Jump to content

உன்னால் முடியும்


Recommended Posts

வாடிக்கையாளர்களால் வளர்ந்தேன்

 

red_2372621f.jpg

 

கோவையைச் சேர்தவர் ஆனந்த். வயது 27. கோவையில் பிடெக் படித்து முடித்ததும், அமெரிக்கா சென்று எம்எஸ் படித்துள்ளார். இந்த கல்வித்தகுதிக்கு ஆண்டுக்கு பல லட்சம் சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்திருக்க முடியும். ஆனாலும் தனது தம்பிகளோடு சேர்ந்து சொந்த தொழிலில் இறங்கி விட்டார். புதுமையான தொழிலுமல்ல. ஆனாலும் தனது புதிய வியூகங்களின் மூலம் இன்று வெற்றிகரமான தொழில் முனைவராக மாறியுள்ளார். இந்த வாரம் இவரைச் சந்தித்தோம்.
 
அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், படிப்புக்கு ஏற்ற வேலை தேட வேண்டும் என்கிற யோசனை எதுவும் இல்லை. ஆனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். ஆனால் என்ன தொழிலை மேற்கொள்வது என்பதில் தெளிவு இல்லை. ஒரு கட்டத்தில் கால்டாக்சி தொழிலை மேற்கொள்ளலாம் என்கிற யோசனை வந்தது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் உணவுக்கும், உழைப்பதற்கும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்து கொண்டே இருக்கிறான். டிராவல் என்பது ஓயாமல் நடக்குது. எனவே இதை கவனத்தில் கொண்டு இந்த தொழிலை எடுத்தேன்.
 
ஆரம்பத்தில் நல்லா படிச்சிருக்க இந்த தொழிலை ஏன் செய்யற என்று கேட்கத்தான் செய்தனர். ஆனா இப்ப என்னுடைய வளர்ச்சியைப் பார்த்து யாரும் திரும்ப அந்தக் கேள்வியை கேட்பதில்லை. இந்தத் தொழிலை முறைப்படுத்தினால் நல்ல வருமானம் வரக்கூடிய தொழிலா கத்தான் பார்த்தேன். இதற்கேற்ப இந்த சொந்த தொழில் யோசனைக்கு என்னுடைய தம்பிகள் தீபக், மனோஜ் உறுதுணையா நின்னாங்க.
 
இந்த தொழில் செய்ய முடிவான பிறகு ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஆளுக்கு ஒரு டாக்சிக்கு போன் பண்ணி வர வைப்போம். டாக்சி புக் பண்ணி எவ்வளவு நேரத்தில் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இப்படி டெஸ்ட் செய்தோம். எந்த டாக்சியும் உடனே வரவில்லை. குறைந்தபட்சம் 45 நிமிடம் ஆனது. எனவே புக் செய்த 10 அல்லது 15 நிமிடத்துக்குள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்தால் இந்த தொழிலை வெற்றிகரமாக செய்யலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது. அடுத்த இரண்டு மாதத்தில் தொழிலைத் தொடங்கி விட்டோம்.
 
முதலில் 30 வாகனங்களை வைத்து தொடங்கினோம். 3 வருடத்தில் தற்போது ரெட் டாக்ஸி (red taxi), கோ டாக்ஸி (go taxi) என்ற பெயர்களில் 300 டாக்சிகளாக வளர்ந்துள்ளோம். இப்போது தினசரி சராசரியாக 4 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்கிறோம். நாங்கள் மட்டுமே அனைத்து கார்களையும் வைத்துக் கொள்ளாமல், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மற்ற டாக்சி உரிமையாளர்களையும், ஓட்டுநர்களையும் எங்கள் நிறுவனத்தோடு இணைத்துக் கொள்கிறோம்.
 
மார்க்கெட்டில் வாடகைக் கார்களை சொகுசாக கொடுக்கிறோமோ இல்லையோ, சொன்ன நேரத்துக்கு கொடுக்க வேண்டும். சொகுசு என்பது இரண்டாம்பட்சம்தான்.முதல் தேவை பயணம். அதனால அதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இரண்டாவது கட்டமாகத்தான் காருக்குள் சொகுசு வசதிகளை அமைத்தோம். அதாவது ஒரு வாடிக்கையாளர் டாக்ஸி புக் பண்ணி அதிகபட்சம் 10 ஆவது நிமிடத்துக்குள் உரிய இடத்தில் இருப்பது. அதற்கான ஏற்பாடுகள். அதுக்கென எங்கள் எங்கள் சாப்ட்வேரில் ஸ்பெஷல் அப்ளிகேஷன் மூலமாக வழித்தடங்களை அமைத்து இயங்க ஆரம்பித்தோம்.
 
போன் பண்ணின உடனே பக்கத்துல எந்த வண்டி இருக்கோ அந்த வண்டியை அனுப்பறது. அது பார்ட்டியை பிக்அப் பண்ற வரைக்கும் கண்காணிக்கிறது. பார்ட்டி காரில் பேப்பர் படிக்க தமிழ், ஆங்கில பேப்பர்களை வைப்பது, அவர்கள் மறதியாக விட்டுச் சென்ற பொருட்களை பத்திரமாக எடுத்து வைத்து அவர்களுக்கு தகவல் கொடுத்து அலுவலகத்தின் மூலமாக கொடுப்பது என பல்வேறு விஷயங்களை சர்வீஸா செய்ய ஆரம்பித்தோம்.
 
குறிப்பாக ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் செல்ல முன்னுரிமை கொடுத்தோம். துரித சேவைக்கு பிறகு காருக்குள் வசதியான விஷயங்களை புகுத்த ஆரம்பித்தோம்.
 
இன்டிகா, செவர்லே மாதிரியான டாக்சிகளுக்கு கிமீக்கு ரூ.18 இருப்பதை கொஞ்சம் மலிவாக்க முடியுமா என்று யோசித்தோம். அதற்காக கோ டாக்ஸி (go taxi) டொயோட்டா, எடியாஸ் மாதிரி கார்களை வைத்து கிமீக்கு ரூ.14 என ஆரம்பித்தோம். அதுக்கு நல்ல வரவேற்பு. கார்கள்தான் வேறே தவிர சேவையில் ஒரே நிலையில் நிறுத்தினோம்.
 
ஆரம்ப முதலீட்டை வீட்டிலேயே ஏற்பாடு செய்து கொண்டோம். பிறகு வங்கிக்கடனுக்கும் எங்கள் குடும்பத்தினர் உதவி செய்தனர். தற்போது வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பும் வாங்கிவிட்டோம்.
 
வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையை பயன்படுத்தும் வேகம்தான் எங்களது வளர்ச்சிக்கு அடிப்படை. சேவையை தரமாகவும், மக்கள் விருப்பத்திற்கு உகந்த நேரத்தில் விரைவாகவும் கொடுத்தால் தொழிலில் நிற்கலாம் என்பது நாங்கள் கண்ட அனுபவம். இன்றைக்கு கோவையில் 4,000 டாக்ஸிகள் வரை இயங்குகிறது இருந்தாலும் தேவைகள் இருந்து கொண்டே இருக்கிறது. எங்களது அடுத்த இலக்கு அந்த தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான். அதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம் என்றார் ஆனந்த்.
 
Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
எங்களுக்கு என்ன செய்ய தெரியும் என்பது பொருட்டல்ல 
மக்களுக்கு என்ன தேவை என்பதுதான் 
வியாபாரத்தில் நிலைக்கும் 
 
வீழ்ச்சிக்கு கொடக் (Kodak)
 
எழுச்சிக்கு சாம்சுங் (Samsung)
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: நம்மை மட்டுமே நம்பி தொழில் இருக்கக் கூடாது

 

um_2402290f.jpg

 

தனித்து ஜெயித்த சாதனையாளர்கள் வரிசையில் இந்த வாரம் இடம் பெறுகிறார் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த த.கிருஷ்ண மூர்த்தி. படித்தது 12-ம் வகுப்புதான். தனது சொந்த முயற்சிகளின் மூலம் காகித அட்டை தயாரிக்கும் தொழிலில் வெற்றிகரமான தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார். தனது நிறுவனத்தில் பதினைந்து நபர்களுக்கு நேரடியாகவும், பலருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார்.
 
12-ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அதனால் அப்போதே சின்ன சின்ன வேலைகள் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் எதுவும் நிரந்தர வேலையில்லை. உள்ளூரில் கேபிள் டிவி கனெக் ஷன் கொடுக்கும் வேலையும் செய்தேன். அதற்கு தினசரி ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதும். ஆனால் அதுவும் நிரந்தரமான வேலையில்லை. செட்அப் பாக்ஸ் தொழில்நுட்பம் வளர்ந்து வந்ததும் கேபிள் டிவி தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியாது என்று புரிந்து விட்டது.
 
அதற்கு பிறகு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றேன். கூரியர் பாய் வேலை மற்றும் சேல்ஸ் ரெப் வேலைகளை செய்துள்ளேன். ஆனால் அங்கும் என்னால் இருக்க முடியவில்லை. சொந்த ஊருக்குத் திரும்பியதும் தீவிரமாக தொழில் முயற்சிகளில் இறங்கினேன்.
 
தொழில் முனைவோராக வளரவேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே திட்ட மிடவில்லை. ஆனால் உள்ளூரிலேயே நிரந்தர வருமானத்துக்கும், வேலை வாய்ப் புக்கும் வழிதேட வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது.
 
பெரிய தொழில்நுட்ப அறிவு தேவைப் படாத உடனடியாக தொடங்கக்கூடிய தொழிலாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டுதான் தொழிலை தேடினேன். பேப்பர் கப் மற்றும் பேப்பர் பிளேட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்து பலரும் ஆலோசனை கொடுத்தார்கள்.
 
ஆனால் அதற்கு போட்டி அதிகம். மார்க் கெட்டிங்கும் நாம்தான் கவனிக்க வேண்டும். எனவே அந்த தொழில் எனக்கு சரியாகப் படவில்லை. நான் மட்டுமே செய்யும் தொழிலாக இருக்கக்கூடாது. அதுபோல நாம் வெளியில் வேலையாக செல்ல வேண்டும் என்றால் மிஷினை ஆப் செய்துவிட்டுதான் போக வேண்டும் என்கிற தொழிலாகவும் இருக்கக்கூடாது.
 
உற்பத்தி செய்த பொருளை விற்பனை யாளர்கள் கேட்டு வாங்கிச் செல்லும் தயாரிப்பாக இருக்க வேண்டும் இப்படி பல யோசனைகளுக்கு பிறகு இந்த தொழிலை தேர்ந்தெடுத்தேன். இதற்கான ஆலோசனைகளை திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசனை மையத்தின் ஆலோசகர் ராமசாமி தேசாய் கொடுத்து உதவினார்.
 
இந்த தொழில் தொடர்பான எந்த தொழில் நுட்பமும் எனக்குத் தெரியாது. வேலூர் மாவட்டத்தில் சிலர் இந்த தொழில் செய்கின்றனர் என கேள்விப்பட்டு அங்கு சென்று விவரங்களை கேட்டுக் கொண்டேன். இயந்திரம் சப்ளை செய்தவர்கள் கொடுத்த உதவியும் இந்த தொழிலை கற்றுக் கொள்ள வைத்தது. இப்போது எந்த சிக்கலும் இல்லாமல் நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கிறது.
 
நான் உற்பத்தி செய்யும் காகித அட்டை பைல், நோட்டு, புத்தகம் மற்றும் காலண்டர் போன்றவற்றின் உற்பத்திக்கு தேவைப்படும். ஆறு மாதம் பிசினஸ் இல்லாமல் உற்பத் தியை தேக்கி வைத்திருந்தாலும் அடுத்த ஒரே சீசனில் விற்பனையாகிவிடும். எனவே தொழிலை பொறுத்தவரை நஷ்டம் என்ப தற்கோ அல்லது உற்பத்தி தேங்கி வீணாகப் போய்விட்டது என்பதற்கோ வாய்ப்பில்லை.
 
மொத்த விற்பனையாளர்கள் உற்பத்தி இடத்திற்கே வந்து வாங்கிச் செல்கின்றனர். மூலப்பொருட்களை திரட்டுவதிலும் சிரமமில்லை. பழைய அட்டைப்பெட்டிகள் மற்றும் மறு சுழற்சி செய்யக்கூடிய காகிதங் கள்தான் மூலப்பொருள். மழைக் காலத்தில் மட்டும் தொழில் கொஞ்சம் தேக்கமாக இருக்கும். இதர காலங்களில் எந்த சிக்கலும் கிடையாது என்றார்.
 
தற்போது பதினைந்து நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பைக் கொடுக்கிறேன். மறைமுகமாக பலருக்கும் வேலை வாய் ப்பு உருவாகிறது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தொழில் எனக்கு நிரந்தரமான அடையாளத்தையும், வருமானத்தையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
 
பல தொழில்களையும் செய்து பட்ட அனுபவங்கள் எல்லாம் இந்த தொழிலை பக்குவமாகச் செய்ய வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்று முடித்தார்.
 
Link to comment
Share on other sites

  • 5 weeks later...

உன்னால் முடியும்: வேலைவாய்ப்பை உருவாக்குவதே மகிழ்ச்சி

 

work_2424130f.jpg

எஸ்.குமார், பிரபஞ்சா பெட் பாட்டில்ஸ், கடலூர்.
 
கடலூரைச் சேர்ந்தவர் எஸ். குமார். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல பொறுப்பான வேலையில் இருந்தவர். ஆனால் அந்த வேலையில் தொடர்ந்து நீடிக்க மனமில்லாமல் தனியாக தொழிலில் இறங்கியவர்.
 
குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அடைக்கும் பெட் பாட்டில் உற்பத்திதான் இவர் தேர்ந்தெடுத்த தொழில். தனது சேமிப்பு, மனைவியின் நகைகள்தான் ஆரம்ப முயற்சிக்கு உதவியாக இருந்தது.
 
தொழிலில் இறங்குவதற்கு முன்பே அந்த தொழில் குறித்து தெளிவாக திட்டமிட்டிருந்ததால் தோல்வி அடைவேன் என்கிற பயமே இல்லை என்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் எம்எஸ்சி கெமிஸ்ட்ரியில் கோல்டு மெடல் வாங்கியர். இவரது தொழில் அனுபவம் இந்த வார பகுதியில் இடம் பெறுகிறது.
 
ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்திலேயே, அவ்வப்போது சிலருக்கு தொழில் ஆலோசனைகள் கொடுப்பேன். அப்படிதான் பேக்கேஜிங் மினரல் வாட்டர் நிறுவனங்கள் சிலவற்றுக்கு ஆலோசகராக இருந்தேன்.
 
அந்த காலகட்டங்களில் மினரல் வாட்டர் உற்பத்தி துறையின் தேவைகள் என்ன என்பதை அறிந்தேன். குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு குடிநீரை அடைக்கும் பாட்டிலுக்குத் தட்டுப்பாடு இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.
 
இதனால் இந்த தொழில் குறித்து மேலும் தெரிந்து கொண்டு இயந்திரங்களை வாங்கினேன். நவீன இயந்திரங்கள் பயன் படுத்தும்போது தொழிலை விரைவாகவும், நவீனமாகவும் மேற்கொள்ள முடியும் என்கிற யோசனை இருந்தது. எனவே ஆரம்பத்திலேயே நவீன இயந்திரம் மற்றும் தரமான மூலப்பொருள் பயன்படுத்துவது என்பதில் தெளிவாக இருந்தேன்.
 
சந்தையில் தேவை அதிகமாக இருப்பதால் முதல் யூனிட்டுக்கு பிறகு அடுத்தடுத்த சில இடங்களில் சிறு சிறு யூனிட்டுகளாக தொடங்கினேன். ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலை கொடுத்தேன். தற்போது ஐந்து இடங்களில் உற்பத்தி யூனிட்டுகள் உள்ளன. மேலும் மாவட்ட தொழில் மையங்கள் மூலம் சில ஊர்களில் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் இடம் கிடைத்துள்ளது. எனவே அடுத்த கட்டமாக தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியிலும் உள்ளேன்.
 
தற்போது நானும் எனது மனைவியுமே தொழிலை கவனித்து வருகிறோம். ஐம்பது பணியாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் பாண்டிச்சேரி என ஒரு சில இடங்களில் மட்டுமே உற்பத்தியாளர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று பல உற்பத்தியாளர்கள் பெருகியுள்ளனர். போட்டி அதிகரித்துள்ளது. சந்தையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் தரம் மற்றும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்பது என் அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டது.
 
இந்த போட்டிக்கு ஏற்ப நாங்கள் தயாராகிக் கொண்டோம். வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் பல டிசைன்கள் கொடுக்கிறோம். டிசைன்களுக்காக உழைக்கிறோம்.
 
மேலும் எங்களது ஊழியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் கொடுக்கிறோம். அவ்வப்போது நடக்கும் பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறோம். உடன் நாங்களும் கற்றுக் கொண்டே வருகிறோம். தொழில்முனைவோராக வளர புதிய புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து இருக்கிறேன்.
 
எங்களது ஒவ்வொரு தயாரிப்பு யூனிட்டுகளையும் இணைப்பதுபோல சிஸ்டமேட்டிக்காக செயல்படுகிறோம். நேரடி உற்பத்தி தவிர ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து கொடுக்கும் இரண்டு நிறுவனங்களும் உள்ளது. 2020 ம் ஆண்டில் 20 இடங்களில் உற்பத்தி மையங்கள் அமைக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளேன். அதாவது 20:20 என்பதுதான் இலக்கு.
 
அடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாய பின்புலத்தைக் கொண்டது. அப்பா ஆசிரியராக பணியாற்றினார். அவர் சொல்லி வளர்ந்த விதம்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்திருக்கிறது. “ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்து சம்பாதிக்கலாம். சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் ஜாப் கிரியேட்டராக இருந்தால் அதுதான் பயனுள்ள வாழ்க்கை” என்பார். உன்னால் இரண்டு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். அதில் சந்தோஷப்படு என்பார்.
 
