Jump to content

கலித்தொகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலித்தொகை

 

சங்க நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றை எட்டுத்;தொகை நூல்களுள் அடக்குவர். அகவற்பா, விருத்தப்பா(ஆசிரியம்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாவென்னும் ஐந்து பாவினங்களுள் கலிப்பாவென்னும் பாவகையைச் சார்ந்து பல புலவர்களால் இயற்றப்பட்ட செய்யுள்களின்; தொகுப்பாயமைந்தது கலித்தொகையாகும். கலித்தொகையும் பரிபாடலும் இசைகலந்து எடுத்துப் பாடப்படக்கூடிய இன்னிசைப் பழம்பாட்டுவகையினவென்று இசைவல்லார் கூறுவர்.

கலித்தொகை பண்டைய தமிழரின் அகவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் அகத்திணைநூலாகும். பாலை, குறிஞ்சி, மருதம் முல்லை, நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பண்டைத்தமிழரின் காதல் வாழ்வுபற்றிய செய்திகளை அந்நூல் கூறிநிற்கின்றது.

 

கலித்தொகை பாடிய புலவர்கள் விபரம் பின்வருமாறு:

 

பாலைக்கலி: பெருங்கடுங்கோன், குறிஞ்சிக்கலி: கபிலர், மருதக்கலி: மருதனிளநாகன், முல்லைக்கலி: அருஞ்சோழன் நல்லுருத்திரன், நெய்தற்கலி: நல்லந்துவன். கலித்தொகையைத் தொகுத்தவர் நெய்தற் கலிபாடிய நல்லந்துவனார் என்றும், முதலில் உரைசெய்தவர் நச்சினார்க்கினியரென்றும் கூறப்படுகின்றது. பழஞ்சுவடிகளைத் தேடியெடுத்து முன்முதலில் பதிப்பித்தவர் பெருந்தகை சி வை தாமோதரம்பிள்ளையாவார்.

 

கலித்தொகையின் இலக்கியப் பரப்பினுட் சென்று அதன் நயங்களைக் கூறுவதை ஏனைய நண்பர்களிடம் விட்டு கலித்தொகை போன்ற நூல்கள் உருவான பின்னணியை ஆய்வு செய்வதே என்பங்கில் இங்கு முதன்மை பெறுகின்றது.

 

அகத்திணைப் பிரிவுகள்

 

தமிழரின் அகவாழ்வில் காதலும் காமமும் பெரும்பங்கு வகித்தன. ஆடவர் பெண்டிரிடையே ஏற்பட்ட ஒருதலைக்காதல் கைக்கிளையெனப்பட்டது. வயது வித்தியாசம் மிக அதிகப்பட்ட நிலையில் அல்லது மனம் ஒருமைப்படா நிலையில் ஏற்படும் பொருந்தாக் காமம் பெருந்திணையெனப்பட்டது. கருத்தொருமித்து ஆதரவுபட்ட அன்புடைக்காதல் அன்பின் ஐந்திணைக் கூறுகளாய் வகுக்கப்பட்டு ஐவகை நிலங்களுக்குமேற்ப அவ்வச் சூழல்களுடன் பின்னிப்பிணைந்த நிகழ்வுகளைக் குறிப்பனவாய் புலவர்களால் இலக்கியம் சமைக்கப்பட்டது. ஆதலின் அத்திணை இலக்கியங்கள் அவ்வந் நிலத்தின்தன்மைக்கேற்ப அந்நிலம் வாழ் மாந்தர்களின் காதல், காமவுணர்வகளை ஊட்டும் முதற்பொருளெனும் காலமும் பொழுதும், அந்நில மாந்தர்களின் உள்ளத்தேயெழுகின்ற வேறுபட்ட உணர்வுகள் என்னும் உரிப்பொருள், நிலங்களின் கருப்பொருள்களான தெய்வம், உயர்குடி, தாழ்குடி, பறவை, விலங்கு, ஊரைக்குறிக்கும் பெயர், அம்மாந்தர் அருந்த நீர்பெற்ற இடங்கள், உண்ட உணவுவகை, நிலங்களுக்குரிய பூக்கள், மரங்கள், பறை, யாழ், பண், தொழில் போன்றன தொடர்பாய் வேறுபட்டமைந்தன.

