Jump to content

Tim Horton ம் எனது கனடாவும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இரண்டு மணிநேரம் தூங்கியிருப்போம். அறையின் வெளியே ஒரே சத்தம். எங்களுடன் வந்தவர்கள் நியூயோக் நகர் பார்க்கும் ஆவலில் தடல் புடலாக ஆயத்தமாவது எமது அறையின் வெளியே அவர்கள் பேச்சிலிருந்தே கேட்கிறது. அரைத்தூக்கத்தில் எழுந்து வெளியே வந்தேன், எங்களைத் தவிர மற்றைய எல்லோரும் ஆயத்தம். காலையில் என்னுடன் அலைந்து திரிந்த மாமாவும் சாப்பட்டு மேசையில் கோப்பிய உறிஞ்சியபடி இருக்க, அவசரப்பட்டு குளியளறைக்குள் புகுந்து சில நிமிடங்களில் வெளியே வந்து, அவசரத்தில் கோப்பியை சூட்டோடு கீழிறக்கி, கொண்டுவந்த சாப்பட்டில் கொஞ்சத்தைக் கடித்து, பாண்டுக்குள்ளும், டீ சேர்ட்டுக்குள்ளும் புகுந்துகொள்ளும்போது காலை 9 மணி. 

சிட்னியைப் போல நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு காலை நீட்டிக்கொண்டுக் காரில் போகும் வசதியில்லை என்கிறபடியால், கனடாவில் நடந்தது போலவே, அதே சப்வே, பஸ்கள்...நினைக்கும்போதே தலை வலித்தது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது, இவ்வளவு காசு கொடுத்து, இவ்வளவு கரைச்சல்ப் பட்டு, அமெரிக்காவுக்கு வந்தாயிற்று, இடம் பார்த்துத்தான் ஆகவேண்டும், என்ன கஷ்ட்டப் பட்டாவது என்று முடிவாகிவிட, தோளில் பையும், ஸ்ட்ரோலரில் சிறியவளையும் ஏற்றிக்கொண்டு எனக்கு முன்னல் நடந்துகொண்டிருந்த சொந்தங்களுக்குப் பின்னால் நானும் நடக்கத் தொடங்கினேன். மனைவி வழக்கம் போல கமெராப் பைய்யைத் தூக்கிக் கொண்டு முன்னால் நடந்துகொண்டு சென்றாள். 

நாம் தங்கியிருந்த இடத்தின் வீதிகளுக்கும், நான் கொச்சிக்கடையில் பல வருடங்களுக்கு முன்னர் பார்த்த வீதிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. நியுயோக்கின் நிலக்கீழ் சாக்கடை துர்நாற்றம் டிரெயினேஜ் வழியாக வெளியே வந்து காற்றில் கலந்துகொண்டிருக்க, ஆங்கிலம் பேசத் தெரியாத சீனர்கள் அந்தத் தெருவெங்கும் ௹தமது மொழியில்  சத்தமாகப் பேசியபடி நடந்துகொண்டிருக்க, பிண்ணனியில் நியூயோர்க் நகர பொலீசாரின் வாகன சைரன் ஒலித்துக்கொண்டிருக்க, கொலிவூட் படங்களை அந்தக் காலைப் பொழுது எனக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தது.

ஒரு 20 அல்லது 25 நிமிடங்கள் நடந்திருப்போம், நாம் ஏறவேண்டிய சப்வே நிலையமும் வந்தது. கனடாவினது போல இல்லாமல் மிகவும் பழமையானதாக, அசுத்தமாக இருந்தது அந்த சப்வே நிலையம். இடம் பார்க்க வந்துவிட்டு துப்பரவு எல்லாம் பார்த்தால் எப்படி? சரி, டிக்கெட் வாங்குவதற்கு கவுன்டருக்குப் போனோம். குடும்பம் குடும்பமாக வாங்குவதென்று முடிவாகிவிட, உதலில் மாமா குடும்பம் கவுன்டர் வாயிலைச் சூழ்ந்துகொள்ள, ஏனையவர்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்க, காலையில் அவசர அவசரமாக வேலைக்குப் போவோருக்கு நாம் இடைஞ்சலாக மாறினோம். சிலர் வாய்விட்டே, "சற்று ஒதுங்கி நில்லுங்கள் " என்று கூறிவிட்டுச் சென்றார்கள். இன்னும் சிலர் இடித்துத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.ஆவர்களது அவசரம் அவர்களுக்கு. இதற்கிடையில் டிக்கெட் கொடுப்பவருக்கும் மாமாவுக்குமிடையே ஒரு சின்னப் பிரச்சினை. ஏதோ முதன் முதலாக ஆங்கிலம் தெரியாத ஒருவருடன் கதைப்பதுபோல டிக்கெட் கொடுப்பவர் மாமாவுடன் கதைக்க, மாமாவுக்கு கடுப்பாக, டிக்கெட் கொடுப்பவர் வேண்டுமென்றே எம்மைத் தாமதப் படுத்த...அங்கே டிக்கெட் வாங்கக் காத்திருந்த மற்றையவர்கள் பொறுமை  இழக்க, போதும் போதும் என்றாகிவிட்டது. 

ஒருவாறு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறினோம். 

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

நாங்களும் அடுத்த கிழமை நியூயோக் போகின்றோம். நகரத்தைச் சுற்றிப் பார்க்க மிக ஆவல்!!

 

கெதியாய் எழுதுங்கோ ரகு.... :) வாசிக்க ஆவல்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயிலில் சீனர்கள், கறுப்பர்கள், கனடாவை விட அதிகமான வெள்ளையர்கள் என்று பலரும் இருந்தனர். நான் கனடாவில் வாங்கிய "கனடா" எழுதப்பட்ட தொப்பியைப் போட்டிருந்தேன். எனக்கு முன்னார் எங்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஒரு இளம் வெள்ளை ஜோடி எங்களை வெகுநேரம் அவதானித்தபடி இருக்க, நானும் அவர்களை கடைக் கண்ணால் அவதானித்தபடி இருந்தேன். 

அந்த வாலிபருக்கு ஒரு 25 வயதிருக்கலாம். கை, கழுத்தெல்லாம் பச்சை குத்தி, ஏனோ தானோவென்று டீ சேர்ட்டும் பாண்ட்டும் அணிந்து சற்றுக் களைத்திருந்ததுபோலக் காணப்பட்டார். பெண்ணோ சற்று நாகரீகமாக ஆடை அணிந்திருந்தாள். 

