Jump to content

காற்றில் கலந்த இசை


Recommended Posts

காற்றில் கலந்த இசை - பனிநிலத்தின் பாடல்

 

ilayaraja_2384410g.jpg

 

மனது, காலம், நினைவு, நிலப்பரப்பு, உணர்வு என்று பல அடுக்குகளில் படிந்துகிடக்கின்றன இசையின் கூறுகள். குறிப்பிட்ட ஓர் இசையை மீண்டும் கேட்கும்போது, நீரின் மேல் மிதக்கும் மெல்லிய பூக்களாக மனதுக்குள் அவை மலர்வதை உணரமுடியும். நம் வாழ்வின் தருணங்களைத் தேக்கிவைத்திருக்கும் ஒரு பாடல், எங்கும் சுமந்துசெல்லக்கூடிய நிழல்படத் தொகுப்பாக நம்மைத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
 
மழை ஓய்ந்த மதியப் பொழுதில் கேட்ட ‘அடி பெண்ணே’ பாடலை, சுட்டெரிக்கும் வெயிலின் தார்ச்சாலையில் நின்று கேட்டாலும் மனம் குளிர்ந்து சிலிர்ப்பதை உணரலாம். இரவின் தனிமையில் மொட்டை மாடியில் அமர்ந்து கேட்ட ‘பொன் மானைத் தேடி’ பாடல், எங்கோ ஒரு கிராமத்தில் வாழ்வைத் தொலைத்த காதலர்களை நினைவுபடுத்தலாம்.
 
வானொலி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கிகள் போன்ற சாதனங்கள் மூலம் நம் வாழ்வின் வெவ்வேறு தருணங்களுக்குப் பின்னணி இசை போல ஒலித்து, நம் மனதுடன் தங்கிவிட்டவை திரையிசைப் பாடல்கள். அந்தப் பாடல்களுடனான நமது உறவைப் பற்றிப் பேசும் தொடர் இது.
 
இளையராஜாவின் தொடக்ககாலப் பாடல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளின் கூறுகளைத் தம்முள் புதைத்து வைத்திருப்பவை. சாலையின் இரு புறமும் விரியும் வெவ்வேறு நிலப்பரப்புகள் அவரது பாடல்களின் நிரவல் இசைக்கோவையாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை, நீண்ட பயணங்களின்போது ஆத்மார்த்தமாக உணர முடியும். வீடுகளின் நிழல்கள் விழுந்து கிடக்கும் மாலை நேரத் தெருக்கள், சாலையின் பரபரப்புக்கிடையில் ஒதுங்கிக் கிடக்கும் பூங்காக்களைக்கூடத் தனது இசைக் குறிப்புகளால் காட்சிப்படுத்தியவர் இளையராஜா.
 
அவரது மிகச் சிறந்த ஆல்பங்களில் ஒன்றாக, சுமன், சுமலதா, பானுச்சந்தர் நடித்த ‘எனக்காகக் காத்திரு’ (1981) திரைப்படப் பாடல்களின் தொகுப்பைச் சொல்லலாம்.
 
பனிமலைகள் நிறைந்த அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் ஒளிப்பதிவுக்குப் பேர்போன நிவாஸ். சுமனும் பானுச்சந்தரும் நெருங்கிய நண்பர்கள். மர்மமான கதாபாத்திரமாக வரும் சுமன், காதலிப்பதாகக் கூறிப் பல பெண்களை ஏமாற்றுவார். அவரால் வீழ்த்தப்படும் பட்டியலில் பானுச்சந்தரின் தங்கையும் இருப்பாள். ஆத்திரமடையும் பானுச்சந்தர், சுமனைக் கொல்வதற்குத் தேடியலைவார். இலக்கற்ற திரைக்கதையுடன் அலைபாயும் இந்தப் படம், ஒளிப்பதிவு, திபெத்திய இசைக் கருவிகள் ஒலிக்கும் பாடல்கள், மர்மத்தைப் பிரதியெடுக்கும் பின்னணி இசை மூலம் தொலைதூரப் பனிப் பிரதேசத்தின் கனவைக் காண்பதுபோன்ற வித்தியாசமான உணர்வைத் தரும்.
 
படத்தில் நான்கே பாடல்கள். காதலில் உருகும் பெண்களின் படம் என்பதால், டூயட் பாடல்களின் பல்லவியைப் பெண்கள்தான் தொடங்குகிறார்கள். ‘ஓ நெஞ்சமே’ பாடல் தொடங்குவதற்கு முன்னதாக, ஜானகியின் ஆலாபனையும், வயலின்களின் சேர்ந்திசையும் ஒரு மயக்க நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும். பாலத்தின் மீது கடைகள் படர்ந்திருக்கும் அந்தப் பாதையில் காதலனைத் தேடி ஓடுவாள் நாயகி. நினைவில் மங்கலாக உறைந்திருக்கும் படிமம் மாதிரியான காட்சியமைப்பு.
 
‘பனிமழை விழும், பருவக் குளிர் எழும்’ எனும் அடுத்த பாடல் புத்தக் கோயில்களின் பெரிய மணியின் ஓசையுடன் தொடங்கும். தந்தி மற்றும் குழலிசைக் கருவிகள் காற்றின் மவுனத்தைக் கலைத்தபடி ஒன்றுடன் ஒன்று உரையாடத் தொடங்கும். உறைபனிக் காற்றைக் கிழித்துக்கொண்டு ஷைலஜாவின் குரல் ஒலிக்கும். எந்த மட்டத்திலும் குரல் உடையாமல் உச்ச ஸ்தாயியை எட்டும் குரல் அவருடையது.
 
‘…கனவுகளின் ஊர்கோலமே…’ என்று ஒவ்வொரு முறை பல்லவி முடியும்போதும் சில்லிடும் காற்று நம்மை வருடும். மெல்லிய அதிர்வுடன் ஒலிக்கும் தாளக்கட்டைத் தழுவியபடி புல்லாங்குழல் கசிந்துகொண்டே இருக்கும். அமைதியில் உறைந்த, பாந்தமான குரலில் பாடியிருப்பார் தீபன் சக்கரவர்த்தி. தான் பாடிய பாடல்களில் மிகவும் வித்தியாசமானவை இந்தப் படத்தின் பாடல்கள்தான் என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
 
உமா ரமணன் பாடும் ‘தாகம் எடுக்கிற நேரம்’, இளையராஜா பாடும் ‘ஊட்டி மலை காட்டிலே’ என்று எல்லாப் பாடல்களும் குளிர்மலையின் பின்னணியில் படமாக்கப்பட்டவை. சுமலதா, நிஷா, மாலினி என்று அழகுப் பெண்கள் நிறைந்த இந்தப் படத்தின் பாடல்களை, உயிர்ப்பான காதலுடன் இசைத்திருப்பார் இளையராஜா. பரவலான ரசிகர்கள் அறிந்திராத பாடல்கள் என்றாலும், இவற்றைக் கேட்கும்போது தனிமையின் ஏகாந்தமும், மெல்லிய பனியின் ஸ்பரிசமும் நம்மை தழுவும்.
 
pani_2384408g.jpg
 
Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு இணைப்பு ஆதவன்...
நேற்று இரவு/அதிகாலை 3:00 மணி வரைக்கும் இந்த பாடல்களை கேட்டு கொண்டே இருந்தேன்...
என் பள்ளி நாட்களில் நான் நடந்து திரிந்த சாலைகள், அருவி குளியல்கள், நேசித்த நண்பர்கள், அக்கம் பக்கம், எல்லோரும் ஒருமுறை அதே ஸ்னேகத்தோடு தோன்றி மறைந்தார்கள்...
இசை ஞானி இளையராஜாவால் மட்டுமே இளமையில் இழந்ததை மீட்டுத் தரமுடியும்
 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 2: காதலின் ஆராதனை

 

ka1_2391866g.jpg

 

 

ka_2391867g.jpg

ஆராதனை’ படத்தில்

 

காதலின் நினைவு மரணத்துக்குப் பின்னரும் மறைவதில்லை. சொல்லப்போனால், நிறைவேறாத ஆசையுடன் இறந்து பேயாக மாறினாலும் காதலியின் நினைவு, நிழல் போலத் தொடர்ந்துகொண்டே இருக்கும். சுமன், சுமலதா, நிழல்கள் ரவி நடித்த ‘ஆராதனை’ படத்தின் கதை இதுதான். 1981-ல் வெளியான இந்தப் படத்தை பிரசாத் இயக்கியிருந்தார். பணக்கார இளைஞரான சுமனை நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த சுமலதா காதலிப்பார்.

 
ஒரு கட்டத்தில் சுமனின் கவனத்தையும் ஈர்த்துவிடுவார். இருவரும் காதலிக்கத் தொடங்கும்போது குறுக்கே வருவார் நிழல்கள் ரவி. சுமன் பல பெண்களை ஏமாற்றியவர் என்று பொய்யைப் பரப்பி இருவரையும் பிரித்துவிடுவார். உச்சகட்ட விரக்தியில் இருக்கும் சுமன் தீய சக்தி ஒன்றால் ஆட்கொள்ளப்பட்டுப் பேயாக மாறிப் பழிவாங்குவார்.
 
வெற்றி பெறாத திரைப்படங்களில் ஒன்றாக இருந்தும் ரசிகர்களின் மனதிலிருந்து இந்தப் படம் மறைந்துவிடாததற்கு ஒரே காரணம், படத்தின் பாடல்கள். இந்தப் படத்துக்கும் இசை இளையராஜாதான். ‘ஒரு குங்குமச் செங்கமலம்’, ‘இளம்பனி துளிர் விழும் நேரம்’ என்று அற்புதமான இரண்டு பாடல்கள் இப்படத்தில். ‘டார்லிங் ஐ லவ் யூ’ எனும் ஆங்கிலக் குறும்பாடலும் உண்டு.
 
இலங்கை வானொலியிலும் விவிதபாரதியிலும் ஒரு காலத்தில் அடிக்கடி ஒலிபரப்பாகும் இப்பாடல்களை இன்று பரவலாகக் கேட்பதற்கான ஊடகங்கள் குறைவு. வேண்டும்போது கேட்டு, பார்த்து மகிழ யூட்யூபில் கிடைக்கின்றன இந்தப் படத்தின் பாடல்கள். இணைய விவாதங்களில் எங்காவது ஒரு மூலையில் இப்படத்தின் பாடல்களைச் சிலாகிப்பவர்கள் உண்டு.
 
வனம் இசைக்கும் பாடல்
 
அடர்ந்த வனத்தின் நடுவே படர்ந்திருக்கும் புல்வெளியில் அமர்ந்து காதலைப் பகிர்ந்துகொள்கிறார்கள் நாயகனும் நாயகியும். குயிலின் குரலைப் பிரதியெடுத்ததுபோன்ற குழலிசை மெலிதாக ஒலிக்கத் தொடங்குகிறது. பின்னர் பாடலின் பல்லவி தொடங்குவதற்கு இசைவாகப் பணிந்து மவுனிக்கிறது குழல். ‘ஒரு குங்குமச் செங்கமலம்… இள மங்கையின் தங்க முகம்’ என்று பாந்தமான கம்பீரத்துடன் பாடலைத் தொடங்குகிறது, எண்பதுகளின் காதுகளில் கந்தர்வனாகக் கோலோச்சிய எஸ்.பி.பி.யின் குரல். பல்லவி முடிந்ததும் தேன் போல் கசிகிறது பெண் குரலின் ஆலாபனை. வேறு யார் எஸ். ஜானகிதான்!
 
பலருக்கும் இது ஒரு டூயட் பாடலாகத்தான் நினைவிருக்கும். உண்மையில் பாடலைப் பாடுபவர் எஸ்.பி.பி.தான். இடையிடையே கொஞ்சலான குரலுடன், அவ்வப்போது சிணுங்கிச் சிரித்தபடி ஆலாபனை மட்டும் செய்திருப்பார் ஜானகி. குரலில் அவர் அளவுக்கு பாவத்தைக் காட்ட வேறு யாரால் முடியும்! அத்தனை அழகாக அன்னியோன்யத்தின் ரகசியத்தைக் குரல்களாலேயே வெளிப்படுத்தியிருப்பார்கள் இருவரும்.
 
பாடல் முழுவதும் புல்லாங்குழலும், வயலின்களும் எதிரெதிராக நின்று பரிவுடன் உரையாடிக்கொள்ளும். காதலின் உன்னதத்தை இசைக் குறிப்புகளால் மொழிபெயர்த்திருப்பார் இளையராஜா. இளையராஜாவின் பல பாடல்களுக்கு உயிரூட்டிச் செழிக்க வைத்தவர்கள் எஸ்.பி.பி.யும் ஜானகியும். மூவரும் இணைந்து நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று இந்தப் பாடல். மிகுந்த ஏமாற்றமளிக்கும் விதத்தில் இந்தப் பாடல் படமாக்கப் பட்டிருப்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இளையராஜாவின் பல பாடல்களுக்கு நேர்ந்த விபத்து இது!
 
இளம்பனியின் இசை
 
தன் காதலுக்குரிய நாயகன் எதிரிலேயே இருக்கிறான். ஆனால், காதலைச் சொல்ல நாயகியின் வெட்கம் தடுக்கிறது. சுற்றிலும் நண்பர்கள் வேறு. தமிழ் சினிமாவின் வழக்கமான சூழல்தான். ஆனால், இந்தப் பாடல் தனித்து நிற்பதற்குக் காரணம் இளையராஜாவின் ஆர்க்கெஸ்ட்ரேஷன். பனிப்பூவின் மீது ரீங்காரமிடுவதுபோல் விட்டு விட்டு ஒலிக்கிறது கிடார் இசை. காதலில் உருகும் பெண் மீதான பரிவுடன் காற்றை வருடுகின்றன வயலின்கள். ‘இளம்பனி துளி விழும் நேரம்’ என்று தொடங்குகிறது பாடல்.
 
அவ்வளவாக அறியப்படாத பாடகியான ராதிகாவின் குரலில் ஒலிக்கும் பாடல் அது. பல்லவியின் தொடக்க வரிகள் முடியும்போது சட்டகம் ஒன்றின் வழியாக, இனிப்புத் துகள்கள் கலந்த காற்று ஊடுருவதுபோல் தவழ்கிறது வயலின்களின் சேர்ந்திசை. வெளிப்படுத்த முடியாத காதலின் வேதனையும், கழிவிரக்கம் தரும் மெல்லிய சந்தோஷமும் பாடல் முழுவதும் விரவிக் கிடக்கும். காதலின் மெல்லிய உணர்வுகளைத் தன் குரலில் மிதக்க விட்டிருப்பார் ராதிகா. தமிழில் சிறந்த கிட்டார் இசைப் பாடல்களின் பட்டியலில் இடம்பெறும் பாடல் இது. புலரும் அதிகாலையின் அமைதியையும் அழகையும் இந்தப் பாடல் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் பதிவுசெய்திருக்கும்.
 
காதலின் மேன்மையைச் சொல்லும் இந்தப் பாடல்கள், உறைந்த காதல் சித்திரங்களின் மென்மையான ஒலி வடிவங்கள்!
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, நம்ம இசைக்கடவுளின் பாடல்களா?? தொடருங்கள் !

