Jump to content

முதல்க் காதலின் வலி எதுவரை ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வரும் வயதில் ,நான் காதலிக்கும் மனநிலையில் இல்லை .வேறு திசையில்  காதல் இருந்ததது.இப்போ ஆசைதீர மனைவியை காதலிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, நான் எந்தக் காரணமும் சொல்லவில்லையே? தவறு என்னுடையது என்றுதானே சொல்கிறேன். அதற்குத்தானே பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.

 

 

 

ரகு அண்ணா இதில் பதிவிடப்பட்ட கருத்து உங்களுக்காக பதிவிடப்பட்டதல்ல..பொதுவாக எழுதப்பட்ட கருத்து..உங்கள் மனதை கஸ்ரப்படுத்தி இருந்தால் மன்னிச்சு கொள்ளுங்கள்..இப்போ கையில் கொஞ்சம் அலுவலாக இருக்கிறன்...மிகுதி பின்னர் எழுதிறன்...

Link to comment
Share on other sites

முதல் காதலின் தோல்வி ஒரு ஆறாத் துயரம். பொத்தி பொத்தி மனசுக்குள் மறைச்சு வைச்சு இருந்தாலும் நிகழ்காலத்தில் நிகழும் சிறு சிறு சம்பவங்களே மீண்டும் அதனை நிரடிச் செல்லும்.  காதலிக்கும் போது கேட்ட பாடல்கள், தழுவிச் சென்ற குளிர்காற்று, சில சொற்கள் என்று அவை மீண்டும் மீண்டும் மனசுக்குள் முதல் காதலின் வலியை தந்து செல்லும்.

 

ரகு குறிப்பிட்டளவாறு கனவுகள் தான் மிகவும் வலி தருகின்ற விடயங்கள். இரவில் கனவுகளில் முதல் காதலி வந்தால், அந்த நாள் முழுதுமே பெரும் சுமையாக கழியும்.

 

முதல் காதலியை மீண்டும் ஒரு முறைதானும் காணாமல் இருப்பது வேதனை என்றால் அக் காதலி தன் வாழ்க்கையை தொலைத்த நிலையில் அதுவும் நாம் குறிப்பிடத்தக்க அளவில் நல்லா இருக்கும் வேளையில் மீண்டும் காணுவது பெரும் வலி தரும் தருணங்கள். நான் கடந்து வந்த / வருகின்ற இத் தருணங்களை ஒரு கட்டுரையில் எழுதுவதை விட ஒரு சிறுகதையாகவோ அல்லது பெருங்கதையின் கிளைக் கதையாகவோ எழுதி மனசை ஆற்ற வேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு.

 

 

Link to comment
Share on other sites

எந்தக் காதலியைப் பற்றி சொல்லுறீங்கள், நிழலி?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் காதலியைப் பற்றி சொல்லுறீங்கள், நிழலி?? :D

வில்லன்களை பக்கத்தில வச்சுக்கொண்டு கதை சொல்லக்கூடா ,ஆப்பை இருக்கிவிட்டுருவாங்க :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களிலும் பார்க்க ஆண்களுக்குத்தான் ஆறா காதலின் வடு போல இங்கே. சரி ஒவ்வொருவரா உங்கள் கதைகளை எழுதுங்கள். பொறுமையாகக் காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு எந்தவித காதல் அனுபவமும் இல்லை. பாடசாலை நாட்களில் இனக்கவர்ச்சியால் சில அனுபவங்கள் எற்பட்டதே தவிர ஒருபோதும் காதலில் விழுந்ததில்லை. இதற்கு காரணம் என்னுடய கோழைத்தனமும், பயந்த சுபாவமும்தான். 
 
என்னுடைய திருமணமும் ஒர் ‍‍‍proposed marriage அகும். ஆனால் நான் பெண்பார்கும் போகும்போது பலமுறை மனம் பட படவென அடித்துக்கொள்ளும். வியர்த்துபோகும், நாவறன்டுபோகும், வயிற்றைகலக்கும். படத்தில் பார்த்த்துபோல் நேரில் பல பெண்கள் இருப்பதில்லை. பிடிக்கவில்லை என பெண்ணிடம் நேரிலும் கூற தயக்கம். (எவ்வளவு கற்பனையில் அந்த பெண் தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்து டீ, பிஸ்கட் எல்லாம் என் முன்னால் வைத்து உபசரிக்கின்றாள், அவளை எப்படி பிடிக்கவில்லை என சொல்வது, மனம் வேதனைப்படுமோ என வருந்தியதுண்டு)
 
அச்சந்தர்பத்தில்யாரையாவது காதலித்திருக்கலாம் என யோசிப்பதுண்டு. 
 
