Jump to content

மனசெல்லாம் மழையே.........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனசெல்லாம் மழையே.........

 

பஞ்சுப் பொதியாய் வானப்பரப்பெங்கும் வியாபித்து பரவிக் கிடக்கும்  மேகத்திரையைக் கிழித்தபடி விமானம் பியர்சன் விமானநிலையத்திலிருந்து மேலெழந்து வேகமெடுத்து ஓடத்தொடங்கிய நாழிகையில் விமானத்தின் ஐன்னலோர இருக்கையில் விமானப்பட்டியை விலக்கியபடி அமர்ந்து கண்களை மூடியபடிசாய்ந்த மதியின் எண்ணங்கள் பின்னோக்கி வேகமெடுத்து ஓடத்தொடங்கின. ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தி ஐந்து வருடங்களின் பின் சந்திக்கப்போகும் தன் சிந்தையில் நிறைந்த சிநேகிதனை வட்டமிட்டது மனம். இமைச்சாளரங்கள் மூடிக்கொள்ள இதயம் மாத்திரம் இயங்கத் தொடங்கியது.

கலாச்சார ஈரம் குலையாத அந்தக் குட்டிக் கிராமத்தில் பண்பான தந்தைக்கும் அன்பான அன்னைக்கும் மூத்த மகளாகப் பிறந்தவள் மதி .'அக்கா அக்கா' என்று அவளைச் சுற்றிச் சுற்றி வரும் மழலைகளாய் மூன்று தங்கைகளும் இரண்டு தம்பிகளும். இவர்களின் அன்புச் சிறைக்குள் வளர்ந்த மதியின் உள்ளத்தில் சிறுவயதிலிருந்தே தான் தன் தம்பி தங்கைகளுக்கும் பெற்றவர்களுக்கும் ஊன்றுகோலாக இருக்கவேண்டுமென்ற ஆசை அடிமனதில் வேரூன்றி இருந்ததுடன் தான் ஓர் அரசாங்க சேவையில் அமரவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் கூடவே வளர்ந்தது.

சொந்தக் கிராமத்தில் எட்டாம் வகுப்பு சித்தியடைந்ததும் வீட்டில் அம்மாவும் அப்பாவும் மதியை மகாவித்தியாலயத்தில் சேர்ப்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். பாடசாலை விடுமுறை முடிந்து புதிய வகுப்பு ஆரம்பமாகும் நாளும் வந்தது. இதுவரை பெண்கள் பாடசாலையில் படித்து பெண்களுடன் மட்டும் நட்புப் பாராட்டிய மதிக்கு புதிய சூழல் மலைப்பாக இருந்தது. ஆண்களும் பெண்களுமாக இருபக்கங்களிலும்  இரு பிரிவினராக அமர்ந்திருந்து படிப்பது புது அனுபவம். தினமும் ஐந்து மைல்கள் பேருந்துப் பிரயாணம் வேறு. இருந்தும் படித்து முன்னேற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அன்று ஒன்பதாம் வகுப்பில் உற்சாகத்துடன் உள்நுழைந்தாள் மதி.

இதுவரைகாலமும் நடசத்திரங்கள் மட்டும் நடைபயின்ற அந்த வகுப்பறையில் இன்று நிலவு ஒன்று பவனி வருவதாய் தோன்ற மதனுக்குள் ஏதோ ஒன்று மடல் விரிந்தது தேக்கித் தேக்கி வைத்திருந்த மின்சாரம் மொத்தமும் ஒரே நாளில் ஒரு பார்வை திருடிக் கொண்டது. இந்தப் பதினைந்து வயதுப் பருவம் இருக்கிறதே சின்னச் சின்ன சந்தோசங்களில் அது சிலிர்க்கும். மயிலிறகைப் புத்தகத்துள் பொதிந்து அது குட்டி போடுமென்று எதிர்பார்த்து யாருக்கும் தெரியாமல் பக்கம் புரட்டும் மாணவனாய் மதனின் மனப் புதையலுக்குள் மயிலிறகாய் வருடும் மதியின் நினைவுகளை யாருக்கும் தெரியாமல் பொத்திவைத்து தினமும் அவளது தரிசனத்தை எதிர்பார்த்து தவமிருக்கத் தொடங்கினான்.

