Jump to content

குட்டை பாவாடையில் மாயோன்


Recommended Posts

http://manaosai.blogspot.com/2006/10/blog-post_26.html

குட்டை பாவாடையில் பெண்---

ஆக மொத்ததில் சில ஆண்களும் சில பெண்களும் மேய்ச்சல் விலங்குகளாகத்தான் திரிகின்றனர் எங்கிறீர்கள். அந்த வகையில் பார்க்கும் போது நீங்களும் மேய்ஞ்சிருக்கிறீர்கள். ஏனென்றால் அவனவன் வேலைக்கு படிப்புக்கு போற ரென்சனில தன்னையே கவனிக்க முடிவதில்லை உங்களுக்கெல்லாம் இதுகளுக்கும் நேரமிருக்கே அதுதான் இப்படியும் எழுதச் சொல்லுது.

அவள் குட்டையா போட்டால் என்ன ஏன் போடாமல் போனால் தான் என்ன அவளிடமும் மனிதனிடம் உள்ளதுதான் இருக்கிறது. தோலும் தசையும் எலும்பும். பிறகென்ன பார்வை வேண்டி இருக்கிறது. ஏதோ இறைச்சிக் கடையில் இறைச்சியைப் பார்ப்பது போல பெண்ணின் ஆடை அங்கமென்று பார்க்காட்டிலும் பார்த்துத் திரியும் சிலர் எழுதும் விரசத்தனமான அவர்களின் சிந்தனைகள் பார்க்காதவர்களையும் விரசத்தனமாக சிந்திக்க வைகாதவர்களையும் சிந்திக்க வைத்துவிடும். அதுதான் நடக்கிறது பல எழுத்துக்களிலும். தனி நபர்களின் விரச சிந்தனைகள் எழுத்துக்களின் மூலம் பிறருக்கு என்றாக்கப்பட்டு சமூகத்துக்கு என்று படைக்கப்பட்டு விடுகிறது. நீங்கள் மட்டுமல்ல பல நாவல் சிறுகதை எழுத்தாளர்கள் கூட கொஞ்சம் தங்கள் சிந்தனைகளை தாங்களே சிந்திப்பதாகக் காட்டிக் கொண்டால் நல்லது. வெறுமனவே இன்னொரு கதாப்பாத்திரத்தைப் புனைந்து தங்கள் விரசங்களை அதில் கொட்டி சமூக உதாரணமாக்குவதைத் தவிர்ப்பது நல்லம்.

உலகியலில் நீங்கள் இருக்கும் படி அடி மட்டம் என்பது எமது பார்வையில் தெரிகிறது. இன்று ஒரு குட்டைப் பாவாடைக்காக ஒரு பெண்ணைத் திரும்பி ஜொள்ளு விடும் அளவுக்கு ஆண்களில் பலரில்லை. ஜொள்ளுவிட அவளிடமும் எதுவும் இல்லை. ஏதோ இருப்பது போல புனைபவர்கள் தான் அதில் என்ன இருக்கிறது என்று விரிவாக எழுதிவிடுங்களேன்.

இசைவாக்கம் என்ற ஒன்று அறிந்திருப்பீர்கள். ஒன்றுக்கு ஒரு சூழலுக்கு பழகிவிட்டால் அந்தச் சூழலில் நிகழும் சிறிய மாற்றங்கள் எல்லாம் கண்ணிற்கு உணர்வுக்குப் புலப்படாது. வாழும் சூழலில் குட்டைப்பாவாடை என்ன அங்கிகள் பலவகை. ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி. இன்னும் குட்டைப் பாவாடையைக் கண்டால் பார்க்க வேண்டும் போல இருப்பவர்கள் ஒன்று செய்யுங்கள் வீட்டில் சில குட்டைப்பாவாடைகளை வாங்கித் தொங்கவிட்டு பார்த்திட்டே இருங்கள். அப்புறம் கண்ணும் உணர்வும் பழக்கப்பட்ட பின் வெளியில் கிளம்பித் திரிந்தாலும் கண் குட்டைப்பாவாடையைத் தேடாது.

பெண்களைத் தேடுது என்பீர்கள். பேசாமல் மெழுகு பொம்மைகளை வாங்கி வைத்துப் பாருங்கள். அதைவிடுத்து ஏதோ ஆண்களும் பெண்களும் வேலை மிணக்கட்டு குட்டைப் பாவாடையோட போறவளை பார்த்திட்டு ஜொள்ளு விட்டிட்டுத் திரியினம் என்பது போலவும் அதை அவதானித்து எழுதுவது போல நீங்கள் ஜொள்ளு விடுவதை நசூக்கா மற்றவர்கள் மீது காட்டி உங்களை விமர்சகர்களாக்கி பெருமைப்படுத்திக் கொள்கிறீர்கள்.

