Jump to content

இன்று பகவான் சத்ய சாயி பாபாவின் ஜனனதினம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவதாரத்தின் தத்துவத்தை விளங்கிக் கொண்டால் உண்மையான ஆனந்தத்தை அடைவீர்கள்

[23 - November - 2006] [Font Size - A - A - A]

* இன்று பகவான் சத்ய சாயி பாபாவின் ஜனனதினம்

-வைத்திய கலாநிதி ச.சிறீதேவா-

இந்தியாவில், ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள புட்டபர்த்தி எனும் கிராமமொன்றில் 1926, நவம்பர் 23 ஆம் திகதி சுவாமி சத்யசாயி பாபா அவதரித்தார்.

கடவுள் அவதாரமெடுப்பதற்கான காரணம், மாயையிலிருந்து தம்மை விடுவித்த நல்வழியினைக் காட்டுமாறு கோடிக் கணக்கானவர்கள் இறைவனைக் கேட்கும் போது இத்தகைய மானிடக் குரல்களின் அதிர்வு பூரண அவதாரமொன்றினை உருவாக்குகின்றது. உலகில் நீதி அழிந்த அநீதி தலைதூக்கும் வேளைகளிலெல்லாம் தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக நான் மனித உடலெடுத்துத் தோன்றுகின்றேன் என பகவான் கிருஷ்ணர் கூறுகின்றார்.

சுவாமியின் அவதாரத்திற்கு முன்னராக மகாவிஷ்ணு மத்சமாகவும், வராகமாகவும், வாமனனாகவும், நரசிம்மனாகவும், பரசுராமனாகவும், இராமராகவும், கிருஷ்ணராகவும், புத்தராகவும் அவதாரங்களை எடுத்துள்ளார்.

1940 ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று இளம்பிராய சத்ய நாராயணனாக சுவாமி இவ்வாறு தமது மூத்த சகோதரன் சேஷாமாவிற்கும் வெளிப்படுத்தினார். "நான் உங்கள் குடும்பத்திற்கு உரியவனல்ல, நான் இவ்வுலகில் பூர்த்தி செய்ய வேண்டிய பணிகள் பலவுள்ளன. இப்போது நான் "சாயிபாபா" சாயிபாபா என்பதன் பொருள் தெய்வீகத்தந்தை, தெய்வீக அன்னையென்பதாகும்.

சத்யசாயி மேற்கொள்ள வேண்டிய ஆறு பணிகளுள்ளன. உலகில் தார்மீக வாழ்வு வாழ்வதற்காக வழிகாட்டல்களை அமைத்தல்; முரண்பாடுகளையும் வெறுப்புகளையும் தணித்தல்; தீயவர்களால் ஒடுக்கப்படும் நல்லவர்களை பாதுகாத்தல்; பல்வேறு உரையாசிரியர்களினால் இருளாக்கப்பட்ட வேதங்களின் உண்மைச் செய்திகளை வெளிப்படுத்தல்; இப்பூமியிலிருந்து தீயவர்களின் சுமையினை நீக்குதல்; இரட்சகராகத் தோன்றுவேன் எனக் கடந்த காலங்களில் நான் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுதல் என்பனவாகும்.

சுவாமியின் நிறைவேற்றுதல்களை எடுத்துப் பார்க்கும் போது அவர் தமது தெய்வீக உரைகள், எழுத்துகள் மூலமாக ஆன்மீக, சமய மற்றும் ஏனைய விழுமியங்கள் அடங்கிய சகல அம்சங்கள் தொடர்பான அறிவுக் கடலையும், வழிப்படுத்தலையும் வழங்கியுள்ளார்.

