Jump to content

தாடிக்கார அண்ணே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புத்தக வெளியீடு என்ற விளம்பரத்தை இணையத்தில பார்த்தவுடன் அதில் கலந்துகொள்வது எனமுடிவெடுத்தேன். மெல்பேர்னிலிருந்து எழுத்தாளர்கள் வேறு பங்குபற்றுகிறார்கள் என எழுதியிருந்தார்கள் எனவே நிச்சயம் போகவேணும் என தீர்மானித்தேன்.

அந்த நாளும் வந்தது.

கதிரவன் இளைபாறும் நேரம். மனிதர்களுக்கு அடுத்த நாள் ஒய்வு. வாயில் சுவிங்கத்தை போட்டு மென்றுகொண்டு பின்வரிசையில் போய் உட்கார்ந்தேன். முற்போக்கு பிற்போக்கு, நடுபோக்கு எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் இருந்தார்கள்.

புத்தக வெளியீட்டு வைபவம் தொடங்கியது. வரவேற்புரை, மெளனஞ்சலி என சம்பிராதய சடங்குகள் முடிவடைந்த பின்பு, இப்பொழுது மெல்பேர்னிலிருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் ,கவிஞர், நாடக நடிகர் ,பேச்சாளர் .சு.கா.....பேசுவார் என் அறிவிப்பாளர் அறிவித்தார்.

கையை கட்டிகொண்டிருந்தோர் எல்லோரும் கைக்கு சிறிய வேலைகொடுத்தனர். மண்டபம் ஒலி அலைகளை ரசித்தது. நித்திரை தூங்கியோர் திடுகிட்டு எழுந்தனர்.

 

குறுந்தாடி வைத்த, நனஷனல், பான்ட் அணிந்த 55க்கும் 60க்கும் இடைப்பட்ட வயதுடைய சு.கா புத்தகத்தை பற்றிய விமர்சனத்தை வைத்தார்.

பதின்ம வயதில் புத்தகங்கள் வாசிப்பு, மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடித்தல் போன்ற செயல்களால் சுரேஸின் சிந்தனையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. முக்கியமாக அவனது இனம் வேற்று இனத்தவர்களால் ஒடுக்கப்படுவதை உணர்ந்த அவனது நண்பர்கள் போரட புறப்பட்டனர். ஒவ்வொருத்தரும் தனிநாடு வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெவ்வேறு பாதைகளில் சென்றனர்.

குகன் சுரேசின் தெருவில் வசிப்பவன். இருவரும் ஒரே வகுப்பில்தான் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள். இருவரும் சுரேஸின் சைக்கிளில்தான் பாடசாலை சென்றுவருவார்கள். அன்று பாடசாலையிலிருந்து திரும்பி வரும்பொழுது

"மச்சான் இன்றைக்கு பின்னேரம் உன்ட சைக்கிளை ஒருக்கா தாடா, டவுனுக்கு போகவேணும் "

"பின்னேரம் வா தாரன்"

மூன்று தரம் கேற் கொழுக்கி தட்டும் சத்தம் கேட்டால் அது குகன் தான் என வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். அம்மா அந்த சத்தத்தை கேட்டவுடன் கேற்றடியை பார்க்காமலயே தம்பி குகன் வந்திருக்கிறான் என குரல் கொடுத்தார். அடிவளவுக்குள் ஆட்டுக்கு குழை ஒடித்து கொண்டிருந்த நான் கொக்கத்தடியை அப்படியே மரத்தில் கொழுவி விட்டு , முற்றத்தில் நின்ற சைக்கிளை வந்து எடுக்கும் படி அழைத்தேன்.. நானும் அவனுடன் வருவதாக சொல்ல தான் திரும்பி வருவதற்கு நேரம் செல்லும் என்று சொல்லி என்னை அழைத்து செல்லவில்லை.