எங்கள் பார்வையில் எழுத்தாளர்கள் சிலரே படு ஜொள்ளுப் பேர்வழிகள். அவர்களும் அவர்களின் எழுத்தும் அதற்குச் சான்று. குறிப்பாக நாவல் எழுத்தாளர்கள்.

ஒரு பெண்ணை ஒரு ஆண் பார்ப்பதை விபரிக்கும் பாணி..கடவுளே அப்படி ஒரு பெண்ணைப் பார்க்கக் கூட அவனுக்கு அந்த நாவலைப் படிக்கும் வரை தெரிந்திருக்காது.

எனவே சமூகத்துக்கு எழுத்தாளர்கள் படைப்பாளிகள் என்று கொண்டு தங்கள் குப்பைத் தனங்களைக் குப்பை என்று கொட்டாமல் உங்களுக்குள் உள்ள உணர்வுகளை அப்படியே கொட்டிகொண்டிராமல் சமூகத்தின் உளப்பாங்கு குறித்து சிந்தித்தும் சிலாகித்தும் விசாரித்தும் விளங்கியும் எழுத முயலுங்கள்

உங்கள் எழுத்துக்கள் தவறான உதாரணங்கள் ஆகிவிடக் கூடாது.

உங்களுக்கு மட்டுமல்ல ரமணிச்சந்திரன் மண்ணாங்கட்டிச் சந்திரங்களுக்கும் வெறும் வியாபார நோக்கில் ஆண்களின் பெண்களின் பார்வைகளை உணர்வுகளை விரசமாக்கி கதைகள் புனைந்து உங்கள் கற்பனைகளின் விரசங்களை விற்பனை செய்து புகழீட்டுவதை பணமீட்டுவதை நிறுத்தி சமூகத்துக்கு சரியான வகையில் விடயங்களைச் சொல்ல முனையுங்கள்.

அநேக எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு நல்லதாக இல்லை. கண்ணதாசன் தொடங்கி கலைஞர் கருணாநிதி ஊடாக எல்லாம் ஒருவகை பெண்

மனனோய் உள்ள ஆண் படைப்பாளிகள் என்றால் பெண்களோ பெண் ஆண் என்று பல மனனோய்களின் தாக்கத்தில் எழுதுவதெல்லாம் கதாபாத்திரமாக சமூகத்தில் விதைக்கபப்ட்டு அப்பாவித்தனமான பார்வைகள் கூட பாழ்படும் படியான சிந்தனைகள் விதைக்கப்படுகின்றன.

உதாரணத்துக்கு மனிதனில் உள்ள உறுப்புக்களை கவர்ச்சிக்கான அம்சங்களாகக் காட்டுதல். பல நாவல்களை படித்தால் பெண்களின் மேலாடைகளை ஆண்களின் பார்வைக்குரிய பகுதியாக சித்தரித்திருப்பார்கள். பொதுவாக நாவல்களோ கதைகளோ படிக்காத எம் போன்றவர்களுக்கு ஆகா என்ன அழகான நிற ஆடையது என்று அழகை ரசிக்க கூட முடியாத அளவுக்கு அண்மையில் ஒரு நாவலை வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் வாசித்த போது ஐயோ இப்படியும் எழுதுகிறார்களே என்றாச்சு. அதன் பின்னர் பெண்களின் ஆடைகளின் அலங்காரத்தைக் கூட கண்கொண்டு பார்ப்பது கூச்சமாக இருந்தது. ஆனால் அது அந்த விரசங்களின் பார்வைதான் என்று சிந்திக்க விட்டு எங்களை அதிலிருந்து விடுவிக்க முனைந்தாலும் அந்த வாசிப்பு விதைத்த சிந்தனை விலகிடுமா எனி மனதை விட்டு.