அவர் ஆரம்பித்து வைத்துள்ள விழுமியக் கல்வி முறையானது இந்தியாவிலும் ஏனைய பல நாடுகளிலும் படிப்படியாக பரவி வருகின்றது. வாழ்வதற்கான வழிமுறையாகவும் இலட்சியமாகவும் மனித விழுமியங்கள் அமைய வேண்டுமென சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

மாணவருக்கென சாயி பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், விடுதிகளையும் இந்தியா எங்கும் அமைந்துள்ளார். புட்டபர்த்தியிலும், வெண்வயலிலும் இலவச சிகிச்சை விசேட வைத்தியசாலைகளை அமைத்துள்ளார்.

1972 இல் சத்தியசாயி மத்திய அறநிலையம் நிறுவப்பட்டது. நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு ஆந்திர பிரதேசத்தில் குடி நீரினை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். உலக சமய நூதனசாலை புட்டபர்த்தியில் அமைந்துள்ளது. சிகிச்சைக்கு பயனளிக்காத வியாதிகளை தமது அருளினால் குணப்படுத்தியுள்ளார். ஆபத்து நிலைகள், விபத்துகளிலிருந்து தமது பக்தர்களை காப்பாற்றியுள்ளார்.

பல அற்புதங்களை சுவாமி மேற்கொண்டு, பக்தர்களை தம்பால் கவர்ந்துள்ளார். இரு வழி தியான முறைகளை அதாவது உபநிடத வேதமந்திர உச்சாடன முறையினையும் ஜோதியில் தியானிக்கும் முறையினையும் விளக்கியுள்ளார்.

1965 இல் புட்டபர்த்தியில் சத்ய சாயி சமித்தி என ஆரம்பிக்கப்பட்டு 1968 இல் சத்திய சாயி சேவா அமைப்பாகி இன்று 137 நாடுகளில் இத்தகைய நிலையங்கள் உள்ளன.

உதவிகளை நாடி நிற்போருக்கு ஆதரவு வழங்குவதே இந்நிறுவனங்களின் நோக்கமாகும். கல்வி, சேவை, ஆன்மீகம் ஆகிய சேவைப் பிரிவுகளைக் கொண்ட ஒவ்வொரு அமைப்பும் நாராயண சேவை என அழைக்கப்பட்டு, இறைவனுக்கு ஆற்றும் சேவை, மனிதனுக்கு ஆற்றும் சேவையாகும் என விளக்கி இதன் மூலம் சுவாமியின் அனுக்கிரகத்தை அடையாலம் என பொருள்படுகின்றது.

சுவாமியின் போதனைகள் அன்பையும் சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அவர் அன்பை ஏற்று அருள்புரிபவர். ஒற்றுமையின் சக்தியை எமக்கு எடுத்துக் கூறுபவர். தமது போதனைகள் புதியவை என அவர் கூறவில்லை. இன்றைய உலக நிலைமைகளுக்கு ஏற்றவை எனக் கூறுகின்றார். இதுவே சனாதன தர்மம் எனப்படுகின்றது. நிலையான தர்மமான இது சகல மதங்கள், நன்னடத்தை விதிகள், உலக சட்டங்கள் என்பவற்றின் அடிப்படையாகவுள்ளது.

தெய்வம் மனித அவதாரம் எடுப்பதன் நோக்கம் மனிதனுக்கு அன்பு என்றால் என்ன என்பதை அறிய வைப்பதற்காகும்.

திரேதாயுகத்தில் இராமர் சத்தியம், தர்மம் எனும் பண்புகளின் உருவமாகவும், துவாபரயுகத்தில் பகவான் கிருஷ்ணர் சாந்தி, பிரேமை என்பவற்றின் பண்புருவமாகவும், தோன்றியது போன்று, இன்று சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை எனும் நான்கு பண்புகளின் பண்புருவமாக எமது அவதாரம் தோன்றியுள்ளார்.

நீங்கள் இறைவனிடத்து காட்டும் அன்பு நிறைவானதாக இருத்தல் வேண்டும். சகலரையும் நேசிக்கும் போதுதான் கடவுளை நாம் நேசிப்பதாக அமையும். யாரையேனும் வெறுக்கும் போது கடவுளையே வெறுப்பதாக அமையுமென்பதே அவதாரத்தின் செய்தியாகும்.