 

கிழமையில் ஒரு நாள் எனது சைக்கிளை எடுத்து செல்வான். ஆறு மாதங்களின் பின்பு என்னை அவனுடன் அழைத்து சென்றான். என்னை ஒரு கடையில் நிற்கும் படி கூறிவிட்டு அவன் சென்று சிறிது நேரம் கழித்து ஒரு தாடி வைத்த அண்ணருடன் வந்தான். இவர் சுதா அண்ணே என எனக்கு அறிமுகம் செய்து வைத்தான் .நானும் கலோ அண்ணே என்றேன் ,அவரும் பதிலுக்கு கலோ என்றார் .தேனீர் அருந்த வருமாறு பக்கத்திலிருந்த தேனீர்கடைக்கு அழைத்து சென்றார்.

தேனீர் குடித்தபடியே "தம்பி மட்டர்ன் ரோல் சாப்பிடுவீரோ" என்றார்.

"சாப்பிடுவேன் ஆனால் இன்றைக்கு வெள்ளிக்கிழமை சாப்பிட மாட்டேன்".

"தம்பி நல்ல பக்திமான் போலகிடக்கு"

சிரிச்சு சமாளித்தேன்.

நேற்று இரண்டு தமிழ்சனத்தை பொலிஸ் சுட்டவன். அப்ப உம்மட கடவுள் என்ன கண்ணை மூடிக்கொண்டே இருந்தவர்? என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கும் சிரித்து மழுப்பினேன்.

 

அவர் கேட்ட கேள்விகளில் நியாயம் இருந்தாலும் கடவுளை எதிர்த்து கருத்து சொல்லவில்லை.

எந்த துறையில் படிக்கபோறீர் டாக்டராகவோ இஞ்ஜினியராகவோ வரப்போறீர் என்று அடுத்த கேள்வியை கேட்டார். இல்லையண்ணே, எங்களுக்கும் அதற்கும் வெகுதூரம் கொழும்பில போய் ஐ.சி.எம்.எ செய்யலாம் என்று இருக்கிறேன் என சொன்னேன்.

 

கொழும்பிலும் தமிழன் இனிவரும் காலங்களில் வாழமுடியுமோ தெரியாது. 1977 இல் நடந்த இனக்கலவரம் பற்றி அறிந்திருப்பீர். ஒசியில லங்காராணியில் யாழ்ப்பாணத்திற்கு வரவேணும் என்றால் கொழும்பில போய் படியும் என்று நக்கலடித்தார். அவரிடமிருந்து இருவரும் விடைபெறும் பொழுது தாடிக்கார அண்ணே குகனிடன் சொன்னார் அடுத்த வகுப்புக்கு தோழரையும் அழைத்து கொண்டு வருமாறு.

"அடே குகன் என்ன வகுப்படா தாடிக்காரன் எடுக்கப்போறான்"

"அரசியல் வகுப்படா காய் பேய்காய் ,லெபனான் ரிட்டன்., ஆயுதங்கள் எல்லாம் அந்த மாதிரி கழற்றி பூட்டும்"

"ஆயுதங்களடா , ஆளைவிடடா நான் வகுப்புக்கு வரவில்லை"

"நீ பயப்பிடாத,ஆயுதம் ஒன்றும் நீ தூக்க தேவையில்லை. முதலில் போராளிகள் அரசியல் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு அந்த அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.  பின்பு மக்கள் போராட்டம் வெடிக்கும். அது ஒரு புரட்சிக வெகுஜன போராட்டமாக இருக்கும்"

எனக்கு முதலில் பயமாக இருந்தாலும் போய் பார்ப்போம் என்ன நடக்குது என்று தாடிக்கரா அண்ணேயின்ட இருப்பிடத்திற்கு போக முடிவெடுத்தேன். நேரடியாக தாடிக்கார அண்னையின்ட வீட்டை போய் அரசியல் பாடம்படிக்கலாம் என நினைத்தபடி குகனுடன் சென்றேன். என்னை பெருமாள் கோவிலடி சந்தியில நிற்க்கும் படிசொல்லிவிட்டு குகன் சென்றுவிட்டான்.