எனவே எழுத்தாளன் படைப்பாளன் என்பவன் கல்லாக உள்ள குழந்தைகளை மனிதர்களை சிலையாக்கும் சிற்பி. அவன் தனது வக்கிரங்களை எழுத்துக்களில் விதைத்து சிலைகளையும் வக்கிரமாக்க நினைக்காமல் மனதோடு கீழ்த்தரமான சிந்தனை ஓட்டங்களை ஓட விடாமல் மனிதனுக்கு உடலங்கங்கள் எல்லாம் பொது. ஆடைகளில் என்ன இருக்கிறது. வெறும் தோலும் தசையும் தெரிவதால் என்ன அழகு. என்று நோக்கி சிந்தனைகளை ஒரு வக்கிரமற்ற மனிதனை மனிதனாகப் பார்க்கும் நிலைக்கு கொண்டு வர முயலுங்கள். ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் அழகை ரசிப்பது வேறு. அந்த அழகுணர்ச்சிக்கு அர்ந்தம் புரியாத சில எழுத்தாளர்கள் அதை அலங்கோலனாக்கி வக்கிரத்தனமான பாதையில் இட்டுச் செல்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் சிறுவர்கள் மனதில். சந்திரவதனா போன்றவர்கள் தங்கள் இப்படியான படைப்புக்களை வலைப்பூவில் வெளியிடும் போது தயவுசெய்து 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று வரையறையிட்டு அவர்கள் மட்டும் பார்க்கக் கூடிய அளவுக்கு வெளியிடுங்கள்.

இன்று பிள்ளைகள் பெண்ணின் ஆணின் ஆடைகளை விரசத்தோடு பார்க்கும் நிலையில் இல்லை. சகஜமாக ஏய் உன்ர ரெஸ் ரெம்ப ஜோரா இருக்கு என்று கள்ளம் கபட மற்று அழகை விமர்சிக்கும் பாங்குக்குள் தயவு செய்து உங்களின் விரசத்தனமான வக்கிரத்தனமான சிந்தனைகளைப் புகுத்தி அவர்களி அழகை ரசிக்கும் அந்த மெல்லிய மனதோடு எழும் அப்பழுக்கற்ற நல்ல ஒரு சிந்தனைக்கு மனிதனில் உறங்கும் மிருக்கத்தனமான விரசச்சாயம் பூசி புகழ் பணம் தேடாதீர்கள்.

நன்றி.

# posted by மாயோன் : Saturday, November 04, 2006 11:25:25 AM

I will totally have to disagree with மாயோன் . I have never heard or read something so ridiculous in my life. When I Started reading Mayoons comments I first shaked my head and then I became more and more furious and finally I just felt sorry for him/her. I must say this person must be leading a very bitter life.

So, are you telling us just because someones’ attention is attracted in a positive or negative way to someone else that person is worthless? I don’t know what kind of world you live in but it is just human nature to appreciate something beautiful or give attention to something you dislike. Even when one sees someone who is deformed one would turn and look. That does not mean that that person has nothing better to do. Its just the normal human brain which is interested and strikes when something nice or bad appears in front of him/her. You telling me you never admired a beautiful flower in the fields, or a gorgeous baby in its mothers arms, or even an elderly couple? I could go on about things I admire and times I turn to look at something I shouldn’t have. I tell you something, I have been brought up by very well educated parents and am a professional, which means I have studied very hard and I go to work, but I still had time to look around and enjoy my life and appreciate the beauty around me. That doesn’t make me someone worthless it just makes me human! A happy Human!

To tell the truth I have lots to say to you but I don’t think that it is necessary. I am sure all the other readers (at least most of them) feel the same way as I feel. So I am not going to go into details and comment on each of your comments. But I would just like to say one thing: Criticising someones work is fine but in my opinion you have gone beyond it! You just offended the writer and nearly 99% of the human beings in this world. You seem to be rather bitter about something in your life and I am very sorry about that, but I don’t think there is any need to tell someone to buy a doll or miniskirts to satisfy their needs. I think that is very rude and offensive! And by the way, I doubt that this is what Ms Chandravathana tried to bring across. From what I understood she was very confused about the whole thing and tried to analyse it. I ones read an article in a magazine my wife reads (Cosmopolitan) that it is not just men but also women who turn around to look at other women, attractive or not attractive, apparently that is how human brains and reflects work. And my wife agreed that she has several time turned and looked. And many of my other friends and their wife’s have told me that too. So what Ms Chandravathana wrote is not what someone desperate does but it is in human nature.

I have read many of Ms Chandravathanas articles and I must say I rather enjoy them a lot. I have never posted any comments so far and quietly enjoyed her stories and discuss it with my wife. Sometimes similar things would have happened to me or my wife and we would discuss it in depth. It even sometimes leads into very interesting conversations with my colleagues, because what she writes about is what happens in reality and at least one person has been through it or faced a similar situation. Ms Chanravathana, don’t let people like this discourage you! Please continue with your wonderful work. I find your stories very interesting and sometimes even soothing. I am looking forward to more of it.

I hope you don’t mind that I wrote in English, but even though I can read or understand Tamil very well I cannot express myself well enough in Tamil as I was brought up in the UK.

Thank you,

Dr. S. Pasupathi

# posted by Pasupathy : Wednesday, November 08, 2006 12:02:39 AM

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.