Jump to content

பழங்களின் தூய தமிழ் பெயர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
APPLE - குமளிப்பழம்,அரத்திப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்
DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்
EUGENIA RUBICUNDA - சிறுநாவல்
GOOSEBERRY - நெல்லிக்காய்
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT - பம்பரமாசு
GUAVA - கொய்யாப்பழம்
HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE - அரைநெல்லி
JACKFRUIT - பலாப்பழம்
JAMBU FRUIT - நாவல்பழம்
JAMUN FRUIT - நாகப்பழம்
KIWI - பசலிப்பழம்
LYCHEE - விளச்சிப்பழம்
MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்
PAIR - பேரிக்காய்
PAPAYA - பப்பாளி
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
PEACH - குழிப்பேரி
PERSIMMON - சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
PINEAPPLE-அன்னாசிப்பழம்
PLUM - ஆல்பக்கோடா
POMELO - பம்பரமாசு
PRUNE - உலர்த்தியப் பழம்
QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY - புற்றுப்பழம்
RED BANANA - செவ்வாழைப்பழம்
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
SAPODILLA - சீமையிலுப்பை
STAR-FRUIT - விளிம்பிப்பழம்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
SWEET SOP - சீத்தாப்பழம்
TAMARILLO - குறுந்தக்காளி
TANGERINE - தேனரந்தம்பழம்
UGLI FRUIT - முரட்டுத் தோடை
WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE – விளாம்பழம்
 
நன்றி முகனூல்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் இவ்வளவு கனிகள் இருந்தாலும் மல்கோவா மாங்கனிகளின் சுவையே தனி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலைபோவார் பனம்பழத்தை மறந்திட்டாங்கள்..... ஐ மீன் பனங்காய்  :lol:

Link to comment
Share on other sites

தமிழில் இவ்வளவு கனிகள் இருந்தாலும் மல்கோவா மாங்கனிகளின் சுவையே தனி!

இது கமலாப் பழத்தை காயாக சாப்பிடா தவர்களின் கருத்து :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கமலாப் பழத்தை காயாக சாப்பிடா தவர்களின் கருத்து :D

இது கொய்யாப் பழம் சாப்பிடாதவர்களின் கருத்து.

Link to comment
Share on other sites

BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லிர் இப்படி அபத்தங்களை உருவாக்குவது.  இங்கு குறிப்பிட்ட பல பழங்கள் எங்கள் கலாச்சாரத்தில் இல்லை, 

கலைசொல் ஆக்கம் அல்லதி திசைச் சொற்களை இணைத்துக்கொள்ளுவது தமிழுக்கு வளக்கம்தான்.  உருளைக் கிளங்கு மிழகாய் போன்றவை நம்முன்னோர் ஆக்கிய கலைச்சொற்கள்தான். 

STRAWBERRY - செம்புற்றுப்பழம் போன்ற அபத்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சிரொபெறி என்றுதான் அழைப்பேன். இந்த விடயங்கல்தொடர்பாக நிறைய விவாதங்கள் தேவை.

வன்னியில் புதிய நாட்காட்டியில் வெளிவந்தபோது தேவநேயப்பாவாணரை அடியொற்றி சனிக்கிளமைக்கு காரி என்பதுபோன்ற பதங்கள் பயன்பட்டுத்தப் பட்டிருந்தது.  நான் நடைமுறைத் தமிழ் வளக்கில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.என்னுடைய ஆட்ச்சேபனையை பதிவு செய்தேன். தேவநேபாவாணர் மிகவும் முக்கியமானவர்தான். ஆனாலும் கடவுள் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

STRAWBERRY - செம்புற்றுப்பழம் போன்ற அபத்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சிரொபெறி என்றுதான் அழைப்பேன். இந்த விடயங்கல்தொடர்பாக நிறைய விவாதங்கள் தேவை.

 

strawberry.jpg

STRAWBERRY ஐ....  "வைக்கோல் பழம்" என்று அழைத்தால், நன்றாக இருக்குமே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலந்தைப் பழமும் இங்கில்லை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு ஒர் சந்தேகம். யாரும் தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.
 
1. அத்திப்பழமா அல்லது அத்திக்காய் என்பது சரியா?
 
2. "அத்திப்பூ பூத்தால் போல் என்கின்றேமே", அப்படியானால் அத்திப்பூ எப்போதாவதுதான் பூக்குமா? சராச‌ரியாக எத்தனை வருடத்திற்கு ஒருமுறை இது பூக்கும்? 
 
3. மேலும் இது சாப்பிடக்கூடிய ஒர் பழமா/காயா?
 
யாராவது தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) காய் ஆக இருக்கும் போது காய். பழுத்த பின் பழம்?

2) நான் கேள்விப்பட்டது அப்படித்தான். அருமையாக தான் அத்தி பூக்குமாம்.

3) ஆம்

http://ta.m.wikipedia.org/wiki/அத்தி_%28தாவரம்%29

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் சொல்வது மிகவும் சரி. ஏற்கனே தமிழ் பெயர் உள்ளவற்றை தவிர ஏனையதை அப்படியே பாவிக்கலாம்.

உதாரணம் ஐஸ் கிரீம். குளிர் களி என்று ஏன் காமெடி பண்ணனும்.

இதில் ஆங்கிலேயன் கெட்டிக்காரன். கட்டமரான் (கட்டுமரம்), அனிகட் (அணைக்கட்டு), மிளகுடன்னி (மிளகுதண்ணி) என அப்படியே தன் மொழியில் சேர்த்து விடுவான். ஆங்கிலத்தில் 80% ற்கு மேல் திசைச்சொற்களே. சிங்களவரும் அப்படியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tomaten800.jpg.2388355.jpg

 

"ரொமாற்ரோ"... என்ற இந்தப் பழத்தின், தமிழ் பெயரையும்.... அங்கு காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் சொல்வது மிகவும் சரி. ஏற்கனே தமிழ் பெயர் உள்ளவற்றை தவிர ஏனையதை அப்படியே பாவிக்கலாம்.

