Jump to content

பார்சலில் வந்த 14 லட்சம்ஐஸ்வர்யாவிடம் விசாரணை


Recommended Posts

நெதர்லாந்து நாட்டிலிருந்து ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 14 லட்சம் பணம் தபால் மூலம் வந்தது குறித்து அவருக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் பார்சல்களை ஸ்கேன் செய்து பார்ப்பது தபால் துறையின் வாடிக்கையான விஷயம். பாதுகாப்பு கருதி இந்த நிநவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராய்க்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலையும் அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் ஐரோப்பிய நாணயமான யூரோ பணக் கட்டுக்கள் இருந்தன.

பார்சலில் பணம் அனுப்பக் கூடாது என்பது விதியாகும். எனவே ஐஸ்வர்யாவுக்கு வந்திருந்த அந்த பார்சலைப் பிரித்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ. 14 லட்சம் மதிப்புள்ள யூரோ கரன்சி இருந்தது.

இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மும்பை சுங்கத் துறை ஆணையர் பிரசாத் கூறுகையில், மின்னணுப் பொருட்களுக்குள் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் குறித்து அந்த பார்சலில் எந்தவிதக் குறிப்பும் இல்லை. இதுதொடர்பாக ஐஸ்வர்யாவிடம் விளக்கம் கேட்கவுள்ளோம். அவருக்கு தெரிந்து அனுப்பப்பட்டுள்ளதா அல்லது தெரியாமல் வந்த தபாலா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

ஐஸ்வர்யா என்றாலே சர்ச்சை என்றாகிவிட்ட நிலையில் தற்போது யூரோ பணத்தால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

http://thatstamil.oneindia.in/specials/cin...ishwarya_6.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ்சு எல்லாம் கிளிஞ்சுது போ.இவவுக்கு அடிக்கடி இப்படியான பார்சல்கள் வாறதுதானாம்.அதிலும் பாகிஸ்தான் மாம்பழத்தோட்ட பண்ணையார்களிடமிருந்து அதிகமாம். :rolleyes::D:D B)

Link to comment
Share on other sites

நெதர்லாந்திலிருந்து தனது பெயருக்கு ரூ. 13 லட்சம் பணம் அனுப்பியவர் யார் என்று எனக்குத் தெரியாது என நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராயின் ¬கவரிக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து பார்சல் மூலம் சில மின்னணுப் பொருட்களையும் அத்தோடு 23,000 யூரோ பணத்தையும வைத்து (இந்திய மதிப்பில் ரூ. 13 லட்சம்) ஒருவர் அனுப்பியுள்ளார்.

இந்தப் பணம் எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து சுங்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் ஐஸ்வர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்பணம் குறித்து ஐஸ்வர்யா வியப்பு தெரிவித்துள்ளார்.

அக்பத் ஜோதா என்ற படத்தின் ஷýட்டிங்குக்காக ஜெய்ப்பூர் வந்த ஐஸ்வர்யா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், யார் பணத்தை அனுப்பியது என்று எனது பெற்றோரும், நீங்களும், உலகின் பல்வேறு பகுதியில் இருப்போரும் வியப்படைந்ததைப் போலவே நானும் வியப்படைந்துள்ளேன்.

இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. யார் அனுப்பியது என்பது தெரியவில்லை. இந்தப் பிரச்சினை சுமூகமாக முடியும் என நம்புகிறேன் என்றார். இதற்கிடையே, சுங்கத் துறை விசாரணைக்கு ஐஸ்வர்யா ராய் கண்டிப்பாக வர வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை சுங்கத் துறை ஆணையர் பிரசாத் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பார்சலை அனுப்பியவர் இந்தியாவைச் சேர்ந்தவர். அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு ஐஸ்வர்யா தரப்பில் பதில் ஏதும் இல்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். விசாரணைக்கு அவர் ஆஜராகாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரசாத்.

இந்த நலையில், ஐஸ்வர்யாவின் தந்தை கிஷன் ராஜ் ராய் சுங்கத்துறை அலுவலகத்திற்குச் சென்று உரிய அதிகாரிகளை சந்தித்தார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

http://thatstamil.oneindia.in/specials/cin...ishwarya_7.html

Link to comment
Share on other sites

நெதர்லாந்திலிருந்து தனது பெயருக்கு ரூ. 13 லட்சம் பணம் அனுப்பியவர் யார் என்று எனக்குத் தெரியாது என நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

