Jump to content

முல்லைத்தீவு நாயாறில் சிங்கள மீனவர் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாகாணசபையில் தீர்மானம்


Recommended Posts

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கடற்பகுதியில் தொழில் செய்வதற்கு பெற்றுக்கொண்ட தற்காலிக அனுமதிகளுக்கு அப்பால் தென்னிலங்கை மீனவர்கள் யாருடைய அனுமதியுமின்றி அதிகமாகப் படகுகளைக் கொண்டு வந்து தொழில் செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மீறி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு வடக்கு மாகாணசபையில் நேற்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வடக்கு மாகாணசபையின் 27 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது மேற்படி விடயம் தொடர்பான பிரேரணை வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்டது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு கடல்பகுதியில் 2011ஆம் ஆண்டு பருவகாலத் தொழிலுக்காக வந்து தங்கியிருந்த சிங்கள மீனவர்களுக்கு படையினர் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின் கடுமையான அழுத்தங்களால் 72 மீனவர்களுக்கு மட்டும் தற்காலிக அனுமதி ஒரு ஆண்டுக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் இன்று அதற்கு மேலதிகமாக மீனவர்கள் வந்து தங்கியிருந்து கடற்றொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக கொக்கிளாய் பகுதியிலும் இதேபோன்று பருவகாலத் தொழிலுக்காக வந்து தங்கியிருந்த  சிங்கள மீனவர்கள் பின்னர் அந்த இடம் தமக்குச் சொந்தமானது எனக் கூறிக்கொண்டு அங்கேயே தங்கி விட்டனர்

இதே போன்றதொரு நிலைமை நாயாறு பகுதியிலும் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்களே அதிகம்.நாயாறு பகுதியில் வந்து தங்கியிருந்த மீனவர்களில் 72 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டபோதும் அங்கே 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள்.தெற்கில் ஆட்சி மாறியபோதும் இவ்விடயத்தில் எந்த சாதகமான மாற்றமும் ஏற்படவில்லை. எனவே இவ்விடயத்தில் முதலமைச்சர் அவர்கள் கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.ன்று ரவிகரன் குறிப்பிட்டார். பிரேரணையை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் வழிமொழிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

http://www.worldtamils.com/?p=152779

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எல்லை தாண்டி (சொந்த ஊரை விட்டு அடுத்தவன் ஊருக்கு வந்து).. குடியிருந்து.. மீன்பிடிக்கும்.. சிங்களவனை யார் சுடுவது..?!

 

அணில் விளக்கம் தருவாரா..?! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணில் கலாவிடம் கேட்கச்சொல்லும்...கல ஒரு கண் சிமிட்டலுடன் அலுவலை முடித்து விடுவா...அப்புறம் என்ன இன்னம் 100 சிங்களர் கூடுதாலக நிப்பினம்..

Link to comment
Share on other sites

எங்கட கிருமிகள் சம்பந்தனும் சுமந்திரனும் சொல்வார்கள் இதுவும் ஒரு இன ஒற்றுமைதான் என்று .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலி சாரை, இந்தப் பக்கம் காணவில்லை. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சிங்கள மீனவர்களின் அடாவடித்தனம் தடுத்து நிறுத்தப்படவேண்டும். சிங்கள மீனவர்கள் வந்து மீன்பிடிக்கிறார்கள் என்பதற்காக தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறல்களை அனுமதிக்க முடியாது! இது இலங்கை என்ற நாட்டுக்குட்பட்ட விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சிங்கள மீனவர்களின் அடாவடித்தனம் தடுத்து நிறுத்தப்படவேண்டும். சிங்கள மீனவர்கள் வந்து மீன்பிடிக்கிறார்கள் என்பதற்காக தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறல்களை அனுமதிக்க முடியாது! இது இலங்கை என்ற நாட்டுக்குட்பட்ட விடயம்.

எல்லை தாண்டிச் செய்யும் அடாவடித்தனத்தை தமிழக மக்கள் நிறுத்த வேண்டும்!

இரண்டிற்கும் கருத்திற்கும் வித்தியாசம் உள்ளது வாலி சார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் சுடணும்  என்பதற்கு வக்காலத்து வாங்கியவர்களைக்காணோம்....