ஒற்றுமை பற்றிக் கூறும் சுவாமி "ஒன்றிலிருந்து பிளவுபட்ட பன்மையே இவ்வுலகமாகும். ஒருமையை இறைவனிடத்து மாத்திரமே காணலாம் என்பதால் சகல மதங்களினதும் ஒன்றுபட்ட உருவமே கடவுளாகின்றது"

நாம் எமது புலன்களிடத்து பற்று வைத்திருத்தலே விருப்புகள் ஏற்பட்டு அவை சோகத்திற்கு வழிவகுக்கின்றன. இது சுய அறிவை மறைக்கின்றது. இறைவனிடத்து மனதை பதியவைத்தலே சிறந்த வழி. நாட்டின் எதிர்காலம் இளைஞரிடம் உள்ளது என சுவாமி கூறுகின்றார்.

சேவை சாதனை, தியாகம், ஆன்மீகம் என்பவற்றில் ஈடுபட முதுமை வரை காத்திராது இளமையிலேயே ஆரம்பித்தல் நல்லது என சுவாமி கூறுகின்றார்.

சுவாமியின் தெய்வீக உரைகளில் "மகாவாக்கியங்கள்" சில எப்போதும் இடம்பெறுகின்றன. நெடுங்கால முனிவர்களாலும், ரிஷிகளாலும் கூறப்பட்டவை இவை, "நானே கடவுள், கடவுளே நான் என்பதே இவற்றின் அடிப்படை உண்மை. வேதாகமங்கள் ஞானிகள் கண்டறிந்த உண்மைகளை விளக்குவன.

பக்தியோகத்தின் மூலம் மனிதன் தீய குணங்களைக் களைந்து அமைதியும் அன்பும் பெறுகின்றான். அவதாரத்தின் தத்துவத்தை விளங்கிக் கொண்டால் உண்மை ஆனந்தத்தை அடைவீர்கள். ஆன்மீகத்தை அடைய விரும்புவோர் தியானிக்கும் போது மாத்திரமன்றி எவ்வேளையிலும் யோகிகளாக இருத்தல் அவசியம். மகிழ்ச்சியின் போது கடவுளைப் போற்றுதலும், துன்பத்தின் போது தூற்றுதலும் தவறு. தியானத்தின் மூலமாகவே இறைவனுடன் நித்திய தொடர்பினை ஏற்படுத்தலாம்.

உங்கள் கடமையை சரிவரச் செய்வதே சிறந்த யோகநிலையாகும். எந்தவொரு சமயத்திலும் நான் எதைச் செய்கின்றேனோ அதிலேயே கவனமாக இருக்கிறேன். இவ்வுலகில் நிகழ்வன யாவும் விரைவாக பரந்துசெல்லும் முகில்கள் போன்றவை. நடக்க விருப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே நடப்பவை யாவும் தெய்வச் செயல் என எண்ணுங்கள்.

உங்களைமானுட உடலாக எண்ணினால் மாத்திரமே கவலைகள் தோன்றுகின்றன. நிதானபுத்தி தன்னை ஆத்மா என உணர்பவனிடத்து மாத்திரமே காணப்படுகின்றது. உலகத்தை இயக்கி, நடத்துவது இறைவனாகும்.

பரதகலாசாரத்தில் மாத்திரமே மிருகங்கள் புனித தன்மையினமாக கருதப்படுகின்றன. தெய்வீக அன்பை மிருகங்களிடத்தில் காட்ட வேண்டும். உபநிடதங்களின் சாரத்தை சுவாமி இலகுவாக விளக்கியுள்ளார். வேதங்கள் எல்லாவற்றையும் கற்க வேண்டுமென்றில்லை. எனினும் ஆன்மீக தத்துவங்களின் அடிப்படையான வேதாந்தத்தில் சகல சமயங்களும் அடங்கியுள்ளன. ஒரே உண்மையின் பல்வேறு தோற்றங்களே பல்வேறு சமயங்கள் என பாபா கூறுகின்றார்.

