Jump to content

பெண்கள் எப்போது சுதந்திரமாக இருக்க முடிகிறது ?????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%85%

 

 

பெண்களைப் பொறுத்த மட்டில் பிறந்த நாள் முதற்கொண்டு வளரும் நாளெல்லாம் பெற்றவரின் கட்டுப்பாட்டின் கீழும், அதன்பின் கணவரின் ஆளுமையின் கீழும் அவர் சார்ந்த மாமனார் மாமியார் போன்றவர்களுக்குப் பயந்தபடியும் பின்னர் பிள்ளைகளுக்குப் பயந்து அல்லது அவர்கள் விருப்பப்படி நடந்து ........தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால்  நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ????

 

பலர் இறக்கும் வரை அப்படியே ஆசைகளற்று வாழ்ந்துவிட்டுப் போகின்றனர். சிலருக்கு அதிட்டம் வாய்கிறது கணவனுடன் இருக்கும்போதே சுதந்திரமாக வாழ.

 

பல்வேறுபட்ட அடினைத்தனங்கள் நிரம்பியது எமது வாழ்வியலும். நான் திருமணத்தைக் குறைகூறவில்லை என்பதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். அத்தோடு குடும்ப அமைப்பையோ அன்றி எங்கள் கலாச்சாரத்தையோகூடக் குறைத்து மதிப்பிடவோ கேலி செய்யவோ இல்லை. அதை மீறி ஒரு பெண்ணானவள் தான் சுதந்திரமானவளாக எப்போது உணர்கிறாள் என்பதே கேள்வி. 

 

ஆண்களே அதிகம் உள்ள களத்தில் இப்படியான பதிவு வரவேற்பைப் பெறாது தான்.  இருந்தாலும் சகாரா, தமிழினி, கண்மணியக்கா, நிலா அக்கா, மீனா, மீரா, செவ்வந்தி,யாயினி இன்னும் எப்பவாவது வந்து எழுதும் பெண் உறவுகள் ..... வந்து துணிவுடன் எழுதுங்கள். 

 

அதற்காக ஆண்கள் வராமல் விட்டுவிட வேண்டாம். உங்கள் கருத்தும் மிகமிக முக்கியம் :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொய்யால இது நாங்க கேட்கவேண்டிய கேள்வி

 

சரி முதல்ல இதுக்கு எழுதுங்கோ அடுத்தது ஆண்களுக்கு வருவம் :D

 

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன்.. பல பெண்களுக்கு யாருக்கு கீழயாவது பணிந்து வாழுறதுதான் கூடப் பிடிச்சிருக்கு எண்டு.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி நீங்களே உங்களுக்குள்ள நினைச்சுக்கொண்டு பெண்களை நிமிரவே விட்டிடாதேங்கோ. பெண்களை விட்டுவிட்டால் ஆண்களுக்குக் கடைசி காலத்தில் தொண்டு செய்யக் கட்டாயம் பெண்கள் தேவைதானே . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்மா, புரிந்துணர்வுடன் கூடிய கணவன் அமைந்தால், நினைச்ச நேரம் நகை, புடவை, அம்மா வீடு, கொஞ்சம் அப்பாவியா இருந்தால் பரமசிவன் தலையில் ஒளிரும் அம்மணி மாதிரியே ஆளுமையுடன் தானே இருக்கிறீர்கள்..? போதாக்குறைக்கு பிள்ளைகளின் முழு ஆதரவும் உங்களுக்குத்தானே..?

சில 'மென்டல் கேஸ்'கள் கணவனாக வாய்த்துவிட்டால், பெண்களின் கதி அதோகதிதான்..! :(

( மேற்கூறியவை அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும்! :) )

 

'சுதந்திரம்' என்பது ஒருவருக்கொருவர் அடுத்தவரின் உணர்வுகளை மதித்து, விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது.
 

Link to comment
Share on other sites

கல்யாணத்திற்கு முன்பும் சுதந்திரமாய்த் தான் இருந்தன் ஆனா கல்யாணத்திற்கு பின்பு தான் அதிக சுதந்திரமாக இருக்க முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலே எவ்விதத்திலும் திருப்தியடையாத இனம் பெண்ணினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீடீரெண்டு கிளம்பி வருவா. ஏதாவது மண்டையால போற பிரச்சனையை தூக்கிப் போட்டு, கிடாய் அறுக்கிற மாதிரி, அறுத்து உங்க எறிஞ்சு போட்டு...

அக்கோய்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவனின் அருகில் இருக்கும்போது.  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் 
யார் வேண்டாமென்றார் ....வாழுங்கோ ஆயுள் இருக்கும் வரை சுதந்திரமாக வாழுங்கோ ....
ஏன் கல்யாணம் ....பிள்ளை குட்டி என்று உங்களை நீங்களே  சிறை படுத்துகிறீர்கள் ....