எமது நிறத்தையும், நாம் அணிந்திருந்த கனடா தொப்பி மற்றும் டீ சேர்ட்டுகளையும் பார்த்து என்ன நினைத்தார்களோ தெரியாது, தமக்குள் எம்மைப் பார்த்துப் பேசியபடி இருந்தார்கள். சிலவேளை நாம் அணிந்திருந்தவற்றுக்கும் , எமக்கும் என்ன தொடர்பு என்று நினைத்தார்களோ என்னவோ ??

ஆனால், இவை எதையுமே கண்டுகொள்ளும் நிலையில் எம்முடன் வந்த உறவுகள் இருக்கவில்லை, அந்தக் கொம்பாட்மென்ட் முழுதும் கேட்குமளவிற்கு தமிழில் சத்தமாக பேசிக்கொண்டு வந்தார்கள், இடைக்கிடையே பீறிட்டுச் சிரிப்பு வேறு! எனக்கே அந்தரமாகப் போய்விட்டது. கொஞ்சம் மெதுவாகப் பேசக் கூடாதா?? எதோ யாழ்ப்பாணத்தில் தட்டி வானில் போவதாக நினைப்பு ! இவர்கள் இப்படி ஒவ்வொருமுறையும் தமிழில் உரக்கப் பேசிச் சிரிக்கும்போதும் முன்னாலிருந்த ஜோடி எங்களைப் பார்த்து தங்களுக்குள் பேசிக்கொள்ளும். அட விடுங்கப்பா, தமிழில் பேசுவது ஒரு குற்றமா??

ஒருவாறு ரயில் நான் இறங்கவேண்டிய இடத்தை அடைந்தது. அது வேறு எதுவுமில்லை, உலகப் புகழ் பெற்ற டயிம் ஸ்குவெயர். புற்றீசல்கள் போல மக்கள் அலைமோதிக்கொண்டிருக்க, அந்த மக்கள் வெள்ளத்தில் நாமும் கலந்து நடக்கத் தொடங்கினோம். நடையோ நடை அப்படியொரு நடை. ஒரு 30 நிமிடம் நடந்தபின் பிள்ளைகள் களைத்துவிட ஒரு மக்டொனால்ட்சில் நின்று அவர்களுக்குப் பசியாற்றி மீண்டும் நடை. போவது மன்ஹாட்டன் பகுதியைச் சுற்றிப் பார்க்கும் உல்லாசப் படகுப் பயணம் நோக்கி!

நாம் மான்ஹட்டன் படகுப் பயண அலுவலகத்தை அடையும்போது 12 மணியாகிவிட்டது. அலுவலகக் கவுன்டரிலகொரு கறுப்பினப் பெண். நாங்கள் கூட்டமாக டிக்கெட்டுக்களை வாங்குவதைப் பார்த்துவிட்டு, "25 பேருக்கு மேலென்றால் மட்டுமே கூட்டமாக வாங்கினால் லாபம் இருக்கு. ஆனால் நீங்கள் 20 பேர் மட்டுமே, ஆகவே குடும்பம் குடும்பமாக வாங்கினால் லாபம்" என்று அறிவுரை சொன்னாள். நாமும் எமது பங்கிற்கு தனியாகவும், குடும்பமாகவும் , கூட்டமாகவும் கணக்குப் பார்த்து (கணக்கில் நான் புலியாக்கும் ) இறுதியில் அவள் சொன்ன வழிப்படியே டிக்கெட்டுக்களை வாங்கினோம். நாம் ரிக்கெட் வாங்கி முடியும்போது படகு புறப்படத் தயாரிகிவிட்டது. அரைவாசிப்பேர் எம்மில் படகுக்கு அருகில் போய்விட, மீதிப்பேர் டிக்கெட் அலுவலகத்தில் இன்னும் நிற்க, படகுக் காரர்களுக்கு கொதி வந்துவிட்டது. படகிலிருந்த மற்றைய நூற்றுக்கணக்கானவர்களை காக்க வைத்துக்கொண்டு நாங்கள் டிக்கெட் வாங்கியிருக்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படகிலிருந்து இரண்டுபேர் கீழே இறங்கி வந்து எம்மை துரிதப்படுத்தும்படி அலுப்புக் கொடுக்க, படகினருகில் கூட்டமாகப் போட்டோ எடுக்கும் இருவர் எம்மை அங்கே இங்கேயென்று இழுக்க, எம்மில் சிலருக்குக் கோபமும் வந்துவிட, ஒரே அல்லோல கல்லோலம். 

ஒருவாறு படகில் ஏறி அமர்ந்துகொண்டோம். நாம் உள்ளே வரும்போது முழுப்படுகுமே எம்மைப் பார்ப்பது புரிந்தது. அவர்களைக் காக்கவைத்துவிட்டோம் எம்கிற நியாயமான கோபம் அது. இதெல்லாம் கணக்கிலெடுத்தால் இடம்பார்க்க முடியாது, ஆகவே நாம் வந்த விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கத் தொடங்கினோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மன்ஹட்டன் சதுக்கத்தை அண்டிய கடற்பரப்பினூடாக எமது படகு மெதுவாக சென்றுகொண்டிருக்க படகின் அறிவிப்பாளர் அந்த இடங்களைப் பற்றிய வர்ணனையைச் செய்துகொண்டே வந்தார். அந்தக் கடற்கரையெங்கும் உலகின் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் பல்நாட்டுக் கம்பெனிகளும், பெரிய காப்பரேட் கம்பெனிகளும். வானுயர எழும்பிநின்ற அந்தக் கட்டிடங்களின் உச்சியில் அவற்றின் பெயார்கள் நியோன் விளக்குகளால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருக்க அமெரிக்கா என்றால் இதுதான் என்று அவை பெருமையாக மார்தட்டிக் கொள்வதுபோலத் தோன்றியது எனக்கு. 

