Jump to content

லண்டன் வற்றல் குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் வற்றல் குழம்பு

a006311bz2.jpg

தேவையானப் பொருட்கள்

பீன்ஸ் - 8

சின்ன கத்தரிக்காய் - 5

பெரிய வெங்காயம் - 3

வாழைக்காய் - 1

செளசெள - ஒன்று

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

புளி தண்ணீர் - 2 கப்

கசகசா - 3 தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - அளவாக

உப்பு - அளவாக

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

பால் - ஒரு கப்

கடுகு - ஒரு தேக்கரண்டி

இந்தக் குழம்பிற்கு கத்தரிக்காய், வாழைக்காய், சௌசௌ போன்றவை பொருத்தமாக இருக்கும். கூடவே தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சில காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்

கத்தரிக்காய், பீன்ஸை, வாழைக்காய், செளசெள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் கசகசாவை வதக்கவும். தேங்காய் துருவலையும் அதை போல் வதக்கிக் கொள்ளவும். முதலில் மிக்ஸியில் கசகசாவை போட்டு ஒரு முறை அரைத்து பிறகு அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேங்காய் துருவல் போட்டு விழுதாக அரைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெடித்ததும், வெந்தயம் போட்டு அதனுடன் கறிவேப்பிலை, பூண்டு, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய், செளசெள, வாழைக்காய், பீன்ஸ் போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட்டு வேகவிடவும்

பிறகு புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். புளி கரைசல் நன்கு கொதித்து வர வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து காய்கள் வெந்து, கொதித்ததும் தேங்காய் கசகசா விழுது சேர்க்கவும். மேலும் 30 விநாடிகள் கொதிக்க விடவும்.

பிறகு அதில் பால் ஊற்றி ஒரு நிமிடம் கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.

இணையதளத்தில் வாசித்து செய்து பார்த்தது. சில மாற்றத்துடன் தந்திருக்கிறன்

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி சகோதரி...சமைத்து பார்த்து சொல்கிறேன் :lol:

Link to comment
Share on other sites

லண்டன் வற்றல் குழம்பு

a006311bz2.jpg

தேவையானப் பொருட்கள்

பீன்ஸ் - 8

சின்ன கத்தரிக்காய் - 5

பெரிய வெங்காயம் - 3

வாழைக்காய் - 1

செளசெள - ஒன்று

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

புளி தண்ணீர் - 2 கப்

கசகசா - 3 தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - அளவாக

உப்பு - அளவாக

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

பால் - ஒரு கப்

கடுகு - ஒரு தேக்கரண்டி

இந்தக் குழம்பிற்கு கத்தரிக்காய், வாழைக்காய், சௌசௌ போன்றவை பொருத்தமாக இருக்கும். கூடவே தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சில காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்

கத்தரிக்காய், பீன்ஸை, வாழைக்காய், செளசெள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் கசகசாவை வதக்கவும். தேங்காய் துருவலையும் அதை போல் வதக்கிக் கொள்ளவும். முதலில் மிக்ஸியில் கசகசாவை போட்டு ஒரு முறை அரைத்து பிறகு அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேங்காய் துருவல் போட்டு விழுதாக அரைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெடித்ததும், வெந்தயம் போட்டு அதனுடன் கறிவேப்பிலை, பூண்டு, நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய், செளசெள, வாழைக்காய், பீன்ஸ் போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட்டு வேகவிடவும்

பிறகு புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். புளி கரைசல் நன்கு கொதித்து வர வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து காய்கள் வெந்து, கொதித்ததும் தேங்காய் கசகசா விழுது சேர்க்கவும். மேலும் 30 விநாடிகள் கொதிக்க விடவும்.

பிறகு அதில் பால் ஊற்றி ஒரு நிமிடம் கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.

இணையதளத்தில் வாசித்து செய்து பார்த்தது. சில மாற்றத்துடன் தந்திருக்கிறன்

உது என்னப்பாாாாா(செளசெள)

:? :? :? :? :? :? :? :?

உது நம்ம ஊர் சாம்பார் ஆச்சே

:P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழம்பிற்கு கத்தரிக்காய்இ வாழைக்காய்இ சௌசௌ போன்றவை பொருத்தமாக இருக்கும். கூடவே தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சில காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்

இதை வாசிக்கவில்லையா சின்னப்புசார். வீட்டில் என்ன நீர் தான் சமையலா

மிஸிஸ் சின்னப்பு அம்மணி யிடம் கேட்டு தெரியிறது அதைவிட்டு சும்மா நொய் நொய் எண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி யக்கோய் உதென்ன சாமான் செளசெள? சத்தியமாய் எனக்கு என்னெண்டு தெரியாது. ஒருக்கால் என்னெண்டு தயவு செய்து சொல்லுறியளே? :lol:

Link to comment
Share on other sites

கறுப்பி யக்கோய் உதென்ன சாமான் செளசெள? சத்தியமாய் எனக்கு என்னெண்டு தெரியாது. ஒருக்கால் என்னெண்டு தயவு செய்து சொல்லுறியளே? :lol:

சொவு சொவு எண்டா பொபி சீட்(popy seed) எண்டு நினைக்கிறேன்.