கல்யாணம் பேசி வருபவர்களுக்கும் ,பின்னாலை  அலைபவர்களுக்கும் துடைப்பத்தாலை நாலு விட்டீங்கோ என்றால் அடுத்தமுறை உங்கட பக்கம் தலை வைச்சு கூட படுக்கமாட்டினம் .
பெண்ணிற்க்காக ஆண்கள் வாயால் வீணி வடிய பின்னுக்கு திரிந்த காலம் எல்லாம் அந்தக்காலம் ....
இப்போ என்னால் உனக்கென்ன இலாபம் ....உன்னால் எனக்கென இலாபம் அவ்வளவுதான் 
ஊரிட்க்கு வந்து பாருங்கோ வரிசையில் நிக்கினம் முதிர்கன்னிகள் (சுதந்திரப்பறவைகள்) .....மாப்பிள்ளைகள் தான் இல்லை

 

ஏன் ஊரில் நாங்கள் இல்லை வீட்டாலை போராட்டம் வலுத்து பாழும்கிணற்றில் தள்ளப்படும் வரை தாங்கிப்பிடித்து கொண்டு தானே இருக்கிறம் (இப்பவே தொடங்கிட்டு வீட்டார் போகுமிடமெல்லாம் என்ன ....மகனை இப்படியே வைத்திருப்பது தானா ...ஒன்றும் தேடவில்லையா ...? ஆனால் இதையெல்லாம் கதைக்க தொடங்குவதும் உங்கள் பெண்கள் (சுதந்திரம் பறிபோனவர்கள்) தான் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நல்லெண்ணமோ தெரியவில்லை )
ஊரில ஒரு முதிர்கன்னி தெருவில போனாலே கூடியிருந்து அவளுக்கு என்ன குறையிருக்கும் என்று ஒரு வைத்தியர் கணக்காக X-Ray மட்டும் தான் செய்யவில்லை எனும் அளவுக்கு  ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடாத்துவதும் உங்கள் சுதந்திரம் பறிபோன பெண்கள் தான் 
(ஒருவேளை இதெல்லாம் கதைக்கும் அளவுக்கு உங்களுக்கு அதிக சுதந்திரம் தந்துவிட்டோமோ ....?)

என்ன எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குறை (நோய்,நொடியிலும் எங்களால் தனியே நின்று பிடிக்க முடியும்)
ஆனால் மேலே போயிட்டோம் என்றால் பிணத்தை இழுத்துக்கொண்டு போய் அடக்க நாலு பேர் வேண்டுமே என்பதுதான் 
அது இருந்தால் வாழ்க்கை பூராக நாங்களும் சுதந்திரமாக இருக்க தயார் ....உங்கள் சுதந்திரத்தையும் பாதுகாக்க தயார் 

இப்படியே சுதந்திர வேட்கை அதிகரித்தால் தனிப்பிணங்களும் அதிகரித்துபோய்விடும் .....கவனம் அக்கோய்

என்று தணியும் இந்த சுதந்திரத்தாகம் ........? :D  :D   :D 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுதந்திரம் பத்தி கதைக்க முன்னர் ஒருகணம், போனவாரம் பாகிஸ்தானில் கணவனுக்கு சொல்லி அனுமதி பெறாமல் வீட்டுக்கு வெளியால போன பெண்  உயிருடன்  கொளுத்தப் பட்டார் என்ற நிலைமையில் வாழும் பெண்களை மனதில் கொண்டு, நம்ம சுதந்திரம் என்ன நிலைமையில் இருக்குது எண்டு சொல்லுங்கோவன் அக்கோய்... :o
 
இது ஒரு வழமையான நிகழ்வு. 2600 பேர் வரை கடந்த வருடம் கொலை செய்யப் பட்டு இருக்கிறார்கள். 
 
நமது சுதந்திரத்தை, அவர்களது நிலைமையுடன் ஒப்பிடாவிடில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்காது.
 
உந்த படத்தில நீங்கள் இல்லை போல...  :icon_idea:
 
படக்காரர் குறைப் பட மாட்டினமோ ?   :rolleyes:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கோ

பெண்ணுக்கோ

சுதந்திரம் வேறுபாடுதான்...

அதேநேரம் அது காலம்

பருவம்

பொறுப்பு

சார்ந்து வேறு படும்...