அப்படியே அந்தக் கட்டிடங்களைத் தாண்டிச் செல்ல நியூயோக்கின் பழைய துறைமுகப் பகுதியூடாக படகு பயணித்தது. பல ஏக்கெர்க் கணக்கில் அமைக்கப்பட்டிருந்த பாரிய சரக்கு மண்டபங்கள். பாவிக்கப் படாவிட்டாலும் கூட இன்னும் அப்படியே புதியனவைபோலத் தோற்றமளித்தன. இவற்றைத் தாண்டிச் செல்லும்போது, 70களிலும் 80 களிலும் இப்பகுதியில் தலைவிரித்தாடிய மாபியாக் குழுக்கள், அவற்றுக்கிடையேயான சண்டைகள், கடத்தல்கள், போதைவஸ்த்து வியாபாரம், குழுக்களிடையிலான கொலைகள் என்பவை பற்றியும் அந்த ஆறிவிப்பாளர் சொல்ல மறுக்கவில்லை. "இப்போது நிலமை எவ்வளவோ பரவாயில்லை, ஆனாலும் அவ்வப்போது அவை இருக்கத்தான் செய்கின்றன" என்று அவை பற்றிக் கூறி முடித்தார்.

அடுத்ததாக, மற்றைய கட்டிடங்களிலிருந்து முற்றாக வேறுபட்ட, உலகப் பிரபலங்களின் உல்லாச இருப்பிடமாகத் திகழும் இரு பெரிய நீல நிறக் கண்ணாடிக் கட்டிடங்கள் இருந்த பகுதியை அண்மித்து படகு செல்கையில், "இப்போது நீங்கள் பார்ப்பது இரு சினிமாப் பிரபலங்களின் உல்லாச வீடுகள். முதல் இரண்டு அடுக்குகளும் நடிகர் லியனோ டி கப்ரியோவுக்குச் சொந்தமானது, அதற்குக் கீழுள்ள அடுக்கு அவுஸ்த்திரேலிய நடிகர் ஹியூ ஜக்மானுக்குச் சொந்தமானது " என்று அவர் கூறி முஇத்ததும், படகிலிருந்த எல்லோரது கழுத்துக்களும் பக்கவாட்டில் திரும்பி அந்த மாடி வீடுகளைப் பார்க்க, பலர் தமது கமெராக்களில் கிளிக்கியும் கொண்டனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக மன்ஹட்டன் பகுதியின் இதயம் என்று அழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் இருந்த பகுதியை அண்மித்தபோது, அறிவிப்பாளர் பேசத் தொடங்கினார். படகு முழுதும் நிசப்தமான அமைதி. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட 3200 அப்பாவிகளின் மரணமும், அன்றைய தினம் அம்மக்களின் ஓலமும் கண்முன்னே வந்து நிற்க, ஒருகணம் அந்த மக்களுக்காக மனம் இரங்கியது. அரசாங்கங்களின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் ஆப்பாவிகளைக் கொல்வது எந்த விதத்தில் நியாயம் ? வீட்டிட்லிருந்து வேலைக்குப் புறப்படும்போது உயிருடன் திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கையில் சென்றவர்கள், அவர்கள் மாலை வரும்வரை காத்திருந்த உறவுகள் என்று இப்படி எல்லோரையும் உடலாலும், மனத்தாலும் நொடிப்பொழுதில் கொன்றுவிட்டு "இறைவனுக்கே மகிமை" என்று கூக்குரலிடும் அரக்கத்தனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சரி, படகுப் பயணத்துக்கு வருகிறேன், ரெட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் இப்போது அவற்றின் நினைவாகவும், ஏன் சாகிறோம் என்று கூட அறியாமல் அன்று இறந்துபோனவர்களுக்காகவும் ஒரரு நினைவுக் கட்டிடம் எழுப்பப்பட்டிருந்தது. முன்னைய ரெட்டைக் கோபுரத்தின் உயரத்திற்கு நிகராக, பழைய ரெட்டைக் கோபுரத்தின் இடிபாடுகளை ஒருங்கமைத்து, மீள் உருவாக்கம் பெற்று நிமிர்ந்து நின்ற அந்த ஒற்றைக் கோபுரத்தைப் பார்க்கும்போது அமெரிக்கர்கள் பயங்கரவாதத்தைக் கண்டு பயந்து ஒளிந்துவிடவில்லை, மாறாக இன்னும் உறுதிகொண்டு எழுந்து நிற்கிறார்கள் என்று தோன்றியது எனக்கு. அந்த இடத்தில் சிலநேரம் தரித்து நின்ற அந்தப் படகு பின்னர் மெதுவாக இன்னுமொரு அமெரிக்க அடையாளம் நோக்கிச் செல்லத் தொடங்கியது. 

பச்சை நிறத்தில், மன்ஹட்டன் வானில் மிகவுயரத்தில் தனியே எழுந்து நிற்கும் உருவம் அது. அமெரிக்கா என்றால் உலகின் எவர் கண்முன்னும் வரும் அந்த உருவம், வேறு எதுவுமில்லை, அது அமெரிக்காவின் சுதந்திர தேவதை. முழுச் செப்பினால் உருவாக்கப்பட்டு பிரான்சு மக்களால் அமெரிக்காவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பாரிய சுதந்திரத் தேவதை உண்மையிலேயே மிக அழகாகவும், கம்பீரமாகவும் இருந்தாள். அந்தப் படகுப் பயணத்தின் கிளைமாக்ஸே அந்த தேவதைதான் ! அவளுக்காகவே படகில் ஏறியிருந்த நூற்றுக்கணக்கானவர்களும், நாங்களும், கண்களை தீட்டி, கமராக்களை உயர்த்திப் பிடித்து அவள் அருகில் வரும்வரை ஆவென்று அவளிருந்த பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். படகு மெது மெதுவாக அவளருகில் செல்லும்போது அந்த தேவதையின் விசாலம் புரியத் தொடங்கியது. அருகில்ச் சென்று படகு அசையாமல் நின்றுவிட, நூற்றுக்கணக்கான கமெராக்களும், கைய்யடக்கத் தொலைபேசிகளும் தாறுமாறாக படங்களைச் சுட்டுத் தள்ளின. செல்பிகளுக்கு குறைவிருக்கவில்லை. அதுவொரு பரவச அனுபவம், அனுபவித்தால்ப் புரியும்.

கமெராக்களும், செல்பிகளும் களைத்துவிட, படகு மெது மெதுவாக திரும்பிச் செல்ல ஆரம்பித்தது. போகும் வழியில் மன்ஹட்டன் பகுதியை ஏனைய இடங்களுடன் தொடுத்து நிற்கும் உயிர் நாடிகளான புறூக்லின் பாலம், மான்ஹட்டன் பாலம் போன்றவற்றின் கீழாகச் சென்றது படகு. செல்லும்போதே அவற்றின் சரித்திரம், கட்டப்பட்ட விதம், கட்டவேலைகளில் ஈடுபட்ட மக்கள் என்று அறிவிப்பாளர் சொல்லிக்கொண்டே போக, அந்தப் பிரமாண்டமான பாலங்களின் அமைப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

இப்படியே நியூயோக் நகரின் அழகை கடலில் இருந்தே பார்த்துவிட்டு, ஆனந்தக் களைப்பில் படகும், நாங்களும் மீண்டும் கரையை அடைந்தோம். 

