Jump to content

எனது மகள் பேட்டி கண்ட, இரு ஜேர்மன் பிரபலங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகள் படிக்கும் பாடசாலையில்.... பிரபலங்களின் பேட்டி அடங்கிய புத்தகம் ஒன்று தயாரிப்பதற்காக,

அவரின் ஆசிரியர், எனது மகள் உட்பட... நான்கு மாணவர்களை தெரிவு செய்தார். ஒவ்வொருவரும்... ஜேர்மனியில் புகழ் பெற்ற ஐந்து பேரை பேட்டி கண்டு, எழுத வேண்டும். இவர் இருவரை பேட்டி கண்டு விட்டார்.
 

Kinder-Turner-Marcel-Nguyen-nascht-auch-

 

முதலாமவர் 2012´ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிப்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற... Marcel Nguyen.

(இணையப் பேட்டி)

 

https://www.youtube.com/watch?v=zVtYz0U49ZA

 

###############################################

 

ranga-yogeshwar-gross.jpg

 

இரண்டாமவர்... ஜேர்மன் தொலைக்காட்சிகளில் அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும்....Ranga Yogeshwar  (தொலை பேசி பேட்டி)

 

அவள் கேட்ட கேள்விகளைப் பார்த்து.... எனக்கே ஆச்சரியமாக போய் விட்டது.

பேட்டி முடிந்தவுடன்... உச்சி முகர்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டேன்.

 

https://www.youtube.com/watch?v=N_dJU-tcnCc

 

இது ரங்கா யோகேஷ்வர், இணைந்து நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி. 40´வது வினாடியில்... ரங்கா வருகின்றார்.

 

Link to comment
Share on other sites

இளைய தலைமுறை எந்தவித மனத்தடங்கலும் இன்றி முன்னே வருவது பாராட்டுதலுக்கு உரியது.. நீங்கள் ஆனந்தக்கண்ணீர் விட்டதில் ஒன்றும் வியப்பில்லையே.. வள்ளுவரும் அதைத்தானே சொல்லியுள்ளார்.. :unsure:

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகள்

பேட்டி எடுக்கக்கண்ட தந்தை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் மேலும் உயர உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திறமைகளை ஒழித்து வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
இப்படி வெளிக்கொண்டு வந்தால் அவர்கள் எதிர்காலத்தில்

இன்னும் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள்.

வாழ்த்துக்கள் தமிழ் சிறி அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பெற்றோருக்கும் பெண்ணுக்கும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பெற்றோருக்கும் பெண்ணுக்கும்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சிறி அண்ணா, அவரது மகளுக்கும் மற்றும் அவருக்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறி அண்ணா, மகளுக்கும் மற்றும் அனைவருக்கும்.

 

 

206950.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறித்தம்பி. உங்கள் மகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சிறியருக்கும் ,அவரின் பெயர் சொல்லும் மகளுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

 

மேன் மேலும் சாதனைகள் படைக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரிக்குணமும், சொறிக்குணமும் தொலைத்த நல்லதொரு இளைய தலைமுறை உருவாவது, எமது இனத்தின் விடிவுக்கு நிச்சயம் வழி கோலும்! :lol:

 

மகன்(ள்) தந்தைக்காற்றும் உதவி, இவன்(ள்) தந்தை,

என்நோற்றான் கொல்லெனும் சொல்!

 

என வள்ளுவனின் வரைவுகேற்ப நன் மக்களைப் பெற்றிருக்கின்றீர்கள்!

 

வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும்..! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் உங்கள் மகளிற்கு, மேலும்  பல சாதனைகள் படைக்க வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

தமிழ் சிறியை பார்த்ததோ அல்லது அவர் குரலைக் கேட்டதோ கூட இல்லை, ஆனாலும் சக உறவொன்றின் பிள்ளையின் வளர்ச்சியை அறியும் போது எமக்கே எவ்வளவு சந்தோசம் எழுகின்றது... தமிழ் சிறி அடைந்த மகிழ்வின் எல்லையை கணக்கிட முடியாது...

 

வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..

வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள் தமிழ் சிறி அண்ணா....
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வானமே எல்லை ..!
இன்னும் வளர னது வாழ்த்துக்கள் !
 
 
பைபிளில் ஒரு வாசம் உண்டு ...
முந்துவோன் பிந்துவான் 
பிந்துவோன் முந்துவான்     என்று.
சிங்கள இந்திய காடைகளை தமிழர்கள் ஒருநாளில் முந்தவேண்டும்.
அறிவு பசி விடுதலை தாகம் இவை இருப்பின் ஒருநாள் முடியும். 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.