 

இதை இருசாராரும் ஒவ்வொரு நிலையிலும்  இருந்து பார்க்கணும்

உதாரணமாக சுயநலத்தை பெரிதாக்கி சுதந்திரமாக வாழவிரும்புபவர்கள்

திருமணம் என்ற பந்தத்தை தவிர்ப்பது நல்லது

திருமணம் என்ற பந்தம் பல கட்டுப்பாடுகளையும்

ஒழுங்குகளையும் நெறிகளையும் கொண்டது

அதை சுதந்திரம் மறுக்கப்பட்டதாக சிலர் திருமணத்தின் பின் நினைக்கத்தொடங்குவது தான் 

எம்மவரின் பல குடும்ப சிக்கல்களுக்குக்காரணம்....

 

பிரான்சில் நகரசபைகளில் நடைபெறும் திருமணப்பதிவுகளுக்கு சென்றதுண்டு

அன்றீலிருந்து தான் எத்தனை கட்டுப்பாடுகள் போடப்படகின்றன என்பதை புரிந்து கொண்டதுண்டு

எனது திரமணத்திலும் ஐயர் கனக்க சொன்னவர்தான்

ஆனால் விளங்காத மொழியில்.... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


எங்கு அடிமைத்தனம் கையோங்கி நிற்கின்றதோ அங்கு சுதந்திரம் தேவைப்படுகின்றது.

யார் அடக்கப்படுகின்றார்களொ அவர்கள் அடக்குமுறைக்கு எதிராகப் போரிட்டுப்

புரட்சி செய்து தம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.
அடிமைப் பெண்களே  போராடுங்கள். இழந்ததாக நினைக்கும் உங்கள் உரிமைகளை 

நீங்களே போராடிப்பெற்றுக்கொள்ளுங்கள்.


உரிமைகளும் உணர்வுகளும் மதிக்கப்படும் இடத்தில் சுதந்திரம் நிலைத்து நிற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்மா, புரிந்துணர்வுடன் கூடிய கணவன் அமைந்தால், நினைச்ச நேரம் நகை, புடவை, அம்மா வீடு, கொஞ்சம் அப்பாவியா இருந்தால் பரமசிவன் தலையில் ஒளிரும் அம்மணி மாதிரியே ஆளுமையுடன் தானே இருக்கிறீர்கள்..? போதாக்குறைக்கு பிள்ளைகளின் முழு ஆதரவும் உங்களுக்குத்தானே..?

சில 'மென்டல் கேஸ்'கள் கணவனாக வாய்த்துவிட்டால், பெண்களின் கதி அதோகதிதான்..! :(

( மேற்கூறியவை அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும்! :) )

 

'சுதந்திரம்' என்பது ஒருவருக்கொருவர் அடுத்தவரின் உணர்வுகளை மதித்து, விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது.

 

 

நான் கூறும் சுதந்திரம் அது அல்ல அண்ணா :D  என்னதான் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று கூறினாலும் சமையல் - பிள்ளைக்குக் கணவனுக்கு பிடித்தது என்று தனக்காக எதுவும் செய்து உண்ணக் கூட பல பெண்களுக்கு முடிவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு .அதுபற்றி .......

 

கல்யாணத்திற்கு முன்பும் சுதந்திரமாய்த் தான் இருந்தன் ஆனா கல்யாணத்திற்கு பின்பு தான் அதிக சுதந்திரமாக இருக்க முடிகிறது.

 

எதை நீங்கள் சுதந்திரம் என்று எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா செவ்வந்தி ???

 

உலகிலே எவ்விதத்திலும் திருப்தியடையாத இனம் பெண்ணினம்.

 

அது கொஞ்சம் தான் குமாரசாமி. கனபேர் எதுக்குமே ஆசைப்படாமல் கணவன் பிள்ளைகளுக்குப் பிடித்ததை உண்டு அவர்கள் விருப்பத்துக்கு உடுத்து தமக்கு என்று எந்தவித ஆசையும் இல்லாமல் இருக்கிறார்கள் தானே. அவை பற்றிக் கதைப்பம் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் 

யார் வேண்டாமென்றார் ....வாழுங்கோ ஆயுள் இருக்கும் வரை சுதந்திரமாக வாழுங்கோ ....

ஏன் கல்யாணம் ....பிள்ளை குட்டி என்று உங்களை நீங்களே  சிறை படுத்துகிறீர்கள் ....

கல்யாணம் பேசி வருபவர்களுக்கும் ,பின்னாலை  அலைபவர்களுக்கும் துடைப்பத்தாலை நாலு விட்டீங்கோ என்றால் அடுத்தமுறை உங்கட பக்கம் தலை வைச்சு கூட படுக்கமாட்டினம் .

பெண்ணிற்க்காக ஆண்கள் வாயால் வீணி வடிய பின்னுக்கு திரிந்த காலம் எல்லாம் அந்தக்காலம் ....