 

மேற்கண்ட பொருட் பிரிவுகள் புறத்திணை இலக்கியங்களுக்கும் பொருந்துவனவாம். அன்பின் ஐந்திணைகளுக்கும் புறம்பே தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நூல்கள் கூறும் கைக்கிளை, பெருந்திணையுட்பட அகப்புறத் திணைகளை மொத்தம் பதின்மூன்றாக வகுப்பர். மேலும் தொல்காப்பியம் 'மாயோன் மேய காடுறை உலகம(முல்லை), சேயோன் மேய மைவரை உலகம்(குறிஞ்சி), வேந்தன்(இந்திரன்)மேய தீம்புனல் உலகம்(மருதம்), வருணன் மேய பெருமணல் உலகம்(நெய்தல்) என நான்கு நிலங்களையே கூறுகின்றது.

பாலை நிலமென்பது நாம் பொதுவாகக் கருதும் பாலைவன நிலமன்று. அத்தகைய பாலை தமிழகத்திலில்லை. அதனால் பாலையென்பது சிலப்பதிகாரக் கூற்றுப்படி 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்து வெம்மையாலே தண்மையிழந்து காலத்திற்கேற்ப பாலையென்பதோர் கோலங்கொண்ட வரண்ட நிலத்தையே குறிக்கும். அக்காலத்திற்கேற்ப அந்நிலத்திற்குரிய மக்களின் வாழ்வியலும் மாறியமைந்ததென்றே கொள்ளவேண்டியுள்ளது.

இவ்வாறமைந்த நிலத்தியல்புகளும் மக்கட்பண்பும் அக்காலத் தமிழிலக்கியத்தின் போக்கை வழிப்படுத்தி குறித்த நியமங்களினூடாக இட்டுச் சென்றதால் அம்மரபையொட்டியே சங்க இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

 

இந்த ஒத்த பண்பு எம் பண்டைய இலக்கியங்களில் காணப்பட்டதாலேயே இதனை நெறிப்படுத்த ஆன்றோர்கூடியவோர் தமிழ்ச்சங்கம் இருந்திருக்க வேண்டுமென்னும் ஊகம் ஏற்பட்டது. அது உண்மையென்றே இன்று தோன்றுகின்றது. அவ்வகையில், கலித்தொகை பாடிய புலவர்களின் இலக்கிய ஆக்க முறைமை அக்காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் இருப்புக்கு மேலும் சான்றாயமைகின்றது.

 

சங்கம் இருந்தது உண்மையா?

 

ஆன்றோர் அன்று பேணிய இலக்கிய மரபையும் அதனை நிருவகித்த சங்கத்தையும் சீர்தூக்கிப் பார்க்காது, சிலர் தமிழர் காட்டு வாழ்விலிருந்து நகரங்களை உருவாக்கி நகர்ந்த பரிணாமப் போக்கில் காணப்பட்ட ஐந்து வித்தியாசமான படிமுறைகளின் விளைவே இத் திணைசார் இலக்கியங்கள் என்கின்றனர். அப்படி நோக்கும்போது சமகாலத்தில் இப்படிமுறைச் சமுதாயங்கள் வாழ்ந்திருக்கவில்லை என்று பொருள்படுகின்றது. ஆனால் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனார், தொல்காப்பியர் உட்படப் பல தனிப்பட்ட புலவர்கள் திணைவழி இலக்கணமும் பல்திணை இலக்கியங்களும் செய்திருப்பதன்மூலம் அக்கால அன்றோர் மத்தியில் ஓர் எழுதப்படாத வரன் முறையாகவேனும் இந்த இலக்கியமரபு நிர்வகிக்கப்பட்டும் பேணப்பட்டும் வந்துள்ளமை புலனாவதோடு பல்வேறு காலகட்டங்களுக்கேற்ப அவ்விலக்கியங்கள் தோன்றவில்லையென்பதையும், ஓர் மரபு வழிப்பட்ட இலக்கியப்பண்பின் அடிப்படையிலேயே அவை உருவாகியுள்ளனவென்பதையும் கூறக்கூடியதாயுள்ளது. இந்தப் பண்பைக் கட்டிக்காத்தது யார்? ஓர் எழுதப்படாத யாப்புடன்கூடிய சங்கமாய் அது ஏன் இருந்திருக்கக்கூடாது?

