Jump to content

சிறு வயதுக்காதல் -- இப்ப வேண்டாமே..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதுக்காதல் -- இப்ப வேண்டாமே..

 

இளம் வயசில் ஆயிரம் பூக்கள் பூக்கும்

அப்படித்தான் காதலுமா?

யாருக்குத்தெரியும்

அதை காதல் என்பதா?

உணர்வா?

காமமா?....

இன்றும் தெரியவில்லை...

 

இப்படித்தான் அவளுக்கும் எனக்கும் ஒரு இது இருந்தது...

பகிடி விடுவது

நக்கலடிப்பது

நுள்ளப்போவது (தொட்டது கிடையாது)

 

இப்படித்தான் நேரம் போச்சு..

ஒரு நாள் கேட்டாள்

என்னை  பிடிச்சிருக்கா.....?

பதில் சொல்லவரவில்லை

அதற்கு நான் தயாரில்லை........

அதை நான் எதிர்பார்க்கவுமில்லை.....

 

 

ஒன்றும் சொல்லாது  விலகிச்சென்று விட்டேன்

வீட்டுக்கு போன எனக்கு இதே யோசனை...

 

அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு

நான் படித்து முடித்து வர......??

ஆனால் அவளைப்பிடித்திருந்தது

அதேநேரம் எனக்காக இன்னும் குறைந்தது 10 வருடங்களாவது காக்கணும்

அதற்கு அவளவு குடும்பநிலை இடம் தராது..

 

ஆனால் ஒன்று மட்டும் அன்று தெரிந்திருக்கவில்லை

அவள் எதற்கு தானே அவசரமாக இதைக்கேட்டாள் என்று...??

தொடரும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன விசுகர்!.... நுள்ள போனீர்களா?  z49.gif:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆனால் ஒன்று மட்டும் அன்று தெரிந்திருக்கவில்லை அவள் எதற்கு தானே அவசரமாக இதைக்கேட்டாள் என்று...??
உங்களுக்கு அவள் மேல் வந்த கவர்ச்சி போன்று அவளுக்கும் உங்கள் மீது ஒரு கவர்ச்சி வந்திருக்கும்......அதுதான் அப்படி கேட்டிருப்பாள்(ர்) தொடரட்டும் ...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவவின் காதலுக்கு கண் இல்லை பட்டென்று கேட்டுட்டா...!

 

உங்களின் காதலுக்கு , லுக்கு இருந்திருக்கு.... அதுதான் படிப்புக்கு 10 வருடம், குடும்ப நலவரம் எல்லாம்  70 எம் . எம் . மில் விரிஞ்சிருக்கு...!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று மட்டும் அன்று தெரிந்திருக்கவில்லை

அவள் எதற்கு தானே அவசரமாக இதைக்கேட்டாள் என்று...??

தொடரும்....

 
அடுத்த நாள் விடிய நேரத்துக்கு எழும்பி
எனது நண்பரிடம் சென்று விசயத்தை சொன்னேன்..
(அவர் நண்பர் என்பதற்கு அப்பால் எனது ஒன்றுவிட்ட அண்ணர்.  யாழ்ப்பாணத்தில் கடை வைத்திருந்தார். 
என் மீது ரொம்ப பாசம். என் மீது தூசி படவும் விடமாட்டார். நான் என்ன ஆசைப்பட்டாலும் வாங்கித்தருவார். )
அவர் சொன்னது  இன்று இரவு அவளவு வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோயில் திருவிழாவுக்கு வரச்சொல்லி
பனைகள் உள்ள இடத்துக்கு கூட்டிக்கொண்டு   போய் அலுவலைக்கொடுத்திடு என்று....
 
நண்பர்கள் என்றாலே எம்மீது இவ்வாறு தான் அன்பு வைக்கிறார்கள்.
இது போன்று தான் வழி காட்டுகிறார்கள்
இதுவும் ஒருவித பாசமா? இதுவரை புரியாதது இதுவும் தான்.
இப்போ நம்ம தம்பி  சுண்டல் வந்து
இவ்வாறு தான் சொல்வார்... :icon_mrgreen:
 
அவர் இவ்வாறு சொன்னதும்
வயதுக்கோளாறோ என்னமோ
சிறகுகள் முளைத்தது போலவும்
வானத்தில் பஞ்சு போல பறப்பது போலவும்
இன்று இரவு வேறு ஒரு உலகத்தை தரிசிக்க இருப்பது   போலவும்
பறக்க ஆரம்பித்தேன்..
உடம்பில் ஒரு முறுக்கும் மிடுக்கும் வந்தது தெரிந்தது..
அவரிடமிருந்து விலகும் போது
இன்றிரவு போவது என்ற முடிவோடுதான் புறப்பட்டேன்...
 
அநேகமாக கதை எழுதுவோர் இவ்விடத்தில் தொடரும்  போடுவார்கள்...
வாசகரின் கற்பனையைத்தூண்டுவது..
கண்டபடி நினைக்கவைப்பது..
 