பெண்பார்க்க போகும் படலம் மிகவும் ஒர் சங்டமான விடயம். இதை அனுபவித்தவர்கள் இன்னோர் திரியில் அனுபவங்களை பகிர்கவோம்
 
 
 
Link to comment
Share on other sites

 

 

எனக்கு முதலாவதை விட முன்றாவதுதான் மனதை பாதித்தது . :D

மூன்றாவது தான் உங்கள் முதல்காதல். (அடிக்கவரப்படாது) :lol:

Link to comment
Share on other sites

எழுதீட்டாப் போச்சு. ஆனால் அது தனித் திரியில் தான் :D

 

 

எழுதுங்க, நாங்க வாசிப்போம்

காதல் வரும் வயதில் ,நான் காதலிக்கும் மனநிலையில் இல்லை .வேறு திசையில்  காதல் இருந்ததது.இப்போ ஆசைதீர மனைவியை காதலிக்கின்றேன்.

 

 

நீங்க சொல்லியயா தெரியணும் அண்ணே, சில திரிகளுக்கை நெடுக அலைவியளே, அப்பவே தெரிஞ்சிகிடோமே  :icon_mrgreen:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, நான் எந்தக் காரணமும் சொல்லவில்லையே? தவறு என்னுடையது என்றுதானே சொல்கிறேன். அதற்குத்தானே பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.

 

நீங்கள் ஏதாச்சும் எழுதினால் வந்து பார்த்து செல்வேன்..எனக்கு வந்து மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அனுபமும் இல்ல,அறிவும் இல்ல...சும்மா இப்படி யாராவது  பொதுவாக திரி திறந்தால் ஏதாச்சும் எழுத தோன்றினால் எழுதுவது ...  நிறைய எழுத வெளிக்கிட்டாலும் ஏதோ ஒரு காரணி என்னையும் தடுத்துடும்..ஏன் எனில் நானும் விருப்பு,வெறுப்புக்களோடு இருந்து இப்போ ஒண்ணுமே நம்மோடு இல்ல...  வந்த வேகத்திலயே போனதற்கும் நிறைய சொல்ல முடியாத காரணங்கள் இரு பக்கமும் இருந்தது..நான் மட்டும் நிறைய வலிகளை, வேண்டாத பட்டங்களை தாங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டேன் என்பதும் உண்மை..எப்போதும் நான் தனியவே சில சிரமங்களை எதிர் கொள்வது மனதுக்கு சற்றேனும் ஆறுதலாக இருக்கும்..காரணம் காலம் கடந்த பின் வேறு உயிர்களும் எங்களால் கஸ்ரப்பட்டு விடக் கூடாது. அதில்  மிகவும் அவதானமாக இருப்பதனால் எல்லாம் என்னோடையே முடிந்து விடும்.பறவா இல்ல எல்லாம் நன்மைக்குத் தான்

அதனை மனதில் வைத்து தான் எனது முன்னைய கருத்தை முன் வைத்தேன்..மற்றப்படி ஒன்றும் இல்ல...

 

Link to comment
Share on other sites

எனது முதல் காதலியே எனது மனைவியாகிவிட்டாள் அதனால் காதலினால் வந்த வலி இல்லை. ஆனால் அவளின் முன்னர் என்னுடன் பலவருட காலம் டியூசன் வந்த ஒருத்தியில் விருப்பம்/கவர்ச்சி (crush) இருந்தது. அவளின் பால் நார் ஈர்க்கப்பட்டது எனக்கு பதினோரு வயதாக இருந்தபோது. கூவக் கூடத் தொடங்கியிருக்கவில்லை ஆனால் அவளைப் பிடித்திருந்தது. நான் போகும் பல போட்டிகளுக்கு அவளும் வந்து போவாள், அவளின் நடை உடை பாவனை, குடும்பம் பெற்றோர் படிப்பு திறமைகள் அனைத்தும் என்னுடைய மீடிறனில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. வசதியான குடும்பம். பெற்றோர் இருவருமே உத்தியோகக் காரர். ஆனால் அவள் என்னிடமோ நான் அவளிடமோ கதைக்கவில்லை. நான் உயர்தரம் படிக்கும் போது என்னுடைய மனைவி எனது பதினெட்டாவது வயதில் அறிமுகமாகி விட்டாள். ஆச்சரியம் என்னவென்றால் பெண்களுக்கும் உருவம், நடை, உடை பாவனை, குடும்பம் என அநேக ஒற்றுமைகள் இருந்தது தான். அவுஸ் வந்தபின்னர் ஒருமுறை அவளுடன் அரைநிமிடம் பேசினேன் அம்மா வாறா என்று விட்டு வைத்துவிட்டாள். எனக்கும் காதலி இருந்த நிலையில் சும்மா இருப்பவளை ஏன் குளப்புவான் என்றுவிட்டு விட்டுவிட்டேன். எனது மனைவிக்கும் இவளைப்பற்றித் தெரியும். கனவுகளிலே வந்ததாக ஞாபகம் இல்லை ஆனால் புணர்ச்சின் போது அவளது ஞாபகம் மின்னல் போன்று வந்து வெட்டியதுண்டு. 