Link to comment
Share on other sites

அருமையான தொடர்..

இவற்றில் "ஓ.. நெஞ்சமே" என்கிற பாடல் உள்ள இறுவட்டு காரில் இப்போது அடிக்கடி கேட்பது. கட்டுரையாளர் சொல்வதுபோல அந்த ஆரம்ப இசையை அடிக்கடி கேட்பேன்.

ஆனால் குங்கும செங்கமலம் என்கிற பாட்டை எனக்குப் பிடிக்காது.. :o

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 3- தனிமையின் வழித் துணை!

 

ilayaraja_2399428g.jpg

 

துயருறும் தருணங்களில் இசை தரும் ஆறுதல் ஆத்மார்த்தமானது. தனது துயரத்தை, ஆறுதல் தேடி அலையும் மனதின் ஊடாட்டத்தை ஒருவரால் இசையாக மாற்ற முடிந்தால், அந்தத் துயரமே அவருக்குப் போதையாகிவிடும். இசைக் கருவியின் வழியே துயரத்தின் குறிப்புகளைக் காற்றில் எழுதிக் கரையவிடுவது சுகமான அனுபவமாகிவிடும்.
 
காதலின் இழப்பை, சிக்கலான குடும்பப் பின்னணியின் வலியை இசையால் பிரதியெடுக்கும் கலைஞனைப் பற்றிய படம் ‘ஈரவிழிக் காவியங்கள்’. இசைக் கலைஞராகும் ஆசையுடன் நகரத்துக்கு வருகிறான் நாயகன். தனக்கு உதவும் பெண் மீது அவனுக்கு மையல். அந்தப் பெண்ணோ வேறொருவரின் காதலி என்று நீளும் கதை இது.
 
1982-ல் வெளியான இந்தப் படத்தை பி.ஆர். பந்துலுவின் மகனான பி.ஆர். ரவிஷங்கர் இயக்கியிருந்தார். கையில் கிட்டாருடன் அப்பாவித்தனத்தைச் சுமந்து திரியும் பாத்திரம் பிரதாப் போத்தனுக்கு. ஏக்கம் ததும்பும் இசையை மென் சாரலைப் போலப் படம் முழுவதும் தூவியிருப்பார் இளையராஜா.
 
மிதக்கவைக்கும் இசை
 
கனவில் விரியும் பாடலுடன்தான் படம் தொடங்குகிறது. நாயகன் கிட்டார் இசைக் கலைஞன் என்பதால் இப்படத்தின் ஒவ்வொரு பாடலும் கிட்டார் இசையுடன் தொடங்க, வயலின்(கள்), புல்லாங்குழல் என்று இளையராஜாவின் பிரியத்துக்குரிய இசைக் கருவிகள் இணைந்து இசைக்கின்றன. ‘கனவில் மிதக்கும் இதயம் முழுதும்’ என்று தொடங்கும் இந்தப் பாடலும் அப்படித்தான். சென்னையின் காலைநேரக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே பயணப்படும் நாயகனின் மனதில் இசையின் லட்சியக் கனவுகள் ஒவ்வொன்றாக விரிந்துகொண்டே வருவதுபோன்ற காட்சியமைப்பு அது.
 
ஆனால், பாடல் அதையும் தாண்டி வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நிலப் பரப்புகளைக் கற்பனையில் காட்சிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இளையராஜாவின் இசை, இந்தப் பாடலில் கற்பனை உலகின் நிலங்களைக் கண்முன் நிறுத்துகிறது. அடங்கிய மென் குரலில் எளிமையாக, பாந்தமாகப் பாடியிருப்பார் ஜேசுதாஸ்.
 
ஏழையின் கீதம்
 
ரசிகர்கள் கூடியிருக்கும் அரங்கில் தனது இசையை அரங்கேற்ற வேண்டும் எனும் கனவைத் தன் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறான் நாயகன். ‘என் கானம் இன்று அரங்கேறும்’ எனும் அந்தப் பாடலை, வலியில் துடிக்கும் மனதைப் பிரதியெடுக்கும் குரலுடன் பாடியிருப்பார் இளையராஜா. ஒரு கலைஞர் தனது கற்பனைக்குத் தானே உயிர்கொடுக்கும்போது படைப்புகள் உள்ளார்ந்த உயிர்ப்புடன் ஒளிரும். அந்தப் பட்டியலில் இடம்பெறும் ‘ராஜா பாட்டு’ இது.
 
நிகழ்காலத்தின் வெறுமையையும் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகளையும் கிட்டாரின் தந்திக் கம்பிகள் வழியாகவே வரைந்துகாட்டியிருப்பார் மனிதர். ‘பாலைவனத்தின் பனிமழையே வா’ எனும் வைரமுத்துவின் வரிகள் பாடலின் தன்மையை மேன்மைப் படுத்தியிருக்கும். இரண்டாவது சரணத்தில் இணைந்துகொள்ளும் ஜென்சியின் குரல், நிலைகொள்ளாமல் தவிக்கும் நாயகனுக்கு ஆறுதல் தரும் மாயக் குரலாகப் பரவும்.
 
ஏகாந்தத்தின் இசை
 
அடிவானத்தைத் தொடும் முயற்சியில் விரிந்துகொண்டே செல்லும் சமுத்திரத்தை, யாருமற்ற தீவின் கரையில் நின்றுகொண்டு ரசிப்பது எத்தனை சுகமானது. அந்தச் சுகத்தை இசை வடிவத்தில் கேட்க வேண்டும் என்றால், இந்தப் பாடலைக் கேளுங்கள். ‘பழைய சோகங்கள்… அழுத காயங்கள்’ என்று தொடங்கும் இந்தப் பாடலையும் இளையராஜாதான் பாடியிருக்கிறார். இரவில் வானத்தைப் பார்த்தபடி படுத்திருப்பவர்களின் கனவில் ஏதாவது ஒரு நட்சத்திரம் தோன்றும்; கண்சிமிட்டிப் புன்னகைத்த பின்னர் கண்முன்னே பூமியில் விழும். அந்த உணர்வை இந்தப் பாடல் தரும்.
 
வெற்றிப் பாடல்
 
‘காதல் பண்பாடு… யோகம் கொண்டாடு’ என்று இசைக்கும் இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருப்பார். வாய்ப்பு நிறைவேறி, தனது தாய், நண்பர்கள் முன்னிலையில் நாயகன் கொண்டாட்டத்துடன் பாடும் பாடல் இது. இருளான மேடையில் மஞ்சள் விளக்கில் ஒளிரும் சிகையுடன் தோன்றிப் பாடுவார் பிரதாப் போத்தன் (இந்தப் பாடலின் ஒளிப்பதிவு, அசோக்குமாரின் தனி முத்திரைகளில் ஒன்று!). தனக்கு நம்பிக்கையளித்த காதலி (ராதிகா) வராத சோகம் பாடலின் வரிகளிலும் ஜேசுதாஸின் மென்சோகக் குரலிலும் விரவிக் கிடக்கும். வலி, உற்சாகம் என்று இருவேறு உணர்வுகளை ஒன்றாக இணைத்து இழைத்து வார்த்திருப்பார் இளையராஜா.
 
அவரது இசையமைப்பில் அந்தக் கால கட்டத்தில் வெளியான மற்ற படங்களின் பாடல்களை ஒப்பிட, இப்படத்தின் பாடல்கள் அதிகம் புகழ்பெற்றவை அல்ல. எனினும் மென் உணர்வுகள் நிரம்பிய அவரது இசையின் நுட்பமான ரசிகர்களால் ஆராதிக்கப்படும் பாடல்கள் இவை.
 
 
ilayaraja1_2399427g.jpg
‘ஈர விழிக் காவியங்கள்’ படப்பிடிப்பில்...
 
 
Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 4- இயற்கை மொழியின் ரகசியங்கள்!

 

ilayaraja_2407145g.jpg

 

ilaya_2407146g.jpg

பொண்ணு ஊருக்குப் புதுசு’

 

விரிந்த வானத்தின் கீழ் இரவில் உறங்கிக் கிடக்கும் கிராமத்தை இசையால் வரைந்துகாட்ட முடியுமா? காலைப் பனி மலர்ந்து கிடக்கும் பூக்களைக் கடந்துசெல்லும்போது கால்கள் உணரும் சிலிர்ப்பை இசைக் குறிப்புகளால் உணர்த்த முடியுமா? இசை வழியாகவே இயற்கையின் ரகசிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த இசைக் கலைஞர்களுக்கு இவை சாத்தியம். அப்படியான மாபெரும் கலைஞர்களில் ஒருவரான இளையராஜாவின் இசையில் 1979-ல் வெளியான திரைப்படம் ‘பொண்ணு ஊருக்குப் புதுசு’.

 
தமிழில் வெளியான திரைப்படங்களில் மிக வித்தியாசமான கதைக் கருவைக் கொண்டது புகழ்பெற்ற கதாசிரியரான ஆர். செல்வராஜ் இயக்கியிருக்கும் இப்படம். விவரிக்க இயலாத சாபம் ஒன்றால் பீடிக்கப்பட்ட கிராமத்தில் நடக்கும் கதை. கிராமத்தின் மக்கள்தொகை குறிப்பிட்ட எண்ணிக்கையில் நீடிக்க வேண்டும். ஒன்று குறைந்தாலும் கூடினாலும் துயர சம்பவங்கள் நிச்சயம் எனும் நம்பிக்கை நிலவும் கிராமத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை அது. சுதாகர், சரிதா, சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் படம்.
 
வைக்கோல் போரின் வாசம் கமழும் கிராமத்தின் கற்சுவர் சந்துகளின் வழியே புகுந்துசெல்லும் இசையை இனிக்க இனிக்கத் தந்திருப்பார் இளையராஜா. கிராமிய இசை என்று வகைப்படுத்தப்பட்டாலும் நாட்டுப்புற நிலப் பரப்புகளை மேற்கத்திய இசைக் கருவிகளின் துணை கொண்டு அற்புதமாகச் சித்தரித்துக் காட்டியிருப்பார்.
 
காலை நேரத்துச் சாலை
 
சூரியன் சோம்பல் முறித்து எழும் நேரத்தில் மலைக் கிராமத்தின் தெருக்களில், வயல்வெளிகளின் வழியில் சைக்கிளில் செல்லும் நாயகி (சரிதா) பாடும் ‘சோலைக்குயிலே… காலைக்கதிரே’ பாடல் இயற்கை அழகை நுட்பமாகச் சித்தரிக்கும் படைப்பு. உயர்ந்த மரங்களின் கிளைகளினூடே தவழ்ந்துவரும் குயில்களின் பாடல்களுக்கு மறுமொழி சொல்லும் எஸ்.பி.ஷைலஜாவின் குரலில் சிலிர்க்கவைக்கும் பாடல் அது.
 
நெற்கதிர் களைச் சுமந்தபடி சாலையில் விரைந்தோடும் கிராமத்துப் பெண்களின் கவனத்தைக் கலைத்துவிடாமல் சைக்கிளை மிதித்தபடி பாடிக்கொண்டே செல்வார் சரிதா. பயணங்களில் சாலையின் இருபுறமும் மாறிக்கொண்டே வரும் காட்சிகள் இளையராஜாவின் இசையில் புத்துணர்ச்சியுடன் மலரும்.
 
பாடலின் நிரவல் இசையில் ஒலிக்கும் கிட்டார் இசை சில்லிடும் குளிர்காற்றின் தீண்டலை உணர்த்தும் என்றால், காற்றின் தாளத்துக்கு அசைந்தாடும் வயல்வெளிகளுக்கு வயலின் இசைக்கோவைகள் பின்னணி இசைக்கும். இசை மூலம் தூரத்தை அளப்பது என்பது இசையறிவையும் தாண்டி இயற்கை மீதான ஆழ்ந்த ஞானத்தைக் கோருவது. இளையராஜாவின் பல பாடல்களில் இதை நம்மால் உணர முடியும். இப்பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக வரும் நிரவல் இசையில் வயலின் கீற்று வானம் வரை சென்று பின்னர், மெல்லத் தரையிறங்கி வயல்வெளியில் படரும். மேகங்களை ஊடுருவிச் செல்லும் இசைக்கோவையை அத்தனை அற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள்.
 
காத்திருத்தலின் சுகம்
 
வெளியூர் சென்றிருக்கும் நாயகன் கிராமத்துக்குத் திரும்புவதற்குள் அந்தி சாய்ந்துவிடுகிறது. கிராமத்தின் எல்லைக் கதவு சாத்தப்பட்டிருக்கிறது. அந்த இரவைத் தனிமையிலேயே கழிக்க நேரும் நாயகன், காதலின் ஏக்கத்துடன் பாடத் தொடங்குகிறான். மதில் சுவரைத் தாண்டித் தவழ்ந்துசெல்லும் காற்று, நாயகனின் பாடலைச் சுமந்துசென்று நாயகியிடம் சேர்ப்பிக்கிறது. ‘ஒனக்கெனத்தானே இந்நேரமா… நானும் காத்திருந்தேன்’ எனும் அந்தப் பாடலை இளையராஜாவும் ஷைலஜாவும் பாடியிருப்பார்கள்.
 
இரவுகளில் கிராமத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒலிக்கும் பாடல் நீண்ட தொலைவைக் கடந்து வந்து நம்மைச் சேரும்போது அதன் ஒலி ஒரே அளவில் இருக்காது. காற்றின் அலைகளில் ஏறி இறங்கிப் பயணித்து வரும் பாடல் சில சமயம் தெளிவாகவும் சில சமயம் முணுமுணுப்பாகவும் ஒலிக்கும். இந்தப் பாடலை அதே மாதிரியான ஒலியமைப்பில் பதிவு செய்திருப்பார் இளையராஜா.
 
நிரவல் இசையில் புல்லாங்குழலுடன் உரையாடல் நிகழ்த்தும் எலெக்ட்ரிக் கிட்டாரை, கிராமிய இசைக் கருவியைப் போலவே கையாண்டிருப்பார் இளையராஜா. துணையற்ற இரவே இப்பாடலைப் பாடுவதுபோல் இருக்கும். இடையில், கிராமத்துச் சாலைகளை இரவில் கடந்துசெல்லும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்யும் விவசாயிகள் களைப்பைப் போக்க பாடிச் செல்லும் பாடலும் ஒலிக்கும்.
 
கூடல் பாடல்
 
இரவில் ஆளரவமற்ற தனிமை தரும் உற்சாகத்தில் நாயகனும் நாயகியும் பாடும் ‘சாமக் கோழி கூவுதம்மா’ பாடல் கிளர்ச்சியூட்டும் தமிழ்த் திரைப்பாடல்களில் ஒன்றுதான். எனினும் இதிலும் அற்புதமான இசைக்கோவைகளால் பாடலைச் செதுக்கியிருப்பார் இளையராஜா.
 
அவர் பாடும் ‘ஒரு மஞ்சக் குருவி… என் நெஞ்சத் தழுவி’ பாடல் படத்தில் இடம் பெறவில்லை. பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துத் தமிழகத்தையே உலுக்கியெடுத்த ‘ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றதுதான்.
 