கோடைக்காலத்தில் விவசாய வேலை இருக்காது. ஆனால் மராமத்து வேலை களுக்கு ஆள் அமர்த்துவார். கேட்டால் விவசாய வேலையிலும் கோடைகாலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பார். அந்த உத்வேகம்தான் என்னை 20:20 இலக்கை நோக்கி ஓடவைத்துக் கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் இந்த கோல்டு மெடல் பட்டதாரி.
 

 

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: ஈடுபாட்டோடு செய்தால் வெற்றி நிச்சயம்

 

um_2417171f.jpg

ஞா.பன்னீர்செல்வம், உமா டிம்பர்ஸ், வந்தவாசி
 
தனக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாத தச்சு தொழிலில் இறங்கி, இன்று பலரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார் வந்தவாசியைச் சேர்ந்த ஞா.பன்னீர் செல்வம்.
 
இந்த தொழிலில் 36 வயதிலேயே பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட வரைப்போல பல நுணுக்கமான வேலைப்பாடுகளை அனாயசமாக செய்கிறார். இதனால் இந்த சுற்று வட்டார பகுதிகளில் புதிய புதிய வாடிக்கையாளர்கள் இவரைத் தேடி வருகிறார்கள்.
 
எதையும் சுய ஈடுபாட்டோடு செய்தால் வெற்றி நிச்சயம் என்பதுதான் நான் கண்ட உண்மை. செய்ய முடியாது என்பதற்கான காரணங்களை ஆராயாமல்,செய்து முடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தால் திட்டமிடுகிற வேலை சுலபமாக முடிந்துவிடும் என்றவர் தனது தொழில் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
 
“நான் பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள சோழபுரம். படிச்சதெல்லாம் மதுரையில்தான். எனக்கான விருப்பப் பாடமாக டெக்ஸ்டைல்ஸ் எடுத்துப் படிச்சேன். படிச்சிட்டு சிறிது காலம் துணி விற்பனை செய்துகிட்டிருந்தேன். அதற்கு பிறகு திருமணமாகி வந்தவாசி வந்தேன். என்னோட மாமா மர விற்பனை தொழில் செய்து வந்தார். அதனால் நானும் அந்த தொழிலை மேற்கொள்ள வேண்டிய சூழல் வந்தது.
 
ஆரம்பத்தில் இந்த தொழில் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. எது கொங்கு மரப் பலகை, எது வேங்கை மரப் பலகைன்னுகூட என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனா அதுக்காக தயங்கி நிற்கமாட்டேன். அனுபவசாலிகளிடம் அதை ஆர்வமாக கேட்டுத் தெரிந்து கொள்வேன். கேட்கிறதோட விடாம நானே ஒவ்வொண்ணா கூர்ந்து கவனிச்சுத் தெரிஞ் சுக்கிட்டேன்.
 
வாடிக்கையாளர்கள் மரப்பலகை வாங்கி வந்து அதிலே வாசல் நிலை, கதவு, ஜன்னல் செய்ய சொல்வாங்க. அதைச் செய்வதற்கு ஆசாரிகளை அழைத்து, அவர்களிடம் அந்த வேலைகளைச் செய்ய கொடுப்போம்.
 
சில சமயங்களில் வேலைகள் குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் தாமதமாகும். இதனால் வாடிக்கையாளர்கள் நம்மிடம் வருத்தப்படுவார்கள். ஒரே நேரத்தில் பல ஆர்டர்கள் கிடைத்துவிட்டால், மறுக்க முடியாமல் வாங்கி வைத்துக்கொண்டு அல்லாடும் நிலை இருந்தது. இதை எப்படி சரி செய்வது என்று பல நாட்கள் யோசித்திருக்கிறேன்.
 
எதையும் நாம மனசில தீவிரமா யோசிச்சிக்கிட்டே இருந்தா, அதற்கான வழிமுறைகள் நம்மைத் தேடிவரும்னு சொல்வாங்க.
 
அப்படித்தான், 2009-ல் எனது நண்பரொருவர் மூலமாக சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற ஒரு கண்காட்சிக்குப் போயிருந்தேன். அங்கதான், கம்ப்யூட்டர்ல டிசைன் செஞ்சு, அதை அப்படியே மரத்தில செதுக்கும் மெஷினைப் பார்த் தேன். அந்த இயந்திரத்தை வாங்க முடிவெ டுத்தேன்.
 
ஏற்கனவே, இந்த இயந்திரத்தை வாங்கி நாமக்கல் பகுதியில் சிலர் வேலை செய்ததை கேள்விபட்டு போய் பார்த்தேன். அவங்களோட அனுபவத்தின் மூலம் நம்பிக்கை பிறந்தது.
 
அந்த நம்பிக்கையோடு இயந்திரத்தை வாங்கி, ஒவ்வொண்ணா நானே கத்துக்கிட்டேன். கம்ப்யூட்டர்ல டிசைன் போடுறது, மிஷினை இயக்குவது என எல்லாத்தையும் நானே செய்வேன்.
 
ஒரு ஆசாரி 3 நாட்கள் உட்கார்ந்து பல மணி நேரம் செய்ய வேண்டிய ஒரு கதவுக்கான டிசைனை, 5 மணி நேரத்தில மிஷின் செஞ்சு முடிச்சிடுது. செலவும் 20 முதல் 30 சதவீதம் குறையுது. வொர்க் பினிஷிங் ரொம்ப நேர்த்தியாகவும் இருக்குது. அடுத்ததாக மலேசியா போன்ற நாடுகளுக்கு என்னுடைய மர டிசைன்களை ஏற்றுமதி செய்யிற முயற்சியிலேயும் இருக்கேன்.
 
வந்தவாசி சுற்றுப்பகுதிகளில் மட்டு மில்லாமல் மேல்மருவத்தூர், செங்கல் பட்டு, கூடுவாஞ்சேரியில் இருந்தெல்லாம் வாடிக்கையாளர்கள் வர்றாங்க. மனசுக்கு ரொம்ப நிறைவாகவும் இருக்கு.
 
இன்னும் ஏதாவது புதுமையா, வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துற மாதிரி செய்யணும்னு யோசிக்கிறேன்.
 
கிடைக்காத ஒன்றிற்காக ஏங்கி நிற்காமல், கிடைத்தை மனம் ஒன்றிச் செய்தால் வெற்றி வெகுதூரமில்லை’ என்று கூறும் இந்த இளைஞர் இன்னும் வளரட்டும்.
 

 

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: வாடிக்கையாளர் குறை சொல்ல வேண்டும்

 

um_2431852f.jpg

ரதீஷ் குமார் கதிர்வேலு - வாரணா இண்டஸ்ட்ரீஸ், சென்னை.
 
அழகிய பரிசுப் பொருட்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் அழகிய பரிசுப் பொருள் பெட்டிகள் (கிப்ட் பாக்ஸ்கள்) தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார் ரதீஷ் குமார் கதிர்வேலு. எனக்கு நானேதான் உற்சாகம் கொடுத்துக் கொள்கிறேன்.
 
நானே போட்டியும் போட்டுக்கொள்கிறேன். வாடிக்கையாளர்கள் எனது தயாரிப்பில் குறை கண்டுபிடித்து அதை மீண்டும் சரியாக செய்து கொடுப்பதில் கிடைக்கும் திருப்திதான் இந்த தொழிலில் நிலைத்து நிற்பதற்கு காரணம் என்று கூறும் இவரது அனுபவம் இந்த வாரம் இடம் பெறுகிறது.
 
மின்னணு டிப்ளமோ படித்து முடித்து சிறு சிறு வேலைகள் செய்து கொண்டிருந்தேன். பிறகு நானும் எனது நண்பரும் சேர்ந்து சிறிய அளவில் பிரிண்டிங் வேலைகள் எடுத்து செய்து வந்தோம். அதனோடு பிரிண்டிங் டிசைன் மற்றும் பிரிண்டிங் பேக் என அடுத்தடுத்து வளர்ந்தபோது சில காரணங்களால் இருவரும் சேர்ந்து தொடர முடியவில்லை. அதனால் பொருளாதார இழப்பும் ஏற்பட்டது. அதை சரிக்கட்ட வேலைக்குச் செல்லத் தொடங்கினேன்.
 
பரிசுப் பெட்டிகளை வாங்கி அதில் பரிசுப் பொருட்களை அனுப்பிவைக்கும் ஒரு ஏற்றுமதியாளரிடம் வேலை கிடைத்தது. அங்கு இருந்த காலத்தில் விதவிதமான கிப்ட் பாக்ஸ்களுக்குத் தேவை இருப்பதை உணர்ந்தேன். மேலும் அந்த ஏற்றுமதியாளர் லெபனானைச் சேர்ந்தவர். நம்மவர்களைப் போல எந்த விஷயத்தையும் செண்டிமெண்டாக அணுக மாட்டார். ``வேலை செய்தால் சம்பளம், அதைத்தாண்டி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்பது போல பணியாளர்களிடம் அணுகக் கூடியவர்.
 
அவரிடம் இருந்த காலத்தில் அந்த தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கமாக இருந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் அனைத்து வேலைகளையும் தட்டாமல் இழுத்து போட்டு செய்வேன்.
 
ஒருவேளை நான் பொறுப்பாக வேலை பார்க்கிறேன் என்று, கொஞ்சம் அணுசரணையாக நடந்து கொண்டிருந்தால் தனியாக தொழிலில் இறங்கி இருக்க மாட்டேன். அவரிடம் இருந்த அந்த குணம்தான் சொந்த தொழிலை நோக்கித் தள்ளியது. இப்போது அவரும் என்னுடைய வாடிக்கையாளர்களில் ஒருவராக இருக்கிறார் என்பதுதான் காலம் எனக்கு கொடுத்த சந்தோஷம்.
 
சொந்தமாக இந்த தொழிலை தொடங்கலாம் என முடிவெடுத்தபோது கையில் இருந்தது 6,000 ரூபாய்தான். ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டு வீட்டிலேயே கிப்ட் பாக்ஸ்களை தயார் செய்து கொடுக்கத் தொடங்கினேன். ஏற்கெனவே இருந்த தொடர்புகள் மூலம் தொழில் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அதற்கு பிறகு அவ்வப்போது ஆர்டர்களுக்கு ஏற்ப தற்காலிகமாக நான்கு, ஐந்து பேர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டிருந்தேன்.
 
நிறுவனங்கள், நேரடி வாடிக்கை யாளர்கள், ஏற்றுமதி என வளரத் தொடங்கியபோது நிரந்தர பணியா ளர்களை அமர்த்திக் கொண்டேன். வாடிக்கையாளர்கள் கேட்கும் டிசைன் மட்டுமில்லாமல், நானே உருவாக்கும் டிசைன்களும் வாடிக்கையாளர்களை ஈர்த்தது. ஆரம்பத்தில் நானே முன்நின்று எல்லா வேலைகளையும் செய்வேன். அப்போதுதான் முழு திருப்தி கிடைக்கும்.
 
வாடிக்கையாளர்கள் முழு திருப்தி அடைந்தால்தான் என் திறமை மீதே எனக்கு நம்பிக்கை வரும். அவர்கள் குறை கண்டுபிடித்து, அதை நான் சரிசெய்து கொடுக்கும்போதுதான் கஷ்டப்பட்டு உழைத்துள்ளோம் என்கிற எண்ணம் வரும். ஆரம்பத்தில் இப்படி இருந்தது. நமது தொழில் நமக்கு மட்டும்தான் பொறுப்பு என்று. ஆனால் நமது பொறுப்பை ஏற்றுக்கொள்ளத்தான் பணியாளர்களை வைக்கிறோம்.
 
அவர்களுக்கும் அந்த பொறுப்பையும், திருப்தியையும் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்கு பிறகு ஒரு ஆர்டர் கிடைத்தாலும், அது எங்கு செல்கிறது, என்ன பயன்பாடு என்பதை வேலை பார்ப்பவர்களுக்கு விளக்கி விடுவேன். அவர்களும் பொறுப்பாக முழு திருப்தியோடு செய்கிறார்கள்.
 
ஏதோ தலைவிதி வேலைக்கு வந்தோம் என்றோ, அல்லது வேறு வேலை கிடைக்கவில்லை இந்த வேலைக்கு வருகிறோம் என்று நினைத்துக் கொண் டிருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டி, இந்த தொழிலும் நமது வாழ்க்கையை மேம்படுத்தும், எந்த தொழில் என்றாலும் ஈடுபாட்டோடு செய்தால் மனதிருப்தி கிடைக்கும் என்பதை என்னிடம் வேலை பார்பவர்களுக்கும் கொண்டு செல்கிறேன்.
 
அதற்கு எனது கதையையே உதாரணமாகச் சொல்கிறேன். இப்போது பதினைந்து நபர்களுக்கு வேலை கொடுக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பு ஆறாயிரம் முதலீட்டில், வீட்டிலேயே கைத்தொழிலாக தொடங்கிய தொழில் இன்று இயந்திரங்கள் மூலம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் தொழில் ஈடுபாடுதான்.
 
maheswaran.p@thehindutamil.co.in
 

 

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: போட்டியாளர்களுக்கும் உதவுகிறேன்

giri_2439720f.jpg

திருப்பூரில் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலை செய்துவருகிறார் எஸ்.கிரி பிரசாத். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது போட்டியாளர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். பத்து பேர் பங்கு போட்டுக்கொண்ட சந்தையை இப்போது பதினைந்துபேர் பங்கு போடவேண்டியிருக்கிறது என்கிறார்.

புதிதாக பலரும் இந்த தொழிலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். சந்தையின் தேவை அவர்களையும் வரவேற்கிறது என்கிறார் இந்த இளைஞர்.

கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ் மெண்ட் படித்தவர் இவர். அங்கிருந்து இந்தத் தொழிலுக்கு வந்த பின்புலம் என்ன? தொழிலில் அனுபவம் எப்படி என்பதை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

புத்தகங்கள் மூலம் சொந்தத் தொழிலில் வெற்றி பெற்றவர்களது அனுபவங்களைப் படிப்பேன். அதுதான் சொந்தமாக இறங்கும் துணிவைக் கொடுத்தது. ஐந்து ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தேன். பிறகு சிறிய முதலீடு மற்றும் வங்கிக்கடன் மூலம் நண்பர்களோடு சேர்ந்து பாக்குமட்டை தட்டு செய்யும் தொழிலில் இறங்கினேன். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தொழிலை மேற்கொண்டு கவனிக்க முடியவில்லை.

உடல்நலம் தேறியதும் கடன்களை அடைப்பதற்காக மீண்டும் வேலைக்கு செல்லத் தொடங்கினேன். ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். மீண்டும் சொந்த தொழில் ஆசை வந்துவிட்டது. இப்போது பேப்பர் கப் தொழிலில் இறங்கினேன்.

இந்தத் தொழிலுக்கான இயந்திரங்கள், மூலப்பொருள், சந்தை பிடிப்பது போன்ற ஆரம்ப கட்ட வேலைகளுக்கு இரண்டு மூன்று மாதங்கள் சிவகாசி, கோயம்புத்தூர் என அலைந்திருக்கிறேன். மூலப்பொருட்கள் எங்கு குறைந்த விலைக்கு கிடைக்கும். இயந்திர உற்பத்தியாளர்கள் யார் என்பது போன்ற விவரங்களை எனது தேடலின் மூலமே தெரிந்து கொண்டேன்.

அது போல சந்தை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையில் என்ன விலை விற்கிறது என கடைகளில் சென்று விசாரிப்பேன். இந்த ஆரம்ப வேலைகளுக்குப் பிறகுதான் தொழிலில் துணிந்து இறங்கினேன். எந்த பயிற்சியும் கிடையாது. இயந்திரம் கொடுத்தவர்கள் உதவியோடு நானே உற்பத்தி செய்தேன்.

மற்றவர்களைவிட குறைவான தொகைக்கு விற்பனை செய்து சந்தைக் குள் நுழைந்தேன். நிரந்தர வாடிக்கை யாளர்களை உருவாக்கினேன். இப்போது அனைத்து மாதங்களிலும் ஆர்டர்கள் கிடைக்கிறது. ஒரு இயந்திரம் மூலம் தொழிலைத் தொடங்கினேன். தற்போது இரண்டு இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். நேரடியாக 6 நபர் களுக்கு வேலை கொடுக்க முடிகிறது.

இப்போது தொழில் போட்டிகள் அதிகரித்துவிட்டது. இந்த தொழிலில் ஒருவர் மட்டுமே இருந்த ஊரில் தற்போது இரண்டுபேர் இருக்கின்றனர். மேலும் மேலும் பலர் வருகின்றனர். அந்த அளவுக்கு தேவை இருக்கிறது. அதே சமயத்தில் போட்டியும் உருவாகிறது.

இந்த போட்டியை சமாளிக்க வேண்டும் என்பதுதான் இந்த தொழிலில் சவாலாக எடுத்துக் கொள்கிறேன்.

தற்போது இந்தத் தொழிலை தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது. உற்பத்திக்கான ஒரு இயந்திரம் இரண்டு இயந்திரமாக வளர்ந்திருக்கிறது. ஒரு வருக்கு மட்டுமே வேலை கொடுக்கும் நிலையிலிருந்து தற்போது ஆறு நபர்களுக்கு வேலை கொடுக்கிறேன். இதிலிருந்து மேலும் வளர வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-போட்டியாளர்களுக்கும்-உதவுகிறேன்/article7317811.ece?ref=relatedNews

 

 

 

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: வாடிக்கையாளரிடமிருந்தும் கற்றுக் கொள்கிறேன்

சி.கார்த்திக் - கிரியேட்டிவ் கிளாஸ் ஸ்டூடியோ, சென்னை.