தற்காலத்தில் தலித்துவம், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியப் போக்குகள் சமகால எழுத்தாளர்களிடையே காணப்படுவதைப்போன்று அக்காலத்திலும் இத்தகைய திணை இலக்கியப் பிரிவுகளை அவரவர்  சமகாலப் பெரும்புலவர்கள் தெரிந்தெடுத்திருக்கக்கூடும்.

 

மேற் குறித்தவாறு சங்கம் என்னும் போது பலரும் சேர்ந்து யாப்புடன் உருவாக்கி மாதாமாதம் அன்றேல் வாராவாரம் ஓரிடத்திற்கூடி தமிழாய்வு செய்தவோர் நிறுவனமாயியிருந்திருக்க வேண்டுமென்னும் உருவகத்தை மனதிற்கொண்டோர் அதன் அடிப்படையிலேயே எமது பண்டைய தமிழ்ச்சங்கத்தை அது அப்படி இருந்திருக்கவில்லையென்று வாதிடுகின்றனர். ஆனால் நிலைமை அத்தகையதன்று. திணை மரபைப்பேணி இலக்கியஞ் சமைத்தலும் அதனை அக்கால முன்னணி இலக்கியகர்த்தாக்கள் பார்வையிடலும் அதற்கு அங்கீகாரம் வழங்கலுமாய் இருந்தவோர் திணை இலக்கணம் எழுதப்படாத காலத்திலிருந்து பரிணாமம் பெற்று, ஆன்றோரின் அங்கீகாரத்துடன் தொல்காப்பியம் போன்ற இலக்கணநூல்கள் உருவாகி மரபைப் பேணவேண்டிய விதிமுறைகள் எழுத்தில் கொணரப்பட்ட காலம்வரை இருந்த புலவோரின் ஒத்த கருத்தையும் அக்கருத்துக்கள் காலங்காலமாய்ப் பேணப்படக்காலாயிருந்த பொதுக்கொள்கையை நிருவகித்த ஆன்றோர் கூட்டத்தையுமே சங்கமெனக் கொள்ளல் வேண்டும். அந்த வகையில் நோக்கும்போது சங்கத்தைப்பற்றிய மருட்சி ஏற்பட இடமேயில்லை. மேலும் இந்தோனேசியாவில் கிடைத்தவோர் கல்வெட்டுப்படி தமிழ் வணிகர்சங்கம் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. அவ்வாறாயின் இலக்கியச் சங்கமும் தமிழர் மத்தியில் இருந்தமையை அதிசயமாகக் கொள்ளமுடியாது. மேலும் புத்தரின் காலத்தில் அவரது இனத்தவர்களான சாக்கியர் சங்கம் இருந்தது என்றும் அதனைப் பின்பற்றியே புத்தரும் தனது சீடர்களுடன் சேர்ந்து பெளத்த சங்கத்தை நிறுவினாரென்றும், அச்சங்கத்தை அழிந்து விடாமல் பாதுகாக்கும் நோக்குடனேயே "சங்கத்தை" மும்மணிகளுள் ஒன்றாகப் பேண  "சங்கம், சரணம், கச்சாமி" என்ற சுலோகம் கூறப்படுகின்றது என்பதையும் அவதானிக்கலாம். இதிலிருந்து புத்தரின் காலத்திற்கு முன்பதாகவே பல சாதி, சமய , மொழி வாரிச் சங்கங்கள் இந்தியாவில் இருந்திருக்கினறன என்பது ஊர்ஜிதமாகின்றது.

 

கடவுளர்கள் சங்கத் தலைவர்களாயிருந்தார்களாவென்று நகையுற நோக்கும் புத்தி ஜீவிகள் ஏன் அக் கடவுளர்கள் எம்மைப்போன்ற சாதாரண மனிதர்களாயிருந்திருக்கக் கூடாது? என்று பகுத்தறிவுடன் நோக்குவதாகத் தெரியவில்லை. பின்னாளில் அம்மனிதர்கள் கடவுளர்களாக்கப்பட்டதற்குத் தமிழன்னை பொறுப்பாளியாகமாட்டாள் என்று இவர்கள் உணர்வார்களாக.