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 5- பயணத்தில் ஒலிக்கும் பாடல்

 

bairavan_2414263g.jpg

 

ilaayraja_2414259g.jpg

 

பசுமை போர்த்தியிருக்கும் ஏதோ ஒரு மலை வாசஸ்தலத்தை நோக்கிய நீண்ட பயணம். பேருந்தின் ஜன்னல்கள் வழியே சற்று வேகமாகத் தவழ்ந்து வரும் தென்றல் உடலையும் மனதையும் வருடிச் செல்கிறது. சாலையின் இரு புறங்களிலும் படர்ந்திருக்கும் இயற்கைக் காட்சிகள் மனதை அள்ளுகின்றன.
 
ஏகாந்தமாகக் கண் மூடி அமர்ந்திருக்கும் உங்களைத் தாலாட்டும், தன்னிச்சையாக மனதுக்குள் ஒலிக்கும் பாடல் ஒன்று. ‘எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்…’. சுட்டெரிக்கும் வெயிலில் உங்கள் பயணம் அமைந்தாலும் உங்கள் ஆன்மாவையே குளிர்விக்கும் ஆற்றல் கொண்ட பயணப் பாடல் இது.
 
சில பாடல்களைக் கேட்கும்போது இருந்த இடத்திலிருந்தே கற்பனை நிலப் பகுதிகளுக்கு மனம் நம்மை அழைத்துச் சென்றுவிடும். எங்கெங்கோ சுற்றியலையும் மனம், நினைவின் அடுக்குகளில் விரவிக் கிடக்கும் மகிழ்ச்சியான தருணங்களைத் திரட்டிச் சேர்த்துக்கொண்டே செல்லும். அப்படியான பாடல்களில் ஒன்று இது.
 
இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம், ‘பட்டாக்கத்தி பைரவன்’. 1979-ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். தனது நாயக சகாப்தத்தின் இறுதிக் கட்டத்தில் அவர் நடித்த படங்களில் ஒன்று இது. ‘எங்கள் தங்க ராஜா’ படத்தில் ‘பட்டாக்கத்தி பைரவன்’ என்ற பெயரில் ஒரு பாத்திரத்தில் வருவார் சிவாஜி. அந்தப் படத்தின் இயக்குநர் வி.பி. ராஜேந்திர பிரசாத் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு அந்தப் பெயரே தலைப்பாகிவிட்டது.
 
வானத்தை வருடும் பாடல்
 
ஒவ்வொரு நொடியிலும் இனிமையைத் தேக்கிவைத்திருக்கும் பாடல் இது. மென்மையான கிட்டார் இசையுடன் தொடங்கும் இந்தப் பாடல் காற்றின் அலைகளில் ஒவ்வொரு நிலையாகப் பரவி வயலின் இசைக்கோவை மூலம் வானம் வரை எட்டும்.
 
கம்பீரமான காதல் குரலில் பாடத் தொடங்குகிறார் எஸ்.பி.பி. ‘எங்கேங்கோ செல்லும் என் எண்ணங்கள்… இங்கேதான் கண்டேன் பொன் வண்ணங்கள்’ என்று தொடங்கும் எஸ்.பி.பி.யின் குரலுக்கு இனிய துணையாக ஒலிக்கிறது ஜானகியின் குரல். பல்லவியின் முடிவில் ‘என் வாழ்க்கை வானில்… நிலாவே… நிலாவே’ எனும் வரியைப் பாடும்போது காற்றில் மிதந்து மிதந்து தரையிறங்கும் மயிலிறகைப் போல் இருவரின் குரல்களும் கரைந்து மறையும்.
 
இரண்டு சரணங்களின் தொடக்கத்திலும், “ஹா…” என்றொரு ஹம்மிங்குடன் பாடலைத் தொடரும் எஸ்.பி.பி.க்கும் ஜானகிக்கும் பரிசாக இந்த உலகத்தையே தந்தாலும் இணையாகுமா! காதல் நுண்ணுணர்வின் பாவங்களைக் குரலில் காட்டத் தெரிந்த அற்புதக் கலைஞர்கள் அல்லவா அவர்கள். பாடலில் மெல்லிய மேகங்கள் மிதக்கும் வானத்தின் கீழ் பரவிக் கிடக்கும் நிலப்பரப்புகளில் ஒவ்வொரு இடமாக இன்னிசையை நடவு செய்தபடி கிட்டார் குறிப்புகள் நகர்ந்து செல்லும். அவற்றின் மேற்பரப்பில் பரவசமூட்டும் வயலின் இசைக்கோவை படரும் உணர்வு நம்முள் பரவும்.
 
இரண்டாவது சரணத்துக்கு முன்னதாக வரும் நிரவல் இசையில் கிட்டாரும் புல்லாங்குழலும் சங்கேத மொழியில் முணுமுணுப்பாய்ப் பேசிக்கொள்ளும். வயலின்களின் சேர்ந்திசை அந்த உரையாடலைக் கலைத்தபடி காற்றில் பரவிச் செல்லும். வானில் சிறகடிக்கும் பறவை ஒரு கட்டத்தில் இறக்கைகளை அசைக்காமல், சிறகுகள் காற்றில் அசைய மிதந்துகொண்டே தரையிறங்கும். அந்தப் பறத்தல் அனுபவத்தைத் தரும் பாடல் இது.
 
கடலலையைத் தழுவும் காற்று வீசும் கடற்கரை, பரந்த புல்வெளி நிலங்கள், எல்லையற்று விரியும் பாலைவனத்தைக் கடக்கும் சாலை என்று எந்த இடத்தையும் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் கற்பனைக்கு ஏற்ற காட்சிகள் இந்தப் பாடலின் ஒலி வடிவத்தில் உறைந்துகிடப்பது தெரியும். ‘கல்லானவன் பூவாகிறேன்… கண்ணே உன்னை எண்ணி’ போன்ற வரிகளில் ஆன்மாவின் காதலைக் கசியவிட்டிருப்பார் கண்ணதாசன்.
 
வயோதிகத்தை மறைக்க முயலும் பொருந்தா உடைகளுடன், இளம் நாயகியுடன் (ஜெயசுதா) சிவாஜி பாடி ‘ஆடும்’ பாடல் இது. பாடலைக் கேட்டு ரசித்திருந்தவர்கள் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்தால் நிச்சயம் அதிர்ந்துவிடுவார்கள். இயக்குநர்களின் கற்பனை வறட்சியால் பாதிக்கப்பட்ட இளையராஜா பாடல்களில் இதுவும் ஒன்று.
 
வந்து சென்ற தேவதை
 
எஸ்.பி.பி. - ஜானகி இணை பாடும் ‘தேவதை… ஒரு தேவதை’ பாடலும் இப்படத்தில் உண்டு. நாயகியின் மெல்லிய சிரிப்பைப் போல ஒலிக்கத் தொடங்கும் புல்லாங்குழல் எதையோ கண்டு ரசித்ததுபோல் ஆச்சரியக் குறியிடும்! பிறகு கம்பீரமான வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷனுடன் தொடங்கும் அந்தப் பாடல் முழுதும் புல்லாங்குழலின் ராஜ்ஜியம்தான். அற்புதமான இந்தப் பாடலில் தோன்றும் நாயகி தேவி. அவருக்கு ஜோடி ஜெய்கணேஷ் என்பது பாடலின் பெருந்துயரம். படமாக்கப்பட்ட விதத்தைச் சொல்லி அழுவானேன்!
 
எஸ்.பி.பி. பாடிய ‘யாரோ நீயும் நானும் யாரோ’, ஜானகி பாடிய ‘ஜில் மாலிஷ் பூட் மாலிஷ்’, எஸ்.பி.பி. – சுசீலா பாடிய ‘வருவாய் கண்ணா நீராட’ போன்ற பாடல்களும் படத்தில் உண்டு. ரசிகர்களின் நினைவிலிருந்து மறைந்துவிட்ட இந்தப் படத்திலிருந்து ஜீவன் வற்றாத ‘எங்கெங்கோ செல்லும்’ பாடல் மட்டும் இன்றும் பலரைப் பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது.
 
 

 

 

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 6- ஜென்மங்களாகத் தொடரும் கண்கள்

 

isai_2421028f.jpg

திகைப்பில் ஆழ்த்தும் மர்மமும் அதற்குச் சற்றும் குறையாத சுவாரஸ்யமும் கொண்டவை மறுஜென்மக் கதைகள். ஜனரஞ்சகத் திரைக் கலைஞர்கள் பலரால் கையாளப்பட்ட இந்தக் கதைக் கருவைத் தமிழின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரனும் கையாண்டிருக்கிறார். சரத்பாபு, சுமலதா, சுஹாசினி, சாரு ஹாசன் நடிப்பில் 1982-ல் அந்தப் படம் வெளியானது. ‘உதிரிப் பூக்கள்’ படத்தில் இடம்பெற்ற, ‘அழகிய கண்ணே’ எனும் உயிரை உலுக்கும் பாடலின் முதல் வரிதான் இப்படத்தின் தலைப்பு.

 
தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த நாட்டியக் கலைஞரான நாயகி (சுமலதா), தன்னைச் சுற்றி மொய்க்கும் கண்களுக்கு நடுவில் ஈரமுள்ள இதயத்தைத் தேடுபவள். உள்ளார்ந்த மேன்மையுடன் சிலை வடிக்கும் சிற்பி பிரசன்னாவின் (சரத்பாபு) கலை மீது காதல் கொள்வாள். எதிர்பாராதவிதமாக, காமமும், கொடூர குணமும் நிறைந்த சாமியார் ஒருவரிடம் அகப்பட்டுப் பரிதாபமாக உயிரிழப்பாள். சில ஆண்டுகள் கழித்துத் தன்னைத் தேடி வரும் ஆறு வயதுச் சிறுமியிடம் அப்பெண்ணின் சாயலை உணர்வான் பிரசன்னா. அப்பெண்ணின் மறு ஜென்மமாக வந்த குழந்தைதான் அது.
 
முன் ஜென்மத்து நினைவுகளுடன் வரும் சிறுமியாக பேபி அஞ்சு நடித்திருப்பார். ‘அழகிய கண்ணே’ படத்துக்கு மகேந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்வூட்டும் தனது இசையால் மேன்மை சேர்த்திருப்பார். தங்கள் அற்புதத் திறமையைப் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டதன் மூலம் காலத்தால் மறக்க முடியாத திரைப்படங்களையும், பாடல்களையும் நமக்குத் தந்த இணையற்ற இணை அது. மெல்லிய மர்மம் கலந்த பின்னணி இசை ஒலிக்கும் இப்படத்தில் அழகான பாடல்கள் உண்டு.
 
காற்றில் கரையும் கண்ணீர்
 
சிற்பி பிரசன்னாவுடனான தனது காதல் நிறைவேறாது என்பதை உணரும் நாயகி, அவனை மானசீகக் கணவனாக நினைத்து வாழ அனுமதி கேட்பாள். கிட்டத்தட்ட ‘ஜானி’ படத்தின் நாயகி அர்ச்சனாவை (தேவி) நினைவுபடுத்தும் பாத்திரம் சுமலதாவுக்கு.
 
இருவருக்கும் இடையில் மனவெளியில் உருவாகும் உன்னத உறவின் பின்னணியில் விரியும் பாடல் ‘நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்’. பாடலின் தொடக்கமாகக் கழிவிரக்கம் ததும்பும் உணர்வுடன் தொடங்கும் வீணை இசைக்கு ஆறுதலாக எலெக்ட்ரிக் கிட்டாரின் இசை ஒலிக்கும். சிற்பம், நடனம் என்று இரண்டு நுண்கலைகள் சங்கமிக்கும் இந்தப் பாடல் இளையராஜாவின் அற்புதத் திறமைக்குச் சான்று.
 
வீணை, வயலின், புல்லாங்குழல் என்று தெய்வீகம் மிளிரும் இசைக் கருவிகளைப் பாடலின் நடுவே உரையாட விட்டிருப்பார்.
 
கைகூடாத காதல், மனதைக் கவ்வும் சோகம் என்று பல உணர்வுகளைத் தனது குரலில் வெளிப்படுத்தியிருப்பார் எஸ். ஜானகி. ‘இனி என்னோடு உன் எண்ணம் ஒன்றாகும்’ எனும் வரியைப் பாடும்போது தழுதழுக்கும் குரலை அடக்க முயன்று தோற்கும் பரிதவிப்பை நுட்பமாகச் சித்தரித்திருப்பார். பெண்ணின் காதல் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களை இளையராஜா ஜானகி இணை தந்திருக்கிறது. அப்பாடல்களில் ஒன்று இது.
 
மாமல்லபுரம் போன்ற கடற்கரையோரக் கோயில்களின் பின்னணியில், மாலை நேரத்துச் சூரியனின் ஒளியில் அசையும் ஓவியமாய் இப்பாடலைப் படமாக்கியிருப்பார் ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.
 
கதை சொல்லும் விழிகள்
 
முன் ஜென்மத்தில் தான் வஞ்சகமாகக் கொல்லப்பட்ட கதையைச் சிற்பி பிரசன்னாவிடம் சொல்ல, ஒரு பொம்மையை ஏந்தியபடி அவனைப் பின்தொடர்ந்து செல்வாள் சிறுமி. வெறித்துப் பார்த்தபடி தன்னைத் தொடரும் அச்சிறுமியைக் கண்டு குழம்பும் பிரசன்னாவுக்குப் பின்னர்தான் உண்மை புரியும். அமானுஷ்யமான இச்சூழலுக்குப் பின்னணியாக ஒலிக்கும் பாடல் ‘சின்னச் சின்ன கண்கள் ரெண்டு’.
 
பாடலின் தொடக்கத்தில் வேகமாக வீசித் தணியும் பேய்க்காற்றைப் போல வயலின் கோவையை வார்த்திருப்பார் இளையராஜா. அகன்ற கண்களில் தேக்கி வைத்திருக்கும் கதையைச் சொல்ல வழியில்லாமல் தவிக்கும் சிறுமி மீது இரக்கம் கொண்ட அசரீரியாக ஒலிக்கும் பாடல் இது. தனக்கு மட்டுமே தெரிந்த கதையைப் பூடகமாகச் சொல்லும் ரகசியக் குரலில் கே.ஜே. ஜேசுதாஸ் பாடியிருப்பார். இந்த உலகத்தில் மீண்டும் பிறந்து தனிமையின் சோகத்துடன் சுற்றியலையும் ஆன்மாவின் இசையை இப்பாடலில் பதிவுசெய்திருப்பார் இளையராஜா.
 
ஏக்கத்தின் பாடல்
 
தன்னை வெளிக்காட்ட முயலும் தவிப்புடன் சிறுமியின் உடலில் இருக்கும் தேவதாசிப் பெண் பாடும் பாடல் இது. ‘பல ஜென்ம ஜென்மாந்தர பந்தங்கள்’என்று தொடங்கும் இப்பாடலை எஸ்.பி. ஷைலஜா பாடியிருப்பார். கடவுளர்களை, குறிப்பாக மூகாம்பாள் போன்ற பெண் தெய்வங்களைத் துணைக்கு அழைக்கும் இப்பாடலில் தெய்வீகம் வழியும் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. இப்பாடலின் வழியே சிற்பி பிரன்னாவிடம் தனது வருகையை உணர்த்திவிடுவாள் தேவதாசிப் பெண்.
 