சி.கார்த்திக் - கிரியேட்டிவ் கிளாஸ் ஸ்டூடியோ, சென்னை.

பாரம்பரியமாக குடும்பம் செய்துவந்த தொழிலை நவீனமாக மாற்றி, அதில் தனி முத்திரை பதித் துள்ளார் கார்த்திக். படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னை சொளகார்பேட்டைதான். தாத்தா, அப்பா எல்லோரும் கண்ணாடி விற்பனை தொழில் செய்து வந்தனர். அவர்கள் காலத்தில் நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் நாளடைவில் தொழில் முன்பைப் போல வருமானம் கொடுக்கவில்லை. கண்ணாடி தொழி லிலும் புதிய முயற்சிகள் தேவையாக இருந்தது.

ஆரம்பத்தில் சிறு சிறு உதவிகள் செய்து கொண்டிருந்தேன். ஆனால் நேரடியாக இந்த வேலையில் ஈடுபடவில்லை. வீட்டினர் நான் இந்த வேலையில் ஈடுபட வேண்டாம் என்கிற எண்ணத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்க வைத்தனர்.

அதை படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே நமது குடும்ப தொழிலை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஓடியது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்தவுடன் இது குறித்த தேடலை தீவிரமாக்கினேன்.

இதற்கு ஏற்ப அம்மாவும் ஊக்கம் கொடுத்தார். லண்டனில் கண்ணாடியில் கிராப்ட் வேலைகள் குறித்த பயிற்சி கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டிய அந்த கோர்ஸை விரைவாக ஒரு வருடத்திலேயே படித்து முடித்து தேர்வானேன்.

இந்த தொழில்நுட்பத்தை முறையாகக் கற்றுக் கொண்ட பிறகு சென்னையில் ஒரு இடத்தை பிடித்து தொழில்கூடத்தை தொடங்கினேன். குடும்பத்தினர் உதவியோடு வழக்கமான கண்ணாடி கடையாக இல்லாமல், நவீன வகையில் கொண்டு செல்லத் தொடங்கினேன்.

மக்களின் ரசனை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கதவு, ஜன்னல்களில் வெறும் கண்ணாடிகளாக இல்லாமல், அழகழகான, ரசனை சார்ந்த வேலைப்பாடுகளை விரும்புகின்றனர். சிறிய அளவில் வீடு கட்டுபவர்கள் என்றாலும், தங்களது சொந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டுபவர்களுக்கு இந்த வகையிலான கண்ணாடிகள் மேலும் திருப்தியை கொடுக்கிறது.

தவிர பழைய மாதிரி பூ, செடி, கடவுள் படங்கள் தவிர நவீன ஓவியங்கள் மற்றும் நவீன பெயிண்டிங்குகளையும் விரும்புகின்றனர். கடவுள் உருவங்களையே நவீன வடிவங்களில் தேடுகின்றனர்.

இது போன்ற ரசனை சார்ந்த விஷயங்களை கைகளால் மட்டுமே வரைந்து விட முடியாது. இதர பொருட்களை கையாளுவதைபோல கண்ணாடிகளை கையாளவும் முடியாது. ஒரு சின்ன தவறு நிகழ்ந்தாலும் மொத்த உழைப்பும் வீணாகப் போய்விடும்.

முதல் இரண்டு ஆண்டுகள் சற்று தடுமாற்றமாகத்தான் இருந்தது. கைகளால் வரைந்து அதை கண்ணாடியில் கிராப்ட் வேலையாக செய்து கொண்டிருந்தேன். இது சில நேரங்களில் முழு திருப்தி கொடுக்காது. வாடிக்கையாளர்கள் இன்னும் அதிக துல்லியத்தை எதிர்பார்பவர்களாக இருந்தனர். இதனால் கம்ப்யூட்டரில் டிசைன் செய்த பிறகு கிராப்ட் வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்.

வாடிக்கையாளர் விரும்புவார்கள் என்று நாமே தன்னிச்சையாக டிசைன் செய்து வைக்க முடியாது. சில நேரங்களில் வேண்டாம் என்று கூறிவிடுவார்கள். இதனால் அவர்களிடமிருந்து யோசனைகளும் வாங்கத் தொடங்கினேன். இந்த முறையால் எனது டிசைன்கள் மேலும் மெருகேறியது. வாடிக்கையாளர்களது யோசனையும் எங்களது யோசனையும் சேர்ந்து ஒரு டிசைனாக வரும்போது அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிதான் எங்களுக்கான பலம். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ரூ.300 விலையிலிருந்து இரண்டு மூன்று லட்சம் வரை விற்பனையாகக்கூடிய கண்ணாடி பெயிண்டிங்குகள் செய்கிறோம். வங்கிக் கணக்குகள், வரிக் கணக்குகளை முறையாக பராமரித்து வருகிறேன். அடுத்த கட்டமான வங்கிக் கடன் மூலம் தொழிலை விரிவாக்க திட்டம் வைத்துள்ளேன்.

இந்த தொழிலுக்கே உரிய சிக்கல் என்றால் கையாளும்போது ஏற்படும் சேதங்கள்தான். அதையும் நவீன பேக்கிங் மூலம் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறோம். இப்போது எங்கள் இடத்துக்கே வந்து வாங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். 6 பேருக்கு வேலை அளிக்கிறேன்.

படித்த படிப்புக்கு வேலை தேடியிருந்தால் நல்ல ஹோட்டலிலோ அல்லது சம்பளத்திலோ சேர்ந்து வாழ்க்கை ஒரே மாதிரி இருந்திருக்கும். ஆனால் கைவிடும் நிலையில் இருந்த தொழிலை கவுரவமான நிலைக்கு வளர்த்திருக்கிறேன் என்கிறபோது சந்தோஷமாக இருக்கிறது. இந்த திருப்திக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது என்று சொல்கிறார்.

 

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-வாடிக்கையாளரிடமிருந்தும்-கற்றுக்-கொள்கிறேன்/article7341687.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

அங்கீகாரம்: சொந்த அடையாளத்தை உருவாக்குவது சவாலானது

ang1_2328222g.jpg

செ.முத்துக்குமார் - எஸ்எஸ்ஜி சோலார்.

செ.முத்துக்குமார் - எஸ்எஸ்ஜி சோலார்.

எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ முடித்து விட்டு சுமார் பத்து வருடங்கள் எலெக்ட்ரிக்கல் துறையில் பணி யாற்றியவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார். தொழிலில் வளர வேண்டும், புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அனுபவத்துடன் கல்வித் தகுதியும் தேவை என்பதை உணர்ந்து மீண்டும் கல்லூரி சென்று பி டெக் பட்டம் வாங்கினார்.

பிடெக் பட்டம் வாங்கிய பிறகு சொந்தமாக சோலார் பொருட்கள் தயாரிக்கும் யூனிட் தொடங்கி இன்று ஆண்டுக்கு ரூ. 1.50 கோடிவரை வர்த்தகம் செய்து வருகிறார். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் (திருநெல்வேலி) பகுதி நேரமாக எம்இ படித்துக் கொண்டே தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

விடா முயற்சிக்கு எடுத்துக் காட்டாக, உத்வேகத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் ராஜபாளையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஜி சோலார் நிறுவனத்தின் முத்துக்குமார் இந்த வாரம் அங்கீகாரம் பகுதியில் இடம் பெறுகிறார்.

``எலெக்ட்ரிக்கல் டிப்ளமோ படித்த அடிப்படையில் எலெக்ரிக்கல் துறை சார்ந்த வேலைகளைத்தான் மேற் கொண்டிருந்தேன். படிக்கும் காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி மாணவராக இருந்த அனுபவமும் கை கொடுத்தது. ஆனால் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும் வேறு ஒரு தேவை என்னை விரட்டிக் கொண்டே இருந்தது. அதுதான் என்னை சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுக்க வைத்தது என்று சொல்லலாம்.

ஆனால் தொழில்முனைவோராக ஆனது உடனடியாக நிகழ்ந்துவிடவில்லை. கல்வித் தகுதி தேவையாக இருந்தது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிடெக் சேர்ந்து என் கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டேன். அந்த படிப்பு முடிந்ததும், பிறகு ஒரு வருடம் மின் பொறியியல் துறையில் தற்காலிக பேராசிரியராக ஒரு கல்லூரியில் பணியாற்றினேன்.

ஆனால் அதைத்தாண்டி ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்த போது சோலார் தயாரிப்புகளின் பக்கம் கவனம் திரும்பியது. வீட்டில் சின்ன சின்ன மின் தேவைகளுக்கு சோலார் பயன்படுத்தியதை ஏன் பெரிய அளவில் மேற்கொள்ளக் கூடாது என்கிற யோசனை வந்தது.

உடனே சொந்த ஊரான ராஜ பாளையத்திலேயே சின்னதாக ஒரு யூனிட் தொடங்கினேன். ஆரம்ப முதலீடாக ரூ.10 லட்சம் செலவானது. அதற்கு பிறகு வங்கிக் கடன் மத்திய அரசின் தொழிற்கடன் போன்றவை கிடைத்து தொழிலை விரிவாக்கினேன்.

சோலார் தயாரிப்புகளை பொறுத்த வரை பல வகைகளில் மக்களுக்கு கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் நான் அதை வாங்கி விற்கும் வேலை களைச் செய்யாமல் சொந்தமாக சர்க்யூட் தயாரிக்கிறேன். சின்ன சின்ன மூல பாகங்களை வாங்கி அதை ஒருங்கிணைத்து தயாரிக்கும் வேலைகளை செய்கிறேன். இன்வெர் ட்டர்கள், பேட்டரிகள் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு இணை யாக எங்கள் யூனிட்டில் சோலார் இன் வெர்ட்டர்கள் உற்பத்தி செய்கிறோம்.

தற்போது ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வர்த்தகம் செய்து வருகிறேன். சோலார் பயன்பாடு குறித்து மக்கள் அதிகமாக தெரிந்து கொள்ளும்போது எங்களது விற்பனை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். மேலும் அடுத்த இரண்டு வருடங்களில் விற்பனை ரூ.5 கோடி எட்ட வேண்டும் என்பதுதான் எனது இலக்கு.

நான் ஒரு இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததைப் போல, தற்போது பல கனவுகளுடன் என்னிடமும் பத்து நபர்கள் வேலைபார்த்துக் கொண் டிருக்கிறார்கள். மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு சோலார் மின்சார வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்.

சோலார் இன்வெர்ட்டர் உற்பத்தி தாண்டி மத்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைத்து சோலார் தயாரிப்புகளுக்கான பயிற்சிகளும் கொடுத்து வருகிறேன்’’ என்றார்.

ஒரு தொழிலை உருவாக்கி அதில் வெற்றிகரமாக நிற்பது சவாலானதுதான் என்பது இவரது பேச்சிலிருந்து புரிந்தது.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/அங்கீகாரம்-சொந்த-அடையாளத்தை-உருவாக்குவது-சவாலானது/article6951019.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

கைவிட்ட தொழிலில் கரையேறினேன் - அங்கீகாரம்

ஸ்ரீரோத்கர் - ஃபெதர்டச் டிஸ்யூஸ்

ஸ்ரீரோத்கர் - ஃபெதர்டச் டிஸ்யூஸ்

work_2320016g.jpg

 

சொந்த தொழில் செய்ய யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. இன்னொரு இடத்தில் வேலை செய்து வருமானத்துக்கு வழி செய்வதை விடவும், சொந்த தொழிலில் கிடைக்கும் சுதந்திரம் எல்லோரையும் ஈர்க்கத்தான் செய்யும்.

ஆனால் ரிஸ்க் அதிகம் என்பதை உணர்ந்து கொள்வதால் அந்த முடிவை மேற்கொள்வதில்லை. அப்படி ரிஸ்க் எடுத்து வெற்றிகரமாக நிற்பவர்களை அறிமுகப்படுத்தும் சின்ன அங்கீகாரம்தான் இந்த பகுதி.

ஸ்ரீரோத்கர். பூர்வீகம் திருநெல்வேலி வசிப்பது கோயம்புத்தூர். படித்தது சென்னை. பொறியியல் பட்டம் படித்து முடித்ததும் சொந்த தொழிலா? வேலையா? என்கிற நிலைமையில் சொந்த தொழில் என முடிவு செய்கிறார்.

சொந்த தொழில் என்றால் எந்த மாதிரியான தொழில் என தேடுகிறபோது டிஸ்யூ பேப்பர் தொழிலுக்கான சந்தையை புரிந்து கொண்டு அதை தேர்ந்தெடுக் கிறார்.

கோயம்புத்தூர் சார்ந்த தொழிலும் இல்லாமல், திருப்பூரை மையமாகக் கொண்ட பின்னலாடை சார்ந்த தொழிலையும் தேர்ந்தெடுக்காமல் இந்த தொழிலை தேர்ந்தெடுக்க காரணம் கேட்டோம். “நான் சொந்த தொழில் செய்யலாம் என தேடுகிறபோது, எனது நண்பரின் அப்பா இந்த தொழிலை செய்து வந்தார். ஆனால் அவரால் இதை தொடர முடியவில்லை. அவரது முதன்மை தொழிலாக ஓட்டல் தொழில் இருந்தது.

அதன் தேவைகளுக்கு ஏற்ப இந்த தொழிலை நடத்தி வந்ததால் இதில் நஷ்டத்தை சந்தித்து வந்தார்.அதை விற்பதற்கு முன் வந்ததால் இந்த தொழிலை வாங்கி சந்தையை விரிவுபடுத்தினால் லாபகரமாக இயக் கலாம் என அதை வாங்க முடிவு செய்தேன். ஆனால் உடனே வாங்காமல் அந்த தொழில் குறித்த ஆய்வுகளில் இறங்கினேன்.

தமிழ்நாட்டில் டிஸ்யூ பேப்பர் உற்பத்தியாளர்கள் குறைவு. வட மாநிலங்களில் இருந்துதான் அதிகமாக வருகின்றன. சில உற்பத்தியாளர்கள் சென்னையை மையமாகக் கொண்டு இருந்து வருகின்றனர்.

எனவே கோயம்புத்தூர் மற்றும் மேற்கு மாவட்டங்கள், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் சந்தை வாய்ப்பு இருந்தது. எனவே முதலில் சந்தையை விரிவுபடுத்தும் வேலைகளில் இறங்கினேன்.

ஒன்றரை வருடங்கள் இந்த தொழிலைக் கற்றுக் கொண்டு, ஓரள வுக்கு சந்தையை புரிந்து கொண்ட பிறகு இந்த யூனிட்டை வாங்கினேன்.

அந்த உற்பத்தி யூனிட் வாங்குவதற்கான முதலீடு 7 லட்சம் ஆனது. அதற்கு பிறகு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தொழில்கடன் மூலம் உற்பத்தியை ஆரம்பித்தேன் என்று தனது தொழில் தொடங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

தற்போது ஆண்டு வர்த்தகம் 70 லட்சம் வரை வர்த்தகம் செய்து வருகிறார். அடுத்த இரண்டு வருடங்களில் ஆண்டுக்கு ஒரு கோடி வர்த்தகம் என்கிற இலக்கு வைத்திருக்கிறார். இந்த தொழில் உடன் ஒரு முறை பயன்படுத்தும்

‘நான் ஓவன்' பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கான வர்த்தகமும் செய்கிறார்.

உற்பத்தி தவிர மூலப்பொருட்கள் வாங்குவதிலும், சந்தையை தக்க வைத்துக் கொள்வதிலும் கவனமான இருந்தால்தான் இந்த தொழிலில் நிற்க முடியும். நான் எனது அனுபவத்தில் கற்றுத் தெரிந்து கொண்டது இது என்று குறிப்பிடும் ஸ்ரீரோத்கர் எனது பெற்றோர்களின் ஊக்கமும் வெற்றிக்கு காரணம் என்கிறார்.

தமிழ்நாட்டை விட கேரளாவில் டிஸ்யூ பொருட்களின் பயன்பாடு அதிகம். அங்கு வீடுகளில்கூட டிஸ்யூ பேப்பர்கள் பயன்படுத்துகின்றனர்.

எனவே தற்போது கேரள சந்தையில் சில்லறை விற்பனையில் கவனம் செலுத்துகிறேன் என்று தனது தொழிலின் அடுத்த கட்ட நகர்வு குறித்து நம்பிக்கை பொங்க பேசுகிறார்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/கைவிட்ட-தொழிலில்-கரையேறினேன்-அங்கீகாரம்/article6924937.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

அங்கீகாரம்: ஆர்வத்துக்கு தடையில்லை...

பத்மா ஹரிஷ், ஸ்ரீதர்மா புட்ஸ்.

பத்மா ஹரிஷ், ஸ்ரீதர்மா புட்ஸ்.

சொந்த ஊர் புதுக்கோட்டை. படித்தது நாமக்கல். வசிப்பது சென்னை என பன்முக அடையாளங்களைக் கொண்டுள்ளார் பத்மா ஹரிஷ். எம்எஸ்சி புட் பிராஸசிங் படித்த இந்த பட்டதாரி. சென்னையின் புறநகரான காரணையில் பதப்படுத்தபட்ட உணவுகள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வாரம் அங்கீகாரம் பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். பிடித்த வேலையை, குடும்பத்தின் ஒத்துழைப்போடு மேற்கொள்வது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது என்று தனது தொழில் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

பொறுப்பான குடும்பத் தலைவியாக வீட்டுப் பணிகளையும் பார்த்துக் கொண்டே, இயந்திரத்தில் ரெசிபிகளுக்கான கலவையைக் கண்காணிக்கிறார். உணவுத்துறை சார்ந்த எனது படிப்புதான் இந்த துறையில் தொழில் தொடங்குமளவுக்கு என்னை ஈடுபடுத்தியது என்று தனது தொழில் அனுபவத்துக்கு ஒரு முன்னுரை கொடுத்தார்.

