Jump to content

அந்தப் பத்து நிமிடங்கள் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"இன்று செவ்வாய்க்கிழமை. வேலைவிட்டு நேரத்திற்கே கிளம்பி வந்துவிட்டது வசதியாகி விட்டது. இன்றும் அவள் வருவாள். கடந்த இரண்டரை வருடங்களாகக் கண்களாலேயே மட்டும் பேசிக்கொள்ளும் எமது உணர்வுகள் மாற்றங்கள் ஏதுமின்றி இன்றைக்கும் தொடரும்" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே காரிற்குள் காத்திருந்தேன். பிண்னனியில் இலளையாராஜாவின் பாடல்கள்  மெதுவாக மனதைத் தாலாட்டிக்கொண்டிருக்க அவள் வரும் வழி பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நெருங்க நெருங்க மனது துடிப்பது எனக்கு வெளியே கேட்டது.

 

என்னைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்த காரெல்லாவற்றையும் மனம் அங்கலாய்ப்புடன் பர்த்துக்கொண்டது. அவளில்லை. சரி, 3 மணியாகிறது, இனிக் கிளம்பலாம் என்று நான் நினைத்திருக்க அவளது சாம்பல் நிறக் கார் வீதியின் ஆரம்பத்தில் திரும்புவதை எனது பின்கண்ணாடியில் பார்த்தேன். ஆகா, வந்துவிட்டாள், மனம் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது. அவள் மெதுவாக என்னைத் தாண்டி ஓட்டிச் செல்வதை ஆசையுடன் கடைக்கண்ணால் பார்த்தேன். நிச்சயம் நான் அங்கே நின்றிருப்பது அவளுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவள் அதை வெளிக்காட்டப் போவதில்லை. வழமை போலவே எதுவும் தெரியாதவள்போல அவள் என்னைக் கடந்து சென்றாள்

 

ஒரு 20 அல்லது 30 மீற்றர்கள் சென்றிருப்பாள். அவளது கார் நின்றது. அப்படியே U Turn போட்டு வீதியின் மறுபுறத்தில் அவளது கார் என்னை நோக்கியபடி நிற்க அவள் நிறுத்தினாள். சிறுபிள்ளைபோல வெளியே இறங்கி தனது கார் யாரினதும் வீட்டின் Drive way மறித்து நிற்கிறதா என்று அவசரத்துடன் பார்த்தாள். முன்னும் பின்னுமாக அவள் அப்படி பார்க்கும்போது ஓரக்கண்ணால் என் பக்கம் பார்த்ததை நான் பார்த்தேன். மனதினுள் மின்சாரம் ஒன்று ஒரே பாய்ச்சலில் தலையிலிருந்து கால்வரை ஓடி மறைந்தது. இதுதான், இந்தப் பொழுதுதான் நான் நாள்தோறும் காத்திருப்பது. இதுபோதும் இன்றைக்கு. அவள் பேசக் கூடத் தேவையில்லை, பார்வைகளே போதும் என்றது மனது. இதையேதான் கடந்த இரண்டரை வருடங்களாக பாலாய்ப்போன மனம் சொல்லிவருகிறது

 

இன்னும் ஒரு 10 நிமிடத்தில் அவள் வந்து காரை எடுத்துக்கொண்டு என்னைத் தாண்டிப் போவாள். அப்போது அவளை இன்னும் ஒருமுறை பார்த்துவிடலாம் என்கிற ஆசையில் காரிற்குள் அவள் வரும்வரை காத்திருந்தேன். அவள் வந்தாள். காரை மெதுவாக ஓட்டிக்கொண்டே என்னைத் தாண்டி அவள் சென்றாள். அவள் அணிந்திருந்த குளிர் கண்ணாடியினூடாக அவள் என்னைப் பார்க்கிறாளா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பார்க்கவேண்டும் என்றே மனம் விரும்பியது. எந்தச் சைகையும் இல்லாமல் அவள் பின்கண்ணாடியூடு மறைந்தும் போனாள்.