 

திணை மயக்கமாவது யாது?

 

ஒரு குறித்த நிலத்திற்கு அதாவது திணைக்கு உரிய மாந்தரின் முதல் உரி கருப் பொருள்களை வேறொரு திணக்குரியதாய் இலக்கியஞ் சமைத்தல் திணை மயக்கத்தின் பாற்பட்டதாம். உதாரணமாக மருதநில மாதொருத்தி கடலிற் சென்ற தலைவனுக்காய் இரங்கல் அல்லது நெய்தல் நிலப்பெண்ணாள் கடலினின்றும் மீண்டு பசியோடு களைத்து வந்த கணவனுடன் ஊடுதல் போன்றன இத்திணை மயக்கத்தைக் குறிப்பனவாம்.

 

மேலும் தத்தம் நிலத்திற்குப் பொருந்தாத பூக்களை மாதர் அணிதல் - உதாரணமாக மருதத்திற்குரிய தாமரையை பாலைப் பெண் சூடியுள்ளதாக வர்ணித்தல், குறிஞ்சித் தெய்வமாம் சேயோனை(முருகனை) வழிபடவேண்டிய குறக்குலமாது நெய்தற் கடவுளாம் வருணனைப் பணிந்ததாகக் காவியம் சமைத்தல் போன்றன மரபு பிறழ்வுபட்ட திணை மயக்கங்களாக அந்நாளில் கருதப்பட்டது எனலாம். இம்மரபை மீற முற்பட்ட புலவர்களைச் சங்கப் பலகையிற் சாடி அக்காலத்தைய புலவர்கள் நியமங் காத்தனர். இதனாலேயே தமிழன்னையைச் சங்கம் வளர்த்த தமிழ் என்று அடைமொழியிட்டு இன்றுவரை ஆன்றோர் கூறுகின்றனர்.

 

இனிக் கலித்தொகைக்கு வருவோம்:

 

கலித்தொகை தரும் ஐந்து திணைகளுக்குமான உரிப்பொருள்களை அஃது, காதலர் மனவுணர்வுகளின் வகையறாக்களை இங்கே நோக்குவது அவசியமாகின்றது.

அவை முறையே: குறிஞ்சிக்கு – புணர்தலும் புணர்தல் நிமித்தமாகவும், பாலைக்கு – பாலையுட் சென்ற தலைவனைப் பிரிதலும் பிரிதல் நிமித்தமாகவும், முல்லைக்கு – காத்திருத்தலும் இருத்தல் நிமித்தமாகவும், மருதத்திற்கு – ஊடலும் ஊடல் நிமித்தமாகவும், நெய்தலுக்கு - கடலிற் சென்ற தலைவன் வராதபோது இரங்கலும் இரங்கல் நிமித்தமாகவும் உணர்வு வழிப்படுவதாக புலவோர் இலக்கியஞ் செய்தனர். இவ்வாறு ஓர் நியம வரைமுறையின் கீழ் கூடியவரை திணை மயக்கங்கள் உருவாகாதவாறு பண்டைய புலவோர் இலக்கியஞ் செய்துள்ளமை தமிழ் தவிர்ந்த வேறெந்த மொழிக்குமில்லாத பெருஞ்சிறப்பாகும். அதனாலேயே சங்கம் இருந்திருக்கின்றது என்று அடித்துக் கூறக்கூடிதாயுள்ளது.

பாலைக்கலி

 

கடவுள் வாழ்த்தாய்ச் சிவனைப் பணிதலோடு தொடங்கும் கலித்தொகையில் முதன் வருவது பெருங்கடுங்கோவின் பாலைக்கலியாகும். ஆறலைகள்வர் களவும் கொலைத் தொழிலும் புரியும் வரண்ட பாலைநிலத்தைக் கடந்து பொருள் தேடுவான் பொருட்டுச் செல்லும் அல்லது செல்ல முயலும் தலைவனது பிரிவாற்றாமையான் வருந்தும் தலைவி அவனைத் தடுத்து நிறுத்த முயலுதல் அல்லது தலைவி சார்பாய் தோழி தலைவனிடம் தலைவியின் வருத்தம் கூறல், பிரிவின் வாடும் தலைவியைத் தேற்றல் போன்றன பாலைக்கலியின் உரிப்பொருளாகும். மேலும் காதலனுடன் உடன்போக்கிலீடுபட்ட தலைவியைத் தேடும் பெற்றோரின் அவல நிலைகளும் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன.

