Jump to content

மே 18...!!!(கவிதைச்சரம்)


Recommended Posts

மே 18!!!

11245473_10152953323268002_5633350400577

குற்றுயிராய் ஒரு உயிர்

குடல் கிழிந்து ஒரு உயிர்

பாதி எரிந்தபடி ஒரு உயிர்

உருக்குலைந்து ஒரு உயிர்

அழுகுரலோடு ஒரு உயிர்

அனாதையாய் ஒரு உயிர்

நஞ்சுண்டபடி ஒரு உயிர்

கடந்து ஓடினோம்

உணர்வும் செத்து 

உயிரும் செத்து

முள்ளிவாய்க்கால் வரை!!!

எல்லாம் தின்று 

ஏப்பம் விட்டு

நந்திக்கடலில்

கறை படிந்த கை கழுவி

ஒன்றுமில்லை என்றான்

புத்தன்!!

மே மாதம்

நினைவழியா மாதம்

இன்றும் பிண்வாடையும்

கந்தகவாசமும் நாசில்

அரிக்கும் மாதம்...

சூட்சிகள் செய்து

மனட்சாட்சிகள் இல்லா

கொலைக்களம்

சாட்சிகள் ஆனவர்

நாக்குகள் அறுத்து

ஊமைகள் ஆன சோகம்

செங்குரிதி ஓடி

வெந்தணல் ஆன

எம்மவர் நினைவுகள் 

அழியா மாதம்

இது ஊழிக்கூத்து

நிகழ்ந்த மாதம்!

அடி மனதோடு

நெருப்பென எரியும்

வலி சுமந்த மாதம்!!!

 

..................////.......................

11041157_10152971433458002_1035654605532

ஓலை குடிசை

ஓட்டை வழியே 

மழைதுளிகள் 

உள்ளே

ஊத்தும்

குண்டுக்கோப்பை நிறைக்கும்

ஒழுக்குத்தண்ணீர்

நாய் குரைக்கும்

காகம் கரையும்

அம்மா அடிக்கடி எட்டிப்பாக்குறா

காணாமல் போன அண்ணா 

வருவான் எண்டு...

அம்மாக்கு தெரியாது

அண்ணாவின் 

மரணச்சான்றிதழை

விதானையார் அப்பாவிடம்

போன மாதம்

கொடுத்தது..!!!

 

...............////................

 

10502028_383296011860801_757098569333444

 

முள்ளிவாய்க்காலில் 

இறைச்சிக்கடை திறந்து

தமிழனின் உடன் இறைச்சியும்

இரத்தவறுவலும்

செய்து கொடுத்தான் 

மகிந்த....

 

திண்டு ரசித்து

ஏப்பம் விட்டு மகிந்தவின்

சால்வையில்

கை துடைத்தான்

பான் கீன் மூன்...

 

எங்களுக்கும் வேண்டும்

பந்தியும் பரிமாறலும் என

கேட்டு வாங்கித்திண்டார்கள்

ஒபாமாவும் சோனியாவும்...

 

கடைசிப்பந்தி 

மே18 இல்...

பந்திக்கு பிந்தாமல்

திண்டு தீர்த்தார்த்தார்கள்

கோதபாயவும் பசிலும்...

 

எங்களையும் ..

பந்திக்கு அழைக்கவில்லையே

என ஏங்கினார்கள்

ரணிலும் சந்திரிக்காவும்...

 

பந்திக்கு முந்தி

கோதாபாயவின்

கோப்பையில்

திண்டதால்

பொன்சேகா சிறையில்..

 

மகிந்த திண்ட 

கோப்பை நக்கி ..

கைசூப்பி ருசித்தான் 

மைத்திரி...

 

எல்லாரும் திண்ட எச்சில்

கோப்பைகளை கழுவி

அடுக்கிவைத்தார்கள்

எட்டப்பர்கள்....

 

தன் இனம் 

தன் உறவு

அரக்கர்களால்

ருசிக்கப்படுவதை பார்த்து

துடிதுடித்து உண்ணாமல்

உறங்காமல்

இருந்தான்

புலம்பெயர் தமிழன்...!!!

-------------////------------------------

968824_137850969738641_2016397362_n.jpg?

 

தாயகத்தில் இருக்கும்

எங்கள் உறவுகளே..!!!

உங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது

தீபங்கள் ஏற்றக்கூடாது என்பதற்காக...

உங்கள் நாக்குகள் அறுக்கப்பட்டுள்ளன..

