Jump to content

எழுதிச் செல்லும் விதியின் கரங்கள்- 3


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

race-to-the-finish-sepia.jpg

 

என்ர பிரச்சனைக்கெல்லாம்.. ஒரே தீர்வு இந்தக் குதிரையளிட்டத் தான் இருக்குது எண்டு என்ர ‘உள்ளறிவு' அடிக்கடி சொல்லிகொள்ளும்\, மச்சான் ! அவனவன்.. அவனவனிட்டை இருக்கிற திறமையளைப் பாவிச்சு முன்னுக்கு வாறதில ஒரு தப்பும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியேல்லை என்ற படி பேப்பரை மிகவும் அவதானமாகப் படித்துக்கொண்டிருந்தான்!

நானும் எதுவும் பேசாமல், இந்தக் கவனத்தைப் படிக்கிற காலத்தில காட்டியிருந்தால்  இப்ப எங்கேயோ போயிருப்பாயே சூட்டி என எனக்குள் மட்டும் நினைத்துக் கொண்டிருந்தேன்!

அதோட மாதாவிட்டையும் ஒரு சின்னப் பந்தயம் வைச்சிருக்கிறன்! எனக்குப் பெரிய தொகை விழுமெண்டு சொன்னால்.. அவவுக்கு அரைவாசி தாறதாச் சொல்லியிருக்கிறன்!

சரி.. உனக்கு எப்ப குதிரையில ‘காசு' விழுந்து...எப்ப.. உன்ர குடும்பத்தைக் கூப்பிடுகிறது என நான் இழுக்கவும்,,, மச்சான், எனக்குத் தெரியும் நீ நம்ப மாட்டாய் எண்டு..! சூட்டி தான் பேப்பரிலிருந்து கண்களை உயர்த்திய படியே என்னைப் பார்த்துக் கூறிய படியே.....

‘ட்ரைபெக்டா’ எண்டு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறியா ? என்று உரையாடல் தொடரவும்,

சொல்லு.. சொல்லு.. கேள்விப்பட்டிருக்கிறன்!

அதிலையும் கனக்க விதங்கள் இருக்குது! ஐயா அடிச்சது ‘கிளீன்' ட்ரை பெச்டா!

எல்லாருக்கும் கிடைக்காது.. தரவைக் கடலுக்குள்ளை.. வலம்புரிச் சங்கு கிடைக்கிற மாதிரி எண்டு வைச்சுக் கொள்ளன்!

எவ்வளவு கிடைச்சது?

உங்கட காசில ஒரு நாற்பதாயிரம் வரும்... என்று கூறிய படியே.. கிளாசை ஒரு முறை முற்றாக நிரப்பியபடி மீண்டும் ஒரு சிகரற்றைப் பற்றவைத்துக் கொண்டான்!

என்னடா… எல்லாப்பிரச்சனைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே சூட்டி?

ஓமடாப்பா.. எனக்குத் தெரிஞ்சவன் ஒருத்தன்.. ஒரு சாப்பாட்டுக் கடையொண்டு கிட்டடியில தான் திறந்திருந்தான். யாழ்ப்பாணம் மாதிரி.. கடையுக்கிள்ள போன உடனேயே.. சோறு கறி எல்லாத்தையும் மேசையில கொண்டு வந்து வைக்கிற மாதிரி… ! வியாபாரம் கொஞ்சம்  பரவாயில்லாமல் போய்க்கொண்டிருந்தது! அண்ணை.. ஒரு பத்து மட்டும் கையிலயிருக்குமென்டால், லாச் சப்பலிலை என்னை ஒருத்தரும் அசைக்கேலாது எண்டான்! நான் கஷ்டப்பட்டுத் தொடங்கிய யாவாரம்,,நீங்களும் தூரத்துச் சொந்தம் தானே...அரைவாசியை எழுதித் தாறன் எண்டு கெஞ்சினான்!

அண்ணையாண .. உங்கட தலையில அடிச்சுச் சத்தியம் பண்ணிச் சொல்லுறன்.. சரியா இண்டையில இருந்து ஒரு வருசத்தில,, இருபதாக்கிக் காட்டிறன் அண்ணை எண்டான்!

 

பத்தை அவனிட்டைக் குடுத்திட்டன்!

