Jump to content

<----"பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்"---->


Recommended Posts

யாழ்கள வாழ் மகா சனங்களே,

 

              நாம இங்க கதை எழுதுறம், கட்டுரை எழுதுறம், கவிதை எழுதுறம் பத்ததுக்கு நல்ல நல்ல கருத்து எழுதுறம், ஆனா பாருங்க நாம பக்கம் பக்கமா என்னத்த எழுதுனாலும் ஒருத்தரும் நமக்கு பச்சை குத்துரதில்ல... இந்த கவலை நம்ம எல்லோர் மனசிலும் இருக்கும்... இன்னும் சிலருக்கு ஒரு பெரிய பிரச்சனையா இருக்கும், நான் என்ன கவுந்தடிச்சு எழுதினாலும் ஒருத்தரும் எட்டி பாக்குறான் இல்லையேன்னு.... சிலருக்கு விழுற பச்சைய பாக்க நமக்கு கண்ணுல அருவியா கொட்டும்...  

 

 

அப்படி ஏங்குற நம்ம சாதி சனத்துக்கா கொண்டு வந்தது தான் "பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்"... :icon_idea:

 

பச்சைய பிச்சை எடுக்குரன்ற இந்த திட்டம் என்னானா,

 

இந்த திட்டத்துல ஒரு இருபது ஆக்கள  சேத்துக்குவோம்

 

அப்பிடி சேக்குற ஆளுங்ககிட்ட இருந்து யாருக்கெல்லாம் அவசரமா பச்ச வேணுமோ அவரு என்ன நாசமறுப்ப எழுதினாலும் கண்ண மூடிக்கிட்டு மத்த ஆளுங்க எல்லோரும் பச்சைய குத்தனும் :D

 

அடுத்த முறை சங்கத்து ஆளு இன்னொருத்தருக்கு  வளைச்சு வளைச்சு குத்துவோம்

 

இப்போ ரெண்டு ஆளுங்களுக்கு ஒரே நேரத்தில பச்சை புள்ளி தேவை படுத்து எண்டா ரெண்டு பேருக்கும் நடுவில ஏலம் விடுவோம் ஏலத்தில அதிக புள்ளிய விட்டு கொடுக்கிறவருக்கு பச்சைய குத்துவோம்

 

இந்த திட்டத்தில சேருரவங்க ஒரு நாளைக்கு ஒரு புள்ளி மட்டும் பச்ச குத்தினா போதும், மத்த ரெண்டு உங்க ரசனைக்கு எத்த மாதிரி எப்போதும் போல மத்த திரிக்கு குத்தலாம்.

 

 

 

இதால என்ன நன்மை என்டு  கேக்குரியலா...?

 

 

இப்பிடி சுழற்ச்சி முறையில திட்டத்துல சேர்ந்த ஒவ்வொருத்தருக்கும் வரிசையா பச்சை புள்ளிகள் கிடைக்கும்.

 

இருபது நாளைக்கு ஒரு தடவ உங்களோட பச்ச புள்ளிக  உச்சத்த தொடும்

 

புதுசா இணையுற உறுப்பினர் ஏற்கனவே இருக்குற பழைய உறுப்பினருக்கு வரிசைப்பிரகாரம் ஒரு பச்சை புள்ளிய குத்தனும்,

 

எதாச்சும் உறுப்பினர் வரமா போன தண்டனையா சங்கத்துக்கு இரண்டு  பச்சை குத்தனும்

நம்ம திட்டத்த பத்தி வெளிய மத்த திரியில தப்பா பேசுற ஆக்களுக்கு நாம யாரும் பச்ச குத்த கூடாது, அதால அவங்களுக்கு நம்ம மேல பயம் வரும் :D

 

நம்ம கையில ஒரு பச்ச எப்போவும் இருப்பு இருக்கதால இந்த திட்டதில சேரமாட்டேன்னு அடம் புடிக்குற ஆக்களோட பச்சை புள்ளி விகதம் நாளைடைவில குறைஞ்சிடும். :lol:

 

 

இதுக்கு மேல இதர பலனா

 

 

நம்ம சங்கத்து ஆளு மேல எதாச்சும் ஒழுங்கு நடவடிக்க எடுத்த அவருக்கு எதிர எதிர்ப்பா பதிவு செய்யுற விதமா எந்த திரிக்கும் பச்ச போடாம புறக்கணிப்போம்