அழக்கூடாது என்பதற்காக..

உங்கள் கண்கள் பிடுங்கப்பட்டுள்ளன...

கண்ணீர் சிந்தக்கூடாது என்பதற்காக...

மோட்டு சிங்களவனுக்கு தெரியாது

உங்கள் கைகள்

உங்கள் கண்கள்

உங்கள் உரிமைக்குரல்கள்

புலம்பெயர்ந்து இன்னும் உயிரோடு இருப்பது...

உங்களுக்காக நாங்கள் தீபங்கள் ஏற்றுவோம்...

உங்களுக்காக நாங்கள் பேசுவோம்...

உங்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்...

உங்கள் கண்ணீரை 

நாங்கள் துடைப்போம்...

உங்கள் துயரங்களில் 

நாங்கள துணையாவோம்...

எங்கள் தலையில் 

வீட்டு முற்றத்து 

மணல் மண்ணும்..

எங்கள் பல் இடுக்கில் 

சூப்பிய பனம்பழத்தின் குந்தும் இப்போதும்

இருக்கிறது....

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

ஒன்றாய் விளக்கேற்ற..!!!

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

கட்டிப்பிடித்து கதறி அழுது

எங்கள் கவலைகள் மறக்க..

புலம்பெயர்ந்தது ...

எங்கள்

உடல்கள் மட்டுமே

உணர்வுகள் அல்ல.!!!

 

-தமிழ்ப்பொடியன்-

18.05.2015

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மே 18!!!

------

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

ஒன்றாய் விளக்கேற்ற..!!!

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

கட்டிப்பிடித்து கதறி அழுது

எங்கள் கவலைகள் மறக்க..

புலம்பெயர்ந்தது ...

எங்கள்

உடல்கள் மட்டுமே

உணர்வுகள் அல்ல.!!!

 

-தமிழ்ப்பொடியன்-

18.05.2015

 

புலம்பெயர்ந்தது ...

எங்கள்

உடல்கள் மட்டுமே

உணர்வுகள் அல்ல.!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்துக்கும், நிலத்துக்கும்...,

இடையில் விரிகின்ற வெளி,

வேண்டுமென்றே அகலிக்கப்படும் வேளையில்,

 

உங்கள் கவிதை,

உண்மைகளைத் தேடுகின்றது!

 

கைகளும், நாக்குகளும் மட்டும்,

அறுக்கப்படவில்லை!

இன்னும் கீழே சென்று..,

கருப்பைப் பைகள் வரை,

கத்திகள் நீள்கின்றன! 

 

திண்டு ரசித்து
ஏப்பம் விட்டு மகிந்தவின்
சால்வையில்
கை துடைத்தான்
பான் கீன் மூன்...

 

 

நிதர்சனமான வரிகள்! நன்றி!

Link to comment
Share on other sites

 

மே 18!!!

11245473_10152953323268002_5633350400577

குற்றுயிராய் ஒரு உயிர்

குடல் கிழிந்து ஒரு உயிர்

பாதி எரிந்தபடி ஒரு உயிர்

உருக்குலைந்து ஒரு உயிர்

அழுகுரலோடு ஒரு உயிர்

அனாதையாய் ஒரு உயிர்

நஞ்சுண்டபடி ஒரு உயிர்

கடந்து ஓடினோம்

உணர்வும் செத்து 

உயிரும் செத்து

முள்ளிவாய்க்கால் வரை!!!

எல்லாம் தின்று 

ஏப்பம் விட்டு

நந்திக்கடலில்

கறை படிந்த கை கழுவி

ஒன்றுமில்லை என்றான்

புத்தன்!!

மே மாதம்

நினைவழியா மாதம்

இன்றும் பிண்வாடையும்

கந்தகவாசமும் நாசில்

அரிக்கும் மாதம்...

சூட்சிகள் செய்து

மனட்சாட்சிகள் இல்லா

கொலைக்களம்

சாட்சிகள் ஆனவர்

நாக்குகள் அறுத்து

ஊமைகள் ஆன சோகம்

செங்குரிதி ஓடி

வெந்தணல் ஆன

எம்மவர் நினைவுகள் 

அழியா மாதம்

இது ஊழிக்கூத்து

நிகழ்ந்த மாதம்!

அடி மனதோடு

நெருப்பென எரியும்

வலி சுமந்த மாதம்!!!

 

..................////.......................