 

இத்தனை காலமும் கானலாய்க் கிடந்த வகுப்பறை கலகலப்பாகியது. வகுப்பில் இதுவரை காலமும் முதலிடத்தில் இருந்த மதன் இப்பொழுது ஒவ்வொரு பாடத்திலும் மதியுடன் அதிதீவிரமாய் போட்டி போடவேண்டி ஏற்பட்டது. தவணைப் பரீட்சை நெருங்க நெருங்க 'டேய் மதன் இம்முறை நீதான் முதலாம் பிள்ளையாக வரவேணும்' என்றும் ' மதியை மட்டம் தட்ட வேணும்' என்றும் சக நண்பர்களினால்  தட்டிக் கொடுக்கப்பட்டான். காரணம் வகுப்பில் முதலிடம் பெறும் மூன்று மாணவர்களுக்கு மேடையில் வைத்து றிப்போட் காட் வழங்குவது வழக்கம். அந்த நாளும் வந்தது. முதலிடம் மதன். இரண்;டாவது இடம் மதி. மதனுக்குள் வெற்றி பெற்ற பெருமிதம். நண்பர்களுக்கோ மதியை மட்டம் தட்டிய பெருமை. ஆனால் மதியின் முகமோ ஒளியிழந்தது. மதியின் வாடிய முகத்தைப் பார்;த்த மதனின் சந்தோசம் நொடிப் பொழுதுள் நொறுங்கிப் போனது. 'விட்டுக் கொடுத்திருக்கலாமோ? ' 'என்ன இது? இது என்ன மாற்றம்?' மதனுக்குள் புரியாத புதிராக எத்தனையோ கேள்விகள். இருந்தும் மதன் தனக்குள் ஏதோ ஓரு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணரத் தொடங்கினான்.

தினமும் காலை வேளை எப்போ வரும் என்று எதிர்பார்ப்பதும் எப்போதாவது வரத் தாமதித்தால் எண்ணி ஏங்குவதும். ஏன் இந்த மாற்றம் என்று மதனுக்கு அப்போ விளங்கும் வயதில்லை. ஓரப் பார்வையும் உதட்டுக்குள் புன்னகையும் அமைதியான தோற்றமும் அறிவுத் தேடலும் மதனை மற்றைய மாணவர்களிடமிருந்து வேறுபடுத்தி அவனில் ஒரு மதிப்பையும் அன்பையும் தோற்றுவித்திருந்தது. பத்தாம் வகுப்புப் பரீட்சை நெருங்க நெருங்க படிப்பில் அனைவரும் தீவிரமானார்கள். வகுப்பாசிரியர்களும் அக்கறையுடன் மாணவர்களை பரீட்சைக்குத் தயார் செய்தார்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த பரீட்சையும் ஒருபடியாய் முடிந்தது. எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி.

தை பிறந்ததும் மீண்டும் அனைவரும் பாடசாலை திரும்பினர். பட்டாம் பூச்சிகளைப்போல் சிட்டாய்ப் பறந்து திரியும் அப்பருவத்தில் விதவிதமான பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும் அழகிய பூங்காவைப் போல் வகுப்பறை மாணவமலர்களினால் அழகாக மிளிர்ந்தது. பரீட்சை முடிவுகளுக்காகக் காத்திருந்த நாட்களில் ஒருநாள் மதனுக்குள் ஏனோ இடி வந்து இறங்கியது.

மதி நாளை முதல் பாடசாலைக்கு வர மாட்டாள் என்ற செய்தி வகுப்பறையில் பரவியது. மதன் துடித்துப் போனான். உடனே நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசித்து மதிக்கு மடல் ஒன்று வரைந்தார்கள். தொடர்ந்து நீங்கள் பாடசாலைக்கு வர வேண்டும். இதுதான் எமது விருப்பம் என்று மதனின் கைப்பட எழுதப்பட்ட கடிதம் மதியிடம் சேர்க்கப்பட்டது. மதியோ தாயாரின் சுகவீனம் காரணமாக தாயாருக்கு உதவியாக சிலகாலம்  வீட்டில் தங்க வேண்டிய நிலை. மதனோ பதிலக்காகக் காத்திருந்தான். அந்தப் பதில் மட்டும் வரவேயில்லை. இறுதியில் ஒருநாள் பரீட்சைப் பெறுபேறுகள் பார்ப்பதற்காக மதி பாடசாலை வந்தாள். இருவரும் பரீட்சையில் வகுப்பில் சிறந்த பெறுபேறுகள் பெற்றிருந்கனர். இருந்தும் அவளுடன் கதைக்கவோ பாராட்டைத் தெரிவிக்கவோ மதனுக்கும் துணிவில்லை. மதியும் தனது நண்பிகளுடன் கதைத்துவிட்டு விழிகளால் மட்டும் மதனிடம் விடை பெற்றுச் சென்று விட்டாள்.