படித்து முடித்ததும் பல நிறுவனங் களுக்கு வேலை தேடி அலைந் திருக்கிறேன். கடைசியில் ஒரு ஊறுகாய் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கிருந்து பிராக்டிக்கலாக உணவுபொருட்கள் தயாரிப்பு சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். கூடவே ஒரே வேலையை செய்து கொண்டிருக்காமல், வேறு ஏதாவது புதிய முயற்சிகளையும் இந்த துறையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது.

உணவு பொருள் தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதுதான் எனக்கு பிடித்தமான வேலையாக உணர்ந்த சமயத்தில் திருமணம் முடிந்தது.

திருமணத்துக்கு பிறகு இதே வேலையை தொடரமுடியுமா என்ப தெல்லாம் தெரியாது. ஆனாலும் எனது திறமையை பார்த்து எனது கணவர் மற்றும் கணவரது வீட்டில் இதற்கான ஒத்துழைப்பும் அதிகமாகவே இருந்தது. இன்னொன்று எனது மாமனார் சிறிய அளவில் ஹோம் மேட் உணவு தயாரிப்புகளையும் செய்து கொடுத்து கொண்டிருந்தார்.

இதனால் எனது உணவுதுறை சார்ந்த ஆராய்ச்சியும், கணவரது வீட்டினர் மேற்கொண்டிருந்த ஹோம் மேட் தொழிலுமாக சேர்ந்து புதிய வடிவம் எடுத்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது இந்த துறையில் ஈடுபட வீட்டினர் அளித்த ஒத்துழைப்பும் அதிகமாக இருந்தது. என்னால் முடியாது என்று நான் நினைக்கும் வேலைகளைக்கூட, உன்னால் செய்ய முடியும் செய் என குடும்பம் மொத்தமும் ஊக்கப்படுத்தும். அதுதான் என்னை ஒரு தொழில்முனைவோவராக மாற்றியது. சிறிய அளவில் வீட்டில் செய்துகொண்டிருந்த ரெசிபிகளை ஒரு தொழில் வடிவத்துக்கு மாற்றியது.

சென்னையில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மத்திய அரசின் மேம்பாட்டு மையத்தில் சேர்ந்து உணவு பதப்படுத்துதல் குறித்த பயிற்சி பெற்று அவர்கள் வழிகாட்டுதல்படி தனியாக தொழிலை தொடங்கினேன்.

பெண் தொழில் முனைவோர்களுக்கு கிடைக்கும் தொழில் கடன், மானியம் குறித்த வழிகாட்டுதல்கள் எல்லாம் அவர்களே ஏற்பாடு செய்து கொடுத் தனர்.

கணவர் மார்கெட்டிங் கவனித்துக் கொள்கிறார், எனது மாமனார் தயாரிப்புக்கு உதவுகிறார். அவசர உணவு வகைகள் தவிர சாம்பார், காரட் பாயாசம் உள்ளிட்டவைகூட தயாரிக்கிறேன். உணவு பொருளுக்கு ஏற்ப இவற்றை 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும். சுற்றுலா செல்பவர்கள், தொடர்ச்சியாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறேன்.

பெரிய அளவில் உற்பத்தி, சந்தை யிடுதல் இல்லை என்றாலும் மாதம் ரூ.1 லட்சம் வரையிலுமான ஆர்டர்கள் கிடைக்கிறது. வழக்கமாக கொடுக்கும் தயாரிப்புகள் தவிர புதிய ரெசிபிகளை முயற்சித்துக் கொண்டே இருப்பது பிடித்திருக்கிறது.

குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, விருப்பமான வேலையை, தொழில் முறையில் செய்து வருவதும் எல்லா பெண்களுக்கும் அமைந்துவிடாதுதானே என்கிறார். உண்மைதான் நீங்கள் இன்னும் வளருவதே எல்லோருக்கும் சொல்லும் பாடமாக இருக்கும்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/அங்கீகாரம்-ஆர்வத்துக்கு-தடையில்லை/article6998787.ece?ref=relatedNews

 

 

Link to comment
Share on other sites

அங்கீகாரம்: கடின உழைப்பே கவனிக்க வைத்தது

angikaram_2350385f.jpg
 

திருச்சியைச் சேர்ந்தவர் எபினேசர் ஜாய். படித்தது பனிரெண்டாம் வகுப்புதான். இன்றோ வெற்றிகரமான தொழில் முனைவர். தனது சொந்த தொழிலின் மூலம் 25 நபர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளார். எப்படி இந்த இடத்திற்கு வந்தார். அவரது வெற்றிக்கு பின்னுள்ள அனுபவம் என்ன என்பதை குறித்து அவரிடம் கேட்டறிந்தோம்.

பனிரெண்டாவது படித்து விட்டு கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் தொடர்ந்து படிக்க வசதியில்லை என்பதால் பாதியிலேயே கல்லூரி படிப்பை விட்டு விட்டேன். ஆனால் எந்த படிப்பும் இல்லையே என்ன செய்வது என்று சோர்ந்து விடவில்லை. காரணம் எனது சித்தப்பா பைகள் தயாரிக்கும் தொழிலை சிறிய அளவில் செய்து கொண்டிருந்தார். அவரிடம் அவ்வப்போது சென்று பைகள் தயாரிக்கும் தொழிலை கொஞ்சம் கற்று வைத்திருந்தேன்.

எனவே இந்த தொழிலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் இந்த தொழிலையும் தொழில் முறையில் செய்தால்தான் வருமானம் கிடைக்கும். பிழைப்புக்காக செய்தால் கடைசிவரை கரையேற முடியாது என்பது தெரிந்தது. எனவே இந்த தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டுமெனில் இந்தத் தொழிலில் உள்ள பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தால்தான் சாத்தியம் என்பதை அறிந்து பம்பாய்க்கு ரயில் ஏறி விட்டேன்.

அங்கு பல தமிழ் நண்பர்களின் உதவியோடு பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து தொழிலில் பல நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன். ஒரு பை தயாரிக்க ஆகும் செலவு, அதற்கு எவ்வளவு விலை வைக்க வேண்டும், நஷ்டமடையாமல் தொழிலைக் கொண்டு செல்வது எப்படி என அந்த இடத்தில் இருந்து கற்றுக் கொண்டேன். தவிர மூலப் பொருட்கள் கொடுப்பவர்களின் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டேன்.

சில வருடங்கள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த பிறகு அங்கிருந்து விலகி, சென்னை, பெங்களூரு என சில நிறுவனங்களில் வேலை செய்தேன். இப்போது இந்த நிறுவனங்களில் பைகள் தயாரிப்பது மட்டும் பார்க்காமல் மார்கெட்டிங் செய்வது குறித்தும் கற்றுக் கொண்டேன். பல ஊர்களுக்கு சாம்பிள் பைகளை எடுத்துச் சென்று ஆர்டர் பிடிக்க வேண்டும். அதுவும் பள்ளிக்கூடம் திறக்கும் சீசன்களில் தூங்குவதற்கு நேரம் இருக்காது. இரண்டு மூன்று மாதங்கள் பயணங்களிலேயே இருப்பேன்.

இப்படி இந்த தொழிலில் தயாரிப்பு வேலைகள், சந்தை, மூலப் பொருட்கள் வாங்குவது என எல்லா நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டு சொந்த ஊரான திருச்சிக்கே வந்து தனியாக தொழிலைத் தொடங்கினேன். கையிலிருந்து சொற்ப பணம் மற்றும் வங்கிக் கடனை முதலீடாகக் கொண்டு தொழிலை ஆரம்பித்தேன். ஆர்டர்களுக்கு ஏற்ப முன்பணம் வாங்கி விடுவதால் நஷ்டமடைய வாய்ப்பில்லை.

பள்ளி சீசன்களில் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்க்க வேண்டும். சில ஆர்டர்களுக்கு ஏற்ப கடின வேலை பார்த்தால்தான் நமது பெயர் வெளியில் நல்ல விதமாகச் செல்லும். இப்போது ஸ்கூல் பேக் தவிர, டிராலி சூட்கேஸ்கள், மீட்டிங் மற்றும் கான்பரன்ஸ் பைகள் போன்றவை தயார் செய்கிறேன். அன்று ஒற்றை ஆளாக தனித்து நின்றவன் இன்று 25 நபர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இந்த இடத்துக்கு வந்ததற்குக் காரணம் எனது கடின உழைப்புதான் என்பதை நம்புகிறேன்.

அதனால் நான் இன்னும் கூடுதலாக உழைக்கவே விரும்புகிறேன் என்றார். இன்னும் பலருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளரட்டும் இந்த தொழில் முனைவர்.

maheswaran.p@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/அங்கீகாரம்-கடின-உழைப்பே-கவனிக்க-வைத்தது/article7023011.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: நீண்டகால நோக்கில் யோசிக்க வேண்டும்

 

  • கு.மணிவண்ணன், பிளாஸ்மா இன்டர்நேஷனல், சென்னை
    கு.மணிவண்ணன், பிளாஸ்மா இன்டர்நேஷனல், சென்னை
  • manivannan1_2357703g.jpg

சென்னை கொளத்தூரில் நினைவுப் பரிசுகளாகக் கொடுக்கும் ஷீல்டுகள், கீ செயின்கள் உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார் கு.மணிவண்ணன். அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு தொழில் தேடி வந்தவர். இன்று வெற்றிகரமான தொழில் முனைவராக வலம் வருகிறார்.

பிளாஸ்டிக் மோல்டிங் சார்ந்த கல்வித்தகுதி இருந்தாலும், பல்வேறு தொழில் அனுபவங்களுக்குப் பிறகுதான் இந்த தொழிலை செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பல கஷ்டங்களைச் சந்தித்தாலும், அந்த கஷ்டங்கள்தான் என்ன உயர்த்தியுள்ளது என்று நம்புகிறேன். ஆரம்பத்திலேயே சோர்ந்திருந்தால் இன்று ஏதாவது ஒரு நிறுவனத்தில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருப்பேன்.

இதுதான் தொழில் என முடிவு செய்த பிறகு, இந்த தொழிலில் எந்தெந்த வகைகளில் முயற்சி செய்து பார்க்க முடியுமோ அவ்வளவையும் முயற்சி செய்துவிட வேண்டும் என்று துணிந்து இறங்கினேன். இதுதான் எனக்கான அடையாளத்தைக் கொடுத்தது. சிறு வயதிலேயே அப்பா, அம்மா இருவரும் இறந்துவிட்டனர். உறவினர்கள் ஆதரவும் பெரிதாகக் கிடையாது.

சின்ன சின்ன வேலைகள் செய்து படித்து முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்தேன். சிம்சன் உள்ளிட்ட சில நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெறுபவராக வேலை செய்திருக்கிறேன். அதற்கு பிறகு பிளாஸ்டிக் மோல்டிங் தொழிலில் இருந்த ஒரு நண்பர் அறிமுகம் கிடைத்து அவர் மூலம் தொழிலைக் கற்றுக் கொண்டேன்.

தினசரி வேலை முடிந்ததும் பம்மலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அந்த வேலைகளைக் கற்றுக்கொள்வேன். அந்த தொழிலை தனியாகச் செய்யலாம் என நம்பிக்கை வந்த பிறகு பத்தாயிரம் பணத்தைத் திரட்டி முதலீடாகக் கொண்டு இறங்கினேன். ஒரு டானிக் பாட்டிலுக்கு மூடி செய்து கொடுத்ததுதான் நான் மேற்கொண்ட முதல் தொழில். ஆனால் அந்த தொழிலில் பெரிதாக வருமானம் கிடையாது.

பிறகு என் கவனம் கீ கெயின் தயாரிப்பதில் இறங்கியது. கீ செயின் தயாரிப்பு தொழில் என்பது சிவகாசி சார்ந்த தொழிலாக இருந்தது. சிவகாசி ஏஜெண்டுகள் வருடம் முழுக்க ஆர்டர் எடுப்பார்கள். ஆனால் ஜனவரி பிப்ரவரியில்தான் சப்ளை செய்வார்கள். தவிர கீ செயின் உற்பத்தி செய்ய அடக்க விலை 50 காசு என்றால் 3 ரூபாய் வரை விலை கொடுக்க வேண்டும்.

நான் இந்த தொழிலை யோசிக்க இதுவும் ஒரு காரணம். ஆர்டர் வாங்கிய ஒரே வாரத்தில் சப்ளை செய்ய வேண்டும், விலையும் குறைவாக கொடுக்கவேண்டும். இதை இரண்டையும் தாரகமந்திரமாகக் கொண்டு ஆர்டர்கள் பிடிக்கத் தொடங்கினேன். நானே ரெடி செய்த 150 மாடல்களோடு பல நிறுவனங்களுக்கும் அலைந்து ஆர்டர் பிடித்தேன்.

கிட்டத்தட்ட பெரிய நிறுவனங்கள் முதல் சிறு வர்த்தகர்கள் வரை ஆர்டர் கொடுத்தனர். இப்போது பல வகை கீ செயின்களும் உற்பத்தி செய்கிறேன். எனது டிசைன்கள் தவிர வாடிக்கையாளர்கள் தரும் டிசைன்களும், புகைப்படம் வைத்த கீ செயின்களும் தயாரிக்கிறேன். தேவைக்கு ஏற்ப மூலப்பொருட்களை சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறேன்.

கீ செயின் உற்பத்திக்கு பிறகு தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிறபோது நினைவுப் பரிசாக வழங்கும் ஷீல்டுகள் பக்கம் கவனம் செலுத்தினேன். வாடிக்கையாளர்கள் விரும்பும் லோகோ, டிசைன்களில் கொடுத்த போது பலரும் என்னை ஊக்குவித்தனர். முக்கியமாக சென்னை பல்கலைக்கழகம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் என பல வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். இப்போது தமிழகத்தின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் பலரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

ஆரம்ப முதலீடு பத்தாயிரம் ரூபாய்தான். அதற்கே அவ்வளவு கஷ்டப்பட்டேன். இன்று மாதம் குறைந்தபட்சம் ரூ 10 லட்சம் வரைக்குமான ஆர்டர்கள் கிடைக்கிறது. அன்று அந்த பணத்தைக் கொண்டு நான்கு கிரவுண்ட் நிலம் வாங்கியிருந்தால் சில லட்சங்கள் அல்லது கோடிகளாக வளர்ந்திருக்கும்தான். ஆனால் தொழில் முனைவருக்குரிய திருப்தி இருந்திருக்காது. சொந்த வீடு கூட சில வருடங்களுக்கு முன்புதான் வாங்கினேன்.

ஒரு தொழிலை தொடங்குகிறோம் என்றால் அதில் உடனடி லாபம் ஆதாயம் எதிர்பார்க்காமல், அந்த தொழிலில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் ஆராய வேண்டும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதில் நீண்ட கால நோக்கில் யோசிக்க வேண்டும்.

உடனடி லாபத்தை எதிர்பார்த்து தொழிலில் இறங்கினால் சோர்வுதான் மிஞ்சும். தொழில்முனைவராக நிலைத்து நிற்க வேண்டுமெனில் தொழிலில் விடாப்பிடியான தன்மையோடு உழைக்க வேண்டும் இதுதான் நான் கற்றுக் கொண்ட பாடம் என்றார். புதிய தொழில் முனைவர்களுக்கு இவரது அனுபவம் பாடம்தான்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-நீண்டகால-நோக்கில்-யோசிக்க-வேண்டும்/article7047892.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

 

இண்டிகோ விமான பைலட்டான ஆட்டோ டிரைவர்!

An auto-driver who became an Indigo commercial pilot
 

மும்பை: ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்த ஒரு இளைஞர், தனது கடின உழைப்பால், இன்டிகோ விமானத்தின் பைலட்டாக பணியாற்றி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் பன்டவானேவின் தந்தை தனியார் நிறுவன செக்யூரிட்டி கார்ட். ஏழ்மை பின்புலத்தில் இருந்து வந்ததால் ஸ்ரீகாந்த் 12ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக, ஆட்டோ ஓட்டி வருவாய் ஓட்டத் தொடங்கினார் ஸ்ரீகாந்த். ஆனால், அவரது வாழ்க்கையில், ஒரு தருணம் பெரும் திருப்பு முனையை தந்தது. ஆகாயத்தில் பறக்க வைக்கப்போகும் அற்புத தருணம் என்று அன்று ஸ்ரீகாந்த்துக்கு தெரிந்திருக்கவில்லை.

கஸ்டமரை பிக்அப் செய்ய போன இடத்தில், ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் தனது பழைய நண்பர் ஒருவரை ஸ்ரீகாந்த் சந்திக்க நேரிட்டது. பளிச்சென்ற வெள்ளை நிற ஆடையில், தொப்பியுடன், தனது நண்பன் கம்பீரமாக நிற்பதையும், கிரீஸ் கறையுடன் கூடிய காக்கி சட்டையுடன் தான் இருப்பதையும் பார்த்த ஸ்ரீகாந்த் ஒரு நிமிடம் கூனிக்குறுகி போனார். ஆனால், அவரது நண்பரோ, இந்த ஏற்றத்தாழ்வை பெரிதாக எடுக்கவில்லை. தாழ்வை நீக்கி ஏற்றம் பெறுவது எப்படி என்று ஸ்ரீகாந்த்துக்கு ஐடியா கொடுத்தார். "நீ 12வது முடித்திருந்தாலும் பரவாயில்லை, பைலட் ஆகலாம்" என்று அவர் கூறிய வார்த்தைகள் அப்புறம் ஸ்ரீகாந்த்துக்கு வேதவாக்காக மாறியது.