 

அரை மணித்தியாலத்தின் பின்பு தனியாக நான் நிற்க்கும் இடத்திற்கு வந்தான். எங்கயடா அண்ணையை காணவில்லை என்று கேட்க, வருவார் தோழரிட்ட சொல்லிவிட்டனான், அவர் கூட்டிகொண்டு வருவார். ஏன்டா உனக்கு அவரின்ட வீடு தெரியாதோ என நான் கேட்க, அடே அவர் என்னைப்போல உன்னைப்போல சாதாரண ஆளே? லெபனான் ரிட்டேன் காய் . அடேய்! இன்னும் கொஞ்ச நாளில் என்னை சந்திப்பதும் இலகுவாக இருக்காது என நக்கலாகவும் அதே நேரம் நம்பக்கூடிய வகையில் சொன்னான்.

தனியாக வந்த தோழர், அண்ணே வர நேரமாகுமாம் என்னை வகுப்பு எடுக்க சொன்னவர், வாங்கோ தேர்முட்டி படியடியிலிருந்து கதைக்கலாம் என எங்களை அழைத்து சென்றார். தேர்முட்டியடியில் ஏற்கனவே எனக்கு அறிமுகமில்லாத இருவர் இருந்தனர். ஆனால் குகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் போலதெரிந்தது. அவர்களின் உரையாடல் குகனை கணட அந்த இருவரும், தோழர் பீட்டர் எப்படி இருக்கின்றீர்கள் என சுகம் விசாரித்தனர். நான் குகனை திரும்பி பார்த்தேன். இங்கு எனது பெயர் பீற்றர் மச்சான் என்றான். சரி அண்ணே வரும் வரை நாங்கள் அரசியல் கலந்துரையாடுவோம் என மூத்த தோழர் தொடங்கினார்.

பேசிகொண்டிருக்கும்பொழுது எப்படி தோழர்களே என கூறிக்கொண்டு அண்ணே எமது அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றினார்.

"நாம் ஏன்போரட வேண்டும தோழர்களே" என அண்ணர் ஒரு கேள்வியை கேட்டார்.

 

ஒவ்வொருத்தரும் ஒரு பதிலை சொல்லிகொண்டிருந்தனர். எனது முறை வந்தவுடன் சொன்னேன் சிங்களவன் அடிக்கிறான் நாங்கள் அவனை திருப்பி அடிக்கவேணும் என்றேன்.

"சிங்களவன் என்று சொல்லக்கூடாது ,சிங்களவர்களிலும் நல்ல சிங்களவர்கள் பலர் உண்டு ஏன் எங்கன்ட ஆட்களை விட சிங்களவர்கள் நல்லவர்கள்".

சிறிது நேரம் மெளனமாக இருந்தது அந்த இடம். அண்ணரே மெளனத்தை கலைத்தார்.

நாளைக்கு யாரவது வெருளிகள் ஆர்மிக்கு கண்ணிவெடி வைக்குங்கள் அதில ஆர்மியும் சாகும் அதனால் எமது எமக்கு தமிழீழம் கிடைக்காது... மக்கள் போராட்டம் மூலம்தான் ஈழம் கிடைக்கும் "

கம்யுனிசம் பற்றி யாருக்கு தெரியுமோ? கம்னிஸ்ட் நாடுகள் எவை? என அடுத்த கேள்வியை அண்ணர் கேட்டார். ஒருத்தரும் பதிலளிக்காதபடியால் எனக்கு தெரிந்த இரண்டு கம்னிஸ்ட் நாடுகளாகிய சீனாவையும் ரசியாவையும் சொல்லி, எனக்கும் அரசியல் தெரியும் என்ற வகையில் அங்கு இருந்தவர்களை பார்த்து ஏளன புன்னகையை உதிர்ந்தேன்.