ஒரு பத்தை.. இரண்டு பிள்ளையளின்ர பேரிலையும் ஆளுக்கு அஞ்சஞ்சா பாங்கில போட்டு வைச்சன்!

சரி ..நல்லது தானே செய்திருக்கிறாய்? மிச்சத்தை ஊருக்கு அனுப்பினையாக்கும்?

இல்லை.. மச்சான்.. சந்தோசத்தில கொஞ்சம் தண்ணியைப் போட்டிட்டுப் படுத்தன்! கொஞ்சம் அயந்து போற நேரத்தில.. மாதா கனவில வந்தா..! வந்து என்ன சூட்டி... என்னை மறந்திட்டியே எண்டு கேட்டா!

அண்டைக்குப் இரவே ரயிலைப் பிடிச்சு.. மாதாவின்ர உண்டியலில மிச்சமிருந்த அவ்வளவத்தையும் கொண்டேப் போட்டிட்டன்!

வாக்குத் தவறக் கூடாது என்றவனைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாகக் கிடந்தது!

பிறகென்ன  நடந்தது...சூட்டி?

கடையுக்குள்ள ஒரே கரப்பொத்தான் செத்துக்கிடக்குது எண்டு ஆரோ ஒரு புண்ணியவான் போன் அடிச்சுத் தன்ர சமூக சேவையைச் செய்து விட… கடை பூட்டுப் பட்டுப் போச்சுது……! அதோட ஒரு பத்துப் போச்சா?

பாங்கில போட்ட காசை எடுத்து..நாள் வட்டிக்குக் குடுக்க வெளிக்கிட ...வட்டிக்குக் காசு வாங்கினவனை ஊருக்குத் திருப்பியனுப்பிப் போட்டாங்கள்! அதோட மற்றப் பத்தும் போச்சா?

வேலையில விழுந்து.. விழுந்து விளையாடுற விளையாட்டும்.. ஒரு நாள் விபரீதமாய்ப் போய்க் கொஞ்சம் எக்கச் சக்கமாய் அடி பட்டுப் போச்சுது…! அதோட இருந்த காலும் போச்சுது... என்றவனை உன்னிப்பாகப் பார்த்த படியே......,

இனி என்ன செய்யப் போற பிளான்...சூட்டி?

இன்னுமொரு ரைபெக்ரா  விழாமலா போகப்போகுது?

அது தான் மாதாவுக்குக் பக்கத்திலேயே வந்திருக்கிறன்!

முற்றும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்டைக்குப் இரவே ரயிலைப் பிடிச்சு.. மாதாவின்ர உண்டியலில மிச்சமிருந்த அவ்வளவத்தையும் கொண்டேப் போட்டிட்டன்!

மாதவுக்கு பகிடியும்  !தெரியாது வெற்றியும் தெரியாது....என்று சொல்லி காசை அடிக்கிறதை விட்டிட்டு....மனுசன் லூஸ் மனுசனாய்யிருக்குது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிக்கொஞ்சப்பேரை  எனக்கும் தெரியும்

வென்றால் வீட்டடையே வாங்கலாம் என நினைத்து வீட்டு வாடகைப்பணத்தை இதில போட்டுட்டு வீதிக்கு வந்தவர்கள்

மனைவி பிள்ளைகளின் நகைகளை திருடி இதில போட்டுட்டு வீட்டில அவமானச்சின்னமா வாழ்பவர்கள்

மனசு முழுவதும் இதையே நினைத்துக்கொண்டு ராசா மாதிரி போக்குக்காட்டி வாழ்பவர்கள்

வணக்கம் என்று கை கொடுத்தால் கையை விடாது கொஞ்சப்பணம் தரஏலுமே இன்னும் 1 மணித்தியாலத்தில் தாறன் என்பவர்கள்

இப்படி

இப்படி

பலர்....

ஆனால் ஒரு எல்லைக்கு மேல் போய்விட்டால்

இவர்களும் மனநோயாளிகளே..

திருத்துவதும்  திருந்துவதும் மிகமிக கடினம்

 

நன்றியண்ணா

கதைக்கும் பகிர்வுக்கம்...