இப்போ என்னால் உனக்கென்ன இலாபம் ....உன்னால் எனக்கென இலாபம் அவ்வளவுதான் 

ஊரிட்க்கு வந்து பாருங்கோ வரிசையில் நிக்கினம் முதிர்கன்னிகள் (சுதந்திரப்பறவைகள்) .....மாப்பிள்ளைகள் தான் இல்லை

 

ஏன் ஊரில் நாங்கள் இல்லை வீட்டாலை போராட்டம் வலுத்து பாழும்கிணற்றில் தள்ளப்படும் வரை தாங்கிப்பிடித்து கொண்டு தானே இருக்கிறம் (இப்பவே தொடங்கிட்டு வீட்டார் போகுமிடமெல்லாம் என்ன ....மகனை இப்படியே வைத்திருப்பது தானா ...ஒன்றும் தேடவில்லையா ...? ஆனால் இதையெல்லாம் கதைக்க தொடங்குவதும் உங்கள் பெண்கள் (சுதந்திரம் பறிபோனவர்கள்) தான் தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் நல்லெண்ணமோ தெரியவில்லை )

ஊரில ஒரு முதிர்கன்னி தெருவில போனாலே கூடியிருந்து அவளுக்கு என்ன குறையிருக்கும் என்று ஒரு வைத்தியர் கணக்காக X-Ray மட்டும் தான் செய்யவில்லை எனும் அளவுக்கு  ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடாத்துவதும் உங்கள் சுதந்திரம் பறிபோன பெண்கள் தான் 

(ஒருவேளை இதெல்லாம் கதைக்கும் அளவுக்கு உங்களுக்கு அதிக சுதந்திரம் தந்துவிட்டோமோ ....?)

என்ன எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குறை (நோய்,நொடியிலும் எங்களால் தனியே நின்று பிடிக்க முடியும்)

ஆனால் மேலே போயிட்டோம் என்றால் பிணத்தை இழுத்துக்கொண்டு போய் அடக்க நாலு பேர் வேண்டுமே என்பதுதான் 

அது இருந்தால் வாழ்க்கை பூராக நாங்களும் சுதந்திரமாக இருக்க தயார் ....உங்கள் சுதந்திரத்தையும் பாதுகாக்க தயார் 

இப்படியே சுதந்திர வேட்கை அதிகரித்தால் தனிப்பிணங்களும் அதிகரித்துபோய்விடும் .....கவனம் அக்கோய்

என்று தணியும் இந்த சுதந்திரத்தாகம் ........? :D  :D   :D 

 

 

நீங்கள் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் அன்று பெண்களைப் பற்றித் தெரியாதிருக்கிறீர்கள். அத்தோடு மேலே நான் நீலம் இட்ட பகுதியில் உங்கள் ஆண்திமிர் தான் தெரிகிறது பெண்களுக்கான சுதந்திரத்தைத் தருவதற்கு ஆண்கள் யார். ????? பெண்களை அடக்கி வீட்டுள் வைத்திருப்பதனால் அவர்கள் பொழுதுபோகாமல் கதைப்பதை மட்டும் தான் செய்கிறார்கள். வெளியே வேலைக்குச் சென்று ஊர் உலகத்தைப்பர்றித் தெரிந்துகொண்டால் அவர்கள் கதைப்பதற்கும் நேரம் இருக்கப் போவதில்லை.

 

நோய் நொடி சின்னதாக வந்தாலும் பெண்தான் உங்களுக்கு சமையல் சாப்பாடு எல்லாம் தரவேண்டும். பெண்களுக்கு வந்தாலும் அவர்களே நோயுடன் அல்லாடியபடி இருப்பவர்க்கும் செய்து தானும் உண்ண வேண்டும். வெளிநாடுகளில் உள்ள பல ஆண்கள் இப்ப இப்ப மனைவியருக்கு உதவுகின்றனர். அல்லது கடைகளில் எடுத்து  உண்கின்றனர். ஆனால் ஊரில் அடுப்பில் கறிசோறு எல்லாம் மனைவிக்கு வருத்தம் என்று தாம் செய்து கொடுப்பார்களா ஆண்கள் ??????

 

கலியாணம் கட்டவேண்டும் என்றதற்காக குடிகாரனையோ அல்லது வேலை வெட்டி இல்லாதவரையோ கட்டிவிட்டு வாழ்நாள் பூராக துன்பம் கொள்வதிலும் கன்னியாக வாழ்தல் நன்று என்று அவர்கள் இப்போதாவது அறிகின்றனர். முதிர் கண்ணியாகாது இளம் கன்னியாக இருந்தால் மாத்திரம் நீ மட்டும் வா இணைந்து வாழ்வோம் என்றா அழைக்கிறீர்கள். உனக்கும் எனக்கும் சேர்த்து சாகும்வரை சாப்பிட காசுபணம், வீடுவாசல், நகை எல்லாம் கொண்டுதானே வரச்சொல்கிரீர்கள் ?????