கடவுளை பல்வேறு நாம ரூபங்களில் வழிபட்டாலும் கடவுள் ஒருவனேயாகும். கடவுளை மனதால் உருவகிக்க முடியாமை காரணமாகவே உருவ வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. கடவுளை உணர்ந்ததின் பின் உருவ வழிபாடு தேவையில்லாது போகின்றது. "இந்த அவதாரத்தினை நான் மேற்கொண்டதன் ஒரு நோக்கம் நாமஸ்மரணத்தில் நம்பிக்கை வைக்கச் செய்வதாகும்"

கருமம், பக்தி, ஞானம் யாவும் இணைந்ததே யோகம் எனப்படுகின்றது. வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலையைப் பேணுதல் வேண்டும். எல்லா சந்தர்ப்பங்களிலும் கலங்காது சமநிலையை பேணுதல் வேண்டும். இந்த நிலையே `சத் சித் ஆனந்தம்' என சுவாமி குறிப்பிடுகின்றார்.

கர்ம யோகம் நாம் வாழ்வதற்கான செயல்முறையாகும். இந்தக் கர்மமே பிறப்பிற்குக் காரணமாகின்றது. தனிமனிதனின் துன்பங்களை போக்குவதற்காக இறைவன் அவதாரம் எடுப்பதில்லை. ஆனந்தத்தை தருவதற்கே அவதரிக்கின்றார். எமது கடந்த கால கர்மவினையே இன்ப துன்பமாகின்றது. சூரியனும் ஒளியும் போன்றதே கன்மமும் ஜிவாத்மாக்களுமாகும். ஞானயோகம் இறைவனுக்கு நிகரான ஒளியாகும். மனித உருவில் அறிவு எனும் தெய்வ ஒளியைக் குறிக்கின்றது. எமது பகுத்தறிவு தூய்மையடைகையில் உள்ளொளி அதிக பிரகாசத்துடன் பிரகாசித்து மெய்யுணர்விற்கு வழிகாட்டுகின்றது.

இன்பமும், துன்பமும் மாறி மாறி வருபவையாகும். இந்த அடிப்படை நம்பிக்கையுடன் உலகியல் வாழ்க்கையை வாழ வேண்டும். எமது கடந்த கால கர்மவினையே இன்பதுன்பமாக இவ்வாழ்வில் நிகழ்கின்றன. தெய்வத்திடம் காட்டும் பக்தியிலேயே நிலையான இன்பம் ஏற்படுகின்றது. "மனித இனம் இன்பமுறவே நான் அவதரித்துள்ளேன். உங்களிடையே வாழும் போது மானிடனாக தோன்றுகின்றேன். தனிமையில் இருக்கும் போது இறைவனாகின்றேன்."

"உங்கள் அன்பையே எனக்குத் தாருங்கள். அப்போது நீங்கள் என்னை வந்தடைவீர்கள். உங்களுக்கு என்ன நேர்ந்தாலும் நான் கைவிடமாட்டேன். நீங்கள் எங்கிருந்தாலும் என் அருகிலேயே இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து தூய அன்பு வெளிப்பட்டு சகலரையும் சென்றடையட்டும். தெய்வத்தன்மையை அடைந்து உலக வாழ்வில் ஈடுபடுங்கள். மனதில் சஞ்சலங்கள் நீங்கிவிடும். நான் மனித உருவம் தாங்கி வந்ததன் அர்த்தம் மனித வாழ்வு பயன்படுந்தன்மையுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே."