 

காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. இருவரும் வௌ;வேறு உயர்தரப் பாடசாலைகளில் க.பொ.த. உயர்தர வகுப்பை படித்து முடித்தனர். ஆனாலும் ஒருவரைப்பற்றி மற்றவர் எவ்வித தகவலும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆண்டு அரச சேவைக்கான நியமன விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதும் நேர்முகப்பரீட்சைகள் நடந்ததும் இருவருக்கும் நியமனம் நிச்சயமானதும் ஆளாளுக்குத் தெரியாமலே நடந்தேறியது. நியமனக் கடிதம் கையில் கிடைத்ததும் சிறகு முளைத்த சிட்டுக்குருவியாய் மனம் சிறகடிக்க இத்தனைநாள் கனவுகளும் நிறைவேறிய மகிழ்வுடன் பெற்றவர்களின் ஆசியுடன் அந்த அரச அலுவலக மண்டபத்துள் காலடி வைத்தாள் மதி. 

இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று இருவரும் தடுமாறி ஒருகணம் திகைத்து மறுகணம் மகிழ்ந்து கண்கள் இமைக்க மறந்த கணப்பொழுது மதனுக்கு முன் மதி முதல்முறையாகப் புடவை கட்டிய புதுமலராக நேருக்கு நேர் சந்தித்த அந்த காலைப்பொழுதில் மதன் தனக்குள் பதிதாகப் பிறந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்பாராமல் சந்தித்த அந்த நிகழ்வை விபரிக்க வார்த்தைகளில்லை. எதிர்பாராமல் கிடைக்கும் எந்த சந்தோசத்திற்கும் எல்லைகளில்லை. ஒரே அலுவலகத்தில் ஒரே நிர்வாகத்தின் கீழ் தினமும் வலம் வரும் வாய்ப்பு. புன்னகையைப் பரிமாறிக்கொள்ள இனித் தடையில்லை. உள்ளம் திறந்து உரையாட இனிப் பயமில்லை.

நட்பென்ற எல்லைக்குள் தனித்தனித் தீவுகளாய் இருந்த அவர்களது நட்பும் பாசமும் நாளுக்குநாள் பின்னிப் பிணைந்ததற்குக் காரணம் அவ் அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் வயதில் மூத்தவர்கள். இவர்கள் இருவரும் ஒத்த வயதுடைய ஒரே வகுப்புத் தோழர்களாக இருந்ததால் அந்த இருபது வயது இளமைப்பருவம் கிண்டலும் கேலியும் நிறைந்த இனிமையான பொழுதாகக் கழிந்தது. இவர்களது நட்பு நாளடைவில் மதி வீட்டினருக்கோ மதன் வீட்டினருக்கோ மறைக்கப்படாமல் வெளிப்படையாக இருந்ததால் மதன் மதி வீட்டில் ஒரு நம்பிக்கைக்குரிய குடும்ப உறுப்பினரைப்போல் பழகத்தொடங்கினான்.

வேலை நியமனம் கிடைத்த மறு வருடமே வீட்டின் மூத்த மகளான மதிக்கு திருமணப் பேச்சு விரைந்து வந்தது. 'மதி மாப்பிள்ளை வீட்டாருக்கு என்ன முடிவு என்று சொல்ல வேணும்' என்று அம்மா மதியின் பதிலுக்காய்க் காத்திருக்கவும் மதி பெற்றவரின் விருப்பமே தன் விருப்பமென சம்மதித்தாள்.

