Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் மாமா இறந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன. வீடு முழுதும் ஒரே உறவினர்களும் தேவைக்கு அதிகமான உணவுகளும் யாரினது என்று தெரியாத பாத்திர பண்டங்களுமாய் வாணிக்கு உடல், மன அலைச்சல் இரண்டும் சேர்ந்து இன்றாவது நின்மதியாகத் தூங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

 

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த பின்னும் மாமாவின் மனத்திடம் தான் இத்தனை நாட்கள் அவரை வாழ வைகிறதோ என்று வாணி பல நாட்கள் வியந்திருக்கிறாள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாமாவை வைத்தியசாலையில் இருந்து வரும் வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களே மீண்டும் இறக்கி விடுவார்கள்.

 

போகும்போது நடந்து செல்லும் மாமா வரும்போது உற்சாகம் இழந்தபடி கைத்தாங்கலாக அழைத்து வரப்படுவது அவளுக்கு பச்சாதாபத்தை ஏற்படுத்தும். அவள் அவரை என்றும் தன் கணவனின் தந்தையாக எண்ணியதே இல்லை. தன் தந்தை போலவே ஓடி ஓடி எல்லாம் செய்பவள். அவருக்கும் மருமகள் மேல் தீராத அன்பு உண்டுதான். எத்தனை வேதனை என்றாலும் துளிகூட மகன் மனைவிக்கோ அன்றி வாணிக்கோ கூடக் காட்டிக்கொள்ளாது எதுவும் நடவாததுபோல் திரியும் மாமனாரை அவளுக்குப் பிடிக்காமற் போகுமா ??

 

ஒன்பது நாட்களுக்கு முன்னர் கூட காலையில் எழுந்து தானே குளித்து, உடைமாற்றி போட்டுவாறன் என்று கூறிவிட்டுப் போனவர் முக்கால் மணி நேரகுத்தில் இல்லாமற் போனது அவளால் இன்றுவரை நம்பத்தான் முடியாமல் இருக்கிறது.

இத்தனை நாட்கள் வீட்டில் மாறிமாறி உறவினர்கள் புடை சூழப் படுத்தது மனதுக்கு இதமாக இருந்தாலும் இன்று கட்டிலில் படுக்க வேண்டும் என்னும் ஆசையைத் தர இரவு பத்து மணிக்கு இரண்டு மகன்களுடன் அவர்கள் கட்டிலில்   போய் நின்மதியாகப் படுத்தாள் வாணி.

 

இரு மாடிகள் கொண்ட பெரிய வீட்டில் கீழே மாமனாருக்கும் மாமியாருக்கும் ஒரு படுக்கை அறை. மேலே இவர்களது படுக்கையறை அருகே பிள்ளைகளின் அறை. மாமியார் தனியே கீழே படுக்க முடியாது என்பதால் இவர்களது  படுக்கை அறையில் இந்த ஒன்பது நாட்களும் இவளது தாயும் மாமியாரும் தூங்க, இவள் மற்ற உறவினர்களுடன் வரவேற்பறையில் கணவனின் சகோதரி பிள்ளைகளுடன் தூங்கினாள். அவர்களும் நேற்றுக் காலை மாமாவின் எட்டு முடிய இன்று சுவிசுக்குக் கிளம்ப, இவளுக்குக் கணவனுடன் மாமனாரின் படுக்கையில் போய்த் தூங்க எதோ மனம் வரவில்லை. பயம் என்று சொல்ல முடியாது ஆனாலும் எதுவோ ஒன்று தடுக்க பிள்ளைகளுடன் படுத்தது அதனால்த்தான்.

 

மூத்தவன் எப்போதும் ஒழுங்காகப் படுக்கவே மாட்டான். அங்கு இங்கு திரும்பி போர்வை விலக்கியபடி .... சின்னவனும் பெரியவனும் மாறிமாறி இழுக்க இவளுக்குக் குளிரில் என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்றைக்கும் நின்மதியாகப் படுக்க முடியாது போல் இருக்கே என நினைத்தவள், எதுக்கும் கீழே போய் கணவனுடன் படுக்க முடிவு செய்து நேரம் பார்த்தால் பதினோரு மணி. மேலே அறை விளக்கை நிறுத்திவிட்டு படிகளில் கடகடவென இறங்கினால் கீழே இருட்டு.