அடுத்த அடுத்த கதைகளை தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரில் எத்தனை முகங்கள். தங்களின் கையாலாகாத்தனத்தை மறைக்க இப்படியான ஆசாமிகள் சாமிகளை குற்றம் சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். கதை நன்றாக உள்ளது, நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆக்களின்ரை வசன நடையை அச்சடிச்சமாதிரி எழுதியிருக்கிறியள் புங்கை...
உண்மையிலையே நீங்கள் ஒரு பெரிய மடுமாதா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மாதவுக்கு பகிடியும்  !தெரியாது வெற்றியும் தெரியாது....என்று சொல்லி காசை அடிக்கிறதை விட்டிட்டு....மனுசன் லூஸ் மனுசனாய்யிருக்குது..

மாதா எவரிடமும் கையேந்தியது இல்லை! பக்தர்கள் தான் 'வலிந்து' மாதாவிடம் பந்தயம் பிடிக்கிறார்கள்!

நானும் எனது உறவுகளை நீண்ட காலமாகப் பிரிந்திருந்த காலம்!

ஒவ்வொருவருக்கும் அவர்களது 'உயரத்தின்' அளவுக்கு மெழுகு திரி வாங்கிக் கொழுத்தினேன்!

தர்க்க ரீதியாகப் பார்க்கப் போனால்..அந்த மெழுகுதிரிகளுக்கான பணத்தை ஊருக்கு அனுப்பியிருக்கலாம்!

ஆனாலும் எனக்கு அன்றும் இன்றும்.. எனது செயல் முட்டாள் தனமாகத் தெரியவில்லை!

அது போலத் தான் 'சூட்டியின்' செயலும் என எண்ணுகின்றேன்!

வருகைக்கு நன்றி... புத்தன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதா எவரிடமும் கையேந்தியது இல்லை! பக்தர்கள் தான் 'வலிந்து' மாதாவிடம் பந்தயம் பிடிக்கிறார்கள்!

நானும் எனது உறவுகளை நீண்ட காலமாகப் பிரிந்திருந்த காலம்!

ஒவ்வொருவருக்கும் அவர்களது 'உயரத்தின்' அளவுக்கு மெழுகு திரி வாங்கிக் கொழுத்தினேன்!

தர்க்க ரீதியாகப் பார்க்கப் போனால்..அந்த மெழுகுதிரிகளுக்கான பணத்தை ஊருக்கு அனுப்பியிருக்கலாம்!

ஆனாலும் எனக்கு அன்றும் இன்றும்.. எனது செயல் முட்டாள் தனமாகத் தெரியவில்லை!

அது போலத் தான் 'சூட்டியின்' செயலும் என எண்ணுகின்றேன்!

வருகைக்கு நன்றி... புத்தன்!

மெழுகுதிரி ஒகே......ஆனால் சீட்டுக்காசு .....(கீ..கி..கி)........மற்றவர்களின் நம்பிக்கையை நாம் குறைசொல்ல முடியாது அவருக்கு அதனால் மனநிறைவு கிடைக்குது என்றால் நாம் யார் தடுத்து நிறுத்த..............பட்  இலவசமாக கருத்து சொல்லலாம்......கி..கி..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எதோ உங்கள் எழுத்து சரியாக இல்லை போல் இருக்கே புங்கை. மனதார இந்தக் கதையை நீங்கள் எழுதவில்லையோ ???

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னுக்குப்பின் முரணாக உளறுகிறார். அது பயங்கர வாத அமைப்பென்றால் ஏன் காட்டிக்கொடுக்கும்வரை அந்த அமைப்பில் இருந்தார்? அதில் அங்கம் வகித்த இவரும் பயங்கரவாதியே. இவரது பயங்கரவாதம் இன்னும் தொடர்கிறதே, அப்படியெனில் புலிகள் இயக்கம் விடுதலைக்காக போராடியது, இது போன்றதுகள் பயங்கரவாதியாக அங்கு இயங்கியிருக்கின்றன அதனாலேயே தண்டனைக்கு பயந்து ஓடி இலங்கை பயங்கரவாதத்தோடு இணைந்து தமது பயங்கரவாதத்தை முன்னெடுக்கின்றன. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எப்படி இவரால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியுமென்பதையும் இவர்தான் விளக்க வேண்டும். 
    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.