மணமகன் வேலை விடுப்பு முடிந்து மீண்டும் வெளிநாடு செல்ல இருப்பதால் திருமண ஏற்பாடுகள் விரைவாக நடை பெறத் தொடங்கின. பத்து நாட்களுக்குள் அனைத்தும் செய்யவேண்டி இருந்ததால் மதன் மதியின் குடும்பத்திற்கு உற்ற துணையாக தூணாக நின்று திருமண வேலைகளையெல்லாம் தன் தலைமேல் சுமந்து கடமைகளில் முழுவதுமாய் மூழ்கிப்போனான்.  திருமண வேலைகளையெல்லாம் தானே முன்னின்று செய்தான். வாழைமரம் கட்டுவதிலிருந்து வந்திருக்கும் விருந்தினரை உபசரிப்பது வரை அனைத்து பொறுப்புகளும் மதனின் பொறுப்பிலேயே விடப்பட்டது.;. மணநாளன்று மிகவும் கோலாகலமாக அனைத்து நிகழ்வுகளும் நிறைவேறின. இரவு மாப்ப்pள்ளை வீடடிற்கு மணமக்களை அழைத்துச் சென்று அங்கு விருந்து முடிந்து உடலும் உள்ளமும் சோர்ந்த நிலையில் வீட்டிற்கு வந்த மதன் தனிமையில் எதையோ முழுமையாக இழந்து விட்டதாய் எண்ணி ஏங்கினான். தனது ஒரே நண்பியின் எதிர்கால வாழ்வுக்கு வாழ்த்தி வழியனுப்பி வைத்தாலும் நட்பின் பிரிவு அவனை நலிய வைத்தது.

 

மதியின் வேலை விடுப்பு நாட்கள் முடிவடைய மீண்டும் வேலைக்குத் திரும்பவேண்டிய நாள் வந்தது. அப்பொழுதுதான் வீட்டில் பிரச்சனை ஆரம்பமாகியது. மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்பவர். அவர் வெளிநாடு போனபின் மதி வேலைக்குச் செல்வது அவருக்குச் சம்மதமில்லை. இதை சற்றும் எதிர்பாராத மதி திகைத்தாள். அவளது கனவுகள் யாவும் பொலபொலவென்று சரிந்தது. தனது குடும்பத்திற்காகவும் உடன் பிறப்புக்களின் உயர்வுக்காகவும் தனது வாழ்க்கையையே பணயம் வைத்த அவளது குறிக்கோள் சிதிலமாகியது. அவளது லட்சியமே அரசாங்க வேலை. அதற்கே குறிவைக்கும் கணவனின் கொள்கையை ஏற்றுக்கொள்வதா? அப்படியானால் வேலையைத் தலைமுழுகுவதா? மதி தனக்குள் நொருங்கிப் போனாள். பெற்றவர்களுக்கும் இச் செய்தி பேரிடி ஆகியது. மதனுக்கோ இது மற்றுமொரு பேரிடி. மதியோ எதுவும்செய்யத் திராணியற்று செயலிழந்து போனாள்.நிலை வந்த போது அவள் தன் வேலையை தாரைவார்க்க முடிவெடுத்தாள்.. மதியும் ஓர் மனைவியாக தன் கருமங்களை கருத்துடன் கவனிப்பதில் தன கவலைகளை மறந்தாள்.

நாட்டு நிலமையிலும் நாளாந்தம் ஏற்பட்ட மாற்றங்களால் அனைவரும இடம் பெயர்ந்து எங்கெங்கோ எப்படிஎப்படியோ? யார்?; எங்கே? எப்படி இருக்கிறார்கள்? என்ற எந்த விபரமும் பெற முடியாத நிலையில் மதியின் குடும்பமும் கனடாவிற்கு குடி பெயர்ந்தார்கள்.
ஆண்டுகள் உருண்டோடி மதியும் இரு குழந்தைகளுக்குத் தாயாகி கனடா நாட்டின் வேகத்துடன் அவளும் ஐக்கியமாகிப்போனாள். எப்பொழுதாவது பழைய நட்பையும் பாசத்தையும் மனதிற்குள் நினைக்கும் பொழுது வேதனை விழிகளை நனைக்கும். இறுதிக்கட்ட போரின் பின் யாரிடமாவது மதனின் குடும்கததைப்பற்றிய செய்தி கிடைக்குமா என்று முயற்சி செய்தும் எதுவும் அறிய முடியவில்லை. யாரிடம் கேட்பது? எதுவும் செய்ய முடியாத நிலையில் காலங்கள் உருண்டன.