 

நியானி மாதிரி ஒருத்தருக்கும் பச்சையே போடாத ஆக்களோட பச்ச புள்ளி போடுற உரிமைய தட பண்ணனும்னு போராட்டம் நடத்துவோம் :icon_mrgreen:

 

ஆண்டுக்கொரு முறை நடக்குற "பச்ச பிச்ச பெருவிழா"ல நல்ல செயல்பட்ட உறுப்பினருக்கு வாழ்த்து சான்றிதழும் 20 பச்சையும் அன்பளிப்பா வழங்குவோம் :lol:

 

திட்டத்தில சேராம நம்மகிட்ட பச்சைய  கேக்குற ஆளுங்களுக்கு அகில உலக பச்சை வங்கில இருந்து 200 சதம் வட்டிக்கு கடனா கொடுப்போம் :D

வருடத்துக்கு ஒருமுறை வங்கில இருக்க பச்சைய பகிர்ந்து எல்லோருக்கும் தரப்படும்

 

புதுசா களத்தில சேருற உறுப்பினருக்கு நம்ம சங்கம் சார்பா அஞ்சு பச்ச புள்ளிய கொடுத்து ஊக்குவிப்போம் :)

 

இதில்லாம பிறந்த நாள், காதுகுத்து, கெடாவெட்டு, கலியாணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்கள கொண்டாடுற கள உறவுகளுக்கு  நம்ம சங்கம் சார்பா அஞ்சு புள்ளிய கொடுத்து வாழ்த்த தெரிவிப்போம்... :)

 

களத்தில பத்தாண்டுக்கு மேல தொடருற கள உறுப்பினருக்கு அவரோட சேவைய பாராட்டி அவரோட யாழ்கள வயசுக்கு இணையா பச்சைய கொடுத்து சங்கம் சார்பா கௌரவ படுத்தபடுவார். :)

 

 

இப்போ திட்டத்த பத்தின விரிவான விளக்கமும், செயல் திட்டத்தையும் சொல்லியாச்சு

திட்டத்துல இணைய விருப்பபடுற  சகோதரங்கள் இதுக்கு ஒரு பச்சைய குத்திட்டு  மேற்ப்படி திட்டத்துல இணையலாம்.

 

 

அப்ப நான் வரட்டா ....
.
.
.
.

நமது பச்சை நமது உரிமை



 

Link to comment
Share on other sites

நான் சங்கத்தில் சேர்ந்துட்டேன்..!!!!!!! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

நான் சேரமாட்டன், ஆனா பிச்சை கேட்டா இல்லை என்று சொல்ல விருப்பம் இல்லை. விஸ்வாக்கு பிச்சையாக பச்சை போடுறன்  :D  :lol:

Link to comment
Share on other sites

சங்கத்தில் சேர நான் முந்தி.. நீ முந்தி.. என்று கூட்டம் அலைமோதுகிறது.. அதிகபட்சம் 20பேர்தான் என்பதால் கூட்ட நெரிசலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் ஆயிரம் பிச்சை :lol:  சீ பச்சை கிடைக்க வேண்டி விச்சுவாவின் கட்சியல் சேர்ந்து கொல்கின்றேன் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வந்திட்டன் , நாளைக்குத்தான் பச்சை...! :)

 

(அடப்பாவி உடம்பெல்லாம் மூளையாய்க் கிடக்கு..! ) :)  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களவிதிகளை விட இந்தப் பச்சைப் பிச்சைத் திட்ட விதிகள் குழப்பமாக இருக்கின்றனவே!

திரும்பி ஒருக்கா பார்க்கத் தூண்டும் அழகான பெண்கள் மாதிரி திரும்ப வாசிக்கத் தூண்டும் பதிவுகளுக்கும் வாசித்தவுடன் சிரிக்கவைக்கும் கருத்துக்களுக்கும்தான் பச்சை போடவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட... <----"பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்"----> நல்ல திட்டமாயிருக்கே.... :D

நானும், 19´வது ஆளா... இதுல சேர்ந்துக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிச்சை ,குத்துற விசயம்..சி ..பச்சை குத்துற விசயம் எண்டா ,என்ன  ஒருக்கா விளக்கமா

சொல்லுங்கோ,

 

 

நானும் குத்தலாம் எண்டு நினைக்கிறன் ...