உதாரணம் ஐஸ் கிரீம். குளிர் களி என்று ஏன் காமெடி பண்ணனும்.

இதில் ஆங்கிலேயன் கெட்டிக்காரன். கட்டமரான் (கட்டுமரம்), அனிகட் (அணைக்கட்டு), மிளகுடன்னி (மிளகுதண்ணி) என அப்படியே தன் மொழியில் சேர்த்து விடுவான். ஆங்கிலத்தில் 80% ற்கு மேல் திசைச்சொற்களே. சிங்களவரும் அப்படியே.

 

எல்லாவற்றையும்....அப்பிடியே.... பாவித்தததால் தான்.

தமிழ் நாட்டுக்காரர் கதைப்பது... தமிழா, ஆங்கிலமா,

அல்லது... ஏதாவது வேறு மொழி கதைக்கிறார்களா... என்று, குழப்பாமாய் இருக்கு.

 

தமிழ் உலகின் மூத்த மொழி. அது தனது..... "ஒரிஜினல்" தன்மையை.. என்றும் இழக்கக் கூடாது.

அதற்க்காகத்தான்....  புலிகள், "ஐஸ் கிறீமை" .... "குளிர் களி" என்று குறிப்பிட்டார்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி கோஷன், சில பழங்களின் பெயர்கள் சிங்களத்தில் தெரியும், கொழும்பு வழக்கில் வித்தியாசாமாக இவற்றை அழைப்போம். தெரிந்தால் தமிழில் இவற்றிற்கு என்ன பேர் என அறியத்தரவும்.
 
1. ஜம்புக்காய்
2. கட்டுக்குறிக்ஞான்
3. கடுகுடா
3. கல்சியம்பளா
5. மோர
4. பினிஜம்பு
6. லோவிக்காய் (சிகப்பு நிற பழம், புளிப்பு  உப்புடன் சாப்பிடுவோம்) 
7.வெறளிக்காய்
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் - ஜம்புவை யாழிலும் ஜம்பு என்றே அழைப்போம். சியம்பலா - பட்டுப்புளி என்று நியாபகம். பினி ஜம்புதான் ஜாம் பழமோ?

மற்றயவை பற்றித் தெரியவில்லை.

சிறி,

தமிழ்நாட்டினரை போல் தமிழில் பெயர் உள்ளதையும் ஆங்கிலத்தில் சொல்லுமாறு நான் சொல்லவில்லை. ஐஸ் கிரீம் போன்ற எம் கலாச்சாரத்துக்கு புதியனவற்றை அப்படியே அழைக்கலாம் என்கிறேன்.

Link to comment
Share on other sites

BLACKBERRY - நாகப்பழம்

BLUEBERRY - அவுரிநெல்லிர் இப்படி அபத்தங்களை உருவாக்குவது.  இங்கு குறிப்பிட்ட பல பழங்கள் எங்கள் கலாச்சாரத்தில் இல்லை, 

கலைசொல் ஆக்கம் அல்லதி திசைச் சொற்களை இணைத்துக்கொள்ளுவது தமிழுக்கு வக்கம்தான்.  உருளைக் கிங்கு மிகாய் போன்றவை நம்முன்னோர் ஆக்கிய கலைச்சொற்கள்தான். 

STRAWBERRY - செம்புற்றுப்பழம் போன்ற அபத்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சிரொபெறி என்றுதான் அழைப்பேன். இந்த விடயங்கல்தொடர்பாக நிறைய விவாதங்கள் தேவை.

வன்னியில் புதிய நாட்காட்டியில் வெளிவந்தபோது தேவநேயப்பாவாணரை அடியொற்றி சனிக்கிமைக்கு காரி என்பதுபோன்ற பதங்கள் பயன்பட்டுத்தப் பட்டிருந்தது.  நான் நடைமுறைத் தமிழ் வக்கில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.என்னுடைய ஆட்ச்சேபனையை பதிவு செய்தேன். தேவநேபாவாணர் மிகவும் முக்கியமானவர்தான். ஆனாலும் கடவுள் இல்லை. 

 

பொயட்
 
தயவு செய்து உங்கள் கருத்துக்களில் ல, ள, ழ பாவனையை கொஞ்சம் கருத்திலெடுத்தால் வாசிக்க நன்றாக இருக்கும். கணனி தப்பு பண்ணாது தவறு எம் அக்கறையின்மையே.
 
புலவராயிருந்தாலும் குற்றம் குற்றமே.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு தமிழர்கள்.... பெரியாரின் திராவிட "ஆனியன்" சாரி... வெங்காய கலாச்சாரத்தில் வளர்க்கப் பட்டதால்....
அவர்களும்... வாய்க்கு வந்தபடி... உளறிக் கொண்டு இருக்கிறார்கள். :D

Link to comment
Share on other sites

  • 2 months later...
எனக்கு ஒர் சந்தேகம். யாரும் தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.
 
1. அத்திப்பழமா அல்லது அத்திக்காய் என்பது சரியா?
 
2. "அத்திப்பூ பூத்தால் போல் என்கின்றேமே", அப்படியானால் அத்திப்பூ எப்போதாவதுதான் பூக்குமா? சராச‌ரியாக எத்தனை வருடத்திற்கு ஒருமுறை இது பூக்கும்? 
 
3. மேலும் இது சாப்பிடக்கூடிய ஒர் பழமா/காயா?
 
யாராவது தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

"அத்திப்பழம் சிவப்பா" என்றொரு பாடல் இருக்கின்றதல்லவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.