ஜய்யோ அது நான் தான் தெரியாம அனுப்பிட்டேன் உடனே திருப்பி அனுப்புங்கோ ஜஸ்

மனுசிக்கு தெரிச்சா நான் வாழவெட்டியாகி விடுவேன் :rolleyes::lol:

Link to comment
Share on other sites

எனக்கு அப்பவே சந்தேகம்..இது எங்கட யாழ் ம--- ஒராள் என்று :P

Link to comment
Share on other sites

எனக்கு அப்பவே சந்தேகம்..இது எங்கட யாழ் ம--- ஒராள் என்று :P

அது தான் தூயா எப்படி அந்த காசை திருப்பி எடுப்பது :rolleyes::)

Link to comment
Share on other sites

உண்டியலில போட்ட காசுதான் அது வினித்

உந்தா சாறியை பற்றி கேட்ட்தும் உவருக்கு அனுப்பவோ :):D:rolleyes: :P

Link to comment
Share on other sites

சகோதரா, ம்ம்ம்ம் ஐஸ்வர்யாவிடம் இருந்து வந்தாலும் வரலாம்..ஆனால் இது எத்தனை அதிகாரிகளின் கையில் இருந்து வரவேணும்...ஹிம்ம்ம்ம்ம் தேறாது..சொல்லிட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே அண்ணே வினித் அண்ணே ஐஸ்சுட்டை போன காசு கோவிந்தோ கோவிந்தா! :P ஐஸ்சுட்டை போன காசு ஒரு வழிப்பாதையால் போன வாகனம் மாதிரி போனால் போனது தான் திரும்பி வரவே வராது :rolleyes: பண்ணியில் பண்ணிப்பாரும் இல்லாட்டி ஒரு வேளை அபேக் பச்சனிடம் சொல்லிப்பாரும் B)

Link to comment
Share on other sites

பார்சல் பணம்: ஐஸுக்கு தொடர்பு இல்லை

நெதர்லாந்து நாட்டிலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அனுப்பப்பட்ட பணத்திற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என மும்பை சுங்கத் துறை அறிவித்துள்ளது.

ஐஸ்வர்யாவின் பழைய வீட்டு முகவரிக்கு சமீபத்தில் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒரு பார்சல் அனுப்பப்பட்டது. அந்தப் பார்சலை ஸ்கேன் செய்து பார்த்த சுங்கத் துறை அதிகாரிகள், அதில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள யூரோ பணமும், சில மின்னணு எந்திரங்களும் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இந்தப் பணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஐஸ்வர்யாவுக்கு சுங்கத் துறை உத்தரவிட்டது. இருப்பினும் அப்போது படப்பிடிப்பில் ஐஸ்வர்யா பிசியாக இருப்பதால் வர முடியவில்லை என அவரது சார்பில் சுங்கத் துறையிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பதிலாக ஐஸ்வர்யாவின் தந்தை மும்பை சுங்கத் துறை ஆணையர் பிரசாத் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இருப்பினும் ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்தியே ஆக வேண்டும் என்று சுங்கத் துறை கண்டிப்பாக கூறி விட்டது.

இந் நிலையில், நேற்று முபைக்கு வந்த ஐஸ்வர்யாவிடம் விமான நிலையத்தில் வைத்தே சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது பார்சல் பணம் குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் துருவித் துருவி கேள்விகள் கேட்டனர்.

விசாரணையின்போது பலமுறை ஐஸ்வர்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக பின்னர் சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின்னர் ஆணையர் பிரசாத் கூறுகையில்,

விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தார் ஐஸ்வர்யா. சிலமுறை அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். நாங்கள் அவரை சமாதானப்படுத்தினோம். விசாரணை முடிவில், அப்பணத்திற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது. அவர் நிரபராதி என்றார்.

இதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சையிலிருந்து ஐஸ்வர்யா விடுபட்டுள்ளார். விசாரணைக்குப் பின்னர் ஐஸ்வர்யாவின் வழக்கறிஞர் கிரீஷ் குல்கர்னி செய்தியாளர்களிடம் பேசுகையில், இது தேவையில்லாத பிரச்சினை. எங்களைத் தேவையில்லாமல் இழுத்து விட்டு விட்டனர். எங்களது தரப்பை விளக்கி விட்டோம்.

நெதர்லாந்திலிருந்து இந்தப் பார்சலை அனுப்பியவர் யார்? உண்மையிலேயே அவர் அந்தப் பெயரில் இருக்கிறாரா? எதற்காக அனுப்பினார் என்பதை விசாரிக்க வேண்டியது சுங்கத் துறையின் வேலை என்றார்.

http://thatstamil.oneindia.in/specials/cin...ishwarya_5.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.