 

கரையை அடைந்ததும், கொண்டுவந்த சிற்றுண்டிகள் மளமளவென்று வயிற்றுக்குள் இறங்க, சிறிது நேரம் அந்தத் துறைமுகப் பகுதியில் அமர்ந்திருந்து அந்த அழகை ரசித்துக்கொண்டிருந்தோம். 

சில நேரத்தின் பின்னர், நியூயோக் பகுதியை இலவசமாகச் சுற்றிக் காட்டும் கூரையற்ற டபுள்டெக்கர் பஸ்கள் வரிசையாக துறைமுகப் பகுதியில் காத்திருக்க, நாம் கூட்டமாக ஏறி  அமர்ந்துகொள்ளவும், நெரிசலான, சனநடமாட்டம் மிக்க அந்த நகரூடாக வீதி வலம் வரத்தொடங்கியது நாமிருந்த பஸ். 

15-20 நிமிட ஓட்டத்தின் பின்னர் அது நின்றுவிட, நாமெல்லாம் இறங்கி நடக்கத் தொடங்கினோம். டயிம் ஸ்குவெயர் என்றழைக்கப்படும் அமெரிக்காவின் மிகப் பிரபலமான சதுக்கம் நோக்கி நாம் நடந்தபோது, எம்முடன் அலைகடலென மக்கள் வெள்ளம் நடந்துகொண்டிருந்தது. 

அந்த சதுக்க வீதிகளெங்கும் நியோன் விளக்குகளாலும், இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் செய்தித் தலைப்புகள், காணொளிகள், விளம்பரங்கள், மேற்கத்தைய இசையாலும் விழாக்கோலம் பூண்டிருக்க, அந்தப் பகுதியே சொர்க்க லோகம் போலக் காட்சியளித்தது. முடிந்தவரை அப்பகுதியை எமது கமெராவுக்குள்ளும், செல்போன்களுக்குள்ளும் சுருட்டிக் கொண்டே, கடைகளுக்குச் செல்ல ஆயத்தமானோம். 

கடைகளுக்குள் சென்றவர்கள் மீண்டு வர மழையும் பெய்யத் தொடங்க இரவு 9 மணியாகிவிட்டிருந்தது. இனிப் போதும் என்று தீர்மானித்துவிட்டு, சப்வே நிலையத்தை நோக்கி நடந்தோம். 

3 அல்லது 4 சப்வே ரயிகளில் மாறி மாறி ஏற், இரவு 12 மணிக்கு நாமிருந்த இடத்தை அடைந்ததோடு எமது அமெரிக்கப் பயணம் முடிவிற்கு வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்தப் பதிவை பார்த்தேன். ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அழகாக எழுதுகிறீர்கள்.

கனடாவின் இடங்கள் பலவற்றை நீங்கள் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்த பின்னர் நானும் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சி.என் ரவர் உட்பட...

உண்மைதான்  மணிவாசகர்..

நான் ஒவ்வொரு நாளும் வேலைக்கு போகும் போது ஈபிள் கோபுரத்துக்கு பக்கத்தால் தான் வருவேன்

ஆனால் அதில் நின்று அல்லது ஏறிப்பார்த்தது என்பது ஒரு முறையோ இருமுறை தான்

அதுவும் யாராவது வெளியிலிருந்து வந்த உறவுகளுடன்..

ஆனால் தமிழகத்திலிருந்து வந்த இயக்குநர் சசி அவர்கள்

ஒரு கருத்தைச்சொன்னார்

இதை வடிவமைத்த ஈகிள் அவர்களின் சிறப்பு என்ன தெரியுமா?

இதனூடாக செல்பவர்கள் அனைவரையும் (கோடிக்கணக்கானவர்கள்)

கோபுரத்தை திரும்பிப்பார்க்க வைத்தது தான் என்றார்

அப்பொழுது தான் நானும் யோசித்தேன்

நானும் திரும்பிப்பார்க்காமல் போனதில்லை...

Link to comment
Share on other sites

எமது ஊரை நாமே வர்ணித்தால் புழுகாகிவிடும்.எமது விருந்தாளி என்னமா புகழுகின்றார்.இதை வைத்து அவுஸ்ரேலியா எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.வாழ்த்துக்கள்.

value-proposition-for-big-data-isv-partn

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மை லாட்! ரகுநாதன் என்பவர் பயணக்கட்டுரையை பந்தி பந்தியாக எழுதி என்னை கடுப்பேத்துகின்றார்.:grin:
சிவனே வேலையும் நானும் என்றிருந்த என் மௌன யுத்தத்தை சிதறியடித்துவிட்டார் மை லாட்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரை நாமே வர்ணித்தால் புழுகாகிவிடும்.எமது விருந்தாளி என்னமா புகழுகின்றார்.இதை வைத்து அவுஸ்ரேலியா எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.வாழ்த்துக்கள்.

value-proposition-for-big-data-isv-partn

நீலப்பறவை ஐயா!

எதிலையும் கையை வையுங்க..மன்னிக்கலாம்!

ஆனால்...அவுஸ்திரேலியாவைப் பற்றி நீங்கள் அனுமானிப்பது தவறு!

இந்தக்கட்டுரை முடிய.. ரகு...அவுசைப் பற்றி எழுதினால்..அடுத்த பிளேனை எடுத்து நீங்கள் இஞ்சை வந்திருவீங்கள்!

அவருடைய எழுத்து நடை அப்படி... உங்கள் கனடாவல்ல!

கலியாணப் பெண்ணுக்குச் சோடனை பண்ணிற மாதிரித் தான் கனடாவைப் பற்றி.. ரகுவின் எழுத்து!:grin:

Link to comment
Share on other sites

நீலப்பறவை ஐயா!

எதிலையும் கையை வையுங்க..மன்னிக்கலாம்!

ஆனால்...அவுஸ்திரேலியாவைப் பற்றி நீங்கள் அனுமானிப்பது தவறு!

இந்தக்கட்டுரை முடிய.. ரகு...அவுசைப் பற்றி எழுதினால்..அடுத்த பிளேனை எடுத்து நீங்கள் இஞ்சை வந்திருவீங்கள்!

