Jump to content

பணத்தை கூட எண்ணத் தெரியாதா? மணமேடையை விட்டு மணமகனை விரட்டிய புதுமைப்பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை கூட எண்ணத் தெரியாதா? மணமேடையை விட்டு மணமகனை விரட்டிய புதுமைப்பெண்   love_lecturer_001.jpgஉத்தரப்பிரதேசத்தில் திருமண மேடையில், மணப்பெண் ஒருவர் பணத்தை கூட எண்ணத் தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டுவதா என்று மணமகனை விரட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் திருமணம் நடக்கவிருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமண நாளில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் சரியாக எழுதப்படிக்க தெரியாதவர் என்பதை மணமகள் அறிந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதனை தனது பெற்றோரிடம் எடுத்துக்கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொண்ட அவர்கள், இந்த தகவல் உண்மைதானா? என்று விசாரித்துள்ளனர்.

அப்போது மாப்பிள்ளை வீட்டார் விஷயத்தை மறைக்க முயற்சித்ததால் மணமகள், மாப்பிள்ளையிடம் ரூபாய் நோட்டுகட்டை கொடுத்து, ‘இதில் எவ்வளவு பணம் இருக்கிறது என எண்ணிச் சொல்லுங்கள்’ என்று கூறியுள்ளார்.

மணமகன் ரூபாய் நோட்டுகளை எண்ணி முடித்து, ஒவ்வொரு முறையும் மாற்றி, மாற்றி தப்புதப்பாக தொகையை கூறியுள்ளார்.

இதையடுத்து, மணமகள் தனது கழுத்தில் இருந்த மணமாலையை கழற்றி கீழே எறிந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாருடன் தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட உள்ளூர் பஞ்சாயத்தார், மணமகன் எழுதப் படிக்க தெரியாதவர் என்ற உண்மையை மறைத்து ஒரு பட்டதாரி பெண்ணை திருமணம் செய்ய முயன்றது குற்றம்.

எனவே, பிரச்சனை எதுவும் செய்யாமல் மரியாதையாக இங்கிருந்து சென்று விடுங்கள் என அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

tamilwin

Link to comment
Share on other sites

பணத்திற்காக மனைவியையே கொன்றுபுதைத்து, பணமென்றால் எங்கே? எங்கே? என்று பிசாசுகள் போல்மனிதர்கள் அலையும் இன்றைய உலகில். மாப்பிள்ளைக்கு பணத்தையே எண்ணத் தெரியவில்லை என்றால் அவர் எத்துணை நல்லவராக இருக்கவேண்டும்...???. இப்படியான நல்லவரைத் திருமணம் செய்ய அந்தப் பெண்ணுக்குக் கொடுத்துவைக்கவில்லை.  :(  :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரப்பிரதேசத்தில் திருமண மேடையில், மணப்பெண் ஒருவர் பணத்தை கூட எண்ணத் தெரியாதவனுக்கு கழுத்தை நீட்டுவதா என்று மணமகனை விரட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் திருமணம் நடக்கவிருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமண நாளில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் சரியாக எழுதப்படிக்க தெரியாதவர் என்பதை மணமகள் அறிந்துள்ளார்.

 

 

ஒன்றிரண்டு எண்ணத் தெரியாதவர்....

பட்டதாரி பெண்ணை கலியாணம் கட்ட நினைத்தது மட்டுமல்ல,

அப் பெண்ணிடம் உண்மையை கூறாமல் மறைத்தது... தவறு தானே. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.