Jump to content

'ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்' : - மலே­ஷியா வாசுவின் குர­லுக்­கான இசை­ஞா­னியின் அற்­புத இடை­யிசை


Recommended Posts

அ.கலைச்­செல்வன், சிட்னி, அவுஸ்­தி­ரே­லியா
 
ஆயிரம் மலர்­களே மல­ருங்கள்....
 
இந்­தப் ­பா­டலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி ஒலிப்­ப­துண்டு. அது ஏன் இந்தப் பாடலின் தாள வாத்­தி­யத்­துடன் சீன ஸ்ரைல் தாள வாத்­தி­யத்­தையும் இசைஞானி இளை­ய­ராஜா சேர்த்­துள்ளார்? பாடல் காட்­சியில் சீன சார்­பான எதுவும் இடம்­பெ­ற­வில்லை. ஒரு­வேளை இயக்­குநர் பார­தி­ராஜா பாடலின் சிச்­சு­வே­ஷனைப் பற்றி ஞானி­யா­ரிடம் கூறும் போது சீனாவில் எடுப்­ப­தாகக் கூறி­விட்டு காட்­சிப்­ப­டுத்தும் போது மனம் மாறி­யி­ருப்­பாரா ?
 
 
31malaysiavasuthevan-600.jpg
அடுத்து நான் அதி­ச­யித்து ரசிக்கும் விட­ய­மென்றால் அது இறுதி இடை­யி­சைதான். பாடலில் ஜென்­சிக்கும் ஷைலஜாவுக்­கும்தான் அதிக இடம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.
 
மலே­ஷியா வாசு  தேவன் இறுதி சர­ணத்­தையும் கடைசிப் பல்­ல­வி­யையும் மட்­டுமே பாடு­கின்றார். இருந்த போதிலும் வாசுதேவன் இறு­தி­யான சர­ணத்தை ஆரம்­பிப்­ப­தற்கு ஏற்­ற­தான சூழ்­நி­லையை அந்த இசையைக் கொண்டு ஞானியார் அமைத்­தி­ருக்கும் வித­மி­ருக்­கி­றதே அட..அட..அட..
 
அதா­வது, இரண்­டா­வது இடை­யிசை மெது­வாக புல்­லாங்­கு­ழ­லுடன் வெகு சாதா­ர­ண­மா­கத்தான் ஆரம்­பிக்­கின்­றது. ஆனால் அதன் பின்னர் அதற்குள் வயலின் கூட்­டணி உள் நுழை­கி­ற­தல்­லவா அங்­கி­ருந்­துதான் வாசுவின் குர­லுக்­கான தயார்­ப­டுத்தல் ஆரம்­ப­மா­கி­ற­தென எனக்குப்படு­கின்­றது.
 
வயிலின் கூட்­டணி பிர­மாண்­ட­மாக உள் நுழைய சீனப் பாணி தாள வாத்­தியம் அடங்கிப் போகின்­றது. அதற்­குப்பின் வயிலின் கூட்­ட­ணிக்கு தாள வாத்­தி­ய­மாக கீபோர்ட்டிலி­ருந்து வம்பிங் போன்ற ஒன்று வாசிக்­கப்­ப­டு­கின்­றது. அங்­கி­ருந்து அந்த இசை ஒரு சீரியஸ் தன்­மையை அடையத் தொடங்­கு­கின்­றது.
 
அந்த வயி­லின்­களின் கூட்­டணி அது­வரை இல்­லாத ஒரு பிர­மாண்­டத்­தையும் சீரியஸ் தன்­மை­யையும் பாட­லுக்குள் ஏற்­ப­டுத்தி விடு­கின்­றது. ஜாலி­யாகப் போய்க்­கொண்­டி­ருந்த இசையின் போக்கில் ஏற்­பட்ட இந்த மாற்றம், அது­வரை சாதா­ரண மூடில் பாடலைக் கேட்டுக் கொண்­டி­ருந்த ரசி­கனின் புரு­வத்தை அடுத்­தது என்ன என உய­ர­வைத்து நிறுத்­து­கின்­றது.
 
31ILAYARAJA.jpg
 
அந்த வேளையில் இடை­யி­சையின் இறுக்­கட்­டத்­துக்குள் பாடலும் நுழைந்­து­விட, சதா சாரின் கிட்டார் அட்­ட­கா­ச­மாக ஓங்கி ஒலித்து அடங்கும் போது வாசுவின் குரல் "பூமியில் மேகங்கள் ஓடி­யாடும் யோகமே" .. என்று ஆரம்­பிக்கும் விதத்தைக் கேட்கும் ஒவ்­வொரு தட­வையும் அது கொடுக்கும் பர­வ­சத்தால் நொந்து நூடில்­சாகிப் போய்க்­கொண்­டி­ருக்­கிறேன். ஆஹா என்­ன­வொரு கற்­பனை. சில நிமி­டங்­க­ளே­யான ஒரு பாட­லுக்குள் எப்­ப­டி­யெல்லாம் இசையால் கற்­பனை பண்­ணி­யி­ருக்­கிறார் ஞானியார்.
 