 

 

 

சுதந்திரம் பத்தி கதைக்க முன்னர் ஒருகணம், போனவாரம் பாகிஸ்தானில் கணவனுக்கு சொல்லி அனுமதி பெறாமல் வீட்டுக்கு வெளியால போன பெண்  உயிருடன்  கொளுத்தப் பட்டார் என்ற நிலைமையில் வாழும் பெண்களை மனதில் கொண்டு, நம்ம சுதந்திரம் என்ன நிலைமையில் இருக்குது எண்டு சொல்லுங்கோவன் அக்கோய்... :o
 
இது ஒரு வழமையான நிகழ்வு. 2600 பேர் வரை கடந்த வருடம் கொலை செய்யப் பட்டு இருக்கிறார்கள். 
 
நமது சுதந்திரத்தை, அவர்களது நிலைமையுடன் ஒப்பிடாவிடில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்காது.
 
உந்த படத்தில நீங்கள் இல்லை போல...  :icon_idea:
 
படக்காரர் குறைப் பட மாட்டினமோ ?   :rolleyes:

 

 

படம் கூகிளில் இருந்தது என்றபடியால் என்னைக் குறை கூற முடியாது நாதமுனி.

 

நான் பேசுவது எங்கள் ஈழத்துப் பெண்களைப் பற்றித்தான். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொருவரையரைகள் உண்டு. அவர்கள் சுதந்திரத்துக்காகப் போராடவில்லை நான். அரேபியப் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் போல் எமக்கு இல்லைத்தான். அதற்காக அவர்களுடன் எம்மை ஒப்பிட முடியாது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணுக்கோ

பெண்ணுக்கோ

சுதந்திரம் வேறுபாடுதான்...

அதேநேரம் அது காலம்

பருவம்

பொறுப்பு

சார்ந்து வேறு படும்...

 

இதை இருசாராரும் ஒவ்வொரு நிலையிலும்  இருந்து பார்க்கணும்

உதாரணமாக சுயநலத்தை பெரிதாக்கி சுதந்திரமாக வாழவிரும்புபவர்கள்

திருமணம் என்ற பந்தத்தை தவிர்ப்பது நல்லது

திருமணம் என்ற பந்தம் பல கட்டுப்பாடுகளையும்

ஒழுங்குகளையும் நெறிகளையும் கொண்டது

அதை சுதந்திரம் மறுக்கப்பட்டதாக சிலர் திருமணத்தின் பின் நினைக்கத்தொடங்குவது தான் 

எம்மவரின் பல குடும்ப சிக்கல்களுக்குக்காரணம்....

 

பிரான்சில் நகரசபைகளில் நடைபெறும் திருமணப்பதிவுகளுக்கு சென்றதுண்டு

அன்றீலிருந்து தான் எத்தனை கட்டுப்பாடுகள் போடப்படகின்றன என்பதை புரிந்து கொண்டதுண்டு

எனது திரமணத்திலும் ஐயர் கனக்க சொன்னவர்தான்

ஆனால் விளங்காத மொழியில்.... :(

 

அண்ணா நான் எமது கலாச்சாரத்தையோ அன்றி திருமண குடும்ப உறவையோ கொச்சைப்படுத்தவில்லை. அதற்கும் மேலாக ஒரு பெண் தான் சுதந்திரமானவளாக எப்போது உணர்கிறாள் என்பதே.

 

எங்கு அடிமைத்தனம் கையோங்கி நிற்கின்றதோ அங்கு சுதந்திரம் தேவைப்படுகின்றது.

யார் அடக்கப்படுகின்றார்களொ அவர்கள் அடக்குமுறைக்கு எதிராகப் போரிட்டுப்

புரட்சி செய்து தம் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அடிமைப் பெண்களே  போராடுங்கள். இழந்ததாக நினைக்கும் உங்கள் உரிமைகளை 

நீங்களே போராடிப்பெற்றுக்கொள்ளுங்கள்.

உரிமைகளும் உணர்வுகளும் மதிக்கப்படும் இடத்தில் சுதந்திரம் நிலைத்து நிற்கும்.