மதியின் வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட பேரிடி அவளது கணவனின் இழப்பு. விபத்தொன்றில் கணவனை இழந்துவிட்ட மதி கொழுகொம்பற்று தனிமையில் துவண்டாள். வேதனையில் துவண்டாலும் வீழ்ந்துவிடாமல் தன் மழலைகளை உருவாக்க மீண்டும் உறுதியுடன் போராடத் தொடங்கினாள். இழப்பின் வலிகளை வலிமையாக்கி வேதனையிலும் சாதனை படைக்க துணிவைத் துணைக்கழைத்தாள். தெய்வத்தையும் தெய்வத்துடன் இணைந்துவிட்ட கணவனையும் இருபக்கமும் துணையாக நினைத்து செய்யும் காரியங்களில் வெற்றிபெற போராடத் தொடங்கினாள். பத்து வருடங்கள் பறந்தோடின. மழலைகள் வளர்ந்து பல்கலைக்கழக கல்வியை முடித்து பெற்றவருக்குப் பெருமை சேர்த்ததை தன் பெரும் பேறாகஎண்ணி மதி மனம் பூரி;த்தாள். 

தொண்ணூறுகளில் நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாக மதியின் வீடும் கூரை இழந்து குட்டிச் சுவராகிவிட்டதை அங்கு சென்று திரும்பி வந்த உறவினர் கொண்டுவந்த போட்டோக்களில் பார்த்தபின் எப்பவாவது ஒருநாள் பிறந்த வீட்டையும் போர்வடு சுமந்த வன்னி மண்ணையும் ஊரையும் உறவுகளையும் சென்று பார்த்து வரும்நாளை எண்ணிக் காத்திருந்தாள். ஒருநாள் ஊரிலுள்ள ஒரு நண்பியின் மூலம் மதனின் தொலைபேசி எண் கிடைத்தது. நிலையான நட்பு நிறம் மாறாது. குணம் மாறாது. மணம் மாறாது. நிழல் போல் தொடரும் என்று எங்கோ படித்தது ஞாபகம் வர தொலைபேசி எண்ணைச் சுழற்றி தொடர்பு கிடைத்ததும் 'மதனா கதைக்கிறீங்க?' என்று வினவவும் 'ஆமாம் மதன்தான் கதைக்கிறன்'என்ற குரல் காதில் விழுந்ததும் நான் மதி என்றதும் மதனின் முதுகில் இறக்கைகள் ஒட்டிக்கொண்டன. மதியின் கணவனின் இழப்பறிந்து துடித்துப்போனான் மதன். இருவர் கண்களும் அருவியாக சுகங்களும் சோகங்களும் காற்றலையில் மொழிகளாகி மாறிமாறி எதிரொலித்தன. புpரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா?

மதனும் குடும்பஸ்தனாகி பல வருடங்கள் ஆகி இருந்ததை அறிந்து மதி மனம் மகிழ்ந்தாள். மதனின் பதவி உயர்வு அறிந்து பாராட்டினாள்.; பனிக்காலம் முடிந்து மொட்டை மரங்களெல்லாம் துளிர்விடத்தொடங்கியது. வசந்தகால ஆரம்பம். ஒருநாள் மதியின் சகோதரி தாய்மண்ணைத் தரிசிக்க கனடாவிலிருந்து போக இருப்பதை அறிந்த மதியின் உள்ளத்திலும் ஆவல் உந்தியது. இருபத்திஐந்து வருடமாக பிரிந்திருந்த தாய் மண்ணையும் தனது வீட்டையும் உறவுகளையும் பார்ப்பதுடன் மதனையும் சந்தித்து தான் முறித்துவிட்ட நட்பைத் தொடரவேண்டுமென்ற ஆதங்கமும் எழ தொடர்ந்துவந்த நாட்களில் பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

