Jump to content

சின்னதாக ஒரு கொள்ளை


arjun

Recommended Posts

Neasden நகரின் பிரதான வீதியில் Black Bird Hill வளைவில் இருக்கும் Texaco  பெற்றோல் நிரப்பு நிலையம்.
 
நேரம் காலை பத்தரை என்பதால் வேலைக்கு ,பாடசாலைக்கு செல்வோரின் போக்குவரத்து சற்று அடங்கி வீதிகளில்  வாகன நெருக்கடி குறைந்திருக்கு .கறுப்பு நிற மோட்டார் பைக் ஒன்று பெற்றோல் நிலைய ஆறாவது  Pump இன்  முன் நிற்கின்றது .வெவ்வேறு PUMP களில் இரண்டு கார்கள் பெற்றோல் நிரப்பபட்டுகொண்டிருக்கின்றன .மோட்டார் பைக்கில் வந்தவன் Helmet ஐ  கழட்டாமல் மோட்டார் பைக்கின் பெற்றோல் நிரப்பும் தாங்கியின் மூடியை திறக்கின்றான்  .
 
 
பெற்றோல் நிலைய  Cashier மோட்டார் பைக் முழுக்க தெரியாமல் பெற்றோல் pump இன் பின் சற்று மறைத்து தரித்திருந்ததால் அதன் இலக்கத்தை பார்க்க முடியாமல் முதலில் உள்ளே வந்து காசை செலுத்த சொல்லி இன்டர்காமில் அறிவிக்கின்றார் .
 
பெற்றோல் நிரப்பிய இரண்டு கார்காரர்களும் பணத்தை செலுத்திவிட்டு காரை எடுத்துக்கொண்டு வீதிக்கு இறக்குகின்றார்கள் .கெல்மெட்டை  கழற்றாமல் பெற்றோல் நிலையத்திற்குள் வந்த நபர் பெற்றோல் நிலைய கதவை உட்பக்கமாக பூட்டுகின்றார் .
 
காசியர் என்னது என்று வாயை திறக்கமுதலே உள்ளே வந்த கெல்மெட்  நபர்   இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டியபடியே காசியரை சைகையால் வாயை மூடு என்கின்றார் .பெற்றோல் நிலைய கண்ணாடிக்குள்ளால் வெளியே பார்த்த கெல்மெட் நபர்  வேறு ஏதும் கார்கள்  உள்ளே வராததை உறுதிபடுத்தி விட்டு காசியரை நோக்கிவந்து காசியர் நெற்றிக்கு நேரே துப்பாக்கியை நீட்டியபடியே  அருகில் இருந்த அலுவலக கதவை திறக்க சொல்லுகின்றார் .
 
கதவு பூட்டியிருக்கு தன்னிடம் திறப்பு இல்லை என்கிறார் காசியர் .
 
நான் உள்ளே வந்து உனக்கு வெடியை வைத்து காசை எடுத்துக்கொண்டு போகமுதல்  கதவை திற என்று சத்தம் இடுகின்றார் கெல்மெட்  நபர் .
 
காசியர் அருகில் இருந்த கதவை தட்ட  உள்ளேயிருந்து ஒருவர் கதவை திறக்கின்றார் .அவர்தான் அந்த பெற்றோல் நிலையத்தின் மனேஜர் . மனேஜர் கதவை திறக்க கெல்மெட் நபர் காசியரின் முகத்தில் கிளவ்ஸ் போட்ட முஷ்டியால் ஒரு குத்து விடுகின்றார் .காசியர் நிலை தடுமாற நிலத்தில் விழ அவரை விழுத்தி காலால் முதுகில் அமத்திக்கொண்டு மானேஜரை நோக்கி  துப்பாக்கியை நீட்டியபடி  படி லாக்கரில் இருக்கும் பணத்தை எடு என்கின்றார் .
 
நிலத்தில் குப்பிற கிடக்கும் காசியர் குஜராத்தி பாசையில்  ஏதோ முனகுகின்றார்.வாயை மூடு என்று அடுத்த  உதை ஒன்று அவர் பிண்டத்தில் விழுகின்றது . மனேஜர்  லாக்கரை திறக்க அதில் கொஞ்ச பவுன்ஸ் நோட்டுகளும் கனக்க சில்லறைளும் அடுக்கி வைத்திருக்கு .அந்த தாள் காசுகளை லாக்கரில் இருந்த ஒரு பையில் போட  சொல்லுகின்றார் கெல்மெட் நபர் .
 