 

பாலையின் கொடுமை, வெம்மை, வரட்சி போன்ற புறச்சூழல்களும், தலைவியின் பிரிவுத்துயர், தலைவனின் பிரிவால் அவளுக்கேற்படும் கையறுநிலை உட்பட்ட அகச்சூழல்களும் பெருங்கடுங்கோனால் பாலைக்கலியில் விபரிக்கப்படும் அதேவேளை தலைவனை பாலையுள் விடுத்து அவனுக்காகக் காத்திருக்கும் தலைவியின் வளமிக்க வாழிடம் தொடர்பான வர்ணனைகளுக்கும் குறைவில்லை. பாலைக்கலி முப்பத்தைந்து பாடல்களைக் கொண்டது.

 

குறிஞ்சிக்கலி

 

கபிலர் பாடிய குறிஞ்சிக்கலி மலைப் பிரதேச மக்களின் காதல் வாழ்வை மையப்படுத்தி எழுதியதாகும். குறவன,; குறத்தி வேட்டுவன், வேட்டுவிச்சி போன்ற தலைவன் தலைவியரைச்சுற்றிப் பின்னப்பட்ட அழகிய காதற் குறிப்புகளாய்க் குறிஞ்சிக்கலி அமைந்துள்ளது. கிளி, மயில், மான்கள், புலி, கரடி, சிங்கம், யானையென்று பல சாதுவானதும், கொடியவையுமான காட்டுவிலங்குகள் வாழும் கானகத்தில் சந்தனம், அகில் போன்ற வாசனை மரங்கள் நிறைந்த சூழலில் தினைப்புனங்காக்கும் வஞ்சியருக்கும் வேட்டையாடும் வாலிபருக்குமிடையில் நிகழ்ந்த களவொழுக்கம் மக்கட்பண்பின் தகைமை குன்றாவகையில் இருபத்தியொன்பது கலிப்பாக்களடங்கிய அழகிய இலக்கியமாகக் கபிலர் பெருமானால் படைக்கப்பட்டுள்ளது.

 

மருதக்கலி

 

மிகுந்த பொருள் வளமுடைய பெருநிலக்கிழார்கள் வாழ்ந்த பிரதேசம் மருதநிலமாகும். நீர் நிலவளங்கள் நிறைந்து உழைப்பும் உற்பத்தியும் மிகுந்திருந்த சூழலில் வாழ்ந்த இம்மாந்தர் கூட்டம் இல்வாழ்விலீடுபட்டு அறம் வளர்த்த அதேவேளை காமக்களியாட்டங்களிலும் ஈடுபட்டது. அதனால் பரத்தமை இம்மாந்தர் வாழ்வின் ஒரு பகுதியாயிற்று. இல்லங்களில் கற்பின் செல்வியர் கணவன் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருக்க வரைவின்மகளிர் மாடங்களில் கணிகையருடன் களியாட்டம் நடாத்திவிட்டு பொழுது புலரும் வேளையில் வீடுதிரும்பும் தலைவன்பால் தலைவியர்; காட்டும் ஊடலே மருதக்கலியின் உரிப்பொருளாயிற்று. அறம் பேசும் குறளும் இப்பரத்தமையை அதன் விளைவான 'ஊடுதல் காமத்திற்கின்பம்' என்னுமாறாய் அங்கீகரிததுள்ளமையினால்; தமிழர் வாழ்வில் இதுவோர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பண்பாகவே கொள்ளல் வேண்டும். சிறியதோர் ஊடலுடன் கணவனின் இப்பரத்தமைப் பண்பை மன்னித்து அவனை இல்லத்தில் ஏற்றுக்கொள்ளும் அன்புடை நெஞ்சர்களான தலைவியரின் தாபங்களை அழகுறச் சித்தரிக்கும் மருதனிளநாகர் உரிப்பொருளான ஊடல் விடுத்து நகைச்சுவை ததும்பும் பாடலும் பாடியுள்ளார். முப்பத்தைந்து அழகிய பாடல்கள் மருதக்கலியில் காணப்படுகின்றன.