 

வாத்தியாருக்கும் விளங்கவில்லையா ??? நான் கூறியது பெறுதல் தொடர்பானது அல்ல உணர்தல் தொடர்பானது. :D 

 

Link to comment
Share on other sites

 பெற்றோருடன் இருக்கும் பொழுது எமது சமுதாயத்தில் கட்டுப்பாடுகள் கூடத் தானே. அப்படிக் கட்டுப்பாடுகள் நிட்சயம் தேவையும் தான் எம்மை நல்வழிப்படுத்த.  இந்தக் கட்டுப்பாடுகள் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் இல்லை ஆண் பிள்ளைகளுக்கும் இருப்பது தானே (ஒப்பீட்டு அளவில் பெண் பிள்ளைகளுக்குக் கூடவாக இருப்பது.) நாங்களும் எமது பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் தானே வளர்க்கின்றோம். (சில பெற்றோர்கள் விதி விலக்கு) 

 

எனக்குத் திருமணத்துக்குப் பிறகு சுதந்திரம் கூட என்றே சொல்லலாம். அதுக்காக 100% என்று சொல்ல மாட்டன். என் கணவரும்  என்னைச் சில விடயங்களில் கட்டுப்படுத்திறவர் :D ( நானும் அதை எதிர் பார்க்கிறனான், அப்படி இல்லாட்டி ஒரு ஆரோக்கியமான குடும்பமாய் இருக்காது).  அதே போல நானும் அவரைச் சில விடயங்களில் கட்டுப்படுத்திறனான். (நிட்சயமாக)  :rolleyes:  :D .

 

அதுக்காக நான் சொல்ல முடியாது நான் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்று. அப்படி நான் சொல்லின் எனது கணவரும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கவில்லைத் தானே. எல்லாமே மனம் தான். :D 

 

எனக்கு மாமியாரின் கட்டுப்பாடு எதுவும் கிடையாது,  நான் அவவுடன் இருந்தது இல்லை. இருந்திருந்தால் எப்படி இருந்திருக்குமோ தெரியாது :lol: . 

 

எது எப்படியாயினும் தமிழ் குடும்பங்களில் பெரும்பாலான கணவர்மார் தமது மனைவிமாருக்குப் படு பயம். முதலில் அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்போமே சுமே  :D  :lol: 

 

 

 

 

 

 


எங்கையும் மதுரை ஆட்சியே!! (பெரும்பாலான வீடுகளில்) .... :D  :lol:  :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கோய் 
முதலில் நீங்க தெளிவாக குளம்பியுள்ளீர்கள் என்று மட்டும் தெரிகிறது 

யாரும் இங்கே உணர்ச்சிவசப்படவில்லை 
 

 

 

பெண்களுக்கான சுதந்திரத்தைத் தருவதற்கு ஆண்கள் யார். ????? 

இதைத்தானே நாங்களும் கூறுகிறோம் .....உங்களுக்கு தருவதற்கு நாங்கள் யார் அது உங்களிடமே தான் உள்ளது 
சுதந்திரம் கூடி நீங்கள் வருவித்துகொள்ளும் பிரச்சினைகளுக்கு பிறகு ஆண்களை காரணம் காட்டாதீர்கள் 

ஒரு காலத்தில் கொழும்பில் பட்டாசு வெடித்தாலும் புலிகள் தான் காரணம் என்று எடுத்துவிட்டது போல 
இப்போது பெண்களுக்கு தும்மல் ,இருமல் வந்தாலும் ஆண்கள் தான் காரணம் என்று எல்லாவற்றயும் ஆண்கள் மீதே போட்டு பழகிவிட்டீர்கள்(காரணம்: அளவுக்கதிகமாக அதிகரித்து போய்விட்ட பெண்ணியம் உங்கள் தவறுகளையே நீங்கள் ஏற்றுகொள்ள அனுமதிக்குதில்லை ) . நீங்கள் ஊர் வம்பளப்பதற்கும் ஆண்கள் தான் காரணம் .....நீங்கள் வேலைக்கு போய் அங்கே ஏதாவது ஏடாகூடமாகி போனால் அதற்கும் ஆண்கள் தான் காரணம் (பணப்பேய் ...பொண்டாட்டிய கட்டாயம் வேலைக்கு அனுப்பத்தான் வேண்டுமா...?)....சரி நீயும் வேண்டாம் இந்த வாழ்க்கையும் வேண்டாம் என்று முடிவெடுத்தால் (ஒரு பெண்ணை ஒழுங்காக வச்சி வாழத்துப்பில்லாதவன்)
 

