Jump to content

முகவரி இடப்படாத கடிதம்


Recommended Posts

 
முகவரி இடப்படாத கடிதம்
 
முகவரி இடப்படாத கடிதம் இது
முடிந்தால் எவராவது 
உரியவரிடம் சேர்ப்பிப்பீர்களா?
 
ஓலமிட்டு அழுகின்றோம்
ஓடி ஓடி நீதி கேட்கின்றோம்
ஆனால் எந்த விழிகளிலும்
மனித நேயத்தை காணமுடியவில்லையே.
 
மார்ச் எட்டு என்றவுடன்
உலகமெங்கும் 
அனைத்துலக பெண்கள் நாள்
ஆடம்பரமாக கொண்டாடப்படும்.
ஆனால் ஒடுக்கப்பட்டோர் எம் குரல் கேட்க
உலகில் எவருக்கும் நேரமில்லை.
 
காணாமல் போகடிக்கப்பட்டவர்கள்
எங்கள் உறவுகள்.
கணவன்,மகன்,தந்தை என
நாங்கள் எங்கள் உறவுகளைத் தேடுகின்றோம்
 
ஆறு ஆண்டுகளாக உளவலிகளால் 
அலைந்து உலைந்து கொணடிருக்கின்றோம்
அழுது அரற்றுகின்றோம்.
எந்த நாட்டுப் பிரதிநிதி வந்தாலும்
ஓடி ஓடி அவர்களிடம்
எங்கள் நிலைமையை எடுத்தரைத்து
எவராவது எம் உறவுகளைத் 
தேடித்தர உதவ மாட்டார்களா என
ஏக்கத்துடன் அவர்களைப் பார்க்கின்றோம்.
எங்களின் ஓலம் 
எவர் செவிகளையும் எட்டவில்லையே
 
காணாமல் போகடிக்கப்ட்ட உறவுளைத் தேடி
உலகத்தின் காதுகளுக்கு உண்மை சொன்னதால்
பிடித்துச் செல்லப்பட்டவர்களுக்கு 
என்ன நடந்தது என்பதும் தெரியாமல்
எங்களுக்கும் அந்த நிலை வரலாம் 
என்ற உண்மை தெரிந்தாலும்
எங்கள் உறவுகளைத் தேடி 
நீதிகேட்டு அலைகின்றோம்
 
வேண்டுமென்றே விழி மூடி
செவி அடைத்தவர்களிடம் தான்
நாங்கள் நீதி கேட்கின்றோம் என்ற
உண்மை நிலைமை புரிந்தாலும்
நாளும் பொழுதும் அழுது அழுது
அவலநிலைமையை சொல்கின்றோம்.
 
இன்னும் எவ்வளவு காலம் 
இப்படியே நாங்கள்
இரக்கமற்றவர்களிடம் இறைஞ்சுவது
 
 
எதுவுமே புரியாமல்
மீண்டும் மீண்டும் நீதிகேட்டு
வீதிகளில் இறங்கிப்போராடுகின்றோம்
 
இனி அழுதிடக் கண்ணீருமில்லை
இதயத்தில் வலுவுமில்லை
உயிரற்ற வெறும் மனிதக்கூடுகளாக
மெல்ல மெல்ல ஒடுங்கும் எங்கள் நிலையை 
எண்ணிப்பார்க்க எவருக்கும் 
நேரமுமுமில்லை இதயமும் இல்லை.
 
இனி முடியவில்லை
அதனால் 
இந்த முகவரி இல்லாத கடிதத்தை
எங்கள் கண்ணீரால் எழுதுகின்றோம்
எஞ்சிஇருக்கும் உள்ளவலுவை
முழுவதுமாக திரட்டி 
இந்த அஞ்சலை அனுப்புகின்றோம்
 
முடிந்தால் மனித நேயமுள்ள 
எவரையாவது யாராவது சந்தித்தால்
மறக்காமல் இதனை 
அவர்களிடம் சேர்ப்பித்துவிடுங்கள்
உள்ளம் நொந்து நைந்து 
நாங்கள் சாவதற்கிடையில்
எவராவது விழி திறந்தால்
எமக்கு நீதி கிடைக்கும்.
காணாமல் போகடிக்கப்பட்ட
எங்கள் உறவுகளை நாங்கள்
உயிருடன் உள்ள போதே
காணுவோம் என்ற நம்பிக்கை
ஊசலாட காத்திருக்கின்றோம்
 
 
மந்தாகினி
 
 
 
 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி. நல்ல வரிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதிலிருந்து பெருகிவரும் வார்த்தைகள் ஆனால் அவற்றை காது கொடுத்துக் கேட்பதற்குத்தான் யாரும் இல்லை இவ்வுலகில்... இந்த உலகம் வலிப்பட்டவர்களுக்காக பேசாது வல்லமை உள்ளவர்களையே கண்டுகொள்ளும். இது மனிதம் செத்தபூமி அதனைத்தேடிக்கொண்டிருந்தால் காலங்கள் கடப்பதைத்தவிர வேறு எதுவும் நடக்காது. மந்தாகினி உங்கள் கவிதையைப்பார்த்ததும் எனக்குள் எழுந்த ஆற்றாமை, கோபத்தை.... மானுடம் செத்தவர்களிடம் எதிர்பார்த்து ஏமாந்த கணங்களை எல்லாம் விரக்தியோடு மீளப்பார்க்க வைக்கின்றன..... நல்ல எழுத்து..... வளர்க.