 

மாமனாரின் அறையில் இருந்து கணவனின் குறட்டைச் சத்தமும் சிறிய வெளிச்சமும் கோலில் விழுந்து கொண்டிருந்தது. கீழே இறங்கியவளுக்கு அந்தக் கோலின் ஒரு மூலையில் யாரோ நிற்பது போல் தெரிய, மீண்டும் மேலே ஒடுவோமோ என மூளை எண்ணிய கணம், மேலேயும் எல்லா விளக்கும் அணைத்துவிட்டேனே எப்படிப் போவது என்னும் கேள்வியும் எழ, ஒரே ஓட்டமாக ஓடிச் சென்று கணவனுக்குப் பக்கத்தில் எப்படிப் படுத்தாள் என்று தெரியாமல் கணவனின் தோள்மூட்டில் தலை வைத்தும் கணவன் எழும்பாதது பீதியைக் கிளப்பியது.

 

கண்களை இறுக்க மூடி இருந்தவள் திறந்து பார்த்தபோது கணவனின் மூன்று அங்குலத் தாடியும் அதற்கு ஊடாக மாமனாரின் உருவமும் தெரிய வயிறு எல்லாம் பயத்தில் சுருள மீண்டும் உடனே கண்களை மூடினாள். என் நினைப்பாக இருக்கும் என்று எண்ணியபடி மீண்டும் கண்களைத் திறந்தால் மீண்டும் மாமனாரின் உருவம் தாடியூடாக. உடனே சிறிது துணிவை வரவளைத்துக்கொண்டு கணவனின் தாடியை  விலத்தினால் மாமனாரைக் காணவில்லை. என் நினைப்புத்தான் என்று எண்ணியபடி தாடியைக் கீழே விட மீண்டும் மாமனாரின் உருவம்.

 

ஐயோ தாடியை விடு என்று கணவன் சொன்னபோதுதான் அவளுக்குத் தான் கணவனின் தாடியை பயத்தில் இறுகப் பற்றி இருப்பது தெரிய உடனே கணவனிடம் மாமா தெரியிறார் என்றாள். நீ எப்ப இதில வந்து படுத்தனி என்று கேட்டபடி அவள் பக்கமாகத் திரும்பி அவளை அணைத்தபடி அப்பா எங்களுக்கு ஒண்டும் செய்ய மாட்டார். பயப்பிடாமல் படு என்று கணவன் சொன்னதன் பின் வாணி கண்களைத் திறக்கவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு மோசமாகவோ இருக்கு ??? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு மோசமாகவோ இருக்கு ??? :D

 

அவ்வளவு மோசமாய் இல்லை ,ஆனால் வாசிக்க பயமாய் இருக்கு ......:D .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருடைய இழப்பு என்பது ஈடு செய்யமுடியாதது

ஒருவர் அந்த இடத்தில் இல்லையென்பதை நாம்  ஏற்றுக்கொண்டுவிட்டால் கூட

பழக்கநிலையும்

மனமும் இன்னும் பரிட்சியமாகவில்லை என்பதே உண்மை...

 

நன்றி கதைக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னுடைய கதை இல்லை. அப்பாவின் இழப்பின் போது வந்த தம்பியின் நண்பன் மனைவி கூறியது. அதைக் கேட்ட எமக்கு பயம் இல்லாவிட்டாலும் அப்பாவின் எட்டு நடந்த அன்று ஒரு சுவாரசியமான நிகழ்வு இருக்கு பின்னர் எழுதுகிறேன்.

 

 


அவ்வளவு மோசமாய் இல்லை ,ஆனால் வாசிக்க பயமாய் இருக்கு ...... :D .....