டிஜிசிஏ பைலட் ஸ்காலர்ஷிப் பற்றிய விவரத்தை நண்பரிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்ட ஸ்ரீகாந்த் முழு மூச்சாக பைலட் ஆக வேண்டும் என்ற கனவோடு உழைத்தார். மத்திய பிரதேசத்திலுள்ள பைலட் பள்ளியில் படித்தார். வெற்றியும் பெற்றார். படிக்கும் காலத்தில் ஆங்கிலத்தில் உரையாடுவது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், சவாலை சமாளித்து தடைக்கல்லை தாண்டினார் ஸ்ரீகாந்த். ஆனால், ஸ்ரீகாந்த்தின் போதாத நேரம், அப்போது விமான துறை சற்று சரிவை சந்தித்தது. எனவே புதிய பைலட்டுகளை பணியமர்த்த பல நிறுவனங்கள் தயங்கின. ஆனால், குடும்ப சூழ்நிலையோ ஸ்ரீகாந்த்தை நெருக்கியது. வேறுவழியில்லை, என்பதை தெரிந்து கொண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார் ஸ்ரீகாந்த். ஆனால், அதிருஷ்ட காற்று ஸ்ரீகாந்த் பக்கம் வீசியது. 2 மாதங்களிலேயே இண்டிகோ விமான நிறுவனத்திடமிருந்து ஸ்ரீகாந்த்துக்கு அழைப்பு வந்தது. அதுவும், பைலட் பதவி அளிப்பதாக. அன்று ஆட்டோ ஓட்டிய அதே ஸ்ரீகாந்த் இன்று உயர, உயர பறக்கிறார். அவரது கனவுகளுடன் சேர்ந்து.

 http://tamil.oneindia.com/news/india/an-auto-driver-who-became-an-indigo-commercial-pilot-228826.html

 

Link to comment
Share on other sites

உழைப்பே உயர்வு தரும்

இளைஞனே, நீ பெயர் பெறவேண்டுமா? வான்புகழ் பெற வேண்டுமா?  உலகம் உன்னை மதிக்க வேண்டுமா? அப்படியானால் உழை; கடினமாக உழை. தொடர்ந்து உழை - உன் எண்ணம், குறிக்கோள் ஈடேறும்.

உழைப்பு பிழைப்பிற்கு மட்டும் வழியல்ல; உலகில் நீ நிலைத்து நிற்கவும் அதுதான் வழி. உழைப்பின் விளைவுதான் பெயரும் புகழும் செல்வாக்கும் மேன்மையுமாகும். உழைப்பை நீ மதித்தால் அது உன்னை மதிக்கும். நீ வாழ்க்கையில் உயர அது வழி வகுக்கும். உழைத்து உயர்ந்தவர்களை 'உத்தமர்கள்' என உலகம் பாராட்டும், போற்றும்.

உழைக்க நான் தயார்- ஆனால் வாய்ப்பு இல்லையே, , வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் மக்கள் பெருக்கம். தேவை அதிகம். தேவை பெருகப் பெருக உழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

இடையில் ஏற்படும் தடைகள் உன்னைக் கண்ணீர் வடிக்கச் செய்யலாம். 'ஏன் பிறந்தோம்' என்று கூட நினைக்கத் தோன்றலாம். தளர்வடையாதே, துவண்டு போகாதே. தொடர்ந்து உழை. வெற்றி உனதே.

உழைக்காமல் ஊர் சுற்றுபவர்கள் ஒரு போதும் யாரும் மதிக்கமாட்டார்கள். உழைத்துத்தான் வழி தேட வேண்டும். அது உன்னைத் தேடி வராது. உழைப்பவர்கள் மட்டுமே உலக வரலாற்றில் இடம்பெற முடியும். கின்னஸ் சாதனை நிகழ்த்த முடியும். நோபெல் பரிசு பெற முடியும். உழைக்காதவர்கள் உலக வரலாற்றை உற்றுப் பார்க்கக்கூட முடியாது. உழைக்காதவர்களை உலகம் உதறித் தள்ளிவிடும். உற்ற மனைவிகூட வெறுத்து விடுவாள். 'தண்டச்சோறு', 'உதவாக்கரை' என உலகம் எள்ளி நகையாடும். உடன்பிறப்புகள் உழைக்காதவர்களை புறக்கணிப்பார்கள். நண்பர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். உழைக்காதவர்களுக்கு உற்ற நண்பர்கள் இருக்கமாட்டார்கள். உழைக்காத கும்பல் நாளடைவில் கலைந்துவிடும்.

உழைப்பால் உயர்ந்தவர்களை உலகம் இனங்கண்டு கொள்ளும்; பாராட்டும்; புகழும். உழைப்பவர்கள் உலக வரலாற்றில் நிலையான இடம் பெறுவார்கள். அடுத்தடுத்து வரும் சமுதாயம் போற்றிப் பாராட்டும். அவர்களின் வரலாற்றையும் கோட்பாடுகளையும் விரும்பிப் படிக்கும்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காக்ஸ்டன்  அச்சகம் அமைத்து அரும்பெரும் சாதனை படைத்தவர். ஆரம்ப காலத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இன்று 'காக்‌ஸ்டன்' பெயர் உலக வரலாற்றில் நிலைத்து நிற்கக் காரணம் எது? 'உழைப்பு,' தொடர்ந்த உழைப்பு.

இரயில் இயந்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஜார்ஜ் ஸ்டீபன்சன் உலகப் போக்குவரத்து வரலாற்றில் நிலைத்த பெயர் பெற்றது எப்படி? அவரின் உழைப்பேயன்றி வேறு யாது? தொலைநோக்கி, வெப்பமானி, திசைகாட்டும் கருவி, நிலத்தடி நீர் அறியும் கருவி ஆகியவற்றைக் கண்டுபிடித்து உலக சாதனை பெற்ற கலிலியோ, உலக வரலாற்றில் இடம் பெற்றது எதனால்? உழைப்பு, உழைப்பு - உழைப்பு மட்டுமே.

அமெரிக்க ஜனாதிபதி (அதிபர்) ஆபிரகாம் லிங்கன் உலக வரலாற்றில் அழியாத இடம் பெற்றதற்கு அடிப்படைக் காரணம், அவரது இடைவிடாத உழைப்பும் விடாமுயற்சியும்தான்.

உழைப்பில் முடிவு கிடையாது. தொடர்ந்து உழைக்க வேண்டும். உழைக்க உழைக்க உள்ளம் வலுப்படும்; உடல் வலிமையடையும். தொய்வு ஏற்பட்டால் தோல்வி தழுவிக் கொள்ளும்; துணையாகிவிடும். உழைப்பு நின்றுவிட்டால் பிழைப்பு படுத்துவிடும் - பிறகு தட்டி எழுப்புவது கடினமாகிவிடும்.

"சுறுசுறுப்பான உழைப்பே வெற்றிக்குச் சாவி" என்கிறார் ஜான்ரே என்ற உழைப்பாளி. உழைத்துப் பிழைக்க, உழைத்து உயர, உழைத்து சாதனை புரிய, உழைத்து உலக வரலாற்றில் நிலையான இடம்பெற, உழைக்கும் எண்ணம் வேண்டும். உழைக்கும் எண்ணம் இருந்தால் தடைகள் உடைத்தெரியப்படும், வழி தெரியும், வளர்ச்சிப் பாதை தெரியும்.

உழைத்துப் பிழைக்க முற்படும்போது சிற்சில பிரச்சினைகள் ஆங்காங்கே தலைதூக்குவது இயல்பே. அவற்றைக் கண்டு மனம் தளராமல், "அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் பிரச்சினைகளை அணுகினால், பிரச்சினைகளே தொழில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பாக மாறிவிடும்' என்கிறார் ராபர்ட் ஹில்லர் என்னும் அறிஞர்.

உழைத்துப் பிழைக்கக் கற்றுக்கொண்டால் யாருக்கும் நீ அடிமையாக வேண்டியதில்லை. உழைத்துப் பிழைக்க நீ உன்னை நன்கு அறிதல் அவசியமாகின்றது. உன்னை நீ அறிந்தால் உயர்வு உன்னை அரவணைக்கும்.

           ' உன்னை அறிந்தால்-நீ

             உன்னை அறிந்தால்

             உலகத்தில் போராடலாம்

             உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

             தலை வணங்காமல் நீ வாழலாம்'

என்ற கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளை நினைவில் கொள் - தனித் தெம்பு பிறக்கும்.

உழைப்பவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் பவனி வரலாம். இந்தத் துறையில் உழைத்தால்தான் முடியும் என்று எந்தத் துறைக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் கிடையாது.

இராபர்ட்சன் என்பவர் பொறியியலாளராக  இருந்தவர். ஆட்குறைப்பால் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டார். உழைத்துப் பிழைக்கத் தெரிந்திருந்த அவர், தேனி வளர்க்க முற்பட்டார். வெற்றி பெற்றார். 'உதாரண புருஷன்' என்ற புகழையும் பெற்றார். இதற்குக் காரணம் விடாமுயற்சி. இரவு பகலாக்க் கடின உழைப்பு. வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டவர் பலருக்கு வேலை வாய்ப்பளித்தார். இதைத்தான் 'மேதை' அல்லது 'மேதைத்தனம்' என்கிறோம்.

"நமது ஓயாத உழைப்பால் வெற்றியை வளர்த்துக் கொள்வதுதான் திறமை எனப்படுகிறது. ஆனால் நம்மை அறியாமலே நமக்குள் இருக்கும் ஆற்றல், திறமை அசாதாரணமாக வெளிப்படுவது என்பது 'மேதைத்தனம்' எனப்படுகிறது" எனக் கூறுகிறார் வில்லியம் ஹெஸ்லிட்.

தனிப்பட்ட திறமையை மெருகூட்ட உழைப்பின் ஆற்றல் பெருகும் - வாழ்வு வளம்பெற அது வழி வகுக்கும். "உங்கள் தனிப்பட்ட திறமையை மெருகேற்றும் ஒரே வழி உழைப்பதுதான்" என்கிறார் அலெக்சாண்டர் போப்.

ரெடின் பெச்சர் என்பவர் மக்காச்சோளம் பயிரிடும் ஒரு விவசாயி. 'பாப்கான்' பொரிக்கும் 'சிவப்பு விரல்' என்னும் இயந்திரத்தை உருவாக்கினார். கோடி கோடியாகப்  பணம் சம்பாதித்தார். தொடக்கத்தில் எத்தனையோ இடர்ப்பாடுகள்; எனினும்,  உழைப்பின் மீதுள்ள பற்று இவரை உயர்த்தியது.

முதலில் குறிப்பிட்ட உண்மை நிகழ்வில் வேலை நீக்கம் செய்யப்பட்ட பொறியியலாளர் தேனி வளர்த்து அபார சாதனை படைத்தார். அடுத்த சம்பவம் விவசாயியாக இருந்தவர் 'பாப்கான்' பொரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்து சாதனை புரிந்தவர். உழைப்பால் உயர்ந்த ஜிடிநாயுடு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். அறிவியல் துறையில் அபார  சாதனை படைக்கவில்லையா?

உழைத்துப் பிழைக்க முற்படும் இளைஞனே, முதலில் உன் தொழிலை நீ நேசிக்க வேண்டும். உழைப்பை மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும்; அதில் மனநிறைவு கொள்ள வேண்டும். அதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

பாட்டாளிகளின் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

            'செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்

             திறமைதான் நமது செல்வம்'

என்று பாடினார். அவரே மேலும் -

             'கையும்காலும்தான் உதவி- கொண்ட

             கடமைதான் நமக்குப் பதவி'

என்கிறார். தொடர்ந்து உழைத்தால் 'சாமி மறந்தாலும் இந்த பூமி நம்மை மறக்காது - அது நமக்கு தகுந்த பலனைத் தந்துவிடும்' என்ற கவிதை வரிகளையும் நினைத்துப் பாருங்கள்.  கவிஞரின் ஆணித்தரமான முடிவு 'உண்மையாய் உழைக்கின்றவர்களுக்கு எல்லாவித நன்மைகளும் நாடி வந்து கூடும்' என்பதே.

உழைப்பில் திருப்தி இல்லையெனில் அதன் காரணத்தை நன்கு அறிந்து, தேவையற்றதை நீக்கி திருப்தி அடைய வேண்டும். அப்பொமுதுதான் உயர்வை எதிர்பார்க்க முடியும். உழைப்பு மட்டுமே பிழைப்பு தரும்.

'உழைக்கின்ற நோக்கம் உறுதியாகிவிட்டால் யாரும் யாரையும் கெடுக்கிற நிலை அறவே மறைந்துவிடும்' என்ற பட்டுக்கோட்டைக் கவிஞரின் பாட்டு வரிகளை நினைவில் கொள்வோம்.

காலங்காலமாக நிலவும் நியதியான உழைக்காமல் 'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகம்' திருந்த ஒரு மருந்துண்டு என்கிறார் கவிஞர். அவர் சொன்ன அந்த மருந்து இதோ:

              'ஒடம்பை வளைச்சு நல்லா

              ஒழைக்கப் பாரு - அதில்

              உனக்கும்  உலகத்துக்கும் நன்மை இருக்கு'  

இடையூறுகள், ஆபத்துகள், பிரச்சினைகள், மன உளைச்சல்கள் முதலியன உழைப்பின் முன்னேற்றப் படிகள். இப்படிகளில் ஏறினால் வெற்றியின் உச்சியைத் தொட முடியும். எனவே, உழைக்கத் தொடங்குங்கள், உயர்வடைவீர்கள். உழைப்பு மட்டுமே உங்களுக்கு உயர்வு தரும்; உழைப்பு மட்டுமே உங்களுக்கு நிலையான புகழைத் தரும். உழைத்து உயர விரும்புகின்ற எவரும் உயர்வு பெறுவது உறுதி! உறுதி! உறுதி!

http://www.tamilnetmalaysia.net/motivational01.htm

 

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: பொறியியல் டூ பனியன் விற்பனை: சாதித்த நண்பர்கள்

அனீஸ் போஸ், நவீன் குமார் - சென்னை டி ஷர்ட்ஸ், சென்னை
அனீஸ் போஸ், நவீன் குமார் - சென்னை டி ஷர்ட்ஸ், சென்னை

ஒரே கல்லூரியில் படித்ததால் பேருந்தில் உருவான நட்பு இன்று பிசினஸ் பார்ட்னர்களாக நவீனையும், அனீஸையும் இணைத்துள்ளது. பிரிண்டிங் டி-ஷர்ட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை, உன்னால் முடியும் பகுதிக்காக சந்தித்தோம்.

கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக ஒரே மாதிரியான டிசைன் மற்றும் லோகோ கொண்ட டி ஷர்ட் தேவைப்பட்டது. அந்த பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை ஏற்பாடு செய்து கொடுத்ததுதான் முதல் அனுபவம். ஆனால் அப்போது இதுதான் எங்கள் பிசினஸ் அடையாளமாக மாறப்போகிறது என்று தெரியாது.” என இரண்டு நண்பர்களும் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

பொறியியல் படித்த பிறகு இரண்டு பேருக்கும் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்தது. சுமார் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தோம்.

ஆனால் ஒரே மாதிரியான அந்த வேலைகளில் மனம் லயிக்கவில்லை. இருவருக்குமே அந்த மனநிலை இருந் ததால் வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் தொடங்கலாம் என முடிவு செய்தோம்.

பிரிண்டிங் டி ஷர்ட் செய்து கொடுப்பதையே தொழிலாக செய்தால் என்ன என யோசனை எழுந்தது. நவீன் உறவினர் ஒருவர் இதற்கு உற்சாகமூட்ட, பள்ளி கல்லூரிகளின் யூனிபார்ம் ஆர்டர் எடுக்க அலையத் தொடங்கினோம். ஒரு ஏரியாவில் இருக்கும் பத்து பள்ளிக்கூடங்கள் லிஸ்ட் எடுத்து போன் செய்து அப்பாயிண் மெண்ட் வாங்கிக் கொள்வோம்.

அலுவலகம் செல்வதற்கு முன்பு, முடிந்த பிறகு, நேரம் கிடைக்கும்போது அந்த பள்ளிக்கூடங்களுக்கு செல்வோம். நாங்கள் இந்த தொழிலை செய்யப்போகிறோம் எனக் கேள்விப்பட்ட எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரது திருமணத்துக்கு 7 பனியன்கள் ஆர்டர் கொடுத்தார். அதுதான் எங்களது முதல் ஆர்டர். தொழிலில் நாங்களும் இறங்கிவிட்டோம் என நம்பிக்கை வந்தது. ஆர்டர் கேட்டு தொடர்ச்சியாக சென்று வந்த ஒரு பள்ளியிலிருந்து 700 பனியன்களுக்கு ஆர்டர் கொடுப்பதாக சொன்னார்கள்.

இந்த ஆர்டரை நம்பி ஒருவர் வேலையை விடுவது என்றும், முதலிரண்டு மாத செலவுகளை சமாளிக்க இன்னொருவர் வேலையிலேயே நீடிப்பது என்றும் பிளான் செய்து கொண்டோம். இதற்கேற்ப நவீன் வேலையை ராஜிநாமா செய்தார். ஆனால் அந்த ஆர்டர் கிடைக்கவில்லை.

வேலை விட்டது வீட்டுக்குத் தெரியாமல் இரண்டு மூன்று மாதங்கள் போய்க்கொண்டு இருந்தது. அதற்கு பிறகு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திலிருந்து ஆர்டர் கிடைக்க, அப்படியே பிற கல்லூரிகள், நிறுவனங்கள் என பல ஆர்டர்கள் வரத் தொடங்கியது. பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தினோம்.

இதன் மூலம் கிடைத்த நண்பர்களும் ஆர்டர்கள் தர தொடங்கினார்கள். ஆரம்பத்தில் வேறொரு விற்பனை யாளரிடமிருந்து வாங்கி கொடுத்தோம். அதில் சில நஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்பட்டன. அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, நேரடியாக திருப்பூரிலிருந்து வாங்குவோம் என அங்கு சென்று அலைந்து திரிந்தோம். அங்கும் சிலரிடம் ஏமாந்த பிறகு, சொந்த யூனிட்தான் சரியாக இருக்கும் என முடிவு செய்தோம்.

