Jump to content

ஆவிகளும் நாங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

aav_zpsu3ejdg3o.jpg

 

ஆவிகளிலையும் பலவகை இருக்கு  :o

 

இந்த ஆவிகளை எல்லாம் பாக்கப் பாவமாக் கிடக்கு. குமாரசாமி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

anger2-747499.jpg

 

அடுத்த  நாள் அம்மா எங்களுடன் வந்து படுக்கப்போவதாகக் கூறிவிட்டுத் தம்பியின் குடும்பதை அப்பாவின் அறையுள் தூங்கும்படி கூற தம்பியும் பிள்ளைகளும் முதலிலேயே சென்றுவிட்டனர். தம்பியின் மனைவி எம்முடன் கதைத்துவிட்டுப் போனதால் அப்பா தூங்கிய பக்கம் படுக்கவேண்டியதாகிவிட்டது. மேல்மாடியில் என் தங்கை குடும்பமும் என்கணவர் மற்றும் இன்னும் ஒரு மாமா ஆகியோர் தூங்க நான் நின்மதியாக அனைவருக்கும் நடுவில் தூங்கிப்போனேன்.

 

எல்லோரும் தூங்கியிருபார்கள் போல திடீரென விடு விடு ஐயோ என பெரிதாக யாரோ கத்தும் சத்தம். இம்முறை நானே முதலில் அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திடிக்கிடலோடு மற்ற எல்லாரையும் இருட்டுக்குள் தட்டி எழுப்ப, எல்லோரும் எழும்பி எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தால் மேல்மாடியில் இருந்து வருகிறது.

 

எனக்கு மேல்மாடிக்குப் போகப் பயமாக இருக்க, என்ன பிரச்சனையோ?? ஆராவது போய்ப் பாருங்கோ என்றால் எல்லோரும் நீபோ நீ போ என்று மற்றவரை அனுப்புவதில் குறியாக இருக்க படுத்திருந்த தம்பி என்ன பிரச்சனை.?? நித்திரை கொள்ள விடுறியளே என அலுத்துக்கொண்டு மின்விளக்கைப் போட்டுவிட்டுப் படிகளில் ஏற என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் மற்றவர் ஒருவிதப் பயத்துடன் பார்த்துக்கொண்டு நிற்க, நானும் பாத்திட்டு  வாறன் என்றபடி அண்ணியும் மேலே போக நானும் துணிவை வரவளைத்துக்கொண்டு படிகளில் ஏற முற்பட படி விளக்கு அணைந்துவிட்டது. உடனே திரும்ப ஓடிவந்து மற்றவர்களுடன் நிற்க்க, அண்ணி இடையில் நின்றுகொண்டு நிவேதா விளக்கைப் போடு என்று கத்துகிறார்.

 

நான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. தம்பியின் மனைவி சென்று விளக்கைப் போட்டாரே தவிர மேலே படிகளில் செல்ல முற்படவில்லை. நான் கடைக்கண்ணால் திரும்பி மணிக்கூட்டைப் பார்க்க நேரம் ஒன்று நாற்பது. யாரோ படிகளில் வருவது தெரிய பார்த்தால் தம்பி பின்னால் அண்ணி. என்னடா யார் கத்தியது  என்று நான் கேட்கிறேன். மாமாதான் கத்தினவர். என்ன ஏதென்று சொல்லுறார் இல்லை. எல்லாரும் போய்ப் படுங்கோ. விடியக் கதைப்பம் என்று கூற வேறு  வழியின்றி தூங்க முயல்கிறேன்.

 

காலையில் எழுந்து கீழே வந்த மாமாவின் முகத்தில் சிரிப்பு இல்லை. அவருக்கு 65 வயது. மிகத் துணிவானவர். என்ன மாமா நடந்தது என்று நான் கேட்டேன்.

இரவு என் கணவர் இடதுபக்கமும் தங்கையின் கணவர் வலதுபக்கமும் நடுவே மாமாவும் படுத்துத் தூங்கியுள்ளனர். வலது பக்கக் காலை பாதத்தில் இருந்து யாரோ தடவியதுபோல் இருக்க, தங்கையின் கணவன் தான் தூக்கக் கலக்கத்தில் தங்கையின் கால் என்று நினைத்துத் தடவுகிறாரோ என எண்ணியபடி விடு நாடா என்றபடி திரும்பிப் பார்தால் தங்கையின் கணவர் குறட்டைவிட்டபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, மாமாவும் மீண்டும் நேராகப் படுக்க வயிற்றில் பாரம் ஒன்று அழுத்தியபடியே மேல்நகர இவரால் உடலை அசைக்கவே முடியாதபடி பாரம் அழுத்த கைகால்களை அசைக்க எத்தனிக்கிறார் மாமா. முடியாதுபோக பாரம் அழுத்தியபடி இப்ப நெஞ்சிலும் கழுத்திலும் வந்து நிற்க கத்தக் கத்த வார்த்தைகளே வராது தொண்டைக்குள்ளேயே அமுங்க, மாமாவின்  கை இரண்டு மூன்றுதடவை தட்டுப்பட என் கணவர் விளித்து என்ன மாமா என்று கேட்க, கழுத்தின் பாரம் குறைய மாமா ஐயோ விடுவிடு என்று கத்தினதாகச் சொல்ல, நாங்கள் எல்லோரும் சிரிக்கிறோம். உங்களுக்கும் பயம் பிடிச்சிட்டிது என்று என் தம்பி கூற அவருக்குக் கோவம் வருகிறது.