 

சிறிதுநேரம் மனதில் இருந்த ஓட்டமெல்லாம் அடங்கிப்போக இனம்புரியாத சோர்வு ஏற்பட்டது. இளையராஜா காதல் டூயட்டிலிருந்து மாறி இப்போது தனிமையில் சோகக் கீதம் பாடிக்கொண்டிருந்தார். வந்தவேலை முடிந்தது என்று எண்ணி காரை ஸ்டாட் செய்துகொண்டே வீடு கிளம்பினேன்

 

நாளைக்கும் இதே இடத்தில் அவள் வருகைக்காகக் காத்திருப்பேன் என்கிற எண்ணமே புதுமையாக இருக்க (இது கடந்த இரண்டரை வருடங்களாக நடந்து வந்தாலும் கூட) நாளை மாலையை எண்ணிக்கொண்டே வீடு சென்றேன்.

 

யாவும் கற்பனை ! (இதைச் சொல்லாட்டி இதை கதை என்று நம்பமாட்டாங்கள் )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

----

யாவும் கற்பனை ! (இதைச் சொல்லாட்டி இதை கதை என்று நம்பமாட்டாங்கள் )

 

இதுதான்..,.. கதை என்று, இப்போது நம்பி விட்டோம்.... ரகு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நகரேலாது. நடக்கிறதைப் பார்க்கவேண்டியதுதான். இது ஒரு கதை கண்டியளோ ?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையிலை வாற அவளின்ரை தமையனுக்கு காரிலை மினைக்கடுற விசயம் தெரியுமோ?

Link to comment
Share on other sites

இரண்டரை வருடம் ஓவர் டைம் செய்கின்றீர்கள் போல  :lol:


என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் ஒருவர் ஓவர் டைமாக  பேப்பர் விநியோகிக்க வெளிக்கிட்டு இப்ப நடு ரோட்டில் நிற்கின்றார் :o  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை வருடம் ஓவர் டைம் செய்கின்றீர்கள் போல  :lol:

என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் ஒருவர் ஓவர் டைமாக  பேப்பர் விநியோகிக்க வெளிக்கிட்டு இப்ப நடு ரோட்டில் நிற்கின்றார் :o  .

 

 

அர்ஜுன் அண்ணா, இது கதை. எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கதையிலை வாற அவளின்ரை தமையனுக்கு காரிலை மினைக்கடுற விசயம் தெரியுமோ?

 

 

அவளது தமையன் பற்றி நான் இதுவரை எதுவும் எழுதவில்லையே  கு.சா?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்வையும் பத்து நிமிடங்களும் என்னய்யா நடக்குது இங்க?

 

இப்பிடி சஸ்பென்சா விட்டுட்டுப்போய் இந்த ரகுநாதன் என்ன செய்கிறார்...எனக்கு முழுவிபரமும் தெரியோணும் இல்லை என்றால் தலை வெடிச்சுப்போடும். :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களாக அவளைக் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. Out of sight , out of mind என்று சொல்வார்களே, அப்படி அவளது நினைவுகள் சிறிது சிறிதாக இல்லாமல் ஒரு புள்ளியாகி மறைந்துபோகலாம் என்று நான் பிடிவாதமாக நினைத்திருந்தேன். இந்த சில வார காலமும் அதற்கு உதவி புரியும் என்று நம்பியிருந்தேன் ( இப்படிப் பல வார விடுமுறைகள் இந்த இரண்டரை வருடத்திலும் வந்து போயாச்சு....ஆனால் எதுவுமே மறைந்ததாக நினவில்லை). ஆனால் அவ்வப்போது அவளது நினைவு இடைக்கிடையே மின்னி மறைந்துகொண்டிருந்ததையும் நான் மறுக்கமுடியாது. காரில் இளையாராஜாவை ஒரு போதுமே நான் நிப்பாட்டியது கிடையாது. காரை start செய்தவுடன் அவர் பாடத் தொடங்கிவிடுவார், சொல்வழி கேளாத மனது அவர் பின்னாலேயே பாடிக்கொண்டு போகும். அப்போதெல்லாம் அவளின் நினைவுகள் தோன்றி மறையும். இந்த இளையராஜாவைக் கண்டுபிடித்தவனைக் கூட்டிவந்து நிறையக் கேள்வி கேட்க வேண்டுமென்றெல்லாம் ஆசையுண்டு............. :D

 