"தோழரே உலகத்தில் இன்னும் கம்னிஸ்ட் நாடுகள் என்று ஒன்றில்லை , எப்ப உலகம் பூராவும் சோசலிச சமதர்ம சமுதாயம் உருவாகுதோ அப்ப கம்னிஸ்ட் நாடுகள் சாத்தியம் "என்றார்  அண்ணை தோழர்.

இதென்ன கோதாரியா கிடக்குது என்றுபோட்டு அதன் பின்பு அரசியல் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்துகொண்டேன். முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நவகாலனித்துவம் இப்படி பல எமது பழக்கத்தில் இல்லாத சொற்களையெல்லாம் சொல்லி அரசியல் பாடம் எடுத்தார்.

 

இப்படியாக எமது அரசியல் பாடம் தொடர்ந்தது. அடுத்த வகுப்பை வேறு இடத்தில வைப்போம் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்று கூடினால் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என மூத்த தோழர் ஒருவர் கருத்து சொன்னார். அடுத்த வகுப்புக்கு மயிரத்தான் வந்தான் சிங்கன் என்று மனதில் நினைத்து விடைபெற்றேன்.

இனிமேல் குகன் சைக்கிளுக்கு வந்தால் கொடுங்கோ என்னை கூப்பிடவேண்டாம் என வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டு நான் பின் வளவில் ஆடுகளுக்கு குழை ஒடிப்பதற்க்கு சென்று விடுவேன். உயர்தர பரீட்சை எடுத்து பெறுபெறுகளுக்கு காத்திருந்தமையால் பாடசாலைக்கு செல்வதில்லை இதனால் அவனை சந்திக்கும் வாய்ப்பு குறைந்திருந்தது.

ஒரு நாள் சைக்கிளை திருப்பி வீட்டை கொண்டு வந்துவிடும் பொழுது சந்திக்கவேண்டியதாகிவிட்டது. மச்சான் என்னடா உன்னை காணக்கிடைக்கிதில்லை. வகுப்புக்கு வாரது என்று சொல்லிப்போட்டு காய்வெட்டிப்போட்டாய், அடுத்த வகுப்பு எங்கன்ட அம்மன் கோயிலில் தான் நடக்குது வாடா. அண்ணரும் உன்னை கேட்டவர் என்று சொல்லியடி சைக்கிளை மாமரத்தடியில் சாய்த்து வைத்தான். பார்ப்போம் நேரம் கிடைச்சா வாறன் என சொல்லி தொடர்ந்து கதையை வளர்க்காமல் அவனை விடை பெறவைத்தேன். அவனுடன் தொடர்ந்து நற்பை வளர்ப்பதா அல்லது துண்டிப்பதா என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

அன்று அம்மன் கோயில் வகுப்புக்கு போவதற்கு முடிவெடுத்தேன். வழமைபோல தோழர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். தாடி அண்ணர் எனது தோளில் கை போட்டபடி என்ன தோழர் உம்மை பிறகு காணகிடைக்கவில்லை, நீங்கள் எல்லாம் பின்நின்றால் எப்படி நாங்கள் மக்கள் புரட்சியை உருவாக்குவது? எல்லாம் வெல்லலாம் அண்ணே வகுப்பை தொடங்குங்கோ என்று கூறியபடி படிக்கட்டில் இருந்தேன்.

தொடரும்

நியானி: சீர் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் இந்தக் கதையில வருகின்றவர்களை ஊரில் இருந்தபோது சந்திக்கவில்லை. தெரிந்ததெல்லாம் புலிதான்!

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!

தொடருங்கள் புத்தன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!

தொடருங்கள் புத்தன் :)

 

நன்றாக.... அவதானித்து, எழுதப்பட்ட கட்டுரை புத்தன்.

அதிலும்... கிருபனின், கருத்து.... என்னையறியாமல், சிரிக்க வைத்து விட்டது. :D

Link to comment
Share on other sites

சீக்கியரிடம் போய் எங்கட பிரச்சனை கதைத்தது கிருபனின் பிழை . :lol:

Link to comment
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,    :o  :D  :icon_idea: 

தொடரட்டும் புத்தர் . 