அவருடைய எழுத்து நடை அப்படி... உங்கள் கனடாவல்ல!

கலியாணப் பெண்ணுக்குச் சோடனை பண்ணிற மாதிரித் தான் கனடாவைப் பற்றி.. ரகுவின் எழுத்து!:grin:

இன்னும் ஒரு சில கிழமைகளில் பணவீக்கம் ஏற்பட்டு எல்லாமே நாறப்போகின்றது.அதைவிட பெரிய கொடுமை.ஓய்வூதியகாலத்துக்கு சேர்த்துவைத்த காசைக்கூட எடுத்து வீடு வேண்டினோர் நிலை பெரிய கவலைக்கிடம்.இப்படியான நிலையில் தேர்த்தல் வேறு.எனது நண்பருக்கு உங்கு புகையிலைத்தோட்டம் மாந்தோப்பெல்லாம் உண்டு.ஆயத்தமாகவுள்ளேன்.சீஸ்சும்  பட்டரும் தான் தஞ்சமென்றுள்ளேன்.கெடுத்துவிடாதீர்கள் 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------அடுத்ததாக மன்ஹட்டன் பகுதியின் இதயம் என்று அழைக்கப்படும் இரட்டை கோபுரங்கள் இருந்த பகுதியை அண்மித்தபோது, அறிவிப்பாளர் பேசத் தொடங்கினார். படகு முழுதும் நிசப்தமான அமைதி. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட 3200 அப்பாவிகளின் மரணமும், அன்றைய தினம் அம்மக்களின் ஓலமும் கண்முன்னே வந்து நிற்க, ஒருகணம் அந்த மக்களுக்காக மனம் இரங்கியது. அரசாங்கங்களின் கொள்கைகளும், நடவடிக்கைகளும் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால் ஆப்பாவிகளைக் கொல்வது எந்த விதத்தில் நியாயம் ? வீட்டிட்லிருந்து வேலைக்குப் புறப்படும்போது உயிருடன் திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கையில் சென்றவர்கள், அவர்கள் மாலை வரும்வரை காத்திருந்த உறவுகள் என்று இப்படி எல்லோரையும் உடலாலும், மனத்தாலும் நொடிப்பொழுதில் கொன்றுவிட்டு "இறைவனுக்கே மகிமை" என்று கூக்குரலிடும் அரக்கத்தனத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

https://truthandshadows.wordpress.com/2010/10/18/bush-reaction-the-very-odd-behaviour-of-a-president-on-911/

 

இன்னும் நம்பமுடியவில்லை..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எமது ஊரை நாமே வர்ணித்தால் புழுகாகிவிடும்.எமது விருந்தாளி என்னமா புகழுகின்றார்.இதை வைத்து அவுஸ்ரேலியா எப்படியிருக்கும் என்று அனுமானிக்க முடிகின்றது.வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

value-proposition-for-big-data-isv-partn

நீலப்பறவை,

 

கனடா நன்றாக இருக்கிறது என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். அதற்காக அவுஸ்த்திரேலியா நன்றாக இல்லை என்று நான் கூறாமலேயே நீங்கள் எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?

நான் அங்கிருந்த 4 வாரங்களும் எனக்கு நன்கு பிடித்துவிட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நான் சென்றுவந்த இடங்கள், பழகிய மனிதர்கள், இயற்கையாகவே பசுமையான நாடு..இப்படிப்பல. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பலதடவை உலகிலேயே மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நாடு என்று அதிகப்படியான வாக்குகளால் வெற்றிபெற்ற நாடென்னும்போதே, நான் சொல்லமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும் கனடாவின் மகிமை.

ஆனால், அப்படி மக்கள் வாழ மிகவும் ஏற்ற நாடுகள் பட்டியலில் அவுஸ்த்திரேலியாவின் மூன்று நகரங்களான மெல்போர்ன், சிட்னி, பிறிஸ்பேர்ன், ஆகியவைகூட முதல் 5 இடங்களுக்குள் அவ்வபோது வந்திருக்கின்றன என்பதையும் நான் கூறிக்கொள்ள வேண்டும்,

நான் எழுதியது என்னைக் கவர்ந்த கனடாவின் சிறப்புகள். இவை எனது சொந்த அனுபவங்கள் மட்டுமே. என்னைப் போலவே கனடாவை சுற்றிப் பார்த்தவர்களுக்கு என்னைப் போலவோ அல்லது வேறுவிதமான அனுபவங்களோ  ஏற்பட்டிருக்கக் கூடும்.

நான் மீண்டும் அவுஸ்த்திரேலியா வருமுன்னர் எனது பல்கலை நண்பர்கள் இருவரைச் சந்தித்தேன். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது சாடை மாடையாக கனடாவிற்கு நான் நிரந்தர வதிவிட அனுமதியுடன் வருவதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இருவரும் சொன்னபதில், "One day Hospitality" ஐப் பார்த்து மயங்கிவிடாதே என்பதுதான். உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, விருந்தினராக நாம் அங்கே இருந்தபோது உறவினர்கள் நடந்துகொண்டவிதம், நாம் நிரந்தரமாகவே அங்கு குடிபெயரும்போது வித்தியாசமாக இருக்கும் என்பது. இது ஓரளவிற்கு உண்மைதான் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். 

அடுத்தது வேலைவாய்ப்பும், ஊதியமும். எனக்குத் தெரிந்த பலர் அங்கே இரண்டுவேலைகள் செய்கிறார்கள் தமது அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு. சனி ஞாயிறுகளிலும் சிலவேளைகளில் வேலைக்குப் போகிறார்கள். கனடாவின் மணித்தியாலம் ஒன்றிற்கான குறைந்த ஊதியம் 12 டொலர்கள். ஆனால், அங்கேயே படித்த அல்லது பிறநாடுகளில் நல்ல படிப்புகளோடு வந்தவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். 