 

முல்லைக்கலி

 

மந்தைகளை மேய்க்கும் ஆயர் குலத்தவர் பாடிகளமைத்து வாழ்ந்த இடம் முல்லையாகும். அதனால் இவர்கள் நாடோடிகளாகவே இருந்திருக்க வேண்டும். பசும்புற்றரை வரட்சியினால் பாலையாகும்போது தமது மந்தைகளை வேற்றிடம் கூட்டிச்செல்லும் வழக்கத்தைக் கொண்ட இவர்களின் காதல் வாழ்வில் தலைவன் தலைவியரது திருமணம் நிறைவேறக் காளையர் ஏறுதழுவித் தம்வீரத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டதால் தலைவி தலைவனை அடைதற்காகக் காத்திருக்கவேண்டிய நிலை உருவாகின்றது. அதனால் தலைவியர் தமக்குரிய தலைவன் அல்லது காதலன் வந்து ஏறு தழுவித் தம்மை வெற்றி கொள்ளும்வரை களவொழுக்கங்களில் ஈடுபடாது நிறைகாத்து இருத்தல் முல்லையின் உரிப்பொருளாகின்றது. காதலும் கூடலும் இம்மாந்தர் வாழ்விலே இல்லாமலும் இல்லை. ஆயினும் இத்தகைய களவொழுக்கத்தினரும் உடன்போக்கிலீடுபடாது ஏறுதழுவி வெற்றிவாகை சூடும் திருமண நாள்வரை காத்திருக்க நேரிடுகிறது. இத்தகைய காதலரின் மனவுணர்ச்சிகளைச் சித்தரிக்கும் குறுங்கதைக் கூறுகளை பதினேழுபாடல்களில் புலவர் நல்லுருத்திரனார் தமிழுலகு மகிழத் தனது முல்லைக்கலியிற் தந்துள்ளார்.

 

நெய்தற்கலி

 

நெய்தநிலம் வாழ் மாந்தர் கடற்றொழில் செய்தனர். மாலையிற் கடல் ஓடி மறுநாட் காலைவரை அலைகளுடன் போராடி மீன்கொணரும் தம் தலைவரின் வரவை நாளும் மிகுந்த பதட்டத்துடன் எதிர்பார்க்கும் தலைவியர் தம் காதலர் திரும்பும்வரை அவரை நினைந்து இரங்கலே நெய்தற்கலியின் உரிப்பொருளாயமைகின்றது. காதலன் பிரிவால் கலக்கமுற்று கடலைக் காற்றை நிலவை விலங்குகளை விழித்துத் தம் துயர்கூறல், பொருள்தேடி அன்றேல் போர்புரியக் கடல்மீது கலஞ் செலுத்திச் சென்ற கணவனுக்காக வருந்துதுல் போன்ற காட்சிகளைக் கொண்ட நெய்தற்கலியை முப்பத்திரண்டு பாடல்கள் கொண்ட சொற்சித்திரங்களாக வகுத்தவர் நல்லந்துவனார் ஆவர்.

 

முடிவாக:

இவ்வாய்வில் கலித்தொகையின் கட்டமைப்பே சுருக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதனுட் சென்று அதன் இலக்கிய நயங்களை நண்பர்கள் சுவைபடத் தருவார்களாக. உலகின் நாகரீகங்கள் தோன்றிய அன்றேல் அதற்கும் முற்பட்ட காலத்தே எம் புலவர் பெருமக்கள் ஓர் செழுமை மிக்க மொழியாகத் தமிழன்னையை இத்தகைய தமிழிலக்கியக்கங்கள் மூலம் வளர்த்தெடுத்தனர். இன்தமிழின் பெருமையறிந்து எம் எதிர்காலச்சந்ததி இப்பொக்கிசங்களை நன்கறிந்து, ஆய்ந்து உலகமுள்ளவரை அன்னை தமிழின் இருப்பை உறுதிசெய்யுமாக.

 

-ஆக்கம் கரு-

Link to comment
Share on other sites

நன்று. சில நயமிக்க பாடல்களையும் இணைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பரே! கட்டுரை விரிவுபடாமலிருப்பதற்காக அதைச் செய்ய முடியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.