  

என்னதான் சுத்தியிருந்து சாப்பிட்டு தேநீர் குடித்து கிரிக்கெட் பாத்து A ஜோக்கடிக்கும் அதிஷ்டமுள்ள  குடும்பத்தில் நாங்கள் மூண்டு பெடியங்களும் பிறந்திருந்தாலும் காதல் என்று வரும்போது முதலில படிச்சு முடியடா, நானே கட்டிவைக்கிறேன் என்பது தான் அம்மாவின் கருத்தாக இருந்தது. அந்த வயதில் அதை சீரியஸாக அவர்கள் ஏனோ கதைக்க மறுத்து விட்டார்கள். நான் அசைய மறுத்ததால் எனது முதல் காதலியே எனது மனிவியாகும் பாக்கியம் கிடைத்தது. எனது முதல் கவர்ச்சி காதலியாகி, மனைவியாகியிருந்தால் என்ன நடந்திருக்கும் எனக் கூறத் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஏதாச்சும் எழுதினால் வந்து பார்த்து செல்வேன்..எனக்கு வந்து மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு அனுபமும் இல்ல,அறிவும் இல்ல...சும்மா இப்படி யாராவது  பொதுவாக திரி திறந்தால் ஏதாச்சும் எழுத தோன்றினால் எழுதுவது ...  நிறைய எழுத வெளிக்கிட்டாலும் ஏதோ ஒரு காரணி என்னையும் தடுத்துடும்..ஏன் எனில் நானும் விருப்பு,வெறுப்புக்களோடு இருந்து இப்போ ஒண்ணுமே நம்மோடு இல்ல...  வந்த வேகத்திலயே போனதற்கும் நிறைய சொல்ல முடியாத காரணங்கள் இரு பக்கமும் இருந்தது..நான் மட்டும் நிறைய வலிகளை, வேண்டாத பட்டங்களை தாங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டேன் என்பதும் உண்மை..எப்போதும் நான் தனியவே சில சிரமங்களை எதிர் கொள்வது மனதுக்கு சற்றேனும் ஆறுதலாக இருக்கும்..காரணம் காலம் கடந்த பின் வேறு உயிர்களும் எங்களால் கஸ்ரப்பட்டு விடக் கூடாது. அதில்  மிகவும் அவதானமாக இருப்பதனால் எல்லாம் என்னோடையே முடிந்து விடும்.பறவா இல்ல எல்லாம் நன்மைக்குத் தான்

அதனை மனதில் வைத்து தான் எனது முன்னைய கருத்தை முன் வைத்தேன்..மற்றப்படி ஒன்றும் இல்ல...

 

 

 

மன்னிக்க வேண்டும் யாயினி,

 

சரியான புரிதல் இல்லாமல் உங்களின் கருத்துக்குப் பதிலளித்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.

 

உங்களின் சிறிய விளக்கத்தைப் படிக்கும்போதே உங்களின் துயரம் தெரிகிறது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

 

ஆனால் ஒரு விடயம், இப்படியே உங்களுக்குள் ஒடுங்கிப் போகாமல் மீதி வாழ்க்கையையாவது சந்தோசமாக வாழமுடியுமா என்று பாருங்கள். நிச்சயம் ஒரு வழி இருக்கும்.

 

நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஆனால் கனவில் அல்லோ வந்து தொல்லை தருகினம் .