முன் ஜென்மத்துக் கதை என்பதால் காட்சிக்குக் காட்சி பயங்கரமான இசையைக் கொடுக்காமல், மர்மத்தின் மவுனத்தையே இசையாகவும், பாடல்களாகவும் உருவாக்கியிருப்பார்கள் மகேந்திரனும் இளையராஜாவும். ‘ஏ மாமா கோபமா’ என்றொரு சராசரித் தமிழ்ப் பாடலும் படத்தில் உண்டு. பல்வேறு காரணங்களால் தோல்வியடைந்த படம் என்றாலும் நினைவில் நிற்கும் பாடல்கள் கொண்ட படைப்பு இது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தின் பாடல்களை நான் இதுவரை கேட்டதில்லை. ஆனாலும் இனிமையாக இருக்கின்றன. இப்படியொரு படம் இருந்தது தெரியாமல்ப் போனதே வியப்புத்தான்!

Link to comment
Share on other sites

எங்கெங்கோ செல்லும்
என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன்
பொன் வண்ணங்கள்
 
இவ் வரிகள்தான் இத்திரியை விபரிக்க தேவையானது.
 
நன்றி ஆதவன்.
எங்குதான் இவ்வாறான விடயங்களை தேடி எடுக்கின்றீர்களோ தெரியவில்லை. நீங்களும் உங்கள் இணைப்புகளும் இல்லாத யாழ்களத்தை கற்பனை பண்ணவே முடியாது.
Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 7: தென்றலின் ஒலி வடிவமாய் ஒரு குரல்

 

poonthalir_2428720g.jpg

 

தமிழ்த் திரையுலகில் இளையராஜாவின் பிரவேசம் நிகழ்ந்த ‘அன்னக்கிளி’ படத்தை இயக்கியவர்கள் தேவராஜ் மோகன் எனும் இரட்டை இயக்குநர்கள். திரையிசையின் எதிர்காலத்தையே மாற்றியமைத்த அந்தப் படத்துக்குப் பின்னர் அவர்கள் இயக்கிய பல படங்களுக்குத் தனது அற்புதமான இசையை அளித்தார் இளையராஜா. அந்த வரிசைப் படங்களில் ஒன்று ‘பூந்தளிர்’(1979). ‘அன்னக்கிளி’ படத்தில் நடித்த சிவகுமார், சுஜாதா ஜோடிதான் இந்தப் படத்திலும். நிஜ வாழ்வில் சிறந்த ஓவியரான சிவகுமார் இப்படத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞன் அஷோக்காக நடித்திருப்பார். மலையாளப் பெண்ணான மாயாவை (சுஜாதாவை) காதலித்துத் திருமணம் செய்துகொள்வான் அஷோக். காலமும் சூழலும் இருவரையும் பிரித்துவிடும். தனது காதல் கணவனைத் தேடிக் குழந்தையுடன் வரும் மாயாவும் இறந்துவிட அவர்களுக்குப் பிறந்த குழந்தை அநாதையாகத் திரியும். இறுதியில் அஷோக்கின் கலைதான் குழந்தையை அவனிடம் சேர்ப்பிக்கும்.
 
கிட்டத்தட்ட ‘அன்னக்கிளி’ படத்தின் அதே குழுதான் எனினும், அப்படத்தில் மூன்று அற்புதமான பாடல்களைப் பாடிய எஸ். ஜானகி இப்படத்தில் ஒரு பாடல்கூடப் பாடவில்லை என்பது விசித்திரம். ஆனால், படத்தில் ஒரேயொரு பாடலைப் பாடியிருக்கும் ஜென்ஸி அந்தக் குறையே தெரியாமல் பார்த்துக்கொண்டார். இளையராஜா இசையில் அவர் பாடிய மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள் தீவிர இசை ரசிகர்களின் சேகரிப்பில் பொக்கிஷங்களாகப் போற்றப்படுபவை. வருடிச் செல்லும் தென்றலின் ஒலி வடிவமாக நிலைத்துவிட்ட குரல் ஜென்ஸியுடையது.
 
குரலுலகின் தேவதை
 
இப்படத்துக்கு முன்னர் ‘அடி பெண்ணே’, ‘ஆடச் சொன்னாரே’ என்று பிரபலமான பாடல்களை ஜென்ஸி பாடியிருந்தாலும் இப்படத்தில் அவர் பாடியிருக்கும் ‘ஞான் ஞான் பாடணும்’ பாடலின் விசேஷம், அது அவரது தாய்மொழியான மலையாளத்தில் எழுதப்பட்டது என்பதுதான். தபேலாவின் துள்ளலான தாள நடையுடன் தொடங்கும் அந்தப் பாடலில் இசைக் கருவிகள் ஒன்றையொன்று சீண்டிக்கொண்டே விளையாடிச் செல்லும். பரவசப்படுத்தும் கிட்டாரின் ஒலி, சோகம் இசைக்கும் வயலின், ரகசியத்தைக் கிசுகிசுக்கும் புல்லாங்குழல் என்று நான்கு நிமிடப் பாடலில் ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்திக் காட்டியிருப்பார் இளையராஜா. காதல் ஏக்கம் என்பதையும் தாண்டி, தனக்கு நேரப்போகும் துயரத்தை முன்பே அறிந்துகொண்ட மனதின் மென்சோகத்தின் வெளிப்பாடாக ஆத்மார்த்தமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. ‘மாங்குயில் ஜோடிகள் மெல்லக் கூவும் ரகசியம்’ என்று தொடரும் சரணத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து, அதை ஆமோதிக்கும் விதமாக வயலினும் புல்லாங்குழலும் மென்மையாக ஒலிக்கும். எங்கோ ஒரு மலையடிவார கேரள கிராமத்துக்குக் காற்றின் வழியே பயணம் செய்யும் அனுபவத்தைத் தரும் பாடல் இது.
 
தாம்பத்ய சங்கீதம்
 
‘அன்பே…’ எனும் வார்த்தையைக் காதலுடன் வயலினில் வாசித்துக் காட்ட முடியுமா? ‘வா… பொன்மயிலே’ என்று தொடங்கும் பாடலின் முகப்பு இசையைக் கேளுங்கள்! காதலில் திளைக்கும் கணவன், தன் மனைவியின் அழகை இயற்கையின் வனப்புடன் ஒப்பிட்டு வர்ணிக்கும் பாடல் இது. முதல் சரணத்துக்கு முன்னர் பல்லவியின் கடைசி வார்த்தையைப் பிடித்துக்கொண்டே விரிந்து செல்லும் இசைக்கோவையில் இளையராஜாவின் மேதமை மிளிரும். எஸ்.பி.பி.யின் குரல் தாம்பத்யத்தின் அழகைத் துல்லியமாக வெளிப்படுத்தியிருக்கும். ‘உயிரிலே கலந்து மகிழ வா..பொன்மயிலே’ என்று பல்லவியுடன் சங்கமிக்கும் சரணத்தின் முடிவில் எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரத்தின் பேரமைதியை உணர முடியும்.
 
பகலின் குரல்
 
காதல், சோகம் எனும் பட்டியல் வகைப் பாடல்களைத் தாண்டி, சூழலின் தன்மையை மென்மையாகப் பதிவுசெய்யும் பல பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். ‘மனதில்… என்ன நினைவுகளோ’ எனும் பாடல் அந்த வகையைச் சேர்ந்தது. எஸ்.பி.பி. ஷைலஜா பாடியிருக்கும் இப்பாடல் முழுவதும் டிரம்ஸ், எலெக்ட்ரிக் கிட்டார், சாக்ஸபோன் என்று மேற்கத்திய இசைக் கருவிகளின் துள்ளல் இருந்தாலும் அவற்றைத் தாண்டிப் புல்லாங்குழலின் இசை ஒரு யோகியின் பரிவுடன் பாடல் முழுதும் வருடிச் செல்லும். ‘பா..பாபா..’ என்று உற்சாகம் பொங்கும் குரலுடன் பாந்தமாகப் பாடியிருப்பார் எஸ்.பி.பி. பரபரப்பாக இயங்கும் நகரின் பகல் நேரத்து அமைதி, அதன் இயல்பில் பதிவான பாடல் இது.
 
ஆதரிக்க யாருமின்றித் தனியே திரிந்துசெல்லும் தன் மகனை வாரியெடுத்து அணைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் தாயின் ஆன்மா பாடும் ‘ராஜா சின்ன ராஜா… பூந்தளிரே’ எனும் பாடலை பி. சுசிலா பாடியிருப்பார். எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘கண்ணின் மணி என்னைக் கண்டுபிடி’ எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.
 
poonthalir1_2428719g.jpg
 
Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 8- இசைக் குறிப்புகளால் எழுதப்பட்ட நாட்குறிப்பு

 

raja_2436640g.jpg

நண்டு படத்தில்

 

பணி நிமித்தமாகத் தொலைதூரப் பிரதேசங்களுக்கு இடம்பெயரும் மனிதர்கள், சொந்த ஊர் நினைவுகளை ஜியாமெட்ரி பாக்ஸுக்குள் மறைக்கப்பட்ட பொன்வண்டைப் போல் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

 
இளம் பிராயத்து நினைவெனும் வானத்தில் அந்த வண்டு பறந்து செல்லும்போது, அதைப் பிணைத்திருக்கும் நூலைப் பற்றிக்கொண்டு கூடவே பறந்து செல்வதும், வலிநிறைந்த நினைவுகளுடன் அதைப் பார்த்துக்கொண்டே நிற்பதும் அவரவரின் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தது. பழுப்பேறிய பசுமை நிறத்தில் உறைந்திருக்கும் அவ்வாறான நினைவுகளை மீட்டுத் தரும் பாடல் ‘அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா’. பாடல் இடம்பெற்ற திரைப்படம் 1981-ல் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘நண்டு’.
 
சிவசங்கரி எழுதிய கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ‘உதிரிப் பூக்கள்’ அஸ்வினி, சுரேஷ் (அறிமுக நடிகர்) ஆகியோருடன் செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு என்று சிறந்த நடிகர்கள் நடித்திருந்தனர்.
 
வட நாட்டு இளைஞனான நாயகன், பெரும் பணக்காரரான தன் தந்தையின் பிற்போக்குத்தனத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறியவன். தமிழகத்தில் வெள்ளந்தி மனிதர்கள் வசிக்கும் குடியிருப்பில் ஒரு அறையில் தங்கியிருப்பான். அந்த மனிதர்களுக்கும் அவனுக்கும் இடையில் மலரும் உறவு, காதல் என்று நேர்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை.
 
அள்ளித் தந்த ராஜா
 
பிறந்து வளர்ந்த ஊரின் வீடுகள், தெருக்கள், குளங்களை வெவ்வேறு வடிவங்களில் கனவுகளில் காண்பவர்கள் எங்கும் நிறைந்திருக்கி றார்கள். அந்தக் கனவுகளைப் பதிவு செய்த பாடல் ‘அள்ளித் தந்த பூமி’. பூர்வீக வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு மனதுக்குப் பழக்கமான தெருக்களை, வீடுகளைப் பார்த்தபடி பழைய நினைவுகளில் மூழ்கித் திளைக்கும் அனுபவத்தை இந்தப் பாடல் தரும். நினைவின் ஒவ்வொரு அடுக்குக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் இசையிழைகளை நெய்திருப்பார் இளையராஜா.
 
அலைபாயும் பல்வேறு எண்ணங்கள் ஓரிடத்தில் கலந்து பிரிவதைப் பாடலின் நிரவல் இசைக்கோவைகள் உணர்த்திவிடும். நிரவல் இசையில் முதல் சரணத்துக்கு முன்னதாக இளம் வயதின் பசுமையான நினைவுகளை அசைபோட்டபடி எலெக்ட்ரிக் கிட்டார் ஒலிக்க, அந்நினைவை வருடிச் செல்வதுபோல், ஒரு வயலின் கோவையை அமைத்திருப்பார் இளையராஜா.
 
‘இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்’போன்ற ஆத்மார்த்தமான வரிகளை எழுதியவர் மதுக்கூர் கண்ணன். கடந்து சென்ற வாழ்வின் மகிழ்ச்சியான கணங்களையும், துயர நினைவுகளையும் தனது குளிர்ந்த, தணிந்த குரலில் பதிவுசெய்திருப்பார் மலேசியா வாசுதேவன். காலத்தின் சுவடுகளைத் தாங்கி நிற்கும் கோட்டைகள் நிறைந்த நகரின் பின்னணியில் அசோக்குமாரின் ஒளிப்பதிவு, படம் வெளியான சமகாலத்திலேயே அப்பாடலுக்குக் காவியத் தன்மையைத் தந்துவிட்டது.
 
ஈரம் படிந்த இசை
 
தன் குழந்தையின் அழகை வர்ணித்துத் தாய் பாடும் ‘மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே’ பாடல், இளையராஜா தந்த தாலாட்டுகளில் ஒன்று. வீணை மற்றும் கிட்டாரின் மெல்லிய உரையாடலுடன் தொடங்கும் அந்தப் பாடல் முழுவதும், வாழ்க்கையின் சுகந்தங்களையும் சிடுக்குகளையும் சித்தரிக்கும் இசையைத் தந்திருப்பார். நாயகனுக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் ஒலிக்கும் பாடல் இது.
 
சற்று முன்னர் பெய்த மழையின் ஈரம் படிந்த தெருக்களின் வழியே நடந்து செல்லும் நாயகன் ஒருபுறம், குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கும் அவனது குடும்பம் மறுபுறம் என்று இருவேறு மனநிலைகளை இசையாக்கியிருப்பார் இளையராஜா. உமா ரமணனின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இது.
 
முதல் நாள் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு, மறுநாள் காலையில் எந்த வித அலுப்பும் இல்லாமல் புத்துணர்வுடன் இந்தப் பாடலை ‘கம்போஸ்’ செய்திருந்தார் இளையராஜா என்று, ஒலிப்பதிவுக் கூடத்துக்கு உமா ரமணனுடன் சென்றிருந்த அவருடைய கணவர் ஏ.வி. ரமணன் குறிப்பிட்டிருக்கிறார். பாடலில் தோன்றும் குழந்தையை ‘நடிக்க’ விடாமல் அதன் போக்கில் இருக்கவைத்து, யதார்த்தமாகப் படமாக்கியிருப்பார் மகேந்திரன்.
 
நாயகன் வட நாட்டுக்காரன் என்பதால், முழுக்க முழுக்க இந்தியிலேயே எழுதப்பட்ட பாடலும் படத்தில் உண்டு. ‘கேஸே கஹூ(ம்)… குச் கே(ஹ்) ந சகூ(ம்)’ (‘எப்படிச் சொல்வேன், எதையும் சொல்ல முடியவில்லையே’) என்று தொடங்கும் இந்தப் பாடலை எஸ். ஜானகியுடன் கஜல் பாடகர் புபேந்தர் சிங் பாடியிருப்பார்.
 
நெகிழ்வூட்டும் இசைக் கூறுகள் நிறைந்த பாடல் இது. பி.பி.ஸ்ரீநிவாசும் தீபன் சக்கரவர்த்தியும் சரி விகிதத்தில் கலந்த குரல் புபேந்தருடையது. பல மொழிகள் அறிந்த பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் எழுதிய பாடல் இது. ‘பாடுதம்மா காற்றின் அலைகள்’ எனும் டைட்டில் பாடலைத் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் பாடியிருப்பார் புபேந்தர் சிங்.
 