 

வருகைக்கு நன்றி புத்தன். உங்களுக்கு இப்படி ஏதாவது அனுபவம் உண்டா ???
 


ஒருவருடைய இழப்பு என்பது ஈடு செய்யமுடியாதது

ஒருவர் அந்த இடத்தில் இல்லையென்பதை நாம்  ஏற்றுக்கொண்டுவிட்டால் கூட

பழக்கநிலையும்

மனமும் இன்னும் பரிட்சியமாகவில்லை என்பதே உண்மை...

 

நன்றி கதைக்கு....

 

வருகைக்கு நன்றி அண்ணா. அவர்கள் இல்லை என்பதும் தான் பல விடயங்கள் அப்படிச் செய்திருக்கலம் இப்படிச் செய்திருக்கலாம் என மனம் அங்கலைப்பதைத் தவிர்க்கவே முடிவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுடன் மாமா இறந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன. வீடு முழுதும் ஒரே உறவினர்களும் தேவைக்கு அதிகமான உணவுகளும் யாரினது என்று தெரியாத பாத்திர பண்டங்களுமாய் வாணிக்கு உடல், மன அலைச்சல் இரண்டும் சேர்ந்து இன்றாவது நின்மதியாகத் தூங்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

 

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த பின்னும் மாமாவின் மனத்திடம் தான் இத்தனை நாட்கள் அவரை வாழ வைகிறதோ என்று வாணி பல நாட்கள் வியந்திருக்கிறாள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாமாவை வைத்தியசாலையில் இருந்து வரும் வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களே மீண்டும் இறக்கி விடுவார்கள்.

 

போகும்போது நடந்து செல்லும் மாமா வரும்போது உற்சாகம் இழந்தபடி கைத்தாங்கலாக அழைத்து வரப்படுவது அவளுக்கு பச்சாதாபத்தை ஏற்படுத்தும். அவள் அவரை என்றும் தன் கணவனின் தந்தையாக எண்ணியதே இல்லை. தன் தந்தை போலவே ஓடி ஓடி எல்லாம் செய்பவள். அவருக்கும் மருமகள் மேல் தீராத அன்பு உண்டுதான். எத்தனை வேதனை என்றாலும் துளிகூட மகன் மனைவிக்கோ அன்றி வாணிக்கோ கூடக் காட்டிக்கொள்ளாது எதுவும் நடவாததுபோல் திரியும் மாமனாரை அவளுக்குப் பிடிக்காமற் போகுமா ??

 

ஒன்பது நாட்களுக்கு முன்னர் கூட காலையில் எழுந்து தானே குளித்து, உடைமாற்றி போட்டுவாறன் என்று கூறிவிட்டுப் போனவர் முக்கால் மணி நேரகுத்தில் இல்லாமற் போனது அவளால் இன்றுவரை நம்பத்தான் முடியாமல் இருக்கிறது.

இத்தனை நாட்கள் வீட்டில் மாறிமாறி உறவினர்கள் புடை சூழப் படுத்தது மனதுக்கு இதமாக இருந்தாலும் இன்று கட்டிலில் படுக்க வேண்டும் என்னும் ஆசையைத் தர இரவு பத்து மணிக்கு இரண்டு மகன்களுடன் அவர்கள் கட்டிலில்   போய் நின்மதியாகப் படுத்தாள் வாணி.

 

இரு மாடிகள் கொண்ட பெரிய வீட்டில் கீழே மாமனாருக்கும் மாமியாருக்கும் ஒரு படுக்கை அறை. மேலே இவர்களது படுக்கையறை அருகே பிள்ளைகளின் அறை. மாமியார் தனியே கீழே படுக்க முடியாது என்பதால் இவர்களது  படுக்கை அறையில் இந்த ஒன்பது நாட்களும் இவளது தாயும் மாமியாரும் தூங்க, இவள் மற்ற உறவினர்களுடன் வரவேற்பறையில் கணவனின் சகோதரி பிள்ளைகளுடன் தூங்கினாள். அவர்களும் நேற்றுக் காலை மாமாவின் எட்டு முடிய இன்று சுவிசுக்குக் கிளம்ப, இவளுக்குக் கணவனுடன் மாமனாரின் படுக்கையில் போய்த் தூங்க எதோ மனம் வரவில்லை. பயம் என்று சொல்ல முடியாது ஆனாலும் எதுவோ ஒன்று தடுக்க பிள்ளைகளுடன் படுத்தது அதனால்த்தான்.