 

ரகு கொஞ்சம் சென்டிமென்ரான பேர்வழி போலிருக்கு .இது அவரவர் கரெக்டரை பொறுத்தது என்று நினைக்கிறேன் அல்லது காதலின் ஆழம் ,காலம் எல்லாவற்றிலும் தங்கியிருக்கு என்று நினைக்கின்றேன் .

 

எனக்கு முதலாவதை விட முன்றாவதுதான் மனதை பாதித்தது . :D

 

 

அர்ஜுன் அண்ணா,

 

அதை சென்டிமென்றா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் மனதை மிகவும் வருத்தும் ஒரு விடயம் என்று மட்டும் சொல்லத் தெரியும். 

 

நாம் பிரிந்தது என்னால்த்தான் என்கிற குற்றவுணர்வே என்னை காயப்படுத்துகிறதென்றுதான் நினைக்கிறேன். நியாயப்படுத்த முடியாத ஒரு செயல் என்பதால் காரணங்களை நான் தேட விரும்பவில்லை. 

 

அவள் இப்போது நன்றாக இருக்கிறாள் என்று யாராவது சொல்லமாட்டார்களா என்று ஏங்குகிறேன். அவள் நன்றாக இருப்பதை ஒருமுறை மட்டுமாவது பார்த்தால் நான் அமைதியடைவேன் என்று நினைக்கிறேன்.

 

ஏனென்றால், நான் அறிந்தளவிற்கு அவர்களின் குடும்பம் வசதியானது கிடையாது. நான் பிரிந்து வந்த காலம் கூட இராணுவ ஆக்கிரமிப்பினுள் மட்டக்களப்பு நகர் முற்றாக கொண்டுவரப்பட்டு, இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக காணாமல்ப் போகச் செய்யப்பட்ட காலம். 

 

ஆகவேதான் அவள் எந்தக் குறையுமில்லாமல் நன்றாக வாழவேண்டும் என்று விரும்புகிறேன்.

 

அழகி, ஆட்டோகிராப் ஆகிய படங்களைப் பார்த்தபோது நான் அழுதேன். அதில் வரும் கதாப் பாத்திரங்களும், காட்சியமைப்புக்களும் எனக்கு எனது மட்டக்களப்பு வாழ்வை ஞாபகப்படுத்தின. 

 

அதேபோல, குடகுமலைக் காட்டில் வரும் பாட்டு...., செண்பகமே செண்பகமே........இந்தமான் உந்தன் சொந்தமான்.............எங்கிருந்தோ அழைக்கும் உன்கீதம்....இவைகூட  என்னை வருத்தும் பாடல்கள். ஏனென்றால் இவற்றை மேற்கோள் காட்டி அவள் எனக்குக் கடிதம் வரைந்திருக்கிறாள் !

 

சரி என்னை விடுங்கள், உங்களின் பிரச்சினைக்கு வருவோம். உங்களின் மூன்றாவது காதல் கல்யாணத்துக்கு முன்பா அல்லது பின்பா ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதினேழு வயது காதல் இன்று நாற்பது வயதின் பின்னரும் தூக்கத்தை கெடுக்கின்றது என்றால் காதல் என்பதற்கு அப்பால் வேறு சில காரணங்கள் காணப்படலாம். உங்கள் அப்பா மூலம் கிடைக்காத அன்பு, அம்மாவின் பிரிவு (அப்பா எனும் மிருகம் கதையில் இருந்து), இவை இளவயதில் பலவிதமான ஏக்கங்களை ஏற்படுத்தியபோது ஒரு பெண்ணின் அன்பு வலிகளிற்கு ஒத்தடம் கொடுத்துள்ளது போலும். அப்பாவின் ஆதரவும், அம்மாவின் அரவணைப்பும் விட்ட வெற்றிடங்களின் பகுதிகளை இந்தப்பெண் மூலம் கிடைத்த அன்பினால் நிரப்பிக்கொள்வதற்கு மனம் முயன்றதனால் வந்த குழப்பங்களின் தொடர்ச்சி ஆகலாம் இவை.

Link to comment
Share on other sites

முதல் காதல் உண்மை காதலாக (இனக்கவர்ச்சி இன்றி) இருந்தால் அதன் வலி உயிர் உள்ள வரை இருக்கும் ......
எனது அனுபவப்படி என்ன காரணமோ தெரியலை பெரும்பாலான முதல் காதல் வெற்றி பெற தவறி விடுகின்றன. ஆனாலும் அந்த வலிஜை சமாளித்து வாழ்வது தான் வாழ்க்கை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவிக்கும் இவளைப்பற்றித் தெரியும். கனவுகளிலே வந்ததாக ஞாபகம் இல்லை ஆனால் புணர்ச்சின் போது அவளது ஞாபகம் மின்னல் போன்று வந்து வெட்டியதுண்டு. 