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
 
படங்கள் உதவி: ஞானம்
 
raja1_2436639g.jpg
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காற்றில் கலந்த இசை 9: கிராமத்துக் காதலின் சங்கீதம்

raja1_2444458g.jpg

 

ஊருக்கு வெளியே இருக்கும் ரயில்வே கேட், ரயில் வரும் நேரங்களில் மூடப்படும்போது, அதன் இருபுறங்களிலும் நிற்கும் வாகனங்களில் காத்திருக்கும் பயணிகளிடம் பூ, பழம், தின்பண்டங்களை விற்பவர்களைப் பார்த்திருப்போம். ஆர். செல்வராஜ் இயக்கத்தில் 1983-ல் வெளியான ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’ படத்தின் கதைமாந்தர்கள் அவர்கள்தான்.

கையில், பேசும் கிளியுடன் அந்தச் சிறு வணிகத்தில் பங்கேற்கும் ராஜலட்சுமிதான் படத்தின் நாயகி. எளிய மனிதர்கள் வாழும் சின்னஞ்சிறிய அந்தக் கிராமத்துக்கு முதல் முறையாக வரும் பேருந்து இன்னொரு முக்கியமான பாத்திரம். அதன் நடத்துநர் (கார்த்திக்) படத்தின் நாயகன். கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும் இந்தக் கதை சிறப்பாகப் படமாக்கப்பட்டதா என்பது வேறு விஷயம்.

எனினும், ‘ராசிபுரம் காத்தவராயன், ஸ்ரீரங்கம் சீனிவாசன் ஆகியோர் விரும்பி கேட்டிருக்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம் ‘பகவதிபுரம் ரயில்வே கேட்’. பாடலைப் பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, எஸ்.பி. ஷைலஜா. எம்.ஜி. வல்லபன் எழுதிய பாடலுக்கு இசை இளையராஜா’ என்று மவுன இடைவெளிகளுக்கு நடுவில் விவித்பாரதி அறிவிப்பாளர்களால் பல முறை ஒலிபரப்பப்பட்ட பாடல்களைக் கொண்ட படம் இது.

காலை நேரத் தென்றல்

முந்தைய நாளில் எத்தனையோ கசப்பான விஷயங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இயற்கையின் சுகந்தத்துடன், புத்தம் புதிதாக, மலர்ச்சியுடன் மறுநாள் காலை புலரும் தருணங்கள், எவர் மனதையும் உடலையும் புத்துயிர்ப்புடன் உணரவைத்துவிடும். காலை நேரத்தில் கண் விழிக்கும் மலர்களும் பறவைகளும் இயற்கையின் அற்புதத்தைப் பாடிக்கொண்டிருக்கும். நமது நாயகனும் நாயகியும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்வது இந்த நேரத்தில்தான் என்பதால், ‘காலை நேரக் காற்றின் வாழ்த்தைக்’ கோருகிறது இந்தப் பாடல்.

துள்ளும் இளமையுடன் ஒலிக்கும் கிட்டாருக்கு இணையாகக் குதூகலமாக இசைக்கும் வீணையுடன் பாடல் தொடங்குகிறது. துடிக்கும் மனதின் இசை வடிவமாகக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் தபேலா, இயற்கையின் இளமையைச் சுமந்தபடி பாடல் முழுவதும் ஒலிக்கும். ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் சிலிர்த்துக் கிடக்கும் செடி-கொடிகள், காற்றின் தாளத்துக்கு அசையும் நாற்றுக்கள், காற்றின் தீண்டலில் மெல்லிய அலைகள் பரவும் நீர்ப்பரப்புகள் என்று இந்தப் பாடல் வழங்கும் மனச்சித்திரங்கள் அபாரமானவை. முதல் சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் புல்லாங்குழல் இயற்கை அழகை ரசித்தபடி வருடிச் செல்லும் காலைத் தென்றலின் இசை வடிவமாக ஒலிக்கும்.

இயற்கை சார்ந்த பல பாடல்களைத் தீபன் சக்கரவர்த்திக்கு இளையராஜா வழங்கியதன் காரணம் என்னவாக இருக்கும்? இயற்கையை வியக்கும் அடங்கிய, குளிர்ந்த அவரது குரல் இப்பாடல்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று இளையராஜாவுக்குத் தோன்றியிருக்கலாம்.

இயற்கையுடன் இசைந்து ஒலிக்கும் இதுபோன்ற பாடல்கள் எஸ்.பி. ஷைலஜாவுக்குக் கொடுக்கப்பட்டதற்கு, விரிந்துகிடக்கும் இயற்கையின் எல்லையைத் தொட முயலும் அவரது துல்லியமான குரல் காரணமாக இருக்கலாம். காரணம் என்னவாக இருந்தாலும் இதுபோன்ற கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில் நமக்குக் கிடைத்திருக்கும் பாடல்கள், இயற்கையின் பேரழகை நம் கண்முன் நிறுத்துபவை.

சாரல் தெறிக்கும் இசையருவி

உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடிய ‘செவ்வரளித் தோட்டத்திலே உன்னை நினைச்சு’ பாடல், கிராமியக் காட்சிகளை வரைந்துசெல்லும் மற்றொரு பாடல். ‘காலை நேரக் காற்றே’ பாடல் புதிதாகத் தொடங்கும் காதலின் குறுகுறுப்பு கலந்த துள்ளல் கலந்தது என்றால், இந்தப் பாடல் காதலில் திளைக்கும் ஜோடியின் ரகசியச் சந்திப்பின் கொண்டாட்டம் எனலாம்.

‘தானானே… தானானா…’ என்று கிராமத்தின் அசல் குரல் ஒன்றுடன் தொடங்கும் பாடல், எளிய தாளக்கட்டுடன் கிட்டார், ஜலதரங்கம் என்று இசைக் கருவிகளின் சங்கமத்துடன் தொடர்கிறது. அருவியின் கிளைகளாகப் பிரிந்து செல்லும் ஓடைகளில் ஒன்று, பசுமையாகக் குளிர்ந்து கிடக்கும் பாறைகளின் மீது ஓடிச்செல்வது போல், தன்னியல்பாக விரிந்துசெல்லும் இசை கொண்ட பாடல் இது.

மாலை நேரத்தில் தென்னங்கீற்றுகளின் நடுவில் எட்டிப் பார்க்கும் சூரியக் கதிர்களின் மஞ்சள் பின்னணியில், பெயர் தெரியாத காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சி மனதுக்குள் விரியும். ‘கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே’ என்று இளையராஜா பாடும்போது, இதுவரை அறிந்திராத அருவியின் சாரல் நம் மீது தெறிப்பதை உணர முடியும். அத்தனை அசலான கிராமத்துப் பாடல் இது.

கங்கை அமரன் பாடிய டைட்டில் பாடலைத் தவிர்த்து வேறு இரண்டு பாடல்களும் படத்தில் உண்டு. சசிரேகா பாடிய ‘தென்றல் காற்றும் அன்புப் பாட்டும்’ பாடல், காதல் வாழ்வில் குறுக்கிடும் சோகங்களை நினைத்து வருந்தும் நாயகியின் மனக்குரலாக ஒலிக்கும். தனித்த குரல் கொண்ட சசிரேகாவின் சிறந்த பாடல்களில் ஒன்று இது. எஸ்.பி.பி. பாடும் ‘ஆசை நெஞ்சில் இனி தீபம் இல்லை’ பாடல், நாயகனின் தரப்பில் பாடப்படும் மற்றொரு காதல் சோகப் பாடல்.

படம் உதவி: ஞானம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-9-கிராமத்துக்-காதலின்-சங்கீதம்/article7

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 10: இரவு, வானம், மவுனம், இசை

 

  • ‘கழுகு’ படத்தில் ரதி, ரஜினி
    ‘கழுகு’ படத்தில் ரதி, ரஜினி

1980-களில் வெளியாகி வெற்றிபெற்ற பல திரைப்படங்கள் முதிர்ச்சியான ரசிகர்களுக்கானவை யாக அல்லாமல், சிறுவர்களுக் காகவே எடுக்கப்பட்டதாக இப்போது தெரிகிறது. தர்க்கரீதியான கேள்விகளை அலட்சியம் செய்தபடி தன் போக்கில் நகரும் அவ்வாறான படங்கள் தமிழில் பல உண்டு.

ஆனாலும், சாகசங்களை விரும்பும் இளம் மனங்களுக்குப் பெரும் விருந்து படைத்த படங்கள் அவை. அப்படியான சாகசப் படங்களில் ஒன்று எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் ரஜினி, ரதி நடித்த ‘கழுகு’. காதல் திருமணம் செய்துகொள்ளும் ரஜினி-ரதி ஜோடிக்குப் திருமணப் பரிசாக ஒரு பேருந்து வழங்கப்படும்.

படுக்கை, குளியல் வசதிகள், சமைக்கும் கருவிகள் என்று சகல வசதிகளுடன் ஒரு நகரும் வீடாக இருக்கும் அந்தப் பேருந்தில், நெருங்கிய நண்பர்களின் துணையுடன், இதுவரை அறிந்திராத பகுதிகளுக்கு அவர்கள் பயணம் செய்வார்கள். புதிய இடம் ஒன்றில் அவர்கள் சந்திக்கும் மர்மமான சம்பவங்கள்தான் படத்தின் கதை. படம் முழுவதும் குதூகலம் தரும் பயணத் துணையாக, இளையராஜாவின் இசை கூடவே பயணிக்கும்.

மலைக் காற்றின் தீண்டல்

பாடல்களில் இசைக் கருவிகளுக்கு மாற்றாக, குரல்களை வைத்து இளையராஜா செய்த பரிசோதனைகள் நிறைய உண்டு. முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்த பாடல்கள் அவை. இப்படத்தில் இடம்பெறும், ‘பொன்னோவியம்… கண்டேனம்மா எங்கெங்கும்’ பாடல் அவற்றில் ஒன்று.

பசுமையான மலைப் பாதைகளின் வழியாகச் செல்லும் பேருந்துக்குள் இருந்தபடி, இயற்கையை ரசிக்கும் காதலர்கள் பாடும் பாடல் இது. ‘லலலலலா…’ என்று பல குரல்களின் சங்கமமாக ஒலிக்கத் தொடங்கும் ஹம்மிங்குடன், துள்ளலான தாளம் இனிமையைக் கூட்டும். ‘பொன்னோவியம்…’. என்று எஸ். ஜானகியின் குரல் தொடங்கும்போது மலைக் காற்றின் ஸ்பரிசத்தை உணர முடியும். இயற்கையின் வசீகரத்தைக் கொண்டாடும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாகப் பாடியிருப்பார் இளையராஜா.

முதல் சரணத்துக்கு முன்னதான நிரவல் இசையில் ஒலிக்கும் குரல்கள், கொண்டாட்டத்தில் துள்ளும் என்றால், இரண்டாவது சரணத்துக்கு முன்னதான நிரவல் இசை சலனமற்று உறைந்து கிடக்கும் நதிக்கரையின் அமைதியைக் கண்முன் நிறுத்தும். ‘ம்ம்ம்..ம்ம்ம்’ என்று ஆண் பெண் குரல்கள் இணைந்து ஒலிக்கும்போது, இயற்கை தேவதைகளே இளம் ஜோடியை வாழ்த்துவதுபோல் இருக்கும்.

இளையராஜா பாடிய பெரும்பாலான டூயட் பாடல்களில் அவருக்குத் துணையாகப் பாடியிருப்பவர் எஸ். ஜானகிதான். தனது அபாரமான கற்பனை வீச்சின் நுட்பங்களை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட பாடகி என்பதால், தான் பாடும் பாடல்களில் ஜானகியின் குரலை இளையராஜா பயன்படுத்தியிருக்க வேண்டும். இருவரும் பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று இப்பாடல்.

கனவில் ஒலிக்கும் பாடல்

ஆயிரக் கணக்கான திரைப் பாடல்களைப் பாடியவர்களுக்குக் கிடைக்கும் புகழ், சிலருக்கு ஒரே பாடல் மூலம் கிடைத்துவிடும். இப்படத்தில் இடம்பெறும் ‘காதல் எனும் கோவில்’ பாடலைப் பாடிய சூலமங்கலம் முரளி அந்த வகையைச் சேர்ந்தவர். சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ராஜலட்சுமியின் மகன் இவர். சில பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால், சினிமாவில் அவர் பாடிய பாடல், அநேகமாக இது மட்டும்தான். பல உயரங்களுக்கு அனாயாசமாகப் பறந்து செல்லும் குரல் இவருடையது.

இந்தப் பாடல் உருவாக்கும் கற்பனை மிக நுட்பமானது. மாலை நேரத்தின் மஞ்சள் நிறம் கரைந்துவிடாத இரவின் தொடக்கம். கடல், மலை, மரங்கள் என்று எதுவுமே இல்லாத பரந்த சமவெளி. பூமியைத் தொட்டுக்கொண்டே புரளும் பிரம்மாண்டமான திரையாக வானம். அதில் ஆங்காங்கே நட்சத்திரங்கள்.

அசையாதச் சித்திரமாக விரிந்திருக்கும் இந்த கனவுப் பிரதேசத்தின் அமைதிக்கு நடுவில் மென்மையாக ஒலிக்கத் தொடங்குகிறது கிட்டார். சற்று நேர நடைக்குப் பின்னர் மெதுவாக ஓடத் தொடங்குவதுபோல், தொடக்க இசைக்குப் பின்னர் வேறுபட்ட திசையில் பாடல் திரும்பும். வேகம் கூடும் கிட்டாருடன், புல்லாங்குழல் ரகசியமாகக் கொஞ்ச, பாடல் தொடங்கும்.

நிரவல் இசையில் வயலின் சேர்ந்திசையில், விமானம் தரையிலிருந்து வானத்துக்கு ‘டேக்-ஆஃப்’ செய்யும் அற்புதத்தை உணர முடியும். சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்ட இசை இது. தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் மிதந்து செல்லும் உணர்வைத் தரும் இப்பாடல் தரும். கனவுகளில் தோன்றும் நிலப்பரப்பின் இசை வடிவம் என்றும் இந்தப் பாடலைச் சொல்லலாம்.

கோடை விடுமுறைச் சுற்றுலாவை நினைவுபடுத்தும் ‘ஒரு பூவனத்தில’ எனும் பாடலை எஸ்.பி.பி. பாடியிருப்பார். சிறு மலர்கள் அடர்ந்திருக்கும் புல்வெளி மீது தரைவிரிப்பைப் பரப்பி அமர்ந்துகொண்டு கேட்க வேண்டிய பாடல் இது. போலிச் சாமியாரின் மர்மங்களை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் ரஜினி ஆடிப் பாடும் ‘தேடும் தெய்வம்’ எனும் பாடலைத் தனக்கே உரிய உற்சாகத்துடன் பாடியிருப்பார் மலேசியா வாசுதேவன்.

raja_2452079g.jpg

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-10-இரவு-வானம்-மவுனம்-இசை/article7357354.ece

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 11: தொன்ம நகரத்தின் தேவகானம்

kki_2460770f.jpg
 

திரைப்படங்கள் அடைந்த தோல்வி காரணமாகப் பரவலாக அறியப்படாமல் போன நல்ல பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பெயர் தெரியாத படங்களின் பாடல்களாக நினைவுகளில் பதிவாகிவிட்ட இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் ஏராளம். இதுபோன்ற பாடல்களைக் கேட்கும்போது, யாரும் அறியாத ரகசிய வனத்தைக் கண்டடையும் மனக்கிளர்ச்சி நம்முள் ஏற்படும். நூலகத்தில் பலர் கண்ணிலும் படாத அலமாரியில் வாசகர்களுக்காகக் காத்திருக்கும் புத்தகங்களைப் போன்றவை இப்பாடல்கள்.