துப்பாக்கி வைத்திருந்ததை விட  மற்ற கையால் பையை வாங்கியபடியே அலுவல மேசையில் இருந்த பொன்ட் சூட்கேசையும்  தூக்கியபடியே அலுவலகத்திற்கு வெளியே வந்து துப்பாக்கியைம் பையில் போட்டு கதவை திறந்து மோட்டார் பைக்கில் ஏறி பறந்துவிட்டார் .
 
பெற்றோல் அடிக்க வந்து  pump on  பண்ணாததால்  கதவடியில்  வந்து நின்ற சிலர்  உள்ளே இருந்து சத்தம் கேட்டு ஒடிப்போனால் காசியர் வாயில் இருந்து  இரத்தம் வடிய நிற்பதையும் மனேஜர் யாருடனுமோ  தொலைபேசியில் நிற்பதை பார்க்கின்றார்கள்.
 
நான்கு  பொலிஸ்கார்கள்  சைரனுடன் வந்து பெற்றோல் நிலையத்தை சூழ்ந்து பெற்றோல் நிலையத்தை சுற்றி மஞ்சள் ரேப் போட்டு தற்காலிகமாக மூடியிருப்பதாக அறிவிப்பை போடுகின்றார்கள் .ஏரியா மனேஜர் ,அதைவிட வேற சில பெரிய அதிகாரிகளும் வந்து அங்கு சேர்ந்துவிட்டார்கள் .
 
நடந்தது என்ன ? 
 
காசியர் ,மனேஜர் ,சாட்சிகள் (அங்கு நின்ற மூன்று ஆண்கள் ஒரு பெண் ).  விசாரணை தொடங்குகின்றது .
 
தொடரும் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜீன் அண்ணா...அங்கு வேலை செய்தவர்களுக்கு இந்த களவில் சம்மந்தம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

கதை சுப்பர் அர்ஜுன். மோட்டார் சைக்கிளில் வந்தவர் அர்ஜுன் இல்லையா?   :D  :D  :D 

Link to comment
Share on other sites

கதை சுப்பர் அர்ஜுன். மோட்டார் சைக்கிளில் வந்தவர் அர்ஜுன் இல்லையா?   :D  :D  :D 

 

அது நீங்களே இல்லையா சீமானு அண்ணே :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை விறுவிறுப்பாகப் போகின்றது. தொடருங்கள் அர்ஜுன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொ எல்லா கடைகளிலும் பெற்றேல் நிரப்பு நிலையங்களிலும் கமறாக்கள் பூட்டியிருந்தும் கொள்ளையடிக்க வந்து பின்னர் மாட்டிக் கொள்கின்றனர்.

 

பார்ப்போம் அர்ஜனுன் கடையில் என்ன நடந்ததென்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொ எல்லா கடைகளிலும் பெற்றேல் நிரப்பு நிலையங்களிலும் கமறாக்கள் பூட்டியிருந்தும் கொள்ளையடிக்க வந்து பின்னர் மாட்டிக் கொள்கின்றனர்.

 

பார்ப்போம் அர்ஜனுன் கடையில் என்ன நடந்ததென்று.

 

இது கமரா மாட்ட முன்பு நடந்த கொள்ளை :D......அல்லது கமராவின் பிளைன்ட் ஸ்பொட் அறிந்த நபர் செய்த கொள்ளை தொடருங்கள் அர்ஜூன்

Link to comment
Share on other sites

Neasden  பெற்றோல்  நிலையத்தில் கொள்ளை நடந்த அதே நாள் இரவு ஏழு மணி .  London  Catford   நகரில்  உள்ள ஐரிஷ் பார். அரை வெளிச்சமாக விளக்குகள் மின்னுகின்றன .பாரின் சுவரெங்கும் Dundee united உதைபந்தாட்ட அணியினரின் கருப்புவெள்ளை,கலர் படங்கள். U2 இன்   “Sunday Bloody Sunday  பின்னணியில் ஒலிக்க அங்கே மது அருந்திக்கொண்டிருப்பர்கள் மனதில் ஒருவகை கிளர்சியை அந்த சூழல் உருவாகிக்கொண்டிருந்தது. 