அது சரி கறுப்பி ஏன் இதுக்கு லண்டன் வத்தல் குழம்பு எண்டு பெயர் வந்தது?

அது சரி உம்மட பிடரிப் படத்தில கழுத்தும் காதும் சிவப்பாய் இருக்குது, பிறகு ஏன் கறுப்பு எண்டு கவலைப்பட்டனீர்? :lol::lol::lol:

( நீர் என்பதை மரியாதைப் பன்மை என்று கொள்க) :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

imagesvv8.jpg

இதுவாகத்தான் இருக்கும் எண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மரக்கறியை கெக்கரிக்காயோ வெள்ளரிக்காயோ எண்டு ஊரிலை சொல்லுறவை.அது சரி கறுப்பியக்கா முகத்தை இந்த பக்கம் காட்டாமல் ஏன் மற்றப்பக்கம் திரும்பி நிக்கிறியள்?உங்கடை அவரே நிக்கிறார்? (கறுப்புசாமி)மன்னிக்கவும் தகவலுக்கு நன்றியக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மரக்கறியை கெக்கரிக்காயோ வெள்ளரிக்காயோ எண்டு ஊரிலை சொல்லுறவை.அது சரி கறுப்பியக்கா முகத்தை இந்த பக்கம் காட்டாமல் ஏன் மற்றப்பக்கம் திரும்பி நிக்கிறியள்?உங்கடை அவரே நிக்கிறார்? (கறுப்புசாமி)மன்னிக்கவும் தகவலுக்கு நன்றியக்கா.

என்ன சார் இப்படி கேட்டுட்டியள் நீங்க மற்றபக்கமா வந்து பாருங்கோ நான் தெரிவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்கட அவரிட்டை அடி வாங்கி சாகிறதுக்கோ? ஐயோ கடவுளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் உங்கட அவரிட்டை அடி வாங்கி சாகிறதுக்கோ? ஐயோ கடவுளே.

லண்டனே ஒரு குழம்பு தானே. எத்தனை இனமக்கள் கலந்த குழம்பு. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பெயருக்கு முன்னால லண்டன் என்று போட்டுக் கொள்ள வேண்டியதுதான். பாவம் வெள்ளைக்காரன் அவன் தான் லண்டனை உச்சரிக்க முடியாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறான். :D

ஏன் கறுப்பி சா..காதிலும் கழுத்திலும் முகத்திலும் சிவப்பி அக்கா நீங்கள் லண்டனில வந்து குழம்பு வைச்சா அது லண்டன் குழம்பு அதையே கூவத்தில போய் வைச்சா கூவக் குழம்பா? ஏன் தான் குழப்புக்குள்ளும் லண்டன் சிங்கப்பூர் என்று வெட்டிப் பெருமைகள். நமக்குத்தான் நாடே இல்லை. அடுத்தவையின்ரல குந்திக்கொண்டு அதில சொந்தக் கொண்டாடப் பெருமை வேற. B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இந்த நெடுக்காலபோவான் சாரைக் காணேல்ல எண்ட கருத்துக்கு எதிர்கருத்து சொல்ல எண்டு பாத்துக்கொண்டு இருந்தன்.

Link to comment
Share on other sites

கறுப்பியின் தகவலுக்கு நன்றி

ஏன் நெதர்லாந்திலை சமைத்தால் நெதர்லாந்து வற்றல் குழம்பா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியின் தகவலுக்கு நன்றி

ஏன் நெதர்லாந்திலை சமைத்தான் நெதர்லாந்து வற்றல் குழம்பா :lol:

பெயரில் என்ன இருக்கு இலக்கியன் சார். அவரவருக்கு விருப்பமான பெயரை வைக்கலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்லால் "கறுப்பி குழம்பு" எண்டு வைச்சிருக்கலாமே கறுப்பியக்கா. :P :lol: :P :D :P :D :P :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்லால் "கறுப்பி குழம்பு" எண்டு வைச்சிருக்கலாமே கறுப்பியக்கா. :P :lol: :P :D :P :D :P :D:lol:

நிங்க வேறு குமாரசாமி சார் கறுப்பி குழம்பு அது இது எண்டு

Link to comment
Share on other sites

நிங்க வேறு குமாரசாமி சார் கறுப்பி குழம்பு அது இது எண்டு

இதுவும் நல்ல பெயராகத்தான் இருக்கிறது :rolleyes::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.