 

மூத்தவன் எப்போதும் ஒழுங்காகப் படுக்கவே மாட்டான். அங்கு இங்கு திரும்பி போர்வை விலக்கியபடி .... சின்னவனும் பெரியவனும் மாறிமாறி இழுக்க இவளுக்குக் குளிரில் என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்றைக்கும் நின்மதியாகப் படுக்க முடியாது போல் இருக்கே என நினைத்தவள், எதுக்கும் கீழே போய் கணவனுடன் படுக்க முடிவு செய்து நேரம் பார்த்தால் பதினோரு மணி. மேலே அறை விளக்கை நிறுத்திவிட்டு படிகளில் கடகடவென இறங்கினால் கீழே இருட்டு.

 

மாமனாரின் அறையில் இருந்து கணவனின் குறட்டைச் சத்தமும் சிறிய வெளிச்சமும் கோலில் விழுந்து கொண்டிருந்தது. கீழே இறங்கியவளுக்கு அந்தக் கோலின் ஒரு மூலையில் யாரோ நிற்பது போல் தெரிய, மீண்டும் மேலே ஒடுவோமோ என மூளை எண்ணிய கணம், மேலேயும் எல்லா விளக்கும் அணைத்துவிட்டேனே எப்படிப் போவது என்னும் கேள்வியும் எழ, ஒரே ஓட்டமாக ஓடிச் சென்று கணவனுக்குப் பக்கத்தில் எப்படிப் படுத்தாள் என்று தெரியாமல் கணவனின் தோள்மூட்டில் தலை வைத்தும் கணவன் எழும்பாதது பீதியைக் கிளப்பியது.

 

கண்களை இறுக்க மூடி இருந்தவள் திறந்து பார்த்தபோது கணவனின் மூன்று அங்குலத் தாடியும் அதற்கு ஊடாக மாமனாரின் உருவமும் தெரிய வயிறு எல்லாம் பயத்தில் சுருள மீண்டும் உடனே கண்களை மூடினாள். என் நினைப்பாக இருக்கும் என்று எண்ணியபடி மீண்டும் கண்களைத் திறந்தால் மீண்டும் மாமனாரின் உருவம் தாடியூடாக. உடனே சிறிது துணிவை வரவளைத்துக்கொண்டு கணவனின் தாடியை  விலத்தினால் மாமனாரைக் காணவில்லை. என் நினைப்புத்தான் என்று எண்ணியபடி தாடியைக் கீழே விட மீண்டும் மாமனாரின் உருவம்.

 

ஐயோ தாடியை விடு என்று கணவன் சொன்னபோதுதான் அவளுக்குத் தான் கணவனின் தாடியை பயத்தில் இறுகப் பற்றி இருப்பது தெரிய உடனே கணவனிடம் மாமா தெரியிறார் என்றாள். நீ எப்ப இதில வந்து படுத்தனி என்று கேட்டபடி அவள் பக்கமாகத் திரும்பி அவளை அணைத்தபடி அப்பா எங்களுக்கு ஒண்டும் செய்ய மாட்டார். பயப்பிடாமல் படு என்று கணவன் சொன்னதன் பின் வாணி கண்களைத் திறக்கவே இல்லை.

 

உங்கள் கதைக்கு நன்றி சகோதரி .

எனது தந்தையை இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன . அவர் இறந்த பின் அவர் இருப்பை சில நாட்களுக்கு நாம் உணருவோம் என்று தெரிந்தவர் கூறினார் .