இன்று மெய்நிகர் புதையலைப் போல ஏராளமான விஷயங்களைக் கொண்டிருக்கும் இணையத்தில் இதுபோன்ற பாடல்கள் பார்க்க, கேட்க கிடைக்கின்றன. காலத்தின் நிறம் ஏறிய பழைய புகைப்பட ஆல்பங்களைப் புரட்டிப் பார்க்கும் அனுபவத்தைத் தரும் பாடல்கள் இவை. அந்த வரிசையில் இடம்பெறும் பாடல், ‘எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ.’ இடம்பெற்ற திரைப்படம் ‘இது எப்படி இருக்கு’. கருப்பு-வெள்ளைத் திரைப்படம் இது.

குமுதம் இதழில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘அனிதா இளம் மனைவி’எனும் தொடர்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 1978-ல் வெளியானது. ஆர். பட்டாபிராமன் இயக்கிய இப்படத்தில் நாயகி பாத்திரத்தில் தேவி நடித்திருந்தார். கமல், ரஜினி போன்ற இளம் நடிகர்களின் வருகைக்குப் பிறகு சந்தை மதிப்பை இழக்கத் தொடங்கிய நடிகர்களில் ஒருவரான ஜெய்சங்கர்தான் படத்தின் நாயகன்.

சற்று ஜீரணிக்க முடியாத நடிகர் தேர்வுதான். சுஜாதாவின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட எந்தப் படமும் அவர் மனதுக்குத் திருப்தி தராதது. இதை அவரே பல முறை குறிப்பிட்டிருக்கிறார் (அவர் திரைக்கதை, வசனம் எழுதிய படங்கள் இதில் அடங்காது). அந்த வகையில் யாருடைய நினைவிலும் நிற்காத படமாக வந்துசென்ற இப்படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடல் மட்டும் தனித்த அழகுடன் மிளிரும்.

‘லாலா..லாலலா..’ என்று தொடங்கும் எஸ்.ஜானகியின் ஹம்மிங்கைத் தொடர்ந்து வானில் இருந்து இறங்கிவரும் வயலின் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. புராதன நகருக்கு வெளியே சாலையைப் பார்த்தபடி நிற்கும் மரங்களின் இலைகளை அசைக்கும் காற்றாக ஒலிக்கும் இசை அது. அந்த இசையின் முடிவில், பாடலின் பல்லவியைத் தொடங்குவார் ஜானகி.

குரலாலேயே இயற்கையை அளக்க முயல்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவரது குரல், வானில் மிதந்து மெல்ல இறங்கிவரும். புல்லாங்குழல், வயலின் கலவையாக சில விநாடிகள் ஒலிக்கும் நிரவல் இசையைத் தொடர்ந்து அனுபல்லவியைத் தொடங்குவார் ஜேசுதாஸ். ‘பார்வை ஜாடை சொல்ல இளம் பாவை நாணம் கொள்ள…’ என்று தொடங்கி ‘எங்கும் நிறைந்த இயற்கையின் சுகம்’தரும் பல்லவியுடன் இணைந்துகொள்வார்.

பெண் குரல்களைக் குயில் குரல்களைப் போல் ஹம்மிங் செய்ய வைக்கும் பாணியை இளையராஜா புகுத்திய பாடல்களில் இப்பாடல் முதன்மையானது என்று சொல்லலாம். குயில் போலவே ஒலிக்கும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து அந்த ஜாலத்தை இளையராஜா ஜானகி இணை நிகழ்த்திக் காட்டியிருக்கும். ‘குகுகுக்கூ… குகுகுக்கூ…’ என்று தொடங்கும் ஜானகியின் ஹம்மிங்குடன் மற்றொரு அடுக்கில் சற்று தாழ்ந்த குரலில் இதே ஹம்மிங்கை மற்றொரு பெண்குரல் பாடும் (அதுவும் ஜானகியின் குரல்தான்).

இந்த ஹம்மிங்கைத் தொடர்ந்து பரவசமூட்டும் வயலின் கோவை ஒன்று குறுக்கிடும். பாடிக்கொண்டே பறந்து செல்லும் குயில்கள் மஞ்சள், சிவப்பு, செம்பழுப்பு வண்ணக் கலவையாக விரிந்து செல்லும் வானைக் கடந்து செல்வது போன்ற காட்சிப் படிமம் மனதில் தோன்றி மறையும்.

சுமார் ஆறு நிமிடங்கள் கொண்ட இப்பாடலின் ஒவ்வொரு நொடியிலும் எதிர்பாராத ஆச்சரியங்களை வைத்திருப்பார் இளையராஜா. வழக்கம்போல இரண்டே சரணங்கள் கொண்ட இப்பாடலின் நிரவல் இசைக் கோவைகள் பல விநாடிகள் நீளம் கொண்டவை. பெரிய கேன்வாஸில் பிரம்மாண்டமான ஓவியத்தை வரையும் ஓவியன், ஆங்காங்கே ஓவியத்தின் அழகை ரசித்து ரசித்து மேலும் செழுமைப்படுத்துவதுபோல், நிரவல் இசைக்கோவையின் நீளத்தை அதிகரித்துக்கொண்டே செல்வார் இளையராஜா.

இரண்டாவது சரணத்தில் வீணை இசையைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசை, எங்கோ ஒரு தொலைதூரக் குளிர்ப் பிரதேசத்தைக் கடந்து செல்லும் மேகத்தைப் போல் மிதக்கும். சரணத்தில், ‘தேனாக…’ என்று வானை நோக்கி உயரும் ஜேசுதாஸின் குரலுடன், ‘லலலல..லலல..லலல’ என்று சங்கமிக்கும் எஸ். ஜானகியின் ஹம்மிங் இந்தப் பாடலுக்கு ஒரு தேவகானத்தின் அழகைத் தரும். அத்தனை துல்லியமான இசைப் பதிவாக இப்பாடல் இப்போது கிடைக்கவில்லை. ஆனால், தெளிவற்ற ஒலிவடிவில் இருப்பதே இப்பாடலுக்கு ஒரு தொன்மத் தன்மையைக் கொடுக்கிறது.

பி. சுசீலா பாடும் ‘தினம் தினம் ஒரு நாடகம்’என்றொரு பாடலும் இப்படத்தில் உண்டு.

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-11-தொன்ம-நகரத்தின்-தேவகானம்/article7382471.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 12: ஐரோப்பிய நிலத்தின் தெய்வீக ராகங்கள்

raja_2468488f.jpg

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல தமிழ்த் திரைப்படங்கள், கதாபாத்திரங்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைக் கொண்டாட்டமாகச் சித்தரித்தவை. வெளிநாட்டு மண்ணில் விமானம் தரையிறங்குவது தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் அந்நிய மண்ணை வியந்து ரசிக்கும் இந்திய மனது வெளிப்படும்.

அந்த வரிசையில் இடம்பெறும் படம் ‘உல்லாசப் பறவைகள்’(1980). கமல்ஹாஸன், ரதி, தீபா பிரதான பாத்திரங்களில் நடித்த இப்படத்தை சி.வி. ராஜேந்திரன் இயக்கியிருந்தார். ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் படமாக்கப்பட்ட இப்படத்தில் மேற்கத்திய இசையில் தனக்கு இருக்கும் மேதமையை முழு வீச்சில் வெளிப்படுத்தினார் இளையராஜா. நுட்பங்கள் நிறைந்த விரிவான இசைக்கோவை கொண்ட பாடல்களும் பின்னணி இசையும் நிறைந்த படம் இது.

மாமா மியா

‘அம்மாடி’ எனும் வியப்புச் சொல்லின் இத்தாலி மொழி வடிவமான ‘மாமா மியா’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தி இளையராஜா உருவாக்கிய பாடல், ‘அழகு ஆயிரம் உலகம் முழுவதும்’. முகப்பு இசையிலேயே ஜாலங்களை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா. மெலிதாக ஒலிக்கத் தொடங்கும் பியானோவுடன், வெவ்வேறு இசைக் கருவிகள் ஒவ்வொன்றாக இணைந்துகொண்டே வரும்.

பல்லவி தொடங்குவதற்குச் சற்று முன்னர் வரும் அந்த பிரம்மாண்டமான வயலின் இசைக் கோவை நம்மைக் காற்றில் தூக்கிச் செல்லும். ஆண் தன்மை கொண்ட குரலுடன் ‘பபபப்பா..’ என்று ஜானகி ஹம்மிங் செய்யும் பாடல்களில் இதுவும் ஒன்று. மெல்லிய குளிர் காற்று வீசும் ஐரோப்பிய நகரங்களின் பின்னணியில் துள்ளலாக ஒலிக்கும் பாடல் இது.

பரிவின் இசை

மனநோயால் பாதிக்கப்பட்டி ருக்கும் கமலுக்கு ஆறுதல் தரும் மனதுடன் ரதி பாடும் ‘நான் உந்தன் தாயாக வேண்டும்’ பாடல், ஒரு வித்தியாசமான தாலாட்டு. வேகமான தாளக்கட்டின் மேல் விரிந்து செல்லும் இசைக்கோவைகளுக்கு நடுவில் தாயின் பரிவுடன் காதலி பாடும் பாடல் இது. நுட்பமான பாவங்களுக்குப் புகழ்பெற்ற ஜானகி இப்பாடலுக்கு மேலும் மேன்மை சேர்த்திருப்பார். விரிந்திருக்கும் கடலின் மீது ஒவ்வொன்றாக விழும் தூறல் போல், மிக மென்மையான இசையுடன் தொடங்கும் இப்பாடல் முழுவதும் அன்பின் சாரல் நிறைந்த இசையைத் தந்திருப்பார் இளையராஜா.

சுகந்தத்தின் மணம்

மற்ற பாடல்களாவது ஐரோப்பாவின் எந்த நகரத்தின் கட்டிடங்கள், பாலங்கள், சாலைகளின் பின்னணியில் பொருந்திவிடும். ஆனால், ‘அழகிய மலர்களின் புதுவித ஊர்வலமே’ பாடல் ஐரோப்பிய நகரம் ஒன்றில் (ஆம்ஸ்டர்டாம் இணையக் குறிப்பு ஒன்று) நடக்கும் மலர்க் காட்சியின் பின்னணியில் பிரத்யேகமாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்த மலர்க்காட்சிக்குப் பொருத்தமானதாக இப்பாடலை இளையராஜாவிடம் கேட்டு வாங்கியிருக்க வேண்டும்.

மலர்க் காட்சியின் ஊர்வலத்தில் இசைக்கப்படும் தாள வாத்தியங்களுடன் தொடங்கும் பாடலில் மலர்களின் சுகந்தமும் குளுமையும் நிரம்பித் ததும்பும். முதலாவது நிரவல் இசையில் புல்லாங்குழல் ஊர்வலத்தின் பின்னே தொடரும் ‘லலலல்லால லாலா’ எனும் சங்கமக் குரல்கள் நிஜ வாழ்வில் தேவதைகளின் இருப்பை நம்பச் செய்யும்.

தேவதைகளின் பாடல்

படத்தின் ஒரேயொரு ‘உள்ளூர்ப் பாட’லான ‘தெய்வீக ராகம் தெவிட்டாத’ பாடலைக் குரலுலகின் தேவதை ஜென்ஸி பாடியிருப்பார். ‘ஓஓஓ..ஏஏஏ’ என்று தொடங்கும் ஜென்ஸியின் ஹம்மிங்குக்குப் பின்னர் ஒலிக்கும் இசை நம் உணர்வுகளை மீட்டிச் சிலிர்க்க வைக்கும். காதலை ரகசியமாக உணர்த்தும் புல்லாங்குழல் இசையைத் தொடர்ந்து ‘செந்தாழம் பூவைக் கொண்டு’ என்று சரணத்தைத் தொடரும் ஜென்ஸியின் குரல், தனிமையின் வலியை மென்மையாகப் பதிவுசெய்யும்.

இயற்கையின் நுட்பமான கூறுகளை உள்வாங்கி அதை இசை வடிவமாகத் தரும் இளையராஜாவின் மேதமைக்குச் சான்று இப்பாடல். பாடல்களில் பால் வித்தியாசம் உண்டா தெரியாது. ஆனால், இது ஒரு பெண்பால் பாடல் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ரதிக்கு இப்பாடலைக் கமல் பாடிக்காட்டும் காட்சியில் அத்தனை உணர்வுடன் இப்பாடலை ஒரு ஆண் பாடவே முடியாது என்று தோன்றும்.

செந்தேன் மலர்

பெண் குரல்களின் தனிப்பாடல்கள் நிறைந்த இப்படத்தின் ஒரேயொரு டூயட் பாடல் ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’. தமிழ்த் திரையிசையின் இணையற்ற ஜோடியான எஸ்.பி.பி.- ஜானகி பாடிய இப்பாடல் இளைய ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. ‘ஜெர்மனியின் செந்தேன் மலர்’ எனும் பதமே, மனதுக்குள் பரந்த மேற்கத்திய நிலத்தின் வசீகரச் சித்திரத்தை விரிக்கும்.

ஆர்ப்பாட்டமான சாக்ஸபோன் இசையுடன் தொடங்கும் இப்பாடல் முழுவதும் இனிமையின் கொண்டாட்டம் தான். ஜெர்மனி என்று பாடல் வரி சொன்னாலும் பிரான்ஸ், நெதர்லாந்து என்று வெவ்வேறு நாடுகளின் நகரங்களில் படமாக்கியிருப் பார்கள். இரண்டாவது நிரவல் இசையில் துள்ளும் கிட்டார் இசையைத் தொடர்ந்து குளிர் காற்றில் பரவும் வயலின் இசைக் கோவை தமிழ்த் திரை யிசையின் மகத்தான சாதனை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-12-ஐரோப்பிய-நிலத்தின்-தெய்வீக-ராகங்கள்/article7404734.ece?widget-art=four-all

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காற்றில் கலந்த இசை 13 | எம்.எஸ்.வி. - எஸ்.பி.பி.: எழுபதுகளின் இருவர்

spb_msv_2476657g.jpg

 

எம்.எஸ்.வி. மறைவுச் செய்தி வெளியான சில மணிநேரத்தில் எஸ்.பி.பி.யின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் புகைப்படம் அனைவரையும் அதிரவைத்தது. மெலிந்த உடல், நரைத்த தாடியுடன் முதுமையின் கொடுங்கரம் அவரைப் பற்றியிருந்ததைப் பார்த்த பலரும் கலங்கியிருப்பார்கள்.