 

ம்ம்ம்

இது போல எல்லோராலும் வெளிப்படையாக எழுதமுடியாது..

 

ஆனால் அங்கதான் ஒரு கேள்வி வருகுது

இது காதலா?

காமமா? என....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் உச்சிக்குப் போய்விட்டால் பின்பு காமத்தில்தான் விழுந்து இறங்க வேண்டும்...! :)

Link to comment
Share on other sites

ஆனால் புணர்ச்சின் போது அவளது ஞாபகம் மின்னல் போன்று வந்து வெட்டியதுண்டு. 

 

 

மின்னல் சில கணம் தானே நிலைக்கும்.

 

அப்ப...அப்ப...  அதுவும் சில கணம் தானா.. !! ??? 

 

:D  :D  :lol:  :lol:

Link to comment
Share on other sites

ம்ம்ம்

இது போல எல்லோராலும் வெளிப்படையாக எழுதமுடியாது..

 

ஆனால் அங்கதான் ஒரு கேள்வி வருகுது

இது காதலா?

காமமா? என....

 

காதலின் அடிப்படையே காமம் தானே. காதலின்றி காமம் வரலாம் ஆனால் காமமின்றி காதல் வராது. தாம் காதலித்தவருடன்/வளுடன் கற்பனயிலாவது உல்லாசம் அனுபவியாதவன்/வள் உண்டோ?  காமம் அற்ற காதல், தாம்பத்தியம் உப்பில்லாத உணவுக்கு சமன். சாப்பிடலாம் ஆனால் ருசி இருக்காது. எனக்கு வந்தது காதல் என்பதை விட ஒரு கவர்ச்சி என்றுதான் சொல்லுவேன். அதனால் தான்  பதத்தையும் பாவித்திருந்தேன். கூவக் கூடத் தொடங்கியிருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேனே.

 

மின்னல் சில கணம் தானே நிலைக்கும்.

 

அப்ப...அப்ப...  அதுவும் சில கணம் தானா.. !! ??? 

 

:D  :D  :lol:  :lol:

 

உண்மைதான் அந்த நினைவு சில கணங்கள் தான் நீடிக்கும் ஆனால் மின்னல் போன்று அந்தக் கணம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். நீங்கள் மற்ற விசயத்தப் பத்திக் கேட்டிருந்தால் வெள்ளிக்கிழமை என்றும் பார்க்காமல் வெட்டுக்கிளி கத்தியை வைத்துவிடுவார்

Link to comment
Share on other sites

ரகு

உங்கள் காதல் என் காதலாய் இருந்தது ஆச்சரியமாக இருக்கின்றது.♪அதே வயது அதே பிரிவு சற்று வித்தியாசமாய் ஆண்டுகள் கடந்து தம்பதிகளாய் கண்ணுற்று அக்மகிழ்ந்தேன், காலன் கொடியவன் கடந்தமாதம் அவள் மாங்கலயம் பறித்தான், என்னைத்தொலைத்த காதல் தன்னையும் தொலைத்து நின்றது இன்றுவரை வேதனைதான்,

காதல் வென்றால் அது வாழ்க்கை. தோற்றால் அது காவியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு

உங்கள் காதல் என் காதலாய் இருந்தது ஆச்சரியமாக இருக்கின்றது.♪அதே வயது அதே பிரிவு சற்று வித்தியாசமாய் ஆண்டுகள் கடந்து தம்பதிகளாய் கண்ணுற்று அக்மகிழ்ந்தேன், காலன் கொடியவன் கடந்தமாதம் அவள் மாங்கலயம் பறித்தான், என்னைத்தொலைத்த காதல் தன்னையும் தொலைத்து நின்றது இன்றுவரை வேதனைதான்,

காதல் வென்றால் அது வாழ்க்கை. தோற்றால் அது காவியம்.

 

 

பரணி,

 

உங்களுக்குக் கிடைத்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இல்லை. உங்கள் முதற் காதலையை நீங்கள் மீண்டும் சந்தித்ததைத்தான் கூறுகிறேன்.

 

உங்கள் கதையைக் கேட்டவுடன் ஏனோ புதுக்கவிதை என்கிற படம்தான் கண்முன்னே வந்துபோகிறது. நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

 

உங்களின் முதற்காதலிக்கு உங்களால் உதவ முடியுமா என்று பாருங்கள் (உங்களின் மனைவியின் சம்மதத்துடன்). 