நேற்று மாலைநேரம், குளிர் காற்று சில்லென்று வீசிக்கொண்டிருக்க எமது தேசத்தை குளிர்காலம் மெதுவாக அரவணைக்கத் தொடங்கியிருந்தது. வெளிச்சமும் இருட்டும் சங்கமிக்கும் ஒரு பொழுதில் எதேச்சையாக அவளைப் பார்த்தேன் (இது திட்டமிட்ட சந்திப்பில்லையென்றால் நம்பவா போகிறீர்கள் ?) . அவளும் என்னைப் பார்த்தாள். சிரித்தாள்...எனக்காகத்தான் அந்தச் சிரிப்பு என்று மனம் பிடிவாதமாக முடிவெடுத்தாலும், அவளுடனேயே வந்த அவளது உறவினரைப் பார்த்து அவள் சிரித்திருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அவள் சிரித்தவுடன் சொல்வழி கேளாத என்மனதும் சிரித்தது. அதை அவள் சட்டை செய்தாளா இல்லையா என்பதுகூட அந்த இருட்டில் தெரியவில்லை. Out of sight , out of mind என்பவற்றையெல்லாம் தூக்கித் தூரக் கடாசிவிட்டு மனமெல்லாம் ஆக்கிரமிக்க அவளது நினைவுகள் மீண்டும் வந்து மனதில் சப்பாணி போட்டு உட்கார்ந்துகொண்டது. அடக் கடவுளே !

 

காரை Start  செய்ததும் மீண்டும் இளையராஜா பாடத் தொடங்கினார். Situation song தேடித் தேடி விரல்களை தட்டிக் கொண்டு போனேன்.........அப்போது..... ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்றவேண்டுமோ.............அதுசரி, இந்தப் பாட்டுக்கு முன்பெல்லாம் இத்தனை அர்த்தம் புரிந்ததாக நினைவில்லையே என்று வியந்துகொண்டு மிதிக்கத் தொடங்கினேன்........நாளை மறுபடியும் அவளைக் காணப் போகும் 10 நிமிடக் காத்திருப்புக்காக !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையிலை வாற அவளின்ரை தமையனுக்கு காரிலை மினைக்கடுற விசயம் தெரியுமோ?

தமையனை விடுங்கோ

வீட்டுல ஆத்துக்காரிக்கு தெரியுமோ இல்லியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமையனை விடுங்கோ

வீட்டுல ஆத்துக்காரிக்கு தெரியுமோ இல்லியோ?

 

 

அதுதானே பார்த்தன், எங்கயடா ஒருத்தரும் இதைக் இதுவரை கேட்கவில்லை என்று................கதையென்று சொன்னாப் பிறகு இப்படியெல்லாம் கேட்டு சங்கடப் படுத்தக் கூடாது ஈழப்பிரியன்........அப்புறம் அழுதுடுவேன் ! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த காதலா ? கலக்குறீங்க ரகு . தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விறுவிறுப்பான கதை சொல்லியாகிவிட்டீர்கள். தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  அனுபவப்பதிவுக்கு ரகு..... :icon_idea:

 

இதெல்லாம் சாதாரணம் ஐயா

முன்னோர்கள் எவ்வளவு அனுபவசாலிகள் :lol:

நாற்பது வயதில் இதை எவராலும் தடுக்கமுடியாது :icon_mrgreen:

இதுவும் கடந்து போகும் ராசா... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

........நாளை மறுபடியும் அவளைக் காணப் போகும் 10 நிமிடக் காத்திருப்புக்காக !

 

அவனவன் கோடி கோடியாக கொட்டுறான்.

 

மனதுக்கு சுகம் என்றால் ஒரு பத்து நிமிடத்தை வீணாக்குவது ஒன்றும் பெரிதல்ல.

 

அண்டமா முனிவரே தடக்குப்படும் போது நீங்கள் நாங்கள் எந்த மூலைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்டமா முனிவரே தடக்குப்படும் போது நீங்கள் நாங்கள் எந்த மூலைக்கு.

 

அது தானே....? :lol:

நாம் சொல்லி சமாளிப்பதற்காகத்தானே

நம் முன்னோர் இதையெல்லாம் எழுதிச்சென்றிருக்கிறார்கள்  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக அனுபவித்து எழுதுகிறீர்கள் . அஹா அந்த பத்து நிமிடங்களுகாக பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்.

இக்கதை கற்பனையா அல்லது இப்பெண் தான் முடிவில் உங்கள் மனைவியா ?

கற்பனை கதை என்று கூறிய பின்னரும் நான் இப்படி கேட்பது சரியில்லை .