ஆனால் நாம் அப்படி ஒன்றையும் உணரவில்லை . எனது தந்தை எல்லோராலும் மதிக்கப் பெற்ற ஒரு உத்தமராக வாழ்ந்தவர் .

இன்றும் அவர் பெருமையை பலர் போற்றுவதை கேள்விப் படுகிறேன் . எனது 10 வயது நிரம்பிய மகள் அப்பொழுது அவளுக்கு 7 வயதிருக்கும் கண்ணீருடன்

நின்ற அம்மாவிடம் சென்று பாட்டாவை கடவுள் தனக்கு வேண்டும் என்று கூப்பிட்டு இருக்கிறார் . ஆனால் உங்களோடு என்றும் இருப்பார் என்று பெரிய

மனிஷி போல் கூறியது மட்டும் எனது அப்பாவே அவள் வடிவில் எமக்கு ஆறுதல் கூறியது போல் இருந்தது .

உங்கள் கதையை வாசித்தவுடன் உடனே என் அப்பாவை தான் நினைத்தேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீரா வருகைக்கும் கருத்துக்கும்.  என் அப்பா கூட வருவார் என நாம் எல்லோரும் எதிர் பார்த்தோம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.  என் அப்பா கூட வருவார் என நாம் எல்லோரும் எதிர் பார்த்தோம் தான். 

 

எனது அப்பா ஊரில் இறந்த போது (2008) நான் அவருடைய இறுதிக்கிரிகையில் கலந்து கொள்ளவில்லை.

அவருடைய உடல் எரிந்த அதே நாள் அவர் என் வீட்டின்  வாசலில் ஒரு வினாடியில்   என் கண் முன்னே தோன்றி மறைந்தார். :)

 அன்பு கொண்டவர்கள் மரணித்தாலும் அன்புள்ளவர்களுக்கு அருகே இருப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

வாசிக்கவே பயமாய் இருக்கப்பா  :(


வேண்டாம் நான் வாசிக்க மாட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே பயமாய் இருக்கப்பா  :(

வேண்டாம் நான் வாசிக்க மாட்டன்

 

வாசிக்கவே வேண்டாம் நீங்கள் மீனா :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா ஊரில் இறந்த போது (2008) நான் அவருடைய இறுதிக்கிரிகையில் கலந்து கொள்ளவில்லை.

அவருடைய உடல் எரிந்த அதே நாள் அவர் என் வீட்டின்  வாசலில் ஒரு வினாடியில்   என் கண் முன்னே தோன்றி மறைந்தார். :)

 அன்பு கொண்டவர்கள் மரணித்தாலும் அன்புள்ளவர்களுக்கு அருகே இருப்பார்கள்.

 

 

இப்படிப் பல இடங்களில் நடந்திருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

 

Link to comment
Share on other sites

பயம் என்று இல்லை. உண்மையில் விரும்பியவர்கள் திரும்பி வரமாட்டார்களா என்ற ஏக்கம் தான் கதையை வாசித்து முடித்த போது எனக்கு தோன்றியது. உங்கள் மற்ற திகில் கதையை காண ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திகில் கதை கட்டாயம் வரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயாரும் காலமாகி ஆறு மாதங்களாகி விட்டன...! தகனம் செய்து உறவினர் எல்லாம் சென்றபின் ஒருமாதம்வரை அவவின் அசுமாத்தத்தை வீட்டில் நாம் உணர்ந்திருக்கின்றோம்.

 

--  அவவின் அறையைக் கடக்கும்போது தனியாகத் தெரியும் வாசனை.

---  அவ இரவில் செற்றியில் வந்து அமர்வது போன்ற சரசரப்பு,

---  அகஸ்மாத்தாய் கூப்பிடும் குரல்.

எமது நினைவுகளாய்க் கூட இருக்கலாம், தெரியவில்லை...!

 

போன்ற சில...!