மேலும் அவுஸ்த்திரேலியாவுடன் ஒப்பிடும்போது வாழ்க்கைச் செலவு கனடாவில் சற்றுக் குறைவு. இதற்கு சனத்தொகையும், வியாபாரத்தின் போட்டியும் காரணமாக இருக்கலாம். இதுமட்டுமல்லாமல் அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருப்பதால் நிச்சயம் விலை குறைவாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. விற்பனை வரி 12.5%

அவுஸ்த்திரேலியாவை எடுத்துக்கொண்டால் அநேகமான தமிழர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். சனி, ஞாயிறுகளில் வேலைக்குப் போவோர் மிகவும் குறைவு. சம்பளம் கனடாவுடன் ஒப்பிடும்போது இங்கு குறைந்தது 50.0% ஆவது அதிகமானது, சுமாரான  ஒரு வேலை இருந்தாலே போதும், அவுஸ்த்திரேலியாவில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு. அதேபோல வாழ்க்கைச் செலவும் இங்கே அதிகம். விற்பனை வரி 10 % இப்போதைக்கு மட்டும்.

காலநிலை என்று பார்த்தால், அவுஸ்த்திரேலியாவின் அதிகூடிய வெப்பநிலை 53 செல்ஸியஸ். இது போனவருடம் தென் அவுஸ்த்திரேலியாவின் பாலைவனப் பகுதியொன்றில் பதிவானது. ஆனால் கரையோர மாநிலங்களின் சராசரி உயர் வெப்பநிலை 40 இலிருந்து 45 வரைதான். அதேபோல குளிர்கால வெப்பநிலை -5 இற்குக் கீழ் போனது கிடையாது. காலையில் எழுந்து காரின்மீதும், வீட்டின் டிறைவ் வே மீதும் குவிந்திருக்கும் பனியை அகற்றவேண்டிய தொல்லையோ அல்லது, பனியில் ரோட்டில் சறுக்கிக் கொண்டு கார் ஓடவேண்டிய தேவையோ இல்லை. ஆக, மக்கள் வாழ்வதற்கு மிகவும் சுவாத்தியமானது. பிறிஸ்பேர்ன் காலநிலை எமது யாழ்ப்பாணத்தின் காலநிலையை ஒத்தது என்றால் நம்புவீர்களா?

ஆனால் கனடாவில் காலநிலை மிகவும் வித்தியாசமானது. சென்றவாரம் டொரொன்டோவில் 43 பாகை என்று எங்கள் அக்கா கூறியபோது நம்பமுடியவில்லை. அதேபோல குளிர்காலத்தில் -20 என்றால் சொல்லத்தேவையில்லை. 

இனவாதம் பற்றிப் பேசினால், கனடா மக்கள் அவுஸ்த்திரேலியர்கள் போலில்லை, மென்மையானவர்கள் என்கிறார்கள்.ஆஸிக்கள் இனவாதிகள் என்கிறார்கள். ஆனால், அது அவர் அவரது சொந்த அனுபவம். எனக்கும் சிறு கசப்பான அனுபவங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், தாயகத்தில் சிங்களப் பேரினவாதத்தால் கொல்லப்படுவோம் என்கிற அச்சமோ, அல்லது இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படும் நிலையோ இங்கில்லை. வேலைத்தளத்தில் நானும் ஒரு "ஓஸிதான்". ஆஸிக்களின் இயல்பான நக்கலும் நைய்யாண்டியும் கலந்த பேச்சுப் பலருக்கு அவர்களை இனவாதிகளாக் காட்டிவிடுகிறது என்பதில் ஐய்யமில்லை. இதற்காக இங்கே உண்மையான இனவாதிகள் இல்லையென்றும் நினைத்துவிடவேண்டாம்.

கனடாவின் இனவாதம் எப்படியிருக்கிறது என்பதுபற்றி எனக்குச் சொல்லத் தெரியாது. ஏனென்றால் நானிருந்த 4 வாரங்களிலும் கண்ணின் இமை காப்பதுபோல் எங்களைக் காத்துநின்றனர் உறவுகள். 

இறுதியாக, நான் எங்கு வாழ்வதென்கிற முடிவெடுக்க வேண்டிவந்தால், நாம் அவுஸ்த்திரேலியாவுடன் நின்றுவிடுவேன். ஏனென்றால் இன்றுவரை நான் சந்தோஷமாக, எந்தவித பண அழுத்தமும் இல்லாமல் வாழவைப்பது அவுஸ்த்திரேலியாதான்.  ஆனால் ஒவ்வொரு வருடமும் கனடாவை சென்று தரிசிக்க முடியுமானால் நிச்சயம் போவேன். அவுஸ்த்திரேலியாவில் வாழ்வது எவ்வளவு ஆனந்தமோ, அப்படித்தான் கனடாவை தரிசிப்பதும்.

இந்த இரண்டு நாட்டையும் நான் விரும்பும் முக்கிய காரணம் அங்கிருக்கும் எனது தமிழர்கள் அன்றி வேறு என்னவாக இருக்கமுடியும் ?! 

Link to comment
Share on other sites

தொடருங்கள் உங்கள் பயண கட்டுரையை . ராஜரத்தினம் குடும்பத்தை சந்தித்தீர்களா ?

எந்த நாட்டில் இருந்தால் என்ன நாம் வாழும் முறையில் தான் வாழ்க்கையின் சந்தோசம் அடங்கியிருக்கு.

போனவாரம் ஆஸியில் இருந்து வந்த எனது இன்னொரு சிறுவயது கிரிக்கெட் நண்பனை  சந்தித்தேன் . (ஈசு & சித்திரா ) .அவர் வருவதாக அறிந்து கலிபோர்னியா ,நியுயோர்க் இலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள் .அவர் வந்த நாட்கள் முதல் நண்பர்கள் உறவினர்களின் உபசரிப்பால் திளைத்துவிட்டதாக சொன்னார் .

அவர் இருந்த குழப்படிக்கு அன்று இரவு அவர் கொடுத்த உரை என்னை அதிர்சியில் ஆக்கிவிட்டது அவ்வளவு முதிர்ச்சி .வாழ்க்கை என்பது அதேதான் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சு வாசித்துக் கொண்டே வருகின்றேன், நன்றாக இருக்கின்றது தொடருங்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் பயண கட்டுரையை . ராஜரத்தினம் குடும்பத்தை சந்தித்தீர்களா ?

எந்த நாட்டில் இருந்தால் என்ன நாம் வாழும் முறையில் தான் வாழ்க்கையின் சந்தோசம் அடங்கியிருக்கு.

போனவாரம் ஆஸியில் இருந்து வந்த எனது இன்னொரு சிறுவயது கிரிக்கெட் நண்பனை  சந்தித்தேன் . (ஈசு & சித்திரா ) .அவர் வருவதாக அறிந்து கலிபோர்னியா ,நியுயோர்க் இலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள் .அவர் வந்த நாட்கள் முதல் நண்பர்கள் உறவினர்களின் உபசரிப்பால் திளைத்துவிட்டதாக சொன்னார் .