தமிழனுக்கும் தமிழனுக்கும் பிரச்சினை என்றால் தான் வருவார்கள்

எண்ணெய் ஊற்ற............... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று யாழ் மீனவர் வலையை கிளிநொச்சியில் சகதமிழ் மீனவர் அறுத்தெறிந்ததாய் செய்தி வந்த்தே?

பாரம்பரிய உரிமையில் வெளியாட்கள் கைவைப்பது தப்புத்தான். அது தமிழக, சிங்கள, யாழ் யாராயினும்.

வாலிசார் உங்க லோஜிக் எங்கேயோ இடிக்கிற மாரித்தான் தெரியுது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான், இலங்கையில் உள்ள எந்த ஒரு மீனவனும் இலங்கையின் கடலெல்லைக்குள் மீன்பிடிக்கலாம் என சொல்லப்படுகிறது. வட கடலில் சிங்கள மீனவர் மீன்பிடிப்பது சட்டப்படி குற்றமல்ல. ஆனால் இருதரப்பு உடன்பாடுகளுக்கமைய எல்லைகளை வரையறுத்துக் கொள்ளலாம். இந்திய மீனவர்கள இலங்கையின் எல்லைக்குள் அடாத்தாக வந்து மீன்பிடிப்பவர்கள், மற்றும் செம்மர விவகாரம் அனுமதியின்றி ஆந்திராவில் மட்டுமல்ல தமிழகம் கர்நாடகாவில் கூட சட்டத்துக்குப் புறம்பானது. தமிழகத்தில் இவர்கள் வெட்டினாலே அது தண்டனைக்குரிய குற்றம். அதைவிட இவர்கள் ஆந்திராவில் புகுந்து வெட்டியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கு கடற்பரப்பில்... சிங்களவர்களை குடியேற்றி மீன்பிடிக்க விடுவது போல.. மேற்கு.. தெற்குக் கடற்பரப்பில் தமிழர்கள் குடியேறி...மீன்பிடிக்க சொறிலங்காவுக்கு வக்காளத்து வாங்குபவர்கள் ஏற்பாடு செய்யலாமே..?!

 

தமிழக.. தமிழீழ கடல் எல்லை தென் பகுதி கடற்பரப்பு போன்று பரந்த ஒன்றல்ல. குறுகிய கடற்பரப்பு. மேலும் கச்சதீவை அண்டி மீன்பிடிக்க இரண்டு பகுதிக்கும் அனுமதி உண்டு.

 

சீன மீனவர்கள் வந்து மீன்பிடிக்க அனுமதி அளிக்கும் சிங்கள இனவாதிகள்.. தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதில் மட்டும்..?!

 

ஆந்திர தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் எத்தனையோ வகையில் கொள்ளை அடிக்கிறார்கள்... மலை மாவட்டங்களை சார்ந்த... தமிழர்கள் ஆந்திர கொன்ராக் காரர்களால்.. கூலிகளாய் அமர்த்தப்பட்டு.. சட்டவிரோத நடவடிக்கையில் அவர்களை ஈடுபடுத்துவது.. யார் தப்பு...! அப்பாவி கூலித் தொழிலாளர்களின் தப்பல்ல. தமிழகத்தை விட்டு தொழிலாளர்கள்.. ஆந்திராவில் தொழில் செய்ய முடியாது என்றால்.. தமிழகத்தில் உள்ள அத்தனை ஆந்திரனும், கன்னடனும்.. சிங்களவனும்.. மலையாளியும்.. ஹிந்தியனும்.. அதனைவிட்டு வெளியேறுவதுதான் முறை. அதன் பின் தமிழன் எல்லை தாண்ட வேண்டிய தேவையே வராது. வசதி எப்படி..?! :icon_idea:

 

கிளிநொச்சியில்.. மரக்கடத்தல் உச்சமாம். இதே புலிகள் இருந்த காலத்தில்.... இந்த புல்லுருவிகள்.. புடுங்கி வீசப்பட்டிருந்தார்கள். இன்று.. மீண்டும்.. சிங்களக் காடைகளோடு சேர்ந்து காடழிக்கிறார்கள்.

 

ஆக மொத்தத்தில்.. சிங்கள ஆளும் வர்க்கமும்.. ஹிந்திய ஆளும் வர்க்கமும் வேறு வேறல்ல. தமிழர்களை மட்டும் வேறுபடுத்தும் தமிழர்களே.. தான் தமிழர்களின் அழிவை பரிசகிக்கின்றனர். :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.