Jump to content

''சான்டியாகோ பெர்னாபூவில் இருந்து கெசிலாசை தூக்கி எறிந்து விட்டனர்!''-பெற்றோர் குமுறல்


Recommended Posts

''சான்டியாகோ பெர்னாபூவில் இருந்து கெசிலாசை தூக்கி எறிந்து விட்டனர்!''-பெற்றோர் குமுறல்

டந்த 25 ஆண்டுகளாக ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வந்த இகெர் கெசிலாசுக்கு ஒரு பிரிவுபச்சார விழா கூட நடத்தாமல் அவமானப்படுத்தி அணியை விட்டு வெளியேற்றியுள்ளதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

iker%281%29.jpg

ரியல்மாட்ரிட் அணியின் கேப்டன் இகெர் கெசிலாஸ் 10 வயதில் இருந்து அந்த அணிக்காக விளையாடி வருகிறார். ரியல்மாட்ரிட் சப்ஜுனியர் அணியில் இருந்து 25 ஆண்டுகளாக ரியல்மாட்ரிட் அணியை தவிர வேறு எந்த அணிக்காகவும் அவர் விளையாடியதில்லை. 1990 முதல் தற்போது வரை 16 சீசன்களில் ரியல்மாட்ரிட் அணிக்காக 725 போட்டிகளில் கெசிலாஸ் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் ரியல்மாட்ரிட் அணியின் தலைவர் ஃபுளோரென்டினா பரேசுக்கும் இகெர் கேசிலாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது 34வது வயதில் போர்ச்சுகல் நாட்டின் போர்ட்டோ எப்.சி. அணியில் இணைந்து விளையாட கெசிலாஸ் முடிவு செய்தார். இதற்காக ஒப்பந்தமும் முடிவடைந்து விட்டது. இதையடுத்து ரியல்மாட்ரிட்டுக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் கடைசியாக கெசிலாசுக்கு பிரிவுபச்சார விழா நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக நீண்ட காலமாக ஒரே அணிக்காக விளையாடிய ஜாம்பவான் வீரர்களுக்கு இது போன்று விழா எடுக்கப்படுவது வழக்கமானது.

real.jpg

ஆனால் திடீரென்று கெசிலாசுக்கான பிரிவுபச்சார விழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மதியம் சிறிய அளவிலான செய்தியாளர் சந்திப்புடன் கெசிலாஸ் விடை பெறுவதாக அறிவித்தார். அந்த பிரஸ்மீட்டின் போது கெசிலாஸ் பல முறை கண்ணீர் விட்டதையும் காண முடிந்தது.


இந்த நிலையில் ரியல்மாட்ரிட் அணி தங்கள் மகனை அவமானப்படுத்தும்விதத்தில் நடத்தியதாக இகெர் கெசிலாசின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், '' ரியல்மாட்ரிட் அணியின் முன்னாள் தலைவர்கள் லாரென்சோ சான்ஸ், கால்ட்ரைன் ஆகியோர் இகெர் கெசிலாசை மரியாதையுடன் நடத்தினர். தற்போதையை தலைவர் புளோரென்டினா பரேஸ் அவரை சான்டியகோ பெர்னாபூவில் இருந்து தூக்கி எறிந்து விட்டார்.

ஜுவான்டஸ் அணியின் கேப்டன் ஜியான்லுகி பஃபனை ஒப்பந்தம் செய்ய பரேஸ் விரும்பினார். இந்த சூழலை இகெர் கெசிலாஸ் மிகச் சரியாகவே கையாண்டார். கடந்த 5 ஆண்டுகளாகவே எனது மகனுக்கு பல நெருக்கடிகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தி அவனை நெருக்கடிக்குள்ளேயே வைத்திருந்தனர்.  எங்கள் மகன் பார்சிலோனா , மான்செஸ்டர் யுனைடெட் போன்ற மிகப் பெரிய கிளப்புக்காக விளையாட வேண்டியவ'' என்று தெரிவித்தனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=49358

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.