 

உங்களுக்கு விளையாட்டாக் கிடக்கு. சீவன் போப்போகுது என்றே நான் நினைத்துவிட்டேன். நெஞ்சில் ஏறி எதுவோ இருந்துகொண்டு கழுத்தை நெரிக்க ..... எனக்கு இப்பிடி ஒருநாளும் வந்ததில்லை என்றுவிட்டு இருக்க அண்ணி கெட்ட ஆவிகள் இந்த நேரங்களில் யாரின் உடலில் போகப் பாக்கும். நல்லகாலம் மாமா தப்பிவிட்டார் என்று கூற, பூருற ஆவி ஏன் அண்ணி சத்தம் போடாமல் பூராமல் அவற்றை கழுத்தில கை வைச்சது என்று கேட்க, அண்டைக்கு உனக்கு நடந்ததும் அப்ப பொய்யாகத்தான் இருக்கவேணும் என்று என் வாயை அடைக்க நான் ஒன்றும் கூற முடியாது நின்றேன்.

 

 

இன்னும் இருக்கு

Link to comment
Share on other sites

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அவசரப்படுவதே தொழிலாகிவிட்டது கொஞ்ச நாட்களாக.

 

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

 

அப்ப உங்களுக்கு நான் எழுதுவது விளங்கவில்லை என்று அர்த்தம்.  எதுக்கும் ஓட ஓட வாசிக்காது மற்றவர்கள் எழுதியதையும் நான் அதற்கு எழுதியதையும் வாசித்தால் வடிவா விளங்கும் :D அப்பா ஆவியாக வந்தவர் என்றோ வருவார் என்றோ எங்காவது கூறியிருக்கின்றேனா??? அவர் எனக்கு முதலில் அப்பா. அவர் இருக்கும்போதே எப்படி வாழ்ந்தவர் என்பது உங்களிலும் விட எனக்கும் அவருடம் பழகியவர்களுக்கும் தெரியும். என் அப்பாவிடம் அன்பும் மரியாதையும் என்னைவிட மற்றவர்களுக்கு அதிகமாக இருந்துவிட முடியுமா ????

அப்பாவை நீங்கள் ஆவியாகப் பார்ஹத்தால் அது உங்கள் மனதின் கோளாறு

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

 

இதையாவது வாசியுங்கள் விசுகு அண்ணா

 

Link to comment
Share on other sites

எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 

 

 

இருக்கும் இருக்கும் :(

 

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

 

சுற்றித்திரியிர ஆவியை நான் பாக்காமல் சொல்ல ஏலாது முனிவர்

 

Link to comment
Share on other sites

என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி.  :D  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆவி பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கு .

.

..

.

.

.

.

..

.

.

..

.

.

.

..

.

.

இவவை கொண்டுவந்து பாடாவிட்டால் எல்லாம் சரி வரும் .

 

 

 

 

 

 

அவ்ஸ் ல் சூப்பராய் பாடுபவர் 11120540_1614931618723095_68711659985363

சுமோ அக்கா உங்களிற்கு மாத்திரம் பேய் படம் போட தெரியுமோ  நாங்களும் போடுவிம்ல எப்படி நல்ல இருக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி:D  :D

 

 

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

 

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

 

இது நல்ல பிஸ்நெஸ். :lol: யாரின் வீடுகளில் ஆவி வந்தால் என்னைக் கூப்பிடுங்கள் விரட்ட. மிகச் சொற்ப தொகையே அறவிடப்படும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D  :lol:

 

ஐயோ

Link to comment
Share on other sites

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

ஆவி பேய் பிசாசு என்பவை இருக்குது எண்டு நம்புற ஆளுகளுகுதான் இரும்புத்துண்டு. நம்பாத ஆளுகளுக்கு ஒண்டும் தேவை இல்லை. நானும் ஒருக்காலும் இரும்புத்துண்டு பாவிக்கவில்லை. ஆனால், இரும்புத்துண்டு வைத்துக்கோண்டு படுத்தும் ஆவி வந்தால் நான் பொறுப்பு இல்லை. :lol:  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

Link to comment
Share on other sites

ஆவிகள் ஹொலிடே போகுது போல இருக்கு  :D  :D  :D

 

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

 

 

இல்லை, இல்லை கதையை வாசிச்ச எல்லார்ட வீட்டையும் வந்து கதையின் கருத்தை கேட்கப்போறாங்களாம்.

எதுக்கும் எல்லாரும் கதவை இறுக பூட்டி வையுங்கோ . நடு இரவில தான் வருவாங்க .

அது சரி , கதவ பூட்டினாலும் அவங்களால உள்ளே வர முடியுமே தானே ?

Link to comment
Share on other sites

அடபாவிகள்  :D அந்த அப்பாவி ஓட்டை வாய்ப் பிள்ளையை ஆவியாக்கீட்டீர்களே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 06/05/2015 at 0:25 PM, putthan said:

 

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

அட நானே கதை சொல்லுறது எண்டிட்டு மறந்திட்டனே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.