Jump to content

ஜேர்மன் உதைப்பந்தாட்ட அணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் - Nirmanusan Balasundaram


Recommended Posts

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இருபதாவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக ஜேர்மனி மோதியது. ஜேர்மன் அணியின் முன்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் தடுப்புகளை தகர்த்துக் கொண்டு முன்நகர முயற்சிக்க, ஜேர்மன் அணியின் பின்கள வீரர்கள் ஆர்ஜென்ரீனாவின் முன்கள வீரர்களின் ஊடுருவல்களை தடுக்கும் முயற்சியில் தடுப்பு உத்திகளை அமைத்திருந்தார்கள். இதன் ஒரு அங்கமாக, ஆர்ஜென்ரீனாவின் நட்சத்திர வீரரும் கோல்களை போடக்கூடியவர் எனவும் எதிர்பார்க்கப்பட்ட லயனல் மெசியை ஒரு கட்டத்தில் ஜேர்மன் அணியின் மூன்று வீரர்கள் முற்றுகையிட்டிருந்தனர். அதேவேளை, ஜேர்மன் அணியின் ஏனைய வீரர்கள் ஆர்ஜென்ரீனா அணியின் ஏனைய வீரர்கள் இடைவெளிகளை பயன்படுத்தாதவண்ணம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் விபரத்தை பார்த்த போது, கடந்த வருடம் இடம்பெற்ற உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டி நினைவுக்கு வந்தது. ஏனெனினில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ. சுமந்திரனும் வடமராட்சியை மையப்படுத்தியே தேர்தலில் குதித்துள்ளனர் என பேசப்படுகிறது. தமிழர்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட கஜேந்திரகுமாருக்கும், தமிழர்கள் ஒரு சிறுபான்மையினம் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையிலான போட்டி பரபரப்பாகவும் பரவலாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, வடமராட்சியைச் சேர்ந்த மூவரை யாழ். தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது கூட்டமைப்பு. இதனூடாக கஜேந்திரகுமார் மும்முனை சுற்றிவளைப்பை எதிர்கொண்டுள்ளார். அத்துடன், வடமராட்சியில் மூன்று கூட்டமைப்பு உறுப்பினர்கள் போட்டியிட்டாலும், வடமராட்சிப் பகுதியில் கூட்டமைப்புக்கு அளிக்கப்படும் விருப்பு வாக்கில் ஒன்று சுமந்திரனுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற வகையில் கூட்டமைப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் என்று எதிர்வு கூறப்படுகிறது. இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள சுமந்திரனை வெற்றிபெற வைப்பதற்கான ஒரு உத்தி என்று கருதப்படுகிறது.

ஆனால், ஆட்ட நடுவர்கள் நீதி தவறாது செயற்பட்டால், எந்த முற்றுகையையும் தகர்த்து கஜேந்திரகுமார் ஒரு கோல் போடுவார் என்று யாழிலுள்ள நண்பர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

கஜேந்திரகுமாரை முற்றுக்கைக்கு உட்படுத்தி சுமந்திரனை வெல்ல வைக்க முயற்சிக்கும் கூட்டமைப்பு தீவகத்தை கைவிட்டு விட்டதா, இல்லை டக்ளஸ் தேவானந்தா வென்றாலும் பரவாயில்லை, கஜேந்திரகுமார் வெல்லக் கூடாது என்று செயற்படுகிறதா என்று ஊடக நண்பர் ஒருவர் கேட்கிறார். இது நியாயமான கேள்வியே. தமது வேட்பாளர் ஒருவர் வெல்ல வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பு வகுத்துள்ள உத்தியை விமர்சிக்கவில்லை. ஆனால், கஜேந்திரகுமார் வெல்லக்கூடாது என்பதற்காக தீவகத்தில் கோட்டைவிட்டுள்ள கூட்டமைப்பின் உத்தி விமர்சனத்திற்குரியது என்பதில் குறித்த ஊடக நண்பர் தெளிவாக உள்ளார். சுமார் இரு தசாப்தகாலமாக ஈ.பி.டி.பியின் இரும்புக் கோட்டை என வர்ணிக்கப்பட்ட தீவகத்தில், ஈ.பி.டி.பியை தோற்கடித்து ஒரு வரலாற்றை புரிந்த தீவக மக்களை கூட்டமைப்பு கைவிட்டு விட்டதென்று பிரான்ஸில் தீவக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஒன்றில் அங்கம் வகிக்கும் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகமாக வாக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கும் இடங்களிலும் கடுமையான போட்டிகளை ஏற்படுத்தக் கூடிய கூட்டமைப்பு வேட்பாளர்களை களமிறக்கவில்லை என்ற கரிசனையும் நிலவுகிறது. இது, ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்களுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் உண்டு என்று பரவும் செய்திகளை வலுப்படுத்துகிறது.

அது உண்மையென்றால், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியும், ஐக்கிய தேசிய கட்சியும் வென்றாலும் பறவாயில்லை, ஆனால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெல்லக்கூடாது என்பதற்காய், கூட்டமைப்பு என்ன விலையும் கொடுக்க தயாராக இருக்கிறதா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

மாற்றம்.org

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.