அக்கோய் வாழ்க்கையில் எல்லாமே உள்ளது ...ஆனால் Reverse Button மட்டும் இல்லை (பெண்கள் தவறு செய்தால் இயற்கையே காட்டிகொடுத்துவிடும் படைப்பிட்க்கும்  ஆண்கள் காரணம் இல்லை ...கடவுளின் கொலரை பிடியுங்கள் )
அதனால் தான் பெண்களை கவனமாய் பாதுகாக்கின்றோமே தவிர சுதந்திரத்தை பறிக்கவில்லை 
நடுஇரவில் வெளியே செல்லுங்கள் எத்தனை காமுகர் வழிமறித்தாலும் தனியே  நீங்கள் சமாளித்துக்காட்டுங்கள் 
பிறகென்ன இரவு மூன்று மணிக்கும் நீங்கள் தனியே செல்லலாம் ( காமுகர்கள் ஆண்கள் தானே என்று நீங்கள் கூறலாம்...எங்களுக்கு முக்கியம் உங்களை பாதுகாப்பது காமுகர்கள் பற்றிய ஆராய்ச்சியல்ல)

இந்த உலகில் ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் நீங்கள் சொல்வது போல் பூசை செய்து விரதம் இருந்து  தவம் கிடந்தது திருமணம் செய்யலாம் ...பல்லாயிரக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் உள்ளனர் ...எவர் எங்களது WAVE LENGTH இற்கு செட் ஆகிறானங்களோ அவர்களை நாங்கள் துணையாக தெரிந்தெடுப்போம் (Finally its subjective not objective) அதை தீர்மானிக்கும் சுதந்திரமும் உங்களிடமே உள்ளது  ....அதிக சுதந்திரம் தேவையானவர் உங்களிட லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து தொலையுங்கள் ...கூழிட்கும் ஆசை மீசைக்கும் ஆசை விளையாட்டு இங்கே சரிப்படாது அக்கோய்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாத்தியாருக்கும் விளங்கவில்லையா ??? நான் கூறியது பெறுதல் தொடர்பானது அல்ல உணர்தல் தொடர்பானது. :D 

 

 

இஞ்சை பாருங்கோ திரும்பவும் தொடங்கீட்டா. :o

வாத்திக்கும் விளங்கேல்லையாம்  

நீங்களும் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கேட்ட கேள்வி இதுதானே ?

தனக்குப் பிடித்தவாறு எப்போது அவளால்  நின்மதியாக சந்தோசமாக வாழ முடிகிறது ????

இதற்கு நான் எழுதிய  பதில்  உங்களுக்கும் விளங்கவில்லையோ ??? :D:lol: :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அது கொஞ்சம் தான் குமாரசாமி. கனபேர் எதுக்குமே ஆசைப்படாமல் கணவன் பிள்ளைகளுக்குப் பிடித்ததை உண்டு அவர்கள் விருப்பத்துக்கு உடுத்து தமக்கு என்று எந்தவித ஆசையும் இல்லாமல் இருக்கிறார்கள் தானே. அவை பற்றிக் கதைப்பம் :D

 

 

ஒருவர் அல்லது ஒருத்தி தன் குடும்பத்திற்க்காக ஆசாபாசங்களை  துறப்பதற்கு பெயர் சுதந்திரமல்ல....  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூறும் சுதந்திரம் அது அல்ல அண்ணா :D  என்னதான் பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று கூறினாலும் சமையல் - பிள்ளைக்குக் கணவனுக்கு பிடித்தது என்று தனக்காக எதுவும் செய்து உண்ணக் கூட பல பெண்களுக்கு முடிவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு .அதுபற்றி ...

 

ஓ.. நீங்கள் கவலைப்படுவது, 'விருப்பமான சாப்பாடு' பற்றி மட்டும்தானா?  :o

 

நான் என்னவோ ஏதோவென நினைத்துவிட்டேன்.! :lol:

 

எளிமையான வரிகளில், எவ்வளவு சிறப்பாக கீழே சொல்லியிருக்கிறார்கள், நீங்கள் என்னவோ சுதந்திரம், தந்திரம், இயந்திரம் என பேசிக்கொண்டு நேரத்தை வீணடிக்கிறீர்களே..! :D

 

 

http://youtu.be/IbS6KHTlhsM

 

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்

இயற்கை மணமிருக்கும் பருவத்திலே..

பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே..

அணத்து வளர்ப்பவளும் தாயல்லவோ..?

அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ..?

கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்

இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ..?

பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ..?

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா..?

ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா..?

இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்

செல்வம் சிரித்தபடி அமுதிடுமா..? :o

எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா சுதந்திரம் என்பது இருக்கும் நாட்டை பொறுத்தே பெண்களுக்கு அமைகிறது .பாவம் பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் சிரியா,சவுதி ,கட்டார்  போன்ற நாடுகளில் உள்ள  பெண்களுக்கு  யார் தான் சுதந்திரம்  வாங்கி கொடுப்பது .