திருப்பூர் அனுபவத்தில் கிடைத்த தொடர்புகளைக் கொண்டு ஒரு உற்பத்தியாளரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டோம். குறித்த நேரத்தில், சொன்ன தரத்தில் கிடைக்கும் ஏற்பாட்டை செய்த பிறகு இன்னும் அதிக நம்பிக்கை கிடைத்தது.

பெரிய நிறுவனங்களுக்கு செல்லும்போது எங்களை நடத்தும் விதம் அவமானமாக இருக்கும். பனியன் விக்கிற பசங்க என்கிற மாதிரி நடத்துவார்கள். பிஇ படித்துவிட்டு சொந்த தொழில் செய்கிறோம் என்கிற தன்னம்பிக்கையை சீண்டுவதுபோல இருக்கும். எங்களது பேச்சு மற்றும் அணுகுமுறையின் மூலம் அவர்களிடத்தில் அபிப்ராயத்தை உருவாக்குவோம். எந்த சமயத்திலும் எங்களது தன்னம்பிக்கையை இழந்துவிடவில்லை.

இந்த வேலையில் இறங்கியதற்கு இருவர் வீட்டிலும் பெரிய ஆதரவில்லை, எதிர்ப்பும் இல்லை. தவிர ஆரம்பத்தில் ஏற்பட்ட இழப்புகள், அவமானங்கள், நிராகரிப் புகளும் அதிகம். இதோ இப்போது நல்ல நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

சொந்தமான பிரிண்டிங் யூனிட், நான்கு பேருக்கு வேலை, நிரந்தர வருமானம், அதையெல்லாம் தாண்டி சொந்த தொழில் கொடுக்கும் மகிழ்ச்சி நிறைவளிக்கிறது. எங்களோடு படித்த நண்பர்கள் சாப்ட்வேர் நிறுவன வேலைகளில் சம்பாதிப்பதைவிட நாங்கள் அதிகமாகவே சம்பாதிக்கிறோம்.

இன்ஜினீயரிங் படித்த பசங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என வீட்டிலிருப்பவர்கள் கோபப்படுவார்கள் என்பதால் முதன் முதலில் கிடைத்த ஆர்டருக்கு யாருக்கும் தெரியாமல் இரவில்தான் சப்ளை செய்தோம்.

இப்போது பல கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்லூரிகள், விளையாட்டு நிறுவனங்களும் எங்களைத் தேடி வருகிறார்கள் என்கிற போது பட்ட கஷ்டம் எல்லாம் காணாமல் போகிறது. சுயமாக சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, அதில் ஒன்றைத் தேர்ந் தெடுங்கள் என்பதுதான் இவர்கள் சொல்லும் செய்தி.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-பொறியியல்-டூ-பனியன்-விற்பனை-சாதித்த-நண்பர்கள்/article7366530.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: தவறுகளே சரியானதைக் கற்றுக் கொடுத்தது

டி.பாலகிருஷ்ணன், ஆர்பி இன்ஜினீயரிங், கோயம்புத்தூர்.

டி.பாலகிருஷ்ணன், ஆர்பி இன்ஜினீயரிங், கோயம்புத்தூர்.

நானே தொழில் முனைவோராக இருப்பது மாத்திரமல்ல, பல தொழில் முனைவோர்களின் தேவைகளையும் நிறைவேற்றுகிறேன் என்கிறார் கோவையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தற்போது சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரத்தை தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு தேவைக்கு ஏற்ப பல கருவிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருந்தேன். 2009க்கு பிறகு சப்பாத்தி தயாரிக்கும் இயந்திர உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன் என்றவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிலிருந்து...

இப்போது எனது நிறுவனத்தில் நாற்பது பேருக்கு நிரந்தர வேலை கொடுத்திருக்கிறேன் என்பதும், என்னிடமிருந்து இயந்திரம் வாங்கி, பலர் தொழில் செய்கின்றனர் என்பதும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்று தனது அனுபவத்தை சொல்லத்தொடங்கினார். ஆனால் இந்த வளர்ச்சிகளெல்லாம் ஜீரோவிலிருந்து தொடங்கியது. எனது உழைப்பும், அனுபவங்களும் மட்டுமே என் உடன் இருந்தது என்றார்.

எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தேன். கோயம்புத்தூர்தான் சொந்த ஊர் என்பதால் அவ்வப்போது தொழில் பட்டறைகளுக்கு வேலைக்குச் சென்று வருவேன். படித்து முடித்ததும் மின்சார துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதில் ஒரு வருடம்தான் நீடித்தேன். வருமானம் போதவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரே மாதிரியான வேலைகளைச் செய்வது சலிப்பாகவும் இருந்தது. எனவே தனியாக தொழில் செய்ய வேண்டும் என்கிற யோசனையோடு நிறுவனங்களுக்கான மின்சார இணைப்பு கொடுக்கும் வேலைகள், மின் இணைப்புக்கான ஏற்பாடுகள், பெரிய நிறுவனங்களுக்கு டிரான்ஸ்பார்மர் பொருத்தும் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டேன்.

கோவை பகுதியைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு இந்த தேவை இருந்ததால் தொழிலும் நன்றாக நடைபெற்றது. ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்ட வேலை என்பதால் ஒரு பெரிய வேலைக்கு எனக்கு சேர வேண்டிய பணம் வந்து சேரவில்லை என்பதால் நஷ்டத்தைச் சந்தித்தேன். அதிலிருந்து மீண்டும் அந்த தொழிலைச் செய்ய முடியவில்லை.

திரும்பவும் ஒப்பந்த தொழில் என்கிற தவறை செய்யவில்லை. வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்வது, அவற்றுக்கான சர்வீஸ் வேலைகள் செய்வது என அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்கினேன். என்னுடைய தொழில்நுட்ப அனுபவத்தைக் கொண்டு சிறு சிறு இயந்திர உற்பத்திகளையும் தொடங்கினேன். இதற்காக வீட்டையே பயன்படுத்திக் கொண்டேன்.

இறக்குமதி செய்யப்படும் இயந்திரங் களுக்கான துணை கருவிகளை வெளி நாட்டிலிருந்து வாங்கினால் அதிக விலையாகும், அதற்கு பதிலாக அதேபோல குறைந்த விலையில் கருவிகளை தயாரித்துக் கொடுத்தேன். இதன் மூலம் பெரிய பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக கிடைத்தனர்.

இந்த வேலைகளை மேற்கொண் டிருக்கும்போதே தனியாக இடம் வாங்கி தொழில் நிறுவனத்தையும் தொடங்கிவிட்டேன். இங்கிருந்து சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கருவிகள் செய்ய தொடங்கினேன். குறிப்பாக கைகளால் செய்யக் கூடிய வேலைகளை இயந்திரங்களால் செய்வதற்கு ஏற்ப கருவிகள் செய்தேன்.

இடியாப்பம், இனிப்புகள் செய்வதற்கான இயந்திரம், தோசை தயாரிப்பதற்கான இயந்திரம் போன்றவை செய்தேன். உணவகங்கள், கல்லூரி விடுதிகள் என பெரிய அளவு தேவைகள் இருப்பவர்கள் தேடிவரத் தொடங்கினர். மேலும் இப்படி வருபவர்களின் தேவைக்கு ஏற்ப பல கருவிகளும் செய்து கொடுத்தேன். இதில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகு முதலில் மேற்கொண்டிருந்த தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டேன்.

உணவகங்களுக்கான கருவிகள் ஒரு பக்கம் என்றால், சுய தொழில் முயற்சிகளில் இறங்குபவர்கள் சப்பாத்தி இயந்திரங்களுக்காக தேடி வரத்தொடங் கினர். ஏதாவது தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பவர்களுக்கு இந்த இயந்திரங்கள் நம்பிக்கை கொடுத்தது. உடனடி சப்பாத்திக்கான சந்தை இப்போது எல்லா ஊர்களிலும் வந்துவிட்டது.

அதனால் இப்போது சப்பாத்தி இயந்திர உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். மாதத்துக்கு 5 இயந்திரங் களாவது விற்பனை செய்கிறேன். இதுவே எனக்கு திருப்தி தரும் விஷயம்தான். விற்பனைக்கு பிறகு அவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன். என்னிடம் இயந்திரம் வாங்குபவர்கள் தொழில் முனைவோராக அடையும் வெற்றியை எனது வெற்றியாகவே பார்ப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது.

இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது என் தவறுகள்தான் என்று குறிப்பிடுவேன். ஒவ்வொரு முறையும் புதிய முயற்சிகளில் இறங்கும்போது, நான் ஏற்கெனவே செய்த தவறுகளே ஆசான்களாக இருந்தது. அதாவது சரியானதை கற்றுக் கொள்ள தவறுகளே காரணமாக இருந்தது என்றார். இது தொழில்முனைவோர் தங்களது அனுபவத்திலிருந்து அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-தவறுகளே-சரியானதைக்-கற்றுக்-கொடுத்தது/article7391433.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உன்னால் முடியும்: மக்கள் கொடுத்த ஆதரவுதான் என் வளர்ச்சி

ஆர்.திண்ணப்பன், அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ், மதுரை.
ஆர்.திண்ணப்பன், அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ், மதுரை.

மதுரை சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் நாற்பது பணியாளர்களுடன் பரபரப்பாக இயங்குகிறார் திண்ணப்பன். நொறுவைகள் என்கிற ஸ்நாக்ஸ் வகையறா தயாரிப்பில் மதுரை சுற்று வட்டாரங்களில் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம்வருகிறார். படித்தது எம்பிஏ. செட்டிநாடு பாரம்பரிய ஸ்நாக்ஸ் என்று வீட்டிலேயே சிறிய அளவில் தொடங்கியவர், இன்று தேவகோட்டை, மதுரை என இரண்டு ஊர்களில் தொழில் கூடங்கள் வைத்துள்ளார்.

மதுரை தவிர புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருநெல்வேலி, சிவகங்கை என எட்டு மாவட்டங்களில் சந்தையை பிடித்துள்ளார். இவரது தொழில் அனுபவம் இந்த வாரம் உன்னால் முடியும் பகுதியில் இடம்பெறுகிறது.

இந்த வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தது எனது பெற்றோர்தான், அவர் களுக்கான நன்றியோடு தொடங்குகிறேன் என பேசத் தொடங்கினார். காரைக்குடிதான் சொந்த ஊர். பிகாம் படித்தேன். பிறகு தொலைநிலை வழியில் எம்பிஏ முடித்திருந்தேன். படிக்கும் காலத்திலேயே உணவு துறையில் ஈடுபாடு இருந்தது. அதிலும் எங்கள் செட்டிநாடு வகையறா நொறுக்குத் தீனி, இனிப்புகள் மீது மிகுந்த ஈடுபாடு.

வீட்டில் அப்பா சிறிய அளவில் சோப்பு ஆயில் போன்றவை தயாரித்து வந்தார். அம்மா ஊறுகாய் தயாரித்து கேட்பவர்களுக்கு கொடுப்பார். அப்பா அம்மாவின் சிறிய வருமானத்தில்தான் எங்கள் குடும்பமே இருந்தது. படித்து விட்டு வேலைக்கு போவேன் என நினைத் தார்கள். ஆனால் நான் உணவுதயாரிப்பில் ஆர்வமாக இருந்ததும் இதை தொழிலாக செய்ய திட்டமிட்டதற்கும் மறுப்பு சொல் லாமல் அம்மா அப்பாவும் இதற்கு ஊக்கம் கொடுத்தனர்.

அம்மாவின் அம்மா, அதாவது எனது ஆச்சி செட்டுநாடு பகுதியில் செய்யக்கூடிய சுருள் முறுக்கு நன்றாகச் செய்வார். முதலில் அதை மட்டுமே செய்து பிரபலப்படுத்துவது என திட்ட மிட்டேன்.

அவரிடம் பக்குவம் கேட்டு, வீட்டிலேயே சிறிய அளவில் 25 ஆயிரம் முதலீட்டில் அதை மட்டும் செய்யத் தொடங்கினேன்.

மற்ற நொறுவைகள் சந்தையில் இருந்தாலும், தனித்துவமாக இருந்தால் தான் இதில் நீடிக்க முடியும் என்பதால் தரம்தான் முக்கியம். இதற்கு ஏற்ப விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்பது என் எண்ணம்.

நானே தயாரித்து பாக்கெட் போட்டுக்கொண்டு கடைகளுக்கு செல்வேன். வாங்கவே தயங்குவார்கள். மேலூர் பக்கத்தில் ஒரு கடையில் முதலில் 5 பாக்கெட் போடச் சொன்னார்கள். அதிலிருந்து ஏறுமுகம்தான்.

அந்த மேலூர் கடையில் இப்போது வாரத்துக்கு 500 பாக்கெட் வாங்குவதுதான் காலம் கொடுத்த பரிசு.

நான் என் வீட்டிலேயே சிறிய அளவில் தயாரித்து வந்தவரை எந்த பிரச்சினையுமில்லை. கொஞ்சம் வளர ஆரம்பித்த பிறகு ஏரியாவில் சிலர் பிரச்சினை செய்யத் தொடங்கினர். உடனே வீட்டை காலிசெய்ய வேண்டிய நிலைமை. பிசினஸ் நன்றாக போகிறது என்பதால் விரிவுபடுத்த வேண்டிய தேவையும் இருந்தது.

இவை இரண்டையும் கணக்கிட்டு மதுரை சிட்கோவில் இடம் வாங்கினேன். ரூ.25 ஆயிரம் முதலீட்டில் தொடங்கிய தொழில், அதிலிருந்து வருமானம் எடுத்துதான் இந்த இடத்தை வாங்கினேன். அதற்கு பின்னால் என் கடின உழைப்பு தவிர வேறில்லை.

தொழிலை விரிவுபடுத்திய பிறகு உற்பத்தியை அம்மா கவனித்துக் கொள்ள நான் மார்க்கெட்டிங் செல்வேன். செட்டிநாடு பாரம்பரிய திண்பண்டங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் என் வளர்ச்சி. இப்போது கைகளால் செய்துவந்த பல வேலைகளுக்கு இயந்திரம் வைத்துள் ளோம்.

சுமார் நாற்பது நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன். மதுரையில் தயாரிப்பை நான் கவனித்துக் கொள்ள, அப்பா தேவக்கோட்டை தயாரிப்பு யூனிட்டை கவனித்துக் கொள்கிறார். அங்கு சில்லறை விற்பனை கடையும் தொடங்கியுள்ளோம்.

எனது உறவினர்களில் சிலரே ”முறுக்கா விக்கிற” என கேட்டிருக்கிறார்கள். அவர்கள் சாதாரணமாக கேட்கிறார்களா அல்லது கிண்டல் செய்கிறார்களா என்பது குறித்தெல்லாம் யோசித்த தில்லை. ஆனால் இப்போது அவர்களே போன் செய்து ஆர்டர்களை கொடுக்கிறார்கள்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் மொத்த குடும்பமும் என்னை ஊக்குவித்து பின்னால் நிற்கிறது. தவிர என் உழைப்பை இந்த சமூகம் அங்கீகரிக்கிறது. எனக்கு இது போதும் என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் இந்த செட்டிநாட்டு ஸ்நாக்ஸ்காரர்.

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-மக்கள்-கொடுத்த-ஆதரவுதான்-என்-வளர்ச்சி/article7443298.ece

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உன்னால் முடியும்: மாத்தி யோசித்த விவசாயி!

அமுத களஞ்சியம் - இயற்கை விற்பனை அங்காடி, ஆரணி.

அமுத களஞ்சியம் - இயற்கை விற்பனை அங்காடி, ஆரணி.

விவசாய உற்பத்திப் பொருட்களை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கே விற்க முடியாதா என்பது விவசாயிகளுக்கே உள்ள ஏக்கம். அந்த ஏக்கத்தை எண்ணமாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் ஆரணியைச் சேர்ந்த அச்சுதன்.

எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்ட தாரி. விவசாயம்தான் பூர்வீகத் தொழில், ஆனால் மற்ற விவசாயிகளைப் போல, கிடைத்தது போதும் என முடங்கிவிட வில்லை. நிர்வாக ரீதியான சில முயற்சிகள் மேற்கொண்டு, விவசாய உற்பத்திகளை வர்த்தகம் செய்து வருகிறார். அவரது தொழில்முயற்சியின் பலனாக பல விவசாயிகளுக்கும், அவருக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. அவரது அனுபவங்களை இந்த வாரம் வணிக வீதியில் பகிர்ந்து கொள்கிறோம். விவசாயம்தான் பூர்வீகத் தொழில். அப்பா நெல், கரும்பு, தென்னை என பல பயிர்களை பயிரிட்டு வந்தார்.

எனக்கு படிக்கும் காலத்தில் விவசாயம் குறித்த அக்கறை எல்லாம் கிடையாது. ஆனால் அப்பா கஷ்டப்பட்டு உழைப்பதற்கு பெரிய பலனில்லாமல் இருக்கிறதே என்கிற எண்ணம் மட்டும் ஓடும். பொறியியல் படித்த பிறகு சென்னையில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன். அப்பா பார்த்து வந்த விவசாயத்தில் சில நேரங்களில் சரியான விளைச்சல் இருக்காது. வெளிநாடுகளில் சிறிய இடத்தை வைத்து லாபகரமாக விவசாயம் செய்கிறார்கள். ஆனால் இங்கு மட்டும் ஏன் அது சாத்தியமாகவில்லை என யோசிப்பேன். அவ்வப்போது இணை யத்தில் தேடுவேன். அப்படி பத்து வருடங் களுக்கு முன்பு எடுத்த முடிவுதான் விவசா யத்தை நோக்கி என்னை இழுத்து வந்தது.