அவர் அருகே லேசாகச் சிரித்தவாறு அமர்ந்திருந்தார் எஸ்.பி.பி. ஆனால், தன்னை உருவாக்கிய இசை மேதையின் உடல்நிலை அப்படி ஆனதை நினைத்து உள்ளுக்குள் கதறிக்கொண்டு இருந்திருப்பார். ஏனெனில், அவரது இசைப்பயணத்தின் வழிகாட்டியும் வழித்துணையும் எம்.எஸ்.வி.தான்!

பகல் நேரத்துப் பாடல்கள்

சில பாடல்கள் காலத்துடன் இறுகப் பிணைக்கப் பட்டவை. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது குறிப்பிட்ட அந்தக் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் தன்மை கொண்டவை. இளையராஜா காலம் தொடங்குவதற்கு முன்னதான காலம், அவரது வருகைக்குப் பிறகான சில ஆண்டு காலம் ஆகிய காலகட்டத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் பாடல்கள் அந்த வகைமையில் அடங்கக்கூடியவை. பாலசந்தரின் பரீட்சார்த்தப் படங்கள் வெளியான காலகட்டமும், கமல், ரஜினி போன்ற நடிகர்கள் அறிமுகமாகியிருந்த காலகட்டமும் இதில் அடக்கம்.

‘வால் பேப்பர்’ ஒட்டப்பட்ட அட்டைச் சுவர்கள் கொண்ட அறைகள், அகன்ற வானத்தை வெறித்து நிற்கும் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு போன்ற இடங்களில், பெரும்பாலும் பகல் நேரங்களில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல்கள் தரும் உணர்வு மிக வித்தியாசமானது. 70-களின் மத்திய தரக் குடும்பங்களின் வாழ்க்கை, தாம்பத்ய உறவின் சிக்கல்கள் இக்காலகட்டத்தின் பாடல்களில் பொதிந்திருக்கும். இப்பாடல்களைக் கேட்கும்போது பகல் நேரத்தின் வெம்மையையும், பாடல் தரும் ஆறுதல் நிழலையும் உணர முடியும்.

அந்தக் காலகட்டத்தில் பிற பாடகர்களும் பாடகிகளும் எம்.எஸ்.வி.யின் இசையில் முக்கியமான பாடல்களைப் பாடியிருந் தாலும், எஸ்.பி.பி.யே பிற இசையமைப் பாளர்களின் இசையில் பாடி யிருந்தாலும் ‘எம்.எஸ்.வி.-எஸ்.பி.பி.’ ஜோடி தந்த பாடல்கள் தனிச்சுவை கொண்டவை. இளம் குரலுடன் தனது பயணத்தைத் தொடங்கிய எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரமும் பாந்தமும் வெளிப்படுவதற்கு எம்.எஸ்.வி.யின் பாடல்கள் சிறந்த களமாக அமைந்தன.

கண்ணனை நினைக்காத (சீர் வரிசை), பொன்னென்றும் பூவென்றும் (நிலவே நீ சாட்சி) நிலவே நீ சாட்சி (நிலவே நீ சாட்சி), ராதா காதல் வராதா (நான் அவனில்லை), மங்கையரில் மகராணி (அவளுக்கென்று ஒரு மனம்), ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் (அக்கரைப் பச்சை), நான் என்றால் அது அவளும் நானும் (சூரியகாந்தி), அன்பு வந்தது என்னை ஆள வந்தது (சுடரும் சூறாவளியும்), தென்றலுக்கு என்றும் வயது (பயணம்), ஓடம் அது ஓடும் (கண்மணி ராஜா), காதல் விளையாட (கண்மணி ராஜா), கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் (மேயர் மீனாட்சி), மாதமோ ஆவணி (உத்தரவின்றி உள்ளே வா), மார்கழிப் பனியில் (முத்தான முத்தல்லவோ), மான் கண்ட சொர்க்கங்கள் (47 நாட்கள்) என்று முடிவின்றி நீளும் பட்டியல் அவர்களுடையது.

பாலசந்தர்- எம்.எஸ்.வி.- எஸ்.பி.பி.

இக்கூட்டணியில் கணிசமான எண்ணிக்கையிலான பாடல்கள் கே. பாலசந்தர் இயக்கிய படங்களில் இடம்பெற்றவை. ‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் பாடல்களில்தான் எஸ்.பி.பி.யின் குரலில் எத்தனை விதமான பாவங்கள். கண்ணதாசனின் பங்களிப்பு இக்கூட்டணியை மேலும் செழிக்கச் செய்தது. ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலில், ‘… அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல… அட… நானும் ஏமாந்தேன்’ எனும் வரியில் சுய இரக்கம், சுய எள்ளல் கலந்த ஒரு சின்னச் சிரிப்பு அவர் குரலில் இருக்கும். அதேபோல், ’இலக்கணம் மாறுதோ’ பாடலில், ‘தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்… பாடாமல் போனால் எது தெய்வமாகும்’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் பாந்தமும் பரிவும் உருக்கிவிடும்.

உலுக்கும் வயலின் இசையுடன் தொடங்கும் ‘வான் நிலா நிலா அல்ல’ (பட்டினப் பிரவேசம்) பாடல் இந்த ஜோடியின் இன்னொரு சாதனை. ‘இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் ஏக்கம், இயலாமை, தத்துவ மனம் வெளிப்படும். இரண்டு சரணங்களின் இறுதி வரிகளை வயலினால் பிரதியெடுக்கும் எம்.எஸ்.வி.யின் கற்பனை அற்புதமானது.

‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ மிகப் பெரிய வெற்றியடைந்த பரிசோதனை முயற்சி. ‘அவர்கள்’ படத்தின் ‘ஜூனியர்’ பாடலும் இதில் அடங்கும். ‘மிமிக்ரி’ கலையின் சாத்தியங்களைப் பாடலுக்கு நடுவே புகுத்துவதற்கு அற்புதத் திறன் மட்டுமல்ல, சோதனை முயற்சிக்கான துணிச்சலும் வேண்டும். அது எம்.எஸ்.வி.யிடம் ஏராளமாக இருந்தது.

என்று நினைத்தாலும் இனிக்கும்!

இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் விஸ்வநாதனின் விஸ்வரூபத்தை ரசிகர்களுக்குக் காட்டியது. டைட்டிலிலேயே ‘இது ஒரு தேனிசை மழை’ என்று எழுதியிருப்பார் பாலசந்தர்.

‘எங்கேயும் எப்போதும்’, ‘இனிமை நிறைந்த’ போன்ற பாடல்களில் துள்ளும் உற்சாகம், ‘யாதும் ஊரே’ பாடலில் சுற்றுலாப் பயணியின் குதூகலம், ‘பாரதி கண்ணம்மா’, ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்களில் பொங்கும் காதல் உணர்வு என்று இசையின் வீச்சை எல்லைகளுக்கு அப்பால் கொண்டுசென்றிருப்பார் எம்.எஸ்.வி. அவரது கற்பனைக்கும் உழைப்புக்கும் உயிர் கொடுத்திருப்பார் எஸ்.பி.பி.

கண்ணதாசன் மறையும் வரை- 1980-களின் தொடக்க காலம் வரை எம்.எஸ்.வி.யின் இசைப் பயணத்தில் தொய்வு ஏற்படவில்லை. அதற்குப் பின்னரும் அவரால், ஹிட் பாடல்களைத் தர முடிந்தது. இளையராஜாவுடன் இணைந்து ’மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் அவர் தந்த பாடல்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக, ‘தேடும் கண் பாவை தவிக்க’ பாடல் கம்போஸ் செய்யப்பட்டபோது, அதைப் பாடுவது மிகச் சிரமம் என்று நினைத்ததாக எஸ்.பி.பி. குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கஜல் பாடலுக்குரிய அம்சங்களுடன் மிக மென்மையாக நகரும் அப்பாடல், காலத்தை வெல்லும் கலையாற்றலின் எடுத்துக்காட்டு!

msv_2476658g.jpg

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-13-எம்எஸ்வி-எஸ்பிபி-எழுபதுகளின்-இருவர்/article7433736.ece

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 14: தனித்துவம் கொண்ட குரல்களின் பாடல்

இளையராஜாவுடன் ஜென்ஸி...

இளையராஜாவுடன் ஜென்ஸி...

தமிழ்த் திரையிசையில் ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடிப் புகழ்பெற்றவர்களைப் போல், மிகச் சில பாடல்களை மட்டுமே பாடி ரசிகர்கள் நினைவில் நிலைத்து விட்டவர்கள் உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியிருந்தாலும் அவற்றில் புகழ்பெற்ற பாடல்களின் சதவீதம் அதிகம் கொண்டவர்கள் தனிரகம். பாடகர்களில் ஜெயச்சந்திரனும், பாடகிகளில் ஜென்ஸியும் இப்பட்டியலின் முதல்வர்கள். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் இவர்கள் பாடிய எல்லாப் பாடல்களும் ரசிகர்களால் ஆராதிக்கப்படுபவை.

ஜேசுதாஸ் குரலுடன் ஜெயச்சந்திரனைப் போட்டுக் குழப்பிக்கொள்பவர்கள் உண்டு. அதேபோல், (ஆரம்பகால) சுஜாதாவின் பாடல்களை ஜென்ஸி பாடியதாகச் சொல்பவர்களும் உண்டு. உண்மையில், இவர்கள் இருவரின் குரல்களும் ஒப்புமை இல்லாத் தனித்தன்மை கொண்டவை. மெல்லிய உணர்வை அதன் இயல்புடன் வெளிப்படுத்தத் தெரிந்த மிகச் சிறந்த கலைஞர்கள் இவர்கள்.

ஜேசுதாஸ், இளையராஜா, எஸ்.பி.பி., கங்கை அமரன் உள்ளிட்டோருடன் பாடியிருக்கும் ஜென்ஸி, ஜெயச்சந்திரனுடன் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒன்று ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தின் ‘ஏ… மஸ்தானா’. ஜெயச்சந்திரன் ஜென்ஸி இணையின் மற்றொரு பாடல், ‘அன்பே சங்கீதா’ படத்தில் இடம்பெற்ற ‘கீதா… சங்கீதா’.

1979-ல் வெளியான ‘அன்பே சங்கீதா’ படத்தின் நடிகர்கள் தேர்வு பல ஆச்சரியங்களைக் கொண்டது. ராதிகாவுக்கு ஜோடியாக ஜெய்கணேஷ் நடித்திருப்பார். முக்கியப் பாத்திரத்தில் சுமித்ரா, தேங்காய் சீனிவாசன் என்று ’வித்தியாசமான’ படம். ‘அச்சாணி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய காரைக்குடி நாராயணனின் இந்தப் படம் தோல்வியடைந்தது. ஆனால், வெற்றி தோல்விகள் படங்களுக்குத்தான்; இளையராஜாவின் பாடல்கள் அந்த எல்லையைக் கடந்தவை.

பட்டியலில் அடங்கா இசை

‘லாலாலலலா… லாலாலலலா’ என்று புத்துணர்வுடன் தொடங்கும் ஜென்ஸியின் குரலைப் பின்தொடர்வது போல் புல்லாங்குழல் ஒலிக்கும். இனிமையான அந்தக் கலவையைத் தொடர்ந்து அழுத்தமான உணர்வுகளின் தொகுப்பாக வயலின் இசைக்கோவை காற்றில் படரும். காதல் பாடல்தான் என்றாலும், பாடல் முழுவதும் மெல்லிய சோகம் தொனித்துக்கொண்டே இருக்கும்.

பாந்தமான கம்பீரத்துடன் ‘கீதா… சங்கீதா’ என்று பல்லவியைத் தொடங்குவார் ஜெயச்சந்திரன். ‘ஜீவ அமுதம் உன் மோகனம்’ எனும் வரிகளைப் பாடும்போது ஆண் குரலுக்குள் இத்தனை மென்மை இருக்குமா என்று ஆச்சரியமாக இருக்கும். ‘கண்ணா… என் கண்ணா’ என்று பதில் தரும் ஜென்ஸியின் குரலில் இருக்கும் மெல்லிய நடுக்கம், காதலில் தடுமாறும் இளம் இதயத்தின் நுட்பமான பதிவு.

இப்பாடலின் நிரவல் இசை முழுவதும் கடந்த காலத் தருணங்களை நினைவூட்டும் இசைக்கூறுகளைக் கொண்டது. நகரம் அல்லது சிறு நகரம் ஒன்றின் தெருக்களின் சித்திரத்தை இப்பாடல் மனதுக்குள் வரையும். மதிய வேளைக்கும் மாலை நேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் மனதுக்குள் பதிவான காட்சிகளை இப்பாடல் தொகுத்துத் தரும். காதல், சோகம் எனும் பட்டியல் உணர்வுகளைத் தாண்டி மிக நுட்பமான உணர்வுகளைத் தரும் பாடல்களை உருவாக்கியதில் இளையராஜாவின் பங்கு மகத்தானது. அவற்றில் ஒன்று இப்பாடல். எச்சரிக்கை: இப்பாடல் யூட்யூபில் காட்சி வடிவிலும் கிடைக்கிறது. அதைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, ஒலி வடிவில் மட்டும் இப்பாடலைக் கேட்பது நலம்.

நிழல் மேகத்தின் பாடல்

படத்தின் தலைப்பைக் கேட்டவுடன் பலரது நினைவில் வரும் பாடல், ‘சின்னப் புறா ஒன்று’. தனது இசையுலக வாழ்வின் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த எஸ்.பி.பி. உணர்வுபூர்வமாகப் பாடிய பாடல்களில் ஒன்று இது. இயலாமையின் வலியைப் பிரதிபலிக்கும் பியானோ இசையைத் தொடர்ந்து, சோக தேவதையின் அசரீரி போல் எஸ்.பி. ஷைலஜாவின் ஹம்மிங் ஒலிக்கும். இசைக் கருவிகளால் எட்ட முடியாத உயரத்தை, தர முடியாத உணர்வைப் பொழியும் குரலாக அவரது குரல் காற்றை ஊடுருவும்.

இழப்பின் வலியை உணர்த்தும் பாடலுக்கு, ஒரு இசையமைப்பாளர் எத்தனை நியாயம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் பாடல். பியானோ, வயலின், கித்தார் என்று இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும் இசைக் கருவிகள் அனைத்திலும் சோக வண்ணங்களைப் பூசியிருப்பார் இளையராஜா. ‘எந்தன் ராகங்கள் தூங்காது…’ எனும் வரியைத் தொடர்ந்து ஒலிக்கும் தாளத்தின் மாற்றத்தில் ஒரு சின்ன நுணுக்கத்தைக் காட்டியிருப்பார் இளையராஜா.

‘நூறாண்டுகள்… நீ வாழ்கவே’ என்று உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் எஸ்.பி.பி.யின் குரலின் தொடர்ச்சியாகத் எதிர்பாராத வெள்ளம் போன்ற அடர்த்தியுடன் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் தனித்து ஒலிக்கும் ஒற்றை வயலின், இறுகிய மனதைக் கூட உடைத்து அழச் செய்துவிடும். ‘மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் பொன் வீணை?’ எனும் வாலியின் வரிகள் அன்பின் இழப்பை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும்.

