Jump to content

ஆவிகளும் நாங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

aav_zpsu3ejdg3o.jpg

 

ஆவிகளிலையும் பலவகை இருக்கு  :o

 

இந்த ஆவிகளை எல்லாம் பாக்கப் பாவமாக் கிடக்கு. குமாரசாமி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

anger2-747499.jpg

 

அடுத்த  நாள் அம்மா எங்களுடன் வந்து படுக்கப்போவதாகக் கூறிவிட்டுத் தம்பியின் குடும்பதை அப்பாவின் அறையுள் தூங்கும்படி கூற தம்பியும் பிள்ளைகளும் முதலிலேயே சென்றுவிட்டனர். தம்பியின் மனைவி எம்முடன் கதைத்துவிட்டுப் போனதால் அப்பா தூங்கிய பக்கம் படுக்கவேண்டியதாகிவிட்டது. மேல்மாடியில் என் தங்கை குடும்பமும் என்கணவர் மற்றும் இன்னும் ஒரு மாமா ஆகியோர் தூங்க நான் நின்மதியாக அனைவருக்கும் நடுவில் தூங்கிப்போனேன்.

 

எல்லோரும் தூங்கியிருபார்கள் போல திடீரென விடு விடு ஐயோ என பெரிதாக யாரோ கத்தும் சத்தம். இம்முறை நானே முதலில் அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திடிக்கிடலோடு மற்ற எல்லாரையும் இருட்டுக்குள் தட்டி எழுப்ப, எல்லோரும் எழும்பி எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தால் மேல்மாடியில் இருந்து வருகிறது.

 

எனக்கு மேல்மாடிக்குப் போகப் பயமாக இருக்க, என்ன பிரச்சனையோ?? ஆராவது போய்ப் பாருங்கோ என்றால் எல்லோரும் நீபோ நீ போ என்று மற்றவரை அனுப்புவதில் குறியாக இருக்க படுத்திருந்த தம்பி என்ன பிரச்சனை.?? நித்திரை கொள்ள விடுறியளே என அலுத்துக்கொண்டு மின்விளக்கைப் போட்டுவிட்டுப் படிகளில் ஏற என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் மற்றவர் ஒருவிதப் பயத்துடன் பார்த்துக்கொண்டு நிற்க, நானும் பாத்திட்டு  வாறன் என்றபடி அண்ணியும் மேலே போக நானும் துணிவை வரவளைத்துக்கொண்டு படிகளில் ஏற முற்பட படி விளக்கு அணைந்துவிட்டது. உடனே திரும்ப ஓடிவந்து மற்றவர்களுடன் நிற்க்க, அண்ணி இடையில் நின்றுகொண்டு நிவேதா விளக்கைப் போடு என்று கத்துகிறார்.

 

நான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. தம்பியின் மனைவி சென்று விளக்கைப் போட்டாரே தவிர மேலே படிகளில் செல்ல முற்படவில்லை. நான் கடைக்கண்ணால் திரும்பி மணிக்கூட்டைப் பார்க்க நேரம் ஒன்று நாற்பது. யாரோ படிகளில் வருவது தெரிய பார்த்தால் தம்பி பின்னால் அண்ணி. என்னடா யார் கத்தியது  என்று நான் கேட்கிறேன். மாமாதான் கத்தினவர். என்ன ஏதென்று சொல்லுறார் இல்லை. எல்லாரும் போய்ப் படுங்கோ. விடியக் கதைப்பம் என்று கூற வேறு  வழியின்றி தூங்க முயல்கிறேன்.

 

காலையில் எழுந்து கீழே வந்த மாமாவின் முகத்தில் சிரிப்பு இல்லை. அவருக்கு 65 வயது. மிகத் துணிவானவர். என்ன மாமா நடந்தது என்று நான் கேட்டேன்.

இரவு என் கணவர் இடதுபக்கமும் தங்கையின் கணவர் வலதுபக்கமும் நடுவே மாமாவும் படுத்துத் தூங்கியுள்ளனர். வலது பக்கக் காலை பாதத்தில் இருந்து யாரோ தடவியதுபோல் இருக்க, தங்கையின் கணவன் தான் தூக்கக் கலக்கத்தில் தங்கையின் கால் என்று நினைத்துத் தடவுகிறாரோ என எண்ணியபடி விடு நாடா என்றபடி திரும்பிப் பார்தால் தங்கையின் கணவர் குறட்டைவிட்டபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, மாமாவும் மீண்டும் நேராகப் படுக்க வயிற்றில் பாரம் ஒன்று அழுத்தியபடியே மேல்நகர இவரால் உடலை அசைக்கவே முடியாதபடி பாரம் அழுத்த கைகால்களை அசைக்க எத்தனிக்கிறார் மாமா. முடியாதுபோக பாரம் அழுத்தியபடி இப்ப நெஞ்சிலும் கழுத்திலும் வந்து நிற்க கத்தக் கத்த வார்த்தைகளே வராது தொண்டைக்குள்ளேயே அமுங்க, மாமாவின்  கை இரண்டு மூன்றுதடவை தட்டுப்பட என் கணவர் விளித்து என்ன மாமா என்று கேட்க, கழுத்தின் பாரம் குறைய மாமா ஐயோ விடுவிடு என்று கத்தினதாகச் சொல்ல, நாங்கள் எல்லோரும் சிரிக்கிறோம். உங்களுக்கும் பயம் பிடிச்சிட்டிது என்று என் தம்பி கூற அவருக்குக் கோவம் வருகிறது.