ஆகவே, சாயி பக்தர்களே எமது பாபா எமது நண்பர். வழிகாட்டி, ஆலோசகர் என எல்லாமாக உள்ளவர். சுவாமியின் விழிகள் அன்பை எம்மிடத்து சொரிகின்றன. சுவாமியின் போதனைகளை பின்பற்றி பயன்மிக்க வாழ்வினை வாழவேண்டும்.

http://www.thinakkural.com/news

------------------------------------------------------------------------------------------------------------------------------

மேல்தட்டு மக்களின் குரங்காட்டி! (ஒளிவடிவில்):

அடித் தட்டு மக்களின் குரங்காட்டியை உங்களுக்கு தெரிந்திருக்கும். குரங்காட்டியும் ஏழையாக இருப்பார். அவர் செய்கின்ற வித்தைகளை கண்டு களிப்பவர்களும் பெரும்பாலும் ஏழைகளாகத்தான் இருப்பார்கள். அந்த ஏழைகள் போடுகின்ற கொஞ்சக் காசில்தான் குரங்காட்டியும் தன்னுடைய பிழைப்பை ஓட்டுவார்.

ஆனால் மேல்தட்டு மக்களுக்கு குரங்காட்டி போன்று வித்தை காட்டுகிற ஒருவரும் இருக்கிறார். அவருடைய வித்தைகளை கண்டு களிப்பவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களாக, பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் போட்ட பெரும்பணத்தில் அந்த வித்தைக்காரரும் பெரும் கோடீஸ்வரராக ஆகி விட்டார். அத்துடன் வித்தை காட்டுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் வித்தை செய்யும் காட்சிகளை தொடர்ந்து எமது வாசர்களுக்காக தர இருக்கிறோம்

http://www.youtube.com/watch?v=3hbKaip5xA8

http://www.webeelam.com/

Link to comment
Share on other sites

அப்போ பகவானுக்கு பக்கத்தில 4 பக்தைகள் தங்கள் ஆருயிரை கொடுப்பார்கள்

பகவானை ஆனந்தப்படுத்த :P :P :P

Link to comment
Share on other sites

பகவான்ர பெருமைய அடிக்கடி BBC ல பேசுவினம்... ஆளப்பாக்க தெரியுது அம்புறோசுக் கள்ளனெண்டு

Link to comment
Share on other sites

ஓம்..ஓம்....இவருடைய சொத்துகளின் கணக்குகள் கடந்த சில வருடங்களிற்கு முன்னர்

நெதர்லாந் பத்திரிகை பட்டியல் போட்டு காட்டினது...அதை பார்த்து பயந்தே போனேன்...

இவருக்கேன் இத்தனை கார்....14...மிக சொகுசு...அதே வேளை விலை உயர்ந்த

முன்னனி இரகங்கள்

அத்தோடு இவருக்கு வேலை ஆட்கள்..

அடடா...டா..என்னமா வாழுறான் பாவி...

உவரை சாமியென்று ஒரு கூட்டம் வணங்குது...நினைச்சா சிரிப்பா கிடக்கு..

இந்த அறிவியல் உலகத்தில் இப்படியும் ஒரு மூடதனத்தில் எங்கட மக்கள் இருக்கினம் என்றால் யோசிச்சு பாருங்கோ..எப்படி யென்று...கோவிந்த...கோவிந்தா....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இவரை பற்றி எனாப்பு நைனா தமிழர்/தமிழ் பகுதியில் போட்டனீங்கல் உவரை பற்றிய பல வீடியோக்களை பாத்தனான்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அடுத்த முறை யாராவது இந்த 'பகவானை' பாக்கப்போனால் எனக்காக ஒரு உதவி செய்ய வேணும்.

எங்கட நாட்டில இவ்வளவு சனம் கஷ்டப்படூதுகள், இந்தத் தமிழீழம் எப்ப கிடைக்குமெண்டொருக்காக் கேளுங்கோ.

எங்கட வெளிநாட்டிலேருக்கிற சனம் பவுண் பவுணாக் கொண்டுபோயல்லே குடுக்குதுகள். எல்லாம் அறிஞ்ச பகவான் இந்த உதவியை செய்யமாட்டாரெண்டே நினைக்கிறியள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.