 

எனக்கு வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை !

 

எனது கதை பலரையும் தமது அனுபவங்களைப் பகிர உதவியதை எண்ணி மகிழ்கிறேன்!

காதலின் அடிப்படையே காமம் தானே. காதலின்றி காமம் வரலாம் ஆனால் காமமின்றி காதல் வராது. தாம் காதலித்தவருடன்/வளுடன் கற்பனயிலாவது உல்லாசம் அனுபவியாதவன்/வள் உண்டோ?  காமம் அற்ற காதல், தாம்பத்தியம் உப்பில்லாத உணவுக்கு சமன். சாப்பிடலாம் ஆனால் ருசி இருக்காது. எனக்கு வந்தது காதல் என்பதை விட ஒரு கவர்ச்சி என்றுதான் சொல்லுவேன். அதனால் தான்  பதத்தையும் பாவித்திருந்தேன். கூவக் கூடத் தொடங்கியிருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேனே.

 

 

உண்மைதான் அந்த நினைவு சில கணங்கள் தான் நீடிக்கும் ஆனால் மின்னல் போன்று அந்தக் கணம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். நீங்கள் மற்ற விசயத்தப் பத்திக் கேட்டிருந்தால் வெள்ளிக்கிழமை என்றும் பார்க்காமல் வெட்டுக்கிளி கத்தியை வைத்துவிடுவார்

 

எப்படி இப்படி ??

 

உங்களுக்கிருக்கும் துணிவே துணிவு. நான் இங்கே எழுதும்போது தயக்கத்துடந்தான் எழுதுகிறேன். 

 

வெளிப்படையாக , அப்பட்டமாக எழுதும் உங்களைப் பாராட்டுகிறேன் !

 

நன்றிகள் !

Link to comment
Share on other sites

  • 1 month later...

யாயினி, நான் எந்தக் காரணமும் சொல்லவில்லையே? தவறு என்னுடையது என்றுதானே சொல்கிறேன். அதற்குத்தானே பிராயச்சித்தம் செய்யவேண்டும் என்று கேட்கிறேன்.

 

ரகு அண்ணா நீங்கள் உங்கள் காதலிக்கு செய்யகூடிய மிக பெரிய உதவி தேடாமல் இருப்பது தான் .

நடந்தது நல்லாவே நடந்தது !  இப்ப அந்த பெண் உங்களை ஒரு காவாளியா நினைத்து , பழசை மறந்து போய் தன்னுடைய வாழ்கையை இனிதே இன்னொருவருடன் நடத்திக்கொண்டிருக்க கூடும். இப்ப போய் நீங்கள் இந்த பழசை கிளற, அவவுக்கும் தெரிய, ரெண்டு பேரோட குடும்பமும் நடுதெருவுக்கு தான் போக வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ணா நீங்கள் உங்கள் காதலிக்கு செய்யகூடிய மிக பெரிய உதவி தேடாமல் இருப்பது தான் .

நடந்தது நல்லாவே நடந்தது !  இப்ப அந்த பெண் உங்களை ஒரு காவாளியா நினைத்து , பழசை மறந்து போய் தன்னுடைய வாழ்கையை இனிதே இன்னொருவருடன் நடத்திக்கொண்டிருக்க கூடும். இப்ப போய் நீங்கள் இந்த பழசை கிளற, அவவுக்கும் தெரிய, ரெண்டு பேரோட குடும்பமும் நடுதெருவுக்கு தான் போக வேண்டி வரும்.

 

 

நேற்று மறுபடியும் "புதுக்கவிதை" படம் பார்த்தேன்.

 

அப்படியொன்றும் நடந்துவிடக் கூடாதென்று மனம் விரும்புகிறது.

 

நீங்கள் சொல்வதும் சரிதான், நான் காவாளிதான் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரகு இன்னும் வலிக்குதா? இரண்டு கிளாஸ் சிவாஸ் றீகல் அடிச்சிட்டு நித்தா கொள்ளுங்கோ எல்லாம் சரியா போய்விடும்....:D

Link to comment
Share on other sites

பாதச்சுவடு தேடித்தேடி..

கால்கள் ஓய்ந்து போனதே.. :unsure:

நாளும் அழுது தீர்த்ததாலே..

கண்கள் ஏழையானதே.. :o

:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.