ஜெயச்சந்திரன் பாடும் ‘பெத்தாலும் பெத்தேனடா’, இளையராஜா பாடும் ‘ரெண்டு பொண்டாட்டி’ ஆகிய பாடல்களும் இப்படத்தில் உண்டு.

‘அன்பே சங்கீதா’ படத்தில்

‘அன்பே சங்கீதா’ படத்தில்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-14-தனித்துவம்-கொண்ட-குரல்களின்-பாடல்/article7460084.ece?widget-art=four-all

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 15: வானை நோக்கிப் பொழியும் சாரல்

raja_2493171g.jpg

ஒரே மெட்டைப் பல்வேறு மொழிகளில் பயன்படுத்துவது என்பது இசையமைப்பாளரின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; வெவ்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களின் ரசிகர்களின் மனதைத் தொடும் அளவுக்கு, குறிப்பிட்ட அந்தப் பாடலை மெருகேற்றுவதைப் பற்றியது. ராஜேஷ் கன்னா, அமிதாப் நடித்த ‘ஆனந்த்’ படத்துக்காக இசையமைத்த ‘நா ஜியா லாகே நா’ பாடலின் மெட்டை பாலுமகேந்திராவின் முதல் தமிழ் படமான ‘அழியாத கோலங்கள்’ திரைப்படத்தில் ‘நான் எண்ணும்பொழுது’ பாடலாகத் தந்தார் சலீல்சவுத்ரி. இந்திப் பாடலின் சூழல் வேறு. இளமைக் கால நினைவுகளின் தொகுப்பாகவே தமிழில் இப்பாடலை உருவாக்கியிருந்தார் சலீல் தா. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

தமிழ்த் திரைக்கு அறிமுகமான காலத்திலேயே பிற தென்னிந்திய மொழிகளிலும் இசையமைக்கத் தொடங்கிவிட்ட இளையராஜாவும் ஒரே மெட்டை வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தியிருக்கிறார். ஆனந்த் நாக், ரஜினிகாந்த், சாரதா நடித்த ‘மாத்துதப்பட மக’ (1978) எனும் கன்னடப் படத்துக்காக அவர் இசையமைத்த ‘பானு பூமியா’ பாடலின் தமிழ் வடிவம்தான் ஜேசுதாஸ், எஸ்.பி. ஷைலஜா பாடிய ‘ஏதோ நினைவுகள்’ பாடல்.

விஜய்காந்த், ஷோபா நடித்த ‘அகல் விளக்கு’ (1979) படத்தில் இடம்பெற்ற பாடல் அது. புகழ்பெற்ற கதாசிரியர் ஆர். செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். கன்னடப் பாடலை எஸ்.பி.பி.யும் எஸ். ஜானகியும் பாடியிருந்தார்கள். ஒரே மெட்டுதான். ஆனால், பாடகர்கள் தேர்வு, தாளம், நிரவல் இசை தொடங்கி பாடலின் உணர்வு வரை, இதன் தமிழ்ப் பிரதி தரும் அனுபவம் முற்றிலும் வேறானது. ஓராண்டுக்கு முன்னர் உருவாக்கிய கன்னடப் பாடலை அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக மெருகேற்றியிருந்தார் இளையராஜா.

ஆங்கிலத்தில் haunting என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். இதற்கு ஆட்கொள்ளுதல் என்று தமிழில் பொருள் கொள்ளலாம். அந்த வகையில், கேட்பவர்களை மெள்ளமெள்ள ஆட்கொண்டுவிடும் பாடல்களில் ஒன்று இது. காதலின் களிப்புடன் பாடப்படும் டூயட் பாடலாக அல்லாமல், கைவிட்டுப்போன காதலின் நினைவு தரும் வலியின் இசை வடிவமாகவே இப்பாடலைக் கொள்ளலாம். விரிந்து வியாபித்திருக்கும் இயற்கையின் பிரம்மாண்டத்துக்குள் தன்னைக் கரைத்துக்கொள்வதன் மூலம், இழப்பின் வலியை மறக்கச் செய்யும் போதை வஸ்து என்றே இப்பாடலைச் சொல்ல முடியும்.

‘ம்..ஹ்ம்..’ என்று ஜேசுதாஸின் மெல்லிய ஹம்மிங்குடன் தொடங்கும் பாடலின் உயரத்தை, தொடர்ந்து ஒலிக்கும் ஷைலஜாவின் ஹம்மிங், பரந்து விரிந்திருக்கும் வானம் வரை இட்டுச் செல்லும். சுற்றியலையும் மெல்லிய காற்று தவழ்ந்து பூமியில் படர்வதைப் போன்ற உணர்வைத் தரும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும்.

‘ஏதோ நினைவுகள்…’ எனும் பல்லவியின் முதல் வார்த்தைகளே, கடந்து வந்த வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் தேங்கி நிற்கும் வசந்த காலத்தின் உறைவிடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். நண்பகல் வேளை ஒன்றில், சமவெளியான நிலப்பரப்பில் நின்றுகொண்டு வானில் மிதக்கும் மேகங்களை ரசிக்கும் உணர்வைத் தரும் நிரவல் இசையைத் தந்திருப்பார் இளையராஜா. பூமியிலிருந்து வானை நோக்கிப் பொழியும் சாரல் மழையாக, இப்பாடலின் இசையை தன் மனதுக்குள் அவர் உருவகித்திருக்க வேண்டும். கேட்பவர்களின் அப்போதைய மனநிலைக்கு ஏற்ப வெவ்வேறு மனச் சித்திரங்களை உருவாக்கும் தன்மை கொண்ட பாடல் இது.

குறிப்பாக, இப்பாடலின் இரண்டாவது நிரவல் இசை தரும் உணர்வு விவரணைகளுக்கு அப்பாற்பட்டது. கடந்த கால நினைவின் நெகிழ்ச்சியான தருணங்களையும், மெல்லிய சோகத்தையும் தனக்குள்ளேயே மீட்டிப் பார்க்கும் பாவத்துடன் ஒலிக்கும் கிட்டார் இசையைத் தொடர்ந்து, அலை அலையாகப் பரவும் காற்றில் மிதக்கும் எண்ணங்களாக விரிந்து செல்லும் வயலின் இசைக்கோவையை அமைத்திருப்பார் இளையராஜா.

பகல் நேரத்துத் தனிமையில் அமர்ந்து இப்பாடலைக் கேட்பவர்களை இனம்புரியாத அமானுஷ்ய உணர்வு ஆட்கொண்டுவிடும். பாடலின் இறுதியில் ஒலிக்கும் பல்லவியின் வார்த்தைகளை ஜேசுதாஸும் ஷைலஜாவும் பகிர்ந்துகொள்ளும்போது பாடலின் வடிவம் வேறொரு தன்மையை அடைந்து முடிவுறும். “காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும்” எனும் உணர்வுபூர்வமான வரிகளை எழுதியவர் கங்கை அமரன்.

எஸ். ஜானகி பாடிய ‘மாலை நேரக் காற்றே’, சசிரேகா பாடிய ‘நீ கண்ணில் வாழும் மன்னன்தானே’ போன்ற பாடல்களும் இப்படத்தில் உண்டு. ‘ஓட்டு கேட்க வருவாங்கண்ணே’ பாடலில் பாவலர் வரதராசன் பேனருடன் தோன்றிப் பாடுபவர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கர்.

‘அகல் விளக்கு’ படத்தில் ஷோபா, விஜயகாந்த்

‘அகல் விளக்கு’ படத்தில் ஷோபா, விஜயகாந்த்

படங்கள் உதவி: ஞானம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-15-வானை-நோக்கிப்-பொழியும்-சாரல்/article7485027.ece?widget-art=four-all

 

Link to comment
Share on other sites

காற்றில் கலந்த இசை 16: காலைப்பனி, காதல் மற்றும் கானம்

’நெஞ்சத்தைக் கிள்ளாதே’

’நெஞ்சத்தைக் கிள்ளாதே’

எதிர்மறையான கதாபாத்திரங்களைப் பிரதானப் பாத்திரங்களாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு அசாத்தியமான துணிச்சல் வேண்டும். இயக்குநர் மகேந்திரனிடம் அந்தத் துணிச்சல் உண்டு. அவர் இயக்கிய ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ திரைப்படம் ஒரு உதாரணம்.

படத்தில் மோகன், பிரதாப் போத்தன், சுஹாசினி ஆகியோரின் பாத்திரங்கள் மனத் தெளிவு கொண்டவை அல்ல. ஆனால், சூழல் கைமீறிச் செல்லும்போது தவறுகளைத் திருத்திக்கொள்ள அத்தனைப் பிரயத்தனப்படும் பாத்திரங்கள் அவை. நகரப் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படத்துக்கு மேற்கத்திய இசைப் பாணியில் அற்புதமான இசையைத் தந்திருந்தார் இளையராஜா.

பருவத்தின் முதல் பாடல்

நகரத்தின் சாலையில் அதிகாலையில் ஜாகிங் செல்லும் நாயகிக்கு வழித்துணையாகச் சேர்ந்துகொள்கிறான் நாயகன். இருவரும் ஜாகிங் செல்லும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் பாடல் ‘பருவமே… புதிய பாடல் பாடு’. காலடிச் சத்தங்களைத் தாளமாக வைத்து இளையராஜா இசையமைத்த பாடல் இது. இப்பாடல் பதிவுசெய்யப்பட்ட விதம் பற்றி இசை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் இளையராஜா. ஜாகிங் செல்லும் ஜோடியின் காலடிச் சத்தங்களை உருவாக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்தும் திருப்தியடையாததால், கடைசியில் இசைக் கலைஞர்கள் இருவர் தங்கள் தொடைகளில் கைகளால் தட்டி எழுப்பிய ஒலியே பொருத்தமானதாக இருக்கும் என்று முடிவுசெய்தாராம்.

கிராமம் அல்லது வனப் பிரதேசம் பின்னணியிலான நிலப்பரப்புகளின் சித்திரத்தை உருவாக்குவதற்கும், நகரத்தின் பூங்காக்கள், நெடுஞ்சாலைகளின் இருபுறமும் விரியும் நிலப்பரப்புகள் போன்றவற்றைச் சித்தரிப்பதற்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டை இளையராஜாவின் இசையில் உணர முடியும். அந்த வகையில் நகரம் சார்ந்த இயற்கை நிலப்பரப்பின் காட்சிகளைச் சித்தரிக்கும் இசையைக் கொண்ட பாடல் இது. ஓடிச் செல்லும்போது மாறிக்கொண்டே வரும் காட்சிகளுக்கு ஏற்ப, இசைக் குறிப்புகளை எழுதியிருப்பார் இளையராஜா.

காலடிச் சத்தத்தின் அதிர்வுகளால் பூச்செடிகளில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள் மேலெழுந்து பறப்பதைப் போல் முதல் நிரவல் இசையின் கிட்டார் இசை ஒலிக்கும். தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசைக் கோவைக்கும் சரணத்துக்கும் இடையில் சில நொடிகளுக்கு ஹார்மோனியத்தின் இசையைக் கரைய விட்டிருப்பார் இளையராஜா.

அக்காட்சியில் சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு செல்லும் ஏழைச் சிறுமியைக் காட்டுவார் மகேந்திரன். மேன்மையான ரசனை கொண்ட இரு கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்புக்கு உதாரணம் அக்காட்சியும் இசையும். இரண்டாவது நிரவல் இசையில், அதிகாலைப் பனியில் உடலை வருடும் குளிர் காற்றைப்போல் தழுவிச் செல்லும் வயலின் இசைக் கோவையைத் தந்திருப்பார் இளையராஜா. மென்மையான இப்பாடலின் சுவை எஸ்.பி.பி. – எஸ். ஜானகி குரல்களில் மேலும் கூடியிருக்கும்.

காதலின் மர்மம்

விவரிக்க இயலாத உணர்ச்சிகளை எழுப்பும் மர்மமான உறவு காதல். குறிப்பாக, நட்பு காதலாக மலர்வதற்கு முன்னதான இடைவெளியில் ஏற்படும் உணர்ச்சிகள் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை. கலைப்படைப்புகளில் அவற்றைப் பதிவுசெய்ய நுட்பமான பார்வை தேவை. மர்மங்கள் நிறைந்த அந்தப் பக்கங்களை அற்புதமாகப் பதிவுசெய்த படைப்புகளில் ஒன்று ‘உறவெனும் புதிய வானில்’ பாடல்.

புதிரான விஷயத்தை அணுகும் மனது, மர்மமான உலகில் சஞ்சரிப்பது போன்ற உணர்வைத் தரும் பாடல் இது. எதிர்பாராத திகைப்பில் உறைந்திருக்கும் மனதைப் பிரதிபலிக்கும் முகப்பு இசையுடன் பாடல் தொடங்கும். சஞ்சலமான மனதின் படபடப்பும், பரவசம் ததும்பும் காதல் உணர்வும் கலந்த குரலில் ‘பா..பபப்பா…’ எனும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் ஜானகி. ‘கனவிலும்… நினைவிலும் புது சுகம்’ என்று அவர் பாடும்போது, அதே உணர்வு கொண்ட காதலனின் குரலாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங் இணைந்துகொள்ளும்.

கிட்டார், எலெக்ட்ரிக் கிட்டார், வயலின், பியானோ என்று மேற்கத்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, வெவ்வேறு அடுக்குகளில் விரிந்துசெல்லும் இசைக் கோவையை உருவாக்கியிருப்பார் இளையராஜா. பனி படர்ந்த நிலப்பகுதி, நகருக்கு வெளியே புதர்களில் புதைந்திருக்கும் பழைய கட்டிடங்கள், அறையின் இருளை ஊடுருவிச் செல்லும் ஒளிக்கீற்று என்று வெவ்வேறு கற்பனை அடுக்குகளின் மேல் பாடல் மிதந்துகொண்டே செல்லும். ‘பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன் காவியம்’ எனும் வரிகளைப் பாடும்போது எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் காதல் கலந்த கம்பீரம் தனி அழகு.

திருமண உறவின் சிக்கலில் தவிக்கும் நாயகியின் மனப்பதிவாக ஒலிக்கும் ‘ஏ.. தென்றலே’ எனும் பாடலை பி. சுசீலா பாடியிருப்பார். ஜானகியை ஒப்பிட சுசீலாவுக்குக் குறைவான பாடல்களையே வழங்கியிருந்தாலும், அவருக்கென தனிச் சிறப்பான பாடல்களை வழங்கத் தவறவில்லை இளையராஜா.

இப்பாடல் அவற்றுள் ஒன்று. பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் வரும் சோக தேவதைகளின் கோரஸ் இப்பாடலின் உணர்வைக் கூட்டிவிடும். ’மம்மி பேரு மாரி’ என்று ஒரு பாடலும் படத்தில் உண்டு. ‘கீச்சு’ எனும் செல்லப் பெயரில் அழைக்கப்படும் பதின்பருவ இளைஞன் பாடுவதாக அமைக்கப் பட்ட அப்பாடலைப் பாடியவர் எஸ். ஜானகி!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/cinema/cinema-others/காற்றில்-கலந்த-இசை-16-காலைப்பனி-காதல்-மற்றும்-கானம்/article7508982.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.