மண் பரிசோதனை, இயற்கை விவசாயம், ஜீரோ பட்ஜெட் போன்றவை எனக்கு புதிய விஷயங்களாகப்பட்டது. இதை எங்களது நிலத்திலேயே முயற்சித்து பார்க்க, அது குறித்து மேலும் பல விவரங்களை திரட்டினேன். இதற்காக விவசாய கருத் தரங்குகள், விவசாய பல்கலைக்கழக பயிற்சிகள் என பல ஊர்களுக்கு அலைந் திருக்கிறேன். சென்னையில் பார்த்துவந்த வேலையையும் இதற்காக விட்டுவிட்டேன். ஓரளவு தெரிந்து கொண்ட பிறகு, இந்த விவசாய முறைகளை அப்பாவுக்கு விளக்கியதுடன், மெல்ல மெல்ல விவசாயத்தை எனது தொழிலாக்கிக் கொண்டேன். அதாவது முழுமையான விவசாயியாக மாறிவிட்டேன்.

இதற்கு அடுத்து எனது திட்டம் நாம் விளைவிப்பதை நேரடியாக வாங்குபவர்களுக்கே விற்பனை செய்ய வேண்டும் என்பதுதான். இதற்கேற்ப நேரடியாக விற்பனை செய்யும் கீரைகள், காய்கள் போன்ற பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். நல்ல வருமானம் கிடைக்கத் தொடங்கியது. எனது உற்பத்தியை நான் மட்டும் விற்றால், அதை தொழில் முறையிலான வர்த்தகமாக்க முடியாது என்பதால், பல ஊர்களிலிருந்தும் இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை வாங்கி அதை வர்த்தகம் செய்வது என திட்டமிட்டேன்.

எனது இந்த திட்டத்தில் விருப்பம் கொண்டு மேலும் 15 விவசாயிகள் சேர்ந்தனர். நாங்கள் 15 பேரும் ஆளுக்கு 50 ஆயிரம் முதலீடு செய்து முதலில் நிறுவனமாக பதிவு செய்தோம். ஆரணியில் விற்பனை மையம் மற்றும் அலுவலகம் தொடங்கினோம். இதற்கு பிறகு இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகளை ஒருங்கிணைத்தேன். எங்களோடு இணைந்த பிறகு, இயற்கை முறையில் விளைவிக்கிறார்களா என்பதை கண்காணிக்க நேரடியாக ஒவ்வொரு ஊருக்கும் சென்று பார்த்து வருவோம். தினசரி கணக்கு வழக்குகளை இரண்டு விவசாயிகள் வீதம் கவனித்துக் கொள்ள வேண்டும். முதல் நாள் விட்டுச் சென்ற வேலைகளை அடுத்த நாள் வருபவர்கள் தொடர்வார்கள். பொருட்களின் விற்பனை யிலிருந்து கிடைக்கும் லாபத்தில் பங்கு கிடைக்கும்.

3 வருடங்களுக்கு முன்பு இந்த நிறுவ னத்தை தொடங்கினோம். இன்று பல ஊர் களுக்கும் எங்களது இயற்கை உற்பத்தி பொருட்கள் சென்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நிரந்தர வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது பல பொருட்களையும் விளை விக்கும் சுமார் 500 விவசாயிகள் உறுப்பி னர்களாக உள்ளனர். நவீன முறையிலான விவசாயத்தில் தொழில்முனைவோர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்தான். ஆனால் இயற்கை முறையிலான விவசாயத்தில் இந்த தொழில்முனைவு நடவடிக்கை சாதாரணமானது அல்ல என்பதை இந்த மூன்று ஆண்டு அனுபவம் கொடுக்கிறது.

ஆனால் அதிகரித்து வரும் இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு எங்களை மேலும் துடிப்புடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்றார். ஊருக்கே சோறு போடும் விவசாயிகள் வாழ்க்கையும் உயர்வடைந்தால்தானே விவசாயத் தொழிலும் சிறந்து பலரையும் ஈர்க்கும்!

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-மாத்தி-யோசித்த-விவசாயி/article7469737.ece?widget-art=four-rel

 

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: துடைப்பத்திலும் உண்டு வாழ்வு

um_2505013f.jpg

திருச்சியைச் சேர்ந்தவர் பிரேம் சிவா. நகரின் மையத்தில் பல சரக்கு மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை தொழில் செய்து வருகிறார். கூடவே பல தயாரிப்புகளுக்கு மார்க்கெட்டிங் ஏஜென்ஸியும் எடுத்து நடத்தி வருகிறார். ஆனால் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் தனது உழைப்பு மட்டுமல்ல, தான் மேற்கொண்டுவரும் இன்னொரு தொழிலும் பக்க பலமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

பேன்சி ஸ்டோரிலிருந்து வரும் வருமானம் போதாதென்று இவர் தேர்ந்தெடுத்த தொழில் வீடுகளைக் கூட்டிப் பெருக்கும் ’துடைப்பம்’ உற்பத்தி செய்வது.

ஏம்பா நீ செய்யிறதுக்கு வேற நல்ல பிசினஸே கிடைக்கலியா? கல்யாணம் பண்ண பொண்ணு எப்படி கொடுப்பாங்க என பல கேள்விகளை இந்த தொழிலில் இறங்கியபோது எதிர் கொண்டிருக்கிறார். ஆனாலும் தனது தொழில் முயற்சியில் முன்னேற்றங்களைக் கண்டு வெற்றிகரமான தொழில் முனைவோராக வலம் வருகிறார். இவரது அனுபவம் இந்த வாரம் உன்னால் முடியும் பகுதியில் இடம் பெறுகிறது.

பேன்ஸி ஸ்டோர் தொழில் அப்பா நடத்தி வந்தார். அதிலிருந்து ஓரளவுதான் வருமானம் வந்து கொண்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அப்பா தவறிவிட்டார். அதனால் குடும்பத்தை நான் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதுவரையில் குடும்ப சுமையை அப்பா எங்களுக்கு கொடுத்ததில்லை, என்றாலும் தொடர்ந்து கடையை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் கடை வருமானத்தை தாண்டி அடுத்த கட்டமாக வேறு தொழில் முயற்சிகளிலும் இறங்க வேண்டும் என்கிற யோசனை எழுந்தது.

பொதுவாக வீடுகளைப் பெருக்க தென்னை ஓலை குச்சிகளால் ஆன விளக்குமாறு பயன்படுத்துவார்கள். கொஞ்சம் வசதி படைத்த வீடுகளில்தான் பூந்துடைப்பம் என்கிற கோரை துடைப்பம் பயன்படுத்துவார்கள். இதற்கு காரணம் பூந்துடைப்பம் விலை அதிகமாக இருக்கும் என்று மக்கள் நினைத்ததுதான். இன்னொரு காரணம் பரவலாக எல்லா கடைகளிலும் இது கிடைக்காது. ஏனென்றால் அப்போது தமிழ்நாட்டில் இதை தொழிலாக எடுத்து செய்வதற்கு யாரும் கிடையாது. வட மாநிலங்களிலிருந்து இங்குள்ள மொத்த வியாபாரி, அவர்களிடமிருந்து சில்லரை வியாபாரி என வாங்கிக் கொண்டிருந்தார்கள். எனது கடைக்கும் அப்படித்தான் வாங்கிக் கொண்டிருந்தேன்.

எனவே இந்த தொழிலுக்கான சந்தையை நாமே உருவாக்க முடியும் என்று அதை தயாரிப்பதற்குரிய வேலைகளில் இறங்கினேன். பூந்துடைப்பம் தயாரிப்பதற்கான கோரைப் புற்கள் அசாம், மேகலயா, சிலிகுரி, நேபாளம் போன்ற இடங்களில்தான் விளைகிறது. இங்கிருந்தான் வாங்க முடியும். இது ஆண்டு தோறும் கிடைக்காது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி என மூன்று மாதங்களில் மட்டும்தான் கிடைக்கும். ஆண்டுமுழுவதும் உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப் பொருளை வாங்கி இருப்பு வைக்க வேண்டும் என பல விவரங்களை அதற்கு பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

இதற்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து இந்த தொழிலில் இறங்கியவர்கள், ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் மட்டுமே தாக்குபிடித்து நின்றிருக்கின்றனர். இதற்கான சந்தையை நாம் உருவாக்கியபிறகு தொழிலை மேற்கொள்ள முடியவில்லை என்றால் வடநாட்டிலிருந்து வரும் தயாரிப்புகள் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும். எனவே தொழில் தொடங்கிய பிறகு எக்காரணத்தைக் கொண்டும் பாதியிலேயே விட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

ஆரம்பத்தில் நானே துடைப்பம் தயாரித்து, சைக்கிளில் கட்டிக்கொண்டு திருச்சி சுற்று வட்டாரக் கடைகளுக்கு கொண்டு செல்வேன். ’இதையெல்லாம் யாருங்க கேட்டு வாங்குவாங்க” என கடைக்காரர்களே சுணக்கம் காட்டுவார்கள். துடைப்பத்தை வெறுமனே கொடுக்காமல் அதற்கு ராக்போர்ட் என பெயர் வைத்து கவரில் அடைத்து கொடுப்பது என சில வழிமுறைகளைக் கடைபிடித்தேன். மெல்ல மெல்ல விற்பனை வர ஆரம்பித்தது. தற்போது சென்னை தவிர்த்த பல ஊர்களுக்கும் சப்ளை செய்கிறேன்.

இப்போது ஆண்டுக்கு 10 லோடு வரை கோரைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொழில் வளர்ந்திருக்கிறது. இந்த தொழிலிருந்து வருமானம் எடுத்து என இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளேன். எனது மனைவியும் தற்போது எனது உழைப்புக்கு பக்க பலமாக இருக்கிறார். இருபது பெண்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறேன். எனது இந்த வளர்ச்சிக்கு வங்கிக் கடனுதவிகளும் பக்க பலமாக இருந்தது என்பதையும் நன்றியோடு குறிப்பிட்டார்.

வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் ஒரு நாளில் உருவாகிவிடுவதில்லை. அதற்கு சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் இந்த தொழில்முனைவோர்.

http://tamil.thehindu.com/business/business-supplement/உன்னால்-முடியும்-துடைப்பத்திலும்-உண்டு-வாழ்வு/article7521693.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

  • 3 months later...

உன்னால் முடியும்: வாடிக்கையாளர்களே கற்றுக் கொடுத்தனர்

இம்ரான், தீம் அக்வாரியம், சென்னை.
இம்ரான், தீம் அக்வாரியம், சென்னை.

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான். பள்ளிப் பருவத்தில் ஆர்வமாக தொடங்கிய அலங்கார மீன் வளர்ப்பு இன்று அவரது முழு நேரத் தொழிலாகியுள்ளது. அடை யாறு பகுதியின் மையமான கஸ்தூரிபா நகரில் வாடகைக் கட்டிடத்தில் கடந்த எட்டு வருடங்களாக அலங்கார மீன் வளர்ப்பு விற்பனை மையத்தை நடத்தி வருகிறார். இந்த துறையில் ஒரு தொழில் முனைவோராக வளர்ந்துள்ள அவரது அனுபவத்தை இந்த வாரம் ``வணிக வீதி’’யில் பகிர்ந்து கொள்கிறார்.

அலங்கார மீன்களை வளர்க்கும் கண்ணாடி தொட்டியை எப்படி ஒட்டுவது என்பதுகூட ஆரம்பத்தில் தெரியாது, ஆனால் இன்று கான்செப்ட் அடிப்படையில் அலங்கார மீன் தொட்டியை அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளேன் என்றால் எனது வாடிக்கையாளர்கள்தான் காரணம். தொழில் முனைவோராக அவர்களுக்கு எனது முதல் நன்றி என்று தனது அனுபவத்தை ஆரம்பித்தார்.

பிளஸ் 1 படிக்கும்போது எனது தம்பி வீட்டுக்கு ஒரு சிறிய மீன் தொட்டியை வாங்கி வந்தார். அதை அவ்வப்போது பராமரிப்பேன். தம்பி படிக்கவில்லை என்பதால் அலங்கார மீன் வளர்ப்பு தொட்டியை அக்கம் பக்கத்தினருக்கு வாங்கிக் கொடுப்பது, ஆலோசனை சொல்வது என விளையாட்டுத்தனமாக இந்த துறையில் எங்களையுமறியாமல் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.

நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது தம்பி சிறிய அளவில் ஆரம்பித்த அலங்கார மீன் வளர்ப்பு விற்பனையில் பெரிய விற்பனையில்லை. நஷ்டமும் அடைந்தார். அப்போதெல்லாம் எனக்கு மீன் தொட்டி கண்ணாடியை ஒழுங்காகக் ஒட்டக்கூட தெரியாது. பினிஷிங் இருக்காது. தொட்டியில் தண்ணீர் அளவு எவ்வளவு இருக்க வேன்டும், அதற்கான உணவுகள் என்னென்ன? வாங்கி விற்பதில் ஏற்படும் நஷ்டங்கள் என ஓடிக் கொண்டிருந்தது.

பிகாம் முடித்துவிட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ தொலைவழிக் கல்வியில் படித்துக் கொண்டே ஒரு பிபிஓ நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இந்த தொழிலை பிரதானமாக யோசிக்கவில்லை. எம்பிஏ முடித்திருந்ததால் வேறு நிறுவ னங்களுக்கு வேலைக்கு செல்வதும் திட்டமாகத்தான் இருந்தது.

அதே நேரத்தில் எனது ஓய்வு நேரம், அலுவலகத்தில் கிடைக்கும் நேரங்களில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த செய்திகளை இணையத்தில் தேடி தெரிந்து கொள்வதும் வழக்கமாக இருந்தது. இதற்கு காரணம் வாடிக்கையாளர்கள்தான். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஒவ்வொன்றாக நம்மிடம்தான் கேட்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல, தெளிவுபடுத்த வேண்டும் என்றால் அந்த விவரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் நேரத்தை ஒதுக்குவேன். இந்த நேரத்தில்தான் ஐடி துறை நெருக்கடி ஆரம்பித்தது.

இதனால் வேலையிலிருந்து விலகி அலங்கார மீன் வளர்ப்பையே தொழிலாக எடுத்துச் செய்யலாம் என முழு முயற்சியோடு இறங்கிவிட்டேன்.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு இந்த தொழில் சாதாரணமாகத்தான் தெரியும். ஒரு தொட்டி, கொஞ்சம் மீன், தண்ணீர் மாற்றுவது, மீன் உணவு இவைதான் என்று வாடிக்கையாளர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் அவ்வளவு மிகுந்த வாய்ந்த தொழில் இது. பத்து ரூபாய் மீன் குஞ்சு முதல் பல லட்சம் வரையிலான அலங்கார மீன் வகைகள் உள்ளன. தவிர தொட்டியில் வளர்வது ஒரு உயிர், அது நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்க வேண்டும் என்றால் அதற்கேற்ப சில முறைகளும் உள்ளன. மீனின் வகைக்கு ஏற்ப தொட்டியின் அளவு, நீந்துவதற்கு ஏற்ற தண்ணீர் அளவு, ஆக்சிஜன் என எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு உள்ளது.

தற்போது இந்த அலங்கார மீன் வளர்ப்பு முறையில், கான்செப்ட் முறையில் அமைத்து கொடுப்பது வளர்ந்து வருகிறது. வீட்டுக்குள்ளேயே சிறிய பூங்கா போன்ற அமைப்பில் அலங்கார மீன்களை வளர்க் கலாம்.

செல்ல பிராணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இந்த முறையை விரும்புகின்றனர். கிட்டத்தட்ட ஒரு இயற் கையான சூழலில் மீன்கள் இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அவர்கள் கேட்கும் அமைப்பில் செய்து கொடுக்கிறேன். இதில் ஐந்து பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளேன். தொழிலில் அடுத்த கட்டமாக சென்னை நீலாங்கரையில் பெரிய அளவில் ஒரு விற்பனை மையத்தை திறப்பதற்கான முயற்சிகளில் உள்ளேன்.

நஷ்டம்தான் நமது அனுபவம். அடுத்த முறை சரியாகச் செய்ய அதுதான் கை கொடுக்கிறது. இந்த துறையில் மேலும் மேலும் வளர நான் செய்த தவறுகளும், அடைந்த நஷ்டமுமே எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறது என்றார் இம்ரான். உண்மைதான் விழுவது எழுவதற்குத்தான் என்பதுதானே தொழில் முனைவோர்களுக்கு அடிப்படை பாடம்.

 

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%A

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: ஐடியா ஒன்று போதுமே...

லோகேஷ் சீனிவாசன், மை டியர் கேக்ஸ் டாட் காம், சென்னை.
லோகேஷ் சீனிவாசன், மை டியர் கேக்ஸ் டாட் காம், சென்னை.

ஐடி நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத் தில் பார்த்துக் கொண்டிருந்த வேலை யை தனது தொழில் ஐடியாவுக்காக உதறியவர் லோகேஷ். சொந்தமாக பேக்கரி கிடையாது.

கேக்குகளை காட்சிப்படுத்தவோ விற்பனை செய்யவோ பிரத்யேக விற்பனையகம் கிடையாது. சொந்தமாக அலுவலகம் கிடையாது. சென்னையில் ஒரு பேச்சிலர் அறையில் வசித்துக் கொண்டே தனது தொழில் ஐடியாவோடு களமிறங்கியவர் இன்று மாதத்துக்கு சராசரியாக 500 கிலோ கேக் ஆர்டரை தனது இணையதளம் மூலம் சென்னை பேக்கரிகளுக்கு வழங்கி வருகிறார். வருகிற மாதங்களில் 1000 - 1500 கிலோ கேக்குகள் ஆர்டர் எடுக்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்கிற இலக்கோடு பரபரப்பாக இருந்தவர், இந்த வாரம் உன்னால் முடியும் பகுதிக்காக தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிலிருந்து...

சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. 2012ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் படித்து முடித்ததும் உடனடியாக காக்னிஸெண்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்து சேர்ந்தேன். சென்னையில் நண்பர்களோடு சேர்ந்து தங்கிக் கொண்டு வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். ஆன்லைன் சந்தையில் ஏதாவது தொழிலில் ஈடுபட வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. பெரிய முதலீடுகள் தேவைப்படாத தொழிலாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் புதிதாகவும் இருக்க வேண்டும்.

இப்படி யோசித்ததில் ஆன்லைன் மூலம் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை என்கிற ஐடியாவோடு இறங்கினேன். எலெக்ட்ரானிக் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் கொடுத்தால் அருகில் உள்ள விற்பனையகம் மூலம் அதை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவது. இதற்கேற்ப சென்னையில் உள்ள விற்பனையாளர்களோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்வது இதுதான் பிசினஸ் மாடல். ஆனால் வேலையிலிருந்து கொண்டே இதை தொடங்கியதில் வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. மேலும் விற்பனை யாளர்களை ஒருங்கிணைப்பது பெரும் சவாலாக இருந்தது.

எனது அப்பா நாற்பது ஆண்டுகளாக பேக்கரி தொழில் செய்து வருகிறார். இதனால் இந்த தொழில் குறித்த சில அனுபவங்கள் எனக்கும் தெரியும். இதை மையமாக வைத்து ஆன்லைன் பிசினஸ் செய்யலாம் என யோசித்த போது ஆன்லைன் கேக் ஷாப் ஐடியாவோடு இறங்கினேன். இந்த நேரத்தில் எனது குடும்ப நண்பர் மாதவ்ராஜ் அமேசான் ஆன்லைன் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்றிக் கொண் டிருந்தார். அவருடைய ஒத்துழைப்பும் கிடைத்தது. இருவரும் சேர்ந்து சுமார் நான்கு மாதங்கள் இதற்கான இணையதள உருவாக்கம், சந்தை வாய்ப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களை கொண்டுவருவது என முதற்கட்ட வேலைகளை செய்தோம். தினசரி 4 மணி நேரம் ஐடியாவுக்காக உழைப்பது என முடிவெடுத்தோம்.

சென்னையில் உள்ள 40 க்கும் மேற்பட்ட முக்கிய பிராண்டட் பேக்கரிகளை அணுகி எங்களது முயற்சியை விளக்கி ஒருங்கிணைத்தோம். எங்களது இணையதளம் மூலமாக, எந்த பிராண்ட், எவ்வளவு விலை, எந்த பேக்கரி கேக் என்பவற்றை ஆர்டர் கொடுத்தால் குறிப்பிட்ட நாளில் டெலிவரி ஆவதுபோல இந்த நெட்வொர்க்கை உருவாக்கிக் கொண்டோம்.

முதல் இரண்டு மூன்று மாதங்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு ஆர்டர் என்கிற அளவில்தான் இருந்தது. இந்த மூன்று மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் பெற்ற அனுபவங்களை வைத்து மேலும் முறைப்படுத்திக் கொண்டோம். பேக்கரி தொழிலில் உள்ள சிக்கல்கள் எனக்கும், வாடிக்கையாளர்களை கையாளுவது மாதவ்ராஜூக்கும் பரிச்சயம் என்பதால் இந்த காலகட்டங்களை எளிதாகக் கடந்தோம்.

ஆனால் பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு வந்ததால், வீட்டில் ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் விடாமுயற்சியுடன் இருந்ததால் எதிர்ப்பு நாளடைவில் குறைந்தது. என்றாலும் முதல் நான்கு மாத காலகட்டத்தை திரும்பி பார்த்தால் ஆர்டர்கள் அதிகம் இல்லாததால் கொஞ்சம் சோர்வாகவும் இருந்தது. அந்த சமயத்தில் ஒரு பெரிய கொண்டாட்டத்துக்காக மொத்த ஆர்டர் ஒன்று கிடைக்க, உற்சாகம் தொற்றிக் கொண்டது. இதற்கு பிறகு இருவருமே வேலையிலிருந்து விலகி முழுநேரமாக தொழிலில் இறங்கிவிட்டோம்.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் மாதம் 150 கிலோ ஆர்டர் கிடைத்தது. 2015 தொடக்கத்திலிருந்து பிசினஸ் பிக்அப் ஆக தொடங்கிவிட்டது. தற்போது மாதத்துக்கு சராசரியாக 500 கிலோ ஆர்டர் எடுத்து வருகிறோம். தற்போது நேரடியாக 6 பேருக்கு வேலை கொடுத்துள்ளோம். அடுத்து தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் தொழிலை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது என்று உற்சாகத்தோடு குறிப்பிட்டார். தொழில்முனைவோராக ஒரு ஐடியா போதுமே என்கிறது இவரது அனுபவம்.

- maheswaran.p@thehindutamil.co.in

 

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%89%E0%AE

Link to comment
Share on other sites

  • 3 months later...

உன்னால் முடியும்: சொந்த தொழில்தான் நிம்மதி கொடுத்தது

um_2765555f.jpg

பெரிய நிறுவனத்தில், நல்ல சம்பளத் தில் வேலை பார்த்துக் கொண் டிருக்கிறோம். நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம், நிறுவனத்தை மூடப்போகிறார்கள் என்றால் என்ன செய் வீர்கள்.. சென்னை நோக்கியா நிறுவனத்தில் வேலை பார்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஒரே நாளில் வேலை போனது. உறக்கமும் போனது. அதில் ஒருவர்தான் துரை ராஜலிங்கம்.

புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இவர். திடீரென வேலை இழந்த நிலையில், நிலைகுலையாமல் நிதானமாக யோசித்து மாற்று தொழிலை தேர்ந்தெடுத்தவர். இன்று 6 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார்.

பொறியியல் முடித்துவிட்டு சில ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு நோக்கியா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 5 ஆண்டுகளாக வேலைபார்த்துக் கொண்டிருந்த நிலையில், மைக்ரோசாப்ட் அந்த நிறுவனத்தை வாங்கிய பிறகு சென்னை ஆலையை மூட திட்டமிட்டனர். பல ஆயிரம் பணியாளர்களுக்கு ஒரு சில நாட்களிலேயே செட்டில்மெண்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினர். இதுதான் வாழ்வாதாரம் என எண்ணிக் கொண்டிருந்த ஒரு வேலையை நாளையிலிருந்து பார்க்க முடியாது என்றால் எப்படி இருக்கும். ஒரே நாளில் பலருக்கும் நிலைமை தலைகீழானது. முதல் சில நாட்களில் அடுத்து என்ன செய்வது என்கிற குழப்பமே இருந்தது.

வேறு வேலைக்குச் செல்ல யோசனையாக இருந்தாலும், திரும்பவும் வேறு யாருக்கோ சென்று கஷ்டபட்டு இது போன்ற நிலைமைக்கு திரும்புவதைவிட சொந்த தொழிலே மேல் என்று யோசித்தேன். இதற்கு முன்பு பல முறை சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என யோசித்தாலும், அப்போதெல்லாம் எந்த முயற்சிகளிலும் இறங்கவில்லை. ஆனால் வேலை இழந்த பிறகு, இதுதான் சரியான சந்தர்ப்பம் என தோன்றியது. அப்போது யோசித்த தொழில்தான் பேப்பர் கப் தயாரிக்க திட்டமிட்டது. நோக்கியா கொடுத்த செட்டில்மெண்ட் தொகை, சேமிப்பு, வீட்டினரின் உதவி போன்றவற்றை முதலீடாகக் கொண்டு இந்த தொழிலில் இறங்கினேன்.

இந்த தொழில்தான் என்று முடிவான பிறகு இதற்கான தொழில்நுட்பம், இயந்திரம், சந்தை, மூலப்பொருட்கள் என அனைத்தையும் நாமே அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னை, சிவகாசி என பல ஊர்களுக்கும் அலைந்திருக்கிறேன். சுமார் 2 மாதங்கள் தீவிர திட்டமிடலுக்கு பிறகு இந்த தொழிலில் இறங்கினேன். சந்தையில் வித்தியாசப்பட வேண்டும் என்றால், நேரடியாக நிரந்தர வாடிக்கையாளர்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற தெளிவும் கிடைத்தது.

இதற்கேற்ப பேப்பர் கப் மற்றும் பிளேட்டுகள் மட்டும் இல்லாமல் மூடியுடன் உள்ள கப், ஸ்டிக், உறிஞ்சும் குழாய், பிரிண்டட் பேப்பர் பிளேட், பிரிண்டட் கப், பேப்பர் பக்கெட் என பல துணைப் பொருட்களையும் எனது விற்பனையில் சேர்த்துக் கொண்டேன். இவற்றை நான் செய்யவில்லை என்றாலும் எனது தேவைக்கு ஏற்ப வடமாநில தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிக் கொடுத்தேன். இது போன்ற துணைப் பொருட்களோடு முக்கிய உணவு நிறுவனத்தை அணுகியதும், அவர்கள் ஏற்கெனவே வாங்கியதிலிருந்து விலை குறைவாக இருந்ததால் ஆர்டர் கொடுத்தனர். நான் ஏற்கெனவே வேலை பார்த்த நோக்கியா ஆலையிலும் பிரிண்டட் பேப்பர் கப்புக்கு ஆர்டர் வாங்கினேன். இதை வைத்து அடுத்தடுத்த ஆர்டர்கள் பிடிக்க முடிந்தது. எனது இணையதளத்தின் மூலம் ஐஆர்சிடிசி ஆர்டர் கிடைத்தது. இப்போது பெங்களூர் டாடா காபி, கூகுள் நிறுவனங்களில் ஆர்டர்களுக்கான முதற்கட்ட வேலைகள் முடிந்துள்ளன.

எனது தயாரிப்பு திறனை தாண்டி ஆர்டர்கள் கிடைத்தால் அதை ஆர்வப்பட்டு வாங்குவதில்லை. எனது உற்பத்தி திறன் இவ்வளவுதான் என்று தெளிவாக எடுத்துச் சொல்லி, சரியான நபர்களை வாடிக்கையாளர்களுக்கு அடையாளம் காட்டுவேன். இதனால் எனது நிறுவனத்தின் மீது நல்ல அபிப்ராயம் உருவாகி வேறு சில ஆர்டர்களும் கிடைத்துள்ளன.

நான் ஒரு ஆள் வேலை பார்த்து சம்பாதித்து வீட்டுக்கு கொண்டு போனதைவிட தற்போது ஆறு நபர்கள் என் மூலம் சம்பாதிக்கிறார்கள். தொழிலில் அடுத்த கட்டம் செல்ல வேண்டும் என்று உழைத்தாலும், வாழ்க்கையில் திருப்தி உணர முடிகிறது. ஒருவேளை ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தால் இந்த உணர்வு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அப்படி ஒரு நிம்மதியை உணர்கிறேன் என்றார்.

நிம்மதியான ஒரு உணர்வை ஒரு நாளில் அடைந்துவிட முடியாது. அதற்கு பின்னால் நெடிய போராட்டம் இருக்கிறது. இவரது அனுபவம் ஒவ்வொருவருக்கும் பாடம்.

நீரை மகேந்திரன்

maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article8323457.ece?ref=relatedNews

 

Link to comment
Share on other sites

உன்னால் முடியும்: பாரம்பரிய சுவையைத் தேடி ஒரு பயணம்

ஸ்டாலின், மதர்வே கருப்பட்டி கடலை மிட்டாய், காரியாப்பட்டி, மதுரை. | புகைப்படம்: க.ஸ்ரீபரத்

ஸ்டாலின், மதர்வே கருப்பட்டி கடலை மிட்டாய், காரியாப்பட்டி, மதுரை. | புகைப்படம்: க.ஸ்ரீபரத்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஸ்டாலின். மென்பொருள் நிறுவனத்தில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கடலை மிட்டாய் தயாரிக்க இறங்கிவிட்டார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இவரது பயணம் இன்று பாரம்பரிய சுவை விரும்பிகள் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இவரது தொழில் அனுபவம் இந்த வார வணிக வீதியில் உன்னால் முடியும் பகுதியில் இடம்பெறுகிறது.

பொறியியல் படித்துவிட்டு எல்லா இளைஞர்களையும் போல ஒரு பொறுப்பான வேலை, சம்பளம் என்று எனது பயணமும் இருக்கும் என்றுதான் நம்பினேன். ஆனால் சமூக அக்கறை காரணமாக எழுந்த ஆர்வம்தான் இந்த பயணத்தை தொடங்க வைத்தது. நான் சிறு வயதிலிருந்தே கடலை மிட்டாய் சுவை விரும்பி. சிறு வயதில் சாப்பிட்ட கடலை மிட்டாய்களின் சுவை போல இப்போது கிடைப்பதில்லை என்கிற ஆதங்கம் அவ்வப்போது தோன்றும். ஆனால் அவையெல்லாம் ஒரு எதிர்பார்ப்போடு முடிந்துவிடும். இதில் தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றெல்லாம் யோசித்ததில்லை.

படித்து முடித்துவிட்டு கோயம்புத்தூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். விடுமுறை நாட்கள் மற்றும் கிடைக்கும் நேரங்களில் தனிப்பட்ட ஆர்வமாக ``குக்கூ குழந்தைகள் வழி’’ என்கிற லாப நோக்கமற்ற அமைப்பின் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தேன். இந்த அமைப்பின் சார்பாக குழந்தைகளைச் சந்திக்க பள்ளிகளுக்குச் செல்லும்போது நான் வாங்கிச் செல்லும் திண்பண்டம் கடலைமிட்டாய்தான். அப்படி செல்லும் நாட்களில்தான் இதை தயாரிப்பதற்கான எண்ணம் உதித்தது.

ஆனால் சந்தையில் தற்போது ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் முதல் உள்ளூர் அளவில் குடிசைத் தொழிலாக பலரும் செய்து வருகின்றனர், இந்த நிலையில் இந்த தொழிலில் இறங்குவதன் மூலம் லாபகரமாக கொண்டுசெல்ல முடியுமா என்கிற கேள்வியும் எழுந்தது. அதே சமயத்தில் எல்லா தயாரிப்பாளர்களும் வெல்லப்பாகு மூலம்தான் தயாரிக்கின்றனர். நாம் வித்தியாசமாக கருப்பட்டி (பனைவெல்லம்) மூலம் செய்தாலென்ன என்கிற யோசனை வந்தது. இந்த முயற்சியை நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொண்டபோது உற்சாகம் கொடுத்தனர். ஆனால் வீட்டில் சொன்னபோது எனது ஆர்வத்தை மதித்தாலும், இந்த தொழிலுக்காக வேலையை விடப்போகிறேன் என்றதும் பயந்துவிட்டனர்.

இதைத் தொழிலாக எடுத்துச் செய்ய முடிவெடுத்ததும் பலரிடமும் இது குறித்து தகவல்களைச் சேகரித்தேன். பல ஊர்களுக்கும் சென்று கடலை மிட்டாய் செய்பவர்களைச் சந்தித்தேன். பெரும்பாலனவர்கள் குடும்பத் தொழிலாகத்தான் செய்து வருகின்றனர். முறைப்படுத்தப்படாத வேலை நேரம், நிரந்தர ஆட்கள் கிடைக்காது, நிலக்கடலை விலை உயர்வு, தரமான வெல்லம் கிடைக்காது என இதில் உள்ள பல பாதகமான விஷயங்களும் எனக்கு புரியத் தொடங்கியது. ஆனால் எல்லோருமே வெல்லத்தைப் பயன்படுத்திதான் செய்தனர். கருப்பட்டியில் செய்த அனுபவமோ தகவலோ யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை.

தஞ்சாவூரில் இந்த தொழிலை செய்துவரும் கூடலிங்கம் இந்த முயற்சியை பாராட்டி பல ஆலோசனைகளைக் கொடுத்தார். அதற்கு பிறகு நானும் எங்கள் குடும்பத்தினரிடத்தில் இந்தத் தொழிலுக்கு தேவையான அவர்களது உதவிகளை விளக்கி சம்மதிக்க வைத்தேன். வீட்டிலேயே ஒரு இடத்தை ஒதுக்கி வேலை பார்க்கத் தொடங்கினேன். பல முயற்சிகளுக்கு பிறகு சரியான சுவைக்கு, தரத்துக்கு கொண்டு வந்தேன்.

பாரம்பரியமான தின்பண்டம் என்பதற்காக வழக்கமாக எல்லோரும் கொடுப்பதுபோல அப்படியே கொடுக்கக்கூடாது என காகித பெட்டியில் பேக் செய்தோம். முதல்நாளில் அப்பா, அம்மா, அண்ணன் அண்ணி என குடும்பமே உட்கார்ந்து பேக் செய்து கொடுத்தனர்.

இந்த முயற்சியை தொடங்கி ஆறு மாதம் ஆகிறது. பல தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவால், தயாரிப்பை அதிகப் படுத்தியுள்ளோம். ஆறு நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது. மார்க்கெட்டிங் வேலைகளுக்காக அவ்வப்போது பல மாவட்டங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறேன். பேஸ்புக் மூலமும் பல நண்பர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

எனக்கென்று ஒரு தொழிலை உருவாக்கிக் கொண்ட நம்பிக்கையோடு, நான் ஏற்கெனவே பகுதி நேரமாக செயல்பட்டுவந்த குக்கூ அமைப்பின் செயல்பாடுகளில் தற்போது முழு மனதோடு ஈடுபட முடிகிறது. அதைவிடவும் முக்கியமாக இப்போது குழந்தைகளை சந்திக்கச் செல்கையில் கை நிறைய சுவையான கடலை மிட்டாய்களைச் கொண்டு செல்ல முடிகிறது என்பதும் நிறைவளிக்கிறது என்றார்.

- நீரை மகேந்திரன் 
maheswaran.p@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article8267028.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.