ஆனால் இளமை நெஞ்சில் உருவாகும் அந்த ஏக்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு எழுத்தாளர் காதல் கதை எழுதினால் அதை ஏன் அவரின் உண்மைக்கதையாக கொள்ள வேண்டும் ? கற்பனையில் வல்லவர்கள் எழுத்தாளர்கள். கற்பனையில் உதிப்பவற்றை

எழுத்து வடிவில் தருவார்கள் . என்றாலும் ரகு நன்றாக அனுபவித்து எழுதி இருப்பதனால் அவரது கதை இங்கு வெற்றி அடைந்துள்ளது .

 

(ரகு , நல்லா தான் காயிந்திருகிறீர்கள் அந்த பத்து நிமிடங்களும் !!! :rolleyes: :rolleyes: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தனுயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே"

 

அருமையான வரிகள்! இந்தப் பாடல்களை சிறுவயதில் கேட்டபோது அர்த்தம் புரிந்ததில்லை. இசையே பாடலை ரசிக்க வைத்திருந்தது. 

 

இன்றோ நிலமை வேறு. அர்த்தம் முழுவதுமாகப் புரிகிறது. பொழுதுகளுக்கேற்ப அதன் தக்கமும் மாறுகிறது. காதல் செய்யும் விந்தைதான் என்னே??

 

மேற்சொன்ன பாட்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?? எதுவுமில்லை. என்னை அலைக்கழிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். 

 

சரி, "கதைக்கு" வருகிறேன்.

 

வருடக் கணக்கில் பரீட்சைக்கு விளித்திருந்து படித்துவிட்டு, பரீட்சையன்று, பரீட்சை நிலையம் வரை போய்விட்டு எழுதாமேலேயே வீடு வருவதென்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அப்படித்தான் எனது நிலையும். 

 

ஆளை விடுங்கள். இதுக்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.............

கதையென்றால் பேசாமல் கேட்கவேண்டும், கேட்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது ?

 

வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்வார்கள் !!! :D


ஒரு எழுத்தாளர் காதல் கதை எழுதினால் அதை ஏன் அவரின் உண்மைக்கதையாக கொள்ள வேண்டும் ? கற்பனையில் வல்லவர்கள் எழுத்தாளர்கள். கற்பனையில் உதிப்பவற்றை

எழுத்து வடிவில் தருவார்கள் . என்றாலும் ரகு நன்றாக அனுபவித்து எழுதி இருப்பதனால் அவரது கதை இங்கு வெற்றி அடைந்துள்ளது .

 

(ரகு , நல்லா தான் காயிந்திருகிறீர்கள் அந்த பத்து நிமிடங்களும் !!! :rolleyes: :rolleyes: )

 

 

பூத்தல், காய்த்தல், இறுதியில் காய்ந்தும் போதல்...இவையெல்லாம் இயற்கைதானே?? நாம் என்ன விதிவிலக்கா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தனுயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே"

 

அருமையான வரிகள்! இந்தப் பாடல்களை சிறுவயதில் கேட்டபோது அர்த்தம் புரிந்ததில்லை. இசையே பாடலை ரசிக்க வைத்திருந்தது. 

 

இன்றோ நிலமை வேறு. அர்த்தம் முழுவதுமாகப் புரிகிறது. பொழுதுகளுக்கேற்ப அதன் தக்கமும் மாறுகிறது. காதல் செய்யும் விந்தைதான் என்னே??

 

மேற்சொன்ன பாட்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?? எதுவுமில்லை. என்னை அலைக்கழிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். 

 

சரி, "கதைக்கு" வருகிறேன்.

 

வருடக் கணக்கில் பரீட்சைக்கு விளித்திருந்து படித்துவிட்டு, பரீட்சையன்று, பரீட்சை நிலையம் வரை போய்விட்டு எழுதாமேலேயே வீடு வருவதென்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அப்படித்தான் எனது நிலையும். 

 

ஆளை விடுங்கள். இதுக்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.............

கதையென்றால் பேசாமல் கேட்கவேண்டும், கேட்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது ?

 

வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்வார்கள் !!! :D

 

 

பூத்தல், காய்த்தல், இறுதியில் காய்ந்தும் போதல்...இவையெல்லாம் இயற்கைதானே?? நாம் என்ன விதிவிலக்கா ???

 

கதை என்று நீங்களே கூறிவிட்டு பிறகு காய்த்தல் பூத்தல் என்றெல்லாம் என்ன கதைவிடுகிரீர்கள். மரியாதையாகக் கதையை எழுதி முடியுங்கள் :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.