 

இம்ளா நாளும் ,பச்சை குத்துற விசயமே தெரியாமல் காலத்தை களிச்சுப்புட்டன்..

 

பச்சையை ,எங்கின,,,வேண்டணும் எப்படி இங்க குத்துறது

எந்த விசயத்துக்கு குத்துறது..ஒருக்கா சொல்லித்தாங்கோ

 

நானும் 20´வது ஆளா... இதுல சேர்ந்துக்கிறேன். :)

 

Link to comment
Share on other sites

யாழிலேயே நமக்குத்தான்பா பச்சைப்புள்ளி கம்மியா இருக்கு.... தம்பியோவ் ஆதிமனுசன் எனக்கு இங்க இன்னும் சேர்ந்து முடியாத 20 பேரும் ஒவ்வொரு பச்சைப்புள்ளிகளை இனாமாகத்தாங்கப்பா.... வேறவழி பச்சைப்புள்ளியை எடுக்க ஆதியும் பிய்ந்த தட்டோடு அலையவேண்டிப்போச்சே :lol: :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மன்னித்து கொள்ளுங்கள் அண்ணன்களே,

வேலையிடத்தில் அதிக பளுகாரனமாக  இந்த  பக்கம்  வர  முடியவில்லை :(


நானும் வந்திட்டன் , நாளைக்குத்தான் பச்சை...! :)

 

(அடப்பாவி உடம்பெல்லாம் மூளையாய்க் கிடக்கு..! ) :)  :icon_idea:

 

எங்க சுவியண்ணா எப்பிடி படுத்து படுத்து யோசித்தாலும் பத்திற்கு மேல் தாண்டுதில்லையே...   பாருங்கோ இதில்கூட 12 ஆக்கள் தான் சிக்கியிருக்கிறார்கள்... :D


 திரும்ப வாசிக்கத் தூண்டும் பதிவுகளுக்கும் வாசித்தவுடன் சிரிக்கவைக்கும் கருத்துக்களுக்கும்தான் பச்சை போடவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும்.

 

அப்படியெண்டால் வெள்ளிகிழமை பதியற விசேட பதிவுகளுக்கு மட்டும் தான் பச்சை கிடைக்குமண்ணே.... :lol::D:lol:

 

Link to comment
Share on other sites

யாழிலேயே நமக்குத்தான்பா பச்சைப்புள்ளி கம்மியா இருக்கு.... தம்பியோவ் ஆதிமனுசன் எனக்கு இங்க இன்னும் சேர்ந்து முடியாத 20 பேரும் ஒவ்வொரு பச்சைப்புள்ளிகளை இனாமாகத்தாங்கப்பா.... வேறவழி பச்சைப்புள்ளியை எடுக்க ஆதியும் பிய்ந்த தட்டோடு அலையவேண்டிப்போச்சே :lol: :lol:

 

அடே ஆதி பயலே ! :lol: , நாங்களே பச்சை எடுக்க வழி தெரியாம  திக்கி திணறி இப்பிடி ஒரு பிச்சை எடுக்குற திட்டத்த கொண்டு வந்தா, அதில பச்சைய போடமா எங்க கிட்டயே பச்சைய கேக்குற  ^_^  - இனி எங்க சங்கத்து ஆளுங்க ஒருத்தர் கூட உனக்கு பச்சை போட மாட்டோம்... வேணும்னா பச்சைய போட்டு சங்கத்துல சேர்ந்து கேளுட வால் பயலே  :D  ..... ( அப்பாடா திட்டியாச்சு  :icon_mrgreen:  )

 

Link to comment
Share on other sites

இந்த பிச்சை ,குத்துற விசயம்..சி ..பச்சை குத்துற விசயம் எண்டா ,என்ன  ஒருக்கா விளக்கமா

சொல்லுங்கோ,

 

 

நானும் குத்தலாம் எண்டு நினைக்கிறன் ...

 

இம்ளா நாளும் ,பச்சை குத்துற விசயமே தெரியாமல் காலத்தை களிச்சுப்புட்டன்..