 
கிருபன், on 04 Apr 2015 - 5:53 PM, said:
புத்தனின் இந்தக் கதையில வருகின்றவர்களை ஊரில் இருந்தபோது சந்திக்கவில்லை. தெரிந்ததெல்லாம் புலிதான்!

புலம்பெயர்ந்த பின்னர் இப்படியான தாடிக்காரர்களை (தாடி இல்லாமலும்) சந்தித்திருக்கின்றேன். கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி எத்தனை வருடங்கள் ஓடினாலும் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள்!  :D  :icon_idea: 

தொடருங்கள் புத்தன்  :)

Link to comment
Share on other sites

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் .

சரி தவறவிட்டாலும் அரசியல் ஞானி ஆகிவிட்டீர்களே :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்.

 

நன்றிகள் பகலவன் ..... தொடரும் எனது கிறுக்கல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளட்டின் அந்தரங்கத்தை தொடருங்கோ,புத்தா

 

சும்மா ஒரு பார்வையாளனாக மட்டுமே .....இயக்க முகாமில் ஒரு நாள் தங்கியவனுக்கு இருக்கும் தகுதி கூட எனக்கு இல்லை, அவர்களின் அந்தரங்கத்தை விமர்சிக்கும் தகுதி.....நன்றிகள் நந்தன் என்னை தொடர்ந்து கிறுக்க ஊக்க படுத்தியமைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடக்கமே நன்றாக இருக்கு ,

 

எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் நாட்டில் கிடைக்காமல் விட்டு விட்டது .

 

இன்று கூட உலகம் முழுக்க ஒரு அறிவார்த்தமான இளைஞர்களை உலாவவிட்டதும்  உலக  இலக்கியங்களை தமிழர்கள் மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் ,முற்போக்கு அரசியலை கொண்டுவந்ததும் இந்த தாடிக்கரர்கள் தான்,

தொடரட்டும் புத்தர் . 

 

அந்த தாடிக்காரர்களில் அன்டன் பாலசிங்கமும் அடக்கம்:D நன்றிகள் அர்ஜூன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாடிக்காரர்களின் வகுப்புக்கள் கோயில் தேர்முட்டிகளிலும்
கடற்கரை வாடி வீடுகளிலும் தான் அதிகம் நடக்குமாம் உண்மையோ
புத்தரே :D

 

நானும் ஒரு நாலு வகுப்புக்குப்  போனனான்.
ஒண்டுமே விளங்கவில்லை.

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாடிக்காரர்களின் வகுப்புக்கள் கோயில் தேர்முட்டிகளிலும்

கடற்கரை வாடி வீடுகளிலும் தான் அதிகம் நடக்குமாம் உண்மையோ

புத்தரே :D

 

நானும் ஒரு நாலு வகுப்புக்குப்  போனனான்.

ஒண்டுமே விளங்கவில்லை.

தொடருங்கள்

 

அப்பதான் மக்களுடன் இயக்கம் மின்கில் பண்ணமுடியும்,மக்களுடன் மின்கில் பண்ணினால் மக்கள் புரட்சி வெடிக்கும் ,மக்கள் புரட்சி வெடித்தால் சோசலிச சமதர்ம ஈழம் பிறக்கும்.....ஈழம்பிறந்தால் வி ஆர் கப்பி....நீங்கள் நாலு வகுப்புக்கு போனனீங்களா? தாடி வைத்திருக்கின்றீர்களா ....அப்ப நீங்களும் புரட்சி திலகம் ..முற்போக்கு சிந்தளையாளர் ...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் புத்தன்...........உங்கள் எழுத்துநடை மிகவும் சுவாரசியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.... கரத்துச் சொல்லத்தெரியேல்லை கிருபனின் நிலைதான் நம்மளதும்......புத்தனுக்கு பிடரியில சனியன் ஏதாவது ஏறிக் குந்திட்டுதோ என்னவோ :lol: :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.