 

இப்ப அப்படி எதுவும் இல்லை...!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் திகிலாகித்தான் போனேன் சுமே..... மவளே திகில் கதையை அந்தமாதிரி எழுதக்கூடிய திறமை இருக்கிறது. கவனத்தில் எடுத்தால் நம்பர் வண் ஆகலாம். :rolleyes:

 

எழுத நினைத்த விடயத்தை முன்பெல்லாம் வெளியில் நின்று பார்ப்பதுபோல் உங்கள் எழுத்து தோன்றும் இப்போது மிக நெருக்கமாக உள்வாங்கப்பட்டுள்ளீர்கள்.....

 

கருத்து எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கவேண்டியுள்ளதே.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயாரும் காலமாகி ஆறு மாதங்களாகி விட்டன...! தகனம் செய்து உறவினர் எல்லாம் சென்றபின் ஒருமாதம்வரை அவவின் அசுமாத்தத்தை வீட்டில் நாம் உணர்ந்திருக்கின்றோம்.

 

--  அவவின் அறையைக் கடக்கும்போது தனியாகத் தெரியும் வாசனை.

---  அவ இரவில் செற்றியில் வந்து அமர்வது போன்ற சரசரப்பு,

---  அகஸ்மாத்தாய் கூப்பிடும் குரல்.

எமது நினைவுகளாய்க் கூட இருக்கலாம், தெரியவில்லை...!

 

போன்ற சில...!

 

இப்ப அப்படி எதுவும் இல்லை...!

 

இறந்தவரின் ஆத்மா ஒரு மாதகாலத்திற்கு தான் இருந்த இடத்தையே சுற்றி சுற்றி வருமென்று முதியவர்கள் கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயாரும் காலமாகி ஆறு மாதங்களாகி விட்டன...! தகனம் செய்து உறவினர் எல்லாம் சென்றபின் ஒருமாதம்வரை அவவின் அசுமாத்தத்தை வீட்டில் நாம் உணர்ந்திருக்கின்றோம்.

 

--  அவவின் அறையைக் கடக்கும்போது தனியாகத் தெரியும் வாசனை.

---  அவ இரவில் செற்றியில் வந்து அமர்வது போன்ற சரசரப்பு,

---  அகஸ்மாத்தாய் கூப்பிடும் குரல்.

எமது நினைவுகளாய்க் கூட இருக்கலாம், தெரியவில்லை...!

 

போன்ற சில...!

 

இப்ப அப்படி எதுவும் இல்லை...!

 

ஆண்டுக்கணக்காக அவர்கள் வாழ்ந்த இடம். ஒருநாளில் முடியக் கூடியதா என்ன??

 

கொஞ்சம் திகிலாகித்தான் போனேன் சுமே..... மவளே திகில் கதையை அந்தமாதிரி எழுதக்கூடிய திறமை இருக்கிறது. கவனத்தில் எடுத்தால் நம்பர் வண் ஆகலாம். :rolleyes:

 

எழுத நினைத்த விடயத்தை முன்பெல்லாம் வெளியில் நின்று பார்ப்பதுபோல் உங்கள் எழுத்து தோன்றும் இப்போது மிக நெருக்கமாக உள்வாங்கப்பட்டுள்ளீர்கள்.....

 

கருத்து எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நேரம் ஒதுக்கவேண்டியுள்ளதே.... :icon_mrgreen:

 

 

நன்றி சகாரா உங்கள் கருத்துக்கு. நேரம் இருந்தாலும் என் கணணி தான் எனக்கு வில்லன் என்ன செய்ய ???

 

இறந்தவரின் ஆத்மா ஒரு மாதகாலத்திற்கு தான் இருந்த இடத்தையே சுற்றி சுற்றி வருமென்று முதியவர்கள் கூறுவார்கள்.

 

நான் லண்டனில் அப்பாவின் படத்தை வைத்து விளக்கைக் கொளுத்துவேன். வந்த ஒருவர் சொன்னார் ஒரு இடத்தில் மட்டுமல்லா கொளுத்த வேண்டும். அப்பா அங்கும் இங்கும் வந்து கஷ்டப்படப் போகிறார் என்று.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.