 

பச்சையை ,எங்கின,,,வேண்டணும் எப்படி இங்க குத்துறது

எந்த விசயத்துக்கு குத்துறது..ஒருக்கா சொல்லித்தாங்கோ

 

நானும் 20´வது ஆளா... இதுல சேர்ந்துக்கிறேன். :)

 

ஹிஹி இவ்வளவு அப்பாவியான உறுப்பினர் நமது திட்டத்தில் இணைந்திருக்கிறாரா? அவருக்கு நமது சங்கத்தின் முதல் பச்சையை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். :lol:

 

iypixt.png

மேலே படத்தில் சிவப்பு நிறத்தால் வட்டமிட்டது தான் பச்சை புள்ளிக்கு உரிய பொத்தான். ஒவ்வொரு உறுப்பினரின் கருத்திற்கும் கிழே இப்படி இருக்கும். உங்களுக்கு பிடித்த கருத்திற்கு நீங்கள் இந்த பொத்தானை அழுத்தி பச்சை புள்ளிகள் வழங்கலாம்.

மேல நீல நிறத்தில் வட்டமிட்டது எனது இந்த நூதன பச்சையை திருடும் திட்டத்திற்கு கிடைத்த முத்தான 12 பச்சை புள்ளிகள்.... :lol::D:icon_idea:

 

Link to comment
Share on other sites

ராஜன் விஷ்வா எப்படித்தான் இந்த ஜடியா எல்லாம் தோணுதோ?
ரூம் போட்டு யோசிப்பீங்களோ.
 
உறுப்பினர்கள் சேருகின்ற வேகத்தைப் பார்க்க எனக்கும் உள்ளால ஏதோ பண்ணுது. எதற்கு வம்பு நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்.
என்னையும் வண்டிலே ஏத்துங்கப்பா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னித்து கொள்ளுங்கள் அண்ணன்களே,

வேலையிடத்தில் அதிக பளுகாரனமாக  இந்த  பக்கம்  வர  முடியவில்லை :(

 

எங்க சுவியண்ணா எப்பிடி படுத்து படுத்து யோசித்தாலும் பத்திற்கு மேல் தாண்டுதில்லையே...   பாருங்கோ இதில்கூட 12 ஆக்கள் தான் சிக்கியிருக்கிறார்கள்... :D

 

அப்படியெண்டால் வெள்ளிகிழமை பதியற விசேட பதிவுகளுக்கு மட்டும் தான் பச்சை கிடைக்குமண்ணே.... :lol::D:lol:

 

 

அஹா.நான் முன்பே சில பிடித்த பதிவுகளிற்கு அமுக்கி இருக்கின்றேன் .ஆனால் இதுதான் அந்த பச்சை புள்ளின்னு தெரியாது

இப்ப விளங்கிச்சு...பச்சயின்னா என்னான்னு..

 

ச..இம்புட்டு காலம் விளங்காமல் காலத்தை கடத்திப்புட்டேன்

 

ஒருநாளைக்கு ,இது மூணுக்குமேல போடா முடியாதா ..

அதுக்குமேல அந்த பச்சையை அழுத்தினால் ......முடியல சாமி

 

இந்த விளக்கத்தை தந்த உங்களுக்கு ஒரு பச்சை ...

 

............

 

இன்னுமொரு கேள்வி ...நமக்கு பச்சை கிடைத்திருக்கிறது எவ்வளவேன்னு பார்ப்பதானால் எப்படி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய பெயருக்கு மேல எலியை கொண்டுபோய் விடுங்கோ ,தெரியும் (இதற்கு ஒரு பச்சை கட்டணமாக அறவிடப்படும் ) . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இது insider trading அல்லவா?

இதை செய்யப் போய்தானே ராஜ் ராஜரெட்ணம் கம்பி எண்றார் :)

பி கு - மனதில் பட்டதை சட்டெனச் சொல்லுங்கள். பச்சை பச்சையாய் கொட்டும் :)

Link to comment
Share on other sites

இங்கு மாட்டுக்கருத்து கூறமுடியுமா? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நான் மேலே உங்களுக்கு பச்சை குத்தியுள்ளேன், நிச்சயமாக அது பிச்சை அல்ல, உங்களின் எழில் மிகு எழுத்து நயத்திற்காகத்தான் அது குத்தப்பட்டது.

Link to comment
Share on other sites

  • 1 year later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.