அவர் இருந்த குழப்படிக்கு அன்று இரவு அவர் கொடுத்த உரை என்னை அதிர்சியில் ஆக்கிவிட்டது அவ்வளவு முதிர்ச்சி .வாழ்க்கை என்பது அதேதான் .

 

 

நான் சந்திக்கத் தவறிய ஒரு சிலரில் இராஜரத்தினம் ஐய்யாவின் மகளின் குடும்பமும் ஒன்று. கிடைத்த 4 வாரத்தில் எவ்வளவு இடங்களைப் பார்க்க முடியுமோ, அவ்வளவு இடங்களையும் பார்க்க வேண்டும் என்கிற அவசரத்தில் ஒரு சிலரை விட்டு விட்டேன். 

இனிவரும்போது எல்லோரையும் பார்த்துவிடலாம் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியாவில் வாழ்வது எவ்வளவு ஆனந்தமோ


ஒசி ஒசி ஓய் ஓய்..........தொடருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது "அமெரிக்காவைப் பார்க்கும் ஒருநாள் ஆசையை" அவசர அவசரமாக மான்ஹட்டன் சதுக்கத்துடனேயே முடித்துக்கொண்டு மறுநாள் காலையிலேயே மீண்டும் கனடா புறப்படத் தயாரானோம்.

எதிர்பார்த்ததுபோலவே ஓட்டுனரும் பஸ்ஸும் காலையில் 7 மணிக்கே ஆஜராகிவிட, நாமிருந்த வீட்டின் வீதி மீண்டு கலகலப்பாகியது. ஏனென்று கேட்கிறீர்களா? நாங்கள் ஏறுவதற்காக அந்த வீதியை முற்றாக மறித்து பஸ்ஸை நிப்பாட்டினால் கலகலப்பாக இல்லாமல் எப்படியிருக்கும் ? பஸ்ஸுக்குப் பின்னால் வரிசையாக வந்துநின்ற கார்களின் ஓட்டுனர்களிடம் தெரியாத வார்த்தைகளில் பேச்சு வாங்கிக் கொண்டே நாம் பஸ்ஸினுள் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தோம். ஒருவாறு 10 அல்லது 15 நிமிடங்களில் பஸ் அந்த வீதியிலிருந்து நகரத் தொடங்கியது.

அமெரிக்காவின் நகர வாகன நெரிசலுக்குள் வேண்டாவெறுப்பாக புகுந்து, நீண்ட வரிசைகளில் அமெரிக்கர்களுடன் நாமும் காத்திருந்து இடைவெளி கிடைத்தபோது சுளித்து ஓடி, பெருந்தெருச் சிக்கல்களிருந்து விடுபட்டு, ப்ரீ வேயில் ஏறும்போது எங்களுக்கு வேர்த்துவிட்டது.

பிரீவேயில் ஏறியதும் பஸ் வேகமெடுக்கத் தொடங்கியது. "அண்ணோய், நீங்கள் வரேக்கையும் எங்களைச் சொப்பிங் செய்ய விடயில்லை, போகேக்கையாவது நாங்கள் ஆறுதலாச் சொப்பிங் செய்யவேணும், சொல்லிப் போட்டம்" ஏன்று மாமியும், எனது மனைவியும் கண்டிப்பாகச் சொல்லிவிட, ஓட்டுனருக்கு வெறுப்பாகி இருக்க வேண்டும், "எனக்கொண்டுமில்லை, 14 மணித்தியாலத்துக்கு மேல என்னால ஓட ஏலாது. ஏதோ பார்த்துச் செய்யுங்கோ " என்று அவரும் பதிலுக்குச் சொன்னார்.

அமெரிக்காவுக்குப் போகும்போதிருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அமெரிக்காவிலேயே நின்றுவிட, நாங்கள் மட்டும் களைப்புடன், எப்படா வீடு வருமென்று காத்துக்கொண்டு, பஸ்ஸிலிருந்து விலகி பின்புறமாக ஓடிக்கொண்டிருந்த கிராமங்களையும் தோட்டவெளிகளையும் எந்த உணர்வுமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்க ஓட்டுனர் தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே நெடுத்த ஓட்டங்கள், இடையிடையே டிம் ஹோர்ட்டன்கள், பீஸ்ஸாக்கள், டோனட்டுக்கள், மீண்டும் ஓட்டம் என்று சிலமணிநேரம் ஓடிவிட்டது.

மாமியும், எனது மனைவியும் எதிர்பார்த்திருந்த பென்சில்வேனியா மோல் என்றழைக்கப்படும் தரமான பொருட்களை விற்பனை வரியில்லாமல் மலிவான விலையில் வாங்கும் அங்காடியொன்றிற்குள் வாகனத்தை ஓட்டுனர் நுழைத்தபோது மதியம் 1 மணி. அகோர வெய்யில் அமெரிக்காவில் கொளுத்திக்கொண்டிருக்க, நாங்கள் ஆளுக்கொரு திக்கில் கலைந்துபோனோம்.

அந்தப் பிரதேசம் முழுக்க அமெரிக்காவின் பிரபல துணிக் கடைகள், லீவைஸ், டொமி லீ, வான் ஹியூசன், லீ, அமெரிக்கன் ஈகிள், காப், பூமா, அடிடாஸ், ரீபொக்....இப்படிப் பல கடைகள். அவுஸ்த்திரேலியாவில் நாங்கள் நுழைவதற்கே பயப்படும் இந்தக் கடைகளுக்குள் மனைவி தந்த வெறும் 200 டாலர்களைக் கைக்குள் சுருட்டிக்கொண்டு புதிய தைரியத்துடன் நுழைந்தேன். ஏனென்றால், "இஞ்ச எந்தக் கடைக்க போனாலும் ஒரு 20 அல்லது 30 உள்ளுக்குத்தான் எல்லாம் வரும்" என்று மாமி ஏற்கனவே சொல்லிவைத்ததால் வந்த தைரியம் அது. 

எனக்குப் பிடித்த டெனிம் காற்சட்டைகள் , ரெண்டொரு டீ சேர்ட் வாங்க 150 டாலர் போய்விட்டது. மீதியை கவனமாக வைத்துக்கொண்டு, மற்றையவர்களின் சொப்பிங் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு பஸ்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினேன். 