ஒரு முறை­யல்ல இரு­மு­றை­யல்ல மீண்டும் மீண்டும் அந்த இடை­யி­சை­யையும் அதைத் தொடர்ந்து மலே­ஷியா வாசு சர­ணத்தைத் தொடங்கும் லாவ­கத்­தையும் , இடை­யி­சையும் வாசுவின் குரலும் ஒன்­றுடன் ஒன்று பொருந்­தி­யுள்ள வி­தத்­தையும் உற்றுக் கேட்­டுப்­பா­ருங்கள் பர­வ­சத்தின் உச்­சிக்கே சென்­று­வி­டு­வீர்கள்.
31jency_big.jpg
 
மலே­ஷியா வாசு என்ற ஒப்­பற்ற பாட­கனின் தனித்­தன்­மை­யான பேஸ் வாய்ஸை இளை­ய­ராஜா என்ற மாமேதை எவ்­வ­ளவு தூரம் அடை­யாளம் கண்­டி­ருந்தால் அந்தக் குரலைத் தூக்கி நிறுத்தி, அதன் உச்ச அழகை வெளிக்­காட்டும் இப்­படி ஒரு இசையை கற்­பனை பண்­ணி­யி­ருப்பார் என்­பது புரியும்.
 
அந்த இடை­யி­சை­க­ளுக்கு எத்­த­னையோ இசைக்­க­ல­வைகள் ஜானி­யால் கலக்­கப்­பட்­டி­ருப்­பதை உணர்ந்து அதி­ச­யிக்­கிறேன்...
 
முதல் இடை­யி­சை­க­ளைப்­போல ஆரம்­பிக்கும் இறுதி இடை­யிசை வேறு ஒரு கோணத்­துக்கு அழ­காக மாற்­றப்­படும் விதம் என்னைப் பித்தம் கொள்ள வைக்­கி­றது...
 
அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஞானியார் வந்த வேளை இந்தப் பாட­லையும் மேடையில் பாடி­னார்கள். முன்னால் மிக அருகில் கைக்­கெட்டும் தூரத்தில் இருந்­த­படி ஞானி­யாரின் ஆர்­கஸ்ட்­ரே­ஷனை ரசித்துக் கொண்­டி­ருந்தேன். புல்­லாங்­கு­ழலின் இசை­யி­லி­ருந்து வயிலின் கூட்­ட­ணிக்கு அந்த இசை மாறும் அழகை கண்­கொட்­டாமல் பார்த்து ரசித்தேன்.
இரண்டு பக்­க­மாகப் பிரிந்­தி­ருந்த ஆர்­கஸ்ட்­ரா­வுக்கு இரண்டு பக்­கமும் மாறி மாறி இந்தப் பாடலின் இசை தவழ்ந்து அசைந்து சென்­ற­போ­துதான் ஞானி­யாரின் ஆர்­கஸ்ட்­ரே­ஷனின் வீரியம் புரிந்­தது. வாய­டைத்துப் போனேன். எப்­ப­டிப்­பட்ட ஒரு மகா மேதையின் காலத்தில் வாழ்­கிறோம் என்ற உண்மை உறைத்­தது. .
 
31Spsailaja.jpg
 
இப்­ப­டி­யெல்லாம் 1979 களி­லேயே ஒருவர் சிந்­தித்­துள்ளார் என நினைக்கும் போது என்னால்...... சே.. என்­ன‌த்தைச் சொல்ல.
இந்­தப்­பா­டலை எத்­த­னையோ மேடைகளில்..
எத்தனையோ இசைக்குழுக்களில்..
எத்தனையோ பேர் பாடக் கேட்டிருக்கிறேன்..
 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எத்தனையோ பேர் பாடிப்பார்த்திருக்கிறேன்.. ஆனால்..ஞானியாரின் அந்த இடையிசைக் குள்ளிருந்து மலேஷியா வாசுவின் குரல் பீறிட்டுக் கொண்டு மேலெழுந்து வரும் அற்புதத்தைப் போல எங்கும் எவரும் பாடிக் கேட்டதில்லை.. இனிக் கேட்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து மக்களால் தூக்கியெறியப்பட்ட ஒரு அற்புதமான இசையமைப்பு கதையம்சம் படப்பிடிப்பு என பல திறமைகள் நிறைந்த  திரைப்படத்தை ஈழத்தமிழர்கள் இரசனையோடு தூக்கி நிறுத்தினார்கள். :)

 

https://www.youtube.com/watch?v=c_KkT654rww

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=bxkQh1tWSkA

 

என்னால் மறக்க, முடியாத பாட்டு இது.
இத்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்...
சந்தோசம், சோகம், ஏக்கம், ஹாட் அற்றாக்,  இன்ப கிளர்ச்சி... என்று பலதும் வந்து போகும்.
 

கூடுதலாக... இந்தப் பாடலை, விரும்பி கேட்க.. மனசு வராது.
 ஆனால்... கேட்க வேண்டும், போல் தோன்றும்.

Link to comment
Share on other sites

இசைத்தலைவரின் Orchestration வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.. ஆனால் அவருக்கு அது தேவாரம் பாடுவதுபோல இலகுவாக வருகிறது என நினைக்கிறேன்.. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80 களின் ஆரம்பத்தில் ஈழத்து மண்ணில் பவனி வந்த அற்புதமான இசையுடன் கூடிய பாடல். எப்ப கேட்டாலும் சலிக்காது. ராஜா ராஜாதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.