Link to comment
Share on other sites

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி. நல்ல வரிகள்

 

நன்றி. ஆற்றாமையும், வேதனையும் என்னை இதனை எழுதவைத்தது

Link to comment
Share on other sites

மனதிலிருந்து பெருகிவரும் வார்த்தைகள் ஆனால் அவற்றை காது கொடுத்துக் கேட்பதற்குத்தான் யாரும் இல்லை இவ்வுலகில்... இந்த உலகம் வலிப்பட்டவர்களுக்காக பேசாது வல்லமை உள்ளவர்களையே கண்டுகொள்ளும். இது மனிதம் செத்தபூமி அதனைத்தேடிக்கொண்டிருந்தால் காலங்கள் கடப்பதைத்தவிர வேறு எதுவும் நடக்காது. மந்தாகினி உங்கள் கவிதையைப்பார்த்ததும் எனக்குள் எழுந்த ஆற்றாமை, கோபத்தை.... மானுடம் செத்தவர்களிடம் எதிர்பார்த்து ஏமாந்த கணங்களை எல்லாம் விரக்தியோடு மீளப்பார்க்க வைக்கின்றன..... நல்ல எழுத்து..... வளர்க.

 

இன்று அனைத்துலகபெண்கள்நாள். இன்று என்ன நடக்கும் என யோசித்தேன். வாழ்த்துக்கள்,சாதனையாளர்கள் தகவல் சொல்லுதல்,பெண்களை உயர்த்தி கூறுதல்,பெண்கள் மாநாடு என ஊடகங்கள் உட்பட பல நாடகங்கள் அரங்கேறும்.இதனை நினைத்தேன். 

எங்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்பற்றி பேச ஒருவருக்கும் நேரமில்லை. காணாமல்போகடிக்கப்பட்ட தங்கள் உறவுகளைத்தேடி கண்ணீருடன் நீதிகேட்டு அலையும் எங்கள் உறவுகளைப்பற்றி யோசிக்க எவருக்கும் மனமில்லையே. அவர்களின் உள்ளவலிகளை புரிந்துகொள்ள எவருமேயில்லையே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலமிட்டு அழுதாலும் ஓடிஓடி நீதி கேட்டாலும் பதில் மட்டும் பூச்சியம் தான். மனிதத்தை இழந்து விட்ட மகத்தான பூமி இது. இங்கு பெண்களை வெறும் போகப் பொருளாக பார்ப்பவர்கள்தான் அதிகம். மகளிர் தினம் இழப்புக்களையோ வேதனைகளையோ தணிக்கப் போவதில்லை. எம் மண்ணில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை செய்திகளாகத்தான் பார்ப்பார்களே அன்றி அதற்கு எந்த நிவாரணமும் செய்ய அரசாங்கம் முயற்சி எடுக்காது. ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம். முகவரி இல்லாத கடிதம் என்றுமே உரிய இடம் போய்ச் சேரப் போவதில்லை. நல்ல கவிதை பாராட்டுக்கள் மந்தாகினி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான காலம் ஒன்று வரும் என்று நம்புவோம்

அதைத்தவிர வேறு எதுவும் இல்லாதநிலை...

 

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி

பாராட்டுக்களும் நன்றிகளும்..

Link to comment
Share on other sites

ஒலமிட்டு அழுதாலும் ஓடிஓடி நீதி கேட்டாலும் பதில் மட்டும் பூச்சியம் தான். மனிதத்தை இழந்து விட்ட மகத்தான பூமி இது. இங்கு பெண்களை வெறும் போகப் பொருளாக பார்ப்பவர்கள்தான் அதிகம். மகளிர் தினம் இழப்புக்களையோ வேதனைகளையோ தணிக்கப் போவதில்லை. எம் மண்ணில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை செய்திகளாகத்தான் பார்ப்பார்களே அன்றி அதற்கு எந்த நிவாரணமும் செய்ய அரசாங்கம் முயற்சி எடுக்காது. ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம். முகவரி இல்லாத கடிதம் என்றுமே உரிய இடம் போய்ச் சேரப் போவதில்லை. நல்ல கவிதை பாராட்டுக்கள் மந்தாகினி.

ஆற்றாமையும் அழுத விழிகளும்தான் எம் மண்ணிற்குச் சொந்தம் என நாம் சோர்ந்துவிடாமல் என்னஎன்ன வழிகள் உண்டு என தேடினால் நல்ல வழி ஒன்று கண்ணில் தென்படலாம் என்ற நம்பிக்கையுடன்தான் தாயகத்தில் எம் உறவுகள் தாங்களே அந்த வழியைத்தேடி புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதிலாவது ஒன்றுபட்டால் நல்லது.நடக்குமா ?

எமக்கான காலம் ஒன்று வரும் என்று நம்புவோம்

அதைத்தவிர வேறு எதுவும் இல்லாதநிலை...

 

எல்லோர் ஏக்கங்களையும் கவிதையில் தந்தாய் சகோதரி

பாராட்டுக்களும் நன்றிகளும்..

நன்றி. எங்கள் மக்களுக்கு ஒரு நல்ல காலம் வரும். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் சில நாட்களாக தாயகத்தில் இயல்பாக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் என் எண்ணுகின்றேன்

நன்றி. எங்கள் மக்களுக்கு ஒரு நல்ல காலம் வரும். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்மையில் சில நாட்களாக தாயகத்தில் இயல்பாக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் என் எண்ணுகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கொரு காலம் வரும்.  இல்லையெனில், நமக்கான காலத்தைச் செய்வோம்.

நற்கவிதைக்கு வணக்கம்.

சொற்களைக் கொஞ்சம் சுருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏற்கனவே Necto உட்பட பல Elephant House பானங்கள் இங்கு U.K. தான் Diluting ( சரியான சொல்லா ???). Sugar Levy பிரச்சனையால் . https://www.gov.uk/guidance/check-if-your-drink-is-liable-for-the-soft-drinks-industry-levy#:~:text=You'll pay%3A,8g or more per 100ml
    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.