 

 

ஒட்டி இறுக்கிய மண்ணிறகொட்ரோயில் பான்ட்ஸ்,கறுப்பு சேர்ட் அதற்கு மேல் கறுப்பு லெதர்  ஜாக்கெட். கூர்முனையுடன் உயர்ந்த ஹய்கீல் சப்பாத்து. தனது நீண்டு சுருண்ட முடியை கோதிக்கொண்டு பாரின்  உள்ளே வருகின்றான் அலெக்ஸ் .  முழு பட்டன்களும் திறந்து ஆனால் முழுவதையும் வெளிக்காட்டாமல் வெள்ளை பிளவ்ஸ் ,கறுப்பு கலரில்  ரைற்ஸ்கேர்ட்ஸ் உடன் காலுக்கு மேல் காலை போட்டுகொண்டு சிகரட்டை ஊதிக்கொண்டிருக்கும் தனது ஐரிஷ் காதலி திரேசாவை  பார்த்து சிரித்தபடி நேரே அவளிடம் போய் திரேசாவின் உதட்டில் தனது உதட்டை பதித்து ஒரு செல்ல முத்தம் வைக்கின்றான் . 

 

குட்டை பாவாடை தேவதைகளாய் வலம் வரும் வெயிட்டேர்சில் ஒருவரை   அழைத்து  தனக்கு  ஜக்டானியல் ஒன் ரோக்ஸ் என்றவன் திரேசாவை பார்க்க, திரேசா  தனக்கு நாளை அதிகாலை வேலை எனவே ரெட் வைன் என்கின்றாள் .இருவரும் மதுவை ருசித்தபடியே போட்டிபோடுபவர்கள்  கணக்கு புகையை ஊதித்தள்ளுகின்றார்கள். 

 

அலெக்ஸ் தனது கைக்கடிகாரத்தைப் பார்க்கின்றான் மணி எட்டை தாண்டுகின்றது . எட்டு மணி சந்திப்பம்  என்றுதான் ஆதி சொன்னது நினவு வருகின்றது . அட ஆதியே வந்துவிட்டான் . ஒரு விளையாட்டு வீரன் போல எப்போதும் Track suit & pants, Tennis shoes  தான் அவனது உடுப்பு . அலேக்ஸ் தனது இருக்கையால் எழும்பி போய் ஆதியை கட்டிப்பிடிக்கின்றான் .வழக்கம் போல போர்மாலிற்றிக்காக  இல்லாமல் இன்றைய அலெக்சின் கட்டிப்பிடி இறுக்கமாகவும் நெருக்கமாகவும் இருப்பதை ஆதி உணர்ந்தான். . இருவர் முகத்திலும் ஒரு வித சிரிப்பு .

 

 இன்று காலை  நடந்தது  பற்றி கதைக்கும் போது  தமிழில் உரையாட மறந்துவிடாதே என்று ஆதி காதில் சொல்லுகின்றான் அலெக்ஸ். 

 

ஆதி திரேசாவிற்கும் கன்னத்தில் ஒரு முத்தததை வைத்துவிட்டு தனக்கு  ஒரு பியரை ஓடர் பண்னுகின்றான் . 

 

பாரில் இப்போ சனம் நிரம்பிவிட்டது . ஒரே ஐரிஷ் குடிமக்கள்  பெரிய சத்தத்துடன் பூல் ,டார்ட்ஸ் என்று விளையாட தொடங்கிவிட்டார்கள் .

 

ஆறு வருட நட்பு அலேக்சிற்கும் ஆதிக்கும் . பாடசாலை படிப்பு வேலை என்று அலைந்து திரிந்த கால நட்பு அது . அலெக்ஸ் ஐரிஸ் பெண்ணை மணமுடித்து பிரிட்டிஷ் பிரஜை ஆகிவிட்டான் .படிக்கும் காலத்தில் வேலை செய்த அனுபவத்தால் இப்போ ஒரு பெற்றோல் நிலைய மனேஜர் ஆகிவிட்டான் .சொந்தமாக ஒரு பெற்றோல் நிலையம் வாங்கிவிட்டால் தனக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து அதை ஒழுங்காக நிர்வகித்து வாழ்க்கையில் செற்றிலாகிவிடலாம் என்பதுதான் அவன் கனவு . 

 

ஒவ்வொரு நாள் காலையும் பெற்றோல் நிலையத்திற்கு வந்து காசியர்கள் நிலத்திற்கடியில் போட்டு வைத்திருக்கும்  பணத்தை எடுத்து எண்ணும் போது அதுவும் பவுன்ஸ் நோட்டுகளை கையால் தொட்டு  உணரும் தருணங்களில் இதில் கொஞ்சத்தை நான் அள்ளினால் எப்படி இருக்கும் என்று நினைப்பான்.  