ஏதோ கனவுபோல் இருக்கிறது இது கனவா? இல்லை நினைவா? மதி பயணம் செய்த விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரை இறங்கத் தொடங்கியது.
மறுநாள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் தொடர்ந்தது. ஊரையும் உறவுகளையும் மட்டுமல்ல உண்மையான நட்பையும் சந்திக்கப்போகும் சந்தோசத்துடன் மதி பயணத்தை ஆரம்பித்தாள். மதனோ அன்று விடுமுறைக்கு விண்ணப்பித்துவிட்டு நிமிடங்களை எண்ணியபடி தோழியின் வருகைக்காகத் தோழமையுடன் காத்திருந்தான்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து சென்ற பஸ் குடாநாட்டிற்குள் நுழைந்தது. கைத்தொலைபேசி அடிக்கடி சிணுங்கிச் சிணுங்கி எனது நண்பன் பஸ் நிறுத்தத்தில் எமக்காகக் காத்திருப்பதை அறிவித்துக்கொண்டிருந்தது.
காதல் ஒரு இமயம் என்றால் நட்பு இமயத்தின் சிகரம்
அந்தக் கணத்தை விபரிக்க வார்த்தையில்லை
இருபதுவயது இளம் வாலிபனாக  இளம் மங்கையாக விட்டுப் பிரிந்த உறவு இன்று அறுபதுகளின் அஸ்தமனத்திலும் ஒரு உதயமாக இதயம் இரண்டும் இதமான அன்பில் குளித்தன.

குதித்துவரும் அருவியாகப் பிரிந்தவர்கள் இன்று
அசைந்துவரும் நதியாக
வாழ்க்கையின் அனுபவப் பாடங்களைப் படித்தவர்களாக
அன்பை மட்டும் அச்சாணியாகத் கொண்டவாகளாக
முதன்முதலாக ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய அந்தக் கணங்கள்
கருத்தினில் தெளிவு
உறவினில் பரிவு
உள்ளத்தில் மட்டும் நட்பு
காதல் உறவான உணர்வு
நட்பு உணர்வான உறவு
இருவர் விழிகளிலும் இருந்து பெருகிய ஆனந்தக் கண்ணீர்
அன்பு நதியாக நட்பெனும் கடலில் சங்கமித்தது. 
                .............................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் பொழுது ...ச்சே எங்களுக்கு ஒரு நண்பிமாரும் ஊரில இல்லையே என்று எண்ணம் உண்டாகிறது...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை படித்து கருத்தெழுதிய மீனா புத்தன் அவர்களுக்கும் பச்சை குத்திய புங்கை விசுகு புத்தன் ஆகியோருக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கிறது அக்கா ஆனால் முதலில் காதல் போல் ஆரம்பித்துவிட்டு நட்பு என்று முடித்துவிட்டீர்கள். அங்கே கொஞ்சம் குழப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசித்து கருத்தெழுதியமைக்கு நன்றிகள் சுமே. பதினாலு வயதில் ஏற்படும் பருவக் கிளர்ச்சிகளையெல்லாம் காதல் என்ற உணர்வுக்குள் அடக்கமுடியாது. இக் கதைநடந்ததாக எழுதப்பட்ட காலக்கட்டத்தில் ஒரு பையனும் பெண்ணும் கதைக்கவே பயப்படுவார்கள். மீறினால் பாடசாலையில் பிரம்படி வீட்டில் கொலை. இதற்குள் காதலாவது கத்தரிக்காயாவது பாடசாலை வாழ்க்கையுடனேயே பருவக்கிளர்ச்சிகளும் மறைந்து விடும். அதன்பின் குடும்பம் வீடு அண்ணன் தம்பி அக்கா தங்கை கணவன் மனைவி தாய்தந்தை என்ற உறவுகளுக்குத்தான் முதலிடம். காதலைவிட நட்புக்கு சக்தி அதிகம் என்ற கருத்துடனேயே இக்கதையை எழுதினேன். நன்றிகள் சுமே.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது அக்கா. உங்கள் எழுத்துநடையை மிஞ்ச யாரும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கும் பொழுது ...ச்சே எங்களுக்கு ஒரு நண்பிமாரும் ஊரில இல்லையே என்று எண்ணம் உண்டாகிறது... :D

 

வெரி வாட் :lol: :lol:

என்னுடைய பல நண்பர்களுக்குள் இப்படியான கதைகள் உள்ளன தோழி. முடிவுகள் வித்தியாசமாக... உங்களுடைய சிறுகதைத் தொகுதியில் வாசித்துள்ளேன். இப்போதுதான் இங்கு இணைத்திருக்கிறீர்கள்  மற்றவற்றையும் தொடர்ந்து இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊக்குவிப்புக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பகலவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.