அது அந்தந்த நாட்டின் சட்டம் அதே சட்டங்கள் நமது  நாட்டில் கொண்டு வரவேணும் ஒரு காலத்தில் ஆபிரிக்க நாடுகளில் பெண்கள் வயதுக்கு வந்தவுடன் அவர்களின் பிறப்பு.............. முட்கள் வைத்து விடுவார்களாம் அவள் யாருடனும் உறவு வைத்து விடுவாள்  என்பதற்க்காக‌ அப்படி இருக்கு அங்கு சுதந்திரம் .

ஆனா ஒரு வார்த்தை ,அல்லது ஒரு அடி அடித்தால் கூட இங்க பெண்கள் எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்பார்கள் .உடனே விவாகரத்து .இப்படிதானே சுதந்திரம் பெறுகிறார்கள்

Link to comment
Share on other sites

எதை நீங்கள் சுதந்திரம் என்று எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா செவ்வந்தி ???

பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது எனக்கான சுதந்திரம் மறுக்க பட்டதா எந்த சந்தர்ப்பத்திலும் நான் உணர்ந்ததில்லை . சில கட்டுப்பாடுகள் என்க்கு இருந்தது தான் அதை நான் தனிமனித ஒழுக்கத்தை பேணுவதற்கான கட்டுபாடுகளாகத் தான் பார்க்கின்றேன் . எனக்கான கல்வியை தந்தார்கள் . சுதந்திரமாய்த் முடிவெடுக்க கூடிய தையிரியத்தை எனக்குள் உருவாக்கியிருந்தார்கள்.

கல்யாணத்திற்கு பிறகும் எனக்கு எந்த துறையில் விருப்பமோ அதை எனது கணவர் என்னை படிக்க வைச்சார். ஆனா நான் எப்பவுமே எனது கணவரை சமையலறை வேலை செய்ய அனுமதித்ததில்லை. எனது பிள்ளைகளுக்கு பிடித்தது கணவனுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்கிறதில் எனக்கு ஒரு வித சந்தோசம் தான் கிடைக்கிறது . எனது அன்பை வெளிப்படுத்திற ஒரு வழியாகத்தான் இதைப்பார்கிறன். இதையெல்லாம் நான் தியாகம் என்றோ சுதந்திர மறுப்பு என்றோ சொல்லமாட்டன். அதற்காக நான் வீட்டு வேலையை மட்டும் செய்திட்டு வீட்டிலேயே இருக்கிற பெண்ணும் இல்லை. வேலை செய்யிறன் , ஜிம்மிற்கு போவன் , நீச்சல் வகுப்பு போவன் அதோட வீட்டையும் கவனிக்கிறன். இதில் எதிலும் எனது சுதந்திரம் மறுக்க பட்டதாக உணரவில்லை.

Link to comment
Share on other sites

பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது எனக்கான சுதந்திரம் மறுக்க பட்டதா எந்த சந்தர்ப்பத்திலும் நான் உணர்ந்ததில்லை . சில கட்டுப்பாடுகள் என்க்கு இருந்தது தான் அதை நான் தனிமனித ஒழுக்கத்தை பேணுவதற்கான கட்டுபாடுகளாகத் தான் பார்க்கின்றேன் . எனக்கான கல்வியை தந்தார்கள் . சுதந்திரமாய்த் முடிவெடுக்க கூடிய தையிரியத்தை எனக்குள் உருவாக்கியிருந்தார்கள்.

கல்யாணத்திற்கு பிறகும் எனக்கு எந்த துறையில் விருப்பமோ அதை எனது கணவர் என்னை படிக்க வைச்சார். ஆனா நான் எப்பவுமே எனது கணவரை சமையலறை வேலை செய்ய அனுமதித்ததில்லை. எனது பிள்ளைகளுக்கு பிடித்தது கணவனுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்கிறதில் எனக்கு ஒரு வித சந்தோசம் தான் கிடைக்கிறது . எனது அன்பை வெளிப்படுத்திற ஒரு வழியாகத்தான் இதைப்பார்கிறன். இதையெல்லாம் நான் தியாகம் என்றோ சுதந்திர மறுப்பு என்றோ சொல்லமாட்டன். அதற்காக நான் வீட்டு வேலையை மட்டும் செய்திட்டு வீட்டிலேயே இருக்கிற பெண்ணும் இல்லை. வேலை செய்யிறன் , ஜிம்மிற்கு போவன் , நீச்சல் வகுப்பு போவன் அதோட வீட்டையும் கவனிக்கிறன். இதில் எதிலும் எனது சுதந்திரம் மறுக்க பட்டதாக உணரவில்லை.

நீங்கள் இப்பிடி சொல்லுறீங்கள்.. ஆனால் உங்களை மூளை சலவை செய்துபோட்டாங்கள் என்று சுமே அக்கா சொல்லப்போறா.. :unsure: எதுக்கும் நான் Smiley_running.gif

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.