எப்படி கஷ்டப்பட்டு உழைத்தும் கையில் ஐந்து சதம் செமிக்கமுடியாமல் இருப்பதை நினைக்க விசராக இருக்கும் .ரூம் வாடகை ,கார் இன்சுரன்ஸ் ,சாப்பாடு ,இதர செலவுகள் ,வார விடுமுறை குடி கிளப்புகள் என்று போக மிச்சம் எதுவும் இருக்காது. 

 

என்னடா வாழ்க்கை என்று இருக்கும் நேரங்களில் தான் மனம்சற்று  தடுமாறி பெற்றோல் நிலைய பணத்தை பார்த்து புத்தி கொஞ்சம் சபலப்படும்.  நல்ல திட்டம் போட்டு  ஒரு நாளைக்கு அதை செய்துமுடித்து விட வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்து அதை செயல்படுத்தவும் துணிந்துவிட்டது . 

 

சேர்ந்த பணத்தை வங்கிக்கு கொண்டு போகும் வழியில் யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள் என்று பொய் சொல்லி பணத்தை எடுத்தால்  என்ன என்று நினைத்ததில் சில நாட்கள் ஓடியது , ஆனால் அது எப்படியும் பொலிசாருக்கு தன்னில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும் .அவ்வளவு பணத்தை ஒழித்து வைத்திருப்பது வேறு பெரிய பிரச்சனை  அதை விட பின்னர் பெற்றோல் நிலையம் வாங்கும்போதும் பிரச்சனைகள் ஏற்படலாம் . 

 

இதற்கு இன்னொருவர் உதவி வேண்டும் என்ற நினைப்பு வந்தபோது முதலில் வந்தது ஆதியின் முகம் தான் .  

ஆதியை அலெக்ஸ் முதலில் சந்தித்தது ஒரு கிரிக்கெட் மாட்சில் தான் .அலெக்ஸ் விளையாடும் அதே டீமில் விளையாட ஆதியை அன்று அழைத்து வந்திருந்தார்கள் .மிக நன்றாக  வேக பந்து வீசினான். அன்றைய மாட்ச் தோல்வி அலேக்சிற்கு  சற்று மனவருத்தத்தை கொடுத்தது . ஆனால் ஆதி  Dressing Room  இற்குள் நண்பர்களுடன் பகிடி விட்டு சிரித்துக்கொண்டு  உடுப்புகளை களைந்து  நிர்வாணமாகி குளிக்க போய்விட்டு வந்தான். 

 

அதன் பின்னர் ஆதியுடன் ஒன்றாக விளையாடிய சில மாட்சுகள் ஆதி எதையும் பெரிதாக மண்டையில் போட்டு குழப்பாத, எந்த நேரமும் தானும் சந்தோசமாகவும் மற்றவர்களையும் சந்தோசமாக வைத்திருக்கும்  அவனது குணம் அலெக்சை நன்கு கவர்ந்துவிட்டது . சில வருடங்களில் இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள் . 

இன்னமும் மாணவ விசாவில் இருக்கும் ஆதி பாடசாலை கட்டணம்  கட்டுவதற்கு  பணத்திற்கு கஷ்டப்படுவதும் அலெக்ஸ் அறிந்ததுதான் .   அதைவிட நாட்டில் இருக்கும் குடும்பத்திற்கும் பணம் தான் அனுப்பவதாக சொல்லியிருக்கின்றான் .அலெக்சிற்கு அந்த பிரச்சனை இல்லை ஊரில் மிக வசதியான குடும்பம் .

 

ஒருநாள் மாட்ச் முடிய இருவரும்  பாரில் இருந்து குடித்துக்கொண்டு இருக்கும் போதுதான் அலெக்ஸ் தனது திட்டத்தை இப்படி செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு வித பகிடி போல விபரித்தான் .ஆதி அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை ஆனால் அடுத்தடுத்த சந்திப்புகளிலும் அலெக்ஸ் இந்த விடயத்தை பேச தொடங்க ஆதி இந்த யோசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லிவிட்டான் . அதன் பின்னர் இருவரும் சில தடவைகள் சந்தித்தாலும் அலெக்ஸ் அந்த விடயம் பற்றி வாயே திறக்கவில்லை .

 

சில மாதங்கள் செல்ல  ஆதியே அலெக்ஸை தொலைபேசியில் அழைத்து உன்னை சந்திக்கவேண்டும் என்று சொன்னான்.அன்றைய சந்திப்பில் தான் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு நாட்டிற்கு செல்லபோவதாகவும் அதற்கு முதல் உனது   திட்டத்தை செய்தால் போச்சு என்று சிரித்தபடியே அலேக்சிடம் கூறினான்.

 

திட்டம் தொடரும் . :o 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.