நான் நிச்சயம் அதைச்செய்யமாட்டேன்
காரணம் அவள் மீது ஒரு தூசி  படக்கூடாது என இன்றும் நினைக்கின்றேன்....
 
வீட்டுக்கு திரும்ப  வரவர
மனம் குரங்கிலிருந்து இறங்க ஆரம்பித்திருந்தது....
நன்றாக யோசித்தேன்
மனம் இரண்டு முடிவுகளைத்தந்தது
1- போகாதே
2- போனால் தொட்டால் ...கட்டுவேன் என்ற முடிவெடுத்துப்போ..
 
இரண்டாவதே முடிவானது
போகவில்லை...
அன்றிலிருந்து அவளைப்பார்ப்பதை தவிர்க்கத்தொடங்கினேன்............
தொடரும்....
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா தொடவில்லையே ....ச்சே கதை சப்பின்டு போயிட்டுது.....தொடருங்கள் தொடுதலை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இரண்டாவதே முடிவானது
போகவில்லை...
அன்றிலிருந்து அவளைப்பார்ப்பதை தவிர்க்கத்தொடங்கினேன்............
தொடரும்....
 
தவிர்க்கத்தொடங்கியதற்கு இன்னுமொரு காரணமுண்டு..
நண்பர்கள் சிலருடன்   பேசியபோது
என்னையும் அவளையும் இணைத்து ஏற்கனவே ஒரு கதை ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது
அது எனது குடும்பத்தார் வரை தெரிந்தும் இருந்தது....
சின்ன வயது 
அல்லது சிறுபிள்ளை விளையாட்டு என்று நினைத்தார்களோ என்னவோ
என்னோடு எதுவும் பேசவில்லை...
 
அப்படியே
படிப்பு
வகுப்பில் பெட்டைகளுடன் பகிடி
தனகல்
நுள்ளல் என எனது காலம் வேறு ஒரு பக்கமாக   போகத்தொடங்கியது..
 
இடைக்கிடை அவள் பற்றிய செய்திகள் காதுக்கு எட்டும்....
கடைசியாக வந்தது
அவள் திருமணம் முற்றாகி வெளிநாடு போய்விட்டாள் என்று.
ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும்
கொஞ்சம் வலித்தது
காரணம் அவருக்கு அதிக வயசு
குடிகாரர்.....
இவர் தான் வேண்டும் என்று கேட்டு வெளிநாட்டுக்கு அழைத்தாராம்....
 
காலப்போக்கில் எல்லாம் மறைந்து போனாலும் 
இடைக்கிடை அவள் பற்றிய செய்திகள் காதுக்கு எட்டும்.
நன்றாக இருக்கிறார் என்ற செய்திகள் தான் வரும்
நிம்மதி......
 
83 கலவரத்தால் பாதிக்கப்பட்டு நானும் வெளிநாடு புறப்படும் போது
மீண்டும் வந்தது
அவர் வாழ்ந்த நாட்டின் ஊடாக
அவரது வீட்டுக்கு  போய்
அவரது உதவியினால் தான் எமது உறவுகள் எல்லோரும்  வெளிநாடுகளுக்கு வந்து கொண்டிருந்தநிலையில்
எனக்கும் அப்படியொரு ஒழுங்கு செய்தார்கள்
மறுத்துவிட்டேன்
அதேநேரம் பிடியும் கொடுக்கக்கூடாது
இதைத்தவிர்ப்பதற்காக
அகதி முகாம் என்றும்
குளிரும் மழையும் என நான் பட்ட வேதனைகள் கொஞ்சம் அதிகம் தான்..
இருந்தாலும் இந்த அவதி பரவாயில்லை என்று தான்  தோன்றியது..
 
அப்புறம் சந்திப்பு என்று ஒன்று  உண்டல்லவா...
அத்துடன் முடியும்..
இப்ப நேரமின்மையால் தொடரும்...
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா. நானும் எதோ முடித்துப்போட்டுத்தான் நிறுத்துவீர்கள் என்று நினைத்தால் இடையில் நிறுத்திவிட்டு .......... சரி நேரம் கிடைத்தால் மிகுதியையும் இன்றே எழுதி முடியுங்கள் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடங்கள் ஓடின

நானும் திருமணமாகி கிளை பரப்பி  வளர்ந்திருந்தேன்.....

அவருக்கும் பிள்ளைகள் வளர்ந்து

படிப்புக்கருதி கணவர் அங்கேயே இருக்க

பிள்ளைகளுடன் நாடு மாறியிருந்தார்....

பிள்ளைகள் கொஞ்சம் குளப்படி அப்படி இப்படி என கேள்விப்பட்டேன்...

 

ஒரு பெரிய மனிதரின் இறப்புக்காக அவரது  நாட்டுக்கு  போகவேண்டிவந்தது

சொந்தக்காரர் அல்ல என்பதால் இவரது வருகையை  எதிர்பார்க்கவில்லை...

 

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பின் அங்கு கண்டேன்

ஓடி வந்தார்

25 வருடத்தில் அவரில் பெரிதாக மாற்றெமெதுவுமில்லை

பக்கத்தில் வந்ததும் கண்ணைப்பார்த்தேன்

கலங்கியிருந்தது

அந்தக்கண்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டன...

