Jump to content

மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ்


Recommended Posts

மெட்ராஸ் டே... ( மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்-24)

 

tamilmahan.jpg- தமிழ்மகன்

டற்கரையை ஒட்டிய நரிமேட்டையும், கரும்புத் தோட்டத்தையும் ஒரு வெள்ளைக்காரன் 16 ஆயிரம் வராகன் கொடுத்து வாங்கிய தினம்.... இதை நாம் மெட்ராஸ் தினம் என்று கொண்டாடுவது சரியா?

வெங்கடப்ப நாயக்கரின் கன்ட்ரோலில் இருந்த இந்த கடற்கரைப் பகுதியை பிரான்ஸிஸ் டே என்ற வியாபார ஏஜென்ட்,  இதே ஆகஸ்ட் 22-ம் தேதிதான் வாங்கினார். பிறகு அவர்களின் பாதுகாப்புக்காகவும், நமக்கும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்லி கோட்டை கட்டினார்கள். சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்தார்கள். வரி வசூலித்தார்கள். நம்மை ஆட்சி செய்தார்கள். அடிமைப்படுத்தினார்கள். அடக்கு முறை செய்தார்கள். இந்த நாளை நாம் கொண்டாட வேண்டுமா? என்று கேட்பவர்கள் ஒரு சாரார்.

எல்லா தீமையிலும் சில நன்மைகள் உண்டு. நான்கைந்து கிராமங்களாக, ஏரிகளாக, தோப்புகளாக இருந்த பகுதியை உலக நகரங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை வெள்ளைக்காரர்களையே சாரும். கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மண்ணடி காளிகாம்பாள் கோயில் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில், திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோயில் போன்றவை சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

அந்தக் கோயில்களுக்கும் முன்னரே இங்கே மக்கள் கிராமங்களாக வாழ்ந்தனர். ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவை கிராமங்கள்தான். பிரான்ஸிஸ் டே வாங்கிய பிறகுதான் இதற்கு நகரத்துக்கான முகாந்திரங்கள் ஏற்பட்டன. ஒருவகையில் இந்தக் கொண்டாட்டங்கள் சரிதான்.

'மெட்ராஸ் டே' என்பது சரிதானா என்பது போலவே மெட்ராஸ் என்பது இன்று யாருக்குச் சொந்தமானதாக இருக்கிறது என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.

madras%20old.jpg

கூட்டிக்கழித்துப் பார்த்தால் சென்னையில் பிரபலமான பிரமுகர்கள் 1000 பேர் இருப்பார்கள். இவர்கள்தான் சினிமா, அரசியல், வணிகம், கலை என்ற பெயர்களில் அடிக்கடி செய்திகளில் வெளியாகிறார்கள்.

தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி, எம்.ஜி.ஆர். ரஜினி, கமல்... கே.வி மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, அஜித், விஜய், தனுஷ், சிம்பு.... பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ், டி.ஆர்., வசந்த், எஸ்.ஜே.சூர்யா, பத்மினி, சரோஜாதேவி, ரோஜா, குஷ்பூ, தேவயானி, ராதா, அம்பிகா, காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி... போன்ற எண்ணற்ற சினிமா கலைஞர்கள் புகழின் உச்சியைத் தொட்டனர்.

பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா டி.ஆர்., மூப்பனார், வாசன், ப.சிதம்பரம், வைகோ, விஜயகாந்த் என எத்தனையோ அரசியல் பிரமுகர்கள் சென்னையில் வலம் வந்தவர்களாகவும், வந்து கொண்டிருப்பவர்களாகவும் உள்ளனர்.

madras%20day%201.jpg

பாரதியார், புதுமைப்பித்தன், க.நா.சு, கல்கி, தி.ஜானகிராமன், கண்ணதாசன், வைரமுத்து, சுஜாதா என எத்தனையோ எழுத்தாளர்கள் கோலோச்சியதும், கோலோச்சிக்கொண்டிருப்பதும் சென்னையில்தான்.

அண்ணாமலைச் செட்டியார், மெய்யப்ப செட்டியார், அழகப்ப செட்டியார், ஸ்பிக், அமால்கமேஷன், டி.வி.எஸ்.,  கோயங்கா, ஜெமினி நிறுவனம், சன் நெட்வொர்க் போன்ற எண்ணற்ற நிறுவனங்கள்- நிறுவனர்களின் தொழில் இடமும் சென்னைதான்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, ருக்மணி அருண்டேல், லால்குடி ஜெயராமன், வீணை காயத்ரி, சுதா ரகுநாதன் என எத்தனையோ இசைக்கலைஞர்களின்  புகழ் கொடி பறந்ததும், பறந்துகொண்டிருப்பதும் சென்னையில்தான்.

- இப்படி இந்த நேரத்தில் நினைவுக்கு வந்த சிலருடைய பெயரை இங்கே சொல்லியிருக்கிறேன்... இவர்கள் யாருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் இல்லை. இன்னும் இரண்டு மூன்று தலைமுறை இங்கேயே அவர்கள் வாழ நேர்ந்துவிட்டால், ஒருவேளை அவர்கள் தங்கள் சொந்த ஊர்களை சொந்தம் கொண்டாடாமல் மாறிவிடக்கூடும்.

madras%20day%202.jpg

விஷயம் இதுதான்... சென்னை என்பது சில நூறு பிரபலங்களால் ஆனது. அதில் சென்னையின் மண்ணின் மைந்தன் சில பத்து பேர்கள்தான். சென்னையில் உள்ள பிரபல ரௌடிகளும்கூட சென்னையைச் சேர்ந்தவர்கள்  இல்லை என்பதே வேடிக்கையான உண்மை.

மதுரை, நெல்லை, கோவை, திருச்சி என சென்னை என்பது தமிழக மக்களால் நிரம்பியது. இங்கே குஜராத்தி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, வங்காளம், பஞ்சாபி என எல்லா இந்திய பிராந்திய மக்களும் வசிக்கிறார்கள். பெரு நகரம் அப்படி கலவையான மக்களைக் கொண்டதாகத்தான் இருக்கும். இத்தனை சுவாரஸ்யங்களும் கூட சென்னைக்கான ஒரு அடையாளம்தான்.

ஆனால் மெட்ராஸை சொந்தமாகக் கொண்டவர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடி கிராமத்தவர்களை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கிறார்கள்.

madras%20day%203.jpg

தினக்கூலிகளாக, ஆட்டோ ஓட்டுநர்களாக, கட்டடக் கொத்தனார்களாக, ரிக்‌ஷா ஓட்டுபவர்களாக, கூவம் கரை ஓரம் ஒதுங்கிப் போனவர்களாகப் பெரும்பகுதி சென்னை கிராமத்து மக்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

தருமமிகு சென்னை என்கிறார் வள்ளலார் பெருமான். தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்கிறது சரித்திரம். இந்த சென்னை நாளில் அதை நினைகூர விரும்புகிறேன்.

நிறைந்தது!

http://www.vikatan.com/news/article.php?aid=51363

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.    தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல்   அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.   அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.   அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும்.  நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
    • அல்..வாயான்  ..என்பதை வைத்து ...அல்லாவின் ஆள் என்றொருவர் முதல் ஒரு திரியில் குறிப்பிட்டார்.. இப்ப நீங்கள்  புளட்  என்கிறியள் .. நான் ஏங்கைசாமி என் தலையை மோதுவன்...😁...சத்தியாமாச்    சொல்லுறன்........... தான்.
    • தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே. இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன். நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை. ———- Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣 Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750.  இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.