 

உங்களுக்கு விளையாட்டாக் கிடக்கு. சீவன் போப்போகுது என்றே நான் நினைத்துவிட்டேன். நெஞ்சில் ஏறி எதுவோ இருந்துகொண்டு கழுத்தை நெரிக்க ..... எனக்கு இப்பிடி ஒருநாளும் வந்ததில்லை என்றுவிட்டு இருக்க அண்ணி கெட்ட ஆவிகள் இந்த நேரங்களில் யாரின் உடலில் போகப் பாக்கும். நல்லகாலம் மாமா தப்பிவிட்டார் என்று கூற, பூருற ஆவி ஏன் அண்ணி சத்தம் போடாமல் பூராமல் அவற்றை கழுத்தில கை வைச்சது என்று கேட்க, அண்டைக்கு உனக்கு நடந்ததும் அப்ப பொய்யாகத்தான் இருக்கவேணும் என்று என் வாயை அடைக்க நான் ஒன்றும் கூற முடியாது நின்றேன்.

 

 

இன்னும் இருக்கு

Link to comment
Share on other sites

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அவசரப்படுவதே தொழிலாகிவிட்டது கொஞ்ச நாட்களாக.

 

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

 

அப்ப உங்களுக்கு நான் எழுதுவது விளங்கவில்லை என்று அர்த்தம்.  எதுக்கும் ஓட ஓட வாசிக்காது மற்றவர்கள் எழுதியதையும் நான் அதற்கு எழுதியதையும் வாசித்தால் வடிவா விளங்கும் :D அப்பா ஆவியாக வந்தவர் என்றோ வருவார் என்றோ எங்காவது கூறியிருக்கின்றேனா??? அவர் எனக்கு முதலில் அப்பா. அவர் இருக்கும்போதே எப்படி வாழ்ந்தவர் என்பது உங்களிலும் விட எனக்கும் அவருடம் பழகியவர்களுக்கும் தெரியும். என் அப்பாவிடம் அன்பும் மரியாதையும் என்னைவிட மற்றவர்களுக்கு அதிகமாக இருந்துவிட முடியுமா ????

அப்பாவை நீங்கள் ஆவியாகப் பார்ஹத்தால் அது உங்கள் மனதின் கோளாறு

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

 

இதையாவது வாசியுங்கள் விசுகு அண்ணா

 

Link to comment
Share on other sites

எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 

 

 

இருக்கும் இருக்கும் :(

 

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

 

சுற்றித்திரியிர ஆவியை நான் பாக்காமல் சொல்ல ஏலாது முனிவர்

 

Link to comment
Share on other sites

என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி.  :D  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆவி பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கு .

.

..

.

.

.

.

..

.

.

..

.

.

.

..

.

.

இவவை கொண்டுவந்து பாடாவிட்டால் எல்லாம் சரி வரும் .

 

 

 

 

 

 

அவ்ஸ் ல் சூப்பராய் பாடுபவர் 11120540_1614931618723095_68711659985363

சுமோ அக்கா உங்களிற்கு மாத்திரம் பேய் படம் போட தெரியுமோ  நாங்களும் போடுவிம்ல எப்படி நல்ல இருக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி:D  :D

 

 

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

 

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

 

இது நல்ல பிஸ்நெஸ். :lol: யாரின் வீடுகளில் ஆவி வந்தால் என்னைக் கூப்பிடுங்கள் விரட்ட. மிகச் சொற்ப தொகையே அறவிடப்படும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D  :lol:

 

ஐயோ

Link to comment
Share on other sites

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

ஆவி பேய் பிசாசு என்பவை இருக்குது எண்டு நம்புற ஆளுகளுகுதான் இரும்புத்துண்டு. நம்பாத ஆளுகளுக்கு ஒண்டும் தேவை இல்லை. நானும் ஒருக்காலும் இரும்புத்துண்டு பாவிக்கவில்லை. ஆனால், இரும்புத்துண்டு வைத்துக்கோண்டு படுத்தும் ஆவி வந்தால் நான் பொறுப்பு இல்லை. :lol:  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

Link to comment
Share on other sites

ஆவிகள் ஹொலிடே போகுது போல இருக்கு  :D  :D  :D

 

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

 

 

இல்லை, இல்லை கதையை வாசிச்ச எல்லார்ட வீட்டையும் வந்து கதையின் கருத்தை கேட்கப்போறாங்களாம்.

எதுக்கும் எல்லாரும் கதவை இறுக பூட்டி வையுங்கோ . நடு இரவில தான் வருவாங்க .

அது சரி , கதவ பூட்டினாலும் அவங்களால உள்ளே வர முடியுமே தானே ?

Link to comment
Share on other sites

அடபாவிகள்  :D அந்த அப்பாவி ஓட்டை வாய்ப் பிள்ளையை ஆவியாக்கீட்டீர்களே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 06/05/2015 at 0:25 PM, putthan said:

 

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

அட நானே கதை சொல்லுறது எண்டிட்டு மறந்திட்டனே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.