அந்த பார்வைக்கு பதில் சொல்லமுடியாது

அதற்கு அத்தனை வலிமை

தண்ணி அடிப்பவனாக இருந்தால்

அவ்வளவு தான்........

 

கிட்டத்தட்ட 6 மணி நேரம் அந்த இடத்தில் நின்றேன்

அதிகம் பேசவில்லை

பேச எதுவும் இல்லை

பேசித்தான் என்ன.....?

என்னுடனேயே நின்றார்

.

கொடுமையான சந்திப்பு அது

ஒருவாறு விடை பெற்று வந்தேன்..

 

வழியில் என்னுடன் சேர்ந்து வந்த நண்பன் கேட்டான்

என்ன பழைய ....... ? என

இல்லை சிறிய வயதிலிருந்து தெரியும் என மழுப்பினேன்...

அவன் நம்பியிருக்கமாட்டான் என்று தெரியும்...

 

 

வந்ததும் மனைவியிடம் விடயத்தை சொன்னேன்..

அவருக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும் என்பதால்  எப்படியுள்ளா?

பிள்ளைகள் என்ன செய்கிறார்களாம் என்ற வழமைக்கேள்வியுடன் சரி...

எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்..

யாவும் கற்பனை

முற்றும்...

 

இதை இங்கு எழுத காரணமான ரகுவுக்கு  நன்றிகள்.

இதை எழுதவேண்டாம் எனத்தான் நேற்றுவரை நினைத்திருந்தேன்.

ஆனால் நான் அடிக்கடி இங்கு  சொல்லவதுண்டு

கட்டையில் என்னுடன் சிலதுகள்  போகும் என்று..

சரி

இது அதிலொன்று யாழில் இருக்கட்டுமே  சாட்சியாக..

நன்றி.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மனம் கொஞ்சம் இலேசாகி இருக்கும் அண்ணா. எமக்காக விதிக்கப்பட்டிருப்பதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது என்பது மட்டும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டுந்தானா அல்லது இன்னும் இருக்கா?
தொடர்ந்து எழுதுங்கள் விசுகு அண்ணா
வாசிக்க நன்றாக  இருக்கின்றது :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா தொடவில்லையே ....ச்சே கதை சப்பின்டு போயிட்டுது.....தொடருங்கள் தொடுதலை :D

 

இதுக்கு 2  பேர் பச்சை போட்டிருக்கிறார்கள்..

ஒன்றுமே புரியலே உலகத்திலே..... :lol:  :D

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஞாபகப் பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம் இதுபோலும். அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே என்றொரு பாட்டு நினைவுக்கு வருகுது. விசுகு நல்ல அழகாக ஞாபகச்சிறகை விரித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நாள் பசுமையான ஞாபகங்கள் உங்களிடம் அலை மோதுகின்றனவே விசுகு அண்ணா .

மிகவும் சுவாரசியமாக எழுதியிருந்தீர்கள் . உங்கள் மற்றைய காதல் அனுபவங்களையும் எங்களுடன் பகிருங்களேன் .  :wub: நன்றி

Link to comment
Share on other sites

அனுபவங்கள் எழுத்தையும் உயிர்ப்புடன் விரித்தன!

 

அது சரி.. பிறகேன் 'யாவும் கற்பனை' என்றொரு வசனம்!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோ பொய்யோ கதாசிரியர் தன்னுடைய பெயரைக் கெடுக்காதவண்ணம் எழுதியிருக்கிறார்.

 

 

அண்ணா இதெல்லாம் காதலே அல்ல.. யஸ்ட் ஒரு சம்பவம் அல்லது ஒரு உரையாடல் அவ்வளவே.... உங்களுக்கு அவர் திருமணம் செய்தபோது வலித்தது என்று எழுதியுள்ளீர்கள் அது காதலின் அடையாளம் அல்ல ஒரு மனிதாபிமான ரீதியான இரக்கம் மட்டுமே... அத்தோடு இல்லாத ஒன்றை வெளிப்படையாக எழுதும்போது சில தரவுகளை கொடுப்பதை தவிர்த்திருக்கலாம். உங்களை நன்கு அறிந்தவர்கள் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபரை அறிய வாய்ப்பளித்துள்ளீர்கள். பெண்ணின் பார்வை உங்களைப்பாதித்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்..... இயல்பாகவே பெண்களின் பார்வை ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கவரக்கூடியது. உங்கள் மனதிற்குள் உங்களுடன் பேசியவள் என்ற நினைவு விட்டகுறை தொட்டகுறையாகத் தேங்கிக் கிடந்ததனால் அக்கணம் அவையே உங்கள் மனதை வியாபித்திருக்கக்கூடும் .......... அசைபோடல் எழுத்தாக பரிணமித்திருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணா. :rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகிறீர்கள். உங்களின் மற்றைய ஆக்கங்களை நேரம் கிடைக்கும்போது வாசிப்பேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.