கிருமிகளுக்கு வாழ்வு கொடுக்கத்தான். tw_blush:

ருசி அறியாமல் அறிக்கையை விட்டால் எப்படி நம்புவது ☺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முனிவர் ஜீ said:

ருசி அறியாமல் அறிக்கையை விட்டால் எப்படி நம்புவது ☺

கிருமிக்கும்.. அதுங்க தொத்தவும்  ஒரு வழி வேணுமில்ல. இதை எல்லாம் பரிசோதனை செய்து அறிய வேண்டியதில்லை.. செய்தவை.. செய்யுறவை.. படுற பாட்டிலை தெரியுது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

கிருமிக்கும்.. அதுங்க தொத்தவும்  ஒரு வழி வேணுமில்ல. இதை எல்லாம் பரிசோதனை செய்து அறிய வேண்டியதில்லை.. செய்தவை.. செய்யுறவை.. படுற பாட்டிலை தெரியுது. tw_blush:

நடுரோட்டில் உறுஞ்சுவதை பார்க்க பொறாமை உங்களுக்கு ?

ஆனால் விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது கிரூமி நோய் உள் செல்ல படலாம் உள் வாங்க படலாம் 

ஆனால் உணர்ச்சி ரீதியாக பார்க்க போனால் எங்கே பார்க்கிறது  

தூண்டலில் ஆரம்பித்து தீண்டலில் அக்கால சொன்ன விரட்டி விரட்டி வெட்டுவார்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.