11041157_10152971433458002_1035654605532

ஓலை குடிசை

ஓட்டை வழியே 

மழைதுளிகள் 

உள்ளே

ஊத்தும்

குண்டுக்கோப்பை நிறைக்கும்

ஒழுக்குத்தண்ணீர்

நாய் குரைக்கும்

காகம் கரையும்

அம்மா அடிக்கடி எட்டிப்பாக்குறா

காணாமல் போன அண்ணா 

வருவான் எண்டு...

அம்மாக்கு தெரியாது

அண்ணாவின் 

மரணச்சான்றிதழை

விதானையார் அப்பாவிடம்

போன மாதம்

கொடுத்தது..!!!

 

...............////................

 

10502028_383296011860801_757098569333444

 

முள்ளிவாய்க்காலில் 

இறைச்சிக்கடை திறந்து

தமிழனின் உடன் இறைச்சியும்

இரத்தவறுவலும்

செய்து கொடுத்தான் 

மகிந்த....

 

திண்டு ரசித்து

ஏப்பம் விட்டு மகிந்தவின்

சால்வையில்

கை துடைத்தான்

பான் கீன் மூன்...

 

எங்களுக்கும் வேண்டும்

பந்தியும் பரிமாறலும் என

கேட்டு வாங்கித்திண்டார்கள்

ஒபாமாவும் சோனியாவும்...

 

கடைசிப்பந்தி 

மே18 இல்...

பந்திக்கு பிந்தாமல்

திண்டு தீர்த்தார்த்தார்கள்

கோதபாயவும் பசிலும்...

 

எங்களையும் ..

பந்திக்கு அழைக்கவில்லையே

என ஏங்கினார்கள்

ரணிலும் சந்திரிக்காவும்...

 

பந்திக்கு முந்தி

கோதாபாயவின்

கோப்பையில்

திண்டதால்

பொன்சேகா சிறையில்..

 

மகிந்த திண்ட 

கோப்பை நக்கி ..

கைசூப்பி ருசித்தான் 

மைத்திரி...

 

எல்லாரும் திண்ட எச்சில்

கோப்பைகளை கழுவி

அடுக்கிவைத்தார்கள்

எட்டப்பர்கள்....

 

தன் இனம் 

தன் உறவு

அரக்கர்களால்

ருசிக்கப்படுவதை பார்த்து

துடிதுடித்து உண்ணாமல்

உறங்காமல்

இருந்தான்

புலம்பெயர் தமிழன்...!!!

-------------////------------------------

968824_137850969738641_2016397362_n.jpg?

 

தாயகத்தில் இருக்கும்

எங்கள் உறவுகளே..!!!

உங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது

தீபங்கள் ஏற்றக்கூடாது என்பதற்காக...

உங்கள் நாக்குகள் அறுக்கப்பட்டுள்ளன..

அழக்கூடாது என்பதற்காக..

உங்கள் கண்கள் பிடுங்கப்பட்டுள்ளன...

கண்ணீர் சிந்தக்கூடாது என்பதற்காக...

மோட்டு சிங்களவனுக்கு தெரியாது

உங்கள் கைகள்

உங்கள் கண்கள்

உங்கள் உரிமைக்குரல்கள்

புலம்பெயர்ந்து இன்னும் உயிரோடு இருப்பது...

உங்களுக்காக நாங்கள் தீபங்கள் ஏற்றுவோம்...

உங்களுக்காக நாங்கள் பேசுவோம்...

உங்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்...

உங்கள் கண்ணீரை 

நாங்கள் துடைப்போம்...

உங்கள் துயரங்களில் 

நாங்கள துணையாவோம்...

எங்கள் தலையில் 

வீட்டு முற்றத்து 

மணல் மண்ணும்..

எங்கள் பல் இடுக்கில் 

சூப்பிய பனம்பழத்தின் குந்தும் இப்போதும்

இருக்கிறது....

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

ஒன்றாய் விளக்கேற்ற..!!!

காலம் வரும்...

நாங்கள் எல்லோரும்

கட்டிப்பிடித்து கதறி அழுது

எங்கள் கவலைகள் மறக்க..

புலம்பெயர்ந்தது ...

எங்கள்

உடல்கள் மட்டுமே

உணர்வுகள் அல்ல.!!!

 

-தமிழ்ப்பொடியன்-

18.05.2015

 

 

 

 

 

 

தங்களுக்காக குரல் கொடுப்போம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் எம் மக்களை காப்பாற்ற இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் காத்திருக்கவேண்டும்?

இங்கேதானே ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் நிற்கின்றார்களே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.