Jump to content

அடுத்தவர் டயரியை எட்டிப் பார்த்த போது....


Recommended Posts

அனிதாவின் டயரி - நாள் : 20-11-2006, இரவு 10.30 மணி

"ஏண்டா டல்லா இருக்கேன்னு கேட்டேன். ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டான். மத்தியானம் போன் பண்ணலைன்னு கோவமான்னு கேட்டேன். அதெல்லாம் இல்லேன்னு விரக்தியா சொன்னான்.

"வண்டியில வர்றப்ப கூட எப்பவும் அவன் தோள் மேல கைய போட்டுக்கிட்டு வருவேன். தோள்ல கைய போடலைன்னா வண்டியை நிறுத்திட்டு, என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டா தான் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவேன்னு அடம் புடிப்பான். இன்னைக்கு என்னவோ 'தேமே'ன்னு இருந்தான். நான் தோள்ல கையைப் போடலைங்கிறதையே ஒரு பொருட்டா அவன் நெனைக்கலை.

"வர.. வர... அவன் போக்கே புரிய மாட்டேங்குது. கல்யாணம் ஆனப்ப இருந்தமாதிரி அவன் இப்ப இல்லை. ப்ரெண்ட்ஸ் கூட வெளியே சுத்தக்கூடாதுன்னு நான் கண்டிஷன் போடறதால அவன் என் மேல கோவமா இருக்கானா? இல்லை அவனுக்கு என்னை புடிக்கலியான்னு தெரியலை. என்னை புடிக்கலைன்னா ஏன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான்?

"வீட்டுக்கு வந்ததும் அவனை இழுத்துப் புடிச்சு லிப்புல ஒரு ஸ்ட்ராங்க் கிஸ் அடிச்சு "ஐ லவ் யூ"ன்னு சொன்னேன். எப்பவும் "ஐ டூ"ன்னு சொல்லுறவன் என்னை முரட்டுத் தனமா தள்ளி விட்டுட்டு மூஞ்சத் தொங்கப் போட்டுக்கிட்டு டி.வி. பாக்க போயிட்டான்.

"சாப்பிட கூப்புட்டா வரமாட்டேன்னு சொல்லிட்டான். நான் மட்டும் தனியா பெட்ரூமுக்கு வந்துட்டேன். தூங்கப் போறேன். தூக்கம் வருமான்னு தெரியலை. என் புருஷனே என்னை வெறுக்கற அளவுக்கு போயிட்டப்ப என் லைப் இனிமே எப்படி இருக்குமோ தெரியலை. நான் வாழறதை விட செத்துடறதே மேல்" :-(

கிருஷ்ணாவின் டயரி - நாள் : 20-11-2006, இரவு 11.30 மணி

"சே... தூக்கமே வரலை... இன்னைக்கும் தோத்துட்டானுங்க. அஸாருதீன் இருக்கறப்போ டீம் நல்லா இருந்துச்சி... இவனுங்களையெல்லாம் சுட்டுத் தள்ளனும். இன்னைக்கு புல்லா மூட் அவுட்..."

Link to comment
Share on other sites

கெட்ட பழக்கம்...

Link to comment
Share on other sites

அடுத்தவரின் டயரி படிக்க சுவாரசியமாக இருக்கிறது. தொடர்ந்து தாருங்கள்.

Link to comment
Share on other sites

யாராவது திருட்டு மாங்கா சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு சொந்தமான மரத்தில் விளையும் மாங்காயை விட திருட்டு மாங்காயே சுவை அதிகம். :P

நம்ப டயரியை விட அடுத்தவங்க டயரி தானே நமக்கு சுவாரஸ்யமாக இருக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவரின் டயரியினைப் படிப்பது அனாகரிகமான செயல் என்றாலும் உங்களின் கற்பனையினை வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

யாராவது திருட்டு மாங்கா சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு சொந்தமான மரத்தில் விளையும் மாங்காயை விட திருட்டு மாங்காயே சுவை அதிகம்.

என்னாசார் இப்புடி ஒரு குண்டை தூக்கிப் போடுறிங்கோ !!!

பாத்திக்கிட்டுதான் இருக்கேனு நானு, என்ன இருந்தாலும் நீங்க கொஞ்சம் ஓவருதான் போங்க.

Link to comment
Share on other sites

யாராவது திருட்டு மாங்கா சாப்பிட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு சொந்தமான மரத்தில் விளையும் மாங்காயை விட திருட்டு மாங்காயே சுவை அதிகம். :P

நம்ப டயரியை விட அடுத்தவங்க டயரி தானே நமக்கு சுவாரஸ்யமாக இருக்க முடியும்?

ஆமா திருட்டு மாங்காய் நல்ல ருசியா இருக்கும் :( . அடுத்தவங்க எழுதிய டயரி தான் படிக்க கூடாது. அடுத்தவங்க போல கற்பனையில் நாங்களே எழுதிய டயரியை தாராளமா படிக்கலாம்.தொடருங்க..நல்லா இருக்கு :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.