பஸ்ஸில் ஓட்டுனர் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருக்க, பஸ் வெறிச்சோடிக் கிடந்தது. கொண்டுவந்த பைகளை கதிரையில் எறிந்துவிட்டு, இரண்டாம் முறை கடைகளை சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். இடையிடையே மாமி, மாமா, அக்கா, அத்தான்..இப்படி என்னுடன் வந்தவர்களை பார்த்து, "எப்பிடிப் போய்க்கொண்டிருக்குது?" என்று கேட்க, "இன்னும் கொஞ்சக் கடை கிடக்கு, பாத்துக்கொண்டு வாரம்" என்று ஏதோ தூரத்து உறவினர் ஒருவரை கடைத்தெருவில் பலகாலத்துக்குப் பிறகு கண்டவர்களைப்போல தமது கடமையில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க, நான் மனைவியையும் மகள்களையும் தேடத் தொடங்கினேன். 

ஒரு கடைக்குள்ளிருந்து வெளிக்கிட்டு இன்னொரு கடைக்குள் அவர்கள் நுழையும்போது  கண்டுபிடித்தேன். "இருக்கிற காசெல்லாம் முடிந்தாலும் உங்க்களுக்குக் கடை பார்க்கிற ஆசை விடாது" என்று நான் சொல்லவும், "எவ்வளவு மிச்சம் வைச்சிருக்கிறியள்" என்று மனைவி கேட்டாள். மீதமிருந்த 50 டாலர்களைக் கொடுத்துவிட்டு, அவர்களை இழுத்துக்கொண்டு சாப்பிடக் கிளம்பினேன்.

சைனீஸ் சாப்பாடு, பசிக்கு அமிர்தமாக இருக்க, மளமளவென்று விழுங்கிவிட்டு, இனி ஏலாது என்று சொல்லிக்கொண்டே பஸ்ஸுக்கு நடக்க, ஒருவாறு மற்றையவர்களும் வந்துசேர சுமார் 2 மணிநேரம் ஓடிவிட்டிருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் பஸ் ஓடத் தொடங்கியது. சிலர் நித்திரை கொள்ளத் தொடங்க, இன்னும் சிலர் பைகளுக்குள் கிடந்த உடைகளை வெளியே எடுத்துப் பார்க்க, சிலர் மீதமிருந்த மிக்‌ஷர், பகோடா, சிப்ஸ் என்று அசைபோட்டுக்கொண்டிருக்க நேரம் போய்க்கொண்டிருந்தது. அதற்குள் போகும் வழியில் இன்னும் ஏதாவது மோல் இருக்கிறதா என்று யாரோ இணையத்தில் பார்த்துச் சொல்லிவிடவும் பழையபடி மனைவியும், இன்னும் சிலரும் 'அங்கையும் போவம்' என்று அடம்பிடிக்கத் தொடங்கிவிட்டனர்.

பாவம் ஓட்டுனர். 14 மணித்தியாலத்திற்குமேல் ஓடமாட்டன் என்று சொல்லி வெளிக்கிட்டவர் கிட்டத்தட்ட 9 மணிநேரம் ஓடிவிட்டார். இன்னும் 4 மணிநேரமாவது ஓடினால்த்தான் டொரொன்டோவுக்குப் போகமுடியும். அதுக்குள்ள இன்னொரு ஷொப்பிங்கா என்று அலுத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் கேட்பதைச் செய்தால்த்தான் அவரின் முழுப்பணமும் அவருக்குக் கிடைக்கும். ஆகவே வேறு வழியில்லாமல் புறுபுறுத்துக்கொண்டே இன்னொரு மோலுக்குள் பஸ்ஸை நிறுத்தினார். 

இந்த மோல் முன்னர் பார்த்ததுபோலில்லாமல் கடைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் விற்பனை வரியும் கூடவிருந்தது. ஆகவே சில கடைகளுக்குள் மட்டுமே நுழைந்துகொண்டது எமது சனம். இப்படியே இன்னொரு 2 மணிநேரம் போக, கடைகளும் பூட்டும் நேரமாகியது. 

பணம் முடிந்து, உடலில் களைப்பேறி, இனிப்போதும் என்று பலருக்கும் சோர்வு வர தாமாகவே வந்து பஸ்ஸில் ஏறிக்கொள்ள ஓட்டுனர் பழையபடி அவசரத்துடன் ஓடத் தொடங்கினார்.

10 மணியளவில், அமெரிக்க - கனடா எல்லையிலுள்ள டூட்டி ப்ரீ கட்டிடத்தில் மீண்டும் பஸ் நின்றது. பெண்கள் பெர்ஃபியூமும், ஹான்ட் பாக்கும் வேண்ட வெளிக்கிட, ஆண்கள் தனியே 'தண்ணிப் போத்தல்' வேண்டப் புறப்பட இன்னொரு மினி ஷொப்பிங் அங்கே தொடங்கியது. ஏதோ டூட்டி ப்ரீயில் தண்ணி வாங்காட்டி தண்ணியே அடிக்காத மாதிரித்தான் சனத்தின்ர எண்ணம். அவ்வளவு உசாராக தண்ணிப் போத்தல்களை வாங்கி ட்ரொலி ஒன்றிற்குள் அடக்கிக் கொண்டு சனத்தோட சனமாக கியூவில நின்று, விலையே கேட்காமல் கிரெடிட் காட்டை விசுக்கி, சந்தோசமாக வாங்கிக்கொண்டு பஸ்ஸில் ஏறும்போது 11 மணி !

அப்பிடியே கஸ்ட்டம்ஸ் விசாரணை, பல்லிலிப்புகள், கேள்விகள், சடையல்கள் என்று கஸ்ட்டம்ஸ் விட்டு வெளியே வந்து, பஸ்ஸில் ஏறி, மறுபடி ஓடி....ஒருவாறு 12;30 மணிக்கு ஸ்னோபோல் கிரசன்ட்டில உள்ள அக்காவீட்டில் வந்து இறங்கினோம். 

அத்துடன் எமது அந்த அமெரிக்கப் பயணம் முற்றுப் பெற்றது ! அப்பாடா எழுதி முடிக்கவே களைக்குது எனக்கு !

 

Link to comment
Share on other sites

வாசித்த எமக்கே களைக்குது :) எழுதின உங்களுக்கு களைக்காதா என்ன? நன்றாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள் ரகு அண்ணா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் நினைவில் வைத்து எழுதுவது நன்றாக உள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.